Jump to content

உடைப்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

உடைப்பு

315690_10150350842531551_702766550_8698188_1057607670_n.jpg

மழைக்காடு வறண்டதென்று

வரி புனையும் வண்ணம்

சக்கரவாகம் மழை தின்றதெவ்வாறு?

எண்ண எரிவுகளில் பினீக்ஸ் பிறப்பு மட்டும்

கன்னம் வருடி நின்று கனிவது எங்ஙனம்?

பூமி காலடிக்குள் புதைந்து மறைவதாக

வானுலகம் வியாபித்து விரிந்தது எக்கணம்?

வல்லமையின் பொழுதொன்றை அல்லதென்றாக்கும்

வனையப்படாத வினையூக்கி எது?

நெருஞ்சின்முட்களை நொறுக்கி சிரிக்கின்ற பூக்களை

அள்ளி வந்த காற்றின் முகவரி யாது?

Link to comment
Share on other sites

உடைப்பு

blushing-main_Full.jpg

மழைக்காடு வறன்டதென்று

வரி புனையும் வண்ணம்

சக்கரவாகம் மழை தின்றதெவ்வாறு?

எண்ண எரிவுகளில் பினீக்ஸ் பிறப்பு மட்டும்

கன்னம் வருடி நின்று கனிவது எங்ஙனம்?

பூமி காலடிக்குள் புதைந்து மறைவதாக

வானுலகம் வியாபித்து விரிந்தது எக்கணம்?

வல்லமையின் பொழுதொன்றை அல்லதென்றாக்கும்

வனையப்படாத வினையூக்கி எது?

நெருஞ்சியை நொறுக்கி சிரிக்கின்ற பூக்களை

அள்ளி வந்த காற்றின் முகவரி யாது?

நேராக, பக்கவாட்டாக, தலைகீழாக நின்று எப்படி வாசித்துப் பார்த்தாலும் ஒன்றும் விளங்கின்றமாதிரி தெரியவில்லை.. எதோ ஒரு பேரின்பத்தை பூடகமாக சொல்வது போலவும் கிடக்கு, ஏதோ ஒரு சந்தோசத்தை ஒளிச்சுப் பிடிச்சு கவிதையாக்கினமாதிரியும் கிடக்கு. தயங்கு இயங்கு கவிதையின் இரண்டாம் பாகமோ என்றும் ஒரு எண்ணம் இடையில் ஓடுது. வேற எதைப்பத்தியும் யோசிக்க முடியாத என் 'வீட்டுச் சூழலில்' காண்பதெல்லாம் 'அது' போலத்தான் எனக்கு தோன்றுதோ என்றும் தெரியவில்லை.... :):blink:

Link to comment
Share on other sites

மண்டை தான் உடைப்பு எடுக்கும் போல சகாறா. :) ஒன்றும் விளங்கவில்லை.படம் தான் ஆயிரம் வரிகளை சொல்லி நிற்கிறது. :blink:

Link to comment
Share on other sites

மண்டை தான் உடைப்பு எடுக்கும் போல சகாறா. :) ஒன்றும் விளங்கவில்லை.படம் தான் ஆயிரம் வரிகளை சொல்லி நிற்கிறது. :blink:

இதுக்கு நான் எழுதிற செய்யுளே பரவாயில்லை போல..! :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உடைப்பு

blushing-main_Full.jpg

மழைக்காடு வறன்டதென்று

வரி புனையும் வண்ணம்

சக்கரவாகம் மழை தின்றதெவ்வாறு?

எண்ண எரிவுகளில் பினீக்ஸ் பிறப்பு மட்டும்

கன்னம் வருடி நின்று கனிவது எங்ஙனம்?

பூமி காலடிக்குள் புதைந்து மறைவதாக

வானுலகம் வியாபித்து விரிந்தது எக்கணம்?

வல்லமையின் பொழுதொன்றை அல்லதென்றாக்கும்

வனையப்படாத வினையூக்கி எது?

