Jump to content

கே.எஸ் பாலச்சந்திரனின் நாவல்! வடலி வெளியீடு


Recommended Posts

வணக்கம் ஐயா பின்னூட்டங்களுக்கு நன்றி!

டிங்கிரி - சிவகுரு இரட்டையர்கள் பற்றி வாசிக்கும் போது.. அவர்கள் வெளியிட்டுள்ள நகைச்சுவை நாடகங்கள் ஞாபகத்திற்க்கு வந்து விட்டன...

அவர்கள் சில திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார்கள் என்று நினைக்கிறேன் சரியா ? ?

Link to comment
Share on other sites

  • Replies 69
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் ஐயா பின்னூட்டங்களுக்கு நன்றி!

டிங்கிரி - சிவகுரு இரட்டையர்கள் பற்றி வாசிக்கும் போது.. அவர்கள் வெளியிட்டுள்ள நகைச்சுவை நாடகங்கள் ஞாபகத்திற்க்கு வந்து விட்டன...

அவர்கள் சில திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார்கள் என்று நினைக்கிறேன் சரியா ? ?

தம்பி தர்மராஜ்

நான் ரசித்த நகைச்சுவை இரட்டையர்கள் என்றால், சக்கடத்தார் இராஜரத்தினம் - சசி நாகேந்திரா, அடுத்தது டிங்கிரி கனகரத்தினம் - எம்.சிவகுரு. முதலாவது ஜோடியை நான் கொழும்பில் நடந்த நிகழ்ச்சிகளில் பார்த்தேன் கொடிகட்டிப்பறந்து கொண்டிருந்தார்கள்.

இரண்டாவது ஜோடியை யாழ்ப்பாணத்தில் திறந்தவெளியரங்கில் நடந்த பௌர்ணமிக்கலைவிழாவில் ஒரு நீண்டநாடகத்தில் பார்த்துவிட்டு, அவர்களை தனியாக நிகழ்ச்சி செய்யச்சொல்லி, கொழும்புக்கு அழைத்துச்சென்றேன். அங்கே கலக்கிவிட்டார்கள். பின்னர் எனது நிகழ்ச்சிகள் எங்கு நடந்தாலும் அவர்களை அழைத்துச்செல்வேன்.

நான் உதவி இயக்குனராக பணிபுரிந்த "வாடைக்காற்று" திரைப்படத்தில் அவர்களை நடிக்க வைத்தேன்.

அதைப்பார்த்துவிட்டு ஜோதேவ் ஆனந்த என்ற இயக்குனர் தனது இரத்த்தின் இரத்தமே திரைப்படத்தில் டிங்கிரியை நடிகர் நாகேசுடன் (இருவரும் ஒரேமாதிரி தோற்றமுடையவர்கள்) நடிக்க வைத்தார்.

எளிமையான கிராமியத்தன்மை வாய்ந்த நகைச்சுவைக்கலைஞர்கள்.. ஆனால் இப்போது அவர்கள் இருவரும் இல்லை என்பதுதான் சோகமான செய்தி.

பழைய நினைவுகளில் தோயச்செய்து விட்டீர்கள். நன்றி

கே.எஸ்.பாலச்சந்திரன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"கரையைத்தேடும் கட்டுமரங்கள்" வெளியீட்டு விழா

postcover.jpg

[தினமும் வாழ்வுக்காக அலைகளோடு ஜீவமரணப்போராட்டம் நடத்தி மீளும் அல்லது தோற்றுப்போகும் ஒரு சமூகத்திடம் எனக்குள்ள நியாயமான மதிப்பும், இரக்கமும்தான் என்னை இந்த நாவலை எழுதத்தூண்டியிருக்கிறது. - கே.எஸ்.பாலச்சந்திரன்

.

கலைஞர் கே.எஸ்.பாலச்சந்திரன் எழுதிய கடலோடிகளின் கதை சொல்லும் நாவல் -

கரையைத்தேடும் கட்டுமரங்கள் நாவல் வெளியீட்டுவிழா

ஒக்டோபர் 3 2009

சனிக்கிழமை

மாலை 5.30க்கு

இடம்:

அஜின்கோட் சமூக நிலையம்

31, கிளென் வாட்போர்ட் டிறைவ்

ஸ்காபரோ, ஒன்ராரியோ

கனடா

Link to comment
Share on other sites

வணக்கம் ஐயா,

உங்கள் நாவலை நான் ஏற்கனவே இணையவழி வடலியூடாக பெற்று இருக்கின்றேன். உங்களை இன்னமும் நேரில் பார்க்க இல்லை. தொலைக்காட்சியில் பார்த்து இருக்கின்றேன். காலம், சூழ்நிலை இடம்கொடுத்தால் நிச்சயம் நானும் வெளியீட்டு விழாவில் கலந்துகொள்வேன். தகவலுக்கு நன்றி!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் ஐயா,

உங்கள் நாவலை நான் ஏற்கனவே இணையவழி வடலியூடாக பெற்று இருக்கின்றேன். உங்களை இன்னமும் நேரில் பார்க்க இல்லை. தொலைக்காட்சியில் பார்த்து இருக்கின்றேன். காலம், சூழ்நிலை இடம்கொடுத்தால் நிச்சயம் நானும் வெளியீட்டு விழாவில் கலந்துகொள்வேன். தகவலுக்கு நன்றி!

