Jump to content

சின்ன மாமியே நித்தி கனகரத்தினம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பாட்டுக்கு நன்றி நுணாவிலான்

அடிடா சுந்தரலிங்கம்...அதையும் இருந்தால் இணைத்து விடவும்

வாத்தியார்

*********

Link to comment
Share on other sites

  • Replies 95
  • Created
  • Last Reply

பாட்டுக்கு நன்றி நுணாவிலான்

அடிடா சுந்தரலிங்கம்...அதையும் இருந்தால் இணைத்து விடவும்

வாத்தியார்

*********

அடிடா சுந்தரலிங்கம்…அடிடா.. அடிடா..

அடிடா சுந்தரலிங்கம்…

வயசுக்கு பயனில்லையய்யா வாய் தான் இழுக்குதய்யா

பதுங்குற எலி தானய்யா..

சுந்தரலிங்கமய்யா சேலையொன்று கட்டுமய்யா

கதையில் புலிதானய்யா.. பயம் கொள்ளி பூனையய்யா

அடிடா சுந்தரலிங்கம்…அடிடா.. அடிடா..

அடிடா சுந்தரலிங்கம்…

சுந்தரலிங்கமய்யா.. ? வாங்கிட்டாய்யா

மானம் போகுதய்யா..பதுங்குற கவர பய்யா..

சுந்தரலிங்கமய்யா சேலையொன்று கட்டுமய்யா

கதையில் புலிதானய்யா.. பயம் கொள்ளி பூனையய்யா

அடிடா சுந்தரலிங்கம்…அடிடா.. அடிடா..

அடிடா சுந்தரலிங்கம்…

சொல்லி சொல்லி பார்த்தேன் அவள் திருந்தமாட்டாளே

அல்லி ரணி டைல்ய் ஆக ஏசுகின்றாளே

சேதனத்தை திருப்பி தாடா

டொனடிஒன் அதையும் தாடா

வாங்கின கடனை தாடா

வந்த வழியே போடா

மாமியாரை நானும் கேட்டேன்

மாமனாரின் காலை தொட்டேன்

சாமியாரா போவேன் என்றேன்

சந்தோசம் தேடி போவேன்

ஓடி வாறேன் உன்னை நம்பி மரியா மரியா

வாழ்கையிலே அர்த்தம் வேணும் தரேயா தரேயா

மாமியாரை நானும் கேட்டேன்

மாமனாரின் காலை தொட்டேன்

சாமியாரா போவேன் என்றேன்

சந்தோசம் தேடி போவேன்

பாவி மகள் சொல்லைக்கேட்டு

பெற்றவரை உதற்றி விட்டு

பாதியாய் வாழுகின்றேன் பயந்து ஓடுகின்றேன்

ஓடிவாரேன் உன்னை நம்பி குஜ்லி மரியா

வாழ்கையிலே அர்த்தம் வேணும் தரேயா தரேயா

மரியாவை தேடுறேன் அவளை நாடி ஓடுறேன்

ப்ரியவை தேடுறேன் செர்ந்து வாழ போகிறேன்

மரியாவை தேடுறேன் அவளை நாடி ஓடுறேன்

ப்ரியவை தேடுறேன் செர்ந்து வாழ போகிறேன்

I’ll take u on a hike

I’ll take u on a bike

I’ll take u on a ride

will u b my lovin’ bride

குஜிலி அம்மா குஜிலி அம்மா கோபம் என்னடியோவ்

குஜிலி அம்மா குஜிலி அம்மா கோபம் என்னடியோவ்

சங்கு கழுத்திலே கட்டுறேன் தாலி

கலகம் ஏனடியோவ்

சங்கு கழுத்திலே கட்டுறேன் தாலி

கலகம் ஏனடியோவ்

முத்து ரதின மாலையோ தங்க வைர அட்டிகையோ

சொத்து சேதனம் வேண்டாம்

தங்க கட்டியே நீ போதும்

டிங்கிரி அய்யா டிங்கிரி அய்யா அங்கற படாதே

டிங்கிரி அய்யா டிங்கிரி அய்யா அங்கற படாதே

சங்கடமான நிலையில் இன்று மாட்டிக்கொண்டாயே

நீயும் சங்கடமான நிலைல்யில் இன்று மாட்டி கொண்டாயே

அதோ அப்பறம் வார்ராரே எந்தன் அண்ணணும் வாரானே

சின்ன தம்பியும் வாரானே உந்தன் முதுகு அப்படியோ

நாய் வேஷம் வெளி வேஷம் எல்லாம்

எல்லாம் நேற்று ஆச்சி நல்லாய் படிச்சாசு

நானும் திருந்தியாச்சு..

கல்யாணம் என் வாழ்க்கை நல்ல பாடம் சொல்லியாச்சு

படிக்காத பயல் நானும் ஒரு படிச்ச மேதை ஆச்சு

நாய் வேஷம் வெளி வேஷம் எல்லாம்

எல்லாம் நேற்று ஆச்சி நல்லாய் படிச்சாசு

நானும் திருந்தியாச்சு..

கல்யாணம் என் வாழ்க்கை நல்ல பாடம் சொல்லியாச்சு

படிக்காத பயல் நானும் ஒரு படிச்ச மேதை ஆச்சு

அடிடா சுந்தரலிங்கம்…அடிடா.. அடிடா..

அடிடா சுந்தரலிங்கம்…

சுந்தரலிங்கமய்யா நீ தான் மனுசனய்யா

மானம் வந்ததய்யா மனுசன் ஆனானய்யா

சுந்தரலிங்கமய்யா வீடொன்றை கட்டுமய்யா

கதையை மாற்றுமய்யா வாழ்ந்து காட்டுமய்யா

அடிடா சுந்தரலிங்கம்…அடிடா..

அடிடா சுந்தரலிங்கம்

அடிடா சுந்தரலிங்கம்…அடிடா..

அடிடா சுந்தரலிங்கம்

ஓ மை டார்லிங் ரோஷி

அடிடா சுந்தரலிங்கம்

கள்ளு கடை பக்கம் போகாதே

அய்யய்யோ வெட்ககேடு

அய்யய்யோ அவள் வேண்டாம்

இப்பாடல்களை தரவிறக்க;

http://www.mediafire.com/?qtj4zad5umj

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ். இப்ப ரூல்ஸ் எல்லாம் மாத்திறாங்கள்.

ஸ்ருடன்ரா தொடர்ந்து இருந்தாலும், வேர்க் பெர்மிற் இல்லாமல் கனகாலம் இருக்கேலாது. ஸோ, கெதியா வேர்க் பெர்மிற்றோட ஒரு வேலையை எடுக்கிறது நல்லது, இல்லாட்டி ரெசிடென்ஸி விசா, சிற்றிசன் உள்ள பெட்டை ஒண்டைக் கொழுவிறது நல்லது.

எல்லாம் நல்லதுக்குத்தான் சொல்லுறன். இதைக் கேட்காமல் "கெடுகிறன் பந்தயம் பிடி" எண்டா சிக்கல்தான்!

Link to comment
Share on other sites

அய்யய்யோ ஊரே கெட்டு போச்சு, அன்பே வா, ரோஷி நீ கொஞ்சம் யோசி, சீதனம் சீராக வேண்டுமா , சோளம் சோறு பொங்கட்டுமா

இப்பாடல்களை தரவிறக்க;

http://www.mediafire.com/?jjqntg5fwjz

Link to comment
Share on other sites

நெடுக்ஸ். இப்ப ரூல்ஸ் எல்லாம் மாத்திறாங்கள்.

என்ன ஸ்டூடன்ட் வீசாவில இருக்கிற ஆக்களும் அசைலம் அடிக்கலாம் என்றோ? நெடுக்குக்கு உலகத்தில ஒருவருக்கும் குடுக்காத ஸ்டூடன்ட் வீசா ஒன்றை சிறீ லங்காவில குடுத்துபோட்டாங்களாம். தான் அசைலம் அடிக்க இல்லையாம் திறமையின் அடிப்படையில் யூகேயுக்கை புகுந்தவராம் என்று ஆள் நான் அறிஞ்ச காலத்தில இருந்து சொல்லிக்கொண்டு திரிகிது. நெடுக்குக்கு ஸ்டூடன்ட் வீசா குடுத்ததுக்கும் சின்னமாமிக்கும் என்ன சம்மந்தம் இருக்கிது என்று முதலில உங்களுக்கு விளங்கி உள்ளதோ? :lol:

Link to comment
Share on other sites

ஒரு கமெர்சியல் இடைவேளை. நேயர் விருப்பம். பாடல்களை கேட்டு மகிழுங்கள். :lol:

கள்ளுக்கடை பக்கம் போகாதே

விரும்பி கேட்டவர்: குமாரசாமி, ஜெர்மனி

http://www.youtube.com/watch?v=N20bsv6i24o&NR=1

சின்ன மாமியே

விரும்பி கேட்டவர்: விசுகு, பிரான்ஸ்

http://www.youtube.com/watch?v=r_4ZEGhwgGo&feature=related

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன ஸ்டூடன்ட் வீசாவில இருக்கிற ஆக்களும் அசைலம் அடிக்கலாம் என்றோ? நெடுக்குக்கு உலகத்தில ஒருவருக்கும் குடுக்காத ஸ்டூடன்ட் வீசா ஒன்றை சிறீ லங்காவில குடுத்துபோட்டாங்களாம். தான் அசைலம் அடிக்க இல்லையாம் திறமையின் அடிப்படையில் யூகேயுக்கை புகுந்தவராம் என்று ஆள் நான் அறிஞ்ச காலத்தில இருந்து சொல்லிக்கொண்டு திரிகிது. நெடுக்குக்கு ஸ்டூடன்ட் வீசா குடுத்ததுக்கும் சின்னமாமிக்கும் என்ன சம்மந்தம் இருக்கிது என்று முதலில உங்களுக்கு விளங்கி உள்ளதோ? :D

அசைலம் அடிக்க தேசத்தை காட்டிக் கொடுத்து மானங்கெட்ட பிழைப்பு நடத்த எந்த விசாவிலும் வரலாம்.. விசா இல்லாமல் களவாவும் கள்ளத்தோணியாவும் நுழையலாம்.

ஸ்ரூடண்ட் விசா புதினம் அல்ல. அதை உரிய முறையில் பயன்படுத்திறது தான் எம்மவர் மத்தியில் புதினம்..! அதாவது ஸ்ருடண்டா நாட்டுக்குள் நுழையிறது.. பிறகு அசைலம் அடிக்கிறது.. இதுதான் தமிழர்கள் அநேகரின் செயல். அது தவறான செயல். அதைத்தான் சொல்லி இருக்கிறேன்..! :lol:

நெடுக்ஸ். இப்ப ரூல்ஸ் எல்லாம் மாத்திறாங்கள்.

ஸ்ருடன்ரா தொடர்ந்து இருந்தாலும், வேர்க் பெர்மிற் இல்லாமல் கனகாலம் இருக்கேலாது. ஸோ, கெதியா வேர்க் பெர்மிற்றோட ஒரு வேலையை எடுக்கிறது நல்லது, இல்லாட்டி ரெசிடென்ஸி விசா, சிற்றிசன் உள்ள பெட்டை ஒண்டைக் கொழுவிறது நல்லது.

எல்லாம் நல்லதுக்குத்தான் சொல்லுறன். இதைக் கேட்காமல் "கெடுகிறன் பந்தயம் பிடி" எண்டா சிக்கல்தான்!

நான் ஸ்கொல்லில் வந்ததால் நாடு திரும்பி அங்கு சேவை செய்ய வேண்டும். அது கட்டாயம். படிக்கும் வரை படிக்கலாம். அதனால் படிக்கிறேன் அவ்வளவே..! எனது நண்பர்கள் கேம்பிரிஜ்ஜில் படித்துவிட்டு கூட ஊர் திரும்பி விட்டார்கள். இப்போ குறைந்த வயதிலும் நல்ல பதவிகளில் இருக்கிறார்கள். இங்க இருந்து வெள்ளைக்கு கூலி வேலை செய்யிறதிலும் ஊர் திரும்பி ஊரை முன்னேற்ற உதவுவது மேல் என்று நினைக்கிறன்.

பேராசிரியர் துரைராஜா.. அவரிடம் கனடிய பல்கலைக்கழக விசேட பேராசிரியர் தகமை இருந்தும் அங்கு போய் வேலை செய்யேல்ல. அவர் உண்மையில் கனடா அல்லது அமெரிக்கா போய் இலகுவாக குடியேறி நல்ல பதிவியில் இருந்து சொகுசாக வாழ்ந்திருக்கலாம். நித்தி போன்ற சந்தர்ப்பவாதிகள் செய்தது போல. ஆனால் அவரோ.. ஊரில இருந்து சைக்கிளில வந்து சொந்த மாணவர்களுக்கு சேவை செய்தவர். அவர் நமக்கெல்லாம் ஒரு நல்ல வழிகாட்டி. :)

Link to comment
Share on other sites

அசைலம் அடிக்க தேசத்தை காட்டிக் கொடுத்து மானங்கெட்ட பிழைப்பு நடத்த எந்த விசாவிலும் வரலாம்.. விசா இல்லாமல் களவாவும் கள்ளத்தோணியாவும் நுழையலாம்.

பேராசிரியர் துரைராஜா.. அவரிடம் கனடிய பல்கலைக்கழக விசேட பேராசிரியர் தகமை இருந்தும் அங்கு போய் வேலை செய்யேல்ல. அவர் உண்மையில் கனடா அல்லது அமெரிக்கா போய் இலகுவாக குடியேறி நல்ல பதிவியில் இருந்து சொகுசாக வாழ்ந்திருக்கலாம்.

இதைத்தான் கோத்தபாய அவர்களும் கூறுகின்றார். இலங்கையில் பிரச்சனை என்று ஒன்றும் இல்லையாமே! உங்களையும் நல்லிணக்க ஆணைக்குழு முன்பாக வாக்குமூலம் கொடுப்பதற்கு அழைக்க வேண்டும்.

