Jump to content

அறிஞர் ஆதிநைனாவின் ந(கை/ள)பாகம்


Recommended Posts

வணக்கம்

கன நாளைக்குப் பிறகு சுவைஞர்கள் பகுதிக்கு ஆதிநைனா வந்துள்ளேன். உள்ளாரக் கூப்பிடுங்க. பயப்படாதீங்க எல்லாருக்கு நல்லது செய்யத்தான் வந்திருக்கிறன். ஒரு காலத்தில கனபேரின் வால்கள் வளர்ந்ததற்கு ஆதியைக் காரணம் சொன்னாங்க. இனிமே எல்லாருடைய நா வளர்ச்சிக்கும் ஆதியை சொல்லுவாங்க. நா என்றால் பேச்சு வன்மையை வளர்க்கப்போறன் என்று நினைக்கப்படாது. சுவைகள் அறியும் நா வளர்ச்சியைத்தான் ஆதிநைனா ஆரம்பிக்கப்போறன். இங்க ஆதிநைனா போடுற அட்டில் இரகசியங்களை வாசிக்கிற நீங்களே வச்சுக்கொள்ள வேணும் செயல்முறையைச் செஞ்சு பாக்கவேணும். பின்னாடி உங்க உங்க எசமானிகள் என்ர வீட்டு எசமானியைக் கூப்பிட்டு உன் வீட்டுச் சமையல்காரனின் செய்முறைப் பதிவால தாங்கள் வீட்ல நிம்மதியா இருக்க முடியுதில்லை என்று முறைப்பாடு செய்ய இடம் வைக்கக் கூடாது விளங்கிச்சோ. நான் போடுற உணவுகளைச் செய்து கொடுத்து உங்க வீட்டு எசமானிகளை உங்க செல்லப்பிராணிகள் ஆக்கிறது உங்க கையிலதான் இருக்கு சொல்லிப்போட்டன். ஸ் சத்தம் போடாதேங்கோ பெடியள் ஏற்கனவே இங்க ஒரு அட்டில் உலையரிசி….ச்சீச்சீ….அட்டில் கலையரசி இருக்கிறா நீங்கள் ஆர்ப்பாட்டம் பண்ணினா அழுதிடுவா பாவமில்லையோ…..

சரி இதுக்கு ஒரு கவர்ச்சியான ஆரம்பத்த குடுக்கோணும்… ஆதி மண்டையைக் குடைஞ்சு குடைஞ்சு யோசிச்சு…யோசிச்சு உருவாக்கி இருக்கிறன்.

அறிஞர் ஆதிநைனாவின் ந(கை/ள)பாகம்

என்ன எல்லாரும் ரெடியா ஆதிநைனாவின் ந(கை/ள)பாகத்தைச் சுவைக்க… இங்க வந்து டாப்புப் பதிஞ்சாத்தான் ஆதிநைனாவுக்கு நா வளர்க்க ஆசைப்படுற சீவன்களைத் தெரியும். சுவார்ஸ்யம் உள்ள பிறவிகள் ஆதிக்கு ஆக்கமும் ஊக்கமும் கொடுக்கோணும் எண்டு வேண்டிக் கொள்கிறன். அட்டில் கலை உலகிற்குள் ஆதிநைனா அகப்பைத் தடம் பதிக்கலாமோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் நைனா :lol:

வாங்கோ..

நாங்க எல்லாம் சாப்பாட்டு ராமன்கள் நைனா..

ஆமா கட்டினவங்க எல்லாரும் என்ன இப்படி நொந்து சே...

மாவாட்டிட்டு இருக்கிறிங்களோ :lol:

என்ன தலையணை மந்திரமோ நாயாகவே(செல்ல பிராணி) இருக்கிறிங்க,வச்சிருக்கிறிங

Link to comment
Share on other sites

யாருக்காவது Constipation இருந்தால் இந்தப் பக்கம் வரவும். னைநாவின் நளபாகம் பார்த்துட்டு ஏற்படும் பின் விளைவுகளுக்கு அவரே மருந்தும் சொல்லுவாராம்

Link to comment
Share on other sites

ஜீவா செல்லப்பிராணிகளுக்கு கிடைக்கிற மருவாதை எங்கே மனுசர்களுக்குக் கிடைக்குது?

