Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

» வருங்கால மனைவிக்கு கற்பு தேவை இல்லை 63 சதவீத ஆண்கள் கருத்து !


Recommended Posts

இங்கு யாரென்றே தெரியாத உங்களிற்கும் எனக்கும் பொருத்தம் பார்க்க புறப்பட்டுவிட்டார்கள் இனி திருமணம் இல்லை கள்ள தொடர்பை ஏற்படுத்தி பிள்ளையும் பெற வைத்து விடுவார்கள் அதனால்தான் நான் இங்கிருந்து விலகிக்கொள்கிறேன்..வாழ்க கற்பு.

அடுத்தவர்களின் புலம்பல்களுக்காக எனது கருத்துச் சுதந்திரத்தை நான் ஒரு போதும் விட்டுக் கொடுத்ததில்லை. கருத்தில் தவறிருந்து அதை முறையாகச் சுட்டிக் காட்டும் போது ஏற்றுக் கொள்ளத் தயங்கியதுமில்லை. மொத்தத்தில் புலம்பல்களை நான் காதில் வாங்குவதில்லை.

:rolleyes: அதுசரி " வாழ்க கற்பு " என்று வாழ்த்தியுள்ளீர்கள். யாரின் கற்பை ?? :unsure:

Link to comment
Share on other sites

  • Replies 161
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அக்காளுக்கு தம்பி, மாமாவுக்கு மருமேன், என்னைப்போய் மாமாவேலை பார்க்கிறதென்று சொல்ல......... அக்கா ஊதா நிறத்தில் சாயம்பூசிக்கொண்டு உதட்டையும் ஒருமாதிரி கடிச்சுக்கொண்டு உரசித்திரியிறா, மாமாவும் தோல்வியில தாடி வளர்த்திருக்கிற மாதிரியிருக்கு, கருத்தாலயும் ஒன்றியிருக்கிறினம், கரைசேர்த்திடுவம் எண்டு பார்த்தா, கலியாணம் வேண்டாம் கள்ளமாத்தான் பிள்ளைபெறுவம் எண்டு நாண்டுபிடிச்சுக்கொண்டு நிக்கினம். :unsure:

Link to comment
Share on other sites

உங்கள் வாதம் புரிகின்றது. சுமங்களா தொடுகைகள் மூலம் இன்பம் பெறுபவர்களையும் ஓரினச் சேர்க்கையாளர்கள் என்று தவறாகக் குறிப்பிட்டாலும் பிறிதொரு இடத்தில், தான் எல்லோரையும் சொல்லவில்லை என்றும் எழுதியுள்ளார். அவரின் நோக்கம் பெரும்பாலானவர்கள் ஏதாவது ஒருவழியில் (தொடுகை போன்ற) தமது இன்பத்தை ஓரளவாவது அடைய முயல்கின்றார்கள் என்பதே. இது ஆண்களுக்கும் பொருந்தும். அதற்காக இப்படியான விதத்தில் இன்பம் பெறுபவர்களை நாம் ஓரினச் சேர்க்கையாளளர் பட்டியலில் சேர்ப்பது தவறு என்பதைத் தான் நானும் வலியுறுத்துகின்றேன்.

மேலும் எல்லோரும் வெளிப்படையாக இப்படியான விடயங்களை பேசவோ அல்லது அது பற்றிய தமது சுய அனுபவத்தை சொல்வதை விரும்புவதோ எமது சமுதாயத்தில் கிடையாது. சமுதாயத்திற்காகவும் பிறருக்காகவும் மட்டுமே தமது கருத்தை தெரிவிப்பவர்களே அதிகம். அதற்காக உண்மையைச் சொல்ல விழைபவர்களெல்லாம் தமது தவறுகளுக்காக சமுதாயத்தைக் கெடுக்கின்றார்கள் என்பதை என்னால் ஏற்றுக் கொளள்ள முடியாது. ஒருமுறை அறிஞர் அண்ணாவைப் பார்த்து, ஒரு பத்திரிகையாளரர் உங்களுக்கும் நடிகை பானுமதிக்கும் தொடர்புள்ளதா எனக் கேட்ட போது, அண்ணா சொன்னார் நான் முற்றும் துறந்த முனிவருமல்ல, பானுமதி படிதாண்டாப் பத்ததினியுமல்லவென. அதனால் அண்ணா சமுதாயத்தை தன் தவறுக்காக கெடுக்கின்றாரென்று சொல்லிவிட முடியுமா ??

