Jump to content

விழவிழ எழுதிய வீரவணக்கம் என்னவானது ?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வல்வை அக்கா.. இது உண்மையிலேயே ஒரு பிரச்சினைதான்..! பிறிதொரு காலத்தில் யார் எழுதிய கவிதை இது என்பதில் பிரச்சினை வந்துவிடும்..! அதால அவரவர் தங்கள் கவிதைக்குள்ள தங்கட பெயர் வாற மாதிரி எழுதிக் கொள்ளுங்கோ..! :wub:

ஆனால் சகாரா அக்காவின்ர கவிதைகளை கண்டுபிடித்துவிடலாம்..! பிரச்சினையில்லை..! பின்ன.. கந்தகப்புகை அது இதுவெண்டு ஏதாச்சும் வரும்தானே..! :(

(கோவிக்காதேங்கோ.. நான் சும்மா பகிடிக்கு..! :icon_mrgreen: )

கிண்டல்.....

என்ன செய்ய டங்குவார் ஒட்சிசனைவிட கந்தக நெடியையே அதிகம் சுவாசித்த உயிர்வாழ்தலுக்கு உரியவர்களாக இருக்கிறோமே...

Link to comment
Share on other sites

  • Replies 70
  • Created
  • Last Reply

நுணாவிலான் எனக்கு இலக்கியன் யாரென்று தெரியாது ஆனால் இக்கவிதைவரிகள் யாழில் என்னால் பதியப்பட்டவை. சில கவிதைகளை வாசிக்கும் முகமறியாத் தோழர்கள் அவற்றை தாம் எழுதும் மற்றைய தளங்களில் பதிவிடுகிறார்கள். அந்த வகையில் முகந்தெரியாத தோழர் இலக்கியனுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் உரித்தாகட்டும்.

பழைய இணைப்பு

http://www.yarl.com/forum3/index.php?showtopic=52348&hl=

http://www.no1tamilchat.com/no1chat/index.php?topic=5437.135 :icon_mrgreen::wub:

முன்பு இலக்கியன் யாழில் கவிதைகள் எழுதியவர் என நினைக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

http://www.no1tamilchat.com/no1chat/index.php?topic=5437.135 :icon_mrgreen::wub:

முன்பு இலக்கியன் யாழில் கவிதைகள் எழுதியவர் என நினைக்கிறேன்.

நுணாவிலான் யாழில் கவிதைகள் எழுதிய இலக்கியன் போல்தான் உள்ளது.

ஒன்றைக் கவனித்தால் குழப்பம் தீர்ந்துவிடும். இந்த இலக்கியன் அண்மைக்கால ஈழத்துக்கவிதைகளைச் சேகரித்துப் போட்டுள்ளார். அதில் பலருடைய கவிதைகளை இணைத்துள்ளார். எல்லோருடைய பெயர்களையும் அறியாதவிடத்து மிகத் தெளிவாகத் தெரிந்தவர்களின் பெயரை இணைத்துள்ளார் மற்றப்படி அவர் இன்னொருவர் கவிதையை தனதாகக் காட்டிக் கொள்ளவில்லை. கவிதையை யாத்தவர் பெயரைத் தெரியாவிட்டால் பரவாயில்லை. மாற்றிப்பதிந்து சிக்கல்களைத் தோற்றுவித்துவிடக் கூடாது என்ற எண்ணத்தில் அப்படியே விட்டிருக்கலாம். ஒன்று மட்டும் உணர முடிகிறது. இது ஒரு காலப்பதிவாக அவர் செய்கிறார். கொஞ்சம் அதிக கவனமெடுத்தால் நல்லது என்று நினைக்கிறேன். இக்காலத்தில் வாழ்ந்த பல கவிஞர்களின் பெயரையும் தாங்கியதாக இருக்கும் பதிவாகவும் மாறும். இலக்கியனின் இப்பணிக்கு நாங்கள் ஒத்துழைப்புக் கொடுப்பதே சிறந்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சகாரா

உங்களது வீராவேசக்கவிதைகள் நன்றாயிருக்கின்றன.

//காலத்திற்குக் காலம் இழப்புகளால் எங்கள் வளர்ச்சி அதிகரித்ததே அல்லால் குறையவில்லை//

இந்தவரியை ஏதாவது முகாமில் இருக்கிற சனத்துக்குச் சொல்லிப்பாருங்கள். உங்களுக்கு பச்சை மட்டை அடி நிச்சயம்.

---

அங்கிருக்கிற ஒட்டுமொத்த மக்களும் இனி ஆயுதபோர் எமக்கு வேண்டாம் என்றால் அடுத்ததாய் நாங்கள் என்ன செய்யலாம் என நீங்கள் நினைக்கிறீர்கள்.?

தன்ர குடும்பத்தையே இழந்து நிற்கிற ஒருவனிடம்.. ம்ம்.. இப்பிடியான இழப்புக்களால்தான் நமது போராட்டம் வீரியம் பெறும். பெற்றது என்று சொன்னால்..

என்ன நடக்கும் என்றதை நீங்களே கற்பனை செய்து கொள்ளுங்கள். நான் ரண்டு மூன்று பேரிடம் பேசிய வரை உங்களை கடித்தே கொன்றுவிடுவார்கள்.

Link to comment
Share on other sites

தனிமனித தாக்குதல் என உங்களுக்கு நீங்கள் அர்த்தப்படுத்துவது உங்கள் புரிதலின் குறைபாடேயன்றி வேறில்லை. உங்களுக்குப் பிடித்தவர் என்பதால் எல்லாவற்றையும் பூச்சிட்டு மறைத்தலே உங்கள் தேசிய நேசிப்புக்கு சிறந்த பரிசு.

கோவணத்தோடு இருந்த மனிதன்தான் காலவளர்ச்சியில் விதவிதமாக ஆடைகளை அணியப்பழகிக்கொண்டான். இந்த அடிப்படை புரியாத உங்களுடன் கருத்தாடுவதற்காக வெட்கப்படுகிறேன்.

காலச்சுவட்டுக்கு பங்குதாரராக உள்ளேன் உங்களுக்கும் பங்கு தேவைப்படின் தொடர்புகொள்ளுங்கள். பாகம் பிரித்துத்தரலாம்.

ஊர்முற்றக் கவிஞன் என்றால் என்ன கருணாகரன் என்றால் என்ன நிலாந்தன் என்றால் என்ன ஊரவன் பிள்ளை செத்தவரை விடுதலைபாடி தன்பிள்ளை களம் கேட்க சுயநலாமானால் அது தவறுதான். இதைப்போல்தான் உங்கள் கூச்சலும் கும்மியும்.

கனடாவிலிருந்து தொலைபேசியடித்து உலகத்தமிழர் பத்திரிகையில் கவிதையைப் போடச்சொல்லும்படி சான்றிதழும் அனுமதியும் பெற்றுக்கொள்ளும் செல்வாக்கப்படைத்தவர்களிடம் முற்றத்துக் கவிஞனின் மூர்க்கம் இருப்பதில் வியப்பதற்கு ஏதுமில்லை.

உங்களுக்கான பிரச்சனை என்னவென்பதை உங்கள் ஆவேசக்குரலால் உங்களால் மட்டும் முடிந்த உரத்தகுரலில் முற்றக்கவிஞனுக்கு பா புனைந்தாயிற்று….இனி சாமரம் தான் மிச்சம்…..

ஐயோ தாயே நீங்கள் அரியாசனத்தில் நின்று கொடியுந்தும் கண்ணகை தெய்வம் நாங்கள் நெருப்பில் எரிய வரவில்லை. இந்த உங்கள் ஆவேசம் இன்னும் சிலகாலத்தில் புஸ்வாணமாகும்.

குழந்தைப்போராளிகளை மகிந்தவின் மடிக்குள் வைத்துப்பார்க்க நீங்கள் விரும்பினால் ஒன்றும் செய்ய முடியாது. உங்கள் வாய்வீரத்தினுள் அவர்களுக்கு வாழ்வில்லை என்பது மட்டும் புரிகிறது.

உங்கள் எழுத்துமூலம் உங்கள் நிதானத்தைப் புரிந்தபின் அந்தக்குழந்தைப்போராளிகளை உங்கள் கையில் தந்தால் சாமியே தாங்காதம்மோய்…..

அடடா.... நீங்கள் நிலாந்தனுக்கா தனித்துக் கவிதை எழுதினீர்கள்? அப்படியானால் அதை நிலாந்தனின் தனிமடலுக்குப் போட்டிருக்கலாமே….

அருமையான கண்டுபிடிப்பு. நிலாந்தன் அப்போ உங்கள் ஊர்முற்றத்தைவிட இழிந்த மனிதனாகிவிட்டார்….? நிலாந்தன் உங்கள் வீட்டுக்கொல்லைப்புறத்திலா இணையத் தொடர்பு வைத்திருக்கிறார்…..

உங்கள் வீரம் உங்களுடனும் உங்களுக்கு ஆமாபோடும் சாமிகளுடனும்தான் செல்லுபடியாகும். அதையும் தாண்டி இப்படி வந்து தலைவிரிகோலமாய் நின்றடித்தாலும் சரி கண்ணகியாய் எரித்தாலும் சூடு உங்களுக்குத்தான்.

