Jump to content

யாழ் உறவு இளங்கவியின் கவிதை நூல் வெளிவந்து விட்டது.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இளங்கவிஞனின் கவிதை நூலை லண்டனில் எங்கு வாங்கலாம்? வெளியீட்டுக்கு ஒத்துழைத்தவர்கள் தொடர்ந்தும் இம்மாதிரியான முயற்சிகளைச் செய்ய நாம் எல்லோரும் ஒத்துழைக்கவேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துகள் இளங்கவி.

உங்களுடன் தனிமடலில் தொடர்பு கொள்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கனடாவில் இளங்கவிஞனின் கவிதை நூலை எங்கு வாங்கலாம்? வாழ்துக்கள் இளங்கவி.

Link to comment
Share on other sites

உங்களது முதல் கவிதை நூல் வெளிவருவது மிக்க மகிழ்ச்சி இளங்கவி.

உங்களுடைய கவிதைகளுக்கு கருத்துக்களையோ அல்லது பின்னூட்டங்களையோ நான் பதிவு செய்யவில்லை.

ஆனால் பல கவிதைகளை படித்து உங்கள் ஆளுமையை உணர்ந்திருக்கின்றேன். எங்கள் இனத்திற்கு நிறைந்த படைப்பாளிகள் தேவை.

பெரும்பாலானோர் வெறும் பார்வையாளர்களாகவே மட்டும் இருக்கிறார்கள்.

ஒவ்வொரு தமிழனின் மனதிலும் பல ஆயிரம் படைப்புகளுக்கான கதைகளும் கருக்களும் புதைந்து கிடக்கிறது. அவற்றை வெளிக்கொண்டு வரவேண்டியது அவர்களின் பொறுப்பு.

அதற்கு பெரிதும் உதவியாகவும். இணையத்தில் ஓர் இலக்கியப் பாலமாகவும் வடலி பதிப்பகம் இருக்கிறது. த.அகிலன், சயந்தன் இருவருக்கும் எனது மனம் நிறைந்த பாராட்டுக்கள்.

உங்கள் வளர்ச்சியில் ஒர் அணிலாய் நானும் இருப்பேன்.

மனமார்ந்த வாழ்த்துக்கள் இளங்கவி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அனத்து யாழ் உறவுகளுக்கும்....

எனது கவிதை வெளியீட்டையிட்டு வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள் தெரிவித்துக்கொண்டிருக்கும் அனைத்து யாழ்கள உறவுகளுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். எனது புத்தகம் வாங்குவது சம்மந்தமாக கேட்ட அனைவருக்கும் தனிமடல் அனுப்பியிருக்கிறேன், இந்த விடயம் சம்மந்தமாக ஏதாவது சந்தேகங்களிருக்குமிடத்து என்னை தனி மடலில் தொடர்புகொண்டு கேட்கலாம்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாழ்த்துக்கள் இளங்கவி..!உங்களுடைய யாழ்இணையகவிதைகளை வாசித்து ரசித்தவன்நான்.அவை இப்போது புத்தகமாக

வெளிவருவது மகிழ்ச்சி!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்கள் பாராட்டையிட்டு மிக்க மகிழ்ச்சியடைகிறேன்....

உங்களைப் போன்றோரின் ஆதரவால் தான் இன்று இந்தப் புத்தகம் வெளியிடுமளவுக்கு துணிச்சல் வந்தது.... எதிர்காலத்திலும் எனது பொருளாதார நிலமை இடமளிக்கும் பட்சத்தில் நிச்சயம் பல ஆக்கங்களைத்தர முயற்சிப்பேன்...

வல்வைசகாரா அக்கா ஒரு இடத்தில் சொல்லியிருந்தா... எங்களைப் போன்ற கலைஞர்களுக்கு பொருளாதாரம் தான் மிகவும் முட்டுக்கட்டை, அதை நான் உணர்ந்துகொண்டிருக்கிறேன்.....

அத்துடன் இதுவரை எனக்கு வாழ்த்துச் சொன்னோரின் கருத்துக்களுக்கு தனித்தனியாக கருத்துச்சொல்ல முடியாதளவுக்கு வேலைப்பழு இருந்தது.. இனி தனித்தனியாக கருத்துச்சொல்ல முயற்சிக்கிறேன்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாழ்துக்கள் அண்ணா,,

உங்களின் புத்தகத்தை நானும் வாங்குவேன் அண்ணா..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ரவுடிக்கு....

