Jump to content

» வருங்கால மனைவிக்கு கற்பு தேவை இல்லை 63 சதவீத ஆண்கள் கருத்து !


Recommended Posts

அது நான்தான்.ஏனென்றால் நான் காதலிச்சவரையே கலியாணம் கட்டி

சந்தோசமாயிருக்கிறேன்

***

கற்பு எனும் பம்மாத்து தூய்மைவாதத்திற்கு உங்களையே சான்றாக வைக்கின்றளவுக்கு இருக்கின்றது உங்களின் சிந்தனைக் குழப்பம். நீங்கள் ஏற்றுக்கொண்ட கற்பெனும் தூய்மைவாதம், காதலித்த ஒருவனைக் கட்டுதலையே சுட்டி நிற்கும் என்றால், அப்படி காதலித்தவனை கட்டாத அனைத்து பெண்களையும் நீங்கள் நம்பும் கற்பெனும் தூய்மை அற்றவர்கள் எனச் சொல்கின்றீர்களா? ஒரு பதிலில் ஓராயிரம் கோடி பெண்களை நீங்கள் நம்பும் தூய்மையை கொள்ளாதவர்கள் என்று தூற்றி, உங்களை உயர் இடத்தில் வைத்துப் பார்க்கும் மனநிலையைத்தான் உங்களின் பதிலில் பார்க்க முடிகின்றது

Link to comment
Share on other sites

  • Replies 161
  • Created
  • Last Reply

அது நான்தான்.ஏனென்றால் நான் காதலிச்சவரையே கலியாணம் கட்டி

சந்தோசமாயிருக்கிறேன்

***

உண்மையோ? சத்தியமா உண்மையோ...........?????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அது நான்தான்.ஏனென்றால் நான் காதலிச்சவரையே கலியாணம் கட்டி

சந்தோசமாயிருக்கிறேன்

***

உண்மையாக

சத்தியமாக

[b]முதன்முதலில் பார்த்தவரையே

முதன்முதலில் பிடித்தவரையேகட்டிக்கிட்டீரா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அது நான்தான்.ஏனென்றால் நான் காதலிச்சவரையே கலியாணம் கட்டி

சந்தோசமாயிருக்கிறேன்

***

அது சரி அவர் எப்படி இருக்கிறார் :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அது சரி அவர் எப்படி இருக்கிறார்???

நல்ல கேள்வி

ஆனால் பதில்??????????

Link to comment
Share on other sites

சுமங்களா ஆண் என விவாதிக்க சகலைரையும் அழைக்கிறேன்.

நூணா இதில் விவாதிக்க ஒன்றுமே இல்லையே அவர் வரவேற்பை பார்த்தாலே புரியவில்லையா ஆண் என்று... கேட்டால் இல்லை என்று சொல்லுவார்கள்..கேட்டு முக்கு உடை வாங்குவதை விட கேட்கமால் இருப்பதே நல்லம் :(

Link to comment
Share on other sites

அது சரி அவர் எப்படி இருக்கிறார் :(

யாழில் லிப்ஸ்ரிக் போடும் போதே அவர் "புஸ்பமாகி" விட்டார். :(:o

Link to comment
Share on other sites

கருத்து எழுதிய அனைவருக்கும் நன்றி

கு ச அண்ணை சொன்னமாதிரி பெண்கள் பாவப்பட்ட

சீவன்கள்தான்

நம்மவர்களைப் பொறுத்தவரை ஒரு பெண் ஒருவனை மட்டும்

மனத்தாலும் உடலாலும் தீண்டுவதைத்தான் கற்பென்று

நினைக்கிறார்கள் சொல்கிறார்கள் நெடுக்ஸ் சொல்வதுபோல்

என்னைக் கேட்டால் கற்பு என்பது.. உடல் உளம் சார்ந்த ஒரு பாலியல் ஒழுக்கம் என்று சொல்வேன். அப்படி ஒன்றில்லை என்பது தவறானது. கற்பை பாதுகாக்க முடியாது என்பதும் தவறானது. பாதுகாக்க முடியும் என்பதை நான் அனுபவத்தால் கண்டிருக்கிறேன்.
ஆனால் கருத்து எழுதிய அனைவரும் ஓன்றை மறந்துவிட்டார்கள்

நம்நாட்டுப்பிரச்சினையில் சீரழிந்த சீரழிக்கப்பட்ட நமது

சகோதரிகள் தாய்மார் சிறுமிகள் மற்றும் நாம்

போற்றி வணங்கும் நமது பெண் போராளிகள்

இவர்கள் என்ன கற்பிழந்தவர்களா?

