Jump to content

நமது வ.ஐ.ச ஜெயபாலன் நடிக்கும் சினிமா பற்றியது


Recommended Posts

மனசைவிட்டுப் போகாத மதுர வெயில்

இந்தப் பேட்டியி்னை பிரசுரிப்பதன் காரணம் இறுதியில் நமது வ.ஐ.ச ஜெயபாலன் பற்றியும் இருக்கு...

p24a.jpg

''சென்னைக்கு வந்து ஃபுல் ஏ.சி. போட்டு உட்கார்ந்து நாலு நாள் ஆச்சு. இன்னும் மனசைவிட்டு மதுர வெயில் போகலீங்க!'' - 'பொல்லாதவன்' படத்தில் அதிரும் சென்னையின் ஆக்ஸிலேட்டரை முடுக்கியவர் 'ஆடுகளம்' மூலம் மதுரைச் சேவலைச் சிலிர்க்கவிடுகிறார் வெற்றிமாறன்.

''ஆடுகளம்கிற டைட்டிலே உங்களுக்குக் கதை சொல்லும். உண்மையான வீரனுக்கு ஜெயிக்கிறதும் தோற்பதும் முக்கியம் இல்லை. அவனுக்குத் தகுதியான ஆடுகளம் வேணும். தகுதியான எதிரி வேணும். கால்ல கத்தியைக் கட்டிட்டா, சாவுக்குக்கூட தகுதியா மாறணும். அப்படி ஒரு வீரத்தோட ஆடுகளம் இது.''

''இன்னும் கொஞ்சம் கதைக்கு உள்ளே வாங்களேன்...''

''இப்படி ஒரு கதைன்னு முடிவு ஆனதும் நான் தேர்ந்தெடுத்தது மதுரை. ஆனா, அந்த ஊரை, போக வர ரயிலில் பார்த்ததோடு சரி. கதை பண்ண அது மட்டும் பத்தாது. அந்த நகரத்தோட பாரம்பரியம், மொழி, வீரம் எல்லாம் உண்மையா வேணும். மதுரையோட ஒவ்வொரு முக்கியமான வீதியும் படத்தின் சம்பவங்கள் நடைபெறுகிற இடங்களா வருது. இதை ஒரு தனிமனிதனின் கதைன்னு சொல்றதைவிட, ஒரு சமூகத்தைச் சேர்ந்த இரண்டு தலைமுறையின் கதைன்னு சொல்லலாம். எனக்கென்னமோ, நல்லதும் கெட்டதும் மனிதர்களைச் சார்ந்ததில்லை. அது சூழ்நிலையையும் இடத்தையும் பொறுத்ததுன்னு தோணுது. ஒருநாள் நல்லவனா இருக்கிறதும், மறுநாள் அவனே வேற ஆளா மாறுறதும் கண்ணுக்கு முன்னாடி நடந்துக்கிட்டே இருக்கு. நாம ஒவ்வொருத்தரும் பேலன்ஸ் பண்ணி அமைதியாகப் போவதை வாழ்க்கைன்னு நினைக்கிறோம். இது எவ்வளவு தூரம் சரின்னு இந்த ஆடுகளத்தில் சரிபார்த்திருக்கோம்.''

p25b.jpg

''தனுசுக்குச் சடாரென்று பெரிய திருப்பம் கொடுத்தவர் நீங்கள். இப்ப அவரைப் பார்க்க எப்படித் தோணுது?''

''இன்னிக்கு இருக்கிற அருமையான மிகச் சில நடிகர்களில் தனுசும் ஒருத்தர். பளிச்னு பெரும் வீச்சா வந்துட்டிருக்கிற ஆடுகளம், அவருக்கு இன்னும் பெரிய அடையாளத்தைக் கொடுக்கும். நான் பார்த்த அதே தெளிவான தனுஷ்தான். இப்போ வித்தியாசப்பட்டுத் தெரிவது அவரது மனோதைரியம். எந்தப் பாத்திரத்தையும் உள்வாங்கி அதை அதுவாகவே வெளிப்படுத்த முடிகிற அசாத்தியத் திறமை. வெறும் லுங்கி, அடிக்கிற கலர்களில் சட்டை இப்படித்தான் வருவார். ஒரு ஸீனில் பேன்ட் போட்டுக்கிட்டு வருகிற மாதிரி காட்சி வந்திருச்சு. அதில் அவரைப் பார்க்க எங்களுக்குச் சிரிப்பே வந்திருச்சு. இத்தனை மாசமா மதுரைப் புழுதியும் வெயிலும் சுமந்து தனுஷ் ஒரு தினுசாவே இருக்கார். எப்படி அடுத்த படத்துக்குப் போறதுன்னு எங்களையே கேட்கிறார்.''

