Jump to content

தமிழ்நாதம் இணையத்தளம் இனி இயங்க மாட்டாது.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாதம் இணையத்தளம் இனி இயங்க மாட்டாது ,என அறிவிக்கப்பட்டுள்ளது.

தனிப்பட்ட காரணங்களுக்காக இந்த இணையத்தளம் இயங்கமாட்டாது என்பதனை அறியத்தருகின்றோம்.

This is to advise due to personal reasons this website will not be functioning anymore.

Link to comment
Share on other sites

புதினம் தமிழ்நாதம் இணையத்தளங்கள் தனிப்பட்ட காரங்களுக்காக இயங்கமாட்டாது என்று தெரிவிக்ப்பட்டுள்ளது.இது பற்றிய மேலதிக விபரங்கள் ஏதாவது யாருக்கும் தெரியுமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தனிப்பட்ட காரணமாயின் அவை தனிப்பட்டவரின் இணையத்தளங்களா? தமிழ்நாதம் அப்படியிருக்க வாய்ப்பில்லையே?நான் அறிந்த வரையில் பல இணையத்தளங்களின் தொடர்புகளைக் கொண்ட தமிழின் மிகப்பெரிய இணையத்தளங்களில் அதுவும் ஒன்று.

Link to comment
Share on other sites

தனிப்பட்ட காரணங்களுக்காக இந்த இணையத்தளம் இயங்கமாட்டாது என்பதனை அறியத்தருகின்றோம். :blink::lol::huh:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னவோ எல்லாம் நடக்குது..

Link to comment
Share on other sites

ஒரு முறை குறுக்காலபோவான், போர்ச் பற்றிய வெற்றிச் செய்திகளை நம்பி ஆரம்பிக்கப்பட்ட தமிழ் தேசிய செய்தி இணையங்கள் இனி ஒன்றொன்றாய் தன் பணியை நிறுத்தத் தொடங்கும் என்று சொல்லியிருந்தார்....அதுதான் நடக்கத் தொடங்கிவிட்டதோ தெரியவில்லை.

புதினம் போன்ற நம்பிக்கைக்குரிய இணையத்தளங்கள் நிறுத்தபடுவது தமிழ் மக்களிற்கு பாதிப்பை ஏற்படுத்ததான் போகின்றன. புதினம் போன்ற இணையத்தளங்களை நம்பி வெட்டி ஒட்டி திருட்டு வியாபாரம் செய்ய ஆரம்பிக்கப்பட்ட பல இணையத்தளங்களின் பாடுதான் இனி கஷ்டம். சொந்தமாக செய்திகளை தர வக்கில்லாத இவை இனி, பொய்ச் செய்திகளை பரபரப்பாக வெளியிட்டு, இன்னும் இன்னும் மக்களைக் குழப்ப போகின்றன..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்ப ரெண்டு புதுசா வெளிக்கிட்டிருக்கே!

புதினம் தமிழ்நாதம் இனிம எடுபடாது

மூடிட்டா புதுசுகளில வியாபாரம் துடங்க வசதிதானே!!

Link to comment
Share on other sites

கிறிக்கற் விழையாட்டுமாதிரி ( ஏதாவது பிக்சிங் மச்.) திட்டமிட்ட விழையாட்டாக இருக்குமோ???ஏனென்றால் இதே விழையாட்டை புலம்பெயர் ஊடகங்கள் பல செய்திருக்கிறார்கள்..அதனால் தான் சந்தேகம்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெற்றி மேல் வெற்றி

Link to comment
Share on other sites

இது சம்மந்தமாய் கருத்துகூற நமக்கு அறிவு + அனுபவம் போதவில்லை. காரணம்

1. இவை தமிழ் இணையங்கள்

2. இவை அரசியல் சம்மந்தமான இணையங்கள்

3. இவை தாயக போராட்டத்துடன் அன்னியோன்யமாக தொடர்புபட்ட இணையங்கள்

தனிப்பட்ட காரணங்களுக்காக இந்த இணையத்தளம் இயங்கமாட்டாது என்பதனை அறியத்தருகின்றோம். :blink::lol::huh:

யாழை மூட மோகன் பலதடவை முயற்சி செய்து கைகூடவில்ல. நாளைக்கு யாழ் மூடப்பட்டாலும் ஆச்சரியப்படுகிறதுக்கு இல்லை. தவிர, யாழுக்கு பலர் வந்தார்கள் போனார்கள். ஒருசிலர் நிலைத்து இருக்கின்றார்கள். நாமள் எந்தவகை என்று காலம்தான் பதில்சொல்ல வேணும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இரு முக்கியமான தமிழ் ஊடகங்களும் , ஒரே நேரத்தில் ஈழத்தமிழர்களை கைவிட்டு செல்வது வேதனை அளிக்கின்றது . :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இரு முக்கியமான தமிழ் ஊடகங்களும் , ஒரே நேரத்தில் ஈழத்தமிழர்களை கைவிட்டு செல்வது வேதனை அளிக்கின்றது . :lol:

இரு ஊடகங்களும் ஒருவரினால் நடாத்தப்படுகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஈழம் குறித்த செய்திகளை அதிகளவில் தாங்கி வந்த 'புதினம்','தமிழ்நாதம்', ஆகிய இணையத் தளங்கள் தமது சேவையினை நிறுத்திக் கொண்டுள்ளன. 'தனிப்பட்ட காரணங்களுக்காக இந்த இணையத்தளம் இயங்கமாட்டாது என்பதனை அறியத்தருகின்றோம்.' என்ற அறிவித்தலோடு இவ்விரு தளங்களும் தமது சேவையினை நிறுத்திக்கொண்டுள்ளன. மிக நீண்ட காலமாக ஈழச்செய்திகளை உலகெங்கிலுமுள்ள தமிழர்களுக்கு வழங்கி வந்த இணையத்தளங்களில் 'புதினம்' செய்தித் தளம் முக்கியமானதாகும். இத் தளத்தின் சேவை நிறுத்தம் குறித்த மேலதிக தகவல்கள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை.

மேலும் செய்திகளுக்கு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சில்லறை இணையத்தளங்கள் நிலைத்து இருக்க பெரிய இணையத்தளங்கள் மூடப்படுவது ஆச்சரியமளிக்கிறது?வெட்டி ஒட்டி விளையாட்டுக் காட்டினவையும் இனி மூடப்பட வேண்டியதுதான்.

மொத்தத்தில் தமிழன் ஆயுதபலமும் இல்லாமல் ஊடக பலமும் இல்லாமல் அழிய வேண்டியதுதான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கவலைப்படாதீங்க ஈழநாதம் எங்கிருந்து வந்ததோ அதேபோல அன்புச்செல்வனும் வந்திருக்கார்.

நாம்தமிழர் நெருடல் அதிர்வு எண்ணு பலதும் இருக்கு.

தொகுத்துத்தர பிரச்சாரப்பீரங்கி யாழ் இருக்கு பயமேன்? :lol:

Link to comment
Share on other sites

எனக்கு இன்று வந்த மடல் இது. என் nizhali@gmail.com எனும் முகவரிக்கு வந்தது

1. இதனை அனுப்பியவரை எனக்கு முன் பின் தெரியாது

2. இதில் இவரால் சொல்லப்படும் விடயம் உண்மையோ பொய்யோ என எனக்குத் தெரியாது

3. இதில் சொல்லபடுவன பொய்யெனில், புதினமோ அல்லது தமிழ்நாதமோ மறுப்பார்கள் என நம்புகின்றேன்

