Jump to content

இந்திய மனைவி திவ்யமதி.


Recommended Posts

இந்திய மனைவி திவ்யமதி.

ஞாபகமிருக்கா என்னை... ? கேள்வியாலேயே என் கண்களை ஊடுருவிச் சிரித்தாள். என் ஞாபகக்கிடக்கையில் எங்கும் அவளை அறிந்தததற்கான தடயங்கள் எதுவுமில்லை. பிள்ளைகள் எப்பிடியிருக்கினம் ? உன்னுடைய கணவர் இப்பவும் ஒரே வேலைதானோ ? இப்ப உனக்கு 34வயதெல்லோ உன்ரை பிறந்தநாள் யூன் பதினாறெல்லோ ? என்னை அறிந்து பலநாள் பழகியவள் போல தொடர்ந்தாள் அவள். அருகிலிருந்த எல்லோரும் என்னைத்தான் ஒருமாதிரியாகப் பார்த்தார்கள்.

நான் திவ்யமதி. 5வருசத்துக்கு முதல் உந்த நடைபாதையில சந்திச்சனான். அவள்தான் தன்னை அடையாளம் சொல்லி எனது பழைய பறணிலிருந்து புறப்பட்டாள். 'இப்போது நினைவில் அவள்....

எண்ணை வழியும் தலையும் ஒரு நூல்கிளம்பிய பஞ்சாபியோடும் ஒற்றைத் தோற்பையோடும் 'எனக்கு இங்கை ஒருதருமில்லையென அழுதபடி என்னைச் சந்தித்த அவளா இவள் ? ஆச்சரியத்தால் அசந்து போனேன்.

5வருடம் முதல் அதுவொரு கோடைகாலம். நெரிசல் நிறைந்த கடைகளும் மனிதர்களும் நிறைந்த நடைபாதையின் ஒரு தொடக்கத்திலிருந்து அடுத்த முடிவுவரை கிட்டத்தட்ட 2மணித்தியாலங்கள் அங்குமிங்கும் நடந்து திரிந்தாள் ஒருத்தி. ஏதோ தனக்குள் முணுமுணுத்தபடி அங்குமிங்கும் திரிந்தாள். பார்க்கும் கண்களில் தலைபிழைச்ச ஆளோ என எண்ணும்படிதான் அவளது நடையும் முணுமுணுப்பும் இருந்தது. நகர் மத்தியில் புடவைக்கடையொன்றின் வாசலில் கட்டப்பட்டிருந்த குழந்தைகள் காசுபோட்டு ஏறும் குதிரையில் பிள்ளைகளை ஏற்றியிறக்கிக் கொண்டிருக்க....திடீரென நீ இந்தியாவா ? என்ற அந்தக் குரலுக்குரியவளை நிமிர்ந்து பார்த்தேன்.

நான் இந்தியா இல்லை இலங்கை ? அப்ப நான் தனியத்தான் எனக்கொருதருமில்லை. என்று சொல்லியபடி போனவள் திரும்பி வந்து 'எனக்கு உதவி செய்வியா ? என்றதும் பயத்தோடுதான் அவளைப் பார்த்தேன். இந்த நகரின் மூலையெங்கும் திரியும் விஸ்கிக் கிழவன் மாதிரி இவளுக்கும் விசரோ ? என்றுதான் நினைக்கத் தோன்றியது.

அந்தக் கடையொன்றின் வாசலுக்குச் சற்றுத் தள்ளி அமைக்கப்பட்டிருந்த வட்டவடிவான இருக்கையில் போயிருந்து அழுதாள். அந்த வழியால் போய் வந்த யேர்மனியர்கள் ஒருவரும் அவளைப் பார்க்கமாலே போனார்கள். அவளது நிலை சிலவேளை வீதிகளில் கோப்பிக்கப்களோடு பிச்சை கேட்கும் பிச்சைக்காரியென நினைத்தார்களோ என்னவோ. அவளுக்குச் சற்றுத் தள்ளியிருந்துவிட்டு எழுந்து போன வயோதிபச்சோடிகள் அவளுக்கு முன்னால் 2யூரோவை வைத்துவிட்டுப் போனார்கள்.

குதிரை ஓடி முடிந்து பிள்ளைகள் அந்தக் கதிரைகளைச் சுற்றி ஓடி விளையாடிக் கொண்டிருக்க அவளுக்குச் சற்றுத் தள்ளி நானும் போயிருக்கிறேன். நீ கிந்தி கதைப்பியா ? தானே மீண்டும் வந்து கேட்டாள். இல்லை நான் இலங்கைத்தமிழ் என்றேன். எனக்கு உதவி செய். எனக்கிப்ப என்ரை அம்மா அக்காவோடை கதைக்க வேணும் என கண்களைத் துடைத்துக் கொண்டு அருகில் வந்திருந்தாள். அவளுக்கு விசரில்லையென்பதை அவளே தனது கதையால் மெய்ப்பித்தாள்.

வீட்டுக்குள் வந்ததும் முதலில் தொலைபேசியைத்தான் கேட்டாள். கையில் வைத்திருந்த 2காட்டையும் சுரண்டி ஏதோ காச்சு மூச்சென அழுதழுது கதைத்தாள். திடீரென தொலைபேசியைத் துண்டித்துவிட்டு நான் போட்டுக்கொடுத்த தேனீரையும் குடித்து வாய்ப்பனையும் சாப்பிட்டாள். உறைப்புக் கறியுடன் சோறுசாப்பிட ஆசையென்று ஒருகதையையும் போட்டு வைத்துவிட்டு மீண்டும் தொலைபேசியில் அழத்தொடங்கியவள் என்னிடம் தொலைபேசியைத் தந்தாள். மறுக்க மனமின்றி தொலைபேசியை வாங்கி காதில் வைத்தேன். மறுமுனையில் ஒரு பெண்ணின் குரல்.பாதித்தமிழ் பாதி ஆங்கிலம் கலந்து என்னோடு கதைத்தாள் அந்தப்பெண். 13வருடங்கள் தமிழ்நாட்டில் வேலைபார்ப்பதாகவும் அங்கிருந்தே தமிழை ஓரளவு பேசக்கற்றுக் கொண்டதாகவும் சொல்லித் தன்னை அறிமுகப்படுத்தினாள் அவள்.

திவ்யமதி அவளது சகோதரி என்பதும் இந்தியாவிலிருந்து ஒரு யேர்மனியன் இவளைத் திருமணம் செய்து வந்ததும் அவனது தொல்லைகள் தாங்காமல் இவள் தனித்து பெண்கள் விடுதியில் இருப்பதும் தெரியவந்தது.

அரசியல் கட்சியொன்றில் பணியாளனாக இருந்த அவளது கணவன் காரணம் தெரியாமல் கொலைசெய்யப்பட்டு வெள்ளைத் துணி போர்த்தியபடி கட்சித் தொண்டர்கள் கொண்டு வந்து மாலைபோட்டு மரணவீடு கொண்டாடி அவளிடமிருந்து ஒவ்வொன்றாய் பறிக்கப்பட்ட பொட்டு , பூ , புடவையெல்லாம் பறிபோய் கணவனின் தம்பி வாழ்வு தருகிறேன் என்றதை உதறிவிட்டு கன்னடத்திற்கு போயிருந்தாள் திவ்யமதி.

இறந்து போன கணவனின் பழைய படங்களைப் பார்ப்பதும் அழுவதுமாக 4வருடத்தை ஏனோ தானோவெனக் கரைத்தவள் 8வயதான தனது ஒரு மகளுக்காகவே இனி வாழ வேண்டும் என்ற வைராக்கியத்தோடு கன்னடத்திற்குப் போனாளாம். தோழியொருத்தி மூலம் விடுதியொன்றில் பணிப்பெண்ணாக வேலையும் கிடைத்தது.

வெளிநாட்டவர்கள் வந்துபோகும் அந்த இடத்திற்கு 55வயதான இவளது இன்றைய யேர்மன் கணவனும் கோடைகால விடுமுறையொன்றுக்குப் போயிருந்த போது அங்கு பணிபுரிந்த ஒருவனால் இவளுக்கு அறிமுகப்படுத்தப்பட்டான் அவனது வெள்ளைக்கணவன். யேர்மன் மொழியில் ஒரு சொல்லும் தெரியாதவள் திவ்யமதி. ஆங்கிலத்தில் ஓம் இல்லை என்பதற்கும் அதைவிட்டால் ஓரிரண்டு ஆங்கிலச் சொற்களையே தெரிந்தவன் அவன். இடையில் மொழித்தரகனாக நின்றவன் சொல்லிச்சொல்லி அவளை யேர்மனியனைத் திருமணம் முடிக்கச் சம்மதம் பெற்றுக் கொடுத்தான். இடையில் தடையாய் நின்ற மொழியையும் யேர்மனி போனால் படித்துவிடலாம் என அவன் சொன்ன தைரியத்தை நம்பி உறவுகளுக்கும் சொல்லாமல் அவனோடு திருமண எழுத்தை முடித்து 5மாதத்தில் யேர்மனி வந்து சேர்ந்தாள்.

தனது மகளின் எதிர்காலம் வண்ண வண்ண மலர்களால் சூழப்பட்டு அவள் ஒரு இராஜகுமாரியாக வலம்வருவாள் என்ற கனவில் தனது கற்பனையில் வந்து சேர்ந்தாள். நிலமையோ தலைகீழ் அல்ல அதனினும் மேலாய் உலகவரைபடத்தில் அவள் பார்த்த நிலமெல்லாம் உருண்டு திரண்டு வந்து தன்னை அழுத்துவது போல நம்பிக்கைகள் சிதைந்து உடைந்து போனாள்.

அவனது தேவைகளுக்காக மட்டும் அவள். மற்றும்படி அவன் டிஸ்கோ போய்வரும்வரை காத்திருந்து , அவனுக்கு வைன் குடிக்கவோ சிகரெட் பிடிக்கவோ விரும்பும் தருணங்களில் அதையெல்லாம் எடுத்துக் கொடுத்துக் கொள்வதையே அவளது கடமையெனக் கருதினான் அவன்.

அவளது ஒரே மகளுக்கு செஞ்சிலுவைச்சங்கத்தில் போய் பழைய உடுப்புக்கள் எடுத்து வந்து கொடுத்தான். அவளுக்கும் தான். நான் குடுத்து வைச்சவன். ஒரு இந்திய மனைவி கிடைச்சதையிட்டு நான் பெருமைப்படுகிறேன் என போதையில் உளறுவான். பெண் கட்டாயம் வேலைக்குப் போக வேண்டும் என்று தான் விரும்புவதாய்ச் சொன்னவன் ஒரு உணவகத்தில் துப்பரவுப் பணியாளாக்கினான். சம்பளத்தை மட்டும் தனது வங்கிக்கணக்கில் விட்டு அதிலும் ஒரு சதமும் அவளுக்கோ அவளது மகளுக்கோ சிந்தாமல் பார்த்துக் கொண்டான்.

உன்னையும் உன்ரை மகளையும் கூப்பிட்டதுக்காக நானெடுத்த கடன் இன்னும் முடியேல்ல....எனச் சொல்லிக் கொள்வான். அவள் நினைத்தது ஏதோ நடந்தது ஏதோவாக....அவளால் இயலாத மாதவிடாய் நேரங்களில் கூட அவனுடன் படுத்துச்சாக வேண்டிய தொல்லைக்குள் அவள். சாகும் தருணம் வரும்வரை அவள் ரணமாகிக்கிடந்தாள். அடிக்கடி மருத்துவமனையும் அவளது நாட்களுமாக சில வருடங்கள் போயொதுங்கியது.

சின்னவளாய் அவளோடு ஒட்டித்திரிந்த மகள் பூப்படைந்துவிட்டாள். தனித்து அவன் நிற்கும் நேரங்களில் அவள் அம்மா இல்லாமல் நிற்க அச்சப்பட்டாள். அம்மா வா நாங்க இந்தியாவுக்கே போவோம் என்று அழுவாள். தனது நண்பிகளுடன் சினிமாவுக்குப் போவதாக நண்பிகளின் வீடுகளுக்குச் செல்வதாக சொல்லிப் பலநாள் வீட்டுக்கே வராமிலிருந்திருக்கிறாள்.

நாட்கள் செல்லச் செல்ல பாடசாலையிலிருந்து அழைப்புக்கள் வந்தது. அவளது ஒற்றைச் செல்ல மகள் பாடசாலைக்குப் போவதில்லை போதைமருந்து டிஸ்கோவென அலைவதாக. ஒருநாள் இரவு 7மணிபோல் வீட்டுக் கதவை காவல்துறை தட்டும் வரையும் தனது மகள் பற்றி எதையுமே அவள் அறியாமல்தானிருந்தாள். போதைவஸ்து விற்றதில் பிடித்ததாக ஒருநாள் காவல்துறை அவளைக்கைது செய்து கொண்டு போனதோடு இவளது உலகம் தலைகீழாகியது. அவளது அழகான பூங்காக்கள் நிறைந்த மாளிகையின் இராஜகுமாரியின் வில்லுவண்டில் உடைந்து நொருங்க அவளது மகளை அவள் இழந்து போனாள்.

துக்கம் மகளைப் பிரிந்த இயலாமையென தன்மீது கோபம் வரும் போதெல்லாம் யேர்மனியக் கணவனுடன் வாய்த்தர்க்கத்தில் மல்லுக்கு நிற்பாள். இந்திய மனைவி கிடைத்ததற்காக பெருமைப்படுவதாகச் சொன்னவன் சிகரெட்டால் சுடுவது கையில் கிடைப்பதால் அவளைக்காயப்படுத்துவது என ஆசியக்கணவனின் ஆயுதத்தைக் கையிலெடுத்தான்.

எல்லாம் தன் கைகளை விட்டுப்போய்விட்டதான ஏக்கம். மனசெல்லாம் சல்லடையாய் போயிருக்க அவன் விரும்பும் தருணங்களில் அவனுடன் ஒன்றாயிருக்க வேண்டிய நரகம் அவளுக்கு. குருதிப்போக்கு அதிகரித்து தொடர்ந்து இயங்க முடியாத நிலையிலும் அவனோடு உடன்பட்டு ஆகவேண்டிய தொல்லை. பொழுது இருள் போர்த்தினால் இவளுக்கு பேய்களும் பிசாசுகளும் சுற்றுவது போல.

இறுதியில் ஒருநாள் அவன் இல்லாத நேரமாகப் பார்த்து அயல் வீட்டுக்குள் அடைக்கலம் புகுந்தாள். அவர்கள் சேர்த்து விட்டதே பெண்கள் விடுதி நிலையம். மகளுமில்லை மனதில் நிம்மதியுமில்லாமல் தனித்துப் போனாள் திவ்யமதி.

அன்றைய சந்திப்பின் பின் அடிக்கடி வீட்டுக்கு வருவாள். பிள்ளைகளுடன் விளையாடுவாள். என்னவனுடன் கதைப்பாள். நீ என்ரை தம்பியைப்போல என்பாள். நீ எனக்குக் கடவுள் என கண்கள் பனிக்க என்னைக் கட்டியழுவாள். ஒருநாள் தொலைபேசியெடுத்துச் சொன்னாள் மருத்துவமனையில் இருப்பதாக நானும் என்னவனும் போய்ப்பார்த்தோம். தனது அக்காவின் தொலைபேசியிலக்கத்தைத் தந்து தகவல் சொல்லச் சொன்னாள். தலைக்குள் ஏதோ செய்வதாகவும் தற்கொலை பண்ண வேண்டும் போலிருப்பதாகவும் சொல்லியழுதாள். அவளை ஆற்றவோ தேற்றவோ வார்த்தைகளற்று நாங்கள் இருவரும்.....

2நாள் கழித்து மீளவும் மருத்துவமனை போனோம். திவ்யமதி அங்கில்லை. அவளை அவளது கணவன் கூட்டிக்கொண்டு போய்விட்டதாகச் சொன்னார்கள். தொடர்புக்கு இலக்கம் எதுவும் கொடுக்காமல் போய்விட்டாள்.

