Jump to content

விழவிழ எழுதிய வீரவணக்கம் என்னவானது ?


Recommended Posts

விழவிழ எழுதிய வீரவணக்கம் என்னவானது ?

விழவிழ நீங்கள்

வீரவணக்கம் எழுதினோம் நாங்கள்.

அழஅழக் கவிதையும்

ஆறாத்துயர் நிறையக் கண்ணீருமாய்

கடைசிச் சொட்டு வீழ்ந்து காயும் வரையுமாய்

நினைவள்ளி நினைவள்ளி நீண்ட

தூரமெங்கும் நெருப்பு மூட்டினோம்.

இழந்தவை யாவையும் எழுகையும் நிமிர்வும் என்றெம்

எழுத்துகள் யாவிலும் எழுதியே அழிந்தோம்.

பரணி பாடினோம் பாவினால் உங்களைப் பரவசப்படுத்தியும்

பாடையின் முன்னின்று போர் முரசு கொட்டியும்

சோடித்து மறைத்துச் சுதந்திரம் பாடினோம்.

ஈரம் சொட்டச் சொட்ட நீங்கள் சிந்திய குருதியில்

எழுதினோம் ஏராளம் ஏராளம்……

கட்டாயங்களை மறைத்து

அவை கட்டாயமென்று எழுதினோம்….

காதல் வாழ்வு குழந்தைகள் உறவு முழுவதும்

காப்பரண் தேடாமல் வாழக்கிடைத்த போகத்தில் குறையின்றி

வலிமையின் நிறமும் குணமும்

நாங்களேயென்று பொய் சொன்னோம்.

களமுனைக்காயமும் துயரமும் மறந்து

காயங்கள் ஆறிய காலத்தில் நின்றபடி

களமுனையே எங்கள் தெருமுனைபோல்

வன்னிக் காட்டினில் விளைவது – பெரும்

வற்றாவீரமென்று பேரம்பேசினோம்.

பேறுகளாய்க் கிடைத்த பெரும் பொக்கிசங்களையெல்லாம்

தேடுவாரற்றுத் தெருவில் எறியும் வரை - எங்கள்

தேசியம் தாயகம் சுயநிர்ணயம் என்ற வார்த்தைகள் யாவையும்

நாவிலே எழுதியும்

நாற்சந்திகள் மூலைகள் எங்கணும் முழங்கினோம்.

முழக்கங்கள் மட்டுமே மீட்பின் முடிவென்று நம்பினோம்.

மேய்ப்பர்கள் பின்னால்

கேள்விகள் கேளாத ஆடுகளாய்ப் பின்தொடர்ந்தோம்.

எங்கள் எங்கள் என்று கோசித்துக் கும்மியடித்துக்

கொத்துறொட்டியும் கிடாய் இறைச்சியும்

உறைப்பு றோள்சும் வடையுமாய்

உலகவரைபடத்தில் எங்களை நிறுவினோம்.

முடிவு எங்கள் கைக்கு மாறியதாய்

அவர்கள் அழிவுக்கு நாங்களே

அகலப்புதைகுழி தோண்டிக் கொடுத்தோம்.

அதையெல்லாம் அறியாமல் தேசியம் மீதான

விளக்கங்கள் விரிவுரைகளென

விரயமானவை எங்கள் வீரத்தில் விளைந்தவை ?

வன்னிக்கள முனையில் எழுந்த தீப்பிழம்பில்

இழந்தவை இறந்தவை

எத்தனையென்ற எண்ணிக்கையில்லை…..

பேரறுமில்லை அவர்களுக்குப் பெயருமில்லை…..

யாருமில்லை அவர்களுக்காய் முழங்கவோ

நீதி கேட்டு விளங்கவோ யாருமின்றி

யாவும் புழுதியில் குருதிச் சகதியில் புதையுண்டு……

போரும் வாழ்வும் - அவர்கள்

சாவில் அவலக் குரல்களில் சரித்திரம் முடித்துத்

தரித்திரன் கால்களில்

எங்கள் வீரமும் மானமும் வீழாதென்ற ஓர்மமும்

வீழ்ந்து கருகிச் சிதைந்த

ஆன்மக்குரல்களின் உதைப்பில்

எல்லாம் இருள்கிரகணத்தின் போய் விழுந்து

இனியென்றும் வெல்லோம் என்றது போல்

எல்லாம் முடிந்து…….

விரும்பியும் விரும்பாமலும்

வெடித்தவை குப்பி கடித்தவையெனக்

கதைகளின் நீளத்தைக் களமுனை முடிவுகள்

தடயங்களின்றித் தாரைவார்த்ததைத்

தமிழ் வீரமெனப் போற்றவா….?

என்னுறவு என் கனவு என நிறைந்த

உயிர்களின் ஓலத்தில்

என் மச்சான் , என் தோழி

என்பிரிய நண்பர் நீள வரிசையாய்

போராயுத வாகனங்களின் சில்லுகள் சிதைத்த கதை

ஓராயிரம் ஆண்டுகள் சென்றாலும்

ஈடுசெய்து அவர்கள் வாழ்வைப் புதுப்பிக்க

எவரால் இயலுமிங்கு….?

''வீட்டுக்கொரு வீரனே விரைந்து வா''வென்று வீரமிட்ட குரலே

தன் வீட்டுப்பிள்ளையைக் களம் அழைக்கையில் சினந்து

சிங்களக்குகையேகிய முற்றத்துக் கவிஞரின்

முற்போக்கு ஞானத்தை முடிவாகி இவ்வுலகு கடலில்

மூழ்கிப்போனாலும் மறக்காது வரலாறு…..

சும்மாயிருந்த மனிதனைச் சூரியனே…,சுடர் விளக்கே…,

சுழல்காற்றே சுனாமியே என்றெல்லாம்

ஒளிவட்டம் போட்டுப் பாடைகூட ஏற்றாமல்

பகைகாலில் நெரியுண்டு

நெற்றி பிழக்கக்காரணமாய் ஆனோரெல்லாம்

கறுப்பு வெள்ளை சாம்பல் நிறப்பெட்டிக் கதைசொல்லும்

காலத்தில் தமிழ் வீரம் புத்துணர்வு பெற்றுளதைக் கேட்கப்

பேறுபெற்றோம் என்பதை விடுத்து வேறெந்த வார்த்தை சொல்ல….?

பணமும் பகட்டும் வசதியும் வாய்ப்பும்

தமிழக அரசியல் உணர்வுபோல்

ஈழத்தமிழின விதியை எழுதிய விண்ணர்கள்

வம்சமே சிதைந்தாலும் வாய்மூடியிருப்பதே

சூரியத்தேவனுக்கு நாம் செய்யும் சுயநலமற்ற கெளரவம்.

போலியாய் புகழ்பாடி அந்தச் சூரிய நெருப்பை

வெறும் கரித்துண்டாக்கிய கயமையின் உரித்துகளே

நாளை ஈழத்திருநாட்டின் இமயங்கள் என்றாலும்

அதிசயம் ஒன்றுமில்லை……

துரோகியைக்கூட மன்னிக்கலாம்

நண்பன் துரோகியானால்

அவனை மன்னியோம் என்றெல்லாம்

மார்தட்டிய மன்னர்கள்

கம்பிவேலிகளின் உள்ளிருந்து

கணணியும் கடைசிவரை விசுவாசித்த

விசிறிகளின் துணையுமாய்

‚‘களத்திலிருந்து பதிவும் , பிரபாகரனுக்குப் பின்னரான தமிழ் அரசியல்‘‘

பகிரவும் பதியவும் அவர்களே புதிய கதாநாயகர்களாய்

தமிழ்வீரமும் மானமும் தலைநிமிர்கிறதா…..?

மீண்டும் துளிர்ப்போம் மீண்டும் தளைப்போம் தவிர்த்து

மிஞ்சியோரை மீட்போமென்று எவராவது எழுதட்டும்

இருகைகூப்பி வணங்குகிறோம் அவர் திசைநோக்கி…..

வாழ்வின் மீதத்தை அவர்கள் இனியாகிலும்

அவர்க்கு வாழ ஒருவழி

பனைமரமும் நினைவும் பால்யகாலமும்

போர் தின்று முடித்த கதை மறந்து வாழ்ந்துவிட்டுச் சாக

வழி தரும் ஒளியைத் தேடி விழிகள் விரிப்போம்…..

வீரம் மானம் வீழாச்சரிதம் என்ற வெற்று வீராப்பு வீரர்கள்

முதல் களத்தில் போய் நிற்கட்டும்.

ஆட்லறிகள் அணுவாயுதங்கள் யாவையும்

அவர்கள் வாய்கள் ஏந்தட்டும்

எஞ்சிய மிச்சம் உயிர்மீண்ட பின்னர்

எதையாவது செய்து தொலையட்டும்.

25.08.09

Link to comment
Share on other sites

  • Replies 70
  • Created
  • Last Reply

என்ன சாந்தி கவிதை பயங்கர சூடாக இருக்கிறது

மீண்டும் துளிர்ப்போம் மீண்டும் தளைப்போம் தவிர்த்து

மிஞ்சியோரை மீட்போமென்று எவராவது எழுதட்டும்

மகிந்தா அடிச்சு அடிபணிய வைத்த பிறகுதானே நாங்களும் எங்களுடைய மனசாட்சியை திறக்கமுனைகிரோம்,இல்லாவிடில

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வார்த்தைகள் கணக்கிறது.....

கோபம் கணல்கிறது...

இத்தனை நாள் அடக்கி வைத்தை

ஒற்றை நாளில் அள்ளியேறிந்த கோலம்

மடிந்தவர்கள் மீது தாளாது கொண்ட நேசம்

மண் மீதும் மக்கள் மீதும் கொண்ட பாசம்

இத்தனைக்கும் மத்தியில்

தலைவன் மீது கொண்ட பக்தி!

எத்தனை தடவைகள் ஆனாலும்

மீள முடியாத சோகம்

இத்தனையும் உள்ளாக்கிய கவிதை

வாழ்த்துக்கள் சாந்தி அக்கா!

எத்தனை சொன்னாலும் ஏற்க முடியா

எத்தனையோ வரிகள்!

தாழ்ந்து கிடப்பதற்கானதல்ல போராட்டம்

வாழ்வு வேண்டியதே ஈழப்போர்

அழிந்து போவென்று யாரும்

உளமாற எண்ணவில்லை...

எப்போதுமே...

ஏட்டிக்கு போட்டிகள்...

அவை எங்கும் சகஜமே...

எல்லாமே பேச்்சானால்

எதிர்காலம் எப்படியாகும்...!

Link to comment
Share on other sites

நல்லா எழுதியிருக்கிறீர்கள் சாந்தி அக்கா. இப்படியானவர்களுக்கு ஏற்ற கவிதை ஒன்றை முன்னரும் வாசித்திருந்தேன். அது இதுதான்.

