Jump to content

காண்டம் பற்றிய உங்கள் கருத்து என்ன?


Recommended Posts

காண்டம் பற்றிய உங்கள் கருத்து என்ன?

சில நண்பர்களுடன் உரையாடும்போது மிகவும் வியப்பாக விதந்துரைத்தார்கள். அப்படியே உண்மையென்றும் அடித்துச் சொன்னார்கள். முற்பிறப்பு முதல் கொண்டு தற்போதய வாழ்க்கை...எதிர்கால வாழ்க்கை என்பன பற்றி கூறுவது எல்லாம் அப்படியே நடந்ததாக பலர் கூறக் கேட்டுள்ளேன். சாத்திரம், சம்பிரதாயங்கள் எதையும் நம்பி என் வாழ்க்கையை நடத்தாத நான்..காண்டம் என்பதை மட்டும் நம்பலாமோ என்று தோன்றுகின்றது. அதைப்பற்றி பதிவுலக நண்பர்களாகிய உங்களிடமும் ஆராயலாம் என்று தோன்றியது.

உங்கள் கருத்துக்கள்....உங்கள் அனுபவங்கள்....ஆக்க பூர்வமான விவாதங்களையும் எதிர்பார்க்கின்றோம்;. பலருக்கும் இது பற்றிய தெளிவும் அறிவும் இந்த பகுதியூடாக கிடைக்கும் என்று நம்புகின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காண்டம் பற்றிய என் கருத்துகள்

1, பயமின்றி காண்டம் அணிந்து ஆண்கள் விலைமாதர்களுடன் போகலாம்

2. பெண்கள், பயமின்றி தம் கணவர் இல்லா நேரங்களில் இதனை அணிய சொல்லி, ஏனையவர்களை வரச்சொல்லலாம்

3. காண்டம் பற்றி திண்டு கொழுத்த கிறிஸ்தவ மிசனரிகள் என்னதான் சொன்னாலும், எய்ட்ஸ் இல் இருந்து 99.99% பாதுகாப்பளிக்கும்

4. Rain coat அணிந்து குளிக்க முடியாது என்று பழைய பல்லவி சொல்லாமல் பிள்ளை பேறை தவிர்க்க அணியலாம்

5. உங்கள் ஆண் பிள்ளைகளை கண்டிப்பாக பயன்படுத்த சொல்லக்கூடிய சாதனம் (படிக்கும் காலத்தில்)...உங்கள் பெண் பிள்ளைகளுக்கு இதன் அவசியத்தை அம்மாமார் மூலம் சொல்லுங்கள்

காண்டம் என்று இதைத்தானே கேட்டீர்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொய்,பிரட்டு, இவற்றின் பிறப்பிடம்.முழுமையாய் இயங்கும் மனிதனை கண்டதையும் சொல்லி கதி கலங்கவைக்கும் ஓர் கூடம் தான் இந்தக் காண்டம்.நோகாமல் நோட்டு நோட்டாய் நல்லாய் காசு பண்ண இலகுவான ஓர் வழி.......நம்மவர்கள் திருந்துவதற்கு இடமே இல்லை.விட்டால் நானும் காண்டம் சொல்லுவன் இல்லை....இல்லை வாசிப்பன்.இதை விட வேறு என்ன வேண்டும்......? :unsure::unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காண்டம் பற்றிய உங்கள் கருத்து என்ன?

உண்மை,

மைபோட்டு பார்த்தல் இதிலும் உண்மை.

அனுபவப்பட்டவன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆம் உண்மைதான் காண்டம் அனைவரும் பாவிக்கவேண்டிய ஒன்று சுகாதாரமானது, எஜிட்சின் எதிரி, உங்கள் நண்பன். :lol:

Link to comment
Share on other sites

காண்டம் பற்றிய என் கருத்துகள்

1, பயமின்றி காண்டம் அணிந்து ஆண்கள் விலைமாதர்களுடன் போகலாம்

2. பெண்கள், பயமின்றி தம் கணவர் இல்லா நேரங்களில் இதனை அணிய சொல்லி, ஏனையவர்களை வரச்சொல்லலாம்

3. காண்டம் பற்றி திண்டு கொழுத்த கிறிஸ்தவ மிசனரிகள் என்னதான் சொன்னாலும், எய்ட்ஸ் இல் இருந்து 99.99% பாதுகாப்பளிக்கும்

4. Rain coat அணிந்து குளிக்க முடியாது என்று பழைய பல்லவி சொல்லாமல் பிள்ளை பேறை தவிர்க்க அணியலாம்

5. உங்கள் ஆண் பிள்ளைகளை கண்டிப்பாக பயன்படுத்த சொல்லக்கூடிய சாதனம் (படிக்கும் காலத்தில்)...உங்கள் பெண் பிள்ளைகளுக்கு இதன் அவசியத்தை அம்மாமார் மூலம் சொல்லுங்கள்

காண்டம் என்று இதைத்தானே கேட்டீர்கள்?

---------------------------------------------------------------

ஆகா ஆகா என்னே ஒரு அற்புதமான விளக்கம்.

பிழம்பு தப்பித் தவறி தீப்பிழம்பாகீராதேங்தோ தண்ணீர் ஊற்றி அணைச்சுப் போடுவோமல்ல....

Link to comment
Share on other sites

காண்டம் பற்றிய என் கருத்துகள்

1, பயமின்றி காண்டம் அணிந்து ஆண்கள் விலைமாதர்களுடன் போகலாம்

2. பெண்கள், பயமின்றி தம் கணவர் இல்லா நேரங்களில் இதனை அணிய சொல்லி, ஏனையவர்களை வரச்சொல்லலாம்

3. காண்டம் பற்றி திண்டு கொழுத்த கிறிஸ்தவ மிசனரிகள் என்னதான் சொன்னாலும், எய்ட்ஸ் இல் இருந்து 99.99% பாதுகாப்பளிக்கும்

4. Rain coat அணிந்து குளிக்க முடியாது என்று பழைய பல்லவி சொல்லாமல் பிள்ளை பேறை தவிர்க்க அணியலாம்

5. உங்கள் ஆண் பிள்ளைகளை கண்டிப்பாக பயன்படுத்த சொல்லக்கூடிய சாதனம் (படிக்கும் காலத்தில்)...உங்கள் பெண் பிள்ளைகளுக்கு இதன் அவசியத்தை அம்மாமார் மூலம் சொல்லுங்கள்

காண்டம் என்று இதைத்தானே கேட்டீர்கள்?

:lol:அட உங்க அப்பா காலத்திலை இது இல்லாமல் போச்சா ?? அல்லது அவருக்கு இந்த விடயம் தெரியாமல் போச்சா ?? :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் றோட்டிலை நிக்கிற கண்ட , கிண்ட அரைகுறையளிட்டை காண்டம் வாசிச்சு ஏமாந்து போட்டு ..... குத்துது , குடையுது என்றால் என்ன செய்வது.

எனக்கு தெரிந்தவர் மூலம் நான் இந்தியாவில் உள்ள திருச்சியில் காண்டம் வாசிக்க சொல்லி , அவர் கேட்ட ஒரேயொரு அடையாளத்தை மட்டும் கொடுத்தேன்.

அதிலும் காண்டம் வாசிப்பவரிடம் , எனக்கு தெரிந்தவர் நேரடியாக செல்லவில்லை மூன்றாமவரே சென்றார்.

அதாவது ....... அந்த மூன்றாம் நபருக்கு என்னைப் பற்றிய ஒரு விபரமும் தெரியாது.

அதில் காண்டம் வாசிப்பவர் என்னைப்பற்றி இதுவரை நடந்தவை , நடந்து கொண்டிருப்பவை பற்றி எழுதியுள்ளதை பார்த்த போது நானே ஆச்சரியப் பட்டுப் போனேன்.

எல்லாவிடயங்களும் அச்செட்டாக ஒத்துப்போனது.

Link to comment
Share on other sites

தமிழ் சிறி - நீங்கள் சொல்வது உண்மையே....., இப்படியான விடயங்கள் தான் என்னை சிந்திக்க வைக்கின்றது...மனிதன் ஏற்கனவே புறோக்கிறாம் பண்ணப்பட்டு இந்த பூமிக்கு அனுப்பப்பட்ட பொம்மை என்று....காரணம் இப்படிப் பிறந்து...இப்படி வளர்ந்து....இப்படி முடிய வேண்டும்.....எப்போது...எப்படி முடிய வேண்டும் எல்லாம் எழுதப்பட்டது போலவே தெரிகின்றது.... (உதாரணத்திலற்கு ....காண்டம் என்பதை கொண்டம் என்ற விளக்கம் கொடுக்க வேண்டும் என்பதும் ஒரு சில பொம்மைகளின் புறோக்கிறாமில் எழுத்ப்பட்டுள்து போலும் - நகைச்சுவைக்காக மட்டும் - யாரையும் புண்படுத்தவல்ல)

காண்டம் - நாடியோதிடம் உண்மையில் எமது வாழ்க்கையை கூறுகின்றது எனின்.....

1)யாரால் எமது வாழ்க்கை எழுதப்பட்டுள்ளது....?

2)இதனை வாசிபவர்கள் எங்கிருந்து இதனை எடுக்கின்றார்கள்?

3)இது எவ்வாறு சாத்தியமாகின்றது?

4)எவ்வாறு எமது கைவிரல் ரேகையை மட்டும் வைத்து எங்களது வாழ்க்கை கோவை அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டு வாசிக்கப்படுகின்றது.?

5)முற்பிறப்பு....இப்பிறப்பு....இன

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Matrix படம் பார்த்து இருப்பீர்கள்.. அப்படித்தான் உலகம் இயந்திரங்களால் இயக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. காண்டம் வாசிப்போர் இந்த உலகத்தை இயக்கும் இயந்திரங்களின் முகவர்கள்.. :lol:

Link to comment
Share on other sites

முள்ளிவாய்க்கால் இறுதி காலங்களில் கொல்லப்பட்ட 20,000 இல் இருந்து 30,000 வரைக்குமான மக்களின் மரணங்களும், அரை மணி நேரத்தில் சுனாமி அலைகளால் இழுத்துச் செல்லப்பட்ட 40,000 தமிழ் மக்களின் சாவுகளும் ஒரே மாதிரியாக program பண்ணப்பட்டவையா?

