Jump to content

குடியமர்த்தத் தாமதமானால் கடும் விளைவுகள் ஏற்படும்: இலங்கைக்கு இந்தியா எச்சரிக்கை


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குடியமர்த்தத் தாமதமானால் கடும் விளைவுகள் ஏற்படும்: இலங்கைக்கு இந்தியா எச்சரிக்கை

First Published : 21 Sep 2009 11:59:00 PM IST

Last Updated :

கொழும்பு, செப். 20: தமிழர்களை அகதி முகாம்களில் இருந்து அவரவர் ஊர்களில் குடியமர்த்தத் தாமதமானால் தெற்காசியாவில் ஸ்திரமற்ற நிலையை அது ஏற்படுத்திவிடும் என்று இலங்கை அரசை இந்தியா கடுமையாக எச்சரித்துள்ளது.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் முடிவுக்கு வந்ததன் பிறகு 3 லட்சத்துக்கும் மேற்பட்ட இலங்கைத் தமிழர்கள் முள் கம்பி வேலி அமைக்கப்பட்ட முகாம்களுக்குள் கால்நடைகளைப் போல அடைக்கப்பட்டிருப்பதையும், சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டிருப்பதையும் சுட்டிக்காட்டி இதனால் இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் தமிழர்களிடையே ஏற்பட்டுவரும் கொதிப்புகளைச் சுட்டிக்காட்டி தமிழக முதல்வர் மு. கருணாநிதி பிரதமர் மன்மோகன் சிங்குக்குக் கடிதம் மூலம் சில குறிப்புகளை அளித்திருந்தார்.

நிலைமை கையை மீறிச் செல்வதற்குள் தமிழர்கள் கெüரவமாக அவரவர் ஊர்களில் சென்று குடியேறவும் தொழில்களில் ஈடுபடவும் இலங்கை அரசு அனுமதிக்காவிட்டால் பெரிய கொந்தளிப்பு ஏற்படும் என்று அதில் உணர்த்தப்பட்டிருந்தது. இதைப் படித்த பிரதமர் மன்மோகன் சிங் உடனே இலங்கை அரசை எச்சரிக்கும் பணியை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணனிடம் ஒப்படைத்தார். அவரும் இலங்கை அதிபர் மகிந்த ராஜபட்சவுக்கே கடிதம் எழுதி, தமிழர்களின் அவல நிலை நீடிப்பது நல்லதல்ல என்று உரிய வகையில் எச்சரித்தார்.

கடந்த வாரத்தின் தொடக்கத்தில் கொழும்பில் அதிபர் மகிந்த ராஜபட்சவைச் சந்தித்த இந்தியத் தூதர் அலோக் பிரசாத், தமிழர்களை அவரவர் ஊர்களில் உடனே குடியமர்த்த வேண்டும் என்ற பிரதமரின் வேண்டுகோளை நேரில் அளித்திருந்தார்.

இத் தகவல்களை இலங்கையின் ""தி சண்டே டைம்ஸ்'' என்ற நாளேடு தெரிவிக்கிறது. இலங்கைத் தமிழர்களை மறு குடியமர்த்துவதும், மறு வாழ்வு அளிப்பதும் இலங்கையின் உள் விவகாரம் என்று விட்டுவிட இந்தியா தயாராக இல்லை என்பதையும் தமிழ்நாட்டு மக்களும் அரசும் தரும் அழுத்தத்துக்கு இந்திய அரசும் அதன் மூலம் இலங்கை அரசும் கட்டுப்பட்டவையே என்பதையும் இப்பத்திரிகைச் செய்தி படம் பிடித்துக் காட்டியிருக்கிறது.

