Jump to content

ஜனாதிபதி - சம்பந்தன் சந்திப்பில் சாதகமான சமிக்ஞை எதுவுமில்லை


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

» ஜனாதிபதி - சம்பந்தன் சந்திப்பில் சாதகமான சமிக்ஞை எதுவுமில்லை

2009-12-04 05:57:50

கூட்டமைப்பு வட்டாரங்கள் பெரும் அதிருப்தி

தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தனை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்றுமுன்தினம் அலரி மாளிகைக்கு அழைப்பித்து, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை ஒட்டிய விடயங்கள் குறித்து அவருடன் பேச்சு நடத்தினார் என அறியவந்துள்ளது. எனினும், இந்தப் பேச்சுகளின் பெறுபேறு குறித்து கூட்டமைப்பின் உயர் வட்டாரங்கள் அதிருப்தியே தெரிவித்தன. ஜனாதிபதி தரப்பிலிருந்து காட்டப்பட்ட சமிக்ஞைகள் தமிழர் தரப்பின் குறைந்த பட்ச எதிர்பார்ப்பைக் கூட நிறைவு செய்வனவாக அமையவில்லை என்று அவை குறிப்பிட்டன.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்க் கூட்டமைப்பின் ஆதரவைத் தமக்குப் பெறுவதற்காகவே சம்பந்தரை ஜனாதிபதி தனியாக அழைத்துப் பேசினார் என்று கூறப்படுகின்றது.

வடக்கு கிழக்கைப் பிரித்த அரசு

இந்தப் பேச்சுகளின்போது, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியின் கீழ் தமிழர்களுக்கு நேர்ந்த அவலங்கள், விபரீதங்களை சம்பந்தர் எம்.பி., எடுத்துக்காட்டினார் எனக் கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்தச் சந்திப்பில் இடம்பெற்றவை எனத் தெரிவித்து கூட்டமைப்பு வட்டாரங்கள் மேலும் கூறிய தகவல்கள் வருமாறு:

"உங்கள் ஆட்சியின் கீழ்தான் வடக்கு கிழக்கு பிரிக்கப்பட்டது. ஒரு சட்டத்தின் மூலம் வடக்கு கிழக்கு மீண்டும் இணைக்கப்பட முடியும் என உயர்நீதிமன்றம் சுட்டிக்காட்டியது. அத்தகைய சட்டம் கொண்டுவரப்பட்டால் அதை ஆதரிக்க ஐ.தே.கட்சி தயாராகவும் இருந்தது. ஆனால் நீங்கள் அப்படிச் செய்ய மறுத்துவிட்டீர்கள். ஆகவே வடக்கு கிழக்கைப் பிரித்தது உங்கள் அரசுதான்'' என சம்பந்தர் சுட்டிக்காட்டினார். இப்பிரச்சினைக்குத் தமிழர்களின் எதிர்பார்ப்பை நிறைவு செய்யக்கூடிய பதிலோ, உறுதிமொழியோ ஜனாதிபதி தரப்பிலிருந்து கோடி காட்டப்படவில்லை.

"இனப்பிரச்சினைத் தீர்வுக்கென அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழு என்ற ஒன்றை நீங்களே உருவாக்கினீர்கள். அதன் சார்பில் நிபுணர் குழுவின் பெரும்பான்மை உறுப்பினர்கள் அதிகாரப் பரவலாக்கலுடன் கூடிய ஒரு திட்டத்தைக் கொண்டு வந்தனர். அதை ஏற்க மறுத்துக் கிடப்பில் போட்டீர்கள். அதன் பின்னர் அனைத்துக் கட்சிக் குழு பயனற்றுப் போயிற்று.'' என்று சம்பந்தர் குறிப்பிட்டார்.

அப்போது குறுக்கிட்ட ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, "நீங்கள்தான் அந்த அனைத்துக் கட்சிக் கூட்டங்களிலேயே பங்கேற்கவில்லையே. அது உங்கள் தவறு அல்லவா?'' என்று கேட்டார்.

