Jump to content

ஒரு ஜோக் சொல்லுங்கள்


Recommended Posts

ஓய் என்ன பாசையப்பா இது நாங்கள் என்ன உங்களைப்போல பள்ளிக்குப்போனனாங்களே

யோவ் தமிழில எழுதுமப்பா

:evil: :evil: :wink: :wink: :wink:

சின்னப்பு இதோ அவரின் பாஷையின் விளக்கம்:

சின்னப்பு என்பவர் யாழில் பல லொள்ளுகள் விட்டு 10 :twisted: க்கும் டிமிக்கி விட்டுக் கொண்டு திரிகிறார். அவரை கண்டால் உடனே கைது செய்யும்படி உலக அளவிலான பொலிசுக்கு கட்டளை போயிருக்கு

Link to comment
Share on other sites

  • Replies 82
  • Created
  • Last Reply

சின்னப்பு என்பவர் யாழில் பல லொள்ளுகள் விட்டு 10 :twisted: க்கும் டிமிக்கி விட்டுக் கொண்டு திரிகிறார். அவரை கண்டால் உடனே கைது செய்யும்படி உலக அளவிலான பொலிசுக்கு கட்டளை போயிருக்கு

சின்னப்புவை பிடிக்க பெரியளவு பொலிசா .......

சும்மா சின்னாச்சி வாற எண்டு கதைவிட்டா காணும் ஆள் பேசாமப் போய் கூட்டுக்கை இருந்திட மாட்டார்....

Link to comment
Share on other sites

RaMa wrote:

சின்னப்பு இதோ அவரின் பாஷையின் விளக்கம்:

சின்னப்பு என்பவர் யாழில் பல லொள்ளுகள் விட்டு 10 க்கும் டிமிக்கி விட்டுக் கொண்டு திரிகிறார். அவரை கண்டால் உடனே கைது செய்யும்படி உலக அளவிலான பொலிசுக்கு கட்டளை போயிருக்கு

பிறகென்ன சின்னப்புவும் கராத்தே தியாகராஜன் ரேஞ்சுக்கு போயிட்டார்.

:roll: :roll: :roll: :roll:

Link to comment
Share on other sites

சின்னப்பு பங்கருகயே இருங்கோ :!:

வெளியே வந்தால் ஆப்புதான் :wink:

வயசான காலத்தில இதெல்லாம் தேவையா சின்னப்பு :?:

Link to comment
Share on other sites

இஞ்ச நான் சிரிச்சா சி*5 பபா என்று பேசாமல் இருப்பார்...நீங்கள் வேற சிரிச்சு என்னையும் மாட்ட பார்க்கிறிங்க :lol:

Link to comment
Share on other sites

ஒரு ஜோக்

நீதிபதி : நீங்க சொல்ல விரும்புவதை தைரியமாக சொல்லாம்

குற்றவாளி : ஒரு அசைன்மெண்ட்டுக்கு லட்சக்கணக்குல சம்பள்ம் வாங்குற எங்களை இனிமேலும் 'கூலிப்படை'ன்னு சொல்லி கேவலப்படுத்த வேண்டாம் யுவர் ஆனார்.!!

Link to comment
Share on other sites

ஜோதிடர்: உங்க ஜாதகப்படி ஆறு மாசத்துக்குள்ள கண்டிப்பா... கல்யாணம் நடத்திடனும்னு சொன்னா ஏன் சந்தோசப்படாம கவலைப்படறீங்க?"

ராமு : இப்ப இருக்கிற மனைவிஇ குழந்தைகளை என்ன பண்றதுன்னுதான் யோசிக்கிறேன்!

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

ஒரு சிந்தனை ஜோக்

ஒரு கூன் விழுந்த கிழவர் தெருவோரம் போய்க்கொண்டிருந்தார். அந்த கிழவரைப்பார்த்து அந்த வழியால் போன வாலிபன் ஒருவன் நக்கலாக "என்ன தாத்தா என்ன நிலத்தில் தேடுறீங்க?" என்று கேட்டான்.

அதற்கு அந்த கிழவர் "இழந்த எனது இளமையை தேடுகிறேன்." என்றார்.

