Jump to content

செய்தித் தளங்களிற்கும் செய்திகளை இணைப்பவர்களிற்கும்!


Recommended Posts

தமிழ் செய்தித் தளங்கள் மற்றும் ஈழத் தமிழ் செய்தித் தளங்கள் எனத் தங்களைக் கூறிக்கொள்ளும் இணையத்தளங்களும் பத்திரிகைகளும் தமிழ் நாட்டுச் செய்தி ஊடகங்களின் தயவினிலேயே தங்களை வளர்த்துக் கொள்ளும் தன்மை காணப்படுகின்றது.

ஆறு கோடி மக்களிற்கு மேல் இருக்கும் தமிழ்நாட்டில் இருக்கும் தமிழ் பத்திரிகைகள் மற்றும் செய்தித் தளங்களைவிட தமிழீழத்தில் இருந்து புலம்பெயர்ந்து வாழும் ஒரு சில இலட்சம் மக்களிடம் அதிகமாகவே இருக்கின்றது. ஆயினும் அவை அனைத்தும் தமிழ்நாட்டில் இருந்து வெளிவரும் ஊடகங்களின் தயவிலும் ஒருசில தொண்டர்களால் அத்தொண்டர்கள் தாமாக விரும்பி தகவல்களை வழங்கினால் வெளியிடும் வறுமையிலேயே வாடுகின்றன. உலகநாடுகள் பலவற்றிலும் குடியேறி அந் நாடுகளின் குடியுரிமை பெற்றுப் பல தலைமுறையாகவே அந்த நாடுகளில் வாழும் இந்திய வம்சாவளி மக்கள் செய்யும் விடயங்களைக்கூடி தன் நாட்டு மக்களிற்கு இந்திய ஊடகங்கள் வெளியிடுகின்றன.

புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர்களின் ஊடகங்கள் அவற்றினை அப்படியே அத் தகவல்களை வெளியிட்டு தங்கள் இந்திய விசுவாசத்தினைக் காட்டிக்கொண்டுள்ளார்கள். தமிழ்நாட்டில் வாழும் இந்தியர்களிற்கு ஓர் இந்தியனாக அச் செய்திகள் முக்கியமானவையாகப் படுகின்றது. அதனை அவர்கள் தங்கள் செய்தித் தளங்களில் பதிவிடுகிறார்கள்.

ஆனால் புலம்பெயர்ந்து வாழும் ஈழத் தமிழ் மக்களின் ஊடகங்களின் முக்கிய நுகர்வோராகக் காணப்படுபவர்கள் ஈழத் தமிழ் மக்கள். குறைந்தது அவரவர் வாழும் நாடுகளில் நடைபெறும் செய்திகளையாவது, அவை எவ்வாறு இந்த மக்களின் வாழ்வியலில் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பது போன்ற தகவல்களையாவது வெளியிட மறுக்கிறார்கள். இந்தியாவின் அசாம் மாநிலத்தில் அல்லது குஜராத் மாநிலத்தில் ஒருவர் தனிப்பட்ட விடயம் காரணமாக நஞ்சினை உண்டு மரணித்தார் என்றால் அதனை இந்திய ஊடகத்தின் துணையுடன் வெளிக் கொண்டுவரும் இவ்வூடகங்கள் தாங்கள் தாங்கள் இருக்கும் நாடுகளில் நடைபெறும் விடயங்களைச் சிறிதாவது வெளிக்கொணரத் தயங்குகின்றனர்.

புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழ் மக்களிடம் இருக்கும் ஊடகங்கள் ஊடகம் என்றால் என்ன என்பதனை மறந்து செயற்படுகின்றார்களோ என்று எண்ணத் தோன்றுகின்றது. செய்தியாளர்கள் இல்லாது தங்கள் தளங்களினை நடாத்துகின்றார்களெனில் குறைந்தது அவர்கள் நாடுகளில் உள்ள பிற ஊடகங்களினையும் கவனத்தில் எடுத்துச் செயற்படுவது சிறந்தது.

