Jump to content

உங்களுக்கும் எனக்குமாய் சில குறிப்புகள் , கேள்விகள்


Recommended Posts

ஈழத்திலேயே உங்களுக்கு உங்கட பரம்பரைக்கு வரலாறில்லை. கனடாவில.. கனவுதான்..! <_<:D

இப்ப எங்கன்ட வரலாறுகள் எல்லாம் கணனியில் இருக்கு ,ஏன் u.s.b இருக்கு,

ஈழத்தில் வரலாறு இல்லாமல் போனதுக்கு காரணம் ஒலைச்சுவடிகளில் எழுதிவைத்தபடியால் கறையான் அறிச்சுபோட்டுது மற்ரும் சுண்ணாம்பு பாறகளிள் எழுதமுடியாத படியால் வரலாறு எனையோர் அறியமுடியாமல் போய்விட்டது :lol::D

Link to comment
Share on other sites

இங்கு எல்லோருமே ஒண்ட வந்த பிடாரிகள் தான் யாரும் கனேடிய தேசத்தை உரிமை கோர முடியாது ஒரு சின்ன வித்தியாசம் அவர்கள் சற்று முன்னர் வந்து விட்டனர் நாம் காலம் தாழ்ந்து வந்தோம். இதனால் வெள்ளையினத்தவர்களுக்கே கனடா உரித்தானது என்று சொல்வது ஏற்றுக்கொள்ள முடியாது. அதே நேரம் கனேடிய பூர்வ குடீகள் வெள்ளையினத்தவர்களால் மிதமிஞ்சிய சலுகைகள் வழங்க்பப்ட்டு அவர்கள் தங்களை பற்றி சிந்திக்காமல் வாழ வைக்கப்பட்டுள்ளனர். நாம் கனேடியர்களாக அவர்களையே கருத முடியும்! மற்றதெல்லாம் வந்தான் வரத்தான் தான்!

பறவைகள்..

நீங்கள் சொல்வது வேறு. நான் சொல்ல வந்தது வேறு.

சட்டப்படியும், கடந்தகால வரலாற்றின் அடிப்படையிலும் நீங்கள் சொல்ல வந்தது நியாயமே.. அதற்காக உங்கள் வீட்டின் அருகில், எங்கிருந்தோ வந்தவர்கள் சட்டத்தைமீறி திருட்டுத்தனமாக துப்பாக்கிகளை வைத்துக்கொண்டு மற்றவர்களை ஆபத்துக்கு உள்ளாக்கினால் நீங்கள் கனேடிய வரலாற்றைப் பேசிக்கொண்டிருக்கப் போவதில்லை. திட்டித் தீர்த்துக்கொண்டுதான் இருப்பீர்கள்..! அப்படி ஒரு சில நூறு பேர் திட்ட ஆரம்பிக்கும்போது காலப்போக்கில் அது ஒரு அந்த இனத்தவர் மேல் வெறுப்பாக மாறிவிடுகிறது. அதுவே ஊடகங்களிலும் பிரதிபலிக்கப் படுகிறது. நானூறு ஆண்டுகளுக்கு முன்னர் வந்தவர்களை விடுங்கள்.. நான்கு ஆண்டுகளுக்கு முன் வந்தவன்கூட திட்டித் தீர்ப்பான்..!

முதலில் நாம் தவறு இழைத்திருந்தோமானால் அதை ஒத்துக்கொள்வோம். அதுவே எமது சமூகத்தின் எதிர்கால முன்னேற்றத்துக்கு அடிப்படையாக அமையும்.

Link to comment
Share on other sites

பறவைகள்..

முதலில் நாம் தவறு இழைத்திருந்தோமானால் அதை ஒத்துக்கொள்வோம். அதுவே எமது சமூகத்தின் எதிர்கால முன்னேற்றத்துக்கு அடிப்படையாக அமையும்.

