Jump to content

வருங்கால சி.எம் விஜய்க்கு....


sanjee05

Recommended Posts

நேத்து பாத்ரூம்ல குளிக்கும்போது சொல்லி பார்த்தேன்.... சும்மா ஜிவ்வுன்னு சோக்காகீதுண்ணா... என்னைக்குன்னாச்சும் நீ எப்டியாச்சும் முதலமைச்சர் ஆய்டு.. என்ன தகுதி இல்லன்னா உனக்கு...? நல்லா டான்ஸ் ஆடுற, நல்லா பைட் போடற, நல்லா நக்கல்பண்ற, இரும்பு சட்டறகூட அசால்ட்டா உடைச்சுகிட்டு வெளில வர்ற... இதுக்கு மேல என்ன வேணும் முதலமைச்சர் ஆகறதுக்கு..?. ரெண்டே ரெண்டுதான் உன்கிட்ட இல்ல... ஒரு படத்துக்கு கதை வசனம் எழுதிட்டு... கொடநாட்ல ஒரு எஸ்டேட் வாங்கி போட்டீன்னா அதுவும் ஓவர்.. புல் எலிஜிபிலிட்டி உள்ள காண்டிடடேண்னே நீ.. தேர்தல்ல நீ நிக்கற... நாம ஜெயக்கறோம்...

எது கூட்டணியா...? என்ன பேசற நீ...? இல்ல கேக்கேன்... நீ ஒரு ஆளே ஒரு தேசிய கட்சிக்கு சமம்... உனக்கெதுக்கு கூட்டணி... உன் கெத்துக்கெல்லாம் நீ ஏண்ணா ராகுல போய் பார்க்கற...? அவரு வருவாரு பாரு... நம்பளை தேடி...

நானும் 3 நாளா யோசிச்சிட்டேன் உன்ன எந்த தொகுதில நிப்பாட்டலாம்னு... நீ எந்த தொகுதில நின்£லும் அன்னபோஸ்ட்டா ஜெயப்பங்கறது வரலாறு சொல்லும்... ஆனா, நம்ம ச.மு.க. கெத்த தமிழ்நாட்டுக்கு காட்டணுமா இல்லையா... (நம்ம கட்சி பேரு ச.மு.க.ன்னேன்... சந்து முன்னேற்ற கழகம்...)

நீ மத்திய சென்னைல நில்லு... ஏன்னு கேளு, சேப்டி மத்திய சென்னைதான். ஏதும் பிரச்சனைனா வீட்டுக்கு ஓடி வந்துடலாம்.. புலி உறுமுது பாட்ட தெருவுக்கு தெரு லவுட் ஸ்பீக்கர் வெச்சு போட்டம்னு வெச்சுக்க, பாட்ட கேட்டு மெரண்டு போய் ஓட்ட போட்ருவாங்கே... கண்ண மூடிகிட்டு ஜெய்ச்சிட்லாம். உங்கப்பா பிரசாரத்துக்கு வரணும்னுகூட அவசியம் கெடயாது... ஒரு பிரச்சனை முடிஞ்சிது... இப்போ தமிழ்நாட்டோட மத்த தொகுதிகள பத்தி பேசுவோம்... நாமக்கல்ல பேரரச நிப்பாட்றோம்... ரமணாவ பாபனாசத்துல, விக்ரமன உடுமலைபேட்டைல, என்னது கௌதம் மேனன்க்கா... என்ன பேசற நீ... அவர்லாம் ஒரு டைரக்டர்... ஆதி மாதிரி ஒரு நல்ல படம் எடுதுருக்காரா...? வேணா வெயிட் பண்ண சொல்லு அடுத்த எலெக்சன்ல பார்க்கலாம்... இப்போதைக்கு இந்த லிஸ்ட அன்னௌன்ஸ் பண்ணு... மிச்சத்த அப்புறம் ஷோபா அம்மாகிட்ட ஆசீர்வாதம் வாங்கிட்டு முடிவெடுப்போம்...

