Jump to content

விழவிழ எழுதிய வீரவணக்கம் என்னவானது ?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வல்வை அக்கா.. இது உண்மையிலேயே ஒரு பிரச்சினைதான்..! பிறிதொரு காலத்தில் யார் எழுதிய கவிதை இது என்பதில் பிரச்சினை வந்துவிடும்..! அதால அவரவர் தங்கள் கவிதைக்குள்ள தங்கட பெயர் வாற மாதிரி எழுதிக் கொள்ளுங்கோ..! :wub:

ஆனால் சகாரா அக்காவின்ர கவிதைகளை கண்டுபிடித்துவிடலாம்..! பிரச்சினையில்லை..! பின்ன.. கந்தகப்புகை அது இதுவெண்டு ஏதாச்சும் வரும்தானே..! :(

(கோவிக்காதேங்கோ.. நான் சும்மா பகிடிக்கு..! :icon_mrgreen: )

கிண்டல்.....

என்ன செய்ய டங்குவார் ஒட்சிசனைவிட கந்தக நெடியையே அதிகம் சுவாசித்த உயிர்வாழ்தலுக்கு உரியவர்களாக இருக்கிறோமே...

Link to comment
Share on other sites

  • Replies 70
  • Created
  • Last Reply

நுணாவிலான் எனக்கு இலக்கியன் யாரென்று தெரியாது ஆனால் இக்கவிதைவரிகள் யாழில் என்னால் பதியப்பட்டவை. சில கவிதைகளை வாசிக்கும் முகமறியாத் தோழர்கள் அவற்றை தாம் எழுதும் மற்றைய தளங்களில் பதிவிடுகிறார்கள். அந்த வகையில் முகந்தெரியாத தோழர் இலக்கியனுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் உரித்தாகட்டும்.

பழைய இணைப்பு

http://www.yarl.com/forum3/index.php?showtopic=52348&hl=

http://www.no1tamilchat.com/no1chat/index.php?topic=5437.135 :icon_mrgreen::wub:

முன்பு இலக்கியன் யாழில் கவிதைகள் எழுதியவர் என நினைக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

http://www.no1tamilchat.com/no1chat/index.php?topic=5437.135 :icon_mrgreen::wub:

முன்பு இலக்கியன் யாழில் கவிதைகள் எழுதியவர் என நினைக்கிறேன்.

நுணாவிலான் யாழில் கவிதைகள் எழுதிய இலக்கியன் போல்தான் உள்ளது.

ஒன்றைக் கவனித்தால் குழப்பம் தீர்ந்துவிடும். இந்த இலக்கியன் அண்மைக்கால ஈழத்துக்கவிதைகளைச் சேகரித்துப் போட்டுள்ளார். அதில் பலருடைய கவிதைகளை இணைத்துள்ளார். எல்லோருடைய பெயர்களையும் அறியாதவிடத்து மிகத் தெளிவாகத் தெரிந்தவர்களின் பெயரை இணைத்துள்ளார் மற்றப்படி அவர் இன்னொருவர் கவிதையை தனதாகக் காட்டிக் கொள்ளவில்லை. கவிதையை யாத்தவர் பெயரைத் தெரியாவிட்டால் பரவாயில்லை. மாற்றிப்பதிந்து சிக்கல்களைத் தோற்றுவித்துவிடக் கூடாது என்ற எண்ணத்தில் அப்படியே விட்டிருக்கலாம். ஒன்று மட்டும் உணர முடிகிறது. இது ஒரு காலப்பதிவாக அவர் செய்கிறார். கொஞ்சம் அதிக கவனமெடுத்தால் நல்லது என்று நினைக்கிறேன். இக்காலத்தில் வாழ்ந்த பல கவிஞர்களின் பெயரையும் தாங்கியதாக இருக்கும் பதிவாகவும் மாறும். இலக்கியனின் இப்பணிக்கு நாங்கள் ஒத்துழைப்புக் கொடுப்பதே சிறந்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சகாரா

உங்களது வீராவேசக்கவிதைகள் நன்றாயிருக்கின்றன.

//காலத்திற்குக் காலம் இழப்புகளால் எங்கள் வளர்ச்சி அதிகரித்ததே அல்லால் குறையவில்லை//

இந்தவரியை ஏதாவது முகாமில் இருக்கிற சனத்துக்குச் சொல்லிப்பாருங்கள். உங்களுக்கு பச்சை மட்டை அடி நிச்சயம்.

---

அங்கிருக்கிற ஒட்டுமொத்த மக்களும் இனி ஆயுதபோர் எமக்கு வேண்டாம் என்றால் அடுத்ததாய் நாங்கள் என்ன செய்யலாம் என நீங்கள் நினைக்கிறீர்கள்.?

தன்ர குடும்பத்தையே இழந்து நிற்கிற ஒருவனிடம்.. ம்ம்.. இப்பிடியான இழப்புக்களால்தான் நமது போராட்டம் வீரியம் பெறும். பெற்றது என்று சொன்னால்..

என்ன நடக்கும் என்றதை நீங்களே கற்பனை செய்து கொள்ளுங்கள். நான் ரண்டு மூன்று பேரிடம் பேசிய வரை உங்களை கடித்தே கொன்றுவிடுவார்கள்.

Link to comment
Share on other sites

தனிமனித தாக்குதல் என உங்களுக்கு நீங்கள் அர்த்தப்படுத்துவது உங்கள் புரிதலின் குறைபாடேயன்றி வேறில்லை. உங்களுக்குப் பிடித்தவர் என்பதால் எல்லாவற்றையும் பூச்சிட்டு மறைத்தலே உங்கள் தேசிய நேசிப்புக்கு சிறந்த பரிசு.

கோவணத்தோடு இருந்த மனிதன்தான் காலவளர்ச்சியில் விதவிதமாக ஆடைகளை அணியப்பழகிக்கொண்டான். இந்த அடிப்படை புரியாத உங்களுடன் கருத்தாடுவதற்காக வெட்கப்படுகிறேன்.

காலச்சுவட்டுக்கு பங்குதாரராக உள்ளேன் உங்களுக்கும் பங்கு தேவைப்படின் தொடர்புகொள்ளுங்கள். பாகம் பிரித்துத்தரலாம்.

ஊர்முற்றக் கவிஞன் என்றால் என்ன கருணாகரன் என்றால் என்ன நிலாந்தன் என்றால் என்ன ஊரவன் பிள்ளை செத்தவரை விடுதலைபாடி தன்பிள்ளை களம் கேட்க சுயநலாமானால் அது தவறுதான். இதைப்போல்தான் உங்கள் கூச்சலும் கும்மியும்.

கனடாவிலிருந்து தொலைபேசியடித்து உலகத்தமிழர் பத்திரிகையில் கவிதையைப் போடச்சொல்லும்படி சான்றிதழும் அனுமதியும் பெற்றுக்கொள்ளும் செல்வாக்கப்படைத்தவர்களிடம் முற்றத்துக் கவிஞனின் மூர்க்கம் இருப்பதில் வியப்பதற்கு ஏதுமில்லை.

உங்களுக்கான பிரச்சனை என்னவென்பதை உங்கள் ஆவேசக்குரலால் உங்களால் மட்டும் முடிந்த உரத்தகுரலில் முற்றக்கவிஞனுக்கு பா புனைந்தாயிற்று….இனி சாமரம் தான் மிச்சம்…..

ஐயோ தாயே நீங்கள் அரியாசனத்தில் நின்று கொடியுந்தும் கண்ணகை தெய்வம் நாங்கள் நெருப்பில் எரிய வரவில்லை. இந்த உங்கள் ஆவேசம் இன்னும் சிலகாலத்தில் புஸ்வாணமாகும்.

குழந்தைப்போராளிகளை மகிந்தவின் மடிக்குள் வைத்துப்பார்க்க நீங்கள் விரும்பினால் ஒன்றும் செய்ய முடியாது. உங்கள் வாய்வீரத்தினுள் அவர்களுக்கு வாழ்வில்லை என்பது மட்டும் புரிகிறது.

உங்கள் எழுத்துமூலம் உங்கள் நிதானத்தைப் புரிந்தபின் அந்தக்குழந்தைப்போராளிகளை உங்கள் கையில் தந்தால் சாமியே தாங்காதம்மோய்…..

அடடா.... நீங்கள் நிலாந்தனுக்கா தனித்துக் கவிதை எழுதினீர்கள்? அப்படியானால் அதை நிலாந்தனின் தனிமடலுக்குப் போட்டிருக்கலாமே….

அருமையான கண்டுபிடிப்பு. நிலாந்தன் அப்போ உங்கள் ஊர்முற்றத்தைவிட இழிந்த மனிதனாகிவிட்டார்….? நிலாந்தன் உங்கள் வீட்டுக்கொல்லைப்புறத்திலா இணையத் தொடர்பு வைத்திருக்கிறார்…..

உங்கள் வீரம் உங்களுடனும் உங்களுக்கு ஆமாபோடும் சாமிகளுடனும்தான் செல்லுபடியாகும். அதையும் தாண்டி இப்படி வந்து தலைவிரிகோலமாய் நின்றடித்தாலும் சரி கண்ணகியாய் எரித்தாலும் சூடு உங்களுக்குத்தான்.

அந்தச்சாமிகளின் சன்னதமாக நீங்கள் வேப்பிலையின்றி உருவெடுப்பது இதுவரையான தமிழ் அரசியல் பரப்பின் வேகத்தையும் விவேகத்தையும் நன்றாகவே தெளிவுபடுத்துகிறது. நீங்கள் இன்று ஆ…ஓ வென ஒப்பாரி வைத்து இல்லையில்லையென்று மறுப்பவை யாவுமே நாளை தமிழீழ வரலாறாகப்பதியப்படப்போகிறத

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நிர்க்கதியான எம் தமிழ் மக்களுக்காக ஏதாவது செய்தேயாக வேண்டும் என்ற உந்துதலில் ஏராளமானவர்கள் சத்தமில்லாமல் தம் கடமையைச் செய்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில் அடுத்தவர் மீது தாக்குதல் நடத்தியே (அதிலும் குறிப்பாகச் சிலரை மட்டும் தெரிவு செய்து) எதனைச் சாதிக்க விரும்புகிறீர்கள்.

வணங்கா மண் ஏற்பாட்டாளர்கள், பத்மினி சிதம்பரநாதன் என்று அடுத்தவரை நோக்கிக் கைகாட்டும் நீங்கள் உங்களைப் பற்றிச் சுயவிமர்சனம் செய்து கொண்டாலே பெரும் நன்மை விளையும்.

