Jump to content

» வருங்கால மனைவிக்கு கற்பு தேவை இல்லை 63 சதவீத ஆண்கள் கருத்து !


Recommended Posts

அது நான்தான்.ஏனென்றால் நான் காதலிச்சவரையே கலியாணம் கட்டி

சந்தோசமாயிருக்கிறேன்

***

கற்பு எனும் பம்மாத்து தூய்மைவாதத்திற்கு உங்களையே சான்றாக வைக்கின்றளவுக்கு இருக்கின்றது உங்களின் சிந்தனைக் குழப்பம். நீங்கள் ஏற்றுக்கொண்ட கற்பெனும் தூய்மைவாதம், காதலித்த ஒருவனைக் கட்டுதலையே சுட்டி நிற்கும் என்றால், அப்படி காதலித்தவனை கட்டாத அனைத்து பெண்களையும் நீங்கள் நம்பும் கற்பெனும் தூய்மை அற்றவர்கள் எனச் சொல்கின்றீர்களா? ஒரு பதிலில் ஓராயிரம் கோடி பெண்களை நீங்கள் நம்பும் தூய்மையை கொள்ளாதவர்கள் என்று தூற்றி, உங்களை உயர் இடத்தில் வைத்துப் பார்க்கும் மனநிலையைத்தான் உங்களின் பதிலில் பார்க்க முடிகின்றது

Link to comment
Share on other sites

  • Replies 161
  • Created
  • Last Reply

அது நான்தான்.ஏனென்றால் நான் காதலிச்சவரையே கலியாணம் கட்டி

சந்தோசமாயிருக்கிறேன்

***

உண்மையோ? சத்தியமா உண்மையோ...........?????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அது நான்தான்.ஏனென்றால் நான் காதலிச்சவரையே கலியாணம் கட்டி

சந்தோசமாயிருக்கிறேன்

***

உண்மையாக

சத்தியமாக

[b]முதன்முதலில் பார்த்தவரையே

முதன்முதலில் பிடித்தவரையேகட்டிக்கிட்டீரா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அது நான்தான்.ஏனென்றால் நான் காதலிச்சவரையே கலியாணம் கட்டி

சந்தோசமாயிருக்கிறேன்

***

அது சரி அவர் எப்படி இருக்கிறார் :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அது சரி அவர் எப்படி இருக்கிறார்???

நல்ல கேள்வி

ஆனால் பதில்??????????

Link to comment
Share on other sites

சுமங்களா ஆண் என விவாதிக்க சகலைரையும் அழைக்கிறேன்.

நூணா இதில் விவாதிக்க ஒன்றுமே இல்லையே அவர் வரவேற்பை பார்த்தாலே புரியவில்லையா ஆண் என்று... கேட்டால் இல்லை என்று சொல்லுவார்கள்..கேட்டு முக்கு உடை வாங்குவதை விட கேட்கமால் இருப்பதே நல்லம் :(

Link to comment
Share on other sites

அது சரி அவர் எப்படி இருக்கிறார் :(

யாழில் லிப்ஸ்ரிக் போடும் போதே அவர் "புஸ்பமாகி" விட்டார். :(:o

Link to comment
Share on other sites

கருத்து எழுதிய அனைவருக்கும் நன்றி

கு ச அண்ணை சொன்னமாதிரி பெண்கள் பாவப்பட்ட

சீவன்கள்தான்

நம்மவர்களைப் பொறுத்தவரை ஒரு பெண் ஒருவனை மட்டும்

மனத்தாலும் உடலாலும் தீண்டுவதைத்தான் கற்பென்று

நினைக்கிறார்கள் சொல்கிறார்கள் நெடுக்ஸ் சொல்வதுபோல்

என்னைக் கேட்டால் கற்பு என்பது.. உடல் உளம் சார்ந்த ஒரு பாலியல் ஒழுக்கம் என்று சொல்வேன். அப்படி ஒன்றில்லை என்பது தவறானது. கற்பை பாதுகாக்க முடியாது என்பதும் தவறானது. பாதுகாக்க முடியும் என்பதை நான் அனுபவத்தால் கண்டிருக்கிறேன்.
ஆனால் கருத்து எழுதிய அனைவரும் ஓன்றை மறந்துவிட்டார்கள்

நம்நாட்டுப்பிரச்சினையில் சீரழிந்த சீரழிக்கப்பட்ட நமது

சகோதரிகள் தாய்மார் சிறுமிகள் மற்றும் நாம்

போற்றி வணங்கும் நமது பெண் போராளிகள்

இவர்கள் என்ன கற்பிழந்தவர்களா?

