Jump to content

சின்ன மாமியே நித்தி கனகரத்தினம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பாட்டுக்கு நன்றி நுணாவிலான்

அடிடா சுந்தரலிங்கம்...அதையும் இருந்தால் இணைத்து விடவும்

வாத்தியார்

*********

Link to comment
Share on other sites

  • Replies 95
  • Created
  • Last Reply

பாட்டுக்கு நன்றி நுணாவிலான்

அடிடா சுந்தரலிங்கம்...அதையும் இருந்தால் இணைத்து விடவும்

வாத்தியார்

*********

அடிடா சுந்தரலிங்கம்…அடிடா.. அடிடா..

அடிடா சுந்தரலிங்கம்…

வயசுக்கு பயனில்லையய்யா வாய் தான் இழுக்குதய்யா

பதுங்குற எலி தானய்யா..

சுந்தரலிங்கமய்யா சேலையொன்று கட்டுமய்யா

கதையில் புலிதானய்யா.. பயம் கொள்ளி பூனையய்யா

அடிடா சுந்தரலிங்கம்…அடிடா.. அடிடா..

அடிடா சுந்தரலிங்கம்…

சுந்தரலிங்கமய்யா.. ? வாங்கிட்டாய்யா

மானம் போகுதய்யா..பதுங்குற கவர பய்யா..

சுந்தரலிங்கமய்யா சேலையொன்று கட்டுமய்யா

கதையில் புலிதானய்யா.. பயம் கொள்ளி பூனையய்யா

அடிடா சுந்தரலிங்கம்…அடிடா.. அடிடா..

அடிடா சுந்தரலிங்கம்…

சொல்லி சொல்லி பார்த்தேன் அவள் திருந்தமாட்டாளே

அல்லி ரணி டைல்ய் ஆக ஏசுகின்றாளே

சேதனத்தை திருப்பி தாடா

டொனடிஒன் அதையும் தாடா

வாங்கின கடனை தாடா

வந்த வழியே போடா

மாமியாரை நானும் கேட்டேன்

மாமனாரின் காலை தொட்டேன்

சாமியாரா போவேன் என்றேன்

சந்தோசம் தேடி போவேன்

ஓடி வாறேன் உன்னை நம்பி மரியா மரியா

வாழ்கையிலே அர்த்தம் வேணும் தரேயா தரேயா

மாமியாரை நானும் கேட்டேன்

மாமனாரின் காலை தொட்டேன்

சாமியாரா போவேன் என்றேன்

சந்தோசம் தேடி போவேன்

பாவி மகள் சொல்லைக்கேட்டு

பெற்றவரை உதற்றி விட்டு

பாதியாய் வாழுகின்றேன் பயந்து ஓடுகின்றேன்

ஓடிவாரேன் உன்னை நம்பி குஜ்லி மரியா

வாழ்கையிலே அர்த்தம் வேணும் தரேயா தரேயா

மரியாவை தேடுறேன் அவளை நாடி ஓடுறேன்

ப்ரியவை தேடுறேன் செர்ந்து வாழ போகிறேன்

மரியாவை தேடுறேன் அவளை நாடி ஓடுறேன்

ப்ரியவை தேடுறேன் செர்ந்து வாழ போகிறேன்

I’ll take u on a hike

I’ll take u on a bike

I’ll take u on a ride

will u b my lovin’ bride

குஜிலி அம்மா குஜிலி அம்மா கோபம் என்னடியோவ்

குஜிலி அம்மா குஜிலி அம்மா கோபம் என்னடியோவ்

சங்கு கழுத்திலே கட்டுறேன் தாலி

கலகம் ஏனடியோவ்

சங்கு கழுத்திலே கட்டுறேன் தாலி

கலகம் ஏனடியோவ்

முத்து ரதின மாலையோ தங்க வைர அட்டிகையோ

சொத்து சேதனம் வேண்டாம்

தங்க கட்டியே நீ போதும்

டிங்கிரி அய்யா டிங்கிரி அய்யா அங்கற படாதே

டிங்கிரி அய்யா டிங்கிரி அய்யா அங்கற படாதே

சங்கடமான நிலையில் இன்று மாட்டிக்கொண்டாயே

நீயும் சங்கடமான நிலைல்யில் இன்று மாட்டி கொண்டாயே

அதோ அப்பறம் வார்ராரே எந்தன் அண்ணணும் வாரானே

சின்ன தம்பியும் வாரானே உந்தன் முதுகு அப்படியோ

நாய் வேஷம் வெளி வேஷம் எல்லாம்

எல்லாம் நேற்று ஆச்சி நல்லாய் படிச்சாசு

நானும் திருந்தியாச்சு..

கல்யாணம் என் வாழ்க்கை நல்ல பாடம் சொல்லியாச்சு

படிக்காத பயல் நானும் ஒரு படிச்ச மேதை ஆச்சு

நாய் வேஷம் வெளி வேஷம் எல்லாம்

எல்லாம் நேற்று ஆச்சி நல்லாய் படிச்சாசு

நானும் திருந்தியாச்சு..

கல்யாணம் என் வாழ்க்கை நல்ல பாடம் சொல்லியாச்சு

படிக்காத பயல் நானும் ஒரு படிச்ச மேதை ஆச்சு

அடிடா சுந்தரலிங்கம்…அடிடா.. அடிடா..

அடிடா சுந்தரலிங்கம்…

சுந்தரலிங்கமய்யா நீ தான் மனுசனய்யா

மானம் வந்ததய்யா மனுசன் ஆனானய்யா

சுந்தரலிங்கமய்யா வீடொன்றை கட்டுமய்யா

கதையை மாற்றுமய்யா வாழ்ந்து காட்டுமய்யா

அடிடா சுந்தரலிங்கம்…அடிடா..

அடிடா சுந்தரலிங்கம்

அடிடா சுந்தரலிங்கம்…அடிடா..

அடிடா சுந்தரலிங்கம்

ஓ மை டார்லிங் ரோஷி

அடிடா சுந்தரலிங்கம்

கள்ளு கடை பக்கம் போகாதே

அய்யய்யோ வெட்ககேடு

அய்யய்யோ அவள் வேண்டாம்

இப்பாடல்களை தரவிறக்க;

http://www.mediafire.com/?qtj4zad5umj

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ். இப்ப ரூல்ஸ் எல்லாம் மாத்திறாங்கள்.

ஸ்ருடன்ரா தொடர்ந்து இருந்தாலும், வேர்க் பெர்மிற் இல்லாமல் கனகாலம் இருக்கேலாது. ஸோ, கெதியா வேர்க் பெர்மிற்றோட ஒரு வேலையை எடுக்கிறது நல்லது, இல்லாட்டி ரெசிடென்ஸி விசா, சிற்றிசன் உள்ள பெட்டை ஒண்டைக் கொழுவிறது நல்லது.

எல்லாம் நல்லதுக்குத்தான் சொல்லுறன். இதைக் கேட்காமல் "கெடுகிறன் பந்தயம் பிடி" எண்டா சிக்கல்தான்!

Link to comment
Share on other sites

அய்யய்யோ ஊரே கெட்டு போச்சு, அன்பே வா, ரோஷி நீ கொஞ்சம் யோசி, சீதனம் சீராக வேண்டுமா , சோளம் சோறு பொங்கட்டுமா

இப்பாடல்களை தரவிறக்க;

http://www.mediafire.com/?jjqntg5fwjz

Link to comment
Share on other sites

நெடுக்ஸ். இப்ப ரூல்ஸ் எல்லாம் மாத்திறாங்கள்.

என்ன ஸ்டூடன்ட் வீசாவில இருக்கிற ஆக்களும் அசைலம் அடிக்கலாம் என்றோ? நெடுக்குக்கு உலகத்தில ஒருவருக்கும் குடுக்காத ஸ்டூடன்ட் வீசா ஒன்றை சிறீ லங்காவில குடுத்துபோட்டாங்களாம். தான் அசைலம் அடிக்க இல்லையாம் திறமையின் அடிப்படையில் யூகேயுக்கை புகுந்தவராம் என்று ஆள் நான் அறிஞ்ச காலத்தில இருந்து சொல்லிக்கொண்டு திரிகிது. நெடுக்குக்கு ஸ்டூடன்ட் வீசா குடுத்ததுக்கும் சின்னமாமிக்கும் என்ன சம்மந்தம் இருக்கிது என்று முதலில உங்களுக்கு விளங்கி உள்ளதோ? :lol:

Link to comment
Share on other sites

ஒரு கமெர்சியல் இடைவேளை. நேயர் விருப்பம். பாடல்களை கேட்டு மகிழுங்கள். :lol:

கள்ளுக்கடை பக்கம் போகாதே

விரும்பி கேட்டவர்: குமாரசாமி, ஜெர்மனி

http://www.youtube.com/watch?v=N20bsv6i24o&NR=1

சின்ன மாமியே

விரும்பி கேட்டவர்: விசுகு, பிரான்ஸ்

http://www.youtube.com/watch?v=r_4ZEGhwgGo&feature=related

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன ஸ்டூடன்ட் வீசாவில இருக்கிற ஆக்களும் அசைலம் அடிக்கலாம் என்றோ? நெடுக்குக்கு உலகத்தில ஒருவருக்கும் குடுக்காத ஸ்டூடன்ட் வீசா ஒன்றை சிறீ லங்காவில குடுத்துபோட்டாங்களாம். தான் அசைலம் அடிக்க இல்லையாம் திறமையின் அடிப்படையில் யூகேயுக்கை புகுந்தவராம் என்று ஆள் நான் அறிஞ்ச காலத்தில இருந்து சொல்லிக்கொண்டு திரிகிது. நெடுக்குக்கு ஸ்டூடன்ட் வீசா குடுத்ததுக்கும் சின்னமாமிக்கும் என்ன சம்மந்தம் இருக்கிது என்று முதலில உங்களுக்கு விளங்கி உள்ளதோ? :D

அசைலம் அடிக்க தேசத்தை காட்டிக் கொடுத்து மானங்கெட்ட பிழைப்பு நடத்த எந்த விசாவிலும் வரலாம்.. விசா இல்லாமல் களவாவும் கள்ளத்தோணியாவும் நுழையலாம்.