நேற்றுவரை நீயிருந்தாய்

இன்று ஏனோ மாறிவிட்டாய்

காற்று வீசும் பக்கமாக கால் எடுக்க

துணிந்துவிட்டாய்

தோற்றபோது நாங்கள் எல்லாம்

தேற்றக்கூட ஆட்களின்றி

தேசம் என்ற பற்றுதலில் ஒன்றுபட்டு நிற்கையிலே

வேசம் மாற்றி நின்று பல கதைகள் எழுதுகிறாய்.

எல்லோரும் நாங்கள் ஏதோ இழந்துதான்

பயணித்தோம்.

எல்லா இறுக்கத்தையும் பொறுப்போடு

ஏற்று நின்றோம்.

Allkatiஒவ்வொன்றாய் இழந்து உருவான தேசத்தை

உலகமே வந்துநின்று உழுதுபோட நின்றபோது

இருக்கும் வல்லமையே வழியென்று தடம்பதித்தோம்

முன்னுாறாயிரமாய் அவன் முன்னேறி வந்தபோது

எண்ணாயிரம் கூட எங்கள் பக்கம் வேண்டாமா?

பக்கத்து வீட்டானும் பாடை கட்ட வந்துநின்று

துக்கத்தில் இருந்த எம்மை தூக்கத்திலும் கொன்றுபோட -

எட்டப்பர் கூட்டம் எதிரிபக்கம் நின்று கொண்டு

திட்டங்கள் போட்டு தினம் கொலை அரிவாள் கொடுத்தனுப்ப -

மூச்சுவிட நேரமில்லா முழுநேர போரெதிர்த்து

மூன்று வருடங்களாய் முயன்றுதானே பார்த்தோம்

எட்டுத்திக்கும் எதிர்த்து வந்துவிட்டால்

வீட்டுக்கு எல்லாமே வேலியாய் போகும்

வன்னி மான்மியத்தில் நீ தானே சொல்லிவந்தாய்.

எங்கள் பிள்ளை தானே இவனென்ற எண்ணம்

எப்போது உனக்கு இல்லாமல் போனது

எட்டி நடந்து எங்கள் அண்ணன் போனபோது

வட்டம் போட்டு அதற்கு இரண்டு புள்ளி போட்டு

பாட்டு மாதிரி பல்லவி போட்டு நின்றாய்.

ஆச்சே தொடக்க்கம் ஆராய்ச்சி செய்த உனக்கு

போர்க்கல்வி பற்றி புரியாதா?

இங்காலே இருந்து தினம் கண்டுசென்ற அல்லல் எல்லாம்

அங்காலே போனதனால் அடியோடு மறந்ததுவோ?

"வெற்றிலையை" தந்தங்கு வரவேற்ற காரணத்தால்

வெற்றி தந்த இனம் இப்போ வெற்று இனம் ஆகியதோ?

எதிரி அடித்து எங்கள் இனமழித்த போதுகூட

இந்த துயர் வந்ததில்லை

எதிரில் நின்ற உன் எழுத்து இன்று

இரண்டாம் கொலை புரிய

எழுந்து நிற்கும் வேளையில்தான்

நெஞ்சம் எரிகிறது.

இப்பொழுது புரிகிறது எம்தலைவன் சொன்னது ஏன்?

தொலைவில் இருக்கும் எதிரியைவிட

அருகில் இருக்கும் துரோகியே மோசமானவன்.

நன்றி ஈழநேசன்

Link to comment
Share on other sites

எதிரி அடித்து எங்கள் இனமழித்த போதுகூட

இந்த துயர் வந்ததில்லை

எதிரில் நின்ற உன் எழுத்து இன்று

இரண்டாம் கொலை புரிய

எழுந்து நிற்கும் வேளையில்தான்

நெஞ்சம் எரிகிறது

நன்றி விசால் இணைப்புக்கு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள். நீங்கள் நீங்கள் நடந்து வந்த பாதைகளைத் திரும்பிப் பாருங்கள்.

போராட்டத்தைப் போராளிகளை வைத்தே புகலிடத்தில் இருந்து புரட்சி பேசி.. சாதிக்கும் பெண்மணிகளாய் காட்டி உலா வந்தவர்கள் வேறு எவருமல்ல. இதே கவிஞர்களே. இன்று.. வன்னி மக்களுக்காய் அழுவதாகப் பாசாங்கு செய்கின்றனர்.

அன்று வாகரையில் அடிக்கும் போது எங்கே போனது இந்தப் பச்சாதாபம். குடும்பி மலை போகும் போது கூட கிளிநொச்சி இருக்கு என்று ஆர்ப்பரித்தவர்கள்.. இன்று இப்படி..???!

போராளிகளின் தியாகங்களும் வீரமரணங்களும் இவர்களுக்கு விமர்சிக்கும்.. வகைக்குரியதாக இருக்கலாம். நண்பனாய்.. நண்பியாய்.. சக பள்ளி மாணவனாய்.. இருந்து அவனை இழந்தவனுக்குத் தெரியும்.. வலியும் வேதனையும்..!

வன்னியில் அடைபட்டிருப்பவர்கள் அத்தனை பேரும்.. அப்பாவிகள் என்றால் அதுவும் ஏற்புடையதல்ல..! அவர்களுள் இராணுவம் வரும்.. நாங்கள் பாஸில்லாமல்.. கொழும்புக்குப் போய் வெளிநாட்டுக்கு உறவுகளிடம் ஓடலாம் என்ற பேர்வழிகளும் உள்ளனர். அதற்காக என்றே சரணடைந்தோரும் புலி ஆதரவு செய்தோரும்.. பின் காட்டிக் கொடுத்தோரும் உளர்.

இதையெல்லாம் தாண்டி மண்ணுக்காய் மடிந்தவனும்.. மடிந்தவளும்.. சிறை போனவனும்.. போனவளும் என்று.. தியாகிகளும் உளர். இன்னும் எதிரியிடம் சரணடையாது போராடுபவனும் போராளி தான். அவர்களைப் பற்றியும் பேசுங்கள்..! ஆயுதம் கொண்டு பேசினால் தான் அவன் போராளியா..??! காட்டுக்குள் இன்னும் இலட்சியம் சுமந்து திரியும்.. அவர்களையும் எண்ணிப் பாருங்கள். நீங்கள் யார் அவர்களைப் பற்றி பேச..??! என்பதை உணர்வீர்கள்..!

உங்களின் நீலிக்கண்ணீர்.. நிச்சயம் வன்னிச் சிறை உடைக்காது..! அது மட்டும் நிச்சயம். அதையும்.. யாரேன் தான் உடைக்க வேண்டும். அப்போதும்.. நாம் கவிதையும் கதையும் எழுதிக் கொண்டே ஆளையாள் திட்டிக் கொண்டே ஒற்றுமை ஒற்றுமை.. பங்களிப்பு பங்களிப்பு என்று உரத்தக் கத்துவோம்..! :(

Link to comment
Share on other sites

சாந்தி அக்கா,

நீங்கள் கவிதையை பிரசுரித்தவுடன் வாசித்து இருந்தேன். கவிதை என்கின்ற அளவில் அருமையாக அழகாக வடித்து இருக்கிறீங்கள். உங்கட கவிதையில ஓர் படிமுறை வளர்ச்சியை ஓர் முதிர்வுத்தன்மையை காணக்கூடியதாக இருந்திச்சிது.

ஆனால்..

கவிதையில பேசப்படுகிற விசயங்கள் என்று பார்க்கப்படேக்க நிறைய முரண்பாடுகள் இருக்கிது. யதார்த்தத்தில் உண்மையாக இருந்தாலும், நிகழ்வின் நிஜப்போக்கு கவிதையில படம்பிடிச்சு காட்டப்பட்டு இருந்தாலும்.. கவிதைமூலம் சொல்லப்படுகின்ற செய்தி எனது தனிப்பட்ட பார்வையில ஏற்புடையதாக இல்லை.

நானும் அண்மைக்காலங்களில தாயகத்தில ஏற்பட்ட இழப்புகளிற்கு பிறகு பலவாறான பின்னூட்டல்களை எழுதி இருக்கின்றேன், எழுதுகின்றேன். இழப்புகளிற்கு முன்னமும்கூட பின்னூட்டல்கள் குடுத்து மாற்றுக்கருத்து மாணிக்கம் என்றும் பட்டம் வாங்கி இருக்கிறன்.

இங்குவிடயம் என்ன என்றால்...

எங்கட விமர்சனங்கள் இனிவரப்போகின்ற நடவடிக்கைகள், செயற்பாடுகளை சரியான பாதையில் போவதற்கு உதவினால் நல்லது. ஆனால்.. அடிமடியில கைவைத்து சகலதையுமே ஒட்ட நறுக்குவதாய் இருந்தால் அது ஆரோக்கியமானது இல்லை.

இவ்வகையில பார்க்கேக்க..

சனமாக இருக்கட்டும், போராளிகளாக இருக்கட்டும்.. அவர்கள் உதிரம் சிந்தி.. உடல் உருக்குலைஞ்சு.. செய்த தியாகங்கள்.. சுமந்த உயிர்வலிகள் யுகம் யுகமாக ஈழத்தமிழனாக தன்னை உணரக்கூடிய ஒவ்வொருத்தன் நெஞ்சத்தையும் உருத்திக்கொண்டு இருக்கும். விழ விழ வீரவணக்கங்கள் சொன்னோம். இப்போது வீழ்வதற்கு எவரும் இல்லை என்கின்ற நிலையில இதுவரை காலமும் வீரர்களாக வீழ்ந்தவர்கள் வீணாகிப்போய்விட்டார்கள் என்று சொல்ல முடியாது.

அண்மைக்காலத்தில பாரிய மனித அவலத்தை பார்த்தபோது அனைவருக்கும் பேரதிர்ச்சியாக இருந்திச்சிது. இந்தத்துயர்களில இருந்து மீள்வது எப்படி என்று தெரியாமல் எல்லாரும் தவித்துக்கொண்டு இருக்கிறம். மறுபுறத்தில் சிறீ லங்கா இனவாத அரசு தனது இரும்புப்பிடியை இன்னமும் இறுக்கிக்கொண்டு அங்குள்ள சனத்தை நசுக்கிக்கொண்டு போகிது. தாயகத்தில் மிகுதி எஞ்சி உள்ள தமிழர்களின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்று இப்போது தெளிவாகத் தெரிகின்றது.

இப்படியான நிலையில..

சரிகள், பிழைகளுக்கு அப்பால.. சிங்கள இனவாதத்திடம் இருந்து தப்பிப்பிழைப்பதற்கு தாயகபோராட்டம் ஏதாவது ஒரு வழியில தொடர்ந்து முன்னெடுக்கப்படவேண்டிய தேவையை அவசியத்தை உணரக்கூடியதாக இருக்கின்றது. தாயகத்தை, போராட்டத்தை இவர்கள் இல்லாமல் பிரிச்சுப்பார்க்க இயலாது. உணர்வுகளுக்கு உரம் ஊட்டுபவர்கள் மாவீரர்கள், மக்கள்...!

