Jump to content

சின்ன மாமியே நித்தி கனகரத்தினம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பாட்டுக்கு நன்றி நுணாவிலான்

அடிடா சுந்தரலிங்கம்...அதையும் இருந்தால் இணைத்து விடவும்

வாத்தியார்

*********

Link to comment
Share on other sites

  • Replies 95
  • Created
  • Last Reply

பாட்டுக்கு நன்றி நுணாவிலான்

அடிடா சுந்தரலிங்கம்...அதையும் இருந்தால் இணைத்து விடவும்

வாத்தியார்

*********

அடிடா சுந்தரலிங்கம்…அடிடா.. அடிடா..

அடிடா சுந்தரலிங்கம்…

வயசுக்கு பயனில்லையய்யா வாய் தான் இழுக்குதய்யா

பதுங்குற எலி தானய்யா..

சுந்தரலிங்கமய்யா சேலையொன்று கட்டுமய்யா

கதையில் புலிதானய்யா.. பயம் கொள்ளி பூனையய்யா

அடிடா சுந்தரலிங்கம்…அடிடா.. அடிடா..

அடிடா சுந்தரலிங்கம்…

சுந்தரலிங்கமய்யா.. ? வாங்கிட்டாய்யா

மானம் போகுதய்யா..பதுங்குற கவர பய்யா..

சுந்தரலிங்கமய்யா சேலையொன்று கட்டுமய்யா

கதையில் புலிதானய்யா.. பயம் கொள்ளி பூனையய்யா

அடிடா சுந்தரலிங்கம்…அடிடா.. அடிடா..

அடிடா சுந்தரலிங்கம்…

சொல்லி சொல்லி பார்த்தேன் அவள் திருந்தமாட்டாளே

அல்லி ரணி டைல்ய் ஆக ஏசுகின்றாளே

சேதனத்தை திருப்பி தாடா

டொனடிஒன் அதையும் தாடா

வாங்கின கடனை தாடா

வந்த வழியே போடா

மாமியாரை நானும் கேட்டேன்

மாமனாரின் காலை தொட்டேன்

சாமியாரா போவேன் என்றேன்

சந்தோசம் தேடி போவேன்

ஓடி வாறேன் உன்னை நம்பி மரியா மரியா

வாழ்கையிலே அர்த்தம் வேணும் தரேயா தரேயா

மாமியாரை நானும் கேட்டேன்

மாமனாரின் காலை தொட்டேன்

சாமியாரா போவேன் என்றேன்

சந்தோசம் தேடி போவேன்

பாவி மகள் சொல்லைக்கேட்டு

பெற்றவரை உதற்றி விட்டு

பாதியாய் வாழுகின்றேன் பயந்து ஓடுகின்றேன்

ஓடிவாரேன் உன்னை நம்பி குஜ்லி மரியா

வாழ்கையிலே அர்த்தம் வேணும் தரேயா தரேயா

மரியாவை தேடுறேன் அவளை நாடி ஓடுறேன்

ப்ரியவை தேடுறேன் செர்ந்து வாழ போகிறேன்

மரியாவை தேடுறேன் அவளை நாடி ஓடுறேன்

ப்ரியவை தேடுறேன் செர்ந்து வாழ போகிறேன்

I’ll take u on a hike

I’ll take u on a bike

I’ll take u on a ride

will u b my lovin’ bride

குஜிலி அம்மா குஜிலி அம்மா கோபம் என்னடியோவ்

குஜிலி அம்மா குஜிலி அம்மா கோபம் என்னடியோவ்

சங்கு கழுத்திலே கட்டுறேன் தாலி

கலகம் ஏனடியோவ்

சங்கு கழுத்திலே கட்டுறேன் தாலி

கலகம் ஏனடியோவ்

முத்து ரதின மாலையோ தங்க வைர அட்டிகையோ

சொத்து சேதனம் வேண்டாம்

தங்க கட்டியே நீ போதும்

டிங்கிரி அய்யா டிங்கிரி அய்யா அங்கற படாதே

டிங்கிரி அய்யா டிங்கிரி அய்யா அங்கற படாதே

சங்கடமான நிலையில் இன்று மாட்டிக்கொண்டாயே

நீயும் சங்கடமான நிலைல்யில் இன்று மாட்டி கொண்டாயே

அதோ அப்பறம் வார்ராரே எந்தன் அண்ணணும் வாரானே

சின்ன தம்பியும் வாரானே உந்தன் முதுகு அப்படியோ

நாய் வேஷம் வெளி வேஷம் எல்லாம்

எல்லாம் நேற்று ஆச்சி நல்லாய் படிச்சாசு

நானும் திருந்தியாச்சு..

கல்யாணம் என் வாழ்க்கை நல்ல பாடம் சொல்லியாச்சு

படிக்காத பயல் நானும் ஒரு படிச்ச மேதை ஆச்சு

நாய் வேஷம் வெளி வேஷம் எல்லாம்

எல்லாம் நேற்று ஆச்சி நல்லாய் படிச்சாசு

நானும் திருந்தியாச்சு..

கல்யாணம் என் வாழ்க்கை நல்ல பாடம் சொல்லியாச்சு

படிக்காத பயல் நானும் ஒரு படிச்ச மேதை ஆச்சு

அடிடா சுந்தரலிங்கம்…அடிடா.. அடிடா..

அடிடா சுந்தரலிங்கம்…

சுந்தரலிங்கமய்யா நீ தான் மனுசனய்யா

மானம் வந்ததய்யா மனுசன் ஆனானய்யா

சுந்தரலிங்கமய்யா வீடொன்றை கட்டுமய்யா

கதையை மாற்றுமய்யா வாழ்ந்து காட்டுமய்யா

அடிடா சுந்தரலிங்கம்…அடிடா..

அடிடா சுந்தரலிங்கம்

அடிடா சுந்தரலிங்கம்…அடிடா..

அடிடா சுந்தரலிங்கம்

ஓ மை டார்லிங் ரோஷி

அடிடா சுந்தரலிங்கம்

கள்ளு கடை பக்கம் போகாதே

அய்யய்யோ வெட்ககேடு

அய்யய்யோ அவள் வேண்டாம்

இப்பாடல்களை தரவிறக்க;

http://www.mediafire.com/?qtj4zad5umj

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ். இப்ப ரூல்ஸ் எல்லாம் மாத்திறாங்கள்.

ஸ்ருடன்ரா தொடர்ந்து இருந்தாலும், வேர்க் பெர்மிற் இல்லாமல் கனகாலம் இருக்கேலாது. ஸோ, கெதியா வேர்க் பெர்மிற்றோட ஒரு வேலையை எடுக்கிறது நல்லது, இல்லாட்டி ரெசிடென்ஸி விசா, சிற்றிசன் உள்ள பெட்டை ஒண்டைக் கொழுவிறது நல்லது.

எல்லாம் நல்லதுக்குத்தான் சொல்லுறன். இதைக் கேட்காமல் "கெடுகிறன் பந்தயம் பிடி" எண்டா சிக்கல்தான்!

Link to comment
Share on other sites

அய்யய்யோ ஊரே கெட்டு போச்சு, அன்பே வா, ரோஷி நீ கொஞ்சம் யோசி, சீதனம் சீராக வேண்டுமா , சோளம் சோறு பொங்கட்டுமா

இப்பாடல்களை தரவிறக்க;

http://www.mediafire.com/?jjqntg5fwjz

Link to comment
Share on other sites

நெடுக்ஸ். இப்ப ரூல்ஸ் எல்லாம் மாத்திறாங்கள்.

என்ன ஸ்டூடன்ட் வீசாவில இருக்கிற ஆக்களும் அசைலம் அடிக்கலாம் என்றோ? நெடுக்குக்கு உலகத்தில ஒருவருக்கும் குடுக்காத ஸ்டூடன்ட் வீசா ஒன்றை சிறீ லங்காவில குடுத்துபோட்டாங்களாம். தான் அசைலம் அடிக்க இல்லையாம் திறமையின் அடிப்படையில் யூகேயுக்கை புகுந்தவராம் என்று ஆள் நான் அறிஞ்ச காலத்தில இருந்து சொல்லிக்கொண்டு திரிகிது. நெடுக்குக்கு ஸ்டூடன்ட் வீசா குடுத்ததுக்கும் சின்னமாமிக்கும் என்ன சம்மந்தம் இருக்கிது என்று முதலில உங்களுக்கு விளங்கி உள்ளதோ? :lol:

Link to comment
Share on other sites

ஒரு கமெர்சியல் இடைவேளை. நேயர் விருப்பம். பாடல்களை கேட்டு மகிழுங்கள். :lol:

கள்ளுக்கடை பக்கம் போகாதே

விரும்பி கேட்டவர்: குமாரசாமி, ஜெர்மனி

http://www.youtube.com/watch?v=N20bsv6i24o&NR=1

சின்ன மாமியே

விரும்பி கேட்டவர்: விசுகு, பிரான்ஸ்

http://www.youtube.com/watch?v=r_4ZEGhwgGo&feature=related

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன ஸ்டூடன்ட் வீசாவில இருக்கிற ஆக்களும் அசைலம் அடிக்கலாம் என்றோ? நெடுக்குக்கு உலகத்தில ஒருவருக்கும் குடுக்காத ஸ்டூடன்ட் வீசா ஒன்றை சிறீ லங்காவில குடுத்துபோட்டாங்களாம். தான் அசைலம் அடிக்க இல்லையாம் திறமையின் அடிப்படையில் யூகேயுக்கை புகுந்தவராம் என்று ஆள் நான் அறிஞ்ச காலத்தில இருந்து சொல்லிக்கொண்டு திரிகிது. நெடுக்குக்கு ஸ்டூடன்ட் வீசா குடுத்ததுக்கும் சின்னமாமிக்கும் என்ன சம்மந்தம் இருக்கிது என்று முதலில உங்களுக்கு விளங்கி உள்ளதோ? :D

அசைலம் அடிக்க தேசத்தை காட்டிக் கொடுத்து மானங்கெட்ட பிழைப்பு நடத்த எந்த விசாவிலும் வரலாம்.. விசா இல்லாமல் களவாவும் கள்ளத்தோணியாவும் நுழையலாம்.

ஸ்ரூடண்ட் விசா புதினம் அல்ல. அதை உரிய முறையில் பயன்படுத்திறது தான் எம்மவர் மத்தியில் புதினம்..! அதாவது ஸ்ருடண்டா நாட்டுக்குள் நுழையிறது.. பிறகு அசைலம் அடிக்கிறது.. இதுதான் தமிழர்கள் அநேகரின் செயல். அது தவறான செயல். அதைத்தான் சொல்லி இருக்கிறேன்..! :lol:

நெடுக்ஸ். இப்ப ரூல்ஸ் எல்லாம் மாத்திறாங்கள்.

ஸ்ருடன்ரா தொடர்ந்து இருந்தாலும், வேர்க் பெர்மிற் இல்லாமல் கனகாலம் இருக்கேலாது. ஸோ, கெதியா வேர்க் பெர்மிற்றோட ஒரு வேலையை எடுக்கிறது நல்லது, இல்லாட்டி ரெசிடென்ஸி விசா, சிற்றிசன் உள்ள பெட்டை ஒண்டைக் கொழுவிறது நல்லது.

எல்லாம் நல்லதுக்குத்தான் சொல்லுறன். இதைக் கேட்காமல் "கெடுகிறன் பந்தயம் பிடி" எண்டா சிக்கல்தான்!

நான் ஸ்கொல்லில் வந்ததால் நாடு திரும்பி அங்கு சேவை செய்ய வேண்டும். அது கட்டாயம். படிக்கும் வரை படிக்கலாம். அதனால் படிக்கிறேன் அவ்வளவே..! எனது நண்பர்கள் கேம்பிரிஜ்ஜில் படித்துவிட்டு கூட ஊர் திரும்பி விட்டார்கள். இப்போ குறைந்த வயதிலும் நல்ல பதவிகளில் இருக்கிறார்கள். இங்க இருந்து வெள்ளைக்கு கூலி வேலை செய்யிறதிலும் ஊர் திரும்பி ஊரை முன்னேற்ற உதவுவது மேல் என்று நினைக்கிறன்.