நெருஞ்சியை நொறுக்கி சிரிக்கின்ற பூக்களை

அள்ளி வந்த காற்றின் முகவரி யாது?

நீங்க கேட்ட.... கேள்விக்கு ......ஒரே ..... ஒரு பதில்.

ஸ்ரீலங்காவில் புலிகள் இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சஹாரா அக்கா எதுவும் புரியிற மாதிரி தெரியலை தலையைக் கொண்டுபோய் சுவரோடை முட்டவேணும் போல இருக்கு :blink:

சஹாரா அக்கா என்னைப் போல ஞானசூனியங்களுக்கும் புரியும் படி எழுதலாமே :)

உண்மையாக ஒவ்வொரு பந்தியும் ஒவ்வொரு கருத்தை சொல்வதாய் எனக்கு படுகிறது.

தப்பா இருந்தால் மன்னியுங்க

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அய்யோ..சகாராக்கா எங்களுக்காக கவிதை எழுத இல்லை ஜீவா.திருமணம் செய்தவர்களுக்காகத் தான் எழுதி இருக்கிறா.அப்போ அவைக்குத் தான் விளங்கும்.எங்களுக்கு சுத்த சூனியம் தான் இப்போ யாழில் உலாவரும் அனேகமான கவிதைகள்.நாங்கள் இந்தப் பக்கம் தலை காட்டாமல் இருப்பதே மேல்.நன்றி. :blink::)

Link to comment
Share on other sites

அய்யோ..சகாராக்கா எங்களுக்காக கவிதை எழுத இல்லை ஜீவா.திருமணம் செய்தவர்களுக்காகத் தான் எழுதி இருக்கிறா.அப்போ அவைக்குத் தான் விளங்கும்.எங்களுக்கு சுத்த சூனியம் தான் இப்போ யாழில் உலாவரும் அனேகமான கவிதைகள்.நாங்கள் இந்தப் பக்கம் தலை காட்டாமல் இருப்பதே மேல்.நன்றி. :blink::)

:(:lol: :lol: :lol: நேற்றே சகாரா அக்காவிடம் சொன்னன் கவிதை புரியவில்லை என்று.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

:blink::(:lol: :lol: நேற்றே சகாரா அக்காவிடம் சொன்னன் கவிதை புரியவில்லை என்று.....

அப்ப.... கவிதையை, நேற்றுக்கு முந்த நாளே.... அவுட்டு விட்டாச்சா...... :)

Link to comment
Share on other sites

அப்ப.... கவிதையை, நேற்றுக்கு முந்த நாளே.... அவுட்டு விட்டாச்சா...... :)

ஐயோஓஓஓஒ தமிழ் சிறி அண்ணா நான் சகரா அக்கா எழுதிய முதல் கவிதைகளை சொன்னன் :blink::(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உடைப்பு

blushing-main_Full.jpg

மழைக்காடு வறன்டதென்று

வரி புனையும் வண்ணம்

சக்கரவாகம் மழை தின்றதெவ்வாறு?

எண்ண எரிவுகளில் பினீக்ஸ் பிறப்பு மட்டும்

கன்னம் வருடி நின்று கனிவது எங்ஙனம்?

பூமி காலடிக்குள் புதைந்து மறைவதாக

வானுலகம் வியாபித்து விரிந்தது எக்கணம்?

வல்லமையின் பொழுதொன்றை அல்லதென்றாக்கும்

வனையப்படாத வினையூக்கி எது?

நெருஞ்சியை நொறுக்கி சிரிக்கின்ற பூக்களை

அள்ளி வந்த காற்றின் முகவரி யாது?

சக்கரவாகப் பறவை பூமியின் மழைக்காடுகள் வறண்டு போகுமளவில் மழைநீரைக் குடித்துவிட்டதோ என எண்ணும்படி அவள் பார்வை எனக்குள்ளே தாகத்தை உண்டுபண்ணிவிடுகின்றது.

மறந்து போய் சாம்பலாகிவிட்ட அவள் நினைவுகள் மீண்டும் அவள் பார்வை பட்டு பீனிக்ஸ் பறவையாய் உயிர் பெற்று என் கன்னங்களை வருடிச் செல்கின்றன.