பின்னர் ஒருதரம் தொடர்பு கொண்டு சொன்னாள். தனது கணவன் ஒற்றுமையாக வந்து கேட்டதில் தானும் சம்மதித்துப் போனதாக. இப்ப பிரச்சனையில்லையென்றாள். ஒருமாதம் கடந்த நிலையில் யூன்பதினாறு ஒரு பாசல் வந்தது. அதில் எனக்குப் பிறந்தநாள் வாழ்த்தும் பிள்ளைகளுக்கு இரண்டு ரீசேட்டும் என்னவனுக்கு ஒரு ரீசேட்டும். அது திவ்யமதியிடமிருந்து வந்திருந்தது. அவள் தந்த தொலைபேசியிலக்கத்தை அழுத்தினேன் நன்றி சொல்ல. அவளது தொலைபேசி தொடர்பு துண்டிக்கப்பட்டிருந்தது.

எப்போதாவது இவள் நினைவில் வருவாள் நானும் என்னவனும் அவளைப்பற்றிக் கதைப்போம். அவள் எங்காவது நலமோடு இருக்க வேண்டும் என்ற எனது பிரார்த்தனை இருக்கும். அதற்கும் அப்பால் வேறெதையும் செய்ய முடியாதிருந்தது. பெண்கள் விடுதியிலும் அவள் பற்றிய எந்தவித பதிவுகளும் இல்லாமல் போயிருந்தது.

இத்தனைக்குப் பின் இன்று என் முன் நின்று என் ஞாபகத்தை கிழறிவிட்டுள்ளாள் அன்றைப்போல்... மருத்துவமனையொன்றில் தாதியாக இருப்பதாகவும் யேர்மனியக் கணவனிடமிருந்து விவாகரத்து வாங்கிவிட்டதாகவும் சொன்னாள். தனக்குத் தெரிந்த ஒரு இலங்கைத் தமிழ்ப் பெண்ணைப் பற்றி ஏதோ சொல்ல வேண்டும் என அந்தக்கூட்டத்தை விட்டு சற்றுத் தள்ளி அழைத்துப் போனாள்.

அந்த இலங்கைத் தமிழச்சிக்கும் அவளது கணவனுக்கும் நெடுகலும் பிரச்சனையாம். அவளை அவன் மிருகத்தனமாக அடிப்பானாம். அந்தப்பெண்ணின் மகளின் தோழியாயிருந்த 18வயது யேர்மனியப் பெண்ணோடு தொடர்பாம். இது பற்றி அவள் விசாரித்ததில் அவனுக்குக் கோபம் வந்து அந்தப்பெண்ணின் பெண்ணுறுப்பில் தும்புத்தடியால் குற்றி அடித்திருக்கிறான். இதை வெளியில் சொல்ல வெட்கப்பட்டு மறைத்து வைத்திருக்கிறாள். முதல் நாள் கடைவீதியில் கண்டவள் திடீரென மருத்துவமனையில் என்றதைக் கேட்டு திவ்யமதி போயிருந்தாள் அவளைப் பார்க்க.அப்போதே இந்த அவலத்தை அந்தத் தமிழச்சி இவளுக்குச் சொல்லியழுதிருக்கிறாள்.

அவளின்ரை மகள் நல்லவடிவான பிள்ளை. என்ரை மகளைப் போலயிருக்கிறாள். அவள் பாவம். அவளுக்காகக் கட்டாயம் உதவ வேணும். பொலிஸ் இப்ப அந்தப்பிள்ளையை அவேடை வீட்டிலை விடாமல் இளையோர் பராமரிப்பிடத்திற்கு அனுப்பியிருக்கு. விசர் பிடிச்சாக்கள் மாதிரி தாயைப்பாக்க வருவாள். பிறகு அழுதபடி போயிடுவாள் என்றாள் திவ்யமதி.

கேட்கவே உயிர் வலித்தது. மனசெல்லாம் ரணமாகி அவளுக்காக அழுதது விழிகள். உன்ர மகள் எங்கே ? கேட்ட எனக்கு தனது மகளைப்பற்றி எதையும் சொல்லாமல் கண்ணீர் விட்டாள். அவளது இராஜகுமாரி பற்றிய அவளது கனவுகள் பொடியாகி....கண்ணீர் மட்டும் மீதமாக....திவ்யமதி.

வீடு வந்து நெடு நேரமாகியும் திவ்யமதி சொன்ன தமிழச்சியின் நினைவாகவே இருந்தது.

09.07.2008

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்களுக்கு தான் ஊரில இருக்க முடியாது. சிங்கள அரசின் கொடுமைகளுக்கு தப்பி வெளினாடுகளுக்கு வருகிறோம். ஆனால் இந்தியர்களுக்கு அவர்களின் நாட்டில உயிரோட சுதந்திரத்தோட வாழலாம். அதை விட்டு விட்டு வெளினாடுகளுக்கு வந்து சீரளியும் இந்தியப் பெண்கள் பலர் இருக்கிறார்கள். இங்கு அவுஸ்திரெலியாவில் கல்வி கற்க பல இந்தியர்கள் வருகிறார்கள். படித்து முடித்தால் அவுஸ்திரெலியாக் குடியுரிமை கிடைக்கும் என்ற கனவுடன் வருகிறார்கள். படிப்பதற்கு அதிக பணம் தேவை. அவுஸ்திரெலியச்சட்டத்துக்கு முரணனா முறையில் பணம் சம்பாதிக்கிறார்கள் பல இந்தியர்கள். அதிலும் சில வட இந்தியப் பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுபட்டு பணத்தை சம்பாதிக்கிறார்கள். இந்தியாவில் படிக்க முடியாதா?.

Link to comment
Share on other sites

பதிவு மிகவும் நன்றாயுள்ளது. "நாற்பத்தியேழுநாட்கள் "திரைப்படத்தை அறிவும் அனுபவமும் கலந்து மிகத்திறமையாய் றீமேக் செய்ததோ என்று எண்ணத் தோன்றுகின்றது.

ஒரு சிறு ஆதங்கம். பிறரின் உணர்வுகளை உங்களதாக உள்வாங்கக் கூடியதும், உள்வாங்கியதைத் தத்ரூபமாய்ச் சொல்லக்கூடியதுமான தன்மை பெற்றுள்ளீர்கள். இந்தப் பெண்ணின் கதை கூட உங்களின் இத்தன்மைக்கு எடுத்துக் காட்டு. இருப்பினும், மனவியாதி தொடர்பில் நீங்கள் இக்கதையில் பேசிய இடங்களில் எல்லாம், அவை பற்றிய உங்களது விபரிப்புக்களில் எல்லாம், எமது சமூகத்தில் மனவியாதிகள் பற்றிப் புரையோடிப்போயிருக்கும் அறியாமை உங்களிலும் வெளிப்படுவது உறுத்துகிறது.

இது பற்றி நான் பிரசங்கம் செய்ய விரும்பவில்லை. மனவியாதி பற்றிய உங்கள் சிந்தனை எவ்வாறு இருக்கிறது என்று முடியுமானால் சுயபரிசீலனை செய்துபாருங்கள். முடியுமானால் கொஞ்சம் தேடுங்கள். உள்ளார உங்களை விசாரியுங்கள். இது பற்றிய தெளிவினை நீங்கள் பெறுகையில் நிச்சயம் உங்களால் பலர் பயன் பெறுவர் என்று எனக்கு எண்ணத் தோன்றுகின்றது.

Link to comment
Share on other sites

சாந்தி அக்கா இன்னுமொருவன் சொன்னமாதிரி கதை எழுதும் கலை சயந்தனைப்போல உங்களுக்கும் நல்லாய் வாச்சு இருக்கிது.

இது பற்றி நான் பிரசங்கம் செய்ய விரும்பவில்லை. மனவியாதி பற்றிய உங்கள் சிந்தனை எவ்வாறு இருக்கிறது என்று முடியுமானால் சுயபரிசீலனை செய்துபாருங்கள். முடியுமானால் கொஞ்சம் தேடுங்கள். உள்ளார உங்களை விசாரியுங்கள். இது பற்றிய தெளிவினை நீங்கள் பெறுகையில் நிச்சயம் உங்களால் பலர் பயன் பெறுவர் என்று எனக்கு எண்ணத் தோன்றுகின்றது.

:unsure: ஒட்டுமொத்தமாய் எல்லாரையும் முழுமெண்டல் ஆக்கிறதெண்டே தீர்மானிச்சுட்டீங்க போல இருக்கிது.

Link to comment
Share on other sites

இந்திய மனைவி திவ்யமதி.

ஞாபகமிருக்கா என்னை... ? கேள்வியாலேயே என் கண்களை ஊடுருவிச் சிரித்தாள். என் ஞாபகக்கிடக்கையில் எங்கும் அவளை அறிந்தததற்கான தடயங்கள் எதுவுமில்லை. பிள்ளைகள் எப்பிடியிருக்கினம் ? உன்னுடைய கணவர் இப்பவும் ஒரே வேலைதானோ ? இப்ப உனக்கு 34வயதெல்லோ உன்ரை பிறந்தநாள் யூன் பதினாறெல்லோ ? என்னை அறிந்து பலநாள் பழகியவள் போல தொடர்ந்தாள் அவள். அருகிலிருந்த எல்லோரும் என்னைத்தான் ஒருமாதிரியாகப் பார்த்தார்கள்.

நான் திவ்யமதி. 5வருசத்துக்கு முதல் உந்த நடைபாதையில சந்திச்சனான். அவள்தான் தன்னை அடையாளம் சொல்லி எனது பழைய பறணிலிருந்து புறப்பட்டாள். 'இப்போது நினைவில் அவள்....

எண்ணை வழியும் தலையும் ஒரு நூல்கிளம்பிய பஞ்சாபியோடும் ஒற்றைத் தோற்பையோடும் 'எனக்கு இங்கை ஒருதருமில்லையென அழுதபடி என்னைச் சந்தித்த அவளா இவள் ? ஆச்சரியத்தால் அசந்து போனேன்.

5வருடம் முதல் அதுவொரு கோடைகாலம். நெரிசல் நிறைந்த கடைகளும் மனிதர்களும் நிறைந்த நடைபாதையின் ஒரு தொடக்கத்திலிருந்து அடுத்த முடிவுவரை கிட்டத்தட்ட 2மணித்தியாலங்கள் அங்குமிங்கும் நடந்து திரிந்தாள் ஒருத்தி. ஏதோ தனக்குள் முணுமுணுத்தபடி அங்குமிங்கும் திரிந்தாள். பார்க்கும் கண்களில் தலைபிழைச்ச ஆளோ என எண்ணும்படிதான் அவளது நடையும் முணுமுணுப்பும் இருந்தது. நகர் மத்தியில் புடவைக்கடையொன்றின் வாசலில் கட்டப்பட்டிருந்த குழந்தைகள் காசுபோட்டு ஏறும் குதிரையில் பிள்ளைகளை ஏற்றியிறக்கிக் கொண்டிருக்க....திடீரென நீ இந்தியாவா ? என்ற அந்தக் குரலுக்குரியவளை நிமிர்ந்து பார்த்தேன்.

நான் இந்தியா இல்லை இலங்கை ? அப்ப நான் தனியத்தான் எனக்கொருதருமில்லை. என்று சொல்லியபடி போனவள் திரும்பி வந்து 'எனக்கு உதவி செய்வியா ? என்றதும் பயத்தோடுதான் அவளைப் பார்த்தேன். இந்த நகரின் மூலையெங்கும் திரியும் விஸ்கிக் கிழவன் மாதிரி இவளுக்கும் விசரோ ? என்றுதான் நினைக்கத் தோன்றியது.

அந்தக் கடையொன்றின் வாசலுக்குச் சற்றுத் தள்ளி அமைக்கப்பட்டிருந்த வட்டவடிவான இருக்கையில் போயிருந்து அழுதாள். அந்த வழியால் போய் வந்த யேர்மனியர்கள் ஒருவரும் அவளைப் பார்க்கமாலே போனார்கள். அவளது நிலை சிலவேளை வீதிகளில் கோப்பிக்கப்களோடு பிச்சை கேட்கும் பிச்சைக்காரியென நினைத்தார்களோ என்னவோ. அவளுக்குச் சற்றுத் தள்ளியிருந்துவிட்டு எழுந்து போன வயோதிபச்சோடிகள் அவளுக்கு முன்னால் 2யூரோவை வைத்துவிட்டுப் போனார்கள்.

குதிரை ஓடி முடிந்து பிள்ளைகள் அந்தக் கதிரைகளைச் சுற்றி ஓடி விளையாடிக் கொண்டிருக்க அவளுக்குச் சற்றுத் தள்ளி நானும் போயிருக்கிறேன். நீ கிந்தி கதைப்பியா ? தானே மீண்டும் வந்து கேட்டாள். இல்லை நான் இலங்கைத்தமிழ் என்றேன். எனக்கு உதவி செய். எனக்கிப்ப என்ரை அம்மா அக்காவோடை கதைக்க வேணும் என கண்களைத் துடைத்துக் கொண்டு அருகில் வந்திருந்தாள். அவளுக்கு விசரில்லையென்பதை அவளே தனது கதையால் மெய்ப்பித்தாள்.

வீட்டுக்குள் வந்ததும் முதலில் தொலைபேசியைத்தான் கேட்டாள். கையில் வைத்திருந்த 2காட்டையும் சுரண்டி ஏதோ காச்சு மூச்சென அழுதழுது கதைத்தாள். திடீரென தொலைபேசியைத் துண்டித்துவிட்டு நான் போட்டுக்கொடுத்த தேனீரையும் குடித்து வாய்ப்பனையும் சாப்பிட்டாள். உறைப்புக் கறியுடன் சோறுசாப்பிட ஆசையென்று ஒருகதையையும் போட்டு வைத்துவிட்டு மீண்டும் தொலைபேசியில் அழத்தொடங்கியவள் என்னிடம் தொலைபேசியைத் தந்தாள். மறுக்க மனமின்றி தொலைபேசியை வாங்கி காதில் வைத்தேன். மறுமுனையில் ஒரு பெண்ணின் குரல்.பாதித்தமிழ் பாதி ஆங்கிலம் கலந்து என்னோடு கதைத்தாள் அந்தப்பெண். 13வருடங்கள் தமிழ்நாட்டில் வேலைபார்ப்பதாகவும் அங்கிருந்தே தமிழை ஓரளவு பேசக்கற்றுக் கொண்டதாகவும் சொல்லித் தன்னை அறிமுகப்படுத்தினாள் அவள்.

திவ்யமதி அவளது சகோதரி என்பதும் இந்தியாவிலிருந்து ஒரு யேர்மனியன் இவளைத் திருமணம் செய்து வந்ததும் அவனது தொல்லைகள் தாங்காமல் இவள் தனித்து பெண்கள் விடுதியில் இருப்பதும் தெரியவந்தது.

அரசியல் கட்சியொன்றில் பணியாளனாக இருந்த அவளது கணவன் காரணம் தெரியாமல் கொலைசெய்யப்பட்டு வெள்ளைத் துணி போர்த்தியபடி கட்சித் தொண்டர்கள் கொண்டு வந்து மாலைபோட்டு மரணவீடு கொண்டாடி அவளிடமிருந்து ஒவ்வொன்றாய் பறிக்கப்பட்ட பொட்டு , பூ , புடவையெல்லாம் பறிபோய் கணவனின் தம்பி வாழ்வு தருகிறேன் என்றதை உதறிவிட்டு கன்னடத்திற்கு போயிருந்தாள் திவ்யமதி.

இறந்து போன கணவனின் பழைய படங்களைப் பார்ப்பதும் அழுவதுமாக 4வருடத்தை ஏனோ தானோவெனக் கரைத்தவள் 8வயதான தனது ஒரு மகளுக்காகவே இனி வாழ வேண்டும் என்ற வைராக்கியத்தோடு கன்னடத்திற்குப் போனாளாம். தோழியொருத்தி மூலம் விடுதியொன்றில் பணிப்பெண்ணாக வேலையும் கிடைத்தது.

