Jump to content

சங்ககாலக் கொற்றவை: சமூகவியல் ஆய்வு


Recommended Posts

சங்ககாலக் கொற்றவை: சமூகவியல் ஆய்வு

சிலம்பு நா. செல்வராசு

கொற்றவை பற்றிச் சங்க இலக்கியங்கள் தரும் தகவல்கள் மிகக் குறைவு. கொற்றவை என்ற சொல்லாட்சியே சங்க இலக்கியங்களில் இல்லை. ''பெருங்காட்டுக் கொற்றிக்குப் பேய் நொடித்தாங்கு'' (கலி.89) எனவும் ''நெற்றி விழியா நிறைத்திலகம் இட்டாளே கொற்றவைக் கோலங் கொண்டு ஓர் பெண்'' (பரி.11) எனவும் வருவன சங்கப் பிற்காலச் சான்றுகளாகும். அவ்வாறே, கொற்றவைச் சிறுவன் (திருமுருகு.250) என முருகன் சுட்டப்பெறும் ஓரிடத்துக் கொற்றவையின் பெயர் குறிக்கப்பட்டுள்ளது. ''விறல் கெழு சூலி'' (குறு. 218) எனவும் ''உருகெழு மரபின் அயிரை'' (பதி. 79,90) எனவும் குறிக்கப்பெறும் தொடர்கள் கொற்றவையைக் குறிப்பிடுவதாகக் கூறுவர் (வித்தியானந்தன், 1954). நெடுநல் வாடையில் போருக்குத் தலைவனைச் செலவுவிடுத்த தலைவியின் தோழியர் தலைவன் வெற்றியுடன் மீள வேண்டும் என்று வெற்றித் தெய்வத்தை வணங்கியுள்ளனர் எனவும் வணக்கத்தைப் பெறும் அவ்வெற்றித் தெய்வம் கொற்றவை எனவும் நச்சினார்க்கினியர் உரை விளக்கம் செய்துள்ளார். ஆயின் நெடுவல்வாடை மூலத்தில் (168) கொற்றவை என்ற பெயர் இடம் பெறவில்லை. அச்சம் தரத்தக்க இத்தெய்வம் வெற்றிக்குரியவள் என்பதும் அவள் முருகனது தாய் என்பதும் அவள் மலை/காடு வாழ் தெய்வம் என்பதும் மேல் குறிப்புகள் தரும் தகவல்கள் ஆகும். இவைதவிரக் கொற்றவை வழிபாடு பற்றிய வேறு செய்திகளைச் சங்க இலக்கியங்கள் வழி அறிய இயலவில்லை.

ஆயின், தொல்காப்பியம் ''கொற்றவை நிலை'' என்று புறத்திணைத் துறை ஒன்றைச் (தொல். பொருள். 62) சுட்டியுள்ளது. ''மறங்கடைக் கூட்டிய குடிநிலை சிறந்த கொற்றவை நிலையும் அத்திணைப் புறனே'' என்பது அந்நூற்பா. வெட்சித் திணைக்கு இலக்கணம் கூறி அவற்றின் துறைகளை விரித்தோதிய தொல்காப்பியர் அத்துறைகளோடு கொற்றவை நிலையையும் ஒன்றாகத் தனியே கூறியுள்ளார்.

கொற்றவை வழிபாடு பற்றிய விரிவான விளக்கங்கள் சிலப்பதிகாரத்து வேட்டுவ வரியுள்தான் முதன்முதலில் பதிவாகி உள்ளன. ஆறலை கள்வர்கள் என்று சுட்டப்படும் எயினர் வணங்கும் கடவுளாக அவள் சித்திரிக்கப் பெற்றுள்ளாள். ஆறலை கள்வராகிய எயினர் பாலை நிலத்தில் வாழ்வோராகவும் வழிபறி செய்வோராகவும் கொள்ளை அடிப்போராகவும் சங்கப் பாடல்களில் பதிவுகள் உண்டு. எயினரும் வேட்டுவரும் ஒருவராக, ஓரினத்தவராகப் பாடற்பதிவுகள் புனைந்துள்ளன. எயினர் மறக்குணம் வாய்த்தவராகவும், அவர்கள் ஆநிரை கவர்ந்துவரக் கொற்றவையை வழிபட்டதாகவும் ஆநிரை கவர்ந்து வந்தபின் தம்மைக் கொற்றவைக்குப் பலியிட்டுக் கொண்டதாகவும் வேட்டுவவரி விவரிக்கிறது. ஆநிரை கவர்தல் போரில் எயினர்க்கு வெற்றி தருபவள் கொற்றவை என்ற குறிப்பு வேட்டுவவரியின் மையமாகும்.