பேராசிரியர் துரைராஜா.. அவரிடம் கனடிய பல்கலைக்கழக விசேட பேராசிரியர் தகமை இருந்தும் அங்கு போய் வேலை செய்யேல்ல. அவர் உண்மையில் கனடா அல்லது அமெரிக்கா போய் இலகுவாக குடியேறி நல்ல பதிவியில் இருந்து சொகுசாக வாழ்ந்திருக்கலாம். நித்தி போன்ற சந்தர்ப்பவாதிகள் செய்தது போல. ஆனால் அவரோ.. ஊரில இருந்து சைக்கிளில வந்து சொந்த மாணவர்களுக்கு சேவை செய்தவர். அவர் நமக்கெல்லாம் ஒரு நல்ல வழிகாட்டி. :)

Link to comment
Share on other sites

அசைலம் அடிக்க தேசத்தை காட்டிக் கொடுத்து மானங்கெட்ட பிழைப்பு நடத்த எந்த விசாவிலும் வரலாம்.. விசா இல்லாமல் களவாவும் கள்ளத்தோணியாவும் நுழையலாம்.

பேராசிரியர் துரைராஜா.. அவரிடம் கனடிய பல்கலைக்கழக விசேட பேராசிரியர் தகமை இருந்தும் அங்கு போய் வேலை செய்யேல்ல. அவர் உண்மையில் கனடா அல்லது அமெரிக்கா போய் இலகுவாக குடியேறி நல்ல பதிவியில் இருந்து சொகுசாக வாழ்ந்திருக்கலாம்.

இதைத்தான் கோத்தபாய அவர்களும் கூறுகின்றார். இலங்கையில் பிரச்சனை என்று ஒன்றும் இல்லையாமே! உங்களையும் நல்லிணக்க ஆணைக்குழு முன்பாக வாக்குமூலம் கொடுப்பதற்கு அழைக்க வேண்டும்.

தேசபிமானிகளின் (?) ரகளைகள் தாங்கமுடியாமல் தேசத்தைவிட்டு துரத்தி அடிக்கப்பட்டவர்கள் பற்றி எழுதுவதற்கு உங்கள் சந்தர்ப்பவாதம் இடம்கொடாதது ஆச்சரிமாகவில்லை. ஏன் என்றால் நீங்களும் தேசத்தின் (?) பெயரால் மானம் கெட்ட பிழைப்புத்தான் நடத்துகின்றீர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதைத்தான் கோத்தபாய அவர்களும் கூறுகின்றார். இலங்கையில் பிரச்சனை என்று ஒன்றும் இல்லையாமே! உங்களையும் நல்லிணக்க ஆணைக்குழு முன்பாக வாக்குமூலம் கொடுப்பதற்கு அழைக்க வேண்டும்.

தேசபிமானிகளின் (?) ரகளைகள் தாங்கமுடியாமல் தேசத்தைவிட்டு துரத்தி அடிக்கப்பட்டவர்கள் பற்றி எழுதுவதற்கு உங்கள் சந்தர்ப்பவாதம் இடம்கொடாதது ஆச்சரிமாகவில்லை. ஏன் என்றால் நீங்களும் தேசத்தின் (?) பெயரால் மானம் கெட்ட பிழைப்புத்தான் நடத்துகின்றீர்கள்.

கோத்தா சொல்வது பாதி உண்மை. அண்மையில் கனடிய அமைச்சர் ஒருவரும் சொல்லி இருந்தார் 70% கனடிய அகதி அந்தஸ்துப் பெற்றவர்கள் கனடிய அகதிகள் சட்டங்களை துஸ்பிரயோகம் செய்து தவறான தகவல்களை வழங்கி அகதி அந்தஸ்துப் பெற்றுள்ளனர் என்று. அகதி அந்தஸ்து பெற்றதும் அவர்கள் மீண்டும் சிறீலங்காவிற்கு விஜயம் செய்கின்றனர் என்று. இப்படிப் பட்ட தேசத்தின் துயரில் தங்கள் வளமான வாழ்விற்காக பிழைப்பு நடத்தும் சந்தர்ப்பவாத இனக்குழுமத்தில் நாங்கள் சொல்லும் கருத்துக்கள் செவிடன் காதில் ஊதிய சங்குதான்.

உண்மையாக போராட்டத்தில் உறுதியோடு பங்கெடுத்த பலர் இன்னும் தாயகத்தில் சிறைகளிலும் துன்பத்திலும் வறுமையிலும் வாடிக்கொண்டிருக்க.. போராட்டத்தில் பங்கெடுக்காது பதுங்கி ஓடிவந்த கூட்டம் அசைல வாழ்வில் செகுசு காண்பதுதான் நாம் கண்ட போராட்ட பலாபலன். இத்தனை உயிர்களின் இழப்புக்கு கிடைத்த பலன்..! :D:o

புலிகளுக்கு எதிராக வேண்டும் என்றே வாக்குமூலம் கொடுத்தவர்களில் அகதி அந்தஸ்துக் கோரியோரே அதிகம். இந்தக் கூட்டத்தினரால் தான் புலிகளை சட்ட ரீதியாக அந்தந்த நாடுகள் பயங்கரவாதமாக சித்தரிக்க முடிந்துள்ளது. புலிகளின் அழிவிற்கும் இந்தச் சுயநலவாதிகளே காரணம்.

இதற்குள்.. இவைக்கு.. வெட்டி கெளரவப் பிரச்சனைகள் வேற...??! :D:)

Link to comment
Share on other sites

....

பேராசிரியர் துரைராஜா.. அவரிடம் கனடிய பல்கலைக்கழக விசேட பேராசிரியர் தகமை இருந்தும் அங்கு போய் வேலை செய்யேல்ல. அவர் உண்மையில் கனடா அல்லது அமெரிக்கா போய் இலகுவாக குடியேறி நல்ல பதிவியில் இருந்து சொகுசாக வாழ்ந்திருக்கலாம். நித்தி போன்ற சந்தர்ப்பவாதிகள் செய்தது போல. ஆனால் அவரோ.. ஊரில இருந்து சைக்கிளில வந்து சொந்த மாணவர்களுக்கு சேவை செய்தவர். அவர் நமக்கெல்லாம் ஒரு நல்ல வழிகாட்டி. :D

பேராசிரியர் துரைராஜா மட்டும் இல்லை எனக்குத் தெரிந்து வெளிநாடுகளில் படித்து பட்டம் பெற்ற பல பேராசிரியர்கள், ஊரில் எழிமையான வாழ்க்கை வாழ்ந்த படியும், மாணவர் சமுதாயத்தை முன்னேற்றி விட்டுள்ளார்கள் என்பது நான் கண்முன்னே கண்ட உண்மை! இதைக் கூறிய நெடுக்குக்கு அவர்களிடம் படித்து தற்போது பலர் அவர்கள் காட்டிய வழி போல் இளைய தலைமுறைக்குக் கல்வி கற்பிக்கும் மாணவர் சார்பில் பல ஆயிரம் பச்சைப் புள்ளிகள் போடலாம். :o (இருந்த ஒன்றை போட்டுளேன்)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சரி, ஒராளை பற்றி வேரும் விழுதில போட்டிருந்து, அதில ஏன் போட்டது என்றும் கேள்வி? அவர் ஒரு பாடகர், பிறகு அதபற்றி சில பின்னூட்டம்.. பிறகு அவரைபற்றி வசவு ..நல்ல சமூகம்.

இதில ஒரே ஒரு விடயம், அது தனியே நெ மாத்திரமல்ல, தமிழன் என்ன செய்தாலும் பிழைபிடிக்கிறது என்று ஒரு கூட்டம் அது யாழ்ப்பாணத்தில பல்சர் ஓடின என்ன, நல்லூர் திருவிழாவிற்கு போனால் என்ன, UK பட்டுப்பாடின என்ன, போரைக்காட்டி நிறைய வலைப்பின்னல்கள், அது தமிழர் தரப்பிலும் உண்டு, சிங்களவநிடமும் உண்டு, அவை இலகுவில் தங்கள் வாழ்கை கோலங்களில் இருந்து விடுபட முடியாது திணறுகின்றது. புதிது புதிதாக காரணம் தேடும், யாரும் தமது நிலைகளுக்கு திரும்பினாலும், அது போர் இன்னும் முடியவில்லை என்று கட்டுவதற்கு எல்லா விதமான உத்திகளையும் செய்யும்.

சின்ன உதாரணம், எழிலனின் மனைவி சொன்ன வாக்கு மூலத்தில் ஒருபகுதி , "தனக்கு நம்பிக்கை இருக்கு, எழிலனை கொன்றிருக்க மாட்டார்கள் என", அந்த பகுதியை யாரும் தலையங்கம் ஆக்க விருப்பம் இல்லை..அவர் சொன்ன இன்னுமொரு பகுதி, "எனக்கு என்ன நடந்தாலும் பரவாயில்லை, உயிர் வாழ வேண்டும் என்ற விருப்பத்திற்காக வாழவில்லை" என்ற பகுதினை தலையங்கமாக, அல்லது முகப்பு பகுதியாக செய்தி போடும் செய்தியாளர்களை, இணையங்களை எவ்வாறு அழைப்பது, அல்லது அவர்களின் நோக்கம் என்ன என அறிவதர்ற்கு என்ன தேவை? முதல் பந்தி ஒன்றில் எழிலனின் மனைவி அரச உத்தியோகத்தில் இருப்பதை இரட்டை வேடம் என்று குறிபிட்டது, மனிதர்களின் வாழ்கை கோலத்தை பற்றி குறிப்பிடவே அன்றி தனிப்பட ரீதியில் அல்ல. இந்த நிலையிலும் அவர் வாளுவதர்ற்கு ஒரு வழியாகத்தான் நான் அதை பார்க்கிறேன்.

மற்றது,

ஒருவன் தனது துறையில் மாத்திரமல்லாமல் இன்னுமொரு துறையிலும் முன்னுக்கு வந்திருக்கின்றான் என்றால், அதை பாராட்டுகிற பண்பு வேண்டும் அதைவிடுத்து, காசைகொடுத்து பட்டம் எடுத்திப்பார் என்பது, மனப்பிறள்வே தவிர வேறு ஏதும் இல்லை. - முதல் பந்தியிலே இருக்கிறது நித்தி இலங்கையில் எங்கோ விவசாய விரிவுரையாளர் ஆக இருந்ததென.. நான் துரையை பற்றி எழுதும் போது எழுதியது அவர் சிங்களவனோடும் இணக்கமாக இருந்திருக்கிறார் என்பதை குறிக்கவே எழுதினேன், என்னுடைய நோக்கம் மொட்டந்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடும் நெ க்கு விளங்கபடுத்தவே தவிர துரையை குறை சொல்லவல்ல- முதலும் சொல்லியிருக்கிறேன்.

நெ..புலமை பாரிஸில் வந்தனீங்கள் மேலும் படித்து நல்ல நிலைக்கு வர வாழ்த்துக்கள்.

மற்றவர்களினதும் கருத்துகளை, செயற்பாடுகளையும் மதித்தால் நல்லம்.

ரதி ஓரிடத்தில் எழுதியிருந்தீர்கள்..

காசு கொடுத்தால் போதாது, போய் செய்யவேண்டும் என்று..உண்மை ஆட்கள் போக வேண்டும், அது இல்லாதவிடத்து காசு வேண்டும். எனது நண்பன் ஒருவன் தனது வேலை நியமனதிர்ர்காக காத்திருக்கிறான், சில காலம் முன்பு கதைத்தேன், எங்கே வரும் என்று தெரியாதாம், ஆனால் கிளிநொச்சி வந்தால் (தனக்கு) கடினம் என்று சொன்னான். இதுதான் நிலைமை..நான் சொல்ல முடியாது போடா மச்சான் என்று, இங்கே அரச உதவி பணத்தில் இருந்து கொண்டு கைகாசுக்கு வேலை செய்துகொண்டு BMW ஓடேக்க ஒராள் 15 - 20 வருடம் படி படி என்று படித்து போட்டு வன்னிக்கே தோட்டம் செய் என்று சொல்ல இயலாதுதானே? அவர் விரும்பினால் ஓகே ..நான் சொல்லவியலாது.. ஏனெனில் நான் அப்படியில்லை. நானே, அரசசெலவில்/ மக்களின் காசில் படித்துப்போட்டு ( நெ மாதிரி என்னுடைய தகுதிக்கும், முயற்சிக்கும் கிடைத்த சலுகை என்று சொல்லுகிற அளவுக்கு ...ரீல் விட தெரியாது/ விரும்பவில்லை) இப்ப வேற ஆருக்கோ எதோ செய்து கொண்டு இருக்கிறேன். ஆனால் ஆருக்கு தெரியும் 10 வருடத்துக்கு பிறகு என்ன செய்வன் எண்டு. அது மட்டும் யாழில் கருத்த எழுதுவதுதான்...