வெளிநாட்டவர்கள் வந்துபோகும் அந்த இடத்திற்கு 55வயதான இவளது இன்றைய யேர்மன் கணவனும் கோடைகால விடுமுறையொன்றுக்குப் போயிருந்த போது அங்கு பணிபுரிந்த ஒருவனால் இவளுக்கு அறிமுகப்படுத்தப்பட்டான் அவனது வெள்ளைக்கணவன். யேர்மன் மொழியில் ஒரு சொல்லும் தெரியாதவள் திவ்யமதி. ஆங்கிலத்தில் ஓம் இல்லை என்பதற்கும் அதைவிட்டால் ஓரிரண்டு ஆங்கிலச் சொற்களையே தெரிந்தவன் அவன். இடையில் மொழித்தரகனாக நின்றவன் சொல்லிச்சொல்லி அவளை யேர்மனியனைத் திருமணம் முடிக்கச் சம்மதம் பெற்றுக் கொடுத்தான். இடையில் தடையாய் நின்ற மொழியையும் யேர்மனி போனால் படித்துவிடலாம் என அவன் சொன்ன தைரியத்தை நம்பி உறவுகளுக்கும் சொல்லாமல் அவனோடு திருமண எழுத்தை முடித்து 5மாதத்தில் யேர்மனி வந்து சேர்ந்தாள்.

தனது மகளின் எதிர்காலம் வண்ண வண்ண மலர்களால் சூழப்பட்டு அவள் ஒரு இராஜகுமாரியாக வலம்வருவாள் என்ற கனவில் தனது கற்பனையில் வந்து சேர்ந்தாள். நிலமையோ தலைகீழ் அல்ல அதனினும் மேலாய் உலகவரைபடத்தில் அவள் பார்த்த நிலமெல்லாம் உருண்டு திரண்டு வந்து தன்னை அழுத்துவது போல நம்பிக்கைகள் சிதைந்து உடைந்து போனாள்.

அவனது தேவைகளுக்காக மட்டும் அவள். மற்றும்படி அவன் டிஸ்கோ போய்வரும்வரை காத்திருந்து , அவனுக்கு வைன் குடிக்கவோ சிகரெட் பிடிக்கவோ விரும்பும் தருணங்களில் அதையெல்லாம் எடுத்துக் கொடுத்துக் கொள்வதையே அவளது கடமையெனக் கருதினான் அவன்.

அவளது ஒரே மகளுக்கு செஞ்சிலுவைச்சங்கத்தில் போய் பழைய உடுப்புக்கள் எடுத்து வந்து கொடுத்தான். அவளுக்கும் தான். நான் குடுத்து வைச்சவன். ஒரு இந்திய மனைவி கிடைச்சதையிட்டு நான் பெருமைப்படுகிறேன் என போதையில் உளறுவான். பெண் கட்டாயம் வேலைக்குப் போக வேண்டும் என்று தான் விரும்புவதாய்ச் சொன்னவன் ஒரு உணவகத்தில் துப்பரவுப் பணியாளாக்கினான். சம்பளத்தை மட்டும் தனது வங்கிக்கணக்கில் விட்டு அதிலும் ஒரு சதமும் அவளுக்கோ அவளது மகளுக்கோ சிந்தாமல் பார்த்துக் கொண்டான்.

உன்னையும் உன்ரை மகளையும் கூப்பிட்டதுக்காக நானெடுத்த கடன் இன்னும் முடியேல்ல....எனச் சொல்லிக் கொள்வான். அவள் நினைத்தது ஏதோ நடந்தது ஏதோவாக....அவளால் இயலாத மாதவிடாய் நேரங்களில் கூட அவனுடன் படுத்துச்சாக வேண்டிய தொல்லைக்குள் அவள். சாகும் தருணம் வரும்வரை அவள் ரணமாகிக்கிடந்தாள். அடிக்கடி மருத்துவமனையும் அவளது நாட்களுமாக சில வருடங்கள் போயொதுங்கியது.

சின்னவளாய் அவளோடு ஒட்டித்திரிந்த மகள் பூப்படைந்துவிட்டாள். தனித்து அவன் நிற்கும் நேரங்களில் அவள் அம்மா இல்லாமல் நிற்க அச்சப்பட்டாள். அம்மா வா நாங்க இந்தியாவுக்கே போவோம் என்று அழுவாள். தனது நண்பிகளுடன் சினிமாவுக்குப் போவதாக நண்பிகளின் வீடுகளுக்குச் செல்வதாக சொல்லிப் பலநாள் வீட்டுக்கே வராமிலிருந்திருக்கிறாள்.

நாட்கள் செல்லச் செல்ல பாடசாலையிலிருந்து அழைப்புக்கள் வந்தது. அவளது ஒற்றைச் செல்ல மகள் பாடசாலைக்குப் போவதில்லை போதைமருந்து டிஸ்கோவென அலைவதாக. ஒருநாள் இரவு 7மணிபோல் வீட்டுக் கதவை காவல்துறை தட்டும் வரையும் தனது மகள் பற்றி எதையுமே அவள் அறியாமல்தானிருந்தாள். போதைவஸ்து விற்றதில் பிடித்ததாக ஒருநாள் காவல்துறை அவளைக்கைது செய்து கொண்டு போனதோடு இவளது உலகம் தலைகீழாகியது. அவளது அழகான பூங்காக்கள் நிறைந்த மாளிகையின் இராஜகுமாரியின் வில்லுவண்டில் உடைந்து நொருங்க அவளது மகளை அவள் இழந்து போனாள்.

துக்கம் மகளைப் பிரிந்த இயலாமையென தன்மீது கோபம் வரும் போதெல்லாம் யேர்மனியக் கணவனுடன் வாய்த்தர்க்கத்தில் மல்லுக்கு நிற்பாள். இந்திய மனைவி கிடைத்ததற்காக பெருமைப்படுவதாகச் சொன்னவன் சிகரெட்டால் சுடுவது கையில் கிடைப்பதால் அவளைக்காயப்படுத்துவது என ஆசியக்கணவனின் ஆயுதத்தைக் கையிலெடுத்தான்.

எல்லாம் தன் கைகளை விட்டுப்போய்விட்டதான ஏக்கம். மனசெல்லாம் சல்லடையாய் போயிருக்க அவன் விரும்பும் தருணங்களில் அவனுடன் ஒன்றாயிருக்க வேண்டிய நரகம் அவளுக்கு. குருதிப்போக்கு அதிகரித்து தொடர்ந்து இயங்க முடியாத நிலையிலும் அவனோடு உடன்பட்டு ஆகவேண்டிய தொல்லை. பொழுது இருள் போர்த்தினால் இவளுக்கு பேய்களும் பிசாசுகளும் சுற்றுவது போல.

இறுதியில் ஒருநாள் அவன் இல்லாத நேரமாகப் பார்த்து அயல் வீட்டுக்குள் அடைக்கலம் புகுந்தாள். அவர்கள் சேர்த்து விட்டதே பெண்கள் விடுதி நிலையம். மகளுமில்லை மனதில் நிம்மதியுமில்லாமல் தனித்துப் போனாள் திவ்யமதி.

அன்றைய சந்திப்பின் பின் அடிக்கடி வீட்டுக்கு வருவாள். பிள்ளைகளுடன் விளையாடுவாள். என்னவனுடன் கதைப்பாள். நீ என்ரை தம்பியைப்போல என்பாள். நீ எனக்குக் கடவுள் என கண்கள் பனிக்க என்னைக் கட்டியழுவாள். ஒருநாள் தொலைபேசியெடுத்துச் சொன்னாள் மருத்துவமனையில் இருப்பதாக நானும் என்னவனும் போய்ப்பார்த்தோம். தனது அக்காவின் தொலைபேசியிலக்கத்தைத் தந்து தகவல் சொல்லச் சொன்னாள். தலைக்குள் ஏதோ செய்வதாகவும் தற்கொலை பண்ண வேண்டும் போலிருப்பதாகவும் சொல்லியழுதாள். அவளை ஆற்றவோ தேற்றவோ வார்த்தைகளற்று நாங்கள் இருவரும்.....

2நாள் கழித்து மீளவும் மருத்துவமனை போனோம். திவ்யமதி அங்கில்லை. அவளை அவளது கணவன் கூட்டிக்கொண்டு போய்விட்டதாகச் சொன்னார்கள். தொடர்புக்கு இலக்கம் எதுவும் கொடுக்காமல் போய்விட்டாள்.

பின்னர் ஒருதரம் தொடர்பு கொண்டு சொன்னாள். தனது கணவன் ஒற்றுமையாக வந்து கேட்டதில் தானும் சம்மதித்துப் போனதாக. இப்ப பிரச்சனையில்லையென்றாள். ஒருமாதம் கடந்த நிலையில் யூன்பதினாறு ஒரு பாசல் வந்தது. அதில் எனக்குப் பிறந்தநாள் வாழ்த்தும் பிள்ளைகளுக்கு இரண்டு ரீசேட்டும் என்னவனுக்கு ஒரு ரீசேட்டும். அது திவ்யமதியிடமிருந்து வந்திருந்தது. அவள் தந்த தொலைபேசியிலக்கத்தை அழுத்தினேன் நன்றி சொல்ல. அவளது தொலைபேசி தொடர்பு துண்டிக்கப்பட்டிருந்தது.

எப்போதாவது இவள் நினைவில் வருவாள் நானும் என்னவனும் அவளைப்பற்றிக் கதைப்போம். அவள் எங்காவது நலமோடு இருக்க வேண்டும் என்ற எனது பிரார்த்தனை இருக்கும். அதற்கும் அப்பால் வேறெதையும் செய்ய முடியாதிருந்தது. பெண்கள் விடுதியிலும் அவள் பற்றிய எந்தவித பதிவுகளும் இல்லாமல் போயிருந்தது.

இத்தனைக்குப் பின் இன்று என் முன் நின்று என் ஞாபகத்தை கிழறிவிட்டுள்ளாள் அன்றைப்போல்... மருத்துவமனையொன்றில் தாதியாக இருப்பதாகவும் யேர்மனியக் கணவனிடமிருந்து விவாகரத்து வாங்கிவிட்டதாகவும் சொன்னாள். தனக்குத் தெரிந்த ஒரு இலங்கைத் தமிழ்ப் பெண்ணைப் பற்றி ஏதோ சொல்ல வேண்டும் என அந்தக்கூட்டத்தை விட்டு சற்றுத் தள்ளி அழைத்துப் போனாள்.

அந்த இலங்கைத் தமிழச்சிக்கும் அவளது கணவனுக்கும் நெடுகலும் பிரச்சனையாம். அவளை அவன் மிருகத்தனமாக அடிப்பானாம். அந்தப்பெண்ணின் மகளின் தோழியாயிருந்த 18வயது யேர்மனியப் பெண்ணோடு தொடர்பாம். இது பற்றி அவள் விசாரித்ததில் அவனுக்குக் கோபம் வந்து அந்தப்பெண்ணின் பெண்ணுறுப்பில் தும்புத்தடியால் குற்றி அடித்திருக்கிறான். இதை வெளியில் சொல்ல வெட்கப்பட்டு மறைத்து வைத்திருக்கிறாள். முதல் நாள் கடைவீதியில் கண்டவள் திடீரென மருத்துவமனையில் என்றதைக் கேட்டு திவ்யமதி போயிருந்தாள் அவளைப் பார்க்க.அப்போதே இந்த அவலத்தை அந்தத் தமிழச்சி இவளுக்குச் சொல்லியழுதிருக்கிறாள்.

அவளின்ரை மகள் நல்லவடிவான பிள்ளை. என்ரை மகளைப் போலயிருக்கிறாள். அவள் பாவம். அவளுக்காகக் கட்டாயம் உதவ வேணும். பொலிஸ் இப்ப அந்தப்பிள்ளையை அவேடை வீட்டிலை விடாமல் இளையோர் பராமரிப்பிடத்திற்கு அனுப்பியிருக்கு. விசர் பிடிச்சாக்கள் மாதிரி தாயைப்பாக்க வருவாள். பிறகு அழுதபடி போயிடுவாள் என்றாள் திவ்யமதி.

கேட்கவே உயிர் வலித்தது. மனசெல்லாம் ரணமாகி அவளுக்காக அழுதது விழிகள். உன்ர மகள் எங்கே ? கேட்ட எனக்கு தனது மகளைப்பற்றி எதையும் சொல்லாமல் கண்ணீர் விட்டாள். அவளது இராஜகுமாரி பற்றிய அவளது கனவுகள் பொடியாகி....கண்ணீர் மட்டும் மீதமாக....திவ்யமதி.

வீடு வந்து நெடு நேரமாகியும் திவ்யமதி சொன்ன தமிழச்சியின் நினைவாகவே இருந்தது.

09.07.2008

நீண்ட நாட்களின் பின்பு,உங்கள் படைப்பை வாசிக்க கிடைத்தமைக்கு நன்றீ சாந்தி அக்கா.

Link to comment
Share on other sites

திவ்யமதி அவளது சகோதரி என்பதும் இந்தியாவிலிருந்து ஒரு யேர்மனியன் இவளைத் திருமணம் செய்து வந்ததும் அவனது தொல்லைகள் தாங்காமல் இவள் தனித்து பெண்கள் விடுதியில் இருப்பதும் தெரியவந்தது.

யெர்மன் காரன் எங்கடையாக்களோடை சினேகிதம் போலை.. :unsure::rolleyes:

Link to comment
Share on other sites

பதிவு மிகவும் நன்றாயுள்ளது. "நாற்பத்தியேழுநாட்கள் "திரைப்படத்தை அறிவும் அனுபவமும் கலந்து மிகத்திறமையாய் றீமேக் செய்ததோ என்று எண்ணத் தோன்றுகின்றது.

ஒரு சிறு ஆதங்கம். பிறரின் உணர்வுகளை உங்களதாக உள்வாங்கக் கூடியதும், உள்வாங்கியதைத் தத்ரூபமாய்ச் சொல்லக்கூடியதுமான தன்மை பெற்றுள்ளீர்கள். இந்தப் பெண்ணின் கதை கூட உங்களின் இத்தன்மைக்கு எடுத்துக் காட்டு. இருப்பினும், மனவியாதி தொடர்பில் நீங்கள் இக்கதையில் பேசிய இடங்களில் எல்லாம், அவை பற்றிய உங்களது விபரிப்புக்களில் எல்லாம், எமது சமூகத்தில் மனவியாதிகள் பற்றிப் புரையோடிப்போயிருக்கும் அறியாமை உங்களிலும் வெளிப்படுவது உறுத்துகிறது.

இது பற்றி நான் பிரசங்கம் செய்ய விரும்பவில்லை. மனவியாதி பற்றிய உங்கள் சிந்தனை எவ்வாறு இருக்கிறது என்று முடியுமானால் சுயபரிசீலனை செய்துபாருங்கள். முடியுமானால் கொஞ்சம் தேடுங்கள். உள்ளார உங்களை விசாரியுங்கள். இது பற்றிய தெளிவினை நீங்கள் பெறுகையில் நிச்சயம் உங்களால் பலர் பயன் பெறுவர் என்று எனக்கு எண்ணத் தோன்றுகின்றது.

பகிர்வுக்கு நன்றிகள் இன்னும்ஒருவன்.

நீங்கள் குறிப்பிட்ட விடயங்களில் கவனம் எடுக்கிறேன். தங்கள் விமர்சனம் இத்தகைய பலவிடயங்கள் பற்றி யோசிக்க வைத்துள்ளது.

சாந்தி அக்கா இன்னுமொருவன் சொன்னமாதிரி கதை எழுதும் கலை சயந்தனைப்போல உங்களுக்கும் நல்லாய் வாச்சு இருக்கிது.