அதை மறுத்துரைத்தார் சம்பந்தர்."கூட்டமைப்புக்கு அந்தக் கூட்டங்களில் பங்குபற்றுவதற்கு எப்போதுமே அழைப்பு விடுக்கப்படவில்லை. தென்னிலங்கையின் இணக்கப்பாட்டைக் காணவே இந்த அனைத்துக்கட்சி நிறுவப்பட்டது என்பதால் அதன் கூட்டங்களுக்கு தமிழ்க்கூட்டமைப்பை அழைக்கத் தேவையேயில்லை என்று கூறிய ஜனாதிபதியே இங்கு இருக்கிறார். அதனை அவரிடம் உறுதிப்படுத்தலாம்.'' என ஜனாதிபதியின் செயலாளருக்குத் தகுந்த பதிலடி தந்தார் சம்பந்தர்.

எந்த முகத்துடன் வாக்குக் கேட்பது?

"விடுதலைப் புலிகளை அழித்தல் என்ற பெயரில் அப்பாவித் தமிழர்கள் பல்லாயிரம் பேர் உங்கள் ஆட்சியில் கொல்லப்பட்டனர். சர்வதேசமும் நாங்களும் எவ்வளவு கெஞ்சியும் அதை நீங்கள் தடுத்து நிறுத்தவில்லை.மாறாக, அனுமதித்துப் பார்த்திருந்தீர்கள். அத்தகைய உங்களின் ஆட்சிக்கு வாக்களியுங்கள் என்று எந்த முகத்துடன் போய் நாம் எமது மக்களிடம் கேட்க முடியும்?'' என்று சம்பந்தர் ஜனாதிபதியிடம் கேட்டார்.

அகதிகளாக்கப்பட்ட மக்கள் இன்னும் மீள்குடியமர்த்தப்படவில்லை என்று சம்பந்தர் சுட்டிக்காட்டியபோது அனைவரும் விரைவில் மீள்குடியேற்றப்படுவர் என உறுதிமொழி தர விழைந்தார் ஜனாதிபதி.

இராணுவ முகாம் அமைக்கப்பட்ட பின்னர் மீளக்குடியமர்வு

கண்டி வீதிக்கு கிழக்கே மீள் குடியேற்றம் நடைபெறவேயில்லை என்று சம்பந்தர் சுட்டிக்காட்டியபோது அங்கும் மீள்குடியேற்றம் விரைவில் நடக்கும் என்றார் ஜனாதிபதி.

""இல்லை. கண்டி வீதிக்குக் கிழக்கே பல இடங்களில் இராணுவமே நிலைகொண்டுள்ளது. மக்கள் மீளக் குடியமர அனுமதிக்கப்படவில்லை.'' என்றார் சம்பந்தர்.

"ஆம். சில இடங்களில் இராணுவ முகாம்கள் அமைக்கப்படவேண்டியுள்ளன. அப்பணி முடிந்ததும் எஞ்சிய இடங்களில் மீள்குடியமர்வு இடம்பெறும்.'' என ஜனாதிபதி பதில் தந்தார்.

நாம் தமிழர் தாயகத்தில் இராணுவ நிலை நீக்கத்தை வலியுறுத்த, ஜனாதிபதியோ இராணுவத்தை நிரந்தரமாக நிலைநிறுத்துவது பற்றிப் பிரஸ்தாபிக்கின்றார் என சம்பந்தர் தமது கூட்டமைப்பு சகாக்களிடம் பின்னர் விசனத்துடன் சுட்டிக்காட்டினார்.

"யாழ் குடாநாட்டில் அதியுயர் பாதுகாப்பு வலயம் என்ற பெயரில் இருபது வருடங்களுக்கு மேலாக மக்களின் மண் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இப்போது யுத்த பீதி நீங்கியுள்ளதால் இந்தப் பிரதேசம் அந்த மக்களிடம் விடுவிக்கப்பட வேண்டும்'' என சம்பந்தர் வலியுறுத்திய போது, "இவ்விடயத்தில் அவசரப்பட வேண்டாம், அவசரப்படக்கூடாது. பொறுத்துக் கொள்ளுங்கள். ஆறுதலாகப் பார்க்கலாம்'' என்ற பாணியில் ஜனாதிபதியின் பதில் அமைந்திருந்தது.