தலைவர், பொட்டு அம்மான் ஆகியோரின் அங்க அடையாளங்கள் பல பலருக்கும் தெரியும் என்பதால், ஒரு முறை அவர்கள் பற்றிய காண்டம் வாசித்து உண்மையில் என்ன நடந்தது என்று அறியமுடியுமா? ஆகக்குறைந்தது 'இருக்கின்றாரா இல்லையா" என்ற உலகளாவிய பிரச்சனைக்குத்தானும் தீர்வு காணமுடியுமா?

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

என் மாமா ஒருவர் ஏஜென்ஸி வைத்திருந்து ஊரில் இருப்பவர்களை எல்லாம் ஏமாற்றி நல்லா காசு சம்பாதித்து இருந்தார். வல்லவனுக்கு வல்லவன் உலகில் இருப்பது போன்று கள்வனுக்கு கள்வனும் உலகில் இருப்பான் போலும்..ஊரையே ஏமாற்றிய என் மாமாவிடமே ஒருவன் தகிடுத்தனம் செய்து ஏமாற்றி பெரும் பணத்துடன் கம்பி நீட்டிவிட்டான். மாமாவும் உழைக்காமல் சேர்த்த காசு போயிட்டே என கவலைப்பட்டு, இந்தியாவுக்கு போய் காண்டம் பார்த்தார்

காண்டம் வாசிப்பவர், அவரைப் பார்த்து "போன பிறப்பில் (?) கோயில் பிச்சைக்காரனாக இருந்திருக்கின்றாய் என்று சொல்லி ஊரில இரண்டு கோயில் கட்டிக் கொடுத்தால் பிரச்சனைகள் தீரும்" என்றிருக்கிறார்

இழந்த பணத்தை பெற்று மீண்டும் கோடிஸ்வரன் ஆக சந்தர்ப்பம் இருக்கா என பார்க்க போன என் மாமா, உள்ளதும் கோவில் கட்டிக் கொடுத்து போகப் போகுதே என அலறி அடித்துக் கொண்டு எஸ்கேப்

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

காண்டமும் சரி, நினைச்சதை சொல்வதாய் சொல்லும் சாத்திரிகளும் சரி (நம்மட சாத்திரி அல்ல), Mind Reading எனும் விடயத்தைத் தான் அதிகம் செய்கின்றனர். அகத்திய முனியின் சுவடி படிக்கின்றோம் என சொல்லிக்கொண்டு, அவர்கள் நாசூக்காக கேட்கும் கேள்விகளுக்கு நாம் சொல்லும் பதிலிலும், அதன் போது எம் மனதில் ஓடுவதையும் வைத்து தான் சராசரியாக சொல்வார்கள். இவற்றை நம்புகின்றவர்கள் அந்த சராசரியை முழுமையாக்க தாமே இன்னும் கொஞ்சம் போட்டுக் கொடுப்பர்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் எழுத்தின் வகையை நன்கு அறிந்தவர்கள், நிழலி சொல்வதைப் போல மைண்டை ரீட் பண்ணத் தெரிந்தவர்களும், பேச்சு வன்மை உள்ளவர்களும் காண்டம் வாசித்தலில் வெற்றி அடையலாம். காண்டம் வாசிக்கிறது என்பது தம்மிடம் வந்து பலன் கேட்க எத்தனிக்கும் நபரின் பலம், பலவீனம் என்ன என்பதை உரையாடிலூடாக கொக்கிபோட்டு இழுத்தபடியே ஊகிக்கும் விடயங்களை பலன் கேட்க வந்திருக்கும் நபரிடம் பிரமிக்க வைக்கும் வகையில் வெளிப்படுத்துவது. முதலில் பெயரை எழுத்துகளை அடையாளப்படுத்துவதன் மூலம் காண்டங் கேட்க சென்ற நபரின் நம்பிக்கையை காண்டம் வாசிக்கும் தன்னிடம் முழுமை கொள்ள வைப்பது.... இதில் காண்டம் கேட்கப் போன நபர் ஏற்கனவே மனஞ் சோர்ந்தவராகவும், தன்னம்பிக்கை குறைந்த பலவீனமானவராகவும் இருப்பதனாலே நம்பிக்கையூட்டும் வகையில் பேசும் நபரிடம் தனக்கும், தன்னைச் சுற்றிலுமான பிரச்சனைகளுக்கு தீர்வு தென்படாத என்று எதிர்பார்க்க ஆரம்பித்துவிடுவார் பிறகென்ன காண்டம் வாசிப்பவர் கில்லாடிதானே...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தக் காண்டத்தின் உண்மைத் தன்மையைப் பரிசோதிப்பதற்காய் நான் இரண்டு தடவைகள் என்னுடைய காண்டத்தை வாசித்தேன். முதல் முறை நான் முற்பிறப்பில் தமிழகத்தில் ஒரு டாக்டராய் வாழ்ந்ததாகவும் இன்னொரு பிறப்பில் நான் கேரளத்தில் விறகு வெட்டும் தொழில் செய்பவனாக வாழ்ந்ததாகவும் கூறப்பட்டது.

அதை விட முக்கியமான விடயம் இரண்டு பிறப்பிலும் நான் செய்த பாவங்களிற்குப் பரிகாரம் கூறப்பட்ட போது முதல்முறை ; இதை வாசித்துப் பலன் சொல்பவருக்கு 5500 ரூபா காணிக்கை செலுத்தும்படியும் இரண்டாம் முறை 7300 ரூபா பெறுமதியான ஆடைகளை வாசிப்பவருக்கு காணிக்கையாகச் செலுத்தும்படியும் சொல்லப்பட்டது.

மைண்ட் றீடிங் என்றொரு விடயம் இருப்பது பலருக்கும் தெரியும். அதில் காண்டம் வாசிப்பவர்கள் தேர்நதவர்கள் என்பதில் சந்தேகமில்லை. அதன் மூலம் பெயர் முதலிய விடயங்களைக் கூறுகிறார்கள். காண்டம் வாசிததவர்களிடம் ஒரு கேள்வி யாருக்காவது உங்கள் எதிர்காலம் குறித்த விடயங்கள் சரியாகச் சொல்லப்பட்டனவா? இருக்கவே இருக்காது. ஏனென்றால் மைண்ட் றீடிங் செய்பவர்களால் எதிர்காலத்தை உய்த்தறிய முடியாது.......

Link to comment
Share on other sites

இது வெள்ளைக்கார சமாச்சாரம்.. அவஸ்திரேலியாவில் பல வருடங்களாக காணமல் போனவர்களை ( பொலிஸார் கைவிட ) psychics கொண்டு தகவல் அறியும் ஒரு program ஐ இங்குள்ள ஒரு TV channel ஒளிபரப்பியது. அதில் காணாமற்போன ஒரு இளம்பெண்ணின் இறுதி கணங்களை இரண்டு psychics, trace பண்ணுகின்றார்கள். இரண்டு பேருமே அந்தப் பெண்ணின் இறுதிக் கணங்களை ஒரேமாதிரியாக விபரிக்கின்றார்கள். அத்துடன் இரண்டு பேரும் அந்தப் பெண் கடைசியாக உயிருடன் இருந்த இடத்தைக் காட்டுகின்றர்கள் , அதுவும் ஒரே இடம் தான்.

இங்கு குறிப்பிடப் படவேண்டிய விஷயம் psychic ஒருவருக்கு மற்ற‌வரைத் தெரியாது. அத்தோடு அந்தப் பெண்னின் பெயரோ வேறு எந்த விடயமோ சொல்லாமல் ஒவ்வொரு psychic ஆக வேவ்வேறு நேரங்களில் அப்பெண்ணின் வீட்டருகே கொண்டு சென்று இவ்விடத்தில் ஒரு விபரீதம் நடந்துள்ளது இதைப் பற்றிச் சொல்லுங்கள் என்று கேட்பார்கள். அவர்கள் தங்களை வருத்திக் கொண்டு அப்பெண்ணின் பெயரை சொல்வதும் , வெவ்வேறு இடங்களுக்கு TV காரரை கூட்டிச் சென்று அந்தந்த இடங்களில் என்னெ நடந்தது என்று விபரிப்பதும் மிகவும் விறுவிறுப்பாக இருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காண்டம்....காண்டம்...காண்டம் இதை விட்டால் பேசுவதற்கு வேறு தலைப்பு கிடைக்கவில்லைப்போலும்.யாழ்க

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் காண்டம் ஒரு .mind reading....தான் உங்களை கொண்டே தமது பேச்சு, அனுபவ திறமையினால் விபரங்களை அறிந்து விடுவார்கள். எதோ கஷ்டத்தில் தான் உதவிக்காக கேட்க வந்துள்ளீர்கள் என்று நன்றாகவே அவர்களுக்கு தெரியும் . உண்மையில் நீங்கள் செய்ய நினைப்பதை , அவர்கள் வாயால் வர வேண்டுமென்று, நீங்கள் நினைப்பதை அவர்கள் சொல்கிறார்கள். அதை நம்புபவர்களுக்கு அவர்கள் தெய்வம் போல .அருள் வாக்கு போல இருக்கும். .நம்புபவர்களுக்கு காண்டம் ஒரு நம்பிக்கை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நானும் காண்டம் சொல்லக்கூடியவன். சொன்னது இன்றுவரை பிழைத்ததே இல்லை. இதனை இலவசமாகவே சொல்லுவேன்.

வேண்டுமென்றால் சோதித்துப் பாருங்கள்.

Link to comment
Share on other sites

நானும் காண்டம் சொல்லக்கூடியவன். சொன்னது இன்றுவரை பிழைத்ததே இல்லை. இதனை இலவசமாகவே சொல்லுவேன்.

வேண்டுமென்றால் சோதித்துப் பாருங்கள்.