உடனடி நடவடிக்கை: தயாநிதி மாறன் அளித்த கடிதத்தைப் பெற்றுக்கொண்ட பிரதமர் மன்மோகன் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணனை அழைத்து அதிபர் மகிந்த ராஜபட்சவிடம் இந்தியாவின் உணர்வுகளை அப்படியே தெரிவிக்குமாறு கூறியிருந்தார். அதன் விளைவாக கொழும்பில் இலங்கை அரசின் மூத்த அதிகாரிகளும் அமைச்சர்களும் அவசரமாகக் கூடி தமிழர்களின் மறுவாழ்வு தொடர்பான நடவடிக்கைகள் எந்த நிலையில் இருக்கின்றன என்று ஆய்வு செய்தனர்.

அடுத்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அப்போது பல முடிவுகள் எடுக்கப்பட்டன. அதற்கான அதிகாரிகளும் நியமிக்கப்பட்டனர் என்று தெரிகிறது.

ஐ.நா. அதிகாரி ஆய்வு: மூன்று லட்சத்துக்கும் மேற்பட்ட அப்பாவித் தமிழர்கள் அகதி முகாம்களில் எப்படி நடத்தப்படுகின்றனர் என்பதை ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் விவகாரங்களுக்கான சார்புச் செயலர் லின் பாஸ்கோ கடந்த வாரம் நேரில் ஆய்வு செய்தார். அப்போது தமிழர்கள் உடல் ரீதியாகவும் உள்ள ரீதியாகவும் மிகவும் புண்பட்ட நிலையில் இருப்பதைக் கண்டு வருந்தினார்.

தமிழர்களை அவரவர் ஊர்களுக்கு அனுப்புவதில் தாமதம் ஏற்படுவதற்குக் காரணங்களாக இலங்கை அரசு கூறிய தகவல்களை அவர் ஒப்புக்கொண்டதைப் போலத் தெரியவில்லை. எனவே வரும் ஜனவரிக்குள் அனைவரும் அவரவர் ஊர்களுக்கு அனுப்பிவைக்கப்படுவார்கள் என்று இலங்கை அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

கண்ணி வெடிகளை அகற்றாமல் தமிழர்களை அவரவர் பகுதிகளுக்கு அனுப்பிவைக்க முடியாது என்ற வாதத்தை தமிழர்கள்பால் இலங்கை அரசுக்கு உள்ள அக்கறையைக் காட்டுவதாகவே கொண்டாலும், முகாம்களில் இருப்பவர்கள் வெளியே வேலைக்குச் செல்வதற்குக்கூட அனுமதி மறுப்பது சரியா என்று லின் பாஸ்கோ கேட்டார். இனி அதிக அளவில் மக்கள் வெளியே சென்றுவர பாஸ்களைத் தருவதாக இலங்கை அரசின் சார்பில் அப்போது உறுதி கூறப்பட்டது.

வீடுகளுக்குப் போகவில்லை? ராணுவக் கட்டுப்பாட்டிலிருந்த முகாம்களிலிருந்து வீடுகளுக்கு அனுப்பப்பட்ட தமிழர்கள் அரசு அறிவித்தபடி அவரவர் வீடுகளுக்கு இன்னமும் போய்ச் சேரவில்லை என்ற அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளிவரத் தொடங்கியுள்ளன.

வவுனியா முகாம்களிலிருந்து செப்டம்பர் 15-ம் தேதி 2,000 தமிழ் அகதிகள் அனுப்பிவைக்கப்பட்டனர். ஆனால் அவர்களின் நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டு இப்போது வேறு எங்கோ சிறை வைக்கப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாண முகாமிலிருந்து 568 தமிழ் அகதிகள் செப்டம்பர் 11-ம் தேதி அவரவர் வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். அவர்களும் வீடுகளுக்குச் செல்ல முடியாமல் கைத்தடி என்ற இடத்தில் பல்கலைக்கழக விடுதி வளாகத்தில் மீண்டும் சிறை வைக்கப்பட்டுள்ளனர்.

அம்பாறை, திரிகோணமலை, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் உள்ள முகாம்களிலிருந்து அனுப்பிவைக்கப்பட்ட 1,706 அகதிகளும் அவரவர் வீடுகளுக்குப் போய்ச் சேராமல் வழியில் எங்கோ தடுத்து காவலில் வைக்கப்பட்டிருக்கின்றனர். இலங்கை அரசும் ராணுவமும் அப்பட்டமான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டுவருவதையே இந்தச் சம்பவங்கள் உணர்த்துகின்றன என்று மனிதாபிமான நடவடிக்கைகளுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் ஒருங்கிணைப்பு அலுவலகமே கூறுகிறது.