தாயகத்தில் போராளிகளின் முகாமிற்குப் பக்கத்தில் வாழ்ந்ததையே பெரும் சாதனையாக்கிப் அந்த ஞாபகங்களைப் பதிந்ததையும் ஐயகோ நான் ஓடி வந்துவிட்டனே குற்றஉணர்விலே புளுங்கிக் கொண்டிருக்கிறேனே என்று உணர்ச்சி வசப்பட்டதையும் உங்களுக்கு நீங்களே ஊடகவியலாளர், பத்திரிகையாளர் என்றெல்லாம் பட்டங்கள் சூட்டிக் கொண்டதையும் தனது கணவனை இழந்த பெண்ணின் உள்ளுணர்வைப் புரிந்து கொள்ளாமல் உள் வீட்டுச் சமாச்சாரத்தைப் பத்திரிகையில் எழுதிப் பின் அந்தப் பெண்ணே அந்தப் செய்தி பொய்யானது என்று அதே பத்திரிகையில் எழுதுமளவிற்குப் பண்ணியதையும் அந்த அடாவடி நடவடிக்கைகளால் அந்த பத்திரிகையின் ஆசிரியப் பீடத்திலிருந்து நீங்கள் தூக்கியெறியப்பட்டதையும் அதைத் தொடர்ந்து அந்தப் பத்திரிகையின் மீது வசை பாடித் திரிவதையும் உங்கள் சாதனைகளாகக் கொண்டால் உங்களைப் பற்றிக் கவி வடிப்பதற்கு புலத்திலுள்ள தமிழ்க் கவிஞர்களே போதாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தனிமனித தாக்குதல் என உங்களுக்கு நீங்கள் அர்த்தப்படுத்துவது உங்கள் புரிதலின் குறைபாடேயன்றி வேறில்லை. உங்களுக்குப் பிடித்தவர் என்பதால் எல்லாவற்றையும் பூச்சிட்டு மறைத்தலே உங்கள் தேசிய நேசிப்புக்கு சிறந்த பரிசு.

கோவணத்தோடு இருந்த மனிதன்தான் காலவளர்ச்சியில் விதவிதமாக ஆடைகளை அணியப்பழகிக்கொண்டான். இந்த அடிப்படை புரியாத உங்களுடன் கருத்தாடுவதற்காக வெட்கப்படுகிறேன்.

காலச்சுவட்டுக்கு பங்குதாரராக உள்ளேன் உங்களுக்கும் பங்கு தேவைப்படின் தொடர்புகொள்ளுங்கள். பாகம் பிரித்துத்தரலாம்.

ஊர்முற்றக் கவிஞன் என்றால் என்ன கருணாகரன் என்றால் என்ன நிலாந்தன் என்றால் என்ன ஊரவன் பிள்ளை செத்தவரை விடுதலைபாடி தன்பிள்ளை களம் கேட்க சுயநலாமானால் அது தவறுதான். இதைப்போல்தான் உங்கள் கூச்சலும் கும்மியும்.

கனடாவிலிருந்து தொலைபேசியடித்து உலகத்தமிழர் பத்திரிகையில் கவிதையைப் போடச்சொல்லும்படி சான்றிதழும் அனுமதியும் பெற்றுக்கொள்ளும் செல்வாக்கப்படைத்தவர்களிடம் முற்றத்துக் கவிஞனின் மூர்க்கம் இருப்பதில் வியப்பதற்கு ஏதுமில்லை.

உங்களுக்கான பிரச்சனை என்னவென்பதை உங்கள் ஆவேசக்குரலால் உங்களால் மட்டும் முடிந்த உரத்தகுரலில் முற்றக்கவிஞனுக்கு பா புனைந்தாயிற்று….இனி சாமரம் தான் மிச்சம்…..

ஐயோ தாயே நீங்கள் அரியாசனத்தில் நின்று கொடியுந்தும் கண்ணகை தெய்வம் நாங்கள் நெருப்பில் எரிய வரவில்லை. இந்த உங்கள் ஆவேசம் இன்னும் சிலகாலத்தில் புஸ்வாணமாகும்.

குழந்தைப்போராளிகளை மகிந்தவின் மடிக்குள் வைத்துப்பார்க்க நீங்கள் விரும்பினால் ஒன்றும் செய்ய முடியாது. உங்கள் வாய்வீரத்தினுள் அவர்களுக்கு வாழ்வில்லை என்பது மட்டும் புரிகிறது.

உங்கள் எழுத்துமூலம் உங்கள் நிதானத்தைப் புரிந்தபின் அந்தக்குழந்தைப்போராளிகளை உங்கள் கையில் தந்தால் சாமியே தாங்காதம்மோய்…..

அடடா.... நீங்கள் நிலாந்தனுக்கா தனித்துக் கவிதை எழுதினீர்கள்? அப்படியானால் அதை நிலாந்தனின் தனிமடலுக்குப் போட்டிருக்கலாமே….

அருமையான கண்டுபிடிப்பு. நிலாந்தன் அப்போ உங்கள் ஊர்முற்றத்தைவிட இழிந்த மனிதனாகிவிட்டார்….? நிலாந்தன் உங்கள் வீட்டுக்கொல்லைப்புறத்திலா இணையத் தொடர்பு வைத்திருக்கிறார்…..

உங்கள் வீரம் உங்களுடனும் உங்களுக்கு ஆமாபோடும் சாமிகளுடனும்தான் செல்லுபடியாகும். அதையும் தாண்டி இப்படி வந்து தலைவிரிகோலமாய் நின்றடித்தாலும் சரி கண்ணகியாய் எரித்தாலும் சூடு உங்களுக்குத்தான்.

அந்தச்சாமிகளின் சன்னதமாக நீங்கள் வேப்பிலையின்றி உருவெடுப்பது இதுவரையான தமிழ் அரசியல் பரப்பின் வேகத்தையும் விவேகத்தையும் நன்றாகவே தெளிவுபடுத்துகிறது. நீங்கள் இன்று ஆ…ஓ வென ஒப்பாரி வைத்து இல்லையில்லையென்று மறுப்பவை யாவுமே நாளை தமிழீழ வரலாறாகப்பதியப்படப்போகிறத

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தனிமனித தாக்குதல் என உங்களுக்கு நீங்கள் அர்த்தப்படுத்துவது உங்கள் புரிதலின் குறைபாடேயன்றி வேறில்லை. உங்களுக்குப் பிடித்தவர் என்பதால் எல்லாவற்றையும் பூச்சிட்டு மறைத்தலே உங்கள் தேசிய நேசிப்புக்கு சிறந்த பரிசு.

கோவணத்தோடு இருந்த மனிதன்தான் காலவளர்ச்சியில் விதவிதமாக ஆடைகளை அணியப்பழகிக்கொண்டான். இந்த அடிப்படை புரியாத உங்களுடன் கருத்தாடுவதற்காக வெட்கப்படுகிறேன்.

காலச்சுவட்டுக்கு பங்குதாரராக உள்ளேன் உங்களுக்கும் பங்கு தேவைப்படின் தொடர்புகொள்ளுங்கள். பாகம் பிரித்துத்தரலாம்.

ஊர்முற்றக் கவிஞன் என்றால் என்ன கருணாகரன் என்றால் என்ன நிலாந்தன் என்றால் என்ன ஊரவன் பிள்ளை செத்தவரை விடுதலைபாடி தன்பிள்ளை களம் கேட்க சுயநலாமானால் அது தவறுதான். இதைப்போல்தான் உங்கள் கூச்சலும் கும்மியும்.

கனடாவிலிருந்து தொலைபேசியடித்து உலகத்தமிழர் பத்திரிகையில் கவிதையைப் போடச்சொல்லும்படி சான்றிதழும் அனுமதியும் பெற்றுக்கொள்ளும் செல்வாக்கப்படைத்தவர்களிடம் முற்றத்துக் கவிஞனின் மூர்க்கம் இருப்பதில் வியப்பதற்கு ஏதுமில்லை.

உங்களுக்கான பிரச்சனை என்னவென்பதை உங்கள் ஆவேசக்குரலால் உங்களால் மட்டும் முடிந்த உரத்தகுரலில் முற்றக்கவிஞனுக்கு பா புனைந்தாயிற்று….இனி சாமரம் தான் மிச்சம்…..

ஐயோ தாயே நீங்கள் அரியாசனத்தில் நின்று கொடியுந்தும் கண்ணகை தெய்வம் நாங்கள் நெருப்பில் எரிய வரவில்லை. இந்த உங்கள் ஆவேசம் இன்னும் சிலகாலத்தில் புஸ்வாணமாகும்.

குழந்தைப்போராளிகளை மகிந்தவின் மடிக்குள் வைத்துப்பார்க்க நீங்கள் விரும்பினால் ஒன்றும் செய்ய முடியாது. உங்கள் வாய்வீரத்தினுள் அவர்களுக்கு வாழ்வில்லை என்பது மட்டும் புரிகிறது.

உங்கள் எழுத்துமூலம் உங்கள் நிதானத்தைப் புரிந்தபின் அந்தக்குழந்தைப்போராளிகளை உங்கள் கையில் தந்தால் சாமியே தாங்காதம்மோய்…..

அடடா.... நீங்கள் நிலாந்தனுக்கா தனித்துக் கவிதை எழுதினீர்கள்? அப்படியானால் அதை நிலாந்தனின் தனிமடலுக்குப் போட்டிருக்கலாமே….

அருமையான கண்டுபிடிப்பு. நிலாந்தன் அப்போ உங்கள் ஊர்முற்றத்தைவிட இழிந்த மனிதனாகிவிட்டார்….? நிலாந்தன் உங்கள் வீட்டுக்கொல்லைப்புறத்திலா இணையத் தொடர்பு வைத்திருக்கிறார்…..

உங்கள் வீரம் உங்களுடனும் உங்களுக்கு ஆமாபோடும் சாமிகளுடனும்தான் செல்லுபடியாகும். அதையும் தாண்டி இப்படி வந்து தலைவிரிகோலமாய் நின்றடித்தாலும் சரி கண்ணகியாய் எரித்தாலும் சூடு உங்களுக்குத்தான்.

அந்தச்சாமிகளின் சன்னதமாக நீங்கள் வேப்பிலையின்றி உருவெடுப்பது இதுவரையான தமிழ் அரசியல் பரப்பின் வேகத்தையும் விவேகத்தையும் நன்றாகவே தெளிவுபடுத்துகிறது. நீங்கள் இன்று ஆ…ஓ வென ஒப்பாரி வைத்து இல்லையில்லையென்று மறுப்பவை யாவுமே நாளை தமிழீழ வரலாறாகப்பதியப்படப்போகிறத

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

[

லை. இந்த உ

இப்போது நாம் பேசவில்லையென்றால் பேச முடியாதவர்களுக்காகப் பேச யாருமே இருக்கமாட்டார்கள். அவர்கள் சிறு பான்மையினராக இருந்தாலும் சரி, ஒதுக்கப்பட்டவர்களாக இருந்தாலும் சரி, பழிவாங்கப்படுபவர்களாக இருந்தாலும் சரி.