வடிவேல் கேட்கும் "தட்டானுக்கு சட்டைப் போட்டால் குட்டைப்பையன் கட்டையால் அடிப்பான் அது என்ன" என்று காண்டம் பார்த்தாலாவது சொல்ல முடியுமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காண்டம் என்றதும் எதோ அமெரிக்கா ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா, ஐரோப்பா, ஆசியாவைப் பற்றி வினாடி வினா போல் ஆராய்கிறார்கள் என்று நினைத்தால் ஒன்று 'ஏ' சமாச்சாரம் மற்றது 'ஏ' மாற்றும் சமாச்சாரம்! ஒரே சொல்லில் வினோதமான பிணைப்பு..ஆனால் இரண்டிலும் நம்பிக்கையோ, அனுபவமோ இல்லை! தேவையற்றது என்பதே கருத்து.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காண்டம் பவிப்பவர்கள், மழைக்கோட் அணிந்துகொண்டு குளிப்பவர்கட்குச் சமம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

nadi.jpgdsc00422.jpg

இறந்த காலம், நிகழ்காலம்,வருங்காலம் ஆகியவற்றைக் கண்டறியும் ஆற்றல் படைத்த நிபுணர்கள் இருந்தனர். அவர்களைத் "திரிகால ஞானிகள்" என்று அழைப்பர்.

இவர்களில் பலர் முனிவர்களாகவும்,¡¢ஷிகளாகவும்

, சிலர் சித்தர்களாகவும் விளங்கினர். அவர்களுக்கு "ஞானதிருஷ்டி எனப்படும் விசேடப் பார்வை இருந்தது. அதை வைத்து அவர்கள் எக்காலத்திலும் நடக்கும் நிகழ்வுகளைக் கண்டறிந்தார்கள். ஜோதிட விதிகளையும் யாத்து, நிகழ்வுகளுடன் ஏற்ற முறையில் தொடர்பு படுத்தி அவற்றை நெறிப்படுத்தித் தொகுத்து எழுதிவைத்துச ்சென்றனர்.

அத்தகையதோர் சாஸ்திரம் தமிழ்நாட்டில் உண்டு.

அதன் பெயர் "நாடி சாஸ்திரம்"

அதை "ஏடு பார்த்தல்" என்றும் அழைப்பர்.

ஏனெனில் அந்த நூல்கள் பாடல்களின் வடிவில் பனை ஓலையால் ஆன ஏட்டுச ்சுவடிகளில ்எழுதப்பட்டிருக்கின்றன.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த ¡¢ஷிகளும் சித்தர்களும் எதிர்காலத்தில் வாழப்போகும் குறிப்பிட்ட மனிதர்களைப் பற்றியும் அவர்களின் ஜாதக அமைப்புகளைப் பற்றியும் வாழ்க்கை நிகழ்ச்சிகளைப் பற்றியும் அந்த ஏடுகளில் எழுதி வைத்திருக்கின்றனர்.

குறிப்பிட்ட மனிதனின் பெயர், ஊர்,பெற்றோர், உருவ அமைப்பு, முதற்கொண்டு அந்த ஏடுகளில் காணப்படும்.

தமிழ்நாட்டில் வழங்கும் நாடிகளில் "காகபுசுண்டர் நாடி", கெளசிக நாடி, "சப்தரிஷி நாடி", அகத்தியர் நாடி,போன்றவை முக்கியமானவை.

"கேரள மணி கண்ட ஜோதிடம்" என்ற நூலுமுண்டு.வடமொழியிலே "பிருகுஸம்ஹிதை" என்ற நூலே பிரபலமாக உள்ளது.

நாடி சாஸ்திர நூல்களுக்கெல்லாம் முதல்வராக பிருகு முனிவரையே சிலர் சொல்லுவார்கள்.

தமிழகத்தில் சில இடங்களில் இன்றும்ஆயிரக்கணக்கில் நாடி ஜோதிட ஏடுகள் சிதறிக் கிடக்கின்றன. அவற்றில் பல அழிந்துவிட்டன. மேலும் பல மறைந்து போயின. தற்சயம் மிகவும் பிரபலமானவை சென்னையில் உள்ள காகபுசுண்டர் நாடியும் வைத்தீஸ்வ்ரன்கோயில், திருவானைக்கா ஆகிய இடங்களில் உள்ள கெளசிக நாடியும்தான்.வைத்தீஸ்வரன் கோயிலில் அகத்தியர் நாடியும் இருக்கிறது.

இப்போது சிறிது "Theory" (Want to skip?)

பழந்தமிழ் நூல்களில் "கணக்கதிகாரம்"என்றொரு நூலுண்டு. அதில் பல கணித விதிகளும், சித்தாந்தங்களும் பாடல்கள் உருவில் விளங்கும்.

ஒரு பலாப்பழத்தில் எத்தனை சுளைகள்இருக்கின்றன என்பதனை அதன் காம்பைச் சுற்றியுள்ள முட்களின் எண்ணிக்கையை வைத்துக் கணக்கிட்டு அறிந்துகொள்ளும ்முறையை ஒரு பாடல் கூறுகிறது:

"பலவின் சுளையறிய வேண்டுதிரேல் ஆங்கு

சிறுமுள்ளுக் காம்பருகு எண்ணி - வருவதை

ஆறிற் பெருக்கியே, ஐந்தினுக்கு ஈந்திடவே

வேறெண்ண வேண்டாஞ் சுளை".

('மோனை முட்டுகிறதே, எதுகை எகிறுகிறதே, தளை தட்டுகிறதே?' என்றெல்லாம் என்னைக் கேட்காதீர்கள். சத்தியமாக நான் எழுதவில்லை).

பலாப்பழத்தின காம்பைச் சுற்றிலுமுள்ள முட்களை எண்ணி, அவ்வெண்ணிக்கையை ஆறால் பெருக்கி வரும் தொகையை ஐந்தால் வகுத்தால் வருவதுதான் அப்பழத்தினுள் இருக்கும் சுளையின் எண்ணிக்கை.

இப்போது ஒரு சந்தேகம்.

சுளையின் எண்ணிக்கையை வைத்து முட்கள ்தோன்றினவா?

அல்லது முட்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப சுளைகள் எற்பட்டனவா?

விண்ணில் உள்ள கோள்களின் நிலைகளுக்கு ஏற்ப உலகில் நிகழ்வுகள் நடை பெறுகின்றனவா? அல்லது அந்த நிகழ்வுகளுக்கு ஏற்ப கோள்கள் அந்தந்த நிலைகளில ்இயங்குகின்றனவா?

காரணத்தின் விளைவாகக் கா¡¢யமா?அல்லது காரியத்துக்கேற்ற காரணங்கள் அதற்கு முன்னதாகவே தோற்றுவிக்கப் பட்டுவிட்டனவா?

மகாபாரதத்தில் துரியோதனன் இடதுதொடையில் அடி பட்டு இறந்ததற்கு நிறைய காரணங்கள் உண்டு. கதையின் போக்கில் அந்தக் காரணங்கள் ஒவ்வொன்றாகத் தோன்றி ஒன்றுடன் ஒன்று தொடர்புகொண்டு, இணைந்து, கதையின் முடிவில் பீமனுடைய கதாயுதம் துரியோதனின் தொடையைப் பிளப்பதில் முடிகிறது.

துரியோதனன் இடது தொடையில் அடி பட்டு இறப்பது என்பதைக் காரியமாகக் கொண்டோமானால், பாஞ்சாலியின் சபதம், பீமனின் சூளுரை, முனிவர்களின்சாபம், தாய் காந்தாரி கொடுக்க முயன்ற பாதுகாப்பு முயற்சியின் தோல்வி போன்ற காரணங்கள் ஆங்காங்கு தோற்றுவிக்கப்பட்டு விடுகின்றன.அவை ஒன்றுடன் ஒன்று சூட்சுமமான முறையில் தொடர்பு கொள்கின்றன.

நிகழ்ச்சிகளீன் போக்கைத் தன் வசமாக்கிக் கொள்கின்றன.சா¢யான தருணத்தில் அவை இணைந்து அவற்றின் ஆற்றலை வெளிப்படுத்திக் காரியத்தைத் தோற்றுவிக்கின்றன.

மகாபாரதக்கதையில் துரியோதனின்இறப்பு இன்றியமையாதது; கட்டாயம் நிகழவேண்டியது; தவிர்க்க முடியாதது; வேறு வழியில்லை.

"அவனுடைய இறப்பு எனப்படும் 'கட்டாயம்', நிச்சயமாக நிகழவேண்டி, காரணங்கள் தோன்றின", என்று வைத்துக் கொண்டோமானால், காரியத்தின் கருப்பொருள் முன்னதாகவும், காரணங்கள் பின்னதாகவும் உருவாவதைக் காணலாம்.

கொடியசைந்தும் காற்று வந்ததா?

காற்று வந்ததும் கொடியசைந்ததா?

ஆயிரத்தைந்நூற்று ஆண்டுகளுக்கு முன்னர் சீனாவின் சுவாங் சூ நகரில் ZEN பெளத்தமதப்பேரவை ஒன்று நடந்தது. தலைமை குருக்கள் மஹா பரிநிர்வாண சூத்திரத்தை விளக்கிக்கொண்டிருந்தார். அவ்வமயம் அங்கு தொங்கிக் கொண்டிருந்த கொடியன்று அசைந்தது.

அதைக் கண்ட புத்த பிக்குகளுக்கு மேற்கூறிய சந்தேகம் வந்தது. அதன் தொடர்பாக வாக்குவாதமும், அதன் விளைவாகப் பொரியதொரு ஆர்ப்பாட்டமும் நிகழ்ந்தன.

இந்தப் பிரபஞ்சத்தில் ஓர் ஒழுங்குமுறையும ்நியதியும், கட்டுக்கோப்பும் விளங்குகின்றன. இதையே "Cosmic Order" என்று கூறுவார்கள்.இதில் விளங்கும் அனைத்துப் பொருள்களும் அனைத்து நிகழ்ச்சிகளும் ஒரு நியதிக்குட்பட்டு ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டவையாக விளங்குகின்றன.

இந்த நியதி கெட்டால்தான் "மகாப்பிரளயம்" எனப்படும் "Chaos" ஏற்படும்.

இந்த மாதிரி நிர்ணயிக்கப்பட்ட, நிச்சயமான நியதிகள் இருப்பதால்தான் "Goddoes not play

dice with the Universe", என்று Einstein கூறினார்.