இனப்பிரச்சினைக்குத் தீர்வாக 13 ஆம் திருத்தம் மற்றும் "பிளஸ் பிளஸ்" என்று ஜனாதிபதி கோடி காட்டினார். ஆனால் வடக்கு, கிழக்கு இணைப்புக்கான எந்த சமிஞ்ஞையையும் ஜனாதிபதி காட்டவேயில்லை.

அரசமைப்பின் 13 ஆவது திருத்தத்தின் கீழான பொலிஸ் அதிகாரம் பரவலாக்கப்பட மாட்டாது என்பதே தமது நிலைப்பாடு என்பதை ஜனாதிபதி வெளிப்படுத்தினார். அத்தகைய பொலிஸ் அதிகாரத்தை மாகாணங்களுக்குப் பரவலாக்கும் அளவுக்கு நாட்டு மக்கள் பக்குவப்படவில்லை என்றார் ஜனாதிபதி. வடக்கு, கிழக்கு இணைப்பையும் மறுத்து,பதின்மூன்றாவது திருத்தத்தில் உள்ள பொலிஸ் அதிகாரங்களை மாகாணங்களுக்குப் பரவலாக்கும் சட்ட ஏற்பாட்டையும் மறுக்கும் ஜனாதிபதி, அத்தகைய தமது திட்டத்தைப் பதின்மூன்றாவது திருத்தத்துக்கு அப்பால் செல்லும் உத்தேசம் என்று கூறுவது வேடிக்கையானது எனக் கூட்டமைப்புக் கருதுகிறது.

இப்படிக் கூட்டமைப்பு வட்டாரங்கள் மேலும் இச்சந்திப்புத் தொடர்பில் தகவல் வெளியிட்டன.

http://www.uthayan.com/Welcome/full.php?id=2132&Uthayan1259904587

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

.

ஜனாதிபதி - சம்பந்தன் சந்திப்பில் சாதகமான சமிக்ஞை எதுவுமில்லை

அப்ப கூட்டமைப்பு ..... ரணிலோடை ஒரு டீல் விட்டுப் பாக்கிறது........

Link to comment
Share on other sites

.

அப்ப கூட்டமைப்பு ..... ரணிலோடை ஒரு டீல் விட்டுப் பாக்கிறது........

அதுதானே ,றீல் விட்டு டில் பண்ணவேண்டியதுதானே

Link to comment
Share on other sites

இந்திய ஆளும் வர்க்கம், மகிந்தா, தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கிடையே இணக்கப்பாட்டை ஏற்படுத்த முயற்சிக்கும். தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும் இந்தியாவின் நிழலில் தன்னைத் தக்கவைக்கவே விரும்பும்.

பிரித்தானியத் தமிழர் பேரவையின் இருப்பிற்கு, சர்மா, பட்டேல் போன்றவர்களின் பங்களிப்பு தவிர்க்கமுடியாதளவிற்கு இருக்கிறது.

புலத்து அமைப்புகளிலும் சர்வதேச சத்திகளின் ஊடுருவல், அமைப்புகளின் செயற்பாட்டுக்குக் கால அட்டவனை தயாரித்துத் கொடுத்துள்ளது.

மடுப் பிரசேம், இராணுவம் கைப்பற்றி, கிளிநொச்சிக்கு வரும் வரை புலத்து அமைப்புகள், புலத்து மக்களைத் தெருவில் இறங்கி போராடுவதற்கு வழி நடத்தவில்லை, தமிழகத்தில் தியாகி முத்துக்குமாரின் தியாfத்தின் பின் புலத்து இளையவர்களின் கட்டுக்கடங்கா போராட்டங்கள் எரிமலையாக வெடித்து மக்கள் தெருவில் இறங்கி, புலத்து அமைப்புகளின் இருப்பை மறுதலித்து போராட்டங்கள் வீச்சுப் பெற்றபின், புலத்து அமைப்புகள் தமது இருப்பை நிலை நிறுத்துவதற்காக நாள் குறித்த பேரணிகளை நிகழ்த்தினர், மக்கள் தேசியக்கொடியையும், தேசியத்தலைவரின் உருவப்படங்களையும் கையில் தாங்கி தெருவில் இறங்கிய போது, தடை செய்யப்பட்ட புலிக்கொடி, புலித்தலைவரின் படம் என்ற சர்ச்சையைக் கிளப்பியது முதற் கொண்டு பல விடயங்கள்??????ஃ

