Jump to content

இலண்டனில் ஈழத்தமிழர்களை தாக்கிய பிரித்தானிய காவல்துறையினர் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு வாய்ப்பு!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சேரமான் 29/09/2009, 14:40

இலண்டனில் ஈழத்தமிழர்களை தாக்கிய பிரித்தானிய காவல்துறையினர் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு வாய்ப்பு!

கடந்த ஏப்ரல் மாதம் 6ஆம் நாள் முதல் யூன் மாதம் 17ஆம் நாள் வரையான காலப்பகுதியில் இலண்டன் வெஸ்மின்ஸ்ரர் நாடாளுமன்ற முன்றலில் அறப்போராட்டத்தில் ஈடுபட்ட ஈழத்தமிழர்கள் பல தடவைகள் பிரித்தானிய காவல்துறையினரால் தாக்கப்பட்டிருந்தனர்.

police20attack20tamils.jpg

வன்னி மக்களை வகைதொகையின்றி சிறீலங்கா அரசு கொன்றுகுவிப்பதை தடுத்து நிறுத்துமாறு கோரி, வெஸ்மின்ஸ்ரர் நாடாளுமன்ற முன்றலில் வீதிகளை இடைமறித்து ஒவ்வொரு தடவையும் ஈழத்தமிழர்கள் போராட்டங்களை முன்னெடுத்த பொழுது அவர்கள் மீது பிரித்தானிய காவல்துறையினரால் வன்முறை ஏவிவிடப்பட்டிருந்தது.

police20attack20tamils1.jpg

இதன்பொழுது சிறுவர்கள், இளையோர், மூதாளர்கள் என்ற வேறுபாடின்றி பலரை பிரித்தானிய காவல்துறையினர் தாக்கியதோடு, இது தொடர்பான ஒளிப்படங்களும், நிழற்படங்களும், ஒலிவடிவங்களும் ஊடகங்களால் பதிவு செய்யப்பட்டிருந்தன.

police20attack20tamils2.jpg

இவ்வாறான பின்புலத்தில், இவ்வாண்டின் முற்பகுதியில் இலண்டனில் இடம்பெற்ற ஜி-20 ஆர்ப்பாட்டங்களில் பொழுது பிரித்தானியப் பெண் ஒருவரைத் தாக்கிய காவல்துறைக் காவலர் ஒருவருக்கு எதிராக தற்பொழுது குற்றவியல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

g2020protest.jpg

இதனை முன்மாதிரியாகக் கொண்டு தங்களைத் தாக்கிய பிரித்தானிய காவல்துறையினருக்கு எதிராக குற்றவியல் வழக்குகளை பாதிக்கப்பட்ட ஈழத்தமிழர்கள் தாக்கல் செய்து நீதிபெற முடியும் என்று சட்டநிபுணர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

நிபுணத்துவம் பெற்ற குற்றவியல் சட்டவாளர்களை அல்லது இலவச சட்ட உதவி புரியும் அமைப்புக்களை அணுகி, இவற்றின் ஊடாக பிரித்தானியாவின் குற்றவியல் நடவடிக்கை அமைப்பான CPS நிறுவனத்திடம் ஆதாரங்களை சமர்ப்பிப்பதன் மூலம், தம்மை தாக்கிய காவல்துறைக் காவலர்களை பாதிக்கப்பட்ட ஈழத்தமிழர்கள் நீதிமன்றங்களின் முன்னிறுத்த முடியும் என்றும், சட்டநிபுணர்கள் சுட்டிக் காட்;டியுள்ளனர்.

பதிவு

Link to comment
Share on other sites

இப்பிடித் தான் பிரித்தானியாவில் மும்மூரமாக ஆர்ப்பாட்டங்கள் நடந்த போது, புலிக்கொடி பிடிப்பதற்கு காவல்துறையினர் தடைவிதித்தது பற்றி GTVயில் ஒரு தமிழ் வக்கீல் வந்து இது விடயமாக எப்படி எப்படியெல்லாம் காவல்துறையினர் மீது இதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கலாம் என்று விளக்கினார். பின்பு காவல்துறையினர் இந்தத் தடையை எழுத்து மூலமாகத் தந்திருந்தால் அதை ஆதாரமாக வைத்தே இலகுவாக தன்னால் நடவடிக்கை எடுக்கு முடியும் என்றும் கூறினார். அப்போது அருகிலிருந்த அறிவிப்பாளர் பிறேம் காவல்துறையினர் இந்தத் தடையை ஏற்கனவே எழுத்து மூலமாகத் தான் தந்துள்ளனர் எனக் கூறினார். :lol: உடன் தடுமாறிய வக்கீல் அப்படியா அதை நான் பார்க்கவில்லை என்பதோடு முடித்து விட்டார். :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தமிழர்களை தொடர்ந்து தாக்கும் மகிந்தா கும்பலுக்கு எதிராக முதலில் சட்ட நடவடிக்கை எடுக்கப் பாருங்கள்.

Link to comment
Share on other sites

இப்போது மீண்டும் சட்டத்தரணிகள் எங்களின் மீட்பர்களாக வலம்வரத் தொடங்கி இருக்கிறார்கள்.மக்களுக்கு புரியாத நீண்ட வசனங்களை

சொல்லி ஏதோ வித்தை காட்ட தொடங்கி விட்டார்கள்.போன சனிக்கிழமை கனடாவில் நாடுகடந்த அரசு என்ற பத்திரிகை வெளியீட்டு

நிகழ்வுக்கு போயிருந்தேன்.அதில் பேராசிரியர் சந்திரகாந்தன் 'சில நாடுகள் நாடுகடந்த அரசை ஆதரிப்பதாக உறுதி தந்து இருக்கிறார்கள்'

என்று பேசினார். அதற்குப் பிறகு பேசிய ஒருவர் 'பதினாறுநாடுகள் நாடுகடந்த அரசை ஆதரிப்பதாக' முழங்கினார்.

மேடையின் கீழே அவர்கள் இருவரையும் சந்தித்தேன். 'எந்தெந்த நாடுகள் ஆதரிப்பதாக உறுதிஅளித்துள்ளதாக' கேட்டேன்.

'இல்லை அந்த நாடுகளின் கதைகளிலை இருந்து தெரிந்துகொண்டோம்' என்றார்கள்.

'நீங்கள் அந்த நாடுகளுடன் கதைத்தனீங்களா' என்று கேட்டேன்.

'இல்லை ..அப்பிடிஇல்லை..அந்த நாடுகள் நல்ல நாடுகள்.அதுதான் எதிர்பார்க்கிறோம்' என்றனா இருவரும்.

'இப்பிடித்தான் அவையள் வருவினம் இவையள் புடுங்குவினம் என்று சொல்லிச் சொல்லியே எங்களின் மக்களையும் போராளிகளையும்

முள்ளிவாய்க்காலில் காத்துநிக்க வைத்து கொன்று விட்டீர்கள்..இனி நாடு கடந்த அரசு என்று பொய் சொல்லி ஏமாத்தப் போகிறீங்களா?'

என்று கேட்டேன்.

லண்டனிலும் இதே நிலைதான்.இந்தா உண்ணாவிரத்ததை நிப்பாட்டுறம். அவன் ஐக்கியநாடுகள் சபைக்கு கூட்டிப் போறன் என்று உறுதி

தந்தான் என்பார்கள்.அல்லது எங்களை கூப்பிட்டு வெளிவிவகார அமைச்சர் கதைத்தார்.ஆனால் என்ன கதைத்தார் என்று வெளியே

சொல்ல முடியாது என்பார்கள்.ஆனால் எதுவும் நடக்கவில்லை என்று எமது மக்களுக்கு தெரிய நீண்டநாள் ஆனது.

இந்தக் கோமாளிஆட்டத்தின் நாயகர்கள் இப்போதும் தங்களை ஏதொ கரும்புலிகள் போல நினைத்து வலம்வருவதுதான் கேவலம்!!

எல்லா இடத்திலும் இத்தகைய பொய் வதந்திகளும் புனைவுகளும்தான்.மக்கள்தான ஆறஅமர யோசித்து முடிவு எடுக்கவேணும்.

Link to comment
Share on other sites

ஈழத்தமிழர்களை தொடர்ந்து தாக்கும் மகிந்தா கும்பலுக்கு எதிராக முதலில் சட்ட நடவடிக்கை எடுக்கப் பாருங்கள்.