தற்போது வட இந்தியாவில் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி பரபரப்பாக பேசப்படுகின்றது. காரணம் அதில் திருமணமான பெண்களை அழைத்து அவர்களின் பாலியல் தொடர்பான கேளள்விகளை முன் வைக்கின்றார்கள். அவர்கள் உண்மையைச் சொன்னால் ஒவ்வொரு பதிலிற்கும் ஒரு இலட்சம் ரூபா பரிசு. அவர்கள் உண்மையையச் சொல்கின்றார்களா என்பதைக் கண்டு பிடிக்க அதற்குரிய இயந்திரமும் பயன்படுத்தப்படுகின்றது. அதில் பல பெண்கள் திருமணத்தின் முன்பும், திருமணத்தின் பின்பும் தமக்குள்ள பிற தொடர்புகளை ஒப்புக் கொண்டு பல இலட்சம் ரூபாய்களை அள்ளிச் சென்றிருக்கின்றார்கள்.

சமீபத்தில் பிரபல சித்தார் மேதை ரவிசங்கர் அவர்களின் புதல்வி பற்றி வந்த பரபரப்பான செய்தியை சிலவேளை நீங்களும் அறிந்திருக்கலாம். அவர் தன்னை நிர்வாணமாக எடுத்த புகைப்படங்களை கணனியில் சேமித்து வைத்து, பின் அவற்றை அழித்துவிட்டு அப்பிள் கொம்பனிக்கு சேர்வீஸ் செய்யக் கொடுத்தார். சேர்வீஸ் செய்தவர் அவர் அழித்த படங்களை அதற்குரிய மென்பொருளைப் பாவித்து மீட்டெடுத்து அதனை மற்றவர்களுக்கும் அனுப்பி வைத்துள்ளார். அதனை வைத்தே இன்னொருவன் ரவிசங்கரின் மகளை மிரட்டிப் பணம் பறிக்க முயற்சித்து மாட்டியிருக்கின்றான்.

இவற்றையெல்லாம் நான் ஏன் குறிப்பிடுகின்றேன் என்றால் பல விடயங்கள் வெளிவராததாலேயே எமக்குத் தெரியாமல் போய்விடுகின்றன. வெளிவருவன சில தான். அவை கூட பிரபலமானவர்களாக இருந்தால்த் தான் வெளி வருகின்றன. இன்றைக்கு 40 - 50 வருடங்களுக்கு முன்னரே கள்ளக் காதலனுடன் சேர்ந்து தனது கணவனைக் கொன்ற பல பெண்கள் பற்றிய கதையை எமது சமுதாயத்திலேயே அறிந்துமுள்ளோம். இன்று காலம் எவ்வளவோ மாறி விட்டது. தற்போது நிலை இன்னும் அதிகரித்திருக்குமா ?? குறையுமா ?? இன்று யதார்த்தமாக யோசித்தால் ஆண் என்ன பெண் என்ன கற்பென்ற சொல்லை ஒரு மாயத் தோற்றத்திற்காகவே பாவிக்கின்றார்கள். நடைமுறையில் கற்பென்றால் கிலோ என்ன விலை என்பதே இருபாலாரரின் கேள்வியும்.

வசம்பண்ணா,

முதலில் நன்றிகள், எனது ஆதங்கத்தை புரிந்துகொண்டதற்கு.

"நடைமுறையில் கற்பென்றால் கிலோ என்ன விலை என்பதே இருபாலாரரின் கேள்வியும்"

ஒரு அறையில் பத்துபேர் இருந்தால் அதில் ஆறுபேர் திருடர்கள் நால்வர் திருடுவதே தப்பு என்பவர்கள்,

ஆனால் அந்த அறையில் இருக்கு எல்லோருமே திருடர்கள் என்று சொல்வதைதான் என்னால் ஏற்று கொள்ளமுடியாது.

மற்றவை நீங்கள் கூறுவதுசரிதான்.