எனவே..

தூரநோக்கில சிந்தித்தால்.. சில விடயங்களை கண்டுகொள்ளாமல் இருந்தால் நல்லது என்று தோன்றுது. என்னோட கதைக்கும்போது ஒருவர் சொன்னார்.. உண்மை என்பதற்காய் எல்லாத்தையும் உள்ளபடி சொல்லித் திரிய ஏலாது என்று. ஏன் என்றால்.. உண்மை பொய்களுக்கும் அப்பால்.. நடுக்கடலில தத்தளிக்கிற சனம் நீண்டகால நோக்கில அடையப்படவேண்டிய கரை இருக்கிது என்று ஒன்று இருக்கிது.

அண்மையில சர்வதேசத்துக்கே சவால்விடும்படியாக தமிழ் ஊடகவியலாளர் ஒருவருக்கு 20 ஆண்டுகால சிறைத்தண்டனையை தீர்ப்பாக சிங்கள இனவாதிகளால வழங்கப்பட்டு இருக்க்கிது. தமிழருக்கு எப்பிடியான சுதந்திரம் குடுக்கவேணும் எண்டு அவன் தெளிவாகத்தான் இருக்கிறான். நாங்கள்தான் சுதந்திரம் எது எண்டு தெரியாமல் குழம்பிப்போய் இருகிறம்.

என்னோடு சேர்ந்து மேல சொல்லப்பட்ட விமர்சனங்களையெல்லாம்.. தனிப்பட எடுத்துக்கொள்ளாது சிந்தனைப்போக்கை மீள்பரிசீலனை செய்வதற்கு ஆக்கபூர்வமான பின்னூட்டல்களாக எடுத்துக்கொள்ளுங்கோ சாந்தி அக்கா.

Link to comment
Share on other sites

எத்தனை தடவைகள் ஆனாலும்

மீள முடியாத சோகம்

தாழ்ந்து கிடப்பதற்கானதல்ல போராட்டம்

வாழ்வு வேண்டியதே ஈழப்போர்

அழிந்து போவென்று யாரும்

உளமாற எண்ணவில்லை...

எப்போதுமே...

அழிந்து போகுமென்று யாரும் எண்ணவில்லை. அழியும்வரை அவர்கள் வீட்டுவாசலில் அழிவு வரும் வரை ஊரார் யாவரையும் எழுச்சிகொள்ளென உச்சரித்தவர்கள் இப்போது எதிர்மாறாய் நிற்பது பறவாயில்லை எல்லாம் பிரபாகரன் என்ற மனிதன்தான் காரணம் என்று பொல்லாதவன் பிரபாகரனஇ என்று எழுதும் வாக்கு மூலங்களைத் தான் கேட்க முடியவில்லை பறவைகள்.

தவறுகளை அறிந்தவர்கள் அப்போது சூரிய தேவனே எனப்பாட்டுக்கட்டி பரவசப்படுத்திய போது இப்போதைய தங்கள் களத்துப்பதிவுகளை சொல்லியிருக்கலாம் அல்லவா. பிள்ளைகள் லபக் பிடியில் போகிறார்கள் என்று வெளியில் கதைகள் வந்த போது இவர்கள் அமுக்கென்று அமுங்கியிருந்ததில் இவர்களுக்கம் பங்குண்டல்லவா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விழவிழ எழுதியது வீரவணக்கமல்ல எழுகைப்பாடல்

காழ்ப்புணர்ச்சிக்கு இடம்கொடுத்தால் கவிதையும் தவிடுபொடி

நேற்றுவரை போற்றிப் பாடியதில் உன் பேனாவும் இருந்திருக்கும்.

வீழ்ந்து விட்டதாய் நினைத்தாயா?

அல்லது வேரோடு பிடுங்கிப்போட்டதாய் நினைத்தாயா?

துயரங்களும், துரோகங்களும் இன்று மட்டுமா?

வலிப்பட்டு, கலிப்பட்டு வைரம் பாய்ந்ததே சுதந்திர வேட்கை

அடிக்கின்ற காற்றில் காணாமல்போவதற்கு பொடித்தூளல்ல புரிந்து கொள்.

நாளை ஒரு ஒளி தெரிந்தால்

'நான் வாட்டி எழுதியதில் வல்லமை பிறந்ததென்பாய்."

பலரின் ஈன கருத்துகளைப் பார்த்திருக்கிறேன், கேட்டிருக்கிறேன்.

சூரியப் பேரொளியைப் பாடியன் புண்ணியனே.

நீயும் பாடியிருக்கக்கூடும். நான் அறியவில்லை.

என்ன செய்யச் சொல்கிறாய்?

இராணுவச் சுற்றரணுக்குள் இருப்பவர்களின்

மௌனத்தை உடைக்கச் சொல்கிறாயா?

ஆமைக்கும், கோழிக்கும் வித்தியாசம் இருக்கிறது.

கொக்கரிப்பதே முடிவென்றால்

பாம்புக்கு இரைதேடல் இலகுவானது.

அம்பலத்தில் நிற்பவனைக் காட்டிலும்

பார்வையாளனுக்குப் பத்தும் தெரியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விழவிழ எழுதிய வீரவணக்கம் என்னவானது ?

விழவிழ நீங்கள்

வீரவணக்கம் எழுதினோம் நாங்கள்.

அழஅழக் கவிதையும்

ஆறாத்துயர் நிறையக் கண்ணீருமாய்

கடைசிச் சொட்டு வீழ்ந்து காயும் வரையுமாய்

நினைவள்ளி நினைவள்ளி நீண்ட

தூரமெங்கும் நெருப்பு மூட்டினோம்.

நேற்று மூட்டிய நெருப்பு விடுதலைக்கானது இன்று நீங்கள் மூட்டும் நெருப்பு அதனை அழிப்பதற்கானது.

இழந்தவை யாவையும் எழுகையும் நிமிர்வும் என்றெம்

எழுத்துகள் யாவிலும் எழுதியே அழிந்தோம்.

பரணி பாடினோம் பாவினால் உங்களைப் பரவசப்படுத்தியும்

பாடையின் முன்னின்று போர் முரசு கொட்டியும்

சோடித்து மறைத்துச் சுதந்திரம் பாடினோம்.

காலத்திற்குக் காலம் இழப்புகளால் எங்கள் வளர்ச்சி அதிகரித்ததே அல்லால் குறையவில்லை

ஈரம் சொட்டச் சொட்ட நீங்கள் சிந்திய குருதியில்

எழுதினோம் ஏராளம் ஏராளம்……

கட்டாயங்களை மறைத்து

அவை கட்டாயமென்று எழுதினோம்….

சிந்திய குருதியிலேயே சுதந்திரம் என்பது எவ்வளவு முக்கியமானது என்று புரிந்து கொண்டோம் .

காதல் வாழ்வு குழந்தைகள் உறவு முழுவதும்

காப்பரண் தேடாமல் வாழக்கிடைத்த போகத்தில் குறையின்றி

வலிமையின் நிறமும் குணமும்

நாங்களேயென்று பொய் சொன்னோம்.

உங்களுக்கு பொருத்தமாக இருக்கலாம்.

களமுனைக்காயமும் துயரமும் மறந்து

காயங்கள் ஆறிய காலத்தில் நின்றபடி

களமுனையே எங்கள் தெருமுனைபோல்

வன்னிக் காட்டினில் விளைவது – பெரும்

வற்றாவீரமென்று பேரம்பேசினோம்.

எங்கள் பிள்ளைகளின் பெருமையை நாங்கள் பாடாமல் மாற்றானா பாடுவான்?

பெருமையைப் பேரம் பேசுதல் என்று நீங்கள் வர்ணித்தது உங்களை நல்ல வியாபாரியாகக் காட்டுகிறது.

பேறுகளாய்க் கிடைத்த பெரும் பொக்கிசங்களையெல்லாம்

தேடுவாரற்றுத் தெருவில் எறியும் வரை - எங்கள்

தேசியம் தாயகம் சுயநிர்ணயம் என்ற வார்த்தைகள் யாவையும்

நாவிலே எழுதியும்

நாற்சந்திகள் மூலைகள் எங்கணும் முழங்கினோம்.

முழக்கங்கள் மட்டுமே மீட்பின் முடிவென்று நம்பினோம்.

மேய்ப்பர்கள் பின்னால்

கேள்விகள் கேளாத ஆடுகளாய்ப் பின்தொடர்ந்தோம்.

அப்படியென்றால் இப்போது மட்டும் மக்கள் மந்தைகள் அல்ல அதாவது சிங்கள கோரமுகம் மட்டும் மக்களை மந்தைகளாக அடைக்கவில்லை தமிழ் தேசியம் முன்பே செய்தது என்று சொல்லாமல் சொல்கிறீர்களா?

எங்கள் எங்கள் என்று கோசித்துக் கும்மியடித்துக்

கொத்துறொட்டியும் கிடாய் இறைச்சியும்

உறைப்பு றோள்சும் வடையுமாய்

உலகவரைபடத்தில் எங்களை நிறுவினோம்.

முடிவு எங்கள் கைக்கு மாறியதாய்

அவர்கள் அழிவுக்கு நாங்களே

அகலப்புதைகுழி தோண்டிக் கொடுத்தோம்.

அதையெல்லாம் அறியாமல் தேசியம் மீதான

விளக்கங்கள் விரிவுரைகளென

விரயமானவை எங்கள் வீரத்தில் விளைந்தவை ?

அப்படியானால் இந்தியா, சீனா, பாகிஸ்தான்,ஈரான் என்றுவரிசையாக சிறிலங்காவிற்கு உதவிசெய்த நாடுகள் எங்கள் போராட்டத்தை அழிக்கவோ ஒடுக்கவோ இல்லையா? அவர்கள் எல்லாம் தமிழ் மக்களை வாழ வைக்க முயற்சி எடுத்தார்கள் பாழாய்ப் போன கொத்துரொட்டியும்,கிடாய் இறைச்சியுமாக உலக வரைபடத்தில் நின்றவர்கள்தான் அழிவுக்குக் காரணமானவர்களா?

வன்னிக்கள முனையில் எழுந்த தீப்பிழம்பில்

இழந்தவை இறந்தவை

எத்தனையென்ற எண்ணிக்கையில்லை…..

பேரறுமில்லை அவர்களுக்குப் பெயருமில்லை…..

யாருமில்லை அவர்களுக்காய் முழங்கவோ

நீதி கேட்டு விளங்கவோ யாருமின்றி

யாவும் புழுதியில் குருதிச் சகதியில் புதையுண்டு……

போரும் வாழ்வும் - அவர்கள்

சாவில் அவலக் குரல்களில் சரித்திரம் முடித்துத்

தரித்திரன் கால்களில்

எங்கள் வீரமும் மானமும் வீழாதென்ற ஓர்மமும்

வீழ்ந்து கருகிச் சிதைந்த

ஆன்மக்குரல்களின் உதைப்பில்

எல்லாம் இருள்கிரகணத்தின் போய் விழுந்து

இனியென்றும் வெல்லோம் என்றது போல்

எல்லாம் முடிந்து…….

