Jump to content

யாழ் பல்கலைக்கழக மாணவர் உதவியில் மோசடியா ? செல்வாக்கா ?


Recommended Posts

யாழ் பல்கலைக்கழக மாணவர் உதவியில் மோசடியா ? செல்வாக்கா ?

போரினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களிலிருந்து பல மாணவர்கள் தமது பல்கலைக்கழக மற்றும் பாடசாலைக்கல்வியைக் கற்க முடியாத பொருளாதாரச் சிக்கலில் இருக்கிறார்கள். இந்த மாணவர்களுக்கு சில அமைப்புக்களும் பல தனிநபர்களும் அங்கங்கு உதவிக் கொண்டுமிருக்கிறார்கள்.

இத்தகைய உதவிகளை ஒரு அமைப்பின் கீழ் கொண்டு வரவேண்டுமென சில ஒன்றியங்களின் செயற்பாட்டாளர்கள் முயற்சி செய்வதும் வரவேற்கத்தக்க விடயம். ஏற்கனவே தமிழர்களுக்காக இருந்த கட்டமைப்புகள் போல ஒரு அமைப்புத்தான் இருக்க வேண்டும் அதன் ஊடாகத்தான் உதவிகள் கொடுபட வேண்டுமென்ற விதியை இனியும் நாங்கள் எழுதி வைக்க வேண்டுமா ?

ஏற்கனவே நாம் உதவவிரும்பின் அது தமிழர் புனர்வாழ்வுக் கழகம் மட்டும்தான். அதைத்தான் நாமும் எல்லாருக்கும் சிபாரிசு செய்தோம். மற்றும் எந்த நிறுவனங்களையும் நாம் வளர விடவுமில்லை வளர்க்கவுமில்லை. அதன் விளைவு இன்று தமிழர் புனர்வாழ்வுக்கழகத்தின் கையில் பலகோடிகள் இருந்தும் அது சிலரது சொத்தாகிவிட்டது. தேவையானவர்களுக்குப் பயன்படாமல் தனிச்சொத்தாக அங்குமிங்கும் அடிபாடும் இழுபாடும் நடக்கிறது.

இதுபோன்றதொரு நிலமைக்கு இட்டுச் சென்று அடுத்தும் ஒற்றை நிறுவனங்களை உருவாக்குவதை விட்டு மேலும் பல உதவும் அமையங்களை தமிழர்கள் உருவாக்குவதுதான் சிறந்தது என்பது எனது கருத்து.

இன்னும் பல உதவும் அமையங்களை அமைய ஏற்கனவே இருக்கும் அமையங்கள் வழி விடவேண்டும். ஒன்றில்லாவிடில் அடுத்த அமையத்தால் உதவிகள் சென்று கொண்டிருக்க வேண்டும். ஒரு அமைப்பால் எல்லா மாணவர்களது தேவைகளையும் பூர்த்தி செய்வது இலகுவானது அல்ல. இதை குறிப்பிட்ட சில சங்கங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

கடந்த காலங்களில் *வன்னித் தமிழ்ச் சங்கம்* கனடாவிலிருந்து யாழ் மற்றும் பிற மாவட்டங்களிலுள்ள தமிழ் மாணவர்களுக்கு உதவுகிறது. தற்போது சர்வதேச தமிழ் மாணவர் அமைப்பும் தனது உதவிகளை செய்து கொண்டிருக்கிறது. இவற்றை விடவும் தனிநபர்கள் மற்றும் சில நண்பர்கள் இணைந்தும் தேவைகளைப் பொறுத்து உதவி வருகின்றனர்.

இவற்றில் வன்னித் தமிழ்ச் சங்கம் செய்யப்படும் உதவிகள் அவர்களால் சொல்லப்பட்டது போல உண்மையில் உதவி தேவைப்படும் மாணவர்களுக்குப் போய்ச் சேரவில்லை. பல மாணவர்கள் இந்தச் சங்கத்திடம் தமது விண்ணப்பங்களை எழுதிக் கொடுத்துவிட்டு கப்பல் வருமா கப்பல் வருமா என வன்னி மக்கள் காத்திருந்தது போலக் காத்திருக்கிறார்கள்.

இப்படிக் காத்திருக்கும் மாணவர்கள் பலரிடம் ஒரு நூறு ரூபாய் கூட இல்லாத நிலையில் இந்த அமைப்பைச் சார்ந்தவர்களுடன் தொடர்பு கொள்ள தொலைபேசியெடுத்துத் தமது நிலமையை விளக்கியும் இன்னும் எதுவும் கிடைக்காத நிலமையில் இருக்கிறார்கள். இவர்களை விட இன்னும் சிலருக்கு ஒரு தரம் அல்லது இருதரத்துடன் உதவிகள் நிறுத்தப்பட்டுள்ளன. இவர்கள் உதவுவார்கள் என்று இன்னும் பலர் நம்பியிருக்க என்ன செய்வதென்று தெரியாத நிலையில் மேலும் பல மாணவர்கள் வன்னித் தமிழ்ச் சங்கத்தை நம்பியிருக்கிறார்கள்.

இதற்கான காரணம் வன்னித் தமிழ்ச் சங்கமா அல்லது வன்னித் தமிழ்ச் சங்கத்தின் உதவியைப் பங்கீடு செய்யும் பங்கு பிரிப்போரா என்பது புரியவில்லை. எதுவாயினும் இவற்றைக் கண்டறிந்து நடவடிக்கைகள் எடுப்பது வன்னிச் சங்கத்தின் பொறுப்பானவர்களின் பொறுப்பே. இத்தகைய உதவிகள் கிடைக்காமை தொடர்பாக வன்னித் தமிழ்ச் சங்கத்தின் தொடர்பாளர் ஒருவருக்கும் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆயினும் இந்தத் தவறு குறித்து வன்னித் தமிழ்ச் சங்கம் நடவடிக்கை ஏதும் எடுத்ததாகவும் தெரியவில்லை. ஆனால் எவராவது பல்கலைக்கழக மாணவர்களுக்கோ அல்லது முகாம்களிலிருந்து வெளிவந்திருக்கும் ஆதரவற்ற சிறுவர்களுக்கோ உதவிகள் கோரினால் உடனடியாக இந்தச் சங்கம் தம்முடன் இணையுங்கள் ஒரு குடையின் கீழ் இயங்குவோம் என்ற விண்ணப்பத்தை வைத்துவிடுகிறது. குறிப்பிட்ட சிலருக்கு தொடர்ந்து உதவிகள் கிடைப்பதை மட்டுப்படுத்தலாம் என்றொரு ஆலோசனையையும் வழங்குகிறார்கள். ஆனால் உதவிகள் கிடைக்கிறது என இவர்களால் அறிவிக்கப்பட்ட மாணவர்களுக்கு இவர்களால் வாக்குறுதியழிக்கப்பட்ட உதவி கிடைக்காமல் இன்னும் அவதிப்படுகிறார்கள் பலர்.

இந்த நிதிகளைப் பங்கீடு செய்து கொடுக்கும் மாணவர் பிரதிநிதிகள் மற்றும் பேராசிரியர்கள் கூட செல்வாக்குச் சார்ந்தும் முன்னுரிமை கொடுத்து உதவுவது கூட நடைபெறுகிறது.

மேமாதம் அளவில் 3யாழ் பல்கலைக்கழக மாணவர்களுக்கு உதவிகள் கோரியிருந்தேன்.

வவுனியாவில் ஒரு நண்பர் தனது அலுவலாகச் சென்ற ஓர் அலுவலகத்தில் ஒரு தாய் தனது பிள்ளைகளுக்கு உதவி கோரிய விண்ணப்பத்துடன் அங்குமிங்கும் அலைந்ததைக் கண்டார். அங்கு அவர்கள் கேட்கும் எதனையும் சரியாக புரிந்து கொள்ள முடியாத ஒரு ஏழைத்தாய் அந்தத்தாய். ஏற்கனவே தனது ஒரு பிள்ளையை மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தில் இழந்தவர். தனது மிஞ்சிய 3பிள்ளைகளுக்காக உதவிகள் கேட்டுக் கடைசி முயற்சியாக அந்த இடத்தில் வந்திருப்பதைக் கண்ணீரோடு தெரிவித்தார். அப்பிள்ளைகளுக்கு உதவி கோரிய நண்பர் அந்தத்தாயுடன் தொடர்பெடுத்துத் தந்தார் பேசுவதற்கு. அந்தத்தாயின் அழுகை இன்னும் காதுக்குள் கேட்டபடியிருக்கிறது. எத்தனை பேரிடம் தனது பிள்ளைகளுக்கு உதவும்படி அந்தத்தாய் ஏறியிறங்கியிருக்கிறாள் என்பது அந்தத்தாயின் கண்ணீரால் வெளிப்பட்டது.

ஏற்கனவே அந்தத்தாயின் பிள்ளைகள் வன்னித் தமிழ்ச் சங்கத்திடம் தமது விண்ணப்பங்களை அவர்களது தொடர்பாளர்களிடம் விண்ணப்பித்துவிட்டுக் காத்திருந்தார்கள். எதுவும் உதவி கிடைக்காத நிலையில் தன் பிள்ளைகளுக்கு ஒவ்வொருவரும் சொல்லும் அலுவலகங்களுக்கு அவர்களது விபரங்களோடு திரிந்த அம்மாவிடம் இனி யாரிடமும் அலையாதீர்கள் என அறிவித்துவிட்டு நமது நண்பர்கள் வட்டத்திற்குத் தெரிவித்தேன்.

இரு மாணவர்களுக்கு ஒருவர் உதவ முன்வந்தார். அந்த நண்பர் இதுபற்றி இந்த வன்னித் தமிழ்ச் சங்கத்திடம் கூறியிருந்தார். உடனடியாக வன்னித் தமிழ்ச் சங்கம் தம்மிடம் அந்த மாணவர்களின் விபரங்கள் வந்திருக்கிறது தாம் உதவுவதாக வாக்குறுதி தந்தார்கள். சொல்லப்பட்ட 2வாரத்தில் ஒரு மாணவருக்கு வன்னித் தமிழ்ச் சங்கத்தினால் இலங்கை ரூபாவில் பத்தாயிரம் (இரண்டு மாதங்களுக்கானது) யூன் மாதம் கிடைத்தது. ஆனால் வன்னித் தமிழ்ச் சங்கத்திலிருந்து தொடர்பு கொண்டவர் தாம் முப்பதாயிரம் ரூபாய் (ஆறு மாதங்களுக்கான தொகை) கொடுத்திருப்பதாகவும் ஏனையவர்களுக்கும் அடுத்துச் சிலவாரங்களில் உதவுவதாகத் தெரிவித்தார்கள்.