அந்தச்சாமிகளின் சன்னதமாக நீங்கள் வேப்பிலையின்றி உருவெடுப்பது இதுவரையான தமிழ் அரசியல் பரப்பின் வேகத்தையும் விவேகத்தையும் நன்றாகவே தெளிவுபடுத்துகிறது. நீங்கள் இன்று ஆ…ஓ வென ஒப்பாரி வைத்து இல்லையில்லையென்று மறுப்பவை யாவுமே நாளை தமிழீழ வரலாறாகப்பதியப்படப்போகிறத

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நிர்க்கதியான எம் தமிழ் மக்களுக்காக ஏதாவது செய்தேயாக வேண்டும் என்ற உந்துதலில் ஏராளமானவர்கள் சத்தமில்லாமல் தம் கடமையைச் செய்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில் அடுத்தவர் மீது தாக்குதல் நடத்தியே (அதிலும் குறிப்பாகச் சிலரை மட்டும் தெரிவு செய்து) எதனைச் சாதிக்க விரும்புகிறீர்கள்.

வணங்கா மண் ஏற்பாட்டாளர்கள், பத்மினி சிதம்பரநாதன் என்று அடுத்தவரை நோக்கிக் கைகாட்டும் நீங்கள் உங்களைப் பற்றிச் சுயவிமர்சனம் செய்து கொண்டாலே பெரும் நன்மை விளையும்.

தாயகத்தில் போராளிகளின் முகாமிற்குப் பக்கத்தில் வாழ்ந்ததையே பெரும் சாதனையாக்கிப் அந்த ஞாபகங்களைப் பதிந்ததையும் ஐயகோ நான் ஓடி வந்துவிட்டனே குற்றஉணர்விலே புளுங்கிக் கொண்டிருக்கிறேனே என்று உணர்ச்சி வசப்பட்டதையும் உங்களுக்கு நீங்களே ஊடகவியலாளர், பத்திரிகையாளர் என்றெல்லாம் பட்டங்கள் சூட்டிக் கொண்டதையும் தனது கணவனை இழந்த பெண்ணின் உள்ளுணர்வைப் புரிந்து கொள்ளாமல் உள் வீட்டுச் சமாச்சாரத்தைப் பத்திரிகையில் எழுதிப் பின் அந்தப் பெண்ணே அந்தப் செய்தி பொய்யானது என்று அதே பத்திரிகையில் எழுதுமளவிற்குப் பண்ணியதையும் அந்த அடாவடி நடவடிக்கைகளால் அந்த பத்திரிகையின் ஆசிரியப் பீடத்திலிருந்து நீங்கள் தூக்கியெறியப்பட்டதையும் அதைத் தொடர்ந்து அந்தப் பத்திரிகையின் மீது வசை பாடித் திரிவதையும் உங்கள் சாதனைகளாகக் கொண்டால் உங்களைப் பற்றிக் கவி வடிப்பதற்கு புலத்திலுள்ள தமிழ்க் கவிஞர்களே போதாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தனிமனித தாக்குதல் என உங்களுக்கு நீங்கள் அர்த்தப்படுத்துவது உங்கள் புரிதலின் குறைபாடேயன்றி வேறில்லை. உங்களுக்குப் பிடித்தவர் என்பதால் எல்லாவற்றையும் பூச்சிட்டு மறைத்தலே உங்கள் தேசிய நேசிப்புக்கு சிறந்த பரிசு.

கோவணத்தோடு இருந்த மனிதன்தான் காலவளர்ச்சியில் விதவிதமாக ஆடைகளை அணியப்பழகிக்கொண்டான். இந்த அடிப்படை புரியாத உங்களுடன் கருத்தாடுவதற்காக வெட்கப்படுகிறேன்.

காலச்சுவட்டுக்கு பங்குதாரராக உள்ளேன் உங்களுக்கும் பங்கு தேவைப்படின் தொடர்புகொள்ளுங்கள். பாகம் பிரித்துத்தரலாம்.

ஊர்முற்றக் கவிஞன் என்றால் என்ன கருணாகரன் என்றால் என்ன நிலாந்தன் என்றால் என்ன ஊரவன் பிள்ளை செத்தவரை விடுதலைபாடி தன்பிள்ளை களம் கேட்க சுயநலாமானால் அது தவறுதான். இதைப்போல்தான் உங்கள் கூச்சலும் கும்மியும்.

கனடாவிலிருந்து தொலைபேசியடித்து உலகத்தமிழர் பத்திரிகையில் கவிதையைப் போடச்சொல்லும்படி சான்றிதழும் அனுமதியும் பெற்றுக்கொள்ளும் செல்வாக்கப்படைத்தவர்களிடம் முற்றத்துக் கவிஞனின் மூர்க்கம் இருப்பதில் வியப்பதற்கு ஏதுமில்லை.

உங்களுக்கான பிரச்சனை என்னவென்பதை உங்கள் ஆவேசக்குரலால் உங்களால் மட்டும் முடிந்த உரத்தகுரலில் முற்றக்கவிஞனுக்கு பா புனைந்தாயிற்று….இனி சாமரம் தான் மிச்சம்…..

ஐயோ தாயே நீங்கள் அரியாசனத்தில் நின்று கொடியுந்தும் கண்ணகை தெய்வம் நாங்கள் நெருப்பில் எரிய வரவில்லை. இந்த உங்கள் ஆவேசம் இன்னும் சிலகாலத்தில் புஸ்வாணமாகும்.

குழந்தைப்போராளிகளை மகிந்தவின் மடிக்குள் வைத்துப்பார்க்க நீங்கள் விரும்பினால் ஒன்றும் செய்ய முடியாது. உங்கள் வாய்வீரத்தினுள் அவர்களுக்கு வாழ்வில்லை என்பது மட்டும் புரிகிறது.

உங்கள் எழுத்துமூலம் உங்கள் நிதானத்தைப் புரிந்தபின் அந்தக்குழந்தைப்போராளிகளை உங்கள் கையில் தந்தால் சாமியே தாங்காதம்மோய்…..

அடடா.... நீங்கள் நிலாந்தனுக்கா தனித்துக் கவிதை எழுதினீர்கள்? அப்படியானால் அதை நிலாந்தனின் தனிமடலுக்குப் போட்டிருக்கலாமே….

அருமையான கண்டுபிடிப்பு. நிலாந்தன் அப்போ உங்கள் ஊர்முற்றத்தைவிட இழிந்த மனிதனாகிவிட்டார்….? நிலாந்தன் உங்கள் வீட்டுக்கொல்லைப்புறத்திலா இணையத் தொடர்பு வைத்திருக்கிறார்…..

உங்கள் வீரம் உங்களுடனும் உங்களுக்கு ஆமாபோடும் சாமிகளுடனும்தான் செல்லுபடியாகும். அதையும் தாண்டி இப்படி வந்து தலைவிரிகோலமாய் நின்றடித்தாலும் சரி கண்ணகியாய் எரித்தாலும் சூடு உங்களுக்குத்தான்.

அந்தச்சாமிகளின் சன்னதமாக நீங்கள் வேப்பிலையின்றி உருவெடுப்பது இதுவரையான தமிழ் அரசியல் பரப்பின் வேகத்தையும் விவேகத்தையும் நன்றாகவே தெளிவுபடுத்துகிறது. நீங்கள் இன்று ஆ…ஓ வென ஒப்பாரி வைத்து இல்லையில்லையென்று மறுப்பவை யாவுமே நாளை தமிழீழ வரலாறாகப்பதியப்படப்போகிறத

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தனிமனித தாக்குதல் என உங்களுக்கு நீங்கள் அர்த்தப்படுத்துவது உங்கள் புரிதலின் குறைபாடேயன்றி வேறில்லை. உங்களுக்குப் பிடித்தவர் என்பதால் எல்லாவற்றையும் பூச்சிட்டு மறைத்தலே உங்கள் தேசிய நேசிப்புக்கு சிறந்த பரிசு.

கோவணத்தோடு இருந்த மனிதன்தான் காலவளர்ச்சியில் விதவிதமாக ஆடைகளை அணியப்பழகிக்கொண்டான். இந்த அடிப்படை புரியாத உங்களுடன் கருத்தாடுவதற்காக வெட்கப்படுகிறேன்.

காலச்சுவட்டுக்கு பங்குதாரராக உள்ளேன் உங்களுக்கும் பங்கு தேவைப்படின் தொடர்புகொள்ளுங்கள். பாகம் பிரித்துத்தரலாம்.

ஊர்முற்றக் கவிஞன் என்றால் என்ன கருணாகரன் என்றால் என்ன நிலாந்தன் என்றால் என்ன ஊரவன் பிள்ளை செத்தவரை விடுதலைபாடி தன்பிள்ளை களம் கேட்க சுயநலாமானால் அது தவறுதான். இதைப்போல்தான் உங்கள் கூச்சலும் கும்மியும்.

கனடாவிலிருந்து தொலைபேசியடித்து உலகத்தமிழர் பத்திரிகையில் கவிதையைப் போடச்சொல்லும்படி சான்றிதழும் அனுமதியும் பெற்றுக்கொள்ளும் செல்வாக்கப்படைத்தவர்களிடம் முற்றத்துக் கவிஞனின் மூர்க்கம் இருப்பதில் வியப்பதற்கு ஏதுமில்லை.

