Jump to content

Photoshop பாவிக்கும் முறை - Photoshop tamil


Recommended Posts

பகுதி 5

படத் தட்டுக்கள் (Layers)

5.2 Styles

எ2 ) படத்தினை மெருகூட்டுவதற்குப் பயன்படும்.

கீழுள்ள காணொலி மூலம் இதை விளங்கிக் கொள்ளலாம்.

சில உதாரணங்களைப் பார்க்கலாம்.

மெருகூட்ட வேண்டிய தட்டினைத் தெரிவு செய்து 'எ2' இல் அழுத்தி 'Drop Shadow' என்பதைத் தெரிவு செய்தால் கீழ்க்காணும் கட்டம் தோன்றும்.

layerstyle.png

எ2-1 - இதன் கீழுள்ள தட்டுக்களிலுள்ள படங்களுடன் எந்த முறையில் சேர்வது என்பதைத் தீர்மானிக்கும். இக் கட்டத்தின் வலது புறமுள்ள Priview என்பது தெரிவு செய்யப்பட்டிருந்தால் சேர்வு முறைகளை ஒவ்வொன்றாகத் தெரிவு செய்து நேரடியாக அவற்றின் மாற்றங்களை அவதானிக்கலாம்.

எ2-2 - இதனை அழுத்தி நிழலின் நிறத்தைத் தெரிவு செய்யலாம்.

எ2-3 - இதன் வீதத்தை மாற்றி நிழலின் கண்ணாடித் தன்மையை மாற்றலாம்.

எ2-4 - நிழல் விழும் திசையை மாற்றலாம். Use Global Light என்பதை அழுத்தினால் தொடர்ந்து செய்யப்போகும் மெருகூட்டும் முறைகளும் இத் திசையையே பெறும். அல்லது ஏற்கனவே உள்ள ஒரு மெருகூட்டலில் உள்ள திசையை இதுவும் பெறும்.

எ2-5 - தட்டிலுள்ள படத்திலிருந்து நிழல் எவ்வளவு தூரம் விலகிச் செல்கிறது என்பதைத் தீர்மானிக்கும்.

எ2-6 - நிழலின் விளிம்புப் பகுதி வெளிப்புறமாகக் கரைந்து செல்லும் வீதத்தைக் குறிக்கும்.

எ2-7 - நிழலின் பருமனை அதிகரிக்கச் செய்யும்.

ஏனைய செயற்பாடுகள் அதிக முக்கியத்துவம் வாய்ந்தவைகள் அல்ல.

தொடரும்.

Link to comment
Share on other sites

பகுதி 5

படத் தட்டுக்கள் (Layers)

5.3 ஒரு பகுதியை மறைக்கச் செய்தல் ( எ3 )

இது Photoshop இன் ஒரு முக்கியமான பகுதி. மேலே படங்களை எப்படித் தனிமைப் படுத்துவது என்று பார்த்தோம். படங்களைத் தனிமைப் படுத்தலில் இம் முறையே அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது.

[காணொலி பின்னர் இணைக்கப்படும்]

தனிமைப் படுத்தப்பட வேண்டிய படமுள்ள தட்டை Mouse இனால் அழுத்தித் தெரிவு செய்தபின்னர் எ3 இல் அழுத்தினால் தெரிவு செய்யப்பட்ட தட்டின் அருகில் இன்னொரு தட்டு தோன்றும் .அத்துடன் Photoshop இன் கருவிகள் பயன்படுத்தும் நிறங்கள் கருப்பு வெள்ளையாக மாறிவிடும்.

இப்போது தூரிகையைத் தெரிவு செய்து கருப்பு நிறத்தினால் தடிப்பாக படத்தின்மேல் கோடொன்று கீறுங்கள். கீறப்பட்ட கோடு கருப்பாகத் தெரியாமல் கண்ணாடித் தன்மையாக மாறுவதை அவதானிக்கலாம். அதே நேரம் தட்டின் அருகில் தோன்றிய மறைக்கும் தட்டில் அக் கோடு கருப்பாகத் தெரியும். இத் தட்டில் கருப்பாகத் தெரிபவை எல்லாம் படத்தில் கண்ணாடித் தன்மையாகத் தெரியும்.

layermask.png

கீழுள்ள படத்தில் இத் தட்டு எவ்வாறு செயற்படுகிறது என்பதைக் காணலாம்.

layermask2.png

இப்போது கருப்பு நிறத்திற்குப் பதிலாக சாம்பல் நிறத்தில் கோடுன்றை அருகில் கீறிப் பாருங்கள். கீறப்பட்ட கோடு 50 வீதம் கண்ணாடித் தன்மையுடையதாகத் தோன்றும். ஒவ்வொரு நிறமும் 8bits வகைக்குள் அடங்குவதால் 0 இல் இருந்து 255 வரையிலான வித்தியாசமான கருப்பு நிறங்களைப் (வெள்ளை தொடக்கம் கருப்பு வரை) பாவிக்கலாம். கருப்பு நிறத்தால் கீறப்பட்ட பகுதியை வெள்ளை நிறத்தால் அழிக்கலாம். அப்படி அழிக்கும்போது படத்தில் கண்ணாடித் தன்மையாக மாறிய பகுதி மீண்டும் பழைய நிலைக்கு வரும்.

இம் முறையில் தனிமைப்படுத்தப்பட்ட படமொன்று திருப்திகரமாக இல்லாவிட்டால் திருத்திக் கொள்ளலாம். அல்லது இத் தட்டை முற்றாக வெள்ளை நிறத்தால் நிறைத்து ஆரம்ப நிலைக்கு வந்தபின் மீண்டும் சரியாக தனிமைப் படுத்தலாம்.

தூரிகை உட்பட எல்லாவிதமான கருவிகளையும் இம் மறைக்கும் தட்டில் பாவிக்க முடியும்.

தொடரும்.

Link to comment
Share on other sites

பகுதி 5

படத் தட்டுக்கள் (Layers)

5.3 ஒரு பகுதியை மறைக்கச் செய்தல் ( எ3 )

தட்டொன்றை Mouse இனால் அழுத்தித் தெரிவு செய்யும்போது அதனைச் சுற்றி மேலதிகமான ஒரு வெளிக் கோடு தோன்றுவதை அவதானிக்கலாம். மறைக்கும் தட்டையுடைய தட்டொன்றில் இவ் இரண்டையும் ஒரே நேரத்தில் தெரிவு செய்ய முடியாது. மறைக்கும் தட்டை அல்லது பிரதான தட்டை மட்டுமே தெரிவு செய்யலாம். பிரதான தட்டு தெரிவு செய்யப்பட்டிருந்தால் தூரிகையால் கீறும்போது அப்பகுதி மறைக்கப்படுவதற்குப் பதிலாக கோடு மட்டுமே கீறப்படும். ஆகவே பிரதான தட்டா அல்லது மறைக்கும் தட்டா தெரிவு செய்யப்பட்டுள்ளது என்பதில் அவதானமாக இருத்தல் வேண்டும்.

கீழ்காணும் படத்தில் பிரதான தட்டு தெரிவு செய்யப்பட்டிருப்பதைக் காணலாம் அத் தட்டினைச் சுற்றி வெளிக் கோடொன்று தெரிகிறது.

layerinactive2.png

முன்பு குறிப்பிட்டது போன்று மறைக்கும் தட்டு தெரிவு செய்யப்பட்டவுடன் கருவிகளில் பாவிக்கப்படும் நிறங்கள் கருப்பு வெள்ளையாக மாறிவிடும். பிரதான தட்டைத் தெரிவு செய்தால் மறுபடி நிறங்கள் தோன்றும்.

ஒரு தட்டில் ஒரு மறைக்கும் தட்டை மட்டுமே இணைக்க முடியும் (இன்னொரு தடவை எ3 இல் அழுத்தினால் இன்னொரு தட்டு தோன்றும். அதைப் பற்றி பின்னர் பார்க்கலாம்). இவ்விரு தட்டுக்களுக்கும் இடையில் சங்கிலிக் கோர்வை அடையாளம் ஒன்று காணப்படும். இது இரண்டில் ஒரு தட்டை நகர்த்தும்போது அதனுடன் மற்றதும் சேர்ந்து நகர்வதற்கு உதவும். ஒரு தடவை இதனை அழுத்தி இரண்டையும் பிரிக்க முடியும். அதே இடத்தில் இன்னொரு தடவை அழுத்தினால் மறுபடி இணைக்கப்படும்.

மறைக்கும் தட்டைத் தற்காலிகமாக நீக்க வேண்டுமாயின் Shift விசையை அழுத்தியவாறு அதை ஒரு தடவை அழுத்தினால் கீழ்கண்டவாறு தோன்றும். இவ்வாறே இன்னொரு தடவை அழுத்தினால் மீண்டும் தோன்றும்.

layerinactive.png

பிரதான தட்டைத் தெரிவு செய்தபின் அழிக்கும் கருவியில் ( எ7 ) அழுத்தினால் இரண்டு தட்டுக்களும் அழிந்துவிடும். அழிப்பதற்கு முன்னர் Photoshop நிச்சயமாக அழிக்க வேண்டுமா என்பதை உறுதிப்படுத்தும். மறைக்கும் தட்டைத் தெரிவு செய்து அழித்தால் அது மட்டுமே அழியும். அத்துடன் அதனை அழிக்குமுன் அதனுள் காணப்படும் கண்ணாடித் தன்மையான பகுதிகளைப் படத்திலுள் நேரடியாகப் புகுத்த வேண்டுமா இல்லையா என Photoshop கேட்கும்.

தொடரும்.

Link to comment
Share on other sites

பகுதி 5

படத் தட்டுக்கள் (Layers)

5.3 ஒரு பகுதியை மறைக்கச் செய்தல் ( எ3 )

மறைக்கும் தட்டைத் தெரிவு செய்து வேறு பல கருவிகளின் உதவியுடன் படமொன்றைத் தனிமைப் படுத்துவதைப் பார்க்கலாம்.

கீழுள்ள படத்தை உதாரணத்திற்கு எடுத்துக் கொள்ளலாம். இப் படத்தின் வெவ்வேறு பகுதிகளில் வசதிக்கேற்ப வெவ்வேறு கருவிகளைப் பயன்படுத்தலாம் (படத்தில் ஏ1, ஏ2, ஏ3 ஆகிய பகுதிகள்).

layer7.png

முதலில் படத்தைத் திறக்கும்போது 'Background' என்ற தட்டு மட்டுமே காணப்படும். இதனுடன் மறைக்கும் தட்டொன்றை இணைக்க முடியாது. இரண்டு தடவை இத்தட்டின்மேல் அழுத்தி ஒரு சாதாரண தட்டாக மாற்றியபின் மறைக்கும் தட்டை இணைத்துக் கொள்ளலாம். இத் தட்டின் பெயரையும் இதே நேரத்தில் மாற்றிக் கொள்ளலாம்.