ஆனால் யூலைவரை ஏனைய இருவருக்கும் உதவிகள் கிடைக்கவில்லை. உதவிகள் சென்றடையும் என்ற நம்பிக்கையில் நாமும் அதனை அப்படியே விட்டுவிட்டோம். ஆனால் ஒரு மாணவருக்குக் கொடுக்கப்பட்ட பத்தாயிரம் ரூபாவைத் தவிர வன்னித் தமிழ்ச் சங்கத்தால் இதுவரையும் எந்தவித நிதியும் கொடுக்கப்படவில்லை.

எதிர்பாராமல் செப்டெம்பர் இந்த மாணவர்களது தாயாரிடம் தொடர்பு கொண்டு உதவிகள் கிடைக்கிறதா எனக் கேட்ட போதுதான் மேற் குறிப்பிட்ட பத்தாயிரம் ரூபா மட்டும் கொடுபட்டது தெரியவந்தது. உதவி கிடைக்கப்பெற்ற மாணவனோடு தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்ட போதுதான் தெரிந்தது அவரது சகோதரர்களும் இன்னும் பலரும் வன்னித் தமிழ்ச் சங்கத்தை நம்பிக் காத்துக் கொண்டிருப்பது.

இதன் பின்னர் மீண்டும் உதவி கோரி நான் இணையத்தில் போட்டபோது இந்தச் சங்கம் வாயும் திறக்கவில்லை. இணையத்தில் செய்தியைப் பார்த்துவிட்டுப் பல மின்னஞ்சல் உதவ விரும்பம் தெரிவித்து வந்தது. ஆனால் சிலர் உதவத் தயாராக இருப்பதாயும் அவர்களது கணக்கிலக்கத்தையும் கேட்டார்கள். 3மாணவர்களுக்குமான 4மாதங்களுக்குமான உதவிகள் ஒக்ரோபர் 6ம் திகதி கிடைக்கும் வகை செய்துள்ளார்கள்.

இந்த மாணவர்கள் ஊடாக மேலும் சிலருடன் பேசும் வாய்ப்புக் கிடைத்தது. அவர்களிடம் தொடர்பு கொண்ட போது பலர் வன்னித் தமிழ்ச் சங்கத்திடம் உதவிக்கு விண்ணப்பித்துவிட்டு வேறு எந்த வழியையும் தேடாமல் இருக்கின்ற உண்மை புரிந்தது.

இப்படித் தொடர்பு கொண்ட ஒரு மாணவிக்கு ஒரு குடும்பத்திடம் உதவி கேட்டேன். அவர்கள் சம்மதித்தார்கள். அவர்களது உறவினரான பேராசிரியர் ஊடாக ஒரு மாதம் உதவி கிடைத்தது. மறுமாதம் உதவி போகவில்லை. காரணம் கேட்ட போது சம்பந்தப்பட்டவர்கள் தெரிவித்தார்கள். கனடா வன்னித் தமிழ்ச் சங்கத்திலிருந்து அந்த மாணவி உதவி பெறுவதாக அந்தப் பேராசிரியர் சொன்னதாக. அவர்கள் அவளுக்கான உதவியை நிறுத்திவிட்டார்கள்.

அந்த பேராசிரியர் நாம் உதவி கோரும் வரை தனது உறவினருடன் எதுவிதமான மாணவர்களுக்கான உதவிகள் தேவை பற்றி கூறவுமில்லை உதவிகள் கோரவுமில்லை. ஆனால் குறித்த மாணவிக்காக அவர்கள் அனுப்பிய பணத்தை தான் வேறு மாணவர்களுக்கு கொடுக்கப் போவதாகவும் மாணவர்களுக்கு உதவுமாறும் கோரிக்கை விட்டுள்ளார்.

அந்த மாணவியைக் குறித்த பேராசிரியரின் வீட்டிற்குச் சென்று பணத்தை வாங்கும்படி பண உதவி செய்தவர்கள் கூறியுள்ளார்கள். பேராசிரியர் அந்த மாணவியை விசாரணை செய்ய வேண்டுமாம் எங்கிருந்தாவது உதவி கிடைக்கிறதா என்பதை உறுதி செய்ய.

உண்மையிலேயே அந்த மாணவிக்கு வன்னித் தமிழ்ச் சங்கத்தால் எதுவும் கிடைக்கவில்லை. பேராசிரியரின் வீட்டுக்குப் போகாமல் இதனைத் தனது தாயாருக்குச் சொல்லி அழுதிருக்கிறாள். ஏற்கனவே குடும்பம் திக்கொன்றாய் பிரிந்த நிலையில் இருக்கும் இந்த மாணவியின் நிலைபற்றி அவளது தாயார் தொலைபேசியில் தெரிவித்திருந்தார். தற்போது அந்த மாணவிக்கு லண்டனிலிருந்து ஒருவரால் 2மாதங்களுக்கான கொடுப்பனவு கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் வவுனியா முகாம்களுக்குள்ளிருந்து வெளிவந்த பல மாணவர்கள் கடந்த 2வருடங்களாக முல்லைமாவட்டத்தில் பாடசாலை போகாது இருந்திருக்கிறார்கள். அவர்களுக்கு நமது *நேசக்கரம்* நண்பர்கள் வட்டத்தினால் கற்றலுக்கான உதவிகள் கொடுக்கப்படுகிறது. சில மாணவர்களை பொறுப்பேற்றுக் கவனிக்கிறோம். (பங்களிப்போருக்கு விபரங்கள் பயனாளர்கள் பயன்பெற்றமைக்கான கடிதங்கள் மற்றும் சிலருக்கு நேரடித் தொடர்புகளும் கொடுக்கப்பட்டுள்ளது)

இவர்களுக்கான உதவிகள் கோரிய செய்தியொன்றும் அண்மையில் வெளியிட்டிருந்த போது இதே வன்னித் தமிழ்ச் சங்கத்திலிருந்து நண்பர் ஒருவர் அவசர அவசரமாக தொடர்பு கொண்டு தமது ஒன்றியத்துடன் இணைப்பை ஏற்படுத்துமபடி கோரினார். இணைந்த கூட்டு முயற்சியால் பலர் பயனடையலாம் என்ற நல்லெண்ணத்தையும் வெளிப்படுத்தியிருந்தார்.

இந்த நல்நோக்கில் இணைந்து செயற்படுதலில் எந்த முரண்பாடுமில்லை. ஆனால் எல்லாரும் என் பின்னால் வாருங்கள் எல்லாவற்றையும் எல்லாரையும் ஒரு குடையின் கீழ் நிறுத்திச் செயற்படுவோம் என்பது தற்போதைய நிலையில் தமிழரைப் பொறுத்தவரை இயலாத விடயம். ஒரு அமையத்தின் கையில் நிதிகள் குவிய வேண்டும் என்பதும் ஒற்றை நிர்வாகத்தின் கீழ் இயங்க வேண்டும் என்ற எழுதாத விதியில் இதுவரை இயங்கியதால் தமிழினம் பெற்ற வெற்றி எல்லாவற்றையும் இழந்தது தான் என்பதை இந்தச் சங்கம் புரிந்து கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு நாடுகளிலும் பல நிறுவனங்கள் இயங்குகின்றது. ஒற்றைக் குடையில் வடம் பிடிக்க வேண்டுமென்ற சட்டத்தை வைக்காமல் பல நிறுவனங்கள் செயற்படுகின்றன. இவற்றால் பல நாடுகள் பயன்பெறுகின்றன. அது போல ஏன் நாங்களும் உதவும் நிறுவனங்களை உருவாவதைத் தடுக்க வேண்டும் ?

இங்கிருந்து பணம் சேகரித்து அனுப்புவது என்பது எவ்வளவு சிரமம் என்பதை நாமும் புரிந்து கொள்கிறோம். ஆனால் எல்லாவற்றையும் எங்கள் தலையில் வையுங்கள் நாங்கள் சுமந்து போய் கொடுக்கிறோம் என்ற எண்ணத்தை வன்னித் தமிழ்ச் சங்கம் கைவிடுவது நல்லதே.

எமது மக்களுக்கு இப்போது தேவையானவற்றை உங்கள் ஒரு சங்கத்தால் மட்டும் நிறைவேற்ற முடியாது. ஏற்கனவே உங்களால் செய்யப்படுகிறதாகச் சொல்லப்படும் உதவிகள் சரியாகச் சென்றடையவில்லை. இவற்றை முதலில் சரிபாருங்கள். காலப்போக்கில் இன்று சிறியளவில் இயங்கும் ஒன்றியங்களோ மற்றும் நிறுவனங்களோ ஒன்றாகும் நிலமையை உருவாக்கலாம்.

வன்னித் தமிழ்ச் சங்கத்தின் சேவையில் குறைபிடிக்கும் எண்ணம் அல்ல இக்கட்டுரையின் நோக்கம். உங்கள் உழைப்பை உங்கள் நடுவில் நின்று நடைமுறைப்படுத்தும் தரகர்களின் மோசடிகளை அல்லது செல்வாக்கைக் கண்டறியுங்கள். உதவி கோரியுள்ள மாணவர்கள் ஏதோ பிச்சையெடுக்க வரிசையில் நிற்பது போல கெஞ்ச விடாதீர்கள். வசதியுள்ளவர்கள் முன்னால் வசதியற்றோர் மண்டியிட்டு இறைஞ்ச வேண்டுமென்ற எங்கள் தரித்திரம் பிடித்த தமிழ்க் குணத்தை இனங்காணுங்கள். வசதியுள்ளவர்கள் பலருக்கு மேலதிகமாக உங்கள் சங்கத்தின் பணம் போகிறது. இதனைக் கண்டறிந்து உண்மையாக உதவி தேவைப்படுவோருக்கு உங்கள் பணத்தைச் செலவிடச் செய்யுங்கள். தவறுகள் உங்கள் சங்கத்தின் பெயரால் நடைபெறுவதைத் தெரிவித்துள்ளேன். எங்கே எந்த இடத்தில் என்பதைக் கண்டுபிடியுங்கள். உங்கள் நல்நோக்கம் தேவையானவர்களுக்குக் கிடைக்க வழி செய்யுங்கள்.

31.10.09

Link to comment
Share on other sites

யாழ் பல்கலைக்கழக மாணவர் உதவியில் மோசடியா ? செல்வாக்கா ?

போரினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களிலிருந்து பல மாணவர்கள் தமது பல்கலைக்கழக மற்றும் பாடசாலைக்கல்வியைக் கற்க முடியாத பொருளாதாரச் சிக்கலில் இருக்கிறார்கள். இந்த மாணவர்களுக்கு சில அமைப்புக்களும் பல தனிநபர்களும் அங்கங்கு உதவிக் கொண்டுமிருக்கிறார்கள்.