உங்களுக்கான பிரச்சனை என்னவென்பதை உங்கள் ஆவேசக்குரலால் உங்களால் மட்டும் முடிந்த உரத்தகுரலில் முற்றக்கவிஞனுக்கு பா புனைந்தாயிற்று….இனி சாமரம் தான் மிச்சம்…..

ஐயோ தாயே நீங்கள் அரியாசனத்தில் நின்று கொடியுந்தும் கண்ணகை தெய்வம் நாங்கள் நெருப்பில் எரிய வரவில்லை. இந்த உங்கள் ஆவேசம் இன்னும் சிலகாலத்தில் புஸ்வாணமாகும்.

குழந்தைப்போராளிகளை மகிந்தவின் மடிக்குள் வைத்துப்பார்க்க நீங்கள் விரும்பினால் ஒன்றும் செய்ய முடியாது. உங்கள் வாய்வீரத்தினுள் அவர்களுக்கு வாழ்வில்லை என்பது மட்டும் புரிகிறது.

உங்கள் எழுத்துமூலம் உங்கள் நிதானத்தைப் புரிந்தபின் அந்தக்குழந்தைப்போராளிகளை உங்கள் கையில் தந்தால் சாமியே தாங்காதம்மோய்…..

அடடா.... நீங்கள் நிலாந்தனுக்கா தனித்துக் கவிதை எழுதினீர்கள்? அப்படியானால் அதை நிலாந்தனின் தனிமடலுக்குப் போட்டிருக்கலாமே….

அருமையான கண்டுபிடிப்பு. நிலாந்தன் அப்போ உங்கள் ஊர்முற்றத்தைவிட இழிந்த மனிதனாகிவிட்டார்….? நிலாந்தன் உங்கள் வீட்டுக்கொல்லைப்புறத்திலா இணையத் தொடர்பு வைத்திருக்கிறார்…..

உங்கள் வீரம் உங்களுடனும் உங்களுக்கு ஆமாபோடும் சாமிகளுடனும்தான் செல்லுபடியாகும். அதையும் தாண்டி இப்படி வந்து தலைவிரிகோலமாய் நின்றடித்தாலும் சரி கண்ணகியாய் எரித்தாலும் சூடு உங்களுக்குத்தான்.

அந்தச்சாமிகளின் சன்னதமாக நீங்கள் வேப்பிலையின்றி உருவெடுப்பது இதுவரையான தமிழ் அரசியல் பரப்பின் வேகத்தையும் விவேகத்தையும் நன்றாகவே தெளிவுபடுத்துகிறது. நீங்கள் இன்று ஆ…ஓ வென ஒப்பாரி வைத்து இல்லையில்லையென்று மறுப்பவை யாவுமே நாளை தமிழீழ வரலாறாகப்பதியப்படப்போகிறத

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

[

லை. இந்த உ

இப்போது நாம் பேசவில்லையென்றால் பேச முடியாதவர்களுக்காகப் பேச யாருமே இருக்கமாட்டார்கள். அவர்கள் சிறு பான்மையினராக இருந்தாலும் சரி, ஒதுக்கப்பட்டவர்களாக இருந்தாலும் சரி, பழிவாங்கப்படுபவர்களாக இருந்தாலும் சரி.

அனுபவத்தில் என்னை மிக அதிகமாகப் பாதித்தவர் ஜெர்மானிய ஆன்மிகவாதி மார்ட்டின் நெமில்லர். அவர் இளம் பிராயத்தில் யூதர்களுக்கு எதிரானவராகவும் ஹிட்லரை மிகவும் மதிக்கிறவராகவும் இருந்தார். நாஜியிசம் ஜெர்மனியை முழுமையாகக் கைப்பற்றிய போதுதான் நாஜியிசம் என்றால் என்ன என்பதை அவர் உணர்ந்தார். ஹிட்லர் யூதர்களை மட்டும் வெளியேற்றவில்லை, மாற்றுக் கருத்துக்கொண்ட எல்லோரையும் ஒழிக்க வேண்டும் என்று நினைத்தார். நெமில்லர் பிறகு பேசத் தொடங்கினார். அந்தக் குற்றத்துக்காக அவர் 1937இலிருந்து 1945 வரை சாச்சென்ஹௌசன் மற்றும் டாச்சௌ வதை முகாம்களில் அடைக்கப்பட்டார். கிட்டத்தட்ட கொல்லப்பட்டார். நெமில்லர் எழுதிய ஒரு கவிதையை நான் என் பதின்பருவங்களில் முதன்முறையாகப் படித்தேன். எனது மனத்திலிருந்து அது இப்போதும் விலகவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மார்ட்டின் நெமில்லர் ஒரு நேர்மையானவர்.அவர் கிட்லர் உயிருடன் இருக்கும் போது இந்திரன் சந்திரன் என்று போற்றிக் கவிதை

எழுதி பொன்னும் பொருளும் பெற்றுவிட்டு அவர் மறைந்த பின்னால் இவரை விமர்சிக்கவில்லை.

நெமில்லர் கிட்லர் உயிருடன் இருந்தபோதே அவரை விமர்சித்து சிறை சென்றார். அந்த கருத்து நேர்மை தலைவணங்க கூடியது.

ஆனால் தலைவரை போற்றிப் பாமாலைகளை மே மாதம் 17ம் திகதிவரை செய்து அதற்கூடாக தன்னை ஒரு பெண்புலியிலும்

பெரும் புலியாக புலத்தில் புளுகித் திரிந்துவிட்டு அவர் மறைந்த பின்னர் அவரை விமர்சிக்கும் கருத்து மஞ்கள் பத்திரிகைகாரிக்கு

உரியது.

சரி இப்போதுதான் தலைவரை இவர்களுக்கு புரிந்திருக்கு என்றால்...இப்போது இவர்கள் தலையில் வைத்திருக்கும்

சட்டத்தரணி உருத்திகுமாரையும் நாளைக்கு அவரைப் பற்றியும் இப்போதுதான் புரிந்திருக்கு என்று சொல்லி கவிதையில் பேசி

எழுதமாட்டார்களா???

ம்ம்ம்ம்....இதுகள் எழுதி .....

இப்போது இன்னும் தலைவரின்மேல் உள்ள விருப்பு கூடியுள்ளது எமக்கு. ஏனென்றால் இதுகள் எல்லாம் பொய்மை என்பதை அறிந்து

அன்றே அவன் சந்திக்க மறுத்தர்னே அதற்காக. :unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மார்ட்டின் நெமில்லர் ஒரு நேர்மையானவர்.அவர் கிட்லர் உயிருடன் இருக்கும் போது இந்திரன் சந்திரன் என்று போற்றிக் கவிதை

எழுதி பொன்னும் பொருளும் பெற்றுவிட்டு அவர் மறைந்த பின்னால் இவரை விமர்சிக்கவில்லை.

நெமில்லர் கிட்லர் உயிருடன் இருந்தபோதே அவரை விமர்சித்து சிறை சென்றார். அந்த கருத்து நேர்மை தலைவணங்க கூடியது.

ஆனால் தலைவரை போற்றிப் பாமாலைகளை மே மாதம் 17ம் திகதிவரை செய்து அதற்கூடாக தன்னை ஒரு பெண்புலியிலும்

பெரும் புலியாக புலத்தில் புளுகித் திரிந்துவிட்டு அவர் மறைந்த பின்னர் அவரை விமர்சிக்கும் கருத்து மஞ்கள் பத்திரிகைகாரிக்கு

உரியது.

சரி இப்போதுதான் தலைவரை இவர்களுக்கு புரிந்திருக்கு என்றால்...இப்போது இவர்கள் தலையில் வைத்திருக்கும்

சட்டத்தரணி உருத்திகுமாரையும் நாளைக்கு அவரைப் பற்றியும் இப்போதுதான் புரிந்திருக்கு என்று சொல்லி கவிதையில் பேசி

எழுதமாட்டார்களா???

ம்ம்ம்ம்....இதுகள் எழுதி .....

இப்போது இன்னும் தலைவரின்மேல் உள்ள விருப்பு கூடியுள்ளது எமக்கு. ஏனென்றால் இதுகள் எல்லாம் பொய்மை என்பதை அறிந்து

அன்றே அவன் சந்திக்க மறுத்தர்னே அதற்காக. :unsure:

அண்ணே இதுகளையெல்லாம் வாசித்தால்தான் கடுப்பு. நக்கி நக்கியே பிழைப்பு பார்த்து பழகிவிட்டது இந்த கூட்டம். உடலையே விற்று பிழைக்க வெளிக்கிட்ட இதுகளுக்கு மானம் வெறும் சுமை. யார் எழுதியிருக்கிறார் என்று பார்த்தாலே போதுமு; என்ன எழுதியிருக்கும் என்று தெரியும்தானே பிறேகேன் வாசிப்பான்.