எல்லாம் முடிந்ததென்று நீங்கள் முடிவெடுக்க முடியாது. முடிவெடுக்க வேண்டியவர்கள் வதைமுகாம்களுக்குள்ளும், தமிழீழப்பகுதியிலும் வாழ்பவர்களும் மட்டுமே. அவர்கள் வாழ்வு எல்லாம் முடிந்துவிட்டதா?

விரும்பியும் விரும்பாமலும்

வெடித்தவை குப்பி கடித்தவையெனக்

கதைகளின் நீளத்தைக் களமுனை முடிவுகள்

தடயங்களின்றித் தாரைவார்த்ததைத்

தமிழ் வீரமெனப் போற்றவா….?

அப்படியானால் நீங்கள் அவர்களைத் தூற்றப் போகிறீர்களோ?

என்னுறவு என் கனவு என நிறைந்த

உயிர்களின் ஓலத்தில்

என் மச்சான் , என் தோழி

என்பிரிய நண்பர் நீள வரிசையாய்

போராயுத வாகனங்களின் சில்லுகள் சிதைத்த கதை

ஓராயிரம் ஆண்டுகள் சென்றாலும்

ஈடுசெய்து அவர்கள் வாழ்வைப் புதுப்பிக்க

எவரால் இயலுமிங்கு….?

போராயுதச் சில்லுகளில் சிதையுண்டு மாண்டவர்கள் உறவுகள்தான் அவர்களின் மரண ஓலத்தில் இருப்பவர்களுக்குத்தன்னும் சுதந்திரமான நிம்மதியான வாழ்வுக்கு வழி சமையுங்கள் என்ற வாசகம் கேட்கவில்லையா?

''வீட்டுக்கொரு வீரனே விரைந்து வா''வென்று வீரமிட்ட குரலே

தன் வீட்டுப்பிள்ளையைக் களம் அழைக்கையில் சினந்து

சிங்களக்குகையேகிய முற்றத்துக் கவிஞரின்

முற்போக்கு ஞானத்தை முடிவாகி இவ்வுலகு கடலில்

மூழ்கிப்போனாலும் மறக்காது வரலாறு…..

சத்திய சோதனை சகாப்தங்களுக்கும் வருவதுண்டு. தெரியுமா உங்களுக்கு முழுக்கதையும்?

சும்மாயிருந்த மனிதனைச் சூரியனே…,சுடர் விளக்கே…,

சுழல்காற்றே சுனாமியே என்றெல்லாம்

ஒளிவட்டம் போட்டுப் பாடைகூட ஏற்றாமல்

பகைகாலில் நெரியுண்டு

நெற்றி பிழக்கக்காரணமாய் ஆனோரெல்லாம்

கறுப்பு வெள்ளை சாம்பல் நிறப்பெட்டிக் கதைசொல்லும்

காலத்தில் தமிழ் வீரம் புத்துணர்வு பெற்றுளதைக் கேட்கப்

பேறுபெற்றோம் என்பதை விடுத்து வேறெந்த வார்த்தை சொல்ல….?

சும்மா இருக்கும் உங்களை யாரேனும் 'சூரியத் தேவே' என்பார்களா? கறுப்பு, வெள்ளை, சாம்பல் பெட்டி என்பது காலத்தின் கதை.

பணமும் பகட்டும் வசதியும் வாய்ப்பும்

தமிழக அரசியல் உணர்வுபோல்

ஈழத்தமிழின விதியை எழுதிய விண்ணர்கள்

வம்சமே சிதைந்தாலும் வாய்மூடியிருப்பதே

சூரியத்தேவனுக்கு நாம் செய்யும் சுயநலமற்ற கெளரவம்.

காலமுகில் கலையும்போது எல்லாம் தெளிவுறும். இன்று சுமத்தப்பட்டிருக்கும் பழிதாண்டிய பின் பண்பாடு தெரியும்.

போலியாய் புகழ்பாடி அந்தச் சூரிய நெருப்பை

வெறும் கரித்துண்டாக்கிய கயமையின் உரித்துகளே

நாளை ஈழத்திருநாட்டின் இமயங்கள் என்றாலும்

அதிசயம் ஒன்றுமில்லை……

சூரிய நெருப்பைக் கரித்துண்டாக்கும் கயமை உங்களிலும் தெரிகிறது.

துரோகியைக்கூட மன்னிக்கலாம்

நண்பன் துரோகியானால்

அவனை மன்னியோம் என்றெல்லாம்

மார்தட்டிய மன்னர்கள்

கம்பிவேலிகளின் உள்ளிருந்து

கணணியும் கடைசிவரை விசுவாசித்த

விசிறிகளின் துணையுமாய்

‚‘களத்திலிருந்து பதிவும் , பிரபாகரனுக்குப் பின்னரான தமிழ் அரசியல்‘‘

பகிரவும் பதியவும் அவர்களே புதிய கதாநாயகர்களாய்

தமிழ்வீரமும் மானமும் தலைநிமிர்கிறதா…..?

ஏனிந்தக் காழ்ப்புணர்ச்சி?

மீண்டும் துளிர்ப்போம் மீண்டும் தளைப்போம் தவிர்த்து

மிஞ்சியோரை மீட்போமென்று எவராவது எழுதட்டும்

இருகைகூப்பி வணங்குகிறோம் அவர் திசைநோக்கி…..

வாழ்வின் மீதத்தை அவர்கள் இனியாகிலும்

அவர்க்கு வாழ ஒருவழி

பனைமரமும் நினைவும் பால்யகாலமும்

போர் தின்று முடித்த கதை மறந்து வாழ்ந்துவிட்டுச் சாக

வழி தரும் ஒளியைத் தேடி விழிகள் விரிப்போம்…..

உங்களால் எத்தனை பேரை மீட்டு அவர்களுக்கு நிம்மதியான சுதந்திரமான சிங்களப் பேரினவாத அரசால் அவலமுறாமல் காப்பாற்ற முடியும் என்று தெரிவியுங்கள் நாங்கள் உங்கள் பின்னால் அணிவகுக்கிறோம்.

வீரம் மானம் வீழாச்சரிதம் என்ற வெற்று வீராப்பு வீரர்கள்

முதல் களத்தில் போய் நிற்கட்டும்.

ஆட்லறிகள் அணுவாயுதங்கள் யாவையும்

அவர்கள் வாய்கள் ஏந்தட்டும்

எஞ்சிய மிச்சம் உயிர்மீண்ட பின்னர்

எதையாவது செய்து தொலையட்டும்.

ஆயுதம் ஏந்துவது குறிக்கோள் அல்லவே…. சிங்களம் தொடரும் வதையில் திணிக்கப்பட்டால் என்ன செய்வது?

அங்குள்ளவர்களின் ரணங்களை ஆற்ற உங்களால், எங்களால் எவராலும் முடியாது. போராடுவதும் விடுவதும் அங்குள்ளவர்களே தீர்மானிக்கவேண்டும். நிச்சயமாக உங்களால் அதை உணர முடியாது. வலி என்பதை அனுபவித்தவர்களே உணர்வார்கள் மற்றவர்களால் அது முடியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழனின் போராட்ட வரலாறே காட்டிக்கொடுப்பவனால் மட்டுமே அழிக்கப்பட்டிருகிறது, கட்டப்பொம்மனுக்கு ஒரு எட்டப்பன், பண்டாரவன்னியனுக்கு ஒரு காக்கைவன்னியன், எம் தலைவருக்கு ஒரு பட்டியலே நீள்கிறது, தமிழினத்தின் ஒரு சாபம் இது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வீட்டுக்கொரு வீரனே விரைந்து வா''வென்று வீரமிட்ட குரலே

தன் வீட்டுப்பிள்ளையைக் களம் அழைக்கையில் சினந்து

சிங்களக்குகையேகிய முற்றத்துக் கவிஞரின்

முற்போக்கு ஞானத்தை முடிவாகி இவ்வுலகு கடலில்

மூழ்கிப்போனாலும் மறக்காது வரலாறு…..

உண்மைதான் சாந்தியக்கா..ஊரான் பிள்ளைகளையெல்லாம்..கவிதைபாடி உசுப்பேற்றி விட்டிட்டு அவர்களெல்லாம் போராடி குண்டடிபட்டும்..குப்பியத்தும

் மாவீரர்களானபோது அதற்கும் கவிதைபாடியவர் தன்பிள்ளையை போருக்கு கூப்பிட்டதும்..தலைவனை வசைபாடினதும் பின்னர்.. இராணுவிசாரணையில் தலைவனை சர்வாதிகாரி என்றதும்..ஏன் புலம்பெயர்ந்த தமிழர்கள் அனைவரையுமே.. ஏகே எடுத்து போராடாது யுரிஏ..எடுத்து யுகே போன பரதேசியள் என்று திட்டின கவிஞர் ..பின்னர்.. தன் உறவுகளை வைத்து புலம்பெயர் நாட்டில் புலம்பெயர் தமிழரை புகழ்து பாடியும்.புத்தகம் வெளியிட்டதை என்னசொல்ல..

Link to comment
Share on other sites

விழவிழ எழுதியது வீரவணக்கமல்ல எழுகைப்பாடல்

காழ்ப்புணர்ச்சிக்கு இடம்கொடுத்தால் கவிதையும் தவிடுபொடி

நேற்றுவரை போற்றிப் பாடியதில் உன் பேனாவும் இருந்திருக்கும்.

வீழ்ந்து விட்டதாய் நினைத்தாயா?

அல்லது வேரோடு பிடுங்கிப்போட்டதாய் நினைத்தாயா?

துயரங்களும், துரோகங்களும் இன்று மட்டுமா?

வலிப்பட்டு, கலிப்பட்டு வைரம் பாய்ந்ததே சுதந்திர வேட்கை

அடிக்கின்ற காற்றில் காணாமல்போவதற்கு பொடித்தூளல்ல புரிந்து கொள்.

நாளை ஒரு ஒளி தெரிந்தால்

'நான் வாட்டி எழுதியதில் வல்லமை பிறந்ததென்பாய்."

பலரின் ஈன கருத்துகளைப் பார்த்திருக்கிறேன், கேட்டிருக்கிறேன்.

சூரியப் பேரொளியைப் பாடியன் புண்ணியனே.

நீயும் பாடியிருக்கக்கூடும். நான் அறியவில்லை.

என்ன செய்யச் சொல்கிறாய்?

இராணுவச் சுற்றரணுக்குள் இருப்பவர்களின்

மௌனத்தை உடைக்கச் சொல்கிறாயா?