அதனை நாம் ஒரு போதும் செய்ய மாட்டோம்...ஏன் எம்மில் தவறுண்டு என்பதைக் கூட ஏற்றுக்கொள்ள மாட்டோம். பறவைகள் போன்று வெறும் புனித கனவில் காலத்தை ஓட்டுவோம்.

ஒருவனை ஒரு சிலர் புரிந்து கொள்ளாவிடில் அது அந்த ஒரு சிலரின் தவறாக இருக்கலாம், ஆனால் எவருமே புரிந்து கொள்ளாவிடின் அது அவனது தவறாகத் தானிருக்கும்

Link to comment
Share on other sites

உதையெல்லாம் வாசிச்சுப்போட்டு சினேகிதி இப்ப தலையைக்கொண்டுபோய் சுவரோட முட்டுறதை என்னால கற்பனை செய்து பார்க்ககூடியதாய் இருக்கிது.

என்னதான் இருந்தாலும்.. நெடுக்காலபோவானுக்கு நாங்கள் கனேடியர்கள் என்று சொன்னால் முகம் கொஞ்சம் கோணிப்போவார் எண்டுறது மட்டும் எனக்கு தெரியும். <_<

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உதையெல்லாம் வாசிச்சுப்போட்டு சினேகிதி இப்ப தலையைக்கொண்டுபோய் சுவரோட முட்டுறதை என்னால கற்பனை செய்து பார்க்ககூடியதாய் இருக்கிது.

உண்மை தான். பாவம், சினேகிதி!

சகோதரி: நீங்கள் மினக்கட்டு சில கருத்துகளை அக்கறை எடுத்து தான் முன்வைத்து இருந்தீர்கள்.

எனது அறிவில் சரியென பட்டதை சொன்னேன். கருத்துகள் ஆளுக்காள் மாறு பட்டதாய் இருக்கும். இதில் சரி பிழை என்று கருப்பு வெள்ளையாய் எதுவுமே இல்லை.

பறவைகள்:

தமிழர்கள் என்று ஒரு கூடாத குறிப்பில் எமது பெயர் வருமாயிருந்தால் அது எல்லாருக்கும் கவலையே. ஆனால் இந்த மாதிரி பாதிப்பு எமக்கு மட்டுமல்ல - எல்லா சிறு பான்மை இனத்தினருக்குமே உண்டு. அதை நினைத்து கவலை பட வேணும். ...கவலை பட்டால் தான் திரும்ப அது மாதிரி நடக்காமல் பார்க்க வேணும் என்ற அக்கறை வரும். அவங்கள் யாரோ பிழை செய்ய போய் இப்ப எங்கள் எல்லாரின் பெயரும் பழுதாய் போயிற்று என்று பார்க்காமல் - அடிப்படையில் ஏன் இந்த நிகழ்வுகள் நடக்கிறது என்பதில் மட்டும் அதிகளவு கவனத்தை செலுத்தினால் - வெறும் கவலைக்கு பதில் ஆக்கபூர்வமான தீர்வுகள் கிடைக்கும் என்பது எனது கூற்று. இது தவிர தமிழரின் பெயர் பழுதாய் போகிறது என்ற கவலை எமது இளைஞர்களின் செயற்பாடுகளை பார்க்கும் போது எனக்கும் நிறையவே வரும்..

பதினெட்டு முதல் இருபது வயது வரை உள்ள பிள்ளைகளை பெற்றோர் தமது கெட்டிதனத்தால் மட்டுமே நல்லபடி இயக்கி வைக்க முடியும். எல்லா சுதந்திரத்தையும் கொடுத்தாலும், நல்லது எது கெட்டது என்று சிறு வயது முதலே பிள்ளைக்கு விளக்கத்தாலும் அனுபவத்தாலும் கற்று கொடுத்து வளர்க்க முடியும் என்பது எனது நம்பிக்கை. எனக்கு பிள்ளை இன்னும் இல்லை, அதனால் நடைமுறையில் அது எவ்வளவு கடினம் என்பதை நான் ஜோசித்து மட்டும் தான் பார்க்க முடியும்.

