Jump to content

சின்ன மாமியே நித்தி கனகரத்தினம்


Recommended Posts

சின்ன மாமியே நித்தி கனகரத்தினம்

Nithy.jpg

சின்ன மாமியே உன் சின்ன மகளெங்கே..

இப்பாடலை அன்று முணுமுணுக்காத வாயே இல்லை என்று சொல்லுமளவுக்கு புகழ் பெற்ற ஈழத்துத் துள்ளிசைப் பாடல். இலங்கை, தமிழ்நாடு மட்டுமல்ல தமிழர்கள் வாழும் நாடுகள் முழுவதும் இப்பாடல் புகழ் பெற்றிருந்தது. இன்றும் கேட்டு ரசிக்கக்கூடிய பாடல். இப்பாடலுக்கு 40 வயதாகிறது.

இப்பாடலைப் பாடியவர் பொப்பிசைப் பிதா நித்தி கனகரத்தினம். 70களில் நித்தி கனகரத்தினம் இலங்கை மேடைகளில் கோலோச்சியவர். சுகததாச ஸ்டேடியத்தில் அரங்கம் நிறைந்த காட்சிகள் நடக்கும்.

அக்காலத்தில் நான் அவரை அறிந்தது ஒரு பொப் பாடகராக அல்லது மேடை பாடகராக மட்டுமே. பல காலத்துக்குப் பிறகு அன்றைய மட்டக்களப்பு பல்கலைக்கழகக் கல்லூரியில் (வந்தாறுமூலையில்) விரிவுரையாளராக சேர்ந்த போது தான் நித்தியை முதன் முதலாகச் சந்தித்தேன். பொப் பாடகராக அல்ல. பல்கலைக்கழக விரிவுரையாளராக. ஆமாம், விவசாயபீடத்தில் விரிவுரையாளராக இருந்தார். மேடைகளில் துள்ளிசை பாடிய அந்த மனிதரா இவர். ஆச்சரியமாக இருந்தது. மிகவும் அமைதியானவர். மிகவும் பண்பானவர். சிறந்த ஒரு விரிவுரையாளர். அப்போது அவர் பாடுவதை நிறுத்தி விட்டார் என்பது ஒரு கவலைக்குரிய விடயம் (அது ஏன் எண்டது பற்றிப் பிறகு சொல்லிறன்). ஆறு மாதங்கள் தான் அங்கு இருந்தேன். அந்த ஆறு மாதங்களும் மறக்க முடியாத நாட்கள். (இனப்பிரச்சினை மும்முரமாகத் தலைதூக்கியிருந்த நேரம் அது). முடிந்து வெளிக்கிடும் போது ஒரு பிரிவுபசார ஒன்றுகூடலை சக ஆசிரியர்கள் ஒழுங்கு செய்திருந்தனர். நித்தியும் கலந்து கொண்ட அந்த ஒன்றுகூடலை மறக்க முடியாது.

அண்மையில் மெல்பேர்ணில் இருந்து வெளியாகும் உள்ளூர்ப் பத்திரிகை ஒன்றில் எழுத்தாளர் லெ. முருகபூபதி அவர்கள் நித்தி கனகரத்தினம் அவர்களுடன் நடத்திய நேர்காணலை வாசிக்க நேர்ந்தது. (இப்பத்திரிகையில் இப்படி இடைக்கிடை ஒரு சில நல்ல தகவல்கள் வரும், அதுக்காகவே இந்த இலவசப் பத்திரிகையை இங்கு பலசரக்குக்கடையில் இருந்து பொறுக்கிக் கொண்டு வருவேன் என்பது வேறு விதயம்). அந்நேர்காணலில் சில முக்கிய அம்சங்களை உங்களுடன் பகிரலாம் என்றிருக்கிறன்.

நித்தி தற்போது அவுஸ்திரேலியாவின் விக்டோரியா பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக இருக்கிறார். அத்துடன் தமிழ் மூலிகை மருத்துவ ஆராய்ச்சியிலும் ஈடுபட்டிருக்கிறார்.

ஈழத்தில் யாழ்ப்பாணம் உரும்பராயில் பிறந்தவர். யாழ் மத்திய கல்லூரி, அம்பாறை ஹார்டி தொழில் நுட்பக்கல்லூரி ஆகியவற்றில் படித்துப் பின்னர் அலஹாபாத் பல்கலைக்கழகத்தில் விவசாய முதுமாணிப் பட்டம் பெற்றார்.

1955 ஆம் ஆண்டிலேயே பாட ஆரம்பித்து விட்டார். நாடகங்களிலும் நடித்திருக்கிறார். ஊர் மேடைகளில் கிண்டல் பாடல்கள் இயற்றியும் பாடியும் பாராட்டுப் பெற்றிருக்கிறார். அவற்றில் ஒரு பாடல்:

ஆமணக்கம் சோலையிலே

பூமணக்கப் போற பெண்ணே

உன்னழகைக் கண்டவுடன்

கோமணங்கள் துள்ளுதடி

இப்படியான பாடல்களைத் தானே இயற்றிப் பாடினார்.

பின்னர் சிங்கள மேடைகளில் இரட்டை அர்த்தங்களுடனான சிங்கள பைலாப் பாடல்கள் புகழ்பெறத் தொடங்கிய காலங்களில் அம்பாறை ஹார்டி கல்லூரியில் 1966 ஆம் ஆண்டு முதன் முதலாக சின்ன மாமியே பாடலைப் பாடியுள்ளார். அப்பாடல் பிறகு பிரபலமாகி இலங்கையின் பட்டி தொட்டிகளெல்லாம் ஒலிக்கத் தொடங்கி விட்டது. இலங்கை வானொலியில் தினமும் குறைந்தது இரண்டு தடவையாவது போடுவாரகள்.

தமிழில் மட்டுமல்ல சிங்களம், ஆங்கிலம், இந்தி என்று பல மொழிகளிலும் பாடியிருக்கிறார்.

ஒரு காலத்தில் உச்சத்திலிருந்த தமிழ்ப் பொப்பிசை காலப்போக்கில் தாழ்ந்து விட்டதற்குப் புதிய கலைஞர்கள் தோன்றாமையும் தொலைக்காட்சியின் அறிமுகமும் தான் என்கிறார் நித்தி.

அவர் சொன்ன ஒரு சம்பவம்:

"மலேசியாவில் 45வது சுதந்திர தின விழாக் காட்சிகளை மலேசியாவில்

நின்ற சமயம் தொலைக்காட்சியில் பார்த்தேன். மலே, சீனம் தமிழ் மொழிகளில் மக்கள் பாடிக் கொண்டு சென்றார்கள். தமிழர் சென்ற ஊர்வலத்தில் எனது பாடல்களை அம்மக்கள் பாடிக்கொண்டு சென்றாதைப் பார்த்து இன்ப அதிர்ச்சி அடைந்தேன். எங்கோ பிறந்த பாடல், எங்கெங்கோ சென்று மக்களின் மனத்தில் இடம் பிடித்திருக்கிறது".

தமிழகத்தில் எம்ஜிஆர் முதல்வராகப் பதவி ஏற்ற சமயம் மதுவிலக்கு மீண்டும் அமுலுக்கு வந்த போது அங்கு பட்டி தொட்டி எங்கும் ஒலிபரப்பான பாடல் நித்தியின் "கள்ளுக்கடைப் பக்கம் போகாதே".

ரஜனியின் அவசர அடி ரங்கா, எஸ்பியின் சிவரஞ்சனி, விஜயகாந்தின் ரமணா படங்களிலும் நித்தியின் பாடல்கள் இடம்பெற்றுள்ளன. (இதற்காக நித்திக்கு எந்த வெகுமதியும் கிடைக்கவில்லை).

1983இல் நிகழ்ந்த இனப்படுகொலைகளினால் பெரிதும் விரக்தியடைந்திருந்த நித்தி இனி மேடைகளில் பாடுவதில்லை என்று சபதம் எடுத்திருக்கிறார். அதை இன்றுவரையில் கடைப்பிடித்தும் வருகிறார்.

மகிழ்ச்சியான ஒரு விடயம்: என் இசையும் என் கதையும் என்ற நூலை நித்தி இப்போது எழுதிக்கொண்டிருக்கிறார்.

சின்னமாமி பாடல் வரிகளை வாசித்து விட்டு பாடலையும் கேட்டு மகிழுங்கள்.

சின்னமாமியே உன் சின்ன மகளெங்கே

பள்ளிக்குச் சென்றாளோ படிக்கச் சென்றாளோ

அட வாடா மருமகா என் அழகு மன்மதா

பள்ளிக்கு தான் சென்றாள் படிக்கத் தான் சென்றாள்

ஐயோ மாமி அவளை அங்கே விடாதே

அவளை என்னும் படிக்கவென்று கெடாதே

ஊர் சுழலும் பெடியெளெல்லாம்

கன்னியரைக் கண்டவுடன்

கண்ணடிக்கும் காலமல்லவோ - சின்ன மாமியே

ஐயோ தம்பி அவளை ஒன்றும் சொல்லாதே

அவள் வந்தால் உதைத்திடுவாள் நில்லாதே

அடக்கமில்லாப் பெண்ணிவள் என்றா

என்மகளை நினைத்து விட்டாய்

இடுப்பொடியத் தந்திடுவேனே - சின்ன மாமியே

ஏனணை மாமி மேலே மேலே துள்ளுறியே

பாரணை மாமி படுகுழியில் தள்ளுறியே

ஏனணை மாமி அவளெனக்கு

தெவிட்டாதவள் எனக்கு

பாரணை மாமி கட்டுறன் தாலியை - சின்ன மாமியே

பாடலை நித்தியின் குரலில் கேட்டு மகிழ இங்கே சொடுக்குங்கள்:

http://www.tfmpage.c...d/chinnamami.rm

http://rapidshare.com/files/269670955/491.htm.html

மக்கள் மயப்பட்டவை நித்தியின் பாடல்கள். எங்காவது ஒலித்துக் கொண்டுதானிருக்கப்போகின்றன.

http://srinoolakam.blogspot.com/2006/12/blog-post_13.html

Link to comment
Share on other sites

  • Replies 95
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சின்ன மாமியே உன் சின்ன மகளெங்கே..

