Jump to content

ஜெர்மனியில் வெளிநாட்டவர் சபைக்கான தேர்தலில்.சாந்தி ரமேஸ் போட்டியிடுகிறார்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் அக்கா... :o

Link to comment
Share on other sites

  • Replies 61
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் சாந்தியக்கா.

Link to comment
Share on other sites

வாழ்த்துகள் தலைவியே.... உங்கள் ஊர் பக்கம் எப்பவாவது விசிட் அடித்தால், ஆடுவெட்டி கறிசமைத்து இந்த வெற்றியை கொண்டாட வேண்டும்.. சரியோ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துகள் தலைவியே.... உங்கள் ஊர் பக்கம் எப்பவாவது விசிட் அடித்தால், ஆடுவெட்டி கறிசமைத்து இந்த வெற்றியை கொண்டாட வேண்டும்.. சரியோ

எங்கடையளுக்கு நித்திரையிலையும்

ஆடு வெட்டி படையல் போடுறதிலைதான் நினைப்பிருக்கும். :)

நிழலி!

இஞ்சை வந்து இதுகளுக்குத்தான் மவுசு

kumarasamayyinrai.jpg

Link to comment
Share on other sites

சாந்தி!

ஒரு சந்தேகம் கேட்டதற்கு இப்படி என் மீது பாயத் தேவையில்லை என்று நினைக்கிறேன்.

சாத்திரி "Rheinland Pfalz மாநிலத்திற்கான வெளிநாட்டவர் சபை" என்று எழுதியிருந்தார். மாநிலத்தில் உள்ள நகரங்களுக்கான வெளிநாட்டவர் சபை என்று எழுதியிருந்தால் எனக்கு இந்த சந்தேகம் வந்திருக்காது.

மாநிலத்திற்கான வெளிநாட்டவர் சபைக்கான தேர்தல் என்று எழுதியிருந்ததோடு அந்த மாநிலத்தின் முதலமைச்சர் வேட்பாளர்களுடன் நிற்கின்ற படமும் போடப்பட்டிருந்தது எனக்கு மேலும் குழப்பத்தை தந்து விட்டது. Ausländerbeirat தேர்தல்களில் மாநில முதலமைச்சர்களுக்கு பொதுவாக எந்த அக்கறையும் இல்லை.

சபேசன் உங்களில் பாயவில்லை. நீங்கள் என்னவென்று புரியாமல் கேள்விக்குறியிடவில்லை. அது மட்டும் உண்மை. செய்தியை எழுதிய சாத்திரி உங்களுக்குப் புரியாமல் எழுதினாரா ? அதைவிடுகிறேன்.

Ausländerbeirat தேர்தல்களில் மாநில முதலமைச்சர்களுக்கு அக்கறையில்லையென்ற உங்கள் கருத்து எனக்குப் புரியவில்லை. எங்கள் மானில முதல்வர் இந்தத்தேர்தலில் அக்கறையுடன் அனைத்து வேட்பாளர்களையும் சந்தித்தார். மிகவும் அக்கறையுடன் தனது ஆதரவையும் வெளிநாட்டவர் அவையின் செயற்பாடுகள் பற்றியும் தெரிவித்திருந்தார். மற்றும் குடும்ப சமூக சுகாதார அமைச்சர் பொருளாதார அமைச்சர் ஆகியோரும் இச்சந்திப்பில் கலந்து கொண்டார்கள்.

15வருடம் முதல் அல்லது 10வருடம் வரை Ausländerbeirat இல் நிறைய மாற்றங்கள் நிகழ்ந்திருக்காதா ?

நீங்கள் ஓர் ஆய்வாளர் இந்த Ausländerbeirat பற்றி ஆய்ந்து அறிந்து ஒரு ஆய்வை எழுதுங்கள். பலர் பயனுறுவார்கள்.

Link to comment
Share on other sites

முக்கியமாக Auländerbeiratல் போட்டியிடுவது ஒரு பெரிய விடயம் இல்லை. Auländerbeiratல் 15ஆண்டுகளுக்கு மேலாகவே பல நகரங்களில் தமிழர்கள் போட்டியிட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். இந்த நிலையில் நீங்கள் போட்டியிடுவதை படங்களோடு யாழ் களத்தில் இணைத்திருந்தது என்னுடைய சந்தேகத்தை அதிகரித்து விட்டது.