அவள் கண்கள் என்னும் பூமிப்பந்துக்குள் நுழைந்து என் நினைவுகள் வானவெளிபோல் பரந்து விரிகின்றன.

அவள் பார்வை யாருக்கும் அடிபணியாத என் ஆண்மையை தனக்குள் அடக்கி என்னை நான் என்று இல்லாமல் என்னைஅவளுடன் இரண்டறக் கலந்து விடுகிறது.

முள்ளுகளை மீறி வந்து சிரிக்கின்ற ரோசா பூவின் வாசனையை அவள் பார்வை சுமந்து வருகின்றது.

சகாரா காவாலிக்கும் கொஞ்சம் ஊர் உலகம் தெரியுமாக்கும்...... :)

Link to comment
Share on other sites

மாற்றங்கள் இல்லையென்றால்,

பூமி, இன்னும் எரிகின்ற கோளப் பந்து..

கடற்படை கொண்ட சோழப் பேர‌ர‌சு,

காணாம‌ற் போன‌தேன் ?

ஆங்கில‌ சாம்ராச்சிய‌ம்,

அஸ்த‌ம‌த்தை க‌ண்ட‌தேன் ?

வ‌ர‌லாறு, வென்ற‌வரின்

சுய‌ச‌ரித‌ம் அல்ல‌..

க‌ருத்திருக்கும் ம‌ட்டும்,

க‌ன‌வுக‌ள் இருக்கும்..

க‌ன‌வுக‌ள் ஓர் நாள்,

காட்சிக‌ளாகும்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கை கனபேர் தமிழ் பெயில் போலை கிடக்கு :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கை கனபேர் தமிழ் பெயில் போலை கிடக்கு :D

எழுத்துப் பிழைகள் உண்டு குமாரசாமியார். திருத்தியுள்ளேன். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நேராக, பக்கவாட்டாக, தலைகீழாக நின்று எப்படி வாசித்துப் பார்த்தாலும் ஒன்றும் விளங்கின்றமாதிரி தெரியவில்லை.. எதோ ஒரு பேரின்பத்தை பூடகமாக சொல்வது போலவும் கிடக்கு, ஏதோ ஒரு சந்தோசத்தை ஒளிச்சுப் பிடிச்சு கவிதையாக்கினமாதிரியும் கிடக்கு. தயங்கு இயங்கு கவிதையின் இரண்டாம் பாகமோ என்றும் ஒரு எண்ணம் இடையில் ஓடுது. வேற எதைப்பத்தியும் யோசிக்க முடியாத என் 'வீட்டுச் சூழலில்' காண்பதெல்லாம் 'அது' போலத்தான் எனக்கு தோன்றுதோ என்றும் தெரியவில்லை....

அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்றும், காமாலைக்கண்களுக்குக் கண்டதெல்லாம் மஞ்சள் என்னும் பழமொழிகள் ஏன் உருவாகியது என்று நிழலி உங்கள் பதிவில் புரிகிறது. :D

மண்டை தான் உடைப்பு எடுக்கும் போல சகாறா. ஒன்றும் விளங்கவில்லை.படம் தான் ஆயிரம் வரிகளை சொல்லி நிற்கிறது.

நுணாவிலான் இப்போதுதான் நான் கவிதை எழுதுவதில் வெற்றி பெற்றிருக்கிறேன் :lol:

இதுக்கு நான் எழுதிற செய்யுளே பரவாயில்லை போல..!

இசை இது காதல் கவிதை அதுதான்.

நீங்க கேட்ட.... கேள்விக்கு ......ஒரே ..... ஒரு பதில்.

ஸ்ரீலங்காவில் புலிகள் இல்லை.