இப்ப என்னோட பெரிய பயம் என்னன்ன லட்சிய திமுகவ என்ன பண்றதுனுதான். நமக்கு மிக பெரிய போட்டிய நான் அவங்ககிடேர்ந்து எதிர்பார்க்கறேன்.. ஒரு வோட்டுதான் வெச்சுருகாங்கன்னு நம்ம அலட்சியமா விட்ற கூடாது.. அந்தாளு மேடைக்கு மேடை அடுக்கு மொழில பேசி உன் இமே ஜ டேமேஜ் பண்ணிடுவாரு.. ஆக கடைசி பிரச்சனை திமுக?. நம்மல்லாம் பொறந்துட்டதுனால அரசியலுக்கு வந்துருக்கோம்.. ஆனா, அவங்கே அரசியல் பன்றதுகுன்னே பொறந்தவங்கே... அவங்ககிட்ட சின்னபுள்ள தனமா மோதுனோம்ன தடம் தெரியாம போட்ருவாங்கே... அதனால அத மட்டும் அறிவு பேராசான் திரு.அப்பா அவர்கள்ட்ட அறிவுரை கேட்டுக்குவோம்...

அப்புறம் ஒரு முக்கியமான விஷயம்... நம்ம ஆட்சிக்கு வந்தோம்ன்னா அந்த சொம்பு வந்து நம்மளோட சேர பார்ப்பாரு... ஆனா அவர சேத்துக்காத.. உன்ட்ட சொல்ல மறந்துட்டேன். அவரு போன படத்துல உன்ன கலாசிட்டாருங்ண்ணா... நான் குருவி இல்ல.. பில்லான்னு சொல்லிட்டாரு... அது சத்துக்கு அது எப்டின்னா உன்ன கலாய்க்கலாம். விடலாமா? அத... நசுக்கறோம்... அவரு மட்டும்தான்னா நமக்கு காண்டு... மத்த எல்லாரும் நல்ல பசங்க... இவர மட்டும் பாண்டி பஜார்ல கஞ்சா வித்தாருன்னு சொல்லி உள்ள தூக்கி போட்டு முட்டிய உடைச்சு விட்டறலாம்..

அண்ணோவ் நீ பார்லிமென்ட் கதவ வெல்டிங் மெஷின் வெச்சு தெறந்து காலால எட்டி உதைச்சு கதவ தொறந்து உள்ள போய் லாலுவ நக்கல் பண்ணிகிட்டே பாக்கு மெல்ரத பார்த்து இந்தியாவே மெரள போற நாள்க்காக காத்திருக்கேன்னா...

நன்றி-ஒரு பேப்பர்

லண்டன்

Link to comment
Share on other sites

ராகுலும் காலை வாரிட்டாராம் அண்ணாச்சிக்கு. புலம் பெயர் தமிழர்களும் மின்னஞ்சல்களையும் வசைமழையாக அனுப்பிட்டாங்களாம்.விசய் இப்போ சீமானிடம் தஞ்சமாம்."சினம்" என்ற பெயருடன் படம் எடுக்குமாறு வேண்ட தேசிய தலைவர் அவர்கள் சினம் என்ற வார்த்தை தமிழல்ல அது வடமொழி என்பதால் "கோபம்" என்று மாற்றப்பட்டு தமது களங்கத்தை கழுவ முயற்சிக்கிறாராம் விஜய்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நுணா, எப்போது தேசியத் தலைவர் சினம் பற்றிக் கதைத்தார்??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவர் கோபம் கொண்டிருந்தபோது கதைத்திருப்பார்!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • காசிக்குப் போறவை திரும்ப வந்து அதிக காலம் உயிரோடு இருப்பதில்லை என்று சொல்வார்கள். உண்மையா என்று தெரியவில்லை. ஆனால் என நபர் ஒருவர் அங்கு சென்றுவந்து 3 ஆண்டுகளில் இறந்துவிட்டார்.
    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.