அதானே நம்ம அமெரிக்க வக்கீல்மார் சிலர் மகிந்த குடும்பத்தை உள்ளே அனுப்புகின்றோம் வாரி வழங்குங்கள் என்று, 2 வருடங்களுக்கு முன்பே தேவையானதைச் சேர்த்து விட்டார்களே !! என்ன மகிந்த குடும்பத்திற்குத் தான் ஒன்றும் நடக்கவில்லை. :lol::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வசம்பு, அவர்கள் தேவையானதைச் சேர்த்துவிட்டார்கள், தேவையில்லாததை கைவிட்டுட்டார்கள்.

Link to comment
Share on other sites

சேரமான் 29/09/2009, 14:40

இலண்டனில் ஈழத்தமிழர்களை தாக்கிய பிரித்தானிய காவல்துறையினர் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு வாய்ப்பு!

வன்னி மக்களை வகைதொகையின்றி சிறீலங்கா அரசு கொன்றுகுவிப்பதை தடுத்து நிறுத்துமாறு கோரி, வெஸ்மின்ஸ்ரர் நாடாளுமன்ற முன்றலில் வீதிகளை இடைமறித்து ஒவ்வொரு தடவையும் ஈழத்தமிழர்கள் போராட்டங்களை முன்னெடுத்த பொழுது அவர்கள் மீது பிரித்தானிய காவல்துறையினரால் வன்முறை ஏவிவிடப்பட்டிருந்தது.

இப்படியான ஆவேசமான கருத்துக்கள் வருவது சரியல்ல. பிரித்தானிய காவல்துறையினர் மிகவும் பொறுமை காத்து பாதுகாப்பும் அளித்துவந்தனர். ஆனால் எம்மக்கள் அவர்களின் அறிவுருத்தல்களை கடைப்பிடிக்காது அத்துமீறி லண்டன்வாழ் மக்களுக்கு இடையூறு ஏற்படுத்த முனைந்தபோதே அவர்கள் அதைத்தடுக்க நடவடிக்கைகள் எடுத்தனர்.

இனி உந்த வக்கீல்களின் வாலைப்பிடித்துக்கொண்டு பிரித்தானிய மக்களிடம் இருக்கும் கொஞ்ச நஞ்ச ஆதரவையும் இல்லாமல் செய்ய வழிதேடலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அருச்சுணன், இன்னுமா இவர்களை நம்பி அந்தக் கூட்டங்களுக்குப் போகிறீர்கள்? சந்திரகாந்தனுக்கும் அரசியலுக்கும் வெகுதூரம். ஏதோ பல்கலைக்கழகத்தில் பேராசியரியராக இருக்கிறார் என்ற ஒரு காரணத்திற்காக சிலர் தங்கள் சுயலாபங்களுக்கா தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுகிறார்கள் என்றால் நீங்களும் அதை நம்பிப் போகிறீர்கள். எல்லாம் சுயதம்பட்டமும் சுயலாபமும் தானே தவிர வேறொன்றுமில்லை. அதைவிட வேடிக்கையான விடயம் என்னவென்றால், இந்த அமைப்பிலிருக்கும் பலருக்கும் கல்வித் தகுதிக்கும் வெகுதூரம். எல்லாம் மக்களை ஏய்க்கும் கூட்டம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதைத்தான் நான் கிட்டத்தட்ட சேர்ந்துவருகிற தலையங்கமாய் புதிதாய் திரி போட்டிருக்கிறேன், எங்களுடைய பெரிய பலவீனங்களில் ஒன்று, எங்களை பற்றி அளவிற்க்கு அதிகமாக எண்ணுவதும் நினைப்பதும். தமிழ் செய்தி ஊடகங்கள் தங்களை திரும்பி பார்த்தல் நலம்.சிங்களவனை மோடன்,மோடன் என்று சொல்லி நாங்கள் கற்காலத்துக்கு போய்விட்டோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காசினி அவர்கட்கு வணக்கம்,

தங்கள் கருத்தினை வாசித்தேன். இவர்களைப் பற்றிய விடையங்கள் உங்களுக்கு எந்தவரையில் தெரியும்? விபரமாகக் கூறவும் அவர் எதோ பேராசிரியராக இருக்கிறார் என்றால் இந்திய கல்லூரிகளில் இருக்கும் விசுக்கோத்துப் பேராசிரியர்கள்போலா. அப்போ கனடாவில் கல்வித்தகமை இல்லாதோர் பல்கலைக்கழகங்களிலோ அன்றேல் கல்லூரிகளிலோ பேராசிரியராக இருக்கலாமா? நாடு கடந்த தமிழீழ அரசினை உருவாக்கும் முயற்சியினை ஒத்தை வரியில் விமர்சித்துள்ளீர்களே. இல்லைத் தெரியாமல்தான் கேட்கிறேன் யாழ்களத்திலோ அன்றேல் வேறு எந்தக்களத்திலோ அதுபற்றிய பகிரங்கமான கருத்துக்களை யாராவது முன்வைத்தார்களா? கள உறவுகளிடம் இதுபற்றிய விளக்கம் இருக்கிறதா. அன்றேல் இதுபற்றி விளக்கம் உள்ளவர்கள் யாராவது இல்லாதவர்கட்கு புரியும்படி இவ்விணையத்தில் கருத்துக்களை முன்வைத்தார்களா? அல்லது எதிர்கருத்துக்களையாவது நடைமுறைச்சாத்தியம் அற்றது என நிரூபித்தார்களா? இங்கே சிலருக்கு நாட்டில் வெடிசுட்டுச் சத்தம் கேட்கவேண்டும் அங்கு வாழும் இளையவர்கள் அனைவரும் குண்டை மடியில் கட்டிச் சாகவேண்டும். வெளிநாட்டில் வாழ்பவர்களது உறவுகள் சிலர் வெளிநாட்டுக்கு வந்து அசைலம் அடிக்க வேணும் அதுக்காக தமிழன் பிணம் விழவேண்டும். இதையா எதிர் பார்க்கிறீர்கள். கொடுத்த விலை போதாதா? இன்னும் வேணுமா? உலக ஒழுங்குகளுக்கு அமைவாக நாம் அறிவிபூர்வமாகச் செயற்படல்வேண்டும் . எமது மண்ணை கூறுபோட்டு அந்நியனுக்கு சிங்களவன் தாரை வார்க்கிறான் பிரபாகரன் எனும் பெரும் தீ, உலகமயமாக்கல்ப் பூதம் இலங்கைத்தீவினை முழுங்கி விடாது இவ்வளவு காலமும் காத்து நின்றது. இதில் தமிழர்கள் பெற்ற பயனைவிட இலங்கைத்தீவில் அனைத்துச் சமூகமும் குறிப்பாக எமது எதிரியான சிங்களவனது பிரதேசங்களுமே சேர்ந்து பாதுகாக்கப்பட்டது. இப்போது பல்தேசியக் கம்பனிகள் தமது உலகமயமாக்கல் வலையை விரித்து வீச ஆரம்பித்துள்ளது இதில் அகப்படுபவை காலம் காலமாக் நாம் காத்த எமது பூர்வீக நிலங்கள் . வீரகேசரியை வாசித்தால் தெரியும் குத்தகைக்கு வயல் நிலங்கள் வேண்டும் என ஒவ்வொருநாளும் விளம்பரம் வருகின்றது குத்தகை எனும்பேரில் எமது அறியாமையை மிகவும் தந்திரமாக அந்நியன் பயன்படுத்தப் போகிறான் எமக்கு விளங்காத சொல்லாடல்களை ஒப்பந்தங்களில் சேர்த்து காலத்துக்கும் எமது நிலங்கள் எமக்குத் திருப்பிக் கிடைக்கமல் அபகரிக்கப் போகிறான் ( யாராவது உங்கள் உறவுகளுக்கு, தமது விளைநிலங்களை குத்த்கைக்கு கொடுக்கும் எண்ணம் இருந்தால் தயவுசெய்து அதனை நிறுத்தவும்) இப்படியான விடையங்களில் எதாவது ஒன்றை யாழில் யாராவது இடுகை இட்டு இதற்கு நாம் என்ன செய்யவேண்டும் என கருத்துக்களைப் பரிமாறியது உண்டா? அதவிடுத்து மேம்போக்கான கருத்டுக்களை எழுந்தமானத்தில் இங்கு யாரும் முன்வைக்கவேண்டாம்.

