Jump to content

குழைத்த சாதம் .........


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

குழைத்த சாதம் .........

ராசம்மா அன்றுமிகவும் பரபரப்பாக இருந்தாள். மகன் வரப்போகிறான் என்று விதம் விதமாக் சமைத்தாள். ஆம் அவள் மகன்" ராசன் .....மத்திய கிழக்கு நாடொன்றிலிருந்து ஐந்து வருடங்களிற்கு பின் வருகிறான். அவளது நினைவலைகள் ஐந்து வருடங்கள் பின்னோக்கி சென்றன. அவனுக்கு வயது இருபத்தொன்று , அப்போது தான் படிப்பை முடித்தவன் . கிழக்கு மாகாண படையினரின் கெடு பிடிகளுக்கு மத்தியில் வாழ முடியாதென்று முடிவெடுத்து . வீட்டையும் நிலத்தையும் அடகு வைத்து .மத்திய கிழக்கு நாட்டிற்கு சென்றான். அவனுக்கு மேலும் படித்து பல்கலைக் கழகம் செல்லும் ஆவல் இருந்தாலும் ஊரின் நிலை அதற்கு இடங் கொடுக்க வில்லை . இராணுவத்தினரின் அட்டகாசம் அதிகரிக்க தொடங்கிய வேளை .அங்கு சென்றவனுக்கு அதிகம் படித்திராததால் ஒருகந்தோரில் எடு பிடி வேலை தான் கிடைத்தது . அதுவும் அவனுக்கு நல்ல காலம் இருந்ததால் தொடார்ந்து ஐந்து வருடங்கள் வேலை செய்ய கிடைத்தது அவனது அதிஷ்டம் என்று தான் சொல்ல வேண்டும். வேலை.யில் மிகவும் சுறு சுறுப்பாகவும் , பண்பாகவும் நடந்ததால் எல்லோருக்கும் பிடித்து போனது. மெல்ல மெல்ல வீட்டுக் கடனையும் அடைத்தான் .அவனுக்கு இப்போது வயது இருபத்தியாறு .

அவனுக்கு இரண்டு தங்கை மார். மூத்தவள் கலியாணத்துக்காக காத்திருந்தாள். அவன் வீட்டையடைந்ததும் , உற்சாகமான வரவேற்பு காத்திருந்தது. ஊர்க்கதைகளில் இருந்து அவனது பள்ளி தோழர் சிலர் காணாமல் போயிருந்தனர். வேலை கிடைத்த பின் திருமணம் செய்வேன் என்று சத்தியம் செய்த காதலி ....இரண்டு குழந்தைகளுக்கு தாயாகி இருந்தாள். ஏற்கனவே ஒழுங்காக்கி இருந்த மாப்பிள்ளைக்கு திருமணத்துக்காக தங்கைக்கு நாள் பார்க்க பட்டது. எல்லாம் சுபமே முடிந்தது. அவன் அதிகம் வெளியில் செல்ல விரும்பவில்லை ஊர் மாலை ஆறு மணி ஆகியதும் அடங்கி விடும். இன்னும் அவர்களின் அட்ட காசம் இருந்தது.

ஒரு நாள் இவன் திண்ணையில் சாய்ந்து அன்றைய நாளிதழை புரட்டி கொண்டு இருந்த போது ....அம்மா தேநீர் கோப்பையுடன் வந்தார். மெல்ல கதையை தொடங்கினார் . உனக்கு வெளிநாட்டுக்கு போக உதவி செய்த , கொழும்பு மாமா தன் மகளுக்கு உன்னை கேட்கிறார் என்றாள். இப்போது அதெல்லாம் வேண்டாமம்மா . எனக்கு இருபத்தியாறு தானே . அடுத்த தடவை வரும் போது பார்க்கலாம். இளையவளின் திருமணம் முடியட்டும் என்றான். அந்த வாரத்தில் வந்த ஞாயிறு சந்தையில் முன்னைய காதலி சுபாங்கியை சந்தித்தான் . முதலில் , ராசன் எப்படி இருகிறாய் .....என்றவள் , தான் சோக கதையை சொன்னாள் .அவன் வெளி நாடுக்கு சென்ற பின் ராணுவ அட்டகாசம் தலைதூக்கி எல்லோர் வீடுகளிலும் , சோதனை என்றும் , விசாரணை என்றும் பெண்களை பிடித்து சென்றார்கள். தாய் தந்தைக்கு ஒரே மகளான அவளை அவர்கள் இழக்க விரும்பவில்லை என்பதால் , அவ்வூரின் கிராம சேவகருக்கு வாழ்க்கை பட்டாள். இரண்டாவது குழந்தை பிறந்த பின் , ஒரு நாள் விசாரணைக்கு அழைத்து சென்றவர்கள் இன்னும்அவரை விடுதலை செய்ய வில்லை என்றாள். அவளது சோகம் அவனையும் தொற்றி கொண்டது.