அனுபவத்தில் என்னை மிக அதிகமாகப் பாதித்தவர் ஜெர்மானிய ஆன்மிகவாதி மார்ட்டின் நெமில்லர். அவர் இளம் பிராயத்தில் யூதர்களுக்கு எதிரானவராகவும் ஹிட்லரை மிகவும் மதிக்கிறவராகவும் இருந்தார். நாஜியிசம் ஜெர்மனியை முழுமையாகக் கைப்பற்றிய போதுதான் நாஜியிசம் என்றால் என்ன என்பதை அவர் உணர்ந்தார். ஹிட்லர் யூதர்களை மட்டும் வெளியேற்றவில்லை, மாற்றுக் கருத்துக்கொண்ட எல்லோரையும் ஒழிக்க வேண்டும் என்று நினைத்தார். நெமில்லர் பிறகு பேசத் தொடங்கினார். அந்தக் குற்றத்துக்காக அவர் 1937இலிருந்து 1945 வரை சாச்சென்ஹௌசன் மற்றும் டாச்சௌ வதை முகாம்களில் அடைக்கப்பட்டார். கிட்டத்தட்ட கொல்லப்பட்டார். நெமில்லர் எழுதிய ஒரு கவிதையை நான் என் பதின்பருவங்களில் முதன்முறையாகப் படித்தேன். எனது மனத்திலிருந்து அது இப்போதும் விலகவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மார்ட்டின் நெமில்லர் ஒரு நேர்மையானவர்.அவர் கிட்லர் உயிருடன் இருக்கும் போது இந்திரன் சந்திரன் என்று போற்றிக் கவிதை

எழுதி பொன்னும் பொருளும் பெற்றுவிட்டு அவர் மறைந்த பின்னால் இவரை விமர்சிக்கவில்லை.

நெமில்லர் கிட்லர் உயிருடன் இருந்தபோதே அவரை விமர்சித்து சிறை சென்றார். அந்த கருத்து நேர்மை தலைவணங்க கூடியது.

ஆனால் தலைவரை போற்றிப் பாமாலைகளை மே மாதம் 17ம் திகதிவரை செய்து அதற்கூடாக தன்னை ஒரு பெண்புலியிலும்

பெரும் புலியாக புலத்தில் புளுகித் திரிந்துவிட்டு அவர் மறைந்த பின்னர் அவரை விமர்சிக்கும் கருத்து மஞ்கள் பத்திரிகைகாரிக்கு

உரியது.

சரி இப்போதுதான் தலைவரை இவர்களுக்கு புரிந்திருக்கு என்றால்...இப்போது இவர்கள் தலையில் வைத்திருக்கும்

சட்டத்தரணி உருத்திகுமாரையும் நாளைக்கு அவரைப் பற்றியும் இப்போதுதான் புரிந்திருக்கு என்று சொல்லி கவிதையில் பேசி

எழுதமாட்டார்களா???

ம்ம்ம்ம்....இதுகள் எழுதி .....

இப்போது இன்னும் தலைவரின்மேல் உள்ள விருப்பு கூடியுள்ளது எமக்கு. ஏனென்றால் இதுகள் எல்லாம் பொய்மை என்பதை அறிந்து

அன்றே அவன் சந்திக்க மறுத்தர்னே அதற்காக. :unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மார்ட்டின் நெமில்லர் ஒரு நேர்மையானவர்.அவர் கிட்லர் உயிருடன் இருக்கும் போது இந்திரன் சந்திரன் என்று போற்றிக் கவிதை

எழுதி பொன்னும் பொருளும் பெற்றுவிட்டு அவர் மறைந்த பின்னால் இவரை விமர்சிக்கவில்லை.

நெமில்லர் கிட்லர் உயிருடன் இருந்தபோதே அவரை விமர்சித்து சிறை சென்றார். அந்த கருத்து நேர்மை தலைவணங்க கூடியது.

ஆனால் தலைவரை போற்றிப் பாமாலைகளை மே மாதம் 17ம் திகதிவரை செய்து அதற்கூடாக தன்னை ஒரு பெண்புலியிலும்

பெரும் புலியாக புலத்தில் புளுகித் திரிந்துவிட்டு அவர் மறைந்த பின்னர் அவரை விமர்சிக்கும் கருத்து மஞ்கள் பத்திரிகைகாரிக்கு

உரியது.

சரி இப்போதுதான் தலைவரை இவர்களுக்கு புரிந்திருக்கு என்றால்...இப்போது இவர்கள் தலையில் வைத்திருக்கும்

சட்டத்தரணி உருத்திகுமாரையும் நாளைக்கு அவரைப் பற்றியும் இப்போதுதான் புரிந்திருக்கு என்று சொல்லி கவிதையில் பேசி

எழுதமாட்டார்களா???

ம்ம்ம்ம்....இதுகள் எழுதி .....

இப்போது இன்னும் தலைவரின்மேல் உள்ள விருப்பு கூடியுள்ளது எமக்கு. ஏனென்றால் இதுகள் எல்லாம் பொய்மை என்பதை அறிந்து

அன்றே அவன் சந்திக்க மறுத்தர்னே அதற்காக. :unsure:

அண்ணே இதுகளையெல்லாம் வாசித்தால்தான் கடுப்பு. நக்கி நக்கியே பிழைப்பு பார்த்து பழகிவிட்டது இந்த கூட்டம். உடலையே விற்று பிழைக்க வெளிக்கிட்ட இதுகளுக்கு மானம் வெறும் சுமை. யார் எழுதியிருக்கிறார் என்று பார்த்தாலே போதுமு; என்ன எழுதியிருக்கும் என்று தெரியும்தானே பிறேகேன் வாசிப்பான்.

Link to comment
Share on other sites

4 4 பிறாவோ,

நீங்கள் யாரென்பதும் எனக்குத் தெரியாது, தெரிய வேண்டிய தேவைப்பாடோ இல்லை, ஆயினும் ஒரு தோழனாய் எழுதுகின்றேன். உஙகள் கருத்து எதுவாயினும் பண்பாக எழுதுங்கள். உங்களுடைய வார்த்தைப் பயன்பாடு தவறாக இருக்கின்றமையினால் உங்களின் கருத்துக்கள் பல அடிபட்டுப் போய் விட்டன. உங்களுடய தனிப்பட்ட பிரச்சினகளை இங்கே கொண்டு வருவது நல்லதல்ல. உங்களுக்கு சாந்தி யார் என்பது தெரிந்து இருக்கலாம். ஆனால் அவவுக்கு உங்களை யாரென்று தெரியாது. நீங்கள் தனிப்பட சாந்தியை விமர்சிப்பதென்றால் உங்கள் சொந்த அடியாளத்தில் வர வேண்டும். நன்றி.

அன்புடன்,

ராசராசன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னவொரு அவ நம்பிக்கைதரும் வரிகள்....

தன் நம்பிக்கையும் இழந்து மற்றவர்களின் நம்பிக்கையையும் சிதைக்கும்படி அமைந்த இந்தச் சிந்தனையை எங்கள் மண்மீட்புக்காக உயிர் நீர்த்த அந்தமாவீரர்களின் ஆன்மாக்கள் என்றுமே மன்னிக்கப்போவதில்லை....

எவ்வளவு பொறுப்புக்களை எங்கள் கைகளில் விட்டுப் போயிருக்கும் அந்த வீரர்களுக்கு நான் செய்யும் நன்றிக்கடனா இது?

போரின் இறுதி நாட்களில் உலக வீதிகளில் எத்தனை கஸ்ரங்களைத் தாங்கி இரவு பகல் பாராமல் வீதிகளில் நின்ற அந்த மக்கள் தாயக உறவுகளைக் காப்பாற்றும் படி அழுது புலம்பியது எல்லாம் எதற்காக? ஆனாலும் உலகம் கைவிட்ட பின்னும் இன்னமும் இறந்த உயிர்களுக்காக, எங்கள் மாவிரர்களின் தியாகங்களுக்காக உலக நாடுகளின் கண்கள் இனியும் திறக்காதா என்ற ஏக்கத்துடன் வீதியில் போராடும் மக்களின் நம்பிக்கையை சிதைக்கும் பிடி ஏன் இந்த அவ நம்பிக்கையுள்ள வார்த்தைகள்...?

இது தமிழரின் சுதந்திரப் போராட்டகாலம் ஒவ்வொரு தமிழ் எழுத்தாளர்களும் தமிழருக்கு நம்பிக்கையூட்டும் படி எழுதவேண்டுமென்று களக்தில் நின்ற கவிஞன் புதுவை இரத்தினதுரை சொன்னதை கேட்டுமா மக்களின் தன்னம்பிக்கையூட்டும் வரிகளை எழுதும் கவிஞர்களை பேசுவது...! இப்படியான சிந்தனையோட்டம் இந்த நேரத்தில் தேவையா?

காவியன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சகாரா

உங்களது வீராவேசக்கவிதைகள் நன்றாயிருக்கின்றன.

//காலத்திற்குக் காலம் இழப்புகளால் எங்கள் வளர்ச்சி அதிகரித்ததே அல்லால் குறையவில்லை//

இந்தவரியை ஏதாவது முகாமில் இருக்கிற சனத்துக்குச் சொல்லிப்பாருங்கள். உங்களுக்கு பச்சை மட்டை அடி நிச்சயம்.

---

அங்கிருக்கிற ஒட்டுமொத்த மக்களும் இனி ஆயுதபோர் எமக்கு வேண்டாம் என்றால் அடுத்ததாய் நாங்கள் என்ன செய்யலாம் என நீங்கள் நினைக்கிறீர்கள்.?

தன்ர குடும்பத்தையே இழந்து நிற்கிற ஒருவனிடம்.. ம்ம்.. இப்பிடியான இழப்புக்களால்தான் நமது போராட்டம் வீரியம் பெறும். பெற்றது என்று சொன்னால்..

என்ன நடக்கும் என்றதை நீங்களே கற்பனை செய்து கொள்ளுங்கள். நான் ரண்டு மூன்று பேரிடம் பேசிய வரை உங்களை கடித்தே கொன்றுவிடுவார்கள்.

காவடி உங்கள் கேள்வியோடு இருக்கும் இதரவிடயங்களுக்கு கீழ்வரும் ரவி இந்திரனின் பதிவில் பதில் இருக்கிறதா என்று பாருங்கள்.

வணக்கம் வல்வை சகாரா அக்கா,

உங்கள் கவிதைக்கும் சக உறவுகள் கருத்துக்கும் என் கருத்தாக நிறைய எழுத வேண்டி இருக்கு....