இன்று இந்த சக்திகள் ஊடகங்களின் துணையடன் தமிழ்த்தேசியசக்தி தம்மிடம் இருப்பதாக கனவுலகில் சஞ்சரித்து சிங்களத்துடன் பேரம் பேசுகின்றன!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய ஆளும் வர்க்கம், மகிந்தா, தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கிடையே இணக்கப்பாட்டை ஏற்படுத்த முயற்சிக்கும். தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும் இந்தியாவின் நிழலில் தன்னைத் தக்கவைக்கவே விரும்பும்.

பிரித்தானியத் தமிழர் பேரவையின் இருப்பிற்கு, சர்மா, பட்டேல் போன்றவர்களின் பங்களிப்பு தவிர்க்கமுடியாதளவிற்கு இருக்கிறது.

இன்று இந்த சக்திகள் ஊடகங்களின் துணையடன் தமிழ்த்தேசியசக்தி தம்மிடம் இருப்பதாக கனவுலகில் சஞ்சரித்து சிங்களத்துடன் பேரம் பேசுகின்றன!

இந்த நிலையிலிருந்து அடுத்தகட்டத்துள் எப்படி எமது இலக்கினை அடைய முயற்சிகள் செய்யலாம் என்பதையும் எழுதுங்கள். மக்களை ஒன்றிணையுங்கள் வீதிக்கு இறக்குங்கள்.................!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நாமெல்லாம் இதற்குள் வரமாட்டோம் ராசாக்கள்.........ஏதோ கடையில் கோப்பி குடிக்கும்போது ஒரு ஈரோ டிக்கட் வாங்கி சுரண்டிபோட்டு அங்கேயே வீசிப்போட்டு போறதுதான் அதிகம்......!  😂
    • ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன?     கர்ப்பிணியான தனது மனைவி சைனு (அமலாபால்) மற்றும் தாயுடன் கேரளாவில் மகிழ்ச்சியுடன் எளிமமையாக வாழ்ந்து வருகிறார் நஜீப் (பிருத்விராஜ்). ஆற்றுமணல் அள்ளும் வேலை செய்து வாழ்க்கையை ஓட்டிவரும் அவர் குடும்ப கஷ்டத்துக்காக, வாழ்வதற்கு ஒரு நல்ல வீடு, மழை பெய்தால் ஒழுகாத சமையல்கட்டு, பிள்ளைகள் படிக்க நல்ல ஸ்கூல் என்ற சாதாரணமா கனவுகளை நிஜமாக்கும் முனைப்போடு வெளிநாடு செல்ல முடிவெடுக்கிறார். வீட்டை அடமானம் வைத்து ஏஜென்ட் மூலம் வளைகுடா நாட்டுக்குச் செல்கிறார். அங்கு என்ன நடந்தது? அங்கு அவருக்கு வேலை கிடைத்ததா? தகுந்த சம்பளம் கிடைத்ததா? அவருடைய வாழ்க்கை என்னவாக மாறுகிறது? அதிலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா? - இதுதான் ‘ஆடுஜீவிதம்' படத்தின் திரைக்கதை. மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய நாவலைத் தழுவி இயக்குநர் ப்ளஸ்ஸி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் 'ஆடுஜீவிதம்'. மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்தத் திரைப்படம் வெளியாகி உள்ளது. குடும்பக் கஷ்டத்தின் காரணமாக வளைகுடா நாடு சென்று ஏமாற்றப்பட்ட மனிதனின் கதையை சமரசம் எதுவுமின்றி வெள்ளித்திரையில் கொண்டு வந்ததற்காக இயக்குநரைப் பாராட்டலாம். குறிப்பாக, கேரளாவில் இருந்து அதிகமான எண்ணிக்கையில், வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் உடலுழைப்புத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இந்தப் படம் நிச்சயம் ஆறுதலாக இருக்கும். நாவலை படம் ஆக்குவதில் உள்ள சிரமங்கள் தென்பட்டாலும், இதுவரை