Jump to content

விழவிழ எழுதிய வீரவணக்கம் என்னவானது ?


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தன்னிலை தாழாமையும் அந்நிலை தாழும் இடத்து உயிர் வாழாமையும் மானம் எனப்படும்.

விற்றும் பிழைக்கலாம் விட்டும் பிழைக்கலாம் என்று பிழைக்க கற்றுகொண்ட கயவர்களோடு வீண்வாதம் செய்து நேரத்தை வீணாக்க விருப்பமில்லை.

அடிக்காதே அடிக்காதே என்று கத்தினால் போல் யாரும் அடிக்காதுவிடபோவதில்லை.

சின்ன மீனை பிடித்து சாப்பிட்டாலே பெரிய மீன் உயிர்வாழ முடியும் என்பது உலக நியதி. இதை எந்த காந்தியாலும் மாற்ற முடியாது.

அதனால்தான் ஒற்றுமையே நிறைந்த செல்வம் என்று முன்னோர் சொல்லி வைத்தார். அதை குழப்பினாலே மீன்பிடிக்கமுடியும் என்பது எதிரியின் திண்ணம்.

குழம்பியதும் இல்லாது மற்றவர்கள் இன்னும் குழம்பவில்லை என்று குற்றம் சுமத்தும் அளவிற்கு காலம் தமிழனை கொண்டு சென்றுவிட்டது. இப்படிபட்ட தமிழனுக்கு விடுதலை ஒரு கேடா?

உண்மை! மருதங்கேணியவர்களது கருத்து ஏற்புடையதே !

ஆனால், இது போன்ற புல்லுருவிகளைத் துயிலுரியாது விடுவதும் ஆபத்தானது. இவ எந்த ஊரிலிருந்து... அல்லது கொழும்பில் இருந்து எழுதுகிறாவோ? இன்று எதுவும் நடக்கும் காலமல்லவா?

Link to comment
Share on other sites

  • Replies 70
  • Created
  • Last Reply

ஈழத்தில் ஒருசிலரை போட்டுதள்ளுவதற்கு பதிலாக புலத்தில் பலரை போட்டுத்தள்ளியிருந்தால் இன்று நிலைமை வேறு.

போட்டுத்தள்ளும் பொறுப்பை இனி நீங்கள் ஏற்று நடத்தலாம் இடம் வெற்றிடமாய்த்தான் உள்ளது. போட்டுத்தள்ளல் என்ற சொல்லே பல இடங்களில் தமிழனை வீழ்த்தி மூடியிருக்கிறது.

கவிதை படு பிற்போக்கானது. எமது மக்களுக்கு எந்த விதத்திலும் உதவாது. குளிரென்றும் பாராமல் குழந்தைகள்,வயோதிபர் என லட்ச கணக்கில் எம்மக்களுக்கு ஒரு விடுவு வர வேண்டும் என வீதியில் இறங்கி போராடிய மக்கள் பற்றி இந்த கவிஞருக்கு எழுத தெரியாதா? பத்திரிகைகள், வானொலிகள், ஊடகவியலாளர்கள், அரசியல்வாதிகள் என கடிதங்களும் ,மின்னஞ்சல்களும் எம்மக்கள் அனுப்பவில்லையா? வணங்கா மண் போன்றவற்றுக்கும் , செருப்பு சேர்க்கிறோம் போன்றவற்றுக்கு மக்கள் பணம் கொடுக்கவில்லையா? . எமது சக்திக்கு அப்பால் மேலும் பல சக்திகளால் பல காரணங்களுக்காக எமது போராட்டம் நசுக்கப்படவில்லையா? இன்னும் எத்தனையோ காரணங்கள் இருக்க ஏதோ வசை பாடுவது போல் தான் இக்கவிதையை என்னால் பார்க்க முடிகிறது. :(:lol:

இவை உங்கள் கருத்து. கவிதை எனது கருத்து. கருத்துச் சொல்வதே கடவை தாண்டலாய் எண்ணினால் எதுவும் செய்ய முடியாது. நீங்கள் சொல்லும் யாவும் நாங்களும் வாழும் நாட்டு அரசியலாளர்கள் முதல் ஊடகங்கள் வரை கொடுத்துக் கொண்டுதானிருக்கிறோம். வசையா வாழ்த்தா என்பது புரிந்து கொள்ளும் வகையில் இருக்கிறது. உணர்ச்சிகளின் மேலீட்டு மனநிலையில் இருந்து பார்த்தால் வசையாகத்தான் அர்த்தப்படும்.

கருத்தை கருத்தால் கேள்வி கேட்டு வினாக்கொடுத்து தெளிவுபெறாதவரையில் இப்படித்தான் வில்லங்கள் தொடரும்.

வணங்கா மண் செருப்புக்கு இந்தப்பகுதி தொடர்பில்லாதபடியால் அதை தவிர்க்கிறேன். அந்தந்தப்பகுதிகளில் விசாரித்து விளங்கிக்கொள்ளலாம்.

Link to comment
Share on other sites

நேற்று மூட்டிய நெருப்பு விடுதலைக்கானது இன்று நீங்கள் மூட்டும் நெருப்பு அதனை அழிப்பதற்கானது.

நல்ல கற்பனை சகாரா…நெருப்பாய் வீறோடு வீரியம் கொள்க உங்கள் விடுதலை உணர்வு…..நேற்று மூண்ட நெருப்பில் விடுதலையைச் சட்டெரித்துச் சுடுகாடு அனுப்பிய பங்கு எம்மை உங்களை அனைவரையுமே சாரும்.

காலத்திற்குக் காலம் இழப்புகளால் எங்கள் வளர்ச்சி அதிகரித்ததே அல்லால் குறையவில்லை..

ஓம் குறையவில்லை இப்படி உசுப்பி உசுப்பியே கொல்லக் கொடுத்தது எனதோ உங்களதோ அதிகம் இல்லையே…?

சிந்திய குருதியிலேயே சுதந்திரம் என்பது எவ்வளவு முக்கியமானது என்று புரிந்து கொண்டோம் .

புரிந்தீர்கள் ஆனால் பேச்சோடு மட்டும்….விசுவமடுக் கரைதாண்டாக்கனவோடு இருந்த வீல்செயாரின் நம்பிக்கையில் முக்கியமானவற்றையெல்லாம் மூழ்கடித்ததே உண்மை…..

உங்களுக்கு பொருத்தமாக இருக்கலாம்.

உண்மைதான் இதில் ஒளிவுமில்லை மறைவுமில்லை….உள்மனச்சாட்சிய

Link to comment
Share on other sites

சாந்தி,

வீரமரணம் விழ விழ வீரவணக்கம் செய்தது வெறும் வெற்றி பெருமிதத்திலோ அல்லது இன்னும் இன்னும் வீழ்ந்து மரித்துப் போங்கள் என்று பாடை கட்டவோ அல்ல. சிங்கள இராணுவ இராட்சதனினதும் சிங்கள பெளத்த பேரினவாததின் கோரப் பிடிக்குள்ளும் சிக்கிக் கொண்ட எம் துயரவாழ்வை தம்மை ஆகுதியாக்கி மீட்க வந்த எம் பிள்ளைகளின், சகோதரங்களின் மரிப்புகள் தந்த வேதனையிலும், அந்த மரிப்புகளினூடு விடுதலை கிடைக்கும் என்று நிச்சயம் நம்பியமையினாலும் தான். இன்றைய பெருந்துயருக்கும் படுதோல்விக்கும் முழுக்காரணமும் எம் ஐக்கியமின்மையும் ஒற்றுமையின்மையுமே தவிர வேறில்லை.

வதை முகாமிலிருந்தும், சிங்கள இராணுவ வெறியர்களிடமிருந்தும், சிங்கள பெளத்த பேரினவாததிலிருந்தும், இந்திய வல்லாதிக்க பார்பன வெறியர்களிடமிருந்தும், மக்களை நிரந்தரமாக மீட்க வேண்டும் என விரும்புகின்றவர்கள் முதல்ல் செய்ய வேண்டியது இன்று எம்மக்கள் மத்தியில் இருக்கும் ஒற்றுமையின்மையும், பிறழ்வுகளையும் வேறுபாடுகளையும் நீக்கி ஒற்றுமைப் படுத்துவதே. தமிழீழம் காண்பதை விட மிகக் கடினமான முன் பணி இதுதான். தன் குடும்பத்தையே ஒட்டுமொத்தமாக போராட்டத்திற்கு அர்ப்பணித்த பெருந்தலைவனால் கூட செய்ய முடியாமல் போன விடயம் அது, அதை செய்வதற்கான முயற்சியில் நிச்சயம் இந்தக் கவிதை தன் பங்கை ஆற்றவில்லை....மாறாக இன்னும் பிளவுகளைத் தான் கூட்டிவிட்டுச் செல்கின்றது

உங்கள் கருத்தில் உள்ள நிதானம் அடுத்த அடியை திரும்பிப்பார்க்க வைக்கிறது.

உங்கள் கருத்துடன் எனக்கு மாற்றுக்கருத்தில்லை அத்தனையும் ஏற்றுக்கொள்கிறேன்.

இருந்த இடத்தில் இருந்துகொண்டு வீரம்கொள் விடுதலைநெருப்பெடு என்ற வீராப்பு இப்போதைக்கு சாத்தியமில்லையென்பதை விளங்க மறுத்து தாங்கள் மட்டும் கிணற்றில் கிடப்பது போல் அனைவரையும் அறிவுரை சொல்லி அதே பழைய மொந்தையில் போய் குந்த வைப்பதைத் தான் இஙகு சில இடத்தில் குறிப்பிட்டுள்ளேன்.

மற்றது நீங்களும் காலச்சுவமு அகிலனின் வலைப்பூவில் முகாமுக்குள்ளிருந்து குரல்களாக எழுதப்பட்ட குற்றச்சாட்டுதலை வாசித்திருப்பீர்கள். மற்றும் திருநாவுக்கரசு அவர்கள் பற்றிய அண்மைய செய்திகள் வாசித்திருப்பீர்கள். அவர்கள் அருகில் இருந்தவரை எல்லாம் சரியென்று காலக்கவிபாடியும் கவியரங்கு செய்த போதும் தவறுகளை அறியாமலா இருந்தார்கள். இப்போ முடிந்தது என்றபின் முழுப்பழியையும் பிரபாகரன் என்ற ஒரு மனிதனின் தலையில் போட்விட்டு தங்களை நிரபராதிகள் என்று நிறுவுவதையே கவிதையில் குறிப்பிட்டிருந்தேன் பொதுமையில். ஆனால் இதை அவரவர் தமக்கேற்ப அர்த்தப்படுத்திக் கொண்டு துரோகம் தொழில் வசையென்று கரைகாணும் கருத்துக்களை எதுவும் செய்ய முடியாது. அது அவர்கள் கருத்து.

Link to comment
Share on other sites

சாந்தி,

வீரமரணம் விழ விழ வீரவணக்கம் செய்தது வெறும் வெற்றி பெருமிதத்திலோ அல்லது இன்னும் இன்னும் வீழ்ந்து மரித்துப் போங்கள் என்று பாடை கட்டவோ அல்ல. சிங்கள இராணுவ இராட்சதனினதும் சிங்கள பெளத்த பேரினவாததின் கோரப் பிடிக்குள்ளும் சிக்கிக் கொண்ட எம் துயரவாழ்வை தம்மை ஆகுதியாக்கி மீட்க வந்த எம் பிள்ளைகளின், சகோதரங்களின் மரிப்புகள் தந்த வேதனையிலும், அந்த மரிப்புகளினூடு விடுதலை கிடைக்கும் என்று நிச்சயம் நம்பியமையினாலும் தான். இன்றைய பெருந்துயருக்கும் படுதோல்விக்கும் முழுக்காரணமும் எம் ஐக்கியமின்மையும் ஒற்றுமையின்மையுமே தவிர வேறில்லை.