மற்றது, நெ நல்ல விஷயம் ஊருக்கு திரும்பி போறது, அது உங்கட விருப்பம், எனக்கு தெரிய வேற ஆட்களும் உங்களைமாதிரி ஸ்கோல் இல் வந்தவர்கள், திரும்பி போகத்தான் விரும்புகிறார்கள், எனக்கு சொல்ல தெரியவில்லை ஆனால் இப்ப ஒருவகையான தோழமை அழுத்தம் இருக்கு போல. இங்கே நாங்கள் என்னதான் செய்தாலும், இங்கே எங்களுக்கு 10 , 15 முந்தி வந்தவையினுடைய லொள் தாங்க முடியாது. அவை எதோ கனடா தாங்கள்தான் கண்டுபிடித்தமாதிரி கதை அளந்து கொண்டு திரியினம். நாங்கள்/ நான் நினைத்தபடி எல்லாம் செய்ய முடியாது-பெட்டி கொழுவின ஆக்கள்..அங்கே போனால், நான் இஞ்ச பட்ட கஸ்ரம் எல்லாம் மனிசி பட வேண்டும். அதைத்தான் கரும்பு கடைசியா எழுதி இருந்ததன் ஒரு கருத்து எண்டு நினைகிறன், அங்கே இருக்கிற/இருந்த ஆட்கள் தனியே பிரச்சனையால மட்டும் வெளிநாடு ஓடவில்லை. யாழ் பாண கம்பஸ் இல நடந்த கதைகளை சொன்னா, 10 பிரேக் எடுத்துதான் இந்த திரி முடியும்.

நன்றி வணக்கம்...

ப்ளீஸ் one more break ....

Link to comment
Share on other sites

அது சரி... வேரும் விழுதும் பகுதியில் சின்னமாமி நித்திகனகரத்தினம் பற்றி கலைஞர் அறிமுகமாக ஆரம்பிச்சு கடைசியில அந்தாளை ஓர் கூடாத சுயநலவாதியாக சித்தரிச்சு, கனடாவில இருக்கிற 70% தமிழ்ச்சனங்களை குற்றவாளிகளாக இனம்கண்டு, இறுதியில் நெடுக்காலபோவானையும், பேராசிரியர் துரைராசாவையும் புகழ்ந்து.. கெளரவித்து மிச்சம் எங்கால போவது என்று தெரியாமல் திரி அந்தரத்தில தொங்கிக்கொண்டு உள்ளது. இன்னமும் கொஞ்சம் போனால்... நித்தி கனகரத்தினம் என்று ஒரு ஆள் உண்மையில பாட்டுக்கள் பாட இல்லை என்றும் சொல்லுவீனம். :o

யோவ் எரிமலை... என்ன நான் சொன்ன கருத்துக்கள் என்று உம்பட பாட்டில கொஞ்ச கருத்துக்களை அவிழ்த்துவிட்டு இருக்கிறீர்? :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஐயா கரும்பு ,

உங்கள் கருத்தை பிழையாக விளங்க்கியதிர்ற்கும் மேற்கோள் காட்டியதிர்ற்கும் மன்னித்து கொள்ளுங்கள்.

குறிப்பு:

"அதைத்தான் கரும்பு கடைசியா எழுதி இருந்ததன் ஒரு கருத்து எண்டு நினைகிறன், அங்கே இருக்கிற/இருந்த ஆட்கள் தனியே பிரச்சனையால மட்டும் வெளிநாடு ஓடவில்லை. "

இதுதான் உங்கள் கருத்தில் இருந்து நான் மேற்கோள் காட்டிய விடயம். ஒன்று வசன ஒழுங்கு பிழை, மற்றது நீங்கள் சொன்னதை வெளிப்படையாக சொல்லவில்லை. கமாவையும், முர்ருப்புள்ளியையும் பாருங்கள். அதற்க்கு மேலும் என்னில் பிழையிருந்தால் மீண்டும் ஒருமுறை மன்னித்து கொள்ளவும்.

மற்றது நெ ஐ புகழ்ந்து பற்றி, இது பதில் வரக்கே தெரியும்..உண்மையாக வாழ்த்துகிறேன் அவரின் படிப்புக்கு, திரும்பி போவதர்ற்கு மிச்சம் என்னவென்று அவருக்கு விளங்கவேண்டும்.

துரைராஜாவை பற்றி, நெ முட்டாள் தனமாக இதில் தொடங்கினாலும், அவரின் தகுதிக்கும் சேவைக்கும் யாரும் எங்கேயும் மதிப்பு கொடுக்கலாம்.

நித்தி கனகரத்தினத்தி பற்றி..நீங்கள் சொல்லும் (கவலைப்படும்) அத்தனையையும் நான் சொல்லி இருக்கிறேன். இலங்கை போப் இன் முதல்வன், இன்னும் பலரின் விருப்ப பாடகன், சிறந்த கல்விமான், விவசாயத்துறையில் தொடங்கி, வேலை இல்லதாபடியால், மருந்தியல் படித்து, அதில் முதன்மையாக இருப்பவர். அவர் செய்த சிபாரின் அடிப்படையில் விக்டோரியா பல்கலை கழகத்தில் ஒரு புதிய துறையே தொடங்க்யுலார்கள், . அவரின் ஆராய்ச்சி பாஞ்சமிருததில் உள்ள இதய பாதுக்கப்பு பொருட்கள். அவருடைய மேலதிகாரிஇடம் இதுபற்றி முதல் முதல் சொன்ன போது அவர் சொன்னது " உங்களுக்கு மூளை கூடிபோச்சுது". ஆனால் தான் கூடினவர்தான் என நிருபித்து ஒரு புதிய துறையையே தொடங்கின செயல்வீரன்.

இதைவிட தாயக "கத்லப்" திட்டத்திற்காக பாடல் நிகழ்ச்சி ஒன்றில் பாடுவதர்ற்கு சம்மதித்திருந்தார், ஆனால் அது நடைபெறவில்லை.

நான் கனடா ஆட்களை குறை சொன்னதாக நீங்கள் கவலைப்ப்டுவற்காய் வருந்துகிறேன். ஆனால் நிஜம் அதுதான். நான் இன்னுமொருவருக்காய், நான் அடைத்த துயரங்களை என் மறைக்க வேண்டும். நான் அங்கிலத்தில்தான் படித்தேன் என்று கூற, மற்றவர்கள் நம்புவதர்ற்கு எவளவு காலம் எடுத்தது என்று எனக்குத்தான் தெரியும். இது எனக்கு மட்டுமல்ல பலருக்கு நடந்தது, என்னைப்போல வந்த சிலர் திரும்பி போய்விட்டார்கள், ஒன்று வேலை இல்லை மற்றது எங்கட ஆட்களில் லொள்..உங்களுக்கு அப்படி ஏற்படாவிட்டால் நீங்கள் நல்ல நண்பர் உறவினர் சூழ இருக்கிறீர்கள். மறுதலைக்கு இது எனக்கும் என் போன்றவர்களுக்கும் தான் ஏற்படிருந்தால் அதையும் மிளப்பெருகிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அக்கோய் உங்களுக்கு ஆத்திரம் வருகுதில்ல.. இதே போல் தான் நீங்களும் எங்களைப் பற்றி சரியாக அறியாமல்.. புத்திமதி சொல்ல வெளிக்கிடக் கூடாது.

நாங்க என்ன செய்தம் என்றதை சொல்ல வேண்டிய அவசியம் எனக்கு கிடையாது. ஆனால் அதை தேசத்தில் ஓரிருவராவது அறிந்திருக்கிறார்கள் அது போதும்.

எங்களின் கல்விக்காக நாங்கள் தான் கஸ்டப்பட்டோமே தவிர மற்றவர்களின் சாவை துன்பத்தைக் காட்டி நாங்கள் கல்வி பெறவில்லை. எங்கள் முயற்சிக்கு வெற்றிக்கு வழங்கப்பட்ட சலுகைகள் தான் இன்றும் எமக்கு உதவி இருக்கிறது. மற்றவர்களின் வாழ்வில் நாங்கள் சலுகை பெறவில்லை. அல்லது மற்றவர்களை சார்ந்து வாழ வந்தவர்களும் அல்ல. அப்படிப்பட்ட எம்மை யாரும் இதைச் செய் என்று சொல்ல முடியாது. இருந்தும் நாம் சொல்கிறோம்.. நாங்கள் தொடர்ந்தும் தேசத்துக்கு அவசியமானதை செய்வோம்.. செய்து கொண்டே இருப்போம் என்பதை.

தேசத்தின் துயரை காட்டி அசைலம் அடிக்க எமக்கு தெரியாது என்றில்லை. ஆனால் செய்யக் கூடாது அதை தேசத்திற்கு செய்யும் துரோகம் என்றே நாங்கள் நினைகிறோம். முதலில் நீங்கள் (தமிழர்களில் பலர்) எல்லாம் தேசத்தின் துயரை வைத்து உங்கள் வாழ்க்கையை வளமூட்ட நின்றதை எண்ணிப் பாருங்கள். மனச்சாட்சியை தட்டிக் கேட்டுப் பாருங்கள். ஆனால் நாம் அதற்கு இடமளிக்கவில்லை. அதுவும் தேசத்துக்குச் செய்த பெரிய கடமை தான்..! தேசத்தை போராட்டத்தை எங்களின் நலனுக்காக நாங்கள் ஒருபோதும் பாவித்ததில்லை. ஆனால் அது தந்த வலிகளை வேதனைகளை கஸ்டங்களை சுமந்திருக்கிறோம். ஆகவே எம்மை யாரும் கேள்வி கேட்க முடியாது. கேள்வி கேட்கப்பட வேண்டியவர்களுக்குள் நிச்சயம் நாம் அடங்கமாட்டோம்.

நீங்கள் அசேலம் அடிக்காதவராய் இருக்கலாம் ஆனால் எத்தனை வருடம் நான் மாணவ விசாவில் வந்தனான் எனச் சொல்லிக் கொண்டு இருப்பீங்கள்...10 வருடம் போனால் அவனாகவே தூக்கி விசாவைத் தரப் போறான் விசா கிடைத்ததும் ஊருக்குப் போக வா போறீங்கள்? இன்னும் படிக்க கிடக்குது ஆராய்ச்சி முடியவில்லை எனச் சொல்லி நீங்களும் பிரிட்டன் குடிமகன் ஆகத் தான் போறீங்கள்...என்னுடைய மனசாட்சியைக் கேட்டால் நான் போராட்டத்தை ஒரு நாளும் என்னுடைய சுயநலத்திற்காய் பாவிக்கவில்லை...நீங்கள் உங்கள் முழுத் திறமையில் தான் படித்து வந்திங்கள் இல்லை எனச் சொல்லவில்லை ஆனால் உங்களோட சேர்ந்து படித்த அரைவாசி மாணவர் கொல்லப்பட,அரைவாசிப் பேர் இயக்கத்திற்கு போக நீங்கள் மட்டும் தப்பி வந்து போட்டு நான் அது செய்தனான்,இது செய்து கொண்டு இருக்கிறேன் என சொல்லலாம்[இங்கு இருந்து காசு அனுப்புவதை விட வேறு என்ன செய்திருப்பீங்கள்!...நான் ஏற்கனவே எழுதின மாதிரி உயிரைக் கொடுப்பவர்கள் அங்குள்ளவர்கள் இங்கிருந்து முகத்தை மறைத்து அவன் எதிரி,இவன் துரோகி என எழுதலாம் அதைத் தான் நீங்கள் செய்து கொண்டு இருக்கிறீங்கள்.

