Jump to content

Please Sign in here


Recommended Posts

வன்னி தடுப்பு முகாம்களை திறந்துவிடு: அனைத்துலக மன்னிப்புச் சபை பிரசாரம்

வன்னியில் தடுப்பு முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள மக்களை விடுவிக்கக்கோரும் பிரசாரம் ஒன்றினை அனைத்துலக மன்னிப்புச் சபை தனது உறுப்பினர்கள் மத்தியில் மேற்கொண்டுள்ளது. 'முகாம்களைத் திறந்துவிடு' என்ற இந்தப் பிரசாரத்தை சபையின் பொதுச்செயலாளர் இரானி கான், சபையின் அனைத்துலகப் பிரதிநிதிகள் மத்தியில் தொடங்கியுள்ளார்.

துருக்கியில் நடைபெற்று வரும் மன்னிப்புச் சபையின் அனைத்துலகப் பிரதிநிதிகள் கூட்டத்திலேயே இந்தப் பிரசாரம் முன்னெடுக்கப்படுகின்றது.

'முகாம்களைத் திறந்துவிடு' பிரசாரத்தின் ஒரு பகுதியாக சிறிலங்கா மற்றும் இந்திய அரசுகளுக்கான கோரிக்கைகள் அடங்கிய காணொலி ஒன்று 'பேஸ்புக்' சமூக வலைத் தளத்தில் அனைத்துலக மன்னிப்புச் சபையால் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

மக்களின் சுதந்திரமான நடமாட்டத்தை சிறிலங்கா அரசு அனுமதிக்க வேண்டும் என்றும் -

சிறிலங்கா அரசு கோரும் உதவிகளை இந்திய அரசு கண்காணிப்பதுடன், இடம்பெயர்ந்த மக்கள் தங்கியுள்ள முகாம்களின் நிர்வாகத்தை படையினரிடம் இருந்து பொது அதிகாரிகளின் கைகளுக்கு உடனடியாக மாற்றுமாறு சிறிலங்கா அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் -

அந்த காணொலியில் கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.

இலங்கையின் வடக்கு-கிழக்குப் பகுதிகளில் நடைபெற்ற போர் காரணமாக இடம்பெயர்ந்து தற்போது முகாம்களில் உள்ள மக்களுக்கு நடமாடும் சுதந்திரம் உள்ளிட்ட அடிப்படை மனித உரிமைகள் மறுக்கப்படுகின்றன என்றும் குற்றம் சாட்டியுள்ளது அனைத்துலக மன்னிப்புச் சபை.

இது தொடர்பாக மன்னிப்புச் சபை விடுத்துள்ள அறிக்கையின் விபரம் வருமாறு:

போர் முடிவடைந்து இரு மாதங்கள் கடந்துவிட்டபோதும், புதிதாக இடம்பெயர்ந்தவர்களின் தேவைகளை அதிகாரிகள் இன்னும் சரியாகக் கவனிக்கவில்லை. முகாம்களில் அளவுக்கு மீறிய கூட்டநெரிசல் காணப்படுவதுடன் அவை சுகாதாரமற்றவையாகவும் காணப்படுகின்றன.

அதற்கும் மேலாக இவை அனைத்தும் செயற்பாட்டு ரீதியாகத் தடுப்பு முகாம்கள். தரைப்படையினராலேயே அவை நடத்தப்படுகின்றன. அங்கு இருந்து மக்கள் வெளியே செல்வது தடுக்கப்பட்டுள்ளது. அவர்களின் அடிப்படை சட்டப் பாதுகாப்புக்கூட தடைசெய்யப்பட்டுள்ளது.

எவ்வளவு காலத்துக்கு என்று தெரியாமலேயே குழந்தைகள் முதியவர்கள் உள்ளிட்ட மொத்தக் குடும்பத்தையும் அடைத்து வைத்திருப்பதற்கு அரசு கூறும், வடிகட்டும் சோதனைகளுக்காக அவர்களை தடுத்து வைத்திருக்க வேண்டியுள்ளது என்ற காரணம் நியாயமானது அல்ல.

இடம்பெயர்ந்த மக்கள் உதவிப் பணியாளர்களுடன் பேசுவதற்குக்கூடத் தடை விதிக்கப்பட்டுள்ளது. எந்த சுயாதீன கண்காணிப்பாளரும் கட்டுப்பாடு இன்றி முகாம்களுக்குச் சென்றுவர அனுமதிக்கப்படாத நிலையில் அங்குள்ள மக்கள் பெரும்பான்மையோர் பாதுகாப்பற்ற நிலையிலேயே உள்ளார்கள். காணாமல் போதல், கடத்தல், மனம்போன போக்கிலான கைது மற்றும் பாலியல் வன்கொடுமை போன்ற ஆபத்துக்களையும் அவர்கள் எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

மக்களை மனம்போன போக்கில், கட்டாயப்படுத்தி அடைத்து வைக்கும் தனது கொள்கையை சிறிலங்கா அரசு முடிவுக்கு கொண்டுவரவேண்டும் என்று அனைத்துலக மன்னிப்புச் சபை கேட்கிறது.

இத்தகைய தற்காலிக தங்கும் இடங்கள் தமக்குத் தேவை எனக் கருதும் மக்களை கட்டுப்பாடு இன்றி முகாம்களுக்கு வந்து செல்வதற்கு சிறிலங்கா அரசு அனுமதிக்க வேண்டும்.

அனைத்துலக சமூகத்தின் உதவி மற்றும் ஆதரவுடனும் இடம்பெயர்ந்த மக்களின் ஒத்துழைப்புடனும், முகாம்களில் உள்ள மக்கள் பாதுகாப்பாக தமது வீடுகளுக்குத் திரும்பிச் செல்வதற்கான தெளிவான இலக்கையும் காலப்பகுதியையும் சிறிலங்கா அரசு கண்டிப்பாக ஏற்படுத்த வேண்டும்.

இல்லையேல் இப்போது இருக்கும் நிலையிலும் பார்க்க மேம்பட்டதான, சொந்த இடங்களைவிட்டு வேறு இடங்களில் குடியமர்த்துதல் போன்ற மாற்றுத் திட்டங்களையாவது முடிந்தளவு விரைவில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளி இணைப்பு: http://apps.facebook.com/aicrisisapp/sites/aiis-en

Puthinam

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.