வதை முகாமிலிருந்தும், சிங்கள இராணுவ வெறியர்களிடமிருந்தும், சிங்கள பெளத்த பேரினவாததிலிருந்தும், இந்திய வல்லாதிக்க பார்பன வெறியர்களிடமிருந்தும், மக்களை நிரந்தரமாக மீட்க வேண்டும் என விரும்புகின்றவர்கள் முதல்ல் செய்ய வேண்டியது இன்று எம்மக்கள் மத்தியில் இருக்கும் ஒற்றுமையின்மையும், பிறழ்வுகளையும் வேறுபாடுகளையும் நீக்கி ஒற்றுமைப் படுத்துவதே. தமிழீழம் காண்பதை விட மிகக் கடினமான முன் பணி இதுதான். தன் குடும்பத்தையே ஒட்டுமொத்தமாக போராட்டத்திற்கு அர்ப்பணித்த பெருந்தலைவனால் கூட செய்ய முடியாமல் போன விடயம் அது, அதை செய்வதற்கான முயற்சியில் நிச்சயம் இந்தக் கவிதை தன் பங்கை ஆற்றவில்லை....மாறாக இன்னும் பிளவுகளைத் தான் கூட்டிவிட்டுச் செல்கின்றது

ஒற்றுமையின்மையை ஐக்கியமின்மையை இன்றும் பழைய பாணியில் தங்கள் அதிகாரங்களால் அல்லது பந்தங்களால் தொடர்ந்து தக்க வைத்துக் கொள்வதில் குறியாயிருப்போருக்காவுமே இந்த எழுத்து. ஏனெனில் இவர்கள் சொல்லில் தமிழீழம் காணும் பலர் உள்ளார்கள்.

இவர்கள் தங்கள் எண்ணங்களில் செயல்களில் பொதுத்தன்மையில் வர வேண்டும். கருத்துக்களை சரிவர உள்வாங்கி எல்லாரையும் தங்களுடன் இணைக்கும் முயற்சியில் இறங்க வேண்டும். இதைவிடுத்து இவர்களை இல்லது இவர்களுக்கப் பிடித்த தலைகளை கேள்வி கேட்டால் கத்தியெடு பொல்லெடு என வரும் பழையவீராப்பை தூக்கிவீசாதவரை ஐக்கியம் என்பது????

புலம்பெயர்ந்து இந்தநாடுகளில் நாம் கண்டமாற்றம் தாவணிகளும் பாவாடைகளும் ஜீன்சுக்கு மாறியதும் கோட்சூட்டுக்கு மாறியதுமாக உள்ள சிந்தனைப்போக்கு சிதர வேண்டும்.

இங்கு எத்தனையோ கட்சிகள் ஆனால் ஒரு கட்சியோடு இன்னொரு கட்சிக்காரன் ஒன்றாயிருந்து கருத்தால் மோதி தீர்வு பெறுகிறார்கள். ஆனால் நாம் இன்னும் கேள்விகேட்காத விமர்சனம் இல்லாத ஒற்றைக்கொள்கையே உயர்த்திப்பிடிக்கிறோம். இது இனி மிஞ்சிவர்களைக்கூட மீளவிடாத முற்பணிதான்.

இந்தக்கவிதை எந்தப்பங்கையும் ஆற்றவேயில்லை அது உண்மைதான். இந்தத்தமிழினத்தையே தன் வாழ்நாள் முழுவதும் நேசித்த தலைவனைக் கொலைகாரனென வாக்குமூலம் கொடுக்கும் வள்ளலார்களுக்காகவே எழுதப்பட்டது.

Link to comment
Share on other sites

அனைவரையும் சிரம் தாழ்த்தி வணங்குகின்றேன்.

காலத்தின் தேவை கருதி ஒரு சில எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ளூகிறேன்.

புலிகள் வெற்றிபெற்ற போதெலாம் எங்கள் பாட்டுடைத் தலைவர்களானார்கள். வீழ்ந்தபோது அவர்களைத் தூற்றுவது செய்வது நல்லதல்ல. கடந்த காலம் மறக்கப்படவேண்டியது. ஆனால் கருத்தில் கொள்ளப்படவேண்டியது. புலிகளையோ மற்றவர்களையோ குற்றம் காணுவதை விடுத்து, இந்த வீழ்ச்சியில் ஏதோ ஒரு வகையில் தமிழர்களகிய எங்கள் ஒவ்வொருவருக்கும் பங்குண்டன்பதனை நாங்கள் ஒப்புக்கொள்ள வேண்டும்.

இன்றைய சூழ்நிலையில் இன்னொரு ஆயுதப் போரை எதிர்கொள்ளும் நிலையில் தமிழர் தாயகம் இல்லை என்பதே உண்மை. இந்நிலையில் கவிஞர்கள் வீரவசனம் எழுதி மக்களை உசுப்பேற்றுவதோ, அல்லது நடந்து முடிந்துவிட்ட துன்பியல் நிகழ்வுக்குக் காரணம் கண்டு கவி வடிப்பதோ ஏற்புடையதன்று. வீழ்ந்துபோய், சோர்ந்துபோய், இழந்துபோய், அழிந்துபோய் நிற்கும் எம் மக்களுக்கு இவை ஒரு வேளை சோறு கூடப் போடப்போவதில்லை.

கவிஞர்களே, காதலைப் பாடுங்கள், அன்னைய பாடுங்கள், இயற்கையைப் பாடுங்கள், ஏன் காமத்தைக் கூட பாடுங்கள். பாவம் வீழ்ந்து போன மக்களை விட்டு விடுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

//சும்மாயிருந்த மனிதனைச் சூரியனே…,சுடர் விளக்கே…,

சுழல்காற்றே சுனாமியே என்றெல்லாம்

ஒளிவட்டம் போட்டுப் பாடைகூட ஏற்றாமல்

பகைகாலில் நெரியுண்டு

நெற்றி பிழக்கக்காரணமாய் ஆனோரெல்லாம்//

இந்த வரிகளில் குரூரமான சந்தோசம் கொப்பளிப்பது வெளிப்படையாக தெரிகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
சனமாக இருக்கட்டும், போராளிகளாக இருக்கட்டும்.. அவர்கள் உதிரம் சிந்தி.. உடல் உருக்குலைஞ்சு.. செய்த தியாகங்கள்.. சுமந்த உயிர்வலிகள் யுகம் யுகமாக ஈழத்தமிழனாக தன்னை உணரக்கூடிய ஒவ்வொருத்தன் நெஞ்சத்தையும் உருத்திக்கொண்டு இருக்கும். விழ விழ வீரவணக்கங்கள் சொன்னோம். இப்போது வீழ்வதற்கு எவரும் இல்லை என்கின்ற நிலையில இதுவரை காலமும் வீரர்களாக வீழ்ந்தவர்கள் வீணாகிப்போய்விட்டார்கள் என்று சொல்ல முடியாது.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உறவுகளே நாம் தமிழர்களே இன்று சண்டைகளில் ஈடுபடுவது நன்மை பயப்பது அன்று. ஆகவே தயவு செய்து நாம் அனைவரும் ஒரு குடை அதாவது தமிழன் என்ற இலட்சினையுடன் ஒன்றாக திகழ்தல் நன்மை பயக்கும் என்று நினைக்கின்றேன்.

தமிழன் என்றாலே எங்களுக்குள் சில வேற்றுமைகள் இருந்தாலும் பல ஒற்றுமைகள் இருக்கின்றன என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

எம் எல்லோரின் கடமையும் எமது மக்களை எவ்வளவு சீக்கிரமாக வெளியில் கொண்டுவருதல் என்பதை ஒவ்வொரு தமிழனும் உறுதி கொள்ளவேண்டும்

எம்முள் சில தற்காலிக பிரிவுகள் வரும். ஆனாலும் நாம் அனைவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பதை மறந்து விடக்கூடாது.

இவ்வாறு நாம் சண்டை பிடித்துக்கொண்டிருந்தோமானா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அனைவரையும் சிரம் தாழ்த்தி வணங்குகின்றேன்.

காலத்தின் தேவை கருதி ஒரு சில எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ளூகிறேன்.

புலிகள் வெற்றிபெற்ற போதெலாம் எங்கள் பாட்டுடைத் தலைவர்களானார்கள். வீழ்ந்தபோது அவர்களைத் தூற்றுவது செய்வது நல்லதல்ல. கடந்த காலம் மறக்கப்படவேண்டியது. ஆனால் கருத்தில் கொள்ளப்படவேண்டியது. புலிகளையோ மற்றவர்களையோ குற்றம் காணுவதை விடுத்து, இந்த வீழ்ச்சியில் ஏதோ ஒரு வகையில் தமிழர்களகிய எங்கள் ஒவ்வொருவருக்கும் பங்குண்டன்பதனை நாங்கள் ஒப்புக்கொள்ள வேண்டும்.

இன்றைய சூழ்நிலையில் இன்னொரு ஆயுதப் போரை எதிர்கொள்ளும் நிலையில் தமிழர் தாயகம் இல்லை என்பதே உண்மை. இந்நிலையில் கவிஞர்கள் வீரவசனம் எழுதி மக்களை உசுப்பேற்றுவதோ, அல்லது நடந்து முடிந்துவிட்ட துன்பியல் நிகழ்வுக்குக் காரணம் கண்டு கவி வடிப்பதோ ஏற்புடையதன்று. வீழ்ந்துபோய், சோர்ந்துபோய், இழந்துபோய், அழிந்துபோய் நிற்கும் எம் மக்களுக்கு இவை ஒரு வேளை சோறு கூடப் போடப்போவதில்லை.

கவிஞர்களே, காதலைப் பாடுங்கள், அன்னைய பாடுங்கள், இயற்கையைப் பாடுங்கள், ஏன் காமத்தைக் கூட பாடுங்கள். பாவம் வீழ்ந்து போன மக்களை விட்டு விடுங்கள்.

நன்றாக சொன்னீர்கள் , ராசராசன் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போட்டுத்தள்ளும் பொறுப்பை இனி நீங்கள் ஏற்று நடத்தலாம் இடம் வெற்றிடமாய்த்தான் உள்ளது. போட்டுத்தள்ளல் என்ற சொல்லே பல இடங்களில் தமிழனை வீழ்த்தி மூடியிருக்கிறது.

இவை உங்கள் கருத்து. கவிதை எனது கருத்து. கருத்துச் சொல்வதே கடவை தாண்டலாய் எண்ணினால் எதுவும் செய்ய முடியாது. நீங்கள் சொல்லும் யாவும் நாங்களும் வாழும் நாட்டு அரசியலாளர்கள் முதல் ஊடகங்கள் வரை கொடுத்துக் கொண்டுதானிருக்கிறோம். வசையா வாழ்த்தா என்பது புரிந்து கொள்ளும் வகையில் இருக்கிறது. உணர்ச்சிகளின் மேலீட்டு மனநிலையில் இருந்து பார்த்தால் வசையாகத்தான் அர்த்தப்படும்.

கருத்தை கருத்தால் கேள்வி கேட்டு வினாக்கொடுத்து தெளிவுபெறாதவரையில் இப்படித்தான் வில்லங்கள் தொடரும்.

வணங்கா மண் செருப்புக்கு இந்தப்பகுதி தொடர்பில்லாதபடியால் அதை தவிர்க்கிறேன். அந்தந்தப்பகுதிகளில் விசாரித்து விளங்கிக்கொள்ளலாம்.

காழ்புணர்வதையும். கருத்துக்குள்ளும் கவிதைக்குள்ளும் புதைத்துவிட்டு.

கருத்துக்கு சுநதந்திரம் இல்லையா என்று விழிப்பதால் யாரும் கண்விழிக்கபோவதில்லை. எதிரியிடம் தாயையையும் தங்கைகளையும் கூட்டிவிடுவதைதான் மாற்று கருத்து என்று சிலர் ஏற்கனவே புலம்பியிருக்கிறார்கள்.

நான் முன்பே சொன்னதுபோல்............. விட்டும்பிழைக்கலாம் விற்றும் பிழைக்ககலாம். அது உங்கள் சொந்தவாழ்க்கை அல்லது கிடைத்த வசதி. ஆனால் அதுகளை கருத்து சுதந்திரம் என்றும் கவிதை சுதந்திரம் என்றும். கூக்குரல் இடுவதால் நீங்கள் ஏதோ கவிதை எழுதி கிழித்துவிட்டீர் என்று யாரும் உங்களை பாரட்ட போவதில்லை.