இப்பாடலை அன்று முணுமுணுக்காத வாயே இல்லை என்று சொல்லுமளவுக்கு புகழ் பெற்ற ஈழத்துத் துள்ளிசைப் பாடல். இலங்கை, தமிழ்நாடு மட்டுமல்ல தமிழர்கள் வாழும் நாடுகள் முழுவதும் இப்பாடல் புகழ் பெற்றிருந்தது. இன்றும் கேட்டு ரசிக்கக்கூடிய பாடல். இப்பாடலுக்கு 40 வயதாகிறது.

இப்பாடலைப் பாடியவர் பொப்பிசைப் பிதா நித்தி கனகரத்தினம். 70களில் நித்தி கனகரத்தினம் இலங்கை மேடைகளில் கோலோச்சியவர். சுகததாச ஸ்டேடியத்தில் அரங்கம் நிறைந்த காட்சிகள் நடக்கும்.

அக்காலத்தில் நான் அவரை அறிந்தது ஒரு பொப் பாடகராக அல்லது மேடை பாடகராக மட்டுமே. பல காலத்துக்குப் பிறகு அன்றைய மட்டக்களப்பு பல்கலைக்கழகக் கல்லூரியில் (வந்தாறுமூலையில்) விரிவுரையாளராக சேர்ந்த போது தான் நித்தியை முதன் முதலாகச் சந்தித்தேன். பொப் பாடகராக அல்ல. பல்கலைக்கழக விரிவுரையாளராக. ஆமாம், விவசாயபீடத்தில் விரிவுரையாளராக இருந்தார். மேடைகளில் துள்ளிசை பாடிய அந்த மனிதரா இவர். ஆச்சரியமாக இருந்தது. மிகவும் அமைதியானவர். மிகவும் பண்பானவர். சிறந்த ஒரு விரிவுரையாளர். அப்போது அவர் பாடுவதை நிறுத்தி விட்டார் என்பது ஒரு கவலைக்குரிய விடயம் (அது ஏன் எண்டது பற்றிப் பிறகு சொல்லிறன்). ஆறு மாதங்கள் தான் அங்கு இருந்தேன். அந்த ஆறு மாதங்களும் மறக்க முடியாத நாட்கள். (இனப்பிரச்சினை மும்முரமாகத் தலைதூக்கியிருந்த நேரம் அது). முடிந்து வெளிக்கிடும் போது ஒரு பிரிவுபசார ஒன்றுகூடலை சக ஆசிரியர்கள் ஒழுங்கு செய்திருந்தனர். நித்தியும் கலந்து கொண்ட அந்த ஒன்றுகூடலை மறக்க முடியாது.

அண்மையில் மெல்பேர்ணில் இருந்து வெளியாகும் உள்ளூர்ப் பத்திரிகை ஒன்றில் எழுத்தாளர் லெ. முருகபூபதி அவர்கள் நித்தி கனகரத்தினம் அவர்களுடன் நடத்திய நேர்காணலை வாசிக்க நேர்ந்தது. (இப்பத்திரிகையில் இப்படி இடைக்கிடை ஒரு சில நல்ல தகவல்கள் வரும், அதுக்காகவே இந்த இலவசப் பத்திரிகையை இங்கு பலசரக்குக்கடையில் இருந்து பொறுக்கிக் கொண்டு வருவேன் என்பது வேறு விதயம்). அந்நேர்காணலில் சில முக்கிய அம்சங்களை உங்களுடன் பகிரலாம் என்றிருக்கிறன்.

நித்தி தற்போது அவுஸ்திரேலியாவின் விக்டோரியா பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக இருக்கிறார். அத்துடன் தமிழ் மூலிகை மருத்துவ ஆராய்ச்சியிலும் ஈடுபட்டிருக்கிறார்.

ஈழத்தில் யாழ்ப்பாணம் உரும்பராயில் பிறந்தவர். யாழ் மத்திய கல்லூரி, அம்பாறை ஹார்டி தொழில் நுட்பக்கல்லூரி ஆகியவற்றில் படித்துப் பின்னர் அலஹாபாத் பல்கலைக்கழகத்தில் விவசாய முதுமாணிப் பட்டம் பெற்றார்.

1955 ஆம் ஆண்டிலேயே பாட ஆரம்பித்து விட்டார். நாடகங்களிலும் நடித்திருக்கிறார். ஊர் மேடைகளில் கிண்டல் பாடல்கள் இயற்றியும் பாடியும் பாராட்டுப் பெற்றிருக்கிறார்.

நன்றி நுணா! :)

சின்ன மாமியே பாட்டு எங்கட சனம் ஊரில பாடேக்க தான் சின்ன வயதில கேட்டு இருக்கிறேன். உண்மையான பாட்டுகாறரை பற்றி அறிய தந்தற்கு நன்றி.

அவற்றில் ஒரு பாடல்:

ஆமணக்கம் சோலையிலே

பூமணக்கப் போற பெண்ணே

உன்னழகைக் கண்டவுடன்

கோமணங்கள் துள்ளுதடி

இப்படியான பாடல்களைத் தானே இயற்றிப் பாடினார்.

:icon_idea::):D

1983இல் நிகழ்ந்த இனப்படுகொலைகளினால் பெரிதும் விரக்தியடைந்திருந்த நித்தி இனி மேடைகளில் பாடுவதில்லை என்று சபதம் எடுத்திருக்கிறார். அதை இன்றுவரையில் கடைப்பிடித்தும் வருகிறார்.

:(:(:(

Link to comment
Share on other sites

சின்ன மாமியே நித்தி கனகரத்தினம்

Nithy.jpg

....

1955 ஆம் ஆண்டிலேயே பாட ஆரம்பித்து விட்டார். நாடகங்களிலும் நடித்திருக்கிறார். ஊர் மேடைகளில் கிண்டல் பாடல்கள் இயற்றியும் பாடியும் பாராட்டுப் பெற்றிருக்கிறார். அவற்றில் ஒரு பாடல்:

ஆமணக்கம் சோலையிலே

பூமணக்கப் போற பெண்ணே

உன்னழகைக் கண்டவுடன்

கோமணங்கள் துள்ளுதடி smiley-laughing021.gif

இப்படியான பாடல்களைத் தானே இயற்றிப் பாடினார்.

.....

http://srinoolakam.blogspot.com/2006/12/blog-post_13.html

இணைப்பிற்கு நன்றி நுணா. இவர் தான் இந்தப் பாடலைப் பாடினாரா? சிலோன் மனோகர் என்று ஒரு பாடகர் இருந்தார், அவர் தான் இந்தப் பாடலைப் பாடினார் என்று சொல்லிக் கேள்வி...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கடந்த வருடமென்று நினைக்கிறேன்.... நித்தி கனகரத்தினமே இல் ஒரு பேட்டியில் இந்தப் பாடல் தானே பாடியதாகவும் ஆனால் அனேகமானோர் சிலோன் மனோகரே பாடியதாகவும் நினைத்துக்கொண்டிருக்கிராறா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சின்ன மாமியே நித்தி கனகரத்தினம்

Nithy.jpg

ஆமணக்கம் சோலையிலே

பூமணக்கப் போற பெண்ணே

உன்னழகைக் கண்டவுடன்

கோமணங்கள் துள்ளுதடி

உண்மையில் எங்களுக்கு ஏற்ற நல்ல கருத்துள்ள பாட்டு .

:D:icon_idea:

நித்தி கனகரத்தினம் தொடர்ந்து பாடாமல் விட்டது , எமது தூரசிஷ்டமே .