Link to comment
Share on other sites

4 4 பிறாவோ,

நீங்கள் யாரென்பதும் எனக்குத் தெரியாது, தெரிய வேண்டிய தேவைப்பாடோ இல்லை, ஆயினும் ஒரு தோழனாய் எழுதுகின்றேன். உஙகள் கருத்து எதுவாயினும் பண்பாக எழுதுங்கள். உங்களுடைய வார்த்தைப் பயன்பாடு தவறாக இருக்கின்றமையினால் உங்களின் கருத்துக்கள் பல அடிபட்டுப் போய் விட்டன. உங்களுடய தனிப்பட்ட பிரச்சினகளை இங்கே கொண்டு வருவது நல்லதல்ல. உங்களுக்கு சாந்தி யார் என்பது தெரிந்து இருக்கலாம். ஆனால் அவவுக்கு உங்களை யாரென்று தெரியாது. நீங்கள் தனிப்பட சாந்தியை விமர்சிப்பதென்றால் உங்கள் சொந்த அடியாளத்தில் வர வேண்டும். நன்றி.

அன்புடன்,

ராசராசன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னவொரு அவ நம்பிக்கைதரும் வரிகள்....

தன் நம்பிக்கையும் இழந்து மற்றவர்களின் நம்பிக்கையையும் சிதைக்கும்படி அமைந்த இந்தச் சிந்தனையை எங்கள் மண்மீட்புக்காக உயிர் நீர்த்த அந்தமாவீரர்களின் ஆன்மாக்கள் என்றுமே மன்னிக்கப்போவதில்லை....

எவ்வளவு பொறுப்புக்களை எங்கள் கைகளில் விட்டுப் போயிருக்கும் அந்த வீரர்களுக்கு நான் செய்யும் நன்றிக்கடனா இது?

போரின் இறுதி நாட்களில் உலக வீதிகளில் எத்தனை கஸ்ரங்களைத் தாங்கி இரவு பகல் பாராமல் வீதிகளில் நின்ற அந்த மக்கள் தாயக உறவுகளைக் காப்பாற்றும் படி அழுது புலம்பியது எல்லாம் எதற்காக? ஆனாலும் உலகம் கைவிட்ட பின்னும் இன்னமும் இறந்த உயிர்களுக்காக, எங்கள் மாவிரர்களின் தியாகங்களுக்காக உலக நாடுகளின் கண்கள் இனியும் திறக்காதா என்ற ஏக்கத்துடன் வீதியில் போராடும் மக்களின் நம்பிக்கையை சிதைக்கும் பிடி ஏன் இந்த அவ நம்பிக்கையுள்ள வார்த்தைகள்...?

இது தமிழரின் சுதந்திரப் போராட்டகாலம் ஒவ்வொரு தமிழ் எழுத்தாளர்களும் தமிழருக்கு நம்பிக்கையூட்டும் படி எழுதவேண்டுமென்று களக்தில் நின்ற கவிஞன் புதுவை இரத்தினதுரை சொன்னதை கேட்டுமா மக்களின் தன்னம்பிக்கையூட்டும் வரிகளை எழுதும் கவிஞர்களை பேசுவது...! இப்படியான சிந்தனையோட்டம் இந்த நேரத்தில் தேவையா?

காவியன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சகாரா

உங்களது வீராவேசக்கவிதைகள் நன்றாயிருக்கின்றன.

//காலத்திற்குக் காலம் இழப்புகளால் எங்கள் வளர்ச்சி அதிகரித்ததே அல்லால் குறையவில்லை//

இந்தவரியை ஏதாவது முகாமில் இருக்கிற சனத்துக்குச் சொல்லிப்பாருங்கள். உங்களுக்கு பச்சை மட்டை அடி நிச்சயம்.

---

அங்கிருக்கிற ஒட்டுமொத்த மக்களும் இனி ஆயுதபோர் எமக்கு வேண்டாம் என்றால் அடுத்ததாய் நாங்கள் என்ன செய்யலாம் என நீங்கள் நினைக்கிறீர்கள்.?

தன்ர குடும்பத்தையே இழந்து நிற்கிற ஒருவனிடம்.. ம்ம்.. இப்பிடியான இழப்புக்களால்தான் நமது போராட்டம் வீரியம் பெறும். பெற்றது என்று சொன்னால்..

என்ன நடக்கும் என்றதை நீங்களே கற்பனை செய்து கொள்ளுங்கள். நான் ரண்டு மூன்று பேரிடம் பேசிய வரை உங்களை கடித்தே கொன்றுவிடுவார்கள்.

காவடி உங்கள் கேள்வியோடு இருக்கும் இதரவிடயங்களுக்கு கீழ்வரும் ரவி இந்திரனின் பதிவில் பதில் இருக்கிறதா என்று பாருங்கள்.

வணக்கம் வல்வை சகாரா அக்கா,

உங்கள் கவிதைக்கும் சக உறவுகள் கருத்துக்கும் என் கருத்தாக நிறைய எழுத வேண்டி இருக்கு....

எனக்கு நேரம் கிடைப்பது மிக அரிது தாமதத்திற்கு மன்னிக்கவும்

உங்கள் கவிதை அருமை ஆனாலும் நன்றியோ பாராட்டோ தெரிவிக்க விரும்பவில்லை. ஏனெனில் நம்பிக்கையையும் விடுதலை வேட்கையையும் விதைப்பது ஒவ்வொரு கலைஞனினதும் கடமை.

(உதாரணத்திற்கு போராட்டம் மிகப்பெரும் சவாலையும் மனிதப்பேரழிவையும் சந்தித்துக்கொண்டிருந்த மே மாத தொடக்கத்தில் ஒரு போராளியுடன் பேசும் சாத்தியம் கிடைத்தது. அப்போது பின்னணியில் குண்டுச் சத்தங்களுக்கு மத்தியில் தாயகக் கவிஞர் புதுவை இரத்தினதுரையின் கவிதை ஒன்று ஒலித்துக் கொண்டிருந்தது. என்ன அண்ணா இந்த நேரத்தில் கவிதை எனக் கேட்டேன். அதற்கு “ அண்ணை எங்களுக்கு காயத்திற்கு மருந்து சாப்பாடு இரத்தம் எல்லாமே இப்ப இதுதான் தருது என்றார். கவிதையின் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய விடயம் இது. கவிதைக்கு பெருமை சேர்க்கின்ற விடயம். உலகப்போரியல் வரலாற்றில் விடுதலை வேண்டி போராடும் இனங்களின் வரலாற்றில் அந்தக் கவிதை சிகரம்.

ஆனால் துரதிஸ்ட வசமாக அந்தக்கவிதை இன்னும் வெளிவரவில்லை. அந்தக்கவிதை குறிப்பிட்ட போராளிகளை இன்னும் சாதிக்கவைத்தது. நம்பிக்கையை அதிகமாக்கியது. இராணுவ முற்றுகையை உடைத்த அந்தப்போராளிகள் தற்போது உயிருடன் உள்ளார்கள்.

ஆகையால் அந்தக் கவிதை வெளி உலகிற்கு வரும்.)

சாத்தியம் சாத்தியம் இன்மை பற்றி வட்டமேசை போடவும் அங்கே தவறு இங்கே தவறு என்று மேடைபோட்டு முழங்கவும் நாங்கள் ஆய்வாளர்களோ அரசியல்வாதிகளோ அல்ல.

இன்னும் சொல்லப்போனால் போராட்டம் முன்னேற்றம் கண்ட காலத்தில் பெற்ற தாயை இரத்த உறவுகளை விட தமிழீழத்தாய் மண்ணின் விடுவு மட்டுமே கண்களுக்கும் உணர்வுக்கும் தெரிந்த அந்த அப்பழுக்கற்ற தமிழ்த்தாய் மைந்தர்கள் போல் போராட்டம் பின்னடைவைக் கண்டிருக்கும் இந்தக் காலத்தில் நம்பிக்கையையும் விடுதலை வேட்கையையும் இன்னும் இன்னும் அதிகமாய் விதைக்கும் அப்பழுக்கற்ற எழுத்துப்போராளிகள் நிறையத் தேவை.(யாழ் களத்தைப் பார்க்கும் போதே புரிகிறது)

ஏனெனில் இன்றைய நிலையில் எதிரிகளும் துரோகிகளும் தமிழரின் நம்பிக்கையையும் விடுதலை வேட்கையையும் சிதைக்கும் கருத்து யுத்தத்தை தீவிரப்படுத்துகின்றார்கள். நாங்களும் எங்கள் பணியை தீவிரப்படுத்துவோம். எதிரிகளையோ துரோகிகளையோ கண்டு அஞ்சத்தேவையில்லை அவரவர் கடன் அவரவர் பணி செய்து கிடப்பதே ஆகும். ஆகவே எல்லோரு தொர்வோம்.

உதாரணத்திற்கு “இன்னுமொரு மில்லர் பிறப்பான் அவன் முன்னைவிட பெரிதாய் வெடிப்பான்” என்று எழுதினால் அது கற்பனை பண்ணுவதாயோ உசுப்பேத்தி விடுவதாயோ அர்த்தம் ஆகாது.