இங்கு இவ்வாறு ஓர் விமர்சனம் வைப்பதன் மூலம் இந்திய எதிர்ப்பினைப் பதிவுசெய்வதென்பது நோக்கமல்ல. இதனை வாசிப்பவர்கள் அவ்வாறு இதனை எடுத்துக் கொள்வது அவரவரினைப் பொறுப்பு. சமூகத்தில் ஊடகத்திற்கு இருக்கும் பொறுப்பினைத் ஊடகங்கள் உணர்ந்து கொள்ளாதுவிடின் அதனைச் சுட்டிக்காட்டவேண்டியது அச் சமூகத்தில் இருப்பவர்களின் பொறுப்பு. அவ்வகையிலேயே இவ்விமர்சனத்தினை இங்கு வைக்கின்றேன். (இங்கு பெயர் குறிப்பிட்டு பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சி மற்றும் இணையத்தளங்களைக் குறிப்பிட விரும்பவில்லை)

குறிப்பாக இணையத் தளங்களிற்கும் அதனை நடாத்துபவர்களிற்கும்!, உங்கள் இணையத்தளமானது செய்தியாளர்களைக் கொண்டிருக்கவில்லையானால் அல்லது நீங்கள் வேறு இணையத்தளங்களை மட்டுமே உங்கள் இணையத் தளச் செய்திகளிற்கு நம்பியிருப்பவர்களாக இருப்பின் தயவுசெய்து உங்கள் இணையத் தளங்களைச் செய்தியூடகமாக விளிக்க வேண்டாம் எனத் தயவாகக் கேட்டுக்கொள்கின்றேன். அவற்றினைத் தனியார் ஒருவரின் தளம் என்றே கூறவும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான் சுடர்.

அநேகமாக பல ஈழவர் இணையத்தளங்களும் சரி, பத்திரிகைகளும் சரி, ஒலி,ஒளிபரப்புத் துறைகளும் சரி ரெடிமெட் செய்திகளுக்கும், ஆக்கங்களுக்கும் கொடுக்கும் ஊக்கத்தை நம்மவர்களுக்குள் நல்ல நிருபர்கள் தோன்றுவதற்கு வழங்குவதில்லை. நூற்றில் ஒருவீதம்கூட ஊக்கிவிக்காமல் தகவல்த்துறை சார்ந்து திறமையானவர்களை உருவாக்காமல் இரவல் நிலையில் எம்மை முடக்கிக் கொள்கிறோம். கவனத்தில் எடுக்க வேண்டிய விடயம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எப்பிடி உதெல்லாம் முடியும்,... பத்து தளம் என்றால் ஒன்பது தளம் உதைத்தான் செய்யுது... பிறகு என்ன செய்ய...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்கள் கருத்து நல்ல சமூக சிந்தனை. வரவேற்கின்றேன்

உண்மையில் நாம் வாழும் ஒவ்வொரு நாட்டிலும் நடைபெறுகின்ற விடயங்களை கூறுவது நல் ஊடகத்தி்ன் சிறப்பாகும்.

இந்திய தமிழ் சினிமாவை விட்டால் வேறு நிகழ்ச்சிகளே இல்லை என்னும் அளவில் தற்போது பல ஊடகங்கள் இயங்குகின்றன.

சினிமா வேண்டும் தான் ஆனால் சினிமாவே வாழ்்கையாக கூடாது.

