Jump to content

பிரான்ஸ் நாட்டில் ஈழத்தமிழர்களின் வர்த்தக நிலையங்களிலும் வீடுகளிலும் கொள்ளையடித்த பிரெஞ்சு காவல்த்துறையினர்


Recommended Posts

பிரான்ஸ் நாட்டில் ஈழத்தமிழர்களின் வர்த்தக நிலையங்களிலும் வீடுகளிலும் கொள்ளையடித்த பிரெஞ்சு காவல்த்துறையினர் பிடிபட்டனர்..

பிரான்ஸ் நாட்டில் தமிழர்களின் வர்த்தக நிலையங்கள் அதிகமாக இருக்கும் பாரிஸ் லாசப்பல் பகுதியில் இதுவரைகாலமும் தொடர்ச்சியாக நகைக்கடைகள் மற்றும் வர்த்தக நிலையங்கள்மற்றும் சீட்டு பிடிப்பவர்கள்.வட்டிக்குகொடுப்பவர்கள் என்பவர்களின் வீடுகளும் கொள்ளையடிக்கப் பட்டு வந்தது..கடந்த மாதமும் ஒரு நகைக்கடையில் 4 இலட்சம் பெறுமதியான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்த நிலையில் இதுவரை காலமும் குற்றவாளிகள் கண்டு பிடிக்கப்படவில்லை..ஆனால் கடந்த வாரம் ஒரு தொலைபேசி மட்டை விற்பனை நிலையம் ஒன்றில் சோதனை செய்யப்போவதாக சொல்லிக்கொண்டு போன காவல்த்துறையினர் அங்கிருந்த வேலையாட்களை ஒரு அறையென்றில் வைத்து விசா சோதனை செய்து கொண்டிருக்கும் பொழுது மற்றைய காவல்துறையினர் பணத்தினை கொள்ளையடித்தனர்..பணம் கொள்ளையடிக்கப்படுவதை பாதுகாப்பு வீடியோவில் இன்னொரு அறையிலிந்து கவனித்தவர் சந்தேகம் கொண்டு காவல்த்துறையினருடன் வாக்குவாதப்பட்டு கைகலப்பாக மாறவே காவல்துறையினரில் ஒருவர் பிடித்து கட்டிவைக்கப்பட மற்றையவர்கள் ஓடித்தப்பி விட்டார்கள்..

பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த காவல்த்துறை உயரதிகாரிகள் வந்து கட்டிவைக்கப்பட்ட காவல்த்துறை அதிகாரி போலியானவர் அல்ல அவர் உண்மையான காவல்துறை அதிகாரியே தன்னுடைய கடைமையை செய்தார் என்று கூறி அவரை மீட்டு சென்றதுடன் தாக்கியவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்திருந்தனர்..ஆனால் கடை உரிமையாளர் வீடியோ ஆதாரங்களுடன் காவல்த்துறை உயரதிகாரிகளிடம் நிலைமையை எடுத்து சொன்னது மட்டுமல்லாமல் ஊடகங்களிடமும் வீடியோ ஆதாரங்களை கொடுத்துள்ளார்..அதன் பின்னர்தான் வழக்கின் திசை மாறி கொள்ளையடித்த காவல்துறையினர் மீது விசாரணைகள் தொடங்கியது...விசாரணைகளின் பொழுது இவர்களுடன் இந்திரன் என்கிற ஒரு தமிழர் தொடர்பு பட்டிருப்பதாகவும் அவரே தமிழர்களின் விபரங்களை இவர்களிற்கு வழங்குவதாகவும்..பின்னர் கொள்ளையடிக்கபட்டதில் பங்கு பிரித்துகொள்வார்கள் என்றும் தெரியவந்துள்ளது..ஆனால் இதுபொது மக்களிடம் பிரெஞ்சு காவல்த்துறையின் மீதான ஒரு நம்பிக்கையை தகர்க்கும் விடயமாக அமையப்போகும் வழக்கு மட்டுமல்ல பிரெஞ்சு ஊடகங்கள் பிரெஞ்சு காவல்துறை மீதான சந்தேகங்களை கிழப்பத் தொடங்கிவிட்டன....பணம் கொள்ளையடிக்கபடும் காணெளியினை பார்ப்பதற்கு கீழே உள்ள இணைப்பில் அழுத்துங்கள்..

http://www.europe1.fr/Info/Actualite-France/Faits-divers/EXCLU-Deux-policiers-filmes-en-flagrant-delit-de-vol/%28gid%29/258528