மிக்க நன்றிகள் உங்களுக்கும், உங்களைப் போன்ற ஏனைய உறவுகளுக்கும்.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Jil

உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றிகள்.....

Link to comment
Share on other sites

நல்வாழ்த்துக்கள் இளங்கவி, பிரித்தானியாவில் எங்கு வாங்கலாம் என்று அறியத்தரவும்.

பொதுவாக உங்கள் கவிதைகள் ஈழத்தமிழரின் இன்றைய நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதால், நீங்கள் வேற்று மொழிகளிலும் மொழி பெயர்த்தால் எதிர்காலத்தில் எம் இளம் சந்ததியினருக்கும், வேற்று இனத்தவருக்கும் எமினம் கண்ட அவலநிலையை அவர்களும் புரிந்தது கொள்ள ஒரு பதிவேடாக அமையும் என்பது எனது தாழ்மையான கருத்தும், எதிர்பார்ப்பும் கூட.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குட்டிக்கு

முதலில் உங்கள் வாழ்த்துக்கு என் நன்றிகள்...

அத்துடன் நீங்கள் சொன்ன என் கவிதைகளை மொழிபெயர்க்கும் முயற்ச்சியிலும் நிச்சயம் இறங்குவேன்...

அத்துடன் என் கவிதைகளை எங்கே லண்டனில் வாங்கலாம் என்ற விபரத்தை தனிமடலில் உங்கலுக்கு அறிவிக்கிறேன்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இளங்கவி அவர்களுக்கு,

உங்கள் கவிதைகள் ஙாலாக வெளிவந்தது மிக்க மகிழ்ச்சி.

நன்றியுடன் எனது வாழ்த்துகளை தெரவிக்கிறேன்

Link to comment
Share on other sites

வணக்கம் இளங்கவி!!!

தாமதமாக உங்கள் அற்புத படைப்புக்களின் வெளியீட்டிற்கு வாழ்த்துச்

சொல்வதற்கு முதலில் மன்னித்துக் கொள்ளுங்கள்

உங்கள் கவிதைகளைப் படிக்கும் போது ஏற்படும் வலி தனியானது

அதே போல் உங்கள் கவிகளை தாங்கி வந்திருக்கும் அந்த வலி நிறைந்த

புத்தகத்தின் அட்டைப் படத்தைப் பார்க்கும் போது நெஞ்சில் இன்னும் வலி அதிகமாகிறது......

உங்களின் இந்த முயற்சியை பாராட்டாமல் இருக்க முடியவில்லை......

இதயம் நிறைந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.............

தொடர்ந்து எழுதுங்கள்............

உங்கள் வலி தரும் அந்த அற்புத வரிகளை கொண்ட கவிதைகளை படிக்க எப்போதும் ஆவலுடனேயே எதிர் பார்த்து காத்திருக்கிறோம்!!!!!!!

உங்களின் பணி இன்னும் இன்னும் தடை இன்றி தொடர கல்லாய் போன கடவுளிடம்

மன்றாடுகிறோம்;

அன்புடன்

தமிழ்மாறன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பென்மன்

உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி....

உங்களைப் போன்றோரின் ஆதரவுதான் இந்த முயற்சிக்கு வித்திட்டது....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ்மாறனுக்கு

தமிழரின் அடிமை வாழ்வு பல காலமாகத் தொடர்ந்துகொண்டிருந்தும் அதற்கெதிராக எங்கள் போராட்டம் நடந்துகொண்டிருந்த காலப் பகுதியில் கடந்த வருடம் கவிதை எழுதத் தொடங்கிய போது தமிழீழக்காதல் உணர்வுகள் களக்காதல் உட்பட, மற்றும் பழைய ஞாபகங்கள், எங்கள் வீரம் இது போன்ற பல உணர்வுகளை எழுதிய வரிகள் தான் 'என் கல்லறைச் சினேகிதியே' என்ற கவிதையையும் எழுதினேன்... அதில் களத்தில் மரணித்திருந்த ஓர் பெண்புலியின் கல்லறையில் அவளின் காதலனான ஓர் புலிவீரன் சொல்லும் கவிதையாகவே அதை எழுதியிருந்தேன், அந்தக் கவிதையின் தலைப்பையே எனது தொகுப்புக்கு வைத்திருந்தேன்...