ஏ1 என்ற பகுதியில் சீரான நிறம் காணப்படுவதால் மந்திரக் கோலே இலகுவானது. மந்திரக்கோலை எடுத்து செய்து ஒரு தடவை வெள்ளையாக உள்ள பகுதியில் அழுத்த, அப் பகுதி முழுவதும் தெரிவு செய்யப்படும். அழிக்க வேண்டிய பகுதி தொப்பிக்கு வெளிப்புறம் என்பதால் Menu > Select > Inverse என்பதைத் தேர்ந்தெடுத்தால் படத்தில் தெரிவு செய்யப்ப் படாத பகுதி தெரிவு செய்யப்பட்ட பகுதியாக மாறிவிடும். இப்போது தூரிகையை எடுத்து கறுப்பு நிறத்தால் தொப்பியின் விளிம்புகளில் கீறினால் ஏ1 என்ற பகுதி தனிமைப் படுத்தப்பட்டு விடும். தொப்பிக்கு வெளிப் பகுதி மட்டுமே தெரிவு செய்யப்பட்டிருப்பதால் தொப்பிக்குள் தூரிகை நுளைய முடியாது.

layer9a.png

Menu > Select > deselect என்பதைத் தேர்ந்தெடுத்து தெரிவு செய்யப்பட்ட பகுதியைச் இழக்கச் செய்தபின் ஏ2 என்ற பகுதியை சாதாரணமாக தூரிகையினால் கீறலாம். வசதிக்கேற்ப தூரிகையின் அளவையும் வீரியத்தையும் மாற்றிக் கொள்ளலாம். திருப்திகரமாக இல்லாவிட்டால் Lasso கருவியினால் கீழே காட்டியுள்ளபடி இப் பகுதியைத் தெரிவு செய்தபின் Menu > Filter > Blur > Gaussian Blur என்பதைத் தேர்ந்தெடுத்து இப் பகுதியைக் கலங்கலாக மாற்றலாம்.

layer9c.png

மீண்டும் Menu > Select > deselect தென்பதைத் தேர்ந்தெடுத்து தெரிவு செய்யப்பட்ட பகுதியைச் இழக்கச் செய்தபின் ஏ3 என்ற பகுதியை Lasso கருவியினால் கவனமாகத் தெரிவு செய்து கருப்பு நிறத்தால் நிரப்பிக் கொள்ளலாம்.

layer9b.png

முழுமையாக படம் தனிமைப் படுத்தப்பட்டதும் இத் தட்டின் கீழ் விரும்பிய காட்சியொன்றை வெட்டி ஒட்டிக் கொள்ளலாம்.

தொடரும்.

Link to comment
Share on other sites

பகுதி 5

படத் தட்டுக்கள் (Layers)

5.4 நிற ஒளி மாற்றங்களைச் செய்தல் ( எ4 )

படங்களில் நிற ஒளி மாற்றங்களை எப்படிச் செய்வதென்று மேலே பார்த்தோம். இவ்வாறான முறையில் மாற்றம் செய்யும்போது படத்தின் தரம் குறைவதுடன் செய்யப்பட்ட மாற்றங்கள் நேரடியாக படத்தில் இணைவதால் அவற்றைப் பின்னர் அகற்ற முடியாது. தனிமைப் படுத்துதல் போலவே படத் தட்டில் ஒளி நிற மாற்றங்களைச் செய்தால் தேவையான போது அம் மாற்றங்களை திருத்தவோ அல்லது முற்றாக நீக்கவோ முடியும்.

படத்தில் ஏ4 என்பதை அழுத்த சிறிய மெனு ஒன்று தோன்றும். இதில் நாம் முன்பு பார்த்த பல்வேறு மாற்றங்கள் செய்யும் முறைகள் காணப்படும். உதாரணத்திற்கு Levels... எம்பதைத் தெரிவு செய்தால் கீழ்காணும் கட்டம் தோன்றும். இதில் எமக்கு வேண்டிய மாற்றங்களைச் செய்து OK என்பதை அழுத்தினால் இப் படத் தட்டுக்கு மேலாக இன்னொரு புதிய தட்டொன்று தோன்றும். தற்போது செய்யப்பட்ட ஒளி மாற்றம் இத் தட்டுக்குக் கீழ் காணப்படும் அத்தனை தட்டுக்களிலும் உள்ள படங்களில் மாற்றங்களை ஏற்படுத்தும்.

layermask2a.png

இந்த ஒளித்தட்டின் வலது பக்கத்தில் மறைக்கும் தட்டொன்றும் தானாகவே உருவாக்கப்பட்டிருக்கும். இதை ஒரு தடவை அழுத்தி தெரிவு செய்தபின் தூரிகையை எடுத்து கருப்பு நிறத்தால் கீறினால், கருப்பு நிறமாக உள்ள பகுதிகளில் செய்யப்பட்ட ஒளி மாற்றம் இல்லாமல் போகும். அல்லது சாம்பல் நிறத்தால் கீறினால் அப் பகுதிகளில் ஒளி மாற்றத்தில் 50 வீதம் மட்டுமே உணரப்படும்.

layermask2b.png

செய்யப்பட்ட ஒளி மாற்றம் திருப்தியாக இல்லாவிட்டால் இவ் வொளித் தட்டில் இரண்டு தடவை அழுத்தினால் ஒளி மாற்றத்திற்கான கட்டம் மீண்டும் தோன்றும். தொடர்ந்து பொருத்தமான முறையில் இம் மாற்றாத்தைச் செய்து கொள்ளலாம். ஒளித் தட்டைத் தெரிவு செய்து, அழிக்கும் கருவியில் (எ7) அழுத்தினால் இத் தட்டு முற்றாக மறைந்துவிடும். அல்லது இந்த ஒளித்தட்டை இந்த நிலையிலேயே வைத்துக் கொண்டு இன்னொரு ஒளித்தட்டை உருவாக்கிக் கொள்ளலாம்.

இதே முறையில் ஏனைய நிற மாற்றங்களையும் செய்து கொள்ளலாம்.

layermask2c.png

ஒளித் தட்டொன்று அதற்குக் கீழுள்ள முதலாவது தட்டில் மாத்திரம் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டுமாயின் 'ஊ' என்ற இடத்தில் அழுத்தி Create Clipping Mask என்பதைத் தெரிவு செய்தால் இவ்வொளித் தட்டு அதன் கீழுள்ள தட்டின் ஆதிக்கத்திற்குள் வந்துவிடும். ஒளித்தட்டு வலது புறமாக சிறிது நகர்ந்து தட்டின் முன்னால் ஒரு அம்புக்குறி தோன்றும்.

தொடரும்.

Link to comment
Share on other sites

பகுதி 5

படத் தட்டுக்கள் (Layers)

5.5 தட்டுக்களைக் கையாளுதல்

எ1 ) பல தட்டுக்களை ஒன்றாக பிணைப்பதற்கும் பயன்படுத்தலாம். கீழுள்ள உதாரணத்தில் Mouse இனால் தட்டு 1 ஐ அழுத்திய பின்னர் விசைப்பலகையில் Ctrl விசையை அழுத்தியவாறு தட்டு 2 ஐயும் அழுத்த இவ்விரு தட்டுக்களும் தெரிவு செய்யப்படும். பின்னர் பிணைக்கும் கருவியில் ஒரு தடவை அழுத்த இவை இரண்டும் பிணைக்கப்படும். இன்னொரு தடவை அழுத்தினால் பிணைக்கப்பட்ட தட்டுக்கள் விடுவிக்கப்படும். பிணைக்கப்பட்ட தட்டுக்களில் ஒன்றினை படத்தினை நகர்த்தும் கருவியால் நகர்த்தினால் பிணைக்கப்பட்ட ஏனைய தட்டுக்களில் உள்ள படங்களும் சேர்ந்தே நகரும். ஆனால் ஏனைய எல்லாவிதமான மாற்றங்களையும் பிணைக்கப்பட்ட தட்டுடொன்றில் மேற்கொள்ளப்பட்டால் அவை ஏனைய தட்டுக்களில் தாக்கத்தை ஏற்படுத்தாது.

layer6.png

எ5 ) இது தட்டுக்களை ஒருங்கிணைக்க உதவும். சிக்கலான இணைய வடிவமைப்பு, அச்சுத் தேவைகளுக்கான படங்கள் போன்றவற்றை உருவாக்கும்போது ஏராளமான தட்டுக்களை உருவாக்க வேண்டிய தேவை ஏற்படும். எ5 என்பதை அழுத்தி கோப்புறை ஒன்றை உருவாக்கி, Mouse இனால் தட்டுக்களளை இழுத்து இதனுள் போடலாம். இவ்வாறு கோப்புறைகளை உருவாக்குவதால் தட்டுக்களை இலகுவாக வகைப்படுத்தி இலகுவாகக் கையாளலாம். உதாரணமாக இணையத் தள வடிவமைப்பில் தலைப்பு, Menu, footer போன்ற வெவ்வேறு பகுதிகளை ஒவ்வொரு கோப்புறைகளில் வைத்துக் கொள்ளலாம்.

கோப்புறைக்கு இடது பக்கமுள்ள சிறிய முக்கோணத்தை அழுத்தி அக் கோப்புறையை மடித்தோ அல்லது விரித்தோ அதனுள் உள்ள தட்டுக்களை காணலாம் அல்லது சுருக்கலாம். இதற்கு இடது பக்கமுள்ள கண்ணை அழுத்தி இதனுள் உள்ள தட்டுக்கள் அனைத்தையும் தற்காலிகமாக மறைக்கவும் முடியும். கொப்புறையினை ஒரு தடவை அழுத்தி தெரிவு செய்தபின் நகர்த்தும் கருவியால் படத்தை நகர்த்தினால் இதனுள் உள்ள தட்டுக்கள் யாவும் ஒரே நேரத்தில் நகர்த்தப்படும். கோப்புறையை விரித்து ஒவ்வொரு தட்டாகவும் நகர்த்திக் கொள்ளலாம்.

கோப்புறையைத் தெரிவு செய்து அழிக்கும் கருவியை (எ7) அழுத்தினால் கோப்பை மட்டுமா அல்லது கோப்பினுள் உள்ள தட்டுக்களையும் சேர்த்தே அழிக்க வேண்டுமா என்பதை Photoshop உறுதிப்படுத்தும்.

layergroup1.png

இப் படத்தில் முதல் மூன்று தட்டுக்களும் கோப்புறை (விரிக்கப்பட்டுள்ளது) ஒன்றினுள் உள்ளன. நான்காவது தட்டு கோப்புறைக்கு வெளியில் உள்ளது.

கோப்புறையைத் தெரிவு செய்து மறைக்கும் தட்டொன்றை இணைத்துக் கொண்டு அதனுள் தூரிகையால் கருப்பு நிறத்தில் கீறினால் கருப்பாக கீறப்பட்ட பகுதி இக் கோப்பினுள் உள்ள அனைத்துத் தட்டுக்களிலும் கண்ணாடித் தன்மையுடையதாகத் தெரியும்.

தொடரும்.

Link to comment
Share on other sites

  • 5 months later...

பகுதி 6

Vector வடிவங்கள்

6.1 அறிமுகம்

இதுவரை பார்த்தவை யாவும் pixel முறையிலேயே கையாளப்பட்டன.

இனி Vector முறையைப் பயன்படுத்தி எவ்வாறு உருவங்களை வரையவும் படங்களைத் தனிமைப் படுத்தவும் முடியும் என்பதைப் பார்க்கலாம்.

ஒரு வட்டத்தை வரைந்தால் அது குறிப்பிட்ட எண்ணிக்கையான pixel களைக் கொண்டிருக்கும். இதன் விளிம்பு Anti-Aliasing செய்யப்பட்டிருப்பதால் நேர்த்தியானதாகத் தெரியும். ஆனால் இவ் வட்டத்தைப் பெரிதாக்கினாலோ அல்லது சிறிதாக்கினாலோ இதன் pixel கள் மீள ஒருங்கமைக்கப் படுவதால் விளிம்புகள் நேர்த்தியை இழந்துவிடும்.

vector01j.png

Vector முறையில் வரையப்படும் வட்டமொன்று கணித பௌதிக தரவுகளை மடுமே ( விட்டம், நிறம், விளிம்பின் அகலம், ...) கொண்டிருக்கும். இத் தரவுகளைக் கொண்டு Photoshop கணணித் திரையில் ஒரு வட்டத்தைக் உருவாக்கும். இவ் வட்டத்தின் எவ்வளவு பெரிதாக்கினாலும் அதன் தரவுகளும் பெரிதாகுவதால் நேர்த்தி குலையாது.

