Jump to content

ஆட்காட்டி குருவியின் கண்ணீர் கவிதையாகின்றது: நிழலி


Recommended Posts

வேதனை சுமக்கும் இரவுகளில் இருந்து

ஒரு சொட்டு

கண்ணீர்

கவிதையாகின்றது

கேட்கின்றதா உங்களுக்கு

வயல் வெளி தோறும்

என் தலைவனின்

காலடிச் சுவடு தேடி

ஆட்காட்டி குருவி பாடும் பாட்டு

கேட்கின்றதா உங்களுக்கு?

தன் தலையை மண்ணில்

மோதி அலறி

அழுகின்றது

அது

முழுச் சிறகும் உதிர்த்து

ஒற்றைக் காலில்

தவம் இருக்கின்றது

அதன் அலறல் கேட்கின்றதா

உங்களுக்கு

அதன் குரலில்

இந்த யுகத்தின் அலறல்

இருக்கின்றது

குருவியின் தனிமையில்

காலம் உறைகின்றது

உறைந்த காலத்தில்

நாம் சிதைவுற்றிருந்தோம்

ஆட்காட்டி குருவி கூட

காட்ட ஆளின்றி

ஊர் முழுதும்

சுற்றி வந்து

அழுகின்றதாம்

அது முன்னர்

வீரர்களின் கல்லறையில்

இருந்து பாடி

தூங்க வைத்தது

மூத்த மகனை போருக்கு

இழந்த தாயின் அருகிருந்து

கண்ணீர் துடைத்து

ஆறுதல் கொடுத்தது

வீட்டின் முகப்பில்

இருந்து ஊரை தூங்க

வைக்க தாலாட்டும்

பாடியிருந்தது

இன்று ஆட்காட்ட அதுக்கு

தோழர் இல்லை

இளைப்பாற

போராளியின் தோளில்லை

பறந்து பாட்டுப் பாட

வான் வெளி

இல்லை

புரண்டு சாக

ஒரு மண் கூட இல்லை

ஏன் இப்படி ஆனது

என்று சொல்ல

யாருமில்லை அதுக்கு

ஆட்காட்டி

யாருமற்ற தனிமையில்

வெளிகள் தோறும்

கண்ணீரை எழுதிச் செல்கின்றது

ஆட்காட்டியின்

வேதனை சுமக்கும் இரவுகளில் இருந்து

ஒரு சொட்டு

கண்ணீர்

கவிதையாகின்றது

: நிழலி: 12-Aug-2009

இரவு: 10:25

Link to comment
Share on other sites

வயல் வெளி தோறும்

என் தலைவனின்

காலடிச் சுவடு தேடி

ஆட்காட்டி குருவி பாடும் பாட்டு

கேட்கின்றதா உங்களுக்கு?

தன் தலையை மண்ணில்

மோதி அலறி

அழுகின்றது

: நிழலி: 12-Aug-2009

இரவு: 10:25

ஆட்காட்டி மட்டுமில்லை நாங்களும் தான் அழுகின்றோம், எங்களின் தலைவனின் காலடி சுவடு தேடி... :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பறந்து பாட்டுப் பாட

வான் வெளி

இல்லை

புரண்டு சாக

ஒரு மண் கூட இல்லை

எங்கள் கனவுகள் பொய்த்த நிலையும் இதுதான்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆட்காட்டி குருவி கூட

காட்ட ஆளின்றி

ஊர் முழுதும்

சுற்றி வந்து

அழுகின்றதாம்

நிழலியின் கவிதை மிகநன்றாக இருக்கிறது.ஆட்காட்டிக்குருவ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

...................... :) :)

கவிதை மிகநன்றாக இருக்கிறது.ஆட்காட்டிக்

குருவியின் சோகம் எங்கள் எல்லோருடையதுமாகும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆட்காட்டியின் இடத்தில் ஈழத்தமிழர்களை வைத்து பாருங்கள் அது தான் இன்றைய வாழ்க்கை

.மாறாத சோகமும் தீராத கவலையும். நன்றி உங்கள் பதிவுக்கு நிழலி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிழலி உங்களின் கவிதை மிகவும் நன்றாக உள்ளது....