[கட்டி வைக்கவேண்டியதை யாழில் அவுத்து விட்டுடாங்க, கு.சா சொல்வதுபோல் ஊசிபோடவேண்டிவரும் வுடு ஜூட்ட்ட்ட் :unsure: ]

Link to comment
Share on other sites

அக்கா ஊதா நிறத்தில் சாயம்பூசிக்கொண்டு உதட்டையும் ஒருமாதிரி கடிச்சுக்கொண்டு உரசித்திரியிறா, மாமாவும் தோல்வியில தாடி வளர்த்திருக்கிற மாதிரியிருக்கு,

தாங்கள் ஏன் அடுத்தவர்களின் கருத்துகளைப் பாரக்காமல் அவதாரிலுள்ள படங்களைப் பார்த்து அசடு வழிகின்றீர்கள். சுமங்களா என்ற பெயரில் ஒரு ஆண் கூட வரலாம். ஆனால் ஒரு சொண்டுப்படம் அவதாரில் இணைத்தாலேயே அவர் பிரபலமானார் என்றால், :unsure: அதில் யாரது பலவீனம் வெளிப்படுகின்றது ?? பதிந்தவரினதா ?? பார்வையாளர்களினதா ?? :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தாங்கள் ஏன் அடுத்தவர்களின் கருத்துகளைப் பாரக்காமல் அவதாரிலுள்ள படங்களைப் பார்த்து அசடு வழிகின்றீர்கள். சுமங்களா என்ற பெயரில் ஒரு ஆண் கூட வரலாம். ஆனால் ஒரு சொண்டுப்படம் அவதாரில் இணைத்தாலேயே அவர் பிரபலமானார் என்றால், :unsure: அதில் யாரது பலவீனம் வெளிப்படுகின்றது ?? பதிந்தவரினதா ?? பார்வையாளர்களினதா ?? :rolleyes:

மாமா உங்கட அவதார போட்டது நீங்கள்தான், அக்காதான் அவாண்ட அவதாரயும் போட்டிருக்கா. போடுறதையும் போட்டிட்டு பாக்காதே எண்டு சொல்லுறது நல்லா இல்ல. :lol:

Link to comment
Share on other sites

மாமா உங்கட அவதார போட்டது நீங்கள்தான், அக்காதான் அவாண்ட அவதாரயும் போட்டிருக்கா. போடுறதையும் போட்டிட்டு பாக்காதே எண்டு சொல்லுறது நல்லா இல்ல. :unsure:

:rolleyes:அவரவர் அவதாரை அவரவர் தான் அடுத்தவர் பார்ப்பதற்காக போடுவினம் மாமோ. ஆனால் உங்களைப் போல் அதை பார்த்த அசடு வழியச் சொல்லி எவரும் போடுவதில்லை மாமோ. :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகின்றது.. :rolleyes:

திறந்திருக்கும் ஊதா உதட்டில் மதித்தாத்தாவும் சொக்கிப் போனார்.. :unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகின்றது.. :lol:

திறந்திருக்கும் ஊதா உதட்டில் மதித்தாத்தாவும் சொக்கிப் போனார்.. :unsure:

இஞ்ச ஒண்டு மதித்தாத்தாவெண்டுகொண்டு எனக்குப் பின்னாலயே திரியிது. :rolleyes:

:oஅவரவர் அவதாரை அவரவர் தான் அடுத்தவர் பார்ப்பதற்காக போடுவினம் மாமோ. ஆனால் உங்களைப் போல் அதை பார்த்த அசடு வழியச் சொல்லி எவரும் போடுவதில்லை மாமோ. :(

அவதாரைப்பார்த்தும் அசடு வழியலாமோ மாமோ? :o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இஞ்ச ஒண்டு மதித்தாத்தாவெண்டுகொண்டு எனக்குப் பின்னாலயே திரியிது. :unsure:

எல்லாம் கை பிடிச்சு நடக்கத்தான் :rolleyes:

Link to comment
Share on other sites

ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகின்றது.. :o

திறந்திருக்கும் ஊதா உதட்டில் மதித்தாத்தாவும் சொக்கிப் போனார்.. :unsure:

:rolleyes::lol:கிருபன் பெயரை நன்றாகக் கவனியுங்கள். இவர் மதித் தாத்தா இல்லை. மாமோ தாத்தா :o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தலைப்புக்குப் பொருத்தமான கட்டுரை..