எனக்கு நேரம் கிடைப்பது மிக அரிது தாமதத்திற்கு மன்னிக்கவும்

உங்கள் கவிதை அருமை ஆனாலும் நன்றியோ பாராட்டோ தெரிவிக்க விரும்பவில்லை. ஏனெனில் நம்பிக்கையையும் விடுதலை வேட்கையையும் விதைப்பது ஒவ்வொரு கலைஞனினதும் கடமை.

(உதாரணத்திற்கு போராட்டம் மிகப்பெரும் சவாலையும் மனிதப்பேரழிவையும் சந்தித்துக்கொண்டிருந்த மே மாத தொடக்கத்தில் ஒரு போராளியுடன் பேசும் சாத்தியம் கிடைத்தது. அப்போது பின்னணியில் குண்டுச் சத்தங்களுக்கு மத்தியில் தாயகக் கவிஞர் புதுவை இரத்தினதுரையின் கவிதை ஒன்று ஒலித்துக் கொண்டிருந்தது. என்ன அண்ணா இந்த நேரத்தில் கவிதை எனக் கேட்டேன். அதற்கு “ அண்ணை எங்களுக்கு காயத்திற்கு மருந்து சாப்பாடு இரத்தம் எல்லாமே இப்ப இதுதான் தருது என்றார். கவிதையின் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய விடயம் இது. கவிதைக்கு பெருமை சேர்க்கின்ற விடயம். உலகப்போரியல் வரலாற்றில் விடுதலை வேண்டி போராடும் இனங்களின் வரலாற்றில் அந்தக் கவிதை சிகரம்.

ஆனால் துரதிஸ்ட வசமாக அந்தக்கவிதை இன்னும் வெளிவரவில்லை. அந்தக்கவிதை குறிப்பிட்ட போராளிகளை இன்னும் சாதிக்கவைத்தது. நம்பிக்கையை அதிகமாக்கியது. இராணுவ முற்றுகையை உடைத்த அந்தப்போராளிகள் தற்போது உயிருடன் உள்ளார்கள்.

ஆகையால் அந்தக் கவிதை வெளி உலகிற்கு வரும்.)

சாத்தியம் சாத்தியம் இன்மை பற்றி வட்டமேசை போடவும் அங்கே தவறு இங்கே தவறு என்று மேடைபோட்டு முழங்கவும் நாங்கள் ஆய்வாளர்களோ அரசியல்வாதிகளோ அல்ல.

இன்னும் சொல்லப்போனால் போராட்டம் முன்னேற்றம் கண்ட காலத்தில் பெற்ற தாயை இரத்த உறவுகளை விட தமிழீழத்தாய் மண்ணின் விடுவு மட்டுமே கண்களுக்கும் உணர்வுக்கும் தெரிந்த அந்த அப்பழுக்கற்ற தமிழ்த்தாய் மைந்தர்கள் போல் போராட்டம் பின்னடைவைக் கண்டிருக்கும் இந்தக் காலத்தில் நம்பிக்கையையும் விடுதலை வேட்கையையும் இன்னும் இன்னும் அதிகமாய் விதைக்கும் அப்பழுக்கற்ற எழுத்துப்போராளிகள் நிறையத் தேவை.(யாழ் களத்தைப் பார்க்கும் போதே புரிகிறது)

ஏனெனில் இன்றைய நிலையில் எதிரிகளும் துரோகிகளும் தமிழரின் நம்பிக்கையையும் விடுதலை வேட்கையையும் சிதைக்கும் கருத்து யுத்தத்தை தீவிரப்படுத்துகின்றார்கள். நாங்களும் எங்கள் பணியை தீவிரப்படுத்துவோம். எதிரிகளையோ துரோகிகளையோ கண்டு அஞ்சத்தேவையில்லை அவரவர் கடன் அவரவர் பணி செய்து கிடப்பதே ஆகும். ஆகவே எல்லோரு தொர்வோம்.

உதாரணத்திற்கு “இன்னுமொரு மில்லர் பிறப்பான் அவன் முன்னைவிட பெரிதாய் வெடிப்பான்” என்று எழுதினால் அது கற்பனை பண்ணுவதாயோ உசுப்பேத்தி விடுவதாயோ அர்த்தம் ஆகாது.

தேவையேற்படின் அந்த இன்னுமொரு மில்லர் நானாக தயாரான பின்னரே அப்படி எழுதுகின்றேன். (எனக்கு யாரும் மண்டையை கழுவவும் இல்லை. எனக்கு வாழ கஸ்டமும் இல்லை. சிறு வயதில் இருந்தே சுகபோகமாய் வெளிநாட்டில் வாழும் பல்லாயிரம் இளைஞர்களில் நானும் ஒருவன் அவ்வளவுதான்)

அத்துடன் மாவீரர் பட்டியலிலும் முகம்தெரியாக் கரும்புலிகள் பட்டியலிலும் வெளிநாட்டில் பிறந்தவர்கள் அல்லது வாழ்ந்தவர்களி;ன் பெயர்கள் உள்ளன. யார் எதை அழித்தாலும் தமிழீழ ஆண்மாவின் வரலாறு நிச்சயம் பதியப்படும். அப்போது பெயர்கள் வெளிவரும்.

புரட்சிகள் கண்டம் கடந்தும் தேசம் கடந்தும் நடந்தது வரலாறு. புரட்சியின் சரித்திரம் சாய்ந்ததில்லை அது புது வழி காணாமல் ஓய்ந்ததில்லை. நாங்களும் நிச்சயம் வழி காணுவோம். யூதர்கள் போல் ஊர்மனையேறியே உறங்குவவதாய் சபதம் எடுப்போம்.

மாறிவரும் உலக சூழலுக்கேற்ப காய் நகர்த்த வேண்டும் என்பது உண்மை. அவலத்தை தந்தவனுக்கே அதை திருப்பிக்கொடு என்ற தகவல் ஒவ்வொரு தமிழனின் மரபணுவிலும் பொதிந்து கிடக்கம் பரம்பரைச்செய்தி என்பதும் உண்மை.

என் சொந்தங்கள் ஐம்பத்தி எட்டுப்பேரை பேரினவாத யுத்தம் தின்றுவிட்டது. இன்னும் நூற்றி அறுபத்தி எட்டுப்பேர் முகாமுக்குள்ளும் சிறைக்குள்ளும்

இன்றைய செய்தியாக

இரண்டு கால்களையும் இழந்த பல்கலைக்கழகத்திற்கு தெரிவுசெய்யப்பட்ட மாணவனுக்கு பல்கலைக்கழகம் செல்ல அனுமதி மறுப்பு

ஈர நிலத்தில் அமர்ந்து புலமைப்பரிசில் பரீட்சை எழுத வேண்டிய நிலையில் ஐந்தாம் ஆண்டு மாணவர்கள்

தங்களை அறியாமலேயே கர்ப்பமாகியிருக்கும் சிறப்பு முகாம்களில் அடைக்கப்பட்டிருக்கும் தமிழச்சிகள்.

சீழ்ப்பிடித்த சித்திரவதைக்காயங்களால் மடியும் சிறப்பு முகாம் தமிழ்ர்கள்

இப்படி நீள்கிறது... சிங்களப் பேரினவாதம் தமிழினத்தின் ஆண்மாவில் ஏற்படுததும் ஆழமான காயங்கள். இவை என்றுமே ஆறிவிடவோ மாறிவிடவோ போவதில்லை.

ஆகையால் நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை எதிரியே தீர்மானிக்கின்றான். (மாறாக ஆய்வாளப்பெருந்தகைகளோ கருத்துக் கந்தசாமிகளோ அல்ல)

மானத்தமிழினத்தின் தலைவன் சொன்னதிலிருந்து ” எனது மக்களிற்கான தீர்வை சர்வதேசத்திடமும் வரலாற்றிடமும் விடுகின்றேன்”

இது சர்வதேசம் தீர்ப்புச் சொல்ல வேண்டிய காலம். தவறினால் வரலாறு நிச்சயமாக தீர்ப்புச்சொல்லும். ஆனால் அதற்கு நாங்கள் விதைக்க வேண்டியது நம்பிக்கையும் விடுதலை வேட்கையும் அன்றி சாத்தியம் சாத்தியம் இன்மை பற்றிய ஆய்வுகளோ சரி தவறு பற்றிய வாதப்பிரதி வாதங்களோ அல்ல.

சகாரா அக்கா

எங்கள் போராட்ட வரலாற்றை பேணிப் பாதுகாக்கவும் நம்பிக்கையையும் விடுதலை வேட்கையையும் விதைக்கவும் உங்களுக்கு முன்னால் விளங்கும் ஒளிபொருந்திய கண்களையும் உணர்ச்சி மிக்க இதயங்களையும் பயன்படுத்துவது தவறில்லை.

Jun 27 2009, 02:43 PM Post #1

“விடுதலை” செய்யுங்கள்

புல்லோடும் புயலோடும்

கல்லோடும் கடலோடும்

பேச முடிந்த

கவிஞர்களே!

என்ன திடீர் மௌனம்

உங்களுக்குள்ளே?

புயலுக்கு முந்தியதா?

பிந்தியதா?

என

உங்கள் மௌனங்களுக்கு

உங்களுக்குள்ளேயே ஆராய்ச்சியா?

நல்ல கதை.

புயல்களை

புதிது புதிதாய்

பிறப்பிப்பதே

நீங்கள்தானே.

நீங்களே தூங்கினால்

நாளைய பொழுதுகளின்

நம்பிக்கையை

யார் கொடுப்பது?

நீண்ட இரவுகளின்

இராச்சியத்திற்கு

உங்கள் இமைகளை

அனுமதிக்காதீர்

கசியும் உங்கள்

கண்களைத் துடையுங்கள்

கடலலை மோதும்

ஒவ்வொரு கரைகளுடனும் பேசுங்கள்

முள்ளிவாய்க்காலில்

சாட்சி இன்றி நடந்த யுத்தத்தை

சாட்சியுடன் எழுதுங்கள்

காற்றில் தவழும்

அத்தனை அலைகளுடனும்

உரையாடுங்கள்

கஞ்சிக்கு உயிர் விலை

கொடுத்ததையும்

காற்றே களவாடப்பட்டு

கந்தகமும் பொசுபரசும்

பரிசளிக்கப்பட்டதையும்

மருந்துக்கு

மண் அள்ளிப் போட்டதையும்

பெற்றதாய் மார்பில்

செத்தபின் பால்குடித்த

துயரத்தையும்

என

எங்கள் துயரத்தை

எங்கள் நியாயத்தை

எங்களுக்கு இழைக்கப்பட்ட

கொடுமைகளை

நீதிக்கு இழைக்கப்பட்ட

அநீதியை

மொத்தமாய்

பதிவுசெய்யுங்கள்

இலக்கு

தெளிவாய் தெரியும்

விடுதலைப்பயணத்தில்

இருள் என்று ஒன்று இல்லை.

