Jump to content

நிறுத்தப்பட்ட புதினம் இணையதளம் புதிய பெயரில் தொடக்கம்!


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சமீபத்தில் நிறுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்ட புதினம் இணையத் தளம், புதினம் செய்தி (www.puthinamnews.com) எனும் பெயரில் இயங்கத் துவங்கியுள்ளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கனடாவிலிருந்து இயங்கி வந்த புதினம் இணையம் தமிழீழச் செய்திகளை வழங்குவதில் முக்கியப் பங்கு வகித்தது. குறிப்பாக வன்னிப் போர்க்களச் செய்திகளை உடனுக்குடன் வழங்கியதால் தமிழ் உணர்வாளர்கள் நம்பிக்கையைப் பெற்றிருந்தது.

ஆனால் இறுதிப் போரில் புலிகளின் படை தோற்கடிக்கப்பட்ட, பிரபாகரன் தொடர்பாக புதினம் வெளியிட்ட செய்திகள் விடுதலைப்புலி ஆதரவாளர்களால் கடும் விமர்சனத்துக்குள்ளானது. அதன் பின்னரும் தொடர்ந்து செய்திகளை வழங்கிவந்த புதினம் கடந்த மாதம் திடீரென நிறுத்தப்படுவதாக அறிவித்திருந்தது. இதற்கான காரணம் அறிவிக்கப்படவில்லை.

இது தமிழீழச் செய்தி களை அதிகம் படிக்கும் வாசகர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது. தொடர்ந்து, 'புதினம் முடக்கப்பட்டது ஏன்?' என்ற கேள்விகளை எழுப்பி வந்தனர்.இந்த நிலையில் தற்போது மீண்டும் புதினம் தளம் அதே லோகோவுடன், ஆனால் புதினம் நியூஸ் என்ற புதிய பெயரில் இயங்க ஆரம்பித்துள்ளது.

Link to comment
Share on other sites

சமீபத்தில் நிறுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்ட புதினம் இணையத் தளம், புதினம் செய்தி (www.puthinamnews.com) எனும் பெயரில் இயங்கத் துவங்கியுள்ளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கனடாவிலிருந்து இயங்கி வந்த புதினம் இணையம் தமிழீழச் செய்திகளை வழங்குவதில் முக்கியப் பங்கு வகித்தது. குறிப்பாக வன்னிப் போர்க்களச் செய்திகளை உடனுக்குடன் வழங்கியதால் தமிழ் உணர்வாளர்கள் நம்பிக்கையைப் பெற்றிருந்தது.

ஆனால் இறுதிப் போரில் புலிகளின் படை தோற்கடிக்கப்பட்ட, பிரபாகரன் தொடர்பாக புதினம் வெளியிட்ட செய்திகள் விடுதலைப்புலி ஆதரவாளர்களால் கடும் விமர்சனத்துக்குள்ளானது. அதன் பின்னரும் தொடர்ந்து செய்திகளை வழங்கிவந்த புதினம் கடந்த மாதம் திடீரென நிறுத்தப்படுவதாக அறிவித்திருந்தது. இதற்கான காரணம் அறிவிக்கப்படவில்லை.

இது தமிழீழச் செய்தி களை அதிகம் படிக்கும் வாசகர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது. தொடர்ந்து, 'புதினம் முடக்கப்பட்டது ஏன்?' என்ற கேள்விகளை எழுப்பி வந்தனர்.இந்த நிலையில் தற்போது மீண்டும் புதினம் தளம் அதே லோகோவுடன், ஆனால் புதினம் நியூஸ் என்ற புதிய பெயரில் இயங்க ஆரம்பித்துள்ளது.

முதலாவது: புதினம் இணையத்தளம் கனடாவைத் தளமாகக் கொண்டு இயங்கவில்லை.