ஸ்ரூடண்ட் விசா புதினம் அல்ல. அதை உரிய முறையில் பயன்படுத்திறது தான் எம்மவர் மத்தியில் புதினம்..! அதாவது ஸ்ருடண்டா நாட்டுக்குள் நுழையிறது.. பிறகு அசைலம் அடிக்கிறது.. இதுதான் தமிழர்கள் அநேகரின் செயல். அது தவறான செயல். அதைத்தான் சொல்லி இருக்கிறேன்..! :lol:

நெடுக்ஸ். இப்ப ரூல்ஸ் எல்லாம் மாத்திறாங்கள்.

ஸ்ருடன்ரா தொடர்ந்து இருந்தாலும், வேர்க் பெர்மிற் இல்லாமல் கனகாலம் இருக்கேலாது. ஸோ, கெதியா வேர்க் பெர்மிற்றோட ஒரு வேலையை எடுக்கிறது நல்லது, இல்லாட்டி ரெசிடென்ஸி விசா, சிற்றிசன் உள்ள பெட்டை ஒண்டைக் கொழுவிறது நல்லது.

எல்லாம் நல்லதுக்குத்தான் சொல்லுறன். இதைக் கேட்காமல் "கெடுகிறன் பந்தயம் பிடி" எண்டா சிக்கல்தான்!

நான் ஸ்கொல்லில் வந்ததால் நாடு திரும்பி அங்கு சேவை செய்ய வேண்டும். அது கட்டாயம். படிக்கும் வரை படிக்கலாம். அதனால் படிக்கிறேன் அவ்வளவே..! எனது நண்பர்கள் கேம்பிரிஜ்ஜில் படித்துவிட்டு கூட ஊர் திரும்பி விட்டார்கள். இப்போ குறைந்த வயதிலும் நல்ல பதவிகளில் இருக்கிறார்கள். இங்க இருந்து வெள்ளைக்கு கூலி வேலை செய்யிறதிலும் ஊர் திரும்பி ஊரை முன்னேற்ற உதவுவது மேல் என்று நினைக்கிறன்.

பேராசிரியர் துரைராஜா.. அவரிடம் கனடிய பல்கலைக்கழக விசேட பேராசிரியர் தகமை இருந்தும் அங்கு போய் வேலை செய்யேல்ல. அவர் உண்மையில் கனடா அல்லது அமெரிக்கா போய் இலகுவாக குடியேறி நல்ல பதிவியில் இருந்து சொகுசாக வாழ்ந்திருக்கலாம். நித்தி போன்ற சந்தர்ப்பவாதிகள் செய்தது போல. ஆனால் அவரோ.. ஊரில இருந்து சைக்கிளில வந்து சொந்த மாணவர்களுக்கு சேவை செய்தவர். அவர் நமக்கெல்லாம் ஒரு நல்ல வழிகாட்டி. :)

Link to comment
Share on other sites

அசைலம் அடிக்க தேசத்தை காட்டிக் கொடுத்து மானங்கெட்ட பிழைப்பு நடத்த எந்த விசாவிலும் வரலாம்.. விசா இல்லாமல் களவாவும் கள்ளத்தோணியாவும் நுழையலாம்.

பேராசிரியர் துரைராஜா.. அவரிடம் கனடிய பல்கலைக்கழக விசேட பேராசிரியர் தகமை இருந்தும் அங்கு போய் வேலை செய்யேல்ல. அவர் உண்மையில் கனடா அல்லது அமெரிக்கா போய் இலகுவாக குடியேறி நல்ல பதிவியில் இருந்து சொகுசாக வாழ்ந்திருக்கலாம்.

இதைத்தான் கோத்தபாய அவர்களும் கூறுகின்றார். இலங்கையில் பிரச்சனை என்று ஒன்றும் இல்லையாமே! உங்களையும் நல்லிணக்க ஆணைக்குழு முன்பாக வாக்குமூலம் கொடுப்பதற்கு அழைக்க வேண்டும்.

தேசபிமானிகளின் (?) ரகளைகள் தாங்கமுடியாமல் தேசத்தைவிட்டு துரத்தி அடிக்கப்பட்டவர்கள் பற்றி எழுதுவதற்கு உங்கள் சந்தர்ப்பவாதம் இடம்கொடாதது ஆச்சரிமாகவில்லை. ஏன் என்றால் நீங்களும் தேசத்தின் (?) பெயரால் மானம் கெட்ட பிழைப்புத்தான் நடத்துகின்றீர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதைத்தான் கோத்தபாய அவர்களும் கூறுகின்றார். இலங்கையில் பிரச்சனை என்று ஒன்றும் இல்லையாமே! உங்களையும் நல்லிணக்க ஆணைக்குழு முன்பாக வாக்குமூலம் கொடுப்பதற்கு அழைக்க வேண்டும்.

தேசபிமானிகளின் (?) ரகளைகள் தாங்கமுடியாமல் தேசத்தைவிட்டு துரத்தி அடிக்கப்பட்டவர்கள் பற்றி எழுதுவதற்கு உங்கள் சந்தர்ப்பவாதம் இடம்கொடாதது ஆச்சரிமாகவில்லை. ஏன் என்றால் நீங்களும் தேசத்தின் (?) பெயரால் மானம் கெட்ட பிழைப்புத்தான் நடத்துகின்றீர்கள்.

கோத்தா சொல்வது பாதி உண்மை. அண்மையில் கனடிய அமைச்சர் ஒருவரும் சொல்லி இருந்தார் 70% கனடிய அகதி அந்தஸ்துப் பெற்றவர்கள் கனடிய அகதிகள் சட்டங்களை துஸ்பிரயோகம் செய்து தவறான தகவல்களை வழங்கி அகதி அந்தஸ்துப் பெற்றுள்ளனர் என்று. அகதி அந்தஸ்து பெற்றதும் அவர்கள் மீண்டும் சிறீலங்காவிற்கு விஜயம் செய்கின்றனர் என்று. இப்படிப் பட்ட தேசத்தின் துயரில் தங்கள் வளமான வாழ்விற்காக பிழைப்பு நடத்தும் சந்தர்ப்பவாத இனக்குழுமத்தில் நாங்கள் சொல்லும் கருத்துக்கள் செவிடன் காதில் ஊதிய சங்குதான்.

உண்மையாக போராட்டத்தில் உறுதியோடு பங்கெடுத்த பலர் இன்னும் தாயகத்தில் சிறைகளிலும் துன்பத்திலும் வறுமையிலும் வாடிக்கொண்டிருக்க.. போராட்டத்தில் பங்கெடுக்காது பதுங்கி ஓடிவந்த கூட்டம் அசைல வாழ்வில் செகுசு காண்பதுதான் நாம் கண்ட போராட்ட பலாபலன். இத்தனை உயிர்களின் இழப்புக்கு கிடைத்த பலன்..! :D:o

புலிகளுக்கு எதிராக வேண்டும் என்றே வாக்குமூலம் கொடுத்தவர்களில் அகதி அந்தஸ்துக் கோரியோரே அதிகம். இந்தக் கூட்டத்தினரால் தான் புலிகளை சட்ட ரீதியாக அந்தந்த நாடுகள் பயங்கரவாதமாக சித்தரிக்க முடிந்துள்ளது. புலிகளின் அழிவிற்கும் இந்தச் சுயநலவாதிகளே காரணம்.

இதற்குள்.. இவைக்கு.. வெட்டி கெளரவப் பிரச்சனைகள் வேற...??! :D:)

Link to comment
Share on other sites

....

பேராசிரியர் துரைராஜா.. அவரிடம் கனடிய பல்கலைக்கழக விசேட பேராசிரியர் தகமை இருந்தும் அங்கு போய் வேலை செய்யேல்ல. அவர் உண்மையில் கனடா அல்லது அமெரிக்கா போய் இலகுவாக குடியேறி நல்ல பதிவியில் இருந்து சொகுசாக வாழ்ந்திருக்கலாம். நித்தி போன்ற சந்தர்ப்பவாதிகள் செய்தது போல. ஆனால் அவரோ.. ஊரில இருந்து சைக்கிளில வந்து சொந்த மாணவர்களுக்கு சேவை செய்தவர். அவர் நமக்கெல்லாம் ஒரு நல்ல வழிகாட்டி. :D

பேராசிரியர் துரைராஜா மட்டும் இல்லை எனக்குத் தெரிந்து வெளிநாடுகளில் படித்து பட்டம் பெற்ற பல பேராசிரியர்கள், ஊரில் எழிமையான வாழ்க்கை வாழ்ந்த படியும், மாணவர் சமுதாயத்தை முன்னேற்றி விட்டுள்ளார்கள் என்பது நான் கண்முன்னே கண்ட உண்மை! இதைக் கூறிய நெடுக்குக்கு அவர்களிடம் படித்து தற்போது பலர் அவர்கள் காட்டிய வழி போல் இளைய தலைமுறைக்குக் கல்வி கற்பிக்கும் மாணவர் சார்பில் பல ஆயிரம் பச்சைப் புள்ளிகள் போடலாம். :o (இருந்த ஒன்றை போட்டுளேன்)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சரி, ஒராளை பற்றி வேரும் விழுதில போட்டிருந்து, அதில ஏன் போட்டது என்றும் கேள்வி? அவர் ஒரு பாடகர், பிறகு அதபற்றி சில பின்னூட்டம்.. பிறகு அவரைபற்றி வசவு ..நல்ல சமூகம்.

