Jump to content

தமிழீழ தேசியக்கொடி


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கனேடிய தமிழ் இளையோர் ஒன்றியத்ததால் ஆரம்பிக்கப்பட்டுள்ள தமிழீழ தேசியக்கொடி இணையம்.

http://www.tamilnationalflag.com/

Link to comment
Share on other sites

தமிழர்கள் ஆரம்ப்பித்த தமிழர் கொடி.

அதனால் தயவுசெயது எல்லோரும் அதற்கு வாக்களியுங்கள். தமிழீழ கொடியாக்குங்கள்.

நன்றி.

Link to comment
Share on other sites

தேசியக்கொடி என்பது வெறுமனே ஒரு நீள்சதுரதுணி அல்ல.அது ஒரு மக்கள்கூட்டத்தின் உணர்வு,உயிர்ப்பு,வாழ்வு எல்லாமே.

அதற்காக வாக்களிப்பது எல்லோரின் கடமையும் ஆகும்.

Link to comment
Share on other sites

உலகெங்கும் வாழும் அனைத்து மக்களும் தமது நாட்டுக்கெனஇ தம்மை பிரதிநிதிதுவப்படுத்தும் தனித்துவமான கொடிகளைக் கொண்டுள்ளார்கள். இவ்வாறாக நாடுகளை பிரதிநிதிதுவப்படுத்தும் கொடிகளுக்கு வழங்கப்படும் மரியாதையே அந் நாட்டு மக்களுக்கு வழங்கப்படும் மரியாதையாகக் கருதப்படும்.

உலகெங்கும் பரந்து வாழும் தமிழரனான எமக்கு தமிழீழத் தேசியக் கொடியே எமது வரலாறு மற்றும் அடக்குமுறைகளுக்கு எதிரான தியாகங்களை எடுத்தியம்புகின்றது. இத்துடன் ஓர் நாட்டின் தேசியச் சின்னங்களானவை அந்நாட்டின்இ அந்த நாட்டு மக்களின்இ அரசியல் அபிலாசைகளைக் குறித்து நிற்கும்.

காலம் காலமாக தமிழீழ மக்கள் தொடர்ச்சியாக அந்நிய சக்திகளால் அடக்குமுறைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்கள். இவ் அந்நிய சக்திகளால் தமிழ் மக்களின் தேசிய இறையாண்மை தொடர்ச்சியாக நசுக்கப்பட்டு வந்தது. யாழ் பேரரசின் முடியாட்சி போர்த்துக்கேயரால் சிதைக்கப்பட்டபோது நந்திக் கொடியை தமிழர்கள் இழந்து நின்றனர். பின்னர் வன்னி இராட்சியம் தனது வாள் பொறிக்கப்பட்ட கொடியை பண்டார வன்னியன் மன்னன்னது தோல்வியோடு இழந்தது. இவாறான அந்னிய அடக்குமுறைப் போர்களால் தமிழர்களது கொடியும் அவர்களது பாரம்பரிய தேசியச் சின்னங்களும் இழக்கப்பட்டுஇ தொடர்ந்து அவர்களது வரலாற்றிலிருந்தும் அழிக்கப்பட்டது.

தமிழீழரின் தேசியக்கொடியானது தமிழ் மக்கள் தம் பாரம்பரிய தாயகமாம் தமிழீழத் தேசியத்தின் மேற் கொண்டுள்ள அபிலாசைகளை எடுத்து காட்டுகின்றது. தமிழீழத் தமிழர் அனைவருமே தமது விடுதலைக்காக பாடுபட்ட மாவீரை நினைவூட்டும் தமிழீழக்கொடியை அவர் மனதில் வைத்து போற்றுகின்றனர். கனேடிய தமிழ் இளையோர் அமைப்பினால் இன்று கார்த்திகை 1ம் திகதியன்று பிரிகேடியர் சுப தமிழ்ச்செல்வன் அண்ணா அவர்களின் நினைவு நாளையொட்டி தமிழீழக் கொடி முன்மொழிவும் தொடர் விழிப்புணர்ச்சி நிகழ்வுகளும் ஆரம்பிக்கப்பட்டன.

தேசியக் கொடியின் கீழ் அனைவரும் ஒன்றிணைவதன் மூலம் ஈழத் தமிழர்கள் உலகுக்கு தமது அரசியல் அபிலாசைகளை ஆணித்தரமாக எடுத்துக் கூறியுள்ளனர். எமது தமிழீழக் கொடியை முன்மொழியும் இத் தொடர் விழிப்புணச்சி நிகழ்வின் மூலம் ஈழத் தமிழர்கள் உலகுக்கு தனித்தமிழீழமே தீர்வு என எடுத்துக் கூறவுள்ளனர்.

இன்றைய நினைவுதினத்தில் இவ் முன்மொழிவு நிகழ்வும் ஒவ்வொரு தமிழனும் தனது தமிழீழத் தேசியக் கொடியை முன்மொழியக் கூடியவாறு http://www.tamilnationalflag.com/ பிரத்தியோக இணையத்தளமும் மாவீரர் குடும்பத்தால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. தமிழ்ச்செல்வன் அண்ணா அவர்களது நினைவுதினமான இன்றுஇ அவரின் மற்றும் அனைத்து தியாகிகளின் வேட்கையான தமிழீழத்தைஇ எம் தமிழீழக் கொடியை மற்றும் தேசியச் சின்னங்களை அனைத்து தமிழரும் இளையோரும் எமது பாரம்பரியக் சின்னங்களாக முன்மொழிந்து எற்றுக்கொண்டனர்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
    • உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். இப்ப ஜேர்மனியிலை எதுக்கெடுத்தாலும் தொட்டால் பட்டால் புட்டின் தான் குற்றவாளி.அந்த மாதிரி மக்களை மூளைச்சலவை செய்துகொண்டு போகின்றார்கள். இணக்க அரசியலுக்கு பெயர் போன ஜேர்மனி இப்படி ஆகிவிட்டது. உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள்.  
    • அத்துடன் மாவீரர் நாளில் மிகுந்த சனத்தை  பார்க்க கூடியதாக இருந்தது. (வன்னியில் என நினைக்கிறேன்)      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.