Jump to content

போர் ஓய்ந்த பின்னாலும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கல் நெஞ்சும் கசிந்துருக, இன்று

கையேந்தும் நிலை வந்தும்

சொல் பொறுக்காச் சோர்விலராய்

கைகட்டி நிற்காத ஏர் பிடித்த

நல் மனிதர் வல் வினையால் வாழ்விழந்து

வாழாவெட்டி ஆகி நின்று

நெல் மணிக்கும் வரிசை கட்டி

கையேந்தும் நிலை கொடிது.

பார் போற்ற வாழ்ந்திருந்து

பசி விலக்கி வாழ்ந்தவர்கள்

ஏர் பிடித்த கையாலே அள்ளி அள்ளிக்

கொடுத்தவர்கள்- வந்தாரை வரவேற்று

ஊர் மெச்ச உபசரித்தோர் நாதியற்று நடுத்

தெருவில் அகதியாய் அலைகிறாரே

போர் ஓய்ந்த பின்னாலும் ஊர் ஏக முடியாத

கொடுமையினை யாருணர்வார்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நம் ஈழத்து மக்களின் நிலை உணர்த்தும் உங்கள் கவி அழகு. குறிப்பாக . நம் வன்னி மக்கள் கை ஏந்தி வாழாதவர்கள் மண்ணை

நம்பி வாழ்ந்தவர்கள் அவர்களின் நிலை எண்ணி மனம் கலங்கு கிறது . உங்கள் கவிக்கு பாராடுக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தியா,

உங்களின் கவிதை மிகவும் நன்றாக உள்ளது நன்றி.எம் மக்களின் அன்றைய நிலையையும்,இன்றைய நிலையையும் படம் பிடித்துக் காட்டி உள்ளீர்கள்.

யாயினி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிலாமதி,

காந்தன்,

யாயினி

உங்களுக்கு எனது மனப்பூர்வமான நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வன்னி மக்கள் அடிப்படை வசதிகளற்ற பல நிலைகளில் மிகவம் சாதாரண வாழ்க்கை வாழ்ந்தவர்கள். வந்தோரை அன்போடு உபசரிப்பவர்கள். என்ன கொடுமை இன்று மற்றவர் கையேந்தும் நிலையாகிவிட்டது. அவர்கள் விடிவிற்கு உங்கள் கவிதை சமர்ப்பணமாகட்டும்

நன்றி

பென்மன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி பென்மன்

வன்னி மக்கள் அடிப்படை வசதிகளற்ற பல நிலைகளில் மிகவம் சாதாரண வாழ்க்கை வாழ்ந்தவர்கள். வந்தோரை அன்போடு உபசரிப்பவர்கள். என்ன கொடுமை இன்று மற்றவர் கையேந்தும் நிலையாகிவிட்டது. அவர்கள் விடிவிற்கு உங்கள் கவிதை சமர்ப்பணமாகட்டும்
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.