RasaRaasan

View Member Profile

Add as Friend

Send Message

Find Member's Topics

Find Member's Posts Sep 11 2009, 03:07 PM Post #8

Advanced Member

Group: கருத்துக்கள உறவுகள்

Posts: 69

Joined: 23-August 09

Member No.: 7,077

கற்பு நெறி என்பது உடல் சார்ந்த தன்மை அல்ல அது உள்ளம் சார்ந்த தன்மை ஆகும். குறிப்பாக கற்பு நெறி பற்றி பேசுகின்றபோது அது பெண்ணுக்கான பாலியல் ஒழுக்கமாக மட்டுமே நோக்கப்படுகின்றது. பெண்ணுக்கு மட்டுமின்றி ஆணுக்கும் இது பொருந்தும் என்பதை அநேகர் ஏற்றுக்கொள்ளுவதில்லை. கற்பு என்ற சொல் பெண்ணுக்காகவே உருவாக்கப்பட்டது என்பது அவர்கள் எண்ணம். காமுகன் ஒருவனால் வன்புணர்வு செய்யப்பட்ட பெண்னை கற்பிழந்தவள் எனக் கொள்வது படுபாதகம். காதலிக்கும் போது தங்கள் உண்மைத் தன்மையை காண்பிக்கப் போய் வஞ்சிக்கப்பட்ட பெண்களும் இந்;த வரையறைக்குள் அடக்கப்படக் கூடாது என்பது எனது கருத்து. பெண்ணுக்கு மட்டும் கற்பு தேவை என்கிற ஒருதலைக் கற்பு நெறி உள்ளவரை சமுதாய மாற்றம் ஏற்படப் போவதில்லை. ஆண்களின் ஒழுக்கப் பிறழ்வினால் ஏற்பட்ட வடுக்களை பெண்கள் மட்டுமே சுமப்பது நீதி ஆகாது. அதற்காக பெண்கள் எல்லோரும் பத்தினிகள் என்றும் சொல்லவும் கூடாது.

ராசராசனின் கருத்தே என்கருத்தும்

Link to comment
Share on other sites

அது நான்தான்.ஏனென்றால் நான் காதலிச்சவரையே கலியாணம் கட்டி

சந்தோசமாயிருக்கிறேன்

காதலித்தவனையே கல்யாணம் கட்டி சந்தோசமாக இருந்தால் தான் கற்பு என்றிங்கள் அப்படி கட்டினவன் இருக்க உங்கட செய்கைகளால் மற்றவனை சலனமடைய வைக்கிறிங்களே அப்ப அதற்கு பெயர் என்னங்கோ? சும்மா சும்மா உதட்டை எல்லோருக்கும் காட்டுறிங்களே அது தான் கேட்டன்? நீங்கள் கற்பு என்றால் இது தான் என்றிங்க அது தான் அப்படி சொன்னன் மற்றப்படி உதட்டை நெளிக்கிறது உங்க விருப்பம் . :lol:

Link to comment
Share on other sites

காதலித்தவரையே கலியணம் செய்து சந்தோசமாயிருக்கிறேன்..என்று நான் எழுதியதன் காரணம்.. எங்கள் சமூதாயத்திலை காதலிப்பது என்பதே கற்பு போனமாதிரித்தான் ..அதைத்தவிர அவனை கலியாணம் செய்து ஒன்றாக முக்கியமாக பொருளாதார ரீதியாக நன்றாக இருந்தால்.. அவர்கள் வெற்றி பெற்றவர்கள்..கற்பானவர்கள்..இங

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு நான் வரவேற்பு பகுதியில்; முத்தப்படங்களை இட்டதற்கே என்னை சந்தேகப்படும் ஒரு சமூகத்தில் தான் நான் வாழ்ந்துகொண்டிருக்கிறேன் என்பதே வெட்கக்கேடானதொருவிடயமாகவே எனக்கு தெரிகிறது.

தங்கைச்சி முத்தம் எண்டது அசிங்கமில்லை.

அது எவரவருக்கு எங்கெங்கு முத்தமிடுவதில்த்தான் பிரச்சனையே?

முத்த அவாட்டரை முன்னணியாய் இணைத்த உங்களுக்கு அதன் தார்ப்பரியங்கள் நிச்சயமாக தெரிந்திருக்கும்.அல்லது தெரிந்திருக்க வேண்டும்?

Link to comment
Share on other sites

காதலித்தவரையே கலியணம் செய்து சந்தோசமாயிருக்கிறேன்..என்று நான் எழுதியதன் காரணம்..

இல்லை.. நீங்கள் அப்படி சொல்லவில்லை...

"இந்த உலகில் கற்பில் சிறந்தவரை சொல்லுங்கள் பார்க்கலாம்?" என்ற கேள்விக்கு பதிலாக "அது நான்தான்.ஏனென்றால் நான் காதலிச்சவரையே கலியாணம் கட்டி சந்தோசமாயிருக்கிறேன்" என்று சொல்லியிருந்தீர்கள். காதலித்தவனை கட்டாத பெண்கள் எல்லாரையும் விட போலி தூய்மைவாததினை துணக்கு அழைத்து உங்களை உசத்தியாக உருவகப் படுத்தி சொல்லியுள்ளீர்கள்

மற்றப்படி,

உங்களின் இரண்டாவது பதிலில் தெரிவித்துள்ள ஏனைய கருத்துகளுடன் உடன்படுகின்றேன். தெளிவான கருத்துகள்...அடிப்படை வாதத்தால் நிரம்பிய எம் சமூகத்தில் உங்களின் கருத்துகள் அவற்றில் இருந்து விடுபட்டு உள்ளன

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
காதலித்தவரையே கலியணம் செய்து சந்தோசமாயிருக்கிறேன்..என்று நான் எழுதியதன் காரணம்.. எங்கள் சமூதாயத்திலை காதலிப்பது என்பதே கற்பு போனமாதிரித்தான் ..அதைத்தவிர அவனை கலியாணம் செய்து ஒன்றாக முக்கியமாக பொருளாதார ரீதியாக நன்றாக இருந்தால்.. அவர்கள் வெற்றி பெற்றவர்கள்..கற்பானவர்கள்..இங
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுயஇன்பம் செய்திருக்கின்றனர்..இப்படிப்

பார்த்தால் இங்கும் கற்பு என்கிற கோட்பாடு உடல்ரீதியாகவும் அடிபட்டு போகின்றது.