ஓம் பல நகரங்களில் Ausländerbeirat தேர்தலில் தமிழர்கள் போட்டியிட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். இதை இல்லையென்று மறுக்கவில்லை. இத்தனையும் அறிந்த உங்களால் ஒரு சொல்லைப் புரிந்து கொள்ள முடியவில்லையென்றது உண்மையில்லை சபேசன்.

இந்தத் தேர்தலில் வெற்றிபெறுவேன் என்ற நம்பிக்கை எனக்கே இருக்கவில்லை. காரணம் துருக்கியர் றஸ்சியர் கூட வாழும் நகரத்தில் நாங்கள் வெல்லமாட்டோமென்ற எண்ணத்தை முடிவுகள் மாற்றியிருக்கிறது. எங்களால் இந்த பல்லின சமூகத்துடன் இயங்க முடியுமென்ற உண்மையை சொல்லியிருக்கிறது.

ஒரு இலங்கை மனிதவுரிமை மீறல் கலந்துரையாடலில் பங்கேற்கமாட்டேன் காரணம் புலிகள் நீங்கள் என்று மறுத்த நகரபிதாவின் கையால் வாழ்த்தும் வரவேற்பும் கிடைத்தது பெரிய வெற்றிதான் என்வரையில்.

மற்றது உங்களைப் பொறுத்தவரை Ausländerbeirat தேர்தல் என்பது பெரிய விடயமேயில்லை. சரி. ஏனெனில் நீங்கள் அஞ்சலா மெயாகல் லெவலில் சிந்திக்கிறபடியால் சிம்பிள்தான். ஆனால் Ausländerbeirat தேர்தல் எங்கள் மானிலத்தில் எமக்குப் பெரியவிடயமாக உள்ளது. ஏனெனில் நாங்கள் சமான்ய குடிமக்கள். அதையும் விடவும் ஒரு சமூகத்தின் நம்பிக்கையைப் பெற்று அந்தச் சமூகத்துடன் இணைந்து எமக்கான வேலைத்திட்டங்களைக் கொண்டு செல்ல வேண்டிய தேவையிருக்கிறது. அட இது பெரியவிடயமே இல்லையென்று ஒதுக்கியதையெல்லாம் இப்போ தேடித்தேடிப் போகிறோம். ஏனெனில் தேவையுள்ளதால்.

நீங்கள் தெரிவானதைப் பயன்படுத்தி

பரப்புரை நிகழ்வுகளுக்கு மண்டபங்கள் ஒழுங்கு செய்ய உதவுங்கள்

உங்கள் நகரில் நடக்கக் கூடிய தமிழர் கலாச்சார நிகழ்வுகளுக்கு நிதி பெற உதவுங்கள்

மாநில முதலமைச்சர் போன்றவர்களுடன் தொடர்புகள் கிடைத்தால் பரப்புரைக்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள்

சபேசன் ,

ஆக Ausländerbeirat ஊடாக

1)தமிழர்களுக்குக் கிடைக்கும் நன்மை மண்டபம் ஒழுங்கு செய்யும் உரிமையா ?

2) தமிழர் கலாசார நிகழ்வுகளுக்கு நிதி சேர்த்தல் மட்டுமா ?

அப்போ ஆகக்கூடியளவு தமிழர்கள் இதுவரை Ausländerbeirat ஊடாக மண்டபங்கள் எடுக்கத்தான் பயன்படுத்தியுள்ளார்களா ? (எனக்கும் புரயவில்லை)

Link to comment
Share on other sites

மாநில முதலமைச்சர் போன்றவர்களுடன் தொடர்புகள் கிடைத்தால் பரப்புரைக்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள்

இனியாவது மேய்ப்பு ஆலோசனைகளை நிறுத்திக் கொண்டு நீங்களும் இதுபோன்ற பக்கங்களில் உங்கள் பங்களிப்புகளை செய்யுங்கள் சபேசன்.

உங்கள் நகரில் நடக்கும் அடுத்த Ausländerbeirat தேர்தலில் நீங்கள் நில்லுங்கள். அதிக பட்சம் Ausländerbeirat பற்றிய ஒரு ஆய்வையாவது செய்து தாருங்கள். யேர்மனியில் பல்லாயிரம் தமிழர்கள் வாழ்கிறார்கள். அவர்கள் தங்கள் திருமண பிறந்தநாள் விழாக்களையாவது Ausländerbeirat புண்ணியத்தால் கொண்டாடட்டும்.