அன்பான தம்பி கலைஞன்,

நேரில் சந்திக்ககிடைத்தால் சந்தோசப்படுவேன். கனடாவாழ் யாழ்கள அன்பரெல்லாம் விழாவுக்கு வாருங்கள் என்று அழைக்கிறேன்.

கே.எஸ்.பாலச்சந்திரன்

Link to comment
Share on other sites

கே.எஸ். பாலச்சந்திரன் அவர்களிற்கு,

அண்ணறைற் இளமையில் என்னை மிகவும் மகிழ்வித்த படைப்பு. சில வசனங்கள் இன்னும் ஞாபகத்தில் இருக்கின்றன.

"சங்கானையில இருக்கிற வாழக்குலை எல்லாம் பழுக்கிறது எங்கட பஸ் விர்ர புகையாலதானே".

"மணியண்ண பருத்த நேர்ஸிட மடியில"

:lol:

வாடைக்காற்று படம் பார்த்து இருக்கிறேன். மற்றும் உங்கள் நாடகங்கள் சிலவும் பார்த்ததாக ஞாபகம்.

ம‌கிழ்ச்சிக‌ர‌மான‌ பொழுதுக‌ளைத் த‌ந்த‌த‌ற்கு மிக‌வும் ந‌ன்றி.

த‌மிழ் புத்த‌க‌ங்க‌ள் வாசித்து ப‌ல‌ ஆண்டுக‌ள் ஆகிவிட்ட‌ன‌. உங்க‌ள் புத்த‌க‌ம் நிச்ச‌ய‌ம் வாசிப்பேன்.

வாழ்த்துக்க‌ள் க‌லைஞ‌ரே.

Link to comment
Share on other sites

அன்பான தம்பி கலைஞன்,

நேரில் சந்திக்ககிடைத்தால் சந்தோசப்படுவேன். கனடாவாழ் யாழ்கள அன்பரெல்லாம் விழாவுக்கு வாருங்கள் என்று அழைக்கிறேன்.

கே.எஸ்.பாலச்சந்திரன்

நன்றி ஐயா. எனக்கு அறிமுகமான கனடாவாழ் யாழ் கள நண்பர்களிடம் தகவலை சொல்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தம்பி ஈசன்,

மேடை நிகழ்ச்சியில் 'அண்ணை றைற்' நிகழ்ச்சியும், வானொலி நாடகங்களில் 'தணியாததாகமும்', திரைப்படத்தில் 'வாடைக்காற்றும் என் அடையாளங்களாகின. இப்போது என்நாவல் உங்கள்முன் வருகின்றது.

மாப்பிள்ளை, உங்கள் ஆதரவுக்கு நன்றி

அன்புடன்

கே.எஸ்.பாலச்சந்திரன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வடலி வெளியீடான கே.எஸ் பாலச்சந்திரனது கரையைத்தேடும் கட்டுமரங்கள் நாவல் குறித்த அறிமுகம் குமுதம் தீராநதி செப்டம்பர் இதழில் வெளியாகியுள்ளது. பி.எச்.அப்துல் ஹமீத் இவ் அறிமுகத்தை எழுதியிருக்கிறார். இதழின் பிரதியெடுக்கப்பட்ட பக்கங்களை இங்கு காணலாம். கரையைத்தேடும் கட்டுமரங்கள் நாவல் தற்போது தமிழக புத்தகக் கடைகளில் கிடைக்கிறது. கனடாவில் எதிர்வரும் ஒக்டோபர் 3 இதன் வெளியீட்டு நிகழ்வு நடைபெறுகிறது.

theera1.jpg

theera2.jpg

Link to comment
Share on other sites

சயந்தன்,

குமுதம் குழுமம் சார்ந்த "தீராநதி" என்ற இலக்கியப்பத்திரிகை நமது நாட்டு எழுத்தாளரின் நாவலுக்கு இரண்டு பக்கச்செய்தி போட்டிருப்பது வரவேற்கத்தக்கதுதானே..

இணைப்புக்கு நன்றி.