Link to comment
Share on other sites

செய்திகளை வாசிக்கும் வாசகர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு உதாரணத்திற்கு யாழை எடுத்தீர்கள் என்றால் புலி சம்பந்தப்பட்ட செய்திஎன்றால் அதிகம் பேர் வாசிப்ப்பார்கள் ஏனயவற்றை பார்ப்பவர்கள் மிகவும் குறைவு

Link to comment
Share on other sites

இவ்விடயத்தில் சில கருத்துக்களை நாம் உள்வாங்கிக் கொண்ட பின்பே யோசிப்பதும் கருத்துரைப்பதும் சிறந்ததாகவிருக்குமென நம்புகின்றேன். முதலாவதாக இன்றைய ஊடக உலகில் 100/100 வீதம் தாமாகவே சொந்தமாக செய்தியாளர்களை வைத்துக் கொண்டு செய்திகளைப் பெற்று வெளியிடும் ஊடகங்கள் மிகவும் குறைவு அல்லது இல்லை என்றே கூறலாம். உலகளாவிய ரீதியில் மிகவும் பிரபல்யம் வாய்ந்த ஊடகங்கள் பலவும் கூட மற்றய செய்தித் தாபனங்களிடமிருந்தும் மற்றும் தனிப்பட்ட ரீதியில் சுயமாக இயங்கும் ஊடகவியலாளர்களிடம் இருந்து செய்திகளைப் பெற்றே அவற்றினை வெளியிட்டு வருவது வெள்ளைடைமலை. இதற்கு தமிழ் ஊடகங்கள் பலவும் கூட விதி விலக்கல்ல. மேலும் சில சமயங்களில் செய்தி ஊடகங்கள் சில ஒன்று சேர்ந்து ஒரு பொதுவான ஊடகவியலாளர் குழுமத்தினை வைத்துக் கொண்டு அவர்களால் வெளியிடப்படும் செய்திகளினைத் தமது ஊடகங்களில் சிற்சில வித்தியாசங்களுடன் வெளியிட்டு வருவதனை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது. மேலும் தத்தம் இயல்புக்கிணங்க பல்வேறு செய்திகளினைத் தேர்வு செய்து தமது ஊடகங்களில் வெளியிட்டு வருவதனை யாவரும் பற்பல பிரபல ஊடகங்களிலேயே அவதானிக்கலாம்.

இணையத்தில் செய்தித் தளங்கள் பற்பல மட்டங்களில் உள்ளன. இவற்றில் சில ஒரு தனிநபர் வைத்திருக்கும் வலைப்பூ தளமாகவோ அல்லது முழுமையான ஒரு செய்தித்தளமாகவோ காணப்படுகின்றன. அது இணையத்தில் காணப்படும் சுதந்திர ஊடக கோட்பாடுகளுக்குட்பட்ட ஒரு உலகளாவிய விடயம். அது பற்றிக் கருத்துக் கூறுவது அவரவர் விருப்பம். ஆனால் ஆகக் குறைந்த பட்சம் மூலவூடகங்களின் பெயரினையோ சுட்டிகளையோ ஆவது அவ்வ்வாறு மீள் வெளியீடு செய்பவர்கள் தமது தளங்களில் குறிப்பிட வேண்டும் என்பது ஒரு நல்ல ஊடக வழக்கமாக இருக்கும். செய்தியாளர்களற்ற அல்லது ஆரம்ப நிலை இணைய செய்தித் தளங்களினைச் செய்தித் தளங்களாகவே அவற்றின் உரிமையாளர்கள் வரித்துக் கொள்ளக் கூடாது என்பது கொஞ்சம் சர்வாதிகாரப் போக்கினைக் கொண்டவொரு கருத்தாகவமையுமே தவிர வேறொன்றுமில்லையென்பது அடியேன் கருத்து. ஊடகவியல் என்பதே சுதந்திரக் கருத்துரிமை என்பதை அடிப்படையாகக் கொண்டதொரு ஆக்க வேலையாகும். அம்மாதிரியான விடயத்தினைத் தடைகளுக்குட்படுத்தி வளர்த்தெடுப்பதென்பது கொஞ்சம் நகைப்புக்குரியதொரு விடயமாகவே அமையும் என்று நினைக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சரியாக சொன்னீர்கள் ஜில்.

பென்மன்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.