ஆமைக்கும், கோழிக்கும் வித்தியாசம் இருக்கிறது.

கொக்கரிப்பதே முடிவென்றால்

பாம்புக்கு இரைதேடல் இலகுவானது.

அம்பலத்தில் நிற்பவனைக் காட்டிலும்

பார்வையாளனுக்குப் பத்தும் தெரியும்.

நேற்றுவரை போற்றிப் பாடியதில் உன் பேனாவும் இருந்திருக்கும்.

பாடினேன் இல்லை பகிர்ந்தேன் இல்லையென்று எங்கும் அடிக்கோடிடவில்லை.

வீழ்ந்து விட்டதாய் நினைத்தாயா? இல்லை எழுவோம் என்று இன்னும் கோசமிடுவோம்

அல்லது வேரோடு பிடுங்கிப்போட்டதாய் நினைத்தாயா?

வேரறுந்து உயிர்கள் வெந்துசாகிறது வெத்துவீரம் வெல்லாது அறியீரோ கவிஞரே!

துயரங்களும், துரோகங்களும் இன்று மட்டுமா?

வரலாறுகளைப் புரட்டினால் எல்லாம் தெளிவாகும்…..

வலிப்பட்டு, கலிப்பட்டு வைரம் பாய்ந்ததே சுதந்திர வேட்கை

அடிக்கின்ற காற்றில் காணாமல்போவதற்கு பொடித்தூளல்ல புரிந்து கொள்.

பொடியாய் சுடலைச் சாம்பலாய் அழிவாய் மண் சுடுகாடாய் உள்ளது பொடித்தூளல்ல பெருந்துயரச்சுமை

நாளை ஒரு ஒளி தெரிந்தால்

'நான் வாட்டி எழுதியதில் வல்லமை பிறந்ததென்பாய்."

நாளைய ஒளி தெரியும் நாங்களும் ஒளிர்வோம் என்ற் கனவைவிடுத்து இன்றைய ஒளியில் உண்மையைத் தேடுதல் நாளையை நலமாக்கும்.

பலரின் ஈன கருத்துகளைப் பார்த்திருக்கிறேன், கேட்டிருக்கிறேன்.

சூரியப் பேரொளியைப் பாடியன் புண்ணியனே.

நீயும் பாடியிருக்கக்கூடும். நான் அறியவில்லை.

அவன் என்றும் சூரியன்தான் எனக்கு எவருக்காகவும் அந்த உன்னதத்தை ஒளிக்கமாட்டேன். சூரியென்று பாடிய புண்ணியன் ஏனாம் தன்பிள்ளையை நாட்டுக்குக் களம் கேட்க சூரியனும் போ சர்வரிகாரியென்று வாக்குமூலம் கொடுப்பான் ? ஒரு குப்பி கூடவா அம்பிடவில்லை ? (யாரையும் சாவென்று சொல்ல எனக்கு உரிமையில்லை. ஆனால் இந்த புண்ணியனுக்கு முட்கம்பிக்குள் போனால் தனக்கு நடப்பதை அறியாத முக்காலம் உணராப்புலவரா அவர் ?) எனக்குள் கெளரவ உச்சத்தில் இருந்த நான் நேசித்த கவி இவர் அதற்காய் அவரால் நாங்கள் நேசித்த தலைவனை சர்வாதிகாரியென விழிக்க இழிச்சு நிற்கவா சொல்கின்றீர் கவிஞையே ?

என்ன செய்யச் சொல்கிறாய்?

எதைச்செய்யலாமென்கிறீர் ?

இராணுவச் சுற்றரணுக்குள் இருப்பவர்களின்

மௌனத்தை உடைக்கச் சொல்கிறாயா?

யார் சொன்னார் உடைக்க உடைய பேசாமல் இருக்கலாமே கொஞ்சம்..பொறுமையோடு…..அவர்

Link to comment
Share on other sites

சாந்தி அக்கா,

நீங்கள் கவிதையை பிரசுரித்தவுடன் வாசித்து இருந்தேன். கவிதை என்கின்ற அளவில் அருமையாக அழகாக வடித்து இருக்கிறீங்கள். உங்கட கவிதையில ஓர் படிமுறை வளர்ச்சியை ஓர் முதிர்வுத்தன்மையை காணக்கூடியதாக இருந்திச்சிது.

ஆனால்..

கவிதையில பேசப்படுகிற விசயங்கள் என்று பார்க்கப்படேக்க நிறைய முரண்பாடுகள் இருக்கிது. யதார்த்தத்தில் உண்மையாக இருந்தாலும், நிகழ்வின் நிஜப்போக்கு கவிதையில படம்பிடிச்சு காட்டப்பட்டு இருந்தாலும்.. கவிதைமூலம் சொல்லப்படுகின்ற செய்தி எனது தனிப்பட்ட பார்வையில ஏற்புடையதாக இல்லை.

நானும் அண்மைக்காலங்களில தாயகத்தில ஏற்பட்ட இழப்புகளிற்கு பிறகு பலவாறான பின்னூட்டல்களை எழுதி இருக்கின்றேன், எழுதுகின்றேன். இழப்புகளிற்கு முன்னமும்கூட பின்னூட்டல்கள் குடுத்து மாற்றுக்கருத்து மாணிக்கம் என்றும் பட்டம் வாங்கி இருக்கிறன்.

இங்குவிடயம் என்ன என்றால்...

எங்கட விமர்சனங்கள் இனிவரப்போகின்ற நடவடிக்கைகள், செயற்பாடுகளை சரியான பாதையில் போவதற்கு உதவினால் நல்லது. ஆனால்.. அடிமடியில கைவைத்து சகலதையுமே ஒட்ட நறுக்குவதாய் இருந்தால் அது ஆரோக்கியமானது இல்லை.

இவ்வகையில பார்க்கேக்க..

சனமாக இருக்கட்டும், போராளிகளாக இருக்கட்டும்.. அவர்கள் உதிரம் சிந்தி.. உடல் உருக்குலைஞ்சு.. செய்த தியாகங்கள்.. சுமந்த உயிர்வலிகள் யுகம் யுகமாக ஈழத்தமிழனாக தன்னை உணரக்கூடிய ஒவ்வொருத்தன் நெஞ்சத்தையும் உருத்திக்கொண்டு இருக்கும். விழ விழ வீரவணக்கங்கள் சொன்னோம். இப்போது வீழ்வதற்கு எவரும் இல்லை என்கின்ற நிலையில இதுவரை காலமும் வீரர்களாக வீழ்ந்தவர்கள் வீணாகிப்போய்விட்டார்கள் என்று சொல்ல முடியாது.

அண்மைக்காலத்தில பாரிய மனித அவலத்தை பார்த்தபோது அனைவருக்கும் பேரதிர்ச்சியாக இருந்திச்சிது. இந்தத்துயர்களில இருந்து மீள்வது எப்படி என்று தெரியாமல் எல்லாரும் தவித்துக்கொண்டு இருக்கிறம். மறுபுறத்தில் சிறீ லங்கா இனவாத அரசு தனது இரும்புப்பிடியை இன்னமும் இறுக்கிக்கொண்டு அங்குள்ள சனத்தை நசுக்கிக்கொண்டு போகிது. தாயகத்தில் மிகுதி எஞ்சி உள்ள தமிழர்களின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்று இப்போது தெளிவாகத் தெரிகின்றது.

இப்படியான நிலையில..

சரிகள், பிழைகளுக்கு அப்பால.. சிங்கள இனவாதத்திடம் இருந்து தப்பிப்பிழைப்பதற்கு தாயகபோராட்டம் ஏதாவது ஒரு வழியில தொடர்ந்து முன்னெடுக்கப்படவேண்டிய தேவையை அவசியத்தை உணரக்கூடியதாக இருக்கின்றது. தாயகத்தை, போராட்டத்தை இவர்கள் இல்லாமல் பிரிச்சுப்பார்க்க இயலாது. உணர்வுகளுக்கு உரம் ஊட்டுபவர்கள் மாவீரர்கள், மக்கள்...!

எனவே..

தூரநோக்கில சிந்தித்தால்.. சில விடயங்களை கண்டுகொள்ளாமல் இருந்தால் நல்லது என்று தோன்றுது. என்னோட கதைக்கும்போது ஒருவர் சொன்னார்.. உண்மை என்பதற்காய் எல்லாத்தையும் உள்ளபடி சொல்லித் திரிய ஏலாது என்று. ஏன் என்றால்.. உண்மை பொய்களுக்கும் அப்பால்.. நடுக்கடலில தத்தளிக்கிற சனம் நீண்டகால நோக்கில அடையப்படவேண்டிய கரை இருக்கிது என்று ஒன்று இருக்கிது.

அண்மையில சர்வதேசத்துக்கே சவால்விடும்படியாக தமிழ் ஊடகவியலாளர் ஒருவருக்கு 20 ஆண்டுகால சிறைத்தண்டனையை தீர்ப்பாக சிங்கள இனவாதிகளால வழங்கப்பட்டு இருக்க்கிது. தமிழருக்கு எப்பிடியான சுதந்திரம் குடுக்கவேணும் எண்டு அவன் தெளிவாகத்தான் இருக்கிறான். நாங்கள்தான் சுதந்திரம் எது எண்டு தெரியாமல் குழம்பிப்போய் இருகிறம்.

என்னோடு சேர்ந்து மேல சொல்லப்பட்ட விமர்சனங்களையெல்லாம்.. தனிப்பட எடுத்துக்கொள்ளாது சிந்தனைப்போக்கை மீள்பரிசீலனை செய்வதற்கு ஆக்கபூர்வமான பின்னூட்டல்களாக எடுத்துக்கொள்ளுங்கோ சாந்தி அக்கா.

கலைஞன் , உங்கள் பின்னூட்டத்தை வரவேற்கிறேன். ஒருவிடயத்தை பதிவிடுவது நம்மை நாம் மீள்விசாரணை செய்யவே. நீங்கள் ஒன்றும் குறைசொல்லவில்லை. உங்கள் கருத்தை தந்துள்ளீ்ர்கள் இதில் கோபமில்லை.

காலச்சுவட்டிலும் இன்னும் இதரங்களிலும் காலத்தை கையில் ஏந்துகிறோம் என்ற பேரறிஞர்கள் முகாமிலிருந்து தலைவன் பிரபாகரனை தங்கள் எண்ணப்படி கொல்கிறார்கள். அவர்களை நோக்கியே எழுதினேன். இதில் என்னையும் சேர்த்துத்தான் விமர்சனம் செய்துள்ளேன். இதை சிலர் விளங்கிக்கொள்ளவில்லையென்ற

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

போராட்டத்தின் கோட்பாடுகளில் எந்த தெளிவுமற்ற ஒருவரின் பிதற்றல். ஏனிந்தப் போராட்டம் ஆரம்பமானது? வரலாற்றின் நிகழ்வுகள் என்ன? உலக ஒழுங்கின் மாற்றங்கள் என்ன? என்பவற்றை தெளிவாகப் புரிந்துகொண்டால் இந்த ஒப்பாரிப் பிதற்றல்கள் எதுவுமே வராது.

