Jump to content

செருப்..........பூ ...


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

செருப்.........பூ ...(காலணி )..

மனிதனுக்கு அன்றாடம் தேவையான பொருட்களில் ஒன்று. இதன் பலன்கள் பெருமை பல கோடி.........காலுக்கு பாதுகாப்பு ........மழை ....குளிர் ...வெப்பம்.... முட்கள் ...அழுக்குகள் என்று .........ஆனால் இதற்கு மதிப்பு என்னவோ ?........இத்தனைக்கும் சுமை தாங்கியாய் உற்ற தோழனாய் நம்மோடு தொடர்ந்து வருகிறது. இந்த பாதணி. ஆரம்ப காலத்தில் மிதியடிக்கட்டை என்றும்...செருப்பு என்றும் காலணி..... பாத அணி ......என்றும் அழைக்க பட்டது. இதன் அமைப்பு ..வண்ணவண்ணமாய் ...நிறங்களாய் ..ரகங்க்களாய்...இதன் அலங்காரம் சொல்லி முடியாது. காலத்தின் தேவைக்கேற்ப மாறு படும். சில சமயம் புதுசாய் இருக்கையில் காலையே ( கடித்து )வலிக்க செய்து விடும். இன்டர் வியூ சமயத்தில் சங்கடம் தந்த சமயங்களும் உண்டு. இந்த காலணி பற்றி நினைக்கையில் , இந்த செருப்பு ஒரு காதலுக்கு தூது போன கதை சொல்லவா? ..........இதோ

அந்த கிராமத்தில் சற்று வசதியானது ராஜரத்தினம் குடும்பம். இவர்களுக்கு ஒரு தியேட்டர் (சினிமா கொட்டகை) இருந்தது .நகரில். இவரது செல்ல பெண் தான் ஜீவா எனும் ஜீவராணி. வழக்கம்போல பள்ளி மாணவி, சிறுவயதில் தாயை இழந்த ஒரே ஒரு செல்லப்பெண். நிறைய நண்பிகளும் இருந்தார்கள். பள்ளி வாழ்வும் கேலிகளும் கிண்டல்களுமாய் இனிய பொழுது இவர்களுக்கு.வாழ்க்கை வண்ண வண்ண பட்டாம் பூச்சியாய் சிறகடித்து பறந்து கொண்டிருந்தது.

அவ்வூரின் வாத்தியார் மகன் அருணாகிரி என்னும் அருணா .இவனுக்கும் நட்பு வட்டம் உண்டு. அருணாவுக்கு ஜீவாமீது ஒரு ஈர்ப்பு இருந்தது . மாணவியர் கூட்டம் எங்கு சென்றாலும் இவர்களும் செல்வார்கள். ஒரு நாள் தன் தோழன் மூலம் தூது விடான் அருணா. அவள் ஜீவா கண்டு கொள்வதாயில்லை. சில சமயம் தனி மையில் சந்திக்க நேர்ந்தால் என்னை சுற்றி சுற்றி வராதே என்பாள். ஒரு முறை இவன் கொடுத்தனுப்பிய கடிதத்தை அவன் முன்னே கிழித்தெறிந்து விட்டாள். இருந்தாலும் அருணாவின் மனசு அவளை சுற்றி சுற்றியே வந்தது . ஒரு முறை மாணவிகள் எல்லோரும் நகரில் உள்ள தியேட்டருக்கு படம் பார்க்க சென்றார்கள். மாணவர்கள் காதிலும் இந்த சேதி எட்டி விட்டது. அருணா கூட்டமும் தியேட்டர் நோக்கி படையெடுத்தது. படம் முடிந்ததும் ....அருணா கூட்டம் பஸ்தரிப்பிடத்தில் , காத்திருந்தார்கள். ஜீவா தன் வீட்டுக காரில் தோழியர் களையும் ஏற்றிக் கொண்டு புறப்பட தயாராகும்போது .., தாம் படம் பார்க்க வரும்போது இவர்கள் ஏன் வந்தார்கள் என்று மாணவர்களுடன் கார சாரமான விவாதம் நடந்தது . வாய்ச்சண்டை முற்றி ...... நண்பிகள் தடுத்தும் கேட்காமல் .ஜீவராணி அருணாவுக்கு செருப்பால் அறைந்து விடாள். . அருணா சற்றும் எதிர் பாராமல் நிலை குலைந்து விட்டான் . இவர்கள் வீடு சேர்ந்ததும் அவ்வூர் முழுக்க் "தியேட்டர் காரன் மகள் செருப்பால் அறைந்து விடாள்" என்று .........கதை பரவி விட்டது. ஜீவாவுக்கு அவமானமாக் போய் விட்டது. நண்பிகள் மறு நாள் மன்னிப்பு கேட்கும் படி சொன்னார்கள். ஜீவா தன் தந்தைக்கு இந்த சேதி போகாமல் பார்த்துக்கொண்டாள். வாத்தியார் , பணக்காரன் ராஜரத்னாதுடன் மோத விரும்பாமல் ,மகனுக்கு மாற்றல் வாங்கி வேறு நகர் பள்ளியில் சேர்த்து விடார்.. ஊரார் இவளை திமிர் பிடித்தவள் என்று திட்டி தீர்த்தனர். அதன் பின் ஜீவா .......அதிகம் வீட்டை விட்டு வெளியே வருவதில்லை பள்ள்ளிக்கு வந்தாலும் கலகலப்பாக இருபதில்லை அவளது நட்பு வட்டமும் குறைந்து விட்டது. காலம் யாருக்கும் காத்திராமல் ஆண்டு இறுதி தேர்வும் வந்தது........எல்லோரும் தேர்வு எழுதி முடியவும், விடுமுறைக்காக பள்ளி மூடபட்டது.