''ஹீரோயினைத் தேட சிரமப்பட்டீங்களே?''

''ஆமா, மதுரை ரயில்வே காலனியில முன்னெல்லாம் ஆங்கிலோ இந்தியன்ஸ் அதிகமா இருப்பாங்க. தனுஷ் வாழ்க்கையில் அவங்க வர்ற ரோல் முக்கியமானது. அதுக்காக ரொம்பச் சிரமப்பட்டு, ரொம்ப நாள் காத்திருந்து, மும்பையில் இருந்து தாப்ஸிங்கிற புதுப் பொண்ணைப் பிடிச்சோம். கதைக்குத் தேவையான நடிப்பு, இயல்பான முக பாவனைகள்னு புதுப்பொண்ணு பின்னுது. இவ்வளவு நாள் காத்திருந்தது தப்பில்லைன்னு தோண்ற அளவுக்கு நல்லாப் பண்ணியிருக்காங்க. ஆடுகளத்தில் அவங்க பங்கு நிச்சயம் சுவாரஸ்யமா இருக்கும்.''

''கவிஞர் வ.ஐ.ச. ஜெயபாலன் ஆடுகளத்தில் பெரிய மீசை வெச்சு கெட்டப்பில் பயமுறுத்துறாரே...''

''தனுசுக்கு இணையாகப் பெரும் பாத்திரத்தில் தோன்றுகிறார் ஜெயபாலன். ஆரம்பத்திலேயே அவர்கிட்டே, 'ஐயா, உங்க புலமை எல்லாம் எனக்குத் தெரியும். ஆனா, இது சினிமா. இதில் எனக்கு உடன்பட்டே ஆகணும். எனக்கு வேண்டி யதைக் கொடுக்க ஆயத்தமா இருங்க!'ன்னு சொன்னேன். அவர், தான் பெரிய கவிஞர்ங்கிற கம்பீரத்தைக் கழட்டி வெச்சிட்டு இதில் வாழ்ந்திருக்கிறார். இனிமேல் அவரை ஜெயபாலன்னு சொன்னா வெளியே தெரியாது. பேட்டைக்காரன் பெரியசாமிதான் இனி அவருக்குப் பெயர்!''

நன்றி விகடன்

இன்னும் சில படங்கள்

aadukalammoviepictures2.jpg

aadukalammoviepictures2.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மனசைவிட்டுப் போகாத மதுர வெயில்

இந்தப் பேட்டியி்னை பிரசுரிப்பதன் காரணம் இறுதியில் நமது வ.ஐ.ச ஜெயபாலன் பற்றியும் இருக்கு...

p24a.jpg

-----

-----

''கவிஞர் வ.ஐ.ச. ஜெயபாலன் ஆடுகளத்தில் பெரிய மீசை வெச்சு கெட்டப்பில் பயமுறுத்துறாரே...''

''தனுசுக்கு இணையாகப் பெரும் பாத்திரத்தில் தோன்றுகிறார் ஜெயபாலன். ஆரம்பத்திலேயே அவர்கிட்டே, 'ஐயா, உங்க புலமை எல்லாம் எனக்குத் தெரியும். ஆனா, இது சினிமா. இதில் எனக்கு உடன்பட்டே ஆகணும். எனக்கு வேண்டி யதைக் கொடுக்க ஆயத்தமா இருங்க!'ன்னு சொன்னேன். அவர், தான் பெரிய கவிஞர்ங்கிற கம்பீரத்தைக் கழட்டி வெச்சிட்டு இதில் வாழ்ந்திருக்கிறார். இனிமேல் அவரை ஜெயபாலன்னு சொன்னா வெளியே தெரியாது. பேட்டைக்காரன் பெரியசாமிதான் இனி அவருக்குப் பெயர்!''

