Jump to content

அத்தை மகளே ...போய் வரவா ?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அத்தை மகளே ...போய் வரவா ?

மேகங்களுள் நீந்தி வந்த விமானம் தரை தட்ட ஆயத்தமாக விமானப்பணிப்பெண் இருக்கை பட்டிகளை சரி செய்யும் படி சைகை மூலம் காட்டினாள் கனவி லிருந்து விடுபட்டவன் போன்று பாஸ்கரன் தன பட்டியை சரி செய்து கொண்டான். விமானம் மத்திய கிழக்கு நாடொன்றில் தரை இறங்கியது. எல்லாம் கனவு போலானது அவனுக்கு. தன தாய் நாட்டை விட்டு புறப்பட்டு கிட்ட தட்ட பதினொரு மணித்தியாலங்கள் ஆகி விட்டன. இங்கு ஒரு கம்பனியில் ஒப்பந்த அடிப்படையில் கட்டிட நிர்மாணம் ச ம்பந்தமாக வேலை செய்வதற்கு அனுமதி கிடைத்து வந்திருந்தான். முகவரின் , வரவுக்காக காத்திருந்தவனின் சிந்தனை தாயகம் நோக்கி ............

கொழும்பிலே ஒரு பிரபல கட்டிட நிர்மாண காரியாலயத்தில் வேலையில் இருந்த போது அன்றாட தேவைகளுக்கும் விலை வாசிகளுக்கும் ஈடு கொடுக்க முடியாமல் வெளி நாட்டு வேலை வாய்ப்புக்காக விண்ணபித்து இருந்தான் பாஸ்கரன். அவனுக்கு இவ்வளவு விரைவில் கிடைக்கும் என எண்ணவே இல்லை. மகிழ்ச்சி ஒரு புறம் அவளது பிரிவு ஒருபுறமாக் புறப்பட்டு விட்டான் . பாஸ்கரன் தந்தையை இழந்து ஒரு வருடமே ஆகியிருந்தது தன் இரு தங்கைகளையும் ஒரு நல்ல நிலைக்கு வைக்கும் பணியும் வீட்டுப் பொறுப்பும் அவனி டம் ஒப்படைத்து விட்டு , தந்தை காலமாகி விடார். அவருக்கு அதிக வயது இல்லய் என்றாலும் , வருத்தமும் துன்பமும் சொல்லிக்கொண்டா வரும் . தலைக்குள் விறைப்பு என்று படுத்தவர் பின் அது மூளைக் கட்டியாக்கி சத்திரசிகிச்சை வரை போய் சென்ற வருடம் , அவரை காலன் கவர்ந்து சென்று விடான். பாஸ்கரன் முடிந்த வரை வீடு பொறுப்பையும் தங்கைகளின் பாடசாலை தேவைகளையும் அவனே பார்த்து கொண்டான். இதுவரை தந்தையின் சேமலாப பணம் கை கொடுத்தது கடந்த மூன்று மாதங்களாக் தான் மிகவும் கஷ்ட படான். இதற்கிடையில் அவனது தந்தையின் ஒன்று விட்ட சகோதரி குடும்பம் நாட்டு பிரச்சினையால் கொழும்பு வந்து சேர்ந்தார்கள். அவர்களின் ஒரே மகள் சந்தியா , ஆசிரியையாக வவுனியாவுக்கு அண்மையில் ஒரு சிறு கிராமத்தில் படிப்பித்து கொண்டு இருந்தாள். அங்கு பிரச்சினையால் மாற்றல் வாங்கி கொண்டு கொழும்புக்கு வந்திருந்தார்கள். இடமும் புதிது ,அவர்களுக்கு தேவையான் உதவிகளை செய்து கொடுத்தான் பாஸ்கரன். அவர்கள் இவர்களையே நம்பி வந்திருந்தார்கள். இவனது நட்பு அண்மையில் தான் காதலாகியிருந்த்து .