தேவையேற்படின் அந்த இன்னுமொரு மில்லர் நானாக தயாரான பின்னரே அப்படி எழுதுகின்றேன். (எனக்கு யாரும் மண்டையை கழுவவும் இல்லை. எனக்கு வாழ கஸ்டமும் இல்லை. சிறு வயதில் இருந்தே சுகபோகமாய் வெளிநாட்டில் வாழும் பல்லாயிரம் இளைஞர்களில் நானும் ஒருவன் அவ்வளவுதான்)

அத்துடன் மாவீரர் பட்டியலிலும் முகம்தெரியாக் கரும்புலிகள் பட்டியலிலும் வெளிநாட்டில் பிறந்தவர்கள் அல்லது வாழ்ந்தவர்களி;ன் பெயர்கள் உள்ளன. யார் எதை அழித்தாலும் தமிழீழ ஆண்மாவின் வரலாறு நிச்சயம் பதியப்படும். அப்போது பெயர்கள் வெளிவரும்.

புரட்சிகள் கண்டம் கடந்தும் தேசம் கடந்தும் நடந்தது வரலாறு. புரட்சியின் சரித்திரம் சாய்ந்ததில்லை அது புது வழி காணாமல் ஓய்ந்ததில்லை. நாங்களும் நிச்சயம் வழி காணுவோம். யூதர்கள் போல் ஊர்மனையேறியே உறங்குவவதாய் சபதம் எடுப்போம்.

மாறிவரும் உலக சூழலுக்கேற்ப காய் நகர்த்த வேண்டும் என்பது உண்மை. அவலத்தை தந்தவனுக்கே அதை திருப்பிக்கொடு என்ற தகவல் ஒவ்வொரு தமிழனின் மரபணுவிலும் பொதிந்து கிடக்கம் பரம்பரைச்செய்தி என்பதும் உண்மை.

என் சொந்தங்கள் ஐம்பத்தி எட்டுப்பேரை பேரினவாத யுத்தம் தின்றுவிட்டது. இன்னும் நூற்றி அறுபத்தி எட்டுப்பேர் முகாமுக்குள்ளும் சிறைக்குள்ளும்

இன்றைய செய்தியாக

இரண்டு கால்களையும் இழந்த பல்கலைக்கழகத்திற்கு தெரிவுசெய்யப்பட்ட மாணவனுக்கு பல்கலைக்கழகம் செல்ல அனுமதி மறுப்பு

ஈர நிலத்தில் அமர்ந்து புலமைப்பரிசில் பரீட்சை எழுத வேண்டிய நிலையில் ஐந்தாம் ஆண்டு மாணவர்கள்

தங்களை அறியாமலேயே கர்ப்பமாகியிருக்கும் சிறப்பு முகாம்களில் அடைக்கப்பட்டிருக்கும் தமிழச்சிகள்.

சீழ்ப்பிடித்த சித்திரவதைக்காயங்களால் மடியும் சிறப்பு முகாம் தமிழ்ர்கள்

இப்படி நீள்கிறது... சிங்களப் பேரினவாதம் தமிழினத்தின் ஆண்மாவில் ஏற்படுததும் ஆழமான காயங்கள். இவை என்றுமே ஆறிவிடவோ மாறிவிடவோ போவதில்லை.

ஆகையால் நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை எதிரியே தீர்மானிக்கின்றான். (மாறாக ஆய்வாளப்பெருந்தகைகளோ கருத்துக் கந்தசாமிகளோ அல்ல)

மானத்தமிழினத்தின் தலைவன் சொன்னதிலிருந்து ” எனது மக்களிற்கான தீர்வை சர்வதேசத்திடமும் வரலாற்றிடமும் விடுகின்றேன்”

இது சர்வதேசம் தீர்ப்புச் சொல்ல வேண்டிய காலம். தவறினால் வரலாறு நிச்சயமாக தீர்ப்புச்சொல்லும். ஆனால் அதற்கு நாங்கள் விதைக்க வேண்டியது நம்பிக்கையும் விடுதலை வேட்கையும் அன்றி சாத்தியம் சாத்தியம் இன்மை பற்றிய ஆய்வுகளோ சரி தவறு பற்றிய வாதப்பிரதி வாதங்களோ அல்ல.

சகாரா அக்கா

எங்கள் போராட்ட வரலாற்றை பேணிப் பாதுகாக்கவும் நம்பிக்கையையும் விடுதலை வேட்கையையும் விதைக்கவும் உங்களுக்கு முன்னால் விளங்கும் ஒளிபொருந்திய கண்களையும் உணர்ச்சி மிக்க இதயங்களையும் பயன்படுத்துவது தவறில்லை.

Jun 27 2009, 02:43 PM Post #1

“விடுதலை” செய்யுங்கள்

புல்லோடும் புயலோடும்

கல்லோடும் கடலோடும்

பேச முடிந்த

கவிஞர்களே!

என்ன திடீர் மௌனம்

உங்களுக்குள்ளே?

புயலுக்கு முந்தியதா?

பிந்தியதா?

என

உங்கள் மௌனங்களுக்கு

உங்களுக்குள்ளேயே ஆராய்ச்சியா?

நல்ல கதை.

புயல்களை

புதிது புதிதாய்

பிறப்பிப்பதே

நீங்கள்தானே.

நீங்களே தூங்கினால்

நாளைய பொழுதுகளின்

நம்பிக்கையை

யார் கொடுப்பது?

நீண்ட இரவுகளின்

இராச்சியத்திற்கு

உங்கள் இமைகளை

அனுமதிக்காதீர்

கசியும் உங்கள்

கண்களைத் துடையுங்கள்

கடலலை மோதும்

ஒவ்வொரு கரைகளுடனும் பேசுங்கள்

முள்ளிவாய்க்காலில்

சாட்சி இன்றி நடந்த யுத்தத்தை

சாட்சியுடன் எழுதுங்கள்

காற்றில் தவழும்

அத்தனை அலைகளுடனும்

உரையாடுங்கள்

கஞ்சிக்கு உயிர் விலை

கொடுத்ததையும்

காற்றே களவாடப்பட்டு

கந்தகமும் பொசுபரசும்

பரிசளிக்கப்பட்டதையும்

மருந்துக்கு

மண் அள்ளிப் போட்டதையும்

பெற்றதாய் மார்பில்

செத்தபின் பால்குடித்த

துயரத்தையும்

என

எங்கள் துயரத்தை

எங்கள் நியாயத்தை

எங்களுக்கு இழைக்கப்பட்ட

கொடுமைகளை

நீதிக்கு இழைக்கப்பட்ட

அநீதியை

மொத்தமாய்

பதிவுசெய்யுங்கள்

இலக்கு

தெளிவாய் தெரியும்

விடுதலைப்பயணத்தில்

இருள் என்று ஒன்று இல்லை.

இருப்பின்

அதன் பெயர்

குறைந்த வெளிச்சம்

என்று

உங்கள் கவிதைகள்

தீக்குச்சி கிழிக்கட்டும்

கேளுங்கள் தரப்படும்

தரப்படாவிட்டால்

தரும்வரை கேளுங்கள்

தட்டுங்கள் திறக்கப்படும்

திறக்கப்படாவிட்டால்

திறக்கும் வரை தட்டுங்கள்

என்று

மக்களுக்கு மனனஞ்செய்யட்டும்

உங்கள் கவிதைகள்

கவிஞர்களே!

தயவு செய்து

உங்கள்

மௌனங்களை உடையுங்கள்

செத்த கவிஞர்கள்

கடமையையும்

நீங்கள் தான் செய்யவேண்டும்

பிறக்க இருந்து

இறந்த கவிஞர்களையும்

நீங்கள் தான்

உருவாக்க வேண்டும்

அவர்கள்

எழுத நினைத்தவற்றையும்

நீங்கள் தான்

எழுதவேண்டும்

அவர்கள்

தொடக்கிவைத்தவற்றையும்

நீங்கள்தான்

முடிக்கவேண்டும்

புறப்படுங்கள்

தூரங்களும்

இதயங்களும்

சுருங்கிப்போன உலகில்

உங்கள் கவிதைகள்

காவியங்களாய் ஊடுருவட்டும்

புயல்களை எதிர்பார்க்க

பூகம்பங்களை எதிர்கொள்ள

ஓவ்வொரு தமிழனுக்கும்

கற்றுக் கொடுங்கள்

அதோ

தொலைவில்..

“போர் இன்னும் ஓயவில்லை

எங்கள் தமிழ் ஈழமண்ணில்….”

ஒரு கவிஞன் உடைத்த

மௌனம் பேசுகிறது

“நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்

நாட்டின் அடிமை விலங்கு தெறிக்கும்…”

இன்னொரு கவிஞனின்

நம்பிக்கை பேசுகிறது.

எங்கே

நீங்களும்

உங்கள்

மௌனங்களை உடையுங்கள்

உடைக்கும் போது

மறக்கவேண்டாம்

நம்பிக்கையையும்

விடுதலை வேட்கையையும்

விதைப்பதற்கு

அன்பானவர்களே!

உங்கள் பேனாக்கள்

துளித்துளியாய்

கரையட்டும்

வார்த்தைகள்

தீப் பொறியாய் வீழட்டும்

அதுவே

தமிழர் மனங்களில்

உலகின் திசைகளில்

ஈழ விடுதலைப் பெருந்தீயை

அணையாது எரிக்கட்டும்.

எங்கள் பணி நாங்கள் தொடர்வோம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காவடி உங்கள் கேள்வியோடு இருக்கும் இதரவிடயங்களுக்கு கீழ்வரும் ரவி இந்திரனின் பதிவில் பதில் இருக்கிறதா என்று பாருங்கள்.

