Jump to content

கோழிப்புக்கை


Recommended Posts

.......... இது நம்ம ஊரு ஸ்பெஷல் ....

... அழகான ஊர் .. ஊரை சுற்றி தோட்டங்கள் .... தோட்டங்களில் ஆங்காங்கே பூவரசு ஆடுகாற்களுடன் கிணறுகள் ..... அதன் அருகருகே தென்னோலையால் வேயப்பட்ட சிறு குடில்கள்..... தோட்டங்களுக்கு நீர் பாய்ச்சுபவர்கள் களைப்பாற, வேலை செய்பவர்கள் இளைப்பாற, நீர் இறைக்கும் இயந்திரங்களை சிலவேளை இரவுகளில் விட்டுச் செல்லவும் இக்குடில்கள் ..... அதனை விட பாடசாலையை கட் அடித்து விட்டோ, மதில் ஏறிப் பாய்ந்து சென்று நாலு போத்தல் கள்ளுகளுடன் ஒதுங்கவும் அருமையான இடம் ... நன்றிகள் குடில்களே!!

... அது என்ன கோழிப்புக்கை?????

.... கள்ளுடன் தோட்ட குடிளுக்குள் ஒதுங்கியாச்சு! ... போட்டால் பசிக்கும் ... சாப்பிட??? .. வீடுகளுக்கு போக முடியாது, முறியும் மட்டும்!! ... அப்ப தோட்ட குடிலுகளுக்குள் ஏதாவது செய்து சாப்பிட வேண்டும்!! அதுவும் வாயுக்கு சுவையாக ... சூடாக ... காரமாக ... உதற்கான கண்டு பிடிப்புத்தான் கோழிப்புக்கை!!!!!!!!!!!!

கள்ளுக்கு போகும் முன் ஊரில் ஒரு தெரிந்த வீட்டில் உள்ள கோழியை அமுக்கியாச்சு .... உரபாக்கில் போட்டுக் கொண்டு .... கொஞ்ச அரிசி, வெங்காயம், மிளகாய், தூள், ... ஒரு பெரிய பாத்திரத்துடன் குடிலுக்குள் ஒதுங்கினால் ..... கோழிப்புக்கை!!!!!

இங்கு ... புலத்தில் ... கொஞ்சம் மொடேனாக ... மெருகூட்டி ... கொஞ்ச ஸ்டைலாக செய்வதானால் ...

தேவையான சாமான்கள்: (ஒரு ஆறு பேருக்கு)

பச்சை குத்தரிசி - 2 1/2 சுண்டு (அண்ணளவாக, கூட போட்டால் அடுத்த நாளுக்கும் மனுசிமார் வைச்சிடுவாளல்)

சிறிய துண்டுகளாக வெட்டிய கோழி - ஒன்று (மேய்ந்து திரிந்த கோழி என்றால் நல்லது (Free Range Chicken). அடைத்து வைத்ததென்றால் சிலவேளை கரையப் பார்க்கும். கோழியில் தோலைத் தவிர வேறொன்றையும் கழிக்கத் தேவையில்லை, எலும்பு, கிலும்பு எல்லாம் போடலாம்)

சின்ன வெங்காயம் - உரிந்துப் போட்டு வெட்டாமலும் வைத்திருக்கலாம்

பச்சை மிளகாய் - நாலு, ஐந்து கூறாக பிளந்தது

மிளகாய்த்தூள் - தேவையான அளவு தூள் ( உறைப்பு கூட வேண்டின் நாலு, ஐந்து கரண்டி போடலாம்)

சிறிய காளான்கள் - வெட்டாமல் போடலாம்

மல்லி இலை அல்லது கருவேற்பிலை - சிறிய அளவு

வாசனை தூள் - பெரும் சீரகம், கறுவா, ஏலக்காய், கராம்பு, சாதிக்காய் எல்லாவற்றையும் போட்டு வறுத்து, பொடியாக்கி வைக்க வேண்டும்.

உப்பு - தேவையான அளவு

தேசிக்காய் - பாதி

செய்முறை:

ஒரு பெரிய பாத்திரத்தில்(பானையில்) போதிய அளவு நீரை எடுத்து, கொதிக்க வைத்து, அதனுள் பச்சை அரிசியை போட்டு அவியவைக்கவும்(ஏறக்குறை புக்கை செய்வது மாதிரி). ... அரிசி அரை பதத்தில் அவிந்து வந்தவுடன் ... அதனுள் வெட்டிய கோழியையும் போட்டு .. மிளகாய் தூளையும் போட்டு ... தேவையான அளவு உப்பையும் சேர்த்து அவிய விட வேண்டும்!! அத்துடன் வெட்டி வைத்துள்ள பச்சை மிளகாயையும் சேர்க்கலாம்.