:lol: ஒட்டுமொத்தமாய் எல்லாரையும் முழுமெண்டல் ஆக்கிறதெண்டே தீர்மானிச்சுட்டீங்க போல இருக்கிது.

கலைஞா கருத்துக்கு நன்றிகள்.

முழுமெண்டல் ஆக்கும் எண்ணமில்லை. நம்மோடு கூட அல்லது நமக்குப் பிடித்தவர்களது துயர்நிலை அதை அப்படியே பகிரச்சொல்கிறது மனசு அவைதான் இத்தகைய எழுத்துக்கள். இப்பதிவுகளை சிறுகதையென்றோ அல்லது ஏதோவொரு இலக்கியமென்றோ சொல்லத் தெரியவில்லை. ஒரு சம்பவத்தை பதிவு செய்துள்ளேன் அதுதான்.

நீண்ட நாட்களின் பின்பு,உங்கள் படைப்பை வாசிக்க கிடைத்தமைக்கு நன்றீ சாந்தி அக்கா.

நன்றிகள் நிதர்சன். மீளவும் உங்களை இங்கு சந்தித்ததில் மகிழ்ச்சி.

யெர்மன் காரன் எங்கடையாக்களோடை சினேகிதம் போலை.. :unsure::rolleyes:

சினேகிதிகளின் கணவர்கள் தேடுகிறார்கள் சினேகிதத்தை தேடி :lol:

Link to comment
Share on other sites

எங்களுக்கு தான் ஊரில இருக்க முடியாது. சிங்கள அரசின் கொடுமைகளுக்கு தப்பி வெளினாடுகளுக்கு வருகிறோம். ஆனால் இந்தியர்களுக்கு அவர்களின் நாட்டில உயிரோட சுதந்திரத்தோட வாழலாம். அதை விட்டு விட்டு வெளினாடுகளுக்கு வந்து சீரளியும் இந்தியப் பெண்கள் பலர் இருக்கிறார்கள். இங்கு அவுஸ்திரெலியாவில் கல்வி கற்க பல இந்தியர்கள் வருகிறார்கள். படித்து முடித்தால் அவுஸ்திரெலியாக் குடியுரிமை கிடைக்கும் என்ற கனவுடன் வருகிறார்கள். படிப்பதற்கு அதிக பணம் தேவை. அவுஸ்திரெலியச்சட்டத்துக்கு முரணனா முறையில் பணம் சம்பாதிக்கிறார்கள் பல இந்தியர்கள். அதிலும் சில வட இந்தியப் பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுபட்டு பணத்தை சம்பாதிக்கிறார்கள். இந்தியாவில் படிக்க முடியாதா?.

இதுபோன்ற விடயங்கள் பல இங்கும் நடக்கிறது கந்தப்பு.

இந்திய ஆண்கள் பலரும் இங்கு படிப்புக்கு வந்து பின்னர் வெள்ளையினப்பெண்களைத் தங்கள் மனைகளாக்கி அதன்பின் நல்ல வீசா கிடைத்ததும் அவர்களைக் கைவிடுவதும் நடக்கிறது. பின்னர் இந்தியா போய் இந்திய மனைவிகளை இறக்குமதி செய்வது கூட சாதாரணமாக நடக்கிறது.

இந்தியாவில் படிக்கவென பலர் இந்தியா செல்கின்றனர் இங்கிருந்து அங்கு செல்கின்றனர் பலர் இது 'அக்கரைக்கு இக்கரை பச்சை' நிலைதான்.

Link to comment
Share on other sites

. அதிலும் சில வட இந்தியப் பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுபட்டு பணத்தை சம்பாதிக்கிறார்கள். இந்தியாவில் படிக்க முடியாதா?.

:( எப்படி இந்தவிடயம் உங்களுக்கு தெரியும்? :(

Link to comment
Share on other sites

:( எப்படி இந்தவிடயம் உங்களுக்கு தெரியும்? :lol:

அப்புவை ஆபத்தில் மாட்டுறீங்கள் ஜில் :D பாவம் அப்பு ஆச்சியிட்டை பிரப்பங்கட்டையாலை...... :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதுபோன்ற விடயங்கள் பல இங்கும் நடக்கிறது கந்தப்பு.

இந்திய ஆண்கள் பலரும் இங்கு படிப்புக்கு வந்து பின்னர் வெள்ளையினப்பெண்களைத் தங்கள் மனைகளாக்கி அதன்பின் நல்ல வீசா கிடைத்ததும் அவர்களைக் கைவிடுவதும் நடக்கிறது. பின்னர் இந்தியா போய் இந்திய மனைவிகளை இறக்குமதி செய்வது கூட சாதாரணமாக நடக்கிறது.

இந்தியாவில் படிக்கவென பலர் இந்தியா செல்கின்றனர் இங்கிருந்து அங்கு செல்கின்றனர் பலர் இது 'அக்கரைக்கு இக்கரை பச்சை' நிலைதான்.

இதே போல இங்கு சில படிக்கவரும் இந்தியப் பெண்களும், ஆண்களும் கணவர் மனைவி மார் மாதிரி இருப்பார்கள். படித்து முடிந்தபின்பு இந்தியாவில் இருந்து வரும் அப்பாவி ஆண், பெண்களை கல்யாணம் செய்கிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

:( எப்படி இந்தவிடயம் உங்களுக்கு தெரியும்? :(

கணக்க ஊதாரணங்கள் இருக்கிறது. பில்லு என்ற உணவகம் கரிஸ் பார்க்கில் இருக்கிறது. இதனை வட இந்தியர் நடாத்துகிறார். இங்கு வேலை செய்பவர்கள் இந்தியாவில் இருந்து படிக்கவரும் வட இந்தியப் பெண்கள். இவர்களுக்கு படிப்பதற்கு அதிக பணம் தேவை. முதலாளி தன்னை அனுசரித்துப் போனால் தான் அங்கு வேலை செய்யலாம் என்று மறைமுக நிபந்தனை. அவுஸ்திரெலியாவில் படிக்க வருபவர்கள் 20 மணித்தியாலத்துக்கு மேல் கிழமைக்கு வேலை செய்ய முடியாது. சில வட இந்தியப் பெண்கள் அங்கு வேலை செய்வதை நிறுத்திவிட்டார்கள். மற்றவர்கள் அனுசரித்துப் போகிறார்கள்.

இதை விட மாலை நேரங்களில் படித்து முடித்ததும் நன்றாக வெளிக்கிட்டுக் கொண்டு பேருந்து நிலையமொன்றின் அருகில் வட இந்தியப் பெண்கள் காத்திருப்பார்கள். ஒரு வான் வந்து அவர்களை ஏற்றிக் கொண்டு செல்லும். இதனை நான் காணவில்லை. எனக்குத் தெரிந்தவர்கள் சொன்னார்கள்.

Link to comment
Share on other sites

இதே போல இங்கு சில படிக்கவரும் இந்தியப் பெண்களும், ஆண்களும் கணவர் மனைவி மார் மாதிரி இருப்பார்கள். படித்து முடிந்தபின்பு இந்தியாவில் இருந்து வரும் அப்பாவி ஆண், பெண்களை கல்யாணம் செய்கிறார்கள்.

ஈழத்தமிழர்களும் இந்த வழியில் விலக்கில்லை.

ஐரோப்பிய அனுபவம் பின்னர் 18வயதில் அழகிகளை எதிர்பார்க்கும் அழகர்களும் நிறைய....

இதை விட மாலை நேரங்களில் படித்து முடித்ததும் நன்றாக வெளிக்கிட்டுக் கொண்டு பேருந்து நிலையமொன்றின் அருகில் வட இந்தியப் பெண்கள் காத்திருப்பார்கள். ஒரு வான் வந்து அவர்களை ஏற்றிக் கொண்டு செல்லும். இதனை நான் காணவில்லை. எனக்குத் தெரிந்தவர்கள் சொன்னார்கள்.

வானில் ஏறிப்போனால் விபச்சாரம்தான் செய்கிறார்கள் என்று நினைக்கத் தேவையில்லைத்தானே அப்பு :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வானில் ஏறிப்போனால் விபச்சாரம்தான் செய்கிறார்கள் என்று நினைக்கத் தேவையில்லைத்தானே அப்பு :(

உண்மைதான். ஆனால் அடிக்கடி அந்த வானைப்பார்ப்பவர்கள் சொல்லும் செய்தியோ .............................