இருப்பின்

அதன் பெயர்

குறைந்த வெளிச்சம்

என்று

உங்கள் கவிதைகள்

தீக்குச்சி கிழிக்கட்டும்

கேளுங்கள் தரப்படும்

தரப்படாவிட்டால்

தரும்வரை கேளுங்கள்

தட்டுங்கள் திறக்கப்படும்

திறக்கப்படாவிட்டால்

திறக்கும் வரை தட்டுங்கள்

என்று

மக்களுக்கு மனனஞ்செய்யட்டும்

உங்கள் கவிதைகள்

கவிஞர்களே!

தயவு செய்து

உங்கள்

மௌனங்களை உடையுங்கள்

செத்த கவிஞர்கள்

கடமையையும்

நீங்கள் தான் செய்யவேண்டும்

பிறக்க இருந்து

இறந்த கவிஞர்களையும்

நீங்கள் தான்

உருவாக்க வேண்டும்

அவர்கள்

எழுத நினைத்தவற்றையும்

நீங்கள் தான்

எழுதவேண்டும்

அவர்கள்

தொடக்கிவைத்தவற்றையும்

நீங்கள்தான்

முடிக்கவேண்டும்

புறப்படுங்கள்

தூரங்களும்

இதயங்களும்

சுருங்கிப்போன உலகில்

உங்கள் கவிதைகள்

காவியங்களாய் ஊடுருவட்டும்

புயல்களை எதிர்பார்க்க

பூகம்பங்களை எதிர்கொள்ள

ஓவ்வொரு தமிழனுக்கும்

கற்றுக் கொடுங்கள்

அதோ

தொலைவில்..

“போர் இன்னும் ஓயவில்லை

எங்கள் தமிழ் ஈழமண்ணில்….”

ஒரு கவிஞன் உடைத்த

மௌனம் பேசுகிறது

“நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்

நாட்டின் அடிமை விலங்கு தெறிக்கும்…”

இன்னொரு கவிஞனின்

நம்பிக்கை பேசுகிறது.

எங்கே

நீங்களும்

உங்கள்

மௌனங்களை உடையுங்கள்

உடைக்கும் போது

மறக்கவேண்டாம்

நம்பிக்கையையும்

விடுதலை வேட்கையையும்

விதைப்பதற்கு

அன்பானவர்களே!

உங்கள் பேனாக்கள்

துளித்துளியாய்

கரையட்டும்

வார்த்தைகள்

தீப் பொறியாய் வீழட்டும்

அதுவே

தமிழர் மனங்களில்

உலகின் திசைகளில்

ஈழ விடுதலைப் பெருந்தீயை

அணையாது எரிக்கட்டும்.

எங்கள் பணி நாங்கள் தொடர்வோம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காவடி உங்கள் கேள்வியோடு இருக்கும் இதரவிடயங்களுக்கு கீழ்வரும் ரவி இந்திரனின் பதிவில் பதில் இருக்கிறதா என்று பாருங்கள்.

பதில் இல்லை. வெளிநாட்டில் சுகபோகங்களோடு வாழ்ந்துவிட்டு மில்லர் ஆகிச் சாகிறேன் என முடிவெடுப்பதற்கும் எல்லாப்பக்கமிருந்தும் நிறையப்பட்டு நொய்ந்து போயிருக்கும் சனங்களில் ஒருவர் மில்லராகிச்சாவேன் என்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது.

முன்னவரால் சொல்ல முடியும். பின்னவர்கள் செய்தும் காட்டியவர்கள்.

--

இதில் நிறைய வாக்குவாதப்பட ஏதுமில்லை. நான் நினைப்பது சரியானால்.. அந்தரித்த சனங்களே உங்களுக்குச் சொல்லுவார்கள். ப்ளிஸ்.. எங்களை வாழவிடுங்கோ என்று. அடிமையோ குடிமையோ .. உயிர்வாழ விடுங்கள் என்று..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அடிமையின் எண்ணம் எப்போது அடிமையாய் வாழ்வது பற்றியதாகவே இருக்கும். முகாமிலிருக்கும் இருக்கும் ஒரு சாராருடன் தான் நீங்கள் பேசுகின்றீர்கள் என்று நினைக்கின்றேன். ஆனால் அதற்க்கும் ஒரு மறுபக்கம் இருக்கின்றது. இளைஞர், யுவதிகளை கேட்டுப்பாருங்கள். மரநிழலில் ஒவ்வொரு மணித்தியாலமும் நிழல்கள் மாறும் திசை நோக்கி நகர்ந்த படியே நாலு திசையேகிலும் ஆயதப்படையுடன் பள்ளிக்குச் செல்லும் ஒரு சிறுவனை கேட்டுப்பாருங்கள். அவன் கண்டிப்பாக பதில் சொல்லுவான்.

நாமும் ஏதோ ஒரு விதத்தில் முகாமோடு நெருங்கிய தொடர்பில் இருக்கின்றோம் நண்பரே! குறிப்பாக நீங்கள் பேச வேண்டிய பலர் zoon-4 இருக்கின்றனர். ஆற்றங்கரையினில் அமைந்த அந்த முகாம் பற்றி நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. நீங்கள் காட்சிகளாக கூட பார்த்திருப்பீர்கள்.

இந்த வாழ்வு வாழும் மக்கள் கண்டிப்பாக அடிமை வாழ்வைத் தெரிவு செய்ய நினைக்கவில்லை சந்தர்ப்ப கூ+ழல் அவர்கள் மீது அடிமை வாழ்வை திணித்துள்ளது. அவர்களை சூழ்ந்துள்ள அடிமை விலங்கு உங்களை போன்றவர்களால் நிச்சயம் உடை படப்போவதில்லை.

எனவே! முயன்று பாருங்கள் ஆனால் முடியாது விட்டு விடு என்று மற்றவனுக்கு அறிவுரை கூறாதீர்கள் ஏன் எனில் உங்களால் முடியாத ஒன்றை எவனோ ஒருவன் செய்தே ஆக வேண்டும் இது யதார்த்தம்...!

நேற்று போற்றி இன்று தூற்றும் எழுத்தாளர்கள் நாளை போற்றுவார்கள் அது நாள் வரை காத்திருப்போம்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அண்ணர்.. அடிமை வாழ்வை யாரும் விரும்பி ஏற்பதில்லை. அது திணிக்கப்பட்ட அவல நிலையென்றதிலும் சந்தேகமில்லை. ஆனால் அடிமைவாழ்வுக்கெதிரான போரில் என்னை மறைத்துக்கொண்டு இன்னொராளை ஏவுகற காவாலித்தனம் என்னிடமில்லை.

வன்னி மக்கள் புலம்பெயர்ந்தவர்களைப்பார்த

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

4 4 பிறாவோ,

நீங்கள் யாரென்பதும் எனக்குத் தெரியாது, தெரிய வேண்டிய தேவைப்பாடோ இல்லை, ஆயினும் ஒரு தோழனாய் எழுதுகின்றேன். உஙகள் கருத்து எதுவாயினும் பண்பாக எழுதுங்கள். உங்களுடைய வார்த்தைப் பயன்பாடு தவறாக இருக்கின்றமையினால் உங்களின் கருத்துக்கள் பல அடிபட்டுப் போய் விட்டன. உங்களுடய தனிப்பட்ட பிரச்சினகளை இங்கே கொண்டு வருவது நல்லதல்ல. உங்களுக்கு சாந்தி யார் என்பது தெரிந்து இருக்கலாம். ஆனால் அவவுக்கு உங்களை யாரென்று தெரியாது. நீங்கள் தனிப்பட சாந்தியை விமர்சிப்பதென்றால் உங்கள் சொந்த அடியாளத்தில் வர வேண்டும். நன்றி.

அன்புடன்,

ராசராசன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ராசராசன் அண்ணா.. உங்களுடைய தோழமையான வார்த்தைகளுக்கு நன்றிகள். உங்களுக்கு என்னை தெரியாதது பொலவே எனக்கும்

உங்களை தெரியாது. ஆயினும் தோழமையுடனும் நேர்மையுடனுமான உங்களின் கருத்துக்கு பதில் தருவது தேவையானது.

1. பண்பாட்டுடன் எழுதச் சொல்லியிருக்கிறீர்கள். இதையே சாந்திக்கும் பிறிதொரு இடத்தில் நீங்கள் எழுதி இருப்பதால் உங்களின்

நடுநிலைத் தன்மை எழுத்தில் தெரிவதால் உங்களுக்கு பதில் தர வேண்டிய சத்தியநிலைக்கு என்னைத் தள்ளியிருக்கிறீங்கள்.

அண்ணா..பண்பாட்டுடன் சொல்லப்படாத ஒரு குரூரமான விடயத்துக்கு எப்படி பண்பாட்டுடன் பதில் சொல்லி புரிய வைக்கமுடியும்.

'ட்ரொஸ்க்கிக்கும் யோசப் ஸ்டாலினுக்கும் நடந்த பாட்டாளிப் புரட்சியை ஒரு நாட்டுடன் மட்டுப்படுத்துவதா இல்லை அகிலம்

முழுவதற்கும் கொண்டு செல்வதா? போன்றதைப் போன்ற கருத்தாடல்களிலும்

'மென்சிவிக்குகளுக்கும் போல்சிவிக்குகளுக்கும் சோவியத் புரட்சிக்கு முன்னான பொழுதுகளில் நடைபெற்ற

:புரட்சியில் பூர்சுவாக்களின் பங்கு: என்பது போன்ற விவாதங்களிலும்

'பின்நவீனத்துவத்தை யார் அதிகம் கைக்கொள்ளுவது என்ற 'மனுஸ்யபுத்திரனுக்கும் காலச்சுவடு கண்ணனுக்குமான

பங்கு பற்றியும் எழுதவும் கருத்தாடல் செய்ய முயற்சிக்கவும் எங்களுக்கும் விருப்புத்தான். ஆனாலும்

எத்தகைய முகாந்திரமும் இல்லாமல் தாங்கள் போற்றிப் பாடல் பாடும்போது சேர்ந்திருந்த நாங்கள் அவர்கள் தூற்றல்

பாடல் எழுதும்போது எதிர்ப்புக் குரல் கொடுத்தால் சன்னதம் கொள்ளும்போது எப்படி பண்ணாட்டு வார்த்தைகளை

பொறுக்கி எடுத்துக் கொண்டிருக்க முடியும்??

2 .எனக்கும் சாந்திக்கும் எந்தவிதமான தனிப்பட்ட பிரச்சனைகளும் கிடையாது.இரண்டு நாட்களுக்கு முன்னர்தான் சாந்தி எழுதிய

'ஐயோ..என்ரை பிள்ளை அம்பேபுஸ்ஸாவில்' என்ற கதைக்கு பாராட்டி ஒரு கருத்து எழுதியிருந்தேன். பாருங்களேன்.