முகாம்களிலிருந்து நாங்கள் அனுப்பிவிட்டோம், மாவட்ட அதிகாரிகள்தான் தமிழர்களைத் தடுத்து நிறுத்திவைத்துள்ளனர் என்று முகாம் அதிகாரிகள் பழியை அவர்கள் மீது போடுகின்றனர்.

உறவினருடன் வசிக்க மனு: முகாம்களில் இருப்பவர்கள் விரும்பினால் வீடுகளில் வசிக்கும் தங்களுடைய உறவினர்களுடன் போய்ச் சேர்ந்து வாழலாம் என்று கூறப்பட்டது. அதற்காக மனுக்களும் தரப்படுவதாகக் கூறப்பட்டது. ஆனால் அப்படி மனுச் செய்ய விரும்பியவர்களுக்கு மனுக்கள் கூட தரப்படவில்லை. மனுக்கள் கிடைத்து விண்ணப்பித்தவர்களின் கோரிக்கைகள் ஏற்கப்படவில்லை. இதற்காக அவர்கள் அகதிகள் முகாம் அலுவலகங்களுக்கு எதிரில் ஆர்ப்பாட்டத்தில் கூட ஈடுபட்டனர்.

உண்மை இப்படி இருக்க, ஐ.நா. அதிகாரி லின் பாஸ்கோவிடம் அதிபர் மகிந்த ராஜபட்ச பேசும்போது, உறவினர்களுடன் போங்கள் என்று கூறி விண்ணப்பங்களை முகாம் அலுவலகத்தில் வைத்திருந்தும் தமிழர்கள் அவற்றை வாங்கிக் கொள்ளாமல் இருக்கின்றனர் என்று கூசாமல் கூறியிருக்கிறார்.

தினமணி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உறவினர்களுடன் போங்கள் என்று கூறி விண்ணப்பங்களை முகாம் அலுவலகத்தில் வைத்திருந்தும் தமிழர்கள் அவற்றை வாங்கிக் கொள்ளாமல் இருக்கின்றனர்

சிவப்பு மையடிக்க மறந்திட்டார் :unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீர் என்ன இங்க பெயின்ற் அடிகிற வேலைக்கோ வந்தீர் :lol::lol::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்னொரு நாட்டு விடயத்தில் இவர்கள் இனி எப்படித் தலையிடப்போகின்றார்கள்? இனிமேல் தமிழனுக்கு உணவுப்பொட்டலம் மேலிருந்து விழுமோ? தனக்கு வேண்டாவிட்டால் தலையிட முடியாது. தனக்கு விரும்பினால் தலையிட முடியும். மீண்டும் இந்தியாவின் தன்னலப் பிராந்திய பாதுகாப்புக் கோட்பாட்டுக்குக்கீழ் தமிழர்களைக் கால்பந்தாக்கத் தமிழர்கள் இடமளிக்கக்கூடாது. இந்தியாவின் பாசாங்குக்குள் விழாது, சீனாவை அங்கு குடியிருத்துங்கள். அழிந்த தமிழனம் மீண்டும் தளைக்க வழிகோலும். கெட்ட இந்நியாவை சிதறடிக்கத்தமிழினம் பாடுபடவேண்டும். இந்தியாவைச் சிதறடிக்க சர்வதேசம் தனது பங்கில் பாதிக்குமேல் சென்றுவிட்டது. காலத்தை இந்தியாவே நெருங்க வைத்துவிட்டது. தமிழீத்திற:க இன்னும் கனதூரம் இருந்தாலும் இதற்குக் கனதூரம் இல்லை. இதுவே தமிழீத்திற்கான பாதைக்கு முதல்கல். இது மிகவும் பனிப்போராகவே இருக்கின்றது. இந்தியாவைச் சிதறடிப்பதன் காரணமாகவே சர்வதேசமும் தமிழர் பிரச்சனையில் இதுவரை பாராமுகமாக இருந்தது இன்னமும் வெளிச்சத்திற்கு வரவில்லை. (வலியைத் தந்தவனுக்கு அவ்வலியைத் திருப்பிக்கொடு) மீதிக்கு இலங்கைத் தமிழர்கள் தான் பாடுபடவேண்டும். அதற்கு அப்புறம் வெற்றி நமதே.