தேசபிமானிகளின் (?) ரகளைகள் தாங்கமுடியாமல் தேசத்தைவிட்டு துரத்தி அடிக்கப்பட்டவர்கள் பற்றி எழுதுவதற்கு உங்கள் சந்தர்ப்பவாதம் இடம்கொடாதது ஆச்சரிமாகவில்லை. ஏன் என்றால் நீங்களும் தேசத்தின் (?) பெயரால் மானம் கெட்ட பிழைப்புத்தான் நடத்துகின்றீர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதைத்தான் கோத்தபாய அவர்களும் கூறுகின்றார். இலங்கையில் பிரச்சனை என்று ஒன்றும் இல்லையாமே! உங்களையும் நல்லிணக்க ஆணைக்குழு முன்பாக வாக்குமூலம் கொடுப்பதற்கு அழைக்க வேண்டும்.

தேசபிமானிகளின் (?) ரகளைகள் தாங்கமுடியாமல் தேசத்தைவிட்டு துரத்தி அடிக்கப்பட்டவர்கள் பற்றி எழுதுவதற்கு உங்கள் சந்தர்ப்பவாதம் இடம்கொடாதது ஆச்சரிமாகவில்லை. ஏன் என்றால் நீங்களும் தேசத்தின் (?) பெயரால் மானம் கெட்ட பிழைப்புத்தான் நடத்துகின்றீர்கள்.

கோத்தா சொல்வது பாதி உண்மை. அண்மையில் கனடிய அமைச்சர் ஒருவரும் சொல்லி இருந்தார் 70% கனடிய அகதி அந்தஸ்துப் பெற்றவர்கள் கனடிய அகதிகள் சட்டங்களை துஸ்பிரயோகம் செய்து தவறான தகவல்களை வழங்கி அகதி அந்தஸ்துப் பெற்றுள்ளனர் என்று. அகதி அந்தஸ்து பெற்றதும் அவர்கள் மீண்டும் சிறீலங்காவிற்கு விஜயம் செய்கின்றனர் என்று. இப்படிப் பட்ட தேசத்தின் துயரில் தங்கள் வளமான வாழ்விற்காக பிழைப்பு நடத்தும் சந்தர்ப்பவாத இனக்குழுமத்தில் நாங்கள் சொல்லும் கருத்துக்கள் செவிடன் காதில் ஊதிய சங்குதான்.

உண்மையாக போராட்டத்தில் உறுதியோடு பங்கெடுத்த பலர் இன்னும் தாயகத்தில் சிறைகளிலும் துன்பத்திலும் வறுமையிலும் வாடிக்கொண்டிருக்க.. போராட்டத்தில் பங்கெடுக்காது பதுங்கி ஓடிவந்த கூட்டம் அசைல வாழ்வில் செகுசு காண்பதுதான் நாம் கண்ட போராட்ட பலாபலன். இத்தனை உயிர்களின் இழப்புக்கு கிடைத்த பலன்..! :D:o

புலிகளுக்கு எதிராக வேண்டும் என்றே வாக்குமூலம் கொடுத்தவர்களில் அகதி அந்தஸ்துக் கோரியோரே அதிகம். இந்தக் கூட்டத்தினரால் தான் புலிகளை சட்ட ரீதியாக அந்தந்த நாடுகள் பயங்கரவாதமாக சித்தரிக்க முடிந்துள்ளது. புலிகளின் அழிவிற்கும் இந்தச் சுயநலவாதிகளே காரணம்.

இதற்குள்.. இவைக்கு.. வெட்டி கெளரவப் பிரச்சனைகள் வேற...??! :D:)

Link to comment
Share on other sites

....

பேராசிரியர் துரைராஜா.. அவரிடம் கனடிய பல்கலைக்கழக விசேட பேராசிரியர் தகமை இருந்தும் அங்கு போய் வேலை செய்யேல்ல. அவர் உண்மையில் கனடா அல்லது அமெரிக்கா போய் இலகுவாக குடியேறி நல்ல பதிவியில் இருந்து சொகுசாக வாழ்ந்திருக்கலாம். நித்தி போன்ற சந்தர்ப்பவாதிகள் செய்தது போல. ஆனால் அவரோ.. ஊரில இருந்து சைக்கிளில வந்து சொந்த மாணவர்களுக்கு சேவை செய்தவர். அவர் நமக்கெல்லாம் ஒரு நல்ல வழிகாட்டி. :D

பேராசிரியர் துரைராஜா மட்டும் இல்லை எனக்குத் தெரிந்து வெளிநாடுகளில் படித்து பட்டம் பெற்ற பல பேராசிரியர்கள், ஊரில் எழிமையான வாழ்க்கை வாழ்ந்த படியும், மாணவர் சமுதாயத்தை முன்னேற்றி விட்டுள்ளார்கள் என்பது நான் கண்முன்னே கண்ட உண்மை! இதைக் கூறிய நெடுக்குக்கு அவர்களிடம் படித்து தற்போது பலர் அவர்கள் காட்டிய வழி போல் இளைய தலைமுறைக்குக் கல்வி கற்பிக்கும் மாணவர் சார்பில் பல ஆயிரம் பச்சைப் புள்ளிகள் போடலாம். :o (இருந்த ஒன்றை போட்டுளேன்)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சரி, ஒராளை பற்றி வேரும் விழுதில போட்டிருந்து, அதில ஏன் போட்டது என்றும் கேள்வி? அவர் ஒரு பாடகர், பிறகு அதபற்றி சில பின்னூட்டம்.. பிறகு அவரைபற்றி வசவு ..நல்ல சமூகம்.

இதில ஒரே ஒரு விடயம், அது தனியே நெ மாத்திரமல்ல, தமிழன் என்ன செய்தாலும் பிழைபிடிக்கிறது என்று ஒரு கூட்டம் அது யாழ்ப்பாணத்தில பல்சர் ஓடின என்ன, நல்லூர் திருவிழாவிற்கு போனால் என்ன, UK பட்டுப்பாடின என்ன, போரைக்காட்டி நிறைய வலைப்பின்னல்கள், அது தமிழர் தரப்பிலும் உண்டு, சிங்களவநிடமும் உண்டு, அவை இலகுவில் தங்கள் வாழ்கை கோலங்களில் இருந்து விடுபட முடியாது திணறுகின்றது. புதிது புதிதாக காரணம் தேடும், யாரும் தமது நிலைகளுக்கு திரும்பினாலும், அது போர் இன்னும் முடியவில்லை என்று கட்டுவதற்கு எல்லா விதமான உத்திகளையும் செய்யும்.

சின்ன உதாரணம், எழிலனின் மனைவி சொன்ன வாக்கு மூலத்தில் ஒருபகுதி , "தனக்கு நம்பிக்கை இருக்கு, எழிலனை கொன்றிருக்க மாட்டார்கள் என", அந்த பகுதியை யாரும் தலையங்கம் ஆக்க விருப்பம் இல்லை..அவர் சொன்ன இன்னுமொரு பகுதி, "எனக்கு என்ன நடந்தாலும் பரவாயில்லை, உயிர் வாழ வேண்டும் என்ற விருப்பத்திற்காக வாழவில்லை" என்ற பகுதினை தலையங்கமாக, அல்லது முகப்பு பகுதியாக செய்தி போடும் செய்தியாளர்களை, இணையங்களை எவ்வாறு அழைப்பது, அல்லது அவர்களின் நோக்கம் என்ன என அறிவதர்ற்கு என்ன தேவை? முதல் பந்தி ஒன்றில் எழிலனின் மனைவி அரச உத்தியோகத்தில் இருப்பதை இரட்டை வேடம் என்று குறிபிட்டது, மனிதர்களின் வாழ்கை கோலத்தை பற்றி குறிப்பிடவே அன்றி தனிப்பட ரீதியில் அல்ல. இந்த நிலையிலும் அவர் வாளுவதர்ற்கு ஒரு வழியாகத்தான் நான் அதை பார்க்கிறேன்.

மற்றது,

ஒருவன் தனது துறையில் மாத்திரமல்லாமல் இன்னுமொரு துறையிலும் முன்னுக்கு வந்திருக்கின்றான் என்றால், அதை பாராட்டுகிற பண்பு வேண்டும் அதைவிடுத்து, காசைகொடுத்து பட்டம் எடுத்திப்பார் என்பது, மனப்பிறள்வே தவிர வேறு ஏதும் இல்லை. - முதல் பந்தியிலே இருக்கிறது நித்தி இலங்கையில் எங்கோ விவசாய விரிவுரையாளர் ஆக இருந்ததென.. நான் துரையை பற்றி எழுதும் போது எழுதியது அவர் சிங்களவனோடும் இணக்கமாக இருந்திருக்கிறார் என்பதை குறிக்கவே எழுதினேன், என்னுடைய நோக்கம் மொட்டந்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடும் நெ க்கு விளங்கபடுத்தவே தவிர துரையை குறை சொல்லவல்ல- முதலும் சொல்லியிருக்கிறேன்.

நெ..புலமை பாரிஸில் வந்தனீங்கள் மேலும் படித்து நல்ல நிலைக்கு வர வாழ்த்துக்கள்.

மற்றவர்களினதும் கருத்துகளை, செயற்பாடுகளையும் மதித்தால் நல்லம்.

ரதி ஓரிடத்தில் எழுதியிருந்தீர்கள்..

காசு கொடுத்தால் போதாது, போய் செய்யவேண்டும் என்று..உண்மை ஆட்கள் போக வேண்டும், அது இல்லாதவிடத்து காசு வேண்டும். எனது நண்பன் ஒருவன் தனது வேலை நியமனதிர்ர்காக காத்திருக்கிறான், சில காலம் முன்பு கதைத்தேன், எங்கே வரும் என்று தெரியாதாம், ஆனால் கிளிநொச்சி வந்தால் (தனக்கு) கடினம் என்று சொன்னான். இதுதான் நிலைமை..நான் சொல்ல முடியாது போடா மச்சான் என்று, இங்கே அரச உதவி பணத்தில் இருந்து கொண்டு கைகாசுக்கு வேலை செய்துகொண்டு BMW ஓடேக்க ஒராள் 15 - 20 வருடம் படி படி என்று படித்து போட்டு வன்னிக்கே தோட்டம் செய் என்று சொல்ல இயலாதுதானே? அவர் விரும்பினால் ஓகே ..நான் சொல்லவியலாது.. ஏனெனில் நான் அப்படியில்லை. நானே, அரசசெலவில்/ மக்களின் காசில் படித்துப்போட்டு ( நெ மாதிரி என்னுடைய தகுதிக்கும், முயற்சிக்கும் கிடைத்த சலுகை என்று சொல்லுகிற அளவுக்கு ...ரீல் விட தெரியாது/ விரும்பவில்லை) இப்ப வேற ஆருக்கோ எதோ செய்து கொண்டு இருக்கிறேன். ஆனால் ஆருக்கு தெரியும் 10 வருடத்துக்கு பிறகு என்ன செய்வன் எண்டு. அது மட்டும் யாழில் கருத்த எழுதுவதுதான்...

மற்றது, நெ நல்ல விஷயம் ஊருக்கு திரும்பி போறது, அது உங்கட விருப்பம், எனக்கு தெரிய வேற ஆட்களும் உங்களைமாதிரி ஸ்கோல் இல் வந்தவர்கள், திரும்பி போகத்தான் விரும்புகிறார்கள், எனக்கு சொல்ல தெரியவில்லை ஆனால் இப்ப ஒருவகையான தோழமை அழுத்தம் இருக்கு போல. இங்கே நாங்கள் என்னதான் செய்தாலும், இங்கே எங்களுக்கு 10 , 15 முந்தி வந்தவையினுடைய லொள் தாங்க முடியாது. அவை எதோ கனடா தாங்கள்தான் கண்டுபிடித்தமாதிரி கதை அளந்து கொண்டு திரியினம். நாங்கள்/ நான் நினைத்தபடி எல்லாம் செய்ய முடியாது-பெட்டி கொழுவின ஆக்கள்..அங்கே போனால், நான் இஞ்ச பட்ட கஸ்ரம் எல்லாம் மனிசி பட வேண்டும். அதைத்தான் கரும்பு கடைசியா எழுதி இருந்ததன் ஒரு கருத்து எண்டு நினைகிறன், அங்கே இருக்கிற/இருந்த ஆட்கள் தனியே பிரச்சனையால மட்டும் வெளிநாடு ஓடவில்லை. யாழ் பாண கம்பஸ் இல நடந்த கதைகளை சொன்னா, 10 பிரேக் எடுத்துதான் இந்த திரி முடியும்.

நன்றி வணக்கம்...

ப்ளீஸ் one more break ....

Link to comment
Share on other sites

அது சரி... வேரும் விழுதும் பகுதியில் சின்னமாமி நித்திகனகரத்தினம் பற்றி கலைஞர் அறிமுகமாக ஆரம்பிச்சு கடைசியில அந்தாளை ஓர் கூடாத சுயநலவாதியாக சித்தரிச்சு, கனடாவில இருக்கிற 70% தமிழ்ச்சனங்களை குற்றவாளிகளாக இனம்கண்டு, இறுதியில் நெடுக்காலபோவானையும், பேராசிரியர் துரைராசாவையும் புகழ்ந்து.. கெளரவித்து மிச்சம் எங்கால போவது என்று தெரியாமல் திரி அந்தரத்தில தொங்கிக்கொண்டு உள்ளது. இன்னமும் கொஞ்சம் போனால்... நித்தி கனகரத்தினம் என்று ஒரு ஆள் உண்மையில பாட்டுக்கள் பாட இல்லை என்றும் சொல்லுவீனம். :o

யோவ் எரிமலை... என்ன நான் சொன்ன கருத்துக்கள் என்று உம்பட பாட்டில கொஞ்ச கருத்துக்களை அவிழ்த்துவிட்டு இருக்கிறீர்? :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஐயா கரும்பு ,

உங்கள் கருத்தை பிழையாக விளங்க்கியதிர்ற்கும் மேற்கோள் காட்டியதிர்ற்கும் மன்னித்து கொள்ளுங்கள்.

குறிப்பு:

"அதைத்தான் கரும்பு கடைசியா எழுதி இருந்ததன் ஒரு கருத்து எண்டு நினைகிறன், அங்கே இருக்கிற/இருந்த ஆட்கள் தனியே பிரச்சனையால மட்டும் வெளிநாடு ஓடவில்லை. "

இதுதான் உங்கள் கருத்தில் இருந்து நான் மேற்கோள் காட்டிய விடயம். ஒன்று வசன ஒழுங்கு பிழை, மற்றது நீங்கள் சொன்னதை வெளிப்படையாக சொல்லவில்லை. கமாவையும், முர்ருப்புள்ளியையும் பாருங்கள். அதற்க்கு மேலும் என்னில் பிழையிருந்தால் மீண்டும் ஒருமுறை மன்னித்து கொள்ளவும்.