''தமிழிலக்கியத்தில் கொற்றவை என்பதற்கு ''ஆறலை கள்வர்களுக்குக் கொற்றம் தருபவள், வெற்றி தருபவள் என்ற பொருள் இருப்பதைக் காணலாம். பழங்கால வேட்டைத் தெய்வமே பின்னர் இப்படி மாறி இருக்கிறது. உரோமானியரின் கன்னித் தேவதையான டயானாவும் வேட்டைத் தெய்வமே. இவளே ஆற்றுத் துறைகளில் காவல் செய்பவள், காட்டு விலங்குகளையும், வேட்டுவர்களையும் காப்பவளாகக் கருதப்பட்டாள். வில்லும் அம்பும் கையில் வைத்திருப்பாள். தலையில் பிறைநிலா அணிந்திருப்பாள். தமிழிலக்கியத்தில் வரும் கொற்றவையும் டயானாவும் சிலவற்றில் ஒற்றுமையுடன் திகழ்வதை உணரமுடியும்... இனக்குழு மக்களின் வேட்டைக்குக் கொற்றம் தருபவளான கொற்றவையே பின்னர் வேந்தர்க்கும் வீரர்க்கும் கொற்றம் தருபவளாகக் கொண்டாடப்பட்டாள்'' (பி.எல்.சாமி 1980:64)

கொற்றவை வழிபாடு ஒருவிதச் செவ்வியல் பண்போடு வேட்டுவ வரி எனும் பெயரில் சிலப்பதிகாரத்தில் இடம் பெற்றதற்கு வலுவான சமூகவியல் காரணங்கள் உண்டு (சிலம்பு நா. செல்வராசு. 2004). கொற்றவை வைதீகமதக் கடவுளாக மேனிலையாக்கம் பெற்றதற்கும் அதற்கும் முன்பு உள்ள சங்க இலக்கியங்கள் அவ்வழிபாடு பற்றி மௌனம் காத்ததற்கும் தொடர்பு உண்டு. வேட்டுவவரி விவரிக்கும் கொற்றவை வழிபாடு திடீரெனத் தோன்றியது அன்று. புராதன வேட்டைச் சமூகத்துத் தாய்வழித் தலைமையில் நிகழ்த்தப்பட்டதாக அவ்வழிபாட்டை உணர்ந்திடச் சான்றுகள் உண்டு. இது பற்றிச் சிறிது விரிவாக ஆராய்ந்திடலாம்.

தொல்காப்பியர் நிலத்தெய்வங்களாகச் சோயோன், மாயோன், வேந்தன், வருணன் ஆகியோரைக் குறிப்பிட்டுள்ளார். இத்தெய்வங்கள் திணைக் கோட்பாட்டில் எந்த அளவிற்குப் பங்களிப்பைச் செய்துள்ளன என்பதை அறிய முடியவில்லை. சேயோன் எனப்படும் முருகன் ''வெறியாடல்'' வழி நேரடியாக அகப்பொருளோடு தொடர்புபடுத்தப் பெறுகிறான். இதுபோல் ஏனைய தெய்வங்கள் அகப்பொருளோடு கொண்ட நேரடித் தொடர்பு அறியுமாறில்லை. தாய்வழித் தலைமைச் சமூகம் நிலவிய காலக்கட்டங்களில் இந்த நிலத் தெய்வங்கள் எவையாக இருந்தன என்பதையும் அறியுமாறில்லை. ஆனால் தொல்காப்பியர் ''வெட்சி தானே குறிஞ்சியது புறனே'' (தொல். பொருள். 59) என்ற நூற்பாவழி மலை சார்ந்த நிலப்பகுதியின் அகம், குறிஞ்சியாகவும் புறம் வெட்சியாகவும் இருந்துள்ளதைக் குறிப்பிட்டுள்ளார். வெட்சியின் கடவுள் ''கொற்றவை'' என்பது முன்னர்க் கூறப்பட்டது. இதற்கு உரையெழுதும் இளம்பூரணர் கொற்றவைநிலை என்றதனாலே, குறிஞ்சிக்கு முருகவேளேயன்றிக் கொற்றவையும் தெய்வம் என்பது பெற்றாம்'' என்று விவரிப்பர். நச்சினார்க்கினியர் ஒருபடி மேலே சென்று ''வருகின்ற வஞ்சிக்கும் கொற்றவை நிலை காரணமாயிற்று, தோற்றோர்க்குக் கொற்றம் வேண்டியும் வென்றோர்க்கும் மேற் செல்லுங்காற் கொற்றம் வேண்டியும் வழிபடுவராதலின்'' என்று விளக்கம் கூறுவர்.

ஆகத் தொல்காப்பியத்தின்படியும் அதன் உரைகள் அடிப்படையிலும் கொற்றவை குறிஞ்சி நிலத்திற்குரிய கடவுளாக விளங்கியமையை அறிய முடிகிறது. ஆனால் பின்னாளைய இலக்கண நூல்களும், இலக்கியங்களும் குறிப்பாகப் பரணி போலும் சிற்றிலக்கியங்களும் கொற்றவை, பாலை நிலக் கடவுளாகவே விவரித்துள்ளமையை அறிய முடிகிறது. பாலை நிலம், குறிஞ்சியும் முல்லையும் திரிந்து தோன்றும் நிலப்பகுதி என்ற நில அடிப்படையில் இம்மாற்றம் ஏற்கத் தக்கதே. மலையும் காடும் வறட்சியால் திரிந்து பாலையாக மாறும்போது அந்நிலத்து விளங்கும் தெய்வமும் பாலைத் தெய்வமாகலாம் என்றாலும் அடிப்படையில் இங்கு ஓர் ஐயம் தோன்றுகின்றது. கோடைக்காலத்துப் பாலைச் சூழலில் கள்வர்களாக, வழிபறி செய்வோராக இருப்போர் அக்காலம் மாறிய பின்னர் அறவோராக மாறுவது ஏற்புடையதா? ஆண்டில் ஆறுதிங்கள் கொடியோராகவும், ஆறுதிங்கள் அறவோராகவும் விளங்கும் பண்பு புராணத் தன்மை வாய்ந்ததே தவிர உண்மையாக இருக்க வாய்ப்பில்லை.