4. புதினம் போன்ற நம்பிக்கைக்குரிய இணையத்தளம் திடீரென காரணமின்றி நிறுத்தப்பட்டது தற்செயலான ஒரு விடயம் என் நான் நம்பவில்லை. அதனால் தான் இந்த மடலின் நம்பகத்தன்மை பற்றிய அச்சம் அதிகம் இருப்பினும் பிரசுரிக்கின்றேன்

4. யாழ் நிர்வாகம் இதனை விரும்பினால் நீக்கலாம்

=========== இனி மடல்=============

திரு. நிழலி அவர்களுக்கு ,தமிழ்தேசியத்தின் ஊடகமொன்று அதுவும் புலிகளின் நேரடிக்கட்டுப்பாட்டில் மே மாதம் வரை இயங்கிய ஊடகமொன்று அதற்கும் மேல் எல்லா ஊடக நிறுவனங்கள்,ஊடகவியலாளர்கள்(உள் நாட்டு மற்றும் இந்திய)தொடர்பிலும் மிகவும் எல்லா தரப்பாலும் நம்பகத்தன்மையான செய்திகளாக பரீட்சையப்பட்ட ஊடகமொன்று வெளிநாட்டில் இருந்து கொண்டு கோலோச்சும் மாவீரர்களின் அச்சுறுத்தலால் நின்று போனது என்பதே உண்மை.இது ஊடக அடக்குமுறை. இந்த சொல் தமிழ் தேசிய பரப்பில் எதிரிக்கு எதிராக சொல்லப்பட்டு வந்தது இப்போது எம்மவரை பார்த்து சொல்லவேண்டிய காலம் வந்துவிட்டது.தேனீ,அதிரடி, நெருப்பு போன்ற அதிர்வுகள் தமிழ் தேசியமென சொல்லிக்கொண்டு நெருடலாக ஊடுருவிவிட்டது.

போதாக்குறைக்கு @ தமிழ்தேசியம் @பேசும் ஊடகமும் முளைவிட்டுள்ளது.

புதினம்,தமிழ்நாதம் ஆகிய ஊடகங்களை தம் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து பொய்மைகளை கக்குவதற்கு சில தரப்பினர் எடுத்துக்கொண்ட விடாப்பிடியான அழுத்தங்கள்,மிரட்டல்கள்,துரோகிப்பட்டங்கள் எல்லாவற்றினையும் தாண்டி கடந்த 5மாதங்களாக குறித்த இணையத்தளத்தினை ஒரு மருத்துவ நிதியில் தனது உறவினருடன் வாழ்ந்து வரும் திரு.கரன் என்பவரால் முழு நேரமாக தன்னை அர்ப்பணித்து இந்த தளம் நடாத்தப்பட்டுவந்தது.

ஆனால் ஒரு சில நாட்களுக்கு முன்னர் வந்த நாடு கடந்த அரசு தொடர்பான செய்தி தொடர்பாக திரு.கரன் அவர் தங்கியிருந்த வீட்டில் இல்லாத சமயத்தில் அவரது உறவினரது வீட்டிற்கு வேண்டத்தகாத நேரத்தில் தொலைபேசி எடுத்த வீரர்கள் தமது இயக்கத்தின் கட்டுக்கோப்பு ஒழுக்கம் பற்றி மேடைக்கு மேடை கூறும் செயல்வீரர்கள் மிகமோசமான வார்த்தை பிரயோகங்களினை குறித்த வீட்டில் இருந்தவர்களுக்கு சொல்லி பயமுறுத்தியுள்ளனர்.

இதன்பின்னர் நடந்த விடயங்கள் தனிப்பட்ட காரணங்களுக்காக இதில் எழுதமுடியவில்லை.

இப்போது புதினத்துக்கும் தமிழ்நாதத்துக்கும் நடந்தது இனி வேறு ஊடகங்களுக்கும் நடக்கலாம்?