Link to comment
Share on other sites

காசினி அவர்கட்கு வணக்கம்,

தங்கள் கருத்தினை வாசித்தேன். இவர்களைப் பற்றிய விடையங்கள் உங்களுக்கு எந்தவரையில் தெரியும்? விபரமாகக் கூறவும் அவர் எதோ பேராசிரியராக இருக்கிறார் என்றால் இந்திய கல்லூரிகளில் இருக்கும் விசுக்கோத்துப் பேராசிரியர்கள்போலா. அப்போ கனடாவில் கல்வித்தகமை இல்லாதோர் பல்கலைக்கழகங்களிலோ அன்றேல் கல்லூரிகளிலோ பேராசிரியராக இருக்கலாமா? நாடு கடந்த தமிழீழ அரசினை உருவாக்கும் முயற்சியினை ஒத்தை வரியில் விமர்சித்துள்ளீர்களே. இல்லைத் தெரியாமல்தான் கேட்கிறேன் யாழ்களத்திலோ அன்றேல் வேறு எந்தக்களத்திலோ அதுபற்றிய பகிரங்கமான கருத்துக்களை யாராவது முன்வைத்தார்களா? கள உறவுகளிடம் இதுபற்றிய விளக்கம் இருக்கிறதா. அன்றேல் இதுபற்றி விளக்கம் உள்ளவர்கள் யாராவது இல்லாதவர்கட்கு புரியும்படி இவ்விணையத்தில் கருத்துக்களை முன்வைத்தார்களா? அல்லது எதிர்கருத்துக்களையாவது நடைமுறைச்சாத்தியம் அற்றது என நிரூபித்தார்களா? இங்கே சிலருக்கு நாட்டில் வெடிசுட்டுச் சத்தம் கேட்கவேண்டும் அங்கு வாழும் இளையவர்கள் அனைவரும் குண்டை மடியில் கட்டிச் சாகவேண்டும். வெளிநாட்டில் வாழ்பவர்களது உறவுகள் சிலர் வெளிநாட்டுக்கு வந்து அசைலம் அடிக்க வேணும் அதுக்காக தமிழன் பிணம் விழவேண்டும். இதையா எதிர் பார்க்கிறீர்கள். கொடுத்த விலை போதாதா? இன்னும் வேணுமா? உலக ஒழுங்குகளுக்கு அமைவாக நாம் அறிவிபூர்வமாகச் செயற்படல்வேண்டும் . எமது மண்ணை கூறுபோட்டு அந்நியனுக்கு சிங்களவன் தாரை வார்க்கிறான் பிரபாகரன் எனும் பெரும் தீ, உலகமயமாக்கல்ப் பூதம் இலங்கைத்தீவினை முழுங்கி விடாது இவ்வளவு காலமும் காத்து நின்றது. இதில் தமிழர்கள் பெற்ற பயனைவிட இலங்கைத்தீவில் அனைத்துச் சமூகமும் குறிப்பாக எமது எதிரியான சிங்களவனது பிரதேசங்களுமே சேர்ந்து பாதுகாக்கப்பட்டது. இப்போது பல்தேசியக் கம்பனிகள் தமது உலகமயமாக்கல் வலையை விரித்து வீச ஆரம்பித்துள்ளது இதில் அகப்படுபவை காலம் காலமாக் நாம் காத்த எமது பூர்வீக நிலங்கள் . வீரகேசரியை வாசித்தால் தெரியும் குத்தகைக்கு வயல் நிலங்கள் வேண்டும் என ஒவ்வொருநாளும் விளம்பரம் வருகின்றது குத்தகை எனும்பேரில் எமது அறியாமையை மிகவும் தந்திரமாக அந்நியன் பயன்படுத்தப் போகிறான் எமக்கு விளங்காத சொல்லாடல்களை ஒப்பந்தங்களில் சேர்த்து காலத்துக்கும் எமது நிலங்கள் எமக்குத் திருப்பிக் கிடைக்கமல் அபகரிக்கப் போகிறான் ( யாராவது உங்கள் உறவுகளுக்கு, தமது விளைநிலங்களை குத்த்கைக்கு கொடுக்கும் எண்ணம் இருந்தால் தயவுசெய்து அதனை நிறுத்தவும்) இப்படியான விடையங்களில் எதாவது ஒன்றை யாழில் யாராவது இடுகை இட்டு இதற்கு நாம் என்ன செய்யவேண்டும் என கருத்துக்களைப் பரிமாறியது உண்டா? அதவிடுத்து மேம்போக்கான கருத்டுக்களை எழுந்தமானத்தில் இங்கு யாரும் முன்வைக்கவேண்டாம்.

உங்கள் ஆதங்கம் புரிகின்றது. ஆனால் இங்கு பலர்; சிலரின் சுயலாபப் போக்கை சுட்டிக் காட்ட கருத்தை வைக்கும் போது, யாழ் நிர்வாகவே அவற்றைத் தூக்கி ஏமாற்றிப் பிழைப்போருக்கு துணை போகின்றது. அதன் பின் எவரால் இங்கு உண்மைகளை எழுத முடியும் ?? இக்கருத்தும் தூக்கப்பட்டால் ஆச்சரியப்படத் தேவையில்லை... :):lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எழுஞாயிறு அவர்களுக்கும் எனையோருக்கும்,

நான் நினைக்கிறேன், காசினி, கனடா பேராசியர்களின் கல்வித்தகுதி பற்றி கதைக்கவில்லை என்று, அவர் சொன்னது அந்த நாடுகடந்த அரசியல் அமைப்பிலுள்ளவர்களைத்தான் கூறியுள்ளார் என..

அதைவிட..சிலவேளைகளில் உங்களுக்கு நிறைய இந்திய பேராசியர்களை தெரிந்திருக்கலாம், அதற்காக..அவர்களில் ஒரு பகுதியினரை நாகரிக குறைவாய் அழைப்பது சரியல்லா.வட அமெரிக்காவில், இலங்கைத்தமிழரை விட இந்தியதமிழர்கள் அகக் குறைந்தது பல்கலைக்கழக மட்டத்தில்தன்னும் மேம்பட்ட நிலையில் உள்ளார்கள். யாழிலும் இந்திய தமிழர்கள் வருபவர்கள்.. எனவே உங்கள் கருத்துக்களை சரிபார்த்து வையுங்கள்..நானும் எனது கருத்துக்களை பிழையாக வைக்கலாம்..சுட்டிக்காட்டினால

் எற்றுக்கொள்வேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் எழுஞாயிறு அவர்களே, நான் சுட்டிக் காட்ட விரும்பியது, அந்த அமைப்பிலுள்ளவர்களைத்தான். நாடுகடந்த அரசை நாம் முழுமையாக வரவேற்கிறேன். அதனைத் தலைமை தாங்கும் உருத்திரகுமாரன் அண்ணா அவர்கள் மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. ஆனால், அதிலுள்ள மற்றவர்களைப் பார்க்கும்போது, அது சாத்தியமாகத் தெரியவில்லை. சந்திரகாந்தன் பேராசிரியர் என்பதை நான் மறுக்கவில்லை. ஆனால், அவர் அரசியல் பேராசிரியர் அல்ல. அவர் இதில் முன்னிலையிலிருந்து செயற்பட விரும்பினால், அதற்கான தகுதிகளைப் பெற முயற்சிக்க வேண்டும். அதைவிடுத்து, பேராசிரியர் என்பதால் மட்டும், அவருக்கு எல்லாம் தெரியும் என்று நினைக்கக்கூடாது. அதுமட்டுமின்றி, மாலையை எதிர்பார்ப்பதில் அவர் முன்னிற்கிறார் என்பதை இங்குள்ளவர்களிடம் விசாரித்துப் பார்த்தால் தெரியும். மற்ற நாடுகளைப் பற்றி எனக்குத் தெரியாது. ஆனால், கனடாவில் இதற்காக வேலை செய்பவர்கள் மீது எனக்கு எந்தவித நம்பிக்கையும் இல்லை. இவர்கள் இங்கு செய்த தவறுகளால், சமாதானகாலத்தில் விடுதலைப் புலிகளால் விலக்கி வைக்கப்பட்டவர்கள்தான் அதில் முன்னிலையில் இருக்கிறார்கள். அதுமட்டுமின்றி, இங்கு முன்னிலையில் இருப்பவர்களின் தகுதிகளை ஆராய்ந்து பார்த்தால் தெரியும். கல்வித்தகுதியோ அல்லது வேறுதகுதிகளோ அற்றவர்கள்தான் இதில் முன்னிலையிலிருக்கிறார்கள். இவர்களை வைத்து ஓரு அமைப்பையே நடத்த முடியவில்லை. ஒரு நாட்டின் அரசியலை எப்படித் தீர்மானிக்கமுடியும்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காசினி,

உங்களுடைய சில கருத்துக்களை ஏற்றுக்கொள்ளமுடியவில்லை..