சூழல் எங்களை/ எங்கள் மனநிலைகளை அதிகம் பாதிக்கும் போது, எங்களுக்கு ஏற்ற படி ஒரு சூழலை உண்டாக்குவது ஒரு வழி.

அது சாத்தியமாகத பட்சத்தில் சூழலுக்கேற்ப சில சிந்தனைகளை நாம் உள்வாங்குவது அவசியம். அது சுலபமான வேலை என்று நான் ஒரு போதும் சொல்ல போவது இல்லை. கஷ்டமாய் இருந்தாலும் சிலது அவசியமாகிறது.

மானத்தை பெரிதாய் பார்ப்பவர் - பிழை செய்தாலும், பெயரின் பொருட்டு அதை மறைக்க முயல்வர்.

தங்கள் பிழையை பெரிதாய் பார்ப்பவர் - திருத்த முயல்வர்.

என்பது எனது நம்பிக்கை. எங்கட பிழையளை திருத்த முயலுவம்... நல்ல பெயர் தானாய் வரும். அப்ப "நல்ல பிள்ளை certificate நீயா எங்களுக்கு தாறது?!" என்று உலகத்தை பார்த்து நாங்களே நினைப்பம்.

--------------------------------------------

--------------------------------------------

- பிற்குறிப்பு: கருத்துகளை பதியும் போது ஏன் எம்மில் சிலர் சுடு தண்ணி ஊத்து பட்டது போல இருக்கிறம்? கோவத்தில் எரிஞ்சு விழோனும் போல இருக்கு என்று எண்ணி எழுதினால் - அடுத்தவருக்கு எமது கருத்து புரிந்தாலும், ஏற்று கொள்ளும் மனநிலை இராது. நீங்கள் சொல்வதில் நிறைய ஆக்கபூர்வமான விடயங்கள் இருக்கு, நிதானமாய் சொல்ல பாருங்கள். அதால் பிரயோசனங்கள் பல உண்டு. இங்கு கருத்துகளை வாசிப்பவர்கள் பல்தர பட்ட கள உறவுகள் - வார்த்தைகளால் அதிகம் தாக்கி பேசினால் உங்கள் கருத்துகளை விட உங்கள் குலைப்பு தான் அவர்களை நோகடிக்கும். மென்மையான சுபாவம் உள்ள கருத்தாளர்கள் பதில் சொல்வதற்கும் தயங்குவார்கள்.

:lol:

Link to comment
Share on other sites

.

- பிற்குறிப்பு: கருத்துகளை பதியும் போது ஏன் எம்மில் சிலர் சுடு தண்ணி ஊத்து பட்டது போல இருக்கிறம்? .

:lol:

இளையபிள்ளை அது வேறு ஒண்றுமில்லை...சுடுதண்ணி போல இருப்பதற்க்கு முக்கிய காரணம் கருத்து எழுதுபவரின் கருத்தைவிட கருத்து எழுதுபவர் புலி விசுவாசியா புலி எதிர்பாளன என்று பார்ப்பதால் தான்

Link to comment
Share on other sites

நான் குறிபு்புகளும் கேள்விகளும் என்றுதான் தலைப்பிட்டிருந்தேன். எனது குழப்பங்களுக்கும் கேள்விகளுக்கும் தெளிவான கருத்துகள் மூலம் பதிலளித்த எல்லாருக்கும் நன்றிகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எட பீத்தமிழா (இப்படித்தான் சிங்களவனும் எமைப் பிடிக்காதவனும் அழைக்கிறான் நாமதான் ஏர்ரோப்பிளேனிலை போறதா கனவு காணுகிறம்) புலம்பெயர் தேசத்தில் வாழ்கின்ற உனக்குத் தந்த அடையாளப்படுத்தும் கடுதாசிகள் நீ பிச்சையெடிக்க மட்டுமே உரிமை உள்ளது. அதை விட பெரிதாக ஒண்ணுமில்லை.