மற்றது நெ ஐ புகழ்ந்து பற்றி, இது பதில் வரக்கே தெரியும்..உண்மையாக வாழ்த்துகிறேன் அவரின் படிப்புக்கு, திரும்பி போவதர்ற்கு மிச்சம் என்னவென்று அவருக்கு விளங்கவேண்டும்.

துரைராஜாவை பற்றி, நெ முட்டாள் தனமாக இதில் தொடங்கினாலும், அவரின் தகுதிக்கும் சேவைக்கும் யாரும் எங்கேயும் மதிப்பு கொடுக்கலாம்.

நித்தி கனகரத்தினத்தி பற்றி..நீங்கள் சொல்லும் (கவலைப்படும்) அத்தனையையும் நான் சொல்லி இருக்கிறேன். இலங்கை போப் இன் முதல்வன், இன்னும் பலரின் விருப்ப பாடகன், சிறந்த கல்விமான், விவசாயத்துறையில் தொடங்கி, வேலை இல்லதாபடியால், மருந்தியல் படித்து, அதில் முதன்மையாக இருப்பவர். அவர் செய்த சிபாரின் அடிப்படையில் விக்டோரியா பல்கலை கழகத்தில் ஒரு புதிய துறையே தொடங்க்யுலார்கள், . அவரின் ஆராய்ச்சி பாஞ்சமிருததில் உள்ள இதய பாதுக்கப்பு பொருட்கள். அவருடைய மேலதிகாரிஇடம் இதுபற்றி முதல் முதல் சொன்ன போது அவர் சொன்னது " உங்களுக்கு மூளை கூடிபோச்சுது". ஆனால் தான் கூடினவர்தான் என நிருபித்து ஒரு புதிய துறையையே தொடங்கின செயல்வீரன்.

இதைவிட தாயக "கத்லப்" திட்டத்திற்காக பாடல் நிகழ்ச்சி ஒன்றில் பாடுவதர்ற்கு சம்மதித்திருந்தார், ஆனால் அது நடைபெறவில்லை.

நான் கனடா ஆட்களை குறை சொன்னதாக நீங்கள் கவலைப்ப்டுவற்காய் வருந்துகிறேன். ஆனால் நிஜம் அதுதான். நான் இன்னுமொருவருக்காய், நான் அடைத்த துயரங்களை என் மறைக்க வேண்டும். நான் அங்கிலத்தில்தான் படித்தேன் என்று கூற, மற்றவர்கள் நம்புவதர்ற்கு எவளவு காலம் எடுத்தது என்று எனக்குத்தான் தெரியும். இது எனக்கு மட்டுமல்ல பலருக்கு நடந்தது, என்னைப்போல வந்த சிலர் திரும்பி போய்விட்டார்கள், ஒன்று வேலை இல்லை மற்றது எங்கட ஆட்களில் லொள்..உங்களுக்கு அப்படி ஏற்படாவிட்டால் நீங்கள் நல்ல நண்பர் உறவினர் சூழ இருக்கிறீர்கள். மறுதலைக்கு இது எனக்கும் என் போன்றவர்களுக்கும் தான் ஏற்படிருந்தால் அதையும் மிளப்பெருகிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அக்கோய் உங்களுக்கு ஆத்திரம் வருகுதில்ல.. இதே போல் தான் நீங்களும் எங்களைப் பற்றி சரியாக அறியாமல்.. புத்திமதி சொல்ல வெளிக்கிடக் கூடாது.

நாங்க என்ன செய்தம் என்றதை சொல்ல வேண்டிய அவசியம் எனக்கு கிடையாது. ஆனால் அதை தேசத்தில் ஓரிருவராவது அறிந்திருக்கிறார்கள் அது போதும்.

எங்களின் கல்விக்காக நாங்கள் தான் கஸ்டப்பட்டோமே தவிர மற்றவர்களின் சாவை துன்பத்தைக் காட்டி நாங்கள் கல்வி பெறவில்லை. எங்கள் முயற்சிக்கு வெற்றிக்கு வழங்கப்பட்ட சலுகைகள் தான் இன்றும் எமக்கு உதவி இருக்கிறது. மற்றவர்களின் வாழ்வில் நாங்கள் சலுகை பெறவில்லை. அல்லது மற்றவர்களை சார்ந்து வாழ வந்தவர்களும் அல்ல. அப்படிப்பட்ட எம்மை யாரும் இதைச் செய் என்று சொல்ல முடியாது. இருந்தும் நாம் சொல்கிறோம்.. நாங்கள் தொடர்ந்தும் தேசத்துக்கு அவசியமானதை செய்வோம்.. செய்து கொண்டே இருப்போம் என்பதை.

தேசத்தின் துயரை காட்டி அசைலம் அடிக்க எமக்கு தெரியாது என்றில்லை. ஆனால் செய்யக் கூடாது அதை தேசத்திற்கு செய்யும் துரோகம் என்றே நாங்கள் நினைகிறோம். முதலில் நீங்கள் (தமிழர்களில் பலர்) எல்லாம் தேசத்தின் துயரை வைத்து உங்கள் வாழ்க்கையை வளமூட்ட நின்றதை எண்ணிப் பாருங்கள். மனச்சாட்சியை தட்டிக் கேட்டுப் பாருங்கள். ஆனால் நாம் அதற்கு இடமளிக்கவில்லை. அதுவும் தேசத்துக்குச் செய்த பெரிய கடமை தான்..! தேசத்தை போராட்டத்தை எங்களின் நலனுக்காக நாங்கள் ஒருபோதும் பாவித்ததில்லை. ஆனால் அது தந்த வலிகளை வேதனைகளை கஸ்டங்களை சுமந்திருக்கிறோம். ஆகவே எம்மை யாரும் கேள்வி கேட்க முடியாது. கேள்வி கேட்கப்பட வேண்டியவர்களுக்குள் நிச்சயம் நாம் அடங்கமாட்டோம்.

நீங்கள் அசேலம் அடிக்காதவராய் இருக்கலாம் ஆனால் எத்தனை வருடம் நான் மாணவ விசாவில் வந்தனான் எனச் சொல்லிக் கொண்டு இருப்பீங்கள்...10 வருடம் போனால் அவனாகவே தூக்கி விசாவைத் தரப் போறான் விசா கிடைத்ததும் ஊருக்குப் போக வா போறீங்கள்? இன்னும் படிக்க கிடக்குது ஆராய்ச்சி முடியவில்லை எனச் சொல்லி நீங்களும் பிரிட்டன் குடிமகன் ஆகத் தான் போறீங்கள்...என்னுடைய மனசாட்சியைக் கேட்டால் நான் போராட்டத்தை ஒரு நாளும் என்னுடைய சுயநலத்திற்காய் பாவிக்கவில்லை...நீங்கள் உங்கள் முழுத் திறமையில் தான் படித்து வந்திங்கள் இல்லை எனச் சொல்லவில்லை ஆனால் உங்களோட சேர்ந்து படித்த அரைவாசி மாணவர் கொல்லப்பட,அரைவாசிப் பேர் இயக்கத்திற்கு போக நீங்கள் மட்டும் தப்பி வந்து போட்டு நான் அது செய்தனான்,இது செய்து கொண்டு இருக்கிறேன் என சொல்லலாம்[இங்கு இருந்து காசு அனுப்புவதை விட வேறு என்ன செய்திருப்பீங்கள்!...நான் ஏற்கனவே எழுதின மாதிரி உயிரைக் கொடுப்பவர்கள் அங்குள்ளவர்கள் இங்கிருந்து முகத்தை மறைத்து அவன் எதிரி,இவன் துரோகி என எழுதலாம் அதைத் தான் நீங்கள் செய்து கொண்டு இருக்கிறீங்கள்.

பேராசிரியர் துரைராஜா மட்டும் இல்லை எனக்குத் தெரிந்து வெளிநாடுகளில் படித்து பட்டம் பெற்ற பல பேராசிரியர்கள், ஊரில் எழிமையான வாழ்க்கை வாழ்ந்த படியும், மாணவர் சமுதாயத்தை முன்னேற்றி விட்டுள்ளார்கள் என்பது நான் கண்முன்னே கண்ட உண்மை! இதைக் கூறிய நெடுக்குக்கு அவர்களிடம் படித்து தற்போது பலர் அவர்கள் காட்டிய வழி போல் இளைய தலைமுறைக்குக் கல்வி கற்பிக்கும் மாணவர் சார்பில் பல ஆயிரம் பச்சைப் புள்ளிகள் போடலாம். :D (இருந்த ஒன்றை போட்டுளேன்)

குட்டி துரைராஜா அங்கு இருந்து சேவை செய்கிறார் அதை ஒருதரும் இல்லை எனச் சொல்லவில்லை ஆனால் துரைராஜாவை மாதிரி எல்லோரும் அங்கு இருந்து சேவை செய்ய வேண்டும் என நாட்டை விட்டு மாணவ விசாவில் வந்து பல வருடங்களாய் படித்துக் கொண்டு இங்கு இருப்பவர்கள் சொல்ல இயலாது அது தான் எனது கருத்து...நெடுக்ஸ் தான் சொன்ன கருத்துகளை ஊரில் இருந்து கொண்டு சொல்லி இருந்தால் அதை வரவேற்கும் முதல் ஆளாக நான் இருப்பேன்...நீங்கள் நினைக்கிறீங்களா அவர் நாட்டுக்குப் போய் சேவை செய்வார் என்டு...சொன்னவர்கள் செய்ததாக சரித்திரம் இல்லை...செய்பவர்கள் சொல்வதில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் அசேலம் அடிக்காதவராய் இருக்கலாம் ஆனால் எத்தனை வருடம் நான் மாணவ விசாவில் வந்தனான் எனச் சொல்லிக் கொண்டு இருப்பீங்கள்...10 வருடம் போனால் அவனாகவே தூக்கி விசாவைத் தரப் போறான் விசா கிடைத்ததும் ஊருக்குப் போக வா போறீங்கள்? இன்னும் படிக்க கிடக்குது ஆராய்ச்சி முடியவில்லை எனச் சொல்லி நீங்களும் பிரிட்டன் குடிமகன் ஆகத் தான் போறீங்கள்...என்னுடைய மனசாட்சியைக் கேட்டால் நான் போராட்டத்தை ஒரு நாளும் என்னுடைய சுயநலத்திற்காய் பாவிக்கவில்லை...நீங்கள் உங்கள் முழுத் திறமையில் தான் படித்து வந்திங்கள் இல்லை எனச் சொல்லவில்லை ஆனால் உங்களோட சேர்ந்து படித்த அரைவாசி மாணவர் கொல்லப்பட,அரைவாசிப் பேர் இயக்கத்திற்கு போக நீங்கள் மட்டும் தப்பி வந்து போட்டு நான் அது செய்தனான்,இது செய்து கொண்டு இருக்கிறேன் என சொல்லலாம்[இங்கு இருந்து காசு அனுப்புவதை விட வேறு என்ன செய்திருப்பீங்கள்!...நான் ஏற்கனவே எழுதின மாதிரி உயிரைக் கொடுப்பவர்கள் அங்குள்ளவர்கள் இங்கிருந்து முகத்தை மறைத்து அவன் எதிரி,இவன் துரோகி என எழுதலாம் அதைத் தான் நீங்கள் செய்து கொண்டு இருக்கிறீங்கள்.

அக்கோய் நாங்க இங்க இருக்கனும் என்று நினைச்சிருந்தா அசைலம் அடிச்சு இப்போ நிரந்தர வதிவிட உரிமையும் எடுத்திருக்கலாம். ஆனால் செய்ய விரும்பல்ல. காரணம் தேசத்தைக் காட்டிக் கொடுக்கக் கூடாது என்பதுதான்.

உங்களுக்கு தெரியாது போல.. இயக்கம் படிக்க விரும்பியவர்களை போராட்டத்துக்குள் உள்ளெடுக்கவில்லை. எமக்காக எமது பாடசாலையில் நடத்தப்பட்ட கூட்டத்தில் அவர்கள் சொன்னது தமிழீழத்தின் அத்திவாரமாக தலைவர் கல்விச் சமூகத்தை வளர்த்தெடுக்க விரும்புகிறார். நீங்கள் தென்னிலங்கைக்கு போய் படித்தாலும் மீண்டும் தாய் மண்ணுக்கு வந்து சேவை செய்ய வேண்டும் என்று.

இயக்கம் படிக்க விரும்பியவர்களை போராளியாக இருந்தாலும் சரி பிறராக இருந்தாலும் சரி கட்டாயப்படுத்தி ஆயுதத்தைக் கொடுக்கவில்லை.

யாரும் படிக்காமல் எல்லோரும் இயக்கத்திற்கு வரனும் என்பதும் இயக்கத்தின் கொள்கை அல்ல. அப்படி என்றிருந்தால் யாரும் அகதியாக வெளிநாட்டுக்கு ஓட முடியாமலும் இயக்கம் தடுத்திருக்கலாம். தங்களின் அழிவையும் தவிர்த்திருக்கலாம். ஆனால் அவர்கள் தாங்கள் அழிந்தாலும் நாடு அதாவது தங்கள் கொள்கை நிலைக்கனும் சந்ததி வாழனும் என்று தான் எண்ணினார்களே தவிர.. எதிரிக்கு வால் பிடிக்க சொல்லவில்லை.

அல்லது உங்கள் சுகபோக வாழ்க்கைக்காக தேசத்தைக் காட்டிக் கொடுத்து அசைலம் அடிக்கச் சொல்லவில்லை. படிக்க ஆற்றலுள்ள அனைவரையும் படிக்க இயக்கம் அனுமதித்தது. அதற்கு படிப்பின் பெறுமதி தெரிந்திருந்தது.அதுமடுமன்றி இயக்கமே பலரை வெளிநாட்டுக்கு அனுப்பியும் படிப்பிக்க வைத்தது.

