Jump to content

சரித்திரம் ஆண்களின் விந்தணுக்களால் எழுதப்பட்டது...


Recommended Posts

:Dநான் சொன்ன பாதிப்பு, முன்பு ஏதாவது மேலதிகாரியினால் பாதிப்படைந்தீர்களோ என்பது பற்றியது?? :)
Link to comment
Share on other sites

வசம்பு உங்கட குசும்பு தாங்க முடியலை!!!!!!

நான் படத்தில பாலியல் வல்லுறவு காட்சி வந்தாலே கண்ணை பொத்தி கள்ள கண்ணால பாக்கிறனான்..........................

என்னைப் போய் உப்புடி சொல்லிப் போட்டியளே!!!!!!!!

நல்ல வேளை என்ர மனிசி இதை படிக்கேலை....................

பேந்து என்ர மனிசி பாவப்பட்ட புரிசனோடை குடும்பம் நடத்துறன் எண்டு பாவம் கலைக்க கோயில் குளம் எண்டு வீட்டிலும் இருக்காமல்

திரிய அதால என்ர காசு எல்லாம் அழிய அதை வச்சு ஜயர் பணக்காரன் ஆக.......................இதெல்லாம் வேண்டாம்...................

எண்டு நான் புத்தியோட வாழ்க்கை நடத்துறன்!!!!!!!!

செக்ஸ் என்பது மிருக வெறியல்ல. மென்மையாய்

நிதானமாய் படிப்படியாய் மெல்லக் கடக்கும் யோகப் பயிற்சி போன்றது

தியானம் செய்வது போல் அமைதியையும் ஆனந்தத்தையும் தரக்கூடியது.

இங்கே உடலே கோவில் மனனே மந்திரம் என்பதைப் புரிந்து கொண்டால்

படுக்கை அறை கூட கற்பக்கிரகமாக மாறும்!!!!!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

செக்ஸ் என்பது மிருக வெறியல்ல. மென்மையாய்

நிதானமாய் படிப்படியாய் மெல்லக் கடக்கும் யோகப் பயிற்சி போன்றது

தியானம் செய்வது போல் அமைதியையும் ஆனந்தத்தையும் தரக்கூடியது.

இங்கே உடலே கோவில் மனனே மந்திரம் என்பதைப் புரிந்து கொண்டால்

படுக்கை அறை கூட கற்பக்கிரகமாக மாறும்!!!!!!!

மிருகங்கள் பறவைகள் மனிதனை விட மிகவும் ஆரோக்கியமான பாலியல் நடத்தை கொண்டவை. அவையிடம் மனிதன் தான் இந்தக் கலையின் மென்மை.. பரிசுத்தம் பற்றிக் கற்றுக் கொள்ள வேண்டுமே தவிர.. மிருகங்கள் போல் வெறியோடு என்ற பத்தைக் காட்டிலும் மனிதனைப் போன்று வெறியோடு என்று பாவிப்பது நன்று என்று நினைக்கிறேன்.

விலங்குகளின் பாலியல் நடத்தை இயற்கையின் செல்வாக்குக்குள் நின்று கொள்கிறது. மனிதனின் பாலியல் நடத்தை என்பது இயற்கையையும் தாண்டி செயற்கைக்குள்ளும் நுழைந்து விடுவதுதான் வக்கிரத்தனமான வெறித்தனமான வெளிப்பாடுகளைக் காண்பிக்கத் தூண்டுகின்றன என்று நினைக்கிறேன். இயற்கை அசெளகரியமான ஒன்றை உயிரியில் தேர்வு செய்வதில்லை..! மனிதன் மட்டுமே அதை செய்து கொள்கிறான்..! இங்கும் கூட அசெளகரியம் என்றால் அதற்கு மனிதனின் இயற்கைக்கு மாறான மென்போக்கற்ற நடத்தை தான் காரணமே அன்றி விலங்குகளோ இயற்கையோ அல்ல..! :D

Link to comment
Share on other sites

வசம்பு உங்கட குசும்பு தாங்க முடியலை !!!!!!

செக்ஸ் என்பது மிருக வெறியல்ல. மென்மையாய்

நிதானமாய் படிப்படியாய் மெல்லக் கடக்கும் யோகப் பயிற்சி போன்றது

தியானம் செய்வது போல் அமைதியையும் ஆனந்தத்தையும் தரக்கூடியது.

இங்கே உடலே கோவில் மனனே மந்திரம் என்பதைப் புரிந்து கொண்டால்

படுக்கை அறை கூட கற்பக்கிரகமாக மாறும் !!!!!!!

உங்க கருத்தை நன்கு புரிந்தவர் இந்தக் குருக்கள் மாத்திரமே. என்ன சற்று மாறுதலாக கற்பக்கிரகம் கூட படுக்கையறையாக மாறும் என்கின்றார்.

கருவறை காம குருக்கள்...