காலதத்துவத்தின் அமைப்பே விசித்திரமானது.இதன் ரகசியங்கள் பலவற்றை நம்முடைய பழைய சாஸ்திரங்களில் நிறையவே காண முடிகிறது. மேல் நாட்டறிஞர்கள் இதைப் பற்றி ஆழமாக ஆராய்ந்து வருகிறார்கள்.ஆனால் அவர்களில் மிகச்சிலருக்கே நம் சாஸ்திரங்களில்காணப்படும் நுட்பங்களில் சில தொரிந்திருக்கின்றன.

இம்மாதிரி ஆய்வில் இந்தியர்கள் ஈடுபட்டால்தான் பெரும்பலன் ஏற்படும். அதிலும் யாராவது தற்காலச்சித்தர் அல்லது ரிஷி இதில் ஈடு பட்டார்களானால் மிகவும் மேன்மையாக இருக்கும்.

இதையெல்லாம் ஏன் வெட்டித்தனமாகச் செய்து கொண்டிருக்கவேண்டும் என்ற எண்ணமே நம்மவர்களிடம் மேலோங்கி நிற்கிறது.ஆகையால்தன் ஆய்வு செய்பவர்களும் குறைவு; ஆதரவும் குறைவு.

ஆகவேதான் வசதியான சூழ்நிலைகளில்இருக்கும் போலிகள் அருமையாக சரடு விட முடிகிறது.

கடாரத் தமிழ்ப் பேரறிஞர்

டாக்டர் எஸ்.ஜெயபாரதி

Link to comment
Share on other sites

காண்டம் பற்றி எதிரும் புதிருமாக விவாதித்தாலும் நாம் இன்னமும் ஒரு தெளிவான முடிவிற்கு வந்ததாக தெரியவில்லை. (கொண்டம் பற்றிய தெளிவான முடிவிற்கு தான் வந்தது போல் தெரிகின்றது) . இருந்தாலும் ஆரோக்கியமான விவாதம் குழப்பத்தை உண்டு பண்ணுவதை விட மாறாக தெளிவு பிறக்க உதவுகின்றது. அந்தவகையில் கருத்துக்களை தெரிவித்துவரும் பதிவுலக நண்பர்கள் அனைவரிற்கும் நன்றிகள். தமிழ் சிறி உஙகளது இணைப்பிற்கு நன்றிகள்.

காண்டம் பற்றி இணைத்தளத்தில் தேடியபோது கிடைத்வற்றில் சில இணைப்புகள்.....

http://nirmukta.com/2008/10/30/the-exact-s...-nadi-jothidam/

http://www.naadiastrologer.com/kaandams.html

http://naadi-jothidam.blogspot.com/2005/12...di-josiyam.html

http://www.nadi-astrology.org/

http://www.naadiastrology.in/home.htm

Link to comment
Share on other sites

நானும் 1995 ம் ஆண்டில் காண்டம் வாசித்தேன். அதில் சொல்லப்பட்டவை எனக்கே வியப்பை தருகின்றது. நான் எனது நண்பரிடம் கொடுத்து விட்டது எனது கைவிரல் அடையாளம் தான். காண்டம் வாசிப்பவரோ என் பெயர், என் பெற்றோர் சகோதரர்கள் பெயர் என அப்படியே கூறியது கண்டு நான் மிரண்டு போனேன். ஏனெனில் நடந்தவற்றை அப்படியே சொல்லி இனி அதன் பின் நடக்கவிருப்பவைகளையும் அதில் சொல்லப்படிருந்தது. நானும் பொறுமையாய் அப்படியே பதின்நான்கு வருடங்கள் பொறுத்திருந்தேன். அதில் சொல்லப்பட்டவை 90 வீதம் அப்படியே நடந்தது. இதில் குறிப்பிட்டு இங்கு சொல்லகூடியது ஒன்றைமட்டும் சொல்கிறேன். 1995 இல் எனக்கு கணனி என்றால் என்ன என்றே தெரியாது. நான் அதை தொட்டு கூட பார்த்திருக்கவில்லை சூரியகதிர் நடவடிக்கையில் அடிபட்டு தப்பி கொழும்பு வந்த காலம் அது அப்போ வாசிக்கபட்ட எனது காண்டத்தில் நான் ஒரு சிறந்த கணனி வல்லுனராக இருபேன் என்று கூறப்பட்டிருந்தது. நான் அப்போது வாய்விட்டு சிரித்தேன். நான் அதனை நம்பவில்லை. ஏன் எனில் நான் அந்த நேரத்தில் க.பொ.த சாதாரணதரத்தில் கணிதபாடத்தில் சித்தியடையவில்லை. நான் எப்படி பெரிய படிப்புகள் எல்லாம் படிப்பது என்று என் மனதுக்குளேயே சிரித்துகொண்டேன். காலங்கள் விரைவாக ஓடியது ஆனால் இன்று அதில் சொல்லப்பட்டவாறு தகவல் தொழிநுட்பதுறையில் ஒரு மூலையில் நானும் நாள்தோறும் குப்பை கொட்டுகின்றேன். என்ன செய்வது நம்பித்தான் ஆகவேண்டும். அடுத்தது என் வாழ்க்கை சம்பந்தபட்டது அதில் சொல்லப்பட்டவாறே அப்படியே ஒன்று கூட பிழைக்காமல் அப்படியே நடந்தது தான் எனக்கு இன்றும் ஆச்ச்சரியத்தை தருகின்றது.

Link to comment
Share on other sites

கை பெருவிரல் அடையாளத்தை எடுத்து உங்களிடத்தில்

எதுவித கேள்வியும் கேட்காமல் உங்கள் பலனை சொன்னால்

அது சரியாக இருக்குமிடத்தில் காண்டம் உண்மை

எனது நண்பர் ஒருவர் இந்தியாவில் பார்த்துவிட்டுவந்து

காண்டத்தில் சொன்னபடியே நடந்ததாக சொன்னார்

ஆனால் சில ஏமாற்றுபேர்வழிகளும் இருக்கிறார்கள்

அவர்களிடம் ஏமாந்துவிடாதீர்கள்

நான் ஏமாந்த கதை

எனது மைத்துனர் காண்டம் வாசிப்பவர் ஒருவர் கனடா

வந்திருக்கிறாராம் வா போய் பாத்திற்று வருவம் என்று

கூப்பிட்டார்

எனது நண்பர் இந்தியாவில் பார்த்துவிட்டு

வந்து காண்டம் உண்மை அதில் சொன்னபடியெல்லாம்

நடக்கிறது என்று சொன்னது ஞாபகத்துக்கு வரவே

நானும் மைத்துனருடன் காண்டம் வாசிப்பவரை சந்திக்கச்சென்றேன்

காண்டம் வாசிப்பவர் எனது பெருவரல் அடையாளத்தையும்

பிறந்த திகதி விபரங்களையும் எடுத்துக் கொண்டு

உங்களுக்குரிய ஏடு இருந்தால் தேடி ஏடுத்துவிட்டு

அழைக்கின்றேன் அதன்பிறகு வாருங்கள் என்றார்

இரண்டு நாள் கழித்து அழைப்பு வந்தது

ஆவலாகச் சென்றேன்

காண்டம் வாசிப்பவர் சொன்னார்

உங்களுக்குரிய ஏட்டுக்கட்டு இருக்கிறது

ஒரு கட்டில் 46 பேருக்கு பொருந்தும் ஏடு இருக்கின்றது

உங்களுடைய ஏடு எது என்பதை கண்டுபிடிக்கசில கேள்விகள்

கேட்பேன் ஆம் இல்லை சரி என்று சொன்னால் போதும் என்றார்

கேட்டார் சொன்னேன்

உஙகள் தந்தையின் பெயர் க வில் தொடங்குகிறது

இல்லை

ச வரிசையில் வருகிறது

இல்லை

வ வரிசையில் வருகிறது

ஆம் (கவனிக்கவும்)

இதேபோல் என் பெயரையும் எனது தாயாரின் பெயருக்கும் நடந்தது

நீங்கள் வீட்டில் மூத்த பிள்ளை

இல்லை

கடைசிப்பிள்ளை

ஆம் (கவனிக்கவும்)

உங்களுக்கு உங்களுடன் சேர்த்து 5 உடன் பிறப்புகள்

இல்லை

(தொடர்ந்து இதே கேள்விகளை கேட்கவில்லை வேறு வேறு கேள்விகளுக்கிடையில்தான் கேட்கப்பட்டது)

நான்கு

இல்லை

மூன்று

சரி(கவனிக்கவும்)