பதில் இல்லை. வெளிநாட்டில் சுகபோகங்களோடு வாழ்ந்துவிட்டு மில்லர் ஆகிச் சாகிறேன் என முடிவெடுப்பதற்கும் எல்லாப்பக்கமிருந்தும் நிறையப்பட்டு நொய்ந்து போயிருக்கும் சனங்களில் ஒருவர் மில்லராகிச்சாவேன் என்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது.

முன்னவரால் சொல்ல முடியும். பின்னவர்கள் செய்தும் காட்டியவர்கள்.

--

இதில் நிறைய வாக்குவாதப்பட ஏதுமில்லை. நான் நினைப்பது சரியானால்.. அந்தரித்த சனங்களே உங்களுக்குச் சொல்லுவார்கள். ப்ளிஸ்.. எங்களை வாழவிடுங்கோ என்று. அடிமையோ குடிமையோ .. உயிர்வாழ விடுங்கள் என்று..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அடிமையின் எண்ணம் எப்போது அடிமையாய் வாழ்வது பற்றியதாகவே இருக்கும். முகாமிலிருக்கும் இருக்கும் ஒரு சாராருடன் தான் நீங்கள் பேசுகின்றீர்கள் என்று நினைக்கின்றேன். ஆனால் அதற்க்கும் ஒரு மறுபக்கம் இருக்கின்றது. இளைஞர், யுவதிகளை கேட்டுப்பாருங்கள். மரநிழலில் ஒவ்வொரு மணித்தியாலமும் நிழல்கள் மாறும் திசை நோக்கி நகர்ந்த படியே நாலு திசையேகிலும் ஆயதப்படையுடன் பள்ளிக்குச் செல்லும் ஒரு சிறுவனை கேட்டுப்பாருங்கள். அவன் கண்டிப்பாக பதில் சொல்லுவான்.

நாமும் ஏதோ ஒரு விதத்தில் முகாமோடு நெருங்கிய தொடர்பில் இருக்கின்றோம் நண்பரே! குறிப்பாக நீங்கள் பேச வேண்டிய பலர் zoon-4 இருக்கின்றனர். ஆற்றங்கரையினில் அமைந்த அந்த முகாம் பற்றி நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. நீங்கள் காட்சிகளாக கூட பார்த்திருப்பீர்கள்.

இந்த வாழ்வு வாழும் மக்கள் கண்டிப்பாக அடிமை வாழ்வைத் தெரிவு செய்ய நினைக்கவில்லை சந்தர்ப்ப கூ+ழல் அவர்கள் மீது அடிமை வாழ்வை திணித்துள்ளது. அவர்களை சூழ்ந்துள்ள அடிமை விலங்கு உங்களை போன்றவர்களால் நிச்சயம் உடை படப்போவதில்லை.

எனவே! முயன்று பாருங்கள் ஆனால் முடியாது விட்டு விடு என்று மற்றவனுக்கு அறிவுரை கூறாதீர்கள் ஏன் எனில் உங்களால் முடியாத ஒன்றை எவனோ ஒருவன் செய்தே ஆக வேண்டும் இது யதார்த்தம்...!

நேற்று போற்றி இன்று தூற்றும் எழுத்தாளர்கள் நாளை போற்றுவார்கள் அது நாள் வரை காத்திருப்போம்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அண்ணர்.. அடிமை வாழ்வை யாரும் விரும்பி ஏற்பதில்லை. அது திணிக்கப்பட்ட அவல நிலையென்றதிலும் சந்தேகமில்லை. ஆனால் அடிமைவாழ்வுக்கெதிரான போரில் என்னை மறைத்துக்கொண்டு இன்னொராளை ஏவுகற காவாலித்தனம் என்னிடமில்லை.

வன்னி மக்கள் புலம்பெயர்ந்தவர்களைப்பார்த

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

4 4 பிறாவோ,

நீங்கள் யாரென்பதும் எனக்குத் தெரியாது, தெரிய வேண்டிய தேவைப்பாடோ இல்லை, ஆயினும் ஒரு தோழனாய் எழுதுகின்றேன். உஙகள் கருத்து எதுவாயினும் பண்பாக எழுதுங்கள். உங்களுடைய வார்த்தைப் பயன்பாடு தவறாக இருக்கின்றமையினால் உங்களின் கருத்துக்கள் பல அடிபட்டுப் போய் விட்டன. உங்களுடய தனிப்பட்ட பிரச்சினகளை இங்கே கொண்டு வருவது நல்லதல்ல. உங்களுக்கு சாந்தி யார் என்பது தெரிந்து இருக்கலாம். ஆனால் அவவுக்கு உங்களை யாரென்று தெரியாது. நீங்கள் தனிப்பட சாந்தியை விமர்சிப்பதென்றால் உங்கள் சொந்த அடியாளத்தில் வர வேண்டும். நன்றி.

அன்புடன்,

ராசராசன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ராசராசன் அண்ணா.. உங்களுடைய தோழமையான வார்த்தைகளுக்கு நன்றிகள். உங்களுக்கு என்னை தெரியாதது பொலவே எனக்கும்

உங்களை தெரியாது. ஆயினும் தோழமையுடனும் நேர்மையுடனுமான உங்களின் கருத்துக்கு பதில் தருவது தேவையானது.

1. பண்பாட்டுடன் எழுதச் சொல்லியிருக்கிறீர்கள். இதையே சாந்திக்கும் பிறிதொரு இடத்தில் நீங்கள் எழுதி இருப்பதால் உங்களின்

நடுநிலைத் தன்மை எழுத்தில் தெரிவதால் உங்களுக்கு பதில் தர வேண்டிய சத்தியநிலைக்கு என்னைத் தள்ளியிருக்கிறீங்கள்.

அண்ணா..பண்பாட்டுடன் சொல்லப்படாத ஒரு குரூரமான விடயத்துக்கு எப்படி பண்பாட்டுடன் பதில் சொல்லி புரிய வைக்கமுடியும்.

'ட்ரொஸ்க்கிக்கும் யோசப் ஸ்டாலினுக்கும் நடந்த பாட்டாளிப் புரட்சியை ஒரு நாட்டுடன் மட்டுப்படுத்துவதா இல்லை அகிலம்

முழுவதற்கும் கொண்டு செல்வதா? போன்றதைப் போன்ற கருத்தாடல்களிலும்

'மென்சிவிக்குகளுக்கும் போல்சிவிக்குகளுக்கும் சோவியத் புரட்சிக்கு முன்னான பொழுதுகளில் நடைபெற்ற

:புரட்சியில் பூர்சுவாக்களின் பங்கு: என்பது போன்ற விவாதங்களிலும்

'பின்நவீனத்துவத்தை யார் அதிகம் கைக்கொள்ளுவது என்ற 'மனுஸ்யபுத்திரனுக்கும் காலச்சுவடு கண்ணனுக்குமான

பங்கு பற்றியும் எழுதவும் கருத்தாடல் செய்ய முயற்சிக்கவும் எங்களுக்கும் விருப்புத்தான். ஆனாலும்

எத்தகைய முகாந்திரமும் இல்லாமல் தாங்கள் போற்றிப் பாடல் பாடும்போது சேர்ந்திருந்த நாங்கள் அவர்கள் தூற்றல்

பாடல் எழுதும்போது எதிர்ப்புக் குரல் கொடுத்தால் சன்னதம் கொள்ளும்போது எப்படி பண்ணாட்டு வார்த்தைகளை

பொறுக்கி எடுத்துக் கொண்டிருக்க முடியும்??

2 .எனக்கும் சாந்திக்கும் எந்தவிதமான தனிப்பட்ட பிரச்சனைகளும் கிடையாது.இரண்டு நாட்களுக்கு முன்னர்தான் சாந்தி எழுதிய

'ஐயோ..என்ரை பிள்ளை அம்பேபுஸ்ஸாவில்' என்ற கதைக்கு பாராட்டி ஒரு கருத்து எழுதியிருந்தேன். பாருங்களேன்.

சாந்தி மட்டுமல்ல என்னுடைய சொந்த சகோதரன் இத்தகைய கருத்தை எழுதியிருந்தாலும் என்னுடைய எதிர்வினை இப்படித்தான்

இருந்திருக்கும்.

அண்ணா.. உங்களைப் போன்ற மானுடவிடுதலையை நேசிப்பவர்களுக்கு இந்த கருத்தாடலும் அதன் சொற்பிரயோகமும்

விடுதலையின் மீதான அசையாத பற்றின் மீது சிறு சலனத்தை ஏற்படுத்தி இருந்தாலும் அதற்காக வருந்துகிறேன்.

ஆரம்பம் என்னுடையது இல்லாத படியால் நானாக முடிக்க மாட்டேன்.

Link to comment
Share on other sites

முதலில் அவர்கள் யூதர்களுக்காக வந்தார்கள்.

அப்போது நான் பேசவில்லை, ஏனெனில் நான் யூதன் அல்ல.

பிறகு அவர்கள் கம்யூனிஸ்டுகளுக்காக வந்தார்கள்.

அப்போதும் நான் பேசவில்லை, ஏனெனில் நான் கம்யூனிஸ்ட் அல்ல.