எத்தனை காலம் நீ வாழ்கின்ற நாட்டில் வாழ்ந்தாலும் அகதி அகதிதான். இதனை மறக்காதே. இதை விடக் கேவலம் நீ வாழ்ந்த நாடாகிய ஈழத்திலும் உனக்கு மரியாதை இல்லை உனது உழைப்பை நன்றாகப் பெற்றுவிட்டு இப்போது "நீ உள்ளூரில் சம்பாதித்து உன் பொண்டாட்டி பிள்ளைகளுக்குச் சோறுபோட வக்கில்லாது வெளிநாடுபோய் கக்கூசு கழுவி வயுறு வளர்க்கப் போனவர்தானெ " என ஏளனம் செய்கின்றார்கள் இதுக்குள்ள ஒபாமாக் கனவு...

திமிர் பிடித்து சிலதுகள் கத்தி கம்பு பொல்லுகளுடன் திரியுது அதுகளை கவனிக்காது விடுங்கோ என்ன கேடு கெட்டும் போகட்டும்.

எதாவது அலுவலுக்கு சொன்ன நேரத்துக்கு போறதில்லை. பதினெட்டு சாமி அதுகைடை கைகளில் வாள் சுத்தியல் உருட்டுக்கட்டை. ஒழுங்குபடுத்தப்படாத சமய அனுட்டானங்கள். சோனகனும் வேதக்காரனும் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் ஒரேமாதிரித்தான் கும்பிடிகிறான் ஒரேமாதிரித்தான் முணுமுணுக்கிறன். நாம மாத்திரம்தான் கலயாடுறதும் தேங்காயை மலையாகக் குவித்து ஒண்டோடு ஒண்டை மோதவிட்டு இளநீரை தலையிலூத்தி அந்த உடம்போட நல்ல உடுத்துவாற இளம்பெட்டையளை உரசி தன்னையும் கேவலப்படுத்தி மற்றவயளையும் கேவலப்படுத்தி.... இப்போதெல்லாம் ரீவீக்காரன் ஆபிரிக்காவுக்கொ ஆசியாவுக்கோ கமறாவைக் கொண்டுபோய் அவங்களுக்கு காசு கொடுத்து காட்சிப்படுத்தி உள்ளூரிலை டீவியிலை காட்டுறதில்லை ஏனெண்டால் அந்தக் கண்றாவிகளையெல்லாம்தானே நாமள் அவர்களது வாசல்படியிலேயே வந்து செய்து காட்டுகிறம். தனது உழைப்பிலும் கை வைத்துவிடான் என்கிற வயித்தெரிச்சலிலை நாங்கள் உணர்வுடன் செய்கின்ற ஆர்ர்ப்பாட்டங்களையும் கண்டுக்கிறதில்லை. இதுவும் ஏதோ அவங்கட ஊர் திருவிழாவோ என நினைத்து போய்விடுகிறான்.

னீ டாக்குத்தரெடா நீ இன் யினீயரடா அதை விட எதயும் படிக்க முயற்சி செய்ய பிள்ளைகளை விடாது சாமத்திய வீட்டிலும் பிள்ளை என்ன படிக்குது எண்டு விண்ணாணம் கேட்கும் பெண்டுகளுக்கு அவர் இல்லாட்டில் அவள் , இப்ப என்றன்ஸ் எக்சாம் எடுக்கினம் அடுத்த வருடம் டாக்குத்த்ர் படிப்பு அல்லது பொறியாளர் படிப்பு ( இதுக்குள்ள பிரபல்யமான பல்கலைக் கழகங்களின் பெயரையும் மனப்பாடம் செய்து வைப்பினம்)

பிள்ளை சோதினயில் பால் ஊத்தி விட்டதெனில் போதைக்கு அடிமை காரணம் அப்பனும் ஆத்தையும் அவர்கள் மனதில் வளர்த்துவிட்ட டாக்குத்தர் பொறியாளர் பூதம் போதையை விடப் பயங்கரமானது. அன்றேல் சமூகத்தின் கடை நிலைக்கு சறுக்கி வந்து கத்தி பொல்லு வாழ்க்கை.....

