Jump to content

என்னை விடுங்கோ என்ர புள்ளை அம்பேபுஸ்ஸவில….


Recommended Posts

என்னை விடுங்கோ என்ர புள்ளை அம்பேபுஸ்ஸவில….

ampe-1.jpg

அம்மா….அம்மா…அம்மா….எனக்கு அம்மாட்:டைப் போகவேணும்….. அவள் கதறக்கதற கொடிய கரங்கள் அவளை இழுத்துக் கொண்டு போகின்றன……என்ர பிள்ளை….என்ரை பிள்ளையை விடுங்கோ……என்ற அவளது கதறலையும் கேட்காமல் கார்த்தினி இழுபட்டுக் கொண்டு போனாள்….அவள் நாளுக்கு 3தரம் மாற்றிக்கொள்ளும் உடுப்பும் , பாதணிகளும் , அவள் பாவித்த பவுடர் பேணிகளும் இன்னும் பிற அவளது பாவனையின் மீதங்களான எல்லாம் அந்தக்கால்களுக்கு அடியில் நசிந்து நொருங்குகிறது.

கமலினி…கமலினி….என்ன….பக்கத்த

ில் படுத்திருந்த கணவனின் குரல் அவளை மீளவும் இழுத்து வருகிறது நிசத்துக்கு. என்னாச்சி….என்ன…..அவனது ஆதரவான அணைப்பில் கரைந்து கண்ணீரால் நனைக்கிறாள் அவனை…..

என்ர பிள்ளையப்பா…..என்ரை பிள்ளையை யாரோ…..அதற்கப்பால் அவளால் எந்த வார்த்தைகளையும் உச்சரிக்க முடியாமல் விம்மல் பெலத்து……என்ர பிள்ளை…..என்ர பிள்ளை…..எனப் பெருங்குரலெடுத்து அழுகிறாள்.

என்னாலை தாங்கேலாதாமப்பா…..நான் செத்துப்போப்போறன்……என்ரை பிள்ளையெங்கை கஸ்ரப்படுறாளோ தெரியேல்ல…..என்ரை பிள்ளை படிக்கவெண்டெல்லோ விட்டனான்…..என்ரை பிள்ளையை எங்கையிருக்கிறாளோ……சேவை சேவையெண்டு ஊருக்கு எவ்வளவைச் செய்தன்…..எனக்கேனப்பா இப்பிடியொரு விதியைக் கடவுள் தந்தான்……?

நீ செய்த நன்மையள் எங்கடை பிள்ளையைக் காப்பாற்றும்…..நீ யோசிக்காத…..அவள் எப்பிடியும் வருவாள்…..சிவன் கோவில் சாத்திரி சொன்னமாதிரி 6மாதத்தில திரும்பி வருவாள் பாரன்…..அவளை ஆறுதற்படுத்தத் தன்னால் இயன்ற எல்லாவற்றையும் சொன்னான். அவள் தானாக அழுகையை நிறுத்தும் வரை அவன் அமைதியாய் இருந்தான்.

அவள் சொல்வது போல செத்துப் போய்விடலாமா ? என்றுதானிருந்தது. அப்பா அப்பா எனக் கார்த்தினி உலவிய வீடும் விறாந்தையும் வளவும் இன்று அவளின்றி ஒரு சுடுகாட்டின் வாசனைகளைத் தன்னோடு சேமித்துக் கொண்டிருந்தது. அவள் இருப்பாள் என்ற நம்பிக்கையை அவன் தொலைத்துவிட்டான். கமலினிக்காக சாத்திரங்களையும் கோவில்களையும் சாட்டுக்கு வைத்திருப்பதைத் தவிர வேறெந்த நம்பிக்கையும் அவனுக்கில்லை.

கமலினியின் பெரியக்கா நோய்வாய்ப்பட்டிருந்த நேரம் முல்லைத்தீவுக்கு கார்த்தினியையும் கூடவே அழைத்துப் போனபோது, தன்னுடன் அவளை வைத்துக் கொள்வதாக பெரியக்கா கேட்டதும் மறுவார்த்தையின்றிக் கார்த்தினி சொன்னாள். நான் பெரியம்மாவோடை நிக்கிறன் நீங்க வவுனியாவுக்குப் போங்கோ….என இவர்கள் வவுனியா திரும்ப அவள் அங்கேயே தங்கினாள். அவளை அங்கே விட்டுவிட்டு வர இவனுக்கு முடியாது என்பதை யாருக்கும் சொல்லவில்லை.

இடையிடை இவர்கள் போய்ப் பார்த்து வந்தார்கள். கமலினி பணியாற்றிய தொண்டு நிறுவனத்தின் அலுவலாக அல்லது ஏதாவதொரு தேவைக்காக இராணுவத் தடையரண்கள் தாண்டி முல்லைத்தீவு போய்வர ஏதாவது அலுவல் இருந்து கொண்டுதானிருந்தது. அக்காவுடன் அவள் நன்றாக இருப்பாள் என்ற நம்பிக்கை மலையளவு அவளுக்கு இருந்தது. அந்த நம்பிக்கைகளோடு இருந்தவளுக்கு ஏ9நெடுஞ்சாலை தொடர்புகளற்று முல்லைத்தீவுடனான அவளது தொடர்புகளும் அற்றுப்போய்…..போர் உக்கிரமாகியது. எப்போதாவது பெரியக்கா வந்து அவள்பற்றி சொல்லும் தகவல்களுடன் மாதங்கள் விரைந்த 2009தை மாதத்தில் ஒரு நாள்…..