இத்தகைய உதவிகளை ஒரு அமைப்பின் கீழ் கொண்டு வரவேண்டுமென சில ஒன்றியங்களின் செயற்பாட்டாளர்கள் முயற்சி செய்வதும் வரவேற்கத்தக்க விடயம். ஏற்கனவே தமிழர்களுக்காக இருந்த கட்டமைப்புகள் போல ஒரு அமைப்புத்தான் இருக்க வேண்டும் அதன் ஊடாகத்தான் உதவிகள் கொடுபட வேண்டுமென்ற விதியை இனியும் நாங்கள் எழுதி வைக்க வேண்டுமா ?

ஏற்கனவே நாம் உதவவிரும்பின் அது தமிழர் புனர்வாழ்வுக் கழகம் மட்டும்தான். அதைத்தான் நாமும் எல்லாருக்கும் சிபாரிசு செய்தோம். மற்றும் எந்த நிறுவனங்களையும் நாம் வளர விடவுமில்லை வளர்க்கவுமில்லை. அதன் விளைவு இன்று தமிழர் புனர்வாழ்வுக்கழகத்தின் கையில் பலகோடிகள் இருந்தும் அது சிலரது சொத்தாகிவிட்டது. தேவையானவர்களுக்குப் பயன்படாமல் தனிச்சொத்தாக அங்குமிங்கும் அடிபாடும் இழுபாடும் நடக்கிறது.

இதுபோன்றதொரு நிலமைக்கு இட்டுச் சென்று அடுத்தும் ஒற்றை நிறுவனங்களை உருவாக்குவதை விட்டு மேலும் பல உதவும் அமையங்களை தமிழர்கள் உருவாக்குவதுதான் சிறந்தது என்பது எனது கருத்து.

இன்னும் பல உதவும் அமையங்களை அமைய ஏற்கனவே இருக்கும் அமையங்கள் வழி விடவேண்டும். ஒன்றில்லாவிடில் அடுத்த அமையத்தால் உதவிகள் சென்று கொண்டிருக்க வேண்டும். ஒரு அமைப்பால் எல்லா மாணவர்களது தேவைகளையும் பூர்த்தி செய்வது இலகுவானது அல்ல. இதை குறிப்பிட்ட சில சங்கங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

கடந்த காலங்களில் *வன்னித் தமிழ்ச் சங்கம்* கனடாவிலிருந்து யாழ் மற்றும் பிற மாவட்டங்களிலுள்ள தமிழ் மாணவர்களுக்கு உதவுகிறது. தற்போது சர்வதேச தமிழ் மாணவர் அமைப்பும் தனது உதவிகளை செய்து கொண்டிருக்கிறது. இவற்றை விடவும் தனிநபர்கள் மற்றும் சில நண்பர்கள் இணைந்தும் தேவைகளைப் பொறுத்து உதவி வருகின்றனர்.

இவற்றில் வன்னித் தமிழ்ச் சங்கம் செய்யப்படும் உதவிகள் அவர்களால் சொல்லப்பட்டது போல உண்மையில் உதவி தேவைப்படும் மாணவர்களுக்குப் போய்ச் சேரவில்லை. பல மாணவர்கள் இந்தச் சங்கத்திடம் தமது விண்ணப்பங்களை எழுதிக் கொடுத்துவிட்டு கப்பல் வருமா கப்பல் வருமா என வன்னி மக்கள் காத்திருந்தது போலக் காத்திருக்கிறார்கள்.

இப்படிக் காத்திருக்கும் மாணவர்கள் பலரிடம் ஒரு நூறு ரூபாய் கூட இல்லாத நிலையில் இந்த அமைப்பைச் சார்ந்தவர்களுடன் தொடர்பு கொள்ள தொலைபேசியெடுத்துத் தமது நிலமையை விளக்கியும் இன்னும் எதுவும் கிடைக்காத நிலமையில் இருக்கிறார்கள். இவர்களை விட இன்னும் சிலருக்கு ஒரு தரம் அல்லது இருதரத்துடன் உதவிகள் நிறுத்தப்பட்டுள்ளன. இவர்கள் உதவுவார்கள் என்று இன்னும் பலர் நம்பியிருக்க என்ன செய்வதென்று தெரியாத நிலையில் மேலும் பல மாணவர்கள் வன்னித் தமிழ்ச் சங்கத்தை நம்பியிருக்கிறார்கள்.

இதற்கான காரணம் வன்னித் தமிழ்ச் சங்கமா அல்லது வன்னித் தமிழ்ச் சங்கத்தின் உதவியைப் பங்கீடு செய்யும் பங்கு பிரிப்போரா என்பது புரியவில்லை. எதுவாயினும் இவற்றைக் கண்டறிந்து நடவடிக்கைகள் எடுப்பது வன்னிச் சங்கத்தின் பொறுப்பானவர்களின் பொறுப்பே. இத்தகைய உதவிகள் கிடைக்காமை தொடர்பாக வன்னித் தமிழ்ச் சங்கத்தின் தொடர்பாளர் ஒருவருக்கும் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆயினும் இந்தத் தவறு குறித்து வன்னித் தமிழ்ச் சங்கம் நடவடிக்கை ஏதும் எடுத்ததாகவும் தெரியவில்லை. ஆனால் எவராவது பல்கலைக்கழக மாணவர்களுக்கோ அல்லது முகாம்களிலிருந்து வெளிவந்திருக்கும் ஆதரவற்ற சிறுவர்களுக்கோ உதவிகள் கோரினால் உடனடியாக இந்தச் சங்கம் தம்முடன் இணையுங்கள் ஒரு குடையின் கீழ் இயங்குவோம் என்ற விண்ணப்பத்தை வைத்துவிடுகிறது. குறிப்பிட்ட சிலருக்கு தொடர்ந்து உதவிகள் கிடைப்பதை மட்டுப்படுத்தலாம் என்றொரு ஆலோசனையையும் வழங்குகிறார்கள். ஆனால் உதவிகள் கிடைக்கிறது என இவர்களால் அறிவிக்கப்பட்ட மாணவர்களுக்கு இவர்களால் வாக்குறுதியழிக்கப்பட்ட உதவி கிடைக்காமல் இன்னும் அவதிப்படுகிறார்கள் பலர்.

இந்த நிதிகளைப் பங்கீடு செய்து கொடுக்கும் மாணவர் பிரதிநிதிகள் மற்றும் பேராசிரியர்கள் கூட செல்வாக்குச் சார்ந்தும் முன்னுரிமை கொடுத்து உதவுவது கூட நடைபெறுகிறது.

மேமாதம் அளவில் 3யாழ் பல்கலைக்கழக மாணவர்களுக்கு உதவிகள் கோரியிருந்தேன்.

வவுனியாவில் ஒரு நண்பர் தனது அலுவலாகச் சென்ற ஓர் அலுவலகத்தில் ஒரு தாய் தனது பிள்ளைகளுக்கு உதவி கோரிய விண்ணப்பத்துடன் அங்குமிங்கும் அலைந்ததைக் கண்டார். அங்கு அவர்கள் கேட்கும் எதனையும் சரியாக புரிந்து கொள்ள முடியாத ஒரு ஏழைத்தாய் அந்தத்தாய். ஏற்கனவே தனது ஒரு பிள்ளையை மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தில் இழந்தவர். தனது மிஞ்சிய 3பிள்ளைகளுக்காக உதவிகள் கேட்டுக் கடைசி முயற்சியாக அந்த இடத்தில் வந்திருப்பதைக் கண்ணீரோடு தெரிவித்தார். அப்பிள்ளைகளுக்கு உதவி கோரிய நண்பர் அந்தத்தாயுடன் தொடர்பெடுத்துத் தந்தார் பேசுவதற்கு. அந்தத்தாயின் அழுகை இன்னும் காதுக்குள் கேட்டபடியிருக்கிறது. எத்தனை பேரிடம் தனது பிள்ளைகளுக்கு உதவும்படி அந்தத்தாய் ஏறியிறங்கியிருக்கிறாள் என்பது அந்தத்தாயின் கண்ணீரால் வெளிப்பட்டது.

ஏற்கனவே அந்தத்தாயின் பிள்ளைகள் வன்னித் தமிழ்ச் சங்கத்திடம் தமது விண்ணப்பங்களை அவர்களது தொடர்பாளர்களிடம் விண்ணப்பித்துவிட்டுக் காத்திருந்தார்கள். எதுவும் உதவி கிடைக்காத நிலையில் தன் பிள்ளைகளுக்கு ஒவ்வொருவரும் சொல்லும் அலுவலகங்களுக்கு அவர்களது விபரங்களோடு திரிந்த அம்மாவிடம் இனி யாரிடமும் அலையாதீர்கள் என அறிவித்துவிட்டு நமது நண்பர்கள் வட்டத்திற்குத் தெரிவித்தேன்.

இரு மாணவர்களுக்கு ஒருவர் உதவ முன்வந்தார். அந்த நண்பர் இதுபற்றி இந்த வன்னித் தமிழ்ச் சங்கத்திடம் கூறியிருந்தார். உடனடியாக வன்னித் தமிழ்ச் சங்கம் தம்மிடம் அந்த மாணவர்களின் விபரங்கள் வந்திருக்கிறது தாம் உதவுவதாக வாக்குறுதி தந்தார்கள். சொல்லப்பட்ட 2வாரத்தில் ஒரு மாணவருக்கு வன்னித் தமிழ்ச் சங்கத்தினால் இலங்கை ரூபாவில் பத்தாயிரம் (இரண்டு மாதங்களுக்கானது) யூன் மாதம் கிடைத்தது. ஆனால் வன்னித் தமிழ்ச் சங்கத்திலிருந்து தொடர்பு கொண்டவர் தாம் முப்பதாயிரம் ரூபாய் (ஆறு மாதங்களுக்கான தொகை) கொடுத்திருப்பதாகவும் ஏனையவர்களுக்கும் அடுத்துச் சிலவாரங்களில் உதவுவதாகத் தெரிவித்தார்கள்.

ஆனால் யூலைவரை ஏனைய இருவருக்கும் உதவிகள் கிடைக்கவில்லை. உதவிகள் சென்றடையும் என்ற நம்பிக்கையில் நாமும் அதனை அப்படியே விட்டுவிட்டோம். ஆனால் ஒரு மாணவருக்குக் கொடுக்கப்பட்ட பத்தாயிரம் ரூபாவைத் தவிர வன்னித் தமிழ்ச் சங்கத்தால் இதுவரையும் எந்தவித நிதியும் கொடுக்கப்படவில்லை.

எதிர்பாராமல் செப்டெம்பர் இந்த மாணவர்களது தாயாரிடம் தொடர்பு கொண்டு உதவிகள் கிடைக்கிறதா எனக் கேட்ட போதுதான் மேற் குறிப்பிட்ட பத்தாயிரம் ரூபா மட்டும் கொடுபட்டது தெரியவந்தது. உதவி கிடைக்கப்பெற்ற மாணவனோடு தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்ட போதுதான் தெரிந்தது அவரது சகோதரர்களும் இன்னும் பலரும் வன்னித் தமிழ்ச் சங்கத்தை நம்பிக் காத்துக் கொண்டிருப்பது.