மு.கு: பச்சை அரிசி அவிய ஆரம்பித்தவுடம் தொடர்ச்சியாக கிண்டிக்(கிளறிக்) கொண்டிருக்க வேண்டும், அத்துடன் மிளகாய் தூளையும் போட்டால் சிலவேளை அடிப்பிடிக்க(பாத்திர அடி எரிய) ஆரம்பிக்கப் பார்க்கும். அதனை தவிர்க்க தொடர்ந்து துலாவிக் கொண்டிக்க வேண்டும். அடிப்பிடித்தால் கோழிப்புக்கை வாயில் வைக்க இயலாது, சக்கரைப் புக்கை அடிப்பிடித்தால் எப்படியோ, அதேபோல்!!!

அவிந்து வரும் போது தண்ணீர் தேவைப்படின் சேர்க்கவும்.

பின் கழுவி வைத்திருந்த சிறிய காளான்களையும் போட்டு கிளறி அவிய விடவும். தூளும் (தூள் மணம் போக வேண்டும்), பச்சை அரிசியும் முற்றாக அவிந்த நிலையில், சின்ன வெங்காயங்களையும் சேர்க்கவும் ............. அதன் பின் உப்பையும் சரி பார்த்து விட்டு ... வாசனை தூள் ஒன்றோ இரண்டு கரண்டி போட்டு கலக்கவும்/சேர்க்கவும். ... தொடர்ச்சியாக கிளறிவிட்டு, அடுப்பை அணைக்கும் தறுவாயில் மல்லி இலையை போட்டு விடலாம்!! பின் விரும்பின் சிறிதளவு தேசிக்காய்புளியையும் விட்டு சேர்க்கலாம்!!! ... கோழிப்புக்கை!!!

சாப்பிடுவது சுடச்சுடவாக இருப்பின் வாவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்........ அத்துடன் சிறிதளவு மகிழ்வூட்டும் பாணம்... சொல்லி வேலையில்லை!!!

.... யாம் பெற்ற இன்பம் வையகமும் பெறுக ......

Link to comment
Share on other sites

அண்மையில்தான் கோழிப்புக்கை உண்ணும் சநு்தர்ப்பம் முதல்தடவையாகக் கிட்டியது. (கோழிப்புக்கை என்றொரு உணவு இருப்பதென்ற விசயமே அப்போதுதான் தெரிந்தது)

வடமாராட்சியைச் சேர்ந்த நண்பர் ஒருவர் சமைத்திருந்தார்..

பாவி ஒரு போத்தல் மிளகாய்த் தூளை கவிட்டுக் கொட்டீட்டுதூ தெரியேலை.. உறைப்பென்றால் அப்படி ஒரு உறைப்பு.. எனினும் அதன் சுவைக்காக அழுதழுது சாப்பிட்டுவிட்டு.. மறுநாள் அவதிப்பட்டதுதான் தாங்க முடியலை.

பிரியாணி கிரியாணி எண்டுறாங்க.. எண்டாலும் கோழிப்புக்கையை அடிக்கேலாது.. :icon_mrgreen:

சமையல் குறிப்புக்கு நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அண்மையில்தான் கோழிப்புக்கை உண்ணும் சநு்தர்ப்பம் முதல்தடவையாகக் கிட்டியது. (கோழிப்புக்கை என்றொரு உணவு இருப்பதென்ற விசயமே அப்போதுதான் தெரிந்தது)

வடமாராட்சியைச் சேர்ந்த நண்பர் ஒருவர் சமைத்திருந்தார்..

பாவி ஒரு போத்தல் மிளகாய்த் தூளை கவிட்டுக் கொட்டீட்டுதூ தெரியேலை.. உறைப்பென்றால் அப்படி ஒரு உறைப்பு.. எனினும் அதன் சுவைக்காக அழுதழுது சாப்பிட்டுவிட்டு.. மறுநாள் அவதிப்பட்டதுதான் தாங்க முடியலை.

பிரியாணி கிரியாணி எண்டுறாங்க.. எண்டாலும் கோழிப்புக்கையை அடிக்கேலாது.. :icon_idea:

சமையல் குறிப்புக்கு நன்றி.