இரண்டாவது: "புதினம்" இணையத்தளத்துக்கும் "புதினம்நீயூஸ்" இணையத்தளத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

மூன்றாவது: வேண்டாம் :D ("புதினம்நியூஸ்" இணையத்தளம் தொடர்பாக என்ர மனசில தோன்றின சில வார்த்தைகளை சுயதணிக்கை செய்கொள்கிறேன்)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சமீபத்தில் நிறுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்ட புதினம் இணையத் தளம், புதினம் செய்தி (www.puthinamnews.com) எனும் பெயரில் இயங்கத் துவங்கியுள்ளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கனடாவிலிருந்து இயங்கி வந்த புதினம் இணையம் :):D தமிழீழச் செய்திகளை வழங்குவதில் முக்கியப் பங்கு வகித்தது. குறிப்பாக வன்னிப் போர்க்களச் செய்திகளை உடனுக்குடன் வழங்கியதால் தமிழ் உணர்வாளர்கள் நம்பிக்கையைப் பெற்றிருந்தது.

ஆனால் இறுதிப் போரில் புலிகளின் படை தோற்கடிக்கப்பட்ட, பிரபாகரன் தொடர்பாக புதினம் வெளியிட்ட செய்திகள் விடுதலைப்புலி ஆதரவாளர்களால் கடும் விமர்சனத்துக்குள்ளானது. அதன் பின்னரும் தொடர்ந்து செய்திகளை வழங்கிவந்த புதினம் கடந்த மாதம் திடீரென நிறுத்தப்படுவதாக அறிவித்திருந்தது. இதற்கான காரணம் அறிவிக்கப்படவில்லை.

இது தமிழீழச் செய்தி களை அதிகம் படிக்கும் வாசகர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது. தொடர்ந்து, 'புதினம் முடக்கப்பட்டது ஏன்?' என்ற கேள்விகளை எழுப்பி வந்தனர்.இந்த நிலையில் தற்போது மீண்டும் புதினம் தளம் அதே லோகோவுடன், ஆனால் புதினம் நியூஸ் என்ற புதிய பெயரில் இயங்க ஆரம்பித்துள்ளது.

:):D:D:D:lol::lol:

Link to comment
Share on other sites

என்னைப் பொறுத்தவரையிலும் புதினம்,புதினம்நியுஸ் இரண்டும் செய்திகளைத் தந்த தருகின்ற இணையங்கள்தான்.

ஆனால் அதில் வரும் ஆய்வுகள்,கட்டுரைகள் என்பனபற்றி பார்த்தால் புதினம் செய்த அளவுக்கு இன்னமும் புதினம்நியுஸ்

விமர்சனம் அல்லது மறுபார்வை என்ற போர்வைக்குள் தேசியதலைவரையும் போராட்டத்தையும் எல்லாவற்றிற்கும் மேலாக

மக்களின் உணர்வுகளையும் காயப்படுத்தவில்லை.

புதினத்தில் வழுதி 30வருடமாக கக்காமல் அடைகாத்த மலத்தை முன்னால் சென்றவரின் பின்னால் சென்றரைப் பற்றி எழுதுவதாக சொல்லிக் கக்கியபோது புதினத்தை காத்துநின்ற பெருமக்கள் இப்போது புதினம்நியுஸை விமர்சிப்பது அல்லது விமர்சிக்கமுயல்வது நல்ல டமாஸ்தான்யா!

ஏதோ தேசியம் என்பது தங்களால்தான் காக்கப்படவேண்டும் என்று கோட்டைகட்டி எழுதுபவர்களை அடையாளம் பிடிக்கடிக்கவேண்டும்.

Link to comment
Share on other sites

என்னைப் பொறுத்தவரையிலும் புதினம்,புதினம்நியுஸ் இரண்டும் செய்திகளைத் தந்த தருகின்ற இணையங்கள்தான்.