இதன் பின்னர் மீண்டும் உதவி கோரி நான் இணையத்தில் போட்டபோது இந்தச் சங்கம் வாயும் திறக்கவில்லை. இணையத்தில் செய்தியைப் பார்த்துவிட்டுப் பல மின்னஞ்சல் உதவ விரும்பம் தெரிவித்து வந்தது. ஆனால் சிலர் உதவத் தயாராக இருப்பதாயும் அவர்களது கணக்கிலக்கத்தையும் கேட்டார்கள். 3மாணவர்களுக்குமான 4மாதங்களுக்குமான உதவிகள் ஒக்ரோபர் 6ம் திகதி கிடைக்கும் வகை செய்துள்ளார்கள்.

இந்த மாணவர்கள் ஊடாக மேலும் சிலருடன் பேசும் வாய்ப்புக் கிடைத்தது. அவர்களிடம் தொடர்பு கொண்ட போது பலர் வன்னித் தமிழ்ச் சங்கத்திடம் உதவிக்கு விண்ணப்பித்துவிட்டு வேறு எந்த வழியையும் தேடாமல் இருக்கின்ற உண்மை புரிந்தது.

இப்படித் தொடர்பு கொண்ட ஒரு மாணவிக்கு ஒரு குடும்பத்திடம் உதவி கேட்டேன். அவர்கள் சம்மதித்தார்கள். அவர்களது உறவினரான பேராசிரியர் ஊடாக ஒரு மாதம் உதவி கிடைத்தது. மறுமாதம் உதவி போகவில்லை. காரணம் கேட்ட போது சம்பந்தப்பட்டவர்கள் தெரிவித்தார்கள். கனடா வன்னித் தமிழ்ச் சங்கத்திலிருந்து அந்த மாணவி உதவி பெறுவதாக அந்தப் பேராசிரியர் சொன்னதாக. அவர்கள் அவளுக்கான உதவியை நிறுத்திவிட்டார்கள்.

அந்த பேராசிரியர் நாம் உதவி கோரும் வரை தனது உறவினருடன் எதுவிதமான மாணவர்களுக்கான உதவிகள் தேவை பற்றி கூறவுமில்லை உதவிகள் கோரவுமில்லை. ஆனால் குறித்த மாணவிக்காக அவர்கள் அனுப்பிய பணத்தை தான் வேறு மாணவர்களுக்கு கொடுக்கப் போவதாகவும் மாணவர்களுக்கு உதவுமாறும் கோரிக்கை விட்டுள்ளார்.

அந்த மாணவியைக் குறித்த பேராசிரியரின் வீட்டிற்குச் சென்று பணத்தை வாங்கும்படி பண உதவி செய்தவர்கள் கூறியுள்ளார்கள். பேராசிரியர் அந்த மாணவியை விசாரணை செய்ய வேண்டுமாம் எங்கிருந்தாவது உதவி கிடைக்கிறதா என்பதை உறுதி செய்ய.

உண்மையிலேயே அந்த மாணவிக்கு வன்னித் தமிழ்ச் சங்கத்தால் எதுவும் கிடைக்கவில்லை. பேராசிரியரின் வீட்டுக்குப் போகாமல் இதனைத் தனது தாயாருக்குச் சொல்லி அழுதிருக்கிறாள். ஏற்கனவே குடும்பம் திக்கொன்றாய் பிரிந்த நிலையில் இருக்கும் இந்த மாணவியின் நிலைபற்றி அவளது தாயார் தொலைபேசியில் தெரிவித்திருந்தார். தற்போது அந்த மாணவிக்கு லண்டனிலிருந்து ஒருவரால் 2மாதங்களுக்கான கொடுப்பனவு கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் வவுனியா முகாம்களுக்குள்ளிருந்து வெளிவந்த பல மாணவர்கள் கடந்த 2வருடங்களாக முல்லைமாவட்டத்தில் பாடசாலை போகாது இருந்திருக்கிறார்கள். அவர்களுக்கு நமது *நேசக்கரம்* நண்பர்கள் வட்டத்தினால் கற்றலுக்கான உதவிகள் கொடுக்கப்படுகிறது. சில மாணவர்களை பொறுப்பேற்றுக் கவனிக்கிறோம். (பங்களிப்போருக்கு விபரங்கள் பயனாளர்கள் பயன்பெற்றமைக்கான கடிதங்கள் மற்றும் சிலருக்கு நேரடித் தொடர்புகளும் கொடுக்கப்பட்டுள்ளது)

இவர்களுக்கான உதவிகள் கோரிய செய்தியொன்றும் அண்மையில் வெளியிட்டிருந்த போது இதே வன்னித் தமிழ்ச் சங்கத்திலிருந்து நண்பர் ஒருவர் அவசர அவசரமாக தொடர்பு கொண்டு தமது ஒன்றியத்துடன் இணைப்பை ஏற்படுத்துமபடி கோரினார். இணைந்த கூட்டு முயற்சியால் பலர் பயனடையலாம் என்ற நல்லெண்ணத்தையும் வெளிப்படுத்தியிருந்தார்.

இந்த நல்நோக்கில் இணைந்து செயற்படுதலில் எந்த முரண்பாடுமில்லை. ஆனால் எல்லாரும் என் பின்னால் வாருங்கள் எல்லாவற்றையும் எல்லாரையும் ஒரு குடையின் கீழ் நிறுத்திச் செயற்படுவோம் என்பது தற்போதைய நிலையில் தமிழரைப் பொறுத்தவரை இயலாத விடயம். ஒரு அமையத்தின் கையில் நிதிகள் குவிய வேண்டும் என்பதும் ஒற்றை நிர்வாகத்தின் கீழ் இயங்க வேண்டும் என்ற எழுதாத விதியில் இதுவரை இயங்கியதால் தமிழினம் பெற்ற வெற்றி எல்லாவற்றையும் இழந்தது தான் என்பதை இந்தச் சங்கம் புரிந்து கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு நாடுகளிலும் பல நிறுவனங்கள் இயங்குகின்றது. ஒற்றைக் குடையில் வடம் பிடிக்க வேண்டுமென்ற சட்டத்தை வைக்காமல் பல நிறுவனங்கள் செயற்படுகின்றன. இவற்றால் பல நாடுகள் பயன்பெறுகின்றன. அது போல ஏன் நாங்களும் உதவும் நிறுவனங்களை உருவாவதைத் தடுக்க வேண்டும் ?

இங்கிருந்து பணம் சேகரித்து அனுப்புவது என்பது எவ்வளவு சிரமம் என்பதை நாமும் புரிந்து கொள்கிறோம். ஆனால் எல்லாவற்றையும் எங்கள் தலையில் வையுங்கள் நாங்கள் சுமந்து போய் கொடுக்கிறோம் என்ற எண்ணத்தை வன்னித் தமிழ்ச் சங்கம் கைவிடுவது நல்லதே.

எமது மக்களுக்கு இப்போது தேவையானவற்றை உங்கள் ஒரு சங்கத்தால் மட்டும் நிறைவேற்ற முடியாது. ஏற்கனவே உங்களால் செய்யப்படுகிறதாகச் சொல்லப்படும் உதவிகள் சரியாகச் சென்றடையவில்லை. இவற்றை முதலில் சரிபாருங்கள். காலப்போக்கில் இன்று சிறியளவில் இயங்கும் ஒன்றியங்களோ மற்றும் நிறுவனங்களோ ஒன்றாகும் நிலமையை உருவாக்கலாம்.

வன்னித் தமிழ்ச் சங்கத்தின் சேவையில் குறைபிடிக்கும் எண்ணம் அல்ல இக்கட்டுரையின் நோக்கம். உங்கள் உழைப்பை உங்கள் நடுவில் நின்று நடைமுறைப்படுத்தும் தரகர்களின் மோசடிகளை அல்லது செல்வாக்கைக் கண்டறியுங்கள். உதவி கோரியுள்ள மாணவர்கள் ஏதோ பிச்சையெடுக்க வரிசையில் நிற்பது போல கெஞ்ச விடாதீர்கள். வசதியுள்ளவர்கள் முன்னால் வசதியற்றோர் மண்டியிட்டு இறைஞ்ச வேண்டுமென்ற எங்கள் தரித்திரம் பிடித்த தமிழ்க் குணத்தை இனங்காணுங்கள். வசதியுள்ளவர்கள் பலருக்கு மேலதிகமாக உங்கள் சங்கத்தின் பணம் போகிறது. இதனைக் கண்டறிந்து உண்மையாக உதவி தேவைப்படுவோருக்கு உங்கள் பணத்தைச் செலவிடச் செய்யுங்கள். தவறுகள் உங்கள் சங்கத்தின் பெயரால் நடைபெறுவதைத் தெரிவித்துள்ளேன். எங்கே எந்த இடத்தில் என்பதைக் கண்டுபிடியுங்கள். உங்கள் நல்நோக்கம் தேவையானவர்களுக்குக் கிடைக்க வழி செய்யுங்கள்.

31.10.09

Link to comment
Share on other sites

தமிழர் புனர்வாழ்வுக்க கழகம் தான் புலம்பெயர் தேசத்தில் ஒரேயொரு அமைப்பு அல்ல பல நிறுவனங்கள் செயற்பட்டுள்ளன.செயற்படுகின்றன. போராட்டத்தின் கால ஓட்டங்களுக்கு ஏற்ப புலம் பெயர் மக்களால் அவ்வப்போது நிறுவனங்கள் உருவாக்கப்பட்டுத்தான் வந்துள்ளன. உதாரணமாக அமெரிக்காவில் IMHO, TRRO இவ்வாறு TRO சமனான பலமான நிறுவனங்கள் இருக்கின்றன.சுனாமி காலப்பகுதியில் TRO வினை விட இந்த நிறுவனங்கள் மட்டுமன்றி கனடாவிலும் பல நிறுவனங்கள் நிதி சேகரித்தன. ஆகவே புனர்வாழ்வு கழகம் இலங்கையில் பலம் வாய்ந்த அதே நேரம் இயக்க கட்டுப்பாட்டிலும் கூடுதலாக வேலை செய்ததால் அந்த நிறுவனத்திற்கு நிதி உதவி செய்யப்பட்டது. வேலைத்திட்டம் செய்யாத நிறுவனங்களுக்கு நிதி கொடுத்து என்ன பயன்?