நன்றி விகடன்

இன்னும் சில படங்கள்

aadukalammoviepictures2.jpg

aadukalammoviepictures2.jpg

பல மாதங்களுக்கு முன்பு யாழ் களத்தில் , நம்ம வ.ஐ.ச. ஜெயபாலன் சினிமாவில் தனுசுக்கு அப்பாவாக நடிக்கின்றார் என்று செய்தி வந்த போது ...... அதனை பொயட் மறுக்கவுமில்லை , ஆமோதிக்கவும் இல்லை.

இப்போது தான் தெரிகின்றது சினிமா தயாரிக்கும் போது அதனை பற்றிய இரகசியங்களை வெளியே விடக்கூடாது என்று எழுதப்படாத சட்டத்தை பொயற் பின்பற்றியிருக்கின்றார் என்று.

எமது யாழ் கள உறவு ஒருவர் சினிமாவில் நடித்திருப்பது மிகவும் மகிழ்ச்சியான செய்தி.

பேட்டைக்காரன் பெரியசாமிக்கு வாழ்த்துக்கள். :lol:

Link to comment
Share on other sites

எங்கட கவிஞருக்கு வெற்றிமாறனா நடிப்பு சொல்லி கொடுக்க வேணும். நோர்வெயில் நடந்த ஒரு கூட்டத்தில் பாலசிங்கம் சொன்னதை பார்த்தால் தெரியுமே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

.

வேட்டைக்காரன் பெரியசாமிக்கு வாழ்த்துக்கள். :lol:

கவிஞர் ஜெயபாலன் நடிக்கும் வேடம் பேட்டைக்காரன் பெரியசாமி. வேட்டைக்காரன் அல்ல.வேட்டைக்காரன் படத்தை தமிழனக் கொலைக்கு உடந்தையாக இருக்கும் காங்கிரசு அரசின் மத்திய அமைச்சரவையில் இருக்கும் சன் தொலைக்காட்சி மாறனினால் தயாரிக்கப்படுகிறது.

Link to comment
Share on other sites

கவிஞர் ஜெயபாலனுக்கு வாழ்த்துகள்.

வாழ்பவனை வாழ்த்தி தமிழனுக்கு பழக்கமில்லை.

செத்தவனை வைத்து பணம் பார்த்து பழக்கப்பட்டதன் வழக்கம்.

வேடம் , நல்ல கெட்டப்பில் இருக்கிறது. அசத்துவீர்கள் என நம்புகிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவிஞர் ஜெயபாலன் நடிக்கும் வேடம் பேட்டைக்காரன் பெரியசாமி. வேட்டைக்காரன் அல்ல.வேட்டைக்காரன் படத்தை தமிழனக் கொலைக்கு உடந்தையாக இருக்கும் காங்கிரசு அரசின் மத்திய அமைச்சரவையில் இருக்கும் சன் தொலைக்காட்சி மாறனினால் தயாரிக்கப்படுகிறது.

தவறை சுட்டிக்காட்டியமைக்கு நன்றி கந்தப்பு.இப்போ திருத்தி விட்டேன்.

Link to comment
Share on other sites

கவிஞர் ஐயாவுக்கு வாழ்த்துக்கள்..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் கவிஞருக்கு

படம் வெற்றி பெறவும் வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பேட்டைக்காரன் பெரிய சாமிக்கு ( ஜெயபாலன்) வாழ்த்துக்கள்.

வெற்றியோடு மீண்டும் வருக யாழ் களத்துக்கு .

.பகிர்க உங்கள் அனுபவங்களை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பல மாதங்களுக்கு முன்பு யாழ் களத்தில் , நம்ம வ.ஐ.ச. ஜெயபாலன் சினிமாவில் தனுசுக்கு அப்பாவாக நடிக்கின்றார் என்று செய்தி வந்த போது ...... அதனை பொயட் மறுக்கவுமில்லை , ஆமோதிக்கவும் இல்லை.