அவனது தந்தை மீன் பிடி வள்ளங்களை வாடகைக்கு விட்டு தொழில் செய்து வந்தார். கடலில் , கடற்படையினரின் , தொல்லைகளால் , மீனவர்களும் தொழிலுக்கு செல்வதில்லை . பலர் கடலில் மீன் பிடித்து கொண்டு இருந்த போது காணாமல் போயினர். சில சமயம் வலைகளையும் அறுத்து , பிடித்த மீன்களையும் பறித்து சென்றனர். தமிழராய் பிறந்தமையினால் அவர்கள் பட்ட் துன்பம் எழுத்தில் எழுத முடியாது. அவன் மீண்டும் பயணமாகும் நாளும் வந்தது . மிகவும் சோகத்துடனும் , ஒருகடமை முடித்த திருப்தியுடனும் இருந்தான். மதியம் தாய் வகை வகையான் உணவு வகைகள் செய்தாள். தாயார் சாப்பிட அழைத்த போது , அவற்றை குழைத்து தரும் படி கேடான். வெளி நாட்டில் கிடைக்காதது இது தானம்மா என்றான். அந்த குழையலில் இருப்பது அத்தாயின் உணவு மட்டு மல்ல உள்ளம். அன்பும் பாசமும் சேர்ந்து குழைக்க பட்ட உணவு .........விடை பெறும் வேளை ..வீட்டு வாயிலில் சுபாங்கி .........ஒரு சிறு பார்சலுடன் சின்னவனை இடுப்பில் இருத்தியவாறு ......அவனுக்கு மிகவும் பிடித்த வளைய முறுக்கு செய்து கொண்டு வந்திருந்தாள். எல்லோருடனும் விடை பெற்று புறப்பட்டான் . அவனுக்காக் அவனது உறவுகள் காத்திருக்கின்றன. இன்னொரு சேமமான வருகைக்காய் ........

வெளி நாட்டில் தொழில் நிமித்தமாய் வாழும் .இளையவர்கள் , தனிமையிலும் பணி நிமித்தமாய் கஷ்டப்படாலும் .காத்திருப்பது .....சகித்து வாழ்ந்து கொண்டிருப்பது ....ஊரில் தனக்காக் வாழும் உறவுகளுக்காய். எனக்கு தெரிந்த மத்திய கிழக்கில் வாழும் சில நட்புகள் நினைவாய் எழுதியது .....உள்ளத்தை தொட்டு சென்றால் ஒரு வரி எழுதுங்கள். .............

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தாயார் சாப்பிட அழைத்த போது , அவற்றை குழைத்து தரும் படி கேடான். வெளி நாட்டில் கிடைக்காதது இது தானம்மா என்றான். அந்த குழையலில் இருப்பது அத்தாயின் உணவு மட்டு மல்ல உள்ளம். அன்பும் பாசமும் சேர்ந்து குழைக்க பட்ட உணவு .........விடை பெறும் வேளை ..வீட்டு வாயிலில் சுபாங்கி .........ஒரு சிறு பார்சலுடன் சின்னவனை இடுப்பில் இருத்தியவாறு ......அவனுக்கு மிகவும் பிடித்த வளைய முறுக்கு செய்து கொண்டு வந்திருந்தாள். எல்லோருடனும் விடை பெற்று புறப்பட்டான் . அவனுக்காக் அவனது உறவுகள் காத்திருக்கின்றன. இன்னொரு சேமமான வருகைக்காய் ........