அவர் ஒரு அரசியல் பேராசிரியர் இல்லைஎன்பதால் அவர் அதற்கு பொருத்தம் இல்லாதது போல் சொல்லுவது சரியாக படவில்லை..அவர் மாலைக்கு முந்திநிற்பதுபற்றி எனக்கு தெரியாது..எங்கட பிரச்சனைகளை தீர்க்க பேராசிரியர்கள்தான் வேணும் எண்டால் அது இப்போதைக்கு சரிவராது..இங்கே புலத்தில் கூட மரபு மாறிய துறைகளுக்கு போவர்களின் எண்ணிக்கை போதுமானதல்ல. அதாவது இப்பவும், பல்கலைக்கழகம்,டொக்ரர்,என் ஜினியர்,அக்கவுன்டன்ட்...என்று

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வொல்கானோ, ஓரளவு நியாயமான தலைமைத்துவம் இருந்தபோதே, விடுதலைப்புலிகளின் பெயரைப் பாவித்து சொத்து சேர்த்தவர்கள் ஒன்று சேர்ந்து ஒரு தீர்வைத் தருவார்கள் என்று நீங்கள் நம்புவது வேடிக்கையாக உள்ளது. எமக்குக் கிடைத்திருப்பது கடைசிச் சந்தர்ப்பம். இப்போதும், துரோகிகளும் கயவர்களும் முன்னிற்கிறார்கள் எனில், தமிழ் மக்களுக்கு விடிவு என்பதே கிடைக்கப் போவதில்லை என்பது உறுதி. அக்குழுவில் சில நல்லவர்களும் இருக்கிறார்கள். பன்றியோடு சேர்ந்த கன்றும் மலம் தின்னும் நிலை இக்குழுவிற்கு வரக்கூடாது என்பதே எனது நோக்கம். மேடையிலோ அல்லது ஊடகங்களிலோ பேசுவதற்கு முன்னர், நீங்கள் பேசவிடயங்கள் பற்றிய ஆய்வைச் செய்துவிட்டு வந்து பேசலாமே. ஆனால், பேராசிரியர் சந்திரகாந்தன் அப்படிச் செய்வதில்லை. தொலைக்காட்சிப் பேட்டிகளிலும் சரி, மேடைகளிலும் சரி, அவர் பேசும் விடயம் பற்றிய தெளிவு அவரிடம் இல்லை என்பதைக் கண்கூடாகப் பார்க்க முடிகிறது. இது தமிழ் மக்களுக்கான விடிவிற்குக் கிடைத்த கடைசிச் சந்தர்ப்பம் என்பதை இக்குழுவில் இருப்பவர்கள் கருத்திற்கொண்டு செயற்படவேண்டும் என்பதே என்னுடைய விருப்பம். அதற்காகத் தான் இந்தத்திரியில் கருத்தெழுதிகிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காசினி,

எனக்கு பேராசிரியர் சந்திரகாந்தனைப் பற்றி எதுவும் தெரியாது.சிலதடவை தொலைகாட்சியில் பார்த்ததை தவிர..சிலவேளைகளில் இது நகச்சுவையாக (மாத்திரம்) இருக்கலாம்.

..பூவேட சேர்ந்த நாரும் மணம் பெறும்..

நன்றி எனக்கு வேறு ஏதும் தெரியாது..

Link to comment
Share on other sites

இலண்டனில் ஈழத்தமிழர்களை தாக்கிய பிரித்தானிய காவல்துறையினர் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு வாய்ப்பு!

.... இன்று அகதிகள் அந்தஸ்து கோரும் எம்மவர்கள் மிக அரிது!!! .... எமது வக்கீல் வியாபாரிகளுக்கு இப்போது வருமானம் குறைவு ... ஏனெனில் அகதி அந்தஸ்து கோரினால் தான் "கிரீன் போம்" இல் ஒரு கைநாட்டு வேண்டி, பிரித்தானிய அரசிடன் ஆயிரங்களை கறக்கலாம்!!! ... இந்த வியாபாரிகளினால் இதுவரை வாழ்க்கையையே தொலைத்தவர்கள் எத்தனை பேர்!!! ஆனால் இந்த வியாபாரிகள் ஒவ்வொருவருக்கும் 20, 30 வீடுகள் ... இந்த அகதி அந்தஸ்து கோரியவர்களின் புண்ணியத்தில்!!!!!!

இன்று இவைகள் இல்லாத படியினால், இப்படியானவைகளை கைகளில் எடுக்கப்பார்க்கிறார்கள். ஏனெனில் இவைகளுக்கும் ஆயிரக்கணக்காக, அரசபடியில் இருந்து வரும்!!!

இன்றுவரை தாயகத்தில் கொல்லப்பட்டு, வாழ்வே அழித்தொழிக்கப்பட்டு அல்லல்படும் மக்களுக்கு நடந்த மனித உரிமை மீறல்களை ... கொண்டு வர வெட்கப்படுகிறார்கள், இந்த வியாபாரிகள்!!!!!! ஏனென்று தெரியுமோ???????? இவைகளுக்கு சிலவேளை இவர்களின் கையினாலும் போட வேண்டி வந்தாலும் என்ற பயம்தான்!!!!!!!!!!!!!

மேலும் தமிழ்த்தேசியத்துன் தூணான "பதிவு" .... அங்கு சிங்களவனால் நடத்தப்பட்ட இனவழிப்புகளுக்கு ஆக்கபூர்வமாக ஒன்றையும் செய்யாது, இங்கு எம்மை அரவணைத்து வாழ் விட்ட வெள்ளைக்காரனுக்கு எதிராக வழக்கு போட .................. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அன்புசால் காசினி மற்றும் அனைவர்க்கும், நான் யாரையும் புண்படுத்துவதற்காக எனது கருத்தினை இங்கு முன்வைக்கவில்லை. மாறாக, நாடுகடந்த தமிழீழ அரசு என்பது வெறும் அரசியல் இயக்கம் மட்டுமல்ல. தற்போது புலம்பெயர் தேசத்திலும் தமிழர்கள் அரசியலில் சூனியமான ஒரு தன்மையிலேயே இருக்கிறர்கள் அதாவது நாம் வாழ்கின்ற நாடுகளில், எக்கால கட்டத்தில் எப்படியான அரசியல் கட்சிகளுடன் ஆதரவு நிலையினைக் கொண்டிருப்பது என்பதுபற்றிய தெளிவின்மை எம்மத்தியில் காணப்படுகின்றது, மேலும் எமது சேமிப்புப் பலம் என்பது ஏனைய இனங்களுடன் ஒப்பிடும்போது பலமடங்கு தீவிரமானது ஆனால் எதிர்வரும் காலங்களில் புலம்பெயர் தேசங்களில் வாழக்கூடிய எமது சந்ததிகள், அவர்களது மூதாதயர்கள் வெறுமனே தாம் சேர்த்த பணத்தினை இந்தாபிடி எனக் கையளிப்பதின் உடன்பாடுடையவர்களாகவிருக்க மாட்டார்கள். காரணம் அவர்கள் வாழ்கின்ற சூழல் அப்படி என்னதான் கட்டுப்பெட்டித்தனமாக நாம் வளர்த்தாலும் எகிறிக்கொண்டு போய்விடுவார்கள். ஆகவே பல்துறைகளிலும் நிபுணத்துவம் பெற்ற அறிவாளர்களை உள்வாங்குவ்தே எமக்கு நன்மைபயக்கும் தாங்கள் கூறிய பேராசிரியர் அவர்கள் வெறும் கருவிமட்டுமே அதாவது நாடுகடந்த தமிழீழ அரசினை உருவாக்குவதற்கான பூர்வாங்க நடவடிக்கைகளில் ஈடுபடும் செயலணியின் ஒரு அங்கத்தவர் மட்டுமே. இதன் பின்பான வளர் நிலைகளின்போது தாங்கள் வாழ்கின்ற நாடுகளில் பொதுமையான அதாவது பகிரங்கமான தேர்தல்மூலம் புலம்பெயர் தமிழர்கள் தமக்கு நம்பிக்கையானவர்கள் எனக் கருதுபவர்கள் போட்டியிடும் பட்சத்தில் அவர்கள் தெரிவுசெய்யப்படலாம். அதற்கான ஆயத்த வேலைகள் நடைபெறும்போது இவர்போன்றவர்களை தமிழீழ அரசின் ஆட்சிமன்றக் குழுவிற்குள் நுழையவிடாமல் தடுப்பது உங்களது கடமை. ஆனால் இவையனைத்தையும் முன்னின்று செய்வதற்கும் நாம் செய்கின்ற விடையம் மக்களது கருத்தினிற்க்குப் போய் அவர்களை இதனில் ஈடுபாடடைய வைப்பது மிகவும் கடினமான விடையம். ஆக யார் குற்றியாவது இப்போது அரிசியாகட்டும் பின்னர் பொங்குவது யார் என நாமே தீர்மானிப்போம். தமிழ்நாட்டில் பேராசிரியர்கள் எனும் பெயரிலும், டாக்டர் எனும் பெயரிலும் அரசியல்வாதிகள் பலர் வாழ்கின்றனர் அவர்களை மனதில் வைத்தே நான் கூறினேன், மற்றும்படி ஒன்றுமில்லை. நாடுகடந்த தமிழீழ அரசு என்பது தற்போதைய ஈழத்தமிழர்களது அபிலாசைகளை நிறைவேற்றுவதற்கான போராட்டங்களை சட்டரீதியாக்குவதற்கு எதிர்காலத்தில் வழிசெய்யலாம் அனைத்தும் உங்கள் போன்ற இளையோர்கைகளிலேயே தங்கியிருக்கின்றது,