ஏனெனில் சுபவீக்கும் கஸ்பருக்கும் நடந்தது இனி நெடுமாறனுக்கும் சீமானுக்கும் நடக்கும் இதுதான் தமிழ் தேசிய அரசியல் கொள்கை.

இதை விளங்க்கிக்கொள்ளாதவரை துரோகிப்பட்டங்கள் மாறிமாறி கோலிப்பண்டிகையாக போன்று வீசி கொண்டாடப்படும்.

இதை நீங்கள் வலைப்பதிவில் போடுவீர்களானால் நீங்களும் துரோகிதான்.

நட்புடன் *****

[2:21:37 PM]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்படி மிரட்டலுக்கு பயந்து மூடுறாங்கள் என்னபதெல்லாம் ரீல்.

அப்படியானால் இதுவரை தமிழத்தேசியத்துக்கு எதிராய் இயங்கிவருகின்ற மாற்று இணையங்களை இப்படி மிரட்டி மூட முடியவில்லையா?????

புதினத்தை நடத்துபவருக்கு முன்னர் வேறுதரப்பால் பல மிரட்டல்கள் விடுக்கப்பட்டனவே அப்போது ஏன் மூடிட்டு போகவில்லை????

இப்படி மிரட்டியே தளங்களை மூட முடியுமென்றால் ஒருத்தரும் ஒரு தளமும் நடாத்த முடியாது!

உண்மையான காரணம் மூடினவங்களுக்கு மட்டும்தான் தெரியும்! (ஒருவேளை அவர்களே களைத்துப் போயிருக்கலாம் அல்லது சலித்துப் போயிருக்கலாம்!) எவ்வளவு காலம்தான் ஒரு விளம்பரம் ùட போடாமல் ஓசியில நடத்தமுடியும்! ஒருவேளை விரையில் விளம்பரங்களுடன் வேறு தளத்தில் வேறுவடிவத்தில் வரலாம்!

இதைவிட வேறொரு காரணம் ஒருவேளை தளம் ஹக் பண்ணப்பட்டும் இருக்கலாம்! ஏனென்றால் தமிழ்நாதம் முகவரி அடித்து செல்லும்போது வைரஸ் எச்சரிக்கை வருகிறது!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு இன்று வந்த மடல் இது. என் nizhali@gmail.com எனும் முகவரிக்கு வந்தது

1. இதனை அனுப்பியவரை எனக்கு முன் பின் தெரியாது

2. இதில் இவரால் சொல்லப்படும் விடயம் உண்மையோ பொய்யோ என எனக்குத் தெரியாது

3. இதில் சொல்லபடுவன பொய்யெனில், புதினமோ அல்லது தமிழ்நாதமோ மறுப்பார்கள் என நம்புகின்றேன்

4. புதினம் போன்ற நம்பிக்கைக்குரிய இணையத்தளம் திடீரென காரணமின்றி நிறுத்தப்பட்டது தற்செயலான ஒரு விடயம் என் நான் நம்பவில்லை. அதனால் தான் இந்த மடலின் நம்பகத்தன்மை பற்றிய அச்சம் அதிகம் இருப்பினும் பிரசுரிக்கின்றேன்

4. யாழ் நிர்வாகம் இதனை விரும்பினால் நீக்கலாம்

=========== இனி மடல்=============

திரு. நிழலி அவர்களுக்கு ,தமிழ்தேசியத்தின் ஊடகமொன்று அதுவும் புலிகளின் நேரடிக்கட்டுப்பாட்டில் மே மாதம் வரை இயங்கிய ஊடகமொன்று அதற்கும் மேல் எல்லா ஊடக நிறுவனங்கள்,ஊடகவியலாளர்கள்(உள் நாட்டு மற்றும் இந்திய)தொடர்பிலும் மிகவும் எல்லா தரப்பாலும் நம்பகத்தன்மையான செய்திகளாக பரீட்சையப்பட்ட ஊடகமொன்று வெளிநாட்டில் இருந்து கொண்டு கோலோச்சும் மாவீரர்களின் அச்சுறுத்தலால் நின்று போனது என்பதே உண்மை.இது ஊடக அடக்குமுறை. இந்த சொல் தமிழ் தேசிய பரப்பில் எதிரிக்கு எதிராக சொல்லப்பட்டு வந்தது இப்போது எம்மவரை பார்த்து சொல்லவேண்டிய காலம் வந்துவிட்டது.தேனீ,அதிரடி, நெருப்பு போன்ற அதிர்வுகள் தமிழ் தேசியமென சொல்லிக்கொண்டு நெருடலாக ஊடுருவிவிட்டது.