அவுஸ்திரேலியாவில் இருக்கும் சிங்களப் பேராசிரியர் செனிவர்டனவிற்கு இருக்கும் தமிழ் மக்களின் உரிமைப் போராட்டம் தொடர்பான அக்கறை கூட நித்தி போன்ற வேரும் விழுதுகளுக்கும் இல்லை என்பதுதான் எங்களின் உறுதியான நிலைப்பாடு. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கட‌ கருத்தைப் பார்த்தால் படிக்காத முட்டாள்களும்,படிப்பில் அக்கறையில்லாதவர்களும் தான் இயக்கத்திற்குப் போக வேண்டும் போல கிட‌க்குது...மனம் இருந்தால் இட‌ம் உண்டு என ஒரு பழமொழி இருக்குது தீலிபன் அண்ணா போன்றோருக்கு மனம் இருந்தது படிப்பை உதறி விட்டு மக்களே பெரிது என மக்களுக்காய் உயிர் நீத்தார்கள் அதற்காக நீங்கள் ஏன் போய் இயக்கத்தில் சேர‌வில்லை எனக் கேட்க எனக்கு உரிமை இல்லை அதே போல மற்றவர்கள் போய் நாட்டுக்கு ஏன் சேவை செய்யவில்லை என விமர்சிக்க உங்களுக்கும் உரிமை இல்லை என்பதே என் கருத்து...இயக்கம் பல பேரை புலத்திற்கு அனுப்பி படிப்பித்தது இல்லை எனச் சொல்லவில்லை ஆனால் அவர்கள் அனைவருமே நாட்டுக்கு திரும்பிப் போய் விட்டார்கள்...நானும் உங்களைப் பார்த்துக் கேட்கிறேன் நீங்கள் தாய் நாட்டுக்குப் போய் சேவை செய்வீர்களா? ஆம் என்டால் அங்கே போய் சேவை செய்யத் தொட‌ங்கிய பின் மற்றவர்களை விமர்சியுங்கள்...நீங்கள் இங்கே வந்து படிப்பை கார‌ணம் காட்டி இருக்கலாம் ஆனால் நித்தி போன்றோர் மட்டும் ஊருக்குப் போய் சேவை செய்ய வேண்டும்...நீங்கள் இங்கே இருந்து பண உதவி செய்வது மாதிரித் தான் நித்தி போன்றோரும் பண உதவி செய்வார்கள்...நீங்கள் செய்வது உங்களைப் பொறுத்த வரை சரி என்டால் நித்தி செய்வதும் சரி தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கட‌ கருத்தைப் பார்த்தால் படிக்காத முட்டாள்களும்,படிப்பில் அக்கறையில்லாதவர்களும் தான் இயக்கத்திற்குப் போக வேண்டும் போல கிட‌க்குது...மனம் இருந்தால் இட‌ம் உண்டு என ஒரு பழமொழி இருக்குது தீலிபன் அண்ணா போன்றோருக்கு மனம் இருந்தது படிப்பை உதறி விட்டு மக்களே பெரிது என மக்களுக்காய் உயிர் நீத்தார்கள் அதற்காக நீங்கள் ஏன் போய் இயக்கத்தில் சேர‌வில்லை எனக் கேட்க எனக்கு உரிமை இல்லை அதே போல மற்றவர்கள் போய் நாட்டுக்கு ஏன் சேவை செய்யவில்லை என விமர்சிக்க உங்களுக்கும் உரிமை இல்லை என்பதே என் கருத்து...இயக்கம் பல பேரை புலத்திற்கு அனுப்பி படிப்பித்தது இல்லை எனச் சொல்லவில்லை ஆனால் அவர்கள் அனைவருமே நாட்டுக்கு திரும்பிப் போய் விட்டார்கள்...நானும் உங்களைப் பார்த்துக் கேட்கிறேன் நீங்கள் தாய் நாட்டுக்குப் போய் சேவை செய்வீர்களா? ஆம் என்டால் அங்கே போய் சேவை செய்யத் தொட‌ங்கிய பின் மற்றவர்களை விமர்சியுங்கள்...நீங்கள் இங்கே வந்து படிப்பை கார‌ணம் காட்டி இருக்கலாம் ஆனால் நித்தி போன்றோர் மட்டும் ஊருக்குப் போய் சேவை செய்ய வேண்டும்...நீங்கள் இங்கே இருந்து பண உதவி செய்வது மாதிரித் தான் நித்தி போன்றோரும் பண உதவி செய்வார்கள்...நீங்கள் செய்வது உங்களைப் பொறுத்த வரை சரி என்டால் நித்தி செய்வதும் சரி தான்.

அக்கோய் நீங்கள் எனது கருத்தை தவறாக அர்த்தப்படுத்த முனைகிறீர்கள். இயக்கம் படிக்க விரும்பியவர்களை அது போராளியாக இருந்தாலும் சரி பிறராக இருந்தாலும் சரி தடுக்கவில்லை என்பதை சொல்லிவிட்டேன். அதுமட்டுமன்றி இயக்கம் எல்லாப் போராளிகளுக்கும் தேவையான அடிப்படை கல்வியையும் வழங்கி வந்துள்ளது. ஆகவே படிக்காத முட்டாள்கள் தான் போராளிகள் ஆனார்கள் என்பது உங்களின் கற்பனையில் நீங்கள் இயக்கத்தை காட்ட முனையும் கேவலமான எண்ண வெளிப்பாடு. எங்களின் கருத்தை தவறாக அர்த்தப்படுத்தி நீங்கள் உங்களின் இயக்கம் தொடர்பான அபாண்டமான சிந்தனையை வெளிப்படுத்த முனைகிறீர்கள். இதை தவிர்த்துக் கொள்ள முனையுங்கள்.

நாங்கள் பேராசியர்கள் அல்ல. படிப்பவர்கள். நித்தி போன்றோர் படித்து ஒரு நிலையை அடைந்த பின்னும் தாயகம் பற்றி சிந்திக்காதவர்கள். அவர்களை அந்த மண்ணின் வேரும் விழுதுகளும் ஆக்குவதுதான் ஏன் என்று கேட்கிறோம்..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் தவறாக அர்த்தப்படுத்தவில்லை நீங்கள் எழுதினது அந்த மாதிரித் தான் இருக்குது வேணும் என்டால் திரும்ப ஒருக்கால் வாசித்துப் பாருங்கள்...முதலும் ஒரு கவிதையில் நீங்கள் இந்தப் பொருள் படவே எழுதினீர்கள்...எழுதினது நீங்கள் ஆனால் பிழை என் மேல் நல்ல உலகம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கள்ளுக்கடைப் பக்கம் போகாதே

காலைப்பிடித்துக் கெஞ்சுகிறேன்

கண்ணும் புகைந்திடும் நெஞ்சும் வரண்டிடும்

கைகால் உலர்ந்திடும் இந்த கள்ளாலே

ஆச்சி எந்தன் அப்புவும் இந்தக் கடையில் தான்

அடுத்தவீட்டு வாத்தியாரும் கடையில்தான்

விட்டமின் பீ எண்டு வைத்தியரும் சொன்னதாலே

விட்டேனோ கள்ளுக்குடியை நான்

பாவிப் பயலே கொஞ்சம் கேளடா

பாலூட்டி வளர்த்த நானுன் தாயடா

பற்றி எரியுதெந்தன் வயிறடா

பனங்கள்ளை மறந்து நீயும் வாழடா

கடவுள் தந்த பனைமரங்கள் தானடா

கடவுள் கள்ளைத் தொட்டதுண்டோ கேளடா

வாய்க்கொழுப்பும் மனத்திமிரும் வளர்ந்துவரும்

உனக்கு நானும் வாலறுக்கும் நாளும் வருமோ

கள்ளுக்குடி உன் குடியைக் கெடுத்திடும்

கடன்காரனாக உன்னை மாற்றிடும்

கண்டகண்ட பழக்கமெல்லாம் பழக்கிடும்

கடைசியில் கட்டையிலே கொண்டு போய்ச் சேர்த்திடும்

கடவுளே என் மகனும் இதனை உணரானோ

கள்ளுக்குடியை விட்டொழிந்து திருந்தானோ

அன்னை சொல்லு கேட்பானென்றால்

ஆறறிவு படைத்த அவனும் பேரறிஞன் ஆகிடுவானே.

கள்ளுக் கொட்டில்லை இந்தப் பாட்டைக் கேட்டுக் கொண்டே கள்ளுக்குடிப்பவர்கள் பலர். :D

இணைப்பிற்கு நன்றி தப்பிலி

வாத்தியார்

**********

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் தவறாக அர்த்தப்படுத்தவில்லை நீங்கள் எழுதினது அந்த மாதிரித் தான் இருக்குது வேணும் என்டால் திரும்ப ஒருக்கால் வாசித்துப் பாருங்கள்...முதலும் ஒரு கவிதையில் நீங்கள் இந்தப் பொருள் படவே எழுதினீர்கள்...எழுதினது நீங்கள் ஆனால் பிழை என் மேல் நல்ல உலகம்

அக்கோய் இதுதான் உங்களின் அண்மைக்கால கருத்தாடல் பாணி. சொல்ல வேண்டியதை எல்லாம் சொல்லிவீர்கள்.. இறுதியில் நீங்கள் எழுதியதையே போய் திரும்பிப்படியுங்கள் என்று சொல்லிவிட்டு எஸ்கேப் ஆகிடுவீர்கள். இப்படி ஒரு அநாவசிய அர்த்தமற்ற கருத்தாடல் அவசியமா உங்களுக்கு.

நித்தி போன்ற சந்தர்ப்பவாத சிங்கள விசுவாச யாழ்ப்பாண மேட்டுக்குடி பைலா பாடர்களுக்கு வேரும் விழுதும் அந்தஸ்து வழங்கப் போய் நீங்கள் இந்த நிலைக்கு ஆகிட்டது கவலைக்குரியது. :D:o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தம்பி இந்த பதிவின் முதலில் இருந்து கடைசி வரைக்கும் சொல்வது ஒன்று தான் நித்தியை விமர்சிக்க உங்களுக்கு எந்த தகுதியும் இல்லை...நான் கேட்ட ஒரு கேள்விக்குமே உங்களிடம் பதில் இல்லை முதலில் அதற்குப் பதில் எழுதுங்கள்...படித்து முடிந்ததும் ஊருக்குப் போவிங்களா? அப்படியாயின் எப்போது பென்சன் எடுத்த பிறகு இறுதி காலத்தை ஊரில் கழிப்பதற்காக?...நீங்கள் உங்கள் வாழ்க்கை பூரா படித்துக் கொண்டு இருப்பீர்கள் ஆனால் மற்றவர்கள் சேவை செய்ய வேண்டும்...முதலில் நித்தியை பற்றி கதைப்பதற்கு உங்களுக்கு தகுதி இருக்கா என உங்களை சுய விமர்சனம் செய்யுங்கள் பிறகு மற்றவர்களை விமர்சிக்கலாம்...நித்தி பாடுவது அவரது தனிப்பட்ட திறமை அதைக் காரணமாய் வைத்து அவரை விமர்சிப்பது உங்களது தனிப்பட்ட எரிச்சலைத் தான் காட்டுகிறது...நித்தி சிங்களவர்களோடு சேர்ந்து பைலா பாடி கூத்தடிச்சாலும் பரவாயில்லை அவரை விமர்சிக்கலாம் ஆனால் தானும்,தன்ட பாடும் என்டும் இருக்கிற மனிசரைப் போய் விமர்சித்துக் கொண்டு.

நடு நிலையாக இருந்து கொண்டு கருத்துக்களை வாசிப்பவர்களுக்கு யார்,எப்படி கருத்து எழுதுவார்கள் என்பது புரியும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தம்பி இந்த பதிவின் முதலில் இருந்து கடைசி வரைக்கும் சொல்வது ஒன்று தான் நித்தியை விமர்சிக்க உங்களுக்கு எந்த தகுதியும் இல்லை...நான் கேட்ட ஒரு கேள்விக்குமே உங்களிடம் பதில் இல்லை முதலில் அதற்குப் பதில் எழுதுங்கள்...படித்து முடிந்ததும் ஊருக்குப் போவிங்களா? அப்படியாயின் எப்போது பென்சன் எடுத்த பிறகு இறுதி காலத்தை ஊரில் கழிப்பதற்காக?...நீங்கள் உங்கள் வாழ்க்கை பூரா படித்துக் கொண்டு இருப்பீர்கள் ஆனால் மற்றவர்கள் சேவை செய்ய வேண்டும்...முதலில் நித்தியை பற்றி கதைப்பதற்கு உங்களுக்கு தகுதி இருக்கா என உங்களை சுய விமர்சனம் செய்யுங்கள் பிறகு மற்றவர்களை விமர்சிக்கலாம்...நித்தி பாடுவது அவரது தனிப்பட்ட திறமை அதைக் காரணமாய் வைத்து அவரை விமர்சிப்பது உங்களது தனிப்பட்ட எரிச்சலைத் தான் காட்டுகிறது...நித்தி சிங்களவர்களோடு சேர்ந்து பைலா பாடி கூத்தடிச்சாலும் பரவாயில்லை அவரை விமர்சிக்கலாம் ஆனால் தானும்,தன்ட பாடும் என்டும் இருக்கிற மனிசரைப் போய் விமர்சித்துக் கொண்டு.

நடு நிலையாக இருந்து கொண்டு கருத்துக்களை வாசிப்பவர்களுக்கு யார்,எப்படி கருத்து எழுதுவார்கள் என்பது புரியும்

அக்கோய் உங்களுக்கு எந்த விடயத்தை கதைக்க வெளிக்கிட்டாலும் ஒரு அடியும் நுனியும் புரியாமல் எழுந்தமானமாகவே கருத்துக்களை வைக்கிறீர்கள். குறைபிடிப்பதையே நிறை என்று நினைக்கிறீர்கள்.

நித்தி என்பவர் ஏதோ விமர்சனத்துக்கு அப்பாற்பட்ட மனிதர் என்பது போலவும் வெளிநாடுகளில் கல்வி கற்கும் எம் போன்றவர்கள் விமர்சனத்துக்கு தகுதியற்றவர்களாகவும்.. வெளிநாட்டுக்கு ஊரின் அவலத்தைக் காட்டி ஓடிவந்த மற்றவர்கள் நித்தியின் காவலர்கள் போலவும் அமைகிறது உங்கள் வாதமும் உங்கள் கருத்தும்.