பேராசிரியர் துரைராஜா மட்டும் இல்லை எனக்குத் தெரிந்து வெளிநாடுகளில் படித்து பட்டம் பெற்ற பல பேராசிரியர்கள், ஊரில் எழிமையான வாழ்க்கை வாழ்ந்த படியும், மாணவர் சமுதாயத்தை முன்னேற்றி விட்டுள்ளார்கள் என்பது நான் கண்முன்னே கண்ட உண்மை! இதைக் கூறிய நெடுக்குக்கு அவர்களிடம் படித்து தற்போது பலர் அவர்கள் காட்டிய வழி போல் இளைய தலைமுறைக்குக் கல்வி கற்பிக்கும் மாணவர் சார்பில் பல ஆயிரம் பச்சைப் புள்ளிகள் போடலாம். :D (இருந்த ஒன்றை போட்டுளேன்)

குட்டி துரைராஜா அங்கு இருந்து சேவை செய்கிறார் அதை ஒருதரும் இல்லை எனச் சொல்லவில்லை ஆனால் துரைராஜாவை மாதிரி எல்லோரும் அங்கு இருந்து சேவை செய்ய வேண்டும் என நாட்டை விட்டு மாணவ விசாவில் வந்து பல வருடங்களாய் படித்துக் கொண்டு இங்கு இருப்பவர்கள் சொல்ல இயலாது அது தான் எனது கருத்து...நெடுக்ஸ் தான் சொன்ன கருத்துகளை ஊரில் இருந்து கொண்டு சொல்லி இருந்தால் அதை வரவேற்கும் முதல் ஆளாக நான் இருப்பேன்...நீங்கள் நினைக்கிறீங்களா அவர் நாட்டுக்குப் போய் சேவை செய்வார் என்டு...சொன்னவர்கள் செய்ததாக சரித்திரம் இல்லை...செய்பவர்கள் சொல்வதில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் அசேலம் அடிக்காதவராய் இருக்கலாம் ஆனால் எத்தனை வருடம் நான் மாணவ விசாவில் வந்தனான் எனச் சொல்லிக் கொண்டு இருப்பீங்கள்...10 வருடம் போனால் அவனாகவே தூக்கி விசாவைத் தரப் போறான் விசா கிடைத்ததும் ஊருக்குப் போக வா போறீங்கள்? இன்னும் படிக்க கிடக்குது ஆராய்ச்சி முடியவில்லை எனச் சொல்லி நீங்களும் பிரிட்டன் குடிமகன் ஆகத் தான் போறீங்கள்...என்னுடைய மனசாட்சியைக் கேட்டால் நான் போராட்டத்தை ஒரு நாளும் என்னுடைய சுயநலத்திற்காய் பாவிக்கவில்லை...நீங்கள் உங்கள் முழுத் திறமையில் தான் படித்து வந்திங்கள் இல்லை எனச் சொல்லவில்லை ஆனால் உங்களோட சேர்ந்து படித்த அரைவாசி மாணவர் கொல்லப்பட,அரைவாசிப் பேர் இயக்கத்திற்கு போக நீங்கள் மட்டும் தப்பி வந்து போட்டு நான் அது செய்தனான்,இது செய்து கொண்டு இருக்கிறேன் என சொல்லலாம்[இங்கு இருந்து காசு அனுப்புவதை விட வேறு என்ன செய்திருப்பீங்கள்!...நான் ஏற்கனவே எழுதின மாதிரி உயிரைக் கொடுப்பவர்கள் அங்குள்ளவர்கள் இங்கிருந்து முகத்தை மறைத்து அவன் எதிரி,இவன் துரோகி என எழுதலாம் அதைத் தான் நீங்கள் செய்து கொண்டு இருக்கிறீங்கள்.

அக்கோய் நாங்க இங்க இருக்கனும் என்று நினைச்சிருந்தா அசைலம் அடிச்சு இப்போ நிரந்தர வதிவிட உரிமையும் எடுத்திருக்கலாம். ஆனால் செய்ய விரும்பல்ல. காரணம் தேசத்தைக் காட்டிக் கொடுக்கக் கூடாது என்பதுதான்.

உங்களுக்கு தெரியாது போல.. இயக்கம் படிக்க விரும்பியவர்களை போராட்டத்துக்குள் உள்ளெடுக்கவில்லை. எமக்காக எமது பாடசாலையில் நடத்தப்பட்ட கூட்டத்தில் அவர்கள் சொன்னது தமிழீழத்தின் அத்திவாரமாக தலைவர் கல்விச் சமூகத்தை வளர்த்தெடுக்க விரும்புகிறார். நீங்கள் தென்னிலங்கைக்கு போய் படித்தாலும் மீண்டும் தாய் மண்ணுக்கு வந்து சேவை செய்ய வேண்டும் என்று.

இயக்கம் படிக்க விரும்பியவர்களை போராளியாக இருந்தாலும் சரி பிறராக இருந்தாலும் சரி கட்டாயப்படுத்தி ஆயுதத்தைக் கொடுக்கவில்லை.

யாரும் படிக்காமல் எல்லோரும் இயக்கத்திற்கு வரனும் என்பதும் இயக்கத்தின் கொள்கை அல்ல. அப்படி என்றிருந்தால் யாரும் அகதியாக வெளிநாட்டுக்கு ஓட முடியாமலும் இயக்கம் தடுத்திருக்கலாம். தங்களின் அழிவையும் தவிர்த்திருக்கலாம். ஆனால் அவர்கள் தாங்கள் அழிந்தாலும் நாடு அதாவது தங்கள் கொள்கை நிலைக்கனும் சந்ததி வாழனும் என்று தான் எண்ணினார்களே தவிர.. எதிரிக்கு வால் பிடிக்க சொல்லவில்லை.

அல்லது உங்கள் சுகபோக வாழ்க்கைக்காக தேசத்தைக் காட்டிக் கொடுத்து அசைலம் அடிக்கச் சொல்லவில்லை. படிக்க ஆற்றலுள்ள அனைவரையும் படிக்க இயக்கம் அனுமதித்தது. அதற்கு படிப்பின் பெறுமதி தெரிந்திருந்தது.அதுமடுமன்றி இயக்கமே பலரை வெளிநாட்டுக்கு அனுப்பியும் படிப்பிக்க வைத்தது.

அவுஸ்திரேலியாவில் இருக்கும் சிங்களப் பேராசிரியர் செனிவர்டனவிற்கு இருக்கும் தமிழ் மக்களின் உரிமைப் போராட்டம் தொடர்பான அக்கறை கூட நித்தி போன்ற வேரும் விழுதுகளுக்கும் இல்லை என்பதுதான் எங்களின் உறுதியான நிலைப்பாடு. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கட‌ கருத்தைப் பார்த்தால் படிக்காத முட்டாள்களும்,படிப்பில் அக்கறையில்லாதவர்களும் தான் இயக்கத்திற்குப் போக வேண்டும் போல கிட‌க்குது...மனம் இருந்தால் இட‌ம் உண்டு என ஒரு பழமொழி இருக்குது தீலிபன் அண்ணா போன்றோருக்கு மனம் இருந்தது படிப்பை உதறி விட்டு மக்களே பெரிது என மக்களுக்காய் உயிர் நீத்தார்கள் அதற்காக நீங்கள் ஏன் போய் இயக்கத்தில் சேர‌வில்லை எனக் கேட்க எனக்கு உரிமை இல்லை அதே போல மற்றவர்கள் போய் நாட்டுக்கு ஏன் சேவை செய்யவில்லை என விமர்சிக்க உங்களுக்கும் உரிமை இல்லை என்பதே என் கருத்து...இயக்கம் பல பேரை புலத்திற்கு அனுப்பி படிப்பித்தது இல்லை எனச் சொல்லவில்லை ஆனால் அவர்கள் அனைவருமே நாட்டுக்கு திரும்பிப் போய் விட்டார்கள்...நானும் உங்களைப் பார்த்துக் கேட்கிறேன் நீங்கள் தாய் நாட்டுக்குப் போய் சேவை செய்வீர்களா? ஆம் என்டால் அங்கே போய் சேவை செய்யத் தொட‌ங்கிய பின் மற்றவர்களை விமர்சியுங்கள்...நீங்கள் இங்கே வந்து படிப்பை கார‌ணம் காட்டி இருக்கலாம் ஆனால் நித்தி போன்றோர் மட்டும் ஊருக்குப் போய் சேவை செய்ய வேண்டும்...நீங்கள் இங்கே இருந்து பண உதவி செய்வது மாதிரித் தான் நித்தி போன்றோரும் பண உதவி செய்வார்கள்...நீங்கள் செய்வது உங்களைப் பொறுத்த வரை சரி என்டால் நித்தி செய்வதும் சரி தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கட‌ கருத்தைப் பார்த்தால் படிக்காத முட்டாள்களும்,படிப்பில் அக்கறையில்லாதவர்களும் தான் இயக்கத்திற்குப் போக வேண்டும் போல கிட‌க்குது...மனம் இருந்தால் இட‌ம் உண்டு என ஒரு பழமொழி இருக்குது தீலிபன் அண்ணா போன்றோருக்கு மனம் இருந்தது படிப்பை உதறி விட்டு மக்களே பெரிது என மக்களுக்காய் உயிர் நீத்தார்கள் அதற்காக நீங்கள் ஏன் போய் இயக்கத்தில் சேர‌வில்லை எனக் கேட்க எனக்கு உரிமை இல்லை அதே போல மற்றவர்கள் போய் நாட்டுக்கு ஏன் சேவை செய்யவில்லை என விமர்சிக்க உங்களுக்கும் உரிமை இல்லை என்பதே என் கருத்து...இயக்கம் பல பேரை புலத்திற்கு அனுப்பி படிப்பித்தது இல்லை எனச் சொல்லவில்லை ஆனால் அவர்கள் அனைவருமே நாட்டுக்கு திரும்பிப் போய் விட்டார்கள்...நானும் உங்களைப் பார்த்துக் கேட்கிறேன் நீங்கள் தாய் நாட்டுக்குப் போய் சேவை செய்வீர்களா? ஆம் என்டால் அங்கே போய் சேவை செய்யத் தொட‌ங்கிய பின் மற்றவர்களை விமர்சியுங்கள்...நீங்கள் இங்கே வந்து படிப்பை கார‌ணம் காட்டி இருக்கலாம் ஆனால் நித்தி போன்றோர் மட்டும் ஊருக்குப் போய் சேவை செய்ய வேண்டும்...நீங்கள் இங்கே இருந்து பண உதவி செய்வது மாதிரித் தான் நித்தி போன்றோரும் பண உதவி செய்வார்கள்...நீங்கள் செய்வது உங்களைப் பொறுத்த வரை சரி என்டால் நித்தி செய்வதும் சரி தான்.

அக்கோய் நீங்கள் எனது கருத்தை தவறாக அர்த்தப்படுத்த முனைகிறீர்கள். இயக்கம் படிக்க விரும்பியவர்களை அது போராளியாக இருந்தாலும் சரி பிறராக இருந்தாலும் சரி தடுக்கவில்லை என்பதை சொல்லிவிட்டேன். அதுமட்டுமன்றி இயக்கம் எல்லாப் போராளிகளுக்கும் தேவையான அடிப்படை கல்வியையும் வழங்கி வந்துள்ளது. ஆகவே படிக்காத முட்டாள்கள் தான் போராளிகள் ஆனார்கள் என்பது உங்களின் கற்பனையில் நீங்கள் இயக்கத்தை காட்ட முனையும் கேவலமான எண்ண வெளிப்பாடு. எங்களின் கருத்தை தவறாக அர்த்தப்படுத்தி நீங்கள் உங்களின் இயக்கம் தொடர்பான அபாண்டமான சிந்தனையை வெளிப்படுத்த முனைகிறீர்கள். இதை தவிர்த்துக் கொள்ள முனையுங்கள்.