போதாக்குறைக்கு @ தமிழ்தேசியம் @பேசும் ஊடகமும் முளைவிட்டுள்ளது.

புதினம்,தமிழ்நாதம் ஆகிய ஊடகங்களை தம் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து பொய்மைகளை கக்குவதற்கு சில தரப்பினர் எடுத்துக்கொண்ட விடாப்பிடியான அழுத்தங்கள்,மிரட்டல்கள்,துரோகிப்பட்டங்கள் எல்லாவற்றினையும் தாண்டி கடந்த 5மாதங்களாக குறித்த இணையத்தளத்தினை ஒரு மருத்துவ நிதியில் தனது உறவினருடன் வாழ்ந்து வரும் திரு.கரன் என்பவரால் முழு நேரமாக தன்னை அர்ப்பணித்து இந்த தளம் நடாத்தப்பட்டுவந்தது.

ஆனால் ஒரு சில நாட்களுக்கு முன்னர் வந்த நாடு கடந்த அரசு தொடர்பான செய்தி தொடர்பாக திரு.கரன் அவர் தங்கியிருந்த வீட்டில் இல்லாத சமயத்தில் அவரது உறவினரது வீட்டிற்கு வேண்டத்தகாத நேரத்தில் தொலைபேசி எடுத்த வீரர்கள் தமது இயக்கத்தின் கட்டுக்கோப்பு ஒழுக்கம் பற்றி மேடைக்கு மேடை கூறும் செயல்வீரர்கள் மிகமோசமான வார்த்தை பிரயோகங்களினை குறித்த வீட்டில் இருந்தவர்களுக்கு சொல்லி பயமுறுத்தியுள்ளனர்.

இதன்பின்னர் நடந்த விடயங்கள் தனிப்பட்ட காரணங்களுக்காக இதில் எழுதமுடியவில்லை.

இப்போது புதினத்துக்கும் தமிழ்நாதத்துக்கும் நடந்தது இனி வேறு ஊடகங்களுக்கும் நடக்கலாம்?

ஏனெனில் சுபவீக்கும் கஸ்பருக்கும் நடந்தது இனி நெடுமாறனுக்கும் சீமானுக்கும் நடக்கும் இதுதான் தமிழ் தேசிய அரசியல் கொள்கை.

இதை விளங்க்கிக்கொள்ளாதவரை துரோகிப்பட்டங்கள் மாறிமாறி கோலிப்பண்டிகையாக போன்று வீசி கொண்டாடப்படும்.

இதை நீங்கள் வலைப்பதிவில் போடுவீர்களானால் நீங்களும் துரோகிதான்.

நட்புடன் *****

[2:21:37 PM]

நீங்கள் இதை போடுவிங்கள் எண்டே உங்களுக்கு அனுப்பியிருக்கினம் போல

இப்படி மிரட்டலுக்கு பயந்து மூடுறாங்கள் என்னபதெல்லாம் ரீல்.

அப்படியானால் இதுவரை தமிழத்தேசியத்துக்கு எதிராய் இயங்கிவருகின்ற மாற்று இணையங்களை இப்படி மிரட்டி மூட முடியவில்லையா?????