வெளிநாடுகளில் கல்வி கற்பதென்பது வெளிநாடுகளில் தண்டரா போட்டு குந்தி பிச்சை எடுப்பது போன்றதல்ல. உங்கள் போன்றோருக்கு ஊரில் வாழ வழியில்லாததால் வெளிநாட்டு வாழ்க்கை சொர்க்கமாகத் தெரியலாம். ஆனால் எமக்கு அப்படியல்ல. வெளிநாட்டு வாழ்க்கை தான் சுமையாகத் தெரிகிறது.

நான் நிச்சயம் எனது படிப்பை முடித்து ஊருக்குப் போவேன் என்பதை உங்களுக்கு அடிக்கடி சொல்லிக் கொண்டிருக்கனும் போல. ஏதோ நீங்கள் ஊருக்கு வந்து எங்களைப் போன்றவர்களோடு சேர்ந்து மக்களுக்கு பணி செய்யக் காத்திருப்பது போலவும் அடிக்கட்டி கேட்டுகிறீங்க எப்ப ஊர் போகப் போறாய் என்று. அடுத்தவன் செய்வதை விடுப்புப் பார்த்து கதைக்கிற கூட்டத்தில் ஒருவர் தான் நீங்களும். உங்களுக்கு எங்களிடம் கேள்வி கேட்க முதலில் என்ன தகுதி இருக்கென்று சிந்தியுங்கள்.

நித்தி போன்ற சுயநலவாதிகளை எமது தேசத்தின் வேர்கள் விழுதுகள் என்று காட்டுவதை தான் நான் எதிர்கிறேன். அவர்கள் சிங்கள விசுவாச யாழ்ப்பாண மேட்டுக்குடி சிந்தனையில் வாழ்ந்து இன்று வெளிநாடுகளிலும் அதே நிலையில் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள். எமது தேசம் அந்த நிலையை கடந்து போய் மீண்டும் அந்த நிலைக்கு திருப்பிக் கொண்டிருக்கும் காலத்தில் இவர்களுக்கு புத்துயிர்ப்பு அளிக்கப்படுவது.. ஒரு அபாயகமான விடயமாகவே நான் கருதுகிறேன். இவற்றை நாம் இன்று சுட்டிக்காட்டவில்லை என்றால் நாளை இந்த கொழுத்த இரத்தம் உறுஞ்சும் அட்டைகள் சமூகத்தை விழிப்பூட்டுகிறோம் என்று சமூகத்தில் அனைத்து அநீதிகளும் பெருகும் வரை காத்திருந்துவிட்டு அவர்களின் சந்ததிகளுக்கு விளம்பரம் தேட சமூக அந்தஸ்துப் பெற.. கிட்டாரும் கையுமாகப் புறப்படுவார்கள் அநீதிகளை ஒடுக்கப் புறப்பட்டு விட்டோம் என்ற தோறணையில் பந்தாகாட்ட.. சமூகத்தை ஏமாற்றிப் பிழைப்போட்ட செல்வாக்கு வளர்க்க.

நீங்களும் அவர்களை மக்களின் இரட்சகர்களாக காட்டி வெளிநாடுகளில் இருந்து விசிலடித்துக் கொண்டிருப்பீர்கள். நாங்கள் அப்போ ஊர் திரும்பி கையாலாகமல் சமூகத்தைப் பார்த்து வெறித்துக் கொண்டிருப்போம். இதுதான் புலிகளின் முயற்சிகளுக்கும் நடந்தது. அதை மீள அனுமதிக்கக் கூடாது. முதலில் வெளிநாடுகளில் இருந்து வெட்டி அந்தஸ்தும் பந்தாவும் வளர்க்க முனையும் கூட்டத்தை முறியடிக்க வேண்டும். அப்போதுதான் ஊர் உருப்படுற வழியை தேட முடியும்.

அதற்கு நாங்கள் வெளிநாட்டில் இவர்களோடு இருக்கும் காலத்தை பயன்படுத்த வேண்டும். வெளிநாட்டில் இல்லை என்றால் சொல்லுவீர்கள்.. ஊரில இருந்து வெளிநாடு வர முடியாத ஏமாற்றத்தில கதைக்கினம் என்று வெளிநாட்டில இருந்து சொன்னால் சொல்வீர்கள் ஊர் போய் கதை உனக்கு இங்கிருந்து கதைக்க என்ன தகுதி என்று. எனக்குப் புரியவில்லை.. எங்களைப் பார்த்து தகுதி கேட்க உங்களுக்கு என்ன தகுதி இருக்கென்பதும்.. தான்...???!

எமக்கு நாம் சார்ந்த சமூகத்தில் நடக்கும் அநியாயங்களை சுட்டிக்காட்ட அடிப்படை தகுதி இருக்கு அதனடிப்படையில் இதனைச் சொல்ல முடியும் என்று நினைக்கிறேன். அதைத் தடுக்க உங்களால் முடியாது அக்கோய். போய் வேற வேலை இருந்தா கவனியுங்கோ. :o:D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் மெத்தப் படித்தனீங்கள் நாங்கள் படிக்காத முட்டாள் தான் ஆனால் உங்களை மாதிரி நான் படிக்க வந்தனான் நான் திரும்பி நாட்டுக்குப் போவேன் சேவையாற்ற என நான் ஒருத்தரையும் ஏமாற்றவில்லை :D ...நீங்கள் திரும்ப,திரும்ப படித்தவர்கள் புலம் பெயர்ந்து வர வேண்டும் மேலும் படிப்பதற்கும்,பணம் உழைப்பதற்கும் இங்கு அசேலம் அடிப்பதற்கும்.. படிக்கதாவர்கள் பிழைக்க வழியில்லாமல் காசு உழைக்க வந்தவர்கள் என்னும் தொனியிலேயே உங்கள் கருத்துகள் அமைந்துள்ளன...நித்தி விமர்சனத்திற்கு அப்பால் பட்டவர் என நான் எங்குமே எழுதவில்லை ஆனால் நித்தியை விமர்சிக்க உங்களுக்கு தகுதி இல்லை என்பது தான் கருத்து...நான் முதல் எழுதிய ஒரு பதிவிலேயே எழுதி விட்டேன் எனக்கு உங்களைப் பார்த்து கதைக்கத் தகுதியில்லை அதே போல தான் தானும் தன்ட பாடுமாய் இருக்கிற நித்தியை பற்றி கதைக்கவும் உங்களுக்கு தகுதி இல்லை...புலிகளின் காலத்திலே அவர்கள் நித்தியில் ஏதாவது பிழை பிடித்தார்களா அல்லது தடை செய்தார்களா...உங்களை மாதிரி எத்தனை பேர் இந்த நாளைக்கு போவேன் ஊருக்கு சேவை செய்ய என கதையளப்பார்கள் ஆனால் கடைசிக் காலம் வரைக்கும் இங்கேயே கழிப்பார்கள் கேட்டால் எதாவது நொண்டிச் சாட்டு சொல்வார்கள் என்னும் 10 வருடம் கழுத்து யாழ் இருந்தாலும் நீங்கள் கருத்துக் களத்தில் வந்து இதையே தான் எழுதிக் கொண்டு இருப்பீர்கள்...நித்தி தற்போது பாடுவதுமில்லை,அவர் பாடிய பழைய பாட்டுகளால் சமுதாயம் சீரழிகிறது என்பது அப்பட்டமான உங்கள் எரிச்சலைக் காட்டுகிறது... தமிழர் இதிலும் பார்க்க சீரழிந்த பாட்டுகளையும்,படங்களையும் கேட்கவில்லையா,பார்க்கவில்லையா?...மற்றவர்களில் குறை பிடிப்பது நீங்களா?நானா? நீங்கள் கடைசியாக எழுதிய பதிவிலேயே உங்கள் இயலாமையும்,உங்கள் உண்மையான குணத்தையும் காட்டி விட்டீர்கள் நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் மெத்தப் படித்தனீங்கள் நாங்கள் படிக்காத முட்டாள் தான் ஆனால் உங்களை மாதிரி நான் படிக்க வந்தனான் நான் திரும்பி நாட்டுக்குப் போவேன் சேவையாற்ற என நான் ஒருத்தரையும் ஏமாற்றவில்லை :D ...நீங்கள் திரும்ப,திரும்ப படித்தவர்கள் புலம் பெயர்ந்து வர வேண்டும் மேலும் படிப்பதற்கும்,பணம் உழைப்பதற்கும் இங்கு அசேலம் அடிப்பதற்கும்.. படிக்கதாவர்கள் பிழைக்க வழியில்லாமல் காசு உழைக்க வந்தவர்கள் என்னும் தொனியிலேயே உங்கள் கருத்துகள் அமைந்துள்ளன...நித்தி விமர்சனத்திற்கு அப்பால் பட்டவர் என நான் எங்குமே எழுதவில்லை ஆனால் நித்தியை விமர்சிக்க உங்களுக்கு தகுதி இல்லை என்பது தான் கருத்து...நான் முதல் எழுதிய ஒரு பதிவிலேயே எழுதி விட்டேன் எனக்கு உங்களைப் பார்த்து கதைக்கத் தகுதியில்லை அதே போல தான் தானும் தன்ட பாடுமாய் இருக்கிற நித்தியை பற்றி கதைக்கவும் உங்களுக்கு தகுதி இல்லை...புலிகளின் காலத்திலே அவர்கள் நித்தியில் ஏதாவது பிழை பிடித்தார்களா அல்லது தடை செய்தார்களா...உங்களை மாதிரி எத்தனை பேர் இந்த நாளைக்கு போவேன் ஊருக்கு சேவை செய்ய என கதையளப்பார்கள் ஆனால் கடைசிக் காலம் வரைக்கும் இங்கேயே கழிப்பார்கள் கேட்டால் எதாவது நொண்டிச் சாட்டு சொல்வார்கள் என்னும் 10 வருடம் கழுத்து யாழ் இருந்தாலும் நீங்கள் கருத்துக் களத்தில் வந்து இதையே தான் எழுதிக் கொண்டு இருப்பீர்கள்...நித்தி தற்போது பாடுவதுமில்லை,அவர் பாடிய பழைய பாட்டுகளால் சமுதாயம் சீரழிகிறது என்பது அப்பட்டமான உங்கள் எரிச்சலைக் காட்டுகிறது... தமிழர் இதிலும் பார்க்க சீரழிந்த பாட்டுகளையும்,படங்களையும் கேட்கவில்லையா,பார்க்கவில்லையா?...மற்றவர்களில் குறை பிடிப்பது நீங்களா?நானா? நீங்கள் கடைசியாக எழுதிய பதிவிலேயே உங்கள் இயலாமையும்,உங்கள் உண்மையான குணத்தையும் காட்டி விட்டீர்கள் நன்றி

அக்கோய் உண்மையிலேயே நீங்கள் ஒரு முட்டாள் தான் என்பதை சொல்லாமல் சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள். நான் இங்கு எழுதிக் கொண்டிருப்பது நித்தி எந்த வகையில் வேரும் விழுதுக்கும் சொந்தக்காரர் ஆகிறார் என்பதுதான். பைலா என்பது எமக்கான இசை வடிவமும் அல்ல.. எமது விழுமியம் சார்ந்ததும் அல்ல. பைலா பிரபல்யமான காலத்தில் அவர்கள் தங்களை வெளிப்படுத்த அந்த இசையை தமிழிலும் பாவித்தார்கள் அவ்வளவே. அதுமட்டுமன்றி அவர்கள் சிறீலங்கா மாதாவை போற்றி பாடல்களை பாடி இருக்கின்றனர். அதுவும் உங்களைப் போன்றவர்களுக்கு மகிழ்ச்சியான விடயமே..!

நித்தி வேரும் விழுதுகள் பகுதிக்கு தகுதியானவரா என்பதுதான் கேள்வியே. அவரின் பாடலை பொழுதுபோக்கில் போட்டுக் கேளுங்கள் யாரும் அதைப் பற்றி பேசப் போவதில்லை.

நீங்கள் உங்கள் கற்பனைக்கு ஏற்ற மாதிரி நீ ஊருக்குப் போவியா போக மாட்டியா என்று எழுதுவீர்கள். நான் அதற்கு ஊருக்குப் போகும் திகதி நேரம் குறிப்பிட்டு இங்கு பதில் எழுதனும் என்ற உங்களின் எதிர்பார்ப்பையே அக்கா உங்களின் முட்டாள் தனம் எங்கிறேன். நித்தி போன்றவர்கள் வெளிநாடுகளில் போய் வாழட்டும் ஏதாவது செய்யட்டும். அவர்களை எமக்கான வேரும் விழுதுகளுமாகக் காட்டுவதற்கு அவர்கள் சரியான ஆட்களில்லை.

புலிகள் வெளிநாட்டுக்கு ஓடிப் போன இவர்களைப் பற்றி கதைப்பதில்லை. மாறாக எமக்கான போராட்ட இசை வடிவங்களை அவர்கள் உருவாக்கினார்கள். அவர்கள் இவர்களின் கையை எதிர்பார்த்திருக்கவில்லை. மாறாக கலைஞர்களை உருவாக்கினார்கள். ஒருவேளை புலிகள் இவர்களை நம்பி இருந்தால் நிச்சயம் அங்கும் ஏமாந்திருப்பார்கள் என்பதில் மறு கருத்திருக்க முடியாது.

இவர்களின் பாடல்களைக் கேட்டு யாரும் கள்ளுக்கடைக்குப் போகாமல் விட்டதாக தெரியவில்லை. ஆனால் போராட்ட காலத்தில் புலிகள் பல சமூக மாற்றங்களைக் கொணர்ந்தனர். அவர்களின் அந்த வெற்றிகளை இவர்களால் ஏன் பாடமுடியவில்லை..??! அவ்வளவு சமூக அக்கறை உள்ளவர்கள் ஏன்.. போராட்ட கால பதிவுகளை செய்ய முன் வரவில்லை...???!