காஞ்சிபுரத்தின் மச்சேசப் பெருமான் கோயிலின் குருக்களான தேவநாதன், அந்த கோயில் கருவறைக்குள்ளேயே பெண்களோடு சல்லாபித்த மகாபாவக் காட்சிகளை தாங்கிய வீடியோவின் விவரங்கள் 30-09-2009 இதழ் ஜூ.வி-யில் வெளியானது. காஞ்சி மாநகரத்தை மட்டுமின்றி தமிழ்நாட்டையே கதிகலங்க வைத்த வீடியோ ஆதார கவர் ஸ்டோரி அது!

கட்டுரை தாங்கிய இதழ் கடைகளுக்கு வந்து, குறிப்பிட்ட குருக்களைத் தேடி போலீஸ் போவதற்கு முன்பே அவர் எஸ்கேப்! போலீஸும் தேடோ தேடென்று 'சந்தன' வீரப்பன் ரேஞ்சுக்கு வலைவீசிக் கொண்டே இருந்தது. போதாக்குறைக்கு அவர் வீட்டைச் சுற்றி கண்காணிப்புப் போட்டு குருக்கள் மாறுவேடத்தில் வந்து போகிறாரா என்று தொடர் வாட்சிங் வேறு!

வழக்குப் பதிவு செய்த சிவகாஞ்சி காவல்நிலைய கான்ஸ்டபிள் இடையில் ஒரு நாள் போய் தேவநாத குருக்களின் தந்தையிடம் விசாரிக்க... அவரின்தந்தை

டென்ஷனின் உச்சத்துக்குப் போய் ஏதோ காட்டமாகச் சொல்ல.. வாய்வழி விசாரணையே வாய்ச்சண்டை விவகார மாக மாறிப்போக... காவலர் பணியில் குறுக்கிட்டதாகச் சொல்லி குருக்களின் தந்தையை கைது செய்தது போலீஸ்.

சத்தமில்லாமல் கடந்த மாதமே முன் ஜாமீன் கேட்டு உயர் நீதிமன்றத்தில் தேவநாத குருக்கள் மனு செய்திருக்க... நவம்பர் 12-ந்தேதி அதன் மீதான விசாரணை நடந்தது. இந்துமத மக்களின்உணர்வுகளைப் புண்படுத்தியதான அடிப்படை குற்றச்சாட்டுடன் வேறு சில செக்ஷன்களிலும் குருக்களை கைது செய்ய தாங்கள் காத்திருப்பதாகப் போலீஸ் சொன்னது. குருக்களை கஸ்டடி எடுத்து விசாரிப்பதோடு, அந்த வீடியோ காட்சிகளில் இடம்பெறும் பெண்களிடமும் விசாரிக்க வேண்டும் என்றது போலீஸ்.

இதைத் தொடர்ந்து, தேவநாத குருக்களுக்கு முன்ஜாமீன் தர முடியாது என்று கோர்ட் மறுத்துவிட... குருக்களின் தலைமறைவு தொடர்கிறது.

நாம் விசாரித்த வரையில் சென்னை நங்கநல்லூரில் தேவநாத குருக்களின் சொந்தங்கள் ஏராளமாக வசிக்கிறார்களாம். இவர்கள்தான் குருக்களுக்கு அடைக்கலம் கொடுத்து, காப்பாற்றி வருகிறார்களாம். குருக்களின் தொடர் தலைமறைவை அவர் பூஜை செய்த சில கோயில்களின் நிர்வாகிகளே விரும்புவதாகவும் காஞ்சிபுரத்தில் ஒரு பேச்சிருக்கிறது. காரணம், கருவறை காமக் களியாட்டங்களை அரங்கேற்றியது குருக்கள் மட்டுமல்ல... அவருடன் வேறு சிலரும் இதில் பங்கேற்றிருக்கிறார்கள் என்ற புதுத் தகவலையும் இப்போது சொல்கிறார்கள்.

இப்போதும் தினமும் இரவில் தன் சொந்த ஊரான பழையசீவரத்துக்கு விசிட் அடிக்கும் தேவநாத குருக்கள், அங்கு சிலரை சந்திப்பதாகவும் சொல்கிறார்கள்.

கொடுமைக்கு கிரீடம் வைக்கும் விவகாரம் என்னவென்றால்... குருக்களின் கருவறைக் காமக் களியாட்டக் காட்சிகள் ஏதோ ரிலீஸான புது சினிமா ரேஞ்சுக்கு சில விஷமிகளால் வெளியிடப்பட்டுள்ளன. சில வியாபாரிகளால் பல காப்பி எடுக்கப்பட்டு... 'ஒரு காப்பி நூறு ரூபா!' என்று கூவிக்கூவி விற்கப்பட... காஞ்சிபுரம் போலீஸ் லத்தியைச் சுழற்றிக்கொண்டு சி.டி. வியாபாரிகளை துரத்த ஆரம்பித்திருப்பது தனிக்கதை!

விகடன்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.