Link to comment
Share on other sites

தமிழனுக்கு தமிழன்தான் ஆப்பு வைக்கிறான்

தமிழனுக்கு என்ன அனியாயம் செய்தாலும் கேட்க நாதி இல்லை

தமிழனுக்கு எது நடந்தாலும் ஒண்ணுமே சொல்லமாட்டான்

ஒண்ணுமே செய்யமாட்டான்

ஏன்னா தமிழன் ரொம்ம்ம்மப நல்ல்ல்ல்லவன்

Link to comment
Share on other sites

உலகில் எங்கும் இளித்த வாயரும் இலகுவாக ஏமாற்றக் கூடியவர்களும் ஈழத்தமிழர்தான் என்பதால்தான் (ஈழ புதிய தலைமுறையை நான் சொல்லல்ல... !? :) ) இது இழகிய... மென்மையான... எதுக்கும் வளைந்து கொடுக்கும் எருமைமாடாகிய இன்றைய தமிழர்... நாடுமட்டுமே இன்று எமக்கு வேண்டும் என்பதால் உலகு எம்மை இப்படி பயன்னடுத்த போகிறது... அதை பிளைக்க தெரிந்த நாதரீக மனித உலகமும்.. !? தமிழனும்...!? அது நம்ம ராசபக்ச... :) நம்ம துரோகிகளும்... ^_^ இந்தியாவும்.... சீனாவும்... இவர்களுன் இன்றைய செய்தி அமெரிக்காவுமாம் !? :):lol: ஏன் எனி ஐரோப்பாவும் எம்மை இனி ஏமாற்றலாம்... :)

எவ்வளவு செய்யும் எமக்கு பாரீஸில் கடைகளில் வரும் பொலிஸ் கள்ளர் 1 வரின் கதையை 1 தமிழன் ஒளிக்க இயலாதா... என்ன... தமிழர் அதாவது ஈழ தமிழர் விலாசம் இனி நாம் இங்கிருந்துதான் காட்டணும் என்றால்... காட்டத்தான் வேண்டும்... ! நிலத்துக்கு பயனுள்ளதாக இருக்க கூடியதாக இருந்தால்... இப்போ... போராட்டம் புலத்தார் கைகளில்... விளங்கினால் சரி.... :) (இங்குள்ளவை எனது தனிப்பட்ட கருத்துக்கள் நன்றி)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடைக்காரர் கெட்டிக்காரர் போல கிடக்கு காவல்துறையை சேர்ந்தவரேயே அடைத்து வைத்திருக்கிறார் :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விசாரணைகளின் பொழுது இவர்களுடன் இந்திரன் என்கிற ஒரு தமிழர் தொடர்பு பட்டிருப்பதாகவும் அவரே தமிழர்களின் விபரங்களை இவர்களிற்கு வழங்குவதாகவும்..பின்னர் கொள்ளையடிக்கபட்டதில் பங்கு பிரித்துகொள்வார்கள் என்றும் தெரியவந்துள்ளது..

தமிழர்கள் இலங்கை பொலிசாருக்கு காட்டிகொடுத்து , வயிறு வளர்த்த காலம் முன்னேறி .....

இப்போ..... வெள்ளைக்காரனுக்கு காட்டிக்கொடுத்து வயிறு வளர்க்கும் காலத்திற்கு முன்னேறியுள்ளார்கள்.

எங்கை இருந்தாலும் ..... தமிழன்ரை உடம்பிலை இருக்கின்ற காட்டிக் கொடுக்கின்ற புத்தியை மட்டும் மாற்றவே முடியாது.

நாய் வாலை நிமிர்த்த முடியுமா .....?

Link to comment
Share on other sites

பரீஸ் தமிழ் தொலைபேசிக் கடையில் கொள்ளை அடித்த "பொலீஸ் கள்ளர்கள்" பற்றிய இன்றைய புதினம் FR-fr இங்கே ஆங்கிலத்தில் மொழிபெயர்பு !

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பரீஸ் தமிழ் தொலைபேசிக் கடையில் கொள்ளை அடித்த "பொலீஸ் கள்ளர்கள்" பற்றிய இனறைய புதினம் இங்கே இங்கிலிஸ்ஸில்

அட ......,

அதுக்குள்ளை, இங்கிலிஸ் பேப்பரிலேயும் வந்துட்டுதா ....... :):lol:

Link to comment
Share on other sites

அட ......,

அதுக்குள்ளை, இங்கிலிஸ் பேப்பரிலேயும் வந்துட்டுதா ....... ^_^:)

பரீஸ் தமிழ் தொலைபேசிக் கடையில் கொள்ளை அடித்த "பொலீஸ் கள்ளர்கள்" பற்றிய இன்றைய புதினம் FR-24 en !???!!!