சாந்தி மட்டுமல்ல என்னுடைய சொந்த சகோதரன் இத்தகைய கருத்தை எழுதியிருந்தாலும் என்னுடைய எதிர்வினை இப்படித்தான்

இருந்திருக்கும்.

அண்ணா.. உங்களைப் போன்ற மானுடவிடுதலையை நேசிப்பவர்களுக்கு இந்த கருத்தாடலும் அதன் சொற்பிரயோகமும்

விடுதலையின் மீதான அசையாத பற்றின் மீது சிறு சலனத்தை ஏற்படுத்தி இருந்தாலும் அதற்காக வருந்துகிறேன்.

ஆரம்பம் என்னுடையது இல்லாத படியால் நானாக முடிக்க மாட்டேன்.

Link to comment
Share on other sites

முதலில் அவர்கள் யூதர்களுக்காக வந்தார்கள்.

அப்போது நான் பேசவில்லை, ஏனெனில் நான் யூதன் அல்ல.

பிறகு அவர்கள் கம்யூனிஸ்டுகளுக்காக வந்தார்கள்.

அப்போதும் நான் பேசவில்லை, ஏனெனில் நான் கம்யூனிஸ்ட் அல்ல.

பிறகு அவர்கள் தொழிற்சங்கவாதிகளுக்காக வந்தார்கள்.

அப்போதும் நான் பேசவில்லை, ஏனெனில் நான் தொழிற்சங்கவாதி அல்ல.

பிறகு அவர்கள் எனக்காக வந்தார்கள்.

அப்போது எனக்காகப் பேசுவதற்கு எவரும் இருக்கவில்லை.

சகாரா மன்னிக்கவும். உங்களுக்கு இனி கருத்து எழுதுவதில்லையனெ்றதன் பின்னர் உங்கள் பெயரை நான் இக்கருத்தில் சேர்ப்பதற்கு.

சாகரா நான் எழுதிய விடயத்துக்கு தனது தரப்பில் ஆவேசப்பட்டு தொடர்ந்து எழுதிய கருத்துக்களுக்காகவே நெமில்லரின் கவிதையை இணைத்தேன். அடியில் இது சகாராவுக்காக எனவும் குறிப்பிட்டுத்தான் போட்டிருந்தேன்.

சகாரா நான் எழுதிய விடயத்தில் ஊர்முற்றத்துக்கவிஞனை முன்னிறுத்தித்தான் கண்ணகியாய் நெருப்பெடுத்திருந்தார். அந்தக்கவிஞனுக்கு சகாரா நெமில்லர் போல் தான் விசுவாசமாக இருப்பதான தொனியில் தனது கருத்துக்களை எனக்கு எழுதியிருந்தார். அதற்காகவே அக்கவிதை இங்கு பதியப்பட்டது.

ஆனால் இதனை இங்:கு சிலர் தலைவர் பிரபாகரன் மீது கொழுவிவைத்து பார்த்து என்னோடு மல்லுக்கு நிற்பதற்கு நான் எதுவுமே செய்ய முடியாது.

தலைவர் பிரபாகரன் யாருக்கு வேணுமானாலும் சர்வாதிகாரனாயோ அல்லது கறுப்பு வெள்ளைக் கனவாயோ இருக்கட்டும். என்வரையில் கடவுளுக்கு நிகரானவன் தலைவர் பிரபாகரன். அந்தத்தலைவனே இன்று கதைக்கவும் பேசவும் முனைப்புத்தந்த முகம். அவரைப் பார்த்து அருகிருந்து பலருக்குக் கிடைத்த துணிச்சல் அவரைப்படித்து அவரை நேசித்ததால் கிடைத்தது.

ஒவ்வொருவரும் தமக்கு ஏற்ற வகையில் அர்த்தப்படுத்தி நீதவான்களாகி வந்து போகட்டும். எதற்கு யாருக்கு எழுதப்பட்டது என்பதைப் புரிந்து கருத்தாளர்கள் கருத்தாடினால் கருத்தாட நானும் ஓம்தான்.

இப்பகுதியில் சொறிகின்ற சோழன் மற்றும் four four bravoஆகியோருக்கு உங்களுக்குத் தெரியாத பலவிடயங்கள் என்னைப்பற்றி இன்னும் இருக்கிறது. தேவையாயின் எனது தொலைபேசியிலக்கம் முகவரி இதுதான். Frau. S.V.Ramesh . Hauptstr – 210 , 55743 Idar.Oberstein , Germany. T.P – 0049 6781 70723. நேரில் வரவிரும்பின் வரலாம் அல்லது தொலைபேசியில் ஆயினும் பேசலாம் பேசுங்கள். நான் முகத்தை பலவடிவங்களில் மூடி வைத்து முக்காட்டுடன் இந்தக் களத்தில் எழுதவில்லை. 2001இல் இருந்து ஒரு பெயரில் தான் எழுதுகிறேன். இந்த எட்டுவருடங்களில் இந்தக்களம் ஊடாக பல கருத்தாளர்கள் நண்பர்களாகியிருக்கிறார்கள். அவர்களுடனான நட்பு தொலைபேசியூடாக பலதரம் நேரடி சந்திப்பாகவும் தொடர்ந்து கொண்டு தானிருக்கிறது.

பதில் இல்லை. வெளிநாட்டில் சுகபோகங்களோடு வாழ்ந்துவிட்டு மில்லர் ஆகிச் சாகிறேன் என முடிவெடுப்பதற்கும் எல்லாப்பக்கமிருந்தும் நிறையப்பட்டு நொய்ந்து போயிருக்கும் சனங்களில் ஒருவர் மில்லராகிச்சாவேன் என்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது.

முன்னவரால் சொல்ல முடியும். பின்னவர்கள் செய்தும் காட்டியவர்கள்.

--

இதில் நிறைய வாக்குவாதப்பட ஏதுமில்லை. நான் நினைப்பது சரியானால்.. அந்தரித்த சனங்களே உங்களுக்குச் சொல்லுவார்கள். ப்ளிஸ்.. எங்களை வாழவிடுங்கோ என்று. அடிமையோ குடிமையோ .. உயிர்வாழ விடுங்கள் என்று..

:(:lol: :lol: :lol: :lol:

வணக்கம் சாந்தியக்கா,

உங்கள் ஆதங்கங்கள் ஏற்றுக்கொள்ள கூடியவையே. உங்கள் மனநிலையிலிருந்து சிந்திக்க கூடிய எந்த ஈழத்தமிழனுக்கும் உரிய கோபமே யார் ஏற்றுக்கொள்கின்றார்களோ இல்லையோ இங்கே சில பிரச்சினைகள் இன்றும் உருவெடுத்துக்கொண்டு தான் இருக்கின்றது. மாற்றத்தை காணும் மனப்பக்கும் பலருக்கு இன்னும் வந்து சேரவில்லை. நாங்கள் அழிந்து கொண்டிருக்கின்றோம் என்ற கோபத்தை உங்கள் கவிதை சொல்கின்றது.

இருப்பினும்...

தொடர்ச்சியான எமது விமர்சனங்கள், பின்னடிப்புக்கள், அல்லது குறிப்பிட்டவர்கள் மீதான எதிர்கருத்துக்கள் எதையும் செய்து விடப்போவதில்லை. காலச்சுவடு போன்ற இணையங்கள் காலத்திற்க்கு செய்யும் இந்த இரண்டகம் நிச்சயம் நிவர்த்தி செய்யப்படும். நாங்கள் ஈழத்தமிழர்கள் எமக்கு எம்மை தெரியும், எம் தலைவனைத்தெரியும், எம் போராட்டத்தின் நியாயப்பாடுகள் புரியும்.

ஆதலால்...

நாங்கள் மற்றவர்கள் பற்றிய அக்கறையை விட்டு விடலாம். சர்வதேசத்தை நம்பியும், இந்தியாவையும் நம்பியும் காலம் கடத்துவது கூட இன்றைய காலகட்டத்தில் வெற்று வேலை என்பது எனது கருத்து. நாம் நிழலி சொன்னது போல எம்மை திடப்படுத்த வேண்டும் ஒற்றுமைப்படுத்த வேண்டும். ஆனால் அந்த ஒற்றுமையை சிதைககிறவர்கள் மீது உங்கள் கோபம் நியாயமானது. ஆனால் அதுவே ஆபத்தானது. நாங்கள் உணர்வின் விளிம்பில் நின்று போராடினோம். இன்று ஈழத்தமிழினம் உணர்வுகள் செத்திட ஜடமாகி கிடக்கிறது. அவர்கள் மீது தொடர்ந்து இவ்வாறான கருத்துக்கள் திணிப்பக்கப்படும் போது எதிர்மறை விளைவுகளை நாம் சந்திக்க நேரிடும்.

இது எனது கருத்து மட்டுமே!

நிதர்சன் உங்கள் கருத்துக்கு என்னிடம் குதர்க்கமாய் எதுவுமில்லை. அத்தனையையும் ஏற்றுக்கொள்கிறேன்.

குடும்பத்தையே முள்ளிவாய்க்கால் முனையில் கொடுத்துவிட்டு எங்கே எவர் என்று எதுவுமே அறியமுடியாமல் இருக்கின்ற உங்களுக்கு முன்னால் இந்த உசுப்பல்களை தொடர்ந்து தர முடியவில்லை. மன்னித்துவிடு தோழனே. உனக்கான வார்த்தைகள் ஆறுதலாயிரு என்று சொல்லத்தான் முடிகிறது. அதற்கு மேலாய் இன்னும் போராடென்று பொறியெடுத்துத்தர முடியவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிர்வாகம் பக்க சார்பாக நடாத்தப்படுகிறதா?

கவிதைப்பகுதியில் சாந்தி எழுதிய "விழவிழ எழுதிய வீரவணக்கம் என்னவானது" என்ற தலைப்பின் கீழ் என்னுடைய பதிவைப் போடும் தருணத்தில் நிர்வாகம் அத்திரியை மூடிவிட்டது. இருப்பினும் நான் சொல்ல வந்ததை இங்கு சொல்லிவிடுகிறேன். தயவுசெய்து அகற்ற வேண்டாம்.

முதலில் அவர்கள் யூதர்களுக்காக வந்தார்கள்.

அப்போது நான் பேசவில்லை, ஏனெனில் நான் யூதன் அல்ல.

பிறகு அவர்கள் கம்யூனிஸ்டுகளுக்காக வந்தார்கள்.

அப்போதும் நான் பேசவில்லை, ஏனெனில் நான் கம்யூனிஸ்ட் அல்ல.

பிறகு அவர்கள் தொழிற்சங்கவாதிகளுக்காக வந்தார்கள்.