Link to comment
Share on other sites

காலச்சுவட்டில் வெளியான கட்டுரையை நானும்படித்தேன்..வெற்றிகள் குவிந்தபொழுது ஆகா ஓகோ என்றும் சூரியத்தேவன் என்றும் புகழ்ந்து கட்டுரையும் கவிதையும் எழுதிவிட்டு.. போராட்டம் தோற்றதும்..போராட்டத்திறகாக புறப்பட்ட பலரும் களத்திலேயே இறந்துபோக..இவர்கள் தப்பியயோடி அப்படியே பேசாமல் இருக்காமல்..அத்தனை தவறுகளிற்கும் தலைவனே காரணம் என எழுதுவதுதான் வேடிக்கையாக இருக்கிறது...என்னைப்பொறுத்தவ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காலச்சுவடு, இரயாகரனின் தமிழ் அரங்கம், ஷோபா சக்தியின் இணையத் தளம் .... இவர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து இயங்குகிறார்களா அல்லது ஒரு சக்தியால் இயக்கப்படுகிறார்களா தெரியவில்லை. ஆனால் தங்களை சமத்துவவாதிகளாகவும் தர்மத்தின் குரல்களாகவும் காட்டி நச்சுக்கருத்துக்கள கக்குகிறார்கள். நெருப்பு மற்றும் இதர கூலித் தளங்கள் போலில்லாமல் அரசாங்கத்தையும் அவ்வப்போது கண்டித்து மக்களுக்கு நடுநிலையாளர்களாகவும், உண்மை செய்தியை தருபவர்கள் போலும் வேசமிடுகின்றார்கள். உண்மைகள் உறங்குவதால் இவர்கள் சொல்லுவதை பலரும் நம்பிவிட்டு இப்படி பிதற்றுகிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சாத்திரி அண்ணா உங்கள் கருத்துதான் என்னுடையதும்.

தலைவருடன் ஒன்றாக நின்றுவிட்டு முகாமுக்குள் இருந்து கூடிக்குத்தும் அறிக்கை விடுவதையும்

புலத்தில் மே18 வரை தலைவரை இந்திரன்.சந்திரன் என்று புகழ்ந்ததடன் மற்றக் கவிஞர்களை விட முந்தும் அவசரத்தில்

வாகரையும் குடும்பிமலையும் போனாலும் தலைவர் மணலாற்றிலை அடிப்பார்..வெடிப்பார்..என்று எழுதினதுகள் இப்ப அங்கை பிழை

இங்கை பிழை என்று குற்றக்கவிதை எழுதுவதையும் ஒருபோதும் ஏற்கமுடியாது.

இப்ப தலைவரை குற்றம் சொல்லி கவிதை எழுதுதிறதுகள்..கொஞ்ச நாளைக்கு பிறகு கே.பி யையும் எழுதுவினம்.

பிறகு வர்றவர் தோற்கும்போது அவரையும் எழுதுங்கள்.இவையளுக்கு எப்போதும் வெற்றிச் செய்தி காதிலை கேட:டுக் கொண்டே

இருக்கவேணும். தோற்றால் எடு 'லப்டப்'பை எழுது குற்றம் சாட்டும் கவிதை என்ற இந்த புத்தி கேவலமானது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள். நீங்கள் நீங்கள் நடந்து வந்த பாதைகளைத் திரும்பிப் பாருங்கள்.

போராட்டத்தைப் போராளிகளை வைத்தே புகலிடத்தில் இருந்து புரட்சி பேசி.. சாதிக்கும் பெண்மணிகளாய் காட்டி உலா வந்தவர்கள் வேறு எவருமல்ல. இதே கவிஞர்களே. இன்று.. வன்னி மக்களுக்காய் அழுவதாகப் பாசாங்கு செய்கின்றனர்.

அன்று வாகரையில் அடிக்கும் போது எங்கே போனது இந்தப் பச்சாதாபம். குடும்பி மலை போகும் போது கூட கிளிநொச்சி இருக்கு என்று ஆர்ப்பரித்தவர்கள்.. இன்று இப்படி..???!

போராளிகளின் தியாகங்களும் வீரமரணங்களும் இவர்களுக்கு விமர்சிக்கும்.. வகைக்குரியதாக இருக்கலாம். நண்பனாய்.. நண்பியாய்.. சக பள்ளி மாணவனாய்.. இருந்து அவனை இழந்தவனுக்குத் தெரியும்.. வலியும் வேதனையும்..!

வன்னியில் அடைபட்டிருப்பவர்கள் அத்தனை பேரும்.. அப்பாவிகள் என்றால் அதுவும் ஏற்புடையதல்ல..! அவர்களுள் இராணுவம் வரும்.. நாங்கள் பாஸில்லாமல்.. கொழும்புக்குப் போய் வெளிநாட்டுக்கு உறவுகளிடம் ஓடலாம் என்ற பேர்வழிகளும் உள்ளனர். அதற்காக என்றே சரணடைந்தோரும் புலி ஆதரவு செய்தோரும்.. பின் காட்டிக் கொடுத்தோரும் உளர்.

இதையெல்லாம் தாண்டி மண்ணுக்காய் மடிந்தவனும்.. மடிந்தவளும்.. சிறை போனவனும்.. போனவளும் என்று.. தியாகிகளும் உளர். இன்னும் எதிரியிடம் சரணடையாது போராடுபவனும் போராளி தான். அவர்களைப் பற்றியும் பேசுங்கள்..! ஆயுதம் கொண்டு பேசினால் தான் அவன் போராளியா..??! காட்டுக்குள் இன்னும் இலட்சியம் சுமந்து திரியும்.. அவர்களையும் எண்ணிப் பாருங்கள். நீங்கள் யார் அவர்களைப் பற்றி பேச..??! என்பதை உணர்வீர்கள்..!

உங்களின் நீலிக்கண்ணீர்.. நிச்சயம் வன்னிச் சிறை உடைக்காது..! அது மட்டும் நிச்சயம். அதையும்.. யாரேன் தான் உடைக்க வேண்டும். அப்போதும்.. நாம் கவிதையும் கதையும் எழுதிக் கொண்டே ஆளையாள் திட்டிக் கொண்டே ஒற்றுமை ஒற்றுமை.. பங்களிப்பு பங்களிப்பு என்று உரத்தக் கத்துவோம்..! :(

மறுக்க முடியாத கருத்தாகும்.

ஈழம் இனி ஆயுதப்போர் சாத்தியமா?, வணங்காமண் பேரீச்சம் பழத்துக்குப் போகுது, இவற்றின் தொடராக விழ விழ..

உண்மையிலேயே இவர் விடுதலையை நேசிக்கிறாரா? தூசிக்கிறாரா? இவருக்கு யார் மீது கோபம். இப்படித் தமது வக்கிரங்களை கொட்ட யாழ்க்களம் பயன்படுகிறது என்னும்போது என்னத்தை சொல்வதென்று புரியவில்லை. ஆனால் ஒன்றுமட்டும் புரிகிறது இவர் யாருடையதோ பின்புலத்துடன் தமிழ்த் தேசியத்தை சிதைக்கும் நச்சுக் கருத்துகளை விதைக்கிறார் என்பது மட்டும் புலனாகிறது. தங்களது மேதாவித்தனங்களால் ஒரு தமிழ்க்குடிமகனை தமக்கிருக்கும் வல்லமையை வைத்து விடுவிக்க முடியுமானால் நாங்களும் வருகிறோம் உங்களோடு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நேற்றுவரை போற்றிப் பாடியதில் உன் பேனாவும் இருந்திருக்கும்.

பாடினேன் இல்லை பகிர்ந்தேன் இல்லையென்று எங்கும் அடிக்கோடிடவில்லை.

வீழ்ந்து விட்டதாய் நினைத்தாயா? இல்லை எழுவோம் என்று இன்னும் கோசமிடுவோம்

உங்களின் அதிவிவேக சிந்தனையை புரிந்து கொள்ள எனக்கு தாயகப் போராட்டம் பற்றிய அறிவு பத்தாது

அல்லது வேரோடு பிடுங்கிப்போட்டதாய் நினைத்தாயா?

வேரறுந்து உயிர்கள் வெந்துசாகிறது வெத்துவீரம் வெல்லாது அறியீரோ கவிஞரே!

இன்று நேற்றா வேரறுத்து உயிர்கள் வெந்து சாகிறது? வெத்து வீரம் வெல்லாது சத்தியமாகச் சொல்கிறேன் உங்களைப்போல் முன்மொழிவாளர்கள் இருந்தால் உள்ள திடமும் இல்லாமல்போகும்.

துயரங்களும், துரோகங்களும் இன்று மட்டுமா?

வரலாறுகளைப் புரட்டினால் எல்லாம் தெளிவாகும்…..

உங்களுக்கு அதிக வரலாறு தெரியும் ஒத்துக் கொள்கிறேன். உங்களைவிட இன்னும் பலருக்கு அதிகம் தெரியும் ஆனால் அவர்களுக்கு எழுத்தில் கொண்டுவந்து பொறிக்கத் தெரியாது.

வலிப்பட்டு, கலிப்பட்டு வைரம் பாய்ந்ததே சுதந்திர வேட்கை

அடிக்கின்ற காற்றில் காணாமல்போவதற்கு பொடித்தூளல்ல புரிந்து கொள்.

பொடியாய் சுடலைச் சாம்பலாய் அழிவாய் மண் சுடுகாடாய் உள்ளது பொடித்தூளல்ல பெருந்துயரச்சுமை

பெருந்துயரைச் சுமக்காமல் மீட்சியைப் பெறுதல் இயலாது.

நாளை ஒரு ஒளி தெரிந்தால்

'நான் வாட்டி எழுதியதில் வல்லமை பிறந்ததென்பாய்."

நாளைய ஒளி தெரியும் நாங்களும் ஒளிர்வோம் என்ற் கனவைவிடுத்து இன்றைய ஒளியில் உண்மையைத் தேடுதல் நாளையை நலமாக்கும்.

இன்று இருக்கும் ஒளியையும் தகர்க்கும் பணியையல்லவா நீங்கள் முடுக்கி விடுகிறீர்கள்

பலரின் ஈன கருத்துகளைப் பார்த்திருக்கிறேன், கேட்டிருக்கிறேன்.

சூரியப் பேரொளியைப் பாடியன் புண்ணியனே.

நீயும் பாடியிருக்கக்கூடும். நான் அறியவில்லை.

