Jump to content

துயர் வெளியில் தனித்தவள்


Recommended Posts

LOL :lol::o:D:lol:

மன்னிக்கவும் சிரிப்பை கட்டுப்படுத்த முடியவில்லை.

ஓம் பொறுப்பாசிரியர் அவர்களே இது பீபீசியில் வந்து முகட்டைப்பாத்தமாதிரியிருக்கெல்லோ. மாயாவின் மார்புக்கால் தெரிந்தது துயர் வெளியில் தனித்தவளுக்கள்ளாலும் தெரிகிறது. முகட்டைப் பார்த்த கண்ணை இந்தக் கதையின் நாயகியின் மார்புக்குள் தேடுங்கள்.

சிரிப்பு கட்டுப்பாட்டுக்கு வரும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாந்தியக்காவும் இப்ப துயர்வெளியில தனிச்சு நிண்டுகொண்டிருக்கிறா போலக் கிடக்கு. எல்லாம் அவனுக்கே வெளிச்சம்.

Link to comment
Share on other sites

நெடுங்கதை வாசிக்க நேரம் கிடைக்கும் போது படிப்போம் என இருந்தேன் பிறகு கதையைக் காணவில்லை. இன்று பொறுமையாக வாசிக்கமுடிந்தது. கதையில் சொல்லப்பட்டுள்ள சம்பவங்கள் எங்கள் சகொதரர்களின் கண்ணீரைச் சொல்லுகிறது. எங்களால் நினைத்துப்பாக்க முடியாதமாதிரி எல்லாம் நடந்துவிட்டது. எனது போராட்டகாலத்து அனுபவங்களில் சந்தித்த பலர் இன்று வதமுகாங்களில் வாடுகிறார்கள். அவர்களுக்கு எதுவும் செய்ய முடியாத நிலையில் நானும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனது போராட்டகாலத்து அனுபவங்களில் சந்தித்த பலர் இன்று வதமுகாங்களில் வாடுகிறார்கள். அவர்களுக்கு எதுவும் செய்ய முடியாத நிலையில் நானும்.

சாந்தியக்காவுக்கு தனிமடல் போடுங்கள்

நல்லது எவர் செய்தாலும் வரவேற்போம்

கரம் கொடுப்போம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தடுப்பு முகாம்களில் இருக்கும் போராளிகள் பலரின் மனைவிமார் பிள்ளைகள் ஆதரவற்றுத் தனித்துள்ளார்கள்.இவர்களில் பலர் முகாமுக்கு வெளியில் வந்து பிள்ளகைளுடன் அல்லலுறுகின்றார்கள். 4பெண்கள் 4இ5இ2 பிள்ளைகள் உள்ளவர்கள். தற்கொலை செய்யும் நிலையில் இருக்கிறார்கள். பிள்ளைகளின் வாழ்வு தடுப்புமுகாமில் இருக்கும் தம் போராளிக்கணவர்களை வெளியில் எடுக்க முடியாத நிலையில் மிகுந்த அவலத்துக்குள் உள்ளார்கள்.

இவர்களில் சிலர் தையல் தெரிந்தவர்கள். இவர்களுக்கு சுயதொழில் ஊக்குவிப்பாக தையல் மெசின் மற்றும் கோழி வளர்ப்புக்கான வசதிகளைச் செய்து கொடுக்க முயற்சிகளை மேற்கொள்கிறோம். தங்களைக் காப்பாற்றிக்கொள்ள அவர்களுக்கான சிறு உதவியாக இதனைச் செய்ய முடிவுசெய்துள்ளது நேசக்கரம்.

பெரிய தொகையில் அல்ல 1யூரோவானாலும் உங்களால் முடிந்த உதவிகளைச் செய்ய முடிந்தவர்கள் தொடர்பு கொள்ளுங்கள்.

5பிள்ளைகளையும் போராட்டத்திற்குக் கொடுத்துவிட்டுத் தனித்த ஒரு அம்மாவும் அப்பாவும் (65வயது தாண்டியவர்கள்) இருக்கிறார்கள். அவர்களுக்கு உதவியென்று சொல்லவோ செய்யவோ யாருமின்றித் தவிக்கிறார்கள். அந்தத்தந்தைக்கு ஒரு கால் இழுத்துவிட்டது கடந்த பத்து நாட்களாக மருத்துவமனையில் இருந்து வெளியேறியுள்ளார். அந்தஅம்மாவும் நோயாளி ஆனால் தனது வயோதிபக்கணவரையும் கவனித்து தன்னையும் கவனிக்கும் நிலையில் உள்ளார். இவர்களுக்கு தங்குமிட வசதியும் தற்போதைய தேவைக்கான சிறு உதவியும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. இந்தப் பெற்றோருக்கு நிரந்தர வருவாய்க்கான ஏற்பாடு ஏதாவது ஏற்படுத்திக் கொடுக்க வேண்டிய நிலமையுள்ளது.

நல்மனம் படைத்தோர் யாராவது உதவ முடிந்தவர்கள் தொடர்பு கொள்ளுங்கள்.

rameshsanthi@gmail.com

http://www.yarl.com/forum3/index.php?showtopic=67195&pid=557228&st=0&#entry557228

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.