உங்கள் பதில்............... யாருடைய பாராட்டுதலுக்கும் நான் எழுதவில்லை எனது எண்ணங்களை கவிதையில் சொன்னேன் அவ்வளவே என்பதாகத்தான் இருக்கும். இதுகளை நாங்கள் யாழ்களத்திற்கு வரதொடங்கிய காலங்களிலேயே வாசிக்க தொடங்கிவிட்டோம். யாரும் பாராட்வில்லையெனில் அதில் ஏதோ தவறு இருக்கின்றது என்றுதானே பொருள் மீறி காறி உமிழ்கிறார்கள் என்றால் அதற்குள் அருவருப்பு உள்ளது என்றுதானே பொருள். காலத்தை அறிந்து உங்கள் புலாடக்களை விற்பதற்கு ஏதாவது புதிய முறைகளை கண்டுபிடியுங்கள். இந்த கருத்து சுதந்திர காய்களெல்லாம் அவியும்மாதிரி தெரியவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காலச்சுவட்டில் வெளியான கட்டுரையை நானும்படித்தேன்..வெற்றிகள் குவிந்தபொழுது ஆகா ஓகோ என்றும் சூரியத்தேவன் என்றும் புகழ்ந்து கட்டுரையும் கவிதையும் எழுதிவிட்டு.. போராட்டம் தோற்றதும்..போராட்டத்திறகாக புறப்பட்ட பலரும் களத்திலேயே இறந்துபோக..இவர்கள் தப்பியயோடி அப்படியே பேசாமல் இருக்காமல்..அத்தனை தவறுகளிற்கும் தலைவனே காரணம் என எழுதுவதுதான் வேடிக்கையாக இருக்கிறது...என்னைப்பொறுத்தவ???ை பிரபாகரன் விமர்சனங்களிற்கு அப்பாற்பட்டவர்..அவரை யாரும் எந்தத் தராசிலும் வைக்க அருகதையற்றவர்கள்..அது எந்த கவிஞனோ..கட்டுரையாளனாகவிருந்த

ாலும் சரி..

மிக மிகச்சரியாகச்சொன்னீர்கள் சாத்திரி அண்ணை,

தலைவரை விமர்சிக்கக் கூடிய தகுதி யாருக்குமே இல்லை; 'எல்லோரும் விமர்சனத்திற்கு உட்பட்டவர்களே என்று சொல்பவர்கள் கூட' தலைவனின் நெறி, அவர் காட்டிய வழி, செயற்பட்டவிதம், ஒழுக்கக் கோட்பாடு, கட்டுப்பாட்டு இயக்கம் என்பனவற்றைப் பார்த்து வியந்து போய்த்தான் இருக்கின்றார்கள்; இதைப்பார்த்து பொறுக்க முடியாத விஷமிகள் தான் விஷம் கக்கிக்கொண்டிருக்கின்றார்க??்.

'சாந்தி!.

தற்போது 'சாடல்" தேவையில்லாத ஒன்று என்பது மட்டுமே என் கருத்து. 'ஒவ்வொருவருக்கும் உரிய பணியை ஒவ்வொருவரும் செவ்வனே செய்திருந்தால் இந்த இழிநிலை தமிழனுக்கு ஏற்பட்டிருக்காது. 'புதுவை இரத்தினதுரை ஐயா அவர்களது எழுச்சிச்சொற்களால் 'எழுந்து போய் உணர்வோடு இயக்கத்தில் இணைந்தவர்கள் பலர். 'கவிஞர்கள் சோரக் கூடாது. 'சோரம் போகவும் கூடாது.

'எதுவாக நினைக்கின்றோமோ அதுவாகவே ஆகின்றோம்" என்று சொன்னசுவாமி விவேகானந்தரின் கருத்தை முன் வைத்தால் "நாம் எழுவோம்" என்கின்ற ஒற்றைச்சொல்லும் அதை நோக்கிய முயற்சியும் நம்மை எழ வைக்கும். அழுது கொண்டும் புலம்பிக் கொண்டும் இருப்பதால் ஆகப்போவது ஒன்றுமே இல்லை.

'உன்னால் முடியும்" என்ற சொல் பல இலக்கின் எல்லையைத் தொட வைத்திருக்கின்றது.

துரோகிகளின் தோலை உரிக்க வேண்டிய பணி எமக்கானது அதே வேளை நமக்குள்ளேயே ஒவ்வொருவரைச் சாடிக்கொண்டிருப்பது 'வேற்றுமைகளை இன்னும் வேரோட வைக்கும்".

எம் தலைவன் எமக்கான வரம் -மா

வீரர்கள் தமிழ் ஈழத்திற்கு உரம்".

Link to comment
Share on other sites

கவிதை என்ற போர்வையில் தங்கள் மன வக்கிரங்்களை கொட்டியிருக்கிறார்கள்.

தாயக கனவோடு காவியமாகிய மாவீரர்களை கேவலப்படுத்தும் தலைவரை இகழும் மறைமுக சொல்லாடல்கள் நன்றாகவே விளங்குகின்றன.

முள்ளிவாய்க்கால் பல படிப்பினைகளை வழங்கியிருக்கிறது. பல சுயநலங்களை அடையாளப்படுத்தியிருக்கிறது. இரத்தவாடை அழுகுரல்கள் ஓயும் முன்பே நல்லூர் மடுமாதா விழாக்கள் புலம்பெயர் நாட்டு கேளிக்கைகள் நிரம்பி வழியும் திரையரங்குகள் என எமது விடுதலைவேட்கையின் அளவும் எமது ஒற்றுமையின் வலிமையும் சர்வதேசத்திற்கும் சிங்களவனிற்கும் நன்றாகவே பறைசாற்றப்படுகின்றன.

வீழ்ந்த மாவீரர்களினதும் சிறையில் வாடும் போராளிகளதும் உறவினர்கள் இப்படிப்பட்ட ஒரு இனத்திற்காகவா எம்மவர்கள் போராடச்சென்றார்கள் என ஏங்கி அழவும் வயிறெரியவும் செய்்கின்றனர்.

முள்ளிவாய்க்காலில் அழிந்தது புலிகளும் மக்களும் மட்டும் அல்ல. தமிழனின் இனமான உணர்வும்தான்.

Link to comment
Share on other sites

மரம் பழுத்தால் வெளவாலை

வாவென்றழைப்பதில்லை.

இன்று ஆள கையளவு காணியில்லை.

வான்படை, தரைப்படை

கடல்படை எதுவுமில்லை.

இனி நாம் நாம் வெற்று மரத்தில்

தரிப்போமா? மகிந்தாவுடன் சேர்ந்தால்

சுகபோக வாழ்க்கையல்லோ

சிலவேளை ஒருகாலம் உங்கள்

படைவந்தால் கவிஞர்களாய்

பரணிபாடுவோம். இப்போதும்

பரணிபாடுவோம் தோற்றவர்களையல்ல

வென்றவரை.

எதற்கும் படை சேருங்கள்

உங்கள் ஆட்சிகள் நடந்தால்

பழைய சோழர்கதையெல்லாம்

தட்டி புகழ்பாடுவோம்.

பொறுத்திருங்கள் நீங்கள்

வெல்லும்வரை காத்திருக்க நேரமில்லை

அதுவரை யாரையவாது பாடி

பொற்காசுகள் சேர்த்திடுவோம்.

அகதிநாட்டின் உதவிப்பணம்

சொகுசான வாழ்க்கைக்கு போதவில்லை.

இனத்தை விற்றாவது வாழ்வோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மரம் பழுத்தால் வெளவாலை

வாவென்றழைப்பதில்லை.

இன்று ஆள கையளவு காணியில்லை.

வான்படை, தரைப்படை

கடல்படை எதுவுமில்லை.

இனி நாம் நாம் வெற்று மரத்தில்

தரிப்போமா? மகிந்தாவுடன் சேர்ந்தால்

சுகபோக வாழ்க்கையல்லோ

சிலவேளை ஒருகாலம் உங்கள்

படைவந்தால் கவிஞர்களாய்

பரணிபாடுவோம். இப்போதும்

பரணிபாடுவோம் தோற்றவர்களையல்ல

வென்றவரை.

எதற்கும் படை சேருங்கள்

உங்கள் ஆட்சிகள் நடந்தால்

பழைய சோழர்கதையெல்லாம்

தட்டி புகழ்பாடுவோம்.

பொறுத்திருங்கள் நீங்கள்

வெல்லும்வரை காத்திருக்க நேரமில்லை

அதுவரை யாரையவாது பாடி

பொற்காசுகள் சேர்த்திடுவோம்.

அகதிநாட்டின் உதவிப்பணம்

சொகுசான வாழ்க்கைக்கு போதவில்லை.

இனத்தை விற்றாவது வாழ்வோம்.

சோழன்...மிக அருமையாக எழுதியுள்ளீங்கள். யாராவது வெற்றியின் படியில் மேலே நிற்பவனை தொழும் அவலம்

இப்போ கவிதை வடிவிலும் வருகுது சோழன். எங்களின் ஒவ்வொரு வரியும் கோணல் வாய்களுக்கு நல்ல

சூடுகள்.இன்னும் எழுதுங்கள் சோழன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று மூட்டிய நெருப்பு விடுதலைக்கானது இன்று நீங்கள் மூட்டும் நெருப்பு அதனை அழிப்பதற்கானது.

நல்ல கற்பனை சகாரா…நெருப்பாய் வீறோடு வீரியம் கொள்க உங்கள் விடுதலை உணர்வு…..நேற்று மூண்ட நெருப்பில் விடுதலையைச் சட்டெரித்துச் சுடுகாடு அனுப்பிய பங்கு எம்மை உங்களை அனைவரையுமே சாரும்.

சாந்தி எப்போதுமே அடக்குமுறைக்கு உள்ளாக்கப்படும் சமூகம்தான் விடுதலையை வேண்டிப் போராடும். போராட்டம் என்றால் என்ன? எப்போதுமே வெற்றியை மட்டுமே நிலைநாட்டிக் கொண்டிருப்பது போராட்டம் என்ற வகைக்குள் அடங்காது. வெற்றியை பெறும் முழுமை நிலையில் நாம் இருப்போமானால் விடுதலையை வேண்டல் என்ற பேச்சுக்கே இடமில்லை. விடுதலையை அடைந்தவர்களாகவே கருதப்படுவோம். ஆளும் வர்க்கம் என்பது எப்போதுமே விடுதலையை வேண்டி நிற்கும் ஒடுக்கப்பட்ட இனங்களை மூர்க்கமாகப் பயமுறுத்தி அடக்கி ஆள்வது கண்கூடு. எங்களின் தாயகமீட்பில் ஆளும் வர்க்கத்திற்கு உதவியாக பிராந்திய நலன்களும், வல்லரசுப் போட்டிகளும் அதிகரித்திருந்தமை யாவரும் அறிந்த விடயம். நெருப்பாய் இருந்த விடுதலை உணர்வுதான் இருப்பை எரித்தது என்று நீங்கள் கூறுவதைப் பார்த்தால் சிங்கள அரசு விரும்பும் வகையில் உரிமைகள் அற்ற சமூகமாக ஆளும் வர்க்கம் விரும்பில் மாத்திரமே மனிதர்களாக வாழக்கூடிய வர்க்கமாக இருந்திருக்கலாம் என்பதாகவே தெரிகிறது. உங்களில் இருந்து வெளிப்படும் கருத்து சிங்கள அரசு விரும்பும் வகையில் உரிமைகள் அற்ற சமூகமாக ஆளும் வர்க்கம் விரும்பில் மாத்திரமே மனிதர்களாக வாழக்கூடியவர்களாக மாறவேண்டும் என்பதை அழுத்தி நிற்கிறதோ என்று ஐயம் ஏற்படுகிறது.

காலத்திற்குக் காலம் இழப்புகளால் எங்கள் வளர்ச்சி அதிகரித்ததே அல்லால் குறையவில்லை..

ஓம் குறையவில்லை இப்படி உசுப்பி உசுப்பியே கொல்லக் கொடுத்தது எனதோ உங்களதோ அதிகம் இல்லையே…?

நாம் அதீத இழப்புகளைச் சந்திக்காமல் விடுதலை என்ற உணர்வை ஏந்தவில்லை உங்களுக்கு அதிகம் இல்லாமல் இருக்கலாம். இழப்புகளை இங்கு எழுதி தனிப்பட்ட வகையில் எவருடைய பச்சாதாபத்தையும் பெற விரும்பவில்லை.

சிந்திய குருதியிலேயே சுதந்திரம் என்பது எவ்வளவு முக்கியமானது என்று புரிந்து கொண்டோம் .

புரிந்தீர்கள் ஆனால் பேச்சோடு மட்டும்….விசுவமடுக் கரைதாண்டாக்கனவோடு இருந்த வீல்செயாரின் நம்பிக்கையில் முக்கியமானவற்றையெல்லாம் மூழ்கடித்ததே உண்மை…..

வீல்செயரை இழுத்துக் கிண்டல் அடிக்கும் உங்களுக்கு பேச்சு மட்டும் தான் வரும். எங்களுக்குக் கண்ணீரும் கடமை உணர்வும் வரும். என்ன கொக்கரிக்கத் தெரியாது.