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கல்லறையில் உடல்கள் தோண்டியெடுப்பு.. மனித எலும்பில் உருவாகும் போதைப் பொருள்.. அடிமையாகும் இளைஞர்கள்! ’போதைப் பொருட்கள் உயிருக்குக் கேடு விளைவிக்கும்’ என விளம்பரப்படுத்தப்பட்டாலும், அதன் விற்பனையும் அதற்கு அடிமையாகும் நபர்களின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்தே வருகிறது. உலகளவில் பலர் இந்தப் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகி வருகின்றனர். அந்த வகையில் மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் இதற்கு பலர் இளைஞர்கள் அடிமையாகி உள்ளனர். அதிலும், மனித உடல் எலும்புடன் தயாரிக்கப்படும் ஒருவித போதைப் பொருளுக்குத்தான் அவர்கள் அதிகமாக அடிமையாகி இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு போதைப் பொருளுக்கு அடிமையான இந்நாட்டு மக்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது. அதிலும், இந்நாட்டிலுள்ள பெரும்பாலான மக்கள் ’குஷ்’ என்ற ரக போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. இந்த ’குஷ்’ போதைப்பொருள் மனித எலும்புகளிலிருந்து உருவாக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளாக இந்த ’குஷ்’ ரக போதைப்பொருள் சியரா லியோன் பகுதியில் பழக்கத்திலிருந்து வருகிறது. இதன் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அதனை தயாரிப்பவர்கள் கல்லறையில் இருக்கும் புதைகுழிகளைத் தோண்டி பிணங்களை சேகரித்து அதன் எலும்புகளிலிருந்து ’குஷ்’ போதைப்பொருளைத் தயார் செய்வதகாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த எலும்புகளுடன் , கஞ்சா மற்றும் சில இரசாயனங்கள் கலந்து இந்தப் போதைப் பொருள் தயாரிக்கப்படுகிறது. இதற்காக, சியரா லியோனில் இதுவரை நூற்றுக்கணக்கான புதைகுழிகள் தோண்டப்பட்டுள்ளன. இந்த போதை மருந்து கிட்டத்தட்ட பல மணி நேரம் போதை தருவதாகச் சொல்லப்படுகிறது. மேலும் இந்தப் போதைக்கு அடிமையான இளைஞர்கள் தங்களிடம் இருக்கும் பொருட்களை (புத்தகங்கள், ஆடைகள்) விற்று அந்த போதை மருந்தை வாங்குவதாகவும், அதற்குப் பிறகு வீட்டில் உள்ள பொருட்களைத் திருடிச் சென்று கொடுத்து வாங்குவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. போதைப்பொருள் மூலம் நாட்டில் குடியிருப்பதற்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அந்த நாட்டின் ஜனாதிபதி கவலை தெரிவித்துள்ளார். இதன் பிடியிலிருந்து மக்களை மீட்க போதைப்பொருள் ஒழிப்பு மையங்கள் அமைக்கப்படும் எனவும் போதைப்பொருள் விற்பனையாளர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்த நாட்டு ஜனாதிபதி எச்சரித்துள்ளார்.   https://thinakkural.lk/article/299459
    • வடக்கு மீனவர்களின் ஓயாத போராட்டம் ஜே.ஏ.ஜோர்ஜ் “அது ஒரு சனிக்கிழமை, நான் எனது வலைகளை எடுப்பதற்காக கடலுக்கு சென்றேன். வலை நிறைய மீன்களை எதிர்பார்த்து சென்ற எனக்கு அங்கு அதிர்ச்சியே மிஞ்சியது. ஏனென்றால் நான் விரித்து வைத்திருந்த வலைகள் அங்கு இல்லை.  எனது வலைகளை இழுவை படகுகளில் வந்த இந்திய மீனவர்களை சேதப்படுத்தி விட்டனர். ஆனால் இது முதல் முறையாக நடக்கும் சம்பவம் இல்லை” -  இவ்வாறு தனது கதையை கூறும் மீனவரான ரெஜினோல்ட் தனது கடந்த கால அனுபவங்களுடன் ஒப்பிடுகையில் தற்போதைய தனது போராட்டம் தீவிரமடைந்திருப்பதாக கூறுகின்றார். 20 ஆண்டுகளாக தனது வாழ்க்கைக்காக கடல் அலைகளுடன் போராடி வரும் ரெஜினோல்ட் மட்டுமன்றி வடமாகாண மீனவர்களில் அதிகளவானவர்கள் தற்போது இவ்வாறு கடும் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளனர். இலங்கை கடற்பரப்பிற்குள் இழுவை படகுகளை பயன்படுத்தி இந்திய மீனவர்கள் முன்னெடுக்கும் மீன்பிடி நடவடிக்கைகளே இந்த நெருக்கடிக்கு காரணமாக உள்ளது. நெடுந்தீவைச் சேர்ந்த ரெஜினோல்ட் தனது தந்தையுடன் இணைந்து நீண்டகாலம் மீன்பிடியில் ஈடுபட்ட நிலையில், திருமணத்துக்கு பின்னர் தற்போது தனியாக தொழில் செய்கின்றார். “நான் என் படகை மோட்டார் இல்லாமல் பயன்படுத்துகிறேன். மோட்டார் ஒன்றை வாங்க என்னிடம் போதுமான பணம் இல்லை. அதனால் என்னால் அதிக தூரம் செல்ல முடியாது. கடந்த காலங்களில் மீன்பிடிக்க பாரம்பரிய வலைகளைப் பயன்படுத்தினேன். இழுவை படகுகளில் வந்த இந்திய மீனவர்களை எனது வலைகளை சேதப்படுத்தி விட்டனர். எனவே, இப்போது மீன்பிடிக்க சிறிய வலையைப் பயன்படுத்துகிறேன். இதனால், முன்பு போல் மீன் பிடிக்க முடியவில்லை. கடலில் இரண்டு மூன்று மணி நேரம் மாத்திரமே செலவிட முடிகின்றது. எனக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர்.  எனது மூத்த மகன் ஐந்தாம் வகுப்பு படிக்கிறான். அவர்களுக்காக நான் பல செலவுகளைச் செய்ய வேண்டியிருக்கிறது. பொருட்களின் விலை முன்பை விட அதிகமாக உள்ளது. குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவது இப்போது மிகவும் கடினமாக உள்ளது” என்கிறார் ரெஜினோல்ட். அமெரிக்க பாதுகாப்பு பல்கலைக்கழகம் 2008ஆம் ஆண்டு துருக்கியின் இஸ்தான்புல் நகரில் ஏற்பாடு செய்திருந்த செயற்குழு கூட்டத்தில் கலாநிதி சனத் டி சில்வாவினால் முன்வைக்கப்பட்ட அறிக்கையின்படி, இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான கடல் எல்லை மூன்று கடல் பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. வடக்கில் வங்காள விரிகுடா, நடுவில் பாக்கு நீரிணை, தெற்கில் மன்னார் விரிகுடா என இந்த கடல் எல்லைகள் உள்ள நிலையில், பாக்கு நீரிணை ஊடாக இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான சராசரி தூரம் சுமார் 32 கிலோமீற்றர்கள் என அறிக்கை கூறுகிறது. கச்சதீவில் இருந்து இந்தியாவின் ராமேஸ்வரம் வரையிலான தூரம் சுமார் 14 கடல் மைல்கள், அதாவது சுமார் 26 கிலோமீட்டர்கள். யாழ்ப்பாணத்தில் இருந்து கச்சத்தீவு வரை சுமார் 60 கிலோமீட்டர் தொலைவான கடற்பரப்பில் தனது அதிகாரத்தை கொண்டுள்ள இலங்கை கடற்படை, சர்வதேச கடல் எல்லையை தாண்டி இலங்கை கடலுக்குள் நுழையும்  இந்திய இழுவை படகுகள் குறித்து அவ்வப்போது  நடவடிக்கை எடுத்து வருகிறது. எவ்வாறாயினும், இலங்கை  கடற்பரப்புக்குள் இந்திய இழுவை படகுகள் பிரவேசிப்பது  நாளாந்தம் இடம்பெறுவதாக வடபகுதி மீனவ சங்க தலைவர்கள் கூறுகின்றனர். “இது ஒரு தீவிரமான பிரச்சினை. இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்படை உள்ளிட்டவர்கள் தேவையான நடவடிக்கை எடுக்காதமையே இந்த பிரச்சினை தொடர்வதற்கு முக்கிய காரணமாக உள்ளது.  