Jump to content

யோகி


Recommended Posts

கய்தே, கஸ்மாலம், பேமானியிலிருந்து பவுடர், மர்டர் என்று பிரமோஷன் ஆகியிருக்கும் ஸ்லம் கதை. அதில் ஜம்மென்று அறிமுகமாகியிருக்கிறார் அமீர். வாங்க குப்பத்து ராஜா...

கூவக்கரையோரத்தில் குடியிருப்பதாலேயே அழுக்கும், ஆவேசமுமாக திரிகிறது இந்த இளைஞர் கோஷ்டி. தப்பு செஞ்சாலும் தமுக்கடிக்கிற மாதிரி செய்யணும் என்பது சக நண்பனான சினேகனின் ஆசை. அந்த ஊர் இன்ஸ்பெக்டரிமே ஆட்டைய போடுகிறார்கள். தப்பி ஓடும்போது ஒரு காரை கடத்திக் கொண்டு ஓடுகிறார் அமீர். காருக்குள்ளே... அழகான குழந்தை ஒன்று. அதுதான் அமீரின் சந்தோஷ ஆரம்பம். ஆயுளின் முடிவு.

அது தெரியாமல் குழந்தையை தானே வளர்க்க வேண்டும் என அவர் முனைப்பு காட்டுகிறார். இன்னொரு பக்கம் குழந்தைக்கு அம்மாவான சுவாதி படுத்த படுக்கையாக கிடக்க, அவளது இரண்டாம் கணவரான வின்சென்ட் அசோகன் குழந்தையை கொல்வதற்காக அதே குப்பத்தில் ஆட்களுக்கு பணம் கொடுக்க, ஆரம்பமாகிறது சேசிங். குழந்தை தப்பித்ததா? கடத்திய அமீரின் கதி என்ன? கதையின் வேகத்தில் அங்கங்கே பிரேக் பிடித்தாலும், பிற காட்சிகளில் எக்குதப்பான வேகம்.

"ஒழுங்கா சமத்தா இருக்கணும்..." படம் எடுத்தாடும் பாம்பிடம் நிதானமாக எச்சரித்துவிட்டு போகும் அமீரின் கண்களும், முகமும் பயங்கரம். அதிலும் குளோஸ் அப்பில் வந்து பாம்பை சீண்டிவிடும் தைரியமே சொல்கிறது அவன் எதற்கும் அடங்காதவன் என்று! இறுதிவரை அந்த திமிரை காப்பாற்றியிருக்கிறார் அமீர். வெல்டன் பாஸ¨... 'சீர்மேவும் கூவத்திலே' பாடலில் ஒரு ஆட்டம் போட்டிருக்கிறாரே, பிரமாதம்ப்பா! தன்னை வளைக்கும் ரவுடிகள் மத்தியில் மெல்ல நடந்து ஒவ்வொருவனுக்கும் கீறல் போடுகிறாரே, செம சீன் சாரே!

கவிஞர் சினேகன் பேனாவுக்கு பதிலாக பிஸ்டலை பிடித்திருக்கிறார். தோளில் புரளும் முடியும், துடிக்கும் கண்களுமாக மனிதர் இன்னொரு ஏரியாவில் சதம் அடிக்க கிளம்பி விட்டாராக்கும்! இவருடன் வரும் இன்னும் சில ஸ்லம்டாக் ரவுடிகளும் நடிப்பில் நங்கூரம் போட்டிருக்கிறார்கள்.

தோளில் தொங்கும் குழந்தையுடன் திரியும் மதுமிதா, தமிழ்சினிமா நாயகிகளின் இலக்கணங்களை துவைத்து காய போட்டிருக்கிறார். ஒரு காட்சியில் அவர் காட்டியிருக்கும் துணிச்சல் வேறெந்த நடிகைகளுக்கும் வராது. (அந்த காட்சியில் அமீர் மட்டும் வேறு பக்கம் திரும்பிக் கொள்வாராம். நாமெல்லாம் பார்க்கணுமாம். நல்லாயிருக்குய்யா நியாயம்)

ரசிகர்களுக்கு ஆத்திரத்தை கிளப்பும் அந்த பிளாஷ்பேக்கில் அறிமுகமாகிறார் புதுமுகம் தேவராஜ். தாடியை சொறிந்து கொண்டே அவர் பேசுகிற டயலாக்குகள் ஆத்திரமூட்டுகிறது. 'நான் கடவுள்' தாண்டவனே இவரிடம் 'பிச்சை' வாங்க வேண்டும் போலிருக்கிறது. இவருக்கான முடிவை தியேட்டரே கொண்டாடுகிறது. இவருக்கு தமிழ்சினிமா தாராளமாக ஒரு 'நல்வரவு' சொல்லலாம்.