உங்களுக்கு பொருத்தமாக இருக்கலாம்.

உண்மைதான் இதில் ஒளிவுமில்லை மறைவுமில்லை….உள்மனச்சாட்சிய

Link to comment
Share on other sites

bangheadcomputerxa6.gif

:unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

bangheadcomputerxa6.gif

:unsure:

டங்குங்குக்கு மண்டை கழண்டு போச்சுது .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கதைகள் ஏன்? முகாம்களில் இருப்பவர்களை வடிகட்டிய பின்னர் அவர்களது சொந்த இடங்களில் அரசு குடியமர்த்தும். அவர்கள் எப்படியாவது பிழைத்துக்கொள்வார்கள்.. இன்னும் நூறு தலைமுறைக்கும் தமிழீழம் வேணும் என்று தாயகத்தில் இருந்து குரல் வராமல் மகிந்த பார்த்துக்கொள்வார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் சாந்தியக்கா,

உங்கள் ஆதங்கங்கள் ஏற்றுக்கொள்ள கூடியவையே. உங்கள் மனநிலையிலிருந்து சிந்திக்க கூடிய எந்த ஈழத்தமிழனுக்கும் உரிய கோபமே யார் ஏற்றுக்கொள்கின்றார்களோ இல்லையோ இங்கே சில பிரச்சினைகள் இன்றும் உருவெடுத்துக்கொண்டு தான் இருக்கின்றது. மாற்றத்தை காணும் மனப்பக்கும் பலருக்கு இன்னும் வந்து சேரவில்லை. நாங்கள் அழிந்து கொண்டிருக்கின்றோம் என்ற கோபத்தை உங்கள் கவிதை சொல்கின்றது.

இருப்பினும்...

தொடர்ச்சியான எமது விமர்சனங்கள், பின்னடிப்புக்கள், அல்லது குறிப்பிட்டவர்கள் மீதான எதிர்கருத்துக்கள் எதையும் செய்து விடப்போவதில்லை. காலச்சுவடு போன்ற இணையங்கள் காலத்திற்க்கு செய்யும் இந்த இரண்டகம் நிச்சயம் நிவர்த்தி செய்யப்படும். நாங்கள் ஈழத்தமிழர்கள் எமக்கு எம்மை தெரியும், எம் தலைவனைத்தெரியும், எம் போராட்டத்தின் நியாயப்பாடுகள் புரியும்.

ஆதலால்...

நாங்கள் மற்றவர்கள் பற்றிய அக்கறையை விட்டு விடலாம். சர்வதேசத்தை நம்பியும், இந்தியாவையும் நம்பியும் காலம் கடத்துவது கூட இன்றைய காலகட்டத்தில் வெற்று வேலை என்பது எனது கருத்து. நாம் நிழலி சொன்னது போல எம்மை திடப்படுத்த வேண்டும் ஒற்றுமைப்படுத்த வேண்டும். ஆனால் அந்த ஒற்றுமையை சிதைககிறவர்கள் மீது உங்கள் கோபம் நியாயமானது. ஆனால் அதுவே ஆபத்தானது. நாங்கள் உணர்வின் விளிம்பில் நின்று போராடினோம். இன்று ஈழத்தமிழினம் உணர்வுகள் செத்திட ஜடமாகி கிடக்கிறது. அவர்கள் மீது தொடர்ந்து இவ்வாறான கருத்துக்கள் திணிப்பக்கப்படும் போது எதிர்மறை விளைவுகளை நாம் சந்திக்க நேரிடும்.

இது எனது கருத்து மட்டுமே!

Link to comment
Share on other sites

ஈராறு மாதங்கள் முன் ஓர்

அழகான விவாதம்

விடுதலைப்போராட்டத்தை

தத்தெடுத்த சாந்தி அக்கா

அழகான வார்த்தைகளால்

பிய்தெடுத்தார் ஓர் துரையை

தமிழ்ப்படத்தை பாாத்து

போராட்டத்தை வளர்த்ததாய்

ஆசிரியா அவர் சொல்ல

சீறியெழுந்த சாந்திஅக்கா

சீருடையில்லா புலியானார்

களத்திலும் காரசாரமாய் வாதங்கள்.

துரைசொன்னது தவறாய் இருந்தாலும்

அக்கா எடுக்கும் வாந்தி

கேவலமாய்...............................

நிர்வாகமே நீயும் திசைமாறினாயோ?

இனத்தை விற்று பிழைப்்பதைவிட

உடலைவிற்று பிழைப்பதே மேல்

தமிழா தறிகெட்டுப்பொனாய்

எல்லாம் கூலிப்பணத்துக்காய்....

இந்த ஆட்டங்கள் தொடரும்...

நான் வாழ்ந்தால் போதும்

ரூபாய்க்கு நாலுஇணையம்

வாங்கலாம் இலவசமாயும் கிடைக்கும்

குறிக்கோள் எதுவுமின்றி வசதிக்காய்

எமக்கு எவரும் நிரந்த நண்பர்களில்லை...

எதிரிகளும் இல்லை.............

ஆடம்பரங்கள் கேளிக்கைகள்

எம் குறிக்கோள்....எம் வியாபாரங்கள்

தொடரும் பொற்காசுகள் குவியும்வரை

Link to comment
Share on other sites

எங்கள் முகாரிகளே.. முரசுகளாக மாறும்.

மௌனித்துக் கொண்டவர்களே!

இனிமேல் மனிதத்தைப்பற்றிப் பேசாதீர்கள்.

பேசினால் உங்கள் கருத்தைக் காவிவரும் மொழி களங்கப்பட்டுவிடும்.

எட்ட நின்று வேடிக்கை பார்த்துவிட்டு,

ஆதாயம் உண்டென்றால் இனவாத அரசின் செயலை ஆதரித்து,

இந்த இனஅழிப்பிற்கு,

“பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்று

முத்திரை குத்திவிட்டு முறுவலித்துக் கொள்ளுங்கள்.

இப்போது முகாரிகள் எங்கள் தேசியமொழியாகிக் கிடக்கிறது.

வலியனை வாழ்த்துவது வழமையானதுதான்

நாங்கள்தான் முட்டாள்கள் போலும்.

எங்கள் ஒப்பாரிகள்.

உங்கள் செவிப்பறையில் மோத மானிடத் துடிப்புக் கொள்வீர்கள் என்று நம்பி,

ஏமாந்து கொண்டிருக்கிறோம்.

எங்கள் பிள்ளையர்தான் எங்கள் வல்லமைகள் என்பதை சில சமயங்களில்.

பிறழ்வுக்கு உள்ளாக்கிவிடும் தவறைச் செய்கிறோம்

தன்கையே தனக்குதவி எனும் இனம்

பிறன் காலடியில் உயிர்வாழ, கையேந்த சபிக்கப்பட்டது எப்படி?

காலங்காலமாக வாழ்ந்த மண்ணில்,

எத்தனை காலமாக ஏதிலிகளாகக்கப்பட்டு,

இனஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டு சிறுகச் சிறுக சீரழிக்கப்பட்டோம்.

எவரேனும் எங்கள் வாழ்வைப்பற்றிக் கவலையுற்றுக் குரல் தந்தீர்களா?

இல்லையே

உங்கள் நாட்டில் நீங்கள் இன்னொரு இனத்தால் ஒடுக்கப்படுகிறீர்கள் என்று

அறியவில்லை என்று எங்கள் காதுகளில் பூச்சுத்தாதீர்கள்;.

இப்போது நாளாந்தம் எம்மண்ணில்,

துடிக்கத் துடிக்க சாவணைக்கும் உறவுகளின் எண்ணிக்கையை,

ஏதோ உணவுப் பயிருக்கு தீங்கு செய்யும்

பூச்சி, புழுக்களைக் கொல்லும் கணக்கில் போட்டுவிட்டதுபோல்,

துளியும் மனவருத்தமின்றி மெத்தனமாக கதைக்கிறீர்களே தவிர,

அதிலும் கொஞ்சம் நிவாரணப்பணம் தந்துதவ நினைக்கிறீர்களே அன்றி,

நாளாந்தச் சாவுகளையும்,

கைகால் இழப்புகளையும்,

மனநலம் குன்றுவதையும்

உடனடியாக நிறுத்தப்படவேண்டும் என்று

யாரும் அறைகூவல் செய்யாமல் மழுப்புகிறீர்கள்.

அப்படியாயின்,

எங்கள் தாயக மண்ணில் நடைபெறும் இனஅழிப்பு என்பதை

நீங்கள் எல்லோரும் மௌனத்தின் மூலம் அங்கீகரிக்கின்றீர்களா?

அனைத்துலகமே! போதும்..

உங்கள் மனித காருண்யத்தை நன்றாக உணர்ந்து கொண்டவர்கள்

ஈழத்தமிழர்களாகத்தான் இருக்கமுடியும்.

எங்களுக்கான தொப்புள் கொடி உறவுகள்தான்,

எமக்காக தம் வாழ்வைக் கருக்கி நாளாந்தம் தமை வருத்தி வாழ்கிறார்கள்.

அவர்களின் கூக்குரல் கூடவா எவருக்கும் கேட்கவில்லை.

உலகமெல்லாம் தாவரம், பறவை, விலங்கு என்று

எல்லாவற்றையும் பாதுக்காக்க திரளுங்கள்.

மனிதர்களை அதுவும் ஈழத்தமிழர்களை சீ விட்டுவிடுங்கள்.

எங்களுக்காகக் குரல் கொடுக்கவேண்டாம்.

சரி எங்களை அழிக்கச் சிங்கள அரசுக்கு போர் ஆயுதங்களையாவது வழங்காமல் விடலாம் அல்லவா.

ஐயோ..!! நாற்காலி மனிதர்களே!

நாறும் பிணமாகவும், நாயிலும் கேவலமான வாழ்வானதாகவும்

எங்கள் வாழ்வின்று நலிந்து கிடக்கிறது.

எங்கள் வலிகள் உங்களுக்குப் புரியப் போவதில்லை.

நீங்கள் எவரும் புரிய முயற்சிக்கப்போவதும் இல்லை.

தலையிடியும் காய்ச்சலும் தனக்குத் தனக்னெ;றால் தெரியும் அதன் வேதனை.

உலகே!

ஒரு கண்ணில் வெண்ணையும், மறுகண்ணில் சுண்ணாம்பும் தடவிக் கொண்டிருக்கும்

உன் போக்கு மாறும் காலம் வரும்.

எங்கள் முகாரிகள் முரசுகளாக மாறும்.

எங்கள் வலிகள் வல்லமைகளாக உருவெடுக்கும்.

வேண்டாப் பொருளாக விலக்கப்பட்ட நாங்களே

விலைமதிப்பில்லாத விடுதலைக்குச் சொந்தக்காரர்களாக மாறுவோம்.

சர்வதேசம் கண்ணிழந்த கதையை, ஈழப்புத்தகம் வரலாறாய் வரைந்து கொள்ளும்.

இன்று உலகெங்குமாக வாழும் தமிழ் உறவுகளின்

கண்களில் வழியும் கண்ணீரே தாயகம் மீட்கும் மறவர்களின் காப்பரன் என்று

காலம் உணர்த்தும் பாடத்தை இனிவரும் போராட்டங்கள்

முன்னுதாரணம் ஆக்கிக் கொள்ளும்.

யாரெல்லாம் எங்கள் இனத்தின் வாழ்விற்கு விசமிடுகிறீர்களோ

வெகுவிரைவில் வெட்கித்துக் கொள்வீர்கள்.

நன்றி இலக்கியன்

Link to comment
Share on other sites

யாரெல்லாம் எங்கள் இனத்தின் வாழ்விற்கு விசமிடுகிறீர்களோ

வெகுவிரைவில் வெட்கித்துக் கொள்வீர்கள்.

ஆழமான வரிகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்கள் முகாரிகளே.. முரசுகளாக மாறும்.

மௌனித்துக் கொண்டவர்களே!

இனிமேல் மனிதத்தைப்பற்றிப் பேசாதீர்கள்.

பேசினால் உங்கள் கருத்தைக் காவிவரும் மொழி களங்கப்பட்டுவிடும்.

எட்ட நின்று வேடிக்கை பார்த்துவிட்டு,

ஆதாயம் உண்டென்றால் இனவாத அரசின் செயலை ஆதரித்து,

இந்த இனஅழிப்பிற்கு,

“பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்று

முத்திரை குத்திவிட்டு முறுவலித்துக் கொள்ளுங்கள்.