இதேபோன்று தனக்குத் தேவையான தரவுகளையெல்லாம் எங்களிடமிருந்தே எடுத்து

எங்களுக்குச் சொல்வதுதான் ஏமாற்றுப் பேர்வழிகளின் காண்டம்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஜனாதிபதித் தேர்தல் களம் தெற்கைவிட இம்முறை தமிழர் தாயகப் பிரதேசத்திலும் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கின்றது. போரின் பின்னரான அனைத்து ஜனாதிபதித் தேர்தல்களிலும் தென்னிலங்கை வேட்பாளர்களை ஆதரித்த தமிழ் மக்கள் இம்முறை அத்தகைய நிலைப்பாட்டை எடுப்பதற்குத் தயங்குவதும், தமிழ்ப் பொது வேட்பாளரை நோக்கி தமிழர்கள் அணிதிரட்டப்படுவதாலும் ஜனாதிபதித் தேர்தல் விவகாரம் பேசுபொருளாகியிருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப்பொது வேட்பாளர் களமிறக்கப்படுவது தென்னிலங்கை கட்சிகளைப்போன்று தமிழ்த்தேசியக் கட்சியைச் சேர்ந்த சிலருக்கும் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. அதே நேரம் இந்தப் பொதுவேட்பாளர் விவகாரத்தை குழப்பியடிப்பதற்கான சதி முயற்சியும் முன்னெடுக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. தமிழ் மக்கள் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரனின் செயற்பாடுகள் தொடர்பில் பலத்த சந்தேகங்கள் எழுப்பப்படுகின்றன. கொள்கைத் தளம்பலான ஒருவர் இந்த விடயங்களை முன்னின்று செயற்படுத்துவதாகச் சொல்லிக்கொள்ளும் போது சந்தேகங்கள் எழுவது இயல்பானதே. பொதுவேட்பாளர் விவகாரத்தை ஆதரிப்பதாகக் காட்டிக்கொண்டு அதைக் குழப்பியடிப்பது தான் அவரது இலக்கா என்ற கேள்வியும் எழுகின்றது. ஏனெனில் அவரின் நடவடிக்கைகள் அப்படியானவையாகத்தான் அமைந்திருக்கின்றன. ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியே, ஜனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளரைக் களமிறக்கும் யோசனையை முன்வைத்தது. அது தொடர்பில் பல தரப்புகளையும் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தது. இதேகாலப் பகுதியில் விக்னேஸ்வரன், ‘ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டுக்கு நல்லது செய்கிறார். அவரைத்தான் ஆதரிப்பேன்' என்று அறிக்கைவிட்டார். பின்னர் ரணில் ஏமாற்றிவிட்டார் என்று சொன்னார். திடீரென பொதுவேட்பாளர் விவகாரம் தொடர்பில் கூட்டத்தை ஒழுங்குபடுத்தினார். அது தொடர்பில் அறிக்கைகள் விடுத்தார். இந்த விவகாரத்தை முன்னெடுத்த தரப்புகளுடன் எந்தவொரு சந்திப்பையும் நடத்தாமல் தான்தோன்றித்தனமாக விக்னேஸ்வரன் விடயங்களைக் கையாள்கின்றார். இது தமிழ்ப்பொதுவேட்பாளர் விவகாரத்தை எதிர்க்கும் தரப்புகளுக்கு வாய்ப்பாக அமைந்திருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனு கோரப்பட்ட பின்னர் தமிழ்ப்பொதுவேட்பாளர் யார் என்பதைப் பகிரங்கப்படுத்தலாம். விக்னேஸ்வரன் பொறுமை காக்கவேண்டும். இலங்கையிலுள்ள தமிழ்மொழி பேசும் அனைவரும் ஆதரிக்கக்கூடிய ஜனரஞ்சகமான தலைவர் ஒருவராக இருக்கவேண்டும். அப்படிப்பட்டண்டும். ஒருவரையே தமிழ்ப்பொதுவேட்பாளராக களமிறக்க வேண்டும். தமிழ்ப்பொதுவேட்பாளர் என்பது ஒரு அரசியல் தீர்மானம். எப்படி வட்டுக்கோட்டைத் தீர்மானம் காலம் கடந்தும் நிலைத்து நிற்கின்றதோ அதே போன்று தமிழ்ப்பொதுவேட்பாளர் விவகாரமும் அமையவேண்டும். நாடு முழுவதிலிருந்தும் ஆகக் குறைந்தது 15 லட்சம் வாக்குகளையாவது அவர் திரட்டிக்கொள்ளக் கூடியவராக இருக்கவேண்டும். முஸ்லிம் மற்றும் மலையக சமூகங்களின் அரசியல் தலைவர்கள் தென்னிலங்கை தரப்புகளுடன் ஒட்டிக் கொண்டிருந்து அமைச்சுப் பதவியை பெறுபவர்கள். அவர்கள் எந்தளவு தூரம் பொதுவேட்பாளர் விவகாரத்துடன் ஒத்துழைத்துச் செயற்படுவார்கள் என்பது கேள்விக்குறியானது. இவ்வாறான சூழலில் அனைத்துத் தரப்புகளுடனும் அவதானமாகவும் - நிதானமாகவும் கலந்துரையாடல் நடத்தவேண்டும். அதைவிடுத்து விக்னேஸ்வரன் போல, மின்னஞ்சலில் போதிய அவகாச மின்றி அழைப்பு அனுப்பிவிட்டு கலந்துரையாடல் நடத்த கூடாது. விக்னேஸ்வரன் தலைமை தாங்கிய எந்தவொரு விடயமும் நேர்சீராக நடைபெறவில்லை. மாகாண சபையாக இருக்கலாம் அல்லது தமிழ்மக்கள் பேரவை என்ற சிவில் அமைப்பாக இருக்கலாம் அல்லது அவரது கட்சியாக இருக்கலாம். எங்குமே அவர் ஒரே கொள்கையோடு இயங்காமையால் கடைசியில் அவையெல்லாமே குழப்பத்துக்குள் சிக்கி, செயற்றிறனை இழந்ததைக் கண்முன்னே பார்த்தோம். அப்படிப்பட்ட ஒருவர் தனது அவசரத்தனமான நடவடிக்கைகளால் தீர்க்கமான அரசியல் முடிவை குழப்பியடித்துவிடக்கூடாது என்பதே மக்களின் ஆதங்கம். (16. 04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/அவசரத்தனங்களும்_குழப்பங்களும்...
    • இலங்கையில் தமிழர்களுக்கு மாத்திரமல்லாமல் முஸ்லிம்களுக்கும் தாய்மொழி தமிழ்தான். இதனாலேயே தமிழர்களையும் முஸ்லிம்களையும் ஒன்றிணைக்கும் முயற்சியில் தந்தை செல்வா ஈடுபட்டார். இதனால் 'தமிழ்பேசும் மக்கள்' என்ற சொல்லை தந்தை செல்வா பாவிக்கத்தொடங்கினார். இலங்கை சுதந்திரமடைந்த காலம் தொட்டு இரு தரப்பு அரசியல்வாதிகளும் தமிழ் முஸ்லிம் ஒற்றுமை பற்றிப் பேசி வருகின்றனர். தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளும் பல விட்டுக்கொடுப்புகளைச் செய்து தமிழ் முஸ்லிம் ஒற்றுமையை கட்டியெழுப்ப அன்றிலிருந்து இன்று வரை பாடுபட்டு வருகின்றனர். ஆனால் முஸ்லிம்களோ மொழிரீதியான பிணைப்பைக் கணக்கிலேயே எடுப்பதில்லை. அவர்கள் எப்போதுமே தம்மைத் தனியான இனமாக முன்னிறுத்துவதிலும், தமது நலன்களைப் பெற்றுக்கொள்வதிலுமே கண்ணும் கருத்துமாக இருக்கின்றனர். ஒரு சிறுபான்மை இனம் என்ற அடிப்படையில், முஸ்லிம்கள் தமது நலன்களை முன்னுரிமைப்படுத்திச் செயற்படுவதில் எவ்விதத் தவறுமில்லை என்று தமிழர்கள் கடந்துசென்றுவிடலாம். ஆனால், ஒரே மொழியைப்பேசிக்கொண்டு, சகோதர இனம் என்று சொல்லிக்கொண்டு, தமிழர்களை ஒடுக்கும் செயற்பாடுகளை முஸ்லிம்கள் மேற்கொள்வதைத்தான் ஜீரணிக்க முடியாமல் இருக்கின்றது. குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் கல் முனையில் முஸ்லிம்கள் தமிழர்களின் இருப்பை கேள்விக்குறியாக்கும் செயற்பாடுகளை காலாதிகாலமாக மேற்கொண்டு வருகின்றனர். இதனால் கல்முனைத் தமிழர்கள் சாட்சிக்காரனின் காலில் வீழ்வதை விட சண்டைக்காரனின் காலில் வீழ்வதே மேல் என்ற நிலைப்பாட்டுக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இலங்கைத்தீவை நிர்வகிப்பதற்கு 256 பிரதேச செயலர் பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த 256 பிரதேச செயலகங்களின் ஊடாக அந்தந்தப் பிரதேசத்துக்குரிய மக்கள் தமது தேவைகளை பூர்த்தி செய்து வருகின்றனர். இப்படிப்பட்டநிலையில், கல்முனைப் பிரதேச செயலர் பிரிவில் முஸ்லிம் பிரதேச செயலர்களே தொடர்ச்சியாக நியமிக்கப்பட்டு வந்தனர், வருகின்றனர். இவர்கள் முஸ்லிம்களுக்குச் சார்பாக நடந்து கொள்வதாக தமிழர்கள் தொடர்ச்சியாகக் குற்றஞ்சாட்டி வந்தனர். இதனால் கல்முனை பிரதேச செயலர் பிரிவு 1989 ஆம் ஆண்டு முஸ்லிம் பிரிவு, தமிழ்ப் பிரிவு என இரண்டாகப் பிரிக்கப்பட்டது. இவ்வாறு கல்முனைப் பிரதேச செயலர் பிரிவு இரண்டாகப் பிரிக்கப்பட்டபோது முஸ்லிம் பிரதேச செயலர் பிரிவு முழு அதிகாரத்துடன் செயற்படத் தொடங்கியது. தமிழ்ப் பிரிவுக்கு முழுமையான அதிகாரங்களை வழங்க விடாமல் முஸ்லிம் அரசியல்வாதிகள் ஆட்சியாளர்களுக்கு சிங்களவர்கள் அழுத்தம்கொடுத்தனர், இப்போதும் அதே அழுத்தத்தைக் கொடுத்து வருகின்றனர். கல்முனை தமிழ்ப் பிரிவு பிரதேச செயலகம் 'உதவி அரசாங்க அதிபர் பிரிவு' என்றே இன்றுவரை அழைக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் அதன் அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளமையை உள்ளார்ந்தமாக உணரலாம். தமிழ்ப் பிரிவுக்குரிய காணி, நிதி போன்ற விடயங்கள் முஸ்லிம் பிரிவின் கீழேயே உள்ளன. இலங்கை அரசியலில் பௌத்த பிக்குகள் தான் தீர்மானிக்கும் சக்தியாக விளங்குகின்றனர். அப்படியிருந்தும் ஞானசார தேரராலோ, சுமணரத்ன தேரராலோ கல்முனை தமிழ் பிரதேச செயலர் பிரிவை தரமுயர்த்த முடியவில்லை.