Jump to content

அரோகரா! அரோகரா!


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அரோகரா

அரோகரா

நல்லூர்க் கந்தனுக்கு

அரோகரா

வண்ணமயில் ஏறிவரும்

வடிவேலனுக்கு

அரோகரா

முருகா!

என்னப்பா இது?

இனம் மொழி தாண்டி

உன்ர வாசலிலை நிறையுது

பக்தர்கள் வெள்ளம்

கடையில விக்கிற

பிள்ளையார் சிலையில

மேடின் சைனா இருக்கு

கடைக்குட்டிக்கு வாங்கிற

அம்மம்மா குழலை

வடக்கத்தையான் விற்கிறான்

ஐப்பான் காரன்

வந்து

“சோ” றூம் போடுறான்

பாகிஸ்தான் காரன் வந்து

பாய் வி(ரி)க்கிறான்

கண்ணுக்கு தெரியிற

இடமெல்லாம்

துரோகிகள் கூட்டம்

கண்கட்டி

வித்தை காட்டுது

சிங்கள தேசம்

வெள்ளை வேட்டி கட்டி

சுது மாத்தையாக்கள்

வெறும் மேலோட

களு பண்டாக்கள்

போதாக்குறைக்கு

விமானச் சீட்டுக்கு

விலைக்குறைப்பு

ஊரடங்குச்சட்டத்துக்கு

நேரக்குறைப்பு

ஏ ஒன்பது

பாதை திறப்பு…

இப்படி நீளுது

திருவிளையாடல்

எங்களுக்கு மட்டும்

ஓர வஞ்சனை

முன்னூறாயிரம் பேருக்கு

முள்ளுக்கம்பிச் சிறை

பலபேருக்கு

இலங்கை வரத்தடை

ஏனெனில்

நாங்கள் கேட்டது

அலங்காரச் சுதந்திரமல்ல

ஆனந்த சுதந்திரம்

உனக்கென்னப்பா

நூறு குடத்தில அபிசேகம்

மண் போட்டால்

மண் விழாத

மக்கள் கூட்டம்

வண்ண மயில் ஏறி

வள்ளி தெய்வயானையோடு

வடிவழகு வருகை வாழ்வு

கந்தா

கடம்பா

கதிர்வேலா

உன்ர வீதியில இருந்துதான்

எங்கள ஏமாத்த நினைச்சவங்களை

கண்டு பிடிச்சனாங்கள்

உன்ரை வீதியிலை

பசித்திருந்துதான்

ஒரு பிள்ளை

வடக்கத்தையான்

முகத்திரை கிழிச்சவன்

எங்கட மக்கள் மறந்தாலும்

நீயாவது மறக்காமல்

இரப்பா

உனக்காச்சும்

ஒரு சமயத்தில

கோவணம் மிச்சம்

இப்ப கொட்டாவி விடுற

எங்கட சனத்துக்கு?

எல்லாருக்கும் நல்லவரம்

நல்கும்

தமிழ்க்கடவுளே

முருகா

எனக்கும் ஒரு வரம்

தந்துவிடு

திருந்த நினைக்காத

சனத்தை திருத்தவும் வேண்டாம்

முள்ளுக்கம்பி

வளவுக்குள்ள

வருந்திற எங்கடை சனத்துக்கு

வாழ்வளிக்கவும் வேண்டாம்

இனக்கொலை புரிந்த

தென்னிலங்கைக்கு

தண்டனையும் வேண்டாம்

வஞ்சகத்தோடை வளவுக்குள்ள

வாறவங்களை

கண்டு பிடிக்கவும் வேண்டாம்

உனக்கு கொஞ்சம் பக்கத்தில

காக்கா பீச்சினபடி

நிற்கிற சங்கிலியன்

சிலை

மண்ணுக்குள்ள புதைஞ்சிருக்கிற

மாவீரன் பண்டாரவன்னியன்

கல்லறை

முன்னர் கண்டியை

ஆண்ட

விக்கிரம ராஜசிங்கன்

ஆழக்கடலாண்ட

சோழ மகாராஜன்

தமிழர் மனங்களில்

கொழுந்துவிட்டெரிகிற

விடுதலைப் பெருநெருப்பு

பிரபாகரன்

இப்பிடி

மண்ணிலை முளைச்சிருக்கிற

வரலாறை

உன்ர பக்தர்களுக்கு

நினைவிருத்து

அதுபோதும்

வரலாறு விட்ட வழியில்

காலம் இட்ட கட்டளைப்படி

சிங்கள அந்நிய ஆதிக்கம்

அகன்ற நாள் வர

நாங்களும்

ஒரு நாள்

உன் வாசல் வருவோம்

அதுவரை

அரோகரா

அரோகரா

நல்லூர்க் கந்தனுக்கு

அரோகரா

வண்ணமயில் ஏறிவிளையாடும்

வடிவேலனுக்கு

அரோகரா

Link to comment
Share on other sites

வண்ண மயில் ஏறி

வள்ளி தெய்வயானையோடு

வடிவழகு வருகை வாழ்வு

அரோகரா அரோகரா நல்லூர் கந்தனுக்கு அரோகரா

நாங்களும் உன்வாசல்

வருவோம்

எயர் பஸ்

விமானம் எடுத்து

ரோசுடனும் யஸ்மின் உடனும்(பூக்களை சொன்னன்)