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பிரிதலும் புனிதமானது : சிவபாலன் இளங்கோவன் மார்ச் 2024 - சிவபாலன் இளங்கோவன் · உளவியல்   சஞ்சய்குமாருக்கு அவனது அத்தைப்பெண்ணான மீராவுடன் சிறு வயதிலிருந்தே காதல். சிறுவயதென்றால் பத்தாவது, பதினொன்றாவது படிக்கும் வயதிலிருந்தே. மீரா சென்னையில் இருந்து சஞ்சயின் கிராமத்து வீட்டிற்கு வரும்போதெல்லாம் சஞ்சய் ஏகாந்த மனநிலையில் இருப்பான்.  மீராவின் அப்பா சென்னையில் வங்கி மேலாளராக இருக்கிறார். சஞ்சய்க்கு அத்தனை வசதியில்லை. மீராவிற்குச் சிறு வயதில் சஞ்சயைப் பார்க்கபோவது மகிழ்ச்சியானதாகவே இருந்தது. இருவரும் கல்லூரி செல்லும் வரை அது ஓர் இளம் பிராயத்துக் காதலாகவே தொடந்து வந்தது. மீரா கல்லூரிப் படிப்பிற்காக டெல்லி சென்றாள். அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாகச் சஞ்சயைத் தவிர்த்து வந்தாள். சஞ்சயால் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அடிக்கடி அவளிடம் சண்டை போட்டான். முதலில் பொறுமையாக விளக்கம் கொடுத்துக்கொண்டிருந்தவள் அதன் பிறகு அவன் ஏதாவது பேச ஆரம்பிக்கும்போதே தொடர்பைத் துண்டித்துவிடச் செய்தாள். அதன் பிறகு எத்தனை முறை அவன் கால் செய்தாலும் அழைப்பை ஏற்க மாட்டாள், இன்னொரு பொழுது அவன் அழைத்தால் எதுவும் நடந்த மாதிரியே காட்டிக்கொள்ளாமல் பட்டும் படாமல் பேசுவாள். இப்படியே மூன்று வருடங்கள் சென்றது. டெல்லியில் அவள் படிப்பை முடித்து வந்தபோது சஞ்சய் ஒரு சாதாரண கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்திருந்தான். அவள் வந்தவுடன் அவளிடம் திருமணம் செய்துகொள்ளலாம் எனப் பேசினான். அவள் அலட்சியமாகச் சிரித்தாள். “உனக்கு என்ன பைத்தியமா? எனக்கு 22 வயதுதான் ஆகுது, அதுக்குள்ள உன்ன கல்யாணம் பண்ணி குழந்தை பெத்துக்கணுமா?” எனக் கோபமாகக் கேட்டாள் “உனக்கு என்ன பிடிக்கல, என்கிட்ட இருந்து விலகிப் போகணும்னு நினைக்கிற, அதான் ஏதேதோ காரணம் சொல்ற” என அவனும் கோபப்பட்டான் அவள் அவனிடம் எந்த வாக்குவாதமும் செய்யவில்லை. “உன்கிட்டலாம் பேசிப் புரிய வைக்க முடியாது”  என எழுந்து சென்றாள். சஞ்சய் அவன் பெற்றோர்களைக் கட்டாயப்படுத்தி மீரா வீட்டில் பெண் கேட்க சொன்னான். மீரா அவர்களிடம் பக்குவமாகச் சொல்லி நிராகரித்தாள். “எங்க வீட்ல உன்ன கல்யாணம் பண்ண ஒத்துக்க மாட்டாங்க, முதல்ல எனக்கே இப்ப கல்யாணம் பண்ண இஷ்டம் இல்ல, நான் வெளி நாடு போய் மாஸ்டர்ஸ் படிக்கப் போறேன், எனக்கு நிறைய கனவுகள் இருக்கு” என்று அவனிடம் சொன்னாள் “யாரோ நல்ல வசதியான ஒருத்தன புடிச்சிட்ட அதான் என்ன கழட்டிவிடற” என அவளை நடுரோட்டில் எல்லார் முன்பாகவும் கத்தி அசிங்க அசிங்கமான வார்த்தைகளால் அவமானப்படுத்தி அனுப்பினான். மீரா அழுதுகொண்டே வீட்டிற்கு வந்தாள். ஆண்-பெண் உறவில் சேர்தலைப் போலவே பிரிதலையும் நாம் இயல்பானதாகக் கருத வேண்டும். சேர்தலைப் போலவே பிரிதலின் முடிவையும் மதிக்கும் பண்பை அந்தக் காதலின் நிமித்தமே வளர்த்துக்கொள்ள வேண்டும்.   ஓர் உறவில் இருந்து வெளியே போவதற்கான கதவு எப்போதும் திறந்தே இருக்கிறது என்னும் நிலையில் இருக்கும் உறவுகளே மிகவும் பக்குவப்பட்ட உறவுகளாக, பரஸ்பர அன்பை ஆத்மார்த்தமாகக் கொண்ட உறவாக இருக்கும் என்பது எனது எண்ணம். அத்தனை கதவுகளையும் பூட்டிவிட்டு எங்களது உறவு ஆத்மார்த்தமானது என்று சொல்வது நிச்சயம் அபத்தமானது. ஒரு காதல் ஏற்படுதற்கு இருவருக்கும் இருக்கும் பக்குவம், பொறுப்புகள், முதிர்ச்சி, அக மற்றும் புறச் சூழல்கள் எனப் பல்வேறு காரணங்கள் இருக்கும். இந்தக் காரணங்கள் எல்லாம் மாறக்கூடியவை. ஒருவருக்கு இருக்கும் பக்குவமும், முதிர்ச்சியும் அவரின் வயதைப் பொறுத்து மாறிக்கொண்டிருக்கும் அதே போலவே ஒருவரின் அக, புறச் சூழல்கள் தொடர்ச்சியாக மாறிக்கொண்டிருப்பவை. ஒரு காதல் தொடங்கிய தருணத்தில் இருந்த இந்தக் காரணிகள் எல்லாம் அதற்குப் பிறகு மெல்ல மெல்ல மாறிக்கொண்டிருப்பவை. காதலுக்கான காரணங்கள் நீர்த்துப்போகும்போது அங்குக் காதலும் முடிந்து போகிறது. அதை நீட்டிக்க வேண்டிய தேவை இல்லாமல் போய்விடுகிறது, அப்போது அங்குக் காதல் முடிவுக்கு வருகிறது, முடிவுக்கு வரும் காதலை ஏற்றுக்கொள்ளாமல் அதற்கான அத்தனை கதவுகளையும் அடைத்துக் கட்டாயப்படுத்தும்போது அதுவரை இருந்த காதலே கேள்விக்குறியாகிறது, பழகிய கணங்களின் மீது ஓர் ஒவ்வாமை ஏற்படுகிறது, அந்த மூர்க்கத்தனத்தைக் காதலையே மலினப்படுத்தும், சிறுமைப்படுத்தும் செயலாகவே பார்க்க முடியும். சஞ்சய்க்கும் மீராவிற்கும் இருந்தது ஓர் இளம் பிராயத்துக் காதல். சிறு வயதிலேயே துளிர் விட்ட காதல். ஒரு வகையிலான இனக்கவர்ச்சி. ஒருவர் மீதான மோகமே அந்தக் காதலுக்கு அடிப்படை. அந்த வயதில் எந்தப் பொறுப்புகளும் இல்லை, பக்குவமும் இல்லை, இலக்குகளும் இல்லை. ஒருவர் மீது ஒருவர் ஈர்ப்பாக இருப்பது மட்டுமே அந்தப் பருவத்தில் போதுமானது, அதுவும் எப்போதாவது சந்திக்கிற சில நாள்களில் மட்டும் அந்த ஈர்ப்பு இருந்தால் போதுமானது, அதுவே பரஸ்பரக் காதல் என அவர்கள் உணர்ந்து கொண்டார்கள். ஆனால் இருவரும் வளரும் போது இருவருக்கான தனிப்பட்ட அடையாளங்கள் ஆளுமைப் பண்புகள் உருவாகின்றன. எதிர்காலம் குறித்த கனவுகளும், லட்சியங்களும் உருவாகின்றன. இந்தச் சூழலில் காதலென்பது வெறும் ஈர்ப்பு மட்டுமே அல்ல, பரஸ்பரமாக ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வது, அவர்களின் ஆளுமைப் பண்புகளை ஏற்றுக்கொள்வது, அவர்களின் கனவுகளையும், லட்சியங்களையும் மதிப்பது. இதில் போதாமைகள் ஏற்படும்போது ஒருவர் மீதான ஒருவரின் காதல் தன்னை மறுபரிசீலனை செய்து கொள்கிறது. அந்த காதலை நீட்டிப்பதற்கான தேவைக் குறித்து கேள்வி எழுகிறது. ஒரு பிராயத்தில் ஒருவருடன் பழகிய காரணங்களுக்காகவே இந்த எதிர்பார்ப்புகளை எல்லாம் புறம் தள்ள முடியாது. மீராவின் லட்சியங்களும், கனவுகளும் சஞ்சயைப் பொறுத்த வரை தேவையில்லாதவை. மீராவிற்கு அவன் மட்டுமே பிரதானமாக இருக்க வேண்டும், மீதி அத்தனையையும் அவள் நிராகரிக்க வேண்டும் என எதிர்பார்க்கிறான். ஆனால், மீராவோ தனது விருப்பங்களுக்கும் கனவுகளுக்கும் அவன் துணை நிற்க வேண்டும், அவளின் இந்த முடிவுகளை அவன் மதிக்க வேண்டும் என நினைக்கிறாள். அப்படி அவன் இருக்கும்போதே அவனின் மீது காதலுடன் இருக்க முடியும் என அவள் உணர்கிறாள். அப்படி அவன் இல்லை மாறாக அவன் அவளை எப்போதும் கட்டுப்படுத்த நினைக்கிறான், அவன் சொல்வதற்கு மாறாக அவள் நடந்து கொள்ளக்கூடாது என நினைக்கிறான் என்பது அவளுக்கு ஏமாற்றமாக இருக்கிறது. ஏன் இந்தக் காதலைத் தொடர வேண்டும் என அவள் நினைப்பதற்கு அவனின் இந்தப் போதாமைகள் முக்கியமான காரணம். ஆனால், சஞ்சயை பொறுத்தவரை அவளின் இந்த எதிர்பார்ப்புகளைச் சிறுமைப் படுத்துகிறான். அவளுக்கு வேறு யார் கூடவோ பழக்கம் இருக்கிறது அதனாலே தன்னை நிராகரிக்கிறாள், அவளின் படிப்பிற்கும், வசதிக்கும் தன்னைத் தகுதியானவன் இல்லை என அவள் நினைகிறாள் என அவளை மலினப்படுத்துகிறான். ஒருபோதும் அவன் தனது நடவடிக்கைகள் குறித்து உணரவே இல்லை, அவளின் மீதே அத்தனை குற்றசாட்டுகளையும் சுமத்துகிறான். இது மீராவிற்கு மூச்சு முட்டவைக்கிறது, அதை அவனிடம் சொல்ல முற்படும்போது அவன் அவளைத் திருமணம் செய்து கொள்ளலாம் எனக் கட்டாயப்படுத்துகிறான். ஒரு போதும் அவன் மாறப்போவதேயில்லை என உணர்ந்து கொண்ட மீரா அவனிடம் இருந்து நிரந்தரமாகப் பிரிந்து விடும் முடிவை எடுக்கிறாள். அந்த முடிவைச் சஞ்சய் எப்படி எதிர்கொள்கிறான்? மிகவும் உணர்ச்சிவசப்பட்டு மூர்க்கமாக எதிர்கொள்கிறான். அவளின் அத்தனை வருடக் காதலைக் கொச்சைபடுத்துகிறான், அவளை மோசமாகச் சித்தரிக்கிறான் அவனது குற்றசாட்டுகளில் அவன் இத்தனை நாள்கள் அவள் மீது துளியும் காதல் கொண்டிருக்கவில்லை என்பதுதான் தெரிகிறது. இந்தப் பிரிவை எதிர்கொள்ள அவன் இன்னும் பக்குவப்பட வேண்டும். பக்குவமற்று, உணர்ச்சிவசப்பட்ட நிலையில் பிரிதலை அணுகும் போக்கு இரண்டு பாலினரிடையுமே இருக்கிறது. நவீன காதலில் பிரிதலை அணுகும் பக்குவம் கொஞ்சம் ஏற்பட்டிருக்கிறது என நினைக்கிறேன். ஆனால் சினிமாக்களும், ஊடகங்களும் காதலில் பெண்களை எதிர்மறையாகச் சித்தரிக்கும் போக்கு தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இதன் பாதிப்பில் வளரும் இளைஞர்கள் பெண்களின் மீதான பொத்தாம்பொதுவான சில பொதுப்பார்வைகளுடன் இருக்கின்றனர் அதனால் பிரிதலை, பிரிவதற்கான முடிவைப் பெண்களுக்கான ஒன்றாகவே, பெண்களின் குணாதிசயம் என்றளவிலே புரிந்து கொள்கிறார்கள், இது பிரிதலுக்கான காரணங்களை முழுமையாக உணர்ந்து கொள்வதிலிருந்து அவர்களைத் தடுக்கிறது. ‘அந்தப் பெண் என்னை வேண்டாம் என்று சொன்னதற்கு நானும் ஒரு காரணம்’ என்பதை ஏற்றுக்கொள்வதிலிருந்து தப்பித்துக்கொள்ளலாம் என்பதால் பெண்களின் மீதான இந்தச் சித்தரிப்பைப் பெரும்பாலான ஆண்களும் மனமுவந்து ஏற்றுக்கொள்கிறார்கள். பிரிதலைப் பக்குவமாக ஏற்றுக்கொள்ளும் ஒருவரால்தான் அதற்கான காரணங்களை விருப்பு, வெறுப்புகளின்றி, முன்முடிவுகளின்றி ஏற்றுக்கொள்ளும் ஒருவரால்தான் அதுவரையிலான அந்தக் காதலில் உண்மையாக இருந்திருக்க முடியும். அப்படி இல்லாதவர்களால் அதுவரை இருந்த காதலே அர்த்தமற்றுப் போகிறது. எப்படிப் பிரிவது? “எனக்கு நல்லாவே தெரியுது, இந்த ரிலேஷன்சிப்னாலதான் நான் இவ்வளவு கஷ்டப்படுறேன், இதனால நான் நிறைய அவமானங்களைச் சந்திக்கிறேன், என்னைப் பற்றி நானே குற்றவுணர்ச்சி கொள்ற அளவுக்கு அவதிப்படறேன், இதுல இருந்து வெளிய போகணும்னு நினைக்கிறேன் ஆனால் போக முடியல, எப்படியாவது இதுல இருந்து நான் வெளிய போறதுக்கான வழிய சொல்லுங்க” தினமும் இப்படிப்பட்ட சிலரையாவது நான் எனது கிளினிக்கில் பார்த்து விடுகிறேன். எப்படிப் பிரிவது? என்பதுதான் அவர்களின் தவிப்பு. நீண்ட நாள் காதலன் தன்னை நிராகரிக்கிறான் என்பது தெளிவாகத் தெரிந்த பின்னரும் அவனை விட்டு நீங்க முடியாமல் இருப்பது, திருமணத்தைத் தாண்டிய ஓர் உறவு தவறு என்று தெரிந்த பின்னரும்கூட அதை விட்டு வெளியே போக முடியாமல் வருந்துவது, திருமணம் தரும் வலிகளில் இருந்து, வன்முறைகளில் இருந்து நிரந்தரமாகச் செல்ல முடிவு செய்து அதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிப்பது எனச் சேர்வது எப்படி என்று வருவோரைவிட, பிரிவது எப்படி என்னிடம் வருபவர்களின் எண்ணிக்கை சில நேரங்களில் அதிகமாகவே இருக்கிறது. அதுவும் நவீன காதல்களில் லிவிங்கில் இருக்கும் நிறைய இணையர்களில், தங்கள் உறவு முடிவுக்கு வருவதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிப்பவர்கள் ஏராளமானவர்கள். ஒரு பால் உறவிலும்கூடப் பிரிவை தாங்கிக்கொள்ள, ஏற்றுக்கொள்ளாமல் துயரத்தில் உழல்பவர்கள் நிறையப் பேர். இவர்கள் அனைவரின் பிரச்சினையும் ஒன்றே ஒன்று தான், பிரிவு தரும் வலியைத் தாங்க முடியாமல் இருப்பதே! ஓர் ஆத்மார்த்தமான உறவு என்பது எப்போதும் நம்மைப் பற்றியான நமது மதிப்பீட்டை உயர்வாகத்தான் கொண்டிருக்கும், எத்தனையோ முரண்பாடுகள் இருந்தாலும் ஒருவர் மீதான மதிப்பு என்பது மாறாமல் இருக்கும், பிறரின் முன்னிலையில் தனது இணையைப் பெருமிதமாகவே காட்டிக்கொள்ள விளைவார்கள். தனது இணை அவமானப்படுவதையோ அல்லது குற்றவுணர்ச்சி கொள்வதையோ ஒர் ஆத்மார்த்த காதலில் உள்ளவர்கள் நிச்சயம் விரும்ப மாட்டார்கள். ஓர் உறவின் விளைவாக நான் தாழ்வு மனப்பான்மை கொண்டாலோ, அவமானப்பட்டாலோ, குற்றவுணர்ச்சி கொண்டாலோ அந்த உறவு ஆத்மார்த்தமானதாக இல்லையென்று பொருள். அப்படிப்பட்ட உறவு இருவரையும் எப்போதும் காயப்படுத்திக்கொண்டேதான் இருக்கும், அப்படிப்பட்ட உறவை முடிவுக்குக் கொண்டு வருவதன் வழியாகவே அந்த உறவையும், அதில் உள்ளவர்களையும் காப்பாற்ற முடியும்.  