RasaRaasan

View Member Profile

Add as Friend

Send Message

Find Member's Topics

Find Member's Posts Sep 11 2009, 03:07 PM Post #8

Advanced Member

Group: கருத்துக்கள உறவுகள்

Posts: 69

Joined: 23-August 09

Member No.: 7,077

கற்பு நெறி என்பது உடல் சார்ந்த தன்மை அல்ல அது உள்ளம் சார்ந்த தன்மை ஆகும். குறிப்பாக கற்பு நெறி பற்றி பேசுகின்றபோது அது பெண்ணுக்கான பாலியல் ஒழுக்கமாக மட்டுமே நோக்கப்படுகின்றது. பெண்ணுக்கு மட்டுமின்றி ஆணுக்கும் இது பொருந்தும் என்பதை அநேகர் ஏற்றுக்கொள்ளுவதில்லை. கற்பு என்ற சொல் பெண்ணுக்காகவே உருவாக்கப்பட்டது என்பது அவர்கள் எண்ணம். காமுகன் ஒருவனால் வன்புணர்வு செய்யப்பட்ட பெண்னை கற்பிழந்தவள் எனக் கொள்வது படுபாதகம். காதலிக்கும் போது தங்கள் உண்மைத் தன்மையை காண்பிக்கப் போய் வஞ்சிக்கப்பட்ட பெண்களும் இந்;த வரையறைக்குள் அடக்கப்படக் கூடாது என்பது எனது கருத்து. பெண்ணுக்கு மட்டும் கற்பு தேவை என்கிற ஒருதலைக் கற்பு நெறி உள்ளவரை சமுதாய மாற்றம் ஏற்படப் போவதில்லை. ஆண்களின் ஒழுக்கப் பிறழ்வினால் ஏற்பட்ட வடுக்களை பெண்கள் மட்டுமே சுமப்பது நீதி ஆகாது. அதற்காக பெண்கள் எல்லோரும் பத்தினிகள் என்றும் சொல்லவும் கூடாது.

ராசராசனின் கருத்தே என்கருத்தும்

Link to comment
Share on other sites

அது நான்தான்.ஏனென்றால் நான் காதலிச்சவரையே கலியாணம் கட்டி

சந்தோசமாயிருக்கிறேன்

காதலித்தவனையே கல்யாணம் கட்டி சந்தோசமாக இருந்தால் தான் கற்பு என்றிங்கள் அப்படி கட்டினவன் இருக்க உங்கட செய்கைகளால் மற்றவனை சலனமடைய வைக்கிறிங்களே அப்ப அதற்கு பெயர் என்னங்கோ? சும்மா சும்மா உதட்டை எல்லோருக்கும் காட்டுறிங்களே அது தான் கேட்டன்? நீங்கள் கற்பு என்றால் இது தான் என்றிங்க அது தான் அப்படி சொன்னன் மற்றப்படி உதட்டை நெளிக்கிறது உங்க விருப்பம் . :lol:

Link to comment
Share on other sites

காதலித்தவரையே கலியணம் செய்து சந்தோசமாயிருக்கிறேன்..என்று நான் எழுதியதன் காரணம்.. எங்கள் சமூதாயத்திலை காதலிப்பது என்பதே கற்பு போனமாதிரித்தான் ..அதைத்தவிர அவனை கலியாணம் செய்து ஒன்றாக முக்கியமாக பொருளாதார ரீதியாக நன்றாக இருந்தால்.. அவர்கள் வெற்றி பெற்றவர்கள்..கற்பானவர்கள்..இங

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு நான் வரவேற்பு பகுதியில்; முத்தப்படங்களை இட்டதற்கே என்னை சந்தேகப்படும் ஒரு சமூகத்தில் தான் நான் வாழ்ந்துகொண்டிருக்கிறேன் என்பதே வெட்கக்கேடானதொருவிடயமாகவே எனக்கு தெரிகிறது.

தங்கைச்சி முத்தம் எண்டது அசிங்கமில்லை.