TRO இன் கோடிக்கணக்கான நிதிகள் ஒருசிலரது கைகளில் புரள்வதாக சாந்தி அவர்கள் சொல்வது எதனை அடிப்படையாக வைத்து சொல்கின்றார்.TRO ஒவ்வொரு நாட்டிலும் ஐந்து தொடக்கம் 11 பேர் கொண்ட நபர்களினால் பதிவு செய்யப்பட்டு இருக்கின்றது. சட்ட ரீதியான கணக்குகளும், ஆவனங்களும் உள்ளன. ஒருசிலர் சுருட்டி கொண்டு போவதற்கு இது ஒருவர் இருவர் நடத்தும் இணைய வானொலி அல்ல.

வங்கி கணக்குகளை சில நாடுகள் முடக்கியதால் அதில் குறிப்பிட்ட தொகை பணங்கள் முடக்கப்பட்டுள்ளது உண்மை. உதாரணமாக இலங்கையில் 12 கோடி ரூபா வங்கியில் முடக்கப்பட்டுள்ளது. அதுவும் 15 வீதமான நிதி தான் புலம்பெயர் மக்கள் அதாவது அமெரிக்காவில் உள்ள சில மக்கள் அனுப்பிய நிதி என கூறப்படுகின்றது.

அதிலும் இலங்கை புனர்வாழ்வுக்கழகம் மத்திய வங்கியில் ஏற்கனவே 15 கோடி ரூபா கடன் எடுத்துள்ளது.இந்த கடன்கள் வடக்கு கிழக்கு பகுதியில் உள்ள மீன்பிடி சமாசங்களுக்கு பிரித்து கொடுக்கப்பட்டது. அடுத்ததாக இலங்கையில் உள்ள கணிசமான வங்கிகளில் குத்தகைக்கு கிட்ட தட்ட 120 உழவு இயந்திரங்கள் வாங்கி படுவான் கரை, வாகரை பகுதிகளுக்கு மக்களுக்கும் விவசாய அமைப்புக்களுக்கும் கொடுக்கப்பட்டது. 04 புதிய பஸ் வண்டிகள் எடுத்து வாகரை மற்றும் மூதூர் பகுதிகளுக்கு வழங்கப்பட்டது. இந்த தொகைகள் முடக்கிய தொகைக்கு மேலானது.

நானுன் இன்னும் பல பல்கலை கழக மாணவர்களும் கொழும்பு புனர்வாழ்வுக்கழகத்தில் பணி புரிந்த காரணத்தினால் இன்னும் பல தகவல்களை நாம் நேரடியாக பார்த்துள்ளோம். ஆகவே எழுந்தமாத்திரத்தில் யாரும் எழுதுவதனை விட்டு சந்தேகங்கள் இருப்பின் உரியவர்களிடம் கேட்டு அறிவது நல்லது.

அடுத்ததாக பல நிறுவனங்கள் உருவாக வேண்டும் என்பதில் எந்தவித கருத்து வேறுபாடும் இல்லை அதனை மறு வளத்தில் சிந்தித்தால் பலர் சேர்ந்து ஏன் சில பலமான நிறுவனங்களை உருவாக்கமுடியாது? எனவும் சிந்திக்கலாம்.

புலம்பெயர்ந்த நாடிகளில் 600 இற்கு மேற்பட்ட அமைப்புக்கள் இருக்கின்றன.அவை விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகவும், எதிராகவும் இருக்கின்றன. இந்த நிறுவனங்களின் மொத்த சொத்துக்கள் நீங்கள் குறிப்பிட்ட மாதிரி புனர்வாழ்வுக்கழகத்தினை விட அதிகம். உதாரணமாக இலண்டன் கனகதுர்கை அறக்கட்டளை நிதியம் இதன் சொத்து கிட்ட தட்ட 05 மில்லியன் பவுண்கள், ஆச்வே கோவில் இதனைவிட அதிகம், தமிழர் வீட்டுவசதி கழகம் இதன் சொத்து 05- 06 மில்லியன் பவுண்கள். இலண்டன் கோவில்களின் வருமானம் மாதாந்தம் 150,000 பவுண்கள்.

இவர்கள் நாட்டிற்கு சேவை செய்வதாக பல்வேறு திட்டங்களை முன்வைத்து நிதி சேகரிக்கின்றார்கள். இவ்வாறு பல நிறுவனங்கள் கடந்த 10 வருடத்திற்கு மேலாக இயங்கி வருகின்றனர். இவர்களது சொத்துக்களும் வருமானங்களும் ஒவ்வொரு நாட்டிலும் புனர்வாழ்வு கழகத்தின் வருமானங்களை விட திகமானது.இதற்கு மக்களும் பங்களிப்பு செய்து வருகின்றனர். புனர்வாழ்வுக்கழகம் தான் ஒரேயொரு அமைப்பு அதற்குதான் எல்லோரும் குடுங்கோ என்றால் இந்த நிறுவனங்கள் வளர்ந்திருக்க முடியாது.எல்லோருக்கும் தெரிந்த நிறுவனம் அல்லது பேர் என்பதால் அந்த நிறுவனங்கள் மீது பழி போடுவது அழகல்ல.

ஆகவே ஒவ்வொருவரும் தமது அறிவுக்கு எட்டியவரை பொது விடயங்களை கதைப்பதில் வரையறை தேவை. அல்லது கருத்து சுதந்திரத்தின் அடிப்படையில் எதனையும் எழுதலாம் என்றால் எழுதும்போது “ எனக்கு கிடைத்த தகவலின்படி அல்லது எனது அறிவுக்கு எட்டியவரை” என்று குறிப்பிட்டு எழுதுவது நல்லது.

நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வன்னித் தமிழ் சங்கக் குறை பாடுகள் மோசடி என்பதை விட நிர்வாகம்/ஆவணம் பேணலில் இருக்கிற குறைபாடுகள் என்பதாத் தான் விளங்குது. பல அமைப்புகள் இருக்கலாம், ஆனால் அவை தங்களுக்கிடையில தகவல்களைப் பரிமாறிக் கொள்ள வேண்டிய தேவை இந்தக் குறை பாடுகளால உணரப் படுகுது எண்டு நான் நினைக்கிறன். குறைந்த பட்சம் உதவி பெறுனருடைய பெயர், அடையாள அட்டை இலக்கமாவது இந்த அமைப்புகள் வைத்திருக்க வேணும். உதவி பெறுனர் ஒரு உதவிக்கு விண்ணப்பிக்கும் போது, வேற அமைப்புகளிடம் இப்படி விண்ணப்பம் செய்தீர்களா எண்டு கேட்கிறது ஒண்டும் பாரதூரமான, அவமானப் படுத்தும் கேள்வியாக எனக்குத் தெரியேல்ல. சிலர் தங்களுடைய உதவித் தொகையக் கூட்டிக் கொள்றதுக்காக இந்தக் கேள்விக்கு சரியான பதிலைத் தராமல் விடும் போது மேற் சொன்ன குறைந்த பட்ச ஆவணப் படுத்தல் உண்மை அறிய உதவக் கூடும். உதவி பெறும் விடயத்தில எங்கட ஆட்கள் எல்லாரும் நேர்மையாக நடப்பார்கள் எண்டு எதிர்பார்க்கிறது அப்பாவித் தனம். இதை ஒரு பல்கலை மாணவருக்கு பல வருடங்கள் முன்பு உதவி ஏற்பாடு செய்த ஒரு குழுவில் இருந்த அனுபவத்தில சொல்லுறன். இன்னும் வெளிநாட்டில இருந்து வரும் பண உதவிகளை மறைச்சு சமுர்த்தி உதவி பெறுகிற எங்கட ஆட்கள் இருக்கீனம். கிள்ளிக் குடுக்கிற உதவிகள் ஒரு நாளும் ஒரு உதவி பெறுனருக்குப் போதாது என்பது உண்மை, ஆனால் எல்லாருக்கும் அடிப்படையில தேவையானதைக் கொடுக்க வேண்டியது தான் முக்கியம். அதுக்கு இந்த குறுக்கு விசாரணைகள் சில நேரம் தேவைப் படலாம். இதில அழுவதற்கு என்ன இருக்கு எண்டு எனக்கு விளங்கேல்ல! மன்னிக்கவும்.

Link to comment
Share on other sites

குறைந்த பட்சம் உதவி பெறுனருடைய பெயர், அடையாள அட்டை இலக்கமாவது இந்த அமைப்புகள் வைத்திருக்க வேணும். உதவி பெறுனர் ஒரு உதவிக்கு விண்ணப்பிக்கும் போது, வேற அமைப்புகளிடம் இப்படி விண்ணப்பம் செய்தீர்களா எண்டு கேட்கிறது ஒண்டும் பாரதூரமான, அவமானப் படுத்தும் கேள்வியாக எனக்குத் தெரியேல்ல. சிலர் தங்களுடைய உதவித் தொகையக் கூட்டிக் கொள்றதுக்காக இந்தக் கேள்விக்கு சரியான பதிலைத் தராமல் விடும் போது மேற் சொன்ன குறைந்த பட்ச ஆவணப் படுத்தல் உண்மை அறிய உதவக் கூடும். உதவி பெறும் விடயத்தில எங்கட ஆட்கள் எல்லாரும் நேர்மையாக நடப்பார்கள் எண்டு எதிர்பார்க்கிறது அப்பாவித் தனம். இதை ஒரு பல்கலை மாணவருக்கு பல வருடங்கள் முன்பு உதவி ஏற்பாடு செய்த ஒரு குழுவில் இருந்த அனுபவத்தில சொல்லுறன். இன்னும் வெளிநாட்டில இருந்து வரும் பண உதவிகளை மறைச்சு சமுர்த்தி உதவி பெறுகிற எங்கட ஆட்கள் இருக்கீனம். கிள்ளிக் குடுக்கிற உதவிகள் ஒரு நாளும் ஒரு உதவி பெறுனருக்குப் போதாது என்பது உண்மை, ஆனால் எல்லாருக்கும் அடிப்படையில தேவையானதைக் கொடுக்க வேண்டியது தான் முக்கியம்.

நீங்கள் குறிப்பிட்ட விடயங்களுடன் உடன்படுகிறேன் ஜஸ்ரின்.

உதவிகள் பெறுவதில் சிலர் மேலதிகமாக பெறுகிறார்கள் பொய் சொல்லி ஆனால் உண்மையில் உதவி தேவைப்படுவோரை அடையாளம் காட்டிய பின்னரும் காணாது இருப்பது வேதனை தருகிறது.

விண்ணப்பம் செய்தீர்களா என்று கேட்பதில் தவறு இல்லை. விண்ணப்பங்கள் கொடுத்தவர்களுக்கு உரிய பதிலையாவது கொடுக்கலாமல்லவா ?