முறை மாமா ஏதும் சொல்ல மாட்டார் என்ற தைரியத்தில் ஆழமாக் இறங்கி விடான் காதலில் . ஆனால் தன் தங்கைகளின் நல் வாழ்வையும் மறக்க வில்லை இரு வீட்டு பெற்றவர்களுக்கும் தெரியாது. அதற்கிடையில் இப்படி வெளி நாட்டு அழைப்பு வரும் என எண்ண வில்லை அவன். விடை பெறும் நாளும் வந்தது

.எல்லோருக்கும் பயணம் சொல்லி புறபட்டு விட்டான் . வவனியா மாமா தான் விமான நிலையம் வரை வந்தார். முதல் நாள் இரவு , சந்தியா கோவிலுக்கு சென்று வரும் வழியில் ,. சந்தியாவை கண்டு சத்தியம் வாங்கி இருந்தான். தான் வரும் வரை தனக்காக் காத்திருக்கும் படியும் ....வந்ததும் பெற்றவர்களிடம் சம்மதம் வாங்கி திருமணம் செய்வதென்று உறுதியுடன் கூறியிருந்தான். காலம் இவர்களுக்காக காத்திருக்குமா ? காதல் திருமணத்தில் முடியுமா? குடும்பத்தில் ஒரே பெண்ணான சந்தியாவை இவனுக்கு கொடுப்பார்களா ? ...........ஏக்கங்களுடன் காத்திருக்கிறான் பாஸ்கரன்.

காலம் தான் இவர்களை சேர்த்து வைக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

நிச்சயம் பாஸ்கரன் சந்தியாவுக்காக வருவான். ஆனால் அவனுக்குகாக சந்தியா காத்திருப்பாளா? இல்லவே இல்லை. பாஸ்கரன் வரும்போது சந்தியா வெளிநாட்டு மாப்பிள்ளைக்கு வழ்க்கைப்பட்டு கனடா போயிருப்பாள். பாவம் பாஸ்கரன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அத்தைமகள் அந்தரப்படாமல் இருந்தால் கண்டிப்பாக அவர்கள் இருவரும் ஒன்று சேர வாய்ப்புக்கள் உண்டு.நன்றி அக்கா உங்களின் சிறுகதைக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ராசா ராசன் ...........யாயினி உங்கள் கருத்துக்கு நன்றிகள்.

அத்தை மகள் அந்தர படமாடாள்....(?). மாமா மாமி மனம் மாறாமல் இருந்தால் சரி ...........

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நிலாமதி அக்கா

உங்கள் கதையின் இறுதிக் கேள்விக்கு விடைசொல்லமுடியாத காலமிது...

எடுக்கும் கருப்பொருளை இலாவகமாகச் சொல்லும் பக்குவம் உங்களிடம் இருக்கிறது.. வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்கள் கதையை படிக்கும் போது பாஸ்கரனது குடும்ப பொறுப்புக்கள் சுமப்பது போன்ற உணர்வையும்

சந்தியாவினது நட்பு சுகமான உணர்வையும் தருகின்றது இதைத்தான் 'சுகமான சுமைகள்' என்பதோ

இப்படி எத்தனை அன்பான‌ அண்ணன்கள்

எத்த‌னை க‌ண்ணிய‌மான‌ காத‌ல‌ன்க‌ள்

இவ‌ர்க‌ள் எல்லாம் எம் க‌லாச்சார‌த்தின் அடையாள‌ங்க‌ள் அல்ல‌து குரியீடுக‌ள்

பாஸ்க‌ர‌ன் போன்ற‌ காத‌ல் வாய்த்தால் சுமைக‌ள் கூட‌

சுக‌மாக‌ இருக்கும்

கால‌ம் அவ‌ர்க‌ளை சேர்த்து வைக்க‌ட்டும்.சேர்த்து வைக்கும் என்ற‌ ந‌ம்பிக்கையில்......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அத்தை மகள் அந்தர படமாடாள்....(?). மாமா மாமி மனம் மாறாமல் இருந்தால் சரி ...........

மாமா,மாமி மனம் மாறினாலும் மாறிவினம்,சிலவேளை அவுஸ்ரெலியா,கனடா,இங்கிலாந்து போன்ற நாடுகளின் சிட்டிசன் சிப் இருக்கிற மாப்பிள்ளை கிடைச்சால் :(

Link to comment
Share on other sites

நிலா அக்கா உங்கள் கதையில் காதலியை விட்டு

காதலன் அரபு நாடு ஒன்றுக்கு போவதாக எழுதியிருக்கிறியள்..........

இதே காதலன் ஐரோப்பிய நாடு ஒண்டுக்கு வந்திருந்தால்

சில வேளை அவர்கள் காதல் நிறை வேறலாம்????

புத்தன் சொன்னது போல் தான் நானும் சொல்லுகிறேன்

புலத்தில விசாவுடன் மாப்பிள்ளை வந்தால்.................

பெற்றோர் மட்டுமல்ல காதலியும் ஓம் எண்டு சொல்லி

சந்தோசமாக திருமணமும் நடக்க வாய்ப்பிருக்கிறது........