உண்மைதான், வடமராட்சியைச் சேரந்தவர்கள் தான் கோழிப்புக்கை செய்வார்கள். கனடா வந்த காலத்தில் வல்வெட்டிதுறையை சேர்ந்தவர்கள் நண்பர்களாக இருந்தாதால் நானும் சாப்பிட்டு இருக்கிறேன். இப்ப கனகாலம் சாப்பிட்டு... :rolleyes:

செய்முறை உள்ளதால் ஒருக்கா செய்து பாக்கவேணும். முழுக்கோழியை வாங்கி எலும்புகளோட போட்டால் தான் சுவையாக இருக்குமெண்டு நினைக்கிறேன் (அப்படித்தான் ஞாபகம் இருக்கு). அப்பிடியோ நெல்லையான்?

இல்லையெண்டால் அடுத்த நண்பர்வட்ட சந்திப்பில் சகாரா அக்காவும் செய்து தரலாம். :icon_mrgreen:

Link to comment
Share on other sites

.... அப்போது சிங்களவன் படித்த பள்ளிக்கூடத்தையும் கொழுத்திப் போட்டான் .... அப்பர் பார்த்தார் இது றோட்டில் தான் நிற்கப்பாக்குது ... ஊரில் உழாதது வன்னியில் ஆவது உழும் என்ற நப்பாசையில் .... கொழும்பு கொண்டு சென்று விட ...

.... அப்போது ஒருநாள் ..... ஊரில் ....என்னோடு ஊரில் உழுது திரிந்ததுகளின் கைகளில் பத்தோ, இருபது கையில் கிடைத்தவுடன் ... போய் நாலு போத்தல் கள்ளையும் வாங்கி வந்து ... அரிசி, தூள், பாணை, ... என்று எல்லாத்தையும் எடுத்து கொண்டு திரிந்தால் கோழி அம்பிடவில்லையாம்!! . இறுதியாக அவர்களுக்கு கண்ணில் பட்டது என் வீட்டு கோழியே!! பின் பக்கத்தினால் என் வீட்டுக் காணிக்குள் உள்ளட்டு விட்டு, கூட்டினுள் அடைத்து வைத்திருந்ததுகளில் ஒன்றை அமுக்கி கொண்டு பின் பக்கத்தால் ஓடி .... தோட்ட குடிலில் கோழிப்புக்கையையும் செய்து, கள்ளையும் முடித்து ... சிறிய ஓய்வின் பின் ...மீண்டும் ஊர் உழ வெளிக்கிட்டு என் வீட்டருகே வந்தால் ....

... என் மம்மி ஒரு கம்போடு நிற்கிறாவாம்!! ..... கேட்டிருக்கிறார்கள்

... "என்ன நடந்தது, கம்புடன் நிற்கிறீர்கள்" ...

..."யாரோவடா, இன்று எங்கடை கோழி ஒன்றை களவெடுத்துக் கொண்டு பின் பக்கத்தாலை ஓடீட்டாங்கள், சத்தம் கேட்டு போறதற்கிடையில் போட்டாங்களடா" ...

மம்மின் முகத்தில் கோபம் நெருப்பு பிளம்பாகவாம்!!

..."அப்ப கோழியை பிடித்தவங்களை நீங்கள் காணேலையோ??"..

... "இல்லையடா" ..

..."ஆ... ஒரு கோழிதானே போனது விடுங்கள்், ..." ... என்று சொல்லி விட்டு மீண்டும் ஊர் உழ .....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நெல்லையன் அண்ணா நீங்க வடமராட்சிதானே? நெல்லியடியா?

ஏனென்றால் எனக்கு தெரிய வடமராட்சி பொடியள் தான் இது செய்யுறதா சொல்லுவங்கள். வீட்டிலை செய்யிறதா சொல்லலை நீங்கள் சொன்ன மாதிரி கள்ள கோழி தான்.

ஒருதடவை இங்கை சாப்பிட்டு இருக்கன். என்னொடை இருக்கிற ஒரு பொடியன் செய்து தந்தான். நல்லா இருந்திச்சு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சொன்னால் நம்பமாட்டியள் நான் இப்பவும் மாதத்திலை ஒருநாளாவது கோழிப்புக்கை சாப்பிடாமல் இருந்ததில்லை.

சாப்பிட்டவனுக்குத்தான் தெரியும் அதின்ரை அருமை :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலால் எல்லாம் மனுஷாள் சாப்பிடக்கூடாது.