இப்ப இதைப் பாத்துக் கொண்டு இருங்கோ செய்முறை விளக்கத்தை என்ர கடைக்குட்டி கப்பல் விட்டுட்டான். திரும்ப எழுதி.... வாறதுக்கு என்ர பிஏ வரவேணும் அதுவரைக்கும் Rம்மா இருக்காமல் இந்தப் படத்தைப்பாருங்கோ.

curry1021.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பார்க்க சாபிடவேனும் போல ஆசையாக இருக்கு. எடுத்து விடுங்கோ உங்க நள பாகத்தை.

.ஆவலோடு காத்திருக்கிறோம்

Link to comment
Share on other sites

நன்றி நன்றி திங்களறிவு மற்றும் நிழலி, நுணுக்கம்.

கணவாய் பிரட்டல்

கணவாய் - 1

எண்ணெய் - 1 தேக்கரண்டி

சின்ன வெங்காயம் - 6

பச்சைமிளகாய் - 2

பெருஞ்சீரகம் - சிறிதளவு

கருவேப்பிலை

உள்ளி – 4

மிளகாய்த்தூள் - 3 தேக்கரண்டி

பழப்புளி – தேவையான அளவு

உப்பு – தேவையான அளவு.

முக்கியமானவை சமைக்கும் பாத்திரம் மற்றும் அடுப்பு

செய்முறை –

(முக்கிய குறிப்பு மத்திமச்சூட்டில் அடுப்பை வைத்திருத்தால் மாத்திரமே உணவு சுவையானதாக இருக்கும்.)

1. முதலில் கணவாயைச் சுத்தமாக்கி துண்டுதுண்டாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

2. வெங்காயங்களையும், ,உள்ளிகளையும் சிறுசிறுதுண்டுகளாகவும், பச்சை மிளகாய்கயை நீளப்பாட்டுக்கு பிளந்தும் வைத்துக் கொள்க.

3. அடுப்பில் நீங்கள் சமைக்க இருக்கும் பாத்திரத்தில் ஒரு தேக்கரண்டி எண்ணெயை விட்டுச் மெல்லிய சூட்டில் சூடேற்றவும்.

4. சூடேறிய எண்ணெயில் முதலில் பெருஞ்சீரகத்தைப் போட்டு வாசம் வரும்போது வெட்டி வைத்த வெங்காயம், உள்ளி, பச்சைமிளகாய் ஆகியவற்றையும் சேர்த்து வதங்கவிடவும்.

5. இளம்பருவமாக வதங்கியவுடன் கருவேப்பிலையைச் சேர்த்துக் கொள்ளவும்.

6. கருவேப்பிலை வாசைன கமகமக்கும் போது நறுக்கி வைத்திருக்கும் கணவாய்த்துண்டுகளை அதனுடன் சேர்த்து கிளறி மூடி மத்திமச் சூட்டில் அவியவிடவும்.( ஊசிக் கணவாய், குண்டுக்கணவாய் அவியும் நேரத்தில் வித்தியாசம் உண்டு)

7. தண்ணீர் விடவேண்டிய தேவை இருக்காது. கணவாய் தானே கண்ணீர்விட்டு அவியும். அதன் தண்ணீர் வற்றிய மாதிரித் தெரியும் தருணத்தில் மிளகாயத்தூள், உப்பு ஆகியவற்றைப் போட்டுக் கிளறவும்.

8. இப்போது கரைத்து வைத்திருக்கும் பழப்புளியையும் விட்டு கிளறி பிரட்டல் ஆக்கி சிறிது வேக விடவும்.

9. இப்போது கணவாய் பிரட்டல் ரெடி.

curry1021.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்லாத்தான் இருக்கு நைனா.வாயூறுது :( ஆனா ஊருற எதுவும் நான் சாப்பிடுவதில்லை :(

Link to comment
Share on other sites

நல்லாத்தான் இருக்கு நைனா.வாயூறுது :lol: ஆனா ஊருற எதுவும் நான் சாப்பிடுவதில்லை :o

ஜீவா நான் பாம்புக்கறிக்கா செய்முறை போட்டிருக்கிறன்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த கறி எல்லாம் நாம சாப்பிடுவது இல்லை.

நமக்கு எப்பவுமே சைவ சாப்பாடுதான்.

Link to comment
Share on other sites

இந்த கறி எல்லாம் நாம சாப்பிடுவது இல்லை.

நமக்கு எப்பவுமே சைவ சாப்பாடுதான்.