காவோலை விழ குருத்தோலை சிரிக்கக்கூடாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு சிந்தனை ஜோக்

            ஒரு கூன் விழுந்த கிழவர் தெருவோரம் போய்க்கொண்டிருந்தார். அந்த கிழவரைப்பார்த்து அந்த வழியால் போன வாலிபன் ஒருவன் நக்கலாக  "என்ன தாத்தா என்ன நிலத்தில் தேடுறீங்க?" என்று கேட்டான்.

        அதற்கு அந்த கிழவர் "இழந்த எனது இளமையை தேடுகிறேன்." என்றார்.

                       

 காவோலை விழ குருத்தோலை சிரிக்கக்கூடாது.

நல்லா தமிழ் படித்திருக்கிறீர்கள் போல .. :)

Link to comment
Share on other sites

கவிதன் எழுதியது : நல்லா தமிழ் படித்திருக்கிறீர்கள் போல .

.

நான் மறத்தமிழனாக்கும். ஆனால் நுளம்புக்கு பயம்.

:lol::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெரிய அளவில் ஆங்கிலம் தெரியாதவர் கடை ஒன்றுக்கு சோடா குடிப்பம் என்று போனார். அங்கே "கொக்ககோலா" ஒன்றை வாங்கிக் குடித்துக் கொண்டிருந்தார். அப்போது "பன்ரா" குடித்துக் கொணடிருந்த வெள்ளைக்காரன் ஒருவன் குடித்து முடித்ததும் இவரைப்பார்த்து "பன்ராஸ்டிக்" என்றான். இவரும் யோசித்து பார்த்தார். "பன்ரா" குடித்த அவன் "பன்ராஸ்டிக்" என்கின்றான். இவர் "கொக்ககோலா" அல்லவா குடித்தவர். இவர் பதிலுக்கு "கொக்ககோலாஸ்டிக்" என்று பதிலுக்கு சொல்லி பெருமிதத்துடன் சிரித்தார்.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

மனைவிக்கும்

மெழுகுவத்திக்கும்

ஒரு ஒற்றுமை உண்டு -

இரண்டுமே எரிஞ்சுவிழும் :lol::lol:

ABCDEFGயின் விரிவாக்கம் என்ன எண்டு தெரியுமா :?:

A Boy Can Do Everything For Girl

அதை அப்பிடியே திருப்பிப் போடுங்க GFEDCBA

Girl Forgot Everything Done & Catches(new)Boy Again :lol::lol:

Link to comment
Share on other sites

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கொழும்பில் நேர்முகப் பரீட்சைக்குச் சென்றிருந்த தமிழ் வாலிபன் நேர்முகப் பரீட்சை முடிந்து வருபவர்களிடம் என்ன கேள்விகள் கேட்டார்கள் என்று கேட்டுக்கொண்டே இருந்தார். வெளியே வந்தவர்கள் எல்லோரும் அவர்கள் "காலையில் என்ன சாப்பிட்டாய்? என்று சிங்களத்தில் கேட்டார்கள் அதற்கு நான் இடியப்பம் சாப்பிட்டேன் என்று சிங்களத்தில் (இடியாப்ப காவாய்) என்று பதில் சொன்னேன்" என்று கூறியதைக்கேட்டவர் தான் அதனை மாற்றிச் சொல்லவேண்டும் என்று எண்ணிக்கொண்டு இருந்தார். உள்ளே சென்ற அவரையும் அதே கேள்வியை சிங்களத்தில் கேட்டார்கள். அதற்கு அவர் தான் புட்டுச் சாப்பிட்டேன் என்று முன்னரே தயார் செய்து வைத்திருந்ததன்படி தனக்குத் தெரிந்த அரைகுறைச் சிங்களத்தில் "புட்டுவ காவாய்" என்று பதில் கூறினார். எல்லோரும் விழுந்து விழுந்து சிரித்தார்கள். (புட்டுவ என்றார் சிங்களத்தில் கதிரை என்பது அர்த்தமாம்)

