Jump to content

தேரை இழு.! இறுகப்பிடி வடக்கயிற்றை..!!!


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தேரை இழு.! இறுகப்பிடி வடக்கயிற்றை..!!!

___________________________________________________ -வல்வைக்கடல்-

இழு தேரை..

இறுகப்பிடி வடக்கயிற்றை.

பக்கத்துச் சுரிதார் பார்வைபட

இன்னும் செய்! பார்த்து இளி!!

முள்ளிவாய்க்காலில் அந்த இறுதிநாட்களில் உன்

உறவுகள் விட்டகண்ணீரும் குருதியும் இன்னும்

காயவில்லை...பரவாயில்லை..புலத்த

ு தெருக்களில் தேர் இழு!

உன் தாயை தந்தையை உறவுகளை காப்பாற்றாமல்

கைவிட்டது சர்வதேசத்து குரங்குகள் மட்டுமல்ல..- உன்

அப்பனும் ஆத்தையும் அழுதுகும்பிட்ட சாமிகளும்தான்...

ஆற்றாது அழுதுதொழுத கண்ணீரை தேற்றாமல்விட்ட

தெய்வங்ளை தேரில் வைத்திழுத்து களிப்படை.!

இழடா தேரை..இறுக்கிக்கட்டு கச்சையை-கவனம்

அவிழ்ந்து விடும். சங்கிலிதெரியும் நெஞ்சை நிமிர்த்து..-வழியில்

சிங்களவன் வந்தால் தலையை குனி.-அவன்

துப்பினாலும் துப்புவான்...

உன் பக்கத்துவளவில் வந்திறங்கிச்

சிங்களவன் பந்தல்நாட்டுகிறான்- அதனாலென்ன

நீ இங்கு தேருக்குவரும் பெருமக்களுக்கு

பந்தலிட்டு மோர் ஊற்றி உவகையுறு!

உன் பரம்பரைப+மியை லாலாதேசத்து

குரங்குகள் தலைமுறை கூறுபோடுது- பார்த்துக்கொண்டே

நீ இங்கு வெள்ளையனின் வீதியிலே தேர்இழுத்து

வேர்க்க வியர்க்க அன்னதானம் போடுகிறாய்.

நல்ல களப்பணிதான்.போ இன்னும் செய்.

உனக்காகச் செத்த மடையர்களை இன்னுமொருமுறை

போட்டுத் தள்ளவேணும்.- உன்னைப்போல்

தேர்இழுக்கத் தெரியாமல்

பேரினத்து படைகளுடன் சமராடிப் போய்

இறந்ததற்காய்.....

Link to comment
Share on other sites

அட நானும் தேரை இழுக்க கச்சையை இறுக்கிக் கட்டிக்கொண்டு ஓடியாந்தன் இப்பிடி ஏமாத்திட்டியளே வல்வைக் கடல். :(

Link to comment
Share on other sites

உன்

அப்பனும் ஆத்தையும் அழுதுகும்பிட்ட சாமிகளும்தான்...

உயிரைக் காப்பாற்று என்று கதறியவனுக்கு கால் போனது. அவன் தலையோடு வந்தது தலப்பாகையோடு போனதென நேத்திக்கடனை நிறைவேற்றக் காத்திருக்கின்றான். உயிருக்காக மன்றாடி செத்தவர்கள் கடவுளை வெறுக்கப்போவதில்லை. அவர்கள் செத்துவிட்டார்கள். தப்பியவர்கள் தேரிழுத்துக்கொண்டே இருப்பார்கள் காரணம் அவர்கள் கடவுளால் காப்பாற்றப்பட்டவர்கள். இறக்கும் வரை சம்பவங்கள் சிந்தனைக்கு அப்பால் கடவுளுடன் முடிந்து வைக்கப்பட்டுள்ளது.