----------------------

கற்பு

--------------------------------------------------------------------------------

பத்மா அரவிந் (அமெரிக்கா)

இன்னமும் காலுக்கு இடையில்தான் பெண்களின் கற்பு இருப்பதாக சொல்வது அறிவீனம். கற்பு என்பது உறவுகளின் நம்பிக்கையில் நேர்மையில் இருக்கிறது - பெண்கள் மீது மட்டும் தடை எதற்கு?

புராண கதைகளாக இருந்தாலும் நவீன செய்திகளாக இருந்தாலும் பெண்களின் கற்பு என்ற ஒன்று முக்கியத்துவம் கொடுக்கப் பட்டிருக்கிறது. கந்தர்வனுடன் கலந்ததால் கல்லாகி போன அகலிகை, கந்தர்வரின் நிழல் பார்த்ததால் கற்பிழந்தவளாக கருதப்பட்டு, மகனாலேயே தலை கொய்யபட்ட ஜமதக்னி முனிவரின் மனைவி என்று கதைகள் உண்டு.

அதே சமயம் குழந்தை பேறு இல்லாத இராணிகள் முனிவர்களின் ஆசியினால் குழந்தை பேறு பெற்றதும், இன்னும் பரிசென ஐவருக்கு மனைவியாக பாஞ்சாலி பணிக்க பட்டதும் இதே புராண கதைகளில் உண்டு. இதில் பாஞ்சாலியின் விருப்பம் என்ன என்று யாரும் கேட்கவில்லை என்பது புறமிருக்க, பந்தயத்தில் அவளையே பணயம் வைத்த கணவன் கதையும் உண்டு. சபை நடுவே துகிலுறிய துச்சாதனன் முற்ப்பட்ட போது மூத்தோர் கூடிய அவையில் அனைவரும் உயிரை பணயம் வைத்து காத்திருக்க வேண்டாமா? இல்லை ஏன் என்றால் அவமானப்பட்டது பெண் அல்லவா?

இராமாயணத்தில் 60,000 மனைவியருடன் வாழ்ந்த தயரதனிடம் யாரவது உன் கற்பென்ன என்று வினவினரா? இல்லை தன் அரசனுக்காக போரிட்டு பெண்ணை வென்றுகொண்டுவந்த பீஷ்மரிடம் கேட்டார்களா? ,இன்னொருவருக்காக நீ எப்படி சுயம்வரத்திற்கு செல்லலாம் என்று? ஏனென்றால் திணிக்க பட்ட எதையும் இங்கே பெண்கள் பொறுத்து கொள்ளவேண்டும். நிழலை கூட பெண்கள் பார்ப்பது தவறென்ற காலம் மாறி சுயம்வரம் மூலம் மனதுக்குகந்தவனை பெண்கள் தேர்ந்தெடுக்க கூடிய நிலை வந்தது ஒருவகையில் சிறிய முன்னேற்றம் என்று கொள்ளலாம்.

இதற்கு பின் வந்தது தீவக கற்பு என்பார். அப்போது பார்ப்பதோ பேசுவதோ தவறில்லை, தொட்டால்தான் தவறு கற்பிழந்தவர் என்ற நிலை வரும். இந்நிலையில் தான் கம்பர் சீதையை குடிலுடன் இராவணன் தூக்கி சென்றதாக கூறுகின்றான்.

பேருந்துகளின் இடிமன்னர் இடையில் சிக்கி தினசரி அலுவலகம் இன்ன பிற இடங்களுக்கு பெண்கள் செல்வது தங்களுக்கும் தேவையானதாக இருக்க, அதே சமயம் பெண்களுக்கும் உரிமை தருவது போல ஆண்கள் இதை ஏற்று கொண்டனர்.