பல வருடங்களுக்கு முன்னர் இது உண்மையில் நடந்தது என்று கூறினார்கள். எனக்குச் சிங்களம் தெரியாது. நினைவில் இருந்ததையே இங்கே எழுதினேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புட்டுவ என்றால் கதிரை தான். ஆனால் புட்டை புட்டுவ என்று சொல்வதில்லை என்று நினைக்கிறன். அந்தக்கொழுந்தை மெச்சவேண்டும் :wink:

Link to comment
Share on other sites

கொழும்பில் நேர்முகப் பரீட்சைக்குச் சென்றிருந்த தமிழ் வாலிபன் நேர்முகப் பரீட்சை முடிந்து வருபவர்களிடம் என்ன கேள்விகள் கேட்டார்கள் என்று கேட்டுக்கொண்டே இருந்தார். வெளியே வந்தவர்கள் எல்லோரும் அவர்கள் "காலையில் என்ன சாப்பிட்டாய்? என்று சிங்களத்தில் கேட்டார்கள் அதற்கு நான் இடியப்பம் சாப்பிட்டேன் என்று சிங்களத்தில் (இடியாப்ப காவாய்) என்று பதில் சொன்னேன்" என்று கூறியதைக்கேட்டவர் தான் அதனை மாற்றிச் சொல்லவேண்டும் என்று எண்ணிக்கொண்டு இருந்தார். உள்ளே சென்ற அவரையும் அதே கேள்வியை சிங்களத்தில் கேட்டார்கள். அதற்கு அவர் தான் புட்டுச் சாப்பிட்டேன் என்று முன்னரே தயார் செய்து வைத்திருந்ததன்படி தனக்குத் தெரிந்த அரைகுறைச் சிங்களத்தில் "புட்டுவ காவாய்" என்று பதில் கூறினார். எல்லோரும் விழுந்து விழுந்து சிரித்தார்கள். (புட்டுவ என்றார் சிங்களத்தில் கதிரை என்பது அர்த்தமாம்)

பல வருடங்களுக்கு முன்னர் இது உண்மையில் நடந்தது என்று கூறினார்கள். எனக்குச் சிங்களம் தெரியாது. நினைவில் இருந்ததையே இங்கே எழுதினேன்.

:):lol::lol::lol::lol::lol::lol::lol::lol::lol::lol::lol::lol::lol:

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அடிக்கடி துயரமான செய்திகள் வரும்போது மனதைத் தேற்றுவதற்கு நகைச்சுவைகள் கட்டாயம் தேவை.

எழுதுங்கள்...

Link to comment
Share on other sites

ஒரு சிந்தனை ஜோக்

ஒரு கூன் விழுந்த கிழவர் தெருவோரம் போய்க்கொண்டிருந்தார். அந்த கிழவரைப்பார்த்து அந்த வழியால் போன வாலிபன் ஒருவன் நக்கலாக "என்ன தாத்தா என்ன நிலத்தில் தேடுறீங்க?" என்று கேட்டான்.

அதற்கு அந்த கிழவர் "இழந்த எனது இளமையை தேடுகிறேன்." என்றார்

இது முந்தி தமிழ் புத்தகத்தில "சிரிக்கத்தெரிந்த பாரசீகர்" என்ன பாடத்தில இருந்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒருவர் தனது ஆள்காட்டி விரலைக்காட்டி "இந்த விரலை மிருதங்கம் வாசிப்பவர்கள் பாவிப்பதில்லை" ஏன் என்று தெரியுமா? என்று மற்றவரைக்கேட்டார்.

"தெரியாது" என்று மற்றவர் கூறினார்.

"இது என்னுடைய விரல்" என்று பதில் கூறினார்.

இதனையும் நான் ஒரு புத்தகத்தில் வாசித்ததாக ஞாபகம்.