நாங்கள் பேராசியர்கள் அல்ல. படிப்பவர்கள். நித்தி போன்றோர் படித்து ஒரு நிலையை அடைந்த பின்னும் தாயகம் பற்றி சிந்திக்காதவர்கள். அவர்களை அந்த மண்ணின் வேரும் விழுதுகளும் ஆக்குவதுதான் ஏன் என்று கேட்கிறோம்..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் தவறாக அர்த்தப்படுத்தவில்லை நீங்கள் எழுதினது அந்த மாதிரித் தான் இருக்குது வேணும் என்டால் திரும்ப ஒருக்கால் வாசித்துப் பாருங்கள்...முதலும் ஒரு கவிதையில் நீங்கள் இந்தப் பொருள் படவே எழுதினீர்கள்...எழுதினது நீங்கள் ஆனால் பிழை என் மேல் நல்ல உலகம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கள்ளுக்கடைப் பக்கம் போகாதே

காலைப்பிடித்துக் கெஞ்சுகிறேன்

கண்ணும் புகைந்திடும் நெஞ்சும் வரண்டிடும்

கைகால் உலர்ந்திடும் இந்த கள்ளாலே

ஆச்சி எந்தன் அப்புவும் இந்தக் கடையில் தான்

அடுத்தவீட்டு வாத்தியாரும் கடையில்தான்

விட்டமின் பீ எண்டு வைத்தியரும் சொன்னதாலே

விட்டேனோ கள்ளுக்குடியை நான்

பாவிப் பயலே கொஞ்சம் கேளடா

பாலூட்டி வளர்த்த நானுன் தாயடா

பற்றி எரியுதெந்தன் வயிறடா

பனங்கள்ளை மறந்து நீயும் வாழடா

கடவுள் தந்த பனைமரங்கள் தானடா

கடவுள் கள்ளைத் தொட்டதுண்டோ கேளடா

வாய்க்கொழுப்பும் மனத்திமிரும் வளர்ந்துவரும்

உனக்கு நானும் வாலறுக்கும் நாளும் வருமோ

கள்ளுக்குடி உன் குடியைக் கெடுத்திடும்

கடன்காரனாக உன்னை மாற்றிடும்

கண்டகண்ட பழக்கமெல்லாம் பழக்கிடும்

கடைசியில் கட்டையிலே கொண்டு போய்ச் சேர்த்திடும்

கடவுளே என் மகனும் இதனை உணரானோ

கள்ளுக்குடியை விட்டொழிந்து திருந்தானோ

அன்னை சொல்லு கேட்பானென்றால்

ஆறறிவு படைத்த அவனும் பேரறிஞன் ஆகிடுவானே.

கள்ளுக் கொட்டில்லை இந்தப் பாட்டைக் கேட்டுக் கொண்டே கள்ளுக்குடிப்பவர்கள் பலர். :D

இணைப்பிற்கு நன்றி தப்பிலி

வாத்தியார்

**********

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் தவறாக அர்த்தப்படுத்தவில்லை நீங்கள் எழுதினது அந்த மாதிரித் தான் இருக்குது வேணும் என்டால் திரும்ப ஒருக்கால் வாசித்துப் பாருங்கள்...முதலும் ஒரு கவிதையில் நீங்கள் இந்தப் பொருள் படவே எழுதினீர்கள்...எழுதினது நீங்கள் ஆனால் பிழை என் மேல் நல்ல உலகம்

அக்கோய் இதுதான் உங்களின் அண்மைக்கால கருத்தாடல் பாணி. சொல்ல வேண்டியதை எல்லாம் சொல்லிவீர்கள்.. இறுதியில் நீங்கள் எழுதியதையே போய் திரும்பிப்படியுங்கள் என்று சொல்லிவிட்டு எஸ்கேப் ஆகிடுவீர்கள். இப்படி ஒரு அநாவசிய அர்த்தமற்ற கருத்தாடல் அவசியமா உங்களுக்கு.

நித்தி போன்ற சந்தர்ப்பவாத சிங்கள விசுவாச யாழ்ப்பாண மேட்டுக்குடி பைலா பாடர்களுக்கு வேரும் விழுதும் அந்தஸ்து வழங்கப் போய் நீங்கள் இந்த நிலைக்கு ஆகிட்டது கவலைக்குரியது. :D:o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தம்பி இந்த பதிவின் முதலில் இருந்து கடைசி வரைக்கும் சொல்வது ஒன்று தான் நித்தியை விமர்சிக்க உங்களுக்கு எந்த தகுதியும் இல்லை...நான் கேட்ட ஒரு கேள்விக்குமே உங்களிடம் பதில் இல்லை முதலில் அதற்குப் பதில் எழுதுங்கள்...படித்து முடிந்ததும் ஊருக்குப் போவிங்களா? அப்படியாயின் எப்போது பென்சன் எடுத்த பிறகு இறுதி காலத்தை ஊரில் கழிப்பதற்காக?...நீங்கள் உங்கள் வாழ்க்கை பூரா படித்துக் கொண்டு இருப்பீர்கள் ஆனால் மற்றவர்கள் சேவை செய்ய வேண்டும்...முதலில் நித்தியை பற்றி கதைப்பதற்கு உங்களுக்கு தகுதி இருக்கா என உங்களை சுய விமர்சனம் செய்யுங்கள் பிறகு மற்றவர்களை விமர்சிக்கலாம்...நித்தி பாடுவது அவரது தனிப்பட்ட திறமை அதைக் காரணமாய் வைத்து அவரை விமர்சிப்பது உங்களது தனிப்பட்ட எரிச்சலைத் தான் காட்டுகிறது...நித்தி சிங்களவர்களோடு சேர்ந்து பைலா பாடி கூத்தடிச்சாலும் பரவாயில்லை அவரை விமர்சிக்கலாம் ஆனால் தானும்,தன்ட பாடும் என்டும் இருக்கிற மனிசரைப் போய் விமர்சித்துக் கொண்டு.

நடு நிலையாக இருந்து கொண்டு கருத்துக்களை வாசிப்பவர்களுக்கு யார்,எப்படி கருத்து எழுதுவார்கள் என்பது புரியும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தம்பி இந்த பதிவின் முதலில் இருந்து கடைசி வரைக்கும் சொல்வது ஒன்று தான் நித்தியை விமர்சிக்க உங்களுக்கு எந்த தகுதியும் இல்லை...நான் கேட்ட ஒரு கேள்விக்குமே உங்களிடம் பதில் இல்லை முதலில் அதற்குப் பதில் எழுதுங்கள்...படித்து முடிந்ததும் ஊருக்குப் போவிங்களா? அப்படியாயின் எப்போது பென்சன் எடுத்த பிறகு இறுதி காலத்தை ஊரில் கழிப்பதற்காக?...நீங்கள் உங்கள் வாழ்க்கை பூரா படித்துக் கொண்டு இருப்பீர்கள் ஆனால் மற்றவர்கள் சேவை செய்ய வேண்டும்...முதலில் நித்தியை பற்றி கதைப்பதற்கு உங்களுக்கு தகுதி இருக்கா என உங்களை சுய விமர்சனம் செய்யுங்கள் பிறகு மற்றவர்களை விமர்சிக்கலாம்...நித்தி பாடுவது அவரது தனிப்பட்ட திறமை அதைக் காரணமாய் வைத்து அவரை விமர்சிப்பது உங்களது தனிப்பட்ட எரிச்சலைத் தான் காட்டுகிறது...நித்தி சிங்களவர்களோடு சேர்ந்து பைலா பாடி கூத்தடிச்சாலும் பரவாயில்லை அவரை விமர்சிக்கலாம் ஆனால் தானும்,தன்ட பாடும் என்டும் இருக்கிற மனிசரைப் போய் விமர்சித்துக் கொண்டு.

நடு நிலையாக இருந்து கொண்டு கருத்துக்களை வாசிப்பவர்களுக்கு யார்,எப்படி கருத்து எழுதுவார்கள் என்பது புரியும்

அக்கோய் உங்களுக்கு எந்த விடயத்தை கதைக்க வெளிக்கிட்டாலும் ஒரு அடியும் நுனியும் புரியாமல் எழுந்தமானமாகவே கருத்துக்களை வைக்கிறீர்கள். குறைபிடிப்பதையே நிறை என்று நினைக்கிறீர்கள்.

நித்தி என்பவர் ஏதோ விமர்சனத்துக்கு அப்பாற்பட்ட மனிதர் என்பது போலவும் வெளிநாடுகளில் கல்வி கற்கும் எம் போன்றவர்கள் விமர்சனத்துக்கு தகுதியற்றவர்களாகவும்.. வெளிநாட்டுக்கு ஊரின் அவலத்தைக் காட்டி ஓடிவந்த மற்றவர்கள் நித்தியின் காவலர்கள் போலவும் அமைகிறது உங்கள் வாதமும் உங்கள் கருத்தும்.

வெளிநாடுகளில் கல்வி கற்பதென்பது வெளிநாடுகளில் தண்டரா போட்டு குந்தி பிச்சை எடுப்பது போன்றதல்ல. உங்கள் போன்றோருக்கு ஊரில் வாழ வழியில்லாததால் வெளிநாட்டு வாழ்க்கை சொர்க்கமாகத் தெரியலாம். ஆனால் எமக்கு அப்படியல்ல. வெளிநாட்டு வாழ்க்கை தான் சுமையாகத் தெரிகிறது.

நான் நிச்சயம் எனது படிப்பை முடித்து ஊருக்குப் போவேன் என்பதை உங்களுக்கு அடிக்கடி சொல்லிக் கொண்டிருக்கனும் போல. ஏதோ நீங்கள் ஊருக்கு வந்து எங்களைப் போன்றவர்களோடு சேர்ந்து மக்களுக்கு பணி செய்யக் காத்திருப்பது போலவும் அடிக்கட்டி கேட்டுகிறீங்க எப்ப ஊர் போகப் போறாய் என்று. அடுத்தவன் செய்வதை விடுப்புப் பார்த்து கதைக்கிற கூட்டத்தில் ஒருவர் தான் நீங்களும். உங்களுக்கு எங்களிடம் கேள்வி கேட்க முதலில் என்ன தகுதி இருக்கென்று சிந்தியுங்கள்.

நித்தி போன்ற சுயநலவாதிகளை எமது தேசத்தின் வேர்கள் விழுதுகள் என்று காட்டுவதை தான் நான் எதிர்கிறேன். அவர்கள் சிங்கள விசுவாச யாழ்ப்பாண மேட்டுக்குடி சிந்தனையில் வாழ்ந்து இன்று வெளிநாடுகளிலும் அதே நிலையில் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள். எமது தேசம் அந்த நிலையை கடந்து போய் மீண்டும் அந்த நிலைக்கு திருப்பிக் கொண்டிருக்கும் காலத்தில் இவர்களுக்கு புத்துயிர்ப்பு அளிக்கப்படுவது.. ஒரு அபாயகமான விடயமாகவே நான் கருதுகிறேன். இவற்றை நாம் இன்று சுட்டிக்காட்டவில்லை என்றால் நாளை இந்த கொழுத்த இரத்தம் உறுஞ்சும் அட்டைகள் சமூகத்தை விழிப்பூட்டுகிறோம் என்று சமூகத்தில் அனைத்து அநீதிகளும் பெருகும் வரை காத்திருந்துவிட்டு அவர்களின் சந்ததிகளுக்கு விளம்பரம் தேட சமூக அந்தஸ்துப் பெற.. கிட்டாரும் கையுமாகப் புறப்படுவார்கள் அநீதிகளை ஒடுக்கப் புறப்பட்டு விட்டோம் என்ற தோறணையில் பந்தாகாட்ட.. சமூகத்தை ஏமாற்றிப் பிழைப்போட்ட செல்வாக்கு வளர்க்க.

நீங்களும் அவர்களை மக்களின் இரட்சகர்களாக காட்டி வெளிநாடுகளில் இருந்து விசிலடித்துக் கொண்டிருப்பீர்கள். நாங்கள் அப்போ ஊர் திரும்பி கையாலாகமல் சமூகத்தைப் பார்த்து வெறித்துக் கொண்டிருப்போம். இதுதான் புலிகளின் முயற்சிகளுக்கும் நடந்தது. அதை மீள அனுமதிக்கக் கூடாது. முதலில் வெளிநாடுகளில் இருந்து வெட்டி அந்தஸ்தும் பந்தாவும் வளர்க்க முனையும் கூட்டத்தை முறியடிக்க வேண்டும். அப்போதுதான் ஊர் உருப்படுற வழியை தேட முடியும்.

அதற்கு நாங்கள் வெளிநாட்டில் இவர்களோடு இருக்கும் காலத்தை பயன்படுத்த வேண்டும். வெளிநாட்டில் இல்லை என்றால் சொல்லுவீர்கள்.. ஊரில இருந்து வெளிநாடு வர முடியாத ஏமாற்றத்தில கதைக்கினம் என்று வெளிநாட்டில இருந்து சொன்னால் சொல்வீர்கள் ஊர் போய் கதை உனக்கு இங்கிருந்து கதைக்க என்ன தகுதி என்று. எனக்குப் புரியவில்லை.. எங்களைப் பார்த்து தகுதி கேட்க உங்களுக்கு என்ன தகுதி இருக்கென்பதும்.. தான்...???!