எண்பதுகளில் ஒரு ஓவியம் வந்தது. அதில் இரண்டு சிங்களச் சிப்பாய்கள் புத்தரை துப்பாக்கியால் சுடுகின்றார்கள். அடுத்தவன் ஏன் என்று கேட்கின்றான். அதற்கு அவர்கள் இவனை கொல்லாவிட்டால் ஒரு ஈ காக்காயை கூட சுட முடியாது பின் தமிழனை எங்கே சுடுவது என்று கேட்டான். அவனே இன்று ஆதிகாரம் மிக்கவன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆதிவாசி....சுகன்...காந்தன் .....ஆக்கம் படித்து ஊக்கம் தந்ததற்கு மிக்க நன்றிகள்!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

valvai kadal

எங்கள் கலை,கலாச்சார, மற்றும் சமய வழிபாடுகள் முக்கியம் தான் ஆனால் போகும் நிலையில் எங்கள் மொத்த இனமே அழியும் அபாயத்திலிருக்கும் போது எந்தவொரு போராட்டத்திலும் பங்கெடுக்காமல் கோவில் திருவிழாக்களிலும் மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகளிலும் மட்டுமே பங்குபற்றும் மக்களைப் பார்த்தால் தான் வேதனையாக இருக்கிறது.....

உங்கள் இந்த வரிகள் மனதைத் தைத்தவை......

தேரை இழு.! இறுகப்பிடி வடக்கயிற்றை..!!!

___________________________________________________ -வல்வைக்கடல்-

உனக்காகச் செத்த மடையர்களை இன்னுமொருமுறை

போட்டுத் தள்ளவேணும்.- உன்னைப்போல்

தேர்இழுக்கத் தெரியாமல்

பேரினத்து படைகளுடன் சமராடிப் போய்

இறந்ததற்காய்.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வல்வைக்கடல்,

எவ்வளவு தான் நாம் தொண்டை கிளியக் கத்திச் சொன்னலும் நம்மவர் காதுகளுக்கு. பெரியவர்கள் சொல்வார்களே.....விளலுக்கு இறைத்த நீர் எண்டு...அது தான்...ஆனாலும் எல்லா மக்களும் அப்படி எண்டு இல்லை.

நீ இங்கு வெள்ளையனின் வீதியிலே தேர்இழுத்து

வேர்க்க வியர்க்க அன்னதானம் போடுகிறாய்.

கேட்டால் சொல்கிறாய் நேர்த்திக்கடன்.நம் நாட்டில் பசியால் சாகிறார்கள்..இங்கு மக்கள் குப்பைக்குள் கொட்டும் உணவில் கால் கவளம் போதும் அவர்களின் பசியை ஆற்றுவதற்கு.தமிழா இனிமேலாவது திருந்துவாயா....?

யாயினி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தேர் இழுத்த கவிதைபடித்து கருத்துக்கள் மற்றும் ஊட்டங்கள் எழுதிய எல்லாருக்கும் நன்றிகள்!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வல்வைக்கடல் எனக்குப் பரிச்சயமானது. பிறப்பிலிருந்து இனி எப்போதோ நான் காணப்போகும் இறப்புவரை தொடரப் போகும் பந்தம் வல்வைக்கடல்.

வல்வைக்கடல் உங்கள் குமுறலும் கொந்தளிப்பும் இங்கு நீங்கள் சாடும் கூட்டத்திற்குப் புரியுமா? நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக முறுவலுடன் கொழுவிருக்கும் தெய்வத்திற்குத்(?) தெரியுமா? மனமது லிங்கமாகும் நேசமே நெய்யும் பாலும் என்று பட்டினத்தார் என்றோ பாடியும் என் பயன்? தெய்வத்தை நிந்திப்பது என் நோக்கமல்ல. தெய்வம் என்பது யாது? தெய்வத்தை விழுந்து விழுந்து கும்பிட்டு தேரிழுத்துத் திருவிழாக்கள் நடாத்தி நேர்த்திகளை நிறைவேற்றினால் நாம் நினைக்கின்ற அனைத்தையும் அடைய முடியுமா?