தொல்காப்பியர், ''கொற்றவை நிலையைக்'' குறிப்பிட்டுப் பின்னர் அடுத்துக்கூறும் நூற்பா ஒன்றும் அதன் உரையும் மிகக் கவனத்துள் கொள்ளத்தக்கவை.

வெறியறி சிறப்பின் வெவ்வாய் வேலன்

வெறியாட் டயர்ந்த காந்தளும்

எனத் தொடங்குவது அந்நூற்பா (தொல். பொருள். 63). இதற்கு விளக்கம் கூறும் இளம்பூரணர் ''இதனாலே காமவேட்கையின் ஆற்றலாகிய பெண்பாற் பக்கமாகிய வெறியும், அந்நிலத்துள்ளார் வென்றி வேண்டி ஆடும் வெறியும் கொள்ளப்படும்'' என விவரித்தனர். இவ்விளக்கவுரையைச் சோம சுந்தர பாரதியார், ''தலைவியின் மெலிவுகண்ட தாயார் உண்மை உணர வேண்டி நிகழ்த்தப் பெறும் வேலனது வெறியாட்டு அகத்தைச் சேர்ந்தது; அதனின் வேறாய வெட்சியில் வரும் வெறியாட்டு, வேலன் சூடும் பூவின் பெயரால் காந்தள் எனப்பட்டது. வெட்சித்துறை வெறியாட்டில் வேலன் காந்தள் சூடி ஆடுவேன், குறிஞ்சித் துறையில் வெறியாடும் வேலன் குறிஞ்சிப் பூச் சூடுதல் மரபு'' என மேலும் விவரித்துரைப்பார்.

வெறியாடும் வேலன் அழைக்கும் தெய்வம் முருகன் என்பதே சங்க மரபு. அவ்வாறு இருக்க வெற்றி வேண்டி வெறியாடும் வேலன் முருகனை அழைத்தே வெறியாடி இருக்க வேண்டும். அங்ஙனமாயின் வெற்றிவேண்டி நிகழ்த்தப்பட்ட கொற்றவை வழிபாடு என்னாயிற்று? வெறியாட்டில் கடவுள் மாற்றம் நிகழ்ந்ததா? அல்லது வெற்றி வேண்டியே முருகனும், கொற்றவையும் வழிபடப் பெற்றனரா? அல்லது சமூக மாற்றத்தால் கொற்றவை இடத்தில் முருகன் இடம் பெற்றானா? எனும் வினாக்கள் விரிவான ஆய்விற்குரியவை.

சங்க இலக்கியங்களில் தாய்த் தெய்வத்திற்கு வெறியாடல் நிகழ்ந்தமைக்கான குறிப்புகள் உண்டு. அகநானூற்றுப் பாடல் (270) ஒன்று ''கடல் கெழு செல்வி'' எனும் தாய்த் தெய்வத்திற்கு ஆடுமகள் ஒருத்தி வெறியாட்டு நிகழ்த்தியமையை விவரிக்கிறது. இது போன்றதோர் வெறியாடலே கொற்றவைக்கும் நிகழ்ந்திருக்க வேண்டும். இதன் வளர் நிலையாகச் சாலினி நிகழ்த்திய வெறியாடலைச் சிலப்பதிகார வேட்டுவ வரியுள் காணமுடிகிறது. இக்கட்டுரையின் நிறைவாக எழும் வினாக்கள் இரண்டு,

1. கொற்றவை வெறியாடலைச் சங்க இலக்கியங்கள் ஏன் பதிவு செய்யவில்லை.

2. கொற்றவை இடத்தில் முருகன் இடம் பெற்றது எவ்வாறு?

இவ்வினாக்களுக்கான விடையைச் சங்க காலத்திற்கும் முந்தைய சமூக அமைப்பில்தான் தேடவேண்டி உள்ளது. தென்னிந்தியப் பகுதிகளில் நிகழ்ந்த தொல்லியல் ஆய்வுகள் முதலியன சங்க காலத்திற்கும் முந்திய ஓராயிரம் ஆண்டுகால நிலையைப் ''பெருங்கற்படைக் காலம்'' எனச் சுட்டியுள்ளன (கா. ராஜன். 2004). சங்க கால மக்களின் வாழ்க்கையை உயர்நிலைக்கு இட்டுச் சென்றவர்கள் பெருங்கற்படைக் காலத்தைச் சேர்ந்த மக்களே ஆவார். திராவிடப் பண்பாட்டின் முதன்மைக் கூறாகிய ''இறந்தவர்களைப் புதைத்து வழிபடுகின்ற வழக்கம்'' பின்னாளில் பெருங்கற்படைச் சின்னங்களாக மாறியுள்ளன. இப்பண்பாட்டைத் தோற்றுவித்த மக்களே பெருங்கற்படைக் கால மக்கள் ஆவர். நீத்தோர் நினைவாகப் பெரும் கற்களைக் கொண்டு உருவாக்கப்பெற்ற இச்சின்னங்களையே தொல்காப்பியர் ''நடுகல்'' என இலக்கண வரையறைபடுத்தியுள்ளார். இத்தகு சின்னங்கள் விந்திய மலைக்குத் தெற்கே இந்தியத் தீபகற்பப் பகுதியில் நிறைந்து காணப்படுவதாகக் கூறும் ராஜன் (2004) தமிழகத்தில் பல்வேறு பரல் உயர் பதுக்கைகளைக் கண்டறிந்துள்ளார்.