ஆனால் சமீபத்தில் நடத்தப்பட்ட இந்தப் படுபயங்கர இனப் படுகொலைகளால் எனது அனைத்து உணர்வுகளும் மழுங்கடிக்கப்பட்டு சோகமென்னும் உணர்வே மேலோங்கி நிற்கிறது, அதன் பிரதிபிலிப்பே எனது வரிகளிலும் தெரிய அது உங்கள் மனங்களையும் பாதிக்கிறது....

மேலும் உங்களின் பாராட்டும், வாழ்த்துக்களுமே என் போன்ற கலைஞர்களுக்கு விலை மதிப்பற்ற பரிசுகள்...

உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றிகள்.....

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஹிந்தி மொழிக்கு எதிராக‌ போராடி ஆட்சிய‌ பிடித்த‌ திராவிட‌ம் உத‌ய‌நிதியின் ம‌க‌ன் எந்த‌ நாட்டில் ப‌டித்து முடிந்து விட்டு த‌மிழ் நாடு வ‌ந்தார்..................ஏன் உற‌வே புல‌ம்பெய‌ர் நாட்டில் த‌ங்க‌ட‌ பிள்ளைக‌ள் ஆங்கில‌த்தில் க‌தைப்ப‌து பெருமை என்று நினைக்கும் ப‌ல‌ர் இருக்கின‌ம் யாழில் இனி ப‌ழைய‌ திரிக‌ளை தேடி பார்த்தா தெரொயும்...............நான் நினைக்கிறேன் சீமானின் ம‌க‌னுக்கு த‌மிழ் க‌தைக்க‌ தெரியும்.................இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ர் ம‌ற்றும் அவ‌ரின் ம‌க‌ன் உத‌ய‌நிதி இவ‌ர்களுக்கு ஒழுங்காய் த‌மிழே வாசிக்க‌ தெரியாது.........ச‌ரி முத‌ல‌மைச்ச‌ர் ஜ‌யாவுக்கு வ‌ய‌தாகி விட்ட‌து ஏதோ த‌டுமாறுகிறார் வாசிக்கும் போது உத‌ய‌நிதி அவ‌ரின் அப்பாவை விட‌ த‌மிழின் ஒழுங்காய் வாசிக்க‌ முடிவ‌தில்லையே உற‌வே...............சீமானின் ம‌க‌ன் மேடை ஏறி த‌மிழில் பேசும் கால‌ம் வ‌ரும் அப்போது விவாதிப்போம் இதை ப‌ற்றி.............என‌து ந‌ண்ப‌ன் கூட‌ அவ‌னின் இர‌ண்டு ம‌க‌ன்க‌ளை காசு க‌ட்டி தான் ப‌டிப்ப‌க்கிறார்............அது சில‌ரின் பெற்றோர் எடுக்கும் முடிவு அதில் நாம் மூக்கை நுழைத்து அவ‌மான‌ ப‌டுவ‌திலும் பார்க்க‌ பேசாம‌ இருக்க‌லாம்............ஒரு முறை த‌மிழ் நாட்டை ஆளும் வாய்ப்பு சீமானுக்கு கிடைச்சா அவ‌ர் சொன்ன‌ எல்லாத்தையும் செய்ய‌ த‌வ‌றினால் விம‌ர்சிக்க‌லாம் ஒரு தொகுதியிலும் இதுவ‌ரை வெல்லாத‌ ஒருவ‌ரை வ‌சை பாடுவ‌து அழ‌க‌ல்ல‌ உற‌வே........................
    • உந்தாள் முந்தியும் ஒருக்கால் கம்பி எண்ணினதெல்லோ? 
    • “அந்த மக்களிடம் அற்ப விலைக்கு வாங்கி, புலம் பெயர் மக்களிடம் அறாவிலைக்கு விற்கும் கந்துவட்டி வகை வியாபாரிகளை” இதனை எந்த அடிப்படையில் கூறுகிறீர்கள்? உதாரணமாக ஓர் பொருளின் சிறீலங்கா v பிரித்தானிய விலையை கூறுங்கள். எனக்கு தெரிந்தவர்களிடம் அதனை விசாரித்து கூறுகிறேன்.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.