அது எவரவருக்கு எங்கெங்கு முத்தமிடுவதில்த்தான் பிரச்சனையே?

முத்த அவாட்டரை முன்னணியாய் இணைத்த உங்களுக்கு அதன் தார்ப்பரியங்கள் நிச்சயமாக தெரிந்திருக்கும்.அல்லது தெரிந்திருக்க வேண்டும்?

Link to comment
Share on other sites

காதலித்தவரையே கலியணம் செய்து சந்தோசமாயிருக்கிறேன்..என்று நான் எழுதியதன் காரணம்..

இல்லை.. நீங்கள் அப்படி சொல்லவில்லை...

"இந்த உலகில் கற்பில் சிறந்தவரை சொல்லுங்கள் பார்க்கலாம்?" என்ற கேள்விக்கு பதிலாக "அது நான்தான்.ஏனென்றால் நான் காதலிச்சவரையே கலியாணம் கட்டி சந்தோசமாயிருக்கிறேன்" என்று சொல்லியிருந்தீர்கள். காதலித்தவனை கட்டாத பெண்கள் எல்லாரையும் விட போலி தூய்மைவாததினை துணக்கு அழைத்து உங்களை உசத்தியாக உருவகப் படுத்தி சொல்லியுள்ளீர்கள்

மற்றப்படி,

உங்களின் இரண்டாவது பதிலில் தெரிவித்துள்ள ஏனைய கருத்துகளுடன் உடன்படுகின்றேன். தெளிவான கருத்துகள்...அடிப்படை வாதத்தால் நிரம்பிய எம் சமூகத்தில் உங்களின் கருத்துகள் அவற்றில் இருந்து விடுபட்டு உள்ளன

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
காதலித்தவரையே கலியணம் செய்து சந்தோசமாயிருக்கிறேன்..என்று நான் எழுதியதன் காரணம்.. எங்கள் சமூதாயத்திலை காதலிப்பது என்பதே கற்பு போனமாதிரித்தான் ..அதைத்தவிர அவனை கலியாணம் செய்து ஒன்றாக முக்கியமாக பொருளாதார ரீதியாக நன்றாக இருந்தால்.. அவர்கள் வெற்றி பெற்றவர்கள்..கற்பானவர்கள்..இங
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுயஇன்பம் செய்திருக்கின்றனர்..இப்படிப்

பார்த்தால் இங்கும் கற்பு என்கிற கோட்பாடு உடல்ரீதியாகவும் அடிபட்டு போகின்றது.

கற்பு என்பது பாலியல், உடல், உள ஒழுக்கம் சார்ந்த ஒன்று..! பருவ வயதை அடையும் ஆணுக்கோ பெண்ணுக்கோ.. பாலியல் சம்பந்தப்பட்ட கனவுகள்.. கழிசல்கள்.. வீசல்கள். ஏற்படுவது..உயிரின் இயல்பு என்றாலும்.. இயற்கையானது. அதற்கான இன்னொருவரோடு அல்லது அடுத்தவரின் மனதோடு.. உடலோடு நிஜத்தில் உறவாடல்கள் அல்லது அதனால் ஏற்படக் கூடிய தூண்டல்களை உணர்வுகளை அவை நேரடியாக உணர்பவையாகவோ.. அல்லது பாதிப்புக்களை உருவாக்குவனவாகவோ இருப்பதில்லை.

கற்பு என்பது கன்னித் தன்மை... காப்பதில் மட்டும் தங்கி இருக்கவில்லை...! திருமணமானவர்களுக்கும் கற்பு என்ற பாலியல் உடல் உள ஒழுக்கம் இருக்கிறது. பாலியல் என்பது கட்டுப்பாடு இருக்க வேண்டிய ஒரு உணர்வு என்பதனாலே.. இயற்கை கூட கட்டுப்படுத்தி வைத்திருக்கிறது. இதயம் நிமிடத்துக்கு 72 தடவை துடிக்க விடப்பட்டிருக்கிறது. ஆனால்.. பாலியலை இயற்கை நிமிடத்துக்கு 72 தடவை செய்யத் தூண்டுகிறதா.. இல்லையே.. ஏன்..???!