நமக்கு அறிமுகம் இல்லாத நிலப்பரப்பை இந்த சர்வைவல் டிராமா கண்முன் கொண்டு வந்திருக்கிறது. “எப்படியாவது கஷ்டப்பட்டு நான் கேட்ட காசைக் கொடு, அங்க போய் மூணே மாசத்துல சம்பாதித்துவிடலாம்" - போலி ஏஜென்ட்டுகளின் இந்த ஒற்றைப் பொய்தான், உலகம் முழுவதும் நஜீப்களை மீண்டும் மீண்டும் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது என்பதை இப்படம் நிறுவியிருக்கிறது. போலி ஏஜென்ட் ஸ்ரீகுமார் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், பக்தி பரவசத்துடன் ஊர் திருவிழாவுக்கு வந்துவிடும் நபர் எனக் காட்டியிருப்பது இயக்குநர் ப்ளஸ்ஸி டச். படத்தில் அந்த கேரக்டருக்கு ஒரு காட்சிதான். வேறு காட்சிகளே கிடையாது. படத்தின் முதல் பாதியை ப்ளஸ்ஸி காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அழகு. பாலைவனத்தில் நடக்கும் காட்சிகளையும், கேரளத்தின் காட்சிகளையும் இணைத்து கதை சொல்லிய விதம், சுட்டெரிக்கும் வெயிலில் பெய்யும் பனிக்கட்டி மழைபோல் குளிரூட்டுகிறது. இரண்டாம் பாதியில் வெகு நேரமாக பாலைவனத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் அயற்சியைத் தருகிறது. "பெரியோனே ரஹ்மானே" பாடல் முழுமையாக இல்லாதிருப்பது குறையாகத் தோன்றுகிறது. உலகம் முழுவதும் வேலைக்காக புலம்பெயரும் எவரும் தங்களது வாழ்க்கையுடன் சுலபமாக ஒப்பிட்டுக் கொள்ள இந்தப் படம் உதவும். அந்தவகையில், இயக்குநரின் இந்த முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியது. இயக்குநரின் இந்த மெனக்கெடல்களுக்கு பெரிய ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறது, இந்தப்படத்தின் தொழில்நுட்பக் குழு. ஒளிப்பதிவு, பின்னணி இசை, ஒப்பனை, ஆடைகள், ஒலிப்பதிவு என படத்தில் வரும் அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பும் பாராட்டுக்குரியது. படத்தின் தொடக்கம் முதலே கே.எஸ்.சுனிலின் கேமரா பார்வையாளர்களின் கண்களை அகல விரயச் செய்கிறது. பரந்து கிடக்கும் பாலைவனம், வெயில், கானல்நீர், ஒட்டகம், ஆடுகள், மலைக்குன்று என அனைத்து இடங்களிலும் கேமிரா ஜீவித்துக்கிடக்கிறது. இருளை விழுங்கிய நடுராத்திரி, கசராவில் (ஆட்டுப்பட்டி) ஆடுகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை தாகம் தணிக்க குடித்துவிட்டு கேமிரா இருக்கும் திசை நோக்கி பிருத்விராஜ் பார்க்கும் காட்சி, ஒட்டகம் ஒன்றின் கண்ணுக்குள் பிருத்விராஜ் தெரியும்படி காட்சிப்படுத்தியிருக்கும் காட்சியும் அருமை. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இது மூன்றாவது மலையாளப் படம். படத்தின் டைட்டில் தொடங்கும்போது, ரஹ்மானின் புல்லாங்குழல் பாலைவன மணல்வெளியில் நம் மனங்களை இலகுவாக இழுத்துச் செல்கிறது. முதல் பாதியில் வரும் பாடல் அட்டகாசம். படம் முழுக்க அவ்வப்போது சின்ன சின்ன வரும் பாடல்கள் அதிகாலை நேரத்தில் தூரத்தில் கேட்கும் பங்கோசைக்கு இணையாக இருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள் எதுவும் இல்லாதபோதும், தப்பித்துச் செல்ல