:lol:

சஹாரா அக்கா எதுவும் புரியிற மாதிரி தெரியலை தலையைக் கொண்டுபோய் சுவரோடை முட்டவேணும் போல இருக்கு :lol:

சஹாரா அக்கா என்னைப் போல ஞானசூனியங்களுக்கும் புரியும் படி எழுதலாமே :o

உண்மையாக ஒவ்வொரு பந்தியும் ஒவ்வொரு கருத்தை சொல்வதாய் எனக்கு படுகிறது.

தப்பா இருந்தால் மன்னியுங்க

இதற்குமேல் இக்கவிதையைப் புரிகிற மாதிரி எழுதத் தெரியவில்லை

அய்யோ..சகாராக்கா எங்களுக்காக கவிதை எழுத இல்லை ஜீவா.திருமணம் செய்தவர்களுக்காகத் தான் எழுதி இருக்கிறா.அப்போ அவைக்குத் தான் விளங்கும்.எங்களுக்கு சுத்த சூனியம் தான் இப்போ யாழில் உலாவரும் அனேகமான கவிதைகள்.நாங்கள் இந்தப் பக்கம் தலை காட்டாமல் இருப்பதே மேல்.நன்றி.

"காதலிக்கக் கற்றுக் கொள்" கவிதையை நீங்கள் இன்னும் வாசிக்கவில்லையோ?

நேற்றே சகாரா அக்காவிடம் சொன்னன் கவிதை புரியவில்லை என்று.....

தினமும் கண்ணீரோடே வீடு திரும்புகிறேன் என்னும் எதிர்பார்ப்புக் கவிதை உருவாவதற்கு முன் ஒரு கவிதை எழுதியிருப்பின் அதன் பொருளை இக்கவிதை சுமக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள் சுஜி. நீங்கள் என்னைக் காதல் கவிதை எழுத மாட்டீர்களா என்று கேட்டீர்கள் அல்லவா அதற்காகத்தான் இதனை இணைத்தேன்.

சக்கரவாகப் பறவை பூமியின் மழைக்காடுகள் வறண்டு போகுமளவில் மழைநீரைக் குடித்துவிட்டதோ என எண்ணும்படி அவள் பார்வை எனக்குள்ளே தாகத்தை உண்டுபண்ணிவிடுகின்றது.

மறந்து போய் சாம்பலாகிவிட்ட அவள் நினைவுகள் மீண்டும் அவள் பார்வை பட்டு பீனிக்ஸ் பறவையாய் உயிர் பெற்று என் கன்னங்களை வருடிச் செல்கின்றன.

அவள் கண்கள் என்னும் பூமிப்பந்துக்குள் நுழைந்து என் நினைவுகள் வானவெளிபோல் பரந்து விரிகின்றன.

அவள் பார்வை யாருக்கும் அடிபணியாத என் ஆண்மையை தனக்குள் அடக்கி என்னை நான் என்று இல்லாமல் என்னைஅவளுடன் இரண்டறக் கலந்து விடுகிறது.

முள்ளுகளை மீறி வந்து சிரிக்கின்ற ரோசா பூவின் வாசனையை அவள் பார்வை சுமந்து வருகின்றது.

சகாரா காவாலிக்கும் கொஞ்சம் ஊர் உலகம் தெரியுமாக்கும்...... :lol:

பொருளுரை வழங்கிய காவாலிக்கு நன்றி. பொருளுரைக்குள் சின்னப் பொழிப்புரையும் இலகுவாக இளசுகளுக்கு விளங்கிற மாதிரி எழுதியிருக்கிறீர்கள்.

மாற்றங்கள் இல்லையென்றால்,

பூமி, இன்னும் எரிகின்ற கோளப் பந்து..

கடற்படை கொண்ட சோழப் பேர‌ர‌சு,

காணாம‌ற் போன‌தேன் ?

ஆங்கில‌ சாம்ராச்சிய‌ம்,

அஸ்த‌ம‌த்தை க‌ண்ட‌தேன் ?

வ‌ர‌லாறு, வென்ற‌வரின்

சுய‌ச‌ரித‌ம் அல்ல‌..

க‌ருத்திருக்கும் ம‌ட்டும்,

க‌ன‌வுக‌ள் இருக்கும்..