அவன் என்றும் சூரியன்தான் எனக்கு எவருக்காகவும் அந்த உன்னதத்தை ஒளிக்கமாட்டேன். சூரியென்று பாடிய புண்ணியன் ஏனாம் தன்பிள்ளையை நாட்டுக்குக் களம் கேட்க சூரியனும் போ சர்வரிகாரியென்று வாக்குமூலம் கொடுப்பான் ? ஒரு குப்பி கூடவா அம்பிடவில்லை ? (யாரையும் சாவென்று சொல்ல எனக்கு உரிமையில்லை. ஆனால் இந்த புண்ணியனுக்கு முட்கம்பிக்குள் போனால் தனக்கு நடப்பதை அறியாத முக்காலம் உணராப்புலவரா அவர் ?) எனக்குள் கெளரவ உச்சத்தில் இருந்த நான் நேசித்த கவி இவர் அதற்காய் அவரால் நாங்கள் நேசித்த தலைவனை சர்வாதிகாரியென விழிக்க இழிச்சு நிற்கவா சொல்கின்றீர் கவிஞையே ?

வதைமுகாமுக்குள் என்ன நடக்கிறது என்று உங்களுக்கு உளவு சொல்ல ஆட்கள் அதிகம் போல் ஒட்டுப்படைகளைத் தவிர எவரும் உள்நுழைய முடியாவிடத்தில் நடக்கும் விடயங்கள் உங்கள் காதுகளுக்கு எப்படி எட்டுகிறது? நீங்கள் என்ன புலனாய்வுத் துறையைச் சார்ந்தவரா?

இருப்பின் அவசியம் பலருக்கு இருக்கிறது. ஒன்றுமே இல்லாமல் துடைத்தொழித்தல் செய்ய வேண்டும் என்று உங்களுக்கு ஏதும் எண்ணம் இருக்கிறதோ? மெளனங்களுக்கப் பின்னால் என்ன இருக்கிறது என்று எவருக்கும் தெரியாது. அமைதி காத்தலே அனைவருக்கும் நன்று.

என்ன செய்யச் சொல்கிறாய்?

எதைச்செய்யலாமென்கிறீர் ?

உறுதியைக் குலைப்பதும், உலகம் முழுக்கப் பரந்து வாழும் தமிழ் இனத்தின் போராட்டங்களை மொத்தமாகக் கொச்சைப்படுத்துவதும் சமீபத்திய தங்கள் பணி. உங்களுக்குத் தெரியாததா?

இராணுவச் சுற்றரணுக்குள் இருப்பவர்களின்

மௌனத்தை உடைக்கச் சொல்கிறாயா?

யார் சொன்னார் உடைக்க உடைய பேசாமல் இருக்கலாமே கொஞ்சம்..பொறுமையோடு…..அவர்

Link to comment
Share on other sites

சாந்தி,

வீரமரணம் விழ விழ வீரவணக்கம் செய்தது வெறும் வெற்றி பெருமிதத்திலோ அல்லது இன்னும் இன்னும் வீழ்ந்து மரித்துப் போங்கள் என்று பாடை கட்டவோ அல்ல. சிங்கள இராணுவ இராட்சதனினதும் சிங்கள பெளத்த பேரினவாததின் கோரப் பிடிக்குள்ளும் சிக்கிக் கொண்ட எம் துயரவாழ்வை தம்மை ஆகுதியாக்கி மீட்க வந்த எம் பிள்ளைகளின், சகோதரங்களின் மரிப்புகள் தந்த வேதனையிலும், அந்த மரிப்புகளினூடு விடுதலை கிடைக்கும் என்று நிச்சயம் நம்பியமையினாலும் தான். இன்றைய பெருந்துயருக்கும் படுதோல்விக்கும் முழுக்காரணமும் எம் ஐக்கியமின்மையும் ஒற்றுமையின்மையுமே தவிர வேறில்லை.

வதை முகாமிலிருந்தும், சிங்கள இராணுவ வெறியர்களிடமிருந்தும், சிங்கள பெளத்த பேரினவாததிலிருந்தும், இந்திய வல்லாதிக்க பார்பன வெறியர்களிடமிருந்தும், மக்களை நிரந்தரமாக மீட்க வேண்டும் என விரும்புகின்றவர்கள் முதல்ல் செய்ய வேண்டியது இன்று எம்மக்கள் மத்தியில் இருக்கும் ஒற்றுமையின்மையும், பிறழ்வுகளையும் வேறுபாடுகளையும் நீக்கி ஒற்றுமைப் படுத்துவதே. தமிழீழம் காண்பதை விட மிகக் கடினமான முன் பணி இதுதான். தன் குடும்பத்தையே ஒட்டுமொத்தமாக போராட்டத்திற்கு அர்ப்பணித்த பெருந்தலைவனால் கூட செய்ய முடியாமல் போன விடயம் அது, அதை செய்வதற்கான முயற்சியில் நிச்சயம் இந்தக் கவிதை தன் பங்கை ஆற்றவில்லை....மாறாக இன்னும் பிளவுகளைத் தான் கூட்டிவிட்டுச் செல்கின்றது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய ஈழத்தமிழனின் நிலையில் இதுவொரு கேடுகெட்ட தலைப்பு.

அதற்கு கேணைத்தனமான கருத்துக்கள் வேறு வக்காளத்து வாங்குகின்றன.

Link to comment
Share on other sites

விழவிழ எழுதிய வீரவணக்கம் என்னவானது ?

கவிதை படு பிற்போக்கானது. எமது மக்களுக்கு எந்த விதத்திலும் உதவாது. குளிரென்றும் பாராமல் குழந்தைகள்,வயோதிபர் என லட்ச கணக்கில் எம்மக்களுக்கு ஒரு விடுவு வர வேண்டும் என வீதியில் இறங்கி போராடிய மக்கள் பற்றி இந்த கவிஞருக்கு எழுத தெரியாதா? பத்திரிகைகள், வானொலிகள், ஊடகவியலாளர்கள், அரசியல்வாதிகள் என கடிதங்களும் ,மின்னஞ்சல்களும் எம்மக்கள் அனுப்பவில்லையா? வணங்கா மண் போன்றவற்றுக்கும் , செருப்பு சேர்க்கிறோம் போன்றவற்றுக்கு மக்கள் பணம் கொடுக்கவில்லையா? . எமது சக்திக்கு அப்பால் மேலும் பல சக்திகளால் பல காரணங்களுக்காக எமது போராட்டம் நசுக்கப்படவில்லையா? இன்னும் எத்தனையோ காரணங்கள் இருக்க ஏதோ வசை பாடுவது போல் தான் இக்கவிதையை என்னால் பார்க்க முடிகிறது. :(:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தில் ஒருசிலரை போட்டுதள்ளுவதற்கு பதிலாக புலத்தில் பலரை போட்டுத்தள்ளியிருந்தால் இன்று நிலைமை வேறு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தன்னிலை தாழாமையும் அந்நிலை தாழும் இடத்து உயிர் வாழாமையும் மானம் எனப்படும்.

விற்றும் பிழைக்கலாம் விட்டும் பிழைக்கலாம் என்று பிழைக்க கற்றுகொண்ட கயவர்களோடு வீண்வாதம் செய்து நேரத்தை வீணாக்க விருப்பமில்லை.

அடிக்காதே அடிக்காதே என்று கத்தினால் போல் யாரும் அடிக்காதுவிடபோவதில்லை.

சின்ன மீனை பிடித்து சாப்பிட்டாலே பெரிய மீன் உயிர்வாழ முடியும் என்பது உலக நியதி. இதை எந்த காந்தியாலும் மாற்ற முடியாது.

அதனால்தான் ஒற்றுமையே நிறைந்த செல்வம் என்று முன்னோர் சொல்லி வைத்தார். அதை குழப்பினாலே மீன்பிடிக்கமுடியும் என்பது எதிரியின் திண்ணம்.

குழம்பியதும் இல்லாது மற்றவர்கள் இன்னும் குழம்பவில்லை என்று குற்றம் சுமத்தும் அளவிற்கு காலம் தமிழனை கொண்டு சென்றுவிட்டது.