மகாபாரதக்கதையில் துரியோதனன் சபையில் திரௌபதியை துச்சாதனன் துகிலிரியத் தொடங்குகிறான். திரௌபதி ஒற்றைக் கையால் சேலையை இறுகப்பற்றியபடி மானத்தைக் காக்கப் போராடியபடி காப்பாற்றக் கண்ணனைஜஅழைக்கிறாள். காக்கும் கடவுள் கண்ணன் வரவில்லையாம். ஆடையைக் கைவிட்டு இரண்டு கைகளையும் தூக்கிக் கண்ணனைக் கூப்பிட்டு கும்பிட்டபோது அவள் மானம் காப்பாற்றப்பட்டதாம் என்று இந்த இதிகாசப் புனைவு....... இந்த தேரிழுக்கும் கூட்டத்திடம் ஒரு கேள்வி..... இந்த முள்ளிவாய்க்கால் பகுதியில் ஒரேயடியாக மரணத்திற்குள் புதையுண்டு போன சனத்தில் எவருமே கடவுளை காப்பாற்ற அழைக்கவில்லையா? அல்லது கடவுளுக்குக் கண்ணில்லாமல் போய்விட்டதா? இப்போதும் வதைமுகாம்களுக்குள் முடக்கிவைத்து சித்ரவதைக்களுக்கு உள்ளாக்கப்படும் மக்கள் தெய்வத்தை நாடுவதில்லையா? அல்லது கடவுளே காக்கும் சக்தியற்று கையாலாகாத நிலையில் உள்ளது என்று கைவிட்டுவிட்டார்களா?

வல்வைக்கடல் நாங்கள் மிகப்பெரிய தவறுகளை கடந்த காலத்தில் செய்துவிட்டோம் தெரிந்தோ தெரியாமலோ தேசியம் என்பதை கேளிக்கைகள் வாயிலாகவே புலம் பெயர் மக்களிடம் கொண்டு சென்ற தவறு எங்களுடையது. நாட்டில் இலட்சக்கணக்கான மக்கள் மிகக் கீழ்தரமாக ஒடுக்கப்பட்டிருக்கும் இத்தருணத்தில் புலமபெயர் உறவுகள் கேளிக்கை நிகழ்வுகளை நிகழ்த்தக் குதூகலிக்க எத்தனையோ விதமான முன்னெடுப்புகளைச் செய்து வருகிறார்கள். இப்போது தேவையா என்று கேட்டால் தாம் இயந்திர வாழ்க்கையில் உள்ளோம் எங்களுக்கும் ரிலாக்ஸ் வேண்டும் என்று ஞாயப்படுத்துகிறார்கள்(?)

இங்கு கனடாவில் ஒரு கோயில் ஸ்தாபகர் இந்த ஆலயத்திற்குச் செல்பவர்கள் அனைவரிட்மும் ஒரு வேண்டு கோளை முன்வைக்கிறார் இந்த ராஜ கோபுரத்தைக் கட்டி முடியுங்கள் தமிழீழம் மலரும்??????? அந்தக் கோயிலின் ராஜகோபுரம் கட்டும் வரை எதுவுமே நடக்காதாம். இந்தத் தேரிழுக்கும் கூட்டத்தை இந்த ராஜ கோபுரத்தைக் கட்டிவிடச் சொல்லுங்கள் தாயகத்தில் தமிழர் தன்னாட்சியுடன் பெருவாழ்வுபெறும் வரத்தை அந்தக் கடவுள் தந்துவிடுவார்.!!!!!! பின்னர் எல்லோரும் மகிழ்ச்சியாக தாயகத்திற்குச் சுற்றுலாப் பயணத்தை மேற்கொண்டு எங்களை ரிலாக்ஸ் ஆக்கலாம்.

பட்டும், பொன்னும் பவுசும் காட்டவே கோயிலுக்குச் செல்லும் கூட்டத்திடம் உங்கள் கவிதை எடுபடுமா வல்வைக்கடல்? எல்லாம் எருமை மாட்டில் மழை பெய்த கதைதான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கருத்துக்கள் எழுதிய உள்ளங்கள் அனைத்துக்கும் நன்றிகள்.நீங்களும் மிகவும் கனமாகவும் அழகாகவும் எழுதிவருகிறீர்கள்.தொடரட்டும

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தேரை இழு.! இறுகப்பிடி வடக்கயிற்றை..!!!

கவிதைத் தலைப்பு அழகு.

நிஜங்கள்.......... ஆவேசமாய் கவிதையில் பட்டுத் தெளிக்கிறது.

நீ இங்கு வெள்ளையனின் வீதியிலே தேர்இழுத்து

வேர்க்க வியர்க்க அன்னதானம் போடுகிறாய்.

நல்ல களப்பணிதான்.போ இன்னும் செய்.

இப்போதும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.