அருமையான ஈழத்து பாடகர் பற்றி நினைவூட்டியமைக்கு நன்றி நுணாவிலான் . :)

Link to comment
Share on other sites

நித்தி கனகரட்ணத்தைப் பற்றி ஞாபகப் படுத்தியதற்க்கு நன்றி. நான் கனடா பயண அனுப்வைத்து எழுதிவரும் நாவலில் வீடும் நாடும் இழந்த ஈழத்தமிழர்கள் மொழியிலும் ஞாபகங்களிலும் தானே தாயகத்தைத் தக்க வைத்துக்கொண்டு வாழ்கிறோம் என்று எழுதினேன். அது எவ்வளவு உண்மை. நித்தி பற்றிய சேதி என்னதைப் போலவே பலரது மனதிலலும் தாயக நினைவுகளைக் கிளரவைக்கும்.1980பதுகளின் ஆரம்பத்தில் நான்னுடைய என் ஜப்பானிய தோழி ஆரியுடன் அவருடைய வீட்டில் தலைமறைவாக இருந்திருக்கிறேன். அமைதியானவர் ஆனால் மிகுந்த துணிச்சல் உள்ளவர். என்னுடைய தோழி ஆரி உலகப் புகழ் சினிமா காரர் அக்கிறொ குறசோவாவின்மாணவ உதவியாளராகப் பணிபுரிந்துகொண்டிருந்தார். ஆரியும் நல்ல பாடகி. அவருடய மனைவி மிகவும் இனிமையானவர். பிள்ளைகள் பட்டாம்பூச்சிச் சிறுவர்களாக இருந்தார்கள். அச்சத்துக்குப் பதைலாக கலைஞர்களின் திருவிழாப்ப்போல அந்த தலைமறைவு நாட்க்கள் கழிந்தது. அதுபற்றி ஒரு நாவல் எழுத விருப்பம். தலைமறைவின் பின்னணி சுவாரஸியமானது. வன்னியில் இருந்து நானும் ஆரியும் வவுனியா வந்தபோது டாக்டர் ராஜசுந்தரம் கைதாகியிருந்தார். ஆரியின் தந்தை ஜப்பனின் பெரிய தொலைக்காட்ச்சியான அசாக்கி சிம்பொனில் இயக்குனராக இருந்தார். நான் ஆரியை டாக்டர் ராஜசுந்தரம் வீட்டுக்கு அழைத்துச் சென்றேன். பல தகவல்கள் ஆவணங்கலை டாக்டரின் மனைவியிடமிருந்து சேகரித்தோம். அவற்றை கடத்திவர ஆரி சம்மதித்தாள். பின்னர் திருமலை சென்று வாகரை றெஸ்ற் ஹவுசில் தங்கியிருந்தோம். அங்கு பொலிஸ் எஸ்பியின் தம்பியான சிங்கள ததா ஒருவர் பேரழகியான ஆரியில் மோகமாகியதில் பிடித்தது தொல்லை. என்னைக் கைது செய்வதற்க்கு அவர் சூட்ட்சி செய்தார். நான் அவருக்கு செருப்பால் அடித்து விட்டேன். மக்களும் வாகரை டாக்கடராக இருந்த சிவராசாவும் ((பின்னர் சென்னையில் TRROநிர்வாகியாக இருந்தவர்) என்னக்கு உதவினர். எனக்கு முன்னமே தெரிந்த தமிழ் பொலிஸ் அதிகாரி பதவியில் இருந்தார். அவர் பெயர் தீசனோ தீபனோ என்று நினைக்கிறேன். அந்த தாதாவை கண்துடைப்புக்காக தடுத்து வைத்துக்கொண்டு என்னோடு பேரம் பேசினார்கள். இறுதியில் மட்டக்களப்பு மாவட்டத்தைவிட்டு உடனடியாக ஆரியும் நானும் வெளியேறவேண்டும் என உத்தரவிட்டார்கள். தனிப்படவும் அந்த அதிகாரி உடனே மட்டக்கலப்பை விட்டுப் போய்விடு ஆபத்தான கும்பல் என எச்சரித்தார். இந்த நிலையில் நான் நித்தியின் விருந்தினனாக மட்டகளப்பில் தங்கி இருந்தேன். நித்தி நல்ல கலைஞன். நல்ல கணவன். நல்ல தந்தை. எல்லாவற்றுக்கும் மேலாக நல்ல மனிதன். ஒரு பாடகன் என்கிற முறையில் நித்தி மீண்டும் பாடவேண்டிய காலம் இதுதான். ஒரு படுகொலையில் மெள்னித்த குரல் இன்னொரு படுகொலையில் உயிர்க்க வேண்டும். யாராவது நித்தியின் மின்னஞ்சல் விலாசத்தை அனுப்புங்கள் visjayapalan@gmail.com

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி இணைப்புக்கு நுணாவிலான். பொயற் உங்கள் பழைய நினைவுகளை மீட்டியுள்ளீர்கள். நித்தி போன்ற கலைஞர்கள் தொடர்ந்து பாட வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொயற்றும் , இப்படியான பாடல்களை முசுப்பாத்திக்காக இயற்ற முயற்சிக்கலாமே ......

ஜெயபாலனால் முடியும் .

தயக்கம் ஏனோ ......

Link to comment
Share on other sites

நித்தியின் பாடல்கள் சில:

http://tamilamutham.net/site/?p=Ceylon%20T...a&Itemid=27

http://tamilamutham.net/site/?p=Ceylon%20T...a&Itemid=27

நித்தி அவுஸ்திரேலியாவில் மீளப் பாடி வெளியிட்ட பாடல்கள் (எனினும் பழமை என்றும் இனிமைதான். :icon_mrgreen:

http://tamilamutham.net/site/?p=Australia%...a&Itemid=27

Link to comment
Share on other sites

சில பாடல்களின் வரிகள்:

கள்ளுக்கடைப் பக்கம் போகாதே

காலைப்பிடித்துக் கெஞ்சுகிறேன்

கண்ணும் புகைந்திடும்

நெஞ்சும் வரண்டிடும்

கைகால் உலர்ந்திடும் இந்த கள்ளாலே

ஆச்சி எந்தன் அப்புவும் இந்தக் கடையில் தான்

அடுத்தவீட்டு வாத்தியாரும் கடையில்தான்

விட்டமின் பீ எண்டு வைத்தியரும் சொன்னதாலே

விட்டேனோ கள்ளுக்குடியை நான்

பாவிப் பயலே கொஞ்சம் கேளடா

பாலூட்டி வளர்த்த நானுன் தாயடா

பற்றி எரியுதெந்தன் வயிறடா

பனங்கள்ளை மறந்து நீயும் வாழடா

கடவுள் தந்த பனைமரங்கள் தானடா

கடவுள் கள்ளைத் தொட்டதுண்டோ கேளடா

வாய்க்கொழுப்பும் மனத்திமிரும் வளர்ந்துவரும் உனக்கு நானும்

வாலறுக்கும் நாளும் வருமோ

கள்ளுக்குடி உன் குடியைக் கெடுத்திடும்

கடன்காரனாக உன்னை மாற்றிடும்

கண்டகண்ட பழக்கமெல்லாம் பழக்கிடும்

கடைசியில் கட்டையிலே கொண்டு போய்ச் சேர்த்திடும்

கடவுளே என் மகனும் இதனை உணரானோ

கள்ளுக்குடியை விட்டொழிந்து திருந்தானோ

அன்னை சொல்லு கேட்பானென்றால்

ஆறறிவு படைத்த அவனும்

பேரறிஞன் ஆகிடுவானே.

2.

லண்டனிலே மாப்பிளையாம் பெண் கேக்கிறாங்க

ஆயிரமாய் சம்பளமாம் எண்டு சொல்லுறாங்க

எத்தனையோ பொம்பளைங்க ஊர்பார்த்து வந்தாங்க

இன்னும் சில பொம்பளைங்க ஊர்பார்க்கப்போறாங்க

ஐயைய்யோ வெட்கக்கேடு யாருக்குத்தெரியும்?

வெளி நாட்டில் இன்று நடப்பதுதான் யாருக்குப்புரியும்?

நல்ல நல்ல மாப்பிள்ளையாம் பெண் கேக்கிறாங்க

ஆயிரமாய் சீதனத்தை அள்ள நிக்கிறாங்க

எத்தனையோ பொம்பளைங்க ஏமாந்து போனாங்க

இன்னும் சில பொம்பளைங்க ஏமாறப்போறாங்க

ஐயைய்யோ வெட்கக்கேடு யாருக்குத்தெரியும்?

இந்த நாட்டினுள்ளே நரிகள் என்று யாருக்குப் புரியும்?

அன்றொருநாள் நடந்ததொரு அவசரக்கலியாணம்

ப்ளேனிலேதான் பறந்துவந்தார் மாப்பிள்ளை டாம்பீகம்

மாப்பிள்ளையும் பெண்ணுமாக வெளியூர் பிரயாணம்

போன ப்ளேனில் திரும்பி வந்தாள் போச்சுது அவள் மானம்

ஐயைய்யோ வெட்கக்கேடு யாருக்குத்தெரியும்?

வெளி நாட்டில் இன்று நடப்பதுதான் யாருக்குப்புரியும்?

லண்டனிலே மாப்பிளையாம் பெண் கேக்கிறாங்க

ஆயிரமாய் சம்பளமாம் எண்டு சொல்லுறாங்க

ஐயைய்யோ வெட்கக்கேடு யாருக்குத்தெரியும்?

வெளி நாட்டில் இன்று நடப்பதுதான் யாருக்குப்புரியும்?

எஞ்சினீயர் எண்டு சொல்லிப் புளுகித்தள்ளினாராம்

லண்டனிலோர் ஹோட்டலிலே வெயிட்டர் வேலைதானாம்

கொண்டுபோன காசிலேதான் காரும் வாங்கினாராம்

என்று அந்த பெண்ணும் வந்து சொல்லி அழுதாளாம்

ஐயைய்யோ வெட்கக்கேடு யாருக்குத்தெரியும்?

வெளி நாட்டில் இன்று நடப்பதுதான் யாருக்குப்புரியும்?