இதில ஒரே ஒரு விடயம், அது தனியே நெ மாத்திரமல்ல, தமிழன் என்ன செய்தாலும் பிழைபிடிக்கிறது என்று ஒரு கூட்டம் அது யாழ்ப்பாணத்தில பல்சர் ஓடின என்ன, நல்லூர் திருவிழாவிற்கு போனால் என்ன, UK பட்டுப்பாடின என்ன, போரைக்காட்டி நிறைய வலைப்பின்னல்கள், அது தமிழர் தரப்பிலும் உண்டு, சிங்களவநிடமும் உண்டு, அவை இலகுவில் தங்கள் வாழ்கை கோலங்களில் இருந்து விடுபட முடியாது திணறுகின்றது. புதிது புதிதாக காரணம் தேடும், யாரும் தமது நிலைகளுக்கு திரும்பினாலும், அது போர் இன்னும் முடியவில்லை என்று கட்டுவதற்கு எல்லா விதமான உத்திகளையும் செய்யும்.

சின்ன உதாரணம், எழிலனின் மனைவி சொன்ன வாக்கு மூலத்தில் ஒருபகுதி , "தனக்கு நம்பிக்கை இருக்கு, எழிலனை கொன்றிருக்க மாட்டார்கள் என", அந்த பகுதியை யாரும் தலையங்கம் ஆக்க விருப்பம் இல்லை..அவர் சொன்ன இன்னுமொரு பகுதி, "எனக்கு என்ன நடந்தாலும் பரவாயில்லை, உயிர் வாழ வேண்டும் என்ற விருப்பத்திற்காக வாழவில்லை" என்ற பகுதினை தலையங்கமாக, அல்லது முகப்பு பகுதியாக செய்தி போடும் செய்தியாளர்களை, இணையங்களை எவ்வாறு அழைப்பது, அல்லது அவர்களின் நோக்கம் என்ன என அறிவதர்ற்கு என்ன தேவை? முதல் பந்தி ஒன்றில் எழிலனின் மனைவி அரச உத்தியோகத்தில் இருப்பதை இரட்டை வேடம் என்று குறிபிட்டது, மனிதர்களின் வாழ்கை கோலத்தை பற்றி குறிப்பிடவே அன்றி தனிப்பட ரீதியில் அல்ல. இந்த நிலையிலும் அவர் வாளுவதர்ற்கு ஒரு வழியாகத்தான் நான் அதை பார்க்கிறேன்.

மற்றது,

ஒருவன் தனது துறையில் மாத்திரமல்லாமல் இன்னுமொரு துறையிலும் முன்னுக்கு வந்திருக்கின்றான் என்றால், அதை பாராட்டுகிற பண்பு வேண்டும் அதைவிடுத்து, காசைகொடுத்து பட்டம் எடுத்திப்பார் என்பது, மனப்பிறள்வே தவிர வேறு ஏதும் இல்லை. - முதல் பந்தியிலே இருக்கிறது நித்தி இலங்கையில் எங்கோ விவசாய விரிவுரையாளர் ஆக இருந்ததென.. நான் துரையை பற்றி எழுதும் போது எழுதியது அவர் சிங்களவனோடும் இணக்கமாக இருந்திருக்கிறார் என்பதை குறிக்கவே எழுதினேன், என்னுடைய நோக்கம் மொட்டந்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடும் நெ க்கு விளங்கபடுத்தவே தவிர துரையை குறை சொல்லவல்ல- முதலும் சொல்லியிருக்கிறேன்.

நெ..புலமை பாரிஸில் வந்தனீங்கள் மேலும் படித்து நல்ல நிலைக்கு வர வாழ்த்துக்கள்.

மற்றவர்களினதும் கருத்துகளை, செயற்பாடுகளையும் மதித்தால் நல்லம்.

ரதி ஓரிடத்தில் எழுதியிருந்தீர்கள்..

காசு கொடுத்தால் போதாது, போய் செய்யவேண்டும் என்று..உண்மை ஆட்கள் போக வேண்டும், அது இல்லாதவிடத்து காசு வேண்டும். எனது நண்பன் ஒருவன் தனது வேலை நியமனதிர்ர்காக காத்திருக்கிறான், சில காலம் முன்பு கதைத்தேன், எங்கே வரும் என்று தெரியாதாம், ஆனால் கிளிநொச்சி வந்தால் (தனக்கு) கடினம் என்று சொன்னான். இதுதான் நிலைமை..நான் சொல்ல முடியாது போடா மச்சான் என்று, இங்கே அரச உதவி பணத்தில் இருந்து கொண்டு கைகாசுக்கு வேலை செய்துகொண்டு BMW ஓடேக்க ஒராள் 15 - 20 வருடம் படி படி என்று படித்து போட்டு வன்னிக்கே தோட்டம் செய் என்று சொல்ல இயலாதுதானே? அவர் விரும்பினால் ஓகே ..நான் சொல்லவியலாது.. ஏனெனில் நான் அப்படியில்லை. நானே, அரசசெலவில்/ மக்களின் காசில் படித்துப்போட்டு ( நெ மாதிரி என்னுடைய தகுதிக்கும், முயற்சிக்கும் கிடைத்த சலுகை என்று சொல்லுகிற அளவுக்கு ...ரீல் விட தெரியாது/ விரும்பவில்லை) இப்ப வேற ஆருக்கோ எதோ செய்து கொண்டு இருக்கிறேன். ஆனால் ஆருக்கு தெரியும் 10 வருடத்துக்கு பிறகு என்ன செய்வன் எண்டு. அது மட்டும் யாழில் கருத்த எழுதுவதுதான்...

மற்றது, நெ நல்ல விஷயம் ஊருக்கு திரும்பி போறது, அது உங்கட விருப்பம், எனக்கு தெரிய வேற ஆட்களும் உங்களைமாதிரி ஸ்கோல் இல் வந்தவர்கள், திரும்பி போகத்தான் விரும்புகிறார்கள், எனக்கு சொல்ல தெரியவில்லை ஆனால் இப்ப ஒருவகையான தோழமை அழுத்தம் இருக்கு போல. இங்கே நாங்கள் என்னதான் செய்தாலும், இங்கே எங்களுக்கு 10 , 15 முந்தி வந்தவையினுடைய லொள் தாங்க முடியாது. அவை எதோ கனடா தாங்கள்தான் கண்டுபிடித்தமாதிரி கதை அளந்து கொண்டு திரியினம். நாங்கள்/ நான் நினைத்தபடி எல்லாம் செய்ய முடியாது-பெட்டி கொழுவின ஆக்கள்..அங்கே போனால், நான் இஞ்ச பட்ட கஸ்ரம் எல்லாம் மனிசி பட வேண்டும். அதைத்தான் கரும்பு கடைசியா எழுதி இருந்ததன் ஒரு கருத்து எண்டு நினைகிறன், அங்கே இருக்கிற/இருந்த ஆட்கள் தனியே பிரச்சனையால மட்டும் வெளிநாடு ஓடவில்லை. யாழ் பாண கம்பஸ் இல நடந்த கதைகளை சொன்னா, 10 பிரேக் எடுத்துதான் இந்த திரி முடியும்.

நன்றி வணக்கம்...

ப்ளீஸ் one more break ....

Link to comment
Share on other sites

அது சரி... வேரும் விழுதும் பகுதியில் சின்னமாமி நித்திகனகரத்தினம் பற்றி கலைஞர் அறிமுகமாக ஆரம்பிச்சு கடைசியில அந்தாளை ஓர் கூடாத சுயநலவாதியாக சித்தரிச்சு, கனடாவில இருக்கிற 70% தமிழ்ச்சனங்களை குற்றவாளிகளாக இனம்கண்டு, இறுதியில் நெடுக்காலபோவானையும், பேராசிரியர் துரைராசாவையும் புகழ்ந்து.. கெளரவித்து மிச்சம் எங்கால போவது என்று தெரியாமல் திரி அந்தரத்தில தொங்கிக்கொண்டு உள்ளது. இன்னமும் கொஞ்சம் போனால்... நித்தி கனகரத்தினம் என்று ஒரு ஆள் உண்மையில பாட்டுக்கள் பாட இல்லை என்றும் சொல்லுவீனம். :o

யோவ் எரிமலை... என்ன நான் சொன்ன கருத்துக்கள் என்று உம்பட பாட்டில கொஞ்ச கருத்துக்களை அவிழ்த்துவிட்டு இருக்கிறீர்? :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஐயா கரும்பு ,

உங்கள் கருத்தை பிழையாக விளங்க்கியதிர்ற்கும் மேற்கோள் காட்டியதிர்ற்கும் மன்னித்து கொள்ளுங்கள்.