இதையும் உங்களில் பாய்தல் என்று அர்த்தம் கொள்ளாமல் புரிந்து கொள்ளுங்கள்.

அல்லது சபேசன் குறிப்பிட்டதைப்போன்று பரப்புரை நிகழ்வுகளுக்கு மண்டபங்கள் ஒழுங்கு செய்யவும்

உங்கள் நகரில் நடக்கக் கூடிய தமிழர் கலாச்சார நிகழ்வுகளுக்கு நிதி பெற உதவவும்

மாநில முதலமைச்சர் போன்றவர்களுடன் தொடர்புகள் கிடைத்தால் மேற்கொண்டு உங்கள் பிரதேசத்தில் வாழும் மக்களுக்கு உதவவுமே மட்டும் பயன்படக்கூடியதா?

சகாரா இதற்கு சபேசன் தான் பதில் தர வேண்டும். எனக்கு சபேசன் சொன்ன ஆலோசனைகள் பற்றி தெரியவில்லை.

Link to comment
Share on other sites

இந்த வெற்றியை நீங்கள் எவ்வகையில் உபயோகப்படுத்தலாம்? உங்களுக்கான அதிகாரங்கள் என்று பிரத்தியேகமாக ஏதேனும் உள்ளதா? மேலதிகமாக எவற்றையெல்லாம் உங்களுக்குக் கிடைத்த இவ்வெற்றியைப் பயன்படுத்தி நீங்கள் செய்யமுடியும்?

சாந்தி நீங்கள் வாழும் நாட்டில் இருக்கும் அரசியல் பற்றி எனக்குத் தெரியாது. அறிந்து கொள்வதற்காகவே கேட்கிறேன்.

சகாரா,

அரைமணித்தியாலம் ரைப்பண்ணினது அழிஞ்சிட்டுது.

இதைப்பயன்படுத்தி எமக்கான விடயங்களை செய்யலாம். பல்லின மக்களுடனான தொடர்புகள் அரசியலாளர்கள் மற்றும் நகர நிர்வாக சபைகளில் நாம் சொல்ல விரும்புபவற்றை சுதந்திரமாக சொல்லலாம். நமக்கான ஆதரவுகளைத் திரட்டிக்கொள்ளலாம்.

அரசியல் சக்திகளை மாற்றியமைத்து உரிமைகளை எடுத்துக் கொள்ளும் எந்த அதிகாரமும் இல்லை. நாம் இதன் ஊடாக மேலதிகமாகச் செய்ய விரும்புபவற்றை இந்த நாட்டின் சட்டங்கள் மற்றும் விதிமுறைகளுக்கு அமையச் செய்வதில் தடையில்லை. ஆனால் இதைத்தான் செய்யப்போகிறேன் என்று கொள்கை விளக்கம் சொல்லிக் கொண்டு போனால் எதுவும் செய்ய முடியாது. இதில் தேர்வானவர்கள் எப்படி பயன்படுத்துகிறார்களோ அப்படி பயன்கள் உண்டு.

அரை மணித்தியாலம் ரைப்பண்ணியது அழிஞ்சு போச்சு. இது தொடர்பான விபரங்கள் நாளை எழுதுகிறேன் சகாரா.

Link to comment
Share on other sites

alvaiyooraan

arjun

கறுப்பி

குமாரசாமி

தயா

கந்தப்பு

தமிழ் சிறி

marumakan

Nellaiyan

Pulukan

sagevan

அனிதா

கிறுக்குபையன்26

அனைவருக்கும் நன்றிகள்.

Link to comment
Share on other sites

வாழ்த்துகள் தலைவியே.... உங்கள் ஊர் பக்கம் எப்பவாவது விசிட் அடித்தால், ஆடுவெட்டி கறிசமைத்து இந்த வெற்றியை கொண்டாட வேண்டும்.. சரியோ

தலைவா ,

ஆடுமாடு வெட்டெல்லாம் நமக்குச் சரிவராது. ஓன்லி மரக்கறிதான். வரேக்க இலை குழை தளைகளில் சமையல் தரப்படும்.ஆரோக்கிய உணவு சரியோ. :)

:lol:

நிழலி!