போங்கள் அக்கா உங்களுக்கு இதுதான் வேலையாய் போய்விட்டது..... மனசு வலிக்கிறது. இதைப் படித்த போது எனக்கு ஏற்பட்ட உணர்வுகளை எழுத்து வடிவத்தில் கொண்டிவர முடியவில்லை.. இயலாமைக்கு மன்னிக்கவும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிஜத்தோடு கூடிய கதை மறுபடியும் மனதை தொட்டு செல்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிலா அக்கா....

என்ன அக்கா சிறுகதைப் பகுதிக்குள் வந்தால் ஒரே அழுகிற வேலையாய் தான் இருக்கிறது.மிகவும் நன்றி உங்கள் சிறுகதைக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குழைத்த சாதம் இருக்கு என்று வந்து பார்த்தால் என்ற கதையா கிடக்கு நிலா அக்கா உங்களோடு சரியான கோபம் நான் :lol:

மீண்டும் நினைத்து நினைத்து அழவைக்கிறீங்களே நிலா அக்கா :wub::):D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் ஏதோ சாப்பாட்டு விசயம் என்றுதான் வந்து பார்தனான்.நிலா நாம் காத்திருக்கலாம் ஆனால்

காலம் நமக்காக காத்திருக்காது.

Link to comment
Share on other sites

மதியம் தாய் வகை வகையான் உணவு வகைகள் செய்தாள். தாயார் சாப்பிட அழைத்த போது , அவற்றை குழைத்து தரும் படி கேடான். வெளி நாட்டில் கிடைக்காதது இது தானம்மா என்றான். அந்த குழையலில் இருப்பது அத்தாயின் உணவு மட்டு மல்ல உள்ளம். அன்பும் பாசமும் சேர்ந்து குழைக்க பட்ட உணவு .........விடை பெறும் வேளை .

நெஞ்சை தொட்ட வரிகள் சிறு சிராப்பையும் ஏற்படுத்தி விட்டு தான் செல்கிறது. இந்த முறை கொழும்பில் பேக்கறி பாண் தான் கிடைத்தது. :lol: அதிஸ்டம் இருந்தால் அடுத்த முறை பார்ப்போம். :wub:

Link to comment
Share on other sites

என்ன அக்கா நல்ல சுவையான புளிப்பான குழை சாதம் சுவைக்கலாம் எண்டு

வந்தால்.........................ஊரையே மறந்து உல்லாசமாக வாழும் எங்களை சாதத்தைக் காட்டி

கண்களில் கண்ணீரை வர வைத்து விட்டீர்களே!!!!!!!!!

அருமையான உணர்வுகளிற்கு மதிப்பு கொடுத்து எல்லோரையும் அத்தனை நிமிட

துளிகளையும் ஊரோடு அழைத்து சென்று விட்டீர்கள்!!!!!!!

அருமையான குழை சாதம் சுவைத்த அதே சுவை உங்கள் கதையை படித்த போது

கிடைத்தது..............................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நிலாமதி அக்கா

அடிக்கடி ஊரை ஞாபகப்படுத்தி எங்களை கவலைப்பட வைக்கிறிங்க. எங்கை இருந்தாலும் என்ன செய்தாலும் ஊரின் நினைவுகளையோ அல்லது அம்மா கையாலை சாப்பிட்ட குழைசாதத்தையோ மறக்கமுடியாது. இங்கை இருப்பதே இதெல்லாம் கொஞ்சகாலத்துக்கு நினைக்ககூடாது என்று தான். நீங்க திரும்பவும் ஞாபகப்படுத்தி விட்டீர்கள் ... :lol:

கதை நல்லா இருக்கு அக்கா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு நாள் இவன் திண்ணையில் சாய்ந்து அன்றைய நாளிதழை புரட்டி கொண்டு இருந்த போது ....அம்மா தேநீர் கோப்பையுடன் வந்தார். மெல்ல கதையை தொடங்கினார் . உனக்கு வெளிநாட்டுக்கு போக உதவி செய்த , கொழும்பு மாமா தன் மகளுக்கு உன்னை கேட்கிறார் என்றாள். இப்போது அதெல்லாம் வேண்டாமம்மா . எனக்கு இருபத்தியாறு தானே . அடுத்த தடவை வரும் போது பார்க்கலாம். இளையவளின் திருமணம் முடியட்டும் என்றான். அந்த வாரத்தில் வந்த ஞாயிறு சந்தையில் முன்னைய காதலி சுபாங்கியை சந்தித்தான் . முதலில் , ராசன் எப்படி இருகிறாய் .....என்றவள் , தான் சோக கதையை சொன்னாள் .அவன் வெளி நாடுக்கு சென்ற பின் ராணுவ அட்டகாசம் தலைதூக்கி எல்லோர் வீடுகளிலும் , சோதனை என்றும் , விசாரணை என்றும் பெண்களை பிடித்து சென்றார்கள். தாய் தந்தைக்கு ஒரே மகளான அவளை அவர்கள் இழக்க விரும்பவில்லை என்பதால் , அவ்வூரின் கிராம சேவகருக்கு வாழ்க்கை பட்டாள். இரண்டாவது குழந்தை பிறந்த பின் , ஒரு நாள் விசாரணைக்கு அழைத்து சென்றவர்கள் இன்னும்அவரை விடுதலை செய்ய வில்லை என்றாள். அவளது சோகம் அவனையும் தொற்றி கொண்டது.

ராசன் தனது , மாமாவின் மகளை திருமணம் செய்வானா´...... அல்லது சுபாங்கியை திருமணம் செய்வானா ?

ராசனின் மனநிலையை ..... நீங்கள் சொல்லாமல் வாசகர்களின் முடிவுக்கு விட்டுவிட்டீர்களே ... நிலாமதி அக்கா.

சுபாங்கியின் கணவரை அழைத்துச் சென்ற புலனாய்வுத்துறையினர் , அவரை ஒன்ரும் செய்யாமல் விடுதலை செய்வார்கள் என்று நம்பிக்கையுடன் இருப்போம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரியந்தான்.......யாயினி.......சஜீவன்..........தமிழ் மாறன்...........நுனாவிலன்.......ஜீவா ..........யாவருக்கும் கருத்து பகிர்ந்தமைக்கு என் நன்றிகள். ஒவ்வொரு தமிழனுக்குள்ளும் ஒரு சோகம் மறைந்திருக்கும் அதிலும் தாய் பாசம் ...மண் வாசனை ஈடுகட்ட முடியாத ஒன்று.

முனிவர் .........உங்கள் கதை போல இருக்கா? மன்னிக்கவும் மீண்டும் சோகத்தை

மீளவும் வர செய்ததற்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவ்வூரின் கிராம சேவகருக்கு வாழ்க்கை பட்டாள். ...இரண்டாவது குழந்தை பிறந்ததும்

அவரை (கிராமசேவகரை ) அழைத்து சென்றவர்கள் இன்னும் விடுதலை செய்யவில்லை. ...

..........இப்படி வருகிறது . தமிழ் சிறி உங்கள் கருத்து பகிர்வுக்கு நன்றி. .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாதார்த்தத்தை கதையாக்கி உள்ளீர்கள்...வாழ்த்துகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சகோ தரி! இதுவும் ஒரு பொக்கிஷம்தான் . இருபது வருடங்கள் பின்னோக்கி நினைக்க வைத்திவிட்டது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குழைத்த சாதம் .........

வெளி நாட்டில் கிடைக்காதது இது தானம்மா என்றான். அந்த குழையலில் இருப்பது அத்தாயின் உணவு மட்டு மல்ல உள்ளம். அன்பும் பாசமும் சேர்ந்து குழைக்க பட்ட உணவு

அவனுக்காக் அவனது உறவுகள் காத்திருக்கின்றன. இன்னொரு சேமமான வருகைக்காய் ........