எல்லாம் ஓ.கேதான். குழந்தையை வளர்க்கிறேன் பேர்வழி என்று அமீர் செய்யும் அட்டகாசங்கள் பொறுத்துக் கொள்ளவே முடியவில்லை. எந்த நேரத்தில் மூச்சடைக்குமோ என்ற ஐயுற வைக்கிறது, அந்த குழந்தை கிடக்கும் பெட்டியை மூடும்போதெல்லாம். இன்னொரு காட்சியில் உடம்பெல்லாம் கட்டெறும்பை கடிக்க விட்டிருக்கிறார்கள். பிராணிகள் வதை சட்டம் மாதிரி, குழந்தைகள் வதை சட்டத்தையும் சினிமாவில் கொண்டுவர வேண்டும். உடனே... உடனே...

கத்திப்பாராவுக்கு தடை போட்ட மாதிரி, கட்டி முடிக்கப்படாத கட்டிடங்களில் க்ளைமாக்ஸ் வைக்கக் கூடாது என்றொரு தடை போட்டால் கூட பரவாயில்லை. யூ டூ அமீர்?

யுவனின் இசையில் இரண்டே பாடல்கள். (பத்தாது நைனா...) மிரட்டலான லைட்டிங்கில் தனது இருப்பை காட்டுகிறார் ஒளிப்பதிவாளர்.

யோகி- கூவக்கரையில் ஒரு தவம்!

Link to comment
Share on other sites

வணக்கம் குமுதம்,

யாரோ எழுதிய விமர்சனத்தை வெட்டி ஒட்டி இருக்கிறீர். பரவாயில்லை. கடைசி விமர்சனத்தின் மூலத்தை குறிப்பிடாவிட்டாலும் மினக்கட்டு விமர்சனத்தை எழுதியவரின் பெயரையாவது குறிப்பிடலாமே? மிகுதி விமர்சனங்களை நாங்கள் இங்குபோய் பார்க்கின்றோம்: http://www.tamilcinema.com/cinenews/review/review.aspx?year=2009

Yogi01.jpg

கய்தே, கஸ்மாலம், பேமானியிலிருந்து பவுடர், மர்டர் என்று பிரமோஷன் ஆகியிருக்கும் ஸ்லம் கதை. அதில் ஜம்மென்று அறிமுகமாகியிருக்கிறார் அமீர். வாங்க குப்பத்து ராஜா...

கூவக்கரையோரத்தில் குடியிருப்பதாலேயே அழுக்கும், ஆவேசமுமாக திரிகிறது இந்த இளைஞர் கோஷ்டி. தப்பு செஞ்சாலும் தமுக்கடிக்கிற மாதிரி செய்யணும் என்பது சக நண்பனான சினேகனின் ஆசை. அந்த ஊர் இன்ஸ்பெக்டரிமே ஆட்டைய போடுகிறார்கள். தப்பி ஓடும்போது ஒரு காரை கடத்திக் கொண்டு ஓடுகிறார் அமீர். காருக்குள்ளே... அழகான குழந்தை ஒன்று. அதுதான் அமீரின் சந்தோஷ ஆரம்பம். ஆயுளின் முடிவு.

அது தெரியாமல் குழந்தையை தானே வளர்க்க வேண்டும் என அவர் முனைப்பு காட்டுகிறார். இன்னொரு பக்கம் குழந்தைக்கு அம்மாவான சுவாதி படுத்த படுக்கையாக கிடக்க, அவளது இரண்டாம் கணவரான வின்சென்ட் அசோகன் குழந்தையை கொல்வதற்காக அதே குப்பத்தில் ஆட்களுக்கு பணம் கொடுக்க, ஆரம்பமாகிறது சேசிங். குழந்தை தப்பித்ததா? கடத்திய அமீரின் கதி என்ன? கதையின் வேகத்தில் அங்கங்கே பிரேக் பிடித்தாலும், பிற காட்சிகளில் எக்குதப்பான வேகம்.