இஞ்சை வந்து இதுகளுக்குத்தான் மவுசு

kumarasamayyinrai.jpg

குளோபஸ் கடைக்குக் கமராவோடை போய் வந்தமாதிரியிருக்குப் படம். நிழலிக்கு உந்த இரகசியங்களைச் சொல்லிவிட்டீங்களெண்டா பிறகு யேர்மனியில் குடியேற வந்திடுவார் குடும்பமாக. :D

வெளிநாட்டவர் அவையின் தேர்தல் பற்றி 10 விபரங்கள் எனக்குத் தரப்பட்டதை இங்கு இணைக்கிறேன். வாசித்துப் பாருங்கள். முடியுமாயின் தமிழில் மற்றவர்களுக்கு விளங்க மொழிமாற்றம் செய்து விடுங்கள்.

Bild7.jpg

சபேசன் நீங்கள் குறிப்பிட்ட எந்த ஆலோசனையும் இந்தக் குறிப்பில் காணவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தேர்தலில் வென்று தமிழர்களுக்கு நல்ல காரியங்களைச் செயற்படுத்த வாழ்த்துக்கள் சாந்தி அக்கா.

Link to comment
Share on other sites

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தத் தேர்தலில் பல வருடங்களுக்கு முன்பே தமிழர்கள் போட்டியிட்டு வெற்றியும் பெற்றிருந்தனர்.அதனால் தமிழர்களுக்கு ஒன்றும் கிடைக்கவில்லை.வென்றவர்கள் தங்களை வளர்த்துக் கொண்டது மட்டுமே நடந்தது. அவுஸ்ராண்ட பைறாற் உரிய தேர்தலே அது .வெளிநாட்டவர்களுக்கான ஆலோசனைச்சபையே அது.

புலவரின் கருத்து நியாயமானதே. யேர்மனியில் பல நகரங்களில் தமிழர்கள் போட்டியிட்டு வென்றிருக்கிறார்கள்.தங்களுக்குள் போட்டி போட்டுமிருக்கிறார்கள். ஆனால் தமிழருக்கு என்று பொதுவாக எதுவும் செய்தது கிடையாது. தங்களையும் தமது உறவுகளையும் தமக்குத் தெரிந்தோரையும் மட்டுமே அவர்களுக்கு வெற்றியின் பின் தெரியும்.

சில வருடங்களுக்கு முன் லண்டோ என்ற நகரத்திலும் ஒருதர் போட்டிபோட்டியிட்டு வெண்டவராம். தமிழரும் போட்டிச்சினம் ஆனால் ஒண்டுமே நடந்ததாகத் தெரியவில்லையென அந்த நகரத்துத் தமிழ் வாசிகள்(வாக்காளர்கள்) பேசிக் கொண்டார்கள். எங்கட தமிழரது பிறவிக்குணமான சுயநலப் போக்கு மாறாதவரை தமிழினத்துக்கு நன்மைகள் விளையப் போவதில்லை. விமர்சனத்தைக் கண்டு சன்னதம் கொள்வினமேயன்றிச் சரியாகச் சிந்திக்க மாட்டினம்.

தமிழ் பாடசாலையள் வழிய கூட உந்த வெளிநாட்டுப் பிரிவெண்டு இருக்கும். அவை என்ன செய்வினமெண்டால் ஏதாவது பிள்ளையளுக்கான விடயங் நடந்தா உடன தங்கட பிள்ளையளைத்தான கொண்டுபோறது. அத நிர்வாகத்தோட கலந்து எல்லாப் பிள்ளையளுக்கும் சந்தர்ப்பத்தை பெற்றுக் கொடுக்கிறேல்லை. இந்த லட்சணத்திலை......