Link to comment
Share on other sites

ஏ9 க்கு மேற்கு பக்கம் பாடசாலைகள் மருத்துவமனைகளை சீரமைத்து மீள்குடியேற்றத்திற்கான ஒழுங்குகளை அரசாங்கம் செய்துவருகின்றது. மக்கள் மீள செல்லும் போது அவைகள் சிங்கின் வெருட்டலாலும் கருணாநிதியின் முயற்சியாலும் நடந்ததாக தமிழ்நாட்டுச் சனங்களை பேக்காட்ட ஆரம்பித்துவிட்டார்கள் போலுள்ளது. அவங்கட நாட்டு மீனவர்களை இலங்கைப் படைகள் கொடுமைப்படுத்துவதற்கு ஒரு எச்சரிக்கை விட முடியவில்லை வன்னி அகதிகளுக்காக எச்சரிக்கை??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மக்களை குடியமர்த்தத் தாமதமானால் கடும் விளைவுகள் ஏற்படும் – சிறிலங்காவுக்கு இந்தியா எச்சரிக்கை

தமிழர்களை அகதி முகாம்களில் இருந்து அவரவர் ஊர்களில் குடியமர்த்தத் தாமதமானால் தெற்காசியாவில் ஸ்திரமற்ற நிலையை அது ஏற்படுத்திவிடும் என்று இலங்கை அரசை இந்தியா கடுமையாக எச்சரித்துள்ளது.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் முடிவுக்கு வந்ததன் பிறகு 3 லட்சத்துக்கும் மேற்பட்ட இலங்கைத் தமிழர்கள் முள் கம்பி வேலி அமைக்கப்பட்ட முகாம்களுக்குள் கால்நடைகளைப் போல அடைக்கப்பட்டிருப்பதையும், சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டிருப்பதையும் சுட்டிக்காட்டி இதனால் இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் தமிழர்களிடையே ஏற்பட்டுவரும் கொதிப்புகளைச் சுட்டிக்காட்டி தமிழக முதல்வர் மு. கருணாநிதி பிரதமர் மன்மோகன் சிங்குக்குக் கடிதம் மூலம் சில குறிப்புகளை அளித்திருந்தார்.

நிலைமை கையை மீறிச் செல்வதற்குள் தமிழர்கள் கெüரவமாக அவரவர் ஊர்களில் சென்று குடியேறவும் தொழில்களில் ஈடுபடவும் இலங்கை அரசு அனுமதிக்காவிட்டால் பெரிய கொந்தளிப்பு ஏற்படும் என்று அதில் உணர்த்தப்பட்டிருந்தது.

இதைப் படித்த பிரதமர் மன்மோகன் சிங் உடனே இலங்கை அரசை எச்சரிக்கும் பணியை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணனிடம் ஒப்படைத்தார். அவரும் இலங்கை அதிபர் மகிந்த ராஜபட்சவுக்கே கடிதம் எழுதி, தமிழர்களின் அவல நிலை நீடிப்பது நல்லதல்ல என்று உரிய வகையில் எச்சரித்தார்.

கடந்த வாரத்தின் தொடக்கத்தில் கொழும்பில் அதிபர் மகிந்த ராஜபட்சவைச் சந்தித்த இந்தியத் தூதர் அலோக் பிரசாத், தமிழர்களை அவரவர் ஊர்களில் உடனே குடியமர்த்த வேண்டும் என்ற பிரதமரின் வேண்டுகோளை நேரில் அளித்திருந்தார். இத் தகவல்களை இலங்கையின் “”தி சண்டே டைம்ஸ்” என்ற நாளேடு தெரிவிக்கிறது.