சுமார் பத்து முதல் பதினைந்து ''டன்'' எடை கொண்ட கற்களைக் கொண்டு இச்சின்னங்கள் உருவாக்கப்பட்டுள்ளதை அறியும்போது இவற்றை உருவாக்க ஒரு சமூகமே பின்னணியில் இயங்கி உள்ளதையும் அறிய முடிகின்றது. இத்தகு நினைவுச் சின்னங்களின் வளர்நிலையை நான்கு கட்டமாக ராஜன் (2004) விளக்குவர். முதலாவது சங்க இலக்கியங்கள் குறிப்பிடும் பதுக்கைகள் கண்டறியப்பட்டுள்ளன. நிலத்திற்கு அடியில் கற்களைக் கொண்டு இப்பதுக்கைகள் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதை அறிய முடிகின்றது. இரண்டாவது வளர் நிலையாகக் கற்பதுக்கைகளுடன் நெடுங்கற்கள் நடப்பட்ட நிலையை அறிய முடிகின்றது. மூன்றாவதாகக் கற்பதுக்கைகளைத் தவிர்த்து நெடுங்கற்கள் நடப்பட்டுள்ளன. நான்காம் நிலையாக நெடுங்கற்கள் அளவில் சிறுத்து நடுகற்களாக நடப்பட்டுள்ளன.

இவ்வாறான பதுக்கைகளையும் நெடுங்கற்களையும் ஆராய்ந்த ராஜன் (2004) இந்நினைவுச் சின்னங்களின் பெரும்பகுதி வெட்சிப் போரில் ஆநிரை கவர்ந்து / மீட்டு (தொறுமீட்டு) மாண்ட மறவர்க்கு நடப்பட்ட நிலையைச் சங்க இலக்கியச் சான்றுகள் வழியே விரிவாக ஆராய்ந்துள்ளார். இதன்வழிச் சங்ககாலத்திற்கும் முன்பு சுமார் ஆயிரம் ஆண்டுகள் காலப் பரப்பில் வாழ்ந்த பெருங்கற்படைப்பண்பாட்டு மக்களின் வாழ்வியலின் ஒரு பகுதி வெட்சித் திணையாக உருவெடுத்துள்ள நிலையை உணர முடிகின்றது. இப்பண்பாட்டுக் காலத்தில் கொற்றவை வழிபாடு வெகு சிறப்புடன் நடைபெற்றிருக்க வேண்டும் என்பதை எளிதாக உய்த்துணர முடியும். இப்பண்பாட்டிற்குரியோராக எயினர், வேட்டுவர் முதலான இனமக்களைச் சுட்ட முடியும்.

தொல் தமிழகத்தில ஆநிரைச் சமூகம் வேளாண் சமூகத்தைத் தோற்றுவித்த நிலையில் வளமார்ந்த நெல் சமூகம் அமைக்கப்பெற்றது. ''மருதநில பொருளாதார அரசியல்'', எயினரையும் வேட்டுவரையும் ''விளிம்பு நிலை மக்களாக'' ஆக்கிவிட்டமையைச் சஙக இலக்கியப் பாலைத்திணைப் பாடல்கள் விவரிக்கின்றன. விளிம்பு நிலை மக்களாக மாறிய இவ்வினமக்கள் அரசு உருவாக்கத்தில் நாட்டின் மையத்திலிருந்து விடுபட்டு வழிபறி கொள்ளையர்களாக மாறியுள்ளனர். மாறவே இவ்வின மக்களின் பண்பாடு முதலியன விளிம்பு நிலைக்குத் தள்ளப் பெற்றிருக்க வேண்டும். எனவே தான் சங்க இலக்கியங்களில் ''கொற்றவை வழிபாடு'' பற்றிய செய்திகள் இடம் பெறாமல் போயின. பின்னாளில் ''ஒரே பேரரசு உருவாக்கம்'', ''ஒற்றைச் சமய உருவாக்கம்'' (சிலம்பு நா. செல்வராசு.2004) ஆகியவற்றிற்கான அரசியல் தொழிற்பட்டபோது எயினர், வேட்டுவர் இன மக்களைப் பேரரசு எல்லைக்குள் கொண்டு வரும் முயற்சியில் அவர்தம் வாழ்நிலை, சமயம் சார்ந்த பண்பாட்டு நிலைகள் மேனிலையாக்கம் பெறத் தொடங்கின. எனவேதான் சிலப்பதிகாரம் வேட்டுவ வரியைச் செவ்வியலாகப் புனைய வேண்டியதாயிற்று.