புதினத்தை நடத்துபவருக்கு முன்னர் வேறுதரப்பால் பல மிரட்டல்கள் விடுக்கப்பட்டனவே அப்போது ஏன் மூடிட்டு போகவில்லை????

இப்படி மிரட்டியே தளங்களை மூட முடியுமென்றால் ஒருத்தரும் ஒரு தளமும் நடாத்த முடியாது!

உண்மையான காரணம் மூடினவங்களுக்கு மட்டும்தான் தெரியும்! (ஒருவேளை அவர்களே களைத்துப் போயிருக்கலாம் அல்லது சலித்துப் போயிருக்கலாம்!) எவ்வளவு காலம்தான் ஒரு விளம்பரம் ùட போடாமல் ஓசியில நடத்தமுடியும்! ஒருவேளை விரையில் விளம்பரங்களுடன் வேறு தளத்தில் வேறுவடிவத்தில் வரலாம்!

இதைவிட வேறொரு காரணம் ஒருவேளை தளம் ஹக் பண்ணப்பட்டும் இருக்கலாம்! ஏனென்றால் தமிழ்நாதம் முகவரி அடித்து செல்லும்போது வைரஸ் எச்சரிக்கை வருகிறது!!

ஒரு மாதகாலத்துக்கு முன்தான் இந்த பிரச்சனை இருந்தது

Link to comment
Share on other sites

எனக்கு இன்று வந்த மடல் இது. என் nizhali@gmail.com எனும் முகவரிக்கு வந்தது

1. இதனை அனுப்பியவரை எனக்கு முன் பின் தெரியாது

2. இதில் இவரால் சொல்லப்படும் விடயம் உண்மையோ பொய்யோ என எனக்குத் தெரியாது

3. இதில் சொல்லபடுவன பொய்யெனில், புதினமோ அல்லது தமிழ்நாதமோ மறுப்பார்கள் என நம்புகின்றேன்

4. புதினம் போன்ற நம்பிக்கைக்குரிய இணையத்தளம் திடீரென காரணமின்றி நிறுத்தப்பட்டது தற்செயலான ஒரு விடயம் என் நான் நம்பவில்லை. அதனால் தான் இந்த மடலின் நம்பகத்தன்மை பற்றிய அச்சம் அதிகம் இருப்பினும் பிரசுரிக்கின்றேன்

4. யாழ் நிர்வாகம் இதனை விரும்பினால் நீக்கலாம்

=========== இனி மடல்=============

திரு. நிழலி அவர்களுக்கு ,தமிழ்தேசியத்தின் ஊடகமொன்று அதுவும் புலிகளின் நேரடிக்கட்டுப்பாட்டில் மே மாதம் வரை இயங்கிய ஊடகமொன்று அதற்கும் மேல் எல்லா ஊடக நிறுவனங்கள்,ஊடகவியலாளர்கள்(உள் நாட்டு மற்றும் இந்திய)தொடர்பிலும் மிகவும் எல்லா தரப்பாலும் நம்பகத்தன்மையான செய்திகளாக பரீட்சையப்பட்ட ஊடகமொன்று வெளிநாட்டில் இருந்து கொண்டு கோலோச்சும் மாவீரர்களின் அச்சுறுத்தலால் நின்று போனது என்பதே உண்மை.இது ஊடக அடக்குமுறை. இந்த சொல் தமிழ் தேசிய பரப்பில் எதிரிக்கு எதிராக சொல்லப்பட்டு வந்தது இப்போது எம்மவரை பார்த்து சொல்லவேண்டிய காலம் வந்துவிட்டது.தேனீ,அதிரடி, நெருப்பு போன்ற அதிர்வுகள் தமிழ் தேசியமென சொல்லிக்கொண்டு நெருடலாக ஊடுருவிவிட்டது.

போதாக்குறைக்கு @ தமிழ்தேசியம் @பேசும் ஊடகமும் முளைவிட்டுள்ளது.