Watch :FRANCE 24 live : THE NEWS

Watch : all world tv s here :lol::)

Link to comment
Share on other sites

:lol:உண்மையில் கடை உரிமையாளரை பாராட்டத் தான் வேண்டும். ஏற்கனவே எத்தனை கடைகளில் இப்படிக் கொள்ளையடித்தார்களோ?? பலநாள் கள்ளன் ஒருநாள் பிடிபட்டுள்ளான். :):)
Link to comment
Share on other sites

என்னவென்றாலும் அந்த இந்திரன் என்ற தமிழரைப் பாராட்டத்தான் வேண்டும். எந்த இடமென்றாலும் எங்கள் தமிழர் குணத்தை அருமையாக காட்டியமைக்கு

Link to comment
Share on other sites

:lol:உண்மையில் கடை உரிமையாளரை பாராட்டத் தான் வேண்டும். ஏற்கனவே எத்தனை கடைகளில் இப்படிக் கொள்ளையடித்தார்களோ?? பலநாள் கள்ளன் ஒருநாள் பிடிபட்டுள்ளான். :):)

இவர் ஒழுங்காக வரிகளைக் கட்டுபவராக இருக்கும். ஏற்கனவே பறிகொடுத்தவர்கள் காவல் துறையிடம் முறையிடத் தயங்குவது களவுபோன பணத்தை எப்படிக் கணக்குக் காட்டுவதென்ற சிக்கலாலும்தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதுதானே பார்த்தான் எங்களை இன்னொருத்தன் ஒருநாளும் ஏமாத்த முடியாது. இணைபுக்கு நன்றி சாத்திரி.

Link to comment
Share on other sites

நான் இருந்த வீட்டில ஸ்கொட்லான்ட்காரனும் களவெடுத்தவன்.பல வருடங்களுக்கு முன் லண்டனில் தமிழ் பெடியங்களின் சண்டையால் மூன்று மாணவர்கள் தீயில் எரிந்து செத்தார்கள் அப்போ நானிருந்த வீட்டில் சோதனையிட வந்தவர்கள் எல்லோரையும் வரவேற்பறையில் இருத்தி விட்டு முழு வீடும் சோதனையிடார்கள்.அப்போ அங்கிருந்த அனைவருமே 50,100 என்ற கணக்கில் களவாடப்பட்டோம் அத்துடன் போன் பில் கட்ட சேர்த்து வைத்திருந்த 450 உம் காலி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் இருந்த வீட்டில ஸ்கொட்லான்ட்காரனும் களவெடுத்தவன்.பல வருடங்களுக்கு முன் லண்டனில் தமிழ் பெடியங்களின் சண்டையால் மூன்று மாணவர்கள் தீயில் எரிந்து செத்தார்கள் அப்போ நானிருந்த வீட்டில் சோதனையிட வந்தவர்கள் எல்லோரையும் வரவேற்பறையில் இருத்தி விட்டு முழு வீடும் சோதனையிடார்கள்.அப்போ அங்கிருந்த அனைவருமே 50,100 என்ற கணக்கில் களவாடப்பட்டோம் அத்துடன் போன் பில் கட்ட சேர்த்து வைத்திருந்த 450 உம் காலி

நீங்கள் அப்போதிருந்தே எரிக்கிறவர்களுடன்தான் நட்பாக இருக்கின்றீர்கள் போல

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் இருந்த வீட்டில ஸ்கொட்லான்ட்காரனும் களவெடுத்தவன்.பல வருடங்களுக்கு முன் லண்டனில் தமிழ் பெடியங்களின் சண்டையால் மூன்று மாணவர்கள் தீயில் எரிந்து செத்தார்கள் அப்போ நானிருந்த வீட்டில் சோதனையிட வந்தவர்கள் எல்லோரையும் வரவேற்பறையில் இருத்தி விட்டு முழு வீடும் சோதனையிடார்கள்.அப்போ அங்கிருந்த அனைவருமே 50,100 என்ற கணக்கில் களவாடப்பட்டோம் அத்துடன் போன் பில் கட்ட சேர்த்து வைத்திருந்த 450 உம் காலி

அப்போதிருந்தே எரிக்கிற ஆட்களுடன்தான் உங்களுக்கு நட்பு போல?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.