Jump to content

இலங்கைத் தூதரகம் மீது தாக்குதல்


Recommended Posts

இலங்கைத் தூதரகம் மீது தாக்குதல்

புதுடில்லி: டில்லியில் உள்ள இலங்கைத் தூதரகத்தில், அத்துமீறி நுழைந்த புதிய தமிழகம் கட்சியினர் அங்கு கல்வீசி தாக்கியதோடு, அங்கிருந்த பூந்தொட்டிகளையும் உடைத்து சேதப்படுத்தினர்.

தமிழக மீனவர்கள் மீது, இலங்கைக் கடற்படையினர் தாக்குதல் நடத்துவதைக் கண்டித்து, டாக்டர் கிருஷ்ணசாமி தலைமையிலான புதிய தமிழகம் கட்சியினர், நேற்று டில்லி ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டம் நடத்தினர். இதன்பின், மதியம் 2.30 அளவில், டில்லி சாணக் கியபுரி பகுதியில் உள்ள இலங்கைத் தூதரக அலுவலகத்திற்கு வாகனங்களில் வந்த அந்தக் கட்சியினரில் ஒரு பிரிவினர், அங்கு கல்வீசி தாக்குதல் நடத்தியதோடு, அங்கிருந்த பூந்தொட்டிகளையும் உடைத் துச் சேதப்படுத்தினர்.

அப்போது இலங்கை அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இவர்கள் நடத்திய கல்வீச்சில் தூதரக அலுவலகத்தின் கண்ணாடிகள் சில சேதம் அடைந்தன. ஒரு சில நிமிடங்களில், தாங்கள் வந்த வாகனங்களில் ஏறிச் சென்றனர். அதற்குப் பின் தான் போலீசார் வந்தனர். தூதரக அலுவலகத்திற்குள் புகுந்து, தன் கட்சியினர் தாக்குதல் நடத்திய போது, புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி, வெளியே ஒரு காரில் இருந்து அதைப் பார்த்துக் கொண்டிருந்ததாக சில தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"தூதரகத்தின் மீது நடத்தப்பட்ட இந்த வன்முறை சம்பவம் துரதிருஷ்டமானது. அதற் காக, கடும் வருத்தம் தெரிவிக்கிறோம்' என, வெளியுறவு அமைச்சக தகவல் தொடர்பாளர் விஷ்ணு பிரகாஷ் கூறியுள்ளார். "போலீசார் அங்கு குவிக் கப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என கூறினார்.

நன்றி: தினமலர்

Link to comment
Share on other sites

del1.jpg

del2.jpg

படங்கள்: தினத்தந்தி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"தூதரகத்தின் மீது நடத்தப்பட்ட இந்த வன்முறை சம்பவம் துரதிருஷ்டமானது. அதற் காக, கடும் வருத்தம் தெரிவிக்கிறோம்' என, வெளியுறவு அமைச்சக தகவல் தொடர்பாளர் விஷ்ணு பிரகாஷ் கூறியுள்ளார். "போலீசார் அங்கு குவிக் கப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என கூறினார்.

தமிழனாய் இருந்து தமிழனை எதிர்க்கும் கோஷ்டிகளுக்கு இந்த செய்தி இனிக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஈழத்தமிழர்களை சொந்த வீடுகளுக்கு அனுப்பக்கோரி புதிய தமிழகம், தவ்ஹீத் ஜமா-அத் தில்லியில் ஆர்ப்பாட்டம் சிறீலங்கா தூதரகம் மீது தாக்குதல்

ஈழத் தமிழர்கள் சொந்த வீடுகளுக்கு திரும்ப ஏற்பாடு செய்ய வலியுறுத்தி புதிய தமிழகம் மற்றும் இந்திய தவ்ஹீத் ஜமா-அத் சார்பில் தில்லியில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் கிருஷ்ணசாமி, இந்திய தவ்ஹீத் ஜமா-அத் அமைப்பின் தலைவர் எஸ்.எம். பாக்கர் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் பேசினர்.