Vector முறையில் தரவுகள் மட்டுமே உள்ளடக்கப் படுவதால் கணணியில் சேமித்து வைக்கும்போது குறைந்த கொள்ளளவையே பிடிக்கும். ஒரு சிறிய வட்டத்திற்கும் பெரிய வட்டத்திற்கும் ஒரே அளவிலான Memory யே தேவைப்படும்.

நாம் சாதாரணமாகப் பாவிக்கும் எழுத்து வடிவங்களில் பெரும்பான்மையாவை Vector வடிவமைப்பைக் கொண்டன. எழுத்துக்களின் பரிமாணத்தைக் கூட்டினால் அல்லது குறைத்தல் அவை எப்போதும் நேர்த்தியாக இருப்பதை அவதானிக்கலாம்.

Logo களும் Vector முறையிலேயே வரையப்படுகின்றன. ஒரு தடவை Logo ஒன்றை வரைந்து விட்டால் பின்னர் அதனை எந்த அளவிலும் பெருப்பித்துக் கொள்ளவும் அச்சுப் பதியவும் முடியும்.

Vector வடிவங்களால் பல நன்மைகள் இருந்தாலும் இதைப் பாவிப்பதில் சில சிக்கல்களும் உள்ளன. Vector வடிவங்களைக் கையாளப் பாவிக்கப்படும் மென்பொருட்களைப் பாவிப்பது சுலபமானதல்ல. ஒரு மென்பொருளில் வரையப்பட்ட படமொன்றை இன்னொரு மென்பொருளுக்குக் கொண்டு செல்வதில் சிக்கல்கள் உண்டு. எல்லாவிதமான கோப்பு வடிவங்களிலும் இவற்றைச் சேமித்து வைக்க முடியாது. PDF, EPS, PS, SVG போன்ற கோப்புக்களிலேயே Vector வடிவங்களை உள்ளடக்கலாம்.

தொடரும்.

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

பகுதி 6

Vector வடிவங்கள்

6.2 Pen tool

நீண்ட காலமாகவே Pen tool மூலம் Vector தொழில்நுட்பத்தை Photoshop இனுள் புகுத்தியது. ஆரம்பத்தில் இதன் முலம் வெளிக் கோடுகளை மட்டுமே வரையக் கூடியதாக இருந்தது. இக் கோடுகள் அச்சுப் பதிவிற்காகத் தயார்படுத்தப்படும் படங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. அச்சுப் பதிவிற்கான கோப்புக்களைக் கையாளும் மென் பொருட்கள் இக் கோடுகளின் மூலம் அப் படங்களை இலகுவாகத் தனிமைப் படுத்தின.

இப்போது Photoshop இல் கோடுகளை மட்டுமல்லாது உருவங்களையும் வரைந்து கொள்ளலாம். இதே கருவி Adobe Illustrator, Corel Draw போன்ற படங்கள் வரையப் பயன்படுத்தப்படும் பல்வேறு மென்பொருட்களிலும் காணப்படுகிறது. இதனைப் பாவிக்கும் முறையும் ஒரே மாதிரியானதாக இருப்பதால் இக் கருவி முக்கியத்துவம் பெறுகிறது. அதுமட்டுமல்லாது 3D மென்பொருட்களில் உருவங்களை வடிவமைக்கும்போது பாவிக்கப்படும் கருவிகளில் பல Pen tool இன் விதிகளுக்கமையவே இயங்குகின்றன.

சாதாரணமாக Pen tool பாவிக்கும் முறையை முதலில் பார்க்கலாம்.

ஒரு வெறுமையான புதிய கோப்பைத் திறந்து இக் கருவியைத் தெரிவு செய்து செய்யுங்கள்.

pen1.png

மேலதிக செயற்பாடுகளைக் காட்டும் பகுதியில் எவ்வாறான கோடு வரையப்பட வேண்டுமென்பதற்கான இரண்டு தெரிவுகள் காணப்படும்.

முதலாவது (அ) - வரையப்படும் கோடுகள் தெரிவு செய்யப்பட்ட நிறமொன்றினால் நிரப்பப் பட்டு உருவமாக மாறும்.

இரண்டாவது (ஆ) - தனியே கோடுகளாக மட்டுமே கீறப்படும். இக் கோடுகள் படத்தினுள் எந்த மாற்றத்தையும் உருவாக்காது. மாறாக இக் கோடுகளை வேறு தேவைகளுக்காகப் பாவிக்கலாம் (கீழே பார்க்கலாம்).

இக் கருவியை உபயோகிக்க முன்னர் Menu > Window > Path என்பதைத் தெரிவு செய்தால் படத் தட்டுக்களைக் காட்டும் கட்டம் (palette) போன்று இன்னொரு கட்டம் தோன்றும். ஆரம்பத்தில் இது வெறுமையாக இருக்கும். கருவியைப் பயன்படுத்தத் தொடங்கியவுடன் புதிய

Path தட்டொன்றை உருவாக்கிக் கொள்ளும் (இ).

முதலில் தனியான கோடுகளை வரவதற்கான தெரிவினை (அ) செய்து கொள்ளலாம்.

படத்தில் எங்காவது ஒரு இடத்தில் ஒரு தடவை இக் கருவியால் அழுத்துங்கள். அந்த இடத்தில் ஒரு புள்ளி (உ) தோன்றுவதுடன் Path கட்டத்தில் புதிய தட்டொன்று தோன்றும்.

pen2.png

இப் புள்ளியை தரிப்புப் புள்ளி (anchor point) எனலாம். வலது பக்கமாக சற்றுத் தள்ளி இன்னொரு புள்ளியை (ஊ) இடுங்கள். இவ்விரு புள்ளிகளும் கோடொன்றினால் இணைக்கப்படுவதைக் காணலாம். கீழே இன்னொரு புள்ளியையும் (எ) இட்டுக் கொள்ளுங்கள். பின்னர் ஆரம்பப் புள்ளியில் Mouse இனால் அழுத்துங்கள். இப்போது மூன்று புள்ளிகளும் இணைந்து முக்கோணம் உருவாகும்.

Path கட்டத்தில் தோன்றிய தட்டிலும் முக்கோணம் தெரிவதை அவதானிக்கலாம். இத் தட்டுக்குக் கீழே, Path கட்டத்தின் வெறுமையான பகுதியில் (ஈ) Mouse இனால் அழுத்தினால் இத் தட்டு செயலிழந்த நிலைக்கு வரும். படத்தில் வரையப்பட்ட முக்கோணம் மறைந்து விடும். மறுபடி Mouse இனால் இத் தட்டை அழுத்தி அதனைத் தெரிவு செய்ய, படத்தில் முக்கோணம் மீண்டும் தோன்றும். அதாவது இக் கோடுகள் படத்தில் மாற்றமெதையும் ஏற்படுத்தவில்லை.

தொடரும்.

Link to comment
Share on other sites

பகுதி 6

Vector வடிவங்கள்

6.3 வளைகோடு (Bézier curve)

வளைகோடுகளைக் கையாள்வதை நன்றாகத் தெரிந்து கொண்டால், பெரும்பாலான படங்களைத் தனிமைப்படுத்தலை Pen tool இனைக் கொண்டே செய்யலாம்.

படங்கள் மூலம் இதனை இலகுவாக விளக்கலாம்.

courbe031.png

'அ' என்ற இடத்தில் ஒரு புள்ளியை இடுங்கள். 'ஆ' என்ற இடத்தில் Mouse இனால் அழுத்திப் பிடித்தவாறு கீழ் நோக்கி நகருங்கள். 'ஆ' புள்ளியின் மையத்தை அடிப்படையாகக் கொண்டு ஒரு கோடு (guide line) தோன்றும். இதன் இரு முனைகளிலும் இரு புள்ளிகள் காணப்படும். (guide point) Mouse இன் அசைவுக்கு ஏற்றவாறு இக் கோட்டின் திசையும் நீளமும் மாறுபட்டுச் செல்லும். இக் கோட்டின் மையப் பகுதி மட்டும் மாறாது. அதே வேளையில் இக் கோட்டின் இயக்கத்திற்கேற்றவாறு 'அ' - 'ஆ' ஆகிய புள்ளிகளைத் தொடுக்கும் கோடு வளையும். பொருத்தமான வளைவு கிடைத்ததும் Mouse ஐத் தளர விடுங்கள்.

மேற்குறிப்பிட்டது போன்று 'இ' என்ற இடத்தில் இன்னொரு வளைவான கோட்டை உருவாக்கியபின் ஆரம்பப் புள்ளியில் (அ) அழுத்தி உருவத்தை நிறைவு செய்யலாம். அடுத்த புள்ளி இடும்போது கடைசியாக இடப்பட்ட புள்ளியை நிர்வகிக்கும் கோடு (guide line) மறைந்து விடும்.

courbe032.png

Pen tool கருவியில் Mouse இனால் சில வினாடிகள் அழுத்திப் பிடித்தால் கீழ்கண்டவாறு பல்வேறு விதமான Pen tool காணப்படும்.

courbe036.png

இதில் + என்பது கோடொன்றில் இடையில் புதிதான புள்ளியொன்றை உருவாக்க உதவும்.

- என்பது இடப்பட்ட புள்ளியொன்றை அழிக்கப் பாவிக்கப்படும்.

< என்பது வளைவான கோட்டை வளைவற்ற சாதாரண கோடாகவும் சாதாரண கோட்டை வளைக்கவும் உதவும்.

இதே போன்று அம்புக்குறி கருவியை அழுத்திப் பிடித்தால் இன்னொரு வெள்ளை அம்புக்குறி தோன்றும். இது கோடுகளையும் வளைவுகளியும் கையாள அவசியமானது.

இவ் வெள்ளை அம்புக் குறியினால் 'ஆ' என்ற புள்ளியில் அழுத்தினால் மறைந்து போன அப் புள்ளியை நிர்வகிக்கும் கோடு மறுபடி தோன்றும்.

< Pen tool ஐத் தெரிவு செய்து 'ஆ' என்ற புள்ளியில் அழுத்தினால் அப் புள்ளியை நிர்வகிக்கும் கோடு முற்றாக அழிக்கப்பட்டு சாதாரண புள்ளியாக மாற்றப்படும். இப் புள்ளியூடாகச் சென்ற வளைகோடு செயலிழந்து சாதாரண கோடாக மாறிவிடும்.

courbe033.png

மறுபடி இதே கருவியால் 'ஆ' என்ற புள்ளியில் அழுத்தியவாறு கீழ்நோக்கி நகர்ந்தால் புதிதான நிர்வகிக்கும் கோடு தோன்றி வளைவான கோடாக மாற்றம் பெறும்.

courbe034.png

இதே கருவியினால் (< Pen tool ) நிர்வகிக்கும் கோட்டின் ஒரு முனையிலுள்ள புள்ளியில் (ஈ) அழுத்தி வலதுபக்கமாக இழுத்தால் 'ஆ' என்ற புள்ளி முறிவடைவதைக் காணலாம். நிர்வகிக்கும் கோடு இரு துண்டுகளாக வெவ்வேறு திசையில் வெவ்வேறு நீளங்களில் தனித்தனியாகச் செயல்படும். இதனால் 'ஆ' என்ற புள்ளியிலிருந்து செல்லும் கோடுகள் இரு வேறு வளைவுகளைக் கொண்டிருக்கும்.

courbe035.png

முறிவு தேவைப்படாதெனில் மறுபடி 'ஆ' என்ற புள்ளியில் இதே கருவியினால் அழுத்தி கீழ்நோக்கி இழுக்க, சீரான வளைவு உருவாகும்.