இப்படிபட்ட தமிழனுக்கு விடுதலை ஒரு கேடா?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நன்றி... நாங்கள் அழகிய ஏரிகள் சூழ்ந்த மினசோட்டாவில் வசிக்கின்றோம். மிகவும் பிடித்தமான மகிழ்வான வாழ்வுக்குரிய இடம். தொடக்கத்தில் பனி கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் குழந்தைகளுடன் குழந்தையாக அதையும் ரசித்து வாழப் பழகி விட்டோம்.  இந்த இடத்தில் இன்னொன்றும் சொல்ல வேண்டும், போன வருடம் வட அமெரிக்க பேரவையின் தமிழ் பெரு விழாவுக்காக சாக்கிரமென்டோ போயிருந்தேன். இடையில் சான்பிரான்ஸ்சிஸ்கோவில் இரண்டு நாட்களை களித்தோம், கோல்டன் கேட் பாலத்துக்கு அருகில் கார் கண்ணாடிகளை உடைத்து பட்டப்பகலில் கொள்ளையர் புரியும் அட்டகாசத்தை நேரில் கண்டு பயந்தேன். இது பற்றி "தங்க வாசல்" என்ற தலைப்பில் ஒரு சிறுகதை எழுதியுள்ளேன், இன்னும் ஓரிரு மாதங்களில் வரவுள்ள எனது சிறுகதை புத்தகத்தில் அது இடம்பெறுகிறது.   
    • நாமெல்லாம் இதற்குள் வரமாட்டோம் ராசாக்கள்.........ஏதோ கடையில் கோப்பி குடிக்கும்போது ஒரு ஈரோ டிக்கட் வாங்கி சுரண்டிபோட்டு அங்கேயே வீசிப்போட்டு போறதுதான் அதிகம்......!  😂
    • ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன?     கர்ப்பிணியான தனது மனைவி சைனு (அமலாபால்) மற்றும் தாயுடன் கேரளாவில் மகிழ்ச்சியுடன் எளிமமையாக வாழ்ந்து வருகிறார் நஜீப் (பிருத்விராஜ்). ஆற்றுமணல் அள்ளும் வேலை செய்து வாழ்க்கையை ஓட்டிவரும் அவர் குடும்ப கஷ்டத்துக்காக, வாழ்வதற்கு ஒரு நல்ல வீடு, மழை பெய்தால் ஒழுகாத சமையல்கட்டு, பிள்ளைகள் படிக்க நல்ல ஸ்கூல் என்ற சாதாரணமா கனவுகளை நிஜமாக்கும் முனைப்போடு வெளிநாடு செல்ல முடிவெடுக்கிறார். வீட்டை அடமானம் வைத்து ஏஜென்ட் மூலம் வளைகுடா நாட்டுக்குச் செல்கிறார். அங்கு என்ன நடந்தது? அங்கு அவருக்கு வேலை கிடைத்ததா? தகுந்த சம்பளம் கிடைத்ததா? அவருடைய வாழ்க்கை என்னவாக மாறுகிறது? அதிலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா? - இதுதான் ‘ஆடுஜீவிதம்' படத்தின் திரைக்கதை. மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய நாவலைத் தழுவி இயக்குநர் ப்ளஸ்ஸி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் 'ஆடுஜீவிதம்'. மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்தத் திரைப்படம் வெளியாகி உள்ளது. குடும்பக் கஷ்டத்தின் காரணமாக வளைகுடா நாடு சென்று ஏமாற்றப்பட்ட மனிதனின் கதையை சமரசம் எதுவுமின்றி வெள்ளித்திரையில் கொண்டு வந்ததற்காக இயக்குநரைப் பாராட்டலாம். குறிப்பாக, கேரளாவில் இருந்து அதிகமான எண்ணிக்கையில், வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் உடலுழைப்புத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இந்தப் படம் நிச்சயம் ஆறுதலாக இருக்கும். நாவலை படம் ஆக்குவதில் உள்ள சிரமங்கள் தென்பட்டாலும், இதுவரை நமக்கு அறிமுகம் இல்லாத நிலப்பரப்பை இந்த சர்வைவல் டிராமா கண்முன் கொண்டு வந்திருக்கிறது. “எப்படியாவது கஷ்டப்பட்டு நான் கேட்ட காசைக் கொடு, அங்க போய் மூணே மாசத்துல சம்பாதித்துவிடலாம்" - போலி ஏஜென்ட்டுகளின் இந்த ஒற்றைப் பொய்தான், உலகம் முழுவதும் நஜீப்களை மீண்டும் மீண்டும் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது என்பதை இப்படம் நிறுவியிருக்கிறது. போலி ஏஜென்ட் ஸ்ரீகுமார் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், பக்தி பரவசத்துடன் ஊர் திருவிழாவுக்கு வந்துவிடும் நபர் எனக் காட்டியிருப்பது இயக்குநர் ப்ளஸ்ஸி டச். படத்தில் அந்த கேரக்டருக்கு ஒரு காட்சிதான். வேறு காட்சிகளே கிடையாது. படத்தின் முதல் பாதியை ப்ளஸ்ஸி காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அழகு. பாலைவனத்தில் நடக்கும் காட்சிகளையும், கேரளத்தின் காட்சிகளையும் இணைத்து கதை சொல்லிய விதம், சுட்டெரிக்கும் வெயிலில் பெய்யும் பனிக்கட்டி மழைபோல் குளிரூட்டுகிறது. இரண்டாம் பாதியில் வெகு நேரமாக பாலைவனத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் அயற்சியைத் தருகிறது. "பெரியோனே ரஹ்மானே" பாடல் முழுமையாக இல்லாதிருப்பது குறையாகத் தோன்றுகிறது. உலகம் முழுவதும் வேலைக்காக புலம்பெயரும் எவரும் தங்களது வாழ்க்கையுடன் சுலபமாக ஒப்பிட்டுக் கொள்ள இந்தப் படம் உதவும். அந்தவகையில், இயக்குநரின் இந்த முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியது. இயக்குநரின் இந்த மெனக்கெடல்களுக்கு பெரிய ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறது, இந்தப்படத்தின் தொழில்நுட்பக் குழு. ஒளிப்பதிவு, பின்னணி இசை, ஒப்பனை, ஆடைகள், ஒலிப்பதிவு என படத்தில் வரும் அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பும் பாராட்டுக்குரியது. படத்தின் தொடக்கம் முதலே கே.எஸ்.சுனிலின் கேமரா பார்வையாளர்களின் கண்களை அகல விரயச் செய்கிறது. பரந்து கிடக்கும் பாலைவனம், வெயில், கானல்நீர், ஒட்டகம், ஆடுகள், மலைக்குன்று என அனைத்து இடங்களிலும் கேமிரா ஜீவித்துக்கிடக்கிறது. இருளை விழுங்கிய நடுராத்திரி, கசராவில் (ஆட்டுப்பட்டி) ஆடுகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை தாகம் தணிக்க குடித்துவிட்டு கேமிரா இருக்கும் திசை நோக்கி பிருத்விராஜ் பார்க்கும் காட்சி, ஒட்டகம் ஒன்றின் கண்ணுக்குள் பிருத்விராஜ் தெரியும்படி காட்சிப்படுத்தியிருக்கும் காட்சியும் அருமை. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இது மூன்றாவது மலையாளப் படம். படத்தின் டைட்டில் தொடங்கும்போது, ரஹ்மானின் புல்லாங்குழல் பாலைவன மணல்வெளியில் நம் மனங்களை இலகுவாக இழுத்துச் செல்கிறது. முதல் பாதியில் வரும் பாடல் அட்டகாசம். படம் முழுக்க அவ்வப்போது சின்ன சின்ன வரும் பாடல்கள் அதிகாலை நேரத்தில் தூரத்தில் கேட்கும் பங்கோசைக்கு இணையாக இருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள் எதுவும் இல்லாதபோதும், தப்பித்துச் செல்ல முயற்சிக்கும் காட்சிகளில் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசைதான் வலு சேர்த்திருக்கிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் கட்ஸ் முதல் பாதியை கணகச்சிதமாக கத்தரித்திருக்கிறது. பிருத்விராஜ் கேரியரில் இந்தப் படம் மிகமுக்கிய திரைப்படமாக இருக்கும். படத்தில் அவரது கதாப்பாத்திரத்துக்கு நிறைய சேஞ்ச் ஓவர் வருகிறது. அப்படி வரும் எல்லா இடங்களிலும் பிருத்விராஜ் ஸ்கோர் செய்திருக்கிறார். குடிக்கவும், கழுவவும் தண்ணீர் இல்லாத கணங்களில் அவரது நடிப்பு கலங்கடித்து விடுகிறது. உயிர்வாழ வேண்டும் என்றால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரிந்துக் கிடக்கும் பாலைவனத்தை நடந்து கடக்க வேண்டிய காட்சிகளில் பிருத்விராஜின் உடல்மொழி வியக்க வைக்கிறது. பிருத்விராஜ் உடன் வளைகுடா நாடு செல்லும் ஹக்கிம் (கே.ஆர்.கோகுல்) மற்றும் இப்ராஹிம் காத்ரியாக (ஜிம்மி ஜீன் லூயிஸ்) வருபவரும் தங்களது கதாப்பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர். ஒட்டகமும், மயிலும் தனது அழகை நீண்ட கழுத்தில் ஒளித்து வைத்துக்கொள்ளும். அமலாபாலும் அப்படித்தான், தனது அழகு முழுவதையும் நடிப்பில் ஒளித்து வைத்திருக்கிறார். கேரளத்தின் பொலிவும், அழகும் மயக்கும். இந்தப் படத்தில் பிருத்விராஜ் அமலாபால் வரும் காட்சிகளும் அப்படித்தான், பார்வையாளர்களின் மனதில் பாசிப்போல படர்கிறது. பாலைவன சுடுமணலின் தகிப்பைக் குறைத்து ஆழமான ஆற்றுக்குள் மூழ்கி அள்ளி எடுத்துவரப்பட்ட மணலின் ஈரத்தையும், குளிர்ச்சியைக் கொண்டு வருகிறார் அமலாபால். எப்போதெல்லாம் தன்னுடைய ஞாபகம் வருகிறதோ, அப்போதெல்லாம் நிலாவைப் பார்த்துக் கொள்ளும் சொல்லும் காட்சி கவிதையாக தைக்கப்பட்டிருக்கிறது. விமான நிலையங்களின் பார்வையாளர் காத்திருப்பு வெளிகள் எப்போதும் கண்ணீரைச் சுமந்து நிற்பவை. வெளிநாடுகளுக்கு பிரிந்து செல்லும் உறவுகளை வழியனுப்ப வந்தவர்களின் கண்ணீர் அப்பகுதி முழுக்க நிரம்பியிருக்கும் காற்று முழுவதிலும் கரித்துக் கிடக்கும். அம்மாவும், அப்பாவும், கணவனும், மனைவியும், குழந்தைகளும் வெளிநாடு செல்லும் நபருக்கு தங்களது அன்பு முழுவதையும் ஒரு பெட்டிக்குள் அடைத்துக் கொடுத்துவிட்டு கனத்த மவுனத்துடன் வீடு திரும்பும் காட்சிகளைக் கடந்திருப்போம். அந்த வகையில், சென்ட் பாட்டிலும், கலர் டிவியும், கை நிறைய பணமும் இல்லாமல், வெளிநாட்டிலிருந்து உயிர் பிழைத்தால் போதும் என்று ஆயுள் உடன் திரும்பி வந்த ஒரு எளிய மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளின்தான் இந்த 'ஆடுஜீவிதம்'! ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன? | aadujeevitham movie review - hindutamil.in
    • Simrith   / 2024 மார்ச் 28 , மு.ப. 10:49 - 0      - 67 அமெரிக்க துரித உணவு நிறுவனமான மக்டொனால்டின் உள்ளூர் உரிமை இனி தமது குடையின் கீழ் இல்லை என்று அபான்ஸ் தனியார் நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. இன்று கொழும்பு பங்குச் சந்தைக்கு (CSE) அறிக்கையளித்த அபான்ஸ் பிஎல்சி, மெக்டொனால்டின் உள்ளூர் உரிமையானது, 2007 ஆம் ஆண்டின் கம்பனிகள் சட்டம் இல.7 இன் கீழ் இணைக்கப்பட்ட சர்வதேச உணவக அமைப்புகள் (பிரைவேட்) லிமிடெட் அடிப்பமையிலானது என்று சுட்டிக்காட்டியுள்ளது. அந்த நிறுவனத்தின் 98.73% பங்குகளை வைத்திருக்கும் ருசி பெஸ்டோன்ஜி, அபான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குனராகவும் உள்ளவர். “இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட், அபான்ஸ் பிஎல்சி அல்லது அதன் தாய் நிறுவனமான அபான்ஸ் ரீடெய்ல் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட் ஆகியவற்றின் துணை நிறுவனமோ அல்லது இணை நிறுவனமோ அல்ல. கூறப்பட்ட காரணத்தினால், இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட்டின் நிதிகள் அபான்ஸ் பிஎல்சியின் நிதிகளுடன் ஒருங்கிணைக்கப்படவில்லை,” என்று அபான்ஸ் தெளிவுபடுத்தியது. கொழும்பு பங்குச் சந்தையின் பட்டியலிடுதல் விதிகளின் 8வது பிரிவின் அடிப்படையில் மற்றும் நல்லாட்சிக்கான நோக்கங்களுக்காக இந்தத் தகவலை வழங்குவதாக Abans PLC தெரிவித்துள்ளது. Tamilmirror Online || McDonald’s எமது குடையின் கீழ் இல்லை: அபான்ஸ்
    • கொடுமையிலும் கொடுமை பாண்டவர் அணியில் தருமருக்கு (விஜயகாந்துக்கு) தம்பியாக (அருச்சுனனாக) அவதாரம் எடுத்தது 😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.