இப்போது முகாரிகள் எங்கள் தேசியமொழியாகிக் கிடக்கிறது.

வலியனை வாழ்த்துவது வழமையானதுதான்

நாங்கள்தான் முட்டாள்கள் போலும்.

எங்கள் ஒப்பாரிகள்.

உங்கள் செவிப்பறையில் மோத மானிடத் துடிப்புக் கொள்வீர்கள் என்று நம்பி,

ஏமாந்து கொண்டிருக்கிறோம்.

எங்கள் பிள்ளையர்தான் எங்கள் வல்லமைகள் என்பதை சில சமயங்களில்.

பிறழ்வுக்கு உள்ளாக்கிவிடும் தவறைச் செய்கிறோம்

தன்கையே தனக்குதவி எனும் இனம்

பிறன் காலடியில் உயிர்வாழ, கையேந்த சபிக்கப்பட்டது எப்படி?

காலங்காலமாக வாழ்ந்த மண்ணில்,

எத்தனை காலமாக ஏதிலிகளாகக்கப்பட்டு,

இனஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டு சிறுகச் சிறுக சீரழிக்கப்பட்டோம்.

எவரேனும் எங்கள் வாழ்வைப்பற்றிக் கவலையுற்றுக் குரல் தந்தீர்களா?

இல்லையே

உங்கள் நாட்டில் நீங்கள் இன்னொரு இனத்தால் ஒடுக்கப்படுகிறீர்கள் என்று

அறியவில்லை என்று எங்கள் காதுகளில் பூச்சுத்தாதீர்கள்;.

இப்போது நாளாந்தம் எம்மண்ணில்,

துடிக்கத் துடிக்க சாவணைக்கும் உறவுகளின் எண்ணிக்கையை,

ஏதோ உணவுப் பயிருக்கு தீங்கு செய்யும்

பூச்சி, புழுக்களைக் கொல்லும் கணக்கில் போட்டுவிட்டதுபோல்,

துளியும் மனவருத்தமின்றி மெத்தனமாக கதைக்கிறீர்களே தவிர,

அதிலும் கொஞ்சம் நிவாரணப்பணம் தந்துதவ நினைக்கிறீர்களே அன்றி,

நாளாந்தச் சாவுகளையும்,

கைகால் இழப்புகளையும்,

மனநலம் குன்றுவதையும்

உடனடியாக நிறுத்தப்படவேண்டும் என்று

யாரும் அறைகூவல் செய்யாமல் மழுப்புகிறீர்கள்.

அப்படியாயின்,

எங்கள் தாயக மண்ணில் நடைபெறும் இனஅழிப்பு என்பதை

நீங்கள் எல்லோரும் மௌனத்தின் மூலம் அங்கீகரிக்கின்றீர்களா?

அனைத்துலகமே! போதும்..

உங்கள் மனித காருண்யத்தை நன்றாக உணர்ந்து கொண்டவர்கள்

ஈழத்தமிழர்களாகத்தான் இருக்கமுடியும்.

எங்களுக்கான தொப்புள் கொடி உறவுகள்தான்,

எமக்காக தம் வாழ்வைக் கருக்கி நாளாந்தம் தமை வருத்தி வாழ்கிறார்கள்.

அவர்களின் கூக்குரல் கூடவா எவருக்கும் கேட்கவில்லை.

உலகமெல்லாம் தாவரம், பறவை, விலங்கு என்று

எல்லாவற்றையும் பாதுக்காக்க திரளுங்கள்.

மனிதர்களை அதுவும் ஈழத்தமிழர்களை சீ விட்டுவிடுங்கள்.

எங்களுக்காகக் குரல் கொடுக்கவேண்டாம்.

சரி எங்களை அழிக்கச் சிங்கள அரசுக்கு போர் ஆயுதங்களையாவது வழங்காமல் விடலாம் அல்லவா.

ஐயோ..!! நாற்காலி மனிதர்களே!

நாறும் பிணமாகவும், நாயிலும் கேவலமான வாழ்வானதாகவும்

எங்கள் வாழ்வின்று நலிந்து கிடக்கிறது.

எங்கள் வலிகள் உங்களுக்குப் புரியப் போவதில்லை.

நீங்கள் எவரும் புரிய முயற்சிக்கப்போவதும் இல்லை.

தலையிடியும் காய்ச்சலும் தனக்குத் தனக்னெ;றால் தெரியும் அதன் வேதனை.

உலகே!

ஒரு கண்ணில் வெண்ணையும், மறுகண்ணில் சுண்ணாம்பும் தடவிக் கொண்டிருக்கும்

உன் போக்கு மாறும் காலம் வரும்.

எங்கள் முகாரிகள் முரசுகளாக மாறும்.

எங்கள் வலிகள் வல்லமைகளாக உருவெடுக்கும்.

வேண்டாப் பொருளாக விலக்கப்பட்ட நாங்களே

விலைமதிப்பில்லாத விடுதலைக்குச் சொந்தக்காரர்களாக மாறுவோம்.

சர்வதேசம் கண்ணிழந்த கதையை, ஈழப்புத்தகம் வரலாறாய் வரைந்து கொள்ளும்.

இன்று உலகெங்குமாக வாழும் தமிழ் உறவுகளின்

கண்களில் வழியும் கண்ணீரே தாயகம் மீட்கும் மறவர்களின் காப்பரன் என்று

காலம் உணர்த்தும் பாடத்தை இனிவரும் போராட்டங்கள்

முன்னுதாரணம் ஆக்கிக் கொள்ளும்.

யாரெல்லாம் எங்கள் இனத்தின் வாழ்விற்கு விசமிடுகிறீர்களோ

வெகுவிரைவில் வெட்கித்துக் கொள்வீர்கள்.

நன்றி இலக்கியன்

நுணாவிலான் எனக்கு இலக்கியன் யாரென்று தெரியாது ஆனால் இக்கவிதைவரிகள் யாழில் என்னால் பதியப்பட்டவை. சில கவிதைகளை வாசிக்கும் முகமறியாத் தோழர்கள் அவற்றை தாம் எழுதும் மற்றைய தளங்களில் பதிவிடுகிறார்கள். அந்த வகையில் முகந்தெரியாத தோழர் இலக்கியனுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் உரித்தாகட்டும்.

பழைய இணைப்பு

http://www.yarl.com/forum3/index.php?showtopic=52348&hl=

Link to comment
Share on other sites

நுணாவிலான் எனக்கு இலக்கியன் யாரென்று தெரியாது ஆனால் இக்கவிதைவரிகள் யாழில் என்னால் பதியப்பட்டவை. சில கவிதைகளை வாசிக்கும் முகமறியாத் தோழர்கள் அவற்றை தாம் எழுதும் மற்றைய தளங்களில் பதிவிடுகிறார்கள். அந்த வகையில் முகந்தெரியாத தோழர் இலக்கியனுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் உரித்தாகட்டும்.

பழைய இணைப்பு

http://www.yarl.com/forum3/index.php?showtopic=52348&hl=

வல்வை அக்கா.. இது உண்மையிலேயே ஒரு பிரச்சினைதான்..! பிறிதொரு காலத்தில் யார் எழுதிய கவிதை இது என்பதில் பிரச்சினை வந்துவிடும்..! அதால அவரவர் தங்கள் கவிதைக்குள்ள தங்கட பெயர் வாற மாதிரி எழுதிக் கொள்ளுங்கோ..! :wub:

ஆனால் சகாரா அக்காவின்ர கவிதைகளை கண்டுபிடித்துவிடலாம்..! பிரச்சினையில்லை..! பின்ன.. கந்தகப்புகை அது இதுவெண்டு ஏதாச்சும் வரும்தானே..! :(

(கோவிக்காதேங்கோ.. நான் சும்மா பகிடிக்கு..! :icon_mrgreen: )