"ஒழுங்கா சமத்தா இருக்கணும்..." படம் எடுத்தாடும் பாம்பிடம் நிதானமாக எச்சரித்துவிட்டு போகும் அமீரின் கண்களும், முகமும் பயங்கரம். அதிலும் குளோஸ் அப்பில் வந்து பாம்பை சீண்டிவிடும் தைரியமே சொல்கிறது அவன் எதற்கும் அடங்காதவன் என்று! இறுதிவரை அந்த திமிரை காப்பாற்றியிருக்கிறார் அமீர். வெல்டன் பாஸ¨... 'சீர்மேவும் கூவத்திலே' பாடலில் ஒரு ஆட்டம் போட்டிருக்கிறாரே, பிரமாதம்ப்பா! தன்னை வளைக்கும் ரவுடிகள் மத்தியில் மெல்ல நடந்து ஒவ்வொருவனுக்கும் கீறல் போடுகிறாரே, செம சீன் சாரே!

கவிஞர் சினேகன் பேனாவுக்கு பதிலாக பிஸ்டலை பிடித்திருக்கிறார். தோளில் புரளும் முடியும், துடிக்கும் கண்களுமாக மனிதர் இன்னொரு ஏரியாவில் சதம் அடிக்க கிளம்பி விட்டாராக்கும்! இவருடன் வரும் இன்னும் சில ஸ்லம்டாக் ரவுடிகளும் நடிப்பில் நங்கூரம் போட்டிருக்கிறார்கள்.

தோளில் தொங்கும் குழந்தையுடன் திரியும் மதுமிதா, தமிழ்சினிமா நாயகிகளின் இலக்கணங்களை துவைத்து காய போட்டிருக்கிறார். ஒரு காட்சியில் அவர் காட்டியிருக்கும் துணிச்சல் வேறெந்த நடிகைகளுக்கும் வராது. (அந்த காட்சியில் அமீர் மட்டும் வேறு பக்கம் திரும்பிக் கொள்வாராம். நாமெல்லாம் பார்க்கணுமாம். நல்லாயிருக்குய்யா நியாயம்)

ரசிகர்களுக்கு ஆத்திரத்தை கிளப்பும் அந்த பிளாஷ்பேக்கில் அறிமுகமாகிறார் புதுமுகம் தேவராஜ். தாடியை சொறிந்து கொண்டே அவர் பேசுகிற டயலாக்குகள் ஆத்திரமூட்டுகிறது. 'நான் கடவுள்' தாண்டவனே இவரிடம் 'பிச்சை' வாங்க வேண்டும் போலிருக்கிறது. இவருக்கான முடிவை தியேட்டரே கொண்டாடுகிறது. இவருக்கு தமிழ்சினிமா தாராளமாக ஒரு 'நல்வரவு' சொல்லலாம்.

எல்லாம் ஓ.கேதான். குழந்தையை வளர்க்கிறேன் பேர்வழி என்று அமீர் செய்யும் அட்டகாசங்கள் பொறுத்துக் கொள்ளவே முடியவில்லை. எந்த நேரத்தில் மூச்சடைக்குமோ என்ற ஐயுற வைக்கிறது, அந்த குழந்தை கிடக்கும் பெட்டியை மூடும்போதெல்லாம். இன்னொரு காட்சியில் உடம்பெல்லாம் கட்டெறும்பை கடிக்க விட்டிருக்கிறார்கள். பிராணிகள் வதை சட்டம் மாதிரி, குழந்தைகள் வதை சட்டத்தையும் சினிமாவில் கொண்டுவர வேண்டும். உடனே... உடனே...

கத்திப்பாராவுக்கு தடை போட்ட மாதிரி, கட்டி முடிக்கப்படாத கட்டிடங்களில் க்ளைமாக்ஸ் வைக்கக் கூடாது என்றொரு தடை போட்டால் கூட பரவாயில்லை. யூ டூ அமீர்?