முயற்சிக்கும் காட்சிகளில் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசைதான் வலு சேர்த்திருக்கிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் கட்ஸ் முதல் பாதியை கணகச்சிதமாக கத்தரித்திருக்கிறது. பிருத்விராஜ் கேரியரில் இந்தப் படம் மிகமுக்கிய திரைப்படமாக இருக்கும். படத்தில் அவரது கதாப்பாத்திரத்துக்கு நிறைய சேஞ்ச் ஓவர் வருகிறது. அப்படி வரும் எல்லா இடங்களிலும் பிருத்விராஜ் ஸ்கோர் செய்திருக்கிறார். குடிக்கவும், கழுவவும் தண்ணீர் இல்லாத கணங்களில் அவரது நடிப்பு கலங்கடித்து விடுகிறது. உயிர்வாழ வேண்டும் என்றால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரிந்துக் கிடக்கும் பாலைவனத்தை நடந்து கடக்க வேண்டிய காட்சிகளில் பிருத்விராஜின் உடல்மொழி வியக்க வைக்கிறது. பிருத்விராஜ் உடன் வளைகுடா நாடு செல்லும் ஹக்கிம் (கே.ஆர்.கோகுல்) மற்றும் இப்ராஹிம் காத்ரியாக (ஜிம்மி ஜீன் லூயிஸ்) வருபவரும் தங்களது கதாப்பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர். ஒட்டகமும், மயிலும் தனது அழகை நீண்ட கழுத்தில் ஒளித்து வைத்துக்கொள்ளும். அமலாபாலும் அப்படித்தான், தனது அழகு முழுவதையும் நடிப்பில் ஒளித்து வைத்திருக்கிறார். கேரளத்தின் பொலிவும், அழகும் மயக்கும். இந்தப் படத்தில் பிருத்விராஜ் அமலாபால் வரும் காட்சிகளும் அப்படித்தான், பார்வையாளர்களின் மனதில் பாசிப்போல படர்கிறது. பாலைவன சுடுமணலின் தகிப்பைக் குறைத்து ஆழமான ஆற்றுக்குள் மூழ்கி அள்ளி எடுத்துவரப்பட்ட மணலின் ஈரத்தையும், குளிர்ச்சியைக் கொண்டு வருகிறார் அமலாபால். எப்போதெல்லாம் தன்னுடைய ஞாபகம் வருகிறதோ, அப்போதெல்லாம் நிலாவைப் பார்த்துக் கொள்ளும் சொல்லும் காட்சி கவிதையாக தைக்கப்பட்டிருக்கிறது. விமான நிலையங்களின் பார்வையாளர் காத்திருப்பு வெளிகள் எப்போதும் கண்ணீரைச் சுமந்து நிற்பவை. வெளிநாடுகளுக்கு பிரிந்து செல்லும் உறவுகளை வழியனுப்ப வந்தவர்களின் கண்ணீர் அப்பகுதி முழுக்க நிரம்பியிருக்கும் காற்று முழுவதிலும் கரித்துக் கிடக்கும். அம்மாவும், அப்பாவும், கணவனும், மனைவியும், குழந்தைகளும் வெளிநாடு செல்லும் நபருக்கு தங்களது அன்பு முழுவதையும் ஒரு பெட்டிக்குள் அடைத்துக் கொடுத்துவிட்டு கனத்த மவுனத்துடன் வீடு திரும்பும் காட்சிகளைக் கடந்திருப்போம். அந்த வகையில், சென்ட் பாட்டிலும், கலர் டிவியும், கை நிறைய பணமும் இல்லாமல், வெளிநாட்டிலிருந்து உயிர் பிழைத்தால் போதும் என்று ஆயுள் உடன் திரும்பி வந்த ஒரு எளிய மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளின்தான் இந்த 'ஆடுஜீவிதம்'! ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன? | aadujeevitham movie review - hindutamil.in