கற்பு என்பது பாலியல், உடல், உள ஒழுக்கம் சார்ந்த ஒன்று..! பருவ வயதை அடையும் ஆணுக்கோ பெண்ணுக்கோ.. பாலியல் சம்பந்தப்பட்ட கனவுகள்.. கழிசல்கள்.. வீசல்கள். ஏற்படுவது..உயிரின் இயல்பு என்றாலும்.. இயற்கையானது. அதற்கான இன்னொருவரோடு அல்லது அடுத்தவரின் மனதோடு.. உடலோடு நிஜத்தில் உறவாடல்கள் அல்லது அதனால் ஏற்படக் கூடிய தூண்டல்களை உணர்வுகளை அவை நேரடியாக உணர்பவையாகவோ.. அல்லது பாதிப்புக்களை உருவாக்குவனவாகவோ இருப்பதில்லை.

கற்பு என்பது கன்னித் தன்மை... காப்பதில் மட்டும் தங்கி இருக்கவில்லை...! திருமணமானவர்களுக்கும் கற்பு என்ற பாலியல் உடல் உள ஒழுக்கம் இருக்கிறது. பாலியல் என்பது கட்டுப்பாடு இருக்க வேண்டிய ஒரு உணர்வு என்பதனாலே.. இயற்கை கூட கட்டுப்படுத்தி வைத்திருக்கிறது. இதயம் நிமிடத்துக்கு 72 தடவை துடிக்க விடப்பட்டிருக்கிறது. ஆனால்.. பாலியலை இயற்கை நிமிடத்துக்கு 72 தடவை செய்யத் தூண்டுகிறதா.. இல்லையே.. ஏன்..???!

குறிப்பிட்ட ஒரு விடயத்தில் கட்டுப்பாடுகள் அற்றிருப்பதை தான் கற்பிழந்தது என்பதன் பதத்தால் கட்டுப்படுத்த நினைத்திருக்கிறார்கள். இதில் அடிப்படை வாதம் பேசுவது அபந்தமானது.

அடிப்படை வாதம் என்று நோக்கின் திருமணம் செய்து கொள்வது கூட ஒரு அடிப்படை வாதத்திற்கு கட்டுப்படுவது போன்றதே..!

காதலில் கூட கற்பு இருக்கிறது. அது அவரவர் உணர்வைப் பொறுத்து வேறுபடும். கற்பு என்பது ஒன்றோடு வாழ்ந்துவிடுவது.. கன்னித்தன்மை காப்பது என்பதில் மட்டும் அடங்கி இருக்கவில்லை. அது உங்களின் சொந்த பாலியல், உடல், உள ஒழுக்கம் சார்ந்தே பெரிதும் தங்கி இருக்கிறது.

உதாரணத்துக்கு.. ஒரு திருமணமான கணவன் அல்லது மனைவி.. அந்தக் கணவனின் அல்லது மனைவியின் உள விருப்புக்கு எதிராக உறவாடுவது கூட கற்புத் தவறிய செயல்தான். அதுவும் ஒரு பாலியல் வல்லுறவுத்தான்.

கற்பு எனது பெண்ணிற்கானது மட்டுமல்ல. ஆணிற்கானதும்.. கூட..! :lol: :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதெல்லாம் சரி..! இதுவரைக்கும் நீங்கள் குப்புறக் கவுண்டடிச்சுப் படுத்து கனவே கண்டதில்லையா? அதைச் சொல்லுங்கோ முதலில..! :lol:

ஐயோ கற்புக்கும் குப்புறக் கவுண்டு படுக்கிறதுக்கும் என்னங்க சம்பந்தம்?

Link to comment
Share on other sites

நூணா இதில் விவாதிக்க ஒன்றுமே இல்லையே அவர் வரவேற்பை பார்த்தாலே புரியவில்லையா ஆண் என்று... கேட்டால் இல்லை என்று சொல்லுவார்கள்..கேட்டு முக்கு உடை வாங்குவதை விட கேட்கமால் இருப்பதே நல்லம் :lol:

ஆத்தி இது முந்தி கூட இருக்குப்பா இங்க... இதை எல்லாம கண்டு பிடிக்க வெளிக்கிட்டால நம்ம தலை தான வெடிக்கும். ( அனுபவம்) :lol:

ஐயோ கற்புக்கும் குப்புறக் கவுண்டு படுக்கிறதுக்கும் என்னங்க சம்பந்தம்?

அதுதானே.... :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதில விளக்கம் தாற அளவுக்கு எனக்கு ஒண்டும் தெரியா..தெரிஞ்சாலும் சொல்ல மாட்டன்...! :lol:

இருந்தாலும், மற்ற ஆக்கள் என்ன சொல்லினம் என்று வாய்ப்பனோட இருந்து வாய் பார்க்கலாம் என்று வந்தேன்!!

நீங்க கதையுங்கோ..... :(

இளையபிள்ளை அண்ணா இப்ப தான் புரியுது ஏன் உள்ளை வந்தன் என்று

வெளியிலை இருந்து வேடிக்கை பார்ப்பதுதான் நல்லது :D

இதற்கான அறுவை சிகிச்சை பற்றி ஏற்கனவே வந்து விட்டது. இதைபற்றி யாழில் எழுதி வெட்டு வாங்க விரும்பவில்லை. என்றாலும் அரபு பெண்கள் அடிக்கடி இத்தாலி பக்கம் ஏன் போகிறார்கள் என்ற செய்தியை மட்டும் சொல்கிறேன். இம்ஸா உல்லா. :lol:

ஓம் நுணா அண்ணா...