தொடரும்.

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

பகுதி 6

Vector வடிவங்கள்

6.3 Vector கோடுகள் மூலம் படங்களைத் தனிமைப் படுத்துதல் (Bézier curve)

Vector கோடுகளின் முக்கிய பயன்பாடு படங்களைத் தனிமைப்படுத்துவதாகும். குறிப்பாக நேர்த்தியான விளிம்பையுடைய பொருட்களைத் துல்லியமாக வெட்டியெடுக்கலாம். கீழுள்ள படத்திலுள்ள பறவையின் நிறமும் படத்தின் பின்னணியிலுள்ள நிறமும் ஏறத்தாள ஒன்றாக இருப்பதால் மந்திரக் http://www.yarl.com/forum3/index.php?showtopic=62201&view=findpost&p=573599 கோலைப் பாவிக்க முடியாது. நேர்த்தியான வளைவுகளையுடைய விளிம்புகளின்மேல் Lasso கருவியையும் பிசகாமல் பாவிக்க முடியாது. Vector கோடுகளே இதற்குச் சிறந்தது.

plume3.png

இலகுவாக வளைகோடுகளைக் கீறுவதற்கு இரண்டு விதிகளைப் பின்பற்ற வேண்டுமென்று சொல்வார்கள்.

1 - வளைவொன்றின் உச்சியில் புள்ளி வைக்கக் கூடாது. வளைவின் இரு நுணிகளிலுமே புள்ளிகளை இட வேண்டும்.

2 - மிகக் குறைந்த அளவிலான புள்ளிகளை மட்டுமே இட வேண்டும். இரண்டு புள்ளிகளில் ஒரு வட்டத்தைக் கீறலாம்.

முதலில் முறிவுப் புள்ளியொன்று இடக்கூடிய இடத்திலிருந்து தொடங்குவது எளிதாக இருக்கும் (படம் அ).

அடுத்தடுத்த புள்ளிகள் வைக்கப்படுவதை படங்கள் ஆ இ ஆகியவற்றில் காணலாம்.

Path கட்டத்தில் தோன்றும் புதிய தட்டின் பெயர் சரிவாக இருக்கும். அதன் அர்த்தம் கீறப்பட்டுக் கொண்டிருக்கும் கோடு தற்காலிகமானது என்பதைக் குறிக்கும் (உ). வேறொரு கோடு கீறத் தொடங்கினால் ஏற்கனவே கீறப்பட்ட கோடு அழிந்துவிடும். முன்னர் கீறிய கோட்டைப் பாதுகாக்க வேண்டுமாயின் அத் தட்டில் இரண்டு தடவை அழுத்தி அதன் பெயரை மாற்றி விட வேண்டும்.

65plumedetourage.png

Path கட்டத்தில் பொருத்தமான தட்டினைத் தட்டினைத் தெரிவு செய்தபின்னர் (இ) என்ற இடத்தில் அழுத்தி Make Selection என்பதைத் தெரிவு செய்தால் பின்வரும் கட்டம் தோன்றும். இது கீறப்பட்ட Vector கோட்டினை Lasso கருவியால் கீறப்பட்ட கோடு போன்றதாக மாற்ற உதவும். Feather Radiud என்ற பகுதியில் இடும் எண்ணிக்கை கோட்டின் நேர்த்தியைத் தீர்மானிக்கும். உதாரணமாக 0 என்பது மிகவும் நேர்த்தியாகவும் 15 என்ற எண்ணிக்கை விளிம்பைக் கலங்கலாகவும் ஆக்கும்.

படம் தனிமைப் படுத்தப் பட்டதும் தேவைக்கேற்றவாறு அதன் வெளிப்புறமான பகுதியை மாற்றிக் கொள்ளலாம்.

தொடரும்.

Link to comment
Share on other sites

  • 4 months later...

பகுதி 7

கோப்பு வடிவங்கள்

7.1 பாவனையிலுள்ள கோப்பு வடிவங்கள்

கோப்பு வடிவங்கள் எமது தேவைக்கேற்ப மாறுபடும். எல்லாப் படங்களையும் ஒரே கோப்பு வடிவத்தில் வைத்திருக்க முடியாது. ஏனெனில் ஒவ்வொரு வடிவத்திலும் நன்மைகளும் தீமைகளும் உள்ளன. ஆகவே எமது தேவையே கோப்பு வடிவத்தைத் தீர்மானிக்கின்றது. ஒரே படத்தை பல வகையான வடிவங்களில் சேமித்து வைக்கும் சந்தர்ப்பங்களும் உண்டு.

கணணியில் படங்கள் எவ்வாறு பதியப் படுகின்றன என்று விளங்கிக் கொள்வதற்கு Bitmap (.BMP) என்ற வடிவத்தை எளிமையான முறையில் பார்க்கலாம்.

இக் கோப்பு கறுப்பு வெள்ளைப் படம் என்று வைத்துக் கொள்வோம். கோப்பின் ஆரம்பத்தில் இப் படத்தின் நீள அகல அளவுகள் Pixel இல் பதியப்பட்டிருக்கும். அதனைத் தொடர்ந்து இப் படத்திலுள்ள புள்ளிகள் யாவும் இடமிருந்து வலமாகவும் மேலிருந்து கீழாகவும் கிரகிக்கப்பட்டு ஒரே நேர்கோட்டில் அடுக்கப்பட்டிக்கும்.

இக் கோப்பினை வாசிக்கும் மென்பொருள் இப் படத்தின் அகலத்தைப் புரிந்து கொண்டு அதற்கேற்றவாறு நேர்கோட்டிலுள்ள புள்ளிகளை வெட்டி ஒன்றன்கீழ் ஒன்றாக அடுக்கி படத்தினைச் சரியாகக் காட்டும்.

format01.png

படம் கறுப்பு வெள்ளையாக இருந்தால் ஒவ்வொரு புள்ளியைச் சேமிப்பதற்கும் 1bit அளவான Memory தேவைப்படும். அதாவது ஒவ்வொரு புள்ளியும் 0 அல்லது 1 (கறுப்பு அல்லது வெள்ளை) என்ற அளவைப் பெறும்.

இதே படம் நிறங்களாக இருந்தால் ஒரு புள்ளியைச் சேமிக்க (3 x N) bits அளவான Memory தேவைப்படும். இங்கு N என்பது நிற ஆழத்தையும் '3' முதன்மை நிறங்களையும் குறிக்கும். நிற ஆழம் அதிகரிக்க நிறங்களின் துல்லியம் அதிகரிக்கும். சாதாரணமாக நிற ஆழம் 8 ஆக இருக்கும் ஒரு புள்ளி 24 bits அளவைக் கொள்ளும். நிற ஆழம் 8 ஆக இருக்குமானால் சுமார் 16.7 மில்லியன் வகையான நிறங்களில் ஒன்றை ஒரு புள்ளி பிரதிபலிக்கும்.

12 மிலியன் Pixel களையுடைய கோப்பொன்று 288 000 000 bits களைப் பிடிக்கும் (12 000 000 x 24).

அல்லது 36 000 000 Byte (8 bits = 1 Byte) அல்லது 36 MB (மெகா பைட்) அளவான இடத்தைப் பிடிக்கும்.

எல்லாப் படங்களையும் இந்த அளவு பெரிதான கோப்புகளாக கணணியில் சேமித்தால் கணணி நிறைந்துவிடும். ஆகவே அதிகமாக இடம் பிடிக்காததாக ஒரு கோப்பு வடிவம் வேண்டும். இணையத் தளங்களில் இலகுவாகப் பாவிப்பதற்காக வேறு வடிவங்கள் உள்ளன. அச்சுப் பதிப்புக்கான தேவைகளுக்கு தனிப்பட்ட வடிவங்கள் உள்ளன. ஒவ்வொன்றையும் விபரமாகப் பார்க்கலாம்.

தொடரும்.

Link to comment
Share on other sites

  • 4 weeks later...

பகுதி 7

கோப்பு வடிவங்கள்

7.2 GIF

Graphics Interchange Format - 1987 இல் CompuServe நிறுவனத்தால் உருவாக்கப்படது. அப்போது கணணித் திரைகள் கறுப்பு வெள்ளை அல்லது 256 நிறங்களைப் பிரதிபலிக்கக் கூடியவையே அதிகமாகப் பாவனையில் இருந்தன. அதிகமாக இதன் பயன்பாடு இணையத் தளங்களில் பாவிப்பதாகவே இருக்கும்.

இந்த கோப்பு வடிவம் படங்களை கணணித் திரைக்கு ஏற்றவாறு 256 நிறங்களுக்கு உட்பட்டதாக (8 bits) உள்ள படங்களை மட்டுமே பதியக் கூடியது. இந்த நிற எல்லைக்குள் வராத படங்களை Photoshop போன்ற மென்பொருட்களால் மாற்றிக் கொள்ளலாம்.

இக் கோப்பினால் உள்ள நன்மைகள் :

1 - கணணியில் அல்லது இணையத் தளங்களில் அதிக இடம் பிடிக்காது.

2 - 256 நிறங்களில் ஒன்றை கண்ணாடித் தன்மையுடயாதாக மாற்றிக் கொள்ளலாம். இதன் மூலம் பின் பகுதியில் (background) ஒரு படமோ நிறமோ உள்ள ஒரு இணையப் பக்கத்தில் கண்ணாடித் தன்மையுடைய படத்தை இணைத்தால் அதனூடாக background இனையும் அவதானிக்கலாம்.

3 - எல்லாவிதமான கணணிகளிலும் இணைய உலாவிகளிலும் எந்தவித பிரச்சனையுமின்றிப் பார்க்கலாம்.

4 - இலகுவான எளிமையான அசையும் படங்களைச் (Animation) செய்யலாம்.

headache.gifproxy.gif:rolleyes:

தீமைகள் :

1 - ஆகக் கூடுதலாக 256 நிறங்கள் மட்டுமே உள்ளதால் படத்தின் தரம் குறையும்.

2 - கோப்பு வடிவம் தனியார் நிறுவனத்தின் உரிமையுடையது.

3 - 20 வருடங்களுக்கு மேலாக முன்னேற்றங்களை அடையவில்லை.

கீழுள்ள படம் (24 bits) 8 bits ஆகவும் (256 நிறங்கள்) பின்னர் 4 bits (16 நிறங்கள்) ஆகவும் மாற்றப்பட்டுள்ளது.

format3.png

இது இரண்டு வழிகளில் கோப்பின் கனதியைக் குறைக்கின்றது. முதலில் 16.7 மில்லியன் நிறங்களுக்குள் ஒன்றைப் பிரதிபலிக்கக் கூடிய (24 bits) Pixel ஒன்றினை 8 bits ற்குக் குறைவானதாக ஆக்குதல். பின்னர் கோப்பினை LZW முறையில் (algorithm) அமுக்கப் படுத்துதல். வேறு கோப்பு வடிவங்களும் இதே முறையைப் பாவிப்பதால் இதனை விரிவாகப் பார்க்கலாம்.

