Jump to content

தனிமையின் தலைஎழுத்து


Recommended Posts

http://www.youtube.com/watch?v=encZArh2wrY&NR=1

வாழ்க்கை இருளுக்குள் அடங்கி பரிதவித்து மடிகின்றது

எங்கள் அவலக்குரல்கள் உலக ஜனநாயகத்துள் அமைதியாகின்றது

வல்லவர்கள் வெல்வார்கள் என்பது இயல்பாகின்றது

மனிதாபிமானம் வேடிக்கை பார்க்கின்றது

வல்லரசுகளின் போட்டி இயந்திரத்தால் நாம் விழுங்கப்பட்டோம்

இயந்திரத்தின் செமித்த கழிவுகளாய் எஞ்சி நிற்கின்றோம்

கழிவுகளையும் மீள இரையாக்கும் புதிய உலக ஒழுங்கின் முன்னால்

மண்டியிட்டு மெளனித்து நிற்கின்றோம்

என்னை சாதி சொல்லி உதைத்த கால்களை இறுக்கப்பற்றிக்கொள்கின்றே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உணர்வை உங்களுடன் பகிர்கிறேன். நம்படைத்த பரம்பொருளுக்கு நம் நிலையயையும் சமர்ப்பிப்போம்.

பென்மன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களின் உணர்வு வரிகள் தான் அத்தனை உண்மையான ஈழத் தமிழ் மக்களுக்கும் உண்டு ....உங்களின் உள்ளத்து வலிகளை

....காட்டும பதிவு உண்மையானது .பதிவுக்கு நன்றி .

Link to comment
Share on other sites

சுகன் இதென்ன வெளையாட்டு ஆதி கிலீரிட்டுப்போனன்.

ஒரே ஒரு முறை ஒன்றாக

இந்த உலகின் மனிதாபிமான ஜனநாயக முகங்களில்

காறித் துப்பி விட்டு இந்த வாழ்வு முடிந்து போகட்டும்

எங்கள் சின்னஞ் சிறுசுகள் சிதறிச் செத்த வேளைகளை நினைவுகூர்ந்து

இதையாவது செய்து விடுவோம் என்ற இறுதி ஆசையும்

நிறைவேறாமல் வாழ்வின் முடிவு நோக்கி நடக்கின்றேன்

அருமையான படைப்பு, வாழ்த்துகள் , பாராட்டுகள் என்று வார்த்தைகாளல் வர்ணிக்க முடியாத அளவுக்கு உணர்வு வலியடைந்து விட்டது சுகன்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.