ஆனால் அதில் வரும் ஆய்வுகள்,கட்டுரைகள் என்பனபற்றி பார்த்தால் புதினம் செய்த அளவுக்கு இன்னமும் புதினம்நியுஸ்

விமர்சனம் அல்லது மறுபார்வை என்ற போர்வைக்குள் தேசியதலைவரையும் போராட்டத்தையும் எல்லாவற்றிற்கும் மேலாக

மக்களின் உணர்வுகளையும் காயப்படுத்தவில்லை.

புதினத்தில் வழுதி 30வருடமாக கக்காமல் அடைகாத்த மலத்தை முன்னால் சென்றவரின் பின்னால் சென்றரைப் பற்றி எழுதுவதாக சொல்லிக் கக்கியபோது புதினத்தை காத்துநின்ற பெருமக்கள் இப்போது புதினம்நியுஸை விமர்சிப்பது அல்லது விமர்சிக்கமுயல்வது நல்ல டமாஸ்தான்யா!

ஏதோ தேசியம் என்பது தங்களால்தான் காக்கப்படவேண்டும் என்று கோட்டைகட்டி எழுதுபவர்களை அடையாளம் பிடிக்கடிக்கவேண்டும்.

அதுசரி - வழுதி எழுதியதை ஒரு பக்கத்தில வைப்பம். :D

புதினம் இணையத்தளத்தின் குறியீட்டை எடுத்து புதினம்நியூஸ் பயன்படுத்துவதை என்னவென்று சொல்லலாம்?

அல்லது புதினத்தின் வடிவத்தை பிரதி பண்ணி புதினம்நியூஸ் நடத்தப்படுவதை என்னவென்று சொல்லலாம்?

அடுத்தவனின் உழைப்பைத் திருடிப் பணம் தின்னுதல்? போலிகள்? சுயமாக ஒன்றை செய்வதை விடுத்து

அடுத்தவரின் உழைப்பைத் திருடுதல் தான் தேசியமோ? அந்தத் தேசியம் வாழ்க!

புதினம்நியூஸ் செய்தித்தளத்தை யார் நடத்துகினம்? இந்திய சினிமாவை பிரதிபண்ணி இது தான் ஈழத்தமிழ்

சினிமா என்று விளம்பரம் செய்கிற நடிகர்கள்??? அப்படியென்றால் புதினம் இணையத்தளத்தை பிரதி பண்ணியதிலும்

ஆச்சரியமில்லை. :)

பி.கு. இங்கு முன்வைக்கப்பட்ட கருத்துகள் "புதினம்நியூஸ்" இணையத்தளத்துக்கு எதிரானது இல்லை. "புதினம்நியூஸ்" இணையத்தளம் "புதினம்" இணையத்தளத்தை பிரதியெடுத்தமை தொடர்பானது மட்டுமே. அவர்கள், தமக்கான தனித்துவமான வடிவத்தைக் கொண்டு இயங்கவேண்டும் என்பதே எதிர்பார்ப்பு.

Link to comment
Share on other sites

புதினம்நியுஸை ஆர் நடத்துகிறார்கள் என்று எனக்கு தெரியாது.

பழைய புதினம் இணையத்தின் வடிவமைப்பை எடுத்து புதிய புதினம் செய்வது சட்டப்படி பிழை!

அது ஒரு பகல்கொள்ளைதான் சந்தேகமே இல்லை.

***

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதலாவது: புதினம் இணையத்தளம் கனடாவைத் தளமாகக் கொண்டு இயங்கவில்லை.

இரண்டாவது: "புதினம்" இணையத்தளத்துக்கும் "புதினம்நீயூஸ்" இணையத்தளத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

மூன்றாவது: வேண்டாம் :D ("புதினம்நியூஸ்" இணையத்தளம் தொடர்பாக என்ர மனசில தோன்றின சில வார்த்தைகளை சுயதணிக்கை செய்கொள்கிறேன்)

அந்த சில வார்த்தைகளை எழுதினால் நாமும் வாசிப்போம் தானே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாட்டுக்கு ரொம்ப முக்கியம் இப்போ.. விட்டுட்டு உருப்படியான வேலைகளை பாருங்கள் நண்பர்களே..