Link to comment
Share on other sites

பகுதி 7

கோப்பு வடிவங்கள்

7.3 LZW சேமிப்பு முறை

இணையத் தளங்களில் பாவிக்கப்படும் கோப்பு வடிவங்களின் கொள்ளளவு மிகவும் முக்கியத்துவம் பெறுவதால் கோப்பு வடிவங்களை அழுக்கப் படுத்துதல் விரிவாகக் கவனிக்கப்பட வேண்டியுள்ளது. LZW முறையில் எவ்வாறு கோப்பின் கொள்ளளவு குறைக்கப் படுகின்றது என பார்க்கலாம்.

ஒவ்வொன்றும் 8 bits அளவுடைய Pixel வரிசையை எடுத்துக் கொள்வோம். கீழுள்ள படத்தில் 20 Pixel கள் உள்ளன. ஒவ்வொன்றும் 8 bits படி (1 Byte) மொத்தமாக 160 bits (20 Byte) கொள்ளளவு உடையது.

formatlzw.png

LZW முறையில் முதலாவது இரண்டாவது மூன்றாவது Pixel கள் ஒவ்வொன்றும் 8 bits படி சேமிக்கப்படும். நான்காவது Pixel மூன்றாவது Pixel ஐ ஒத்துள்ளது. ஆகவே நான்காவது 2 bits களில் மட்டும் பதியப்படும். அதாவது இந்த 2 bits ஆனது கடைசியாகச் சேமிக்கப் பட்ட Pixel ஐ இது ஒத்துள்ளது என்ற விபரத்தை மட்டும் குறிப்பிடப் பயன்படுத்துகிறது. அடுத்தது வித்தியாசமான நிறத்தை உடையதால் ஆரம்பத்தைப் போல் 8 bits களில் சேமிக்கப்படும். இதனைத் தொடர்ந்துவரும் 7 Pixelகளும் ஒரே நிறத்தையுடயதால் இவை ஒவ்வொன்றும் 2 bits படி சேமிக்கப்படும்.

இப்போது மொத்தமாக LZW முறையில் பதியப்பட்ட கோப்பினைப் ஒப்பிட்டுப் பார்த்தால் ஒரே தரமான படம் ஏறத்தாள அரைவாசி குறைந்த கொள்ளளவைக் கொண்டிருப்பதைக் காணலாம். நாம் சாதாரணமாகப் பாவிக்கும் ZIP கோப்புக்களும் இவ்வாறுதான் சேமிக்கப் படுகின்றன. இவ்வாறு சேமிக்கப்பட்ட கோப்பில் எந்தவித தர வேறுபாடுகளும் காணப்பட மாட்டாது.

கீழுள்ள 2 படங்களுக்குமான வித்தியாசத்தைப் பாருங்கள். முதலாவது படத்தின் கொள்ளளவு இரண்டாவதை விட மிகக் குறைவாக உள்ளது. படத்தை மென்பொருட்கள் இடமிருந்து வலமாக வாசிப்பதாக மேலே பார்த்தோம். முதல் படத்திலுள்ள முதலாவது வரிசையை எடுத்துக் கொண்டால் அடுத்தடுத்து வரும் Pixelகள் ஒரே நிறத்தைக் கொண்டுள்ளன. இரண்டாவது படத்தின் முதல் வரிசையை எடுத்துக் கொண்டால் ஒவ்வொரு Pixel லும் வெவ்வேறு நிறங்களைக் கொண்டுள்ளன. ஒரே மாதிரியான அடுத்தடுத்து வரக்கூடிய Pixel எதுவுமில்லையாகையால் ஒவ்வொன்றையும் 8 bits அளவிலேயே சேமிக்க வேண்டியுள்ளது.

image13r.png

அழுக்கத்திற்குள்ளாக்கப் பட்ட கோப்பின் அளவும் போதுமானதாக இல்லாவிட்டால் GIF கோப்பு வடிவத்திலுள்ள நிறங்களின் எண்ணிக்கையைக் குறைக்கலாம். இதனால் படம் தரக் குறைவுக்குள்ளாகும்.

தொடரும்.