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஜனாதிபதித் தேர்தல் களம் தெற்கைவிட இம்முறை தமிழர் தாயகப் பிரதேசத்திலும் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கின்றது. போரின் பின்னரான அனைத்து ஜனாதிபதித் தேர்தல்களிலும் தென்னிலங்கை வேட்பாளர்களை ஆதரித்த தமிழ் மக்கள் இம்முறை அத்தகைய நிலைப்பாட்டை எடுப்பதற்குத் தயங்குவதும், தமிழ்ப் பொது வேட்பாளரை நோக்கி தமிழர்கள் அணிதிரட்டப்படுவதாலும் ஜனாதிபதித் தேர்தல் விவகாரம் பேசுபொருளாகியிருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப்பொது வேட்பாளர் களமிறக்கப்படுவது தென்னிலங்கை கட்சிகளைப்போன்று தமிழ்த்தேசியக் கட்சியைச் சேர்ந்த சிலருக்கும் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. அதே நேரம் இந்தப் பொதுவேட்பாளர் விவகாரத்தை குழப்பியடிப்பதற்கான சதி முயற்சியும் முன்னெடுக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. தமிழ் மக்கள் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரனின் செயற்பாடுகள் தொடர்பில் பலத்த சந்தேகங்கள் எழுப்பப்படுகின்றன. கொள்கைத் தளம்பலான ஒருவர் இந்த விடயங்களை முன்னின்று செயற்படுத்துவதாகச் சொல்லிக்கொள்ளும் போது சந்தேகங்கள் எழுவது இயல்பானதே. பொதுவேட்பாளர் விவகாரத்தை ஆதரிப்பதாகக் காட்டிக்கொண்டு அதைக் குழப்பியடிப்பது தான் அவரது இலக்கா என்ற கேள்வியும் எழுகின்றது. ஏனெனில் அவரின் நடவடிக்கைகள் அப்படியானவையாகத்தான் அமைந்திருக்கின்றன. ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியே, ஜனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளரைக் களமிறக்கும் யோசனையை முன்வைத்தது. அது தொடர்பில் பல தரப்புகளையும் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தது. இதேகாலப் பகுதியில் விக்னேஸ்வரன், ‘ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டுக்கு நல்லது செய்கிறார். அவரைத்தான் ஆதரிப்பேன்' என்று அறிக்கைவிட்டார். பின்னர் ரணில் ஏமாற்றிவிட்டார் என்று சொன்னார். திடீரென பொதுவேட்பாளர் விவகாரம் தொடர்பில் கூட்டத்தை ஒழுங்குபடுத்தினார். அது தொடர்பில் அறிக்கைகள் விடுத்தார். இந்த விவகாரத்தை முன்னெடுத்த தரப்புகளுடன் எந்தவொரு சந்திப்பையும் நடத்தாமல் தான்தோன்றித்தனமாக விக்னேஸ்வரன் விடயங்களைக் கையாள்கின்றார். இது தமிழ்ப்பொதுவேட்பாளர் விவகாரத்தை எதிர்க்கும் தரப்புகளுக்கு வாய்ப்பாக அமைந்திருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனு கோரப்பட்ட பின்னர் தமிழ்ப்பொதுவேட்பாளர் யார் என்பதைப் பகிரங்கப்படுத்தலாம். விக்னேஸ்வரன் பொறுமை காக்கவேண்டும். இலங்கையிலுள்ள தமிழ்மொழி பேசும் அனைவரும் ஆதரிக்கக்கூடிய ஜனரஞ்சகமான தலைவர் ஒருவராக இருக்கவேண்டும். அப்படிப்பட்டண்டும். ஒருவரையே தமிழ்ப்பொதுவேட்பாளராக களமிறக்க வேண்டும். தமிழ்ப்பொதுவேட்பாளர் என்பது ஒரு அரசியல் தீர்மானம். எப்படி வட்டுக்கோட்டைத் தீர்மானம் காலம் கடந்தும் நிலைத்து நிற்கின்றதோ அதே போன்று தமிழ்ப்பொதுவேட்பாளர் விவகாரமும் அமையவேண்டும். நாடு முழுவதிலிருந்தும் ஆகக் குறைந்தது 15 லட்சம் வாக்குகளையாவது அவர் திரட்டிக்கொள்ளக் கூடியவராக இருக்கவேண்டும். முஸ்லிம் மற்றும் மலையக சமூகங்களின் அரசியல் தலைவர்கள் தென்னிலங்கை தரப்புகளுடன் ஒட்டிக் கொண்டிருந்து அமைச்சுப் பதவியை பெறுபவர்கள். அவர்கள் எந்தளவு தூரம் பொதுவேட்பாளர் விவகாரத்துடன் ஒத்துழைத்துச் செயற்படுவார்கள் என்பது கேள்விக்குறியானது. இவ்வாறான சூழலில் அனைத்துத் தரப்புகளுடனும் அவதானமாகவும் - நிதானமாகவும் கலந்துரையாடல் நடத்தவேண்டும். அதைவிடுத்து விக்னேஸ்வரன் போல, மின்னஞ்சலில் போதிய அவகாச மின்றி அழைப்பு அனுப்பிவிட்டு கலந்துரையாடல் நடத்த கூடாது. விக்னேஸ்வரன் தலைமை தாங்கிய எந்தவொரு விடயமும் நேர்சீராக நடைபெறவில்லை. மாகாண சபையாக இருக்கலாம் அல்லது தமிழ்மக்கள் பேரவை என்ற சிவில் அமைப்பாக இருக்கலாம் அல்லது அவரது கட்சியாக இருக்கலாம். எங்குமே அவர் ஒரே கொள்கையோடு இயங்காமையால் கடைசியில் அவையெல்லாமே குழப்பத்துக்குள் சிக்கி, செயற்றிறனை இழந்ததைக் கண்முன்னே பார்த்தோம். அப்படிப்பட்ட ஒருவர் தனது அவசரத்தனமான நடவடிக்கைகளால் தீர்க்கமான அரசியல் முடிவை குழப்பியடித்துவிடக்கூடாது என்பதே மக்களின் ஆதங்கம். (16. 04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/அவசரத்தனங்களும்_குழப்பங்களும்...
    • இலங்கையில் தமிழர்களுக்கு மாத்திரமல்லாமல் முஸ்லிம்களுக்கும் தாய்மொழி தமிழ்தான். இதனாலேயே தமிழர்களையும் முஸ்லிம்களையும் ஒன்றிணைக்கும் முயற்சியில் தந்தை செல்வா ஈடுபட்டார். இதனால் 'தமிழ்பேசும் மக்கள்' என்ற சொல்லை தந்தை செல்வா பாவிக்கத்தொடங்கினார். இலங்கை சுதந்திரமடைந்த காலம் தொட்டு இரு தரப்பு அரசியல்வாதிகளும் தமிழ் முஸ்லிம் ஒற்றுமை பற்றிப் பேசி வருகின்றனர். தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளும் பல விட்டுக்கொடுப்புகளைச் செய்து தமிழ் முஸ்லிம் ஒற்றுமையை கட்டியெழுப்ப அன்றிலிருந்து இன்று வரை பாடுபட்டு வருகின்றனர். ஆனால் முஸ்லிம்களோ மொழிரீதியான பிணைப்பைக் கணக்கிலேயே எடுப்பதில்லை. அவர்கள் எப்போதுமே தம்மைத் தனியான இனமாக முன்னிறுத்துவதிலும், தமது நலன்களைப் பெற்றுக்கொள்வதிலுமே கண்ணும் கருத்துமாக இருக்கின்றனர். ஒரு சிறுபான்மை இனம் என்ற அடிப்படையில், முஸ்லிம்கள் தமது நலன்களை முன்னுரிமைப்படுத்திச் செயற்படுவதில் எவ்விதத் தவறுமில்லை என்று தமிழர்கள் கடந்துசென்றுவிடலாம். ஆனால், ஒரே மொழியைப்பேசிக்கொண்டு, சகோதர இனம் என்று சொல்லிக்கொண்டு, தமிழர்களை ஒடுக்கும் செயற்பாடுகளை முஸ்லிம்கள் மேற்கொள்வதைத்தான் ஜீரணிக்க முடியாமல் இருக்கின்றது. குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் கல் முனையில் முஸ்லிம்கள் தமிழர்களின் இருப்பை கேள்விக்குறியாக்கும் செயற்பாடுகளை காலாதிகாலமாக மேற்கொண்டு வருகின்றனர். இதனால் கல்முனைத் தமிழர்கள் சாட்சிக்காரனின் காலில் வீழ்வதை விட சண்டைக்காரனின் காலில் வீழ்வதே மேல் என்ற நிலைப்பாட்டுக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இலங்கைத்தீவை நிர்வகிப்பதற்கு 256 பிரதேச செயலர் பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த 256 பிரதேச செயலகங்களின் ஊடாக அந்தந்தப் பிரதேசத்துக்குரிய மக்கள் தமது தேவைகளை பூர்த்தி செய்து வருகின்றனர். இப்படிப்பட்டநிலையில், கல்முனைப் பிரதேச செயலர் பிரிவில் முஸ்லிம் பிரதேச செயலர்களே தொடர்ச்சியாக நியமிக்கப்பட்டு வந்தனர், வருகின்றனர். இவர்கள் முஸ்லிம்களுக்குச் சார்பாக நடந்து கொள்வதாக தமிழர்கள் தொடர்ச்சியாகக் குற்றஞ்சாட்டி வந்தனர். இதனால் கல்முனை பிரதேச செயலர் பிரிவு 1989 ஆம் ஆண்டு முஸ்லிம் பிரிவு, தமிழ்ப் பிரிவு என இரண்டாகப் பிரிக்கப்பட்டது. இவ்வாறு கல்முனைப் பிரதேச செயலர் பிரிவு இரண்டாகப் பிரிக்கப்பட்டபோது முஸ்லிம் பிரதேச செயலர் பிரிவு முழு அதிகாரத்துடன் செயற்படத் தொடங்கியது. தமிழ்ப் பிரிவுக்கு முழுமையான அதிகாரங்களை வழங்க விடாமல் முஸ்லிம் அரசியல்வாதிகள் ஆட்சியாளர்களுக்கு சிங்களவர்கள் அழுத்தம்கொடுத்தனர், இப்போதும் அதே அழுத்தத்தைக் கொடுத்து வருகின்றனர். கல்முனை தமிழ்ப் பிரிவு பிரதேச செயலகம் 'உதவி அரசாங்க அதிபர் பிரிவு' என்றே இன்றுவரை அழைக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் அதன் அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளமையை உள்ளார்ந்தமாக உணரலாம். தமிழ்ப் பிரிவுக்குரிய காணி, நிதி போன்ற விடயங்கள் முஸ்லிம் பிரிவின் கீழேயே உள்ளன. இலங்கை அரசியலில் பௌத்த பிக்குகள் தான் தீர்மானிக்கும் சக்தியாக விளங்குகின்றனர். அப்படியிருந்தும் ஞானசார தேரராலோ, சுமணரத்ன தேரராலோ கல்முனை தமிழ் பிரதேச செயலர் பிரிவை தரமுயர்த்த முடியவில்லை.சுமணரத்ன தேரர், ஞானசாரதேரர் ஆகியோரை விட முஸ்லிம் அரசியல்வாதிகளின் செல்வாக்கு கொழும்பு அரசியலில் கூடுதலான தாக்கம் செலுத்துகிறது என்பதே யதார்த்தம். கல்முனைப் பிரதேச செயலக தமிழ்ப் பிரிவை பூரண அதிகாரமுள்ள பிரதேச செயலகமாக தரமுயர்த்தக்கோரி கடந்த 35 வருடங்களாக கல்முனைத் தமிழர்கள் பல்வேறு சாத்வீகப் போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர். எனினும் இன்றுவரை கல்முனை தமிழர்களுக்கு நீதி கிட்டவில்லை. இந்த வருடமும் தமிழ்ப் புத்தாண்டை கல்முனைத் தமிழர்கள் கரிநாளாக அனுஷ்டித்தனர். இந்த நிமிடம் வரை கொட்டும் மழைக்கு மத்தியிலும் கல்முனைத் தமிழர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இறுதியாக நடைபெற்ற மாகாணசபைத் தேர்தலிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கிழக்கு மாகாணத்தில் கூடுதலான ஆசனங்களைப் பெற்றிருந்தும், கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியை முஸ்லிம் காங்கிரஸுக்கு தாரைவார்த்துக்கொடுத்தது. கிழக்கு மாகாண சபை கலைக்கப்பட்டதும் முதலமைச்சர் அஹமட் நஷீர் ‘வடக்கையும் கிழக்கையும் இணைப்பதற்கு தான் ஒருபோதும் அனுமதிக்கமாட்டேன்' என்று அறிக்கைவிட்டு, தமிழர்களின் அடிப்படைக்கோரிக்கையையே நிராகரித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் பதவிக்கு வந்த முதலமைச்சரான நஷீர் யுத்தம் நடைபெற்ற காலத்திலும் யுத்தம் முடிந்த பின்னரும் தமிழர்களுக்கு கிடைக்கவேண்டிய வேலை வாய்ப்புகள், உயர்கல்வி வசதிகள் போன்றவற்றை தமிழ்மொழியை பேசுகின்ற காரணத்தால் முஸ்லிம்கள் தட்டிப்பறித்து வருகின்றனர் என்றொரு குற்றச்சாட்டு பொதுவாக உண்டு. ஆனால், ஒரு பிரதேச செயலகத்தைக் கூட தரமுயர்த்த அனுமதிக்காமல், இன்னொரு சிறுபான்மையினரின் அடிப்படை உரிமைகளைக் கூடவா தட்டிப்பறிப்பார்கள்? தமிழ் அரசியல்வாதிகள் தீர்க்கமான ஒரு முடிவெடுக்கவேண்டிய தருணம் வந்து விட்டது. தமிழ் - முஸ்லிம் ஒற்றுமை என்றைக்கும் இருக்கத்தான் வேண்டும். ஆனால் அதைச் சொல்லிச் சொல்லியே முஸ்லிம்கள் எல் லாவற்றையும் பறித்தெடுக்க, நாம் மட்டும் இலவு காத்த கிளிகளாக ஏமாந்து கொண்டே இருக்கிறோம். இனியும் அவ்வாறான விட்டுக்கொடுப்புகளுக்கு இடமளிக்காமல், முதலில் தமிழர் நலன் அதன்பின்னரே தமிழ்-முஸ்லிம் ஒற்றுமை என்ற நிலைப்பாட்டுக்கு தமிழ்மக்களும், தமிழ் அரசியல்வாதிகளும் வரவேண்டும். அப்போதுதான் எஞ்சியவற்றையாவது இழக்காமல் காக்க முடியும். (17. 04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/இனநலனா!_ஒற்றுமையா!!!