அப்போதும் நான் பேசவில்லை, ஏனெனில் நான் தொழிற்சங்கவாதி அல்ல.

பிறகு அவர்கள் எனக்காக வந்தார்கள்.

அப்போது எனக்காகப் பேசுவதற்கு எவரும் இருக்கவில்லை.

சகாரா மன்னிக்கவும். உங்களுக்கு இனி கருத்து எழுதுவதில்லையனெ்றதன் பின்னர் உங்கள் பெயரை நான் இக்கருத்தில் சேர்ப்பதற்கு.

சாகரா நான் எழுதிய விடயத்துக்கு தனது தரப்பில் ஆவேசப்பட்டு தொடர்ந்து எழுதிய கருத்துக்களுக்காகவே நெமில்லரின் கவிதையை இணைத்தேன். அடியில் இது சகாராவுக்காக எனவும் குறிப்பிட்டுத்தான் போட்டிருந்தேன்.

சகாரா நான் எழுதிய விடயத்தில் ஊர்முற்றத்துக்கவிஞனை முன்னிறுத்தித்தான் கண்ணகியாய் நெருப்பெடுத்திருந்தார். அந்தக்கவிஞனுக்கு சகாரா நெமில்லர் போல் தான் விசுவாசமாக இருப்பதான தொனியில் தனது கருத்துக்களை எனக்கு எழுதியிருந்தார். அதற்காகவே அக்கவிதை இங்கு பதியப்பட்டது.

ஆனால் இதனை இங்:கு சிலர் தலைவர் பிரபாகரன் மீது கொழுவிவைத்து பார்த்து என்னோடு மல்லுக்கு நிற்பதற்கு நான் எதுவுமே செய்ய முடியாது.

தலைவர் பிரபாகரன் யாருக்கு வேணுமானாலும் சர்வாதிகாரனாயோ அல்லது கறுப்பு வெள்ளைக் கனவாயோ இருக்கட்டும். என்வரையில் கடவுளுக்கு நிகரானவன் தலைவர் பிரபாகரன். அந்தத்தலைவனே இன்று கதைக்கவும் பேசவும் முனைப்புத்தந்த முகம். அவரைப் பார்த்து அருகிருந்து பலருக்குக் கிடைத்த துணிச்சல் அவரைப்படித்து அவரை நேசித்ததால் கிடைத்தது.

ஒவ்வொருவரும் தமக்கு ஏற்ற வகையில் அர்த்தப்படுத்தி நீதவான்களாகி வந்து போகட்டும். எதற்கு யாருக்கு எழுதப்பட்டது என்பதைப் புரிந்து கருத்தாளர்கள் கருத்தாடினால் கருத்தாட நானும் ஓம்தான்.

இப்பகுதியில் சொறிகின்ற சோழன் மற்றும் four four bravoஆகியோருக்கு உங்களுக்குத் தெரியாத பலவிடயங்கள் என்னைப்பற்றி இன்னும் இருக்கிறது. தேவையாயின் எனது தொலைபேசியிலக்கம் முகவரி இதுதான். Frau. S.V.Ramesh . Hauptstr – 210 , 55743 Idar.Oberstein , Germany. T.P – 0049 6781 70723. நேரில் வரவிரும்பின் வரலாம் அல்லது தொலைபேசியில் ஆயினும் பேசலாம் பேசுங்கள். நான் முகத்தை பலவடிவங்களில் மூடி வைத்து முக்காட்டுடன் இந்தக் களத்தில் எழுதவில்லை. 2001இல் இருந்து ஒரு பெயரில் தான் எழுதுகிறேன். இந்த எட்டுவருடங்களில் இந்தக்களம் ஊடாக பல கருத்தாளர்கள் நண்பர்களாகியிருக்கிறார்கள். அவர்களுடனான நட்பு தொலைபேசியூடாக பலதரம் நேரடி சந்திப்பாகவும் தொடர்ந்து கொண்டு தானிருக்கிறது.

:(:lol: :lol: :lol: :lol:

நிதர்சன் உங்கள் கருத்துக்கு என்னிடம் குதர்க்கமாய் எதுவுமில்லை. அத்தனையையும் ஏற்றுக்கொள்கிறேன்.

குடும்பத்தையே முள்ளிவாய்க்கால் முனையில் கொடுத்துவிட்டு எங்கே எவர் என்று எதுவுமே அறியமுடியாமல் இருக்கின்ற உங்களுக்கு முன்னால் இந்த உசுப்பல்களை தொடர்ந்து தர முடியவில்லை. மன்னித்துவிடு தோழனே. உனக்கான வார்த்தைகள் ஆறுதலாயிரு என்று சொல்லத்தான் முடிகிறது. அதற்கு மேலாய் இன்னும் போராடென்று பொறியெடுத்துத்தர முடியவில்லை.

சாந்தி நீங்கள் நெமில்லரின் கவிதையை எனக்காகப் போட்டதாகக் கூறினீர்கள். உங்களுக்கு அந்தக்கவிதை எந்த விதத்திலும் உபயோகப்படவில்லை. முரண்பட்ட முகங்களுக்கு இந்தக் கவிதையை பொருத்திப் பார்த்ததில் உங்களுடைய கருத்தின் திணறல் நிலை தெரிந்தது. அக்கவிதையோடு நீங்கள் இணைத்து எழுதியிருந்த எழுத்துகள் அனைத்தும் ஒரு நிதானம் இழந்த அவசரத்திலும், தெளிவற்ற நோக்கிலும் வரையப்பட்டிருந்ததை அவதானித்தபின் தொடர்ந்து உங்களின் வாதாட்டத்தை எத்தகைய கோணத்தில் குழப்பிச் செல்வீர்கள் என்பதையும் உணர வைத்தது. முற்று முழுதாக ஒரு குழப்பத்தின் ஆளுகைக்கு உட்பட்டிருந்த உங்களின் எழுத்தின் மூலம் எவ்வித நன்மையும் உருவாக வாய்ப்பின்றியும், அதே நேரம் ஒற்றுமை சார்ந்த விடயத்தில் பாரிய பின்னடைவையும் விளைவிக்கும் தன்மைகளை உணர்ந்ததாலேயே பேசுவதற்கு ஒன்றுமில்லை என்று முடித்துக் கொண்டேன். நீங்கள் மீண்டும் சகாறாவுக்காக எழுதியது என்று அழுத்திச் சொல்லுமிடத்து நானும் பதிவு செய்கிறேன். கருத்துத்தடம் புரண்டு காழ்ப்புணர்ச்சியை மட்டும் கொட்டுவதாகவே உங்கள் எழுத்துகள் அடையாளப்படுகின்றன. சற்று அமைதியாகிக் கொள்ளுங்கள். கருத்துப்பகிர்வில் காழ்ப்புணர்ச்சிகளைக் கொட்டிக் கொள்ளாத நல்ல நண்பர்களாக இருப்போம்.

அடுத்து குடும்பத்தையே முள்ளி வாய்க்கால் முனையில் கொடுத்துவிட்டு நிற்கும் நிதர்சனுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இன்னொருவருக்கு இங்கு நான் கருத்து எழுத வேண்டும். போ..போ..விறாவோ சாந்தியின் கருத்திற்கு நீங்களும் கருத்து எழுதி வாதாடி இருக்கவேண்டும் ஆனால் நீங்கள் பல சந்தர்ப்பங்களில் இங்கு இடம்பெற்றுக் கொண்டிருக்கும் கருத்தாடலுக்கான விடயத்தை எழுதாமல் சில தனிமனிதத் தாக்குதல்களை தொடர்ந்ததில் நிர்வாகத்தினால் பல சந்தர்ப்பங்களில் உங்கள் கருத்துகள் அகற்றப்பட்டன. இறுதியாக இங்கு பதியப்பட்டிருக்கும் கருத்துகளைப் பார்த்தவரை உங்கள் இருவருக்கும் ஏற்கனவே நேரடியாகவோ அல்லது வேறு கருத்தாடலிலோ முரண்பாடுகள் இருந்திருக்கின்றன. அதன் மிகுதியை இப்பகுதியிலும் தொடர்வதாகவே தெரிகிறது. இருவருமே நன்கு பரிச்சயப்பட்டவர்களாக இருக்கிறீர்கள் கூடுமானவரை தனிமனிதத் தாக்குதலை ஒருவர் மீது ஒருவர் மேற்கொள்வதை விடுத்துப் பேசித்தீர்த்துக் கொள்ளுங்கள். இது சாந்திக்குந்தான் தனிமனிதத் தாக்குதல்கள் உங்களினாலும் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. சிறந்த துணிச்சல் மிகுந்த பெண்மணியாகவும் படைப்பாளியாகவும் இருக்கும் நீங்கள் அவற்றைப்பண்பாகத் தவிர்த்துக் கொள்ளலாமே.