ஈழத்தில் முள்வேலி முகாம்களில் வைக்கப்பட்டுள்ள தமிழர்களை சொந்த வீடுகளுக்குத் திரும்ப அனுமதிக்க வேண்டும், தமிழக மீனவர்களை சிறீலங்கா கடற்படையினர் சுட்டுக் கொல்வதைத் தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்த ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

அதைத் தொடர்ந்து பிரதமரின் இல்லத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த அவர்கள் முயற்சி செய்தனர். போலீஸார் தடுத்து நிறுத்தியதால் அவர்கள் கலைந்து சென்றனர்.

இவ் ஆர்ப்பாட்டம் முடிந்த சிறிது நேரத்தில் டெல்லியிலுள்ள சிறீலங்கா தூதரகம் தாக்கப்பட்டுள்ளது.

சிறீலங்கா தூதரகத்தை சிலர் தாக்கிய பொழுது புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் கிருஷ்ணசாமி வெளியில் மகிழுந்தில் உட்கார்ந்திருந்ததாக அங்கிருந்த சிலர் கூறியுள்ளார்கள்.

http://www.meenagam.org/?p=12323

Link to comment
Share on other sites

.

சிறீலங்கா தூதரகத்தை சிலர் தாக்கிய பொழுது புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் கிருஷ்ணசாமி வெளியில் மகிழுந்தில் உட்கார்ந்திருந்ததாக அங்கிருந்த சிலர் கூறியுள்ளார்கள்.

http://www.meenagam.org/?p=12323

பொலிஸ் கைது செய்வார்கள் என்ற எதிர்பார்ப்பில அவர் காரில் இருந்து இருப்பார்,ஆனால் பொலிஸ் கைது செய்யவில்லை போல கிடக்குது

கைது செய்யிருந்தால் அதை வைத்து அரசியல் நடத்தலாம் என்று நினைத்து இருக்கலாம் எல்லாம் பிழைத்து போய்விட்டது.

பெட்டர் ரை நெக்ஸ்ட் டைம்

அவராவது ஈழத்தமிழனுக்காக குரல் கொடுத்தார் ,நீர் என்ன செய்தனீர் புலத்து புண்ணாக்கு என்று யாராவது கேட்க நினத்தால் தனிமடலில் கேட்கவும் நிர்வாகத்துக்கு வேலை குறைவாக இருக்கும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய வெளியுறவுத்துறையும் பாதுகாப்புத்துறையும் பார்க்க வேண்டிய அரிய காணொளிகளை சீனா அண்மைய 60 வருட புரட்சி நாளில் வெளியிட்டிருக்கிறது. வயித்தில புளியைக் கரைத்தாலும் கட்டாயம் பார்க்க வேணும். அதில ஒரு சாம்பிள்...

http://www.youtube.com/watch?v=S3P2oBA5O8M...feature=related

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்கடை தலைவி யோனியா ......

உங்கடை சாம்பிளை பாத்து மயங்கிற ஆள் இல்லை . க்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யப்பா தலையைச் சுத்துதே இந்தியாவில காகம் பறக்கிறமாதிரி அவன் பிளேன்களைப் பறக்க விடுறான்.அந்த ரொக்கட்டில ஒன்றிரண்டை இந்தியாப் பக்கமா வச்சு வேலை செய்யுதா என்று சாம்பிளுக்கு செக் பண்ணிப் பார்த்;திருக்கலாம். இந்தியனுக்கு வயித்தைக் கலக்கியிருக்கும்.அமெரிக்காவ