நான் இரண்டு வருடம் முன் இந்தியா தஞ்சை பெரியகோவிலுக்கெ சென்றேன். அங்கே பள்ளி சிறுவர், சிறுமிகள் தூணுக்கு இருவராய் அமர்ந்து கொண்டு உறவாடிக்கொண்டிருந்தனர். திருமணத்துக்கு முன் உறவாடுதலில் தவறில்லை எனவும், உறவு கொள்வதாகவும் கருத்து கணிப்புகள் பல Bரிடிஷ் மெடிcஅல் ஜொஉர்னல் இல் வெளியாகி இருக்கின்றன. இதில் ஆண் என்ன பெண் என்ன? ஆண்கள் செய்தால் அது சரியாகிவிடுமா? புகை பிடித்தல் மது அருந்துதல் போல இது தனிநபர் செய்கை அன்று. இரண்டு பேர் வேண்டும் அது ஓரின சேர்க்கையாக இருந்தாலும். அப்படி இருக்க பெண்கள் மீது மட்டும் தடை எதற்கு? பள்ளி சிறுமிகளிடம் பலாத்ககரம் செய்யும் ஆசிரியர்களை தண்டிப்பீர்களா?

திருமணமான ஆண்கள் அனைவரும் உத்தம சீலர்களாயின் இத்தனை குடும்ப பெண்களுக்கு ஆஈDஸ், ஸ்TD வந்தது எப்படி? புள்ளிவிவரங்களை பார்த்தால் ஆச்சரியமாக இருக்கிறது.

குழந்தைப்பேறு இல்லை என்ற காரணத்திற்காக தன் மைத்துனன், மானார் போன்றோருடன் வலுக்கட்டாயாமாக உறவு கொள்ள செய்யப்படும் பெண்களை பற்றி அறிவீர்களா? இல்லை என்றால் தனக்கு வேலை இல்லை என்பதாலும் தன் தந்தையின் சொத்துக்களில் வாழ்வதாலும் தன் மனைவியின் குற்றச்சாட்டுக்களை ஒதுக்கி என் அப்பாதானே இப்ப என்ன வந்தது என்று சொல்லும் கணவர்களை பார்த்திருக்கிறீர்களா?

நாடுவிட்டு நாடுவந்து தன் மனைவியை தன் தம்பி மற்றும் தந்தையுடன் கட்டயாப்படுத்தி நிர்வாணமாக்கி துன்புறுத்திய கணவனை பற்றி என்ன சொல்கிறீர்கள்? இங்கே இல்லாமல் கற்பிழந்தவளாக நீங்கள் சொல்லும் அந்த நிலைக்கு வற்புறுத்தியவர்கள் சீலர்களோ?

மெஹ்ரோலி என்ற ஊரில் பல ஏழை குடும்ப குழந்தைகளுக்கு மரபணு பரிசோதனைகள் செய்திருக்கிறேன். குழந்தைகளின் தந்தை ஒருவரே இருந்தது இல்லை. இது பற்றி அவர்களும் அறிவார்கள். இது சகஜமாக ஏற்று கொள்ள பட்டிருக்கிறது.

குடியின் மயக்கத்தில் தன் 5 வயது பெண்ணை வன்புணர்ந்த தந்தைக்கு தண்டனையே இல்லை. தாயிடம் 5000 ரூபாய் தந்ததாக படித்தேன். 16 வயதான தன் பெண்ணிடம் உறவு கொண்டு அந்த பெண் தன் தந்தையின் கருவையே தாங்கி இருக்கும் அவலத்தையும் ஜூனியர் விகடனில் படித்தேன். தன் அண்ணியுடன் உறவு கொள்ள அவளை வற்புறுத்தி அவள எரிந்து போன கோரத்தையும் பார்த்தேன்.

அது கணவன் மனைவி உறவாயினும், நட்பாயினும் அல்லது சகோதர சகோதரி உறவாக இருந்தாலும். ஒழுக்கம் என்பது மனதோடு சம்பந்தப்பட்டது. அதற்கென அவரவர்க்கு அளவுகோல் உண்டு.