நீங்கள் இவர்களை ஏதோ சமூக அக்கறையில் பாடியதாக காட்ட முனைகிறீர்கள்.. ஆனால் அவர்களோ தாம் தென்னிலங்கையில் ஓரங்கட்டபட்ட நிலையில்.. யாழ்ப்பாணத்தில் குறிப்பாக பரியோவான் கல்லூரியில் இருந்து இந்த இசைக்கு வந்ததாக முன்னர் குறிப்பிட்டுள்ளனர். அப்படி இருந்தும் அவர்களை சமூக அக்கறையுள்ள பாடகர்களாக சித்தரிக்க முனைகிறீர்கள். அதுதான் வேடிக்கையாக இருக்கிறது.

தமக்கான சமூக அங்கீகாரம் நோக்கி அவர்கள் இவ்வாறான பாடல்களை பாடினார்களே தவிர.. சமூக அக்கறையில் அவர்கள் பாடகர்களானதாகத் தெரியவில்லை. அப்படி இருப்பின்.. அவர்களின் அந்தப் பணி போராட்ட இலக்கியங்களாகவும் பதியப்பட்டிருக்கும்..!

எதையும் எழுத முதல் சிந்தியுங்கள் அக்கா. உங்களிடம் சிந்தனை சக்தி வரண்டுகிறக்கிறது. மாறாக வக்காளத்து வாங்கும் நிலை வளர்ந்து கிடக்கிறது. :):o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சில பேர் எவ்வளவு தான் படித்திருந்தும் சில நேரங்களீல் முட்டாள்கள் மாதிரித் தான் சிந்திப்பார்கள் அவர்களோடு கருத்தாடிப் பயனில்லை :D வீணாக என் நேரத்தை செலவழித்தது தான் மிச்சம்..சாந்தன் முந்தி புலிகளூக்காய் பாட்டுப் பாடினார் கொஞ்ச நாள் போக சிங்கள பாட்டு பாடுவார் அவரும் கொஞ்ச நாள் போக வேரும் விழுதுக்கு எதிரியாகப் போகப் போகிறார்...நாங்கள் இங்கே சொகுசாய் வாழ்ந்து கொண்டு எல்லோரையும் எதிரியாக்குவோம்...நான் இங்கே இருந்து கொண்டு நான் இந்த விசாவில தான் லண்டனுக்கு வந்தனான் திரும்பி போய் ஊருக்கு சேவை செய்வேன் என எங்குமே புழுகவில்லை நீங்கள் தான் யாழில் அதையே திரும்ப,திரும்ப சொல்லிக் கொண்டு இருக்கிறீங்கள்...அண்மையிலும் 1வருடத்திற்கும் முன்பும் அரசியல் சம்மந்தமான பதிவில் தயா அண்ணாவோடும் இதை வைத்து தான் மல்லுக் கட்டினீங்கள்[நான் மாணவ விசாவில் வந்தனான் என்டு]...90% மாணவ விசாவில் வந்து தான் அசேலம் அடித்து உள்ளார்கள்...உங்கள் கல்வி சார்ந்து நீங்கள் கெட்டிக்காரராய் இருக்கலாம் அதற்காக மற்றவர் முட்டாள் இல்லை...நன்றீ வணக்கம் :o