Link to comment
Share on other sites

.

இதுக்குள்ள ஒபாமாக் கனவு...

ஒபாமாவின்ட பரம்பரையும் கக்கூஸ் கழுவித்தான் முன்னுக்கு வந்தது.அது சரி கக்கூஸ் கழுவிறதையும் திட்டிறியள்,டாக்குத்தர் ,இன் ஜினியரயியும் ,திட்டிறியள் அப்ப தமிழன் என்ன தொழிலை செய்ய சொல்லுறியள்

இல்லாட்டி எல்லாத்தமிழனும் தற்கொலை செய்ய வேணுமோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழனைத் தமிழனாக இருக்கச் சொல்கிறேன். எதிர்கால உலகில் மனித குலத்தின் மேம்பாட்டுக்குரிய மாற்றங்கள் நிகழுமாகவிருந்தால் அதில் ஈழத்தமிழனது பங்களிப்பும் கூடவே இருக்கவேண்டும். அந்த இலக்கை நோக்கி நாம் பயனிக்க வேண்டும். அதற்காக பல இடையூறான விடையங்களை நாம் எம்மிடத்திலிருந்து தூகியெறிய வேண்டும். அதோடு உலகின் பொருளாதார சக்தி படைத்த கக்கள் கூட்டமாக நாம் மாறுதல் வேண்டும். அதற்காக புலம்பெயர் தேசத்துக் கடைத்தெருக்களில் நம்மவர் விக்கும் நகைகளை கிலோ கணக்கில் வாங்கி ஒண்டுக்கும் உதவாது பெட்டிக்குள் வைப்பதைக் கூறவில்லை. ( இவற்றில் அனேகமானவை மாற்றுக் குறைந்த தங்கத்தினால் உருவாக்கப்பட்டதும் பொடிவிளக்கனம் கூடியவையும் என்பது நமது பொம்மனாட்டிகளுக்குத் தெரியாது. இத்தங்கத்தையே 24கரட் தங்க க் கட்டிகளாக வாங்கிவைத்தால் அதை முதலீடு எனக் கூறலாம்)

Link to comment
Share on other sites

தமிழனைத் தமிழனாக இருக்கச் சொல்கிறேன். எதிர்கால உலகில் மனித குலத்தின் மேம்பாட்டுக்குரிய மாற்றங்கள் நிகழுமாகவிருந்தால் அதில் ஈழத்தமிழனது பங்களிப்பும் கூடவே இருக்கவேண்டும். )