    • முடிவாய் ரணிலையும் விடுறதாக இல்லை , அவர் பணக்கார வீட்டு  பிள்ளை , சந்து பொந்தெல்லாம் போகாமலா  இருந்திருப்பார் . பழம் இருக்கிறவன் அதன் சுவையை ருசிக்கிறான் ....அம்புட்டுதான் 
    • என்ன இது எங்க போனாலும் கொழுவி இழுக்க பார்க்கிறிங்க.  சுமா வை பற்றி தெரியும் என்றால் ஏன் கோத்திரத்தை அப்படி என்று எடுக்கிறீர்கள்.  என்ன பொறுத்தவரை உயர்ந்த குலமா அப்படியா இல்லையா என்பதல்ல ஏன் ஆதங்கம். பொறுக்கித்தனம் செய்பவனை பொறுக்கி என்பதுபோல தான் இது.  தப்பான பழக்கங்களை செய்கின்ற ஆள் தப்பான குலம் அவ்வளவு தான். 
    • பிரிதலும் புனிதமானது : சிவபாலன் இளங்கோவன் மார்ச் 2024 - சிவபாலன் இளங்கோவன் · உளவியல்   சஞ்சய்குமாருக்கு அவனது அத்தைப்பெண்ணான மீராவுடன் சிறு வயதிலிருந்தே காதல். சிறுவயதென்றால் பத்தாவது, பதினொன்றாவது படிக்கும் வயதிலிருந்தே. மீரா சென்னையில் இருந்து சஞ்சயின் கிராமத்து வீட்டிற்கு வரும்போதெல்லாம் சஞ்சய் ஏகாந்த மனநிலையில் இருப்பான்.  மீராவின் அப்பா சென்னையில் வங்கி மேலாளராக இருக்கிறார். சஞ்சய்க்கு அத்தனை வசதியில்லை. மீராவிற்குச் சிறு வயதில் சஞ்சயைப் பார்க்கபோவது மகிழ்ச்சியானதாகவே இருந்தது. இருவரும் கல்லூரி செல்லும் வரை அது ஓர் இளம் பிராயத்துக் காதலாகவே தொடந்து வந்தது. மீரா கல்லூரிப் படிப்பிற்காக டெல்லி சென்றாள். அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாகச் சஞ்சயைத் தவிர்த்து வந்தாள். சஞ்சயால் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அடிக்கடி அவளிடம் சண்டை போட்டான். முதலில் பொறுமையாக விளக்கம் கொடுத்துக்கொண்டிருந்தவள் அதன் பிறகு அவன் ஏதாவது பேச ஆரம்பிக்கும்போதே தொடர்பைத் துண்டித்துவிடச் செய்தாள். அதன் பிறகு எத்தனை முறை அவன் கால் செய்தாலும் அழைப்பை ஏற்க மாட்டாள், இன்னொரு பொழுது அவன் அழைத்தால் எதுவும் நடந்த மாதிரியே காட்டிக்கொள்ளாமல் பட்டும் படாமல் பேசுவாள். இப்படியே மூன்று வருடங்கள் சென்றது. டெல்லியில் அவள் படிப்பை முடித்து வந்தபோது சஞ்சய் ஒரு சாதாரண கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்திருந்தான். அவள் வந்தவுடன் அவளிடம் திருமணம் செய்துகொள்ளலாம் எனப் பேசினான். அவள் அலட்சியமாகச் சிரித்தாள். “உனக்கு என்ன பைத்தியமா? எனக்கு 22 வயதுதான் ஆகுது, அதுக்குள்ள உன்ன கல்யாணம் பண்ணி குழந்தை பெத்துக்கணுமா?” எனக் கோபமாகக் கேட்டாள் “உனக்கு என்ன பிடிக்கல, என்கிட்ட இருந்து விலகிப் போகணும்னு நினைக்கிற, அதான் ஏதேதோ காரணம் சொல்ற” என அவனும் கோபப்பட்டான் அவள் அவனிடம் எந்த வாக்குவாதமும் செய்யவில்லை. “உன்கிட்டலாம் பேசிப் புரிய வைக்க முடியாது”  என எழுந்து சென்றாள். சஞ்சய் அவன் பெற்றோர்களைக் கட்டாயப்படுத்தி மீரா வீட்டில் பெண் கேட்க சொன்னான். மீரா அவர்களிடம் பக்குவமாகச் சொல்லி நிராகரித்தாள். “எங்க வீட்ல உன்ன கல்யாணம் பண்ண ஒத்துக்க மாட்டாங்க, முதல்ல எனக்கே இப்ப கல்யாணம் பண்ண இஷ்டம் இல்ல, நான் வெளி நாடு போய் மாஸ்டர்ஸ் படிக்கப் போறேன், எனக்கு நிறைய கனவுகள் இருக்கு” என்று அவனிடம் சொன்னாள் “யாரோ நல்ல வசதியான ஒருத்தன புடிச்சிட்ட அதான் என்ன கழட்டிவிடற” என அவளை நடுரோட்டில் எல்லார் முன்பாகவும் கத்தி அசிங்க அசிங்கமான வார்த்தைகளால் அவமானப்படுத்தி அனுப்பினான். மீரா அழுதுகொண்டே வீட்டிற்கு வந்தாள். ஆண்-பெண் உறவில் சேர்தலைப் போலவே பிரிதலையும் நாம் இயல்பானதாகக் கருத வேண்டும். சேர்தலைப் போலவே பிரிதலின் முடிவையும் மதிக்கும் பண்பை அந்தக் காதலின் நிமித்தமே வளர்த்துக்கொள்ள வேண்டும்.   ஓர் உறவில் இருந்து வெளியே போவதற்கான கதவு எப்போதும் திறந்தே இருக்கிறது என்னும் நிலையில் இருக்கும் உறவுகளே மிகவும் பக்குவப்பட்ட உறவுகளாக, பரஸ்பர அன்பை ஆத்மார்த்தமாகக் கொண்ட உறவாக இருக்கும் என்பது எனது எண்ணம். அத்தனை கதவுகளையும் பூட்டிவிட்டு எங்களது உறவு ஆத்மார்த்தமானது என்று சொல்வது நிச்சயம் அபத்தமானது. ஒரு காதல் ஏற்படுதற்கு இருவருக்கும் இருக்கும் பக்குவம், பொறுப்புகள், முதிர்ச்சி, அக மற்றும் புறச் சூழல்கள் எனப் பல்வேறு காரணங்கள் இருக்கும். இந்தக் காரணங்கள் எல்லாம் மாறக்கூடியவை. ஒருவருக்கு இருக்கும் பக்குவமும், முதிர்ச்சியும் அவரின் வயதைப் பொறுத்து மாறிக்கொண்டிருக்கும் அதே போலவே ஒருவரின் அக, புறச் சூழல்கள் தொடர்ச்சியாக மாறிக்கொண்டிருப்பவை. ஒரு காதல் தொடங்கிய தருணத்தில் இருந்த இந்தக் காரணிகள் எல்லாம் அதற்குப் பிறகு மெல்ல மெல்ல மாறிக்கொண்டிருப்பவை. காதலுக்கான காரணங்கள் நீர்த்துப்போகும்போது அங்குக் காதலும் முடிந்து போகிறது. அதை நீட்டிக்க வேண்டிய தேவை இல்லாமல் போய்விடுகிறது, அப்போது அங்குக் காதல் முடிவுக்கு வருகிறது, முடிவுக்கு வரும் காதலை ஏற்றுக்கொள்ளாமல் அதற்கான அத்தனை கதவுகளையும் அடைத்துக் கட்டாயப்படுத்தும்போது அதுவரை இருந்த காதலே கேள்விக்குறியாகிறது, பழகிய கணங்களின் மீது ஓர் ஒவ்வாமை ஏற்படுகிறது, அந்த மூர்க்கத்தனத்தைக் காதலையே மலினப்படுத்தும், சிறுமைப்படுத்தும் செயலாகவே பார்க்க முடியும். சஞ்சய்க்கும் மீராவிற்கும் இருந்தது ஓர் இளம் பிராயத்துக் காதல். சிறு வயதிலேயே துளிர் விட்ட காதல். ஒரு வகையிலான இனக்கவர்ச்சி. ஒருவர் மீதான மோகமே அந்தக் காதலுக்கு அடிப்படை. அந்த வயதில் எந்தப் பொறுப்புகளும் இல்லை, பக்குவமும் இல்லை, இலக்குகளும் இல்லை. ஒருவர் மீது ஒருவர் ஈர்ப்பாக இருப்பது மட்டுமே அந்தப் பருவத்தில் போதுமானது, அதுவும் எப்போதாவது சந்திக்கிற சில நாள்களில் மட்டும் அந்த ஈர்ப்பு இருந்தால் போதுமானது, அதுவே பரஸ்பரக் காதல் என அவர்கள் உணர்ந்து கொண்டார்கள். ஆனால் இருவரும் வளரும் போது இருவருக்கான தனிப்பட்ட அடையாளங்கள் ஆளுமைப் பண்புகள் உருவாகின்றன. எதிர்காலம் குறித்த கனவுகளும், லட்சியங்களும் உருவாகின்றன. இந்தச் சூழலில் காதலென்பது வெறும் ஈர்ப்பு மட்டுமே அல்ல, பரஸ்பரமாக ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வது, அவர்களின் ஆளுமைப் பண்புகளை ஏற்றுக்கொள்வது, அவர்களின் கனவுகளையும், லட்சியங்களையும் மதிப்பது. இதில் போதாமைகள் ஏற்படும்போது ஒருவர் மீதான ஒருவரின் காதல் தன்னை மறுபரிசீலனை செய்து கொள்கிறது. அந்த காதலை நீட்டிப்பதற்கான தேவைக் குறித்து கேள்வி எழுகிறது. ஒரு பிராயத்தில் ஒருவருடன் பழகிய காரணங்களுக்காகவே இந்த எதிர்பார்ப்புகளை எல்லாம் புறம் தள்ள முடியாது. மீராவின் லட்சியங்களும், கனவுகளும் சஞ்சயைப் பொறுத்த வரை தேவையில்லாதவை. மீராவிற்கு அவன் மட்டுமே பிரதானமாக இருக்க வேண்டும், மீதி அத்தனையையும் அவள் நிராகரிக்க வேண்டும் என எதிர்பார்க்கிறான். ஆனால், மீராவோ தனது விருப்பங்களுக்கும் கனவுகளுக்கும் அவன் துணை நிற்க வேண்டும், அவளின் இந்த முடிவுகளை அவன் மதிக்க வேண்டும் என நினைக்கிறாள். அப்படி அவன் இருக்கும்போதே அவனின் மீது காதலுடன் இருக்க முடியும் என அவள் உணர்கிறாள். அப்படி அவன் இல்லை மாறாக அவன் அவளை எப்போதும் கட்டுப்படுத்த நினைக்கிறான், அவன் சொல்வதற்கு மாறாக அவள் நடந்து கொள்ளக்கூடாது என நினைக்கிறான் என்பது அவளுக்கு ஏமாற்றமாக இருக்கிறது. ஏன் இந்தக் காதலைத் தொடர வேண்டும் என அவள் நினைப்பதற்கு அவனின் இந்தப் போதாமைகள் முக்கியமான காரணம். ஆனால், சஞ்சயை பொறுத்தவரை அவளின் இந்த எதிர்பார்ப்புகளைச் சிறுமைப் படுத்துகிறான். அவளுக்கு வேறு யார் கூடவோ பழக்கம் இருக்கிறது அதனாலே தன்னை நிராகரிக்கிறாள், அவளின் படிப்பிற்கும், வசதிக்கும் தன்னைத் தகுதியானவன் இல்லை என அவள் நினைகிறாள் என அவளை மலினப்படுத்துகிறான். ஒருபோதும் அவன் தனது நடவடிக்கைகள் குறித்து உணரவே இல்லை, அவளின் மீதே அத்தனை குற்றசாட்டுகளையும் சுமத்துகிறான். இது மீராவிற்கு மூச்சு முட்டவைக்கிறது, அதை அவனிடம் சொல்ல முற்படும்போது அவன் அவளைத் திருமணம் செய்து கொள்ளலாம் எனக் கட்டாயப்படுத்துகிறான். ஒரு போதும் அவன் மாறப்போவதேயில்லை என உணர்ந்து கொண்ட மீரா அவனிடம் இருந்து நிரந்தரமாகப் பிரிந்து விடும் முடிவை எடுக்கிறாள். அந்த முடிவைச் சஞ்சய் எப்படி எதிர்கொள்கிறான்? மிகவும் உணர்ச்சிவசப்பட்டு மூர்க்கமாக எதிர்கொள்கிறான். அவளின் அத்தனை வருடக் காதலைக் கொச்சைபடுத்துகிறான், அவளை மோசமாகச் சித்தரிக்கிறான் அவனது குற்றசாட்டுகளில் அவன் இத்தனை நாள்கள் அவள் மீது துளியும் காதல் கொண்டிருக்கவில்லை என்பதுதான் தெரிகிறது. இந்தப் பிரிவை எதிர்கொள்ள அவன் இன்னும் பக்குவப்பட