அப்படிப்பட்ட உறவில் இருந்து பிரிய வேண்டும் என்ற முடிவு எடுக்கும்போது முதலில் அந்த முடிவில் உறுதியாக இருக்க வேண்டும். பிரிவதற்கான படிநிலைகள்: பிரிவதற்கான காரணங்களை உணர்வது பிரிவதற்கான முடிவைப் பரஸ்பரமாக எடுப்பது முடிவை ஏற்றுக்கொள்வது பிரிவின் வலியைக் கடந்து வருவது பிரிவில் இருந்து முழுமையாக வருவது பிரிய வேண்டும் என முடிவுசெய்துவிட்டால் அதற்கான காரணங்களை இருவரும் நிதானமாக, பரஸ்பரக் குற்றசாட்டுகள் இன்றி நிதானமாக உரையாட வேண்டும். ஏன் இதைத் தொடர வேண்டாம் என்பதை அத்தனை முதிர்ச்சியாக இருவரும் விவாதித்து முடிவெடுக்க வேண்டும். நிறைய நேரங்களில் பிரிய வேண்டும் என ஒருவர் மட்டுமே முடிவு செய்து விட்டு அதை இன்னொருவரிடம் தெரிவிக்காமல் அவரே புரிந்து கொள்ளட்டும் என அவரை அலட்சியம் செய்யும் போதுதான் நிறைய பிரச்சினைகள் வருகின்றன அது இந்தப் பிரிதலை இன்னும் சிக்கலாக்குகிறது. ஓர் உறவில் நாம் இருக்கும் போது அதை தொடர வேண்டாம் என நினைத்தால் அதற்கான காரணங்களைத் தெரிந்து கொள்ளக்கூடிய உரிமை இன்னொருவருக்கு இருக்கிறது, அதனால் அந்த முடிவைத் தெளிவாக இணையருக்கு தெரிவிக்கவேண்டிய கடமை அந்த முடிவை எடுத்தவருக்கு இருக்கிறது. அவர் அந்தக் காரணங்களை ஏற்றுக்கொள்கிறாரோ இல்லையோ அதைச் சொல்ல வேண்டியது ஒருவரின் பொறுப்பு. அதே போல நிறைய நேரங்களில், பிரியலாம் என்ற முடிவை எடுத்த பின்பும் அதை ஏற்றுக்கொள்வதில் இருக்கும் தயக்கம் அந்தப் பிரிவைச் சிக்கலாக்கும். பல்வேறு காரணங்களால் பிரிய வேண்டும் என்ற முடிவை எடுத்த பின், அதை இன்னொருவரிடம் தெளிவாகத் தெரிவித்த பிறகு அந்த முடிவை ஏற்றுக்கொள்ள வேண்டும். “இல்லை நான் இன்னும் முழுமையாகப் பிரியவில்லை, நாளைக்கேகூட அவர் திரும்ப என்னிடம் பேசுவதற்கு வாய்ப்பிருக்கிறது, அப்படிப் பேசினால் திரும்பவும் அத்தனையும் தொடரும்” எனச் சாத்தியமற்ற எதிர்பார்ப்புகளை மீண்டும் மீண்டும் கொண்டிருப்பதால் அந்தப் பிரிவைச் சார்ந்த துயரம் இன்னும் பலமடங்காகும். ஓர் இழப்பை, அது இழப்பென்று ஏற்றுக்கொண்டால் மட்டுமே அந்த இழப்பில் இருந்து நம்மால் வெளியே வர முடியும். இல்லை நான் இழக்கவில்லை என நமக்கு நாமே சமாதானம் செய்து கொண்டிருந்தால் அந்த இழப்பில் இருந்து வெளியே வரும் காலமும் அதிகமாகும், காயமும் அதிகமாகும். பிரிதல் என்பது நினைவுகளாலானது. ஒருவரை விட்டு ஒருவர் நீங்கும்போது அவரைச் சார்ந்த நினைவுகளும், அவருடன் இருந்த கணங்களின் நல்லுணர்வுகளும் ஒருவரை ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தும். அந்தத் துயரத்தை தவிர்க்க முடியாது. அந்தத் துயரமே அத்தனை காலக் காதலின் அடையாளம். அதை ஒருவர் கடந்துதான் வரவேண்டும். “என்னால அவளோட நினைவுகளை தாங்கிக்க முடியல,ரொம்ப கஷ்டமா இருக்கு, ஏதாவது மாத்திரை இருந்தா கொடுங்க, அவள மறக்கற மாதிரியான மாத்திரை” என நிறையப் பேர் கேட்பார்கள். ஒருவரை மறப்பதற்கான மாத்திரை என்பது உலகத்தில் இதுவரையிலும் கண்டுபிடிக்கவில்லை, அப்படி ஒரு மாத்திரை இருந்தால் உலகத்திலேயே அதிக விலையுள்ள மாத்திரை அதுவாகத்தான் இருக்கும். பிரிவு என்பது துயரமானதே. அந்தத் துயரத்தைக் கடந்து வருவதே ஒரு பிரிவின் உண்மையான சவால். கடந்து வர எவ்வளவு நாள் ஆகும் என்பது உங்கள் காதலை, உங்கள் முதிர்ச்சியை, பிரிவை ஏற்றுக்கொண்ட பக்குவத்தை அடிப்படையாக்க் கொண்டது. முழுமையாகப் பிரிவதுதான் பிரிவை இன்னும் இலகுவாக்கும். “நான் கொஞ்சமாக அவனிடம் இருந்து வெளியே வந்துவிடலாம் என இருக்கிறேன், திடீரென நான் பேசுவதை நிறுத்திக்கொண்டால் அவன் தாங்க மாட்டான், அதுவே நான் அவனிடம் இருந்து சிறிது சிறிதாக விலகினால் அவன் புரிந்துகொள்வான்” என்று ஒரு பெண் என்னிடம் சொன்னாள். நிறையப் பேருக்கும் பிரிதலையொட்டி இந்த நிலைப்பாடே இருக்கும். மதுவை எப்படிக் கொஞ்சம் கொஞ்சமாக விட முடியாதோ அதே போலவே ஒரு காதலையும் கொஞ்சம் கொஞ்சமாக விட முடியாது.  தொடர வேண்டாம் என முடிவு செய்து விட்டால் அதில் முழுமையாக இருந்தால் வெளியே வர முடியும். இடையிடையே பேசிக்கொண்டு, பார்த்துக்கொண்டு, ஒருவரை ஒருவர் கண்காணித்துக்கொண்டு இருந்தால் பிரிவு சிக்கலானதாக நிறையக் காயப்படுத்துவதாக, மனவுளைச்சல் கொடுக்கக்கூடியதாக இருக்கும். “நான் அவ கூட ரொம்ப இண்டிமேட்டா இருந்துட்டேன், செக்ஸ் கூட வச்சிகிட்டோம், ஆனால் இனி அப்படி இல்லாம வெறும் ஃபிரண்ட்ஸா மட்டும் இருக்கலாம்னு இருக்கேன்” என அந்த இளைஞன் சொன்ன போது. அப்படி இருப்பதற்கான வாய்ப்புகள் குறைவு எனச் சொன்னேன். ஓர் உறவு ஒரு கட்டத்தை அடைந்துவிட்டால் அதற்கு பிறகு அதன் முந்தைய நிலைக்குக் கொண்டு வந்து அதை நிறுத்துவது கடினம். தினமும் காலையில் இருந்து மது அருந்தும் ஒருவன் திடீரென ஒரு நாள் வந்து இனி நான் வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே மது அருந்துவேன் எனச் சொல்லும் போது அது எப்படிச் சாத்தியமில்லையோ அதே போலவே ஓர் உறவை அதன் முந்தைய நிலைகளுக்கு ஒருபோதும் எடுத்து வர முடியாது. பிரியவேண்டும் என முடிவெடுத்தால் அதில் உறுதியாகவும், முழுமையாகவும் இருந்தால் மட்டுமே பிரிய முடியும். ஓர் உன்னதமான உறவு என்பது எத்தனைக் காலம் அது நீடித்தது என்பதில் மட்டும் இல்லை, ஒருவேளை அது ஒரு முடிவுக்கு வந்தால் அந்தப் பிரிவின் முடிவை எத்தனை காதலுடன் அதை அணுகியது என்பதில்தான் இருக்கிறது. பிரிதலின் வழியாகவே நாம் அதிலிருந்த காதலை முழுமையாக உணர முடியும்.   https://uyirmmai.com/article/uyirmmai-magazine-march-2024-article-05/
    • எலும்பு வலு இழப்பது ஏன்? கு.கணேசன் ஐம்பது வயதைக் கடந்துவிட்டால் போதும் உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, கண் புரை, காது கேளாமை, நடையில் தள்ளாட்டம், மாரடைப்பு, மூட்டுவலி எனப் பல நோய்கள் வரிசைகட்டி வந்து நிற்கும். இப்போது புதிதாக ‘ஆஸ்டியோபோரோசிஸ்’ (Osteoporosis) என்று நவீன மருத்துவர்களால் அழைக்கப்படுகிற ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ இந்த வரிசையில் சேர்ந்துள்ளது. அதிலும் குறிப்பாக, மாதவிலக்கு நின்ற பெண்களுக்கு இந்த நோய் அதிக பாதிப்பைத் தருகிறது. உடலுழைப்பு குறைந்துபோனது, உடற்பயிற்சி இல்லாதது, மேற்கத்திய உணவுமுறைகளைப் பின்பற்றுவது போன்ற பல காரணங்களால் இந்த நோய் ஏற்படுவது இப்போது அதிகரித்துவருகிறது. ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ என்றால் என்ன? நம் உடலுக்கு வடிவம் தருகிற எலும்புகள்தான் உடல் உறுப்புகளையும் தாங்கிப் பிடிக்கின்றன; நடப்பது, நிற்பது, குனிவது போன்ற உடல் இயக்கங்களுக்குத் தசைகளுடன் இணைந்து ஒத்துழைக்கின்றன. இதற்காக ஒவ்வொரு எலும்பும் குறிப்பிட்ட கால இடைவெளியில் தன்னைப் புதுப்பித்துக்கொள்கிறது. எலும்பில் உள்ள பழைய செல்கள் அழிக்கப்பட்டு, புதிய செல்கள் உற்பத்தியாகின்றன. இளமையில் இந்தச் செயல்பாடு மிக வேகமாக நிகழும். வயதாக ஆக இது மெதுவாக நிகழும். பொதுவாக 35 வயதுக்குப் பிறகே புதிய செல்கள் உருவாவது தாமதமாகும். பழைய செல்கள் அழிந்த இடங்களில் புதிய செல்கள் உருவாகாமலும் போகும். அப்போது எலும்பின் இயல்பான அடர்த்தி (Bone mass) குறையும். இதற்கு ‘ஆஸ்டியோபீனியா’ (Osteopenia) என்பது ஆங்கிலப் பெயர். தமிழில், ‘எலும்புத் திண்மக் குறைவு நோய்’. ஐம்பது வயதுக்கு மேல் எலும்பின் அடர்த்தி இன்னும் குறையும்போது அதில் சிறுசிறு துவாரங்கள் விழுந்து தன் வலிமையை இழக்கும். இதன் விளைவாக எளிதில் நிற்க முடியாமல், அதிக தூரம் நடக்க முடியாமல் போகும். நாளடைவில் அந்த எலும்பு முறிவு ஏற்பட அதிக வாய்ப்பு உண்டாகிறது. இதைத்தான் ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ என்கிறோம். இதற்கு ‘எலும்பு நலிவு நோய்’ என்றொரு பெயரும் உண்டு.       காரணங்கள் என்னென்ன? எலும்பு வலிமையை இழப்பதற்குப் பல காரணங்கள் உள்ளன. அவற்றுள் முதுமை ஒரு முக்கியக் காரணம். முதுமையில் ஆண், பெண் இருபாலருக்கும் இது வருகிறது. ஆண்களுக்கு டெஸ்டோஸ்டீரான் ஹார்மோன் குறைவதால் இது ஏற்படுகிறது. பெண்களுக்கு மாதவிலக்கு நின்றதும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் சுரப்பது குறைந்துவிடுவதால் இவர்களுக்கு எலும்பு வலுவிழந்து ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ வந்துவிடுகிறது. அடுத்து, புகைபிடித்தல், மது அருந்துதல், போதைப்பழக்கம், உடல் பருமன், தைராய்டு பிரச்சினை போன்ற பலதரப்பட்ட காரணிகளால் இந்த நோய் ஏற்படுகிறது.  குடும்பத்தில் யாருக்காவது இந்த நோய் இருந்தால், வம்சாவளியாகவும் அக்குடும்பத்தில் பிறந்தவர்களுக்கு இது வரலாம். வறுமை, பசியின்மை, வயிற்றில் அறுவைச் சிகிச்சை போன்றவற்றின் காரணமாக தேவையான ஊட்டச் சத்துள்ள உணவுகளை நெடுங்காலம் சாப்பிடாதவர்களுக்கு கால்சியம் மற்றும் வைட்டமின்-டி குறைபாடு ஏற்படும். இந்த இரண்டு ஊட்டச்சத்துகளும் எலும்பின் வலிமைக்கும் திண்மைக்கும் அடிப்படையானவை. எனவே, இந்தச் சத்துகள் குறையும்போது இவர்களுக்குக் காலப்போக்கில் ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ வருவதுண்டு.  இதுபோல், உடற்பயிற்சி இல்லாதவர்களுக்கும், உடலுழைப்பு குறைந்தவர்களுக்கும் வலிப்பு நோய்க்கான மாத்திரைகள் மற்றும் ஸ்டீராய்டு மருந்துகளைத் தொடர்ந்து பல வருடங்களுக்கு எடுத்துக்கொள்பவர்களுக்கும் இந்த நோய் வருவதுண்டு. ஒல்லியாக உள்ளவர்களுக்கு ஏற்கெனவே எலும்புகள் வலுவிழந்து இருக்கும் என்பதால், முதுமையில் இவர்களுக்கு ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ விரைவில் வந்துவிடும். அட்ரீனல் ஹார்மோன் மற்றும் பாராதைராய்டு ஹார்மோன்களின் அதீத செயல்பாடு காரணமாகவும் சிலருக்கு இந்த நோய் ஏற்படுவதுண்டு.   என்னென்ன தொல்லைகள்? பெரும்பாலும் இந்த நோய் இருப்பது நோயாளிக்கே தெரியாது. இந்த நோய் பல ஆண்டுகளாக உடலுக்குள்ளேயே மறைந்திருந்து, இறுதியில் எலும்பு முறிவு ஏற்படும்போதுதான் இந்த நோயின் விளைவாகவே எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது என்று தெரியவரும். கீழே விழாமல், உடலில் எவ்வித அடியும் படாமல் எலும்பு முறிவு ஏற்படுவதுதான் இந்த நோயின் தனிச் சிறப்பு. இடுப்பெலும்பு, முதுகெலும்பு, மணிக்கட்டு ஆகியவற்றில்தான் எலும்பு முறிவு அதிகமாக ஏற்படும். நோயைக் கண்டறிவது எப்படி?       முன்பெல்லாம் எலும்புகளை எக்ஸ்-ரே படமெடுத்துப் பார்த்து இந்த நோய் இருப்பதைக் கணிப்பதுதான் வழக்கத்தில் இருந்தது. பொதுவாக 50 சதவீதம் எலும்பு வலுவிழந்தால்தான் எக்ஸ்-ரேக்களில் இந்த நோய் தெரியும். ஆனால், அதற்குள் பலருக்கும் எலும்பு முறிவு ஏற்பட்டுவிடும் என்பதால் இந்தப் பரிசோதனையைக் கொண்டு நோயை ஆரம்பநிலையில் கண்டுபிடிக்க முடியாத நிலைமை நீடித்தது. இப்போது ‘டெக்சா ஸ்கேன்’ (Dexa Scan) எனும் பரிசோதனை வந்துள்ளது. இதுதான் எக்ஸ்-ரே பரிசோதனையைவிடச் சிறந்தது. நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் மருத்துவரைச் சந்தித்து இந்தப் பரிசோதனையைச் செய்துகொள்ள வேண்டும். இது எலும்பின் அடர்த்தியை – அதாவது திண்ம அளவை - (Bone Mineral Density – BMD) அளக்கும் பரிசோதனை. எலும்பு முறிவு ஏற்படுவதற்கு முன்பாகவே எலும்பின் திண்ம அளவைச் சொல்லிவிடும். அதை ‘டி ஸ்கோர்’ (T Score) என்று சொல்கிறார்கள். இந்த அளவு பிளஸ் 1 எஸ்டிக்கும், மைனஸ் 1 எஸ்டிக்கும் இடையில் இருந்தால் அது இயல்பு அளவு. பிளஸ் 1 எஸ்டிக்கு மேல் இருந்தால் மிக நல்லது. இந்த அளவு மைனஸ் 1 முதல் மைனஸ் 2.5 எஸ்டிக்கும் இடைப்பட்டதாக இருந்தால் அது எலும்புத் திண்மக் குறைவு நோயைக் குறிக்கும். மைனஸ் 2.5 எஸ்டிக்கும் கீழ் இருந்தால் அது எலும்பு வலுவிழப்பு நோயைக் குறிக்கும். இந்த அளவுகளை வைத்து ஒருவருக்கு எதிர்காலத்தில் எலும்பு முறிவு ஏற்பட வாய்ப்புள்ளதா என்பதையும் அனுமானித்துவிடலாம். எலும்பின் திண்ம அளவைத் தெரிந்துகொண்டு சிகிச்சையை மேற்கொள்கிறவர்களுக்கு அது பலன் தருகிறதா என்பதையும் தெரிந்துகொள்ளலாம். ஆனால், இதற்கு ஆகும் செலவு சிறிது அதிகம் என்பதால் அனைவராலும் இந்தப் பரிசோதனையைச் செய்துகொள்ள முடியாது. ரத்தத்தில் கால்சியம் மற்றும் வைட்டமின்-டி அளவுகளைத் தெரிந்துகொண்டும் இந்த நோயை ஓரளவுக்கு அனுமானிக்கலாம். யாருக்கு வாய்ப்பு அதிகம்? உலக அளவில் 50 வயதுக்கு மேற்பட்ட பெண்களில் மூன்றில் ஒருவர் என்ற அளவிலும் ஆண்களில் எட்டில் ஒருவர் என்ற அளவிலும் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று ஒரு புள்ளிவிவரம் சொல்கிறது. எனவே, இந்த நோயை ஆரம்பத்திலேயே கண்டறிவதற்காக சர்வதேச ஆஸ்டியோபோரோசிஸ் நிறுவனம் ஒரு குறிப்பைத் தந்துள்ளது. அதற்கு ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ வரும் வாய்ப்புள்ளவர்களைக் கண்டறியும் ஒரு நிமிடச் சோதனை? (One minute osteoporosis risk test) என்று பெயர். கீழே தரப்பட்டுள்ள கேள்விகளைப் படியுங்கள். இவற்றில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கேள்விகளுக்கு ‘ஆம்’ என்று பதில் கூறினால் உங்களுக்கு எலும்பு வலிமை இழக்க வாய்ப்புகள் அதிகம் என்று பொருள். அப்படியானால் உடனே மருத்துவரைச் சந்தித்து ஆலோசனை பெறுங்கள். உங்களின் பெற்றோரில் அல்லது குடும்பத்தில் யாருக்காவது லேசாக தடுக்கி விழுந்து அல்லது லேசாக அடிபட்டதும் எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கிறதா? லேசாக தடுக்கி விழுந்து அல்லது லேசாக அடிபட்டதும் உங்களுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கிறதா? உங்களுக்கு 45 வயதுக்கு முன்னரே மாதவிலக்கு நின்றுவிட்டதா? உங்களுக்கு மூன்று செ.மீ.