காதல் எல்லாம் இன்றய நிலமையில் சந்தர்ப்பம் சுhழ்நிலைக்கு ஏற்றால் போல

மாறும் தன்மை கொண்டவையாகவே இருக்கின்றன!!!!!!!!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நிலாமதி அக்கா நீங்க என் வீட்டுக்கு பக்கத்திலை இல்லைத்தானே? :(

நிலா அக்கா உங்கள் கதையில் காதலியை விட்டு

காதலன் அரபு நாடு ஒன்றுக்கு போவதாக எழுதியிருக்கிறியள்..........

இதே காதலன் ஐரோப்பிய நாடு ஒண்டுக்கு வந்திருந்தால்

சில வேளை அவர்கள் காதல் நிறை வேறலாம்????

புத்தன் சொன்னது போல் தான் நானும் சொல்லுகிறேன்

புலத்தில விசாவுடன் மாப்பிள்ளை வந்தால்.................

பெற்றோர் மட்டுமல்ல காதலியும் ஓம் எண்டு சொல்லி

சந்தோசமாக திருமணமும் நடக்க வாய்ப்பிருக்கிறது........

காதல் எல்லாம் இன்றய நிலமையில் சந்தர்ப்பம் சுhழ்நிலைக்கு ஏற்றால் போல

மாறும் தன்மை கொண்டவையாகவே இருக்கின்றன!!!!!!!!!!

அப்படி போடு அரிவாளை :D

'சுகமான சுமைகள்' என்பதோ

எத்த‌னை க‌ண்ணிய‌மான‌ காத‌ல‌ன்க‌ள்

இவ‌ர்க‌ள் எல்லாம் எம் க‌லாச்சார‌த்தின் அடையாள‌ங்க‌ள் அல்ல‌து குரியீடுக‌ள்

காத‌ல் வாய்த்தால் சுமைக‌ள் கூட‌

சுக‌மாக‌ இருக்கும்

என்னது சுகமான சுமையோ ஏன்யா??

எதுக்கும் நொந்து நூடில்ஸ் ஆன நம்ம நெடுக்கண்ணா போன்றவர்களைக் கேழுங்கள் சுகமான சுமையா என்று?? :D

(நெடுக்ஸ் கோபிக்காதீங்க)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வேணாம் வலிக்குது அழுதிடுவேன் ஜீவா:(

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தில், சிறிலங்காவில் இருக்கும் பெற்றோர்கள் மகளை உடனடியாகக் கல்யாணம் செய்து வெளினாடுகளுக்கு அனுப்பத்தான் பார்ப்பார்கள். நாட்டின் நிலமை மிகவும் கவலைக்குறியது. அதுவும் வவுனியாப் பக்கத்தில் இருந்து வரும் இளம் ஆண்களும், பெண்களும் கொழும்பில் கனகாலம் சுதந்திரமாக இருக்க கோத்தபாயாவின் கொலைகாரப்படையினர் விடமாட்டார்கள். நாட்டுப் பிரச்சனை காரணமாக , ஈழத்தில் பிறந்த பலரின் காதல்கள் , திருமணத்தில் முடியவில்லை.

வேணாம் வலிக்குது அழுதிடுவேன் ஜீவா:lol:

நிலாமதி அக்கா நீங்க என் வீட்டுக்கு பக்கத்திலை இல்லைத்தானே? :lol:

சொந்தக்கதை எதேனும் இருக்கிறது போலக்கிடக்குதே.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அடுத்த அடுத்த வரிகளில் எப்படி இப்படி 180 பாகை எதிராக எழுத முடிகிறது? 👆🏼👇 2016 இல் இறங்கினார் சரி.  2021 வரை அனுபவம் ஜனநாயகம் செயல் அளவில் இல்லை என சொன்னபின்னும் ஏன் அதையே 2024 இல் செய்கிறார்? The definition of  insanity is doing the same thing again and gain and expecting a different outcome. அண்ணன் என்ன லூசா? அல்லது கமிசன் வாங்கி கொண்டு வாக்கை பிரிக்க இப்படி செய்கிறாரா? நான் என்ன ரோ எஜெண்டா அல்லது பிஜேபி பி டீமா? எனக்கு எப்படி தெரியவரும்? உங்களை சவுத் புளொக் கூப்பிட்டு காதுக்குள் ஐபி டைரக்டர் சொல்லி இருப்பார் என நினைக்கிறேன்? மாற்றுக்கருத்து ஏதும் இல்லை. நேற்று டவுனிங் ஸ்டிரீட் பக்கம் சும்மா வாக்கிங் போனேன். உங்களை பற்றி இந்த வகையில்தான் பேசி கொண்டார்கள். நான் கேள்விபட்ட வரையில் டிரம்ப் தான் வென்றதாம்….நீங்கள் சொல்லி விட்டீர்கள் என்பதால், தேர்தல் முடிவை குளறுபடி செய்து மாற்றினார்களாம்.
    • உங்க‌ட‌ அறிவுக்கு நீங்க‌ள் இப்ப‌டி எழுதுறீங்க‌ள் அவ‌ர்க‌ள் ஜ‌ன‌நாய‌க‌த்தின் மீது ந‌ம்பிக்கை இருந்த‌ ப‌டியால் தான் அர‌சிய‌லில் இற‌ங்கின‌வை இந்தியாவில் ஜ‌ன‌நாய‌க‌ம் என்ற‌து சொல் அள‌வில் தான் இருக்கு செய‌லில் இல்லை................ 2023 டெல்லிக்கு உள‌வுத்துறை கொடுத்த‌ த‌க‌வ‌ல் உங்க‌ளுக்கு வேணும் என்றால் தெரியாம‌ இருக்க‌லாம் இது ப‌ல‌ருக்கு போன‌ வ‌ருட‌மே தெரிந்த‌ விடைய‌ம்.........................நீங்க‌ள் யாழில் கிறுக்கி விளையாட‌ தான் ச‌ரியான‌ ந‌ப‌ர்.............................என‌க்கும் த‌மிழ‌க‌ அர‌சிய‌ல் அமெரிக்கா அர‌சிய‌ல் டென்மார்க் அர‌சிய‌ல் ப‌ற்றி ந‌ங்கு தெரியும் ஆனால் நான் பெரிதாக‌ அல‌ட்டி கொள்வ‌து கிடையாது.................   ந‌ண்ப‌ர் எப்போதும் த‌மிழ‌ன் ம‌ற்றும் விவ‌சாயிவிக் அண்ணா இவ‌ர்க‌ள் இருவ‌ரும் 2020ம் ஆண்டு ர‌ம் தான் மீண்டும் ஆட்சிக்கு வ‌ருவார் என்று சொன்ன‌வை  நான் அதை ம‌றுத்து பைட‌ன் தான் ஆட்சிக்கு வ‌ருவார் என்று சொன்னேன் அதே போல் நான் சொன்ன‌ பைட‌ன் அமெரிக்கன் ஜனாதிபதி ஆனார்😏............................ ஆர‌ம்ப‌த்தில் தாங்க‌ளும் வீர‌ர்க‌ள் தான் என்று வார்த்தைய‌ வீடுவின‌ம் ஒரு சில‌ர் அடிக்கும் போது  அடிக்கு மேல் அடி விழுந்தால் ப‌தில் இல்லாம‌ கோழை போல் த‌ங்க‌ளை தாங்க‌ளே சித்த‌ரிப்பின‌ம்🤣😁😂..............................
    • இந்த மாத முடிவில் சில நாடுகளின் நரித்தனத்தாலும், சுயநலத்தாலும் இரு நாடுகள் அணு ஆயுதங்களால் பலமாக தாக்கபட போகின்றன. ஜீசசும் வருகின்றார் என்ற செய்தும் உலாவுகிறது.
    • நான் யாழில் எழுத தொடங்கியது 2013. அதுதான் உளவுதுறை பிஜேபி கைப்பாவை ஆச்சே? அதேபோல் இப்படி சொன்ன தேர்தல் ஆணையம் மீது ஏன் சீமான் வழக்கு போடவில்லை? நம்ப வேண்டிய தேவை இல்லை. என் கருத்து அது. ஆனால் தேர்தல் ஆணையம் இப்படி ஒரு விடயத்தை சீமானிடம் சொல்லாது. எந்த அதிகாரியாவது மேலிட பிரசரால் இப்படி செய்கிறோம் என சீமானிடமே வெளிப்படையாக சொல்வாரா? மிகவும் சின்னபிள்ளைதனமாக சீமான் கதை பின்னுகிறார். நம்ப ஆள் இருக்கு என்ற தைரியத்தில். சீமான் சொல்வது உண்மை எனில் சீமான் வழக்கு போட்டிருக்க வேண்டும்.  போடமாட்டார் ஏன் என்றால் இது சும்மா….லுலுலுலா கதை. இந்த 😎 இமோஜியை பாவிக்காமலாவது விட்டிருக்கலாம். திருடப்போகும் இடத்தில் சிக்னேச்சர் வைத்தது போல் உள்ளது. 🤣🤣🙏
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.