மோகன் அண்ணா தான் கற்பைக் கட்டிக் காப்பாத்துறார் :lol: (யாழின்)

கத்தியோடை நிக்கிறார் கவனம் :D

Link to comment
Share on other sites

ஓஓ அவாவா நீங்கள்???

மருதங்கேணி..நான் அவாவாக இருந்தாலென்ன அதுவாக இருந்தாலென்ன என்னுடைய கணவர்தான் அதைப்பற்றிக்கவலைப்பட வேண்டும் அதைப்பற்றி நீங்கள் கவலை கொள்ளவேண்டாம்..நீங்கள் எதுவாக இருக்கிறீர்கள் என்பதும் என்னுடைய ஆராச்சியல்ல...ஆனாலும் ஒரு பெண் சமமாக தங்களுடன் கருத்துக்களை வைப்பதை எமது சமூகத்தில் 80 வீதமான ஆண்கள் விரும்புவதில்லை..அப்படி யாராவது எங்காவது கருத்துச்சொல்லிவிட்டால்..உட

னேயே இது போன்று அதுவாக இருக்கலாமா??இதுவாக இருக்கலாமா?? யாராக இருக்கும் என்று ஆராச்சி செய்வது மட்டுமல்ல.பதில் கருத்து வைக்கமுடியாத கோழைகளாய் அந்தப் பெண்ணின் வாயை அடைத்து அவளை அங்கிருந்து துரத்திவிடுவதே ஆண்களின் குணமாக இருக்கின்றது.. புலம்பெயர்ந்து வந்த தேசங்களிலும் இன்னும் பலர் மாறவில்லை..நான் எதுவாகஇரக்கிறேன் என்கிற ஆராச்சியை விடுத்து முடிந்தால் பதில் கருத்தை வையுங்கள்..

Link to comment
Share on other sites

இல்லை.. நீங்கள் அப்படி சொல்லவில்லை...

"இந்த உலகில் கற்பில் சிறந்தவரை சொல்லுங்கள் பார்க்கலாம்?" என்ற கேள்விக்கு பதிலாக "அது நான்தான்.ஏனென்றால் நான் காதலிச்சவரையே கலியாணம் கட்டி சந்தோசமாயிருக்கிறேன்" என்று சொல்லியிருந்தீர்கள். காதலித்தவனை கட்டாத பெண்கள் எல்லாரையும் விட போலி தூய்மைவாததினை துணக்கு அழைத்து உங்களை உசத்தியாக உருவகப் படுத்தி சொல்லியுள்ளீர்கள்

மற்றப்படி,

உங்களின் இரண்டாவது பதிலில் தெரிவித்துள்ள ஏனைய கருத்துகளுடன் உடன்படுகின்றேன். தெளிவான கருத்துகள்...அடிப்படை வாதத்தால் நிரம்பிய எம் சமூகத்தில் உங்களின் கருத்துகள் அவற்றில் இருந்து விடுபட்டு உள்ளன

நிழலி ஏதோ ஒரு படத்தில் பாக்கியராஜா பல ஆண்களைப் பார்த்து உலகில் கற்பில் சிற்ந்த பெண்கள் யாரென்று கேட்டபார் உடைனை எல்லோரும்..கண்ணகி..அகலிகை.. அருந்ததி ..வாசுகி என்பார்கள் உடைனையே பாக்கியராஜா கேட்பார் உங்கடை மனைவிமார்கள் யாருமே கற்பில் சிற்நதவர்கள் இல்லையா என்பார்...அது நகைச்சுவை காட்சிதான் ஆனால் அர்த்தமுள்ள காட்சி..அதே போலத்தான் இங்கும் கற்பில் சிறந்தவர் என்று கேட்டதும் முதலில் நானே சிறந்தனான் என்று சொன்னேன்..மற்றபடி இல்லாத ஒரு விடயத்தைபற்றி கதைப்பதில் பயனில்லை..கற்பு என்பதும் ஒரு கற்பனைதான்..மற்றும்படி என்னை சக கருத்தாளராய் மதித்து நட்புடன் பதில் எழுதியதற்கு நன்றிகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுமங்களா ,

அதற்காக முத்தப் படங்கள் இடுவதை நிறுத்த வேண்டாம் . :lol:

11077.gif

Link to comment
Share on other sites

சுமங்களா ,

அதற்காக முத்தப் படங்கள் இடுவதை நிறுத்த வேண்டாம் . :rolleyes:

11077.gif

தமிழ் சிறி, நீங்கள் "ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணாயிரு"க்கிறியள். :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் சிறி, நீங்கள் "ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணாயிரு"க்கிறியள். :rolleyes:

(இ)ச்சும்மா ...... கிடைக்கிறதை யார்தான் வேண்டாம் என்று சொல்வார்கள் ராசராசன். :lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 17. MI என்று எழுதி  விடுங்கோ.  நன்றி 
    • வெற்றி பெற‌ வாழ்த்துக்க‌ள் ச‌கோ🙏🥰..............................
    • "சிவப்பு உருவம்"   இரத்தினபுரி கஹவத்தையில் தொடங்கிய கிறீஸ் மர்ம மனிதன் விவகாரம் ஒரு ஊரிலோ, ஒரு மாவட்டத்திலோ மட்டுமல்லாமல், இலங்கையின் பல்வேறு மாவட்டங்களிலும், குறிப்பாக தமிழர், முஸ்லீம்கள் செறிந்து வாழும் பகுதியிலேயே இடம்பெற்றன. இச்சம்பவங்கள் 2011 ஆம் ஆண்டு ஜூலையில் ஆரம்பித்து ஆகஸ்ட்  மாதத்தில் கடுமையாக பரவியது. க்ரீஸ் பூதம் என்பது ஒரு திருடனாகும். அவன் வழமையில் உள்ளாடை மாத்திரமே அணிந்து கொண்டு உடல் பூராவும் க்ரீஸைப் பூசியிருப்பான். துரத்திச் செல்வோர் பிடிக்க முடியாமல் வழுக்கி விழக் கூடிய விதத்தில் க்ரீஸ் பூசப்படுவதுடன், திருடன் இலகுவாகத் தப்பிச் செல்வதற்கும் அது உதவியாக அமைந்து விடும். இப்படியான ஒரு கால கட்டத்தில் தான் நான், மலையகம் பகுதியில் தற்காலிகமாக வேலை நிமிர்த்தம் விடுதி ஒன்றில் தங்கி இருந்தேன்.   நான் தங்கி இருந்த விடுதி, கடல் மட்டத்திலிருந்து 1000-1500 மீட்டர் உயரத்திற்கு உயர்ந்து நிற்கிறது. இந்தப் பகுதி மிகவும் அமைதியாகக் காட்சியளிப்பதுடன் ஒரு  நீர்வீழ்ச்சிக்கு மேலே மலைப்பகுதியில் அமையப் பெற்றுள்ளது. இங்கு இயற்கை எழில் சூழ்ந்த தேயிலை தோட்டங்கள், நீரோடைகள் மற்றும் நீர்வீழ்ச்சிகள் நிறைந்து காணப்படுகின்றன. மொத்தத்தில்  புத்துணர்ச்சி அளிக்கும் ஒரு குளிர் பிரதேசம் ஆகும். ஒரு வரவேற்பு கம்பளம் போல அமைக்கப் பட்ட மரகத பச்சை தேயிலை தோட்டங்களின் அழகை பார்த்தால் உங்களுக்கு மனதில் ஒருவித மகிழ்ச்சி பொங்கி வழியும். ஆமாம், நீர்வீழ்ச்சிகள், பச்சை பசேல் புல்வெளிகள் மற்றும் அடர்ந்த தேயிலை தோட்டங்கள் இயற்கையாகவே காதலர்களின் கனவை நனவாக்குகிறது. அதற்கு நானும் விதிவிலக்கல்ல.   தேயிலை தோட்ட பாடசாலை ஒன்றில் கல்வி கற்பிக்கும் ஆசிரியை செல்வி சயந்தியின் தொடர்பு, தற்செயலாக, அந்த பாடசாலையில் நடந்த தைப்பொங்கல் திருவிழா மூலம் கிடைத்தது. அவர் தான் அங்கு நடந்த நாட்டிய மற்றும் நாடகத்துக்கு பொறுப்பாக இருந்தார். அந்த நிகழ்வின் சிறப்புத் தன்மையை போற்ற அவரை சந்தித்தது, அவரின் அழகிலும் நடத்தையிலும் என்னை கவர வைத்து விட்டது. அதன் பின் ஏற்பட்ட நட்பு நாளடைவில் காதலாக இருவர் மனதிலும் மலர்ந்தது  .    "சிலுசிலு எனக் காற்று வீச கமகம என தேயிலை மணக்க  தொளதொள சட்டையில் வனப்பை காட்டி கிளுகிளுப்பு தந்து கூப்பிடுவது எனோ ?"   "தளதள ததும்பும் இளமை பருவமே   தகதக மின்னும் அழகிய மேனியே  சலசல என ஆறு பாய  வெலவெல என நடுங்குவது எனோ?"    "கலகல பேச்சு நெஞ்சை பறிக்க படபட என இமைகள் கொட்ட   கிசுகிசு ஒன்றை காதில் சொல்லி  சரசர என்று ஓடுவது ஏனோ ?"    ஒரு சனிக்கிழமை நாம் இருவரும் சந்தோசமாக தனியாக கழிக்க நுவரெலியா மாவட்டத்தில் ஹோட்டன் சமவெளியின் (Horton Plains) முடிவுடன் 1,200  மீட்டர் உயரத்தில், 700 - 1000 மீட்டர் செங்குத்து ஆழத்தைக் கொண்ட  உலக முடிவு [world's end] போய் பின், 19 மைல் நேரடி தூரத்தை அல்லது இருமடங்கு வீதி வழித் தூரத்தை கொண்ட  பதுளை மாவட்டத்தில் உள்ள எல்ல [எல்லா / Ella] நகரம் சென்று அங்கு ஒரு நீரூற்றுக்கு அருகில் உள்ள 98 ஏக்கர் உல்லாசப் போக்கிடத்தில் [98 Acres Resort & Spa] தங்கி, ஞாயிறு மாலை அங்கிருந்து திரும்பினோம். இருவரும் மிக மகிழ்வாக பேருந்தில் இருந்து இறங்கி, எம் விடுதிகளுக்கு கால்நடையாக பேசிக் கொண்டு நடக்கத் தொடங்கினோம். நாம் அந்த கும்மிருட்டில் தேயிலை தோட்டங்கள் மற்றும் மரங்களுக்கிடையில் ஒரு மைல் நடக்கவேண்டும். ஆனால் எமக்கு அது பிரச்சனையாகவோ பயமாகவோ இருக்கவில்லை. அவள் அந்த ஊர் ஆசிரியை. நான் அந்த நகர பொறியியலாளர். எம்மை எல்லோருக்கும் தெரியும். அந்த ஊர் மக்கள் மிகவும் மரியாதையும் கண்ணியமும் ஆனவர்கள்.       