லண்டனிலே மாப்பிளையாம் பெண் கேக்கிறாங்க

ஆயிரமாய் சம்பளமாம் எண்டு சொல்லுறாங்க

எத்தனையோ பொம்பளைங்க ஊர்பார்த்து வந்தாங்க

இன்னும் சில பொம்பளைங்க ஊர்பார்க்கப்போறாங்க

Link to comment
Share on other sites

தோழன் நித்தியைசென்ற தடவை எங்கே சந்தித்தேன் என்பது ஞாபகமில்லை. சமாதானப் பேச்சுவார்த்தை காலம் என்றும் ஏதோ ஒரு மேற்க்கு நாட்டு அரங்கம் என்றும் நினைக்கிறேன். எங்கள் காலத்து நாயகனான அந்த தோழன்னோடு அரங்கத்தின் ஓரத்தில் அமர்ந்து அவனது கிட்டார் இசைக்கு ஒரு பாடல் எழுத ஆரம்பித்தது ஞாபகத்தில் இருக்கு. நித்தியும் இசை அல்பம் வெளியிட்டு அடி வாங்கி இருப்பார் என்றே நினைக்கிறேன். பாடல் எழுதுங்கள் தொகுப்பு போடுங்கள் என்கிற கோரிக்கை ஆரோக்கியமானதுதான். கடன்மேல் கடன்பட்டாவது அதை செய்யுங்கள் என்கிற எதிர்பார்ப்புத்தான் கோபப்படுத்துகிறது. ஏற்கனவே கையைச் சுட்டபுண் இன்னும் ஆறவில்லை. நித்தியும் நானும் சேர்ந்து ஈழப்போர் IV ன்பின்னரான துயரத்தையும் மீண்டு எழும் கனவுகளையும் பதிவு செய்து ஒரு தொகுப்பு சென்னையில் தயாரிக்கலாம். ஆனால் அதைச் செயல்படுத்த யார் இருக்கிறார்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணும் புகைந்திடும்

நெஞ்சும் வரண்டிடும்

கைகால் உலர்ந்திடும் இந்த கள்ளாலே

இந்த "பிற்போக்குத் தனமான" வரிகளை ஒரு முன்னாள் குடிமகன் என்ற வகையில் நான் வன்மையாக கண்டிக்கிறேன். கள்ளு உடம்புக்குக் குளிர்ச்சியான பானம், விற்றமின்கள் நிறைந்தது. யாரப்பா அங்க..கு.சா, யாழ் நிலவன் ஓடிவாங்கோ, கள்ளின் மகிமையை எடுத்து விடுங்கோ..! :lol::lol:

Link to comment
Share on other sites

இந்த "பிற்போக்குத் தனமான" வரிகளை ஒரு முன்னாள் குடிமகன் என்ற வகையில் நான் வன்மையாக கண்டிக்கிறேன். கள்ளு உடம்புக்குக் குளிர்ச்சியான பானம், விற்றமின்கள் நிறைந்தது. யாரப்பா அங்க..கு.சா, யாழ் நிலவன் ஓடிவாங்கோ, கள்ளின் மகிமையை எடுத்து விடுங்கோ..! :(:lol:

விற்றமின்களை விமர்சித்தவர்களை வன்மையாகக் கண்டியுங்கோ. சாத்திரியை மறந்திட்டிட்டீங்கள் யஸ்ரின். அழகான பனைமரங்களின் நினைவு சாத்திரியிடமும் நிறைய உண்டல்லவா :(

Link to comment
Share on other sites

பாடல் எழுதுங்கள் தொகுப்பு போடுங்கள் என்கிற கோரிக்கை ஆரோக்கியமானதுதான். கடன்மேல் கடன்பட்டாவது அதை செய்யுங்கள் என்கிற எதிர்பார்ப்புத்தான் கோபப்படுத்துகிறது. ஏற்கனவே கையைச் சுட்டபுண் இன்னும் ஆறவில்லை. நித்தியும் நானும் சேர்ந்து ஈழப்போர் IV ன்பின்னரான துயரத்தையும் மீண்டு எழும் கனவுகளையும் பதிவு செய்து ஒரு தொகுப்பு சென்னையில் தயாரிக்கலாம். ஆனால் அதைச் செயல்படுத்த யார் இருக்கிறார்கள்?

இந்தப்பக்கத்துக்கு எமது ஊக்குவிப்புகள் இன்னும் முன்னேற்றம் காணவில்லை ஜெயபாலன் அவர்களே, சந்தைப்படுத்தல் எமது படைப்புகளுக்கு பெருத்த வரவேற்பை இன்னும் பெறவில்லை. இதற்கான காரணங்கள் இங்கு இதுவரை காலமும் குறிப்பிட்ட சிலருக்காக சிலரால் விதிக்கப்பட்ட விதிமுறைகள். இத்தைகய முயற்சிகளை வரவேற்று அதற்கு சிறிய பங்களிப்புகளைச் செய்வோரும் குறிப்பிட்ட சிலரே. அவர்கள் தான் எல்லாத்திற்கும் எள்ளாய் பங்கிடவும் வேண்டிய நிலமை. இவற்றைத் தாண்டிய முன்னெடுப்புகளை இன்னும் எமது கலையுலகம் செய்யவில்லை. முயலவுமில்லை.

நோர்வேயில் வசீகரன் முன்னெடுத்த முயற்சி எத்தனை தடைகளை நட்டங்களைத் தாண்டி வந்தது. முதல் தொகுப்பான காதல் கடிதம் இந்தியப்பாடலாசிரியர்களுக்க

Link to comment
Share on other sites

லண்டனிலே மாப்பிளையாம் பெண் கேக்கிறாங்க

ஆயிரமாய் சம்பளமாம் எண்டு சொல்லுறாங்க

எத்தனையோ பொம்பளைங்க ஊர்பார்த்து வந்தாங்க

இன்னும் சில பொம்பளைங்க ஊர்பார்க்கப்போறாங்க

ஐயைய்யோ வெட்கக்கேடு யாருக்குத்தெரியும்?

வெளி நாட்டில் இன்று நடப்பதுதான் யாருக்குப்புரியும்?

நல்ல நல்ல மாப்பிள்ளையாம் பெண் கேக்கிறாங்க

ஆயிரமாய் சீதனத்தை அள்ள நிக்கிறாங்க

எத்தனையோ பொம்பளைங்க ஏமாந்து போனாங்க

இன்னும் சில பொம்பளைங்க ஏமாறப்போறாங்க

ஐயைய்யோ வெட்கக்கேடு யாருக்குத்தெரியும்?

இந்த நாட்டினுள்ளே நரிகள் என்று யாருக்குப் புரியும்?

அன்றொருநாள் நடந்ததொரு அவசரக்கலியாணம்

ப்ளேனிலேதான் பறந்துவந்தார் மாப்பிள்ளை டாம்பீகம்

மாப்பிள்ளையும் பெண்ணுமாக வெளியூர் பிரயாணம்

போன ப்ளேனில் திரும்பி வந்தாள் போச்சுது அவள் மானம்

ஐயைய்யோ வெட்கக்கேடு யாருக்குத்தெரியும்?

வெளி நாட்டில் இன்று நடப்பதுதான் யாருக்குப்புரியும்?

லண்டனிலே மாப்பிளையாம் பெண் கேக்கிறாங்க

ஆயிரமாய் சம்பளமாம் எண்டு சொல்லுறாங்க

ஐயைய்யோ வெட்கக்கேடு யாருக்குத்தெரியும்?

வெளி நாட்டில் இன்று நடப்பதுதான் யாருக்குப்புரியும்?

எஞ்சினீயர் எண்டு சொல்லிப் புளுகித்தள்ளினாராம்

லண்டனிலோர் ஹோட்டலிலே வெயிட்டர் வேலைதானாம்

கொண்டுபோன காசிலேதான் காரும் வாங்கினாராம்

என்று அந்த பெண்ணும் வந்து சொல்லி அழுதாளாம்

ஐயைய்யோ வெட்கக்கேடு யாருக்குத்தெரியும்?

வெளி நாட்டில் இன்று நடப்பதுதான் யாருக்குப்புரியும்?

லண்டனிலே மாப்பிளையாம் பெண் கேக்கிறாங்க

ஆயிரமாய் சம்பளமாம் எண்டு சொல்லுறாங்க

எத்தனையோ பொம்பளைங்க ஊர்பார்த்து வந்தாங்க

இன்னும் சில பொம்பளைங்க ஊர்பார்க்கப்போறாங்க

:lol:

இந்தத் தொப்பியார் யாருக்கு அளவாகுதோ, அவர்களும் என்னுடம் சேர்ந்து போட்டுக் கொள்ளலாம் :(

Link to comment
Share on other sites

  • 4 months later...

அருமையான பாடல் பதிவுக்கு நன்றியப்பு :D:lol::lol::lol:

கள்ளுக்கடைப் பக்கம் போகாதே

காலைப்பிடித்துக் கெஞ்சுகிறேன்

கண்ணும் புகைந்திடும்

நெஞ்சும் வரண்டிடும்

கைகால் உலர்ந்திடும் இந்த கள்ளாலே

ஆச்சி எந்தன் அப்புவும் இந்தக் கடையில் தான்

அடுத்தவீட்டு வாத்தியாரும் கடையில்தான்

விட்டமின் பீ எண்டு வைத்தியரும் சொன்னதாலே

விட்டேனோ கள்ளுக்குடியை நான்

பாவிப் பயலே கொஞ்சம் கேளடா

பாலூட்டி வளர்த்த நானுன் தாயடா

பற்றி எரியுதெந்தன் வயிறடா

பனங்கள்ளை மறந்து நீயும் வாழடா

கடவுள் தந்த பனைமரங்கள் தானடா

கடவுள் கள்ளைத் தொட்டதுண்டோ கேளடா

வாய்க்கொழுப்பும் மனத்திமிரும் வளர்ந்துவரும் உனக்கு நானும்

வாலறுக்கும் நாளும் வருமோ

கள்ளுக்குடி உன் குடியைக் கெடுத்திடும்

கடன்காரனாக உன்னை மாற்றிடும்

கண்டகண்ட பழக்கமெல்லாம் பழக்கிடும்

கடைசியில் கட்டையிலே கொண்டு போய்ச் சேர்த்திடும்

கடவுளே என் மகனும் இதனை உணரானோ

கள்ளுக்குடியை விட்டொழிந்து திருந்தானோ

அன்னை சொல்லு கேட்பானென்றால்

ஆறறிவு படைத்த அவனும்

பேரறிஞன் ஆகிடுவானே.