பிறகு அவர்கள் தொழிற்சங்கவாதிகளுக்காக வந்தார்கள்.

அப்போதும் நான் பேசவில்லை, ஏனெனில் நான் தொழிற்சங்கவாதி அல்ல.

பிறகு அவர்கள் எனக்காக வந்தார்கள்.

அப்போது எனக்காகப் பேசுவதற்கு எவரும் இருக்கவில்லை.

சகாரா மன்னிக்கவும். உங்களுக்கு இனி கருத்து எழுதுவதில்லையனெ்றதன் பின்னர் உங்கள் பெயரை நான் இக்கருத்தில் சேர்ப்பதற்கு.

சாகரா நான் எழுதிய விடயத்துக்கு தனது தரப்பில் ஆவேசப்பட்டு தொடர்ந்து எழுதிய கருத்துக்களுக்காகவே நெமில்லரின் கவிதையை இணைத்தேன். அடியில் இது சகாராவுக்காக எனவும் குறிப்பிட்டுத்தான் போட்டிருந்தேன்.

சகாரா நான் எழுதிய விடயத்தில் ஊர்முற்றத்துக்கவிஞனை முன்னிறுத்தித்தான் கண்ணகியாய் நெருப்பெடுத்திருந்தார். அந்தக்கவிஞனுக்கு சகாரா நெமில்லர் போல் தான் விசுவாசமாக இருப்பதான தொனியில் தனது கருத்துக்களை எனக்கு எழுதியிருந்தார். அதற்காகவே அக்கவிதை இங்கு பதியப்பட்டது.

ஆனால் இதனை இங்:கு சிலர் தலைவர் பிரபாகரன் மீது கொழுவிவைத்து பார்த்து என்னோடு மல்லுக்கு நிற்பதற்கு நான் எதுவுமே செய்ய முடியாது.

தலைவர் பிரபாகரன் யாருக்கு வேணுமானாலும் சர்வாதிகாரனாயோ அல்லது கறுப்பு வெள்ளைக் கனவாயோ இருக்கட்டும். என்வரையில் கடவுளுக்கு நிகரானவன் தலைவர் பிரபாகரன். அந்தத்தலைவனே இன்று கதைக்கவும் பேசவும் முனைப்புத்தந்த முகம். அவரைப் பார்த்து அருகிருந்து பலருக்குக் கிடைத்த துணிச்சல் அவரைப்படித்து அவரை நேசித்ததால் கிடைத்தது.

ஒவ்வொருவரும் தமக்கு ஏற்ற வகையில் அர்த்தப்படுத்தி நீதவான்களாகி வந்து போகட்டும். எதற்கு யாருக்கு எழுதப்பட்டது என்பதைப் புரிந்து கருத்தாளர்கள் கருத்தாடினால் கருத்தாட நானும் ஓம்தான்.

இப்பகுதியில் சொறிகின்ற சோழன் மற்றும் four four bravoஆகியோருக்கு உங்களுக்குத் தெரியாத பலவிடயங்கள் என்னைப்பற்றி இன்னும் இருக்கிறது. தேவையாயின் எனது தொலைபேசியிலக்கம் முகவரி இதுதான். Frau. S.V.Ramesh . Hauptstr – 210 , 55743 Idar.Oberstein , Germany. T.P – 0049 6781 70723. நேரில் வரவிரும்பின் வரலாம் அல்லது தொலைபேசியில் ஆயினும் பேசலாம் பேசுங்கள். நான் முகத்தை பலவடிவங்களில் மூடி வைத்து முக்காட்டுடன் இந்தக் களத்தில் எழுதவில்லை. 2001இல் இருந்து ஒரு பெயரில் தான் எழுதுகிறேன். இந்த எட்டுவருடங்களில் இந்தக்களம் ஊடாக பல கருத்தாளர்கள் நண்பர்களாகியிருக்கிறார்கள். அவர்களுடனான நட்பு தொலைபேசியூடாக பலதரம் நேரடி சந்திப்பாகவும் தொடர்ந்து கொண்டு தானிருக்கிறது.

பதில் இல்லை. வெளிநாட்டில் சுகபோகங்களோடு வாழ்ந்துவிட்டு மில்லர் ஆகிச் சாகிறேன் என முடிவெடுப்பதற்கும் எல்லாப்பக்கமிருந்தும் நிறையப்பட்டு நொய்ந்து போயிருக்கும் சனங்களில் ஒருவர் மில்லராகிச்சாவேன் என்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது.

முன்னவரால் சொல்ல முடியும். பின்னவர்கள் செய்தும் காட்டியவர்கள்.

--

இதில் நிறைய வாக்குவாதப்பட ஏதுமில்லை. நான் நினைப்பது சரியானால்.. அந்தரித்த சனங்களே உங்களுக்குச் சொல்லுவார்கள். ப்ளிஸ்.. எங்களை வாழவிடுங்கோ என்று. அடிமையோ குடிமையோ .. உயிர்வாழ விடுங்கள் என்று..

:(:lol: :lol: :lol: :lol:

வணக்கம் சாந்தியக்கா,

உங்கள் ஆதங்கங்கள் ஏற்றுக்கொள்ள கூடியவையே. உங்கள் மனநிலையிலிருந்து சிந்திக்க கூடிய எந்த ஈழத்தமிழனுக்கும் உரிய கோபமே யார் ஏற்றுக்கொள்கின்றார்களோ இல்லையோ இங்கே சில பிரச்சினைகள் இன்றும் உருவெடுத்துக்கொண்டு தான் இருக்கின்றது. மாற்றத்தை காணும் மனப்பக்கும் பலருக்கு இன்னும் வந்து சேரவில்லை. நாங்கள் அழிந்து கொண்டிருக்கின்றோம் என்ற கோபத்தை உங்கள் கவிதை சொல்கின்றது.

இருப்பினும்...

தொடர்ச்சியான எமது விமர்சனங்கள், பின்னடிப்புக்கள், அல்லது குறிப்பிட்டவர்கள் மீதான எதிர்கருத்துக்கள் எதையும் செய்து விடப்போவதில்லை. காலச்சுவடு போன்ற இணையங்கள் காலத்திற்க்கு செய்யும் இந்த இரண்டகம் நிச்சயம் நிவர்த்தி செய்யப்படும். நாங்கள் ஈழத்தமிழர்கள் எமக்கு எம்மை தெரியும், எம் தலைவனைத்தெரியும், எம் போராட்டத்தின் நியாயப்பாடுகள் புரியும்.

ஆதலால்...

நாங்கள் மற்றவர்கள் பற்றிய அக்கறையை விட்டு விடலாம். சர்வதேசத்தை நம்பியும், இந்தியாவையும் நம்பியும் காலம் கடத்துவது கூட இன்றைய காலகட்டத்தில் வெற்று வேலை என்பது எனது கருத்து. நாம் நிழலி சொன்னது போல எம்மை திடப்படுத்த வேண்டும் ஒற்றுமைப்படுத்த வேண்டும். ஆனால் அந்த ஒற்றுமையை சிதைககிறவர்கள் மீது உங்கள் கோபம் நியாயமானது. ஆனால் அதுவே ஆபத்தானது. நாங்கள் உணர்வின் விளிம்பில் நின்று போராடினோம். இன்று ஈழத்தமிழினம் உணர்வுகள் செத்திட ஜடமாகி கிடக்கிறது. அவர்கள் மீது தொடர்ந்து இவ்வாறான கருத்துக்கள் திணிப்பக்கப்படும் போது எதிர்மறை விளைவுகளை நாம் சந்திக்க நேரிடும்.

இது எனது கருத்து மட்டுமே!

நிதர்சன் உங்கள் கருத்துக்கு என்னிடம் குதர்க்கமாய் எதுவுமில்லை. அத்தனையையும் ஏற்றுக்கொள்கிறேன்.

குடும்பத்தையே முள்ளிவாய்க்கால் முனையில் கொடுத்துவிட்டு எங்கே எவர் என்று எதுவுமே அறியமுடியாமல் இருக்கின்ற உங்களுக்கு முன்னால் இந்த உசுப்பல்களை தொடர்ந்து தர முடியவில்லை. மன்னித்துவிடு தோழனே. உனக்கான வார்த்தைகள் ஆறுதலாயிரு என்று சொல்லத்தான் முடிகிறது. அதற்கு மேலாய் இன்னும் போராடென்று பொறியெடுத்துத்தர முடியவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிர்வாகம் பக்க சார்பாக நடாத்தப்படுகிறதா?

கவிதைப்பகுதியில் சாந்தி எழுதிய "விழவிழ எழுதிய வீரவணக்கம் என்னவானது" என்ற தலைப்பின் கீழ் என்னுடைய பதிவைப் போடும் தருணத்தில் நிர்வாகம் அத்திரியை மூடிவிட்டது. இருப்பினும் நான் சொல்ல வந்ததை இங்கு சொல்லிவிடுகிறேன். தயவுசெய்து அகற்ற வேண்டாம்.

முதலில் அவர்கள் யூதர்களுக்காக வந்தார்கள்.

அப்போது நான் பேசவில்லை, ஏனெனில் நான் யூதன் அல்ல.

பிறகு அவர்கள் கம்யூனிஸ்டுகளுக்காக வந்தார்கள்.