Link to comment
Share on other sites

யாருக்கும் வாசிக்க ஒரு இணையம் தேவை அது எதுவாக இருந்தால் என்ன? இதுக்கெல்லாம் ஒரு கருத்து தேவையா? முதலில் காழ்ப்புணர்ச்சியை நிறுத்துவோம்...

Link to comment
Share on other sites

தமிழ்நாதம் மற்றும் புதினம் இணையத்தளங்கள் இரண்டும் மீண்டும் புதிய பெயர்களில் இயங்கதத் தொடங்கியுள்ளதாகவும் அவற்றின் புதிய முகவரிகளும் எனக்கு சில நாட்களின் முன் மின்னஞ்சலில் வந்தன. அந்த முகவரிகளில் சென்று பார்த்த போது தமிழ்நாதம் மற்றும் புதினம் வடிவமைப்பிலேயே புதிதாக வந்த இணையத்தளங்களும் இருந்தன. ஆனால் இவ்விடயம் எந்தளவு உண்மை என்பது எனக்குத் தெரியாது. எனக்கு வந்த மின்னஞ்சலையும் நான் இங்கு இணைக்கின்றேன்.

Tamilnaatham & Puthinam has come back‏

1) Tamilnaatham is replaced by--- http://www.alainaatham.com/news.php?chid=47

2) puthinam is replaced by --- http://www.puthinamnews.com/

Thanks

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் இந்தச் சுத்துமாத்து,

புதினமோ, தமிழ்நாதமோ இயங்குவதற்கு அவர்களுடைய சொந்தச் தளங்களே இருக்கும்போது, புதுப்பெயரில் தொடங்க வேண்டிய தேவையோ, அவசியமோ கிடையாது.

யாருக்கும் வாசிக்க ஒரு இணையம் தேவை அது எதுவாக இருந்தால் என்ன? இதுக்கெல்லாம் ஒரு கருத்து தேவையா? முதலில் காழ்ப்புணர்ச்சியை

நிறுத்துவோம்

இது காழ்ப்புணர்ச்சி இல்லை. பாதுகாப்பு. இப்படி ஒரு செயலைச் சிறிலங்கா அரசு தன்னுடைய கருத்தைப் பாவிக்க ஏன் நடந்து கொள்ளக் கூடாது. ஒரு சுயமாகச் செயற்பட்டு, தன்னுடைய தனித்துவத்தைக் காட்டுவது என்பது வேறு, மற்றவர்களின் பெயரில் தங்களின் வயிறு வளர்ப்பது என்பது வேறு... நாளைக்கு இதில் வருகின்ற தவறான செய்திகளுக்கு. பழைய புதினம் இயக்குனரையா திட்டுவீர்கள்.

Link to comment
Share on other sites

ஏன் இந்தச் சுத்துமாத்து,

இது காழ்ப்புணர்ச்சி இல்லை. பாதுகாப்பு. இப்படி ஒரு செயலைச் சிறிலங்கா அரசு தன்னுடைய கருத்தைப் பாவிக்க ஏன் நடந்து கொள்ளக் கூடாது. ஒரு சுயமாகச் செயற்பட்டு, தன்னுடைய தனித்துவத்தைக் காட்டுவது என்பது வேறு, மற்றவர்களின் பெயரில் தங்களின் வயிறு வளர்ப்பது என்பது வேறு... நாளைக்கு இதில் வருகின்ற தவறான செய்திகளுக்கு. பழைய புதினம் இயக்குனரையா திட்டுவீர்கள்.