பேசாமல் நெடுக்கரும் எண்டு போட்டிருக்கலாமே

:lol:

இந்தத் தொப்பியார் யாருக்கு அளவாகுதோ, அவர்களும் என்னுடம் சேர்ந்து போட்டுக் கொள்ளலாம் :(

:lol::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் இந்த பாடலுக்கும் ஒரு வரலாறே உண்டு

நான் சிறு வயதில் நன்றாக பாடுவேன்

சங்கீதத்தில் O/L இல் D எடுத்தேன்

எனது மாமியாரின்(எனது அம்மாவின் தமையனின்மனைவி) வீட்டுக்கு போனால் பாட்டுப்பாடச்சொல்லிக்கேட்பார்

அவரும் நன்றாக பாடுவார்

நான் இந்தப்பாட்டைத்தான் பாடுவேன்

அவரும் என்னோடு சேர்ந்து பாடுவார்

இறுதியில்

அவரது சின்ன மகளையே கட்டிக்கிட்டேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் இந்த பாடலுக்கும் ஒரு வரலாறே உண்டு

நான் சிறு வயதில் நன்றாக பாடுவேன்

சங்கீதத்தில் O/L இல் D எடுத்தேன்

எனது மாமியாரின்(எனது அம்மாவின் தமையனின்மனைவி) வீட்டுக்கு போனால் பாட்டுப்பாடச்சொல்லிக்கேட்பார்

அவரும் நன்றாக பாடுவார்

நான் இந்தப்பாட்டைத்தான் பாடுவேன்

அவரும் என்னோடு சேர்ந்து பாடுவார்

இறுதியில்

அவரது சின்ன மகளையே கட்டிக்கிட்டேன்

பாட்டை பாட வைத்து மகளை தள்ளீ விட்டா எனச் சொல்லுங்கள்.

Link to comment
Share on other sites

பாட்டை பாட வைத்து மகளை தள்ளீ விட்டா எனச் சொல்லுங்கள்.

இப்போ தானே உள்ளது வருகிறது, ரதி. :):huh:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாட்டை பாட வைத்து மகளை தள்ளீ விட்டா எனச் சொல்லுங்கள்.

மகளைத்தள்ளிட்டு போறதுக்காக பாடினேன் என்று சொல்லாதது

என்மீது தாங்கள் வைத்திருக்கும் மதிப்பை குறிக்கிறது..............?????????

நன்றி

இப்போ தானே உள்ளது வருகிறது, ரதி. :(:lol:

வரலாறு என்பது பொய் சொல்வதால் வருவதில்லை தோழரே..

ஆனால்

யாழில் பல பொய்கள் உலாவுவது மெய்தான்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாடிப் பெற்ற பரிசு :( என்று சொல்லலாமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாடிப் பெற்ற பரிசு :D என்று சொல்லலாமா?

smiley-music021.gifsmiley-music025.gifsmiley-music009.gif :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மேளதாளங்களுக்கு நன்றி சிறி

ஆனால் தாமதமாக

இன்னும் 3 வருடத்தில் 1/4 நூற்றாண்டு

Link to comment
Share on other sites

  • 7 months later...