இப்படிப்பட்ட சில சட்டதிட்டம் கூக்குரல்களால் பாதிக்கப்படுவது பெண்களே. எத்தனை சிறுமிகள் கடத்தப்பட்டிருக்கின்றனர்? எத்தனை பெண்கள் பாலியல் தொழிலில் கட்டாயப்படுத்தப்பட்டிருக்க

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுமங்களா கோவிச்சுக் கொண்டு போனதாலை ...... இந்த தலைப்பு சப்பெண்டு கிடக்குது. :unsure:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

Guest
This topic is now closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அந்த  மூன்று பேரில் ஒருத்தன், கூடப் பிறந்த சகோதனாம். எவ்வளவு கீழ்த்தரமான மனிதர்கள். 😡
    • ஓம். சிலவேளை…. அந்த இடம் 27,000 ஆண்டுகளுக்கு முன்பு தண்ணீர் குறைவான இடமாகவும் இருந்திருக்கலாம்.
    • விலாசம் இன்றிய விந்துகளின் சேமிப்பிடங்களாய் எம் தமிழ்ப் பெண்கள்..! பத்தினிகளும் பதிவிரதைகளும் புராணங்களில்… பால பாடங்களில்… பக்கம் பக்கமாய் படித்த மண்ணில் படி தாண்டிய பத்தினிகளும் மாதவிகளும் பெருகி விட்ட நிலை..! மாங்கல்யம் இன்றி மண மேடையின்றி கன்னிகள் வாழ்வு…! விலாசமின்றிய விந்துகளின் சேமிப்பிடங்களாய் அவர் தம் தேகம் இன்று..! சராசரி பாலியல் அறிவு கூடவா இல்லை… ஆண்டு ஒன்பதில் கற்றது கூடவா நினைவில் இல்லை…. தனி மனித ஒழுக்கம் என்ன பல்கலைக்கழகப் பாடமா வாத்தியார் கற்றுத்தர..?! முளைக்க முதல் பொத்திப் பிடிக்கும் கூட்டம் இன்று சந்தி தோறும் முந்தி விரித்துக் கிடக்கிறது.. ஏனிந்த அவலம்..???! பெண்கள்… புலிகளாய் வாழ்ந்த மண்ணில் வீரம் விதைத்து வீழ்ந்த இடத்தில் இன்று அந்நியரின் அயோக்கியரின் அனாதை விந்துகளின் அநியாயப் பாய்ச்சலில் சரிகிறார் மங்கையர்..! தூக்கிலும் கிணற்றிலும் சாவுகள்..! இது என்ன இன அழிப்பா சுய இருப்பழிப்பா.. சிந்தியுங்கள்..! முதிர் கன்னிகளாய் இளம் கன்னிகளாய் பள்ளிச் சிறுமிகளாய் பேரிளம் பெண்களாய் எல்லா நிலையிலும் அவர் வாழ்வு சீரழிவு..! அன்று அண்ணன் வழியில் அடைந்த ஒழுக்கம் இன்று அந்நியர் வழியில் அடைகிறது சாவு..! இப்படியே போனால் புவிதனில்.. எங்கே வாழும் எம் தமிழினம்..???! முடிவு தான் என்ன..????! சத்தமின்றி யுத்தமின்றி தமிழினம் தானே அழியும்..!   2012 இல் எழுதியது.. இன்னும் தொடருது அதே துன்பம்.  https://kuruvikal.wordpress.com/page/21/
    • Published By: VISHNU 02 APR, 2023 | 03:57 PM   கணினி குற்றங்களை மேற்கொள்ள  திட்டமிட்டுள்ளனர் என்ற சந்தேகத்தின் பேரில் சீனப் பிரஜைகள் 38 பேர் நேற்று சனிக்கிழமை (1 ) கைது செய்யப்பட்டதாக அளுத்கம பொலிஸார் தெரிவித்தனர். நிதி மோசடி தொடர்பான கணினி குற்றங்களை மேற்கொள்ளும் நோக்கில் குறித்த சீனப் பிரஜைகள் தங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் சீன தூதரகத்தின் உதவியுடன் இந்தச்  சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களில் 33 ஆண்கள், 5 பெண்களும் அடங்குவர்.    சந்தேக நபர்கள் வசமிருந்த 40 மடிக்கணினிகள், 120 கையடக்கத் தொலைபேசிகள், பல கணினி உபகரணங்கள் மற்றும் பணம் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.  சந்தேகநபர்கள் களுத்துறை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர். https://www.virakesari.lk/article/151955