பலர் வெளிநாட்டிலிருந்து பண உதவிகளை உறவினர் மூலம் பெற்றுக்கொண்டே வன்னித்தமிழ்ச்சங்கத்தின் உதவியையும் பெறுகிறார்கள். அவை இன்னும் இனங்காணப்படவில்லை. குறித்த சிலரின் செல்வாக்கில் அவை கிடைக்கிறது. ஆனால் உண்மையாகப் பாதிக்கப்பட்ட மாணவர்களை சிலருக்காக தண்டிக்க வேண்டுமா ?

Link to comment
Share on other sites

தமிழர் புனர்வாழ்வுக்க கழகம் தான் புலம்பெயர் தேசத்தில் ஒரேயொரு அமைப்பு அல்ல பல நிறுவனங்கள் செயற்பட்டுள்ளன.செயற்படுகின்றன. போராட்டத்தின் கால ஓட்டங்களுக்கு ஏற்ப புலம் பெயர் மக்களால் அவ்வப்போது நிறுவனங்கள் உருவாக்கப்பட்டுத்தான் வந்துள்ளன. உதாரணமாக அமெரிக்காவில் IMHO, TRRO இவ்வாறு TRO சமனான பலமான நிறுவனங்கள் இருக்கின்றன.சுனாமி காலப்பகுதியில் TRO வினை விட இந்த நிறுவனங்கள் மட்டுமன்றி கனடாவிலும் பல நிறுவனங்கள் நிதி சேகரித்தன. ஆகவே புனர்வாழ்வு கழகம் இலங்கையில் பலம் வாய்ந்த அதே நேரம் இயக்க கட்டுப்பாட்டிலும் கூடுதலாக வேலை செய்ததால் அந்த நிறுவனத்திற்கு நிதி உதவி செய்யப்பட்டது. வேலைத்திட்டம் செய்யாத நிறுவனங்களுக்கு நிதி கொடுத்து என்ன பயன்?

TRO இன் கோடிக்கணக்கான நிதிகள் ஒருசிலரது கைகளில் புரள்வதாக சாந்தி அவர்கள் சொல்வது எதனை அடிப்படையாக வைத்து சொல்கின்றார்.TRO ஒவ்வொரு நாட்டிலும் ஐந்து தொடக்கம் 11 பேர் கொண்ட நபர்களினால் பதிவு செய்யப்பட்டு இருக்கின்றது. சட்ட ரீதியான கணக்குகளும், ஆவனங்களும் உள்ளன. ஒருசிலர் சுருட்டி கொண்டு போவதற்கு இது ஒருவர் இருவர் நடத்தும் இணைய வானொலி அல்ல.

வங்கி கணக்குகளை சில நாடுகள் முடக்கியதால் அதில் குறிப்பிட்ட தொகை பணங்கள் முடக்கப்பட்டுள்ளது உண்மை. உதாரணமாக இலங்கையில் 12 கோடி ரூபா வங்கியில் முடக்கப்பட்டுள்ளது. அதுவும் 15 வீதமான நிதி தான் புலம்பெயர் மக்கள் அதாவது அமெரிக்காவில் உள்ள சில மக்கள் அனுப்பிய நிதி என கூறப்படுகின்றது.

அதிலும் இலங்கை புனர்வாழ்வுக்கழகம் மத்திய வங்கியில் ஏற்கனவே 15 கோடி ரூபா கடன் எடுத்துள்ளது.இந்த கடன்கள் வடக்கு கிழக்கு பகுதியில் உள்ள மீன்பிடி சமாசங்களுக்கு பிரித்து கொடுக்கப்பட்டது. அடுத்ததாக இலங்கையில் உள்ள கணிசமான வங்கிகளில் குத்தகைக்கு கிட்ட தட்ட 120 உழவு இயந்திரங்கள் வாங்கி படுவான் கரை, வாகரை பகுதிகளுக்கு மக்களுக்கும் விவசாய அமைப்புக்களுக்கும் கொடுக்கப்பட்டது. 04 புதிய பஸ் வண்டிகள் எடுத்து வாகரை மற்றும் மூதூர் பகுதிகளுக்கு வழங்கப்பட்டது. இந்த தொகைகள் முடக்கிய தொகைக்கு மேலானது.

நானுன் இன்னும் பல பல்கலை கழக மாணவர்களும் கொழும்பு புனர்வாழ்வுக்கழகத்தில் பணி புரிந்த காரணத்தினால் இன்னும் பல தகவல்களை நாம் நேரடியாக பார்த்துள்ளோம். ஆகவே எழுந்தமாத்திரத்தில் யாரும் எழுதுவதனை விட்டு சந்தேகங்கள் இருப்பின் உரியவர்களிடம் கேட்டு அறிவது நல்லது.

அடுத்ததாக பல நிறுவனங்கள் உருவாக வேண்டும் என்பதில் எந்தவித கருத்து வேறுபாடும் இல்லை அதனை மறு வளத்தில் சிந்தித்தால் பலர் சேர்ந்து ஏன் சில பலமான நிறுவனங்களை உருவாக்கமுடியாது? எனவும் சிந்திக்கலாம்.

புலம்பெயர்ந்த நாடிகளில் 600 இற்கு மேற்பட்ட அமைப்புக்கள் இருக்கின்றன.அவை விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகவும், எதிராகவும் இருக்கின்றன. இந்த நிறுவனங்களின் மொத்த சொத்துக்கள் நீங்கள் குறிப்பிட்ட மாதிரி புனர்வாழ்வுக்கழகத்தினை விட அதிகம். உதாரணமாக இலண்டன் கனகதுர்கை அறக்கட்டளை நிதியம் இதன் சொத்து கிட்ட தட்ட 05 மில்லியன் பவுண்கள், ஆச்வே கோவில் இதனைவிட அதிகம், தமிழர் வீட்டுவசதி கழகம் இதன் சொத்து 05- 06 மில்லியன் பவுண்கள். இலண்டன் கோவில்களின் வருமானம் மாதாந்தம் 150,000 பவுண்கள்.

இவர்கள் நாட்டிற்கு சேவை செய்வதாக பல்வேறு திட்டங்களை முன்வைத்து நிதி சேகரிக்கின்றார்கள். இவ்வாறு பல நிறுவனங்கள் கடந்த 10 வருடத்திற்கு மேலாக இயங்கி வருகின்றனர். இவர்களது சொத்துக்களும் வருமானங்களும் ஒவ்வொரு நாட்டிலும் புனர்வாழ்வு கழகத்தின் வருமானங்களை விட திகமானது.இதற்கு மக்களும் பங்களிப்பு செய்து வருகின்றனர். புனர்வாழ்வுக்கழகம் தான் ஒரேயொரு அமைப்பு அதற்குதான் எல்லோரும் குடுங்கோ என்றால் இந்த நிறுவனங்கள் வளர்ந்திருக்க முடியாது.எல்லோருக்கும் தெரிந்த நிறுவனம் அல்லது பேர் என்பதால் அந்த நிறுவனங்கள் மீது பழி போடுவது அழகல்ல.

ஆகவே ஒவ்வொருவரும் தமது அறிவுக்கு எட்டியவரை பொது விடயங்களை கதைப்பதில் வரையறை தேவை. அல்லது கருத்து சுதந்திரத்தின் அடிப்படையில் எதனையும் எழுதலாம் என்றால் எழுதும்போது “ எனக்கு கிடைத்த தகவலின்படி அல்லது எனது அறிவுக்கு எட்டியவரை” என்று குறிப்பிட்டு எழுதுவது நல்லது.

நன்றி.

உமை உங்கள் விபரங்களுக்கு நன்றிகள். உங்கள் பேரறிவுக்கு முன்னால் எனது சிற்றறிவின் அடிப்படையில் புனர்வாழ்வுக்கழகத்தின் நிதி எந்தெந்தக் கைகளில் உள்ளது என்பதை அறிந்துதான் எழுதியுள்ளேன். இன்னும் ஒளிப்பு மறைப்புக் கூட்டுத்தாபனம் நடத்தி அது செய்தோம் இது செய்தோம் என்று விளக்கம் கொடுத்து இன்னும் உழைப்புக்கு வழியைத்தான் நீங்களும் உரியவர்களுக்குக் காட்டுகிறீர்கள்.

நீங்கள் சொல்லும் மாற்று அமைப்களையும் தன் கையகப்படுத்தலில் தான் இதுவரை இயங்கிய புனர்வாழ்வுக்கழகம் முனைந்து நின்றது. இதைவிட இன்னொரு விடயம் பல அமையங்கள் புனர்வாழ்வுக்கழகத்தின் பின்னணியில் புதிய பெயர்களில் இயங்கியவை. நிதிக் கையாள்கை புனர்வாழ்வுக்கழகத் தலைமையினால் தான் கையாளப்பட்டவை.

புனர்வாழ்வுக்கழகம் எதையும் செய்யவில்லையெச் சொல்ல வரவில்லை. அதை புரிந்து கொள்ளுங்கள்.

உரியவர்களின் கேட்டு புரிந்து கொள்ளுங்கள் என்ற வார்த்தையை பல விடயங்களில் பலர் சொல்லி வருகிறார்கள். ஆனால் எந்தவித உண்மையும் வெளியில் தெரியப்படுத்தப்படுவதில்லை நீங்கள் சொல்லும் உரியவர்களால்.