குறிப்பு:

"அதைத்தான் கரும்பு கடைசியா எழுதி இருந்ததன் ஒரு கருத்து எண்டு நினைகிறன், அங்கே இருக்கிற/இருந்த ஆட்கள் தனியே பிரச்சனையால மட்டும் வெளிநாடு ஓடவில்லை. "

இதுதான் உங்கள் கருத்தில் இருந்து நான் மேற்கோள் காட்டிய விடயம். ஒன்று வசன ஒழுங்கு பிழை, மற்றது நீங்கள் சொன்னதை வெளிப்படையாக சொல்லவில்லை. கமாவையும், முர்ருப்புள்ளியையும் பாருங்கள். அதற்க்கு மேலும் என்னில் பிழையிருந்தால் மீண்டும் ஒருமுறை மன்னித்து கொள்ளவும்.

மற்றது நெ ஐ புகழ்ந்து பற்றி, இது பதில் வரக்கே தெரியும்..உண்மையாக வாழ்த்துகிறேன் அவரின் படிப்புக்கு, திரும்பி போவதர்ற்கு மிச்சம் என்னவென்று அவருக்கு விளங்கவேண்டும்.

துரைராஜாவை பற்றி, நெ முட்டாள் தனமாக இதில் தொடங்கினாலும், அவரின் தகுதிக்கும் சேவைக்கும் யாரும் எங்கேயும் மதிப்பு கொடுக்கலாம்.

நித்தி கனகரத்தினத்தி பற்றி..நீங்கள் சொல்லும் (கவலைப்படும்) அத்தனையையும் நான் சொல்லி இருக்கிறேன். இலங்கை போப் இன் முதல்வன், இன்னும் பலரின் விருப்ப பாடகன், சிறந்த கல்விமான், விவசாயத்துறையில் தொடங்கி, வேலை இல்லதாபடியால், மருந்தியல் படித்து, அதில் முதன்மையாக இருப்பவர். அவர் செய்த சிபாரின் அடிப்படையில் விக்டோரியா பல்கலை கழகத்தில் ஒரு புதிய துறையே தொடங்க்யுலார்கள், . அவரின் ஆராய்ச்சி பாஞ்சமிருததில் உள்ள இதய பாதுக்கப்பு பொருட்கள். அவருடைய மேலதிகாரிஇடம் இதுபற்றி முதல் முதல் சொன்ன போது அவர் சொன்னது " உங்களுக்கு மூளை கூடிபோச்சுது". ஆனால் தான் கூடினவர்தான் என நிருபித்து ஒரு புதிய துறையையே தொடங்கின செயல்வீரன்.

இதைவிட தாயக "கத்லப்" திட்டத்திற்காக பாடல் நிகழ்ச்சி ஒன்றில் பாடுவதர்ற்கு சம்மதித்திருந்தார், ஆனால் அது நடைபெறவில்லை.

நான் கனடா ஆட்களை குறை சொன்னதாக நீங்கள் கவலைப்ப்டுவற்காய் வருந்துகிறேன். ஆனால் நிஜம் அதுதான். நான் இன்னுமொருவருக்காய், நான் அடைத்த துயரங்களை என் மறைக்க வேண்டும். நான் அங்கிலத்தில்தான் படித்தேன் என்று கூற, மற்றவர்கள் நம்புவதர்ற்கு எவளவு காலம் எடுத்தது என்று எனக்குத்தான் தெரியும். இது எனக்கு மட்டுமல்ல பலருக்கு நடந்தது, என்னைப்போல வந்த சிலர் திரும்பி போய்விட்டார்கள், ஒன்று வேலை இல்லை மற்றது எங்கட ஆட்களில் லொள்..உங்களுக்கு அப்படி ஏற்படாவிட்டால் நீங்கள் நல்ல நண்பர் உறவினர் சூழ இருக்கிறீர்கள். மறுதலைக்கு இது எனக்கும் என் போன்றவர்களுக்கும் தான் ஏற்படிருந்தால் அதையும் மிளப்பெருகிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அக்கோய் உங்களுக்கு ஆத்திரம் வருகுதில்ல.. இதே போல் தான் நீங்களும் எங்களைப் பற்றி சரியாக அறியாமல்.. புத்திமதி சொல்ல வெளிக்கிடக் கூடாது.

நாங்க என்ன செய்தம் என்றதை சொல்ல வேண்டிய அவசியம் எனக்கு கிடையாது. ஆனால் அதை தேசத்தில் ஓரிருவராவது அறிந்திருக்கிறார்கள் அது போதும்.

எங்களின் கல்விக்காக நாங்கள் தான் கஸ்டப்பட்டோமே தவிர மற்றவர்களின் சாவை துன்பத்தைக் காட்டி நாங்கள் கல்வி பெறவில்லை. எங்கள் முயற்சிக்கு வெற்றிக்கு வழங்கப்பட்ட சலுகைகள் தான் இன்றும் எமக்கு உதவி இருக்கிறது. மற்றவர்களின் வாழ்வில் நாங்கள் சலுகை பெறவில்லை. அல்லது மற்றவர்களை சார்ந்து வாழ வந்தவர்களும் அல்ல. அப்படிப்பட்ட எம்மை யாரும் இதைச் செய் என்று சொல்ல முடியாது. இருந்தும் நாம் சொல்கிறோம்.. நாங்கள் தொடர்ந்தும் தேசத்துக்கு அவசியமானதை செய்வோம்.. செய்து கொண்டே இருப்போம் என்பதை.

தேசத்தின் துயரை காட்டி அசைலம் அடிக்க எமக்கு தெரியாது என்றில்லை. ஆனால் செய்யக் கூடாது அதை தேசத்திற்கு செய்யும் துரோகம் என்றே நாங்கள் நினைகிறோம். முதலில் நீங்கள் (தமிழர்களில் பலர்) எல்லாம் தேசத்தின் துயரை வைத்து உங்கள் வாழ்க்கையை வளமூட்ட நின்றதை எண்ணிப் பாருங்கள். மனச்சாட்சியை தட்டிக் கேட்டுப் பாருங்கள். ஆனால் நாம் அதற்கு இடமளிக்கவில்லை. அதுவும் தேசத்துக்குச் செய்த பெரிய கடமை தான்..! தேசத்தை போராட்டத்தை எங்களின் நலனுக்காக நாங்கள் ஒருபோதும் பாவித்ததில்லை. ஆனால் அது தந்த வலிகளை வேதனைகளை கஸ்டங்களை சுமந்திருக்கிறோம். ஆகவே எம்மை யாரும் கேள்வி கேட்க முடியாது. கேள்வி கேட்கப்பட வேண்டியவர்களுக்குள் நிச்சயம் நாம் அடங்கமாட்டோம்.

நீங்கள் அசேலம் அடிக்காதவராய் இருக்கலாம் ஆனால் எத்தனை வருடம் நான் மாணவ விசாவில் வந்தனான் எனச் சொல்லிக் கொண்டு இருப்பீங்கள்...10 வருடம் போனால் அவனாகவே தூக்கி விசாவைத் தரப் போறான் விசா கிடைத்ததும் ஊருக்குப் போக வா போறீங்கள்? இன்னும் படிக்க கிடக்குது ஆராய்ச்சி முடியவில்லை எனச் சொல்லி நீங்களும் பிரிட்டன் குடிமகன் ஆகத் தான் போறீங்கள்...என்னுடைய மனசாட்சியைக் கேட்டால் நான் போராட்டத்தை ஒரு நாளும் என்னுடைய சுயநலத்திற்காய் பாவிக்கவில்லை...நீங்கள் உங்கள் முழுத் திறமையில் தான் படித்து வந்திங்கள் இல்லை எனச் சொல்லவில்லை ஆனால் உங்களோட சேர்ந்து படித்த அரைவாசி மாணவர் கொல்லப்பட,அரைவாசிப் பேர் இயக்கத்திற்கு போக நீங்கள் மட்டும் தப்பி வந்து போட்டு நான் அது செய்தனான்,இது செய்து கொண்டு இருக்கிறேன் என சொல்லலாம்[இங்கு இருந்து காசு அனுப்புவதை விட வேறு என்ன செய்திருப்பீங்கள்!...நான் ஏற்கனவே எழுதின மாதிரி உயிரைக் கொடுப்பவர்கள் அங்குள்ளவர்கள் இங்கிருந்து முகத்தை மறைத்து அவன் எதிரி,இவன் துரோகி என எழுதலாம் அதைத் தான் நீங்கள் செய்து கொண்டு இருக்கிறீங்கள்.