இலங்கைத் தமிழர்களை மறு குடியமர்த்துவதும், மறு வாழ்வு அளிப்பதும் இலங்கையின் உள் விவகாரம் என்று விட்டுவிட இந்தியா தயாராக இல்லை என்பதையும் தமிழ்நாட்டு மக்களும் அரசும் தரும் அழுத்தத்துக்கு இந்திய அரசும் அதன் மூலம் இலங்கை அரசும் கட்டுப்பட்டவையே என்பதையும் இப்பத்திரிகைச் செய்தி படம் பிடித்துக் காட்டியிருக்கிறது.

உடனடி நடவடிக்கை:

தயாநிதி மாறன் அளித்த கடிதத்தைப் பெற்றுக்கொண்ட பிரதமர் மன்மோகன் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணனை அழைத்து அதிபர் மகிந்த ராஜபட்சவிடம் இந்தியாவின் உணர்வுகளை அப்படியே தெரிவிக்குமாறு கூறியிருந்தார். அதன் விளைவாக கொழும்பில் இலங்கை அரசின் மூத்த அதிகாரிகளும் அமைச்சர்களும் அவசரமாகக் கூடி தமிழர்களின் மறுவாழ்வு தொடர்பான நடவடிக்கைகள் எந்த நிலையில் இருக்கின்றன என்று ஆய்வு செய்தனர். அடுத்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அப்போது பல முடிவுகள் எடுக்கப்பட்டன. அதற்கான அதிகாரிகளும் நியமிக்கப்பட்டனர் என்று தெரிகிறது.

ஐ.நா. அதிகாரி ஆய்வு:

மூன்று லட்சத்துக்கும் மேற்பட்ட அப்பாவித் தமிழர்கள் அகதி முகாம்களில் எப்படி நடத்தப்படுகின்றனர் என்பதை ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் விவகாரங்களுக்கான சார்புச் செயலர் லின் பாஸ்கோ கடந்த வாரம் நேரில் ஆய்வு செய்தார். அப்போது தமிழர்கள் உடல் ரீதியாகவும் உள்ள ரீதியாகவும் மிகவும் புண்பட்ட நிலையில் இருப்பதைக் கண்டு வருந்தினார்.

தமிழர்களை அவரவர் ஊர்களுக்கு அனுப்புவதில் தாமதம் ஏற்படுவதற்குக் காரணங்களாக இலங்கை அரசு கூறிய தகவல்களை அவர் ஒப்புக்கொண்டதைப் போலத் தெரியவில்லை. எனவே வரும் ஜனவரிக்குள் அனைவரும் அவரவர் ஊர்களுக்கு அனுப்பிவைக்கப்படுவார்கள் என்று இலங்கை அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

கண்ணி வெடிகளை அகற்றாமல் தமிழர்களை அவரவர் பகுதிகளுக்கு அனுப்பிவைக்க முடியாது என்ற வாதத்தை தமிழர்கள்பால் இலங்கை அரசுக்கு உள்ள அக்கறையைக் காட்டுவதாகவே கொண்டாலும், முகாம்களில் இருப்பவர்கள் வெளியே வேலைக்குச் செல்வதற்குக்கூட அனுமதி மறுப்பது சரியா என்று லின் பாஸ்கோ கேட்டார். இனி அதிக அளவில் மக்கள் வெளியே சென்றுவர பாஸ்களைத் தருவதாக இலங்கை அரசின் சார்பில் அப்போது உறுதி கூறப்பட்டது.

வீடுகளுக்குப் போகவில்லை?