Link to comment
Share on other sites

  • 3 years later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மிகுந்த பயனுள்ள கடினமான் தகவல்களை எளிய தமிழில் தந்துள்ளீர்கள். நன்றி.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஜனாதிபதித் தேர்தல் களம் தெற்கைவிட இம்முறை தமிழர் தாயகப் பிரதேசத்திலும் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கின்றது. போரின் பின்னரான அனைத்து ஜனாதிபதித் தேர்தல்களிலும் தென்னிலங்கை வேட்பாளர்களை ஆதரித்த தமிழ் மக்கள் இம்முறை அத்தகைய நிலைப்பாட்டை எடுப்பதற்குத் தயங்குவதும், தமிழ்ப் பொது வேட்பாளரை நோக்கி தமிழர்கள் அணிதிரட்டப்படுவதாலும் ஜனாதிபதித் தேர்தல் விவகாரம் பேசுபொருளாகியிருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப்பொது வேட்பாளர் களமிறக்கப்படுவது தென்னிலங்கை கட்சிகளைப்போன்று தமிழ்த்தேசியக் கட்சியைச் சேர்ந்த சிலருக்கும் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. அதே நேரம் இந்தப் பொதுவேட்பாளர் விவகாரத்தை குழப்பியடிப்பதற்கான சதி முயற்சியும் முன்னெடுக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. தமிழ் மக்கள் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரனின் செயற்பாடுகள் தொடர்பில் பலத்த சந்தேகங்கள் எழுப்பப்படுகின்றன. கொள்கைத் தளம்பலான ஒருவர் இந்த விடயங்களை முன்னின்று செயற்படுத்துவதாகச் சொல்லிக்கொள்ளும் போது சந்தேகங்கள் எழுவது இயல்பானதே. பொதுவேட்பாளர் விவகாரத்தை ஆதரிப்பதாகக் காட்டிக்கொண்டு அதைக் குழப்பியடிப்பது தான் அவரது இலக்கா என்ற கேள்வியும் எழுகின்றது. ஏனெனில் அவரின் நடவடிக்கைகள் அப்படியானவையாகத்தான் அமைந்திருக்கின்றன. ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியே, ஜனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளரைக் களமிறக்கும் யோசனையை முன்வைத்தது. அது தொடர்பில் பல தரப்புகளையும் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தது. இதேகாலப் பகுதியில் விக்னேஸ்வரன், ‘ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டுக்கு நல்லது செய்கிறார். அவரைத்தான் ஆதரிப்பேன்' என்று அறிக்கைவிட்டார். பின்னர் ரணில் ஏமாற்றிவிட்டார் என்று சொன்னார். திடீரென பொதுவேட்பாளர் விவகாரம் தொடர்பில் கூட்டத்தை ஒழுங்குபடுத்தினார். அது தொடர்பில் அறிக்கைகள் விடுத்தார். இந்த விவகாரத்தை முன்னெடுத்த தரப்புகளுடன் எந்தவொரு சந்திப்பையும் நடத்தாமல் தான்தோன்றித்தனமாக விக்னேஸ்வரன் விடயங்களைக் கையாள்கின்றார். இது தமிழ்ப்பொதுவேட்பாளர் விவகாரத்தை எதிர்க்கும் தரப்புகளுக்கு வாய்ப்பாக அமைந்திருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனு கோரப்பட்ட பின்னர் தமிழ்ப்பொதுவேட்பாளர் யார் என்பதைப் பகிரங்கப்படுத்தலாம். விக்னேஸ்வரன் பொறுமை காக்கவேண்டும். இலங்கையிலுள்ள தமிழ்மொழி பேசும் அனைவரும் ஆதரிக்கக்கூடிய ஜனரஞ்சகமான தலைவர் ஒருவராக இருக்கவேண்டும். அப்படிப்பட்டண்டும். ஒருவரையே தமிழ்ப்பொதுவேட்பாளராக களமிறக்க வேண்டும். தமிழ்ப்பொதுவேட்பாளர் என்பது ஒரு அரசியல் தீர்மானம். எப்படி வட்டுக்கோட்டைத் தீர்மானம் காலம் கடந்தும் நிலைத்து நிற்கின்றதோ அதே போன்று தமிழ்ப்பொதுவேட்பாளர் விவகாரமும் அமையவேண்டும். நாடு முழுவதிலிருந்தும் ஆகக் குறைந்தது 15 லட்சம் வாக்குகளையாவது அவர் திரட்டிக்கொள்ளக் கூடியவராக இருக்கவேண்டும். முஸ்லிம் மற்றும் மலையக சமூகங்களின் அரசியல் தலைவர்கள் தென்னிலங்கை தரப்புகளுடன் ஒட்டிக் கொண்டிருந்து அமைச்சுப் பதவியை பெறுபவர்கள். அவர்கள் எந்தளவு தூரம் பொதுவேட்பாளர் விவகாரத்துடன் ஒத்துழைத்துச் செயற்படுவார்கள் என்பது கேள்விக்குறியானது. இவ்வாறான சூழலில் அனைத்துத் தரப்புகளுடனும் அவதானமாகவும் - நிதானமாகவும் கலந்துரையாடல் நடத்தவேண்டும். அதைவிடுத்து விக்னேஸ்வரன் போல, மின்னஞ்சலில் போதிய அவகாச மின்றி அழைப்பு அனுப்பிவிட்டு கலந்துரையாடல் நடத்த கூடாது. விக்னேஸ்வரன் தலைமை தாங்கிய எந்தவொரு விடயமும் நேர்சீராக நடைபெறவில்லை. மாகாண சபையாக இருக்கலாம் அல்லது தமிழ்மக்கள் பேரவை என்ற சிவில் அமைப்பாக இருக்கலாம் அல்லது அவரது கட்சியாக இருக்கலாம். எங்குமே அவர் ஒரே கொள்கையோடு இயங்காமையால் கடைசியில் அவையெல்லாமே குழப்பத்துக்குள் சிக்கி, செயற்றிறனை இழந்ததைக் கண்முன்னே பார்த்தோம். அப்படிப்பட்ட ஒருவர் தனது அவசரத்தனமான நடவடிக்கைகளால் தீர்க்கமான அரசியல் முடிவை குழப்பியடித்துவிடக்கூடாது என்பதே மக்களின் ஆதங்கம். (16. 04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/அவசரத்தனங்களும்_குழப்பங்களும்...
    • இலங்கையில் தமிழர்களுக்கு மாத்திரமல்லாமல் முஸ்லிம்களுக்கும் தாய்மொழி தமிழ்தான். இதனாலேயே தமிழர்களையும் முஸ்லிம்களையும் ஒன்றிணைக்கும் முயற்சியில் தந்தை செல்வா ஈடுபட்டார். இதனால் 'தமிழ்பேசும் மக்கள்' என்ற சொல்லை தந்தை செல்வா பாவிக்கத்தொடங்கினார். இலங்கை சுதந்திரமடைந்த காலம் தொட்டு இரு தரப்பு அரசியல்வாதிகளும் தமிழ் முஸ்லிம் ஒற்றுமை பற்றிப் பேசி வருகின்றனர். தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளும் பல விட்டுக்கொடுப்புகளைச் செய்து தமிழ் முஸ்லிம் ஒற்றுமையை கட்டியெழுப்ப அன்றிலிருந்து இன்று வரை பாடுபட்டு வருகின்றனர். ஆனால் முஸ்லிம்களோ மொழிரீதியான பிணைப்பைக் கணக்கிலேயே எடுப்பதில்லை. அவர்கள் எப்போதுமே தம்மைத் தனியான இனமாக முன்னிறுத்துவதிலும், தமது நலன்களைப் பெற்றுக்கொள்வதிலுமே கண்ணும் கருத்துமாக இருக்கின்றனர். ஒரு சிறுபான்மை இனம் என்ற அடிப்படையில், முஸ்லிம்கள் தமது நலன்களை முன்னுரிமைப்படுத்திச் செயற்படுவதில் எவ்விதத் தவறுமில்லை என்று தமிழர்கள் கடந்துசென்றுவிடலாம். ஆனால், ஒரே மொழியைப்பேசிக்கொண்டு, சகோதர இனம் என்று சொல்லிக்கொண்டு, தமிழர்களை ஒடுக்கும் செயற்பாடுகளை முஸ்லிம்கள் மேற்கொள்வதைத்தான் ஜீரணிக்க முடியாமல் இருக்கின்றது. குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் கல் முனையில் முஸ்லிம்கள் தமிழர்களின் இருப்பை கேள்விக்குறியாக்கும் செயற்பாடுகளை காலாதிகாலமாக மேற்கொண்டு வருகின்றனர். இதனால் கல்முனைத் தமிழர்கள் சாட்சிக்காரனின் காலில் வீழ்வதை விட சண்டைக்காரனின் காலில் வீழ்வதே மேல் என்ற நிலைப்பாட்டுக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இலங்கைத்தீவை நிர்வகிப்பதற்கு 256 பிரதேச செயலர் பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த 256 பிரதேச செயலகங்களின் ஊடாக அந்தந்தப் பிரதேசத்துக்குரிய மக்கள் தமது தேவைகளை பூர்த்தி செய்து வருகின்றனர். இப்படிப்பட்டநிலையில், கல்முனைப் பிரதேச செயலர் பிரிவில் முஸ்லிம் பிரதேச செயலர்களே தொடர்ச்சியாக நியமிக்கப்பட்டு வந்தனர், வருகின்றனர். இவர்கள் முஸ்லிம்களுக்குச் சார்பாக நடந்து கொள்வதாக தமிழர்கள் தொடர்ச்சியாகக் குற்றஞ்சாட்டி வந்தனர். இதனால் கல்முனை பிரதேச செயலர் பிரிவு 1989 ஆம் ஆண்டு முஸ்லிம் பிரிவு, தமிழ்ப் பிரிவு என இரண்டாகப் பிரிக்கப்பட்டது. இவ்வாறு கல்முனைப் பிரதேச செயலர் பிரிவு இரண்டாகப் பிரிக்கப்பட்டபோது முஸ்லிம் பிரதேச செயலர் பிரிவு முழு அதிகாரத்துடன் செயற்படத் தொடங்கியது. தமிழ்ப் பிரிவுக்கு முழுமையான அதிகாரங்களை வழங்க விடாமல் முஸ்லிம் அரசியல்வாதிகள் ஆட்சியாளர்களுக்கு சிங்களவர்கள் அழுத்தம்கொடுத்தனர், இப்போதும் அதே அழுத்தத்தைக் கொடுத்து வருகின்றனர். கல்முனை தமிழ்ப் பிரிவு பிரதேச செயலகம் 'உதவி அரசாங்க அதிபர் பிரிவு' என்றே இன்றுவரை அழைக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் அதன் அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளமையை உள்ளார்ந்தமாக உணரலாம். தமிழ்ப் பிரிவுக்குரிய காணி, நிதி போன்ற விடயங்கள் முஸ்லிம் பிரிவின் கீழேயே உள்ளன. இலங்கை அரசியலில் பௌத்த பிக்குகள் தான் தீர்மானிக்கும் சக்தியாக விளங்குகின்றனர். அப்படியிருந்தும் ஞானசார தேரராலோ, சுமணரத்ன தேரராலோ கல்முனை தமிழ் பிரதேச செயலர் பிரிவை தரமுயர்த்த முடியவில்லை.சுமணரத்ன தேரர், ஞானசாரதேரர் ஆகியோரை விட முஸ்லிம் அரசியல்வாதிகளின் செல்வாக்கு கொழும்பு அரசியலில் கூடுதலான தாக்கம் செலுத்துகிறது என்பதே யதார்த்தம். கல்முனைப் பிரதேச செயலக தமிழ்ப் பிரிவை பூரண அதிகாரமுள்ள பிரதேச செயலகமாக தரமுயர்த்தக்கோரி கடந்த 35 வருடங்களாக கல்முனைத் தமிழர்கள் பல்வேறு சாத்வீகப் போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர். எனினும் இன்றுவரை கல்முனை தமிழர்களுக்கு நீதி கிட்டவில்லை. இந்த வருடமும் தமிழ்ப் புத்தாண்டை கல்முனைத் தமிழர்கள் கரிநாளாக அனுஷ்டித்தனர். இந்த நிமிடம் வரை கொட்டும் மழைக்கு மத்தியிலும் கல்முனைத் தமிழர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இறுதியாக நடைபெற்ற மாகாணசபைத் தேர்தலிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கிழக்கு மாகாணத்தில் கூடுதலான ஆசனங்களைப் பெற்றிருந்தும், கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியை முஸ்லிம் காங்கிரஸுக்கு தாரைவார்த்துக்கொடுத்தது. கிழக்கு மாகாண சபை கலைக்கப்பட்டதும் முதலமைச்சர் அஹமட் நஷீர் ‘வடக்கையும் கிழக்கையும் இணைப்பதற்கு தான் ஒருபோதும் அனுமதிக்கமாட்டேன்' என்று அறிக்கைவிட்டு, தமிழர்களின் அடிப்படைக்கோரிக்கையையே நிராகரித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் பதவிக்கு வந்த முதலமைச்சரான நஷீர் யுத்தம் நடைபெற்ற காலத்திலும் யுத்தம் முடிந்த பின்னரும் தமிழர்களுக்கு கிடைக்கவேண்டிய வேலை வாய்ப்புகள், உயர்கல்வி வசதிகள் போன்றவற்றை தமிழ்மொழியை பேசுகின்ற காரணத்தால் முஸ்லிம்கள் தட்டிப்பறித்து வருகின்றனர் என்றொரு குற்றச்சாட்டு பொதுவாக உண்டு. ஆனால், ஒரு பிரதேச செயலகத்தைக் கூட தரமுயர்த்த அனுமதிக்காமல், இன்னொரு சிறுபான்மையினரின் அடிப்படை உரிமைகளைக் கூடவா தட்டிப்பறிப்பார்கள்? தமிழ் அரசியல்வாதிகள் தீர்க்கமான ஒரு முடிவெடுக்கவேண்டிய தருணம் வந்து விட்டது. தமிழ் - முஸ்லிம் ஒற்றுமை என்றைக்கும் இருக்கத்தான் வேண்டும். ஆனால் அதைச் சொல்லிச் சொல்லியே முஸ்லிம்கள் எல் லாவற்றையும் பறித்தெடுக்க, நாம் மட்டும் இலவு காத்த கிளிகளாக ஏமாந்து கொண்டே இருக்கிறோம். இனியும் அவ்வாறான விட்டுக்கொடுப்புகளுக்கு இடமளிக்காமல், முதலில் தமிழர் நலன் அதன்பின்னரே தமிழ்-முஸ்லிம் ஒற்றுமை என்ற நிலைப்பாட்டுக்கு தமிழ்மக்களும், தமிழ் அரசியல்வாதிகளும் வரவேண்டும். அப்போதுதான் எஞ்சியவற்றையாவது இழக்காமல் காக்க முடியும். (17. 04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/இனநலனா!_ஒற்றுமையா!!!