பேராசிரியர் துரைராஜா மட்டும் இல்லை எனக்குத் தெரிந்து வெளிநாடுகளில் படித்து பட்டம் பெற்ற பல பேராசிரியர்கள், ஊரில் எழிமையான வாழ்க்கை வாழ்ந்த படியும், மாணவர் சமுதாயத்தை முன்னேற்றி விட்டுள்ளார்கள் என்பது நான் கண்முன்னே கண்ட உண்மை! இதைக் கூறிய நெடுக்குக்கு அவர்களிடம் படித்து தற்போது பலர் அவர்கள் காட்டிய வழி போல் இளைய தலைமுறைக்குக் கல்வி கற்பிக்கும் மாணவர் சார்பில் பல ஆயிரம் பச்சைப் புள்ளிகள் போடலாம். :D (இருந்த ஒன்றை போட்டுளேன்)

குட்டி துரைராஜா அங்கு இருந்து சேவை செய்கிறார் அதை ஒருதரும் இல்லை எனச் சொல்லவில்லை ஆனால் துரைராஜாவை மாதிரி எல்லோரும் அங்கு இருந்து சேவை செய்ய வேண்டும் என நாட்டை விட்டு மாணவ விசாவில் வந்து பல வருடங்களாய் படித்துக் கொண்டு இங்கு இருப்பவர்கள் சொல்ல இயலாது அது தான் எனது கருத்து...நெடுக்ஸ் தான் சொன்ன கருத்துகளை ஊரில் இருந்து கொண்டு சொல்லி இருந்தால் அதை வரவேற்கும் முதல் ஆளாக நான் இருப்பேன்...நீங்கள் நினைக்கிறீங்களா அவர் நாட்டுக்குப் போய் சேவை செய்வார் என்டு...சொன்னவர்கள் செய்ததாக சரித்திரம் இல்லை...செய்பவர்கள் சொல்வதில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் அசேலம் அடிக்காதவராய் இருக்கலாம் ஆனால் எத்தனை வருடம் நான் மாணவ விசாவில் வந்தனான் எனச் சொல்லிக் கொண்டு இருப்பீங்கள்...10 வருடம் போனால் அவனாகவே தூக்கி விசாவைத் தரப் போறான் விசா கிடைத்ததும் ஊருக்குப் போக வா போறீங்கள்? இன்னும் படிக்க கிடக்குது ஆராய்ச்சி முடியவில்லை எனச் சொல்லி நீங்களும் பிரிட்டன் குடிமகன் ஆகத் தான் போறீங்கள்...என்னுடைய மனசாட்சியைக் கேட்டால் நான் போராட்டத்தை ஒரு நாளும் என்னுடைய சுயநலத்திற்காய் பாவிக்கவில்லை...நீங்கள் உங்கள் முழுத் திறமையில் தான் படித்து வந்திங்கள் இல்லை எனச் சொல்லவில்லை ஆனால் உங்களோட சேர்ந்து படித்த அரைவாசி மாணவர் கொல்லப்பட,அரைவாசிப் பேர் இயக்கத்திற்கு போக நீங்கள் மட்டும் தப்பி வந்து போட்டு நான் அது செய்தனான்,இது செய்து கொண்டு இருக்கிறேன் என சொல்லலாம்[இங்கு இருந்து காசு அனுப்புவதை விட வேறு என்ன செய்திருப்பீங்கள்!...நான் ஏற்கனவே எழுதின மாதிரி உயிரைக் கொடுப்பவர்கள் அங்குள்ளவர்கள் இங்கிருந்து முகத்தை மறைத்து அவன் எதிரி,இவன் துரோகி என எழுதலாம் அதைத் தான் நீங்கள் செய்து கொண்டு இருக்கிறீங்கள்.

அக்கோய் நாங்க இங்க இருக்கனும் என்று நினைச்சிருந்தா அசைலம் அடிச்சு இப்போ நிரந்தர வதிவிட உரிமையும் எடுத்திருக்கலாம். ஆனால் செய்ய விரும்பல்ல. காரணம் தேசத்தைக் காட்டிக் கொடுக்கக் கூடாது என்பதுதான்.

உங்களுக்கு தெரியாது போல.. இயக்கம் படிக்க விரும்பியவர்களை போராட்டத்துக்குள் உள்ளெடுக்கவில்லை. எமக்காக எமது பாடசாலையில் நடத்தப்பட்ட கூட்டத்தில் அவர்கள் சொன்னது தமிழீழத்தின் அத்திவாரமாக தலைவர் கல்விச் சமூகத்தை வளர்த்தெடுக்க விரும்புகிறார். நீங்கள் தென்னிலங்கைக்கு போய் படித்தாலும் மீண்டும் தாய் மண்ணுக்கு வந்து சேவை செய்ய வேண்டும் என்று.

இயக்கம் படிக்க விரும்பியவர்களை போராளியாக இருந்தாலும் சரி பிறராக இருந்தாலும் சரி கட்டாயப்படுத்தி ஆயுதத்தைக் கொடுக்கவில்லை.

யாரும் படிக்காமல் எல்லோரும் இயக்கத்திற்கு வரனும் என்பதும் இயக்கத்தின் கொள்கை அல்ல. அப்படி என்றிருந்தால் யாரும் அகதியாக வெளிநாட்டுக்கு ஓட முடியாமலும் இயக்கம் தடுத்திருக்கலாம். தங்களின் அழிவையும் தவிர்த்திருக்கலாம். ஆனால் அவர்கள் தாங்கள் அழிந்தாலும் நாடு அதாவது தங்கள் கொள்கை நிலைக்கனும் சந்ததி வாழனும் என்று தான் எண்ணினார்களே தவிர.. எதிரிக்கு வால் பிடிக்க சொல்லவில்லை.

அல்லது உங்கள் சுகபோக வாழ்க்கைக்காக தேசத்தைக் காட்டிக் கொடுத்து அசைலம் அடிக்கச் சொல்லவில்லை. படிக்க ஆற்றலுள்ள அனைவரையும் படிக்க இயக்கம் அனுமதித்தது. அதற்கு படிப்பின் பெறுமதி தெரிந்திருந்தது.அதுமடுமன்றி இயக்கமே பலரை வெளிநாட்டுக்கு அனுப்பியும் படிப்பிக்க வைத்தது.

அவுஸ்திரேலியாவில் இருக்கும் சிங்களப் பேராசிரியர் செனிவர்டனவிற்கு இருக்கும் தமிழ் மக்களின் உரிமைப் போராட்டம் தொடர்பான அக்கறை கூட நித்தி போன்ற வேரும் விழுதுகளுக்கும் இல்லை என்பதுதான் எங்களின் உறுதியான நிலைப்பாடு. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கட‌ கருத்தைப் பார்த்தால் படிக்காத முட்டாள்களும்,படிப்பில் அக்கறையில்லாதவர்களும் தான் இயக்கத்திற்குப் போக வேண்டும் போல கிட‌க்குது...மனம் இருந்தால் இட‌ம் உண்டு என ஒரு பழமொழி இருக்குது தீலிபன் அண்ணா போன்றோருக்கு மனம் இருந்தது படிப்பை உதறி விட்டு மக்களே பெரிது என மக்களுக்காய் உயிர் நீத்தார்கள் அதற்காக நீங்கள் ஏன் போய் இயக்கத்தில் சேர‌வில்லை எனக் கேட்க எனக்கு உரிமை இல்லை அதே போல மற்றவர்கள் போய் நாட்டுக்கு ஏன் சேவை செய்யவில்லை என விமர்சிக்க உங்களுக்கும் உரிமை இல்லை என்பதே என் கருத்து...இயக்கம் பல பேரை புலத்திற்கு அனுப்பி படிப்பித்தது இல்லை எனச் சொல்லவில்லை ஆனால் அவர்கள் அனைவருமே நாட்டுக்கு திரும்பிப் போய் விட்டார்கள்...நானும் உங்களைப் பார்த்துக் கேட்கிறேன் நீங்கள் தாய் நாட்டுக்குப் போய் சேவை செய்வீர்களா? ஆம் என்டால் அங்கே போய் சேவை செய்யத் தொட‌ங்கிய பின் மற்றவர்களை விமர்சியுங்கள்...நீங்கள் இங்கே வந்து படிப்பை கார‌ணம் காட்டி இருக்கலாம் ஆனால் நித்தி போன்றோர் மட்டும் ஊருக்குப் போய் சேவை செய்ய வேண்டும்...நீங்கள் இங்கே இருந்து பண உதவி செய்வது மாதிரித் தான் நித்தி போன்றோரும் பண உதவி செய்வார்கள்...நீங்கள் செய்வது உங்களைப் பொறுத்த வரை சரி என்டால் நித்தி செய்வதும் சரி தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கட‌ கருத்தைப் பார்த்தால் படிக்காத முட்டாள்களும்,படிப்பில் அக்கறையில்லாதவர்களும் தான் இயக்கத்திற்குப் போக வேண்டும் போல கிட‌க்குது...மனம் இருந்தால் இட‌ம் உண்டு என ஒரு பழமொழி இருக்குது தீலிபன் அண்ணா போன்றோருக்கு மனம் இருந்தது படிப்பை உதறி விட்டு மக்களே பெரிது என மக்களுக்காய் உயிர் நீத்தார்கள் அதற்காக நீங்கள் ஏன் போய் இயக்கத்தில் சேர‌வில்லை எனக் கேட்க எனக்கு உரிமை இல்லை அதே போல மற்றவர்கள் போய் நாட்டுக்கு ஏன் சேவை செய்யவில்லை என விமர்சிக்க உங்களுக்கும் உரிமை இல்லை என்பதே என் கருத்து...இயக்கம் பல பேரை புலத்திற்கு அனுப்பி படிப்பித்தது இல்லை எனச் சொல்லவில்லை ஆனால் அவர்கள் அனைவருமே நாட்டுக்கு திரும்பிப் போய் விட்டார்கள்...நானும் உங்களைப் பார்த்துக் கேட்கிறேன் நீங்கள் தாய் நாட்டுக்குப் போய் சேவை செய்வீர்களா? ஆம் என்டால் அங்கே போய் சேவை செய்யத் தொட‌ங்கிய பின் மற்றவர்களை விமர்சியுங்கள்...நீங்கள் இங்கே வந்து படிப்பை கார‌ணம் காட்டி இருக்கலாம் ஆனால் நித்தி போன்றோர் மட்டும் ஊருக்குப் போய் சேவை செய்ய வேண்டும்...நீங்கள் இங்கே இருந்து பண உதவி செய்வது மாதிரித் தான் நித்தி போன்றோரும் பண உதவி செய்வார்கள்...நீங்கள் செய்வது உங்களைப் பொறுத்த வரை சரி என்டால் நித்தி செய்வதும் சரி தான்.