நன்றி இனி இக்கருத்துப்பகுதியில் நான் மேற்கொண்டு எதுவும் எழுதுவதற்கு இல்லை.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
    • Published By: DIGITAL DESK 3   29 MAR, 2024 | 09:47 AM   உலகில் வாழும் கிறிஸ்தவர்கள் இன்று யேசுக்கிறிஸ்துவின் பாடுகள், மரணத்தை நினைவு கூர்ந்து புனித வெள்ளியை அனுஷ்டித்து வருகின்றனர். இயேசுவின் மறைவு புனித வெள்ளியாக இன்று அனுசரிக்கப்படுகிறது. அவர் உயிர்த்தெழுந்த நாள் 'ஈஸ்டர்' ஞாயிறாக அனுஷ்டிக்கப்படுகின்றது. யேசுக்கிறிஸ்து இறந்தது துக்க நிகழ்வு என்றாலும், அதனால் மனித குலத்திற்கு விளைந்த நன்மைகளை வைத்தே 'புனித வெள்ளி' என்றழைக்கின்றனர் கிறிஸ்தவர்கள். வரலாற்றில் முக்கிய நிகழ்வான இயேசு கிறிஸ்துவின் பாடுகள், மரணம், உயிர்ப்பை உலகளவில் கிறிஸ்தவர்கள் நினைவு கூர்ந்து வருகின்றனர். அந்தவகையில் இயேசு கிறிஸ்து உயிர்விட்ட நாளை இன்று உலகிலுள்ள அனைத்து கிறிஸ்தவர்களும் இன்று 'பெரிய வெள்ளி'யாக நினைவு கூருகின்றனர். பெரிய வெள்ளி, புனித வெள்ளி, Good Friday என்று சொல்லும் போதே இயே­சுவின் மர­ணம் தான் சர்வ உலக மக்களின் நினை­விலும் வரும். அந்த நாளுக்கு பெரி­ய­வர்கள் அல்­லது முன்­னோர்கள் சரி­யாக பெய­ரிட்­டுள்­ளனர். நல்ல வெள்ளி, புனித வெள்ளி, எல்லா வெள்­ளி­க­ளிலும் பெரிய வெள்ளி என்று மிகவும் பொருத்­த­மா­கவே பெய­ரிட்­டுள்­ளனர். ஆனால், அந்த பெயர்­களின் அடிப்­ப­டையில் அந்த நாள் அனுஷ்­டிக்­கப்­ப­டு­கின்­றதா என்று கேட்டால் இல்லை என்­றுதான் சொல்­ல­வேண்டும். ஒரு கெட்ட மனி­த­னு­டைய மர­ண­மா­யி­ருந்­தாலும் அதற்கு அனு­தா­பப்­ப­டு­கிற உல­கமே நாம் வாழும் இவ்­வு­லகம். ஒரு மனி­த­னுக்கும் தீங்கு நினை­யாமல் எல்லா மனித வாழ்­விலும் நன்மை செய்த தேவ­கு­மாரன் இயே­சுவின் மரண நாளுக்கு வைக்­க­வேண்­டிய பெயரை வைக்­காமல் அந்த நாளுக்கு நல்ல நாள் என்றும், புனித நாள் என்றும், பெரிய நாள் என்றும் ஏன் பெய­ரிட்­டார்கள்? ஆம் பிரி­ய­மா­ன­வர்­களே, இந்த நாள் உல­கத்­தி­லுள்ள எல்லா மனி­தர்­க­ளுக்கும் நல்ல நாள். ஏனென்றால், ஜீவ கால­மெல்லாம் மரண பயத்­தி­னாலே அடி­மைத்­த­னத்­திற்­குள்­ளா­ன­வர்கள் யாவ­ரையும் விடு­தலை பண்­ணும்­ப­டிக்கு தேவ­கு­மா­ரனாம் இயேசு சர்­வத்­தையும் படைத்­தவர், சர்­வத்­தையும் ஆளுகை செய்ய வேண்­டி­யவர். பிள்­ளைகள் மாமி­சத்­தையும் இரத்­தத்­தையும் உடை­ய­வர்­க­ளா­யி­ருக்க அவரும் நம்­மைப்போல் மாமி­சத்­தையும் இரத்­தத்­தையும் உடை­ய­வ­ராகி மர­ணத்தின் அதி­ப­தி­யா­கிய பிசா­சா­ன­வனை தம்­மு­டைய மர­ணத்­தினால் அழிக்கும் படிக்கும், நம்மை மரண பயத்­தி­லி­ருந்து விடு­விக்­கும்­ப­டிக்கும் மர­ணத்­துக்­கே­து­வான ஒன்றும் அவ­ரிடம் காணப்­ப­டாத போதும், மரணம் மனித வாழ்வில் பயத்­தையோ அடி­மைத்­த­னத்­தையோ கொடுக்­கக்­கூ­டாது என்று காண்­பிக்கும் படிக்கும் மர­ணத்தை ஏற்றுக் கொண்டார். பிரி­ய­மா­ன­வர்­களே, இந்த உலகில் வாழும் எல்லா மனி­த­னுக்கும் மரணம் என்­பது மாமி­சத்­துக்கும் இரத்­தத்­துக்­கும்தான். நம்­மு­டைய ஆவி, ஆத்­து­மா­வுக்­கல்ல. சரீ­ரத்தில் இரத்த ஓட்டம் நின்று சரீரம் செய­லற்றுப் போவ­துதான் மரணம். எனவே பரி­சுத்த வேதா­கமம், ‘ஆத்­து­மாவைக் கொல்ல வல்­ல­வர்­க­ளா­யி­ராமல், சரீ­ரத்தை மாத்­திரம் கொல்­லு­கி­ற­வர்­க­ளுக்கு நீங்கள் பயப்­பட வேண்டாம்; ஆத்­து­மா­வையும் சரீ­ரத்­தையும் நர­கத்­திலே அழிக்க வல்­ல­வ­ருக்கே பயப்­ப­டுங்கள்’ (மத் 10:28) என்று சொல்­கி­றது. மேலே சொல்­லப்­பட்­ட­து­போல மரண பயத்­தினால் பிசா­சா­னவன் யாவ­ரையும் அடி­மைப்­ப­டுத்­தி­யி­ருந்தான். நம் இயேசு சிலுவை மர­ணத்தை ஏற்றுக் கொண்டு உல­கி­லுள்ள எல்லா மனி­தர்­க­ளுக்கும் ‘இவ்­வு­லகில் மரணம் என்­பது வெறும் சரீ­ரத்­திற்கே சொந்­த­மா­னது’ என்ற உண்­மையை தெளி­வு ­ப­டுத்­தினார். எனவே உல­கத்­தி­லுள்ள எந்த மனு­ஷனும் மனு­ஷியும் இயே­சுவின் மர­ணத்தை ஏற்றுக் கொள்ளும் போது, மரண பயத்­திற்கு நீங்­க­லாகி பிசாசின் அடி­மைத்­த­னத்­திற்கு நீக்­க­லாக்­கப்­ப­டு­கி­றார்கள். ஆக­வேதான் அதை நல்ல வெள்ளி (Good Friday) என்று உலகம் அழைக்­கி­றது. அடுத்து புனித வெள்ளி என்று ஏன் சொல்­லு­கிறோம்? தேவன் மனி­தனை தம்­மைப்போல் வாழும்­ப­டி­யாயும், பரி­சுத்த சந்­த­தியை உரு­வாக்­கும்­ப­டி­யாயும் படைத்தார். ஆனால் முதல் மனிதன் ஆதாமின் கீழ்­ப­டி­யாமை, மீறு­த­லினால் உல­கத்தில் பாவம் வந்­தது. எல்லா மனி­தர்­க­ளையும் பாவம் ஆளுகை செய்­தது. ஒரு மனித வாழ்­விலும் புனிதம் (பரி­சுத்தம்) இல்லை. பாவம் கழு­வப்­ப­ட­வில்லை. ‘இரத்தம் சிந்­து­த­லினால் மாத்­தி­ரமே பாவப்­பி­ரா­யச்­சித்தம் உண்டு’ என்­பது உலகில் வாழும் அநே­க­மானோர் ஏற்றுக் கொள்ளும் ஒன்று. ஆகவே, தேவ­னு­டைய ஆதி விருப்­பத்­தின்­படி இயேசு சிலு­வையில் சிந்­திய இரத்தம் மாத்­தி­ரமே மனித வாழ்வின் பாவத்தை கழுவி பரி­சுத்­த­மாக்­கி­யது. இரண்டாம் ஆதாம் என்று அழைக்­கப்­படும் இயே­சுவின் கீழ்­ப­டிதல், தாழ்­மையின் மூலம் உலகில் கிரு­பையும், சத்­தி­யமும் வந்­தது. யார் இயேசு மூலம் வந்த கிரு­பையைக் கொண்டு சத்­தி­யத்தை பின்­பற்­று­கி­றார்­களோ அவர்கள் வாழ்வில் கீழ்­ப­டிவும், தாழ்­மையும் காணப்­படும். இயே­சுவின் கீழ்­ப­டிவும் தாழ்­மையும் முழு­மையாய் கல்­வாரி சிலு­வையில் காட்­டப்­ப­டு­கி­றது. இயேசு அங்கே சிந்­திய இரத்­தத்­தி­னால்தான் நாம் பரி­சுத்­த­மாக்­கப்­பட்டோம். ஆக­வேதான் புனித (பரி­சுத்த) வெள்ளி என்று அந்நாள் போற்­றப்­ப­டு­கி­றது. பிரி­ய­மா­ன­வர்­களே, எத்­த­னையோ வெள்­ளிக்­கி­ழ­மைகள் இருக்க இந்­நாளை மட்டும் ஏன் பெரிய வெள்ளி என்று சொல்­கிறோம்? இந்த நாள் மனித வாழ்வில் மரண பயத்தை நீக்கி, அடி­மைத்­தன நுகத்தை முறித்து, மனித வாழ்வில் சாப­மாக வந்த பாவத்தைக் கழுவி, ஆசிர்­வா­தத்தை உண்­டாக்கி, மனி­தனை சிந்­தனை செய்ய வைத்த நாள். இது துக்­கத்தின் நாளும் அல்ல, சந்­தோ­ஷத்தின் நாளும் அல்ல. இது அர்ப்­ப­ணிப்பின், தீர்­மா­னத்தின் நாள். இயே­சுவின் மர­ணத்தில் நம்மை பங்­குள்­ள­வர்­க­ளாக்கும் நாள். நம்­மு­டைய பாவ, சாப, தரித்­திர, மரண வல்­ல­மையை முறி­ய­டித்த நாள். நாம் நம் இயே­சுவின் மர­ணத்தை ஏற்று அதில் நாம் பங்­கு­டை­ய­வர்­க­ளா­கிறோம் என்­ப­துதான் நம் வாழ்வில் நாம் எடுத்த தீர்­மா­னங்­களில் மிகவும் பெறு­ம­தி­யான, விலை­ம­திக்க முடி­யாத தீர்­மானம். நம் வாழ்வில் நாம் எடுக்கும் வெற்றியான தீர்மானத்தின் நாள்தான் நம் வாழ்வின் பெரிய நாளாய் இருக்கும். ஆகவே, இந்த நாள் நல்ல, புனித, பெரிய நாளாய் என் வாழ்வில் அமைந்துள்ளது. உங்கள் வாழ்விலும் அமைய இயேசுவோடு கூட நீங்கள் சிலுவையில் அறையப்பட உங்களை ஒப்புக் கொடுக்கும் தீர்மானம்; உங்கள் பாவ, சாப, பலவீனங்களை சிலுவையில் அறைந்து இயேசுவின் தேவ, தூய பண்புகளை உங்கள் வாழ்வில் கொண்டு வரும். இந்நிலையில், இலங்கையைப் பொருத்தவரையில் மக்கள் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகின்ற நிலையில், கிறிஸ்தவர்கள் புனித வாரத்தை அனுஷ்டிக்கின்றனர். மக்கள் தற்போது எதிர்நோக்கியுள்ள இன்னல்களில் இருந்து விடுபட அனைவரும் பிரார்த்திப்போமாக ! சிலுவையைப் பெற்றுக் கொள்வோம்! ஜெயமாய் வாழ்வோம்! ஆமென்! பெரிய வெள்ளிக்கிழமையை முன்னிட்டு கொழும்பு-13 புதுச்செட்டித் தெரு புனித வியாகுல மாதா ஆலயத்தில் யேசுவின் பாடுகளை நினைவு கூர்ந்து சிலுவைப்பாதை இடம்பெற்றதை படங்களில் காணலாம். (படப்பிடிப்பு :- ஜே.சுஜீவகுமார்) https://www.virakesari.lk/article/179948
    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.