    • Simrith   / 2024 மார்ச் 28 , மு.ப. 10:49 - 0      - 67 அமெரிக்க துரித உணவு நிறுவனமான மக்டொனால்டின் உள்ளூர் உரிமை இனி தமது குடையின் கீழ் இல்லை என்று அபான்ஸ் தனியார் நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. இன்று கொழும்பு பங்குச் சந்தைக்கு (CSE) அறிக்கையளித்த அபான்ஸ் பிஎல்சி, மெக்டொனால்டின் உள்ளூர் உரிமையானது, 2007 ஆம் ஆண்டின் கம்பனிகள் சட்டம் இல.7 இன் கீழ் இணைக்கப்பட்ட சர்வதேச உணவக அமைப்புகள் (பிரைவேட்) லிமிடெட் அடிப்பமையிலானது என்று சுட்டிக்காட்டியுள்ளது. அந்த நிறுவனத்தின் 98.73% பங்குகளை வைத்திருக்கும் ருசி பெஸ்டோன்ஜி, அபான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குனராகவும் உள்ளவர். “இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட், அபான்ஸ் பிஎல்சி அல்லது அதன் தாய் நிறுவனமான அபான்ஸ் ரீடெய்ல் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட் ஆகியவற்றின் துணை நிறுவனமோ அல்லது இணை நிறுவனமோ அல்ல. கூறப்பட்ட காரணத்தினால், இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட்டின் நிதிகள் அபான்ஸ் பிஎல்சியின் நிதிகளுடன் ஒருங்கிணைக்கப்படவில்லை,” என்று அபான்ஸ் தெளிவுபடுத்தியது. கொழும்பு பங்குச் சந்தையின் பட்டியலிடுதல் விதிகளின் 8வது பிரிவின் அடிப்படையில் மற்றும் நல்லாட்சிக்கான நோக்கங்களுக்காக இந்தத் தகவலை வழங்குவதாக Abans PLC தெரிவித்துள்ளது. Tamilmirror Online || McDonald’s எமது குடையின் கீழ் இல்லை: அபான்ஸ்
    • கொடுமையிலும் கொடுமை பாண்டவர் அணியில் தருமருக்கு (விஜயகாந்துக்கு) தம்பியாக (அருச்சுனனாக) அவதாரம் எடுத்தது 😂
    • 28 MAR, 2024 | 12:07 PM சிறுவர்களின் ஆபாசக் காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றுவது தொடர்பான முறைப்பாடுகளைப் வழங்குவதற்கு  புதிய முறைமையொன்றை  இன்று வியாழக்கிழமை (28) அறிமுகப்படுத்தவுள்ளதாகத்  தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.  தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் இணையத்தளத்தினூடாக இன்று முதல் இது தொடர்பான முறைப்பாடுகளைப் பதிவு செய்ய  சந்தர்ப்பம் வழங்கப்படும் என அதன் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் உதயகுமார அமரசிங்க தெரிவித்துள்ளார்.   இதன் மூலம் பெறப்படும்  முறைப்பாடுகள்  நேரடியாக இங்கிலாந்தில் உள்ள "Internet Watch Foundation" க்பகு தெரிவிக்கப்படுவதுடன் அதனுடன் தொடர்புடைய ஆபாசமான காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளது.    மேலும், இந்த முறைப்பாடுகள் தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினர் யார் என்பதைக் கண்டறிந்து, சர்வதேச  பொலிஸார் மூலமாகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.    கடந்த காலங்களில் சிறுவர்களின் ஆபாசமான காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்கள் இணையத்தில் வெளியானமை தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது .   ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில் முறைப்பாடு வழங்க புதிய வழிமுறை | Virakesari.lk
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.