வெளி நாட்டில் தொழில் நிமித்தமாய் வாழும் .இளையவர்கள் , தனிமையிலும் பணி நிமித்தமாய் கஷ்டப்படாலும் .காத்திருப்பது .....சகித்து வாழ்ந்து கொண்டிருப்பது ....ஊரில் தனக்காக் வாழும் உறவுகளுக்காய்.

மிகவும் யதார்த்தமான வரிகளால் கண் கலங்க வைத்துவிட்டீர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரதி...........சுவி ........அல்வாயூரான் உங்கள் வருகைக்கும்

கருத்துக்கும் நன்றி

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஈரானின் தாக்குதல் ஓரிரவில் முடிந்துவிட்டது. ஆனால் அதன் அதிர்வு இப்போதும்  வெள்ளை மாளிகையை குலுக்கிக்கொண்டிருக்கிறதாம்,........பக்கவிழைவாக இருக்குமொ?  😁
    • "Jesus refulsit omnium" ["Jesus, light of all the nations"] என்ற பழைய பாடலின் என் தமிழ் மொழிபெயர்ப்பு  கி பி 340 இல் இருந்து தான் நத்தார் மார்கழி திங்கள் 25 ஆம் நாள் கொண்டாடப் படுகிறது.  உலகின் ஆரம்பகால லத்தீன் பாடல்களில் ஒன்றான இந்தப் பாடலின் [Saint Hilary of Poitiers, around the 4th century (368] ஆங்கில மொழிபெயர்ப்பை [English Translation by Kevin Hawthorne] நான் தமிழில் தருகிறேன்.    "உலக நாடுகளின் அன்பு இரட்சகர் உலர்ந்த தொட்டிலில் பிரகாசித்த கதையை குடும்பம் ஓங்கிட தெம்பை கொடுக்க கேளுங்கள் அதை நம்பிக்கை கொண்டு!"   "வானத்தில் ஒளிர்ந்து மினுங்கும் தாரகை கானத்தில் நிற்பவருக்கும் வழி காட்டிட மூன்று ஞானிகள் அறிகுறி அறிந்து அன்பு தெய்வத்தை தேடி வந்தனர்!"   "காடுமலைகள் தாண்டி மழலையை பார்த்திட மேடுபள்ளம் நடந்து பரிசுடன் வந்தனர் பாலகன் மேலே விண்மீன் நிற்க இலக்கு உணர்ந்து விழுந்து வணங்கினர்!"   "ஆத்மபலம் கொண்ட பரிசு கொண்டுவந்து கந்தல்களில் மறைந்திருந்த பாலகனை காட்டி உண்மை ஆண்டவனுக்கு சாட்சி பகிர்ந்து மண்ணுக்கும் விண்ணுக்கும், அடையாளம் காட்டினர்!"     [தமிழ் மொழி பெயர்ப்பு: கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]   "Jesus, devoted redeemer of all nations, has shone forth, Let the whole family of the faithful celebrate the stories The shining star, gleaming in the heavens, makes him known at his birth and, going before, has led the Magi to his cradle Falling down, they adore the tiny baby hidden in rags, as they bear witness to the true God by bringing a mystical gift"     [Translation by Kevin Hawthorne, PhD]     
    • 71% சதவீத வாக்குபதிவாம் த. நாட்டில். அதிலும் மூன்று சென்னை தொகுதியிலும் 10% அதிக வாக்குபதிவாம். Advantage BJP? 
    • வாழ்த்துக்கள். போராடிய நளினிக்கு பாராட்டும் வழக்கறிஞர் ராய்க்கு நன்றியும். ஏனைய 1.7.86 க்கு முன் பிறந்த அனைவரும் விரைவில் இந்திய குடியுரிமையை பெற வேண்டும்.
    • போட்டியில் கலந்துகொண்ட @goshan_che வெற்றிபெற வாழ்த்துக்கள்😃 இன்று LSG நன்றாக விளையாடியதை வைத்து கணித்திருக்கின்றீர்கள் போலிருக்கு😃 மூன்றாவது கேள்விக்கான பதிலை PBKS என்று எடுத்துக்கொள்கின்றேன்!   இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு @கறுப்பி @Eppothum Thamizhan @வாதவூரான் @கிருபன் @நீர்வேலியான் @goshan_che
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.