புதினம்,தமிழ்நாதம் ஆகிய ஊடகங்களை தம் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து பொய்மைகளை கக்குவதற்கு சில தரப்பினர் எடுத்துக்கொண்ட விடாப்பிடியான அழுத்தங்கள்,மிரட்டல்கள்,துரோகிப்பட்டங்கள் எல்லாவற்றினையும் தாண்டி கடந்த 5மாதங்களாக குறித்த இணையத்தளத்தினை ஒரு மருத்துவ நிதியில் தனது உறவினருடன் வாழ்ந்து வரும் திரு.கரன் என்பவரால் முழு நேரமாக தன்னை அர்ப்பணித்து இந்த தளம் நடாத்தப்பட்டுவந்தது.

ஆனால் ஒரு சில நாட்களுக்கு முன்னர் வந்த நாடு கடந்த அரசு தொடர்பான செய்தி தொடர்பாக திரு.கரன் அவர் தங்கியிருந்த வீட்டில் இல்லாத சமயத்தில் அவரது உறவினரது வீட்டிற்கு வேண்டத்தகாத நேரத்தில் தொலைபேசி எடுத்த வீரர்கள் தமது இயக்கத்தின் கட்டுக்கோப்பு ஒழுக்கம் பற்றி மேடைக்கு மேடை கூறும் செயல்வீரர்கள் மிகமோசமான வார்த்தை பிரயோகங்களினை குறித்த வீட்டில் இருந்தவர்களுக்கு சொல்லி பயமுறுத்தியுள்ளனர்.

இதன்பின்னர் நடந்த விடயங்கள் தனிப்பட்ட காரணங்களுக்காக இதில் எழுதமுடியவில்லை.

இப்போது புதினத்துக்கும் தமிழ்நாதத்துக்கும் நடந்தது இனி வேறு ஊடகங்களுக்கும் நடக்கலாம்?

ஏனெனில் சுபவீக்கும் கஸ்பருக்கும் நடந்தது இனி நெடுமாறனுக்கும் சீமானுக்கும் நடக்கும் இதுதான் தமிழ் தேசிய அரசியல் கொள்கை.

இதை விளங்க்கிக்கொள்ளாதவரை துரோகிப்பட்டங்கள் மாறிமாறி கோலிப்பண்டிகையாக போன்று வீசி கொண்டாடப்படும்.

இதை நீங்கள் வலைப்பதிவில் போடுவீர்களானால் நீங்களும் துரோகிதான்.

நட்புடன் *****

[2:21:37 PM]

இதில் உண்மையும் கலந்து இருப்பதாகவே உணருகின்றேன்.

காரணம்: மேற்குறிப்பிட்ட வெளிநாட்டு மா வீரர்கள் இதுவரை யாரும் தன்னலமற்று மக்கள் முன் நின்று தலைவர் வழியில் அதே சிந்தனையுடன், அர்ப்பணிப்புடன் பணி புரிவோம் என்று மாசற்று நின்றதில்லை நிற்க்கவேண்டும் என்பது ஆவல்...

தமிழகத்தில் எப்படி ஒரு தலைமை வழிகாட்டி உருவாக இயலுமோ அப்படி புலம் பெயர்ந்த நாடுகளில் இயலவில்லை, இயலவும் விடமாட்டார்கள்...அடக்கும் / தட்டிக்கழிக்கும் தன்மைதான் தெரிகிறது, இவர்கள் ஏன் அய்யா நெடுமாறனுடன் சந்தித்து கலந்துரையாடல் செய்வதில்லை? அவர் என்ன ஆதாயம் தேடும் அரசியல்வாதியா?