தேர்வின் முடிவு பார்க்க இரண்டு மாதங்களின் பின் வந்தவள் அருனாவை சந்தித்தாள். அவன் முகம் கொடுத்து பேச விரும்பவில்லை. அவனுக்கு நல்ல பெறு பேறுகள் கிடைத்திருந்தன. தந்தையார் தலை நகரத்துக்கு அனுப்பி .உயர் கல்வி படிப்பித்தார். காலம் தன் பாட்டில் போய் கொண்டு இருந்தது. இறுதியில் ஒரு பெரிய கம்பனியில் , முதன்மைப்பதவி பெற்றான். ராஜரத்தினம் ஐயாவும் தன் மகளுக்கு திருமண பேச்சை எடுத்தார். தாயில்லாப் பிள்ளை நேரகாலத்துடன் கலியாணம் செய்து கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்துடன். அவள் எதற்கும் சம்மதிக்க வில்லை. வெளியூரில் இருந்து உயர் பதவியில் இருக்கும் இளைஞ்சர்களின் பெற்றார்கள் , இவாகளின் உறவுக்காக , நடபுக்காக ( பணத்துக்காக ) போட்டி போட்டனர் இறுதியாக இவள் தனக்கு இப்பொழுது திருமணம் வேண்டாமென்று சொல்லி விட்டாள்.

ஒரு நாள் பேச்சு வாக்கில் இந்த சேதி ராஜரத்தினம் ஐயாவுக்கு எட்டியது மகளை விசாரித்தார். அவளும் உண்மையை ஒப்புக்கொண்டாள். அருணாவுக்கு செய்யும் பரிகாரம் அவனையே திருமணம் செய்ய இருப்பதாக தன் முடிவை சொன்னாள். அவருக்கு என்ன செய்வதன்று தெரியவில்லை. இவளின் பிடிவாதமும் தெரியும் .தன் மகளுக்காக் தன் நிலையிறங்கி வாத்தியாருடன் , சமாதானம் செய்ய புறபட்டார். முதலில் வாத்தியார் விரும்பவில்லை என்றாலும் மகனின் விருப்பமே பெரிது என்றார். அந்த வருட ஊர் திருவிழாவின் போது . அருணா ஊருக்கு வந்திருந்தான். முதலில் மறுத்தவன் , ஜீவா நேரில் சென்று கதைத்து மன்னிப்பு கேட்ட பின் , அந்த அடி தன் திமிர் தனத்துக்கு கிடைத்த பெரும் தண்டனை என்றாள். ஒருவாறு இரங்கினான். அந்த சம்பவத்தின் பின் ....அதன் பின் அவள் நிறைய மாறி இருந்தாள் . பணத்திமிர் தனம் இல்லை. அகங்காரம் இல்லை சாது போன்று இருந்தாள். திருமணம் இனிதே நிறைவேறியது. பொறுமையின் இருப்பிடமான அந்த செருப்பு (செருப்படி) அவர்களுக்கு காதல் தூது ஆனது.

குறிப்பு ": இக்கதை பல வருடங்களுக்கு முன் என் பாட்டி சொன்ன கதையின் சாராம்சம் .காலணி பற்றி எழுதும்போது கதையாக் வந்தது . என்பாட்டி காலமாகி முப்பதுக்கு மேற்பட்ட வருடங்கள். செருப்புகளின் சேவை பலவிதம். கலியாணப் புரோக்கர்களின் காலம் தொட்டு இன்று வரை..........

வெளியிட்டவர் நிலாமதி நேரம் 10:01 AM தேதி Dec 17, 2009

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன சகோதரி செருப்பை வெறும் செருப்பாய் நினைசசிட்டீங்கள் ! இந்தச் செருப்பு, உப்பு , அம்மா , அக்கா, பொக்கட்டில் இருக்கும் பணம் ஆகியவைகளில் நாம் அக்கறை செலுத்தாதற்கு காரணம் கண்ணிமைபோல் அவை எப்போதும் எம்முடனும் எமக்குத் தேவையாகவும் இருப்பதுதான்.

பி .கு; இராமன் முடிசூட வரும்போது ஒரு பிரச்சனை பின் வனவாசம் முடித்து அரசாண்டபோது ஒரேஏ பிரச்சனைகள்தான். அனால் இடையில பதினான்கு வருடங்கள் செருப்பு அரசாண்டபோது அயோத்தி மக்கள் பிரச்சனைகள் எதுவுமின்றி சுபீட்சமாக வாழ்த்தார்கள். :rolleyes::rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கலியானம் கடடிய பின் என்ன வாங்கு வாங்கியுருக்குமோ அந்தப்பெண். :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கலியானம் கடடிய பின் என்ன வாங்கு வாங்கியுருக்குமோ அந்தப்பெண். :(

எதை சொல்கிறீர்கள் சகிவன் :):):D

நிலா அக்கா செருப்பு[பூ] கதை நன்றாக உள்ளது ஆத்திரத்தில் செய்யும் சில சம்பவங்கள் சிலருக்கு வாழ்க்கையை கேள்விக்குறியாக்கியிருக்கிறது... :D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.