Link to comment
Share on other sites

நானும் புனர்வாழ்வுகழக பொறுப்பாளர் றெஜியையும் அவரின்ரை உதவியாளர்..அசுச்சுனன் எதிர் வீரசிங்கத்தையும் சில விடயங்களிற்காக தொடர்பு கொள்ள ஒரு மாதமாய் முயற்சி செய்கிறன்..உமை அவர்களோடை முடிந்தால் தொடர்பை ஏற்படுத்தி தர முடியுமா??அல்லது நீங்கள் சொன்னது போல பொறுப்புள்ள உறுப்பினரை கதைக்க சொல்லுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு அமைப்போ அல்லது பல அமைப்புக்களோ இருக்கலாம். ஆனாலும் அவை எல்லாம் அந்தந்த பல்கலைக் கழகங்களில் உள்ள தமிழ் மாணவர் அமைப்புக்களினூடாக உதவி செய்வதற்கு முயற்சி செய்வதே சிறந்தது என நான் நினைகின்றேன். ஏனெனில் அங்குள்ள மாணவர்கள் ஒவ்வொருவரது நிலையும் அநேகமாக மாணவர் அமைப்புக்களால் அறிய முடியும். இதன் மூலம் தேவையானவர்கள் உதவி பெறுவது உறுத்திப்படுத்த கூடியதாக இருக்கும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 17. MI என்று எழுதி  விடுங்கோ.  நன்றி 
    • வெற்றி பெற‌ வாழ்த்துக்க‌ள் ச‌கோ🙏🥰..............................
    • "சிவப்பு உருவம்"   இரத்தினபுரி கஹவத்தையில் தொடங்கிய கிறீஸ் மர்ம மனிதன் விவகாரம் ஒரு ஊரிலோ, ஒரு மாவட்டத்திலோ மட்டுமல்லாமல், இலங்கையின் பல்வேறு மாவட்டங்களிலும், குறிப்பாக தமிழர், முஸ்லீம்கள் செறிந்து வாழும் பகுதியிலேயே இடம்பெற்றன. இச்சம்பவங்கள் 2011 ஆம் ஆண்டு ஜூலையில் ஆரம்பித்து ஆகஸ்ட்  மாதத்தில் கடுமையாக பரவியது. க்ரீஸ் பூதம் என்பது ஒரு திருடனாகும். அவன் வழமையில் உள்ளாடை மாத்திரமே அணிந்து கொண்டு உடல் பூராவும் க்ரீஸைப் பூசியிருப்பான். துரத்திச் செல்வோர் பிடிக்க முடியாமல் வழுக்கி விழக் கூடிய விதத்தில் க்ரீஸ் பூசப்படுவதுடன், திருடன் இலகுவாகத் தப்பிச் செல்வதற்கும் அது உதவியாக அமைந்து விடும். இப்படியான ஒரு கால கட்டத்தில் தான் நான், மலையகம் பகுதியில் தற்காலிகமாக வேலை நிமிர்த்தம் விடுதி ஒன்றில் தங்கி இருந்தேன்.   நான் தங்கி இருந்த விடுதி, கடல் மட்டத்திலிருந்து 1000-1500 மீட்டர் உயரத்திற்கு உயர்ந்து நிற்கிறது. இந்தப் பகுதி மிகவும் அமைதியாகக் காட்சியளிப்பதுடன் ஒரு  நீர்வீழ்ச்சிக்கு மேலே மலைப்பகுதியில் அமையப் பெற்றுள்ளது. இங்கு இயற்கை எழில் சூழ்ந்த தேயிலை தோட்டங்கள், நீரோடைகள் மற்றும் நீர்வீழ்ச்சிகள் நிறைந்து காணப்படுகின்றன. மொத்தத்தில்  புத்துணர்ச்சி அளிக்கும் ஒரு குளிர் பிரதேசம் ஆகும். ஒரு வரவேற்பு கம்பளம் போல அமைக்கப் பட்ட மரகத பச்சை தேயிலை தோட்டங்களின் அழகை பார்த்தால் உங்களுக்கு மனதில் ஒருவித மகிழ்ச்சி பொங்கி வழியும். ஆமாம், நீர்வீழ்ச்சிகள், பச்சை பசேல் புல்வெளிகள் மற்றும் அடர்ந்த தேயிலை தோட்டங்கள் இயற்கையாகவே காதலர்களின் கனவை நனவாக்குகிறது. அதற்கு நானும் விதிவிலக்கல்ல.   தேயிலை தோட்ட பாடசாலை ஒன்றில் கல்வி கற்பிக்கும் ஆசிரியை செல்வி சயந்தியின் தொடர்பு, தற்செயலாக, அந்த பாடசாலையில் நடந்த தைப்பொங்கல் திருவிழா மூலம் கிடைத்தது. அவர் தான் அங்கு நடந்த நாட்டிய மற்றும் நாடகத்துக்கு பொறுப்பாக இருந்தார். அந்த நிகழ்வின் சிறப்புத் தன்மையை போற்ற அவரை சந்தித்தது, அவரின் அழகிலும் நடத்தையிலும் என்னை கவர வைத்து விட்டது. அதன் பின் ஏற்பட்ட நட்பு நாளடைவில் காதலாக இருவர் மனதிலும் மலர்ந்தது  .    "சிலுசிலு எனக் காற்று வீச கமகம என தேயிலை மணக்க  தொளதொள சட்டையில் வனப்பை காட்டி கிளுகிளுப்பு தந்து கூப்பிடுவது எனோ ?"   "தளதள ததும்பும் இளமை பருவமே   தகதக மின்னும் அழகிய மேனியே  சலசல என ஆறு பாய  வெலவெல என நடுங்குவது எனோ?"    "கலகல பேச்சு நெஞ்சை பறிக்க படபட என இமைகள் கொட்ட   கிசுகிசு ஒன்றை காதில் சொல்லி  சரசர என்று ஓடுவது ஏனோ ?"    ஒரு சனிக்கிழமை நாம் இருவரும் சந்தோசமாக தனியாக கழிக்க நுவரெலியா மாவட்டத்தில் ஹோட்டன் சமவெளியின் (Horton Plains) முடிவுடன் 1,200  மீட்டர் உயரத்தில், 700 - 1000 மீட்டர் செங்குத்து ஆழத்தைக் கொண்ட  உலக முடிவு [world's end] போய் பின், 19 மைல் நேரடி தூரத்தை அல்லது இருமடங்கு வீதி வழித் தூரத்தை கொண்ட  பதுளை மாவட்டத்தில் உள்ள எல்ல [எல்லா / Ella] நகரம் சென்று அங்கு ஒரு நீரூற்றுக்கு அருகில் உள்ள 98 ஏக்கர் உல்லாசப் போக்கிடத்தில் [98 Acres Resort & Spa] தங்கி, ஞாயிறு மாலை அங்கிருந்து திரும்பினோம். இருவரும் மிக மகிழ்வாக பேருந்தில் இருந்து இறங்கி, எம் விடுதிகளுக்கு கால்நடையாக பேசிக் கொண்டு நடக்கத் தொடங்கினோம். நாம் அந்த கும்மிருட்டில் தேயிலை தோட்டங்கள் மற்றும் மரங்களுக்கிடையில் ஒரு மைல் நடக்கவேண்டும். ஆனால் எமக்கு அது பிரச்சனையாகவோ பயமாகவோ இருக்கவில்லை. அவள் அந்த ஊர் ஆசிரியை. நான் அந்த நகர பொறியியலாளர். எம்மை எல்லோருக்கும் தெரியும். அந்த ஊர் மக்கள் மிகவும் மரியாதையும் கண்ணியமும் ஆனவர்கள்.       ஆனால் எம் கணக்கு தப்பு என்பதை சிறிது தூரம் இருவரும் கைகள் கோர்த்தபடி இருட்டில் ஏதேதோ சந்தோசமாக பேசிக் கொண்டு போகும் பொழுது தான் சடுதியாகத் தெரிந்தது. கொஞ்ச தூரத்தில், மரங்களுக் கிடையில் சிவத்த சால்வை அல்லது  துப்பட்டா மட்டும் தலையை மூடி தொங்க, கைவிரல்கள் மட்டும் எதோ கையில் இருக்கும் சிறு ஒளியில் ஒளிர , ஒரே இருட்டான ஒரு சிவப்பு உருவம் எம்மை நோக்கி வருவதைக் கண்டோம்.     கிழக்கு மாகாணம், மலையகம் மற்றும் நாட்டின் சில பகுதிகளில், யாழ்ப்பாணம் உட்பட கிறீஸ் மனிதன் விவகாரம் அடிக்கடி பத்திரிகையில் வருவதைப் பார்த்துள்ளேன், ஆனால் இந்த சிவப்பு உருவம் ஒரு சிவப்பு துணியால் தலையை மூடி தொங்க விட்டுக் கொண்டு வருவது ஆச்சரியமாக இருந்தது. ஒரு வேளை கிறீஸ் பூதத்தின் பரிணாமமாக இருக்கலாம்? அப்படியாயின் அவனை மடக்கி பிடிக்க முடியாது, அவன் உடல் வழுக்கும். ஆனால், அவன் சிவப்பு துணி தொங்க விட்டு வருவது எனக்கு சாதகமாக தெரிந்தது. அந்த துணியை வைத்தே அவனை மடக்க நான் தீர்மானித்தேன். ஏறுதழுவுதல் அல்லது ஜல்லிக்கட்டுவில் நான் நல்ல பயிற்சி பெற்றவன் என்பது எப்படி அவனுக்கு தெரியும்? காளைகளின் கொம்புகளை பிடித்து மடக்கும் தமிழர்களின் வீர விளையாட்டுக்கும் சிவப்பு நிற துணியை காளையிடம் காட்டி மடக்கும் ஸ்பெயின் நாட்டு விளையாட்டுக்கும் உள்ள வேறுபாடு அவனுக்கு என்ன தெரியும் ?. சிவப்பு துணியுடன் எம்மை நோக்கி வருகிறானே, இந்த சிவப்பு உருவம்!    நான் மிக நிதானமாக, ஆனால் அவசரமாக அவளிடம் எனது பையில் இருந்த சிகரெட் தீமூட்டியை கொடுத்து, பக்கத்தில் இருந்த மரத்தின் பின் ஒழிந்து இருந்து, அவன் என்னை நெருங்கும் பொழுது அதை தீம்மூடி அவனின் சிவப்பு துணிக்கு எரியூட்டக் கூடியதாக  எறியச் சொன்னேன். அவள் உயர் வகுப்புக்கு பிரயோக கணிதம் படிப்பிக்கும் ஆசிரியர் தானே, ஆகவே அவள் சரியாக செய்வாள் என்பதில் நல்ல நம்பிக்கை எனக்கு இருந்தது. அது மட்டும் அல்ல, பெரும்பாலான கிறீஸ் வகைகள் இலகுவாக எரியக்  கூடியவையும் ஆகும். நானும் கவனமாக அவன் நெருங்கும் பொழுது சிவப்பு துணியின் இரு தொங்களையும் தேவைப்பட்டால் பிடித்து இழுத்து, சிவத்த உருவத்தை  மடக்கி பிடிக்க ஆயத்தமாக முழு பலத்துடன் இருந்தேன்.   இந்த கிறீஸ் மர்ம மனிதர்கள் துட்டுகைமுனு அரசனின் வாளைத் தேடி அலைந்ததாக எத்தனை கதைகள் அன்று செய்திகளாக வந்தன. இது ஒன்றே இவர்கள் தமிழர்களை குறி வைத்து தாக்கியதுக்கு சிறந்த உதாரணமாக இருக்கிறது. எல்லாளனின் நீதியான, சமத்துவமான, எதிரியையும் மதிக்கும் திறமையான ஆட்சிக்கு எதிராகவே அன்று அவன் சைவ மதத்தான் என்ற ஒரே காரணத்தால் துட்டுகைமுனு அவனை எதிர்த்தான் என்பது வரலாறு. அப்ப சிங்களம் என்ற மொழி வளர்ச்சி அடையாத காலம். ஆகவே சிங்கள தமிழ் வேற்றுமை அங்கு இருக்க முடியாது. அது மட்டும் அல்ல துட்டுகைமுனு சிங்களவனாக இருக்கவும் முடியாது. அது தெரியாத முட்டால்கள் தான் இந்த கிறீஸ் பூதங்கள்!    