சிறிலங்கா அரசோ துரோக கும்பலோ ஏதாகினும் இனம் காண சுதாகரித்துக் கொள்ள அதிக நேரம் நமக்குத் தேவைப்படாது, அப்படி நீங்கள் கூறுவது உண்மையாயின், பழைய புதினம், தமிழ்நாதம் (இதுவும் புதிய பெயரில் உள்ளதாம்) இயக்குனர்கள் மறுப்பு தெரிவித்து தமிழ் மக்களுக்கு நல்லதை செய்யலாமே! இதில் சம்பந்தம் இல்லாத நாங்கள் ஏன் குழம்ப வேண்டும்?

மேலும் நமக்குள்ளேயே விவாதங்கள் / கருத்து வேற்றுமை செய்வதை விட்டு விட்டு சிங்களவனுக்குப் போட்டியாய் அவனை பரப்புரையில் வெற்றிக் கொள்ள சிந்திப்போம், கடமைப் படுவோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிறிலங்கா அரசோ துரோக கும்பலோ ஏதாகினும் இனம் காண சுதாகரித்துக் கொள்ள அதிக நேரம் நமக்குத் தேவைப்படாது, அப்படி நீங்கள் கூறுவது உண்மையாயின், பழைய புதினம், தமிழ்நாதம் (இதுவும் புதிய பெயரில் உள்ளதாம்) இயக்குனர்கள் மறுப்பு தெரிவித்து தமிழ் மக்களுக்கு நல்லதை செய்யலாமே! இதில் சம்பந்தம் இல்லாத நாங்கள் ஏன் குழம்ப வேண்டும்?

மேலும் நமக்குள்ளேயே விவாதங்கள் / கருத்து வேற்றுமை செய்வதை விட்டு விட்டு சிங்களவனுக்குப் போட்டியாய் அவனை பரப்புரையில் வெற்றிக் கொள்ள சிந்திப்போம், கடமைப் படுவோம்.

சொந்தமாக சிந்திக்கத் தெரிந்தால் சற்று உங்கள் மூளைக்கு வேலை கொடுங்கள். புதினம் தமிழ் நாதம் இணையத்தை இன்னோரு பெயரில் நாம் தான் செய்கின்றோம் என்று சொல்லி கொண்டு செய்ய கரனுக்கு ஒன்றும் பைத்தியம் பிடித்து போகவில்லை. புதினம் தமிழ் நாதம் இணையங்கள் நிறுத்தப்பட்டமை தொடர்பில் ஏற்றுக்கொள்ள முடியாத ஆயிரம் கருத்துக்கள் என்னிடமிருந்தாலும் அவர்களுக்கு மீண்டும் இப்பிடி வேறு பெயர்களில் வர வேண்டிய தேவை இருந்திருக்கவில்லை. புதினம் நியூஸ், அலைநாதம் இவையிரண்டும் டென்மார்க்கிலிருந்து இயக்கப்படுவதாய் நான் நம்புகின்றேன்.

http://www.alaikal.com/news/

இது யாரினதோ...அவையும் இவர்களுக்கே சொந்தம்

Link to comment
Share on other sites

:)இது சம்மந்தமாக இன்றுவரை சம்மந்தப்பட்டட இணையத்தள(புதினம் தமிழ்நாதம்) பொறுப்பபாளர் வாய் மூடி மெளனம் காக்க, சம்மந்தமில்லாதவர்ககளெல்லாம் ஏன் நாட்டாண்மை பண்ணுகின்றார்கள் என்பது தான் வேடிக்கை. :lol::D
Link to comment
Share on other sites

Domain Name: puthinam.com

Referral URL: http://registrar.godaddy.com

Status: clientDeleteProhibited, clientRenewProhibited, clientTransferProhibited, clientUpdateProhibited

Expiration Date: 2014-12-13

Creation Date: 2002-12-13

Last Update Date: 2009-11-09

இதைப் பார்த்தால் சேவர் வழங்கிகள் தடை செய்த மாதிரி இருக்கின்றது ????

அதனால் தான் அவர்களே தமது மாதிரியை வேறு பெயரில் பாவிக்கின்றார்களோ ??