ஐந்து அறிவு ஜீவனுக்கு உள்ள அறிவு கூட, எங்கள் இனத்தை குண்டு போட்டு அளித்தவனுக்கு இல்லாமல் போய்விட்டது.

தன் தலையை மண்ணில்

மோதி அலறி

அழுகின்றது

அது

முழுச் சிறகும் உதிர்த்து

ஒற்றைக் காலில்

தவம் இருக்கின்றது

என் மனதை மிகவும் தொட்டு சென்ற வரிகள் இவை...

யாயினி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நிழலிக்கு

ஆட்காட்டியின் சோகம் சொல்லப்பட்ட வரிகள் மிக அழகு.... வாழ்த்துக்கள்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த குரல் நல்லா இருக்கு.

இந்த குரலில் கவிதையை கேட்க சோகம் நெஞ்சை தொடுகிறது.

வாழ்த்துக்கள் நிழலிக்கும் அந்த குரலின் சொந்தக்காரிக்கும்.

நிழலி தொடர்ந்து இப்படி ஒலிவடிவிலேயே கவிதைகள் படைத்தால் கேட்க நல்லா இருக்கும் :blink::(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வேதனை சுமக்கும் இரவுகளில் இருந்து

ஒரு சொட்டு

கண்ணீர்

கவிதையாகின்றது

கேட்கின்றதா உங்களுக்கு

வயல் வெளி தோறும்

என் தலைவனின்

காலடிச் சுவடு தேடி

ஆட்காட்டி குருவி பாடும் பாட்டு

கேட்கின்றதா உங்களுக்கு?

தன் தலையை மண்ணில்

மோதி அலறி

அழுகின்றது

அது

முழுச் சிறகும் உதிர்த்து

ஒற்றைக் காலில்

தவம் இருக்கின்றது

அதன் அலறல் கேட்கின்றதா

உங்களுக்கு

அதன் குரலில்

இந்த யுகத்தின் அலறல்

இருக்கின்றது

குருவியின் தனிமையில்

காலம் உறைகின்றது

உறைந்த காலத்தில்

நாம் சிதைவுற்றிருந்தோம்

ஆட்காட்டி குருவி கூட

காட்ட ஆளின்றி

ஊர் முழுதும்

சுற்றி வந்து

அழுகின்றதாம்

அது முன்னர்

வீரர்களின் கல்லறையில்

இருந்து பாடி

தூங்க வைத்தது

மூத்த மகனை போருக்கு

இழந்த தாயின் அருகிருந்து

கண்ணீர் துடைத்து

ஆறுதல் கொடுத்தது

வீட்டின் முகப்பில்

இருந்து ஊரை தூங்க

வைக்க தாலாட்டும்

பாடியிருந்தது

இன்று ஆட்காட்ட அதுக்கு

தோழர் இல்லை

இளைப்பாற

போராளியின் தோளில்லை

பறந்து பாட்டுப் பாட

வான் வெளி

இல்லை

புரண்டு சாக

ஒரு மண் கூட இல்லை

ஏன் இப்படி ஆனது

என்று சொல்ல

யாருமில்லை அதுக்கு

ஆட்காட்டி

யாருமற்ற தனிமையில்

வெளிகள் தோறும்

கண்ணீரை எழுதிச் செல்கின்றது

ஆட்காட்டியின்

வேதனை சுமக்கும் இரவுகளில் இருந்து

ஒரு சொட்டு

கண்ணீர்

கவிதையாகின்றது

: நிழலி: 12-Aug-2009

இரவு: 10:25

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"எங்கள் உணர்வுகளை மொத்தமாக உள்வாங்கி அப்படியே உருக்கி வார்த்திருக்கின்றீர்கள் நிழலி அண்ணா

ஆனால் 'ஆட்காட்டி" என்ற சொல்லுத்தான் பிடிக்கேல்லை.