ஏராளமான இந்திய இழுவை படகுகள் இலங்கை கடல் பகுதிக்குள் நுழையும் நிலையில், கைது செய்யப்படும் இந்திய மீனவர்கள் மற்றும் கைப்பற்றப்படும் இந்திய இலுவை படகுகளின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே உள்ளது. சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடி தேவையான நடவடிக்கை எடுத்து இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண மீன்பிடி அமைச்சு நடவடிக்கை எடுப்பதாகத் தெரியவில்லை. இந்திய மீனவர்கள் பயன்படுத்தும் இழுவை படகுகள் வடபகுதி மீனவர்களுக்கு சொந்தமானதை படகுகளை விட பெரியவை. அவை தினமும் வடக்கு கடல் பகுதிக்குள் நுழைவதால், ஏராளமான பிரச்னைகள் ஏற்படுகின்றன. இதனால் வடபகுதி மீனவர்களின் வருமானம் பாதிக்கப்படுவதுடன், இந்திய இழுவை படகுகளால் இலங்கை மீனவர்களின் வலைகளுக்கு சேதம் ஏற்படுகின்றது. அத்துடன், எமது மீன்பிடி வளம் பறிபோகிறது. எமது மீனவர்களுக்குச் சொந்தமான படகுகளை சேதப்படுத்திய சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன”- என யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழிலாளர் சமாசங்களின் சம்மேளன தலைவர் அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்தார். அத்துடன், இந்தியாவில் இருந்து இழுவை படகுகள் வருவதை தடுக்கும் வகையில் இலங்கையில் சட்ட அமைப்பு இருப்பதாகவும் எனினும், அவற்றால் நடைமுறையில் இலங்கை மீனவர்களால் எந்தவித பயனையும் பெற்றுக்கொள்ள முடியவில்லை என, அன்னராசா சுட்டிக்காட்டினார். 1979 ஆம் ஆண்டின் 59 ஆம் இலக்க கடற்றொழில் (வெளிநாட்டு மீன்பிடி படகுகளை ஒழுங்குபடுத்துதல்) சட்டத்தின் 04ஆவது பிரிவின்படி, அனுமதியின்றி மீன்பிடி தொடர்பான நடவடிக்கைகளுக்காக வெளிநாட்டு மீன்பிடி படகுகளை இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிக்க பயன்படுத்தக்கூடாது என்று கூறுகிறது. அத்துடன், இலங்கை கடற்பரப்பிற்குள் வெளிநாட்டுப் படகுகள் பிரவேசித்தால், மீன்பிடிக்கப்படுவதைத் தடுக்கும் வகையில், அந்தப் படகில் உள்ள மீன்பிடி சாதனங்களை முறையான முறையில் தடுத்து வைக்க வேண்டும் என்று சட்டத்தின் 05வது பிரிவு கூறுகிறது. வெளிநாட்டுப் படகுகளை நிறுத்தவும், சோதனைகளை நடத்தவும், பிடியாணையுடன் அல்லது இல்லாமலும் படகுகளைக் கைப்பற்றவும், தனிநபர்களைக் கைது செய்யவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.  2018 ஆம் ஆண்டில், இந்த சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டதுடன், இலங்கையில் உள்ள ஆயுதப்படைகளின் தளபதிகள் மற்றும் அதன் அமுலாக்கத்துக்காக கரையோரப் பாதுகாப்புத் திணைக்களத்தின் தலைவர் ஆகியோருக்கு பொறுப்பை வழங்கும் கூடுதல் சரத்துகள் அறிமுகப்படுத்தப்பட்டன. வெளிநாட்டுப் படகுகள் மூலம் இலங்கைக் கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடித்தால் இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும். இந்த குற்றம் தொடர்பான நீதிமன்ற விசாரணைகள் ஒரு மாதத்துக்குள் முடிக்கப்பட வேண்டும் என்று சட்டம் கூறுகிறது. இந்த சட்டத்தை நிறைவேற்றுவதற்கு பொறுப்பான அமைச்சருக்கு விதிமுறைகளை உருவாக்கும் திறன் உட்பட விரிவான அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. 1981 ஆம் ஆண்டு இந்தச் சட்டத்தின் கீழ் இலங்கைக் கடற்பரப்பில் நுழைவதற்கான அனுமதியைப் பெறுவதற்கான நடைமுறைகளை கோடிட்டுக் காட்டும் விதிமுறைகள் வெளியிடப்பட்டன. இந்தச் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு மீன்பிடி அமைச்சு மற்றும் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களம் என்பன மீள தவிர்க்க முடியாத பொறுப்பைக் கொண்டுள்ளன. இந்திய மீனவர்கள் வட கடலில் மேற்கொள்ளும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை முற்றாக நிறுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் தொடர்பிலான கலந்துரையாடல் 2023 ஜனவரி 24 ஆம் திகதி கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்றது.  மேலும், 2023ல் சட்டவிரோத வெளிநாட்டு மீன்பிடி கப்பல்கள் மற்றும் மீனவர்கள் குறித்து அந்தந்த நிறுவனங்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. எவ்வாறாயினும், இந்திய இழுவை படகுகளினால் வடபகுதி மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண போதிய நடவடிக்கைகளை எடுக்க அரசாங்கம் இன்னமும் தவறியுள்ளதுடன், இதனால் பிரச்சினை தொடர்ந்து மோசமாகி வருகிறது. இவ்விடயம் தொடர்பில் வினவிய போது கடற்றொழில் அமைச்சின் செயலாளர் கே.என். குமாரி சோமரத்ன, இந்த பிரச்சினைக்கு இரு நாடுகளுக்கிடையில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட வேண்டும் என தெரிவிக்கின்றார். “இந்த விவகாரம் தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே பல ஆண்டுகளாக விவாதங்கள் நடந்து வருகின்றன. இந்த விடயம் தொடர்பில் மீண்டும் ஒருமுறை கலந்துரையாடலை ஆரம்பிக்குமாறு வெளிவிவகார அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். வெளிவிவகார அமைச்சரும் அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருவதை நாம் அறிவோம். இப்பிரச்சினை தொடர்பாக தற்போதுள்ள சட்டங்களில் திருத்தம் செய்ய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, தற்போது இறுதிக்கட்டத்தில் உள்ளது. தற்போது, முதல் தடவை கைதுக்கான தண்டனை மற்றும் மீண்டும் மீண்டும் கைது செய்யப்பட்டதற்கான தண்டனையை சட்டம் குறிப்பிடுகிறது, ” என்று அவர் கூறுகின்றார். இந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்ய