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நேற்றைய தினம் எனும் திரியில் கள உறுப்பினர்களுக்கும் முக்கியமாக @goshan_che அவர்களுக்கும் நிர்வாகத்தினைச் சேர்ந்த உறுப்பினர் ஒருவருக்கும் இடையில் இடம் பெற்ற கருத்தாடலில் கள உறுப்பினர்களுக்கு ஏற்பட்ட அசெளகரியங்களுக்கு நிர்வாகம் தனது வருத்தத்தினைத் தெரிவிக்கின்றது.
    • இலங்கையில் இருந்து தப்பித்து புலம்பெயரும் பலரும் இனி ரசிய இராணுவ முன்னரக்குகளில். எப்படி இருந்த ரசியா ....
    • "அவளோடு என் நினைவுகள்…"   "உன் நினைவு மழையாய் பொழிய   என் விழியோரம் கண்ணீர் நனைக்க  மென்மை இதயம் அன்பால் துடிக்க  அன்பின் ஞாபகம் கதையாய் ஓடுது "   "மனக் கடல் குழம்பி பொங்க மவுனம் ஆகி நீயும் மறைய  மண்ணை விட்டு நானும் விலக   மங்கள அரிசியும் கை மாறியதே!"   நிகழ்வு நினைவாற்றல் [Episodic Memory] உண்மையில் ஒருவரின் வாழ்வில் முக்கியமான ஒன்று, ஏனென்றால், அவை தனிப்பட்ட அனுபவங்களை நினைவு படுத்துவதுடன், அவரின் வாழ்வை மற்றும் புரிந்துணர்வுகளை [கண்ணோட்டங்களை]  வடிவமைக்கக் கூடியதும் ஆகும். அப்படியான "அவளோடு என் நினைவுகள்…" தான் உங்களோடு பகிரப் போகிறேன்.   நான் அன்று இளம் பட்டதாரி வாலிபன். முதல் உத்தியோகம் கிடைத்து, இலங்கையின்,  காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை ஆகிய மூன்று நிருவாக மாவட்டங்களைத் தன்னுள் அடக்கிய தென் பகுதியில் பணியினை பொறுப்பேற்றேன். அது சிங்களவரை 94% அல்லது சற்று கூட கொண்ட ஒரு பகுதியாகும். ஆகவே அங்கு எப்படியாவது சிங்களம் கற்க வேண்டிய அவசியம் எனக்கு இருந்தது. எப்படியாவது புது அனுபவம் புது தெம்பு கொடுக்கும் என்ற துணிவில் தான் அந்த பதவியை நான் பொறுப்பேற்றேன்    முதல் நாள், அங்கு உள்ள பணி மேலாளரை சந்தித்து, என் பணி பற்றிய விபரங்களையும் மற்றும் அலுவலகம், தொழிற்சாலை போன்றவற்றையும் சுற்றி பார்க்க அன்று நேரம் போய்விட்டது. என்றாலும் இறுதி நேரத்தில் என் கடமையை ஆற்ற எனக்கு என ஒதுக்கிய அலுவலகத்தில் சற்று இளைப்பாற சந்தர்ப்பம் கிடைத்ததுடன், அங்கு எனக்கு உதவியாளராக இருப்பவர்களின் அறிமுகமும் கிடைத்தது. அங்கு தான் அவளை முதல் முதல் கண்டேன்! அவள் தான் என் தட்டச்சர் மற்றும் குமாஸ்தா [எழுத்தர்] ஆகும். அவளின் பெயர்  செல்வி டயாணி பெர்னான்டோபுள்ளே, பெயருக்கு ஏற்ற தோழமையான இயல்பு அவள் தன்னை அறிமுகப் படுத்தும் பொழுது தானாக தெரிந்தது. அழகும் அறிவும் பின்னிப்பிணைந்து அவளை ஒரு சிறப்பு நபராக சொல்லாமல் சொல்லிக்கொண்டு இருந்தது. அவளுக்கு கொஞ்சம் கொஞ்சம் தமிழும் தெரிந்திருந்தது எனக்கு அனுகூலமாகவும் இருந்தது.    செம்பொன்னில்செய்து செங்குழம்புச் சித்திரங்கள் எழுதிய இரு செப்புகளை ஒரு பூங்கொம்பு தாங்கி நிற்பது போன்று பொலியும் காட்டு முலைக்கொடி போன்ற அவளின் முழு உருவமும், அதில் வில் போல் வளைந்து இருக்கும் புருவமும் மலரிதழ் போன்ற இனிய சொல் பேசும் சிவந்த வாயும், நல் முத்துக்கள் சேர்ந்தது போன்ற  வெண்மையான பல்லும், அசைகின்ற மூங்கில் போன்ற பருத்த தோளும்,  காந்தள் மலர் போன்ற மெல்லிய விரல்களும், பிறரை வருத்தும்,எழுச்சியும் இளமையும் உடைய மார்பகங்களையும் பிறர் பார்த்தால் இருக்கிறதே  தெரியாத வருந்தும் இடையும் யாரைத்தான் விட்டு வைக்கும்.    அடுத்தநாள் வேலைக்கு போகும் பொழுது, அவளும் பேருந்தால் இறங்கி நடந்து வருவதை கண்டேன். நான் தொழிற்சாலைக்கு கொஞ்சம் தள்ளி அரச விடுதியில் தங்கி இருந்தேன். ஆகவே மோட்டார் சைக்கிலில் தான் பயணம். ஆகவே ஹலோ சொல்லிவிட்டு நான் நகர்ந்து போய்விட்டேன்.   உள் மனதில் அவளையும் ஏற்றி போவமோ என்று ஒரு ஆசை இருந்தாலும், இன்னும் நாம் ஒன்றாக வேலை செய்யவோ, ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளவோ இல்லாத நிலையில், அதற்கு இன்னும் நேர காலம் அமையவில்லை என்று அதை தவிர்த்தேன்.    என் அறையில் நானும், அவளும் ஒரு பியூன் [சேவகன்] மட்டுமே. முதல் ஒன்று இரண்டு கிழமை, எனக்கு அங்கு இதுவரை நடந்த வேலைகள், இப்ப நடப்பவை , இனி என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி அலசுவதிலேயே காலம் போய் விட்டது. நல்ல காலம் எனக்கு கீழ் நேரடியாக வேலை செய்யும் உதவி பொறியியலாளர்கள், மேற்பார்வையாளர்கள் எல்லோரும் ஆங்கிலம் பேசுவார்கள். வேலையாட்களும் மற்றவர்களுடனும் தான் மொழி பிரச்சனை இருந்தது.    தொழிற்சாலைக்குள் இவர்களின் உதவி வரப்பிரசாதமாக இருந்தது. அதே போல, அலுவலகத்திற்குள் இவளின் உதவிதான் என்னை சமாளிக்க வைத்தது.     மூன்றாவது கிழமை, நான் கொஞ்சம் ஓய்வாக இருந்தேன், அவளின் வேலைகளும் குறைந்துபோய் இருந்தது. பியூன் ஒரு கிழமை விடுதலையில் போய்விட்டார். 'ஆயுபோவான் சார்' என்ற அவளின் குரல் கேட்டு திரும்பினேன். அவள் காபி கொண்டுவந்து குடியுங்க என்று வைத்துவிடு தன் இருப்பிடத்துக்கு போனாள். இது தான் நல்ல தருணம் என்று, அவளை, அவளுடைய காபியுடன் என் மேசைக்கு முன்னால் இருக்கும் கதிரையில் அமரும் படி வரவேற்றேன். அவள் கொஞ்சம் தயங்கினாலும், வந்து அமர்ந்தாள்.    நாம் இருவரும் அவரவர் குடும்பங்கள், படித்த இடங்கள் மற்றும்  பொது விடயங்களைப்பற்றி காபி குடித்துக்கொண்டு கதைத்தோம். அது தான் நாம் இருவரும் முதல் முதல் விரிவாக, ஒருவரை ஒருவர் அறிமுகப் படுத்திய நாள். அவள் ஒருவரின் வீட்டில், ஒரு அறையில் வாடகைக்கு இருப்பதாகவும், ஆனால், நேரடியான பேருந்து இல்லாததால், இரண்டு பேருந்து எடுத்து வருவதாகவும், தன் சொந்த இடம் சிலாபம் என்றும் கூறினாள். அப்ப தான் அவளுக்கு கொஞ்சம் கொஞ்சம் தமிழ் தெரிவதின் காரணம் புரிந்தது.    சிலாபம், புத்தளம், நீர்கொழும்பு போன்ற கரையோரப் பகுதிகளில், தங்கள் பாதுகாப்புக்காகப் போர்த்துக்கேயரால் குடியமர்த்தப் பட்ட கத்தோலிக்க மதத்திற்கு மாற்றப் பட்ட தமிழ் பரதவர்களது பிள்ளைகள் முதலில் கத்தோலிக்க பாடசாலைகளில் தமிழில் கற்றார்கள். பிற்காலத்தில் அந்த பாடசாலைகளில் இருந்த தமிழ் மொழிப் பிரிவு மூடப் பட்டு அனைவரும் சிங்கள மொழி ஊடாக கற்க பணிக்கப் பட்டார்கள். எனவே பிள்ளைகள் வளர்ந்து பெரியவர் ஆனதும், வீட்டு மொழியும் இயற்கையாக சிங்களம் ஆகி, முழுமையாக இன மாற்றம்  20 ஆம் நூற்றாண்டில் அடைந்தார்கள் என்று நான் முன்பு படித்த வரலாறு நினைவுக்கு வந்தது. இந்த  ஒருமைப்படுத்தலுக்கு (Assimilation)  காரணமானவர் ஒரு கத்தோலிக்க மதகுருவே ஆகும்!  பேராயர் எட்மன்ட் பீரிஸ் (பிறப்பு 27-12-1897) ஆவர்!!    அன்று தொடங்கிய கொஞ்சம் நெருங்கிய நட்பு, நாளடைவில் வளர, அவளின், அழகும், இனிய மொழியும், நளினமும் கட்டாயம் ஒரு காரணம் என்று சொல்ல வேண்டும். அவளும் வீட்டில் இருந்து தானே சமைத்த சிங்கள பண்பாட்டு சிற்றுண்டிகள், சில வேளை மதிய உணவும் கொண்டு வந்தாள்.  நானும் கைம்மாறாக காலையும் மாலையும் என் மோட்டார் சைக்கிலில் ஏற்றி இறக்குவதும், மாலை நேரத்தில் இருவரும் கடற்கரையில் பொழுது போக்குவதும், சில வேளை உணவு விடுதியில் சாப்பிடுவதுமாக, மகிழ்வாக நட்பு நெருங்க தொடங்கியது.     கொஞ்சம் கொஞ்சமாக, அவள் என்னுடன் பயணிக்கும் பொழுது, பின்னால் இருக்கையை பிடிப்பதை விடுத்து, தெரிந்தும் தெரியாமலும், தான் விழாமல் இருக்க, என்னை இருக்க பிடிக்க தொடங்கினாள்.       "செண்பகப் பூக்களை சித்திரை மாதத்தில்  தென்றலும் தீண்டியதே  தென்றலின் தீண்டலில் செண்பகப் பூக்களில்  சிந்தனை மாறியதே  சிந்தனை மாறிய வேளையில் மன்மதன்  அம்புகள் பாய்ந்தனவே  மன்மதன் அம்புகள் தாங்கிய காதலர்  வாழிய வாழியவே!"                     