Link to comment
Share on other sites

ஒரு சர்தாஜி சோதனைக்கு படிச்சுக் கொண்டிருந்தார் அதுவும் ஆங்கிலப் பாடம் (எங்கடை ரசிகையைப் போல) யாரோ சொன்னார்களாம் நண்பர்களைப் பற்றி கட்டுரை எழுத வரும் ஆனபடியாலை நண்பர்களைப் பற்றி படிக்கும் படி ..சர்தாஜியும் நண்பர்களைப் பற்றி பாடமாக்கியிட்டு சோதனைக்குப் போனார் ஆனா பேப்பரிலை நண்பர்களைப்பற்றி வராமல் அப்பாவை பற்றி எழுத வந்ததாம் சர்தாஜி பயப்படேலை அப்பிடியே கட்டுரையை மாத்தி friends எண்ட இடத்திலை Father எனப்போட்டு எழுதினார் எப்பிடி எண்டு பாருங்கோவன்

i am a very fatherly person i got lots of fathers. My neighbour is my best father Sardar ended as,A father in need is a father indeed!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பல வருடங்களுக்கு முன்னர் கேட்டது:

சரியான நாற்றமுள்ள ஒரு மிருகத்தைக் கூண்டினுள் அடைத்துவிட்டு அதனுடன் யார் அதிகநேரம் இருக்கிறார்கள் என்பதே போட்டி.

முதலில் ஓர் ஆங்கிலேயர் உள்ளே போனார். 5 நிமிடங்களுக்குமேல் அவரால் அங்கே இருக்க முடியவில்லை. மூக்கைப் பொத்திக்கொண்டு வெளியே ஓடிவிட்டார்.

அடுத்து ஒரு யப்பானியர் சென்றார். சுமார் 1மணித்தியாலங்கள் உள்ளே இருந்தார். அதற்குமேல் அவரால் உள்ளே இருக்கமுடியவில்லை வெளியே வந்துவிட்டார்.

அடுத்து ஒருவர் உள்ளே சென்றார். அவர் சென்றதுதான் தாமதம் மிருகம் வெளியே ஓடிவந்துவிட்டதாம்.