ஆனால் எம் கணக்கு தப்பு என்பதை சிறிது தூரம் இருவரும் கைகள் கோர்த்தபடி இருட்டில் ஏதேதோ சந்தோசமாக பேசிக் கொண்டு போகும் பொழுது தான் சடுதியாகத் தெரிந்தது. கொஞ்ச தூரத்தில், மரங்களுக் கிடையில் சிவத்த சால்வை அல்லது  துப்பட்டா மட்டும் தலையை மூடி தொங்க, கைவிரல்கள் மட்டும் எதோ கையில் இருக்கும் சிறு ஒளியில் ஒளிர , ஒரே இருட்டான ஒரு சிவப்பு உருவம் எம்மை நோக்கி வருவதைக் கண்டோம்.     கிழக்கு மாகாணம், மலையகம் மற்றும் நாட்டின் சில பகுதிகளில், யாழ்ப்பாணம் உட்பட கிறீஸ் மனிதன் விவகாரம் அடிக்கடி பத்திரிகையில் வருவதைப் பார்த்துள்ளேன், ஆனால் இந்த சிவப்பு உருவம் ஒரு சிவப்பு துணியால் தலையை மூடி தொங்க விட்டுக் கொண்டு வருவது ஆச்சரியமாக இருந்தது. ஒரு வேளை கிறீஸ் பூதத்தின் பரிணாமமாக இருக்கலாம்? அப்படியாயின் அவனை மடக்கி பிடிக்க முடியாது, அவன் உடல் வழுக்கும். ஆனால், அவன் சிவப்பு துணி தொங்க விட்டு வருவது எனக்கு சாதகமாக தெரிந்தது. அந்த துணியை வைத்தே அவனை மடக்க நான் தீர்மானித்தேன். ஏறுதழுவுதல் அல்லது ஜல்லிக்கட்டுவில் நான் நல்ல பயிற்சி பெற்றவன் என்பது எப்படி அவனுக்கு தெரியும்? காளைகளின் கொம்புகளை பிடித்து மடக்கும் தமிழர்களின் வீர விளையாட்டுக்கும் சிவப்பு நிற துணியை காளையிடம் காட்டி மடக்கும் ஸ்பெயின் நாட்டு விளையாட்டுக்கும் உள்ள வேறுபாடு அவனுக்கு என்ன தெரியும் ?. சிவப்பு துணியுடன் எம்மை நோக்கி வருகிறானே, இந்த சிவப்பு உருவம்!    நான் மிக நிதானமாக, ஆனால் அவசரமாக அவளிடம் எனது பையில் இருந்த சிகரெட் தீமூட்டியை கொடுத்து, பக்கத்தில் இருந்த மரத்தின் பின் ஒழிந்து இருந்து, அவன் என்னை நெருங்கும் பொழுது அதை தீம்மூடி அவனின் சிவப்பு துணிக்கு எரியூட்டக் கூடியதாக  எறியச் சொன்னேன். அவள் உயர் வகுப்புக்கு பிரயோக கணிதம் படிப்பிக்கும் ஆசிரியர் தானே, ஆகவே அவள் சரியாக செய்வாள் என்பதில் நல்ல நம்பிக்கை எனக்கு இருந்தது. அது மட்டும் அல்ல, பெரும்பாலான கிறீஸ் வகைகள் இலகுவாக எரியக்  கூடியவையும் ஆகும். நானும் கவனமாக அவன் நெருங்கும் பொழுது சிவப்பு துணியின் இரு தொங்களையும் தேவைப்பட்டால் பிடித்து இழுத்து, சிவத்த உருவத்தை  மடக்கி பிடிக்க ஆயத்தமாக முழு பலத்துடன் இருந்தேன்.   இந்த கிறீஸ் மர்ம மனிதர்கள் துட்டுகைமுனு அரசனின் வாளைத் தேடி அலைந்ததாக எத்தனை கதைகள் அன்று செய்திகளாக வந்தன. இது ஒன்றே இவர்கள் தமிழர்களை குறி வைத்து தாக்கியதுக்கு சிறந்த உதாரணமாக இருக்கிறது. எல்லாளனின் நீதியான, சமத்துவமான, எதிரியையும் மதிக்கும் திறமையான ஆட்சிக்கு எதிராகவே அன்று அவன் சைவ மதத்தான் என்ற ஒரே காரணத்தால் துட்டுகைமுனு அவனை எதிர்த்தான் என்பது வரலாறு. அப்ப சிங்களம் என்ற மொழி வளர்ச்சி அடையாத காலம். ஆகவே சிங்கள தமிழ் வேற்றுமை அங்கு இருக்க முடியாது. அது மட்டும் அல்ல துட்டுகைமுனு சிங்களவனாக இருக்கவும் முடியாது. அது தெரியாத முட்டால்கள் தான் இந்த கிறீஸ் பூதங்கள்!    எல்லாம் நாம் திட்டம் போட்ட படி  நிறைவேற, பாவம் அந்த சிவப்பு உருவம் என்னிடம் முறையாக அகப்பட்டார். என் நீள்காற் சட்டையின் வார், அந்த சிவப்பு உருவத்தை, ஒரு மரத்துடன் கட்ட உதவியது. அவன் உடலில் ஏற்பட்ட எரிகாயங்களால் சத்தம் போட, ஊர்க்காரர்கள் எல்லாம் திரண்டு விட்டார்கள். அதன் பின் எமக்கு என்ன வேலை. அவர்களிடம் மிகுதி பொறுப்பை கொடுத்து விட்டு நாம் எம் விடுதிகளுக்கு போனோம் . ஆனால் அவள் இன்னும் அந்த அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை!  