க‌ன‌வுக‌ள் ஓர் நாள்,

காட்சிக‌ளாகும்..

ஈசன் உங்கள் கோணத்தில் நின்று பார்த்தலும் நன்றாக இருக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் உடைப்பு என்ற சொன்னவுடம் வந்து பார்த்தன் ஐயோ ஐயோ

:unsure::lol::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படம் ஒரு நல்ல கவிதை!

முடிந்தவரை பொருளுரைக்கிறேன்.

எப்படித்தான் மூடி மறைத்தாலும்

உள்ளே இருப்பது வெளியேவரும்

கைகளுக்கு இடையே சிறு உடைப்பு-அது

காதலைச் சொல்வதாய் படைப்பு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மழை என்றால் குடைபிடிக்கவும்

வரி என்றால் ஓடி ஒழிவதும்

சக்கரை என்ற வியாதி ஒன்றையும்

எண்ணை என்றவுடன் விலை ஏறுவதும்

கன்னம் என்றால் கொஞ்ச என்பதாயும்

பூமி என்பது ஓடி ஒழிக்க என்றும்

வானுலகத்தை அடைய விரும்புவதும்

வல்லமை என்று கொக்கரிப்பதும்

வனையப்படாதவை என வெறுப்பதும்

நெருஞ்சியை கண்டால் தொட முயல்வதும்

அறிவோமன்றி

அள்ளி வந்த காற்றின் முகவரி

யாரறிவார் அக்கா?

புரிந்தால்தானே பதில்தர......?

Link to comment
Share on other sites

  • 5 years later...
  • கருத்துக்கள உறவுகள்

மீளப்பார்த்தேன் அனைவர் பதில்களும் மீளவும் ஒரு நட்பின் தடங்களை ஞாபகப்படுத்துகின்றனtw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On Fri Dec 25 2009 14:53:44 GMT+0530 (India Standard, வாலி said:

 

 

சக்கரவாகப் பறவை பூமியின் மழைக்காடுகள் வறண்டு போகுமளவில் மழைநீரைக் குடித்துவிட்டதோ என எண்ணும்படி அவள் பார்வை எனக்குள்ளே தாகத்தை உண்டுபண்ணிவிடுகின்றது.

 

மறந்து போய் சாம்பலாகிவிட்ட அவள் நினைவுகள் மீண்டும் அவள் பார்வை பட்டு பீனிக்ஸ் பறவையாய் உயிர் பெற்று என் கன்னங்களை வருடிச் செல்கின்றன.

 

அவள் கண்கள் என்னும் பூமிப்பந்துக்குள் நுழைந்து என் நினைவுகள் வானவெளிபோல் பரந்து விரிகின்றன.

 

அவள் பார்வை யாருக்கும் அடிபணியாத என் ஆண்மையை தனக்குள் அடக்கி என்னை நான் என்று இல்லாமல் என்னைஅவளுடன் இரண்டறக் கலந்து விடுகிறது.

 

முள்ளுகளை மீறி வந்து சிரிக்கின்ற ரோசா பூவின் வாசனையை அவள் பார்வை சுமந்து வருகின்றது.

 

சகாரா காவாலிக்கும் கொஞ்சம் ஊர் உலகம் தெரியுமாக்கும்...... :)

வாலியின் விளக்கம் கண்டபின்பு, மிகவும் ரசிக்க முடிகிறது கவிதையை.  (படம் தெரியவில்லை,  தளத்தில் கோளாறோ?)

Link to comment
Share on other sites

  • 2 years later...
  • கருத்துக்கள உறவுகள்
On 11/16/2015 at 1:53 AM, seyon yazhvaendhan said:

வாலியின் விளக்கம் கண்டபின்பு, மிகவும் ரசிக்க முடிகிறது கவிதையை.  (படம் தெரியவில்லை,  தளத்தில் கோளாறோ?)