அக்கோய் நீங்கள் எனது கருத்தை தவறாக அர்த்தப்படுத்த முனைகிறீர்கள். இயக்கம் படிக்க விரும்பியவர்களை அது போராளியாக இருந்தாலும் சரி பிறராக இருந்தாலும் சரி தடுக்கவில்லை என்பதை சொல்லிவிட்டேன். அதுமட்டுமன்றி இயக்கம் எல்லாப் போராளிகளுக்கும் தேவையான அடிப்படை கல்வியையும் வழங்கி வந்துள்ளது. ஆகவே படிக்காத முட்டாள்கள் தான் போராளிகள் ஆனார்கள் என்பது உங்களின் கற்பனையில் நீங்கள் இயக்கத்தை காட்ட முனையும் கேவலமான எண்ண வெளிப்பாடு. எங்களின் கருத்தை தவறாக அர்த்தப்படுத்தி நீங்கள் உங்களின் இயக்கம் தொடர்பான அபாண்டமான சிந்தனையை வெளிப்படுத்த முனைகிறீர்கள். இதை தவிர்த்துக் கொள்ள முனையுங்கள்.

நாங்கள் பேராசியர்கள் அல்ல. படிப்பவர்கள். நித்தி போன்றோர் படித்து ஒரு நிலையை அடைந்த பின்னும் தாயகம் பற்றி சிந்திக்காதவர்கள். அவர்களை அந்த மண்ணின் வேரும் விழுதுகளும் ஆக்குவதுதான் ஏன் என்று கேட்கிறோம்..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் தவறாக அர்த்தப்படுத்தவில்லை நீங்கள் எழுதினது அந்த மாதிரித் தான் இருக்குது வேணும் என்டால் திரும்ப ஒருக்கால் வாசித்துப் பாருங்கள்...முதலும் ஒரு கவிதையில் நீங்கள் இந்தப் பொருள் படவே எழுதினீர்கள்...எழுதினது நீங்கள் ஆனால் பிழை என் மேல் நல்ல உலகம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கள்ளுக்கடைப் பக்கம் போகாதே

காலைப்பிடித்துக் கெஞ்சுகிறேன்

கண்ணும் புகைந்திடும் நெஞ்சும் வரண்டிடும்

கைகால் உலர்ந்திடும் இந்த கள்ளாலே

ஆச்சி எந்தன் அப்புவும் இந்தக் கடையில் தான்

அடுத்தவீட்டு வாத்தியாரும் கடையில்தான்

விட்டமின் பீ எண்டு வைத்தியரும் சொன்னதாலே

விட்டேனோ கள்ளுக்குடியை நான்

பாவிப் பயலே கொஞ்சம் கேளடா

பாலூட்டி வளர்த்த நானுன் தாயடா

பற்றி எரியுதெந்தன் வயிறடா

பனங்கள்ளை மறந்து நீயும் வாழடா

கடவுள் தந்த பனைமரங்கள் தானடா

கடவுள் கள்ளைத் தொட்டதுண்டோ கேளடா

வாய்க்கொழுப்பும் மனத்திமிரும் வளர்ந்துவரும்

உனக்கு நானும் வாலறுக்கும் நாளும் வருமோ

கள்ளுக்குடி உன் குடியைக் கெடுத்திடும்

கடன்காரனாக உன்னை மாற்றிடும்

கண்டகண்ட பழக்கமெல்லாம் பழக்கிடும்

கடைசியில் கட்டையிலே கொண்டு போய்ச் சேர்த்திடும்

கடவுளே என் மகனும் இதனை உணரானோ

கள்ளுக்குடியை விட்டொழிந்து திருந்தானோ

அன்னை சொல்லு கேட்பானென்றால்

ஆறறிவு படைத்த அவனும் பேரறிஞன் ஆகிடுவானே.

கள்ளுக் கொட்டில்லை இந்தப் பாட்டைக் கேட்டுக் கொண்டே கள்ளுக்குடிப்பவர்கள் பலர். :D

இணைப்பிற்கு நன்றி தப்பிலி

வாத்தியார்

**********

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் தவறாக அர்த்தப்படுத்தவில்லை நீங்கள் எழுதினது அந்த மாதிரித் தான் இருக்குது வேணும் என்டால் திரும்ப ஒருக்கால் வாசித்துப் பாருங்கள்...முதலும் ஒரு கவிதையில் நீங்கள் இந்தப் பொருள் படவே எழுதினீர்கள்...எழுதினது நீங்கள் ஆனால் பிழை என் மேல் நல்ல உலகம்

அக்கோய் இதுதான் உங்களின் அண்மைக்கால கருத்தாடல் பாணி. சொல்ல வேண்டியதை எல்லாம் சொல்லிவீர்கள்.. இறுதியில் நீங்கள் எழுதியதையே போய் திரும்பிப்படியுங்கள் என்று சொல்லிவிட்டு எஸ்கேப் ஆகிடுவீர்கள். இப்படி ஒரு அநாவசிய அர்த்தமற்ற கருத்தாடல் அவசியமா உங்களுக்கு.

நித்தி போன்ற சந்தர்ப்பவாத சிங்கள விசுவாச யாழ்ப்பாண மேட்டுக்குடி பைலா பாடர்களுக்கு வேரும் விழுதும் அந்தஸ்து வழங்கப் போய் நீங்கள் இந்த நிலைக்கு ஆகிட்டது கவலைக்குரியது. :D:o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தம்பி இந்த பதிவின் முதலில் இருந்து கடைசி வரைக்கும் சொல்வது ஒன்று தான் நித்தியை விமர்சிக்க உங்களுக்கு எந்த தகுதியும் இல்லை...நான் கேட்ட ஒரு கேள்விக்குமே உங்களிடம் பதில் இல்லை முதலில் அதற்குப் பதில் எழுதுங்கள்...படித்து முடிந்ததும் ஊருக்குப் போவிங்களா? அப்படியாயின் எப்போது பென்சன் எடுத்த பிறகு இறுதி காலத்தை ஊரில் கழிப்பதற்காக?...நீங்கள் உங்கள் வாழ்க்கை பூரா படித்துக் கொண்டு இருப்பீர்கள் ஆனால் மற்றவர்கள் சேவை செய்ய வேண்டும்...முதலில் நித்தியை பற்றி கதைப்பதற்கு உங்களுக்கு தகுதி இருக்கா என உங்களை சுய விமர்சனம் செய்யுங்கள் பிறகு மற்றவர்களை விமர்சிக்கலாம்...நித்தி பாடுவது அவரது தனிப்பட்ட திறமை அதைக் காரணமாய் வைத்து அவரை விமர்சிப்பது உங்களது தனிப்பட்ட எரிச்சலைத் தான் காட்டுகிறது...நித்தி சிங்களவர்களோடு சேர்ந்து பைலா பாடி கூத்தடிச்சாலும் பரவாயில்லை அவரை விமர்சிக்கலாம் ஆனால் தானும்,தன்ட பாடும் என்டும் இருக்கிற மனிசரைப் போய் விமர்சித்துக் கொண்டு.

நடு நிலையாக இருந்து கொண்டு கருத்துக்களை வாசிப்பவர்களுக்கு யார்,எப்படி கருத்து எழுதுவார்கள் என்பது புரியும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தம்பி இந்த பதிவின் முதலில் இருந்து கடைசி வரைக்கும் சொல்வது ஒன்று தான் நித்தியை விமர்சிக்க உங்களுக்கு எந்த தகுதியும் இல்லை...நான் கேட்ட ஒரு கேள்விக்குமே உங்களிடம் பதில் இல்லை முதலில் அதற்குப் பதில் எழுதுங்கள்...படித்து முடிந்ததும் ஊருக்குப் போவிங்களா? அப்படியாயின் எப்போது பென்சன் எடுத்த பிறகு இறுதி காலத்தை ஊரில் கழிப்பதற்காக?...நீங்கள் உங்கள் வாழ்க்கை பூரா படித்துக் கொண்டு இருப்பீர்கள் ஆனால் மற்றவர்கள் சேவை செய்ய வேண்டும்...முதலில் நித்தியை பற்றி கதைப்பதற்கு உங்களுக்கு தகுதி இருக்கா என உங்களை சுய விமர்சனம் செய்யுங்கள் பிறகு மற்றவர்களை விமர்சிக்கலாம்...நித்தி பாடுவது அவரது தனிப்பட்ட திறமை அதைக் காரணமாய் வைத்து அவரை விமர்சிப்பது உங்களது தனிப்பட்ட எரிச்சலைத் தான் காட்டுகிறது...நித்தி சிங்களவர்களோடு சேர்ந்து பைலா பாடி கூத்தடிச்சாலும் பரவாயில்லை அவரை விமர்சிக்கலாம் ஆனால் தானும்,தன்ட பாடும் என்டும் இருக்கிற மனிசரைப் போய் விமர்சித்துக் கொண்டு.