என் கறுப்புத் தேவதையே அடுத்த படையல் உன் வேண்டுதலுக்கே. :rolleyes:

Link to comment
Share on other sites

  • 9 months later...

பழப்புளி விடாம தேசிப்புளி விடலாமா? <_<

மப்புல தோயாம எங்கட சின்னா, சாத்து, கு.சா, முகத்தார், லேட்டஸ் நிழலி மாதிரி ...ஸ்ரெடியா... எப்பிடி?... ஸ்ரெடியா நிக்கோணும் எண்டால் தேசிக்காயை அவசியம் சேர்க்க :huh::wub::lol::o :o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு பிரட்டல் ஆதி! ஆனால் உங்களது கறுப்புத் தேவதைக்கு தரும் படையல் குறிப்பையே எதிர்பாத்து ஆவலோடு, வாய் ஊறலோடு காத்திருக்கிறேன்! <_<

Link to comment
Share on other sites

  • 1 month later...

:huh: ஓய் அப்பிடியே நம்மட அயிட்டத்தையும் போடுமன்..

இருக்கட்டும் தேசிக்காய் தலையில தானெ தேக்கிறது.....

Link to comment
Share on other sites

  • 4 years later...

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 1)    ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும். தவறான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் குறைக்கப்படும்.    CSK, KKR, RR,SRH 2)    முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.       #1 - ? (சரியான பதில்: +4 புள்ளிகள், தவறான பதில்: -4  புள்ளிகள் ) RR     #2 - ?  (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள் ) CSK     #3 - ?  (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2  புள்ளிகள்) KKR     #4 - ?  (சரியான பதில்: +1 புள்ளி, தவறான பதில்: -1 புள்ளி ) SRH 3)    ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2  புள்ளிகள்) RCB 4)   மே 21, வெள்ளி 19:30 அஹமதாபாத்  Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Qualifier 1: 1st placed team v 2nd placed team CSK 5)    மே 22, புதன் 19:30 அஹமதாபாத் Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Eliminator: 3rd placed team v 4th placed team SRH 6)   மே 24 வெள்ளி 19:30  சென்னை Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator RR 7)    மே 26, ஞாயிறு இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +5 புள்ளிகள், தவறான பதில்: -5  புள்ளிகள்) Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2 RR 8 ) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) SRH 9)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) GT 10)    இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் Jos Buttler 11)    இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி, கேள்வி 10 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RR 12)    இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Yusvendra Chahal 13)    இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 12 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RR 14)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் ) Virat Kholi 15)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 14 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) SRH 16)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Jasprit Bumrah 17)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 16 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) MI 18)    இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the Series) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Jos Buttler 19)    இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the season) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 18 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) CSK 20)    இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) SRH
    • 0.50 ஈரோ பொருளை 2 ஈரோவுக்கு விற்றது சப்பை மேட்டர்தான்….. இது எழுதாமலே விளங்க வேணும்…. எழுதியிம் விளங்கவில்லை எண்டால் கஸ்டம்தான்🤣. ————— அம்சமான ஹம்சமாலி ரேஞ் ரோவரில் சுத்துறா…. அர்ஜூன் மகேந்திரன் அப்பீட்டு…. இலங்கை கிரிகெட்டில் கொள்ளை ரிப்பீட்டு…. திறைசேரியிலே திருட்டு…. ஷப்டர் தன் கழுத்தை தானே நெரித்தார்……. இதெல்லாம்தான் சப்பை மேட்டர்….80 ரூபா வடை அல்ல🤣. பிகு அது சரி எங்க நம்மட குட்டி சிறிதரன்? ஒரு கேள்வியோடு ஓடினவர்தான் - 2 நாளா தலை கறுப்பை காணோம்🤣 @பையன்26 பாருங்கோ சிறி அண்ணாவும் இது இப்ப நடந்தது என்கிறார்.
    • இன்பமும் துன்பமும் நிறைந்ததுதான் வாழ்க்கை........ ஆயினும் எங்கு பார்த்தாலும் ஆண்கள் குடித்துவிட்டு புரளுவதும் பெண்கள் ஆலயம் ஆலயமாய் அலைவதும்தான் எல்லோருக்கும் தெரிகின்றது ......அதுதான் ஆண்களின் சார்பாய் எனக்கு வேதனை தருகின்றது.......!  😁
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.