இப்போது தான் தெரிகின்றது சினிமா தயாரிக்கும் போது அதனை பற்றிய இரகசியங்களை வெளியே விடக்கூடாது என்று எழுதப்படாத சட்டத்தை பொயற் பின்பற்றியிருக்கின்றார் என்று.

எமது யாழ் கள உறவு ஒருவர் சினிமாவில் நடித்திருப்பது மிகவும் மகிழ்ச்சியான செய்தி.

பேட்டைக்காரன் பெரியசாமிக்கு வாழ்த்துக்கள். :)

என்னுடைய அபிமானக்கவிஞ்ர் / என்னுடைய நண்பர் ஜெயபாலன் திரைப்படத்தில் நடித்திருப்பது அறிந்து சந்தோசமடைந்தேன்.

அவருடைய கவிதைகளைப்பற்றி சுஜதா எழுதியபின்னர்தான் என்னைப்போன்றவர்களின் பார்வை அவர் கவிதை பக்கம் திரும்பியது. அதேபோல வெற்றிமாறன் மூலம் நடிகனாக பார்க்கிறோம். வாழ்த்துக்கள் நண்பரே.

கே.எஸ்.பாலச்சந்திரன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவிஞர் ஜெயபாலனுக்கு வாழ்த்துகள்.

வாழ்பவனை வாழ்த்தி தமிழனுக்கு பழக்கமில்லை.

செத்தவனை வைத்து பணம் பார்த்து பழக்கப்பட்டதன் வழக்கம்.

வேடம் , நல்ல கெட்டப்பில் இருக்கிறது. அசத்துவீர்கள் என நம்புகிறேன்.

அது என்ன பெருந்தன்மையாய் வாழ்த்திவிட்டு பிறகு ஒரு கெட்டப்பில் ஒரு வாக்கியம்?

Link to comment
Share on other sites

அது என்ன பெருந்தன்மையாய் வாழ்த்திவிட்டு பிறகு ஒரு கெட்டப்பில் ஒரு வாக்கியம்?

:)இந்த வாக்கியம் பலரை வாழ்த்த வைத்துள்ளது? :D

Link to comment
Share on other sites

"நமது வ.ஐ.ச ஜெயபாலன்"

ஐயாவின்... கவிஞரின்... அறிமுகம் தெரியாததால்.... அதுபற்றி அறிய ஆவல் நன்றி. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
:) கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலன் அய்யாவுக்கு எனது உளம் நிறைந்த வாழ்த்துக்கள். :D
Link to comment
Share on other sites

நல் வாழ்த்துக்கள் கவிஞர் வ.ஐ.ச. ஜெயபாலன் அவர்களே . உங்கள் கலை பயணம் மேலும் வளர வாழ்த்துகிறேன்.

Link to comment
Share on other sites

ஜெயபாலன் ஐயா படம் நடிச்சு நம்மவர்கள் மூலம் பட்ட தனது கடன்சுமைகளை விரைவில் இறக்க வாழ்த்துகள்!

+++

இணைய நண்பன் உமது காணொளிகள் மூன்றையும் பார்த்து இருந்தேன். இதை இங்கு செருகாமல் தனித்திரியில் இணைச்சால் மேலும் பலர் பார்ப்பார்களே. வேரும் விழுதும் பகுதியில் இணைச்சுவிடலாமே?