ஏன் இந்தச் சுத்துமாத்து,

புதினமோ, தமிழ்நாதமோ இயங்குவதற்கு அவர்களுடைய சொந்தச் தளங்களே இருக்கும்போது, புதுப்பெயரில் தொடங்க வேண்டிய தேவையோ, அவசியமோ கிடையாது.

????

அவை தான் வேலை செய்யவில்லையே ?

ஏன் நாட்டாண்மை பண்ணுகின்றார்கள்

அவரவர் அங்கலாய்ப்புக்களை எழுதுகின்றார்கள்

Link to comment
Share on other sites

Domain Name: puthinam.com

Referral URL: http://registrar.godaddy.com

Status: clientDeleteProhibited, clientRenewProhibited, clientTransferProhibited, clientUpdateProhibited

Expiration Date: 2014-12-13

Creation Date: 2002-12-13

Last Update Date: 2009-11-09

இதைப் பார்த்தால் சேவர் வழங்கிகள் தடை செய்த மாதிரி இருக்கின்றது ????

அதனால் தான் அவர்களே தமது மாதிரியை வேறு பெயரில் பாவிக்கின்றார்களோ ??

????

அவை தான் வேலை செய்யவில்லையே ?

அவரவர் அங்கலாய்ப்புக்களை எழுதுகின்றார்கள்

சேர்வர் தடைசெய்யப்பட்டது என்று எங்கு இருக்கு? அதான் Expiration Date: 2014-12-13 எண்டு இருக்கே. பிறகென்ன?

Link to comment
Share on other sites

சேர்வர் தடைசெய்யப்பட்டது என்று எங்கு இருக்கு? அதான் Expiration Date: 2014-12-13 எண்டு இருக்கே. பிறகென்ன?

Domain Name: puthinam.com

Referral URL: http://registrar.godaddy.com

Status: clientDeleteProhibited, clientRenewProhibited, clientTransferProhibited, clientUpdateProhibited

Expiration Date: 2014-12-13

Creation Date: 2002-12-13

Last Update Date: 2009-11-09

Link to comment
Share on other sites

வசம்பு அண்ணா,

கீழ இருக்கிற தகவல் => Status: clientDeleteProhibited, clientRenewProhibited, clientTransferProhibited, clientUpdateProhibited

யாழ்.கொம் எண்டு அடிச்சாலும் இப்பிடித்தான் இதே தகவல் வரும். ஏன் புதினம்நியூஸ்.கொம் எண்டு நீங்கள் அடிச்சு பார்த்தாலும் இதே தகவல்தான் வரும். அதாவது Prohibited எண்டுற பதம் இஞ்ச குறிப்பிட்ட பாவனையாளர் அந்த தளத்தை பாவிக்கமுடியாது அல்லது தளம் முடக்கப்பட்டு இருக்கிது எண்டுற அர்த்தத்தில இல்லை.

போனகிழமை புதினம்நியூஸ் எண்டுறதை பதிஞ்சவர் தொடர்பு விபரங்கள் வேறு மாதிரி இருக்கிது, இண்டைக்கு வேறுமாதிரி இருக்கிது. அதாவது இந்த தளத்தை நிருவகிப்பவர்களுக்கு அடிப்படையில வலைத்தளம் பற்றின அனுபவம் இல்லை எண்டு விளங்கிது. ஏன் என்றால் ஆரம்பத்திலேயே private ஆக பதிஞ்சு இருந்தால் வெளி ஆக்கள் இந்த தொடர்பு விசயங்களை பார்க்க முடியாது. இந்த கற்றுகுட்டிகள் அவுஸ்திரேலியாவில இருந்து தளம் இயங்கிது எண்டு ஒரு ஆக்களுக்கு ஒரு உணர்வை ஏற்படுத்த ஆரம்பத்தில பதிவர் தொடர்பு முகவரி டென்மார்க் எண்டு போன கிழமை இருந்த தகவலை இப்போது அவுஸ்திரேலியா எண்டு மாத்தி இருக்கிறீனம். :)