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • காஸா போர்: ஐ.நா தீர்மானத்தால் இஸ்ரேல் தனிமைப்படுத்தப்படுகிறதா? அமெரிக்கா கூறுவது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி கட்டுரை தகவல் எழுதியவர், டேவிட் கிரிட்டன் பதவி, பிபிசி நியூஸ் 7 மணி நேரங்களுக்கு முன்னர் காஸாவில் இஸ்ரேலுடனான போர் நிறுத்தத்திற்கான தற்போதைய முன்மொழிவை ஹமாஸ் நிராகரித்துள்ளதாக இஸ்ரேல் கூறியுள்ளது. உடனடி போர் நிறுத்தம் கோரிய ஐ.நா பாதுகாப்பு சபையின் தீர்மானம் 'சேதத்தை' ஏற்படுத்தியுள்ளது என்பதை இது காட்டுகிறது. பாலத்தீன ஆயுதக் குழுவின் ஏற்க முடியாத கோரிக்கைகளுக்கு இஸ்ரேல் அடிபணியாது என்று பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவின் அலுவலகம் தெரிவித்துள்ளது. காஸாவில் இருந்து இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் முழுமையாக வெளியேற வேண்டும் என்றும், போரை நிறுத்தவும் ஹமாஸ் கோரிக்கை விடுத்துள்ளதாக இஸ்ரேல் கூறுகிறது. அதேநேரம் இஸ்ரேலின் அறிக்கை கிட்டத்தட்ட எல்லா விஷயங்களிலும் தவறானது என்று அமெரிக்கா கூறியுள்ளது. திங்கட்கிழமை ஐ.நா. பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பு நடப்பதற்கு முன்னதாகவே ஹமாஸின் அறிக்கை தயாரிக்கப்பட்டதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வலியுறுத்தியுள்ளார். ஹமாஸ் ராணுவப் பிரிவின் துணைத் தலைவர் மர்வான் இசா இரண்டு வாரங்களுக்கு முன்னர் நுசைரத் அகதிகள் முகாமின் சுரங்கப்பாதை வளாகத்தில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதை உறுதி செய்திருப்பதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது.   24 மணிநேரத்தில் 81 பேர் பலி பட மூலாதாரம்,REUTERS “உளவுத்துறை அறிக்கைகள் அனைத்தையும் நாங்கள் சரிபார்த்தோம். மார்வான் இசா வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டார்,” என்று இதுகுறித்து இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி தெரிவித்தார். இஸ்ரேல் தெரிவிப்பதில் தனக்கு 'நம்பிக்கை இல்லை என்றும் அந்த அமைப்பின் ராணுவத் தலைமை மட்டுமே இதுகுறித்து 'இறுதியாக ஏதாவது சொல்லும்' என்றும் ஹமாஸ் அரசியல் தலைவரான இஸாத் அல் ரிஷ்க் கூறுகிறார். இசா இந்தக் குழுவின் 'மூன்றாம் நிலையில் இருக்கும் தலைவர்' என்றும், அக்டோபர் 7ஆம் தேதி தெற்கு இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் 'முக்கிய ஏற்பாட்டாளர்களில் ஒருவர்' அவர் என்றும் ரியர் அட்மிரல் ஹகாரி கூறியுள்ளார். இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலில், 1,200 பேர் கொல்லப்பட்டனர், 253 பேர் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து இஸ்ரேல் காஸாவில் பதில் தாக்குதல் மேற்கொண்டது. காஸாவில் இதுவரை 32,400க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாகவும், கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 81 பேர் உயிரிழந்துள்ளதாகவும் ஹமாஸ் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. காஸாவில் போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பாக முட்டுக்கட்டை நிலவி வருகிறது. காஸாவில் உடனடியாக போர் நிறுத்தத்தை அமல்படுத்த ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் முதன்முறையாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு எதிராக இஸ்ரேல் கடும் எதிர்வினையைப் பதிவு செய்துள்ளது.   தீர்மானத்தில் ஹமாஸை கண்டனம் செய்வது பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பின் போது அமெரிக்கா வாக்களிக்கவில்லை. இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக பிரிட்டன் உட்பட 14 பாதுகாப்பு சபை உறுப்பினர்கள் வாக்களித்தனர். போர் நிறுத்தம், மீதமுள்ள பிணைக் கைதிகளை நிபந்தனையின்றி விடுவித்தல் மற்றும் மனிதாபிமான உதவியை விரிவுபடுத்துதல் ஆகியவை இந்தத் தீர்மானத்தில் அடங்கும். இஸ்ரேலின் நெருங்கிய கூட்டாளியும் ராணுவ ஆதரவாளருமான அமெரிக்கா, அக்டோபர் 7 தாக்குதலுக்கு ஹமாஸை கண்டிக்கத் தவறிய தீர்மானத்தை விமர்சித்துள்ளது. இருப்பினும் இஸ்ரேலின் போர் முறைகள் தொடர்பாக அதிகரித்து வரும் கோபம் காரணமாக இந்தத் தீர்மானத்தின் மீது வாக்களிப்பதில் இருந்து அமெரிக்கா விலகிக் கொண்டது. ஆனால் அமெரிக்கா இந்தப் போரின் முக்கிய நோக்கங்களுக்கு முழு ஆதரவளிப்பதாகக் கூறியது. இந்த முன்மொழிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இஸ்ரேல், வாஷிங்டனுக்கான தனது தூதுக்குழுவின் பயணத்தை ரத்து செய்துள்ளது. காஸாவின் தெற்கு நகரமான ரஃபாவில் தரைவழித் தாக்குதலை நடத்துவதற்கான திட்டத்தைப் பற்றி விவாதிக்க தூதுக்குழு அங்கு செல்வதாக இருந்தது. தற்போது 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் ரஃபாவில் தஞ்சமடைந்துள்ளனர். முழு அளவிலான தாக்குதல் மனித பேரழிவாக நிரூபிக்கப்படலாம் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது. பின்னர் ஹமாஸ் போர் நிறுத்த திட்டத்தை நிராகரித்து அறிக்கை வெளியிட்டது. அமெரிக்கா, கத்தார் மற்றும் எகிப்து நாடுகளின் மத்தியஸ்தத்துடன் தோஹாவில் நடைபெற்ற மறைமுக பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்தத் திட்டம் உருவானது. "நிரந்தர போர் நிறுத்தத்துடன்" காஸாவில் இருந்து இஸ்ரேலிய படைகள் முற்றிலுமாக வெளியேறவும், இடம்பெயர்ந்த பாலத்தீனியர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பவும் அழைப்பு விடுத்த தன் அசல் கோரிக்கையைத் தான் பற்றி நிற்பதாக ஹமாஸ் கூறியது. ஹமாஸின் நிலைப்பாடு, 'பேச்சுவார்த்தை மூலமான ஒப்பந்தத்தில் அதற்கு எந்த ஆர்வமும் இல்லை என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. கூடவே ஐ.நா. பாதுகாப்பு சபையின் தீர்மானத்தால் ஏற்பட்ட சேதத்தை உறுதிப்படுத்துகிறது,” என்று செவ்வாய்கிழமை காலை இஸ்ரேலிய பிரதம மந்திரி அலுவலகம் தெரிவித்தது. ஹமாஸின் திசை திருப்பும் கோரிக்கைகளை இஸ்ரேல் ஏற்றுக் கொள்ளாது என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. "ஹமாஸின் ராணுவ மற்றும் அரசாங்க திறன்களை அழித்தல், எல்லா பிணைக் கைதிகளையும் விடுவித்தல், காஸா, இஸ்ரேலிய மக்களுக்கு எதிர்கால அச்சுறுத்தலை ஏற்படுத்தாததை உறுதி செய்தல் போன்றவற்றை உள்ளடக்கிய தனது போர் நோக்கங்களை இஸ்ரேல் தொடர்ந்து அடையும்," என்றும் அறிக்கை தெரிவிக்கிறது.   இஸ்ரேலின் பேச்சுவார்த்தைக் குழு திரும்பிவிட்ட செய்தி பட மூலாதாரம்,EPA-EFE/REX/SHUTTERSTOCK அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர் இந்த விமர்சனங்களை நிராகரித்துள்ளார். "இந்த அறிக்கை கிட்டத்தட்ட எல்லா வகையிலும் தவறானது. பிணைக் கைதிகள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு இது நியாயம் இல்லாதது" என்று அவர் வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் கூறினார்.“செய்தி அறிக்கைகள் மூலம் ஹமாஸின் எதிர்வினை பற்றிய தகவல்கள் பகிரங்கமாயின. ஆனால் அவர்களது பதிலின் உண்மையான சாராம்சம் இதுவல்ல. இந்த எதிர்வினை ஐநா பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்புக்கு முன் தயாரிக்கப்பட்து, அதற்குப் பிறகு அல்ல என்று என்னால் கூற முடியும்,” என்றார் அவர். கத்தாரின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாஜித் அல்-அன்சாரி தோஹாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், மறைமுகப் பேச்சுவார்த்தைகள் நிறுத்தப்படவில்லை, அவை தொடர்கின்றன என்றார். "பேச்சுவார்த்தைகளுக்கான கால அட்டவணை எதுவும் இல்லை. ஆனால் நாங்கள் எங்கள் கூட்டாளர்களுடன் பேச்சுவார்த்தை முயற்சிகளைத் தொடர்ந்து செய்து வருகிறோம்," என்று அவர் கூறினார். ஆனால் 10 நாட்கள் பேச்சுவார்த்தைக்குப் பிறகு இஸ்ரேல் தனது பேச்சுவார்த்தைக் குழுவைத் திரும்ப அழைத்ததாக இஸ்ரேலிய அதிகாரிகளை மேற்கோள் காட்டி இஸ்ரேலிய ஊடகங்களும் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையும் தெரிவித்துள்ளன. இரானுக்கு பயணம் மேற்கொண்ட ஹமாஸ் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியா, இஸ்ரேல் முன்னெப்போதும் இல்லாத வகையில் அரசியல் தனிமையை எதிர்கொள்வதை ஐ.நா.பாதுகாப்பு சபையின் தீர்மானம் காட்டுவதாகத் தெரிவித்தார். கடந்த ஆண்டு நவம்பர் மாத இறுதியில் ஒரு வார கால போர் நிறுத்தத்தின் போது இஸ்ரேலிய சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த சுமார் 240 பாலத்தீன கைதிகள் 105 இஸ்ரேலிய பிணைக் கைதிகளுக்கு ஈடாக விடுவிக்கப்பட்டனர். ஹமாஸ் நிராகரித்த புதிய ஒப்பந்தம், ஆறு வாரங்களுக்கு போர் நிறுத்தத்தை முன்மொழிந்ததாகக் கூறப்படுகிறது. கூடவே 800 பாலத்தீன கைதிகளுக்கு ஈடாக ஹமாஸால் பிடிக்கப்பட்ட 40 இஸ்ரேலிய பிணைக் கைதிகளை விடுவிப்பதும் இதில் அடங்கும். ஆனால் காஸாவில் போரில் தோல்வியை ஏற்கும் அறிகுறி இன்னும் தெரியவில்லை. சமீபத்திய இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் பல டஜன் பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. ரஃபாவின் புறநகரில் உள்ள குடியிருப்பு கட்டடத்தின் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் ஒன்பது குழந்தைகள் உட்பட குறைந்தது 18 பேர் கொல்லப்பட்டதாக பாலத்தீன ஊடகங்களும் உள்ளூர் சுகாதார ஊழியர்களும் கூறுகின்றனர். முசாபா பகுதியில் உள்ள அபு நக்கீராவின் வீட்டில் டஜன் கணக்கான இடம்பெயர்ந்த மக்கள் தஞ்சம் அடைந்திருந்தனர் என்றும் கூறப்பட்டது. காஸா நகரில் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே வான்வழித் தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டதாக வடக்கு காஸாவில் உள்ள அபு ஹசிரா குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் தெரிவித்தனர். கடந்த 24 மணிநேரத்தில் 60 இலக்குகளைக் குறிவைத்ததாகவும், 'பயங்கரவாத சுரங்கப்பாதைகள், பயங்கரவாத உள்கட்டமைப்புகள் மற்றும் ராணுவ உள்கட்டமைப்புகள்' இதில் அடங்கும் என்றும் இஸ்ரேலிய ராணுவம் செவ்வாய்கிழமை காலை தெரிவித்தது. இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினர் 'அல்-ஷிஃபா மருத்துவமனை பகுதியில் துல்லியமான தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்' என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.   மனிதாபிமான உதவிகளைச் சேகரிக்கும் போது 18 பேர் கொல்லப்பட்டனர் பட மூலாதாரம்,REUTERS கடுமையான சண்டை காரணமாக நோயாளிகள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் இடம்பெயர்ந்த மக்கள் ஆபத்தில் இருப்பதாக பாலத்தீனர்கள் மற்றும் உதவிக் குழுக்கள் தெரிவித்துள்ளன. 175 'பயங்கரவாதிகள்' கொல்லப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என்றும் ராணுவம் தெரிவித்துள்ளது. வடக்கு காஸாவில் விமானத்தில் இருந்து போடப்பட்ட மனிதாபிமான உதவிகளைச் சேகரிக்கும்போது 18 பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாக காஸாவில் உள்ள ஹமாஸின் அரசு ஊடக அலுவலகம் செவ்வாயன்று கூறியது. உணவுப் பொட்டலங்களைச் சேகரிக்கும்போது 12 பேர் கடலில் மூழ்கி இறந்தனர். அதேநேரம் பொருட்களை எடுக்கும்போது ஏற்பட்ட ' கூட்ட நெரிசலில்' சிக்கி ஆறு பேர் இறந்தனர் என்று கூறப்பட்டது. இந்த அறிக்கையில் மேலதிக தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. திங்களன்று வடக்கு நகரமான பைட் லாஹியாவில் கடற்கரைக்கு அருகே ஏர் டிராப்பின் போது குறைந்தது ஒரு நபராவது நீரில் மூழ்கியதை வீடியோ காட்சிகள் காட்டின. திங்களன்று அமெரிக்க விமானம் வடக்கு காஸாவில் 18 மனிதாபிமான உதவிப் பொட்டலங்களைப் போட்டதாக பென்டகனை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் தெரிவித்தது. ஆனால் பாராசூட்டில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அவை தண்ணீருக்குள் விழுந்தன. ஆனால் யாரும் உயிரிழந்ததை உறுதிப்படுத்த முடியவில்லை. இஸ்ரேலிய பிணைக் கைதி யூரியல் பரூச் கொல்லப்பட்டதாகவும், அவரது உடல் ஹமாஸிடம் இருப்பதாகவும் இஸ்ரேலிய ராணுவம் அவரது குடும்பத்திடம் கூறியதாக பிணைக்கைதிகள் மற்றும் காணாமல் போன குடும்பங்களின் மன்றம் தெரிவிக்கிறது. 35 வயதான, இரண்டு பிள்ளைகளின் தந்தையான பரூச், அக்டோபர் 7ஆம் தேதி சூப்பர்நோவா இசை விழாவின் போது காயமடைந்தார். பின்னர் அவர் கடத்தப்பட்டார். அதே நேரத்தில் காஸாவில் ஒரு காவலர் துப்பாக்கி முனையில் தன்னை பாலியல் வன்புணர்வு செய்ததாக நவம்பரில் விடுவிக்கப்பட்ட ஒரு பெண் பிணைக் கைதி நியூயார்க் டைம்ஸ் செய்தித்தாளிடம் கூறினார். நாற்பது வயதான அமித் சுசானா தான் சிறைப்பிடிக்கப்பட்ட போது பாலியல் வன்முறைக்கு ஆளானதாகத் தெரிவித்ததாக செய்தித்தாள் குறிப்பிடுகிறது. பிணைக் கைதிகள் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டதற்கான தெளிவான மற்றும் உறுதியான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும், "அத்தகைய வன்முறை தொடரக்கூடும் என்று நம்புவதற்கு நியாயமான காரணங்கள் உள்ளன," என்றும் இந்த மாதத் தொடக்கத்தில் ஐ.நா குழு கூறியது. https://www.bbc.com/tamil/articles/cv2y4zzp76mo
    • பெரிய‌வ‌ரே நாம் த‌மிழ‌ர் க‌ட்சி 2021 ச‌ட்ட‌ ம‌ன்ற‌ தேர்த‌லில் பெற்ற‌ ஓட்டு ச‌த‌ வீத‌ம் 6:75 8ச‌த‌வீத‌ வாக்கு எடுத்து இருந்தா அங்கிக‌ரிக்க‌ ப‌ட்ட‌ க‌ட்சியாய் மாறி இருக்கும்...............இது கூட‌ தெரிய‌ வில்லை என்றால் உங்க‌ளுக்கு நாம் த‌மிழ‌ர் க‌ட்சியின் கொள்கை எப்ப‌டி தெரியும்...........சீமானுக்கு எதிரா எழுதுப‌வ‌ர்க‌ளின் க‌ருத்தை வாசிப்ப‌தில் உங்க‌ளுக்கு எங்கையோ த‌னி சுக‌ம் போல் அது தான் குறுக்க‌ ம‌றுக்க‌ எழுதுறீங்க‌ள்😁😜..............
    • 😀..... மிக்க நன்றி. இல்லை, நான் இங்கு முந்தி எழுதவில்லை. இந்த மாதம் முதலாம் திகதி தான் நான் இங்கு இணைந்தேன். இது சத்தியமான உண்மை. ஆனால் பல வருடங்களாக களத்தை வாசித்து வருகின்றேன்.