எமக்கு நாம் சார்ந்த சமூகத்தில் நடக்கும் அநியாயங்களை சுட்டிக்காட்ட அடிப்படை தகுதி இருக்கு அதனடிப்படையில் இதனைச் சொல்ல முடியும் என்று நினைக்கிறேன். அதைத் தடுக்க உங்களால் முடியாது அக்கோய். போய் வேற வேலை இருந்தா கவனியுங்கோ. :o:D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் மெத்தப் படித்தனீங்கள் நாங்கள் படிக்காத முட்டாள் தான் ஆனால் உங்களை மாதிரி நான் படிக்க வந்தனான் நான் திரும்பி நாட்டுக்குப் போவேன் சேவையாற்ற என நான் ஒருத்தரையும் ஏமாற்றவில்லை :D ...நீங்கள் திரும்ப,திரும்ப படித்தவர்கள் புலம் பெயர்ந்து வர வேண்டும் மேலும் படிப்பதற்கும்,பணம் உழைப்பதற்கும் இங்கு அசேலம் அடிப்பதற்கும்.. படிக்கதாவர்கள் பிழைக்க வழியில்லாமல் காசு உழைக்க வந்தவர்கள் என்னும் தொனியிலேயே உங்கள் கருத்துகள் அமைந்துள்ளன...நித்தி விமர்சனத்திற்கு அப்பால் பட்டவர் என நான் எங்குமே எழுதவில்லை ஆனால் நித்தியை விமர்சிக்க உங்களுக்கு தகுதி இல்லை என்பது தான் கருத்து...நான் முதல் எழுதிய ஒரு பதிவிலேயே எழுதி விட்டேன் எனக்கு உங்களைப் பார்த்து கதைக்கத் தகுதியில்லை அதே போல தான் தானும் தன்ட பாடுமாய் இருக்கிற நித்தியை பற்றி கதைக்கவும் உங்களுக்கு தகுதி இல்லை...புலிகளின் காலத்திலே அவர்கள் நித்தியில் ஏதாவது பிழை பிடித்தார்களா அல்லது தடை செய்தார்களா...உங்களை மாதிரி எத்தனை பேர் இந்த நாளைக்கு போவேன் ஊருக்கு சேவை செய்ய என கதையளப்பார்கள் ஆனால் கடைசிக் காலம் வரைக்கும் இங்கேயே கழிப்பார்கள் கேட்டால் எதாவது நொண்டிச் சாட்டு சொல்வார்கள் என்னும் 10 வருடம் கழுத்து யாழ் இருந்தாலும் நீங்கள் கருத்துக் களத்தில் வந்து இதையே தான் எழுதிக் கொண்டு இருப்பீர்கள்...நித்தி தற்போது பாடுவதுமில்லை,அவர் பாடிய பழைய பாட்டுகளால் சமுதாயம் சீரழிகிறது என்பது அப்பட்டமான உங்கள் எரிச்சலைக் காட்டுகிறது... தமிழர் இதிலும் பார்க்க சீரழிந்த பாட்டுகளையும்,படங்களையும் கேட்கவில்லையா,பார்க்கவில்லையா?...மற்றவர்களில் குறை பிடிப்பது நீங்களா?நானா? நீங்கள் கடைசியாக எழுதிய பதிவிலேயே உங்கள் இயலாமையும்,உங்கள் உண்மையான குணத்தையும் காட்டி விட்டீர்கள் நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் மெத்தப் படித்தனீங்கள் நாங்கள் படிக்காத முட்டாள் தான் ஆனால் உங்களை மாதிரி நான் படிக்க வந்தனான் நான் திரும்பி நாட்டுக்குப் போவேன் சேவையாற்ற என நான் ஒருத்தரையும் ஏமாற்றவில்லை :D ...நீங்கள் திரும்ப,திரும்ப படித்தவர்கள் புலம் பெயர்ந்து வர வேண்டும் மேலும் படிப்பதற்கும்,பணம் உழைப்பதற்கும் இங்கு அசேலம் அடிப்பதற்கும்.. படிக்கதாவர்கள் பிழைக்க வழியில்லாமல் காசு உழைக்க வந்தவர்கள் என்னும் தொனியிலேயே உங்கள் கருத்துகள் அமைந்துள்ளன...நித்தி விமர்சனத்திற்கு அப்பால் பட்டவர் என நான் எங்குமே எழுதவில்லை ஆனால் நித்தியை விமர்சிக்க உங்களுக்கு தகுதி இல்லை என்பது தான் கருத்து...நான் முதல் எழுதிய ஒரு பதிவிலேயே எழுதி விட்டேன் எனக்கு உங்களைப் பார்த்து கதைக்கத் தகுதியில்லை அதே போல தான் தானும் தன்ட பாடுமாய் இருக்கிற நித்தியை பற்றி கதைக்கவும் உங்களுக்கு தகுதி இல்லை...புலிகளின் காலத்திலே அவர்கள் நித்தியில் ஏதாவது பிழை பிடித்தார்களா அல்லது தடை செய்தார்களா...உங்களை மாதிரி எத்தனை பேர் இந்த நாளைக்கு போவேன் ஊருக்கு சேவை செய்ய என கதையளப்பார்கள் ஆனால் கடைசிக் காலம் வரைக்கும் இங்கேயே கழிப்பார்கள் கேட்டால் எதாவது நொண்டிச் சாட்டு சொல்வார்கள் என்னும் 10 வருடம் கழுத்து யாழ் இருந்தாலும் நீங்கள் கருத்துக் களத்தில் வந்து இதையே தான் எழுதிக் கொண்டு இருப்பீர்கள்...நித்தி தற்போது பாடுவதுமில்லை,அவர் பாடிய பழைய பாட்டுகளால் சமுதாயம் சீரழிகிறது என்பது அப்பட்டமான உங்கள் எரிச்சலைக் காட்டுகிறது... தமிழர் இதிலும் பார்க்க சீரழிந்த பாட்டுகளையும்,படங்களையும் கேட்கவில்லையா,பார்க்கவில்லையா?...மற்றவர்களில் குறை பிடிப்பது நீங்களா?நானா? நீங்கள் கடைசியாக எழுதிய பதிவிலேயே உங்கள் இயலாமையும்,உங்கள் உண்மையான குணத்தையும் காட்டி விட்டீர்கள் நன்றி

அக்கோய் உண்மையிலேயே நீங்கள் ஒரு முட்டாள் தான் என்பதை சொல்லாமல் சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள். நான் இங்கு எழுதிக் கொண்டிருப்பது நித்தி எந்த வகையில் வேரும் விழுதுக்கும் சொந்தக்காரர் ஆகிறார் என்பதுதான். பைலா என்பது எமக்கான இசை வடிவமும் அல்ல.. எமது விழுமியம் சார்ந்ததும் அல்ல. பைலா பிரபல்யமான காலத்தில் அவர்கள் தங்களை வெளிப்படுத்த அந்த இசையை தமிழிலும் பாவித்தார்கள் அவ்வளவே. அதுமட்டுமன்றி அவர்கள் சிறீலங்கா மாதாவை போற்றி பாடல்களை பாடி இருக்கின்றனர். அதுவும் உங்களைப் போன்றவர்களுக்கு மகிழ்ச்சியான விடயமே..!

நித்தி வேரும் விழுதுகள் பகுதிக்கு தகுதியானவரா என்பதுதான் கேள்வியே. அவரின் பாடலை பொழுதுபோக்கில் போட்டுக் கேளுங்கள் யாரும் அதைப் பற்றி பேசப் போவதில்லை.

நீங்கள் உங்கள் கற்பனைக்கு ஏற்ற மாதிரி நீ ஊருக்குப் போவியா போக மாட்டியா என்று எழுதுவீர்கள். நான் அதற்கு ஊருக்குப் போகும் திகதி நேரம் குறிப்பிட்டு இங்கு பதில் எழுதனும் என்ற உங்களின் எதிர்பார்ப்பையே அக்கா உங்களின் முட்டாள் தனம் எங்கிறேன். நித்தி போன்றவர்கள் வெளிநாடுகளில் போய் வாழட்டும் ஏதாவது செய்யட்டும். அவர்களை எமக்கான வேரும் விழுதுகளுமாகக் காட்டுவதற்கு அவர்கள் சரியான ஆட்களில்லை.

புலிகள் வெளிநாட்டுக்கு ஓடிப் போன இவர்களைப் பற்றி கதைப்பதில்லை. மாறாக எமக்கான போராட்ட இசை வடிவங்களை அவர்கள் உருவாக்கினார்கள். அவர்கள் இவர்களின் கையை எதிர்பார்த்திருக்கவில்லை. மாறாக கலைஞர்களை உருவாக்கினார்கள். ஒருவேளை புலிகள் இவர்களை நம்பி இருந்தால் நிச்சயம் அங்கும் ஏமாந்திருப்பார்கள் என்பதில் மறு கருத்திருக்க முடியாது.

இவர்களின் பாடல்களைக் கேட்டு யாரும் கள்ளுக்கடைக்குப் போகாமல் விட்டதாக தெரியவில்லை. ஆனால் போராட்ட காலத்தில் புலிகள் பல சமூக மாற்றங்களைக் கொணர்ந்தனர். அவர்களின் அந்த வெற்றிகளை இவர்களால் ஏன் பாடமுடியவில்லை..??! அவ்வளவு சமூக அக்கறை உள்ளவர்கள் ஏன்.. போராட்ட கால பதிவுகளை செய்ய முன் வரவில்லை...???!

நீங்கள் இவர்களை ஏதோ சமூக அக்கறையில் பாடியதாக காட்ட முனைகிறீர்கள்.. ஆனால் அவர்களோ தாம் தென்னிலங்கையில் ஓரங்கட்டபட்ட நிலையில்.. யாழ்ப்பாணத்தில் குறிப்பாக பரியோவான் கல்லூரியில் இருந்து இந்த இசைக்கு வந்ததாக முன்னர் குறிப்பிட்டுள்ளனர். அப்படி இருந்தும் அவர்களை சமூக அக்கறையுள்ள பாடகர்களாக சித்தரிக்க முனைகிறீர்கள். அதுதான் வேடிக்கையாக இருக்கிறது.

தமக்கான சமூக அங்கீகாரம் நோக்கி அவர்கள் இவ்வாறான பாடல்களை பாடினார்களே தவிர.. சமூக அக்கறையில் அவர்கள் பாடகர்களானதாகத் தெரியவில்லை. அப்படி இருப்பின்.. அவர்களின் அந்தப் பணி போராட்ட இலக்கியங்களாகவும் பதியப்பட்டிருக்கும்..!

எதையும் எழுத முதல் சிந்தியுங்கள் அக்கா. உங்களிடம் சிந்தனை சக்தி வரண்டுகிறக்கிறது. மாறாக வக்காளத்து வாங்கும் நிலை வளர்ந்து கிடக்கிறது. :):o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சில பேர் எவ்வளவு தான் படித்திருந்தும் சில நேரங்களீல் முட்டாள்கள் மாதிரித் தான் சிந்திப்பார்கள் அவர்களோடு கருத்தாடிப் பயனில்லை :D வீணாக என் நேரத்தை செலவழித்தது தான் மிச்சம்..சாந்தன் முந்தி புலிகளூக்காய் பாட்டுப் பாடினார் கொஞ்ச நாள் போக சிங்கள பாட்டு பாடுவார் அவரும் கொஞ்ச நாள் போக வேரும் விழுதுக்கு எதிரியாகப் போகப் போகிறார்...நாங்கள் இங்கே சொகுசாய் வாழ்ந்து கொண்டு எல்லோரையும் எதிரியாக்குவோம்...நான் இங்கே இருந்து கொண்டு நான் இந்த விசாவில தான் லண்டனுக்கு வந்தனான் திரும்பி போய் ஊருக்கு சேவை செய்வேன் என எங்குமே புழுகவில்லை நீங்கள் தான் யாழில் அதையே திரும்ப,திரும்ப சொல்லிக் கொண்டு இருக்கிறீங்கள்...அண்மையிலும் 1வருடத்திற்கும் முன்பும் அரசியல் சம்மந்தமான பதிவில் தயா அண்ணாவோடும் இதை வைத்து தான் மல்லுக் கட்டினீங்கள்[நான் மாணவ விசாவில் வந்தனான் என்டு]...90% மாணவ விசாவில் வந்து தான் அசேலம் அடித்து உள்ளார்கள்...உங்கள் கல்வி சார்ந்து நீங்கள் கெட்டிக்காரராய் இருக்கலாம் அதற்காக மற்றவர் முட்டாள் இல்லை...நன்றீ வணக்கம் :o