நன்றி: ஆய்வுக் கோவை

_________________

அன்புடன் பரஞ்சோதி

http://www.muthamilmantram.com/index.php?n...iewtopic&t=1916

Link to comment
Share on other sites

நண்றி நாரதா இப்போதுதான்... கட்டுரையை முழுமையாகப் படித்து முடித்தேன்...

சங்க இலக்கியங்களின் கொற்றவை சம்பந்தமானவை அளிந்து போய் விட்டன... எரியூட்டி அளித்தவர் வேறு யாரும் அல்ல ஆரிய படையாளிகள்தான்... ஒரு இணையத்தில் இது சம்பந்தமான கட்டுரை படித்தேன்... தேடிப்பிடித்து இங்கு இணத்து விடுகிறேன்..

Link to comment
Share on other sites

குறிப்பிட்ட ஒரு சமயத்தின் சாயல் பெறாமல் கடவுட் கொள்கைபற்றி பேசும் ஆதி நூல் தொல்காப்பியம். அதில் சமயம் இடம் பெறுகிறது. மக்கள் வாழ்வினை ' அகம் 'என்றும் ' புறம் ' என்றும் வகுத்துப் பல்வேறு செய்திகளைத் தொகுத்து சொல்வதால் வாழ்வியல் கூறும் இலக்கியமாகவும் இருக்கிறது.

தொல்காப்பியர் காலத்தும், அவர்க்கு முந்தைய காலத்தும் இறைவனை வழிபடும் முறை இருந்துள்ளது. அக்காலத்து மக்கள், ஐம்பூதங்களையும், முருகன், திருமால், கொற்றவை முதலான வழிபாடு செய்தனர் என்பதையும்..,

'' மாயோன் மேய காடுறை உலகமும்

சேயோன் மேய மைவரை உலகமும்

வேந்தன் மேய தீம்புனல் உலகமும்

வருணன் மேய பெருமணல் உலகமும் ''

( தொல். அகத் .5)

இப்பாடல் மூலம் அக்காலத்தில் பல கடவுளரை வணங்கும் நிலை இருந்தது என்பதையும், அவர்களுக்குள் ' சமயக்காழ்ப்புணர்ச்சி ' இல்லை என்பதையும் அறியலாம்.

http://ezilnila.com/saivam/thamil_ilakkiya.htm

Link to comment
Share on other sites

யாழில வரலாற்றுப் பகுதியில இது சம்பந்தமாய்க் ஈழவரலாற்றில் எப்படி வளிபாடு அமைந்தது என்றும் கருத்துக்கள் உள்ளது

http://www.yarl.com/forum/viewtopic.php?t=...57769651e079d2a

Link to comment
Share on other sites

த.ல தமிழின்ர தாய் மொழி எழுமொழி பற்றி எதாவது தெரிந்தால் போடு....ங்கோ...

தமிழில் எழுத்து எண்டு சொல்வது அதனாலாம் உண்மையா?

Link to comment
Share on other sites

தமிழின் தாய் மொழி எலு மொழியா???????? :twisted: :twisted: :twisted: :twisted: :twisted: :twisted: :twisted: :twisted:

ம்ம். தம்+ எழு= தமெழு,தமிழ் ஆகியதாக வரலாற்றாளார்கள் சொல்கிறார்கள்.. ஆனால் அதில் பெரிதாக எந்த மாற்றமும் இல்லையாம்... 80% எழு என்கின்ற மொழச்சொற்கள் அப்படியே தமிழில் இருக்கிண்றன... ஆனா எழு+து= எழுது என்கின்ற எழித்துக்கள் தான் மாற்னவாம்... 5000 வருடத்துக்கு முந்தய தமிழன்.. இண்று உயிர்த்தெழந்து வந்தாலும்.. அவர்களால் தமிழை நன்கு விளங்கிக்கொள்ள முடியும் என்கின்றனர்..

இப்ப மாறல்ல 5000-- 3000 வருசத்துக்கு முன்னமே மாறீட்டுதாம்... தணிக கோபம்..

Link to comment
Share on other sites

ம்ம். தம்+ எழு= தமெழு,தமிழ் ஆகியதாக வரலாற்றாளார்கள் சொல்கிறார்கள்.. ஆனால் அதில் பெரிதாக எந்த மாற்றமும் இல்லையாம்... 80% எழு என்கின்ற மொழச்சொற்கள் அப்படியே தமிழில் இருக்கிண்றன... ஆனா எழு+து= எழுது என்கின்ற எழித்துக்கள் தான் மாற்னவாம்... 5000 வருடத்துக்கு முந்தய தமிழன்.. இண்று உயிர்த்தெழந்து வந்தாலும்.. அவர்களால் தமிழை நன்கு விளங்கிக்கொள்ள முடியும் என்கின்றனர்..

இப்ப மாறல்ல 5000-- 3000 வருசத்துக்கு முன்னமே மாறீட்டுதாம்... தணிக கோபம்..