அரோகரா அரோகரா

Link to comment
Share on other sites

அரோகரா அரோகரா என்று எல்லோருமாக ஒரு தடவை கடைசி முறையாக உரக்கக் கத்திப்பார்ப்போம் - அப்போதாவது தூங்கியிருக்கும் கந்தன் எழும்புகிறானா என்று.

இந்த நிலை தொடர்ந்தால் வெகு சீக்கிரம் செந்தில்குமரனையும் செம்மணியில் புதைத்துவிட்டு நல்லூரிலே புத்த விகாரை கட்டி பிரித் ஓதுவார்கள். :lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • எங்கை பள்ளிக்கூடம் போனால்த் தானே? 😎 சொல் புத்தியுமில்லை....கேள் புத்தியுமில்லை... 🤣 சும்மா வாள்...வாள் தான் 😂 இப்ப நீங்கள் சொல்லீட்டள் எல்லே..... 
    • ஏதோ தேர்தல் ஆணையம் நடுநிலையாகச் செயற்படுவது மாதிரி இருக்கிறது உங்கள் கருத்து. 1 வீதம் கூட இல்லாத வாசனுக்கு சைக்கிள் சின்னம் அதேபோல் தினகரனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. பாஜக கூட்டணியில் இருப்பதால் இந்தச் சலுகை. வைகோவுக்கு 1 தொகுதியில்  நிற்பதால் பம்பரச் சின்னம் ஒதுக்க மறுத்த தேர்தல் ஆணையம் கூறிய காரணம் குறைந்தது 2 தொகுதியில் நிற்க வேணும் என்று. அதே நேரம் 2 தொகுதியில் நின்ற விடுதலைச்சிறுத்தைகளுக்கு பானைச்சின்னததை ஒதுக்க மறுத்து பல கெடுபிடிகளின் பின்னரே அவர்களுக்கு அந்தச் சின்னம் வழங்கப்பட்டுள்ளது. சாதாரண பொதுமக்களை மறித்துச் சோதனையிடும் தேர்தல் பறக்கும்படை  பெரிய கட்சிகள் காசு கொடுக்கும் போது கண்டும் காணாமல் விடுவதுதான் தேர்தல் ஆணையத்தின் யோக்கியதை.
    • குமாரசாமி  அண்ணை…  தமிழ் நாட்டில், ஒரு வாக்கின் விலை தெரியுமா? 25,000 ரூபாய்க்கு மேலும் கொடுக்க சில அரசியல் கட்சிகள் தயாராக உள்ளது. பாராளுமன்ற தேர்தல், சட்டசபை தேர்தல், உள்ளூராட்சி தேர்தல், இடைத் தேர்தல் என்று மாறி மாறி வரும் போது…. அந்த ஓட்டு எவ்வளவு சம்பாதிக்கும் என்று கணக்குப் பார்த்தால் லட்சாதிபதி ஆகலாம். 😂
    • டொனால்ட் ரம்ப் மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதில்  மிக  கவனமாக இருக்கின்றார்கள். அதற்கு எந்த விலையும் கொடுக்க தயாராக  எதிர் தரப்பினர் இருக்கின்றார்கள்.
    • இந்த‌ முறை மைக் சின்ன‌த்துக்கு அதிக‌ இளைய‌த‌லைமுறை பிள்ளைக‌ள்  வ‌ய‌தான‌வ‌ர்க‌ள் ஓட்டு போட்டு இருக்கின‌ம்  அதிலும் இளைஞ‌ர்க‌ளின் ஓட்டு அதிக‌ம்........................... யூன்4ம் திக‌திக்கு பிற‌க்கு ஊட‌க‌த்தின் பெய‌ரை வ‌த‌ந்தி😡 என்று மாற்றி வைக்க‌லாம்  அண்ண‌ன் சீமான் த‌ந்தி ஊட‌க‌த்துக்கு எதிரா வ‌ழ‌க்கு தொடுக்க‌ போகிறேன் என்று சொல்லி இருக்கிறார்..........................36ஆராயிர‌ம் ம‌க்க‌ளிட‌த்தில் க‌ருத்துக் கேட்டு வெளியிடுவ‌து க‌ருத்துக் க‌ணிப்பா அல்ல‌து க‌ருத்து திணிப்பா.....................................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.