அவர் யாராக இருக்கலாம்? நிச்சயமாக நானில்லை!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தனிப்பட்ட கோப தாபங்கள் இல்லை. ஆனால், நீங்கள் ஒரு கருத்தாளர் தரும் தரவுகளைக் கேள்விக்குள்ளாக்கும் போது மறுத்துரைக்கும் தரவுகளைத் தருவதில்லை. கொஞ்சம் வற்புறுத்திக் கேட்டால் "மேற்கின் , அமெரிக்காவின் செம்பு" என்பீர்கள். நீங்கள் உருப்படியான தரவுகளைத் தந்ததை விட "செம்பு" என்பதைத் தான் அதிக தடவைகள் பாவித்திருக்கிறீர்கள் என்பது என் அவதானிப்பு, இன்னும் நீங்கள் "சுழல் கழிப்பறை" பாவிப்பதாலோ தெரியாது😂!
    • நேற்றைய தினம் எனும் திரியில் கள உறுப்பினர்களுக்கும் முக்கியமாக @goshan_che அவர்களுக்கும் நிர்வாகத்தினைச் சேர்ந்த உறுப்பினர் ஒருவருக்கும் இடையில் இடம் பெற்ற கருத்தாடலில் கள உறுப்பினர்களுக்கு ஏற்பட்ட அசெளகரியங்களுக்கு நிர்வாகம் தனது வருத்தத்தினைத் தெரிவிக்கின்றது.
    • இலங்கையில் இருந்து தப்பித்து புலம்பெயரும் பலரும் இனி ரசிய இராணுவ முன்னரக்குகளில். எப்படி இருந்த ரசியா ....
    • "அவளோடு என் நினைவுகள்…"   "உன் நினைவு மழையாய் பொழிய   என் விழியோரம் கண்ணீர் நனைக்க  மென்மை இதயம் அன்பால் துடிக்க  அன்பின் ஞாபகம் கதையாய் ஓடுது "   "மனக் கடல் குழம்பி பொங்க மவுனம் ஆகி நீயும் மறைய  மண்ணை விட்டு நானும் விலக   மங்கள அரிசியும் கை மாறியதே!"   நிகழ்வு நினைவாற்றல் [Episodic Memory] உண்மையில் ஒருவரின் வாழ்வில் முக்கியமான ஒன்று, ஏனென்றால், அவை தனிப்பட்ட அனுபவங்களை நினைவு படுத்துவதுடன், அவரின் வாழ்வை மற்றும் புரிந்துணர்வுகளை [கண்ணோட்டங்களை]  வடிவமைக்கக் கூடியதும் ஆகும். அப்படியான "அவளோடு என் நினைவுகள்…" தான் உங்களோடு பகிரப் போகிறேன்.   நான் அன்று இளம் பட்டதாரி வாலிபன். முதல் உத்தியோகம் கிடைத்து, இலங்கையின்,  காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை ஆகிய மூன்று நிருவாக மாவட்டங்களைத் தன்னுள் அடக்கிய தென் பகுதியில் பணியினை பொறுப்பேற்றேன். அது சிங்களவரை 94% அல்லது சற்று கூட கொண்ட ஒரு பகுதியாகும். ஆகவே அங்கு எப்படியாவது சிங்களம் கற்க வேண்டிய அவசியம் எனக்கு இருந்தது. எப்படியாவது புது அனுபவம் புது தெம்பு கொடுக்கும் என்ற துணிவில் தான் அந்த பதவியை நான் பொறுப்பேற்றேன்    முதல் நாள், அங்கு உள்ள பணி மேலாளரை சந்தித்து, என் பணி பற்றிய விபரங்களையும் மற்றும் அலுவலகம், தொழிற்சாலை போன்றவற்றையும் சுற்றி பார்க்க அன்று நேரம் போய்விட்டது. என்றாலும் இறுதி நேரத்தில் என் கடமையை ஆற்ற எனக்கு என ஒதுக்கிய அலுவலகத்தில் சற்று இளைப்பாற சந்தர்ப்பம் கிடைத்ததுடன், அங்கு எனக்கு உதவியாளராக இருப்பவர்களின் அறிமுகமும் கிடைத்தது. அங்கு தான் அவளை முதல் முதல் கண்டேன்! அவள் தான் என் தட்டச்சர் மற்றும் குமாஸ்தா [எழுத்தர்] ஆகும். அவளின் பெயர்  செல்வி டயாணி பெர்னான்டோபுள்ளே, பெயருக்கு ஏற்ற தோழமையான இயல்பு அவள் தன்னை அறிமுகப் படுத்தும் பொழுது தானாக தெரிந்தது. அழகும் அறிவும் பின்னிப்பிணைந்து அவளை ஒரு சிறப்பு நபராக சொல்லாமல் சொல்லிக்கொண்டு இருந்தது. அவளுக்கு கொஞ்சம் கொஞ்சம் தமிழும் தெரிந்திருந்தது எனக்கு அனுகூலமாகவும் இருந்தது.    