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:01 AM (எம்.ஆர்.எம்.வசீம்) இலங்கைக்கு சொந்தமான கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை நாடுவதாக இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால் அதற்கு முகம்கொடுப்பதற்கு நாங்களும் தயார். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு போதுமான ஆதாரங்கள் எம்மிடமிருக்கின்றன என இலங்கை மனித நேய கட்சியின் தலைவியும் பேராசிரியருமான சந்திமா விஜேகுணவர்த்தன தெரிவித்தார். இலங்கை மனிதநேய கட்சி தலைமையகத்தில் வியாழக்கிழமை (18) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், இந்தியாவில் தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழ் நாட்டு மீனவர்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் அங்குள்ள அரசியல்வாதிகள் கச்சதீவு விவகாரத்தை கையில் எடுத்துக்கொண்டு பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். தேர்தல் காலம் வரும்போது இந்தியாவை பாெறுத்தவரை இது வழமையான விடயமாகும். இந்திய பிரதமரும் கச்சதீவு விடயமாக மிகவும் தீவிரமாக தேர்தல் மேடையில் உரையாற்றி இருக்கிறார். குறிப்பாக கச்சதீவு இந்தியாவுக்கு சொந்தமானது. அதனை இலங்கைக்கு வழங்கியது வரலாற்று தவறு. அதனால் கச்சதீவை இந்தியாவுக்கு மீண்டும் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுப்போம். முடியாவிட்டால் நெதர்லாந்தில் இருக்கும் சர்வதேச நீதிமன்றத்தை நாடுவோம் எனவும் இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். 285 ஏக்கர் பரப்பளவைக்கொண்ட  கச்சதீவு இலங்கை,, இந்திய மீனவர்கள் கடற்றொழில் செய்வதற்கு அப்பால், இந்த பூமிக்குள் பல பெருமதிவாந்த வேறு விடயங்கள் இருக்கின்றன. அதனால்தான் இந்திய அரசியல்வாதிகள் கச்சதீவை எப்படியாவது தங்களுக்கு சொந்தமாக்கிக்கொள்ள முயற்சித்து வருகின்றனர். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு  தேவையான வரலாற்று ஆதாரங்கள் எம்மிடம் இருக்கின்றன.  அதனால் கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்ற்ததை நாடுமாக இருந்தால், அதற்கு முகம்கொடுக்க நாங்களும் தயாராக வேண்டும். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கான ஆதாரங்களை சர்வதேச நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுப்போம். கச்சதீவு விவகாரத்தால் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இருந்துவரும் உறவில் பாதிப்பு ஏற்படக்கூடாது.இந்த விடயத்தில் இந்தியாவுடன் முரண்பட்டுக்கொள்ள நாங்கள் தயார் இல்லை. இந்தியா அயல் நாடாக இருந்துகொண்டு எமக்கு பாரிய உதவிகளை செய்துவருகிறது. குறிப்பாக கொவிட் காலத்தில் இந்திய அரசாங்கத்தின் உதவிகளை எங்களால் ஒருபோதும் மறந்துவிட முடியாது. அந்த நன்றி எப்போதும் எங்களிடம் இருக்கிறது. இருந்தாலும் கச்சதீவு விவகாரம் என்பது எமது உரிமை சார்ந்த விடயம். அதனை எங்களால் விட்டுக்கொடுக்க முடியாது. இந்திய அரசியல்வாதிகள் தங்களின் தேர்தல் பிரசாரத்திற்கே இந்த விடயத்தை கையில் எடுத்துக்கொள்கின்றனர். தேர்தல் முடிவடைந்த பின்னர் அந்த விடயத்தை மறந்துவிடுவார்கள் என்றார். https://www.virakesari.lk/article/181410
    • பட மூலாதாரம்,GETTY IMAGES 2 மணி நேரங்களுக்கு முன்னர் உலக அளவில் 840 மில்லியன் மக்கள் நாள்பட்ட சிறுநீரக கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன என இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அர்த்தம் 10இல் ஒருவருக்கு சிறுநீரக நோய்கள் இருக்கின்றன. மேலும் சமீப காலங்களில் உயிர்களை கொள்ளும் 10 முக்கிய நோய்களில் 7வது இடத்தை பிடித்துள்ளது நாள்பட்ட சிறுநீரக நோய். இந்தியாவில் மட்டும் ஆண்டொன்றுக்கு 2 - 2.5 லட்சம் மக்கள் புதிதாக சிறுநீரக நோய்களால் பாதிக்கப்படுவதாக இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் இந்தியாவில் உள்ள வயது வந்தோர் மக்கள்தொகையில் 8-10% பேர் நாள்பட்ட சிறுநீரக நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு கூறுகிறது. இதற்கு மிக முக்கிய காரணம் சிறுநீரகம் சார்நத நோய்களை ஆரம்ப கட்டத்தில் கண்டுபிடிக்க முடியாமல் போவதும், இவை அமைதியாக இருந்து தீவிர பிரச்னை ஏற்படும்போதே வெளியே தெரியவரும் என்பதுமே ஆகும் என்று கூறுகிறார் எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனையின் மூத்த சிறுநீரகவியல் மருத்துவர் மில்லி மேத்யூ.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பொதுவாகவே சிறுநீரகம் சார்ந்த பிரச்னைகளில் ஆரம்ப கட்டத்தில் அறிகுறிகள் தெரியாது என்கிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. சிறுநீரகத்தின் செயல்பாடு என்னென்ன? உடலின் மிக முக்கியமான உறுப்புகளில் வயிற்றுப்பகுதியில் அமைந்திருக்கும் சிறுநீரகமும் ஒன்று. சிறுநீரின் வழியாக கழிவுகளை வெளியேற்றுவதே இதன் பிரதான பணி. ரத்தத்தில் காணப்படும் கழிவுப்பொருட்கள், உடலுக்கு தேவையற்ற அளவுக்கு அதிகமான தாதுக்களை சிறுநீரின் வழியாக வெளியேற்றி தூய ரத்தத்தை உடல் முழுவதும் பரவ செய்கிறது சிறுநீரகம். ஆனால், நமது வாழ்க்கை முறை, உணவுமுறை, பழக்கவழக்கங்கள், மரபுவழி பிரச்னைகள், தேவையற்ற மாத்திரைகளை உட்கொள்வது, இதர உடல்நல கோளாறுகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த உறுப்பு செயல்படுவதில் தடை ஏற்படுகிறது. அப்படி சிறுநீரகத்தின் பணியில் இடையூறு ஏற்பட்டு அதன் வழக்கமான கழிவகற்றல் பணியை சரியாக செய்யமுடியாமல் போகும்போதுதான் பல்வேறு சிறுநீரக கோளாறுகள் ஏற்படுகின்றன. இதில் மேலுமொரு அபாயம் என்னவெனில் இந்த கோளாறுகள் ஆரம்ப கட்டத்தில் எந்த விதமான அறிகுறியும் காட்டாமல் உங்களுக்குள் வந்து விடும். நாளாக நாளாக அதன் வீரியம் அதிகரிக்கும்போதே உங்களுக்கு அறிகுறிகள் தெரிய தொடங்கி, அதிலிருந்து மருத்துவ பரிசோதனைகள் மூலம், நீங்கள் எந்தளவுக்கு, எந்த விதமான நோயால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்பதை கண்டறிய முடியும் என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. அப்படி என்ன மாதிரியான சிறுநீரகம் சார்ந்த நோய்கள் உங்களுக்கு ஏற்படலாம்? அதில் என்ன மாதிரியான அறிகுறிகள் தென்பட வாய்ப்புள்ளது? என்பதை அறிந்துக் கொள்ளலாம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,நாள்பட்ட சிறுநீரக நோய்களை குணப்படுத்த முடியாவிட்டாலும், அவை தீவிரமடையாமல் தடுக்க முடியும். நாள்பட்ட சிறுநீரக நோய் (Chronic Kidney Disease) நாள்பட்ட சிறுநீரக நோய் என்பது நீண்ட நாட்களாக தொடர்ந்து வரும் சிறுநீரக கோளாறு ஆகும். இது அதிகம் சர்க்கரை நோய் மற்றும் உயர்ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கே ஏற்படும். இதன் ஆரம்ப கட்டங்களில் எந்த விதமான அறிகுறிகளும் இருக்காது. இந்த வகை சிறுநீரக கோளாறுகள் சரி செய்ய முடியாதவை. முறையான மருத்துவ சிகிச்சை மூலம் இவை தீவிரமடையாமல் பார்த்துக் கொள்ள முடியும். அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி பசியின்மை கால் மற்றும் கணுக்கால் வீக்கம் மூச்சுத்திணறல் தூங்குவதில் சிரமம் அதிகமாக அல்லது குறைவாக சிறுநீர் கழித்தல்   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரக கல் ஒன்றிரண்டு இருக்கும்போது அதன் அறிகுறிகள் வெளியே தெரியாது. சிறுநீரகத்தில் கல் சிறுநீரகத்தில் தேங்கும் உப்பு அல்லது தாதுக்களின் படிகங்களே சிறுநீரக கல் என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக ஓரிரண்டு கற்கள் உருவாகும்போது அறிகுறியோ அல்லது தீவிர பிரச்னையோ ஏற்படாது என்று குறிப்பிடும் மருத்துவர், அது தீவிரமடையவும் வாய்ப்புகள் உள்ளது என்று கூறுகிறார். தண்ணீர் குறைவாக குடித்தால், உடல் பருமன், மோசமான வாழ்க்கை முறை, உணவுமுறை உள்ளிட்டவற்றால் இந்த பிரச்னை ஏற்படுகிறது. அறிகுறிகள் சிறுநீர் கழிக்கும் போது வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடைப்பு ஏற்படுதல் கல் உள்ள இடத்தில் வலி   நீரிழிவு சிறுநீரக நோய் (Diabetes Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உலகில் மூன்றில் ஒரு சர்க்கரை நோயாளிகள் சிறுநீரக கோளாறால் பாதிக்கப்படுகின்றனர். ஆய்வுத்தரவுகளின் படி சர்க்கரை நோய் உள்ள 3 பேரில் ஒருவருக்கு சிறுநீரக கோளாறு ஏற்படுகிறது. உலக அளவில் சிறுநீரக நோய்க்கான காரணிகளில் சர்க்கரை நோய் முதன்மையானதாக இருக்கிறது. அப்படி சர்க்கரை நோய் கட்டுப்பாட்டிற்குள் இல்லாதவர்களுக்கு இந்த நீரிழிவு சிறுநீரக நோய் ஏற்படுகிறது. அறிகுறிகள் கால்கள் வீக்கம் நுரையுடன் சிறுநீர் வெளியேறுதல் உடல் சோர்வு எடை குறைதல் உடல் அரிப்பு குமட்டல் மற்றும் வாந்தி   ஹைப்பர்டென்சிவ் நெஃப்ரோஸ்க்ளிரோசிஸ் (Hypertensive Nephrosclerosis) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு சிறுநீரகம் பாதிக்கும் அபாயம் அதிகம் சர்க்கரை நோய்க்கு இணையாக சிறுநீரகத்தை பாதிக்கும் மற்றுமொரு பிரச்னை உயர் ரத்த அழுத்தம். உயர் ரத்த அழுத்தம் சிறுநீரகத்தில் உள்ள ரத்த குழாய்களை சேதமடைய செய்வதால் சிறுநீரகத்தின் செயல்பாடு பாதிக்கப்படுகிறது. இதனால் ரத்தத்தில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுதல் மற்றும் கூடுதல் தாதுக்களை வெளியேற்றுதல் ஆகியவை பாதிப்படைகிறது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் சிறுநீரகத்தின் செயல் பாதித்து தேவையற்ற திரவங்கள் ரத்த குழாய்களில் படிவதால், ரத்த அழுத்தம் மேலும் உயர்கிறது. அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி தலை சுற்றல் உடல் மந்தம் தலை வலி கழுத்து வலி   சிறுநீர் பாதைத் தொற்று பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீர் பாதையில் ஏற்படும் தோற்று சிறுநீரகத்தையும் பாதிக்கும் அபாயம் உள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீரக கோளாறு இல்லை என்றாலும் கூட, அது சிறுநீரகத்தை பாதிக்கவும் வாய்ப்புள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீர் பாதையில் ஒட்டிக்கொள்ளும் நுண்ணுயிரிகள் பெருகி பாதிப்பை ஏற்படுத்துவது. இது கீழ்நிலையில் உள்ள