யாரோ.. வெட்டி ஒட்டல் மன்னர்கள்... அல்லது வெட்டி ஒட்டல் மன்னர்களாக வளரவிரும்புற ஆக்கள்.. பரந்தன்.கொம், தமிழ்ஸ்கைநியூஸ் மாதிரி அவையளிண்ட பாணியில சற்று ஒருபடி மேல போய் முயற்சி செய்யுறீனம் எண்டு விளங்கிது. அதாவது வழமையாய் வெட்டி ஒட்டிப்போட்டு மூலத்தையும் குறிப்பிடாமல் பெரிய சர்வதேச செய்தி நிறுவனம் எண்டுற நினைப்பில பிரசுரம் செய்வீனம். இஞ்ச என்ன எண்டால் அதேவிசயத்துடன் ஆள்மாறாட்ட - பெயர் மாறாட்ட வேலையிலயும் ஈடுபடிகினம் இப்போது. இதுக்கு பாவம் புதினமும் தமிழ்நாதமும் இரையாக மாட்டுப்பட்டு இருக்கிது. வலைத்தளங்களில இப்பிடியான முறைகேடுகள் நடப்பதை தவிர்ப்பது கடினமானதுதான்.

ஒவ்வொருத்தரும் தாங்களாக சில வலைத்தள விதிமுறைகள், நாகரீகம், ஒழுங்குமுறைகளுக்கு கட்டுப்பட்டு செயற்பட்டால் ஒழிய மற்றும்படி இப்படியான குழப்பங்களை நீக்குவது என்பது மிகவும் கடினம். எல்லாருக்கும் மற்றவனிண்ட முதுகில ஏறி சவாரி செய்கிறதுதான் பிடிச்சு இருக்கிது.

என்ன செய்வது? :lol:

யாராச்சும் நல்லா வரட்டும். பிரபல்யமாகட்டும். பிரச்சனை இல்லை. எல்லாம் எங்கட முகம் அறியாத சகோதரங்கள்தானே. ஆனால்.. நாகரீகமான முறையில திருகுதாளம் செய்யாமல் நேர்மையுடன் செயற்பட்டால் நாங்களும் ஆதரவு கொடுக்கலாம்.

Link to comment
Share on other sites

Status: clientDeleteProhibited, clientRenewProhibited, clientTransferProhibited, clientUpdateProhibited

வசம்பு,

clientDeleteProhibited = பாவனையாளர், இணையமுகவரியை அழிப்பது தடுக்கப்பட்டுள்ளது.

clientRenewProhibited = பாவனையாளர், இணையமுகவரியை புதுப்பிப்பது தடுக்கப்பட்டுள்ளது.

clientTransferProhibited = பாவனையாளர், இணையமுகவரியை இடம் மாற்றுவது தடுக்கப்பட்டுள்ளது.

clientUpdateProhibited = பாவனையாளவு, இணையமுகவரியை இற்றைப்படுத்துவது தடுக்கப்பட்டுள்ளது.

இது சில பாதுகாப்புக் காரணங்களுக்காக முகவரி வழங்குனரால செய்யப்படுவது. அதற்காக இணையமுகவரியை புதுப்பிக்கேலாது எண்டில்ல. குறிப்பிட்ட காலமுடிவில் அதனை செய்யலாம். வலிந்து மற்றவர்களால் இந்த இணையமுகவரி தவறாக பயன்படுத்த முடியாமலிருக்க இது செய்யப்பட்டிருக்கு.

Link to comment
Share on other sites

நன்றி மாப்பு மற்றும் இளைஞன் உங்கள் விரிவான விளக்கங்களுக்கு.