Link to comment
Share on other sites

  • 2 months later...
  • கருத்துக்கள உறவுகள்

சரியாகச்சொலகிறேணே என்பதை உறுதிப்படுத்தமுடியாது, யாழ்ப்பாணத்தில் ஸ்ரான்லி வீதியில் உள்ள "ஸ்ரான்லி பேர்ணிச்சஸ" உரிமையாளர் சிங்கம் என்பவருடன் நான் அண்ணைறைற்ரைப் பார்த்திருக்கிறேன். இவர் யாழ வீரசிங்கம் மண்டபத்தில் இறைவரித்திணைக்களத்தில் வேலைசெய்ததாக ஞாபகம். எனக்கும், எனது நடபு வட்டத்திற்கும் கே.எஸ் பாலச்சந்திரன் என்றால் உடனடியாக மனதில் அடையாளம் கொள்வது சிரமம் "அண்ணைறைற்" என்றால் உடனடியாக மனதில் ஒன்றிவிடுவார். தணியாததாகம் அக்காலங்களில் வாணெலி நாடகத்தின் தடத்தினையே மாற்றிப்போட்டிருந்தது. அதன்போதுதான் அந்நாடகத்தின் இடைச்செருகலாக "அண்ணைரறைற்" நாடகத்தை நான் முதல்முதலாகக் கேடடேன். தற்செயலாக ஆரம்பிக்கப்பட்ட வடலி தற்போது தமிழ்ப்புத்தக வெளியீட்டில் பாரிய புரட்சியையே நிகழ்த்தியுள்ளதை கே.எஸ் அவர்களது வெளியீடு கட்டியம் கூறுகிறது. அனைவருக்கும் எனது வாழத்துக்கள். காலக்கிரமத்தில் கே.எஸ் அவர்களது புத்தகத்தை வாங்க முயற்சிசெய்கிறேன். வடலியின் ஏனைய வெளியீடுகளையுமே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாவல் அருமை.

நன்றி அக்பர் கான். நாவலைப்பற்றிய விரிவான உங்கள் கருத்தை நேரம் கிடைத்தால் எழுதுங்கள்.

அன்புடன்

கே.எஸ்.பாலச்சந்திரன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சரியாகச்சொலகிறேணே என்பதை உறுதிப்படுத்தமுடியாது, யாழ்ப்பாணத்தில் ஸ்ரான்லி வீதியில் உள்ள "ஸ்ரான்லி பேர்ணிச்சஸ" உரிமையாளர் சிங்கம் என்பவருடன் நான் அண்ணைறைற்ரைப் பார்த்திருக்கிறேன். இவர் யாழ வீரசிங்கம் மண்டபத்தில் இறைவரித்திணைக்களத்தில் வேலைசெய்ததாக ஞாபகம். எனக்கும், எனது நடபு வட்டத்திற்கும் கே.எஸ் பாலச்சந்திரன் என்றால் உடனடியாக மனதில் அடையாளம் கொள்வது சிரமம் "அண்ணைறைற்" என்றால் உடனடியாக மனதில் ஒன்றிவிடுவார். தணியாததாகம் அக்காலங்களில் வாணெலி நாடகத்தின் தடத்தினையே மாற்றிப்போட்டிருந்தது. அதன்போதுதான் அந்நாடகத்தின் இடைச்செருகலாக "அண்ணைரறைற்" நாடகத்தை நான் முதல்முதலாகக் கேடடேன். தற்செயலாக ஆரம்பிக்கப்பட்ட வடலி தற்போது தமிழ்ப்புத்தக வெளியீட்டில் பாரிய புரட்சியையே நிகழ்த்தியுள்ளதை கே.எஸ் அவர்களது வெளியீடு கட்டியம் கூறுகிறது. அனைவருக்கும் எனது வாழத்துக்கள். காலக்கிரமத்தில் கே.எஸ் அவர்களது புத்தகத்தை வாங்க முயற்சிசெய்கிறேன். வடலியின் ஏனைய வெளியீடுகளையுமே.

ஆமாம் இளஞாயிறு - 81,82 ஆண்டுகளில் யாழ்வீரசிங்கம் மண்டபத்தில் இருந்த இறைவரித்திணைகள் கிளையில் வேலைபார்த்துக் கொண்டிருந்தேன். சிங்கம் என் நண்பர். தொடர்பு விட்டுப்போய்விட்டது. அவரது சகோதரரை கனடவில் சிலகாலத்தின் முன் சந்தித்தேன். எனது நாவலை என்னிடமிருந்தே பெற்றுக்கொள்ளலாம். அனுப்பிவைப்பேன்.

கே.எஸ்.பாலச்சந்திரன்

Link to comment
Share on other sites

உங்கள் புத்தக வெளியீட்டு விழா நன்றாக நடந்திருக்கும் என நம்புகிறேன். படங்கள் இருந்தால் இணையுங்களேன்.