கடற்படையின் அதிகாரத்தைப் பயன்படுத்துவதற்கு ஏன் பணிப்புரை வழங்கப்படவில்லை என வினவியபோது, அந்தச் சட்டம் இன்னமும் அமுலில் உள்ளதாகவும், அதன்படி தற்போது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் செயலாளர் தெரிவித்தார். இது இவ்வாறாக இருக்கும் நிலையில், இந்த ஆண்டு இதுவரையான காலப்பகுதியில் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களின் எண்ணிக்கை 150க்கும் அதிகமாகும். இது அதிக எண்ணிக்கையாக தெரிந்தாலும், நாளாந்தம் இலங்கைக் கடற்பரப்புக்குள் நுழையும் இந்திய மீனவர்களின் வருகையுடன் ஒப்பிடுகையில் இது மிகக் குறைவு என மீனவ சங்கத் தலைவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்த நிலையில், இலங்கை கடற்பரப்பிற்குள் பிரவேசிக்கும் இந்திய மீனவர்களை கண்காணிப்பதற்காக வடக்கில் ‘கடல் காவலர்கள்’ எனப்படும் தன்னார்வ குழுவொன்றை ஸ்தாபிப்பதற்கான அமைச்சரவை பத்திரத்தை கடற்றொழில் அமைச்சர் சமர்ப்பித்துள்ளார். இதேவேளை, இந்திய மீன்பிடி பிரச்சனையால் நாளாந்தம் 350 மில்லியன் ரூபாய் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக அமைச்சு மதிப்பிட்டுள்ளது. இந்த நிலையில், தற்போதைய கடற்றொழில் அமைச்சர் வடக்கில் உள்ள மீனவர்களின் வாக்குகளால் பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டதாகவும், கடற்றொழில் அமைச்சராக பதவியேற்றதன் பின்னர் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு அவர் போதிய தலையீடுகளை மேற்கொள்ளவில்லை என வடமாகாண மீனவர் சங்க தலைவர்கள் குற்றம் சுமத்துகின்றனர். வடக்கில் உள்ள எழுவைத்தீவு, அனலைத்தீவு, நெடுந்தீவு உள்ளிட்ட, மீன் பிடி தொழிலை வாழ்வாதாரமாக கொண்டுள்ள மக்கள் வசிக்கும் தீவு பகுதிகள் இன்னும் இலங்கை கடற்படையினரின் கண்காணிப்பிலேயே உள்ளதை எம்மால் நேரடியாக காண முடிந்தது. இந்த தீவுகளின் கடற்படையினரின் சோதனை சாவடி அல்லது முகாம் இன்னும் செயற்பாட்டிலேயே உள்ளது. இவ்வாறு வடக்கின் கடற்பரப்பை சுற்றி ரோந்து நடவடிக்கையில் ஈடுபடும் இலங்கை கடற்படையினர், இந்திய மீனவர்கள் இலங்கைக்குள் பிரவேசிப்பதை தடுக்க  உரிய நடவடிக்கை எடுக்காதது குறித்து வடபகுதி மீனவர்கள் தமது அதிருப்தியை வெளிப்படுத்துகின்றனர். இலங்கை கடற்படையினர் நினைத்தால் இந்திய மீனவர்களை இலங்கை கடல் வளத்தை சுரண்டாமல் இலகுவாக தடுத்து நிறுத்த முடியும் என்பதே வடபகுதி மீனவர்கள் நம்பிக்கையாகும். ஆனால், அது இன்றுவரை நிறைவேற்றப்படவில்லை என்பது அந்த மீனவர்கள் நிலையை நேரில் பார்க்குத்போது தெளிவாக புலப்படுகின்றது.   https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/வடக்கு-மீனவர்களின்-ஓயாத-போராட்டம்/91-336077
    • யாழ்.பல்கலையின் பொன்விழாவை முன்னிட்டு ஆய்வு மாநாடு! adminApril 18, 2024 யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் யாழ்ப்பாண வளாகம் எனும் பெயரில் இலங்கைப் பல்கலைக்கழகத்தின் ஒரு அங்கமாக ஆரம்பிக்கப்பட்டு இவ்வருடத்துடன் ஐம்பதாண்டைப் பூர்த்தி செய்து பொன்விழாக் காண்கின்றது. அதனை முன்னிட்டு முதலாவது சர்வதேச கல்வியியல் ஆய்வுமாநாட்டை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உயர்பட்டப்படிப்புக்கள் பீடமும் கலைப்பீடத்தைச் சேர்ந்த கல்வியியல் துறையும் இணைந்து ஒழுங்கமைத்துள்ளன. ‘நாளையை வலுப்படுத்தல் – கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வடக்கு மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் கருப்பொருளில் இம்மாநாடு திட்டமிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர்.சி.சிறிசற்குணராசா தலைமையிலும் உயர்பட்டப்படிப்புக்கள் பீடப் பீடாதிபதி பேராசிரியர்.செ.கண்ணதாசன் மற்றும் கலைப் பீடாதிபதி பேராசிரியர்.சி.ரகுராம் ஆகியோரின் இணைத்தலைமையிலும் இவ் ஆய்வுமாநாடு அரங்கேறவுள்ளது. கல்வியியல் துறைத் தலைவர் கலாநிதி.ஆ.நித்திலவர்ணண் மாநாட்டின் இணைப்பாளராகச் செயற்படுகின்றார். வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிரஞ்சன் மற்றும் வட மாகாணக் கல்விப் பணிப்பாளர் தி.ஜோன் குயின்ரஸ் ஆகியோர் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தாளர்களாகக் கலந்துகொள்கின்றனர். எதிர்வரும் 20ம் திகதி சனிக்கிழமையும் 21ம் திகதி ஞாயிற்றுக்கிழமையும் காலை மற்றும் மாலை அமர்வுகள் எனத் திட்டமிடப்பட்டுள்ள இம்மாநாட்டின் காலை அமர்வுகள் கைலாசபதி கலையரங்கிலும் மாலை அமர்வுகள் உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்திலும் நடைபெறவுள்ளன. சனிக்கிழமை நடைபெறவுள்ள அங்குரார்ப்பண நிகழ்வில் திறவுகோல் உரையினை கொழும்புப் பல்கலைக்கழக கல்வியியல் பீட கல்வி உளவியல் இருக்கைப் பேராசிரியர் மஞ்சுளா விதாணபத்திரண நிகழ்த்தவுள்ளார். ‘வாண்மைத்துவ விருத்திக்கான ஆய்வு மைய புத்தாக்கங்கள்: வடக்கு இலங்கையின் ஆசிரியர் கல்விக்கான தந்திரோபாய அணுகுமுறை’ எனும் தலைப்பில் இவ் உரை நிகழவிருக்கின்றது. திறவுகோல் உரையினைத் தொடர்ந்து மாநாட்டின் கருப்பொருளை மையப்படுத்திய மையக்கருத்துரைகள் இடம்பெறவுள்ளன. இக்கருத்தரங்கிற்கு உயர்பட்டப்படிப்புக்கள் பீடப் பீடாதிபதி பேராசிரியர்.செ.கண்ணதாசன் தலைமைதாங்கவுள்ளார். ‘இலங்கையின் ஆரம்ப பிள்ளைப்பருவக் கல்வியை முறைமைப்படுத்தல் – சவால்களும் பிரச்சனைகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீடப் பேராசிரியர்.தி.முகுந்தனும், ‘வட மாகாணக் கல்வியின் சமகால உள சமூக நிலைமைகள்’ எனும் தலைப்பில் உளமருத்துவ நிபுணர் சி.சிவதாசும், ‘இலங்கையின் பாடசாலைக் கலைத்திட்டத்தின் சவால்களும் புதிய போக்குகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீடப் பேராசிரியர் எவ்.எம்.நவாஸ்தீனும், ‘சட்டத் தீர்மானங்களை அறிவிப்பதில் கல்வியியல் ஆய்வுகளின் தேவைகள்’ எனும் தலைப்பில் களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்ற நீதிபதி ஜே.பி.ஏ.