சுமணரத்ன தேரர், ஞானசாரதேரர் ஆகியோரை விட முஸ்லிம் அரசியல்வாதிகளின் செல்வாக்கு கொழும்பு அரசியலில் கூடுதலான தாக்கம் செலுத்துகிறது என்பதே யதார்த்தம். கல்முனைப் பிரதேச செயலக தமிழ்ப் பிரிவை பூரண அதிகாரமுள்ள பிரதேச செயலகமாக தரமுயர்த்தக்கோரி கடந்த 35 வருடங்களாக கல்முனைத் தமிழர்கள் பல்வேறு சாத்வீகப் போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர். எனினும் இன்றுவரை கல்முனை தமிழர்களுக்கு நீதி கிட்டவில்லை. இந்த வருடமும் தமிழ்ப் புத்தாண்டை கல்முனைத் தமிழர்கள் கரிநாளாக அனுஷ்டித்தனர். இந்த நிமிடம் வரை கொட்டும் மழைக்கு மத்தியிலும் கல்முனைத் தமிழர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இறுதியாக நடைபெற்ற மாகாணசபைத் தேர்தலிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கிழக்கு மாகாணத்தில் கூடுதலான ஆசனங்களைப் பெற்றிருந்தும், கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியை முஸ்லிம் காங்கிரஸுக்கு தாரைவார்த்துக்கொடுத்தது. கிழக்கு மாகாண சபை கலைக்கப்பட்டதும் முதலமைச்சர் அஹமட் நஷீர் ‘வடக்கையும் கிழக்கையும் இணைப்பதற்கு தான் ஒருபோதும் அனுமதிக்கமாட்டேன்' என்று அறிக்கைவிட்டு, தமிழர்களின் அடிப்படைக்கோரிக்கையையே நிராகரித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் பதவிக்கு வந்த முதலமைச்சரான நஷீர் யுத்தம் நடைபெற்ற காலத்திலும் யுத்தம் முடிந்த பின்னரும் தமிழர்களுக்கு கிடைக்கவேண்டிய வேலை வாய்ப்புகள், உயர்கல்வி வசதிகள் போன்றவற்றை தமிழ்மொழியை பேசுகின்ற காரணத்தால் முஸ்லிம்கள் தட்டிப்பறித்து வருகின்றனர் என்றொரு குற்றச்சாட்டு பொதுவாக உண்டு. ஆனால், ஒரு பிரதேச செயலகத்தைக் கூட தரமுயர்த்த அனுமதிக்காமல், இன்னொரு சிறுபான்மையினரின் அடிப்படை உரிமைகளைக் கூடவா தட்டிப்பறிப்பார்கள்? தமிழ் அரசியல்வாதிகள் தீர்க்கமான ஒரு முடிவெடுக்கவேண்டிய தருணம் வந்து விட்டது. தமிழ் - முஸ்லிம் ஒற்றுமை என்றைக்கும் இருக்கத்தான் வேண்டும். ஆனால் அதைச் சொல்லிச் சொல்லியே முஸ்லிம்கள் எல் லாவற்றையும் பறித்தெடுக்க, நாம் மட்டும் இலவு காத்த கிளிகளாக ஏமாந்து கொண்டே இருக்கிறோம். இனியும் அவ்வாறான விட்டுக்கொடுப்புகளுக்கு இடமளிக்காமல், முதலில் தமிழர் நலன் அதன்பின்னரே தமிழ்-முஸ்லிம் ஒற்றுமை என்ற நிலைப்பாட்டுக்கு தமிழ்மக்களும், தமிழ் அரசியல்வாதிகளும் வரவேண்டும். அப்போதுதான் எஞ்சியவற்றையாவது இழக்காமல் காக்க முடியும். (17. 04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/இனநலனா!_ஒற்றுமையா!!!
    • முடிவாய் ரணிலையும் விடுறதாக இல்லை , அவர் பணக்கார வீட்டு  பிள்ளை , சந்து பொந்தெல்லாம் போகாமலா  இருந்திருப்பார் . பழம் இருக்கிறவன் அதன் சுவையை ருசிக்கிறான் ....அம்புட்டுதான் 
    • என்ன இது எங்க போனாலும் கொழுவி இழுக்க பார்க்கிறிங்க.  சுமா வை பற்றி தெரியும் என்றால் ஏன் கோத்திரத்தை அப்படி என்று எடுக்கிறீர்கள்.  என்ன பொறுத்தவரை உயர்ந்த குலமா அப்படியா இல்லையா என்பதல்ல ஏன் ஆதங்கம். பொறுக்கித்தனம் செய்பவனை பொறுக்கி என்பதுபோல தான் இது.  தப்பான பழக்கங்களை செய்கின்ற ஆள் தப்பான குலம் அவ்வளவு தான். 
    • பிரிதலும் புனிதமானது : சிவபாலன் இளங்கோவன் மார்ச் 2024 - சிவபாலன் இளங்கோவன் · உளவியல்   சஞ்சய்குமாருக்கு அவனது அத்தைப்பெண்ணான மீராவுடன் சிறு வயதிலிருந்தே காதல். சிறுவயதென்றால் பத்தாவது, பதினொன்றாவது படிக்கும் வயதிலிருந்தே. மீரா சென்னையில் இருந்து சஞ்சயின் கிராமத்து வீட்டிற்கு வரும்போதெல்லாம் சஞ்சய் ஏகாந்த மனநிலையில் இருப்பான்.  மீராவின் அப்பா சென்னையில் வங்கி மேலாளராக இருக்கிறார். சஞ்சய்க்கு அத்தனை வசதியில்லை. மீராவிற்குச் சிறு வயதில் சஞ்சயைப் பார்க்கபோவது மகிழ்ச்சியானதாகவே இருந்தது. இருவரும் கல்லூரி செல்லும் வரை அது ஓர் இளம் பிராயத்துக் காதலாகவே தொடந்து வந்தது. மீரா கல்லூரிப் படிப்பிற்காக டெல்லி சென்றாள். அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாகச் சஞ்சயைத் தவிர்த்து வந்தாள். சஞ்சயால் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அடிக்கடி அவளிடம் சண்டை போட்டான். முதலில் பொறுமையாக விளக்கம் கொடுத்துக்கொண்டிருந்தவள் அதன் பிறகு அவன் ஏதாவது பேச ஆரம்பிக்கும்போதே தொடர்பைத் துண்டித்துவிடச் செய்தாள். அதன் பிறகு எத்தனை முறை அவன் கால் செய்தாலும் அழைப்பை ஏற்க மாட்டாள், இன்னொரு பொழுது அவன் அழைத்தால் எதுவும் நடந்த மாதிரியே காட்டிக்கொள்ளாமல் பட்டும் படாமல் பேசுவாள். இப்படியே மூன்று வருடங்கள் சென்றது. டெல்லியில் அவள் படிப்பை முடித்து வந்தபோது சஞ்சய் ஒரு சாதாரண கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்திருந்தான். அவள் வந்தவுடன் அவளிடம் திருமணம் செய்துகொள்ளலாம் எனப் பேசினான். அவள் அலட்சியமாகச் சிரித்தாள். “உனக்கு என்ன பைத்தியமா? எனக்கு 22 வயதுதான் ஆகுது, அதுக்குள்ள உன்ன கல்யாணம் பண்ணி குழந்தை பெத்துக்கணுமா?” எனக் கோபமாகக் கேட்டாள் “உனக்கு என்ன பிடிக்கல, என்கிட்ட இருந்து விலகிப் போகணும்னு நினைக்கிற, அதான் ஏதேதோ காரணம் சொல்ற” என அவனும் கோபப்பட்டான் அவள் அவனிடம் எந்த வாக்குவாதமும் செய்யவில்லை. “உன்கிட்டலாம் பேசிப் புரிய வைக்க முடியாது”  என எழுந்து சென்றாள். சஞ்சய் அவன் பெற்றோர்களைக் கட்டாயப்படுத்தி மீரா வீட்டில் பெண் கேட்க சொன்னான். மீரா அவர்களிடம் பக்குவமாகச் சொல்லி நிராகரித்தாள். “எங்க வீட்ல உன்ன கல்யாணம் பண்ண ஒத்துக்க மாட்டாங்க, முதல்ல எனக்கே இப்ப கல்யாணம் பண்ண இஷ்டம் இல்ல, நான் வெளி நாடு போய் மாஸ்டர்ஸ் படிக்கப் போறேன், எனக்கு நிறைய கனவுகள் இருக்கு” என்று அவனிடம் சொன்னாள் “யாரோ நல்ல வசதியான ஒருத்தன புடிச்சிட்ட அதான் என்ன கழட்டிவிடற” என அவளை நடுரோட்டில் எல்லார் முன்பாகவும் கத்தி அசிங்க அசிங்கமான வார்த்தைகளால் அவமானப்படுத்தி அனுப்பினான். மீரா அழுதுகொண்டே வீட்டிற்கு வந்தாள். ஆண்-பெண் உறவில் சேர்தலைப் போலவே பிரிதலையும் நாம் இயல்பானதாகக் கருத வேண்டும். சேர்தலைப் போலவே பிரிதலின் முடிவையும் மதிக்கும் பண்பை அந்தக் காதலின் நிமித்தமே வளர்த்துக்கொள்ள வேண்டும்.   