எளிமையாக, மகிழ்வாக அவள் அழகின் உற்சாக தருணங்கள் மனதை கவர, சந்தோசம் தரும் அவள் உடலின் பட்டும் படாமலும் ஏற்படும் மெல்லிய தொடு உணர்வை [ஸ்பரிசம்] எப்படி வர்ணிப்பேன். பெண்தான் ஆணுக்கு பெரும் கொடை, அவளின் ஒரு ஸ்பரிசம் நமது நாளையே மலர்த்தி விடுகிறது. ஒருவனுக்கு ஒரு வார்த்தை அல்லது உரையாடல் எவ்வளவு நம்பிக்கையை கொடுக்கிறதோ, அதே மாதிரி, நட்பும் பிரியமும் [வாஞ்சையும்] அது நிகழும் தருணங்களின் மேல் மகத்தான உண்மையோடு இருக்கின்றன. அந்த உண்மையிலேயே என் வாழ்க்கை அன்றில் இருந்து மலரத் தொடங்கியது.     அதன் விளைவு, ஒரு வார இறுதியில், 1977 ஆகஸ்ட் 13  சனிக்  கிழமை, டயாணி பெர்னான்டோபுள்ளே  என்ற பவளக்கொடியுடன் நான் பவளப் பாறைகளுக்கு சிறப்பு பெற்ற,  காலியிலிருந்து கிட்டத்தட்ட 17 கி.மீ தொலைவில் அமைந்துள்ள, இக்கடுவை (ஹிக்கடுவை) என்ற கடற்கரை நகரம் போனோம். அங்கு எம்மை தெரிந்தவர்கள் எவருமே இல்லை. அது எமக்கு ஒரு சுதந்திரம் தந்தது போல இருந்தது.     "வட்டநிலா அவள் முகத்தில் ஒளிர  கருங்கூந்தல் மேகம் போல் ஆட     ஒட்டியிருந்த என் மனமும் உருக  விழிகள் இரண்டும் அம்பு வீச   மெல்லிய இடை கைகள் வருட   கொஞ்சி பேசி இழுத்து அணைக்க   கச்சு அடர்ந்திருக்கும் தனபாரம்  தொட்டு என்னை வருத்தி சென்றது!"       முதல் முதல் இருவரும் எம்மை அறியாமலே முத்தம் பரிமாறினோம். அப்ப எமக்கு தெரியா இதுவே முதலும் கடைசியும் என்று. ஆமாம். 1977 சூலை 21 இல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில்  தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினர்கள், 23 இடங்களில் போட்டியிட்டு 18 இடங்களில்  வெற்றி பெற்று, நாடாளுமன்றத்தில் இரண்டாவது அதிகப்படியான உறுப்பினர்களைக் கொண்ட பெரிய கட்சியாக வந்து, அதன் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் முதல் முதல் தமிழர் ஒருவர் எதிர்க்கட்சி தலைவராக பதவியேற்றார். இது,  இந்த இனிய உறவுக்கும் ஒரு ஆப்பு வைக்கும் என்று கனவிலும் நான் சிந்திக்கவில்லை.  தமிழ்ப் பகுதிகளுக்கு வெளியே வாழும் இலங்கைத் தமிழருக்கு எதிராக ஆகஸ்ட் 12 , வெள்ளிக்கிழமை, வன்முறைகள் ஆரம்பித்து விட்டதாக வந்த செய்தியே அது.    நாம் உடனடியாக எமது திட்டத்தை இடை நடுவில் கைவிட்டு, எனது விடுதிக்கு திரும்பினோம். அவளிடம் அதற்கு பிறகு பேசுவதற்கும் சந்தர்ப்பம் சரிவரவில்லை. காரணம் தமிழில் கதைத்தால், அது எமக்கு மேலே வன்முறை தொடர எதுவாக போய்விடும். ஆகவே மௌனம் மட்டுமே எமக்கு இடையில் நிலவியது. அவளை அவளின் தற்காலிக வீட்டில் இறக்கி விட்டு, நான் அவசரம் அவசரமாக என் அரச விடுதியில், முக்கிய பொருட்களையும் ஆவணங்களையும் எடுத்துக் கொண்டு, எனக்கு தெரிந்த சிங்கள காவற்படை அதிகாரி வீட்டில் ஒரு சில நாள் தங்கி, பின் யாழ்ப்பாணம் புறப்பட்டேன்.    அதன் பின் நான் வெளி நாட்டில் வேலை எடுத்து, இலங்கையை விட்டே போய் விட்டேன். நான் யாழ்ப்பாணத்தில் இருந்தும் அதன் பின் வெளிநாட்டில் இருந்தும் அவளுக்கு போட்ட ஒரு கடிதத்துக்கும் பதில் வராததால், அதன் பின் அவள் நினைவுகள் மனக் கடலில் இருந்து கரை ஒதுங்கி விட்டது.    என்றாலும் அவளுக்கு என்ன நடந்தது ?, ஏன் பதில் இல்லை என இன்றும் சிலவேளை மனதை வாட்டும். அன்று நான் ஒன்றுமே கதைக்காமல் , காலத்தின் கோலத்தால் திடீரென பிரிந்தது அவசரமாக போனதால், கோபம் கொண்டாளோ நான் அறியேன்    `செல்லாமை உண்டேல் எனக்குரை மற்று நின் வல்வரவு வாழ்வார்க் குரை!’   `நீ என்னை விட்டுப் போகவில்லை என்ற நல்ல தகவலைச் சொல்வதானால் என்னிடம் இப்பவே, உடனே சொல், இல்லை போய் விட்டு விரைவில் திரும்பி விடுவேன் என்ற தகவலைச் சொல்வ தென்றால் [கடிதம் மூலமோ அல்லது வேறு வழியாகவோ] நீ வரும் வரை யார் வாழ்வார்களோ அவர்களிடம் போய்ச் சொல்! என்று தான் என் மடல்களுக்கு மறுமொழி போடவில்லையோ?, நான் அறியேன் பராபரமே !!      நன்றி    [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • "தைரியமானவள்"     வவுனியாவில் உள்ள  ஒரு குக்கிராமம் இது. இங்கு பெருமளவில் இந்துக்களையும் சிறிய அளவில் கிறித்தவர்களையும் கொண்டுள்ள போதிலும் மக்கள் மதங்களுக்கு அப்பாற்பட்டு ஒரு குடும்பம்போல் வாழ்கின்ற ஒரு சமாதானம் நிலவும் கிராமம் இதுவாகும்.  இக் கிராமமானது அங்கு உள்ள ஒரு பெரும் குளத்தைச் சேர்ந்த நிலங்களைக் காடு வெட்டி துப்புரவு செய்து கமம் செய்து உருவாக்கப்பட்டது என்பது வரலாறு ஆகும்.    அங்கு தான் கமங்களில் கூலிவேலை செய்யும் தாய் தந்தையரின் இளைய மகளாக, அவள் இருந்தாள். கோவலன் கண்ட கண்ணகியின் அழகு கூட இவளுக்கு நிகரில்லை!         "மாயிரும் பீலி மணி நிற மஞ்சை நின் சாயர் கிடைந்து தங்கான் அடையவும் ......... அன்ன நன்னுதல் மென்னடை கழிந்து நன்னீர்ப் பண்ணை நளி மலர் செரியவும் ........... அளிய தாமே சிறு பசுன் கிளியே குழளும் யாழும் அமிழ்துங் குழைத்த நின் மழைக் கிளவிக்கு வருந்தின வாகியும் மட நடை மாது நின் மலர்க்கையீ நீங்காது"   கரிய பெரிய மயில்கள் உன் தோற்றத்தை கண்டு தோற்று அவைகள் கூட்டை சென்று அடைகின்றன .. அன்னப் பறவைகள் உன் மேன்மையுடைய நடைக்கு பயந்து நன்னீர் பூக்கள் பின் சென்று மறைகின்றன .. பசுங் கிளிகள் குழழின் இசையையும், யாழின் இசையையும்,அமிர்த்தத்யும் கலந்த உன் சொற்களுக்கு போட்டி இட முடியாமல் வருந்தி அதனை கற்பதற்காக உன்னை பிரியாமல் உள்ளன என்றான் கோவலன். ஆனால் இவள் அதற்கும் மேலாக, "அரிசந்திர புராணம்" வர்ணிக்கும் பெண்களின் விழி அழகை அப்படியே கொண்டு இருந்தாள்   "கடலினைக் கயலைக் கனையமேன் பினையைக் காவியை கருவிள மலரை வடுவினைக் கொடிய மறலியை வலையை வாழை வெண் ர்ரவுநீன் டகன்று கொடுவினை குடி கொண்டிருபுறம் தாவிக் குமிழையும் குழைyaiயும் சீறி விடமெனக் கறுப்பூர் றரிபரந துங்கை வேலினும் கூறிய விழியால்"   ஒப்புமையில் கடலினையும், மீனையும்,அம்பையும், மென்மையான பெண் மானையும் நீலோற்பல மலரையும் கருவிளம் பூவையும், பார்வையால் ஆடவரை துன்புறுத்தி கவர்வதில் கொடிய எமனையும், வலையையும், வாளையும் வென்று முற்றிலும் செவியளவு நீண்டு அகன்று கண்டார் உயிர் உண்ணும் கொடுந்தொழில் நிலை பெற்று இரண்டு பக்கங்களிலும் தாவி குமிழாம் பூ போன்ற மூக்கும், விசம் போல் கருநிறம் பொருந்தி கூரிய வேலை விட கூர்மையான கண்களை உடையவள் இவள். அதனால்தானோ என்னவோ பெயர்கூட ' மலர்விழி'    காட்டோடு அண்டிய ஒரு இடத்தில், சிறு குடிசை ஒன்றில் பெற்றோருடனும் ஒரு அண்ணனுடனும் வாழ்ந்து வந்தாள். அவள் பாடசாலைக்கு மூன்று மைல் , காட்டோடும்   கமமோடும் நடந்து தான் போவாள். குடிசையும் பெரிய வசதி ஒன்றும் இல்லை. ஆனால், பெற்றோருக்கு  கமத்துக்கு கூலிவேலைக்கு போக வசதியான இடமாக இருந்தது.    அவள் இப்ப பத்தாம் வகுப்பு மாணவி, பெண்மை பூரித்து துள்ளும் வயது. பாடசாலைக்கு அருகில் ஒரு பெரிய பலசரக்கு கடையும், அதனுடன் கூடிய  சிற்றுண்டிச்சாலையும் புடவை கடையும் இருந்தது. இந்த மூன்றுக்கும் முதலாளி ஒருவரே, பெரும் பணக்காரர். அவரின் ஒரு மகன், யாழ் பல்கலைக்கழகத்தில் படித்தவர்,  பரீடசை எடுத்து விட்டு வீட்டில் மறுமொழி வரும் மட்டும் காத்து இருக்கிறார். எனவே அவ்வவ்போது தந்தைக்கு ஓய்வு கொடுத்து, கடையை கவனிக்க தொடங்கினார்.    