இந்த விடயத்ததில் பழைய புதினம் மற்றும் தமிழ்நாதம் இணையத்தள பொறுப்பாளர்கள், இது சம்மந்தமாக தெளிவு படுத்துவதே பல ஐயப்பாடுகளை நீக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வசம்பு,

உங்கள் ஆதங்கம் வரவேற்க்கத்தக்கதே, ஆனாலும் புதினம், தமிழ்நாதம் போன்ற இணையங்கள் மூடப்பட்டமைக்கே உரிய காரணத்தை சொல்லாதவர்கள், தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்கு அப்பால் நின்று சர்வதேச அளவில் பல சர்வதேச ஊடகங்களால் கூட மேற்கோள் காட்டப்பட்ட இணையங்கள் "தனிப்பட்ட காரணங்களுக்காய்" மூடியவர் (கள்) இதற்க்கு விளக்கத்தை கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியாது

Link to comment
Share on other sites

நன்றிகள்

உங்கள் விளக்கங்களுக்கு

நமது விருப்பம்

தமிழ்மக்களின் அவலத்தை வியாபாரம் செய்யாதவர்களாகவும்

தமிழர்களை, தமிழ்த்தேசியத்தை விலை பேசாத ஊடகங்களாக இருக்கவேண்டும் என்பதே

Link to comment
Share on other sites

புதினம், தமிழ்நாதம் போன்ற இணையங்கள் மூடப்பட்டமைக்கே உரிய காரணத்தை சொல்லாதவர்கள், தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்கு அப்பால் நின்று சர்வதேச அளவில் பல சர்வதேச ஊடகங்களால் கூட மேற்கோள் காட்டப்பட்ட இணையங்கள் "தனிப்பட்ட காரணங்களுக்காய்" மூடியவர் (கள்) இதற்க்கு விளக்கத்தை கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியாது

நமது ஊடகங்கள் உண்மையிலேயே தனிப்பட்டவர்களால் தனிப்பட்ட காரணங்களுக்காகவே இயங்குகின்றன

:o

தமிழர்களுக்கென்று ஏதாவது ஒரு பொது ஊடகம் இருக்கின்றதா ?

மே 18 க்கு பின்னர் அல்லது முன்னர் என்று பார்த்தால்

இது வரை எந்த தமிழ் ஊடகமாவது [ வானொலிகள் ,தொலைக்காட்சிகள் கூட அடக்கம் ] தமது தவறுகளை பகிரங்கமாக எந்த அறிக்கையையும் வெளியிட்டதுண்டா ?

இவர்களின் கொள்கை மாற்றம் வரும் போது மூடி விட்டுச் செல்கின்றார்கள்

ஒட்டு மொத்த புலம் பெயர் மக்களுக்கும் என்று ஒரு பொது ஊடகம் ஏன் அமைக்க யாரும் முன் வரவில்லை ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நிச்சயமாக அது முடியாது என்றில்ல ஆனால் முன்னுக்கு நாற்காலீயில் அமர்ந்து கொண்டு நிற்க்கும் சில "மூத்தவர்கள்" மனசு வைக்க வேண்டும். கனடாவில் ஒரு ஊடக குழுவும்், லண்டனில் மற்றொன்றுமாய் குறைந்தபட்சம் புரிந்துணர்வின் அடிப்படையில் இணைந்து செயற்ப்படலாம். மே 18க்கு பின் நடைபெற்ற மாற்றங்களில் கனேடிய தமிழ் வானொலிகள் வழமையாக கட்டளைகளுக்கு பணியாது தாமே ஊடகங்கள் தொடர்பான விடயங்களை கையாள்வது சற்று மாறுதல் எனலாம். ஆனால் அவையும் "பொது" சொத்து என்ற நிலையிலிருந்து "தனி" சொத்து ஆவது என்பது கூட தவிர்க்க முடியாத ஒன்றாகும் என்றே தோன்றுகின்றது.

"தனி" உரிமை கொண்டவர்களால் தரமான நிகழ்வுகளை வழங்க முடியும் ஆனால் தமிழ் தேசியத்தை பற்றி அக்கறை கொள்ள முடியுமா? என்பது கேள்விக்குறியே!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.