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "காலம் மாறும் கவலைகள் தீரும்?"     'காலம் மாறும் கவலைகள் தீரும்' கேட்க நல்லாகத் தான் இருக்கிறது. ஆனால் இலங்கை தமிழர்கள் வாழ்வில், 76 ஆண்டுகள் கடந்தும் இன்னும் கவலைகள் தீரவில்லை என்பதே உண்மை! தன் மகனை, இராணுவம் விசாரணைக்கு என்று கூப்பிடும் பொழுது, தானே தன் கையாயால், இராணுவத்திடம் ஒப்படைத்த தாயின் மற்றும் தங்கையின் கண்ணீர் மூன்று தசாப்தம் கடந்தும் இன்னும் வடிந்து கொண்டே இருக்கிறது. காலம் மட்டும் மாறியுள்ளது. ஆமாம் யுத்தம் முடிந்தே பதினைந்து ஆண்டுகள் கடந்து விட்டது. இலங்கை சூழ்நிலை எவ்வளோவோ மாறி உள்ளது, ஆனால் தமிழரின் வாழ்வில் மட்டும், தமிழ் மொழியின் அரச பாவனையில் மட்டும் எந்த மாற்றமும் இல்லை, முன்னையதை விட பின்னோக்கியே போய்க் கொண்டு இருக்கிறது!   அவன் அப்போது உயர்தர பரீடசை எடுத்து விட்டு மறுமொழிக்காக காத்திருந்த காலம். யாழ் மத்திய கல்லூரியில் படிப்பில் முதலாவதாகவும் விளையாட்டில் சிறப்பாகவும் திகழ்ந்தவன். குடும்ப சூழலை முன்னிட்டு, பரீடசைக்கும் மறுமொழிக்கும் இடையில் இருக்கும் இடைவெளியில்  அவன் காங்கேசன் துறை சீமெந்து தொழிற்சாலையில் ஒரு தற்காலிக வேலை எடுத்து, அதில் மிக ஈடுபாடுடன் வேலை செய்து கொண்டு இருந்தான்.    யாழ்ப்பாணத்தின் வடக்கே காங்கேசன் துறையில் சுமார் 700 ஏக்கர்கள் இடப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்தத் தொழிற்சாலையில் சுமார் 1500 தொழிலாளர்கள் வரை கடமையாற்றினர். வருடமொன்றிற்கு சுமார் 760 000 மெற்றிக் தொன் சீமெந்து இங்கிருந்து உற்பத்தி செய்யப்பட்டது. சீமெந்து உற்பத்திக்கான மூலப்பொருட்களில் சுண்ணாம்புக்கல் அருகிலுள்ள நிலப்பகுதிகளில் இருந்தும் களிமண்ணானது மன்னாரின் முருங்கன் பகுதியில் இருந்தும் பெறப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது.    அவனின் பொல்லாத காலம்  இந்தத் தொழிற்சாலையின் செயற்பாடுகள் போர்ச்சூழலின் காரணமாக 1990 ஆம் ஆண்டு இடைநிறுத்தப்பட்டன. அது அவனை பெரிதாக பாதிக்காவிட்டாலும்,  அதை தொடர்ந்து ராணுவத்தின் சந்தேகம் அங்கு வேலையில் இருந்த இளம் தலைமுறையினர் பக்கம் சென்றது தான் அவனுக்கு பிரச்னையைக் கொடுத்தது. அவனை விசாரணைக்கு என, வீடு வந்து கேட்கவும், அவனின் தாய்,  விசாரணையின் பின் விடுவார்கள் என்ற நம்பிக்கையில் தானே, ராணுவ கேம்ப் போய் கொடுத்ததை முப்பத்தி மூன்று ஆண்டுகள் கழித்தும் இன்னும் சொல்லிக் கொண்டே இருந்தாள் .       எத்தனை அரசு மாறிவிட்டது. ஆனால் என்ன பிரயோசனம்? தமிழ் பேசும் மக்களின் அடிப்படை உரிமையும் பிரச்சனையும் மட்டும்  தீர்ந்தபாடில்லை. இலங்கையில் 1990களில் இருந்து, 2014 வரை வடக்கு - கிழக்குப் பகுதிகளில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயிருப்பதாக சொல்லப்படுகிறது. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், சுமார் ஐந்து / ஆறு வருடங்களுக்கு மேலாக தொடர் போராட்டங்களை அவர்களது உறவினர்கள் முன்னெடுத்து வருகின்றனர். இவ்வாறு போராட்டங்களை முன்னெடுத்த பெற்றோரில் பலர், இன்று உயிர் இழந்துவிட்டனர். அப்படித்தான் இவனின் தாயும் கடந்த ஆண்டு இறந்துபோனார் என்பது கவலைக்குரிய செய்தியாகும். என்றாலும் இப்ப அவனின் தங்கை அந்த பொறுப்பை எடுத்துள்ளாள்.   