”வேதம்:ஸ்மிருதி:சதாச்சார்: ஸ்வஸ்ளச ப்ரிய மாத்மன:!”

”யோவமன்யேத் தே மூலே ஹேதுசாஸ்த்ராஅயத் த்விஜ:!

ஸ ஸாதுபிர்பஹிஷ்கார்யோ நாஸ்த்கோ வேதநிந்தக்:!!

”ஸ்ருதித்வைதம் து யத்ர ஸ்யாப்தத்ர தர்மாவுபெள ஸ்ம்ருதெள!”

”யா வேதபாஹ்யா: ஸ்ம்ருத்யோ யாஸ்ச காஸ்ச குத்ருஷ்:!

ஸர்வாஸ்தா நிஷ் வலா: ப்ரேத்ய தமோநிஸ்டா ஹித்: ஸ்ம்ருதா:!!”

”வேதாயத்வோபநிபந்திருதத் ப்ரமாண்ய ஹி மனோ: ஸ்ம்ருத்

மன்வர்த்தவிபரீதா து யா ஸ்மிருதி ஸா ந சஸ்யதே!!”

”புராண மாநவோ தர்ம: ஸாங்கோ வேத ஸ்சித்ஸித்!

ஆங்யாஸித்தானி சத்வாரி ந ஹந்தவ்யானி ஹேதுபி!!”

Link to comment
Share on other sites

  • 1 year later...

இந்த வார விடுமுறையில் ஒருக்கால் செய்து சாப்பிட வேண்டும் கோழிப் புக்கையை

Link to comment
Share on other sites

கரவெட்டியில் அடிக்கடி சாப்பிட்டது இப்போதும் வாயூறியபடி உள்ளது.

நன்றி நெல்லையன்.

Link to comment
Share on other sites

  • 1 year later...
  • கருத்துக்கள உறவுகள்

நான் இதுவரைக்கும் கோழிப்புக்கை சாப்பிட்டதே இல்லை ...... செய்து சாப்பிட்டு பார்க்கவேண்டும். :)