Link to comment
Share on other sites

நன்றி .. மிக நன்றி...இதனை நான் எதிர்பார்த்திருக்கவில்லை.... நன்றி சாந்தி

Link to comment
Share on other sites

"எங்கள் உணர்வுகளை மொத்தமாக உள்வாங்கி அப்படியே உருக்கி வார்த்திருக்கின்றீர்கள் நிழலி அண்ணா

ஆனால் 'ஆட்காட்டி" என்ற சொல்லுத்தான் பிடிக்கேல்லை.

சின்ன வயதில் இரவில் அப்பா அம்மாக்கு நடுவில் படுத்திருக்கும் போது வானத்தில் ஒரு குருவியின் இசை தூரத்தில் இருந்து கேட்கத்தொடங்கும்..மெல்ல மெல்ல கிட்ட வந்து வீட்டுக் கூரையின் விட்டத்தினை கடந்து மீண்டும் விலகிச்செல்லும்...அம்மா அது பற்றி கதைகள் சொல்வா. அப்பா அது பற்றி விளக்கம் சொல்லுவார். அதன் குரலே ஒரு இசை, அதன் பாடலே ஒரு சுகம். என்ன குருவி அம்மா எனக் கேட்டால், ஆட்காட்டி குருவி என்பா அம்மா. அதன் பெயரின் காரணம் என்னவெனத் தெரியாது...ஆனால் குரலில் இருக்கும் மென்சோகம் மனதை உருக்கும். அடிக்கடி வராது அது, வந்தாலும் பாடிச் செல்லாது. ஒரு முறை வந்து மறுமுறை வர சிறிது காலம் கடந்து போயிருக்கும். இடையில் வாழ்வில் சில மாறுதல்களும் அதனூடான அனுபவங்களும் வந்திருக்கும். அதன் மென் சோகம் அந்த கால இடைவெளியில் கரைந்து போயிருந்த துயரை தொட்டுச் செல்லும்

ஆட்காட்டி எனும் சொல்லு இன்று எம் மத்தியில் மிகக் கனமான துரோகச் சொல்லாக மாறிவிட்டதும் கூட எம் போராட்ட காலத்தின் மிகப் பெரிய சோகம் என்றுதான் சொல்லுவேன்.

ஊரில் இருக்கும் என் சித்தியிடம் கேட்டேன் ஆட்காட்டி குருவி இப்பவும் வாரதா என. இல்லையெனச் சொன்னா சித்தி...ஒருவேளை தனக்கிடப்பட்ட தமிழ் பெயரை நினைத்து இன்று மெளனமாகி விட்டதோ தெரியவில்லை..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சின்ன வயதில் இரவில் அப்பா அம்மாக்கு நடுவில் படுத்திருக்கும் போது வானத்தில் ஒரு குருவியின் இசை தூரத்தில் இருந்து கேட்கத்தொடங்கும்..மெல்ல மெல்ல கிட்ட வந்து வீட்டுக் கூரையின் விட்டத்தினை கடந்து மீண்டும் விலகிச்செல்லும்...அம்மா அது பற்றி கதைகள் சொல்வா. அப்பா அது பற்றி விளக்கம் சொல்லுவார். அதன் குரலே ஒரு இசை, அதன் பாடலே ஒரு சுகம். என்ன குருவி அம்மா எனக் கேட்டால், ஆட்காட்டி குருவி என்பா அம்மா. அதன் பெயரின் காரணம் என்னவெனத் தெரியாது...ஆனால் குரலில் இருக்கும் மென்சோகம் மனதை உருக்கும். அடிக்கடி வராது அது, வந்தாலும் பாடிச் செல்லாது. ஒரு முறை வந்து மறுமுறை வர சிறிது காலம் கடந்து போயிருக்கும். இடையில் வாழ்வில் சில மாறுதல்களும் அதனூடான அனுபவங்களும் வந்திருக்கும். அதன் மென் சோகம் அந்த கால இடைவெளியில் கரைந்து போயிருந்த துயரை தொட்டுச் செல்லும்

ஆட்காட்டி எனும் சொல்லு இன்று எம் மத்தியில் மிகக் கனமான துரோகச் சொல்லாக மாறிவிட்டதும் கூட எம் போராட்ட காலத்தின் மிகப் பெரிய சோகம் என்றுதான் சொல்லுவேன்.