அப்போதும் நான் பேசவில்லை, ஏனெனில் நான் கம்யூனிஸ்ட் அல்ல.

பிறகு அவர்கள் தொழிற்சங்கவாதிகளுக்காக வந்தார்கள்.

அப்போதும் நான் பேசவில்லை, ஏனெனில் நான் தொழிற்சங்கவாதி அல்ல.

பிறகு அவர்கள் எனக்காக வந்தார்கள்.

அப்போது எனக்காகப் பேசுவதற்கு எவரும் இருக்கவில்லை.

சகாரா மன்னிக்கவும். உங்களுக்கு இனி கருத்து எழுதுவதில்லையனெ்றதன் பின்னர் உங்கள் பெயரை நான் இக்கருத்தில் சேர்ப்பதற்கு.

சாகரா நான் எழுதிய விடயத்துக்கு தனது தரப்பில் ஆவேசப்பட்டு தொடர்ந்து எழுதிய கருத்துக்களுக்காகவே நெமில்லரின் கவிதையை இணைத்தேன். அடியில் இது சகாராவுக்காக எனவும் குறிப்பிட்டுத்தான் போட்டிருந்தேன்.

சகாரா நான் எழுதிய விடயத்தில் ஊர்முற்றத்துக்கவிஞனை முன்னிறுத்தித்தான் கண்ணகியாய் நெருப்பெடுத்திருந்தார். அந்தக்கவிஞனுக்கு சகாரா நெமில்லர் போல் தான் விசுவாசமாக இருப்பதான தொனியில் தனது கருத்துக்களை எனக்கு எழுதியிருந்தார். அதற்காகவே அக்கவிதை இங்கு பதியப்பட்டது.

ஆனால் இதனை இங்:கு சிலர் தலைவர் பிரபாகரன் மீது கொழுவிவைத்து பார்த்து என்னோடு மல்லுக்கு நிற்பதற்கு நான் எதுவுமே செய்ய முடியாது.

தலைவர் பிரபாகரன் யாருக்கு வேணுமானாலும் சர்வாதிகாரனாயோ அல்லது கறுப்பு வெள்ளைக் கனவாயோ இருக்கட்டும். என்வரையில் கடவுளுக்கு நிகரானவன் தலைவர் பிரபாகரன். அந்தத்தலைவனே இன்று கதைக்கவும் பேசவும் முனைப்புத்தந்த முகம். அவரைப் பார்த்து அருகிருந்து பலருக்குக் கிடைத்த துணிச்சல் அவரைப்படித்து அவரை நேசித்ததால் கிடைத்தது.

ஒவ்வொருவரும் தமக்கு ஏற்ற வகையில் அர்த்தப்படுத்தி நீதவான்களாகி வந்து போகட்டும். எதற்கு யாருக்கு எழுதப்பட்டது என்பதைப் புரிந்து கருத்தாளர்கள் கருத்தாடினால் கருத்தாட நானும் ஓம்தான்.

இப்பகுதியில் சொறிகின்ற சோழன் மற்றும் four four bravoஆகியோருக்கு உங்களுக்குத் தெரியாத பலவிடயங்கள் என்னைப்பற்றி இன்னும் இருக்கிறது. தேவையாயின் எனது தொலைபேசியிலக்கம் முகவரி இதுதான். Frau. S.V.Ramesh . Hauptstr – 210 , 55743 Idar.Oberstein , Germany. T.P – 0049 6781 70723. நேரில் வரவிரும்பின் வரலாம் அல்லது தொலைபேசியில் ஆயினும் பேசலாம் பேசுங்கள். நான் முகத்தை பலவடிவங்களில் மூடி வைத்து முக்காட்டுடன் இந்தக் களத்தில் எழுதவில்லை. 2001இல் இருந்து ஒரு பெயரில் தான் எழுதுகிறேன். இந்த எட்டுவருடங்களில் இந்தக்களம் ஊடாக பல கருத்தாளர்கள் நண்பர்களாகியிருக்கிறார்கள். அவர்களுடனான நட்பு தொலைபேசியூடாக பலதரம் நேரடி சந்திப்பாகவும் தொடர்ந்து கொண்டு தானிருக்கிறது.

:(:lol: :lol: :lol: :lol:

நிதர்சன் உங்கள் கருத்துக்கு என்னிடம் குதர்க்கமாய் எதுவுமில்லை. அத்தனையையும் ஏற்றுக்கொள்கிறேன்.

குடும்பத்தையே முள்ளிவாய்க்கால் முனையில் கொடுத்துவிட்டு எங்கே எவர் என்று எதுவுமே அறியமுடியாமல் இருக்கின்ற உங்களுக்கு முன்னால் இந்த உசுப்பல்களை தொடர்ந்து தர முடியவில்லை. மன்னித்துவிடு தோழனே. உனக்கான வார்த்தைகள் ஆறுதலாயிரு என்று சொல்லத்தான் முடிகிறது. அதற்கு மேலாய் இன்னும் போராடென்று பொறியெடுத்துத்தர முடியவில்லை.

சாந்தி நீங்கள் நெமில்லரின் கவிதையை எனக்காகப் போட்டதாகக் கூறினீர்கள். உங்களுக்கு அந்தக்கவிதை எந்த விதத்திலும் உபயோகப்படவில்லை. முரண்பட்ட முகங்களுக்கு இந்தக் கவிதையை பொருத்திப் பார்த்ததில் உங்களுடைய கருத்தின் திணறல் நிலை தெரிந்தது. அக்கவிதையோடு நீங்கள் இணைத்து எழுதியிருந்த எழுத்துகள் அனைத்தும் ஒரு நிதானம் இழந்த அவசரத்திலும், தெளிவற்ற நோக்கிலும் வரையப்பட்டிருந்ததை அவதானித்தபின் தொடர்ந்து உங்களின் வாதாட்டத்தை எத்தகைய கோணத்தில் குழப்பிச் செல்வீர்கள் என்பதையும் உணர வைத்தது. முற்று முழுதாக ஒரு குழப்பத்தின் ஆளுகைக்கு உட்பட்டிருந்த உங்களின் எழுத்தின் மூலம் எவ்வித நன்மையும் உருவாக வாய்ப்பின்றியும், அதே நேரம் ஒற்றுமை சார்ந்த விடயத்தில் பாரிய பின்னடைவையும் விளைவிக்கும் தன்மைகளை உணர்ந்ததாலேயே பேசுவதற்கு ஒன்றுமில்லை என்று முடித்துக் கொண்டேன். நீங்கள் மீண்டும் சகாறாவுக்காக எழுதியது என்று அழுத்திச் சொல்லுமிடத்து நானும் பதிவு செய்கிறேன். கருத்துத்தடம் புரண்டு காழ்ப்புணர்ச்சியை மட்டும் கொட்டுவதாகவே உங்கள் எழுத்துகள் அடையாளப்படுகின்றன. சற்று அமைதியாகிக் கொள்ளுங்கள். கருத்துப்பகிர்வில் காழ்ப்புணர்ச்சிகளைக் கொட்டிக் கொள்ளாத நல்ல நண்பர்களாக இருப்போம்.

அடுத்து குடும்பத்தையே முள்ளி வாய்க்கால் முனையில் கொடுத்துவிட்டு நிற்கும் நிதர்சனுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இன்னொருவருக்கு இங்கு நான் கருத்து எழுத வேண்டும். போ..போ..விறாவோ சாந்தியின் கருத்திற்கு நீங்களும் கருத்து எழுதி வாதாடி இருக்கவேண்டும் ஆனால் நீங்கள் பல சந்தர்ப்பங்களில் இங்கு இடம்பெற்றுக் கொண்டிருக்கும் கருத்தாடலுக்கான விடயத்தை எழுதாமல் சில தனிமனிதத் தாக்குதல்களை தொடர்ந்ததில் நிர்வாகத்தினால் பல சந்தர்ப்பங்களில் உங்கள் கருத்துகள் அகற்றப்பட்டன. இறுதியாக இங்கு பதியப்பட்டிருக்கும் கருத்துகளைப் பார்த்தவரை உங்கள் இருவருக்கும் ஏற்கனவே நேரடியாகவோ அல்லது வேறு கருத்தாடலிலோ முரண்பாடுகள் இருந்திருக்கின்றன. அதன் மிகுதியை இப்பகுதியிலும் தொடர்வதாகவே தெரிகிறது. இருவருமே நன்கு பரிச்சயப்பட்டவர்களாக இருக்கிறீர்கள் கூடுமானவரை தனிமனிதத் தாக்குதலை ஒருவர் மீது ஒருவர் மேற்கொள்வதை விடுத்துப் பேசித்தீர்த்துக் கொள்ளுங்கள். இது சாந்திக்குந்தான் தனிமனிதத் தாக்குதல்கள் உங்களினாலும் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. சிறந்த துணிச்சல் மிகுந்த பெண்மணியாகவும் படைப்பாளியாகவும் இருக்கும் நீங்கள் அவற்றைப்பண்பாகத் தவிர்த்துக் கொள்ளலாமே.

நன்றி இனி இக்கருத்துப்பகுதியில் நான் மேற்கொண்டு எதுவும் எழுதுவதற்கு இல்லை.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.