ராணுவக் கட்டுப்பாட்டிலிருந்த முகாம்களிலிருந்து வீடுகளுக்கு அனுப்பப்பட்ட தமிழர்கள் அரசு அறிவித்தபடி அவரவர் வீடுகளுக்கு இன்னமும் போய்ச் சேரவில்லை என்ற அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளிவரத் தொடங்கியுள்ளன. வவுனியா முகாம்களிலிருந்து செப்டம்பர் 15-ம் தேதி 2,000 தமிழ் அகதிகள் அனுப்பிவைக்கப்பட்டனர். ஆனால் அவர்களின் நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டு இப்போது வேறு எங்கோ சிறை வைக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாண முகாமிலிருந்து 568 தமிழ் அகதிகள் செப்டம்பர் 11-ம் தேதி அவரவர் வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். அவர்களும் வீடுகளுக்குச் செல்ல முடியாமல் கைத்தடி என்ற இடத்தில் பல்கலைக்கழக விடுதி வளாகத்தில் மீண்டும் சிறை வைக்கப்பட்டுள்ளனர்.

அம்பாறை, திரிகோணமலை, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் உள்ள முகாம்களிலிருந்து அனுப்பிவைக்கப்பட்ட 1,706 அகதிகளும் அவரவர் வீடுகளுக்குப் போய்ச் சேராமல் வழியில் எங்கோ தடுத்து காவலில் வைக்கப்பட்டிருக்கின்றனர். இலங்கை அரசும் ராணுவமும் அப்பட்டமான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டுவருவதையே இந்தச் சம்பவங்கள் உணர்த்துகின்றன என்று மனிதாபிமான நடவடிக்கைகளுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் ஒருங்கிணைப்பு அலுவலகமே கூறுகிறது. முகாம்களிலிருந்து நாங்கள் அனுப்பிவிட்டோம், மாவட்ட அதிகாரிகள்தான் தமிழர்களைத் தடுத்து நிறுத்திவைத்துள்ளனர் என்று முகாம் அதிகாரிகள் பழியை அவர்கள் மீது போடுகின்றனர்.

உறவினருடன் வசிக்க மனு:

முகாம்களில் இருப்பவர்கள் விரும்பினால் வீடுகளில் வசிக்கும் தங்களுடைய உறவினர்களுடன் போய்ச் சேர்ந்து வாழலாம் என்று கூறப்பட்டது. அதற்காக மனுக்களும் தரப்படுவதாகக் கூறப்பட்டது. ஆனால் அப்படி மனுச் செய்ய விரும்பியவர்களுக்கு மனுக்கள் கூட தரப்படவில்லை. மனுக்கள் கிடைத்து விண்ணப்பித்தவர்களின் கோரிக்கைகள் ஏற்கப்படவில்லை. இதற்காக அவர்கள் அகதிகள் முகாம் அலுவலகங்களுக்கு எதிரில் ஆர்ப்பாட்டத்தில் கூட ஈடுபட்டனர். உண்மை இப்படி இருக்க, ஐ.நா. அதிகாரி லின் பாஸ்கோவிடம் அதிபர் மகிந்த ராஜபட்ச பேசும்போது, உறவினர்களுடன் போங்கள் என்று கூறி விண்ணப்பங்களை முகாம் அலுவலகத்தில் வைத்திருந்தும் தமிழர்கள் அவற்றை வாங்கிக் கொள்ளாமல் இருக்கின்றனர் என்று கூசாமல் கூறியிருக்கிறார்.

http://www.meenagam.org/?p=10980

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதைத்தான் குஸும்பு என்று சொல்லுறது ஆக்கும்

வவுனியா வதை முகாமில் இருந்து உன்கட உறவுகளை வெளியிலை எடுப்பது என்றால் உன்களிடம் சொந்த வீடு இருக்க வேண்டும்...எனது நண்பன் சொன்னவர்...

வவுனியாவில எத்தனை பேர் சொ. வீடு வைத்திருக்கினம்

எல்லாம் விதி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவங்களை விடுங்கோ..... தமிழ் இனமே அடைக்கப்பட்டிருக்கு.... ஆனால் ஒரு கிழட்டு நரி தமிழாராச்சி மாநாடு நடத்த போகுதாம்....... அது சரி இவ்வளவு நடந்த இந்த மண்ணிலேயே.. ஆலய விழாக்கள், களியாட்டங்கள் கோலாகலமாக நடக்கும் போது... அவங்களை நோவானேன்... இவற்றை எவ்வாறு நிறுத்துவது ???