மேலும் லண்டனில் விழா எப்போது நடைபெற உள்ளது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்கள் புத்தக வெளியீட்டு விழா நன்றாக நடந்திருக்கும் என நம்புகிறேன். படங்கள் இருந்தால் இணையுங்களேன்.

மேலும் லண்டனில் விழா எப்போது நடைபெற உள்ளது?

அன்பின் ஈஸ்- கீழேயுள்ள யாழ்கள இனைப்பில் கலைஞன் உதவியோடு விழாப்படங்கள் இணைக்கப்ப்பட்டிருக்கின்றன.

பாருங்கள் நன்றி

http://www.yarl.com/forum3/index.php?showtopic=63615

கே.எஸ்.பாலச்சந்திரன்

Link to comment
Share on other sites

நன்றி ஐயா. உங்களைப்போல பெரியவர்களுடன் இணையத்திலாவது தொடர்பு கொள்வது மிகவும் மகிழ்ச்சியான ஒரு விஷயம். உங்கள் நாவலைத் தேடிப்படிக்கிறேன்.

Link to comment
Share on other sites

மிகச் சிறந்த கலைஞர்களால்தான் சிறந்த நகைச்சுவை நடிகர்களாக முடியும் என்கிற கருத்தை அண்மைக் காலங்களில் கோடம்பாஅத்தில் அடிக்டி கேட்க்க நேரிடுகிறது. உண்மையில் அது என்னுடைய நெடுநாளைய தோழன் கே.எஸ்.பாலாவை நினைவு படுத்துகிற கூற்றகும். தோழரின் நாவல் கையில் கிடைத்ததும் நான் அதனை வாசித்துவிட்டு விரிவாக எழுதுவேன். நிழலியின் குறிப்புகள் அவரது தலை முறை இளைஞர்கள் பற்றிய பயனுள்ள பதிவு. எனக்கு யாராவது உள்ளம் வர் கள்வன் பாலாவின் மின் அஞ்சல் முகவரியைத் தர முடியுமா

- வ.ஐ.ச.ஜெயபாலன்

மிகச் சிறந்த கலைஞர்களால்தான் சிறந்த நகைச்சுவை நடிகர்களாக முடியும் என்கிற கருத்தை அண்மைக் காலங்களில் கோடம்பாஅத்தில் அடிக்டி கேட்க்க நேரிடுகிறது. உண்மையில் அது என்னுடைய நெடுநாளைய தோழன் கே.எஸ்.பாலாவை நினைவு படுத்துகிற கூற்றகும். தோழரின் நாவல் கையில் கிடைத்ததும் நான் அதனை வாசித்துவிட்டு விரிவாக எழுதுவேன். நிழலியின் குறிப்புகள் அவரது தலை முறை இளைஞர்கள் பற்றிய பயனுள்ள பதிவு. எனக்கு யாராவது உள்ளம் வர் கள்வன் பாலாவின் மின் அஞ்சல் முகவரியைத் தர முடியுமா

- வ.ஐ.ச.ஜெயபாலன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அன்பின் ஜெயபாலன்,

உங்கள் கவிதைகளில் மோகம் கொண்டவ்ன். உங்களின் நீண்டகால நண்பன். அண்மைக்காலத்தில் தொடர்புகள் அற்றுப்போய்விட்டாலும் உங்களின் செயற்பாடுகளை(திரைப்படங்களில் நடிப்பது உட்பட) அவதானித்துக்கொண்டுதான் இருக்கிறேன். குறிப்புக்கு நன்றி. யாழ்களம் மூலமாக எனக்கு செய்தி அனுப்பலாம்.

கே.எஸ்.பாலச்சந்திரன்

நன்றி ஐயா. உங்களைப்போல பெரியவர்களுடன் இணையத்திலாவது தொடர்பு கொள்வது மிகவும் மகிழ்ச்சியான ஒரு விஷயம். உங்கள் நாவலைத் தேடிப்படிக்கிறேன்.

அன்பின் ஈஸ்- நாவலைப்படித்தபின் அபிப்பிராயத்தை எழுதுங்கள். நன்றி

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

பாலச்சந்திரன் அண்னை சொல்லபோனால் உங்களை பற்றி எனக்கு தெரியாது இருந்தாலும் தமிழர்களுக்கு[ஈழ] முற்று புள்ளிவைக்கும் இந்த காலத்தில் உங்களைப் போன்றோர்களால் நம் தமிழர்களுக்கு இன்னும் பல புத்தகங்கள் வெளியீட்டு இன்னும் பல படைப்பாளிகள் உருவாக வேண்டும் என்பது எனது அவா

பல படைப்பாளிகள் இடம்பெயர்ந்தாலும் உலகில் எங்கோ ஒரு மூலையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் அதுவே போதுமாகவுள்ளது

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.