செம்பொன்னில்செய்து செங்குழம்புச் சித்திரங்கள் எழுதிய இரு செப்புகளை ஒரு பூங்கொம்பு தாங்கி நிற்பது போன்று பொலியும் காட்டு முலைக்கொடி போன்ற அவளின் முழு உருவமும், அதில் வில் போல் வளைந்து இருக்கும் புருவமும் மலரிதழ் போன்ற இனிய சொல் பேசும் சிவந்த வாயும், நல் முத்துக்கள் சேர்ந்தது போன்ற  வெண்மையான பல்லும், அசைகின்ற மூங்கில் போன்ற பருத்த தோளும்,  காந்தள் மலர் போன்ற மெல்லிய விரல்களும், பிறரை வருத்தும்,எழுச்சியும் இளமையும் உடைய மார்பகங்களையும் பிறர் பார்த்தால் இருக்கிறதே  தெரியாத வருந்தும் இடையும் யாரைத்தான் விட்டு வைக்கும்.    அடுத்தநாள் வேலைக்கு போகும் பொழுது, அவளும் பேருந்தால் இறங்கி நடந்து வருவதை கண்டேன். நான் தொழிற்சாலைக்கு கொஞ்சம் தள்ளி அரச விடுதியில் தங்கி இருந்தேன். ஆகவே மோட்டார் சைக்கிலில் தான் பயணம். ஆகவே ஹலோ சொல்லிவிட்டு நான் நகர்ந்து போய்விட்டேன்.   உள் மனதில் அவளையும் ஏற்றி போவமோ என்று ஒரு ஆசை இருந்தாலும், இன்னும் நாம் ஒன்றாக வேலை செய்யவோ, ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளவோ இல்லாத நிலையில், அதற்கு இன்னும் நேர காலம் அமையவில்லை என்று அதை தவிர்த்தேன்.    என் அறையில் நானும், அவளும் ஒரு பியூன் [சேவகன்] மட்டுமே. முதல் ஒன்று இரண்டு கிழமை, எனக்கு அங்கு இதுவரை நடந்த வேலைகள், இப்ப நடப்பவை , இனி என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி அலசுவதிலேயே காலம் போய் விட்டது. நல்ல காலம் எனக்கு கீழ் நேரடியாக வேலை செய்யும் உதவி பொறியியலாளர்கள், மேற்பார்வையாளர்கள் எல்லோரும் ஆங்கிலம் பேசுவார்கள். வேலையாட்களும் மற்றவர்களுடனும் தான் மொழி பிரச்சனை இருந்தது.    தொழிற்சாலைக்குள் இவர்களின் உதவி வரப்பிரசாதமாக இருந்தது. அதே போல, அலுவலகத்திற்குள் இவளின் உதவிதான் என்னை சமாளிக்க வைத்தது.     மூன்றாவது கிழமை, நான் கொஞ்சம் ஓய்வாக இருந்தேன், அவளின் வேலைகளும் குறைந்துபோய் இருந்தது. பியூன் ஒரு கிழமை விடுதலையில் போய்விட்டார். 'ஆயுபோவான் சார்' என்ற அவளின் குரல் கேட்டு திரும்பினேன். அவள் காபி கொண்டுவந்து குடியுங்க என்று வைத்துவிடு தன் இருப்பிடத்துக்கு போனாள். இது தான் நல்ல தருணம் என்று, அவளை, அவளுடைய காபியுடன் என் மேசைக்கு முன்னால் இருக்கும் கதிரையில் அமரும் படி வரவேற்றேன். அவள் கொஞ்சம் தயங்கினாலும், வந்து அமர்ந்தாள்.    நாம் இருவரும் அவரவர் குடும்பங்கள், படித்த இடங்கள் மற்றும்  பொது விடயங்களைப்பற்றி காபி குடித்துக்கொண்டு கதைத்தோம். அது தான் நாம் இருவரும் முதல் முதல் விரிவாக, ஒருவரை ஒருவர் அறிமுகப் படுத்திய நாள். அவள் ஒருவரின் வீட்டில், ஒரு அறையில் வாடகைக்கு இருப்பதாகவும், ஆனால், நேரடியான பேருந்து இல்லாததால், இரண்டு பேருந்து எடுத்து வருவதாகவும், தன் சொந்த இடம் சிலாபம் என்றும் கூறினாள். அப்ப தான் அவளுக்கு கொஞ்சம் கொஞ்சம் தமிழ் தெரிவதின் காரணம் புரிந்தது.    