குறிப்பிட்ட ஒரு விடயத்தில் கட்டுப்பாடுகள் அற்றிருப்பதை தான் கற்பிழந்தது என்பதன் பதத்தால் கட்டுப்படுத்த நினைத்திருக்கிறார்கள். இதில் அடிப்படை வாதம் பேசுவது அபந்தமானது.

அடிப்படை வாதம் என்று நோக்கின் திருமணம் செய்து கொள்வது கூட ஒரு அடிப்படை வாதத்திற்கு கட்டுப்படுவது போன்றதே..!

காதலில் கூட கற்பு இருக்கிறது. அது அவரவர் உணர்வைப் பொறுத்து வேறுபடும். கற்பு என்பது ஒன்றோடு வாழ்ந்துவிடுவது.. கன்னித்தன்மை காப்பது என்பதில் மட்டும் அடங்கி இருக்கவில்லை. அது உங்களின் சொந்த பாலியல், உடல், உள ஒழுக்கம் சார்ந்தே பெரிதும் தங்கி இருக்கிறது.

உதாரணத்துக்கு.. ஒரு திருமணமான கணவன் அல்லது மனைவி.. அந்தக் கணவனின் அல்லது மனைவியின் உள விருப்புக்கு எதிராக உறவாடுவது கூட கற்புத் தவறிய செயல்தான். அதுவும் ஒரு பாலியல் வல்லுறவுத்தான்.

கற்பு எனது பெண்ணிற்கானது மட்டுமல்ல. ஆணிற்கானதும்.. கூட..! :lol: :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதெல்லாம் சரி..! இதுவரைக்கும் நீங்கள் குப்புறக் கவுண்டடிச்சுப் படுத்து கனவே கண்டதில்லையா? அதைச் சொல்லுங்கோ முதலில..! :lol:

ஐயோ கற்புக்கும் குப்புறக் கவுண்டு படுக்கிறதுக்கும் என்னங்க சம்பந்தம்?

Link to comment
Share on other sites

நூணா இதில் விவாதிக்க ஒன்றுமே இல்லையே அவர் வரவேற்பை பார்த்தாலே புரியவில்லையா ஆண் என்று... கேட்டால் இல்லை என்று சொல்லுவார்கள்..கேட்டு முக்கு உடை வாங்குவதை விட கேட்கமால் இருப்பதே நல்லம் :lol:

ஆத்தி இது முந்தி கூட இருக்குப்பா இங்க... இதை எல்லாம கண்டு பிடிக்க வெளிக்கிட்டால நம்ம தலை தான வெடிக்கும். ( அனுபவம்) :lol:

ஐயோ கற்புக்கும் குப்புறக் கவுண்டு படுக்கிறதுக்கும் என்னங்க சம்பந்தம்?

அதுதானே.... :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதில விளக்கம் தாற அளவுக்கு எனக்கு ஒண்டும் தெரியா..தெரிஞ்சாலும் சொல்ல மாட்டன்...! :lol:

இருந்தாலும், மற்ற ஆக்கள் என்ன சொல்லினம் என்று வாய்ப்பனோட இருந்து வாய் பார்க்கலாம் என்று வந்தேன்!!

நீங்க கதையுங்கோ..... :(

இளையபிள்ளை அண்ணா இப்ப தான் புரியுது ஏன் உள்ளை வந்தன் என்று

வெளியிலை இருந்து வேடிக்கை பார்ப்பதுதான் நல்லது :D

இதற்கான அறுவை சிகிச்சை பற்றி ஏற்கனவே வந்து விட்டது. இதைபற்றி யாழில் எழுதி வெட்டு வாங்க விரும்பவில்லை. என்றாலும் அரபு பெண்கள் அடிக்கடி இத்தாலி பக்கம் ஏன் போகிறார்கள் என்ற செய்தியை மட்டும் சொல்கிறேன். இம்ஸா உல்லா. :lol:

ஓம் நுணா அண்ணா...

மோகன் அண்ணா தான் கற்பைக் கட்டிக் காப்பாத்துறார் :lol: (யாழின்)

கத்தியோடை நிக்கிறார் கவனம் :D

Link to comment
Share on other sites

ஓஓ அவாவா நீங்கள்???