தமிழுடன் 75% எலு கலந்ததால் தெலுங்கும்

தமிழுடன் 50% எலு கலந்ததால் கன்னடமும்

தமிழுடன் 25% எலு கலந்ததால் மலையாளமும்

எலுவுடன் பாளி கலந்ததால் சிங்களமும், பின்னர் விஜயனின் வருகையுடன் ஆரியமும், சிங்களத்துடன் கலந்தது எனவும்,

தமிழும் எலுவும் சமகாலத்தில் வாழ்ந்த மொழிகள் எனவும், எலுமொழி பேச்சுவழக்கின்றி போனதால் வழக்கொழிந்து போனது எனவும், தமிழ் மொழி காலத்துக்கேற்ப நல்லவற்றை உள்வாங்கி மெருகேறியதெனவும் அறிந்திருக்கிறேன். "கல்தோன்றி மண்தோன்ற முதல் முன்தோன்றிய மூத்த மொழிக்கு" தாய் மொழி உண்டெனதாங்கள் கூறியதும், தமிழ்பால் அன்புகொண்ட இச்சிறியோன் சற்று கோபம் கொண்டுவிட்டேன், பொறுத்து, தாங்கள் கூறியதற்கான ஆதார இணைப்புக்கள் இருப்பின் இங்கு தந்து எனது ஜயப்பாட்டை தீர்ப்பிர்களா? நண்பர் பெருமகனே.

Link to comment
Share on other sites

தமிழுடன் 75% எலு கலந்ததால் தெலுங்கும்

தமிழுடன் 50% எலு கலந்ததால் கன்னடமும்

தமிழுடன் 25% எலு கலந்ததால் மலையாளமும்

எலுவுடன் பாளி கலந்ததால் சிங்களமும், பின்னர் விஜயனின் வருகையுடன் ஆரியமும், சிங்களத்துடன் கலந்தது எனவும்,

தமிழும் எலுவும் சமகாலத்தில் வாழ்ந்த மொழிகள் எனவும், எலுமொழி பேச்சுவழக்கின்றி போனதால் வழக்கொழிந்து போனது எனவும், தமிழ் மொழி காலத்துக்கேற்ப நல்லவற்றை உள்வாங்கி மெருகேறியதெனவும் அறிந்திருக்கிறேன். "கல்தோன்றி மண்தோன்ற முதல் முன்தோன்றிய மூத்த மொழிக்கு" தாய் மொழி உண்டெனதாங்கள் கூறியதும், தமிழ்பால் அன்புகொண்ட இச்சிறியோன் சற்று கோபம் கொண்டுவிட்டேன், பொறுத்து, தாங்கள் கூறியதற்கான ஆதார இணைப்புக்கள் இருப்பின் இங்கு தந்து எனது ஜயப்பாட்டை தீர்ப்பிர்களா? நண்பர் பெருமகனே.

பிருந்தன் இதில இருக்கிற விபரத்தை கொஞ்சம் படியுங்கோ.. அகிலன் வந்து பதில் சொல்லுவார்..

தமிழ் மொழி வரலாறு

அகிலன் என்ன சொல்ல வந்தார் எண்டது விளங்கல்லபா?? கேள்வி கேட்டாரா பதில் சொல்லுறாரா????

Link to comment
Share on other sites

  • 6 months later...
  • கருத்துக்கள உறவுகள்

நண்றி நாரதா இப்போதுதான்... கட்டுரையை முழுமையாகப் படித்து முடித்தேன்...

சங்க இலக்கியங்களின் கொற்றவை சம்பந்தமானவை அளிந்து போய் விட்டன... எரியூட்டி அளித்தவர் வேறு யாரும் அல்ல ஆரிய படையாளிகள்தான்... ஒரு இணையத்தில் இது சம்பந்தமான கட்டுரை படித்தேன்... தேடிப்பிடித்து இங்கு இணத்து விடுகிறேன்..