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உறவே,  இப்படியே  போனால் எம்மை இறுதியில் பச்சடி போட்டுவிடுவார்கள் என்பதை முன்னமே துல்லியமாக கணிப்பிட்டு  உயிரைக் காப்பாற்ற ஓடி வந்த நீங்கள் உட்பட்ட நாம் அனைவரும் அறிவு ஜீவிகள் தான். 😂   
    • @goshan_che மீண்டும் உங்களை கண்டது மகிழ்ச்சி… ஆனால் 2 (?) வார விடுமுறையில் மக்களின் வாக்களிக்கும் தன்மையை தீர்மானிக்க முடியுமா? நீங்கள் குறிப்பிட்டவாறு தமிழ்தேசிய கூட்டமைப்பு  தமிழ் தேசிய மக்கள் முன்னணி தமிழ் மக்கள் கூட்டணி ஆகியவற்றிற்கு மக்கள் வாக்களிக்க போவதில்லை என்ற முடிவிற்கு எவ்வாறு வந்தீர்கள்? 
    • நல்லது  உற‌வே அப்படிபட்ட  நீங்கள் தமிழ்நாட்டில்  சீமான் தனது மகனுக்கு ஆங்கில மோகத்தால் ஆங்கில வழி கல்வி கற்ப்பிப்பதை எதிர்க்கவில்லையே. 😭  இலங்கையில்  தமிழர்களும் சிங்கலவர்களும் தங்கள் மொழிகளில் கல்வி கற்பது போன்று மற்றய நாட்டு மக்களும் தங்கள் மொழியில் கல்வி கற்பது போன்று சீமான் தனது மகனுக்கு தமிழ் வழி கல்வி கற்பித்திருந்தால் அது ஒன்றும் சாதனையில்லை  அது ஒரு அடிப்படை விடயம்.அதுவும் தமிழ் தமிழ் என்று சொல்லி அரசியல் செய்யும் சீமான் முதல் செய்ய வேண்டியது.     சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ? சீமானை பற்றி வந்த நல்ல செய்தி ஆங்கில மோகத்தால்  தனது மகனுக்கு தமிழ்நாட்டில் ஆங்கில வழி கல்வி கற்ப்பிப்பது 🤣  
    • யாழ்.போதனா வைத்தியசாலையில் எரியூட்டி திறப்பு! யாழ்ப்பாணம் கோம்பயன்மணல் இந்து மயாணத்தில் அமைக்கப்பட்டுள்ள, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியினை, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்றைய தினம் உத்தியோகபூர்வமாக திறந்துவைத்தார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் மருத்துவ கழிவுகளை எரியூட்டுவதற்காக ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் 40 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் குறித்த எரியூட்டி கொள்முதல் செய்யப்பட்டுள்ளமை  குறிப்பிடத்தக்கது. முன்பதாக வைத்தியசாலை மருத்துவ கழிவுகளை எரியூட்டுவதில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்த நிலையில் எரியூட்டியை அமைப்பதற்கான இடத்தை தேர்வு செய்வதில் கடும் இழுபறி ஏற்பட்டிருந்தது. இந்நிலையில் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தீர்மானத்திற்கமைய யாழ் மாநகர சபை, கோம்பயன்மணல் மயான சபை என்பவற்றின் அனுமதியுடன் குறித்த எரியூட்டி கோம்பயன்மணல் இந்து மயானத்தில் நிர்மாணிக்கப்பட்ட நிலையில் இன்றையதினம் திறந்து வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1375554
    • எந்தக் காலத்திலும் அதிகாரவெறி கொண்டவர்களாலும் ஆக்கிரமிப்பாளர்களாலும்தான் இந்த உலகம் அமைதியை இழந்து கொண்டிருக்கின்றது.........!   தொடருங்கள் ஜஸ்டின் .......!   👍
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.