க்கு மேல் உயரம் குறைந்துவிட்டதா? அதிகமாக மது அருந்தும் பழக்கம் உள்ளதா? அதிகமாக புகைபிடிக்கும் பழக்கம் உள்ளதா? சிகிச்சை என்ன? இந்த நோய் ஏற்பட்ட பின்பு இதை முழுமையாகக் குணப்படுத்த முடியாது. அதாவது, வலிமை இழந்த எலும்பை மீண்டும் வலிமை பெறச் செய்ய முடியாது. சிகிச்சையின் மூலம் மற்ற எலும்புகளை வலிமை பெறச் செய்யலாம். அவ்வளவே. இதைத் தடுப்பதற்குத்தான் வழி இருக்கிறது. முதுமையில் கால்சியம் மற்றும் வைட்டமின்–டி சத்துகள் குறைவதால், அவற்றுக்கு சிகிச்சை தரப்படும். தினமும் ஒருவருக்கு 500 - 1000 மில்லி கிராம் கால்சியம் தேவை. ஆண்களோடு ஒப்பிடும்போது பெண்களுக்குக் கால்சியம் தாது மிகமிக அவசியமான ஒரு சத்துப்பொருள். பெண்கள் மாதவிலக்கு ஆகும்போது, கர்ப்பம் அடையும்போது, பிரசவம் ஆகும்போது, தாய்ப்பால் தரும்போது என்று பல காலகட்டங்களில் கால்சியம் அவர்களுக்கு அதிகப்படியாகத் தேவைப்படுகிறது. இதை உணவிலிருந்து பெறுவது மிக நல்லது. கால்சியம் மிகுந்துள்ள திரவ உணவுகளில் முதலிடம் பிடிப்பது, பால். 100 மி.லி. எருமைப்பாலில் 200 மி.கிராம்; 100 மி.லி. பசும்பாலில் 100 - 150 மி.கிராம் கால்சியம் உள்ளது; திட உணவுகளில் கேழ்வரகு, கொள்ளு, சோயாபீன்ஸ், உளுந்து, மீன், இறால், நண்டு, முட்டை, ஆட்டிறைச்சி, பீட்ரூட், அவரை, துவரை, கீரைகள், பட்டாணி, காலிஃபிளவர், வெங்காயம், வெண்டைக்காய், வெந்தயம், உருளைக்கிழங்கு, கருணைக்கிழங்கு, மரவள்ளிக்கிழங்கு, தண்டுக்கீரை, வெள்ளைப்பூண்டு, முள்ளங்கி, எலுமிச்சை, திராட்சை, கொய்யாப்பழம் போன்றவற்றிலும் கால்சியம் உள்ளது. இந்த உணவுகளை அதிகப்படுத்திக்கொண்டால் நமக்குத் தேவையான கால்சியம் கிடைத்துவிடும். அல்லது தினமும் 500 – 1000 மில்லி கிராம் கால்சியம் மாத்திரை ஒன்றைச் சாப்பிடலாம்.  என்னதான் நீங்கள் கால்சியம் மிகுந்துள்ள உணவுகளைத் தேடிப்பிடித்துச் சாப்பிட்டாலும், அந்த கால்சியம் உடலுக்குள் உள்ள எலும்புக்குள் செல்ல வேண்டுமானால், வைட்டமின்–டி அவசியம். தினமும் சூரிய ஒளியில் அரை மணி நேரம் இருப்பதன் மூலம் வைட்டமின்–டி இயற்கையாகவே கிடைப்பதற்கு வழிசெய்யலாம். அல்லது பால், முட்டை, மீன், ஈரல் போன்ற உணவுகளில் இதைப் பெறலாம். இப்போது வைட்டமின்-டி மாத்திரைகளும் கிடைக்கின்றன. மருத்துவரின் ஆலோசனைப்படி தினமும் 2000 யூனிட்டுகள் என்ற அளவில் ஒரு மாத்திரையைச் சாப்பிடலாம். அல்லது 60,000 யூனிட்டுகள் என்ற அளவில் வாரத்துக்கு ஒரு மாத்திரையைச் சாப்பிடலாம். சமீபத்தில் இந்த நோய்க்கு ஊசி மருந்துகளும் வந்துள்ளன. மருத்துவரின் ஆலோசனையில் இவற்றையும் பயன்படுத்திப் பலன் அடையலாம். சில பெண்களுக்கு ‘ஹார்மோன் மாற்றுச் சிகிச்சை’ (Hormone Replacement Therapy) தரப்படுவதும் உண்டு. என்றாலும் இதன் பக்க விளைவாகக் கருப்பை வாய்ப் புற்றுநோய் வருவதற்கு அதிக வாய்ப்பு உள்ளதாக ஓர் எச்சரிக்கைத் தகவலும் வந்துள்ளது. எனவே, இவர்கள் வருடத்துக்கு ஒரு முறை ‘பாப் ஸ்மியர்’ என்ற பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும்.  தடுப்பது எப்படி? இளம் வயதிலிருந்தே தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். வேகமாக நடப்பது, ஓடுவது, சைக்கிள் ஓட்டுவது, நீச்சல், கூடைப்பந்து விளையாட்டு, ஸ்கிப்பிங் போன்றவை மிகச் சிறந்த உடற்பயிற்சிகள். யோகாசனங்களைச் செய்வதும் நல்லது. புகைபிடிக்கக் கூடாது. மது அருந்தக் கூடாது. காபி, தேநீர் அருந்துவதை அளவாக வைத்துக்கொள்ள வேண்டும். ஒரு நாளில் 3 கப்புகளுக்கு மேல் இவற்றை அருந்தக் கூடாது. எல்லாச் சத்துகளும் கலந்த - ஊட்டச்சத்துள்ள - உணவுகளை சிறு வயதிலிருந்தே உட்கொள்ள வேண்டும். 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் உடலுக்குப் போதுமான அளவு கால்சியம் கிடைக்கவில்லை என்றால், மருத்துவரின் யோசனைப்படி கால்சியம் மாத்திரையை எடுத்துக்கொள்ளலாம். ஸ்டீராய்டு மாத்திரைகளைத் தேவையின்றி சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். நடக்கும்போது, குளிக்கும்போது, பேருந்தில் ஏறும்போது என இயல்பாக இயங்கும்போது தரையில் வழுக்கி விழாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.  இம்மாதிரியான தடுப்புமுறைகளைக் கையாண்டு ஒவ்வொருவரும் தங்கள் எலும்புகளை வலுவாக வைத்துக்கொள்வதில் அக்கறை செலுத்தினால்தான் முதுமையில் ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ வராமல் தடுத்துக்கொள்ள முடியும். https://www.arunchol.com/dr-g-ganesan-article-on-osteoporosis
    • கல்லறையில் உடல்கள் தோண்டியெடுப்பு.. மனித எலும்பில் உருவாகும் போதைப் பொருள்.. அடிமையாகும் இளைஞர்கள்! ’போதைப் பொருட்கள் உயிருக்குக் கேடு விளைவிக்கும்’ என விளம்பரப்படுத்தப்பட்டாலும், அதன் விற்பனையும் அதற்கு அடிமையாகும் நபர்களின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்தே வருகிறது. உலகளவில் பலர் இந்தப் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகி வருகின்றனர். அந்த வகையில் மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் இதற்கு பலர் இளைஞர்கள் அடிமையாகி உள்ளனர். அதிலும், மனித உடல் எலும்புடன் தயாரிக்கப்படும் ஒருவித போதைப் பொருளுக்குத்தான் அவர்கள் அதிகமாக அடிமையாகி இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு போதைப் பொருளுக்கு அடிமையான இந்நாட்டு மக்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது. அதிலும், இந்நாட்டிலுள்ள பெரும்பாலான மக்கள் ’குஷ்’ என்ற ரக போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. இந்த ’குஷ்’ போதைப்பொருள் மனித எலும்புகளிலிருந்து உருவாக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளாக இந்த ’குஷ்’ ரக போதைப்பொருள் சியரா லியோன் பகுதியில் பழக்கத்திலிருந்து வருகிறது. இதன் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அதனை தயாரிப்பவர்கள் கல்லறையில் இருக்கும் புதைகுழிகளைத் தோண்டி பிணங்களை சேகரித்து அதன் எலும்புகளிலிருந்து ’குஷ்’ போதைப்பொருளைத் தயார் செய்வதகாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த எலும்புகளுடன் , கஞ்சா மற்றும் சில இரசாயனங்கள் கலந்து இந்தப் போதைப் பொருள் தயாரிக்கப்படுகிறது. இதற்காக, சியரா லியோனில் இதுவரை நூற்றுக்கணக்கான புதைகுழிகள் தோண்டப்பட்டுள்ளன. இந்த போதை மருந்து கிட்டத்தட்ட பல மணி நேரம் போதை தருவதாகச் சொல்லப்படுகிறது. மேலும் இந்தப் போதைக்கு அடிமையான இளைஞர்கள் தங்களிடம் இருக்கும் பொருட்களை (புத்தகங்கள், ஆடைகள்) விற்று அந்த போதை மருந்தை வாங்குவதாகவும், அதற்குப் பிறகு வீட்டில் உள்ள பொருட்களைத் திருடிச் சென்று கொடுத்து வாங்குவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. போதைப்பொருள் மூலம் நாட்டில் குடியிருப்பதற்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அந்த நாட்டின் ஜனாதிபதி கவலை தெரிவித்துள்ளார். இதன் பிடியிலிருந்து மக்களை மீட்க போதைப்பொருள் ஒழிப்பு மையங்கள் அமைக்கப்படும் எனவும் போதைப்பொருள் விற்பனையாளர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்த நாட்டு ஜனாதிபதி எச்சரித்துள்ளார்.   https://thinakkural.lk/article/299459
    • வடக்கு மீனவர்களின் ஓயாத போராட்டம் ஜே.ஏ.ஜோர்ஜ் “அது ஒரு சனிக்கிழமை, நான் எனது வலைகளை எடுப்பதற்காக கடலுக்கு சென்றேன். வலை நிறைய மீன்களை எதிர்பார்த்து சென்ற எனக்கு அங்கு அதிர்ச்சியே மிஞ்சியது. ஏனென்றால் நான் விரித்து வைத்திருந்த வலைகள் அங்கு இல்லை.  எனது வலைகளை இழுவை படகுகளில் வந்த இந்திய மீனவர்களை சேதப்படுத்தி விட்டனர். ஆனால் இது முதல் முறையாக நடக்கும் சம்பவம் இல்லை” -  இவ்வாறு தனது கதையை கூறும் மீனவரான ரெஜினோல்ட் தனது கடந்த கால அனுபவங்களுடன் ஒப்பிடுகையில் தற்போதைய தனது போராட்டம் தீவிரமடைந்திருப்பதாக கூறுகின்றார். 20 ஆண்டுகளாக தனது வாழ்க்கைக்காக கடல் அலைகளுடன் போராடி வரும் ரெஜினோல்ட் மட்டுமன்றி வடமாகாண மீனவர்களில் அதிகளவானவர்கள் தற்போது இவ்வாறு கடும் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளனர். இலங்கை கடற்பரப்பிற்குள் இழுவை படகுகளை பயன்படுத்தி இந்திய மீனவர்கள் முன்னெடுக்கும் மீன்பிடி நடவடிக்கைகளே இந்த நெருக்கடிக்கு காரணமாக உள்ளது. நெடுந்தீவைச் சேர்ந்த ரெஜினோல்ட் தனது தந்தையுடன் இணைந்து நீண்டகாலம் மீன்பிடியில் ஈடுபட்ட நிலையில், திருமணத்துக்கு பின்னர் தற்போது தனியாக தொழில் செய்கின்றார். “நான் என் படகை மோட்டார் இல்லாமல் பயன்படுத்துகிறேன். மோட்டார் ஒன்றை வாங்க என்னிடம் போதுமான பணம் இல்லை. அதனால் என்னால் அதிக தூரம் செல்ல முடியாது. கடந்த காலங்களில் மீன்பிடிக்க பாரம்பரிய வலைகளைப் பயன்படுத்தினேன். இழுவை படகுகளில் வந்த இந்திய மீனவர்களை எனது வலைகளை சேதப்படுத்தி விட்டனர். எனவே, இப்போது மீன்பிடிக்க சிறிய வலையைப் பயன்படுத்துகிறேன். இதனால், முன்பு போல் மீன் பிடிக்க முடியவில்லை. கடலில் இரண்டு மூன்று மணி நேரம் மாத்திரமே செலவிட முடிகின்றது. எனக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர்.  எனது மூத்த மகன் ஐந்தாம் வகுப்பு படிக்கிறான். அவர்களுக்காக நான் பல செலவுகளைச் செய்ய வேண்டியிருக்கிறது. பொருட்களின் விலை முன்பை விட அதிகமாக உள்ளது. குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவது இப்போது மிகவும் கடினமாக உள்ளது” என்கிறார் ரெஜினோல்ட். அமெரிக்க பாதுகாப்பு பல்கலைக்கழகம் 2008ஆம் ஆண்டு துருக்கியின் இஸ்தான்புல் நகரில் ஏற்பாடு செய்திருந்த செயற்குழு கூட்டத்தில் கலாநிதி சனத் டி சில்வாவினால் முன்வைக்கப்பட்ட அறிக்கையின்படி, இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான கடல் எல்லை மூன்று கடல் பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. வடக்கில் வங்காள விரிகுடா, நடுவில் பாக்கு நீரிணை, தெற்கில் மன்னார் விரிகுடா என இந்த கடல் எல்லைகள் உள்ள நிலையில், பாக்கு நீரிணை ஊடாக இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான சராசரி தூரம் சுமார் 32 கிலோமீற்றர்கள் என அறிக்கை கூறுகிறது. கச்சதீவில் இருந்து இந்தியாவின் ராமேஸ்வரம் வரையிலான தூரம் சுமார் 14 கடல் மைல்கள், அதாவது சுமார் 26 கிலோமீட்டர்கள். யாழ்ப்பாணத்தில் இருந்து கச்சத்தீவு வரை சுமார் 60 கிலோமீட்டர் தொலைவான கடற்பரப்பில் தனது அதிகாரத்தை கொண்டுள்ள இலங்கை கடற்படை, சர்வதேச கடல் எல்லையை தாண்டி இலங்கை கடலுக்குள் நுழையும்  இந்திய இழுவை படகுகள் குறித்து அவ்வப்போது  நடவடிக்கை எடுத்து வருகிறது. எவ்வாறாயினும், இலங்கை  கடற்பரப்புக்குள் இந்திய இழுவை படகுகள் பிரவேசிப்பது  நாளாந்தம் இடம்பெறுவதாக வடபகுதி மீனவ சங்க தலைவர்கள் கூறுகின்றனர். “இது ஒரு தீவிரமான பிரச்சினை. இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்படை உள்ளிட்டவர்கள் தேவையான நடவடிக்கை எடுக்காதமையே இந்த பிரச்சினை தொடர்வதற்கு முக்கிய காரணமாக உள்ளது.  ஏராளமான இந்திய இழுவை படகுகள் இலங்கை கடல் பகுதிக்குள் நுழையும் நிலையில், கைது செய்யப்படும் இந்திய மீனவர்கள் மற்றும் கைப்பற்றப்படும் இந்திய இலுவை படகுகளின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே உள்ளது. சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடி தேவையான நடவடிக்கை எடுத்து இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண மீன்பிடி அமைச்சு நடவடிக்கை எடுப்பதாகத் தெரியவில்லை. இந்திய மீனவர்கள் பயன்படுத்தும் இழுவை படகுகள் வடபகுதி மீனவர்களுக்கு சொந்தமானதை படகுகளை விட பெரியவை. அவை தினமும் வடக்கு கடல் பகுதிக்குள் நுழைவதால், ஏராளமான பிரச்னைகள் ஏற்படுகின்றன. இதனால் வடபகுதி மீனவர்களின் வருமானம் பாதிக்கப்படுவதுடன், இந்திய இழுவை படகுகளால் இலங்கை மீனவர்களின் வலைகளுக்கு சேதம் ஏற்படுகின்றது. அத்துடன், எமது மீன்பிடி வளம் பறிபோகிறது. எமது மீனவர்களுக்குச் சொந்தமான படகுகளை சேதப்படுத்திய சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன”- என யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழிலாளர் சமாசங்களின் சம்மேளன தலைவர் அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்தார். அத்துடன், இந்தியாவில் இருந்து இழுவை படகுகள் வருவதை தடுக்கும் வகையில் இலங்கையில் சட்ட அமைப்பு இருப்பதாகவும் எனினும், அவற்றால் நடைமுறையில் இலங்கை மீனவர்களால் எந்தவித பயனையும் பெற்றுக்கொள்ள முடியவில்லை என, அன்னராசா சுட்டிக்காட்டினார். 1979 ஆம் ஆண்டின் 59 ஆம் இலக்க கடற்றொழில் (வெளிநாட்டு மீன்பிடி படகுகளை ஒழுங்குபடுத்துதல்) சட்டத்தின் 04ஆவது பிரிவின்படி, அனுமதியின்றி மீன்பிடி தொடர்பான நடவடிக்கைகளுக்காக வெளிநாட்டு மீன்பிடி படகுகளை இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிக்க பயன்படுத்தக்கூடாது என்று கூறுகிறது. அத்துடன், இலங்கை கடற்பரப்பிற்குள் வெளிநாட்டுப் படகுகள் பிரவேசித்தால், மீன்பிடிக்கப்படுவதைத் தடுக்கும் வகையில், அந்தப் படகில் உள்ள மீன்பிடி சாதனங்களை முறையான முறையில் தடுத்து வைக்க வேண்டும் என்று சட்டத்தின் 05வது பிரிவு கூறுகிறது. வெளிநாட்டுப் படகுகளை நிறுத்தவும், சோதனைகளை நடத்தவும், பிடியாணையுடன் அல்லது இல்லாமலும் படகுகளைக் கைப்பற்றவும், தனிநபர்களைக் கைது செய்யவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.  