ஆகவே அவளை என் விடுதியில் உறங்க சொல்லி விட்டு , காவலுக்கு அவள் பக்கத்திலேயே , அவளை, அவள் அழகை ரசித்தபடி, அந்த சிவப்பு உருவத்துக்கு நன்றி கூறிக்கொண்டு இருந்தேன்!!    "சயனகோலம் அவளின் அழகு கோலம்  சரிந்த படுக்கையில் தேவதை கோலம்  சங்கு கழுத்து சிவப்பாய் ஒளிர்ந்து  சங்கடம் தருகிறது அவளின் பார்வை"     "சயந்தி அவள் இந்திரன் மகள் சந்திரன் போன்ற அழகு நிலா  சரீரம் தரும் கவர்ச்சி மயக்கத்தில்  சற்று நானும் என்னை மறந்தேன்"     "சக்கர தோடு கழுத்தை தொட  சடை பின்னல் அவிழ்ந்து விழ  சலங்கை கால் இசை எழுப்ப  சங்காரம் செய்யுது இள நகை"   [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]     
    • "காலம் மாறும் கவலைகள் தீரும்?"     'காலம் மாறும் கவலைகள் தீரும்' கேட்க நல்லாகத் தான் இருக்கிறது. ஆனால் இலங்கை தமிழர்கள் வாழ்வில், 76 ஆண்டுகள் கடந்தும் இன்னும் கவலைகள் தீரவில்லை என்பதே உண்மை! தன் மகனை, இராணுவம் விசாரணைக்கு என்று கூப்பிடும் பொழுது, தானே தன் கையாயால், இராணுவத்திடம் ஒப்படைத்த தாயின் மற்றும் தங்கையின் கண்ணீர் மூன்று தசாப்தம் கடந்தும் இன்னும் வடிந்து கொண்டே இருக்கிறது. காலம் மட்டும் மாறியுள்ளது. ஆமாம் யுத்தம் முடிந்தே பதினைந்து ஆண்டுகள் கடந்து விட்டது. இலங்கை சூழ்நிலை எவ்வளோவோ மாறி உள்ளது, ஆனால் தமிழரின் வாழ்வில் மட்டும், தமிழ் மொழியின் அரச பாவனையில் மட்டும் எந்த மாற்றமும் இல்லை, முன்னையதை விட பின்னோக்கியே போய்க் கொண்டு இருக்கிறது!   அவன் அப்போது உயர்தர பரீடசை எடுத்து விட்டு மறுமொழிக்காக காத்திருந்த காலம். யாழ் மத்திய கல்லூரியில் படிப்பில் முதலாவதாகவும் விளையாட்டில் சிறப்பாகவும் திகழ்ந்தவன். குடும்ப சூழலை முன்னிட்டு, பரீடசைக்கும் மறுமொழிக்கும் இடையில் இருக்கும் இடைவெளியில்  அவன் காங்கேசன் துறை சீமெந்து தொழிற்சாலையில் ஒரு தற்காலிக வேலை எடுத்து, அதில் மிக ஈடுபாடுடன் வேலை செய்து கொண்டு இருந்தான்.    யாழ்ப்பாணத்தின் வடக்கே காங்கேசன் துறையில் சுமார் 700 ஏக்கர்கள் இடப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்தத் தொழிற்சாலையில் சுமார் 1500 தொழிலாளர்கள் வரை கடமையாற்றினர். வருடமொன்றிற்கு சுமார் 760 000 மெற்றிக் தொன் சீமெந்து இங்கிருந்து உற்பத்தி செய்யப்பட்டது. சீமெந்து உற்பத்திக்கான மூலப்பொருட்களில் சுண்ணாம்புக்கல் அருகிலுள்ள நிலப்பகுதிகளில் இருந்தும் களிமண்ணானது மன்னாரின் முருங்கன் பகுதியில் இருந்தும் பெறப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது.    அவனின் பொல்லாத காலம்  இந்தத் தொழிற்சாலையின் செயற்பாடுகள் போர்ச்சூழலின் காரணமாக 1990 ஆம் ஆண்டு இடைநிறுத்தப்பட்டன. அது அவனை பெரிதாக பாதிக்காவிட்டாலும்,  அதை தொடர்ந்து ராணுவத்தின் சந்தேகம் அங்கு வேலையில் இருந்த இளம் தலைமுறையினர் பக்கம் சென்றது தான் அவனுக்கு பிரச்னையைக் கொடுத்தது. அவனை விசாரணைக்கு என, வீடு வந்து கேட்கவும், அவனின் தாய்,  விசாரணையின் பின் விடுவார்கள் என்ற நம்பிக்கையில் தானே, ராணுவ கேம்ப் போய் கொடுத்ததை முப்பத்தி மூன்று ஆண்டுகள் கழித்தும் இன்னும் சொல்லிக் கொண்டே இருந்தாள் .       எத்தனை அரசு மாறிவிட்டது. ஆனால் என்ன பிரயோசனம்? தமிழ் பேசும் மக்களின் அடிப்படை உரிமையும் பிரச்சனையும் மட்டும்  தீர்ந்தபாடில்லை. இலங்கையில் 1990களில் இருந்து, 2014 வரை வடக்கு - கிழக்குப் பகுதிகளில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயிருப்பதாக சொல்லப்படுகிறது. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், சுமார் ஐந்து / ஆறு வருடங்களுக்கு மேலாக தொடர் போராட்டங்களை அவர்களது உறவினர்கள் முன்னெடுத்து வருகின்றனர். இவ்வாறு போராட்டங்களை முன்னெடுத்த பெற்றோரில் பலர், இன்று உயிர் இழந்துவிட்டனர். அப்படித்தான் இவனின் தாயும் கடந்த ஆண்டு இறந்துபோனார் என்பது கவலைக்குரிய செய்தியாகும். என்றாலும் இப்ப அவனின் தங்கை அந்த பொறுப்பை எடுத்துள்ளாள்.   அவள் திருமணம் செய்து இரு பிள்ளைகளின் தாய். கணவனோ ஒரு விபத்தில் சிக்கி, ஊனமுற்றவராக இருந்தாலும் வீட்டில் இருந்து பிள்ளைகளை கவனிப்பதுடன் நிகழ்நிலையில் கணக்காளர் பணி [Online accountant job] புரிகிறார். அவளும் உயர்வகுப்பு கணித ஆசிரியை. அவர்களின் வருமானம் காணும் என்றாலும், அண்ணனின் தேடுதல் தொடர்ந்து கவலையையே  கொடுத்துக் கொண்டு இருந்தது. இந்த நிலையில், இன்று  ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்குவதாக அரசாங்கத்தின் உயர்பீடம் அறிவித்தது, அவளுக்கு கையும் காலும் ஓடவில்லை. பாடசாலையில் இருந்து கவலை தோய்ந்த நிலையில் வீடு திரும்பினாள். கணவன், அவளின் இரு பிள்ளைகளும் அவளையே உற்று நோக்கினார். என்ன செய்வது என்று ஒருவருக்கும் புரியவில்லை. காலம் இன்று மாறி உள்ளது என்பது உண்மையே. ஆனால் இவர்களின் கவலை மட்டும் இன்னும் தொடர்கிறது!   “காலம் ஒருநாள் மாறும் – நம் கவலைகள் யாவும் தீரும் வருவதை எண்ணி சிரிக்கின்றேன் வந்ததை எண்ணி அழுகின்றேன் சிலர் அழுவார் சிலர் சிரிப்பார் – நான் அழுதுகொண்டே சிரிக்கின்றேன்”   தன் வாழ்வும் தன் பிள்ளைகளின் வாழவும் சரியாக வருவதை எண்ணி மகிழும் அதே நேரத்தில், வந்ததை , ராணுவத்திடம் விசாரணைக்காக நேரடியாக தாயால் ஒப்படைக்கப் பட்ட அவளின் அண்ணாவை எண்ணி இன்னும் அழுது கொண்டுதான் இருக்கிறாள்!!    அவள் இப்ப போராட்டத்துக்கு தலைமை தங்கினாள். தன் ஆசிரியர் பதவியை தூக்கி எறிந்தாள். "வாழும் வரை போராடு" இப்ப அவளின் தாரகமந்திரம். தாயின் ஆத்மா சாந்தியடைய வேண்டும். அதற்கா எதையும் செய்யத் துணிந்து விட்டாள். அவளுக்கு வேறு வழி ஒன்றும் தெரியவில்லை. இதை  இதனுடன் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். என் பிள்ளைகள் உரிமையுடன் மதிப்புடன் வாழவேண்டும் என்பதே இப்ப அவளின் ஒரே குறிக்கோள் !      "வாழும் வரை போராடு வழி உண்டு என்றே பாடு    இன்று ரோட்டிலே நாளை வீட்டிலே மழை என்றும் நம் காட்டிலே   வீதியில் பாடும் பாடல் நாளை ஊரையே விலை பேசும் எந்நாளும் என் கீதம் மண்ணாழும் உண்மையே ஒரு காலம் உருவாகும் நிலை மாறும் உண்மையே!"   இறுதி யுத்தத்தில் கண்கண்ட சாட்சியாக ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்கப்படுவ தென்றால், கைது செய்யப்பட்ட அனைவரும் கொலை செய்யப்பட்டார்களா? இது தான் அவளின் கேள்வி? இது நியாயமான கேள்வியே! அப்படி என்றால் ராணுவத்திடம் ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதனை அரசு கூற வேண்டும் என்ற சுலோகத்துடன் அவள் வீதிக்கு புறப்பட்டாள்! இனி அவளின் வாழ்வு  நீதி கிடைக்கும் வரை ஓயபோவதில்லை! காலம் ஒரு நாளும் காத்திருக்காது. அப்படி என்றால்? எப்ப அவளின் காட்டில் மழை பெய்யும் ? யாம் அறியேன் பராபரமே!!   "கருணை என்னும் கண் திறந்து காட்ட வேண்டும் காவல் என்னும் கை நீட்டிக் காக்க வேண்டும் ஒற்றுமை கொண்டு ஒன்றாய் நிற்க வேண்டும்  ஒரே குரலில் நீதி விசாரணை கேட்க வேண்டும்!"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]       
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.