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இங்கிருந்து செல்லும் சிறிய பென்சன்காரர்கள் இதனால் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதா??
    • நல்ல செயல் செய்பவர்கள் உயர்ந்த குலம் , நாசவேலை செய்பவர்கள் செயலால் தாழ்ந்த குலம் . அதைத்தான் குலவழக்கம் என்றேன் . சுமாவினை இன்னும் கேவலமாக தான் நான் சொல்வேன் , பொதுவெளி மரியாதைக்காக இத்துடன் முடிக்கிறேன் .... என் அயல் ஊர் தான் அவர், சந்து பொந்து எல்லாம் தெரியும் அவரை பற்றி. ஒரு நாகரீகத்துக்காக வேண்டாம் .
    • எனக்கு பெரேரா அண்ட் சன்ஸ் களில் நடந்ததில்லை. ஆனால் புதுக்கடையில் இரு பெண்கள், ஒருவர் மத்திய வயது இன்னொருவர் வயசாளி, சாப்பிட்டு கொண்டிருக்கும் போது வந்து கையை நீட்டுவார்கள். அசெளகரியம்தான் ஆனால் aggressive begging என சொல்லமுடியாது. அதே போல் ரோயல் பேக்கரி அடியிலும் ஒரு ஐயா நிரந்தர டியூட்டி. நிற்க, இது 90,2000,2010 களிலும் இருந்தது. எனது கேள்வி -  இப்போ கூடியுள்ளதாக உணர்கிறீர்களா? எத்தனை சதவீதத்தால்? பிகு என்னுடன் இலண்டன் - இலங்கை வந்த நண்பரை இன்று காலை கேட்டேன். 10% அளவில் கூடி உள்ளதாக அவர் நினைக்கிறார். ப் பா….பெரிய ஆள்தான் வாப்போ😀. சும்மா ஊட் போடும் ஷெய்க் கணக்கா கம கமப்பிங்க போல🤣 எத்தனை வருடம் கழித்து போகிறீர்கள் ? யாழ் களத்தில் ஒரு சிட்சுவேஷன் ரிப்போர்ட் போட்டு விடவும்🙏. இனிய பயணமாகட்டும்.
    • அப்போ  நான் எப்படியும்  தப்பிவிடுவேன் லிஸ்டில் நம்மடை  (Chanel, Dior) சரக்கு இல்லை   வரும் 24 அன்று இலங்கைக்கு 2 மாத விஜயம் யாழ்கள உறவுகள் நின்றால் சந்திக்கலாம் 
    • வணக்கம் வாத்தியார்......! ஆண் : மீனம்மா மீனம்மா கண்கள் மீனம்மா தேனம்மா தேனம்மா நாணம் ஏனம்மா சுகமான புது ராகம் உருவாகும் வேளை நாணமோ இதமாக சுகம் காண துணை வேண்டாமோ ஓஓ பெண் : சிங்கம் ஒன்று நேரில் வந்து ராஜ நடை போடுதே தங்க மகன் தேரில் வந்தால் கோடி மின்னல் சூழுதே ஆண் : முத்தை அள்ளி வீசி இங்கு வித்தை செய்யும் பூங்கொடி தத்தி தத்தி தாவி வந்து கையில் என்னை ஏந்தடி பெண் : மோகம் கொண்ட மன்மதனும் பூக்கணைகள் போடவே காயம் பட்ட காளை நெஞ்சும் காமன் கணை மூடுதே ஆண் : மந்திரங்கள் காதில் சொல்லும் இந்திரனின் ஜாலமோ சந்திரர்கள் சூரியர்கள் போவதென்ன மாயமோ பெண் : இதமாக சுகம் காண துணை நீயும் இங்கு வேண்டுமே சுகமான புது ராகம் இனி கேட்கத்தான்…. ஆண் : இட்ட அடி நோகுமம்மா பூவை அள்ளி தூவுங்கள் மொட்டு உடல் வாடுமம்மா பட்டு மெத்தை போடுங்கள் பெண் : சங்கத்தமிழ் காளை இவன் பிள்ளை தமிழ் பேசுங்கள் சந்தனத்தை தான் துடைத்து நெஞ்சில் கொஞ்சம் பூசுங்கள் ஆண் : பூஞ்சரத்தில் ஊஞ்சல் கட்டி லாலி லல்லி கூறுங்கள் நெஞ்சமென்னும் மஞ்சமதில் நான் இணைய வாழ்த்துங்கள் பெண் : பள்ளியறை நேரமிது தள்ளி நின்று பாடுங்கள் சொல்லி தர தேவை இல்லை பூங்கதவை மூடுங்கள் பெண் : சுகமான புது ராகம் உருவாகும் வேளை நாணுமே இதமாக சுகம் காண துணை வேண்டாமோ ஓஓ .......! --- மீனம்மா மீனம்மா ---
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.