யுவனின் இசையில் இரண்டே பாடல்கள். (பத்தாது நைனா...) மிரட்டலான லைட்டிங்கில் தனது இருப்பை காட்டுகிறார் ஒளிப்பதிவாளர்.

யோகி- கூவக்கரையில் ஒரு தவம்!

-ஆர்.எஸ்.அந்தணன்

மூலம்: http://www.tamilcinema.com/CINENEWS/REVIEW/2009/yogi.asp

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அப்ப இது குடும்ப சொத்தோ? வாகனம் கொடுத்ததில் தவறே இல்லை. வழக்கு முடிந்தது.
    • அமெரிக்க‌ன் க‌ட்ட‌த்துரையும் எப்போதும் த‌மிழ‌ன் இவ‌ர்க‌ள் இர‌ண்டு பேரும் அதிக‌ புள்ளி பெற‌ அதிக‌ வாய்ப்பு இருக்கு.................இர‌ண்டு முறை பின‌லுக்கு வ‌ந்த‌ குஜ‌ராத் அணி நேற்று 89 ர‌ன் ஓட‌ எல்லாரும் அவுட் இந்த‌ ஜ‌பிஎல்ல‌ இது தான் குறைந்த‌ ஓட்ட‌மாய் இருக்க‌லாம் நுனா அண்ணாவும் மெள‌வுன‌மாய் இருந்து புள்ளிய‌ பெற‌க் கூடும்.......................... த‌லைவ‌ரும் நானும் ஆளை ஆள் க‌ட்டி பிடிச்சு கொண்டு கீழ‌ நிப்போம்......................த‌லைவ‌ரும் நானும் ஜ‌பிஎல்ல‌ 5ப‌வுன்ஸ் வென்று விட்டோம் ஆன‌ ப‌டியால் எங்க‌ளுக்கு க‌வ‌லை இல்லை என்ன‌ த‌லைவ‌ரே.......................
    • இப்போதும் இதை ஒத்த பிரிவு அட்டவணை 3 இல் அமெரிக்கர்களுக்கு மட்டும் உள்ளது - ஆனால் சாதா சுற்றுலா வீசா, வியாபார மற்றும் ஜனரஞ்சக காரணங்களுக்காக என உள்ளது. 5 வருடம் செல்லும். ஒரு சேர 6 மாதம் நிற்கலாம் வெறும் 100 டொலர் மட்டுமே. SL embassyயில் விசாரித்துப்பாருங்கள். Business and entertainment க்குத்தான் போகிறீர்கள் என எந்த மாதிரியான ஆதாரங்கள் தேவை என. பெரிதாக தேவைப்படாது என நினைக்கிறேன். நாடக குழு, வில்லுப்பாட்டு குழு, இசைக்குழு ஒன்றில் உறுப்பினர் என ஒரு கடிதம் எடுத்து கொடுத்தால் போதுமாய் இருக்கும் என நினைக்கிறேன். (உலக தனி பெரும் வல்லரசல்லவா - தனியுரிமை - என் ஜாய்!) ————— இலங்கையர் ஒருவரை மணந்து கொண்டால் - ஒரு சிக்கலும் இல்லாதா வதிவிட வீசா கிடைக்கும். எல்லா விதத்திலும் செளகரியமாக இருக்கும். எந்த கேள்வியும் இல்லாமல் இலங்கைக்கு போகலாம், திருப்பி வீட்டுக்குள் வருவது அவரவர் சாமர்த்தியம்🤣.
    • குமாரசாமி அண்ணை...  நீங்கள் கேட்பதும் நியாயமானதே. மொடல் அழகி என்றுவிட்டு.... அதற்கு பொருத்தமான படத்தை இணைக்காமல் விட்டது எனது தவறுதான். 😂  
    • ஈழப்பிரியன் இன்றைக்கு களத்தில் இறங்கப் போகிறான். ஓரம்போ ஓரம்போ ஈழப்பிரியனின் வண்டி வருது. நீங்கள் எதிர்பார்த்ததை விட கூடுதலானவர்கள் இன்றும் நாளையும் போட்டியில் குதிப்பார்கள்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.