ஆரியர்களினால் தமிழர்கள் இழந்தவை எண்ணில் அடங்காது. தல நீங்கள் இன்னும் இணைக்கவில்லை. கிடைக்கவில்லையா?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உற‌வே ஏன் சீமான் மீது இம்புட்டு வ‌ன்ம‌ம்..........2009 முள்ளிவாய்க்கால் இன‌ அழிப்புக்கு துணை போனாரா அல்ல‌து த‌லைவ‌ருக்கு எங்க‌ட‌ போராட்ட‌த்துக்கு வைக்கோ ராம‌தாஸ் திருமாள‌வ‌ன் போன்ற‌வ‌ர்க‌ள் போல் துரோக‌ம் செய்தாரா...............எல்லாம் அழிந்த‌ நிலையில் த‌மிழீழ‌ம் என்ற‌ பெய‌ரை உயிர்ப்போடு வைத்து இருப்ப‌து 30ல‌ச்ச‌த்துக்கு மேல் ப‌ட்ட‌  எம் தொப்பில் கொடி உற‌வுக‌ள்...........பிர‌பாக‌ர‌ன் என்றாலே தீவிர‌வாதி என்று இருந்த‌ த‌மிழ் நாட்டில் பிர‌பாக‌ர‌ன் எம் இன‌த்தின் த‌லைவ‌ர் என்று கோடான‌ கோடி ம‌க்க‌ள் கேட்டுக்கும் ப‌டி சொன்ன‌துக்கா சீமான் மீது இம்ம‌ட்டு வெறுப்பா சீ சீ 2009க்கு முத‌ல் ஈழ‌ம் ஈழ‌ம் என்று க‌த்தின‌ கூட்ட‌ம் இப்ப‌ சிங்க‌ள‌வ‌னுக்கு விள‌ம்ப‌ர‌ம் செய்துக‌ள் இதை விட‌ கேவ‌ல‌ம் என்ன‌ இருக்கு...............அந்த‌ க‌ரும‌த்தை நான் தொட்டு என்ர‌ ந‌ட்ப்பு வ‌ட்டார‌ம் தொட்டு ஒருத‌ரும் கேடு கெட்ட‌ செய‌ல் செய்த‌து இல்லை................சீமான் மீது விம‌ர்ச‌ன‌ம் வைக்க‌லாம் ஆனால் அவ‌ர் கொண்ட‌ கொள்கையோடு உறுதியாய் நிக்கிறார் த‌னித்து நிக்கிறார்...........சீமான் காசு மீது பேர் ஆசை பிடித்த‌வ‌ர் என்றால் இந்த‌ தேர்த‌லில் ஆதிமுக்கா கூட‌ கூட்ட‌னி வைச்சு 500 கோடியும் 8 தொகுதியும் ஜா ப‌ழ‌னிசாமி கொடுத்து இருப்பார்................ த‌மிழ‌க‌ அர‌சிய‌ல் வாதிக‌ளை பார்த்தால் கூடுத‌லான‌ ஆட்க‌ள்  பெண்க‌ளுட‌ல் க‌ள்ள‌ உற‌வு வைத்து இருந்த‌வை அந்த‌ வ‌கையில் அண்ண‌ன் சீமான் வாழ்த்துக்க‌ள் ப‌ட‌ம் எடுத்த‌ போது விஜ‌ய‌ல‌ட்சுமி கூட‌ காத‌லோ அல்ல‌து ஏதோ ஒரு உற‌வு இருந்து இருக்கு.............நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே...........ஆனால் அண்ண‌ன் சீமான் அவ‌ரின் திரும‌ண‌த்தை வெளிப்ப‌டையாய் தான் செய்தார் அப்போது ஒரு பிர‌ச்ச‌னையும் வ‌ர‌ வில்லை அர‌சிய‌லில் வ‌ள‌ந்து வ‌ரும் போது அந்த‌ பெண்ண‌ திராவிட‌ கும்ப‌ல் ஊட‌க‌ம் முன்னாள் பேச‌ விடுவ‌து ம‌னித‌ குல‌த்துக்கு அழ‌கில்லை................. சீமான் த‌வ‌று செய்தால் அதை நான் ப‌ல‌ இட‌த்தில் சுட்டி காட்டி இருக்கிறேன்.............எங்க‌ட‌ த‌மிழீழ‌ தேசிய‌ த‌லைவ‌ர் எப்ப‌டி ப‌ட்ட‌வ‌ர் என்று எம‌க்கு ந‌ன்றாக‌வே தெரியுன் அண்ண‌ன் சீமான் ஒரு ப‌டி மேல‌ போய் அள‌வுக்கு அதிக‌மாய் த‌லைவ‌ரை புக‌ழ் பாட‌ தொட‌ங்கி விட்டார்.............ஆர‌ம்ப‌ கால‌த்தில் அதிக‌ம் பேசினார் அப்போது எம‌க்கே தெரிந்த‌து அது உண்மை இல்லை என்று............இப்போது சீமானின் பேச்சில் ப‌ல‌ மாற்ற‌ம் தெரியுது.................நிஜ‌த்தில் ந‌ல்ல‌வ‌ர் அன்பான‌வ‌ர் ஆனால் அவ‌ரை சுற்றி ப‌ல‌ துரோகிய‌ல் இருக்கின‌ம் அவ‌ருட‌ன் க‌தைப்ப‌தை ரெக்கோட் ப‌ண்ணி  விஜேப்பியின் ஆட்க‌ளுக்கு போட்டு காட்டின‌து அப்ப‌டி க‌ட்சிக்குள் இருந்த‌வையே  ப‌ல‌ துரோக‌ங்க‌ள் செய்த‌வை உற‌வே 2009க்கு முத‌ல் த‌மிழீழ‌த்தில் ஒரு மாத்தையா ஒரு க‌ருணா.............த‌மிழ் நாட்டில் ப‌ல‌ நூறு க‌ருணா ப‌ல‌ நூறு மாத்தையா இதை எல்லாம் தாண்டி க‌ன‌த்த‌ வ‌லியோடு தான் க‌ட்சியை கொண்டு ந‌ட‌த்துகிறார் த‌ன‌து ம‌னைவிக்கு இந்த‌ தேர்த‌லில் சீட் த‌ர‌வில்லை என்று க‌ட்சியை விட்டு போன‌ ந‌ப‌ரும் இருக்கின‌ம்............... உங்க‌ட‌ பாதுகாப்புக்கு சொல்லுறேன் உற‌வே த‌மிழ் நாட்டுக்கு போகும் நிலை வ‌ந்தால் நாம் த‌மிழ‌ர் க‌ட்சியில் ப‌ய‌ணிக்கும் இள‌ம் பெடிய‌ங்க‌ள் கூட‌ அண்ண‌ன் சீமானை ப‌ற்றி யாழில் எழுதுவ‌து போல் நேரில் த‌ப்பா க‌தைச்சு போடாதைங்கோ.............