சிலாபம், புத்தளம், நீர்கொழும்பு போன்ற கரையோரப் பகுதிகளில், தங்கள் பாதுகாப்புக்காகப் போர்த்துக்கேயரால் குடியமர்த்தப் பட்ட கத்தோலிக்க மதத்திற்கு மாற்றப் பட்ட தமிழ் பரதவர்களது பிள்ளைகள் முதலில் கத்தோலிக்க பாடசாலைகளில் தமிழில் கற்றார்கள். பிற்காலத்தில் அந்த பாடசாலைகளில் இருந்த தமிழ் மொழிப் பிரிவு மூடப் பட்டு அனைவரும் சிங்கள மொழி ஊடாக கற்க பணிக்கப் பட்டார்கள். எனவே பிள்ளைகள் வளர்ந்து பெரியவர் ஆனதும், வீட்டு மொழியும் இயற்கையாக சிங்களம் ஆகி, முழுமையாக இன மாற்றம்  20 ஆம் நூற்றாண்டில் அடைந்தார்கள் என்று நான் முன்பு படித்த வரலாறு நினைவுக்கு வந்தது. இந்த  ஒருமைப்படுத்தலுக்கு (Assimilation)  காரணமானவர் ஒரு கத்தோலிக்க மதகுருவே ஆகும்!  பேராயர் எட்மன்ட் பீரிஸ் (பிறப்பு 27-12-1897) ஆவர்!!    அன்று தொடங்கிய கொஞ்சம் நெருங்கிய நட்பு, நாளடைவில் வளர, அவளின், அழகும், இனிய மொழியும், நளினமும் கட்டாயம் ஒரு காரணம் என்று சொல்ல வேண்டும். அவளும் வீட்டில் இருந்து தானே சமைத்த சிங்கள பண்பாட்டு சிற்றுண்டிகள், சில வேளை மதிய உணவும் கொண்டு வந்தாள்.  நானும் கைம்மாறாக காலையும் மாலையும் என் மோட்டார் சைக்கிலில் ஏற்றி இறக்குவதும், மாலை நேரத்தில் இருவரும் கடற்கரையில் பொழுது போக்குவதும், சில வேளை உணவு விடுதியில் சாப்பிடுவதுமாக, மகிழ்வாக நட்பு நெருங்க தொடங்கியது.     கொஞ்சம் கொஞ்சமாக, அவள் என்னுடன் பயணிக்கும் பொழுது, பின்னால் இருக்கையை பிடிப்பதை விடுத்து, தெரிந்தும் தெரியாமலும், தான் விழாமல் இருக்க, என்னை இருக்க பிடிக்க தொடங்கினாள்.       "செண்பகப் பூக்களை சித்திரை மாதத்தில்  தென்றலும் தீண்டியதே  தென்றலின் தீண்டலில் செண்பகப் பூக்களில்  சிந்தனை மாறியதே  சிந்தனை மாறிய வேளையில் மன்மதன்  அம்புகள் பாய்ந்தனவே  மன்மதன் அம்புகள் தாங்கிய காதலர்  வாழிய வாழியவே!"                     எளிமையாக, மகிழ்வாக அவள் அழகின் உற்சாக தருணங்கள் மனதை கவர, சந்தோசம் தரும் அவள் உடலின் பட்டும் படாமலும் ஏற்படும் மெல்லிய தொடு உணர்வை [ஸ்பரிசம்] எப்படி வர்ணிப்பேன். பெண்தான் ஆணுக்கு பெரும் கொடை, அவளின் ஒரு ஸ்பரிசம் நமது நாளையே மலர்த்தி விடுகிறது. ஒருவனுக்கு ஒரு வார்த்தை அல்லது உரையாடல் எவ்வளவு நம்பிக்கையை கொடுக்கிறதோ, அதே மாதிரி, நட்பும் பிரியமும் [வாஞ்சையும்] அது நிகழும் தருணங்களின் மேல் மகத்தான உண்மையோடு இருக்கின்றன. அந்த உண்மையிலேயே என் வாழ்க்கை அன்றில் இருந்து மலரத் தொடங்கியது.     அதன் விளைவு, ஒரு வார இறுதியில், 1977 ஆகஸ்ட் 13  சனிக்  கிழமை, டயாணி பெர்னான்டோபுள்ளே  என்ற பவளக்கொடியுடன் நான் பவளப் பாறைகளுக்கு சிறப்பு பெற்ற,  காலியிலிருந்து கிட்டத்தட்ட 17 கி.மீ தொலைவில் அமைந்துள்ள, இக்கடுவை (ஹிக்கடுவை) என்ற கடற்கரை நகரம் போனோம். அங்கு எம்மை தெரிந்தவர்கள் எவருமே இல்லை. அது எமக்கு ஒரு சுதந்திரம் தந்தது போல இருந்தது.     "வட்டநிலா அவள் முகத்தில் ஒளிர  கருங்கூந்தல் மேகம் போல் ஆட     ஒட்டியிருந்த என் மனமும் உருக  விழிகள் இரண்டும் அம்பு வீச   மெல்லிய இடை கைகள் வருட   கொஞ்சி பேசி இழுத்து அணைக்க   கச்சு அடர்ந்திருக்கும் தனபாரம்  தொட்டு என்னை வருத்தி சென்றது!"       முதல் முதல் இருவரும் எம்மை அறியாமலே முத்தம் பரிமாறினோம். அப்ப எமக்கு தெரியா இதுவே முதலும் கடைசியும் என்று. ஆமாம். 1977 சூலை 21 இல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில்  தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினர்கள், 23 இடங்களில் போட்டியிட்டு 18 இடங்களில்  வெற்றி பெற்று, நாடாளுமன்றத்தில் இரண்டாவது அதிகப்படியான உறுப்பினர்களைக் கொண்ட பெரிய கட்சியாக வந்து, அதன் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் முதல் முதல் தமிழர் ஒருவர் எதிர்க்கட்சி தலைவராக பதவியேற்றார். இது,  இந்த இனிய உறவுக்கும் ஒரு ஆப்பு வைக்கும் என்று கனவிலும் நான் சிந்திக்கவில்லை.  தமிழ்ப் பகுதிகளுக்கு வெளியே வாழும் இலங்கைத் தமிழருக்கு எதிராக ஆகஸ்ட் 12 , வெள்ளிக்கிழமை, வன்முறைகள் ஆரம்பித்து விட்டதாக வந்த செய்தியே அது.    நாம் உடனடியாக எமது திட்டத்தை இடை நடுவில் கைவிட்டு, எனது விடுதிக்கு திரும்பினோம். அவளிடம் அதற்கு பிறகு பேசுவதற்கும் சந்தர்ப்பம் சரிவரவில்லை. காரணம் தமிழில் கதைத்தால், அது எமக்கு மேலே வன்முறை தொடர எதுவாக போய்விடும். ஆகவே மௌனம் மட்டுமே எமக்கு இடையில் நிலவியது. அவளை அவளின் தற்காலிக வீட்டில் இறக்கி விட்டு, நான் அவசரம் அவசரமாக என் அரச விடுதியில், முக்கிய பொருட்களையும் ஆவணங்களையும் எடுத்துக் கொண்டு, எனக்கு தெரிந்த சிங்கள காவற்படை அதிகாரி வீட்டில் ஒரு சில நாள் தங்கி, பின் யாழ்ப்பாணம் புறப்பட்டேன்.    அதன் பின் நான் வெளி நாட்டில் வேலை எடுத்து, இலங்கையை விட்டே போய் விட்டேன். நான் யாழ்ப்பாணத்தில் இருந்தும் அதன் பின் வெளிநாட்டில் இருந்தும் அவளுக்கு போட்ட ஒரு கடிதத்துக்கும் பதில் வராததால், அதன் பின் அவள் நினைவுகள் மனக் கடலில் இருந்து கரை ஒதுங்கி விட்டது.    என்றாலும் அவளுக்கு என்ன நடந்தது ?, ஏன் பதில் இல்லை என இன்றும் சிலவேளை மனதை வாட்டும். அன்று நான் ஒன்றுமே கதைக்காமல் , காலத்தின் கோலத்தால் திடீரென பிரிந்தது அவசரமாக போனதால், கோபம் கொண்டாளோ நான் அறியேன்    `செல்லாமை உண்டேல் எனக்குரை மற்று நின் வல்வரவு வாழ்வார்க் குரை!’   `நீ என்னை விட்டுப் போகவில்லை என்ற நல்ல தகவலைச் சொல்வதானால் என்னிடம் இப்பவே, உடனே சொல், இல்லை போய் விட்டு விரைவில் திரும்பி விடுவேன் என்ற தகவலைச் சொல்வ தென்றால் [கடிதம் மூலமோ அல்லது வேறு வழியாகவோ] நீ வரும் வரை யார் வாழ்வார்களோ அவர்களிடம் போய்ச் சொல்! என்று தான் என் மடல்களுக்கு மறுமொழி போடவில்லையோ?, நான் அறியேன் பராபரமே !!      நன்றி    [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.