பகிர்விற்கு நன்றி நெல்லையன்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • Published By: RAJEEBAN   29 MAR, 2024 | 03:40 PM   அதிகாரபகிர்வு உரிய முறையில் சரியான விதத்தில் இடம்பெற்றால்தான் பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என்பதை சிங்கள மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என அரசியல் செயற்பாட்டாளர் ராஜ்குமார் ரஜீவ்காந்  வேண்டுகோள் விடுத்துள்ளார். கொழும்பில் தூய்மையான அரசியல் கலாச்சாரத்தை ஏற்படுத்துவதற்காக மார்ச் 12 இயக்கம் ஏற்பாடு செய்திருந்த தூய்மையான அரசியலுக்காக ஒன்றிணைவோம் என்ற நிகழ்வில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்தார். அவர் தனது உரையில் மேலும் தெரிவித்துள்ளதாவது, தூய்மையான ஒரு எதிர்காலத்தினை  தூய்மையான அரசியலிற்கான ஒரு தேவைப்பாட்டினை அரசிடமிருந்து மக்கள் நீண்டகாலமாக  எதிர்பார்க்கின்றனர். இலங்கைதொடர்ந்து பல வருடங்களாக பொருளாதார ரீதியில் பின்னடைவுகளை சந்தித்துவந்தாலும் 2022ம் ஆண்டு மிக மோசமான அடியை சந்தித்தது 2022 பொருளாதார பிரச்சினை என்பது வெறுமனே 2022 ம் ஆண்டு வந்தது அல்ல இது மிகநீண்டகாலமாக தீர்க்கவேண்டிய பிரச்சினைகளை தீர்க்காமல் அந்த பிரச்சினைகளை மையமாக வைத்து அதன் ஊடாக அரசியல் இலாபம் தேடிக்கொண்டிருந்தவர்களால் எடுத்துக்கொண்டுவரப்பட்டு பின்னர் அது ஒரு பூகம்பமாக வெடித்தது. அதுதான் நாங்கள் அனைவரும் எதிர்நோக்கிய மோசமான பொருளாதார  நெருக்கடி. அதன் பிற்பாடு நாங்கள் மீட்சியை அடைந்துவிட்டோம் என சிலர் கூறினாலும் கூட நாங்கள் உண்மையான மீட்சியை அடையவில்லை. சிறந்த ஒரு பொறிமுறை ஊடாக நாங்கள் அடையவேண்டிய இலக்குகள் இன்னமும் உள்ளன. சமத்துவம் என்ற வார்த்தையை வைத்து நாங்கள் இலங்கையின் ஒட்டுமொத்த  பிரச்சினையையும் அடையாளம் காணமுடியும். சமத்துவமற்ற ஜனநாயகத்தினால் நாங்கள் எந்தவொரு முன்னேற்றத்தையும் அடைந்துவிட முடியாது. இலங்கையில் இலவசக்கல்வி வழங்கப்படுகின்றது இந்த இலவசக்கல்வி ஊடாக தங்களுடைய இலக்கினை ஒரு பணக்கார மாணவன் அடைந்துகொள்ளும்;  தன்மையும் ஏழை மாணவன் அடைந்துகொள்ளும் முறைக்கும் இடையில் பாரிய வேறுபாடு காணப்படுகின்றது. அடித்தட்டுமக்கள் இவ்வளவு சிரமங்களை எதிர்கொள்கின்றனர் ஏன் அவர்கள் இவ்வளவு பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளவேண்டியுள்ளது என்பதை சற்றே சிந்தித்து பார்த்தால் சமத்துவமற்ற நிலையே இதற்கு காரணம் என்பது புலப்படும். வருமானசமத்துவம் இன்மை அதிகரித்துவருகின்றது செல்வந்தர்கள் மேலும் செல்வந்தர்களாகின்றனர்  வறியவர்கள் மேலும் வறியவர்களாகின்றனர். இங்கு காணப்படுகின்ற ஜனநாயகத்தில் தமிழர்கள் முஸ்லீம்கள்  ஒருபோதும் அதிகாரம் செலுத்துவதில்லை. சிங்களவர்கள் கொண்டுவருகின்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள்தான் அதிகாரம் செலுத்துகின்றார்கள. நாங்கள் பங்காளிகள் இல்லையா என்ற கேள்வி  தமிழ் முஸ்லீம்கள் மத்தியில் காணப்படுகின்றது. வடக்குகிழக்கில் தமிழ் மக்களின் நிலங்கள் அடாத்தாக கைப்பற்றப்படுகின்றன இதற்கு பொலிஸார் துணைபோகின்றனர். இனங்களுக்கு இடையில் சமத்துவம் இன்மையே இதற்கு காரணம் மற்றைய சமூகங்களிற்கு அதிகாரங்கள் சென்றடையவில்லை. கொரோனா காலத்தில் முஸ்லீம்மக்களின் உடல்கள் எரியூட்டப்பட்டன அவர்கள் பழிவாங்கப்பட்டார்கள் இதற்கு யாராவது பொறுப்புக்கூறச்செய்யப்பட்டார்களா  சிறுபான்மை சமூகங்களின் இடங்களை பிடித்து  பௌத்த மக்களை கவர்ந்து நாயகர்களாக மாறி தேர்தல்களில் வெற்றிபெறுகின்றனர் ஆனால் அவர்களை வெற்றிபெறச்செய்தவர்களின் வாழ்க்கை மாற்றமடையாமல் வறுமையில் நீடிக்கின்றது. இந்த உணர்வு அரசியலை என் சகோதரசிங்கள மக்கள் புரிந்துகொள்ளவேண்டும். சரியான முறையில்  அதிகாரபகிர்வு இடம்பெற்றால்தான் பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என்பதை நீங்கள் நம்பவேண்டும். மீண்டும் மீண்டும் இந்த விடயங்களை  கூறி எங்களை எத்தனை காலமாக எங்களை ஏமாற்றப்போகின்றீர்கள். புரிந்துணர்வுதான் இந்த ஜனநாயகத்திற்கு மிகவும் அவசியமானது. https://www.virakesari.lk/article/179972
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
    • சீமானுக்கு எதிராக பொங்கி எழுபவர்கள் யாரென்று பார்த்தால் சிங்கள ஆக்கிரமிப்பையும் கிந்திய ஆக்கிரமிப்பை பற்றியும் வாயே திறக்காதவர்கள் தான் 🤣
    • எம் ஜிஆர் ,  கருணாநிதி , நெடுமாறன்,திருமாளவன்,வைகோ,துரைமுருகன் போன்றோர் செய்யாத ஈழ அரசியலையா சீமான் செய்து விட்டார்? அதிலும் பழ நெடுமாறன்  ஒருபடி மேலே......! நான் தமிழன். நீங்கள் ஈழத்து திராவிடர்களா?😁
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.