தமிழனின் விகிதாசரத்துடன் ஒப்பிடும் பொழுது அவர்களுடைய வாரிசுகளை வைத்தியதுறையில் அதிகமாகவேஉருவாக்கியுள்ளனர்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இஸ்ரேல்- ஈரான், இவங்கட நொட்டல்கள் பழகி விட்டது, தாங்கிக் கொண்டு சாதாரணமாக வாழலாம். ஆனால், இந்த "கேப்பில்" புகுந்து "திராவிடர் பேர்சியாவின் பக்கமிருந்து மாடு மேய்த்த படியே வந்த ஊடுருவிகள்" என்று "போலி விஞ்ஞானக் கடா" வெட்டும் பேர்வழிகளின் நுளம்புக் கடி தாங்கவே முடியாமல் எரிச்சல் தருகிறது😅. யோசிக்கிறேன்: இவ்வளவு வெள்ளையும் சொள்ளையுமான பேர்சியனில் இருந்து கன்னங் கரேல் திராவிடன் எப்படி உருவாகியிருப்பார்கள்? சூரியக் குளியல்? 
    • பொது நடைமுறையை சொல்கிறேன். கனடாவுக்கும் பொருந்தும் என நினைக்கிறேன். படிக்க போகாவிடின், கல்லூரி உ.நா.அமைச்சுக்கு அறிவிக்கும். அதன்பின், இவர் இப்போதைய நிலையை கருத்தில் எடுத்து - மாணவர் வீசா மீளப்பெறப்படும். அன்று முதல் இவர் ஓவர் ஸ்டேயர்.  ஆனால் வழக்கு முடிந்து, தண்டனையும் முடியும் வரை முதலில் ரிமாண்டிலும், பின் சிறையிலும் வைத்திருப்பார்கள். தண்டனை காலம் முடிந்ததும் நாடுகடத்துவார்கள். விண்ணப்பித்தாலும் பிணை கிடைத்திராது. குழந்தைகள் உட்பட 6 கொலை! 7வதை ரிஸ்க் எடுக்க எந்த நீதிபதியும் தயாராக இருக்கமாட்டார்கள். வாய்பில்லை - ஒரு கிரிமினல் குற்றம் மூலம் வரும் தண்டனை காலம் - வதிவிடத்துக்கு கணக்கில் எடுத்து கொள்ளப்படாது. வதிவிடத்துக்கு கணக்கில் எடுக்க அந்த காலம் சட்டபூர்வமானதும், தொடர்சியானதாயும் இருக்க வேண்டும். சிறைவாச காலம் சட்டபூர்வமானதல்ல. அதேபோல் ஒரு குற்றத்துக்காக சிறை போனால் “தொடர்சி” சங்கிலியும் அந்த இடத்தில் அறுந்து விடும். வெளியே வந்த பின், நாடு கடத்தாமல் விட்டால், தாமதித்தால் - சூரியின் பரோட்டா கணக்கு போல், சட்டபூர்வ & தொடர்சியான காலம் மீள பூஜ்ஜியத்தில் இருந்து ஆரம்பிக்கும்.  
    • புராணக்கதையின் படி, ஆர்க்கிமிடிஸ் குளியல் செய்யும் பொழுது கண்ட ஒன்றால்,  மிகவும் உற்சாகமடைந்தார், அவர் குளியலறையில் இருந்து குதித்து, மீண்டும் தனது பட்டறைக்கு  / அரச   அரண்மனைக்கு  / வீட்டிற்கு ஓடினார், யுரேகா (அதாவது "நான் அதை கண்டுபிடித்தேன்") என்று கத்திக் கொண்டே, ஆனால்  " பொருத்தமற்ற உடையுடன், அதாவது நிர்வாணமாக ". ஆர்க்கிமிடிஸ் எப்போதாவது "யுரேகா" என்ற வார்த்தையை கத்தினாரா / உச்சரித்தாரா என்று சிலர் சந்தேகிக்கிறார்கள், ஏனென்றால் இது விட்ருவியஸின் [Vitruvius 80–70 BC – after c. 15 BC ] ஒரு ரோமானிய கட்டிடக் கலைஞர் மற்றும் பொறியியலாளர் ஆவார்.] குறிப்பு ஆகும்.  - இந்த சம்பவம் நடந்த பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு அவரால் எழுதப்பட்டது. வாய்வழியாக வந்த கதையை தொகுத்து கொடுக்கப்பட்டது என்பதால்?   ஆர்க்கிமிடீஸ் கி.மு.287  - கி.மு.212 ; இது அவர் வாழ்ந்த காலம்  ஆகவே அந்த பண்டைய காலத்தில் நிர்வாணம் ஒன்றும்  அதிசயமாக இருந்து இருக்காது?      எல்லோருக்கும் எனது தாழ்மையான நன்றி 
    • பிணையை  மறுப்பதனூடாக  அவர் கனடாவில்  தங்கி இருக்கும் நாட்களை  அதிகரித்து அதை  தனது  வதிவிட விசாவுக்கு  சாதகமாக்க  முயல்கிறார் போலும்? சோத்துக்கு சோறும்  ஆச்சு? இருப்புக்கு  வீடும் ஆச்சு? விசாவும் ஆச்சு?
    • மகனுக்கு ஒரு குழந்தை பிறந்துள்ளது. எனவே வட கரோலினாவில் நிற்கிறேன். எதுக்கும்  @Justin ஐ கேட்டுப் பார்க்கவும்.அவருக்குத் தான் கிட்ட.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.