பெரியக்கா அவளது வேலையிடத்துக்கு அவசரமாக அழைத்தாள். ஐயோ பிள்ளை என்னைக்குறை சொல்லாதை நானொண்டும் செய்யேலாமக்கிடக்கு….நான் தேடாத இடமில்லை…..இஞ்சை கனபிள்ளையள் இப்பிடித்தான்……வீட்டுக்கொ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கதை நிஜமாய் நடந்ததாய் இருக்கலாம் . உயிரோட்டமாய் இருக்கிறது.நீங்கள் சொன்ன திருத்தங்களை செய்தால் ,

மேலும் சிறப்பாய் இருக்கும். பதிவுக்கு நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதைப் படிச்சு 24 மணிநேரமாச்சு. இன்னும் மனசு வலிக்குது. சாந்திஅக்கா உங்களின் கதை சொல்லும் முறை மிகநல்லது.

Link to comment
Share on other sites

கதை நிஜமாய் நடந்ததாய் இருக்கலாம் . உயிரோட்டமாய் இருக்கிறது.நீங்கள் சொன்ன திருத்தங்களை செய்தால் ,

மேலும் சிறப்பாய் இருக்கும். பதிவுக்கு நன்றி.

பகிர்வுக்கு நன்றிகள் நிலாமதி

இப்படி எத்தனை எத்தனை சோகங்கள்............................

சோகங்கள் கமலினியக்கா போல் எங்கள் எல்லாரையும் துரத்திக்கொண்டு வருகிறது.

இதைப் படிச்சு 24 மணிநேரமாச்சு. இன்னும் மனசு வலிக்குது. சாந்திஅக்கா உங்களின் கதை சொல்லும் முறை மிகநல்லது.

four four bravo பகிர்வுக்கு நன்றிகள். தினமும் தனது மகளின் நினைவுகளோடு அந்தரிக்கும் கமலினியக்காவுக்காக எதையும் செய்ய முடியாத கையறு நிலையில் இருக்கிறோம்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சிறப்பான பதிவுகளைத் தேடி எடுத்துத் தருகிறீர்கள் நன்றி பிரியன்..........!  👍
    • ஹிந்தி மொழிக்கு எதிராக‌ போராடி ஆட்சிய‌ பிடித்த‌ திராவிட‌ம் உத‌ய‌நிதியின் ம‌க‌ன் எந்த‌ நாட்டில் ப‌டித்து முடிந்து விட்டு த‌மிழ் நாடு வ‌ந்தார்..................ஏன் உற‌வே புல‌ம்பெய‌ர் நாட்டில் த‌ங்க‌ட‌ பிள்ளைக‌ள் ஆங்கில‌த்தில் க‌தைப்ப‌து பெருமை என்று நினைக்கும் ப‌ல‌ர் இருக்கின‌ம் யாழில் இனி ப‌ழைய‌ திரிக‌ளை தேடி பார்த்தா தெரொயும்...............நான் நினைக்கிறேன் சீமானின் ம‌க‌னுக்கு த‌மிழ் க‌தைக்க‌ தெரியும்.................இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ர் ம‌ற்றும் அவ‌ரின் ம‌க‌ன் உத‌ய‌நிதி இவ‌ர்களுக்கு ஒழுங்காய் த‌மிழே வாசிக்க‌ தெரியாது.........ச‌ரி முத‌ல‌மைச்ச‌ர் ஜ‌யாவுக்கு வ‌ய‌தாகி விட்ட‌து ஏதோ த‌டுமாறுகிறார் வாசிக்கும் போது உத‌ய‌நிதி அவ‌ரின் அப்பாவை விட‌ த‌மிழின் ஒழுங்காய் வாசிக்க‌ முடிவ‌தில்லையே உற‌வே...............சீமானின் ம‌க‌ன் மேடை ஏறி த‌மிழில் பேசும் கால‌ம் வ‌ரும் அப்போது விவாதிப்போம் இதை ப‌ற்றி.............என‌து ந‌ண்ப‌ன் கூட‌ அவ‌னின் இர‌ண்டு ம‌க‌ன்க‌ளை காசு க‌ட்டி தான் ப‌டிப்ப‌க்கிறார்............அது சில‌ரின் பெற்றோர் எடுக்கும் முடிவு அதில் நாம் மூக்கை நுழைத்து அவ‌மான‌ ப‌டுவ‌திலும் பார்க்க‌ பேசாம‌ இருக்க‌லாம்............ஒரு முறை த‌மிழ் நாட்டை ஆளும் வாய்ப்பு சீமானுக்கு கிடைச்சா அவ‌ர் சொன்ன‌ எல்லாத்தையும் செய்ய‌ த‌வ‌றினால் விம‌ர்சிக்க‌லாம் ஒரு தொகுதியிலும் இதுவ‌ரை வெல்லாத‌ ஒருவ‌ரை வ‌சை பாடுவ‌து அழ‌க‌ல்ல‌ உற‌வே........................
    • உந்தாள் முந்தியும் ஒருக்கால் கம்பி எண்ணினதெல்லோ? 
    • “அந்த மக்களிடம் அற்ப விலைக்கு வாங்கி, புலம் பெயர் மக்களிடம் அறாவிலைக்கு விற்கும் கந்துவட்டி வகை வியாபாரிகளை” இதனை எந்த அடிப்படையில் கூறுகிறீர்கள்? உதாரணமாக ஓர் பொருளின் சிறீலங்கா v பிரித்தானிய விலையை கூறுங்கள். எனக்கு தெரிந்தவர்களிடம் அதனை விசாரித்து கூறுகிறேன்.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.