    • முடிவாய் ரணிலையும் விடுறதாக இல்லை , அவர் பணக்கார வீட்டு  பிள்ளை , சந்து பொந்தெல்லாம் போகாமலா  இருந்திருப்பார் . பழம் இருக்கிறவன் அதன் சுவையை ருசிக்கிறான் ....அம்புட்டுதான் 
    • என்ன இது எங்க போனாலும் கொழுவி இழுக்க பார்க்கிறிங்க.  சுமா வை பற்றி தெரியும் என்றால் ஏன் கோத்திரத்தை அப்படி என்று எடுக்கிறீர்கள்.  என்ன பொறுத்தவரை உயர்ந்த குலமா அப்படியா இல்லையா என்பதல்ல ஏன் ஆதங்கம். பொறுக்கித்தனம் செய்பவனை பொறுக்கி என்பதுபோல தான் இது.  தப்பான பழக்கங்களை செய்கின்ற ஆள் தப்பான குலம் அவ்வளவு தான். 
    • பிரிதலும் புனிதமானது : சிவபாலன் இளங்கோவன் மார்ச் 2024 - சிவபாலன் இளங்கோவன் · உளவியல்   சஞ்சய்குமாருக்கு அவனது அத்தைப்பெண்ணான மீராவுடன் சிறு வயதிலிருந்தே காதல். சிறுவயதென்றால் பத்தாவது, பதினொன்றாவது படிக்கும் வயதிலிருந்தே. மீரா சென்னையில் இருந்து சஞ்சயின் கிராமத்து வீட்டிற்கு வரும்போதெல்லாம் சஞ்சய் ஏகாந்த மனநிலையில் இருப்பான்.  மீராவின் அப்பா சென்னையில் வங்கி மேலாளராக இருக்கிறார். சஞ்சய்க்கு அத்தனை வசதியில்லை. மீராவிற்குச் சிறு வயதில் சஞ்சயைப் பார்க்கபோவது மகிழ்ச்சியானதாகவே இருந்தது. இருவரும் கல்லூரி செல்லும் வரை அது ஓர் இளம் பிராயத்துக் காதலாகவே தொடந்து வந்தது. மீரா கல்லூரிப் படிப்பிற்காக டெல்லி சென்றாள். அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாகச் சஞ்சயைத் தவிர்த்து வந்தாள். சஞ்சயால் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அடிக்கடி அவளிடம் சண்டை போட்டான். முதலில் பொறுமையாக விளக்கம் கொடுத்துக்கொண்டிருந்தவள் அதன் பிறகு அவன் ஏதாவது பேச ஆரம்பிக்கும்போதே தொடர்பைத் துண்டித்துவிடச் செய்தாள். அதன் பிறகு எத்தனை முறை அவன் கால் செய்தாலும் அழைப்பை ஏற்க மாட்டாள், இன்னொரு பொழுது அவன் அழைத்தால் எதுவும் நடந்த மாதிரியே காட்டிக்கொள்ளாமல் பட்டும் படாமல் பேசுவாள். இப்படியே மூன்று வருடங்கள் சென்றது. டெல்லியில் அவள் படிப்பை முடித்து வந்தபோது சஞ்சய் ஒரு சாதாரண கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்திருந்தான். அவள் வந்தவுடன் அவளிடம் திருமணம் செய்துகொள்ளலாம் எனப் பேசினான். அவள் அலட்சியமாகச் சிரித்தாள். “உனக்கு என்ன பைத்தியமா? எனக்கு 22 வயதுதான் ஆகுது, அதுக்குள்ள உன்ன கல்யாணம் பண்ணி குழந்தை பெத்துக்கணுமா?” எனக் கோபமாகக் கேட்டாள் “உனக்கு என்ன பிடிக்கல, என்கிட்ட இருந்து விலகிப் போகணும்னு நினைக்கிற, அதான் ஏதேதோ காரணம் சொல்ற” என அவனும் கோபப்பட்டான் அவள் அவனிடம் எந்த வாக்குவாதமும் செய்யவில்லை. “உன்கிட்டலாம் பேசிப் புரிய வைக்க முடியாது”  என எழுந்து சென்றாள். சஞ்சய் அவன் பெற்றோர்களைக் கட்டாயப்படுத்தி மீரா வீட்டில் பெண் கேட்க சொன்னான். மீரா அவர்களிடம் பக்குவமாகச் சொல்லி நிராகரித்தாள். “எங்க வீட்ல உன்ன கல்யாணம் பண்ண ஒத்துக்க மாட்டாங்க, முதல்ல எனக்கே இப்ப கல்யாணம் பண்ண இஷ்டம் இல்ல, நான் வெளி நாடு போய் மாஸ்டர்ஸ் படிக்கப் போறேன், எனக்கு நிறைய கனவுகள் இருக்கு” என்று அவனிடம் சொன்னாள் “யாரோ நல்ல வசதியான ஒருத்தன புடிச்சிட்ட அதான் என்ன கழட்டிவிடற” என அவளை நடுரோட்டில் எல்லார் முன்பாகவும் கத்தி அசிங்க அசிங்கமான வார்த்தைகளால் அவமானப்படுத்தி அனுப்பினான். மீரா அழுதுகொண்டே வீட்டிற்கு வந்தாள். ஆண்-பெண் உறவில் சேர்தலைப் போலவே பிரிதலையும் நாம் இயல்பானதாகக் கருத வேண்டும். சேர்தலைப் போலவே பிரிதலின் முடிவையும் மதிக்கும் பண்பை அந்தக் காதலின் நிமித்தமே வளர்த்துக்கொள்ள வேண்டும்.   ஓர் உறவில் இருந்து வெளியே போவதற்கான கதவு எப்போதும் திறந்தே இருக்கிறது என்னும் நிலையில் இருக்கும் உறவுகளே மிகவும் பக்குவப்பட்ட உறவுகளாக, பரஸ்பர அன்பை ஆத்மார்த்தமாகக் கொண்ட உறவாக இருக்கும் என்பது எனது எண்ணம். அத்தனை கதவுகளையும் பூட்டிவிட்டு எங்களது உறவு ஆத்மார்த்தமானது என்று சொல்வது நிச்சயம் அபத்தமானது. ஒரு காதல் ஏற்படுதற்கு இருவருக்கும் இருக்கும் பக்குவம், பொறுப்புகள், முதிர்ச்சி, அக மற்றும் புறச் சூழல்கள் எனப் பல்வேறு காரணங்கள் இருக்கும். இந்தக் காரணங்கள் எல்லாம் மாறக்கூடியவை. ஒருவருக்கு இருக்கும் பக்குவமும், முதிர்ச்சியும் அவரின் வயதைப் பொறுத்து மாறிக்கொண்டிருக்கும் அதே போலவே ஒருவரின் அக, புறச் சூழல்கள் தொடர்ச்சியாக மாறிக்கொண்டிருப்பவை. ஒரு காதல் தொடங்கிய தருணத்தில் இருந்த இந்தக் காரணிகள் எல்லாம் அதற்குப் பிறகு மெல்ல மெல்ல மாறிக்கொண்டிருப்பவை. காதலுக்கான காரணங்கள் நீர்த்துப்போகும்போது அங்குக் காதலும் முடிந்து போகிறது. அதை நீட்டிக்க வேண்டிய தேவை இல்லாமல் போய்விடுகிறது, அப்போது அங்குக் காதல் முடிவுக்கு வருகிறது, முடிவுக்கு வரும் காதலை ஏற்றுக்கொள்ளாமல் அதற்கான அத்தனை கதவுகளையும் அடைத்துக் கட்டாயப்படுத்தும்போது அதுவரை இருந்த காதலே கேள்விக்குறியாகிறது, பழகிய கணங்களின் மீது ஓர் ஒவ்வாமை ஏற்படுகிறது, அந்த மூர்க்கத்தனத்தைக் காதலையே மலினப்படுத்தும், சிறுமைப்படுத்தும் செயலாகவே பார்க்க முடியும். சஞ்சய்க்கும் மீராவிற்கும் இருந்தது ஓர் இளம் பிராயத்துக் காதல். சிறு வயதிலேயே துளிர் விட்ட காதல். ஒரு வகையிலான இனக்கவர்ச்சி. ஒருவர் மீதான மோகமே அந்தக் காதலுக்கு அடிப்படை. அந்த வயதில் எந்தப் பொறுப்புகளும் இல்லை, பக்குவமும் இல்லை, இலக்குகளும் இல்லை. ஒருவர் மீது ஒருவர் ஈர்ப்பாக இருப்பது மட்டுமே அந்தப் பருவத்தில் போதுமானது, அதுவும் எப்போதாவது சந்திக்கிற சில நாள்களில் மட்டும் அந்த ஈர்ப்பு இருந்தால் போதுமானது, அதுவே பரஸ்பரக் காதல் என அவர்கள் உணர்ந்து கொண்டார்கள். ஆனால் இருவரும் வளரும் போது இருவருக்கான தனிப்பட்ட அடையாளங்கள் ஆளுமைப் பண்புகள் உருவாகின்றன. எதிர்காலம் குறித்த கனவுகளும், லட்சியங்களும் உருவாகின்றன. இந்தச் சூழலில் காதலென்பது வெறும் ஈர்ப்பு மட்டுமே அல்ல, பரஸ்பரமாக ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வது, அவர்களின் ஆளுமைப் பண்புகளை ஏற்றுக்கொள்வது, அவர்களின் கனவுகளையும், லட்சியங்களையும் மதிப்பது. இதில் போதாமைகள் ஏற்படும்போது ஒருவர் மீதான ஒருவரின் காதல் தன்னை மறுபரிசீலனை செய்து கொள்கிறது. அந்த காதலை நீட்டிப்பதற்கான தேவைக் குறித்து கேள்வி எழுகிறது. ஒரு பிராயத்தில் ஒருவருடன் பழகிய காரணங்களுக்காகவே இந்த எதிர்பார்ப்புகளை எல்லாம் புறம் தள்ள முடியாது. மீராவின் லட்சியங்களும், கனவுகளும் சஞ்சயைப் பொறுத்த வரை தேவையில்லாதவை. மீராவிற்கு அவன் மட்டுமே பிரதானமாக இருக்க வேண்டும், மீதி அத்தனையையும் அவள் நிராகரிக்க வேண்டும் என எதிர்பார்க்கிறான். ஆனால், மீராவோ தனது விருப்பங்களுக்கும் கனவுகளுக்கும் அவன் துணை நிற்க வேண்டும், அவளின் இந்த முடிவுகளை அவன் மதிக்க வேண்டும் என நினைக்கிறாள். அப்படி அவன் இருக்கும்போதே அவனின் மீது காதலுடன் இருக்க முடியும் என அவள் உணர்கிறாள். அப்படி அவன் இல்லை மாறாக அவன் அவளை எப்போதும் கட்டுப்படுத்த நினைக்கிறான், அவன் சொல்வதற்கு மாறாக அவள் நடந்து கொள்ளக்கூடாது என நினைக்கிறான் என்பது அவளுக்கு ஏமாற்றமாக இருக்கிறது. ஏன் இந்தக் காதலைத் தொடர வேண்டும் என அவள் நினைப்பதற்கு அவனின் இந்தப் போதாமைகள் முக்கியமான காரணம். ஆனால், சஞ்சயை பொறுத்தவரை அவளின் இந்த எதிர்பார்ப்புகளைச் சிறுமைப் படுத்துகிறான். அவளுக்கு வேறு யார் கூடவோ பழக்கம் இருக்கிறது அதனாலே தன்னை நிராகரிக்கிறாள், அவளின் படிப்பிற்கும், வசதிக்கும் தன்னைத் தகுதியானவன் இல்லை என அவள் நினைகிறாள் என அவளை மலினப்படுத்துகிறான். ஒருபோதும் அவன் தனது நடவடிக்கைகள் குறித்து உணரவே இல்லை, அவளின் மீதே அத்தனை குற்றசாட்டுகளையும் சுமத்துகிறான். இது மீராவிற்கு மூச்சு முட்டவைக்கிறது, அதை அவனிடம் சொல்ல முற்படும்போது அவன் அவளைத் திருமணம் செய்து கொள்ளலாம் எனக் கட்டாயப்படுத்துகிறான். ஒரு போதும் அவன் மாறப்போவதேயில்லை என உணர்ந்து கொண்ட மீரா அவனிடம் இருந்து நிரந்தரமாகப் பிரிந்து விடும் முடிவை எடுக்கிறாள். அந்த முடிவைச் சஞ்சய் எப்படி எதிர்கொள்கிறான்? மிகவும் உணர்ச்சிவசப்பட்டு மூர்க்கமாக எதிர்கொள்கிறான். அவளின் அத்தனை வருடக் காதலைக் கொச்சைபடுத்துகிறான், அவளை மோசமாகச் சித்தரிக்கிறான் அவனது குற்றசாட்டுகளில் அவன் இத்தனை நாள்கள் அவள் மீது துளியும் காதல் கொண்டிருக்கவில்லை