சிறுநீர் பாதையிலேயே தங்கி விட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு குறைவு. ஆனால், பெருகி மேல்நிலை பகுதிக்கு வந்துவிட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்படலாம். அறிகுறிகள் முதுகுப் பக்கத்தில் வலி காய்ச்சல் சிறுநீர் கழிக்கும்போது வலி அடிவயிற்றில் வலி சிறுநீரில் ரத்தம் குமட்டல் மற்றும் வாந்தி   பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தில் அதிகரிக்கும் நீர்க்கட்டிகள் அதை செயலிழக்க செய்யுமளவு ஆபத்தானது. பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் என்பது உங்களது சிறுநீரகத்தில் ஏற்படும் நீர்க்கட்டிகளை குறிப்பது. நாளடைவில் இவை வளர்ந்து உங்களது சிறுநீரகத்தை செயலிழக்கும் நிலைக்கும் கொண்டு செல்லலாம். இவை பெரும்பாலும் மரபணு ரீதியாக ஏற்படக்கூடிய சிறுநீரக கோளாறாகும். அறிகுறிகள் மேல்வயிற்றில் வலி அடிவயிற்றின் பக்கவாட்டில் வலி முதுகில் வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடிக்கடி தொற்று ஏற்படுதல்   ஐஜிஏ நெஃப்ரோபதி (IgA Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இந்த சிறுநீரக பிரச்சனையில் சிறுநீரில் ரத்தம் வெளியேறுவது நமக்கே தெரியாது. ஐஜிஏ நெஃப்ரோபதி என்பது பெரும்பாலும் சிறுவயதில் இளம்பருவத்தில் வரக்கூடிய ஒரு சிறுநீரக கோளாறு என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. இதில் சிறுநீர் வெளியேறும்போது ரத்தமும் இணைந்து வெளியாகும். இதை நாம் நேரடியாக பார்த்தால் கண்டறிவது கடினம். ஆனால், பரிசோதனையில் இதை கண்டறிய முடியும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் சிறுநீரக செயலிழப்பின் அறிகுறிகள் தெரியும் சிறுநீரக செயலிழப்பு சிறுநீரக செயலிழப்பு ஏற்படுபவர்களுக்கு அதன் முற்றிய நிலையில் மட்டுமே அறிகுறிகள் தெரியும். குறிப்பாக அதில் 5 நிலைகள் உள்ளது. இதில் நான்காவது நிலை வரையிலும் கூட அறிகுறிகள் தென்படாமல் ஒருவர் நன்றாக இருப்பார். சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் அறிகுறிகள் தெரியும். அந்த நிலையில் ஒரு சில பொதுவான அறிகுறிகள் தென்படும். அறிகுறிகள் பசியின்மை வாந்தி கடுமையான உடல் சோர்வு உடல் வீக்கம் தூக்கமின்மை உப்பசம் https://www.bbc.com/tamil/articles/c2e01gql070o
    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:19 AM (நா.தனுஜா) டயலொக் அக்ஸியாட்டா மற்றும் பார்டி எயார்டெல் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் இலங்கையில் அவற்றின் செயற்பாடுகளை இணைந்து முன்னெடுப்பதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன.  இவ்வொப்பந்தத்தின் பிரகாரம் எயார்டெல் லங்காவின் 100 சதவீத பங்குகளை டயலொக் கொள்வனவு செய்யும் அதேவேளை, அதற்குப் பதிலாக இதுவரையில் மொத்தமாக விநியோகிக்கப்பட்ட பங்குகளில் 10.355 சதவீத பெறுமதியுடைய சாதாரண வாக்குரிமை பங்குகளை எயார்டெலுக்கு வழங்கும்.  இதுகுறித்து தெளிவுபடுத்தி நேற்றைய தினம் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கும் டயலொக் நிறுவனம், நாடளாவிய ரீதியில் தொலைத்தொடர்பு சேவையை மேம்படுத்துவதை இலக்காகக்கொண்டு முன்னெடுக்கப்படும் இந்த இணைப்புக்கு இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு அனுமதியளித்திருப்பதாகத் தெரிவித்துள்ளது.  அதுமாத்திரமன்றி இந்நடவடிக்கையானது போலியான தொலைத்தொடர்பு உட்கட்டமைப்பு செயன்முறைகளைக் கட்டுப்படுத்துவதற்கும், தொழில்நுட்பத்துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும், வேகமான வலையமைப்பு இணைப்பை விரிவுபடுத்துவதற்கும், செலவினங்களைக் குறைப்பதற்கும், செயற்பாட்டு வினைத்திறனை அதிகரிப்பதற்கும் உதவும் எனவும் டயலொக் நிறுவனம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181412
    • Published By: VISHNU    18 APR, 2024 | 10:24 PM வலிப்பு ஏற்பட்ட நிலையில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் புதன்கிழமை (17) உயிரிழந்துள்ளார். இதன்போது மாதகல் - சகாயபுரம் பகுதியைச் சேர்ந்த பிரதீபன் நித்தியா (வயது 37) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பெண்ணுக்கு வலிப்பு நோய் உள்ளது. இந்நிலையில் புதன்கிழமை (17) பிற்பகல் 6.30 மணியளவில் வீட்டு கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். பின்னர் சடலம் தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் வியாழக்கிழமை (18) உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இரண்டு பிள்ளைகளின் தாயான இவர் வலி.தென்மேற்கு பிரதேச சபையின் பண்டத்தரிப்பு உப அலுவலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமை புரிந்து வந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/181408
    • ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை கடைசியில் கட்டுப்பாடான ஓவர்களினால் வெற்றிபெற்றது Published By: VISHNU    19 APR, 2024 | 06:04 AM (நெவில் அன்தனி) மொஹாலி, மல்லன்பூர் மகாராஜா யாதவேந்த்ர சிங் சர்வதேச விளையாட்டரங்கில் வியாழக்கிழமை (18) நடைபெற்ற 17ஆவது இண்டியன் பிறீமியர் லீக் அத்தியாயத்தின் 33ஆவது போட்டியில் பஞ்சாப் கிங்ஸை 9 ஓட்டங்களால் மும்பை இண்டியன்ஸ் வெற்றிகொண்டது. போட்டியின் ஒரு கட்டத்தில் மும்பை இண்டியன்ஸ் இலகுவாக வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஷஷாங் சிங், அஷுட்டோஷ் ஷர்மா ஆகிய இருவரும் ஆக்ரோஷத்துடன் துடுப்பெடுத்தாடி ஆட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியதால் மும்பை இண்டியன்ஸ் சற்று திகிலடைந்தது. எவ்வாறாயினும் கடைசிக்கு முந்தைய 3 ஓவர்களை ஜஸ்ப்ரிட் பும்ரா, ஜெரால்ட் கோட்ஸீ, ஹார்திக் பாண்டியா ஆகியோர் கட்டுப்பாட்டுடன் வீசியதால் மும்பை இண்டியன்ஸ் வெற்றியை உறுதிசெய்துகொண்டது. அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை இண்டியன்ஸ் சிறு சவாலுக்கு மத்தியில் 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 192 ஓட்டங்களைப் பெற்றது. இந்த வருட இண்டியன் பிறீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் துடுப்பாட்டத்தில் எதிர்பார்த்தளவு பிரகாசிக்கத் தவறிவரும் இஷான் கிஷான் இ ந்தப்  போட்டியிலும் 3ஆவது ஓவரில் 8 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். எனினும் ரோஹித் ஷர்மாவும் சூரியகுமார் யாதவ்வும் 2ஆவது விக்கெட்டில் 81 ஓட்டங்களைப் பகிர்ந்து சரிவை சீர் செய்தனர். ரோஹித் ஷர்மா 36 ஓட்டங்களுக்கு ஆட்டம் இழந்த பின்னர் சூரியகுமார் யாதவ்வுடன் இணைந்த திலக் வர்மா 3ஆவது விக்கெட்டில் 49 ஓட்டங்களைப் பகிர்ந்தார். மறு பக்கத்தில் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய சூரியகுமார் யாதவ் 53 பந்துகளில் 7 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 78 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார். தொடர்ந்து அணித் தலைவர் ஹார்திக் பாண்டியா (20), டிம் டேவிட் (14) ஆகிய இருவரும் குறைந்த ஓட்டங்களுடன் வெளியேறினர். கடைசிப் பந்தில் மொஹமத் நபி ஓட்டம் பெறாமல் ரன் அவுட் ஆனார். திலக் வர்மா 18 பந்துகளில் 34 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார். கடைசி ஓவரில் 3 விக்கெட்களைக் கைப்பற்றிய ஹர்ஷால் பட்டேலின் 4 ஓவர்களில் 42 ஓட்டங்கள் பெறப்பட்டது. அவரை விட சாம் கரன் 41 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார். 193 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் கிங்ஸ் 19.1 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 183 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது. பஞ்சாப் கிங்ஸின் ஆரம்பம் மிக மோசமாக இருந்தது. முதல் 3 ஓவர்களுக்குள் ப்ரப்சிம்ரன் சிய் (0), ரைலீ ரூசோவ் (1), பதில் அணித் தலைவர் சாம் கரன் (6), லியாம் லிவிங்ஸ்டோன் (1) ஆகிய நால்வரும் 4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்தனர். (14 - 4 விக்.) எனினும் ஹார்ப்ரீட் சிங் பாட்டியா, ஷஷாங்க் சிங் ஆகிய இருவரும் 5ஆவது விக்கெட்டில் 35 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு சிறு உற்சாகத்தைக் கொடுத்தனர். ஆனால் ஹார்ப்ரீட் சிங் பாட்டியா 13 ஓட்டங்களுடனும் அவரைத் தொடர்ந்து ஜிட்டேஷ் சிங் 9 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழந்தனர். (77 - 6 விக்.) இதன் காரணமாக பஞ்சாப் கிங்ஸ் 100 ஓட்டங்களை எட்டுமா என்ற சந்தேகம் நிலவியது. ஆனால், ஷஷாங்க் சிங், அஷுட்டோஷ் சிங் ஆகிய இருவரும் 7ஆவது விக்கெட்டில் 34 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியின் மொத்த எண்ணிக்கை 110 ஓட்டங்களைக் கடக்க உதவினர். வழமையான அதிரடியில் இறங்கிய ஷஷாங்க் சிங் 25 பந்துகளில் 3 சிக்ஸ்கள், 2 பவுண்டறிகளுடன் 41 ஓட்டங்களைப் பெற்றார். அதன் பின்னர் அஷுட்டோஷ் ஷர்மா அதிரடியாகத் துடுப்பெடுத்தாடி 28 பந்துகளில் 7 சிக்ஸ்கள், 2 பவுண்டறிகளுடன் 61 ஓட்டங்களைப் பெற்று அணியை கௌரவமான நிலையில் இட்டு ஆட்டம் இழந்தார். அஷுட்டோஷ் ஷர்மாவும் ஹார்ப்ரீட் ப்ராரும் 8ஆவது விக்கெட்டில் 30 பந்துகளில் பகிர்ந்த 57 ஓட்டங்களே இன்னிங்ஸில் அதி சிறந்த இணைப்பாட்டமாக அமைந்தது. (168 - 8 விக்.) மொத்த எண்ணிக்கை 174 ஓட்டங்களாக இருந்தபோது ஹார்ப்ரீட் ப்ரார் 21 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். எனினும் கடைநிலை ஆட்டக்காரர் கெகிசோ ரபாடா தான் எதிர்கொண்ட முதல் பந்தில் சிக்ஸையும் அடுத்த பந்தில் ஒற்றையையும் பெற்று கடைசி ஓவரில் வெற்றி இலக்கை 12 ஓட்டங்களாக குறைத்தார். எனினும் கடைசி ஓவரில் இல்லாத ஒரு ஓட்டத்தை நோக்கி ஓடிய ரபாடா 8 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்க, மும்பை இண்டியன்ஸ் மிகவும் அவசியமான வெற்றியை ஈட்டியது. பந்துவீச்சில் ஜஸ்ப்ரிட் பும்ரா 21 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஜெரால்ட் கோட்ஸீ 32 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர். https://www.virakesari.lk/article/181411
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.