டென்மார்கில் வாழும் இந்த ஈழத்து கலைஞரின் பேட்டி நன்றாக இருக்கின்றது, பல விசயங்களை தெரிஞ்சுகொண்டேன். இணைப்பிற்கு நன்றி

Link to comment
Share on other sites

வணக்கம் உறவுகளெ!!!.எனக்கு paris விடுதலை பெண் தீயில் கருகிய சுதந்திர வேட்கை திரைப்படம் இறு வெட்டு இருந்தால் தந்து உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன் :D

கடந்த சில காலமாக செய்திவீச்சு பார்வையில் ஒளிபரப்பு செய்யப்பட்டுக்கொண்டு இருந்தது ஜி.ரிவியில்

Link to comment
Share on other sites

வாழ்த்துரைத்த யாழ்க்கள தோழ தோழியருக்கும் இணைத்த நிழலிக்கும் நன்றி. நான் சினிமா தொடர்பாக ஒன்றும் எழுதுவதில்லை. காரணம் அது எனது வழ்வில் இன்னொரு Adventure. சகசப் பயணம் மட்டுமே. புலம் பெயர்ந்த சில தமிழர்கள் படப்பிடிப்பின்போது வருகை தந்திருந்தார்கள். யாழ்கள தோழர் நோர்வே வசியும் அவரது துணைவி நர்மதாவும் வருகைதந்தனர். மகிழ்ச்சியாய் இருந்தது. இனக்கொலைக்குத் துணிந்த எதிரியாலும் அந்த எதிரியையே உருவாக்கியது போன்ற எங்கள் தவறுகள் பலவற்றாலும் தோற்றும்போன தாய்மண் எரிந்த புல்வெளி மழைக்குத் துளிர்க்கிறதுபோல மீண்டும் செழிக்கும் என்கிற நம்பிக்கையை பகிர்ந்து கொள்கிறேன். மீண்டும் என் பேரன்பும் நன்றியும்.

Link to comment
Share on other sites

ஆடுகளம் படப்பிடிப்பு இந்தவாரத்துடன் முடிவடைகிறது. டிசம்பரில் தொகுப்பு முடிந்தபின்னர் patch work விட்ட தொட்ட குறைகள் செம்மைப் படுத்த படப்பிடிப்பு இருக்கலாம். இரண்டு தலை முறை நாயகர்கள் நாயகிகளைப் பற்றிய கதை. பெரும்பாலும் மாசி மாதத்தில் ஆடுகளம் வெளியாகலாம். தைமாதம் புத்தகக் கண்காட்ட்சிக்கு என்னுடைய குறுநாவல்கள் சில புத்தகமாக வெளிவருகிறது. யாழ்க் களத்தில் எனது முயற்ச்சிகள் தோற்றுப்போனாலும் எமது கலைஞர்களையும் புலம் பெயர்ந்த எமது மக்களையும் கலைஞர்களின் உழைப்பை அங்கீகரிக்கிற வகையில் இணைக்கிற பணி தோற்றுப் போகக் கூடாது. ஈழத்துக் கலைஞர்கள் சார்பாக என்னுடைய கனவை முன்னெடுத்துச் சென்று நனவாக்க யாழ்க் கள தோழ தோழியர்கள் யாராவது முன்வருவார்களா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆடுகளம் படப்பிடிப்பு இந்தவாரத்துடன் முடிவடைகிறது. டிசம்பரில் தொகுப்பு முடிந்தபின்னர் patch work விட்ட தொட்ட குறைகள் செம்மைப் படுத்த படப்பிடிப்பு இருக்கலாம். இரண்டு தலை முறை நாயகர்கள் நாயகிகளைப் பற்றிய கதை. பெரும்பாலும் மாசி மாதத்தில் ஆடுகளம் வெளியாகலாம். தைமாதம் புத்தகக் கண்காட்ட்சிக்கு என்னுடைய குறுநாவல்கள் சில புத்தகமாக வெளிவருகிறது. யாழ்க் களத்தில் எனது முயற்ச்சிகள் தோற்றுப்போனாலும் எமது கலைஞர்களையும் புலம் பெயர்ந்த எமது மக்களையும் கலைஞர்களின் உழைப்பை அங்கீகரிக்கிற வகையில் இணைக்கிற பணி தோற்றுப் போகக் கூடாது. ஈழத்துக் கலைஞர்கள் சார்பாக என்னுடைய கனவை முன்னெடுத்துச் சென்று நனவாக்க யாழ்க் கள தோழ தோழியர்கள் யாராவது முன்வருவார்களா?

தங்களின்

கனவு மெய்ப்படவேண்டும்

காரியம் கைகூட வேண்டும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.