ஓர் உறவில் இருந்து வெளியே போவதற்கான கதவு எப்போதும் திறந்தே இருக்கிறது என்னும் நிலையில் இருக்கும் உறவுகளே மிகவும் பக்குவப்பட்ட உறவுகளாக, பரஸ்பர அன்பை ஆத்மார்த்தமாகக் கொண்ட உறவாக இருக்கும் என்பது எனது எண்ணம். அத்தனை கதவுகளையும் பூட்டிவிட்டு எங்களது உறவு ஆத்மார்த்தமானது என்று சொல்வது நிச்சயம் அபத்தமானது. ஒரு காதல் ஏற்படுதற்கு இருவருக்கும் இருக்கும் பக்குவம், பொறுப்புகள், முதிர்ச்சி, அக மற்றும் புறச் சூழல்கள் எனப் பல்வேறு காரணங்கள் இருக்கும். இந்தக் காரணங்கள் எல்லாம் மாறக்கூடியவை. ஒருவருக்கு இருக்கும் பக்குவமும், முதிர்ச்சியும் அவரின் வயதைப் பொறுத்து மாறிக்கொண்டிருக்கும் அதே போலவே ஒருவரின் அக, புறச் சூழல்கள் தொடர்ச்சியாக மாறிக்கொண்டிருப்பவை. ஒரு காதல் தொடங்கிய தருணத்தில் இருந்த இந்தக் காரணிகள் எல்லாம் அதற்குப் பிறகு மெல்ல மெல்ல மாறிக்கொண்டிருப்பவை. காதலுக்கான காரணங்கள் நீர்த்துப்போகும்போது அங்குக் காதலும் முடிந்து போகிறது. அதை நீட்டிக்க வேண்டிய தேவை இல்லாமல் போய்விடுகிறது, அப்போது அங்குக் காதல் முடிவுக்கு வருகிறது, முடிவுக்கு வரும் காதலை ஏற்றுக்கொள்ளாமல் அதற்கான அத்தனை கதவுகளையும் அடைத்துக் கட்டாயப்படுத்தும்போது அதுவரை இருந்த காதலே கேள்விக்குறியாகிறது, பழகிய கணங்களின் மீது ஓர் ஒவ்வாமை ஏற்படுகிறது, அந்த மூர்க்கத்தனத்தைக் காதலையே மலினப்படுத்தும், சிறுமைப்படுத்தும் செயலாகவே பார்க்க முடியும். சஞ்சய்க்கும் மீராவிற்கும் இருந்தது ஓர் இளம் பிராயத்துக் காதல். சிறு வயதிலேயே துளிர் விட்ட காதல். ஒரு வகையிலான இனக்கவர்ச்சி. ஒருவர் மீதான மோகமே அந்தக் காதலுக்கு அடிப்படை. அந்த வயதில் எந்தப் பொறுப்புகளும் இல்லை, பக்குவமும் இல்லை, இலக்குகளும் இல்லை. ஒருவர் மீது ஒருவர் ஈர்ப்பாக இருப்பது மட்டுமே அந்தப் பருவத்தில் போதுமானது, அதுவும் எப்போதாவது சந்திக்கிற சில நாள்களில் மட்டும் அந்த ஈர்ப்பு இருந்தால் போதுமானது, அதுவே பரஸ்பரக் காதல் என அவர்கள் உணர்ந்து கொண்டார்கள். ஆனால் இருவரும் வளரும் போது இருவருக்கான தனிப்பட்ட அடையாளங்கள் ஆளுமைப் பண்புகள் உருவாகின்றன. எதிர்காலம் குறித்த கனவுகளும், லட்சியங்களும் உருவாகின்றன. இந்தச் சூழலில் காதலென்பது வெறும் ஈர்ப்பு மட்டுமே அல்ல, பரஸ்பரமாக ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வது, அவர்களின் ஆளுமைப் பண்புகளை ஏற்றுக்கொள்வது, அவர்களின் கனவுகளையும், லட்சியங்களையும் மதிப்பது. இதில் போதாமைகள் ஏற்படும்போது ஒருவர் மீதான ஒருவரின் காதல் தன்னை மறுபரிசீலனை செய்து கொள்கிறது. அந்த காதலை நீட்டிப்பதற்கான தேவைக் குறித்து கேள்வி எழுகிறது. ஒரு பிராயத்தில் ஒருவருடன் பழகிய காரணங்களுக்காகவே இந்த எதிர்பார்ப்புகளை எல்லாம் புறம் தள்ள முடியாது. மீராவின் லட்சியங்களும், கனவுகளும் சஞ்சயைப் பொறுத்த வரை தேவையில்லாதவை. மீராவிற்கு அவன் மட்டுமே பிரதானமாக இருக்க வேண்டும், மீதி அத்தனையையும் அவள் நிராகரிக்க வேண்டும் என எதிர்பார்க்கிறான். ஆனால், மீராவோ தனது விருப்பங்களுக்கும் கனவுகளுக்கும் அவன் துணை நிற்க வேண்டும், அவளின் இந்த முடிவுகளை அவன் மதிக்க வேண்டும் என நினைக்கிறாள். அப்படி அவன் இருக்கும்போதே அவனின் மீது காதலுடன் இருக்க முடியும் என அவள் உணர்கிறாள். அப்படி அவன் இல்லை மாறாக அவன் அவளை எப்போதும் கட்டுப்படுத்த நினைக்கிறான், அவன் சொல்வதற்கு மாறாக அவள் நடந்து கொள்ளக்கூடாது என நினைக்கிறான் என்பது அவளுக்கு ஏமாற்றமாக இருக்கிறது. ஏன் இந்தக் காதலைத் தொடர வேண்டும் என அவள் நினைப்பதற்கு அவனின் இந்தப் போதாமைகள் முக்கியமான காரணம். ஆனால், சஞ்சயை பொறுத்தவரை அவளின் இந்த எதிர்பார்ப்புகளைச் சிறுமைப் படுத்துகிறான். அவளுக்கு வேறு யார் கூடவோ பழக்கம் இருக்கிறது அதனாலே தன்னை நிராகரிக்கிறாள், அவளின் படிப்பிற்கும், வசதிக்கும் தன்னைத் தகுதியானவன் இல்லை என அவள் நினைகிறாள் என அவளை மலினப்படுத்துகிறான். ஒருபோதும் அவன் தனது நடவடிக்கைகள் குறித்து உணரவே இல்லை, அவளின் மீதே அத்தனை குற்றசாட்டுகளையும் சுமத்துகிறான். இது மீராவிற்கு மூச்சு முட்டவைக்கிறது, அதை அவனிடம் சொல்ல முற்படும்போது அவன் அவளைத் திருமணம் செய்து கொள்ளலாம் எனக் கட்டாயப்படுத்துகிறான். ஒரு போதும் அவன் மாறப்போவதேயில்லை என உணர்ந்து கொண்ட மீரா அவனிடம் இருந்து நிரந்தரமாகப் பிரிந்து விடும் முடிவை எடுக்கிறாள். அந்த முடிவைச் சஞ்சய் எப்படி எதிர்கொள்கிறான்? மிகவும் உணர்ச்சிவசப்பட்டு மூர்க்கமாக எதிர்கொள்கிறான். அவளின் அத்தனை வருடக் காதலைக் கொச்சைபடுத்துகிறான், அவளை மோசமாகச் சித்தரிக்கிறான் அவனது குற்றசாட்டுகளில் அவன் இத்தனை நாள்கள் அவள் மீது துளியும் காதல் கொண்டிருக்கவில்லை என்பதுதான் தெரிகிறது. இந்தப் பிரிவை எதிர்கொள்ள அவன் இன்னும் பக்குவப்பட வேண்டும். பக்குவமற்று, உணர்ச்சிவசப்பட்ட நிலையில் பிரிதலை அணுகும் போக்கு இரண்டு பாலினரிடையுமே இருக்கிறது. நவீன காதலில் பிரிதலை அணுகும் பக்குவம் கொஞ்சம் ஏற்பட்டிருக்கிறது என நினைக்கிறேன். ஆனால் சினிமாக்களும், ஊடகங்களும் காதலில் பெண்களை எதிர்மறையாகச் சித்தரிக்கும் போக்கு தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இதன் பாதிப்பில் வளரும் இளைஞர்கள் பெண்களின் மீதான பொத்தாம்பொதுவான சில பொதுப்பார்வைகளுடன் இருக்கின்றனர் அதனால் பிரிதலை, பிரிவதற்கான முடிவைப் பெண்களுக்கான ஒன்றாகவே, பெண்களின் குணாதிசயம் என்றளவிலே புரிந்து கொள்கிறார்கள், இது பிரிதலுக்கான காரணங்களை முழுமையாக உணர்ந்து கொள்வதிலிருந்து அவர்களைத் தடுக்கிறது. ‘அந்தப் பெண் என்னை வேண்டாம் என்று சொன்னதற்கு நானும் ஒரு காரணம்’ என்பதை ஏற்றுக்கொள்வதிலிருந்து தப்பித்துக்கொள்ளலாம் என்பதால் பெண்களின் மீதான இந்தச் சித்தரிப்பைப் பெரும்பாலான ஆண்களும் மனமுவந்து ஏற்றுக்கொள்கிறார்கள். பிரிதலைப் பக்குவமாக ஏற்றுக்கொள்ளும் ஒருவரால்தான் அதற்கான காரணங்களை விருப்பு, வெறுப்புகளின்றி, முன்முடிவுகளின்றி ஏற்றுக்கொள்ளும் ஒருவரால்தான் அதுவரையிலான அந்தக் காதலில் உண்மையாக இருந்திருக்க முடியும். அப்படி இல்லாதவர்களால் அதுவரை இருந்த காதலே அர்த்தமற்றுப் போகிறது. எப்படிப் பிரிவது? “எனக்கு நல்லாவே தெரியுது, இந்த ரிலேஷன்சிப்னாலதான் நான் இவ்வளவு கஷ்டப்படுறேன், இதனால நான் நிறைய அவமானங்களைச் சந்திக்கிறேன், என்னைப் பற்றி நானே குற்றவுணர்ச்சி கொள்ற அளவுக்கு அவதிப்படறேன், இதுல இருந்து வெளிய போகணும்னு நினைக்கிறேன் ஆனால் போக முடியல, எப்படியாவது இதுல இருந்து நான் வெளிய போறதுக்கான வழிய சொல்லுங்க” தினமும் இப்படிப்பட்ட சிலரையாவது நான் எனது கிளினிக்கில் பார்த்து விடுகிறேன். எப்படிப் பிரிவது? என்பதுதான் அவர்களின் தவிப்பு. நீண்ட நாள் காதலன் தன்னை நிராகரிக்கிறான் என்பது தெளிவாகத் தெரிந்த பின்னரும் அவனை விட்டு நீங்க முடியாமல் இருப்பது, திருமணத்தைத் தாண்டிய ஓர் உறவு தவறு என்று தெரிந்த பின்னரும்கூட அதை விட்டு வெளியே போக முடியாமல் வருந்துவது, திருமணம் தரும் வலிகளில் இருந்து, வன்முறைகளில் இருந்து நிரந்தரமாகச் செல்ல முடிவு செய்து அதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிப்பது எனச் சேர்வது எப்படி என்று வருவோரைவிட, பிரிவது எப்படி என்னிடம் வருபவர்களின் எண்ணிக்கை சில நேரங்களில் அதிகமாகவே இருக்கிறது. அதுவும் நவீன காதல்களில் லிவிங்கில் இருக்கும் நிறைய இணையர்களில், தங்கள் உறவு முடிவுக்கு வருவதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிப்பவர்கள் ஏராளமானவர்கள். ஒரு பால் உறவிலும்கூடப் பிரிவை தாங்கிக்கொள்ள, ஏற்றுக்கொள்ளாமல் துயரத்தில் உழல்பவர்கள் நிறையப் பேர். இவர்கள் அனைவரின் பிரச்சினையும் ஒன்றே ஒன்று தான், பிரிவு தரும் வலியைத் தாங்க முடியாமல் இருப்பதே! ஓர் ஆத்மார்த்தமான உறவு என்பது எப்போதும் நம்மைப் பற்றியான நமது மதிப்பீட்டை உயர்வாகத்தான் கொண்டிருக்கும், எத்தனையோ முரண்பாடுகள் இருந்தாலும் ஒருவர் மீதான மதிப்பு என்பது மாறாமல் இருக்கும், பிறரின் முன்னிலையில் தனது இணையைப் பெருமிதமாகவே காட்டிக்கொள்ள விளைவார்கள். தனது இணை அவமானப்படுவதையோ அல்லது குற்றவுணர்ச்சி கொள்வதையோ ஒர் ஆத்மார்த்த காதலில் உள்ளவர்கள் நிச்சயம் விரும்ப மாட்டார்கள். ஓர் உறவின் விளைவாக நான் தாழ்வு மனப்பான்மை கொண்டாலோ, அவமானப்பட்டாலோ, குற்றவுணர்ச்சி கொண்டாலோ அந்த உறவு ஆத்மார்த்தமானதாக இல்லையென்று பொருள். அப்படிப்பட்ட உறவு இருவரையும் எப்போதும் காயப்படுத்திக்கொண்டேதான் இருக்கும், அப்படிப்பட்ட உறவை முடிவுக்குக் கொண்டு வருவதன் வழியாகவே அந்த உறவையும், அதில் உள்ளவர்களையும் காப்பாற்ற முடியும்.  அப்படிப்பட்ட உறவில் இருந்து பிரிய வேண்டும் என்ற முடிவு எடுக்கும்போது முதலில் அந்த முடிவில் உறுதியாக இருக்க வேண்டும். பிரிவதற்கான படிநிலைகள்: பிரிவதற்கான காரணங்களை உணர்வது பிரிவதற்கான முடிவைப் பரஸ்பரமாக எடுப்பது முடிவை ஏற்றுக்கொள்வது பிரிவின் வலியைக் கடந்து வருவது பிரிவில் இருந்து முழுமையாக வருவது பிரிய வேண்டும் என முடிவுசெய்துவிட்டால் அதற்கான காரணங்களை இருவரும் நிதானமாக, பரஸ்பரக் குற்றசாட்டுகள் இன்றி நிதானமாக உரையாட வேண்டும். ஏன் இதைத் தொடர வேண்டாம் என்பதை அத்தனை முதிர்ச்சியாக இருவரும் விவாதித்து முடிவெடுக்க வேண்டும். நிறைய நேரங்களில் பிரிய வேண்டும் என ஒருவர் மட்டுமே முடிவு செய்து விட்டு அதை இன்னொருவரிடம் தெரிவிக்காமல் அவரே புரிந்து கொள்ளட்டும் என அவரை அலட்சியம் செய்யும் போதுதான் நிறைய பிரச்சினைகள் வருகின்றன அது இந்தப் பிரிதலை இன்னும் சிக்கலாக்குகிறது. ஓர் உறவில் நாம் இருக்கும் போது அதை தொடர வேண்டாம் என நினைத்தால் அதற்கான காரணங்களைத் தெரிந்து கொள்ளக்கூடிய உரிமை இன்னொருவருக்கு இருக்கிறது, அதனால் அந்த முடிவைத் தெளிவாக இணையருக்கு தெரிவிக்கவேண்டிய கடமை அந்த முடிவை எடுத்தவருக்கு இருக்கிறது. அவர் அந்தக் காரணங்களை ஏற்றுக்கொள்கிறாரோ இல்லையோ அதைச் சொல்ல வேண்டியது ஒருவரின் பொறுப்பு. அதே போல நிறைய நேரங்களில், பிரியலாம் என்ற முடிவை எடுத்த பின்பும் அதை ஏற்றுக்கொள்வதில் இருக்கும் தயக்கம் அந்தப் பிரிவைச் சிக்கலாக்கும். பல்வேறு காரணங்களால் பிரிய வேண்டும் என்ற முடிவை எடுத்த பின், அதை இன்னொருவரிடம் தெளிவாகத் தெரிவித்த பிறகு அந்த முடிவை ஏற்றுக்கொள்ள வேண்டும். “இல்லை நான் இன்னும் முழுமையாகப் பிரியவில்லை, நாளைக்கேகூட அவர் திரும்ப என்னிடம் பேசுவதற்கு வாய்ப்பிருக்கிறது, அப்படிப் பேசினால் திரும்பவும் அத்தனையும் தொடரும்” எனச் சாத்தியமற்ற எதிர்பார்ப்புகளை மீண்டும் மீண்டும் கொண்டிருப்பதால் அந்தப் பிரிவைச் சார்ந்த துயரம் இன்னும் பலமடங்காகும். ஓர் இழப்பை, அது இழப்பென்று ஏற்றுக்கொண்டால் மட்டுமே அந்த இழப்பில் இருந்து நம்மால் வெளியே வர முடியும். இல்லை நான் இழக்கவில்லை என நமக்கு நாமே சமாதானம் செய்து கொண்டிருந்தால் அந்த இழப்பில் இருந்து வெளியே வரும் காலமும் அதிகமாகும், காயமும் அதிகமாகும். பிரிதல் என்பது நினைவுகளாலானது. ஒருவரை விட்டு ஒருவர் நீங்கும்போது அவரைச் சார்ந்த நினைவுகளும், அவருடன் இருந்த கணங்களின் நல்லுணர்வுகளும் ஒருவரை ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தும். அந்தத் துயரத்தை தவிர்க்க முடியாது. அந்தத் துயரமே அத்தனை காலக் காதலின் அடையாளம். அதை ஒருவர் கடந்துதான் வரவேண்டும். “என்னால அவளோட நினைவுகளை தாங்கிக்க முடியல,ரொம்ப கஷ்டமா இருக்கு, ஏதாவது மாத்திரை இருந்தா கொடுங்க, அவள மறக்கற மாதிரியான மாத்திரை” என நிறையப் பேர் கேட்பார்கள். ஒருவரை மறப்பதற்கான மாத்திரை என்பது உலகத்தில் இதுவரையிலும் கண்டுபிடிக்கவில்லை, அப்படி ஒரு மாத்திரை இருந்தால் உலகத்திலேயே அதிக விலையுள்ள மாத்திரை அதுவாகத்தான் இருக்கும். பிரிவு என்பது துயரமானதே. அந்தத் துயரத்தைக் கடந்து வருவதே ஒரு பிரிவின் உண்மையான சவால். கடந்து வர எவ்வளவு நாள் ஆகும் என்பது உங்கள் காதலை, உங்கள் முதிர்ச்சியை, பிரிவை ஏற்றுக்கொண்ட பக்குவத்தை அடிப்படையாக்க் கொண்டது. முழுமையாகப் பிரிவதுதான் பிரிவை இன்னும் இலகுவாக்கும். “நான் கொஞ்சமாக அவனிடம் இருந்து வெளியே வந்துவிடலாம் என இருக்கிறேன், திடீரென நான் பேசுவதை நிறுத்திக்கொண்டால் அவன் தாங்க மாட்டான், அதுவே நான் அவனிடம் இருந்து சிறிது சிறிதாக விலகினால் அவன் புரிந்துகொள்வான்” என்று ஒரு பெண் என்னிடம் சொன்னாள். நிறையப் பேருக்கும் பிரிதலையொட்டி இந்த நிலைப்பாடே இருக்கும். மதுவை எப்படிக் கொஞ்சம் கொஞ்சமாக விட முடியாதோ அதே போலவே ஒரு காதலையும் கொஞ்சம் கொஞ்சமாக விட முடியாது.  தொடர வேண்டாம் என முடிவு செய்து விட்டால் அதில் முழுமையாக இருந்தால் வெளியே வர முடியும். இடையிடையே பேசிக்கொண்டு, பார்த்துக்கொண்டு, ஒருவரை ஒருவர் கண்காணித்துக்கொண்டு இருந்தால் பிரிவு சிக்கலானதாக நிறையக் காயப்படுத்துவதாக, மனவுளைச்சல் கொடுக்கக்கூடியதாக இருக்கும். “நான் அவ கூட ரொம்ப இண்டிமேட்டா இருந்துட்டேன், செக்ஸ் கூட வச்சிகிட்டோம், ஆனால் இனி அப்படி இல்லாம வெறும் ஃபிரண்ட்ஸா மட்டும் இருக்கலாம்னு இருக்கேன்” என அந்த இளைஞன் சொன்ன போது. அப்படி இருப்பதற்கான வாய்ப்புகள் குறைவு எனச் சொன்னேன். ஓர் உறவு ஒரு கட்டத்தை அடைந்துவிட்டால் அதற்கு பிறகு அதன் முந்தைய நிலைக்குக் கொண்டு வந்து அதை நிறுத்துவது கடினம். தினமும் காலையில் இருந்து மது அருந்தும் ஒருவன் திடீரென ஒரு நாள் வந்து இனி நான் வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே மது அருந்துவேன் எனச் சொல்லும் போது அது எப்படிச் சாத்தியமில்லையோ அதே போலவே ஓர் உறவை அதன் முந்தைய நிலைகளுக்கு ஒருபோதும் எடுத்து வர முடியாது. பிரியவேண்டும் என முடிவெடுத்தால் அதில் உறுதியாகவும், முழுமையாகவும் இருந்தால் மட்டுமே பிரிய முடியும். ஓர் உன்னதமான உறவு என்பது எத்தனைக் காலம் அது நீடித்தது என்பதில் மட்டும் இல்லை, ஒருவேளை அது ஒரு முடிவுக்கு வந்தால் அந்தப் பிரிவின் முடிவை எத்தனை காதலுடன் அதை அணுகியது என்பதில்தான் இருக்கிறது. பிரிதலின் வழியாகவே நாம் அதிலிருந்த காதலை முழுமையாக உணர முடியும்.   https://uyirmmai.com/article/uyirmmai-magazine-march-2024-article-05/
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.