ஊரில் இருக்கும் என் சித்தியிடம் கேட்டேன் ஆட்காட்டி குருவி இப்பவும் வாரதா என. இல்லையெனச் சொன்னா சித்தி...ஒருவேளை தனக்கிடப்பட்ட தமிழ் பெயரை நினைத்து இன்று மெளனமாகி விட்டதோ தெரியவில்லை..

நிழலி அண்ணா,

நான் இப்பத்தான் இந்தகுருவி பெயரைக்கேள்விப்படுறன். நீங்கள் சொல்வது மாதிரி இப்போது எத்தனையோ சொற்களும் கூட துரோகத்துக்கே விலை போகின்றன. என்ன செய்வது இதுவும் காலத்தின் கொடுமை தான்.

Link to comment
Share on other sites

நிழலி அண்ணா,

நான் இப்பத்தான் இந்தகுருவி பெயரைக்கேள்விப்படுறன். நீங்கள் சொல்வது மாதிரி இப்போது எத்தனையோ சொற்களும் கூட துரோகத்துக்கே விலை போகின்றன. என்ன செய்வது இதுவும் காலத்தின் கொடுமை தான்.

இந்த குருவியின் இன்னொரு பெயர்தான் வானம்பாடி என்றும் சிலர் சொல்வர். சரியாக தெரியாது எது சரியென