நீயார‌ட‌ எங்க‌ள் அண்ண‌ன‌ விம‌ர்சிக்க‌ என்று ச‌ண்டைக்கும் வ‌ந்து விடுவின‌ம்.............இப்ப‌டி ப‌ல‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ள் இருக்கு சொல்ல‌.............இது யாழ்க‌ள் ஆனால் இதே முக‌ நூல் என்றால் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ஜ‌ரிம் சீமான சீண்டி பாப்ப‌வ‌ர்க‌ளுக்கு அவேன்ட‌ பானியில் ப‌தில் அளிப்பார்க‌ள்...............6வ‌ருட‌த்துக்கு முத‌ல் என‌க்கும் திமுக்கா சொம்புக்கும் வாத‌ம் ஏற்ப‌ட்டு க‌ட‌சியில் எப்ப‌டி போய் முடிந்த‌து என்று என‌க்கு ம‌ட்டும் தான் தெரியும்............யாழில் இருக்கும் மூத்த‌வையின் சொல்லை கேட்டு யாழில் நான் இப்ப‌ யார் கூட‌வும் முர‌ன் ப‌டுவ‌தில்லை..........இது தான் கால‌ நீர் ஓட்ட‌த்தில் பெரிய‌வ‌ர்க‌ள் சொல்ல‌  என்னை நானே மாற்றி கொண்டேன்.............. வெற்றியோ தோல்வியே த‌னித்து போட்டி யார் கூட‌வும் கூட்ட‌னி இல்லை அதுக்காக‌ தான் பெரும்பாலான‌ த‌மிழ‌க‌ இளைஞ்ர்க‌ள் வ‌ய‌தான‌வ‌ர்க‌ள் அண்ண‌ன் சீமானை தொட‌ர்ந்து ஆத‌ரிக்கின‌ம்🙏🥰.................
    • மக்கள் ஏமாற்றப்படுக்கின்றார்கள் தான் ஆனால் நூறுவீதம் இல்லை.. அதே நேரம் தமிழ் அரசியல்வாதிகளும் சரியானவர்கள் இல்லை. இருப்பினும் புலம்பெயர்ந்த பலரும் அங்கிருப்பவர்களும் தமிழர் உரிமைகள் பற்றி விவாதிக்கொண்டிருக்கும் வேளையில்...... தமிழர் பகுதிகளில் ஆடம்பர உல்லாச விடுதிகளும், புலம்பெயர் மக்களின் கோடிக்கணக்கான செலவுடன் மாட மாளிகைகளும் திறந்த வெளி  அட்டகாச நிகழ்வுகளும் புலம்பெயர் மக்களின் கோடை கால கொண்டாட்ட சுற்றுலாக்களும்..... தமிழர்களுக்கு பிரச்சனை ஏதுமில்லை என்பதை சொல்லி நிற்கின்றது.   போர் மூலம் வந்த  வறுமையால் வாடுபவர்களை இனப்பிரச்சனை அட்டவணைக்குள் சேர்க்க உடன்படுமா அந்த சிங்கள இனவாத அரசுகள்? புலம்பெயர் தமிழர்களே ஊரில் வீடுகட்டிக்கொண்டு  பிற்காலத்தில்  நிம்மதியாக வாழலாம் எனும் போது.....?!  
    • சீமானுக்காக எதையும் தாங்குவார்கள் புலன்பெயர்ந்த ஈழதமிழர்கள். தேர்தலில் சீமான் வெற்றிபெறவில்லை என்றால் மெசின் மோசடி , சீமான் ஆங்கில மோகத்தால் மகனுக்கு தமிழ்நாட்டிலேயே ஆங்கில வழிக் கல்வி கற்ப்பிப்பது தமிழ் பள்ளிகள் சரியில்லை. தமிழ் தமிழ் என்று முழங்குவது அவரது அரசியல் பிழைப்பு.  இவர்  தமிழ்நாட்டு முதல் அமைச்சராக வந்தால் அரசுபாடசாலைகளிலும் தமிழை தூக்கி எறிந்துவிட்டு ஆங்கிலம் மூலம் கல்வி கற்பிப்பார் தமிழ் செய்த அதிஷ்டம் அவர் முதல் அமைச்சராகும் வாய்ப்பே  இல்லை
    • அங்கு ஒரு வீட்டில் கஞ்சா புகைத்திருக்கின்றனர். பின்னர், முதலாவதாக, உடனிருந்து புகைத்த நண்பரே குத்திக் கொல்லப்பட்டிருக்கின்றார். குற்றவாளி என்று கைது செய்யப்பட்டவர் கஞ்சாவில் ஒரு வலுவான போதைப் பொருளை தன் நண்பர் கலந்து விட்டதாக இப்பொழுது சொல்லுகின்றார். எதைக் கலந்தாலும், எதைப் புகைத்தாலும், ஓட ஓட சக மனிதர்களை கத்தியால் குத்தும் அளவிற்கு நிலை தடுமாறுமா.....😢 Following his arrest in the frenzied attack, the suspect, Christian Soto, waived his Miranda rights to remain silent and told investigators he was high on marijuana he claimed was given to him by one of the slaying victims that he believed was laced with a strong narcotic, Winnebago County State's Attorney J. Hanley said at a news conference Thursday. https://abcnews.go.com/US/deadly-rockford-illinois-stabbing-spree/story?id=108605783    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.