எல்லாம் நாம் திட்டம் போட்ட படி  நிறைவேற, பாவம் அந்த சிவப்பு உருவம் என்னிடம் முறையாக அகப்பட்டார். என் நீள்காற் சட்டையின் வார், அந்த சிவப்பு உருவத்தை, ஒரு மரத்துடன் கட்ட உதவியது. அவன் உடலில் ஏற்பட்ட எரிகாயங்களால் சத்தம் போட, ஊர்க்காரர்கள் எல்லாம் திரண்டு விட்டார்கள். அதன் பின் எமக்கு என்ன வேலை. அவர்களிடம் மிகுதி பொறுப்பை கொடுத்து விட்டு நாம் எம் விடுதிகளுக்கு போனோம் . ஆனால் அவள் இன்னும் அந்த அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை!  ஆகவே அவளை என் விடுதியில் உறங்க சொல்லி விட்டு , காவலுக்கு அவள் பக்கத்திலேயே , அவளை, அவள் அழகை ரசித்தபடி, அந்த சிவப்பு உருவத்துக்கு நன்றி கூறிக்கொண்டு இருந்தேன்!!    "சயனகோலம் அவளின் அழகு கோலம்  சரிந்த படுக்கையில் தேவதை கோலம்  சங்கு கழுத்து சிவப்பாய் ஒளிர்ந்து  சங்கடம் தருகிறது அவளின் பார்வை"     "சயந்தி அவள் இந்திரன் மகள் சந்திரன் போன்ற அழகு நிலா  சரீரம் தரும் கவர்ச்சி மயக்கத்தில்  சற்று நானும் என்னை மறந்தேன்"     "சக்கர தோடு கழுத்தை தொட  சடை பின்னல் அவிழ்ந்து விழ  சலங்கை கால் இசை எழுப்ப  சங்காரம் செய்யுது இள நகை"   [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]     
    • "காலம் மாறும் கவலைகள் தீரும்?"     'காலம் மாறும் கவலைகள் தீரும்' கேட்க நல்லாகத் தான் இருக்கிறது. ஆனால் இலங்கை தமிழர்கள் வாழ்வில், 76 ஆண்டுகள் கடந்தும் இன்னும் கவலைகள் தீரவில்லை என்பதே உண்மை! தன் மகனை, இராணுவம் விசாரணைக்கு என்று கூப்பிடும் பொழுது, தானே தன் கையாயால், இராணுவத்திடம் ஒப்படைத்த தாயின் மற்றும் தங்கையின் கண்ணீர் மூன்று தசாப்தம் கடந்தும் இன்னும் வடிந்து கொண்டே இருக்கிறது. காலம் மட்டும் மாறியுள்ளது. ஆமாம் யுத்தம் முடிந்தே பதினைந்து ஆண்டுகள் கடந்து விட்டது. இலங்கை சூழ்நிலை எவ்வளோவோ மாறி உள்ளது, ஆனால் தமிழரின் வாழ்வில் மட்டும், தமிழ் மொழியின் அரச பாவனையில் மட்டும் எந்த மாற்றமும் இல்லை, முன்னையதை விட பின்னோக்கியே போய்க் கொண்டு இருக்கிறது!   அவன் அப்போது உயர்தர பரீடசை எடுத்து விட்டு மறுமொழிக்காக காத்திருந்த காலம். யாழ் மத்திய கல்லூரியில் படிப்பில் முதலாவதாகவும் விளையாட்டில் சிறப்பாகவும் திகழ்ந்தவன். குடும்ப சூழலை முன்னிட்டு, பரீடசைக்கும் மறுமொழிக்கும் இடையில் இருக்கும் இடைவெளியில்  அவன் காங்கேசன் துறை சீமெந்து தொழிற்சாலையில் ஒரு தற்காலிக வேலை எடுத்து, அதில் மிக ஈடுபாடுடன் வேலை செய்து கொண்டு இருந்தான்.    யாழ்ப்பாணத்தின் வடக்கே காங்கேசன் துறையில் சுமார் 700 ஏக்கர்கள் இடப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்தத் தொழிற்சாலையில் சுமார் 1500 தொழிலாளர்கள் வரை கடமையாற்றினர். வருடமொன்றிற்கு சுமார் 760 000 மெற்றிக் தொன் சீமெந்து இங்கிருந்து உற்பத்தி செய்யப்பட்டது. சீமெந்து உற்பத்திக்கான மூலப்பொருட்களில் சுண்ணாம்புக்கல் அருகிலுள்ள நிலப்பகுதிகளில் இருந்தும் களிமண்ணானது மன்னாரின் முருங்கன் பகுதியில் இருந்தும் பெறப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது.    அவனின் பொல்லாத காலம்  இந்தத் தொழிற்சாலையின் செயற்பாடுகள் போர்ச்சூழலின் காரணமாக 1990 ஆம் ஆண்டு இடைநிறுத்தப்பட்டன. அது அவனை பெரிதாக பாதிக்காவிட்டாலும்,  அதை தொடர்ந்து ராணுவத்தின் சந்தேகம் அங்கு வேலையில் இருந்த இளம் தலைமுறையினர் பக்கம் சென்றது தான் அவனுக்கு பிரச்னையைக் கொடுத்தது. அவனை விசாரணைக்கு என, வீடு வந்து கேட்கவும், அவனின் தாய்,  விசாரணையின் பின் விடுவார்கள் என்ற நம்பிக்கையில் தானே, ராணுவ கேம்ப் போய் கொடுத்ததை முப்பத்தி மூன்று ஆண்டுகள் கழித்தும் இன்னும் சொல்லிக் கொண்டே இருந்தாள் .       எத்தனை அரசு மாறிவிட்டது. ஆனால் என்ன பிரயோசனம்? தமிழ் பேசும் மக்களின் அடிப்படை உரிமையும் பிரச்சனையும் மட்டும்  தீர்ந்தபாடில்லை. இலங்கையில் 1990களில் இருந்து, 2014 வரை வடக்கு - கிழக்குப் பகுதிகளில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயிருப்பதாக சொல்லப்படுகிறது. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், சுமார் ஐந்து / ஆறு வருடங்களுக்கு மேலாக தொடர் போராட்டங்களை அவர்களது உறவினர்கள் முன்னெடுத்து வருகின்றனர். இவ்வாறு போராட்டங்களை முன்னெடுத்த பெற்றோரில் பலர், இன்று உயிர் இழந்துவிட்டனர். அப்படித்தான் இவனின் தாயும் கடந்த ஆண்டு இறந்துபோனார் என்பது கவலைக்குரிய செய்தியாகும். என்றாலும் இப்ப அவனின் தங்கை அந்த பொறுப்பை எடுத்துள்ளாள்.   அவள் திருமணம் செய்து இரு பிள்ளைகளின் தாய். கணவனோ ஒரு விபத்தில் சிக்கி, ஊனமுற்றவராக இருந்தாலும் வீட்டில் இருந்து பிள்ளைகளை கவனிப்பதுடன் நிகழ்நிலையில் கணக்காளர் பணி [Online accountant job] புரிகிறார். அவளும் உயர்வகுப்பு கணித ஆசிரியை. அவர்களின் வருமானம் காணும் என்றாலும், அண்ணனின் தேடுதல் தொடர்ந்து கவலையையே  கொடுத்துக் கொண்டு இருந்தது. இந்த நிலையில், இன்று  ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்குவதாக அரசாங்கத்தின் உயர்பீடம் அறிவித்தது, அவளுக்கு கையும் காலும் ஓடவில்லை. பாடசாலையில் இருந்து கவலை தோய்ந்த நிலையில் வீடு திரும்பினாள். கணவன், அவளின் இரு பிள்ளைகளும் அவளையே உற்று நோக்கினார். என்ன செய்வது என்று ஒருவருக்கும் புரியவில்லை. காலம் இன்று மாறி உள்ளது என்பது உண்மையே. ஆனால் இவர்களின் கவலை மட்டும் இன்னும் தொடர்கிறது!   “காலம் ஒருநாள் மாறும் – நம் கவலைகள் யாவும் தீரும் வருவதை எண்ணி சிரிக்கின்றேன் வந்ததை எண்ணி அழுகின்றேன் சிலர் அழுவார் சிலர் சிரிப்பார் – நான் அழுதுகொண்டே சிரிக்கின்றேன்”   தன் வாழ்வும் தன் பிள்ளைகளின் வாழவும் சரியாக வருவதை எண்ணி மகிழும் அதே நேரத்தில், வந்ததை , ராணுவத்திடம் விசாரணைக்காக நேரடியாக தாயால் ஒப்படைக்கப் பட்ட அவளின் அண்ணாவை எண்ணி இன்னும் அழுது கொண்டுதான் இருக்கிறாள்!!    அவள் இப்ப போராட்டத்துக்கு தலைமை தங்கினாள். தன் ஆசிரியர் பதவியை தூக்கி எறிந்தாள். "வாழும் வரை போராடு" இப்ப அவளின் தாரகமந்திரம். தாயின் ஆத்மா சாந்தியடைய வேண்டும். அதற்கா எதையும் செய்யத் துணிந்து விட்டாள். அவளுக்கு வேறு வழி ஒன்றும் தெரியவில்லை. இதை  இதனுடன் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். என் பிள்ளைகள் உரிமையுடன் மதிப்புடன் வாழவேண்டும் என்பதே இப்ப அவளின் ஒரே குறிக்கோள் !      "வாழும் வரை போராடு வழி உண்டு என்றே பாடு    இன்று ரோட்டிலே நாளை வீட்டிலே மழை என்றும் நம் காட்டிலே   வீதியில் பாடும் பாடல் நாளை ஊரையே விலை பேசும் எந்நாளும் என் கீதம் மண்ணாழும் உண்மையே ஒரு காலம் உருவாகும் நிலை மாறும் உண்மையே!"   இறுதி யுத்தத்தில் கண்கண்ட சாட்சியாக ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்கப்படுவ தென்றால், கைது செய்யப்பட்ட அனைவரும் கொலை செய்யப்பட்டார்களா? இது தான் அவளின் கேள்வி? இது நியாயமான கேள்வியே! அப்படி என்றால் ராணுவத்திடம் ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதனை அரசு கூற வேண்டும் என்ற சுலோகத்துடன் அவள் வீதிக்கு புறப்பட்டாள்! இனி அவளின் வாழ்வு  நீதி கிடைக்கும் வரை ஓயபோவதில்லை! காலம் ஒரு நாளும் காத்திருக்காது. அப்படி என்றால்? எப்ப அவளின் காட்டில் மழை பெய்யும் ? யாம் அறியேன் பராபரமே!!   "கருணை என்னும் கண் திறந்து காட்ட வேண்டும் காவல் என்னும் கை நீட்டிக் காக்க வேண்டும் ஒற்றுமை கொண்டு ஒன்றாய் நிற்க வேண்டும்  ஒரே குரலில் நீதி விசாரணை கேட்க வேண்டும்!"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]       
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.