என்பதுதான் தெரிகிறது. இந்தப் பிரிவை எதிர்கொள்ள அவன் இன்னும் பக்குவப்பட வேண்டும். பக்குவமற்று, உணர்ச்சிவசப்பட்ட நிலையில் பிரிதலை அணுகும் போக்கு இரண்டு பாலினரிடையுமே இருக்கிறது. நவீன காதலில் பிரிதலை அணுகும் பக்குவம் கொஞ்சம் ஏற்பட்டிருக்கிறது என நினைக்கிறேன். ஆனால் சினிமாக்களும், ஊடகங்களும் காதலில் பெண்களை எதிர்மறையாகச் சித்தரிக்கும் போக்கு தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இதன் பாதிப்பில் வளரும் இளைஞர்கள் பெண்களின் மீதான பொத்தாம்பொதுவான சில பொதுப்பார்வைகளுடன் இருக்கின்றனர் அதனால் பிரிதலை, பிரிவதற்கான முடிவைப் பெண்களுக்கான ஒன்றாகவே, பெண்களின் குணாதிசயம் என்றளவிலே புரிந்து கொள்கிறார்கள், இது பிரிதலுக்கான காரணங்களை முழுமையாக உணர்ந்து கொள்வதிலிருந்து அவர்களைத் தடுக்கிறது. ‘அந்தப் பெண் என்னை வேண்டாம் என்று சொன்னதற்கு நானும் ஒரு காரணம்’ என்பதை ஏற்றுக்கொள்வதிலிருந்து தப்பித்துக்கொள்ளலாம் என்பதால் பெண்களின் மீதான இந்தச் சித்தரிப்பைப் பெரும்பாலான ஆண்களும் மனமுவந்து ஏற்றுக்கொள்கிறார்கள். பிரிதலைப் பக்குவமாக ஏற்றுக்கொள்ளும் ஒருவரால்தான் அதற்கான காரணங்களை விருப்பு, வெறுப்புகளின்றி, முன்முடிவுகளின்றி ஏற்றுக்கொள்ளும் ஒருவரால்தான் அதுவரையிலான அந்தக் காதலில் உண்மையாக இருந்திருக்க முடியும். அப்படி இல்லாதவர்களால் அதுவரை இருந்த காதலே அர்த்தமற்றுப் போகிறது. எப்படிப் பிரிவது? “எனக்கு நல்லாவே தெரியுது, இந்த ரிலேஷன்சிப்னாலதான் நான் இவ்வளவு கஷ்டப்படுறேன், இதனால நான் நிறைய அவமானங்களைச் சந்திக்கிறேன், என்னைப் பற்றி நானே குற்றவுணர்ச்சி கொள்ற அளவுக்கு அவதிப்படறேன், இதுல இருந்து வெளிய போகணும்னு நினைக்கிறேன் ஆனால் போக முடியல, எப்படியாவது இதுல இருந்து நான் வெளிய போறதுக்கான வழிய சொல்லுங்க” தினமும் இப்படிப்பட்ட சிலரையாவது நான் எனது கிளினிக்கில் பார்த்து விடுகிறேன். எப்படிப் பிரிவது? என்பதுதான் அவர்களின் தவிப்பு. நீண்ட நாள் காதலன் தன்னை நிராகரிக்கிறான் என்பது தெளிவாகத் தெரிந்த பின்னரும் அவனை விட்டு நீங்க முடியாமல் இருப்பது, திருமணத்தைத் தாண்டிய ஓர் உறவு தவறு என்று தெரிந்த பின்னரும்கூட அதை விட்டு வெளியே போக முடியாமல் வருந்துவது, திருமணம் தரும் வலிகளில் இருந்து, வன்முறைகளில் இருந்து நிரந்தரமாகச் செல்ல முடிவு செய்து அதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிப்பது எனச் சேர்வது எப்படி என்று வருவோரைவிட, பிரிவது எப்படி என்னிடம் வருபவர்களின் எண்ணிக்கை சில நேரங்களில் அதிகமாகவே இருக்கிறது. அதுவும் நவீன காதல்களில் லிவிங்கில் இருக்கும் நிறைய இணையர்களில், தங்கள் உறவு முடிவுக்கு வருவதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிப்பவர்கள் ஏராளமானவர்கள். ஒரு பால் உறவிலும்கூடப் பிரிவை தாங்கிக்கொள்ள, ஏற்றுக்கொள்ளாமல் துயரத்தில் உழல்பவர்கள் நிறையப் பேர். இவர்கள் அனைவரின் பிரச்சினையும் ஒன்றே ஒன்று தான், பிரிவு தரும் வலியைத் தாங்க முடியாமல் இருப்பதே! ஓர் ஆத்மார்த்தமான உறவு என்பது எப்போதும் நம்மைப் பற்றியான நமது மதிப்பீட்டை உயர்வாகத்தான் கொண்டிருக்கும், எத்தனையோ முரண்பாடுகள் இருந்தாலும் ஒருவர் மீதான மதிப்பு என்பது மாறாமல் இருக்கும், பிறரின் முன்னிலையில் தனது இணையைப் பெருமிதமாகவே காட்டிக்கொள்ள விளைவார்கள். தனது இணை அவமானப்படுவதையோ அல்லது குற்றவுணர்ச்சி கொள்வதையோ ஒர் ஆத்மார்த்த காதலில் உள்ளவர்கள் நிச்சயம் விரும்ப மாட்டார்கள். ஓர் உறவின் விளைவாக நான் தாழ்வு மனப்பான்மை கொண்டாலோ, அவமானப்பட்டாலோ, குற்றவுணர்ச்சி கொண்டாலோ அந்த உறவு ஆத்மார்த்தமானதாக இல்லையென்று பொருள். அப்படிப்பட்ட உறவு இருவரையும் எப்போதும் காயப்படுத்திக்கொண்டேதான் இருக்கும், அப்படிப்பட்ட உறவை முடிவுக்குக் கொண்டு வருவதன் வழியாகவே அந்த உறவையும், அதில் உள்ளவர்களையும் காப்பாற்ற முடியும்.  அப்படிப்பட்ட உறவில் இருந்து பிரிய வேண்டும் என்ற முடிவு எடுக்கும்போது முதலில் அந்த முடிவில் உறுதியாக இருக்க வேண்டும். பிரிவதற்கான படிநிலைகள்: பிரிவதற்கான காரணங்களை உணர்வது பிரிவதற்கான முடிவைப் பரஸ்பரமாக எடுப்பது முடிவை ஏற்றுக்கொள்வது பிரிவின் வலியைக் கடந்து வருவது பிரிவில் இருந்து முழுமையாக வருவது பிரிய வேண்டும் என முடிவுசெய்துவிட்டால் அதற்கான காரணங்களை இருவரும் நிதானமாக, பரஸ்பரக் குற்றசாட்டுகள் இன்றி நிதானமாக உரையாட வேண்டும். ஏன் இதைத் தொடர வேண்டாம் என்பதை அத்தனை முதிர்ச்சியாக இருவரும் விவாதித்து முடிவெடுக்க வேண்டும். நிறைய நேரங்களில் பிரிய வேண்டும் என ஒருவர் மட்டுமே முடிவு செய்து விட்டு அதை இன்னொருவரிடம் தெரிவிக்காமல் அவரே புரிந்து கொள்ளட்டும் என அவரை அலட்சியம் செய்யும் போதுதான் நிறைய பிரச்சினைகள் வருகின்றன அது இந்தப் பிரிதலை இன்னும் சிக்கலாக்குகிறது. ஓர் உறவில் நாம் இருக்கும் போது அதை தொடர வேண்டாம் என நினைத்தால் அதற்கான காரணங்களைத் தெரிந்து கொள்ளக்கூடிய உரிமை இன்னொருவருக்கு இருக்கிறது, அதனால் அந்த முடிவைத் தெளிவாக இணையருக்கு தெரிவிக்கவேண்டிய கடமை அந்த முடிவை எடுத்தவருக்கு இருக்கிறது. அவர் அந்தக் காரணங்களை ஏற்றுக்கொள்கிறாரோ இல்லையோ அதைச் சொல்ல வேண்டியது ஒருவரின் பொறுப்பு. அதே போல நிறைய நேரங்களில், பிரியலாம் என்ற முடிவை எடுத்த பின்பும் அதை ஏற்றுக்கொள்வதில் இருக்கும் தயக்கம் அந்தப் பிரிவைச் சிக்கலாக்கும். பல்வேறு காரணங்களால் பிரிய வேண்டும் என்ற முடிவை எடுத்த பின், அதை இன்னொருவரிடம் தெளிவாகத் தெரிவித்த பிறகு அந்த முடிவை ஏற்றுக்கொள்ள வேண்டும். “இல்லை நான் இன்னும் முழுமையாகப் பிரியவில்லை, நாளைக்கேகூட அவர் திரும்ப என்னிடம் பேசுவதற்கு வாய்ப்பிருக்கிறது, அப்படிப் பேசினால் திரும்பவும் அத்தனையும் தொடரும்” எனச் சாத்தியமற்ற எதிர்பார்ப்புகளை மீண்டும் மீண்டும் கொண்டிருப்பதால் அந்தப் பிரிவைச் சார்ந்த துயரம் இன்னும் பலமடங்காகும். ஓர் இழப்பை, அது இழப்பென்று ஏற்றுக்கொண்டால் மட்டுமே அந்த இழப்பில் இருந்து நம்மால் வெளியே வர முடியும். இல்லை நான் இழக்கவில்லை என நமக்கு நாமே சமாதானம் செய்து கொண்டிருந்தால் அந்த இழப்பில் இருந்து வெளியே வரும் காலமும் அதிகமாகும், காயமும் அதிகமாகும். பிரிதல் என்பது நினைவுகளாலானது. ஒருவரை விட்டு ஒருவர் நீங்கும்போது அவரைச் சார்ந்த நினைவுகளும், அவருடன் இருந்த கணங்களின் நல்லுணர்வுகளும் ஒருவரை ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தும். அந்தத் துயரத்தை தவிர்க்க முடியாது. அந்தத் துயரமே அத்தனை காலக் காதலின் அடையாளம். அதை ஒருவர் கடந்துதான் வரவேண்டும். “என்னால அவளோட நினைவுகளை தாங்கிக்க முடியல,ரொம்ப கஷ்டமா இருக்கு, ஏதாவது மாத்திரை இருந்தா கொடுங்க, அவள மறக்கற மாதிரியான மாத்திரை” என நிறையப் பேர் கேட்பார்கள். ஒருவரை மறப்பதற்கான மாத்திரை என்பது உலகத்தில் இதுவரையிலும் கண்டுபிடிக்கவில்லை, அப்படி ஒரு மாத்திரை இருந்தால் உலகத்திலேயே அதிக விலையுள்ள மாத்திரை அதுவாகத்தான் இருக்கும். பிரிவு என்பது துயரமானதே. அந்தத் துயரத்தைக் கடந்து வருவதே ஒரு பிரிவின் உண்மையான சவால். கடந்து வர எவ்வளவு நாள் ஆகும் என்பது உங்கள் காதலை, உங்கள் முதிர்ச்சியை, பிரிவை ஏற்றுக்கொண்ட பக்குவத்தை அடிப்படையாக்க் கொண்டது. முழுமையாகப் பிரிவதுதான் பிரிவை இன்னும் இலகுவாக்கும். “நான் கொஞ்சமாக அவனிடம் இருந்து வெளியே வந்துவிடலாம் என இருக்கிறேன், திடீரென நான் பேசுவதை நிறுத்திக்கொண்டால் அவன் தாங்க மாட்டான், அதுவே நான் அவனிடம் இருந்து சிறிது சிறிதாக விலகினால் அவன் புரிந்துகொள்வான்” என்று ஒரு பெண் என்னிடம் சொன்னாள். நிறையப் பேருக்கும் பிரிதலையொட்டி இந்த நிலைப்பாடே இருக்கும். மதுவை எப்படிக் கொஞ்சம் கொஞ்சமாக விட முடியாதோ அதே போலவே ஒரு காதலையும் கொஞ்சம் கொஞ்சமாக விட முடியாது.  தொடர வேண்டாம் என முடிவு செய்து விட்டால் அதில் முழுமையாக இருந்தால் வெளியே வர முடியும். இடையிடையே பேசிக்கொண்டு, பார்த்துக்கொண்டு, ஒருவரை ஒருவர் கண்காணித்துக்கொண்டு இருந்தால் பிரிவு சிக்கலானதாக நிறையக் காயப்படுத்துவதாக, மனவுளைச்சல் கொடுக்கக்கூடியதாக இருக்கும். “நான் அவ கூட ரொம்ப இண்டிமேட்டா இருந்துட்டேன், செக்ஸ் கூட வச்சிகிட்டோம், ஆனால் இனி அப்படி இல்லாம வெறும் ஃபிரண்ட்ஸா மட்டும் இருக்கலாம்னு இருக்கேன்” என அந்த இளைஞன் சொன்ன போது. அப்படி இருப்பதற்கான வாய்ப்புகள் குறைவு எனச் சொன்னேன். ஓர் உறவு ஒரு கட்டத்தை அடைந்துவிட்டால் அதற்கு பிறகு அதன் முந்தைய நிலைக்குக் கொண்டு வந்து அதை நிறுத்துவது கடினம். தினமும் காலையில் இருந்து மது அருந்தும் ஒருவன் திடீரென ஒரு நாள் வந்து இனி நான் வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே மது அருந்துவேன் எனச் சொல்லும் போது அது எப்படிச் சாத்தியமில்லையோ அதே போலவே ஓர் உறவை அதன் முந்தைய நிலைகளுக்கு ஒருபோதும் எடுத்து வர முடியாது. பிரியவேண்டும் என முடிவெடுத்தால் அதில் உறுதியாகவும், முழுமையாகவும் இருந்தால் மட்டுமே பிரிய முடியும். ஓர் உன்னதமான உறவு என்பது எத்தனைக் காலம் அது நீடித்தது என்பதில் மட்டும் இல்லை, ஒருவேளை அது ஒரு முடிவுக்கு வந்தால் அந்தப் பிரிவின் முடிவை எத்தனை காதலுடன் அதை அணுகியது என்பதில்தான் இருக்கிறது. பிரிதலின் வழியாகவே நாம் அதிலிருந்த காதலை முழுமையாக உணர முடியும்.   https://uyirmmai.com/article/uyirmmai-magazine-march-2024-article-05/
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.