மலர்விழி தோழிகளுடன், பாடசாலை முடிய கடைப்பக்கம் போவார். ஆனால் தோழிகள் வாங்குவதை, மற்றும் அங்கு உள்ளவற்றை பார்ப்பதை தவிர, மற்றும் படி ஒன்றும் வாங்குவதில்லை. அந்த வசதி ஒன்றும் அவருக்கு இல்லை. அது மட்டும் அல்ல, ஒரு சில வினாடிகளே அங்கு நிற்பார். காரணம் மூன்று மைல் நடந்து வீடு போகவேண்டும். அவருடன் ஒரு சில பிள்ளைகளும் சேர்ந்து நடப்பதால், ஆளுக்கு ஆள் துணையாக.    கம்பனின் மகன் அம்பிகாபதி போல இந்த முதலாளியின் மகன், சங்கரும் அவளை முதல் முதல் பார்த்தவுடன், அவன் கண்ணுக்கு அவள் உருவம் மனித உருவமாகவே தெரியவில்லை. அவன் கற்பனை  கொடியோடும் குளத்தோடும் மீனோடும் உறவாடிற்று    “மைவடிவக் குழலியர்தம் வதனத்தை         நிகர்‘ஒவ்வா மதியே! மானே!! செய்வடிவைச் சிற்றிடையை வேய்தோளைத்         திருநகையைத் தெய்வ மாக இவ்வடிவைப் படைத்தவடி வெவ்வடிவோ         நானறியேன்! உண்மை யாகக் கைபடியத் திருமகளைப் படைத்திவளைப்         படைத்தனன் நல்கமலத் தோனே! ”      பொற்கொடியாளே,  வாடாத உன் தலையில் மழைமேகத்தை சுமந்தவளே. பிறை அணிந்த தாமரை முகத்தாளே, நீ கேட்டாள், உனக்காக  எதையும் தரத் தயாராக உள்ள கற்பகத்தரு போல் நான் நிக்கிறேன் என்று அவன் சொல்லாமல் அவளிடம் சொல்லிக்கொண்டு தன்னை மறந்து நின்றான்.    ஒரு சில நாட்கள் ஓட, அவன் மெல்ல மெல்ல அவளுடன் கதைக்க தொடங்கினான். அவனும் அழகில் கம்பீரத்தில் குறைந்தவன் அல்ல.    "எண் அரும் நலத்தினாள்     இனையள் நின்றுழி, கண்ணொடு கண் இணை     கவ்வி, ஒன்றை ஒன்று உண்ணவும், நிலை பெறாது     உணர்வும் ஒன்றிட, அண்ணலும் நோக்கினான்!     அவளும் நோக்கினாள்."   அழகின் எல்லை இது தான் என்று நினைப்பதற்கும் அரிய அழகுடைய அவளை, ஒருவர் கண்களோடு, மற்றொருவர் கண்கள் கவர்ந்துப் பற்றிக் கொண்டு, ஒன்றை ஒன்று கூடி ஒன்று படவும், அவனும் அவளை பார்த்தான். அவளும் அவனை பார்த்தாள்.  அவளுக்கும் உண்மையில் ஆசை இருந்தாலும், அவளின் நிலைமை, கவனமாக இருக்க வேண்டும் என்று உறுத்தியது. காரணம் இவன் பெரும் பணக்கார பையன், மற்றும் பட்டதாரி ஆகப்போகிறவன். என்றாலும் அவன் வாக்குறுதிகள் நம்பிக்கைகள் கொடுத்து, அவளும் அப்பாவிதானே, நம்பி இருவரும் கொஞ்சம் கொஞ்சம் நெருங்க தொடங்கினார்கள். அவளின் பெற்றோர் கூலி வேலைக்கு போனால், வீடு திரும்ப இரவாகிடும், அண்ணனும் , நண்பர்களுடன் போய்விடுவார். எனவே, சங்கர் இப்ப அவளை தனது மோட்டார் சைக்கிளில் வீட்டில் இறக்குவதும், அப்படியே , அந்த சின்ன குடிசையில் தனிய கதைத்து மகிழ்வதும், சிற்றுண்டிகள், குளிர்பானங்கள் எடுத்துக்கொண்டு போய் இருவரும் அங்கு அவையை அனுபவிப்பதும் என காலம் போகத் தொடங்கியது. அத்துடன் அவன் அவளுக்கு தெரியாத பாடங்களும் படிப்பித்தான். எனவே சிலவேளை பெற்றோர்கள் அறிய வந்தாலும், அது ஒரு சாட்டாகவும் அவர்களுக்கு இருந்தது. ஆனால் அது தான் அவர்களை மேலும் இறுக்கமாக இணைத்ததும் எனலாம்.   "இசை போன்ற மெல்லிய  மொழி இடைவெளி குறைக்க வழி சமைக்க   இறைவி நேரே வந்தது போல  இதயம் மகிழ பாடம் புகட்டினான்! "   "இருசொல் இணைதல் புணர்ச்சி என்று  இரண்டு பொருள்பட இலக்கணம் சொல்லி  இங்கிதமாய் விளக்கி அவளைத் தழுவி  இருவரும் கூடி இன்பம் கண்டனர்!"   மறுமொழியும் வர, அவன் மேற்படிப்புக்கு வெளிநாடு போய்விட்டான் அதன் பிறகு தான் அவளின் வாழ்வில் வெறுமை தோன்ற தொடங்கியது. அவளின் உடலிலும் மாற்றம் தென்பட்டது. அவள் இப்ப ஒரு குழந்தைக்கு தாயென மருத்துவரும் உறுதி செய்து விட்டனர். தந்தை அந்த முதலாளியிடம் நடந்தவற்றை சொல்லி, மகளை மருமகளாக ஏற்கும் படி மற்றும் அவரின் மகனின் விலாசத்தை எடுத்தால், அவனுக்கு செய்தி அனுப்பலாம் என்று போனவர்தான், பின் வீடு திரும்பவே இல்லை. அன்று அங்கு போர்க்காலம். ஆகவே உண்மையில் என்ன நடந்தது என்று யாருக்கும் தெரியாது? அண்ணனும் தந்தையை தேட போனவர், இடையில் ஷெல் பட்டு இறந்துவிட்டார். இப்ப தான் அவள் தன் அப்பாவி தனத்தை உணர்ந்தாள். முன்பு, அவனுடன் பழகும் பொழுது  தைரியமாக இருந்து இருந்தால், இந்த நிலை வந்திருக்காது. நம்பி கெட்டது அவளை வருத்தியது. "சாது மிரண்டால் காடு கொள்ளாது". அவள் துணிந்து விட்டாள். தைரியம் பெற்றாள்.    அவளின் கதை அந்த ஊரில் பரவத் தொடங்கியது. அந்த முதலாளி பணத்தை கொடுத்து சமாளிக்க எத்தனித்தார். கருவை கலைக்கும் படியும் வேண்டினார். ஆனால் அவள் இப்ப தைரியமானாள். அதை ஏற்கவில்லை. அவளின் ஒரே குரல், இவன் உங்கள் பேரன், உங்க மகனின் மகன். அதில் மாற்றம் இல்லை. எந்த பேச்சுக்கும் இனி இடமில்லை, பணத்தை அவள் மதிக்கவே இல்லை. தூக்கி எறிந்தாள். தந்தை, அண்ணன் இருவரையும் இழந்துவிட்டாள். இனி தானே தன் வாழ்வை தீர்க்க தைரியமாக புறப்பட்டாள்!    கண்ணகி அரசசபையில் தைரியம் கொண்டு போனது போல,    ‘தேரா மன்னா! செப்புவது உடையேன்'    ஆராய்ந்து பார்க்காத முதலாளி நான் சொல்வதைக் கேள் என, வாயும் வயிறுமாக முதலாளியின் வீட்டின் கதவில் நின்ற காவலாளியிடம் உரக்க சொன்னாள்.    "வாழ்தல் வேண்டி, ஊழ்வினை துரப்ப, சூழ் கழல் மன்னா! நின் நகர்ப் புகுந்து,"   கூலி செய்து, எம் கையையால் நாமே வாழ்வதற்காக உன் ஊருக்கு வந்தோம். ஊழ்வினை துரத்திக்கொண்டு வர வந்தோம் என்று துணிச்சலாக கூறினாள். அவளின் துணிவு, புத்திகூர்மை, அழகு, கோபத்திலும் அவளின் நளினம், உண்மையான பேச்சு சங்கரின் தாயை நன்றாகவே கவர்ந்தது. சங்கரின் தாய் அவளை உள்ளே வரும் படி அழைத்து, அங்கு முன் விறாந்தையில் இருந்த சோபாவில் அமரச் சொன்னாள். பின் சங்கரின் தந்தையுடன் எதோ கதைத்தார். அவளுக்கு ஒன்றும் புரியவில்லை. எதாவது தந்திரமோ என்று தைரியமாக, எதையும் எதிர்க்க துணிந்து நின்றாள். இந்த இடைவெளியில், அவர்களின் வேலைக்காரி காப்பி கொண்டுவந்து அவளுக்கு கொடுத்தார். ஆனால் அதை அவள் வாங்க மறுத்தார். சிற்றுண்டி பெற்று தானே இன்று இந்த நிலை என்று அவள் மனது கொதித்துக்கொண்டு இருந்தது.   "நெஞ்சே நெஞ்சே துணிந்து விடு நீதியின் கண்களை திறந்து விடு நச்சு பாம்புகள் படமெடுத்தால் அச்சம் வேண்டாம் அழித்து விடு"   "பணிந்து பணிந்து இந்த பூமி வளைந்தது குனிந்து குனிந்து குனிந்த கூனும் உடைந்தது வெள்ளி வெள்ளி காசுக்கு விற்பவன் மகனில்லை ஓர் மகனில்லை"   அவர்களுக்கு அது புரிந்துவிட்டது. தாய் அவள் அருகில் வந்து, மகனுக்கு தொலைபேசி அழைப்பு விட்டுள்ளோம். எமக்கு உண்மை தெரியாது. அது  சரியாக அறிந்ததும் , உன் பிரச்னைக்கு தீர்வு காண்போம் என்றனர். அவளின் துணிந்த பார்வை, தைரியமாக எடுத்த முடிவு, ஒரு பதிலை நோக்கி அசைவதை காண்டாள்.      சங்கரும் கொஞ்ச நேரத்தால் தொலைபேசியில் வந்தும் வராததுமாக, முதலில் மலர்விழியையே கூப்பிட்டான். அவளுடன் ஏதேதோ கதைதான். வீறாப்புடன், தைரியமாக வந்தவள், தன் வேலை முடிந்தது கண்டு, இப்ப ஒரு மணமகள் மாதிரி கால் விரலால் கொடு போட தொடங்கி விட்டாள். பெற்றோருக்கும் விளங்கிவிட்டது. சங்கரும் பின் பெற்றோருடன் எதோ பயந்து பயந்து கூறிக்கொண்டு இருந்தார். எல்லோர் முகத்திலும் நிம்மதி, மகிழ்ச்சி  நிழலிட்டிருந்தது அங்கு ஒரு சுமுக நிலையை ஏற்படுத்தியது.    "தைரியம் என்பது பயம் இல்லாதது அல்ல, அதன் மீதான வெற்றி என்பதை அவள் காண்டாள். தைரியமானவள் பயப்படாதவள் அல்ல, அந்த பயத்தை வெல்பவளே"    நன்றி     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]     
    • ஒருவர் எழுதும் கருத்துக்களை பொறுத்தே பதில் கருத்துக்களும் வரும் மற்றும்படி தனிப்பட்ட கோபதாபங்கள் எதுவும் இல்லை!
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.