மருதங்கேணி..நான் அவாவாக இருந்தாலென்ன அதுவாக இருந்தாலென்ன என்னுடைய கணவர்தான் அதைப்பற்றிக்கவலைப்பட வேண்டும் அதைப்பற்றி நீங்கள் கவலை கொள்ளவேண்டாம்..நீங்கள் எதுவாக இருக்கிறீர்கள் என்பதும் என்னுடைய ஆராச்சியல்ல...ஆனாலும் ஒரு பெண் சமமாக தங்களுடன் கருத்துக்களை வைப்பதை எமது சமூகத்தில் 80 வீதமான ஆண்கள் விரும்புவதில்லை..அப்படி யாராவது எங்காவது கருத்துச்சொல்லிவிட்டால்..உட

னேயே இது போன்று அதுவாக இருக்கலாமா??இதுவாக இருக்கலாமா?? யாராக இருக்கும் என்று ஆராச்சி செய்வது மட்டுமல்ல.பதில் கருத்து வைக்கமுடியாத கோழைகளாய் அந்தப் பெண்ணின் வாயை அடைத்து அவளை அங்கிருந்து துரத்திவிடுவதே ஆண்களின் குணமாக இருக்கின்றது.. புலம்பெயர்ந்து வந்த தேசங்களிலும் இன்னும் பலர் மாறவில்லை..நான் எதுவாகஇரக்கிறேன் என்கிற ஆராச்சியை விடுத்து முடிந்தால் பதில் கருத்தை வையுங்கள்..

Link to comment
Share on other sites

இல்லை.. நீங்கள் அப்படி சொல்லவில்லை...

"இந்த உலகில் கற்பில் சிறந்தவரை சொல்லுங்கள் பார்க்கலாம்?" என்ற கேள்விக்கு பதிலாக "அது நான்தான்.ஏனென்றால் நான் காதலிச்சவரையே கலியாணம் கட்டி சந்தோசமாயிருக்கிறேன்" என்று சொல்லியிருந்தீர்கள். காதலித்தவனை கட்டாத பெண்கள் எல்லாரையும் விட போலி தூய்மைவாததினை துணக்கு அழைத்து உங்களை உசத்தியாக உருவகப் படுத்தி சொல்லியுள்ளீர்கள்

மற்றப்படி,

உங்களின் இரண்டாவது பதிலில் தெரிவித்துள்ள ஏனைய கருத்துகளுடன் உடன்படுகின்றேன். தெளிவான கருத்துகள்...அடிப்படை வாதத்தால் நிரம்பிய எம் சமூகத்தில் உங்களின் கருத்துகள் அவற்றில் இருந்து விடுபட்டு உள்ளன

நிழலி ஏதோ ஒரு படத்தில் பாக்கியராஜா பல ஆண்களைப் பார்த்து உலகில் கற்பில் சிற்ந்த பெண்கள் யாரென்று கேட்டபார் உடைனை எல்லோரும்..கண்ணகி..அகலிகை.. அருந்ததி ..வாசுகி என்பார்கள் உடைனையே பாக்கியராஜா கேட்பார் உங்கடை மனைவிமார்கள் யாருமே கற்பில் சிற்நதவர்கள் இல்லையா என்பார்...அது நகைச்சுவை காட்சிதான் ஆனால் அர்த்தமுள்ள காட்சி..அதே போலத்தான் இங்கும் கற்பில் சிறந்தவர் என்று கேட்டதும் முதலில் நானே சிறந்தனான் என்று சொன்னேன்..மற்றபடி இல்லாத ஒரு விடயத்தைபற்றி கதைப்பதில் பயனில்லை..கற்பு என்பதும் ஒரு கற்பனைதான்..மற்றும்படி என்னை சக கருத்தாளராய் மதித்து நட்புடன் பதில் எழுதியதற்கு நன்றிகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுமங்களா ,

அதற்காக முத்தப் படங்கள் இடுவதை நிறுத்த வேண்டாம் . :lol:

11077.gif

Link to comment
Share on other sites

சுமங்களா ,

அதற்காக முத்தப் படங்கள் இடுவதை நிறுத்த வேண்டாம் . :rolleyes:

11077.gif

தமிழ் சிறி, நீங்கள் "ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணாயிரு"க்கிறியள். :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் சிறி, நீங்கள் "ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணாயிரு"க்கிறியள். :rolleyes:

(இ)ச்சும்மா ...... கிடைக்கிறதை யார்தான் வேண்டாம் என்று சொல்வார்கள் ராசராசன். :lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.