அவள் திருமணம் செய்து இரு பிள்ளைகளின் தாய். கணவனோ ஒரு விபத்தில் சிக்கி, ஊனமுற்றவராக இருந்தாலும் வீட்டில் இருந்து பிள்ளைகளை கவனிப்பதுடன் நிகழ்நிலையில் கணக்காளர் பணி [Online accountant job] புரிகிறார். அவளும் உயர்வகுப்பு கணித ஆசிரியை. அவர்களின் வருமானம் காணும் என்றாலும், அண்ணனின் தேடுதல் தொடர்ந்து கவலையையே  கொடுத்துக் கொண்டு இருந்தது. இந்த நிலையில், இன்று  ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்குவதாக அரசாங்கத்தின் உயர்பீடம் அறிவித்தது, அவளுக்கு கையும் காலும் ஓடவில்லை. பாடசாலையில் இருந்து கவலை தோய்ந்த நிலையில் வீடு திரும்பினாள். கணவன், அவளின் இரு பிள்ளைகளும் அவளையே உற்று நோக்கினார். என்ன செய்வது என்று ஒருவருக்கும் புரியவில்லை. காலம் இன்று மாறி உள்ளது என்பது உண்மையே. ஆனால் இவர்களின் கவலை மட்டும் இன்னும் தொடர்கிறது!   “காலம் ஒருநாள் மாறும் – நம் கவலைகள் யாவும் தீரும் வருவதை எண்ணி சிரிக்கின்றேன் வந்ததை எண்ணி அழுகின்றேன் சிலர் அழுவார் சிலர் சிரிப்பார் – நான் அழுதுகொண்டே சிரிக்கின்றேன்”   தன் வாழ்வும் தன் பிள்ளைகளின் வாழவும் சரியாக வருவதை எண்ணி மகிழும் அதே நேரத்தில், வந்ததை , ராணுவத்திடம் விசாரணைக்காக நேரடியாக தாயால் ஒப்படைக்கப் பட்ட அவளின் அண்ணாவை எண்ணி இன்னும் அழுது கொண்டுதான் இருக்கிறாள்!!    அவள் இப்ப போராட்டத்துக்கு தலைமை தங்கினாள். தன் ஆசிரியர் பதவியை தூக்கி எறிந்தாள். "வாழும் வரை போராடு" இப்ப அவளின் தாரகமந்திரம். தாயின் ஆத்மா சாந்தியடைய வேண்டும். அதற்கா எதையும் செய்யத் துணிந்து விட்டாள். அவளுக்கு வேறு வழி ஒன்றும் தெரியவில்லை. இதை  இதனுடன் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். என் பிள்ளைகள் உரிமையுடன் மதிப்புடன் வாழவேண்டும் என்பதே இப்ப அவளின் ஒரே குறிக்கோள் !      "வாழும் வரை போராடு வழி உண்டு என்றே பாடு    இன்று ரோட்டிலே நாளை வீட்டிலே மழை என்றும் நம் காட்டிலே   வீதியில் பாடும் பாடல் நாளை ஊரையே விலை பேசும் எந்நாளும் என் கீதம் மண்ணாழும் உண்மையே ஒரு காலம் உருவாகும் நிலை மாறும் உண்மையே!"   இறுதி யுத்தத்தில் கண்கண்ட சாட்சியாக ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்கப்படுவ தென்றால், கைது செய்யப்பட்ட அனைவரும் கொலை செய்யப்பட்டார்களா? இது தான் அவளின் கேள்வி? இது நியாயமான கேள்வியே! அப்படி என்றால் ராணுவத்திடம் ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதனை அரசு கூற வேண்டும் என்ற சுலோகத்துடன் அவள் வீதிக்கு புறப்பட்டாள்! இனி அவளின் வாழ்வு  நீதி கிடைக்கும் வரை ஓயபோவதில்லை! காலம் ஒரு நாளும் காத்திருக்காது. அப்படி என்றால்? எப்ப அவளின் காட்டில் மழை பெய்யும் ? யாம் அறியேன் பராபரமே!!   "கருணை என்னும் கண் திறந்து காட்ட வேண்டும் காவல் என்னும் கை நீட்டிக் காக்க வேண்டும் ஒற்றுமை கொண்டு ஒன்றாய் நிற்க வேண்டும்  ஒரே குரலில் நீதி விசாரணை கேட்க வேண்டும்!"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]       
    • வயதைப் பார்த்தால் வேலை செய்பவர்கள் போல தெரியலை.
    • @nunavilan என்ன‌ அண்ணா க‌ள‌த்தில் குதிக்கிற‌ ஜ‌டியா இல்லையா இன்னும் சில‌ ம‌ணி நேர‌ம் தான் இருக்கு🙏🥰...................................
    • @நீர்வேலியான், உங்கள் பதில்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன😀 வெற்றிபெற வாழ்த்துக்கள்😃 இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு @கறுப்பி @Eppothum Thamizhan @வாதவூரான் @கிருபன் @நீர்வேலியான்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.