    • Courtesy: Mossad   இவ்விரு கருத்துருவாக்கங்களும் தற்கால இலங்கைத் தமிழ் அரசியல்ச் சூழலில் சுமந்திரன் என்ற தமிழரசுச் கட்சியின் முக்கிய பிரமுகருக்கு உரித்துடையவை. இருபதாம் நூற்றாண்டின் இறுதிக் காலப்பகுதிகளில் மென் வலு என்ற கருத்துடைவாத வார்த்தை ஜோசப் நையலினால் பிரபலப்படுத்தப்பட்டாலும் இருபத்தியோராம் நூற்றாண்டில் சர்வதேச உறவுகளை வடிவமைக்கவும், மேம்படுத்தவும், கையாளவும் தங்களது இலக்குகளை அடைவதற்கான வகையில் பிரயோகிக்கப்படும் ஒரு நியாயப்படுத்தல் பதமாக மாறி முக்கியத்துவம் பெற்றிருக்கின்றது. இவ் வார்த்தைப்பதமானது அரசியலில் பிரயோகிக்கப்படும் சந்தர்ப்பத்தில் குறித்த தளத்திற்கு ஒரு கொள்கைப் பிரகடனத்தின்பால் இறமையுடன் செயற்படும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட அரசாக அமைந்திருக்க வேண்டும். அரசுக்கு மாத்திரமே ராஜதந்திர நடவடிக்கைகள் மற்றும் நகர்வுகளை மேற்கொள்ள முடியும். பூகோள அரசியலின் நகர்வுகளுக்கு அமைவான நகர்வுகளை நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்ட இலக்கினை அடைவதற்காக மேற்கொள்ள முடியும். வெவ்வேறுபட்ட இரு வேறு நிலைப்பாட்டை உடைய அதிகார இறமைத் தளங்கள் தான் ஒன்றின் மீது மற்றொன்று மென்வலுவைப் பிரயோகிக்க முடியும். தொடர்தேர்ச்சியாக கால ஓட்டத்திற்கு அமைவாக மாற்றம்பெறும் தேவைகளை அடைவதில் பிரயோகிக்கப்படும் நெகிழ்ச்சியைக் குறிக்கும் ஒரு பதமாக மென்வலுப்பிரயோகம் என்பது அர்த்தப்படுத்தப்பட முடியும்.   அரசியலில் மென் வலுவைப் பிரயோகத்திற்கு உட்படுத்துவதற்கு இறமையுடைய மக்கள் ஆணையைப்பெற்ற ஒரு தளம் இன்றியமையாதது. அத் தளத்தின் இலக்குகள் மற்றும் தேவைகள் என்பன கால மாற்றத்திற்கு உட்பட்டவைகளாகவும் காலத்திற்கு காலம் மாறிகளாகவும் காணப்படுதல் அவசியமானது. கட்சிகள் மென்வலுவைப் பாவிக்க முடியுமா என்றதொரு ஆழமான கேள்விவரும் நிலையில், ஒரு நாட்டுக்குள் இருக்கும் கட்சிகள் இயல்பான நிலையில் ஒன்றுடன் ஒன்று மென்வலுவில் அணுக முடியாது. ஒரு கட்சி தன்னுடன் சம பயணத்தில் இருக்கும் பிறிதொரு கட்சியுடன் மென்வலுவில் அணுகுகின்றது என்றால் அணுகப்படும் கட்சியை விடவும் அணுகும் கட்சி மிகவும் நெய்மையான நிலையில் இருப்பதையும் கொள்கைகள் குன்றி வீரியம் குறைந்து வழியற்ற நிலையில் பிறிதொரு நிலைப்பாடுடைய கட்சியை தனது நலனுக்காக ஆதரிக்கின்றது என்ற கருத்து மேலோங்கலும், அணுகும் கட்சிக்கு கொள்கைகள், கோட்பாடுகள் என்பன நிலையானதாக இருக்க முடியாது என்பதையும் வெளிப்படுத்துவதாக அமையும். தமிழரசுக்கட்சியில் மென்வலு அரசியல் முன்னெடுப்புக்கள் தொடர்பில் பேசும்போது சுமந்திரனைத் தவிர்த்து ஒருவிடயங்களையும் பேச முடியாது. காரணம் தமிழரசுக் கட்சியில் மென்வலு அரசியலின் பிதாமகர் சுமந்திரனே ஆவர். தமிழரசுக் கட்சியானது அல்லது அன்றைய தமிழ்த்தேசியக் கூட்டமைப்பானது மென்வலு அரசியல் பிரயோகத்தினை இலங்கையின் அரசாங்கத்துடன் மேற்கொண்டிருந்தது. இங்கே தான் விடயச் சிக்கல்கள் உருவாகின்றது. இலங்கை அரசுடன் யாருக்கு மென்வலு நகர்வை மேற்கொள்ள முடியும்? இரு தரப்பும் வென்று அரசு அமைக்கும் ஒரே நோக்கத்திற்காக தேர்தலில் போட்டியிடுகின்றார்கள், ஒவ்வொரு கட்சியும் கூட்டணியும் தனித்துவமான தங்களது பண்புகளைக் கூறி வாக்குச்சேகரிக்கின்றார்கள். ஒரு தரப்பினர் ஆட்சியமைக்கின்றார்கள், மற்றைய தரப்புக்கள் எதிர்த்தரப்பு ஆகின்றார்கள். எதிர்த்தரப்பு ஆன தழிழரசுக்கட்சி அல்லது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஆளுந்தரப்புடன் ஏதோவொரு சந்தர்ப்பத்தில் பொருத்திக்கொள்ளும் இணக்கங்களுக்கு மென்வலு அணுகுமுறை என அர்த்தம் கற்பிப்பதை விடவும் டக்ளஸ் தேவானந்தாவின் கட்சி அமைக்கப்பட்ட அரசாங்கத்துடன் இணைந்து இணக்க அரசியல் என்ற பதத்தினை பாவித்துக்கொண்டு பயணிப்பது நேர்மையானதும் உண்மையானதும் ஆகின்றது.   அரசியல் கட்சிகள் மென்வலு அரசியலைப் பிரயோகிப்பதை தெளிவாக வரையறுப்பதாயின், தேர்தலில் விஞ்ஞாபன ரீதியாக முன்வைக்கப்பட்ட விடயதானங்களை அப்பட்டமாக மீறி வாக்களித்த வாக்காளர்களையும் கட்சியின் தொண்டர்களையும் ஏமாற்றி அவ் வாக்குக்களால் ஆட்சியேறிய வேட்பாளர்கள் சுயதேவைக்காக தீர்மானங்களை மாற்றி அவற்றிற்கு அர்த்தம் கற்பிக்க பிரயோகிக்கும் ஒரு கவசவாய்க்கியமே மென்வலு என வரையறுக்கலாம். தமிழரசுக் கட்சி யார்மீது மென்வலு பிரயோகித்திருக்க முடியும்? ஒரு கட்சி தன்னுடைய கொள்கைகள், கோட்பாடுகள் மற்றும் பிரகடனங்களுடன் இணங்கிப்போகின்ற நிலையுடன் ஏதோ ஒரு பொது சிந்தனைக்காக இணைந்துள்ள ஒரு கட்சியுடன் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கட்சிக் கூட்டணியுடன் ஒரு நெகிழ்ச்சித் தன்மையான அணுகு முறைகளை கையாள முனைவதுதான் மென்வலு அணுகுமுறையாகும். மாறாக கட்சிகள் என்ற நிலையில் இருந்து ஆட்சியாளர்களானபின்னர் அது அரசாங்கம் என அழைப்படும். இவ்வாறு அரசாங்கத்துடன் மென்வலு அணுகுமுறை என கூறி ஒட்டிக்கொள்வது நிபந்தனைகள் அற்ற ஆதரவு என்பதே நிதர்சனமானது. இதற்கு பிரதியுபகாரமாக ஆட்சியாளர்கள் தங்களை தக்கவைப்பதற்காக இவ்வாறான கட்சிகளுக்கு பல சலுகைகளை வழங்கவோ அல்லது மென்வலுதாரர்கள் பெற்றுக்கொள்ளவோமுடியும். தமிழரசுக் கட்சியானது தான் அடங்கு கூட்டமைப்பாக உள்ள ஏனைய கட்சிகளுடனோ அல்லது கூட்டணிகளுடனோதான் மென்வலு அணுகுமுறையைக் கையாள முடியும். சற்று ஆழமாக நோக்கின் தமிழ் தேசிய கூட்டமைப்பில் காணப்படும் அங்கத்துவ கட்சிகளுடன் தமிழரசுக் கட்சி மென்வலுவைப் பிரயோகிக்க வேண்டுமே அன்றி அரசாங்கத்துடன் அல்ல என்பது மாத்திரமே யதார்த்தமாக உள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆரம்பத்தில் அகில இலங்கைத் தமிழ் மக்கள் காங்கிரஸ் தொடக்கம் ஈற்றில் ரெலோ, புளொட் வரைக்கும் மென்வலுவின் தோல்வி காரணமாகவே சிதைந்து சென்றன என்பதை யாரும் மறுக்க முடியாது. இவ் அனைத்து சிதைவுகளிலும் ஒற்றுமைத்தன்மையான விடயமாக காணப்படுவது வெளிச்சென்ற அத்தனை கட்சிக்காரர்களது கைகளும் காட்டிய காரணகர்த்தா சுமந்திரன் மாத்திரமே. இவ்வாறான நிலையில் இலங்கை அரசாங்கத்துடன் தமிழ்தேசிய கூட்டமைப்பு மேற்கொண்ட இணக்க அரசியலை மென்வலு அணுகுமுறை என சுமந்திரன் தரப்பு விளிப்பது வேடிக்கைக்குரிய கருத்தாடல் ஆகின்றது. தமிழரசுக் கட்சி தான் அடங்கிய மற்றும் முன்னிலையில் இருந்த கூட்டணியில் கட்சிகளுக்கு இடையே உறவுகளை வடிவமைக்கவும், மேம்படுத்தவும,; கையாளவும் தங்களது இலக்குகளை அடைவதற்கான வகையில் பிரயோகிக்க வேண்டிய மென்வலு அணுகுமுறையை தவற விட்டு தமிழ் மக்களது தரப்பின் அரசியல் ஸ்திரத்தினை அடியோடு சாய்த்துவிட்டது என்ற பழியை எவ்வகையிலும் கடந்துசெல்ல முடியாது. இவ் அனைத்து கைங்கரியங்களும் தனியே சுமந்திரன் என்றதொரு ஒற்றை அரசியல்வாதியை மாத்திரமே நேரடியாகச் சாருகின்றன. மறுபுறம் இவற்றிற்கு எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்காது அனுமதித்த தமிழரசுக் கட்சியின் ஏனைய கட்சி உறுப்பினர்களையும் மௌமாக அனுமதித்தது, அல்லது இடையூறுகள் மேற்கொள்ளாது துணைபுரிந்தது என்ற வகையில் தவறானவர்கள் ஆக்குகின்றது. அவசியமான இடத்தில் பிரயோகிக்கத் தவறிய மென்வலுவை தங்களது சுயதேவை நிகழ்சிநிரல் நிறைவேற்றங்களுக்காக பாவிக்கப்பட்டதா? என்ற கேள்விக்கு தமிழரசுக் கட்சியின் 2024 கட்சித்தலைவர் போட்டி தேர்தல் வரைக்கும் சென்றதும் அதில் ஒரு வேட்பாளராக சுமந்திரன் முன்னிலைப்பட்டதற்குமுரிய அடிப்படை நடவடிக்கைத் தொடர்புகள் பற்றி சற்றே சிந்திக்கவேண்டியுள்ளது. சுமந்திரனின் ஆதரவுத் தளத்தில் உள்ள தமிழரசுக் கட்சிக்காரர்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர், மாகாண சபை உறுப்பினர் மற்றும் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர் பதவிகளை வழங்குவதாயின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற சாம்பார் வாளியில் இருந்து தமிழரசுக் கட்சி என்ற கரண்டியை வெளியே எடுக்கவேண்டிய தேவை சுமந்திரனுக்கு பல ஆண்டுத் திட்டமிடலில் இருந்திருக்கின்றது என்ற விடயம் புலப்படுகின்றது.   ஆக மென்வலு என்பதற்குரிய வரைவிலக்கணத்தினை வினயமாக பாவித்து காரியமாற்றப்பட்டிருந்தால் தழிழர் தரப்பின் அரசியல் இன்னும் ஒரு படி முன்னகர்ந்து இருக்க வேண்டும். இங்கே மாறாக தமிழர் அரசியல் சுக்குநூறாகக் காணப்படுகின்றது. தமிழர் தரப்பின் எதிர்காலம் தொடர்பில் தெளிவான எந்தவொரு நடைமுறை அரசியல் நோக்கமும் தமிழ் தரப்பில் உள்ள அரசியல் கட்சிகளிடம் இல்லை. இவற்றுக்கு அப்பால் குறைந்தபட்சம் தமிழர்தரப்பு ஒற்றுமைகூட இல்லை. இருந்த ஒற்றுமையையும் சீர்குலைத்த சிறப்பு சுமந்திரனை மட்டுமே சார்ந்ததாக கடந்தகால செயற்பாடுகள் காண்பிக்கின்றன. மேலும், மென்வலுற்கு கிடைத்த பிரதியுபகாரமாக அமைச்சரவை அந்தஸ்துக்கு ஒப்பான வசதி வாய்ப்புக்களுடன் நல்லாட்சிக் காலத்தில் சுமந்திரன் நாடாளுமன்ற உறுப்பினராக வலம்வந்தார். உணர்வுமிக்க வாக்காளர்களுக்கு தனது செயற்பாடுகள் மீது நியாயம் கற்பிக்க கையாண்ட கவச வாய்க்கியமே மென்வலுவாக அர்த்தம்கொள்ளப்பட்டுள்ளது. மக்களது அங்கீகாரத்தில் அதிகாரத்தில் இருக்கும் அத்தனை அரசியல்வாதிகளும் எண்ணவேண்டும் தங்களது செயற்பாடுகளுக்குரிய அங்கீகாரம் பொதுவாக்காளர்ப் பெருமக்கள் போட்ட பிச்சையே அன்றி தங்கள் தங்களுக்குரிய ஆளுமைகள், ஆற்றல்கள் மற்றும் திறன்களால் கிடைக்கப்பெற்றவைகள் அல்ல என்றும், அலரி மாளிகையில் பருகும் ஒருகோப்பை விசேட அதிதிகளுக்கான தேனீர் கூட உங்களுக்கு உரியவைகள் அல்ல அது மக்களது ஆணைக்கு உரியவைகள் என்பதை தெளிவாக உணரவேண்டும். அலரி மாளிகையில் அதிகூடிய விசேட அதிதிகளுக்குரிய தேனீர் பருகிய முதல்நிலைத் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் என்றால் இன்றுவரையான காலப்பகுதியில் சுமந்திரன் மட்டுமே முன்னிலை வகிக்கின்றார். தாங்கள் செய்ய வேண்டிய கருமம் என்ன என்பதை குறைந்தபட்சம் அறியாத அல்லது பின்பற்றாத அரசியல் தலைமைகள் தமிழ் மக்களது உரிமை மற்றும் வாழ்வியல் மேலும் மேலும் சிக்கல்ப்பட கோடரிக் காம்புகளாக வலம் வருவார்களே அன்றி மீட்டார்கள் இல்லை என்ற வாதத்தினை மீணடும் உறுதிசெய்து செல்கின்றது சுமந்திரனின் மென்வலு பிரயோகம். உட்கட்சி ஜனநாயகம் என்ற பதம் தமிழரசுக் கட்சிக்குள் யாப்பிற்கு புறநீங்கலாகவும், எழுபது வருடங்களுக்கு மேற்பட்ட கால ஓட்டத்தில் இருக்காத ஒரு தத்துவமாகவும் 2024 தழிழரசுக்கட்சித் தலைவர் தெரிவிற்கான போட்டியில் இருந்து சுமந்திரன் வெளியிட்டுவரும் ஒரு நாகரீகக் கருத்தாக அமைந்திருக்கின்றது. உட்கட்சியின் தீர்மானங்கள் ஒவ்வொன்றும் ஜனநாயகப் பண்பில் எட்டப்பட்டவைகள் ஆக இருப்பின் அவை மிக மிக சிறப்பானது. தலைவர் பதவிக்காக சுமந்திரன் உட்கட்சி ஜனநாயகத்தின் உச்சப்பட்ச நம்பிக்கையில் போட்டியிட்டிருந்தார். சுமந்திரன் நிழல்த் தலைவராக தமிழரசுக் கட்சியில் செயற்பட்ட காலத்தில் நடைபெற்ற உட்கட்சி சம்பவங்கள் சிலவற்றை பட்டியலிட்டு பார்க்கையில், 01.தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயற்பாடுகளுக்குள் ஏனைய கட்சிகளுக்கு வழங்கிய செயன்முறைப் பெறுமானம். 02.தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து கட்சிகள் வெளியேறியமை மற்றும் உள்வாங்கப்பட்டமை. 03.போர்க்குற்ற சர்வதேச விசாரணை முடிந்து விட்டது, 04.விக்னேஸ்வரன் முதலமைச்சராக இருந்த காலப்பகுதியில் ஏற்பட்ட முரண்பாடு. 06.மாவை சேனாதிராசாவுக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உரிமை மறுத்து கலையரசனுக்கு வழங்கியது. 07.சம்பந்தரது முதுமை காரணமாக பதவிவிலக அவரில் அக்கறை கொண்டு இரஞ்சியது. உதாரணத்திற்கு இது போன்ற சில பிரபலமான உட்கட்சிச் செயற்பாடுகளில் உட்கட்சி ஜனநாயகம் அறிந்து செயற்பட்ட தருணங்களை வாக்காளர்கள் உண்மையை உண்மையாக சிந்திக்க வேண்டும் என கேட்டுக்கொண்டு, சுமந்திரன் மீண்டும் உட்கட்சியின் ஜனநாயகத்தினை அறிவதற்காக தமிழரசுக் கட்சியின் தலைமைக்கு போட்டியிட்டாரம். இன்று கட்சி வழக்குவரை முன்னேறியிருக்கின்றது. ஜனநாயகம் என்றால் என்ன? என்பதற்கு சுமந்திரன் ஒரு நேர்காணலில் வழங்கிய ஒரு உவமானக் கதையுடன், ஒரு குடும்பத்தில் மூன்று பெண்பிள்ளைகளும் ஒரு ஆண்பிள்ளையும் இருக்கின்றார்கள். இவர்களது விடுமுறைக்கு வெளியே செல்ல குடும்பமாக திட்டமிடும் சந்தர்ப்பத்தில் ஆண்பிள்ளை ஒரு சாகசம் போன்றதொரு சுற்றுலாவை விரும்புகின்றார், பெண்பிள்ளைகள் மூவரும் இவ்வகையைத் தவிர்த்து ஒருமித்த குரலில் வேறு ஒரு விடயத்தினை தெரிவு செய்வார்கள். இவ்வாறான சந்தர்ப்பத்தில் ஜனநாயக தீர்மானமாக பெண்பிள்ளைகளின் தெரிவுதான் அமையும் என்ற கருத்துப்பட ஒரு அழகான கதையைக் கூறியிருந்தார். இன்று உட்கட்சி விவகாரம் நீதிமன்றத்தில் இருக்கின்றது. இச் சந்தர்ப்பத்தில் ஏழுபேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்திருக்கின்றார்கள். இதில் சுமந்திரனை தவிர ஏனைய அறுவரும் ஒத்த நிலைப்பாட்டில் நீதிமன்றத்திற்கு தங்களது நிலைப்பாட்டினை அறிவித்திருக்கின்றார்கள். அதன்பால் வழக்கு முடிவுறுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. மாறாக மறு முனையில் சுமந்திரன் ஏனைய அறுவரது நிலைப்பாட்டுடனும் பொருந்தாது தான் மாத்திரம் வழக்கினை தொடர இருப்பதாக தெரிவித்திருப்பதாக அறிய முடிகின்றது. சுமந்திரன் தலைவர் தெரிவில் கூறிய உட்கட்சி ஜனநாயகம், சுமந்திரன் கூறிய உவமானக் கதை ஆகியவற்றின் அடிப்படையில் பார்க்கும்போது சுமந்திரனது இந்த தீர்மானம் மென்வலுப்பிரயோகமா? அல்லது உட்கட்சி ஜனநாயகமா? எந்த வகுதிக்குள் அடங்கும் என தலையைப் பிய்த்துக்கொள்ளவேண்டியுள்ளது. ஈற்றில் ஒன்றுமட்டும் தெளிவாகின்றது தன் தன் வசதிக்காக பல பல தத்துவங்களை பேசுபவர்கள் தவறிழைப்பவர்கள் என்பதை நிறுவுவதில் சுமந்திரனும் தவறவில்லை என்பதுடன், இவ்வழக்கு வென்றாலும் தோல்வி சுமந்திரனுக்கே, வழக்கு தோற்றாலும் தோல்வி சுமந்திரனுக்கே ஆகும். எதிர்வரும் தேர்தல் மிகவும் சவாலானது. கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வந்து மனோகணேசன் தமிழரசுக் கட்சியில் தேர்தலில் தோன்றினால் எப்படியோ அதையும் தாண்டியதொரு நிலையிலேயே சுமந்திரனும் தேர்தலில் தோற்றவேண்டியிருக்கும். அடுத்த தேர்தலில் சுமந்திரன் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தினை தவிர்த்து மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிட்டு வெல்வாராக இருப்பின் தமிழரசுக் கட்சிக்குள் மென்வலுவும் உட்கட்சி ஜனநாயகமும் உயிர்ப்புடன் உள்ளது என்பதை நிறுவிக்காட்டமுடியும்.   பொறுப்பு துறப்பு! இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Independent Writer அவரால் எழுதப்பட்டு, 28 March, 2024 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. https://tamilwin.com/article/sumandran-politics-and-internal-party-democracy-1711577764
    • abaan மனிசி ஏன் இவ்வளவு பிடிவாதம் பிடிக்குது இலங்கையின் பெண்கள் கொஞ்சம் உசாரான ஆட்கள் தான் .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.