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பின் னணி இசையில் நிழலியின் கவிதையை படித்த சாந்தியின் , குரல் வளம் அருமை . பாராடுக்கள் சாந்தி . நிழலி .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அடுத்த அடுத்த வரிகளில் எப்படி இப்படி 180 பாகை எதிராக எழுத முடிகிறது? 👆🏼👇 2016 இல் இறங்கினார் சரி.  2021 வரை அனுபவம் ஜனநாயகம் செயல் அளவில் இல்லை என சொன்னபின்னும் ஏன் அதையே 2024 இல் செய்கிறார்? The definition of  insanity is doing the same thing again and gain and expecting a different outcome. அண்ணன் என்ன லூசா? அல்லது கமிசன் வாங்கி கொண்டு வாக்கை பிரிக்க இப்படி செய்கிறாரா? நான் என்ன ரோ எஜெண்டா அல்லது பிஜேபி பி டீமா? எனக்கு எப்படி தெரியவரும்? உங்களை சவுத் புளொக் கூப்பிட்டு காதுக்குள் ஐபி டைரக்டர் சொல்லி இருப்பார் என நினைக்கிறேன்? மாற்றுக்கருத்து ஏதும் இல்லை. நேற்று டவுனிங் ஸ்டிரீட் பக்கம் சும்மா வாக்கிங் போனேன். உங்களை பற்றி இந்த வகையில்தான் பேசி கொண்டார்கள். நான் கேள்விபட்ட வரையில் டிரம்ப் தான் வென்றதாம்….நீங்கள் சொல்லி விட்டீர்கள் என்பதால், தேர்தல் முடிவை குளறுபடி செய்து மாற்றினார்களாம்.
    • உங்க‌ட‌ அறிவுக்கு நீங்க‌ள் இப்ப‌டி எழுதுறீங்க‌ள் அவ‌ர்க‌ள் ஜ‌ன‌நாய‌க‌த்தின் மீது ந‌ம்பிக்கை இருந்த‌ ப‌டியால் தான் அர‌சிய‌லில் இற‌ங்கின‌வை இந்தியாவில் ஜ‌ன‌நாய‌க‌ம் என்ற‌து சொல் அள‌வில் தான் இருக்கு செய‌லில் இல்லை................ 2023 டெல்லிக்கு உள‌வுத்துறை கொடுத்த‌ த‌க‌வ‌ல் உங்க‌ளுக்கு வேணும் என்றால் தெரியாம‌ இருக்க‌லாம் இது ப‌ல‌ருக்கு போன‌ வ‌ருட‌மே தெரிந்த‌ விடைய‌ம்.........................நீங்க‌ள் யாழில் கிறுக்கி விளையாட‌ தான் ச‌ரியான‌ ந‌ப‌ர்.............................என‌க்கும் த‌மிழ‌க‌ அர‌சிய‌ல் அமெரிக்கா அர‌சிய‌ல் டென்மார்க் அர‌சிய‌ல் ப‌ற்றி ந‌ங்கு தெரியும் ஆனால் நான் பெரிதாக‌ அல‌ட்டி கொள்வ‌து கிடையாது.................   ந‌ண்ப‌ர் எப்போதும் த‌மிழ‌ன் ம‌ற்றும் விவ‌சாயிவிக் அண்ணா இவ‌ர்க‌ள் இருவ‌ரும் 2020ம் ஆண்டு ர‌ம் தான் மீண்டும் ஆட்சிக்கு வ‌ருவார் என்று சொன்ன‌வை  நான் அதை ம‌றுத்து பைட‌ன் தான் ஆட்சிக்கு வ‌ருவார் என்று சொன்னேன் அதே போல் நான் சொன்ன‌ பைட‌ன் அமெரிக்கன் ஜனாதிபதி ஆனார்😏............................ ஆர‌ம்ப‌த்தில் தாங்க‌ளும் வீர‌ர்க‌ள் தான் என்று வார்த்தைய‌ வீடுவின‌ம் ஒரு சில‌ர் அடிக்கும் போது  அடிக்கு மேல் அடி விழுந்தால் ப‌தில் இல்லாம‌ கோழை போல் த‌ங்க‌ளை தாங்க‌ளே சித்த‌ரிப்பின‌ம்🤣😁😂..............................
    • இந்த மாத முடிவில் சில நாடுகளின் நரித்தனத்தாலும், சுயநலத்தாலும் இரு நாடுகள் அணு ஆயுதங்களால் பலமாக தாக்கபட போகின்றன. ஜீசசும் வருகின்றார் என்ற செய்தும் உலாவுகிறது.
    • நான் யாழில் எழுத தொடங்கியது 2013. அதுதான் உளவுதுறை பிஜேபி கைப்பாவை ஆச்சே? அதேபோல் இப்படி சொன்ன தேர்தல் ஆணையம் மீது ஏன் சீமான் வழக்கு போடவில்லை? நம்ப வேண்டிய தேவை இல்லை. என் கருத்து அது. ஆனால் தேர்தல் ஆணையம் இப்படி ஒரு விடயத்தை சீமானிடம் சொல்லாது. எந்த அதிகாரியாவது மேலிட பிரசரால் இப்படி செய்கிறோம் என சீமானிடமே வெளிப்படையாக சொல்வாரா? மிகவும் சின்னபிள்ளைதனமாக சீமான் கதை பின்னுகிறார். நம்ப ஆள் இருக்கு என்ற தைரியத்தில். சீமான் சொல்வது உண்மை எனில் சீமான் வழக்கு போட்டிருக்க வேண்டும்.  போடமாட்டார் ஏன் என்றால் இது சும்மா….லுலுலுலா கதை. இந்த 😎 இமோஜியை பாவிக்காமலாவது விட்டிருக்கலாம். திருடப்போகும் இடத்தில் சிக்னேச்சர் வைத்தது போல் உள்ளது. 🤣🤣🙏
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.