நடு நிலையாக இருந்து கொண்டு கருத்துக்களை வாசிப்பவர்களுக்கு யார்,எப்படி கருத்து எழுதுவார்கள் என்பது புரியும்

அக்கோய் உங்களுக்கு எந்த விடயத்தை கதைக்க வெளிக்கிட்டாலும் ஒரு அடியும் நுனியும் புரியாமல் எழுந்தமானமாகவே கருத்துக்களை வைக்கிறீர்கள். குறைபிடிப்பதையே நிறை என்று நினைக்கிறீர்கள்.

நித்தி என்பவர் ஏதோ விமர்சனத்துக்கு அப்பாற்பட்ட மனிதர் என்பது போலவும் வெளிநாடுகளில் கல்வி கற்கும் எம் போன்றவர்கள் விமர்சனத்துக்கு தகுதியற்றவர்களாகவும்.. வெளிநாட்டுக்கு ஊரின் அவலத்தைக் காட்டி ஓடிவந்த மற்றவர்கள் நித்தியின் காவலர்கள் போலவும் அமைகிறது உங்கள் வாதமும் உங்கள் கருத்தும்.

வெளிநாடுகளில் கல்வி கற்பதென்பது வெளிநாடுகளில் தண்டரா போட்டு குந்தி பிச்சை எடுப்பது போன்றதல்ல. உங்கள் போன்றோருக்கு ஊரில் வாழ வழியில்லாததால் வெளிநாட்டு வாழ்க்கை சொர்க்கமாகத் தெரியலாம். ஆனால் எமக்கு அப்படியல்ல. வெளிநாட்டு வாழ்க்கை தான் சுமையாகத் தெரிகிறது.

நான் நிச்சயம் எனது படிப்பை முடித்து ஊருக்குப் போவேன் என்பதை உங்களுக்கு அடிக்கடி சொல்லிக் கொண்டிருக்கனும் போல. ஏதோ நீங்கள் ஊருக்கு வந்து எங்களைப் போன்றவர்களோடு சேர்ந்து மக்களுக்கு பணி செய்யக் காத்திருப்பது போலவும் அடிக்கட்டி கேட்டுகிறீங்க எப்ப ஊர் போகப் போறாய் என்று. அடுத்தவன் செய்வதை விடுப்புப் பார்த்து கதைக்கிற கூட்டத்தில் ஒருவர் தான் நீங்களும். உங்களுக்கு எங்களிடம் கேள்வி கேட்க முதலில் என்ன தகுதி இருக்கென்று சிந்தியுங்கள்.

நித்தி போன்ற சுயநலவாதிகளை எமது தேசத்தின் வேர்கள் விழுதுகள் என்று காட்டுவதை தான் நான் எதிர்கிறேன். அவர்கள் சிங்கள விசுவாச யாழ்ப்பாண மேட்டுக்குடி சிந்தனையில் வாழ்ந்து இன்று வெளிநாடுகளிலும் அதே நிலையில் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள். எமது தேசம் அந்த நிலையை கடந்து போய் மீண்டும் அந்த நிலைக்கு திருப்பிக் கொண்டிருக்கும் காலத்தில் இவர்களுக்கு புத்துயிர்ப்பு அளிக்கப்படுவது.. ஒரு அபாயகமான விடயமாகவே நான் கருதுகிறேன். இவற்றை நாம் இன்று சுட்டிக்காட்டவில்லை என்றால் நாளை இந்த கொழுத்த இரத்தம் உறுஞ்சும் அட்டைகள் சமூகத்தை விழிப்பூட்டுகிறோம் என்று சமூகத்தில் அனைத்து அநீதிகளும் பெருகும் வரை காத்திருந்துவிட்டு அவர்களின் சந்ததிகளுக்கு விளம்பரம் தேட சமூக அந்தஸ்துப் பெற.. கிட்டாரும் கையுமாகப் புறப்படுவார்கள் அநீதிகளை ஒடுக்கப் புறப்பட்டு விட்டோம் என்ற தோறணையில் பந்தாகாட்ட.. சமூகத்தை ஏமாற்றிப் பிழைப்போட்ட செல்வாக்கு வளர்க்க.

நீங்களும் அவர்களை மக்களின் இரட்சகர்களாக காட்டி வெளிநாடுகளில் இருந்து விசிலடித்துக் கொண்டிருப்பீர்கள். நாங்கள் அப்போ ஊர் திரும்பி கையாலாகமல் சமூகத்தைப் பார்த்து வெறித்துக் கொண்டிருப்போம். இதுதான் புலிகளின் முயற்சிகளுக்கும் நடந்தது. அதை மீள அனுமதிக்கக் கூடாது. முதலில் வெளிநாடுகளில் இருந்து வெட்டி அந்தஸ்தும் பந்தாவும் வளர்க்க முனையும் கூட்டத்தை முறியடிக்க வேண்டும். அப்போதுதான் ஊர் உருப்படுற வழியை தேட முடியும்.

அதற்கு நாங்கள் வெளிநாட்டில் இவர்களோடு இருக்கும் காலத்தை பயன்படுத்த வேண்டும். வெளிநாட்டில் இல்லை என்றால் சொல்லுவீர்கள்.. ஊரில இருந்து வெளிநாடு வர முடியாத ஏமாற்றத்தில கதைக்கினம் என்று வெளிநாட்டில இருந்து சொன்னால் சொல்வீர்கள் ஊர் போய் கதை உனக்கு இங்கிருந்து கதைக்க என்ன தகுதி என்று. எனக்குப் புரியவில்லை.. எங்களைப் பார்த்து தகுதி கேட்க உங்களுக்கு என்ன தகுதி இருக்கென்பதும்.. தான்...???!

எமக்கு நாம் சார்ந்த சமூகத்தில் நடக்கும் அநியாயங்களை சுட்டிக்காட்ட அடிப்படை தகுதி இருக்கு அதனடிப்படையில் இதனைச் சொல்ல முடியும் என்று நினைக்கிறேன். அதைத் தடுக்க உங்களால் முடியாது அக்கோய். போய் வேற வேலை இருந்தா கவனியுங்கோ. :o:D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் மெத்தப் படித்தனீங்கள் நாங்கள் படிக்காத முட்டாள் தான் ஆனால் உங்களை மாதிரி நான் படிக்க வந்தனான் நான் திரும்பி நாட்டுக்குப் போவேன் சேவையாற்ற என நான் ஒருத்தரையும் ஏமாற்றவில்லை :D ...நீங்கள் திரும்ப,திரும்ப படித்தவர்கள் புலம் பெயர்ந்து வர வேண்டும் மேலும் படிப்பதற்கும்,பணம் உழைப்பதற்கும் இங்கு அசேலம் அடிப்பதற்கும்.. படிக்கதாவர்கள் பிழைக்க வழியில்லாமல் காசு உழைக்க வந்தவர்கள் என்னும் தொனியிலேயே உங்கள் கருத்துகள் அமைந்துள்ளன...நித்தி விமர்சனத்திற்கு அப்பால் பட்டவர் என நான் எங்குமே எழுதவில்லை ஆனால் நித்தியை விமர்சிக்க உங்களுக்கு தகுதி இல்லை என்பது தான் கருத்து...நான் முதல் எழுதிய ஒரு பதிவிலேயே எழுதி விட்டேன் எனக்கு உங்களைப் பார்த்து கதைக்கத் தகுதியில்லை அதே போல தான் தானும் தன்ட பாடுமாய் இருக்கிற நித்தியை பற்றி கதைக்கவும் உங்களுக்கு தகுதி இல்லை...புலிகளின் காலத்திலே அவர்கள் நித்தியில் ஏதாவது பிழை பிடித்தார்களா அல்லது தடை செய்தார்களா...உங்களை மாதிரி எத்தனை பேர் இந்த நாளைக்கு போவேன் ஊருக்கு சேவை செய்ய என கதையளப்பார்கள் ஆனால் கடைசிக் காலம் வரைக்கும் இங்கேயே கழிப்பார்கள் கேட்டால் எதாவது நொண்டிச் சாட்டு சொல்வார்கள் என்னும் 10 வருடம் கழுத்து யாழ் இருந்தாலும் நீங்கள் கருத்துக் களத்தில் வந்து இதையே தான் எழுதிக் கொண்டு இருப்பீர்கள்...நித்தி தற்போது பாடுவதுமில்லை,அவர் பாடிய பழைய பாட்டுகளால் சமுதாயம் சீரழிகிறது என்பது அப்பட்டமான உங்கள் எரிச்சலைக் காட்டுகிறது... தமிழர் இதிலும் பார்க்க சீரழிந்த பாட்டுகளையும்,படங்களையும் கேட்கவில்லையா,பார்க்கவில்லையா?...மற்றவர்களில் குறை பிடிப்பது நீங்களா?நானா? நீங்கள் கடைசியாக எழுதிய பதிவிலேயே உங்கள் இயலாமையும்,உங்கள் உண்மையான குணத்தையும் காட்டி விட்டீர்கள் நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் மெத்தப் படித்தனீங்கள் நாங்கள் படிக்காத முட்டாள் தான் ஆனால் உங்களை மாதிரி நான் படிக்க வந்தனான் நான் திரும்பி நாட்டுக்குப் போவேன் சேவையாற்ற என நான் ஒருத்தரையும் ஏமாற்றவில்லை :D ...நீங்கள் திரும்ப,திரும்ப படித்தவர்கள் புலம் பெயர்ந்து வர வேண்டும் மேலும் படிப்பதற்கும்,பணம் உழைப்பதற்கும் இங்கு அசேலம் அடிப்பதற்கும்.. படிக்கதாவர்கள் பிழைக்க வழியில்லாமல் காசு உழைக்க வந்தவர்கள் என்னும் தொனியிலேயே உங்கள் கருத்துகள் அமைந்துள்ளன...நித்தி விமர்சனத்திற்கு அப்பால் பட்டவர் என நான் எங்குமே எழுதவில்லை ஆனால் நித்தியை விமர்சிக்க உங்களுக்கு தகுதி இல்லை என்பது தான் கருத்து...நான் முதல் எழுதிய ஒரு பதிவிலேயே எழுதி விட்டேன் எனக்கு உங்களைப் பார்த்து கதைக்கத் தகுதியில்லை அதே போல தான் தானும் தன்ட பாடுமாய் இருக்கிற நித்தியை பற்றி கதைக்கவும் உங்களுக்கு தகுதி இல்லை...புலிகளின் காலத்திலே அவர்கள் நித்தியில் ஏதாவது பிழை பிடித்தார்களா அல்லது தடை செய்தார்களா...உங்களை மாதிரி எத்தனை பேர் இந்த நாளைக்கு போவேன் ஊருக்கு சேவை செய்ய என கதையளப்பார்கள் ஆனால் கடைசிக் காலம் வரைக்கும் இங்கேயே கழிப்பார்கள் கேட்டால் எதாவது நொண்டிச் சாட்டு சொல்வார்கள் என்னும் 10 வருடம் கழுத்து யாழ் இருந்தாலும் நீங்கள் கருத்துக் களத்தில் வந்து இதையே தான் எழுதிக் கொண்டு இருப்பீர்கள்...நித்தி தற்போது பாடுவதுமில்லை,அவர் பாடிய பழைய பாட்டுகளால் சமுதாயம் சீரழிகிறது என்பது அப்பட்டமான உங்கள் எரிச்சலைக் காட்டுகிறது... தமிழர் இதிலும் பார்க்க சீரழிந்த பாட்டுகளையும்,படங்களையும் கேட்கவில்லையா,பார்க்கவில்லையா?...மற்றவர்களில் குறை பிடிப்பது நீங்களா?நானா? நீங்கள் கடைசியாக எழுதிய பதிவிலேயே உங்கள் இயலாமையும்,உங்கள் உண்மையான குணத்தையும் காட்டி விட்டீர்கள் நன்றி