2018 ஆம் ஆண்டில், இந்த சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டதுடன், இலங்கையில் உள்ள ஆயுதப்படைகளின் தளபதிகள் மற்றும் அதன் அமுலாக்கத்துக்காக கரையோரப் பாதுகாப்புத் திணைக்களத்தின் தலைவர் ஆகியோருக்கு பொறுப்பை வழங்கும் கூடுதல் சரத்துகள் அறிமுகப்படுத்தப்பட்டன. வெளிநாட்டுப் படகுகள் மூலம் இலங்கைக் கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடித்தால் இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும். இந்த குற்றம் தொடர்பான நீதிமன்ற விசாரணைகள் ஒரு மாதத்துக்குள் முடிக்கப்பட வேண்டும் என்று சட்டம் கூறுகிறது. இந்த சட்டத்தை நிறைவேற்றுவதற்கு பொறுப்பான அமைச்சருக்கு விதிமுறைகளை உருவாக்கும் திறன் உட்பட விரிவான அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. 1981 ஆம் ஆண்டு இந்தச் சட்டத்தின் கீழ் இலங்கைக் கடற்பரப்பில் நுழைவதற்கான அனுமதியைப் பெறுவதற்கான நடைமுறைகளை கோடிட்டுக் காட்டும் விதிமுறைகள் வெளியிடப்பட்டன. இந்தச் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு மீன்பிடி அமைச்சு மற்றும் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களம் என்பன மீள தவிர்க்க முடியாத பொறுப்பைக் கொண்டுள்ளன. இந்திய மீனவர்கள் வட கடலில் மேற்கொள்ளும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை முற்றாக நிறுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் தொடர்பிலான கலந்துரையாடல் 2023 ஜனவரி 24 ஆம் திகதி கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்றது.  மேலும், 2023ல் சட்டவிரோத வெளிநாட்டு மீன்பிடி கப்பல்கள் மற்றும் மீனவர்கள் குறித்து அந்தந்த நிறுவனங்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. எவ்வாறாயினும், இந்திய இழுவை படகுகளினால் வடபகுதி மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண போதிய நடவடிக்கைகளை எடுக்க அரசாங்கம் இன்னமும் தவறியுள்ளதுடன், இதனால் பிரச்சினை தொடர்ந்து மோசமாகி வருகிறது. இவ்விடயம் தொடர்பில் வினவிய போது கடற்றொழில் அமைச்சின் செயலாளர் கே.என். குமாரி சோமரத்ன, இந்த பிரச்சினைக்கு இரு நாடுகளுக்கிடையில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட வேண்டும் என தெரிவிக்கின்றார். “இந்த விவகாரம் தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே பல ஆண்டுகளாக விவாதங்கள் நடந்து வருகின்றன. இந்த விடயம் தொடர்பில் மீண்டும் ஒருமுறை கலந்துரையாடலை ஆரம்பிக்குமாறு வெளிவிவகார அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். வெளிவிவகார அமைச்சரும் அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருவதை நாம் அறிவோம். இப்பிரச்சினை தொடர்பாக தற்போதுள்ள சட்டங்களில் திருத்தம் செய்ய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, தற்போது இறுதிக்கட்டத்தில் உள்ளது. தற்போது, முதல் தடவை கைதுக்கான தண்டனை மற்றும் மீண்டும் மீண்டும் கைது செய்யப்பட்டதற்கான தண்டனையை சட்டம் குறிப்பிடுகிறது, ” என்று அவர் கூறுகின்றார். இந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்ய கடற்படையின் அதிகாரத்தைப் பயன்படுத்துவதற்கு ஏன் பணிப்புரை வழங்கப்படவில்லை என வினவியபோது, அந்தச் சட்டம் இன்னமும் அமுலில் உள்ளதாகவும், அதன்படி தற்போது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் செயலாளர் தெரிவித்தார். இது இவ்வாறாக இருக்கும் நிலையில், இந்த ஆண்டு இதுவரையான காலப்பகுதியில் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களின் எண்ணிக்கை 150க்கும் அதிகமாகும். இது அதிக எண்ணிக்கையாக தெரிந்தாலும், நாளாந்தம் இலங்கைக் கடற்பரப்புக்குள் நுழையும் இந்திய மீனவர்களின் வருகையுடன் ஒப்பிடுகையில் இது மிகக் குறைவு என மீனவ சங்கத் தலைவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்த நிலையில், இலங்கை கடற்பரப்பிற்குள் பிரவேசிக்கும் இந்திய மீனவர்களை கண்காணிப்பதற்காக வடக்கில் ‘கடல் காவலர்கள்’ எனப்படும் தன்னார்வ குழுவொன்றை ஸ்தாபிப்பதற்கான அமைச்சரவை பத்திரத்தை கடற்றொழில் அமைச்சர் சமர்ப்பித்துள்ளார். இதேவேளை, இந்திய மீன்பிடி பிரச்சனையால் நாளாந்தம் 350 மில்லியன் ரூபாய் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக அமைச்சு மதிப்பிட்டுள்ளது. இந்த நிலையில், தற்போதைய கடற்றொழில் அமைச்சர் வடக்கில் உள்ள மீனவர்களின் வாக்குகளால் பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டதாகவும், கடற்றொழில் அமைச்சராக பதவியேற்றதன் பின்னர் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு அவர் போதிய தலையீடுகளை மேற்கொள்ளவில்லை என வடமாகாண மீனவர் சங்க தலைவர்கள் குற்றம் சுமத்துகின்றனர். வடக்கில் உள்ள எழுவைத்தீவு, அனலைத்தீவு, நெடுந்தீவு உள்ளிட்ட, மீன் பிடி தொழிலை வாழ்வாதாரமாக கொண்டுள்ள மக்கள் வசிக்கும் தீவு பகுதிகள் இன்னும் இலங்கை கடற்படையினரின் கண்காணிப்பிலேயே உள்ளதை எம்மால் நேரடியாக காண முடிந்தது. இந்த தீவுகளின் கடற்படையினரின் சோதனை சாவடி அல்லது முகாம் இன்னும் செயற்பாட்டிலேயே உள்ளது. இவ்வாறு வடக்கின் கடற்பரப்பை சுற்றி ரோந்து நடவடிக்கையில் ஈடுபடும் இலங்கை கடற்படையினர், இந்திய மீனவர்கள் இலங்கைக்குள் பிரவேசிப்பதை தடுக்க  உரிய நடவடிக்கை எடுக்காதது குறித்து வடபகுதி மீனவர்கள் தமது அதிருப்தியை வெளிப்படுத்துகின்றனர். இலங்கை கடற்படையினர் நினைத்தால் இந்திய மீனவர்களை இலங்கை கடல் வளத்தை சுரண்டாமல் இலகுவாக தடுத்து நிறுத்த முடியும் என்பதே வடபகுதி மீனவர்கள் நம்பிக்கையாகும். ஆனால், அது இன்றுவரை நிறைவேற்றப்படவில்லை என்பது அந்த மீனவர்கள் நிலையை நேரில் பார்க்குத்போது தெளிவாக புலப்படுகின்றது.   https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/வடக்கு-மீனவர்களின்-ஓயாத-போராட்டம்/91-336077
    • யாழ்.பல்கலையின் பொன்விழாவை முன்னிட்டு ஆய்வு மாநாடு! adminApril 18, 2024 யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் யாழ்ப்பாண வளாகம் எனும் பெயரில் இலங்கைப் பல்கலைக்கழகத்தின் ஒரு அங்கமாக ஆரம்பிக்கப்பட்டு இவ்வருடத்துடன் ஐம்பதாண்டைப் பூர்த்தி செய்து பொன்விழாக் காண்கின்றது. அதனை முன்னிட்டு முதலாவது சர்வதேச கல்வியியல் ஆய்வுமாநாட்டை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உயர்பட்டப்படிப்புக்கள் பீடமும் கலைப்பீடத்தைச் சேர்ந்த கல்வியியல் துறையும் இணைந்து ஒழுங்கமைத்துள்ளன. ‘நாளையை வலுப்படுத்தல் – கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வடக்கு மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் கருப்பொருளில் இம்மாநாடு திட்டமிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர்.சி.சிறிசற்குணராசா தலைமையிலும் உயர்பட்டப்படிப்புக்கள் பீடப் பீடாதிபதி பேராசிரியர்.செ.கண்ணதாசன் மற்றும் கலைப் பீடாதிபதி பேராசிரியர்.சி.ரகுராம் ஆகியோரின் இணைத்தலைமையிலும் இவ் ஆய்வுமாநாடு அரங்கேறவுள்ளது. கல்வியியல் துறைத் தலைவர் கலாநிதி.ஆ.நித்திலவர்ணண் மாநாட்டின் இணைப்பாளராகச் செயற்படுகின்றார். வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிரஞ்சன் மற்றும் வட மாகாணக் கல்விப் பணிப்பாளர் தி.ஜோன் குயின்ரஸ் ஆகியோர் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தாளர்களாகக் கலந்துகொள்கின்றனர். எதிர்வரும் 20ம் திகதி சனிக்கிழமையும் 21ம் திகதி ஞாயிற்றுக்கிழமையும் காலை மற்றும் மாலை அமர்வுகள் எனத் திட்டமிடப்பட்டுள்ள இம்மாநாட்டின் காலை அமர்வுகள் கைலாசபதி கலையரங்கிலும் மாலை அமர்வுகள் உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்திலும் நடைபெறவுள்ளன. சனிக்கிழமை நடைபெறவுள்ள அங்குரார்ப்பண நிகழ்வில் திறவுகோல் உரையினை கொழும்புப் பல்கலைக்கழக கல்வியியல் பீட கல்வி உளவியல் இருக்கைப் பேராசிரியர் மஞ்சுளா விதாணபத்திரண நிகழ்த்தவுள்ளார். ‘வாண்மைத்துவ விருத்திக்கான ஆய்வு மைய புத்தாக்கங்கள்: வடக்கு இலங்கையின் ஆசிரியர் கல்விக்கான தந்திரோபாய அணுகுமுறை’ எனும் தலைப்பில் இவ் உரை நிகழவிருக்கின்றது. திறவுகோல் உரையினைத் தொடர்ந்து மாநாட்டின் கருப்பொருளை மையப்படுத்திய மையக்கருத்துரைகள் இடம்பெறவுள்ளன. இக்கருத்தரங்கிற்கு உயர்பட்டப்படிப்புக்கள் பீடப் பீடாதிபதி பேராசிரியர்.செ.கண்ணதாசன் தலைமைதாங்கவுள்ளார். ‘இலங்கையின் ஆரம்ப பிள்ளைப்பருவக் கல்வியை முறைமைப்படுத்தல் – சவால்களும் பிரச்சனைகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீடப் பேராசிரியர்.தி.முகுந்தனும், ‘வட மாகாணக் கல்வியின் சமகால உள சமூக நிலைமைகள்’ எனும் தலைப்பில் உளமருத்துவ நிபுணர் சி.சிவதாசும், ‘இலங்கையின் பாடசாலைக் கலைத்திட்டத்தின் சவால்களும் புதிய போக்குகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீடப் பேராசிரியர் எவ்.எம்.நவாஸ்தீனும், ‘சட்டத் தீர்மானங்களை அறிவிப்பதில் கல்வியியல் ஆய்வுகளின் தேவைகள்’ எனும் தலைப்பில் களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்ற நீதிபதி ஜே.பி.ஏ.ரஞ்சித்குமாரும் உரையாற்றவுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இரண்டாம் நாள் நிகழ்வுகளுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கல்வியியல் துறைப் பேராசிரியர் ஜெயலக்சுமி இராசநாயகம் தலைமை தாங்கவுள்ளார். இந் நிகழ்வில் திறவுகோல் உரையை தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக கல்வியியல் மற்றும் மேலாண்மைத் துறைத் தலைவர் பேராசிரியர் கு.சின்னப்பன் ‘தமிழ் கற்பித்தலில் புதிய போக்குகள்’ எனும் தலைப்பில் நிகழ்த்தவுள்ளார். அதனைத் தொடர்ந்து ‘நாளையை வலுப்படுத்தல் – கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வட மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் தலைப்பில் கலைப்பீடப் பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராம் தலைமையில் திறந்த புலமைத்துவக் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. இக்கலந்துரையாடலில் ஓய்வுபெற்ற வலயக் கல்விப்பணிப்பாளரும் அதிபருமாகிய என்.தெய்வேந்திரராஜா, கல்வியியல் ஆய்வாளரும் அகவிழி மற்றும் ஆசிரியம் சஞ்சிகைகளின் ஆசிரியருமான தெ.மதுசூதனன், தேசிய கல்வி நிறுவன விரிவுரையாளர் ஐ.கைலாசபதி, கிளிநொச்சி விவேகானந்தா வித்தியாலய அதிபர் ஜெய மாணிக்கவாசகர், இலங்கை பரீட்சைகள் திணைக்களப் பணிப்பாளர் எம்.ஜீவராணி புனிதா, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அதிபர் இ.செந்தில்மாறன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கல்லூரியின் முன்னாள் பணிப்பாளரும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் திட்ட முகாமையாளருமாகிய ஜே. ஜூட் வோல்ற்றன் மற்றும் கிளிநொச்சி வடக்கு கல்வி வலய தொழில் வழிகாட்டல் அலுவலர் சு.வீரசுதாகரன் ஆகியோர் பங்குபற்றவுள்ளனர். பார்வையாளர்களின் வினாக்களுக்கும் விடையளிக்கும் நிகழ்வாகவும் இக் கலந்துரையாடல் திட்டமிடப்பட்டுள்ளது. ‘வடக்கு மாகாணப் பாடசாலைகளின் வெற்றிகளும் பின்னடைவுகளும்’, ‘பாடசாலைகளும் சமூகமும் – எங்கு நாம் நிற்கின்றோம் – முன்னோக்கிப் போவதற்கான வழிகள்’, ‘எதிர்பார்க்கப்படும் கற்றல் பேறுகளை அளவிடுதல்’, மற்றும் ‘கல்வியும் வேலைவாய்ப்பும் – சந்தர்ப்பங்களும் சவால்களும்’ எனும் தலைப்புக்களில் இக்கலந்துரையாடல் கட்டமைக்கப்பட்டுள்ளது. கலந்துரையாடலின் கருத்துச்செறிவுகளை மாநாடு நிறைவுபெற்ற பின்னர் கொள்கை ஆவணமாக வெளியிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இரண்டு நாள்களும் மாலை அமர்வுகள் பலாலி வீதியில் அமைந்துள்ள உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்தில் நடைபெறும். இரண்டு நாள் மாலை அமர்வுகளிலும் தலா நாற்பத்து நான்கு ஆய்வுக் கட்டுரைகள் பல்வேறு தலைப்புக்களிலும் சமர்ப்பிக்கப்படவுள்ளன. பல்கலைக்கழகங்களின் ஆய்வு மாணவர்கள், விரிவுரையாளர்கள், கல்வியியல் கல்லூரிகள் மற்றும் ஆசிரிய பயிற்சிக் கலாசாலை ஆசிரியக் கல்வியலாளர்கள், கல்வி நிர்வாகிகள், பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் என பன்முகப்படுத்தப்பட்ட ஆய்வாளர்களினால் பல்வேறு தலைப்புக்களில் ஆய்வுக் கட்டுரைகள் முன்வைக்கப்படவுள்ளன   https://globaltamilnews.net/2024/201875/
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.