ரஞ்சித்குமாரும் உரையாற்றவுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இரண்டாம் நாள் நிகழ்வுகளுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கல்வியியல் துறைப் பேராசிரியர் ஜெயலக்சுமி இராசநாயகம் தலைமை தாங்கவுள்ளார். இந் நிகழ்வில் திறவுகோல் உரையை தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக கல்வியியல் மற்றும் மேலாண்மைத் துறைத் தலைவர் பேராசிரியர் கு.சின்னப்பன் ‘தமிழ் கற்பித்தலில் புதிய போக்குகள்’ எனும் தலைப்பில் நிகழ்த்தவுள்ளார். அதனைத் தொடர்ந்து ‘நாளையை வலுப்படுத்தல் – கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வட மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் தலைப்பில் கலைப்பீடப் பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராம் தலைமையில் திறந்த புலமைத்துவக் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. இக்கலந்துரையாடலில் ஓய்வுபெற்ற வலயக் கல்விப்பணிப்பாளரும் அதிபருமாகிய என்.தெய்வேந்திரராஜா, கல்வியியல் ஆய்வாளரும் அகவிழி மற்றும் ஆசிரியம் சஞ்சிகைகளின் ஆசிரியருமான தெ.மதுசூதனன், தேசிய கல்வி நிறுவன விரிவுரையாளர் ஐ.கைலாசபதி, கிளிநொச்சி விவேகானந்தா வித்தியாலய அதிபர் ஜெய மாணிக்கவாசகர், இலங்கை பரீட்சைகள் திணைக்களப் பணிப்பாளர் எம்.ஜீவராணி புனிதா, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அதிபர் இ.செந்தில்மாறன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கல்லூரியின் முன்னாள் பணிப்பாளரும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் திட்ட முகாமையாளருமாகிய ஜே. ஜூட் வோல்ற்றன் மற்றும் கிளிநொச்சி வடக்கு கல்வி வலய தொழில் வழிகாட்டல் அலுவலர் சு.வீரசுதாகரன் ஆகியோர் பங்குபற்றவுள்ளனர். பார்வையாளர்களின் வினாக்களுக்கும் விடையளிக்கும் நிகழ்வாகவும் இக் கலந்துரையாடல் திட்டமிடப்பட்டுள்ளது. ‘வடக்கு மாகாணப் பாடசாலைகளின் வெற்றிகளும் பின்னடைவுகளும்’, ‘பாடசாலைகளும் சமூகமும் – எங்கு நாம் நிற்கின்றோம் – முன்னோக்கிப் போவதற்கான வழிகள்’, ‘எதிர்பார்க்கப்படும் கற்றல் பேறுகளை அளவிடுதல்’, மற்றும் ‘கல்வியும் வேலைவாய்ப்பும் – சந்தர்ப்பங்களும் சவால்களும்’ எனும் தலைப்புக்களில் இக்கலந்துரையாடல் கட்டமைக்கப்பட்டுள்ளது. கலந்துரையாடலின் கருத்துச்செறிவுகளை மாநாடு நிறைவுபெற்ற பின்னர் கொள்கை ஆவணமாக வெளியிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இரண்டு நாள்களும் மாலை அமர்வுகள் பலாலி வீதியில் அமைந்துள்ள உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்தில் நடைபெறும். இரண்டு நாள் மாலை அமர்வுகளிலும் தலா நாற்பத்து நான்கு ஆய்வுக் கட்டுரைகள் பல்வேறு தலைப்புக்களிலும் சமர்ப்பிக்கப்படவுள்ளன. பல்கலைக்கழகங்களின் ஆய்வு மாணவர்கள், விரிவுரையாளர்கள், கல்வியியல் கல்லூரிகள் மற்றும் ஆசிரிய பயிற்சிக் கலாசாலை ஆசிரியக் கல்வியலாளர்கள், கல்வி நிர்வாகிகள், பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் என பன்முகப்படுத்தப்பட்ட ஆய்வாளர்களினால் பல்வேறு தலைப்புக்களில் ஆய்வுக் கட்டுரைகள் முன்வைக்கப்படவுள்ளன   https://globaltamilnews.net/2024/201875/
    • போட்டியில் கலந்துகொண்ட @kalyani யும், @கந்தப்புவும் வெற்றிபெற வாழ்த்துக்கள். இன்னும் 15 மணித்தியாலங்களே இருப்பதனால், யாழ்களப் போட்டியில் விரைவில் கலந்துகொள்ளுங்கள்😀 இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு  
    • அமெரிக்கா ஏதோ ஒரு விதத்தில் பங்கு எடுக்கும், எடுக்க வேண்டிய நிலை, இஸ்ரேல் ஈரானுக்கு திருப்பி அடித்தால் . (மற்ற திரியில் சொன்னனது போல , இஸ்ரேல் க்கு தெரியும், அமெரிக்கா, மேற்கு பாதுகாப்புக்கு எப்போதும் வரும் என்று. அதை மேற்கும், மீண்டும், மீண்டும் சொல்லுகின்றன. இதுவே பங்கு எடுப்பது. அமெரிக்கா செய்வது, இஸ்ரேல் ஐ பாதுகாப்பத்தற்கு ஈரானின் ஏவுகணனைகளை தடுப்பது act of  war,)   ஈரானின் தூதரகம் மீதான இஸ்ரேல் இன் தாக்குதல் , மேற்கு, குறிப்பாக US க்கு தெரிந்து (அதன் மூலம் 5 கண்கள் உளவு நாடுகளுக்கு - 5 eyes intelligence community தெரிந்து), US ஆமோதித்து, அனுமதித்து  நடத்தப்பட்ட தாக்குதல். ஏனெனில், இஸ்ரேல் இப்படியானவற்றை அமெரிக்காவிடம் சொல்லாமல் செய்வதில்லை. மேலும், France க்கும்  உச அறிவித்து இருக்கும், ஏனெனில், சிரியா பிரான்ஸ் இன் காலனித்துவம்  கீழ் இருந்தது. மற்றது, பிரச்னை வந்தால் செக்யூரிட்டி கவுன்சில் இல் பிரான்ஸ் இந்த உதவி தேவை, ஆனால், இந்த காலனி என்பதே பிரதான  காரணம். இது செக்யூரிட்டி கவுன்சில் இல் எழுதப்படாத  விதி- காலனித்துவ அரசுகளே, முனைய காலணிகளின் இப்போதைய அரசுக்கள் சார்ந்த  விடயத்தில் முன்னுரிமை உள்ளது என்பது .  எனவே, மேற்கு ஆகக்குறைந்தது மறைமுக பங்குதாரர் (கனடா தூதரகத்தை காலி செய்தது அநேகமாக இந்த 5 eyes வழியாகத் தான் இருக்கும்) இஸ்ரேல் சொல்லியது தாக்குதலுக்கு மிகச் சிறிய நேரத்துக்கு முதல் என்று (வேண்டும் என்று) அமெரிக்கா கசிய விட்டு, சில செய்திகள் காவுகின்றன. அனால், தாக்குதலை இஸ்ரேல் 2 மாதமாக திட்டமிட்டது என்று பின் செய்து வந்தது.  கேக்கிறவன் கேணையனாக இருந்தால் ... என்ற அமெரிக்காவின் கதை. (அப்படி US  இடம் சொல்லாமல் இஸ்ரேல் செய்தது, Sinnai மீதான தாக்குதல், கைப்பற்றலும்  , ஆனால், அது பெரிய யுத்தத்தின் ஒரு பகுதி, Egypt முதல் தாக்கி இருந்தது). அமெரிக்காவுக்கு முதலே (ஏற்ற காலத்தில் ) தெரியும் என்றது, newyork times வெளியிட்டு உள்ள இன்னொரு செய்தியானா, அமெரிக்கா, இஸ்ரேல் அதிகாரிகள் ஈரானின் எதிர்பபை குறைத்து மதிப்பிட்டு விட்டார்கள் என்று அதிகாரிகள் அவர்களின் வாயால் சொன்னதாக என்ற செய்தியில்   இருந்து தெரிகிறது.   இதனால் தான் மேற்கு, ஈரானை தடுக்க முனைந்தது. முடியாமல் போக, அது தடுத்தது. un இன் பகுதி charter ஐ குழிதோண்டி புதைத்தன அமெரிக்காவும், அதன் வாலுகளும்.  இதை மேற்கு rule based என்று சொல்லும் என்று நினைக்கிறன்.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.