வேண்டும். பக்குவமற்று, உணர்ச்சிவசப்பட்ட நிலையில் பிரிதலை அணுகும் போக்கு இரண்டு பாலினரிடையுமே இருக்கிறது. நவீன காதலில் பிரிதலை அணுகும் பக்குவம் கொஞ்சம் ஏற்பட்டிருக்கிறது என நினைக்கிறேன். ஆனால் சினிமாக்களும், ஊடகங்களும் காதலில் பெண்களை எதிர்மறையாகச் சித்தரிக்கும் போக்கு தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இதன் பாதிப்பில் வளரும் இளைஞர்கள் பெண்களின் மீதான பொத்தாம்பொதுவான சில பொதுப்பார்வைகளுடன் இருக்கின்றனர் அதனால் பிரிதலை, பிரிவதற்கான முடிவைப் பெண்களுக்கான ஒன்றாகவே, பெண்களின் குணாதிசயம் என்றளவிலே புரிந்து கொள்கிறார்கள், இது பிரிதலுக்கான காரணங்களை முழுமையாக உணர்ந்து கொள்வதிலிருந்து அவர்களைத் தடுக்கிறது. ‘அந்தப் பெண் என்னை வேண்டாம் என்று சொன்னதற்கு நானும் ஒரு காரணம்’ என்பதை ஏற்றுக்கொள்வதிலிருந்து தப்பித்துக்கொள்ளலாம் என்பதால் பெண்களின் மீதான இந்தச் சித்தரிப்பைப் பெரும்பாலான ஆண்களும் மனமுவந்து ஏற்றுக்கொள்கிறார்கள். பிரிதலைப் பக்குவமாக ஏற்றுக்கொள்ளும் ஒருவரால்தான் அதற்கான காரணங்களை விருப்பு, வெறுப்புகளின்றி, முன்முடிவுகளின்றி ஏற்றுக்கொள்ளும் ஒருவரால்தான் அதுவரையிலான அந்தக் காதலில் உண்மையாக இருந்திருக்க முடியும். அப்படி இல்லாதவர்களால் அதுவரை இருந்த காதலே அர்த்தமற்றுப் போகிறது. எப்படிப் பிரிவது? “எனக்கு நல்லாவே தெரியுது, இந்த ரிலேஷன்சிப்னாலதான் நான் இவ்வளவு கஷ்டப்படுறேன், இதனால நான் நிறைய அவமானங்களைச் சந்திக்கிறேன், என்னைப் பற்றி நானே குற்றவுணர்ச்சி கொள்ற அளவுக்கு அவதிப்படறேன், இதுல இருந்து வெளிய போகணும்னு நினைக்கிறேன் ஆனால் போக முடியல, எப்படியாவது இதுல இருந்து நான் வெளிய போறதுக்கான வழிய சொல்லுங்க” தினமும் இப்படிப்பட்ட சிலரையாவது நான் எனது கிளினிக்கில் பார்த்து விடுகிறேன். எப்படிப் பிரிவது? என்பதுதான் அவர்களின் தவிப்பு. நீண்ட நாள் காதலன் தன்னை நிராகரிக்கிறான் என்பது தெளிவாகத் தெரிந்த பின்னரும் அவனை விட்டு நீங்க முடியாமல் இருப்பது, திருமணத்தைத் தாண்டிய ஓர் உறவு தவறு என்று தெரிந்த பின்னரும்கூட அதை விட்டு வெளியே போக முடியாமல் வருந்துவது, திருமணம் தரும் வலிகளில் இருந்து, வன்முறைகளில் இருந்து நிரந்தரமாகச் செல்ல முடிவு செய்து அதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிப்பது எனச் சேர்வது எப்படி என்று வருவோரைவிட, பிரிவது எப்படி என்னிடம் வருபவர்களின் எண்ணிக்கை சில நேரங்களில் அதிகமாகவே இருக்கிறது. அதுவும் நவீன காதல்களில் லிவிங்கில் இருக்கும் நிறைய இணையர்களில், தங்கள் உறவு முடிவுக்கு வருவதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிப்பவர்கள் ஏராளமானவர்கள். ஒரு பால் உறவிலும்கூடப் பிரிவை தாங்கிக்கொள்ள, ஏற்றுக்கொள்ளாமல் துயரத்தில் உழல்பவர்கள் நிறையப் பேர். இவர்கள் அனைவரின் பிரச்சினையும் ஒன்றே ஒன்று தான், பிரிவு தரும் வலியைத் தாங்க முடியாமல் இருப்பதே! ஓர் ஆத்மார்த்தமான உறவு என்பது எப்போதும் நம்மைப் பற்றியான நமது மதிப்பீட்டை உயர்வாகத்தான் கொண்டிருக்கும், எத்தனையோ முரண்பாடுகள் இருந்தாலும் ஒருவர் மீதான மதிப்பு என்பது மாறாமல் இருக்கும், பிறரின் முன்னிலையில் தனது இணையைப் பெருமிதமாகவே காட்டிக்கொள்ள விளைவார்கள். தனது இணை அவமானப்படுவதையோ அல்லது குற்றவுணர்ச்சி கொள்வதையோ ஒர் ஆத்மார்த்த காதலில் உள்ளவர்கள் நிச்சயம் விரும்ப மாட்டார்கள். ஓர் உறவின் விளைவாக நான் தாழ்வு மனப்பான்மை கொண்டாலோ, அவமானப்பட்டாலோ, குற்றவுணர்ச்சி கொண்டாலோ அந்த உறவு ஆத்மார்த்தமானதாக இல்லையென்று பொருள். அப்படிப்பட்ட உறவு இருவரையும் எப்போதும் காயப்படுத்திக்கொண்டேதான் இருக்கும், அப்படிப்பட்ட உறவை முடிவுக்குக் கொண்டு வருவதன் வழியாகவே அந்த உறவையும், அதில் உள்ளவர்களையும் காப்பாற்ற முடியும்.  அப்படிப்பட்ட உறவில் இருந்து பிரிய வேண்டும் என்ற முடிவு எடுக்கும்போது முதலில் அந்த முடிவில் உறுதியாக இருக்க வேண்டும். பிரிவதற்கான படிநிலைகள்: பிரிவதற்கான காரணங்களை உணர்வது பிரிவதற்கான முடிவைப் பரஸ்பரமாக எடுப்பது முடிவை ஏற்றுக்கொள்வது பிரிவின் வலியைக் கடந்து வருவது பிரிவில் இருந்து முழுமையாக வருவது பிரிய வேண்டும் என முடிவுசெய்துவிட்டால் அதற்கான காரணங்களை இருவரும் நிதானமாக, பரஸ்பரக் குற்றசாட்டுகள் இன்றி நிதானமாக உரையாட வேண்டும். ஏன் இதைத் தொடர வேண்டாம் என்பதை அத்தனை முதிர்ச்சியாக இருவரும் விவாதித்து முடிவெடுக்க வேண்டும். நிறைய நேரங்களில் பிரிய வேண்டும் என ஒருவர் மட்டுமே முடிவு செய்து விட்டு அதை இன்னொருவரிடம் தெரிவிக்காமல் அவரே புரிந்து கொள்ளட்டும் என அவரை அலட்சியம் செய்யும் போதுதான் நிறைய பிரச்சினைகள் வருகின்றன அது இந்தப் பிரிதலை இன்னும் சிக்கலாக்குகிறது. ஓர் உறவில் நாம் இருக்கும் போது அதை தொடர வேண்டாம் என நினைத்தால் அதற்கான காரணங்களைத் தெரிந்து கொள்ளக்கூடிய உரிமை இன்னொருவருக்கு இருக்கிறது, அதனால் அந்த முடிவைத் தெளிவாக இணையருக்கு தெரிவிக்கவேண்டிய கடமை அந்த முடிவை எடுத்தவருக்கு இருக்கிறது. அவர் அந்தக் காரணங்களை ஏற்றுக்கொள்கிறாரோ இல்லையோ அதைச் சொல்ல வேண்டியது ஒருவரின் பொறுப்பு. அதே போல நிறைய நேரங்களில், பிரியலாம் என்ற முடிவை எடுத்த பின்பும் அதை ஏற்றுக்கொள்வதில் இருக்கும் தயக்கம் அந்தப் பிரிவைச் சிக்கலாக்கும். பல்வேறு காரணங்களால் பிரிய வேண்டும் என்ற முடிவை எடுத்த பின், அதை இன்னொருவரிடம் தெளிவாகத் தெரிவித்த பிறகு அந்த முடிவை ஏற்றுக்கொள்ள வேண்டும். “இல்லை நான் இன்னும் முழுமையாகப் பிரியவில்லை, நாளைக்கேகூட அவர் திரும்ப என்னிடம் பேசுவதற்கு வாய்ப்பிருக்கிறது, அப்படிப் பேசினால் திரும்பவும் அத்தனையும் தொடரும்” எனச் சாத்தியமற்ற எதிர்பார்ப்புகளை மீண்டும் மீண்டும் கொண்டிருப்பதால் அந்தப் பிரிவைச் சார்ந்த துயரம் இன்னும் பலமடங்காகும். ஓர் இழப்பை, அது இழப்பென்று ஏற்றுக்கொண்டால் மட்டுமே அந்த இழப்பில் இருந்து நம்மால் வெளியே வர முடியும். இல்லை நான் இழக்கவில்லை என நமக்கு நாமே சமாதானம் செய்து கொண்டிருந்தால் அந்த இழப்பில் இருந்து வெளியே வரும் காலமும் அதிகமாகும், காயமும் அதிகமாகும். பிரிதல் என்பது நினைவுகளாலானது. ஒருவரை விட்டு ஒருவர் நீங்கும்போது அவரைச் சார்ந்த நினைவுகளும், அவருடன் இருந்த கணங்களின் நல்லுணர்வுகளும் ஒருவரை ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தும். அந்தத் துயரத்தை தவிர்க்க முடியாது. அந்தத் துயரமே அத்தனை காலக் காதலின் அடையாளம். அதை ஒருவர் கடந்துதான் வரவேண்டும். “என்னால அவளோட நினைவுகளை தாங்கிக்க முடியல,ரொம்ப கஷ்டமா இருக்கு, ஏதாவது மாத்திரை இருந்தா கொடுங்க, அவள மறக்கற மாதிரியான மாத்திரை” என நிறையப் பேர் கேட்பார்கள். ஒருவரை மறப்பதற்கான மாத்திரை என்பது உலகத்தில் இதுவரையிலும் கண்டுபிடிக்கவில்லை, அப்படி ஒரு மாத்திரை இருந்தால் உலகத்திலேயே அதிக விலையுள்ள மாத்திரை அதுவாகத்தான் இருக்கும். பிரிவு என்பது துயரமானதே. அந்தத் துயரத்தைக் கடந்து வருவதே ஒரு பிரிவின் உண்மையான சவால். கடந்து வர எவ்வளவு நாள் ஆகும் என்பது உங்கள் காதலை, உங்கள் முதிர்ச்சியை, பிரிவை ஏற்றுக்கொண்ட பக்குவத்தை அடிப்படையாக்க் கொண்டது. முழுமையாகப் பிரிவதுதான் பிரிவை இன்னும் இலகுவாக்கும். “நான் கொஞ்சமாக அவனிடம் இருந்து வெளியே வந்துவிடலாம் என இருக்கிறேன், திடீரென நான் பேசுவதை நிறுத்திக்கொண்டால் அவன் தாங்க மாட்டான், அதுவே நான் அவனிடம் இருந்து சிறிது சிறிதாக விலகினால் அவன் புரிந்துகொள்வான்” என்று ஒரு பெண் என்னிடம் சொன்னாள். நிறையப் பேருக்கும் பிரிதலையொட்டி இந்த நிலைப்பாடே இருக்கும். மதுவை எப்படிக் கொஞ்சம் கொஞ்சமாக விட முடியாதோ அதே போலவே ஒரு காதலையும் கொஞ்சம் கொஞ்சமாக விட முடியாது.  தொடர வேண்டாம் என முடிவு செய்து விட்டால் அதில் முழுமையாக இருந்தால் வெளியே வர முடியும். இடையிடையே பேசிக்கொண்டு, பார்த்துக்கொண்டு, ஒருவரை ஒருவர் கண்காணித்துக்கொண்டு இருந்தால் பிரிவு சிக்கலானதாக நிறையக் காயப்படுத்துவதாக, மனவுளைச்சல் கொடுக்கக்கூடியதாக இருக்கும். “நான் அவ கூட ரொம்ப இண்டிமேட்டா இருந்துட்டேன், செக்ஸ் கூட வச்சிகிட்டோம், ஆனால் இனி அப்படி இல்லாம வெறும் ஃபிரண்ட்ஸா மட்டும் இருக்கலாம்னு இருக்கேன்” என அந்த இளைஞன் சொன்ன போது. அப்படி இருப்பதற்கான வாய்ப்புகள் குறைவு எனச் சொன்னேன். ஓர் உறவு ஒரு கட்டத்தை அடைந்துவிட்டால் அதற்கு பிறகு அதன் முந்தைய நிலைக்குக் கொண்டு வந்து அதை நிறுத்துவது கடினம். தினமும் காலையில் இருந்து மது அருந்தும் ஒருவன் திடீரென ஒரு நாள் வந்து இனி நான் வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே மது அருந்துவேன் எனச் சொல்லும் போது அது எப்படிச் சாத்தியமில்லையோ அதே போலவே ஓர் உறவை அதன் முந்தைய நிலைகளுக்கு ஒருபோதும் எடுத்து வர முடியாது. பிரியவேண்டும் என முடிவெடுத்தால் அதில் உறுதியாகவும், முழுமையாகவும் இருந்தால் மட்டுமே பிரிய முடியும். ஓர் உன்னதமான உறவு என்பது எத்தனைக் காலம் அது நீடித்தது என்பதில் மட்டும் இல்லை, ஒருவேளை அது ஒரு முடிவுக்கு வந்தால் அந்தப் பிரிவின் முடிவை எத்தனை காதலுடன் அதை அணுகியது என்பதில்தான் இருக்கிறது. பிரிதலின் வழியாகவே நாம் அதிலிருந்த காதலை முழுமையாக உணர முடியும்.   https://uyirmmai.com/article/uyirmmai-magazine-march-2024-article-05/
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.