அக்கோய் உண்மையிலேயே நீங்கள் ஒரு முட்டாள் தான் என்பதை சொல்லாமல் சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள். நான் இங்கு எழுதிக் கொண்டிருப்பது நித்தி எந்த வகையில் வேரும் விழுதுக்கும் சொந்தக்காரர் ஆகிறார் என்பதுதான். பைலா என்பது எமக்கான இசை வடிவமும் அல்ல.. எமது விழுமியம் சார்ந்ததும் அல்ல. பைலா பிரபல்யமான காலத்தில் அவர்கள் தங்களை வெளிப்படுத்த அந்த இசையை தமிழிலும் பாவித்தார்கள் அவ்வளவே. அதுமட்டுமன்றி அவர்கள் சிறீலங்கா மாதாவை போற்றி பாடல்களை பாடி இருக்கின்றனர். அதுவும் உங்களைப் போன்றவர்களுக்கு மகிழ்ச்சியான விடயமே..!

நித்தி வேரும் விழுதுகள் பகுதிக்கு தகுதியானவரா என்பதுதான் கேள்வியே. அவரின் பாடலை பொழுதுபோக்கில் போட்டுக் கேளுங்கள் யாரும் அதைப் பற்றி பேசப் போவதில்லை.

நீங்கள் உங்கள் கற்பனைக்கு ஏற்ற மாதிரி நீ ஊருக்குப் போவியா போக மாட்டியா என்று எழுதுவீர்கள். நான் அதற்கு ஊருக்குப் போகும் திகதி நேரம் குறிப்பிட்டு இங்கு பதில் எழுதனும் என்ற உங்களின் எதிர்பார்ப்பையே அக்கா உங்களின் முட்டாள் தனம் எங்கிறேன். நித்தி போன்றவர்கள் வெளிநாடுகளில் போய் வாழட்டும் ஏதாவது செய்யட்டும். அவர்களை எமக்கான வேரும் விழுதுகளுமாகக் காட்டுவதற்கு அவர்கள் சரியான ஆட்களில்லை.

புலிகள் வெளிநாட்டுக்கு ஓடிப் போன இவர்களைப் பற்றி கதைப்பதில்லை. மாறாக எமக்கான போராட்ட இசை வடிவங்களை அவர்கள் உருவாக்கினார்கள். அவர்கள் இவர்களின் கையை எதிர்பார்த்திருக்கவில்லை. மாறாக கலைஞர்களை உருவாக்கினார்கள். ஒருவேளை புலிகள் இவர்களை நம்பி இருந்தால் நிச்சயம் அங்கும் ஏமாந்திருப்பார்கள் என்பதில் மறு கருத்திருக்க முடியாது.

இவர்களின் பாடல்களைக் கேட்டு யாரும் கள்ளுக்கடைக்குப் போகாமல் விட்டதாக தெரியவில்லை. ஆனால் போராட்ட காலத்தில் புலிகள் பல சமூக மாற்றங்களைக் கொணர்ந்தனர். அவர்களின் அந்த வெற்றிகளை இவர்களால் ஏன் பாடமுடியவில்லை..??! அவ்வளவு சமூக அக்கறை உள்ளவர்கள் ஏன்.. போராட்ட கால பதிவுகளை செய்ய முன் வரவில்லை...???!

நீங்கள் இவர்களை ஏதோ சமூக அக்கறையில் பாடியதாக காட்ட முனைகிறீர்கள்.. ஆனால் அவர்களோ தாம் தென்னிலங்கையில் ஓரங்கட்டபட்ட நிலையில்.. யாழ்ப்பாணத்தில் குறிப்பாக பரியோவான் கல்லூரியில் இருந்து இந்த இசைக்கு வந்ததாக முன்னர் குறிப்பிட்டுள்ளனர். அப்படி இருந்தும் அவர்களை சமூக அக்கறையுள்ள பாடகர்களாக சித்தரிக்க முனைகிறீர்கள். அதுதான் வேடிக்கையாக இருக்கிறது.

தமக்கான சமூக அங்கீகாரம் நோக்கி அவர்கள் இவ்வாறான பாடல்களை பாடினார்களே தவிர.. சமூக அக்கறையில் அவர்கள் பாடகர்களானதாகத் தெரியவில்லை. அப்படி இருப்பின்.. அவர்களின் அந்தப் பணி போராட்ட இலக்கியங்களாகவும் பதியப்பட்டிருக்கும்..!

எதையும் எழுத முதல் சிந்தியுங்கள் அக்கா. உங்களிடம் சிந்தனை சக்தி வரண்டுகிறக்கிறது. மாறாக வக்காளத்து வாங்கும் நிலை வளர்ந்து கிடக்கிறது. :):o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சில பேர் எவ்வளவு தான் படித்திருந்தும் சில நேரங்களீல் முட்டாள்கள் மாதிரித் தான் சிந்திப்பார்கள் அவர்களோடு கருத்தாடிப் பயனில்லை :D வீணாக என் நேரத்தை செலவழித்தது தான் மிச்சம்..சாந்தன் முந்தி புலிகளூக்காய் பாட்டுப் பாடினார் கொஞ்ச நாள் போக சிங்கள பாட்டு பாடுவார் அவரும் கொஞ்ச நாள் போக வேரும் விழுதுக்கு எதிரியாகப் போகப் போகிறார்...நாங்கள் இங்கே சொகுசாய் வாழ்ந்து கொண்டு எல்லோரையும் எதிரியாக்குவோம்...நான் இங்கே இருந்து கொண்டு நான் இந்த விசாவில தான் லண்டனுக்கு வந்தனான் திரும்பி போய் ஊருக்கு சேவை செய்வேன் என எங்குமே புழுகவில்லை நீங்கள் தான் யாழில் அதையே திரும்ப,திரும்ப சொல்லிக் கொண்டு இருக்கிறீங்கள்...அண்மையிலும் 1வருடத்திற்கும் முன்பும் அரசியல் சம்மந்தமான பதிவில் தயா அண்ணாவோடும் இதை வைத்து தான் மல்லுக் கட்டினீங்கள்[நான் மாணவ விசாவில் வந்தனான் என்டு]...90% மாணவ விசாவில் வந்து தான் அசேலம் அடித்து உள்ளார்கள்...உங்கள் கல்வி சார்ந்து நீங்கள் கெட்டிக்காரராய் இருக்கலாம் அதற்காக மற்றவர் முட்டாள் இல்லை...நன்றீ வணக்கம் :o

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.