    • வெடுக்குநாறி மலையில் விக்கிரகங்களை மீள் பிரதிஷ்டை : பின்வாங்கிய அமைச்சர்கள்   Published By: NANTHINI 02 APR, 2023 | 04:08 PM   வெடுக்குநாறி மலையில் சிதைக்கப்பட்ட விக்கிரகங்கள் இன்றைய தினம் (2) மீண்டும் வைக்கப்படும் என்று உறுதியளித்திருந்த அமைச்சர்கள், நீதிமன்றில் வழக்கு இருப்பதால் அது தொடர்பாக பின்னர் தீர்மானிப்போம் என்று அதிலிருந்து பின்வாங்கியுள்ளனர். அண்மையில் வவுனியா நெடுங்கேணியில் அமைந்துள்ள வெடுக்குநாறி மலை ஆதி லிங்கேஷ்வரர் ஆலய வளாகத்தில் இருந்த தெய்வ சின்னங்கள் அழிக்கப்பட்டிருந்தன.   இதனையடுத்து ஆலயத்தின் நிர்வாகத்தினரால் நெடுங்கேணி பொலிஸ் மற்றும் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. அத்துடன், அமைச்சர்களான டக்ளஸ், ஜீவன் தொண்டமான், மற்றும் ஜனாதிபதியின் கவனத்துக்கும் கொண்டு செல்லப்பட்டிருந்தது.  இந்நிலையில் கடந்த வாரம் சர்வமத தலைவர்களின் பங்களிப்புடன் வவுனியா மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் தலைமையில் கலந்துரையாடலொன்று நடத்தப்பட்டது.  அதன் பிரகாரம், முன்னர் வைக்கப்பட்டிருந்த இடத்தில் மீண்டும் சிவலிங்கம் உட்பட சேதப்படுத்தப்பட்ட விக்கிரகங்களை வைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது.  இந்நிலையில் இன்று (2) அதிகாலை விக்கிரகங்களை மீள் பிரதிஷ்டை செய்வதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது.   எனினும், நேற்று (1) ஆலய நிர்வாகத்தினரை மீறி ஆலய வளாகத்தில் பிரதிஷ்டை நிகழ்வுக்கான பணிகளில் ஈடுபட்டிருந்த மூன்று பேர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டதுடன், விக்கிரகங்களை நிலைநிறுத்தும் நிர்வாகத்தின் எண்ணம் ஈடேறாமல் போய்விட்டது.  இதேவேளை இன்று விக்கிரகங்கள் நிச்சயம் வைக்கப்படும் என்று அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா மற்றும் ஜீவன் தொண்டமான் ஆகியோர் அனைத்து தரப்புக்கும் உறுதிபட தெரிவித்திருந்தனர்.   அந்த வகையில் அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா, ஜீவன் தொண்டமான் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான கு. திலீபன், ம. ராமேஸ்வரன் ஆகியோரை உள்ளடக்கிய குழுவினர் இன்றைய தினம் காலை ஆலயத்துக்கு வருகை தந்திருந்தனர். எனினும், நீதிமன்றில் வழக்கு நிலுவையில் இருப்பதால் தற்போது விக்கிரகங்களை வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதுடன், எதிர்வரும் 10ஆம் திகதிக்கு பின்னர் கலந்துரையாடி, இது தொடர்பாக தீர்மானிக்க முடியும் என அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.  அவர்களது கருத்து அங்கிருந்தவர்கள் மத்தியில் ஏமாற்றத்தையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.  நீங்கள் 'சிலைகளை வைப்போம்' என்று அறிக்கை விட்டபோது நீதிமன்றில் வழக்கு இருப்பது தெரியவில்லையா என ஊடகவியலாளர்களால் அமைச்சர்களிடம் கேட்கப்பட்டபோது அதற்குரிய பதில் அவர்களால் வழங்கப்படவில்லை.  ஆகவே, இன்றைய தினம் எப்படியும் விக்கிரகங்களை வைத்துவிடலாம் என்ற நம்பிக்கையில் இருந்த ஆலய நிர்வாகத்தினர் ஏமாற்றமும் கவலையும் அடைந்துள்ளனர்.  அத்துடன் நேற்று ஒரு சிலர் எடுத்த தன்னிச்சையான முடிவுகளால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. இது எம்மை ஏமாற்றும் செயற்பாடாகவே இருக்கிறது என ஆலய நிர்வாகத்தினர் தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர். https://www.virakesari.lk/article/151954
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.