Link to comment
Share on other sites

தமிழகத்தில் எப்படி ஒரு தலைமை வழிகாட்டி உருவாக இயலுமோ அப்படி புலம் பெயர்ந்த நாடுகளில் இயலவில்லை, இயலவும் விடமாட்டார்கள்...அடக்கும் / தட்டிக்கழிக்கும் தன்மைதான் தெரிகிறது, இவர்கள் ஏன் அய்யா நெடுமாறனுடன் சந்தித்து கலந்துரையாடல் செய்வதில்லை? அவர் என்ன ஆதாயம் தேடும் அரசியல்வாதியா?

விளங்கவில்லை.... :)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கலாயோகி ஆனந்த குமாரசுவாமி பற்றி சில வரிகள் எழுத வேண்டும் என்று நினைத்திருந்து, மறந்துவிட்டேன். நீங்கள் ஞாபகப்படுத்தி விட்டீர்கள்.........👍
    • IBC தமிழ் நேர்காணல். Sharmila Vinothini Thirunavukarasu மிகவும் நேர்த்தியான நேர்காணலுக்கு நன்றி. #நீ_கொன்ற_எதிரி_நான்_தான்_தோழா புத்தகம் பற்றிய உரையாடலின் நடுவே கேட்கப்பட்ட ஒருசில பிற கேள்விகளுக்கும் எனக்கு தெரிந்த பதில்களை வழங்கினேன் - நன்றி IBCTamil.com   தியா - காண்டீபன்    
    • 🤣.... இது தானே அவர்களின் வழக்கம். டெய்லி மிர்ரர் அற்புதமான கார்ட்டூன்களை தொடர்ந்து போட்டுக் கொண்டு வருகின்றது.....👍
    • இப்படியான செய்திகளை நாம்தமிழர் செய்கிறார்கள் மற்றக் கட்சிகள் செய்வதில்லை என்று நினைப்பது போல் தெரிகிறது.இந்தியா இப்படியே ஒரேநாடாக நீண்டகாலத்துக்கு இருக்கும் என்றுநினைக்காதீர்கள்.இந்தியா பல தேசங்கள் இணைந்த ஒரு கூட்டு ஒருநாள் இந்தியா சோவியத் யூனியன் உடைந்தது போல் உடையும் இப்பொழுத இந்தியாவின் வளர்ச்சி பெற்ற மாநிலங்கள் மகன் இந்தியாவிலேயே இருக்கின்றன.அப்படி உடையும் நிலையில் தமிழருக்கு உலகில் 2 நாடுகள் இருக்கும்.   சொல்வது ஒன்று செய்வது ஒன்று சீமான் கட்சியை விட மற்றைய கட்சிகளில் தாராளமாக உண்டு.பெண்களுக்கு சம் பிரதிநிதித்துவம் ,அனைத்துச் சாதியினருக்கும் வேட்பாளர் தெரிவில் பிரதிநித்துவம் போன்ற நல்ல விடயங்களை கணக்கில் எடுங்கள் குணம் நாடிக் குறமும்நாடி அவற்றுள் மிகைநாடி மிக்க கொளல்    
    • அவள் ஒருநாள் வீதியோரம் கூடை நிறைந்த கடவுளர்களை கூவிக் கூவி விற்றுக்கொண்டிருந்தாள்   போவோர் வருவோரிடம் 'கடவுள் விற்பனைக்கு' என்று கத்திச் சொன்னாள்   அவள் சொன்னதை யாரும் கவனித்ததாகத் தெரியவில்லை   பிள்ளை பாலுக்கு அழுதது கடவுளர்களின் சுமை அவளின் தலையை அழுத்தியது   'கடவுள் விற்பனைக்கு' அவள் முகம் நிறைந்த புன்னகையுடன் மீண்டும் கூவினாள்   கடவுள் மீது விருப்புற்ற பலரால் கடவுள் அன்று பேரம் பேசப்பட்டார்   அந்நாளின் முடிவில் அவளின் வேண்டுதலை ஏற்றுக் கடவுளர்கள் அனைவரும் விலை போயினர்     தியா - காண்டீபன் மார்ச் 29, 2024 காலை 7:20
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.