 யாழ்கருத்துக்களத்தின் வடிவங்கள் மாறும்போது இப்படி கனக்க விடயங்கள் காணாமல் போய்விடுகிறது. என்ன படம் இணைத்தேன் என்ற ஞாபகமும் இல்லாமல் போய்விட்டது.700_FO36911792_6b75f91ab4c02cef9c2c0aa00

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

"மழைக்காடு வறண்டதென்று

வரி புனையும் வண்ணம்

சக்கரவாகம் மழை தின்றதெவ்வாறு?" வல்ல படிமம்

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
On 10/21/2018 at 11:22 PM, poet said:

"மழைக்காடு வறண்டதென்று

வரி புனையும் வண்ணம்

சக்கரவாகம் மழை தின்றதெவ்வாறு?" வல்ல படிமம்

நன்றி பொயட்

 

On 10/22/2018 at 9:49 PM, அபராஜிதன் said:

என்ன கவிஞரே #metoo ல உங்க பெயரும் வரும்போல இருக்கு :)

காதும் காதும் வச்சமாதிரி எனக்கு கவிதை சொல்லத்தெரியாது. ரொம்ப அப்பாவிம்மா நானு :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

2009 உடைப்பு  மீண்டும் 2018 கட்டப்பட்டு வந்திருக்கிறது :)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: RAJEEBAN    19 APR, 2024 | 05:53 PM   உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில்  சர்வதேச விசாரணைகளை முன்னெடுக்கவேண்டும் என  சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி குழு வேண்டுகோள் விடுத்துள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இன்னமும் நீதிக்காக காத்திருத்தல்  பொருளாதார சமூக கலாச்சார  பொருளாதார சட்ட கண்ணோட்டம் என்ற அறிக்கையை இன்று வெளியிட்டுள்ள  சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி இந்த அறிக்கையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த சர்வதேச விசாரணையை கோரியுள்ளது. சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி அமைப்பு மேலும் தெரிவித்துள்ளதாவது உயிர்த்த ஞாயிறு படுகொலைகளை இலங்கையில் யுத்தத்தின் பின்னர்  தேவாலயங்களையும்  ஹோட்டல்களையும் இலக்குவைத்து இடம்பெற்ற மிகவும் பயங்கரமான வெளிப்படையான  சம்பவம் என குறிப்பிடலாம். அதன் மூலம் ஏற்பட்ட பேரழிவை நாங்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெளிவுபடுத்தியுள்ளோம். ஐந்து வருடங்களின் பின்னர் இன்னமும் பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதி கிடைக்கவில்லை. இதன் காரணமாக  உயிர்த்த ஞாயிறுதாக்குதல் காரணமாக பாதிக்கப்பட்டவர்களிற்கான  நீதியை நிலைநாட்டுவதற்கு அவசியமான சில பரிந்துரைகளை முன்வைக்கின்றோம். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான அனைத்து  நீதிமன்ற வழக்குகளையும் துரிதப்படுத்தவேண்டும். சர்வதேச விசாரணைகளை மேற்கொண்டு  தாக்குதலிற்கு காரணமானவர்களிற்கு எதிராக வழக்குதாக்கல் செய்யவேண்டும்  குறிப்பாக சூத்திரதாரிகளிற்கு எதிராக . உயிர்த்த ஞாயிறுதாக்குதல் காரணமாக பாதிக்கப்பட்ட அனைவருக்கும் போதியளவு  இழப்பீடு துரிதமாக சென்றடைவதை உறுதி செய்யவேண்டும். உயர்நீதிமன்றம்  நஸ்டஈடுவழங்குமாறு உத்தரவிட்டவர்கள்  அந்த இழப்பீட்டை உடனடியாக வழங்குவதை உறுதி செய்யவேண்டும். உயிர்த்தஞாயிறுதாக்குதலில் நிலாந்த ஜெயவர்த்தனவின் தொடர்புகுறித்து  உரிய குற்றவியல் விசாரணையை முன்னெடுக்கவேண்டும். உயிர்த்த ஞாயிறு தொடர்பான அனைத்து அறிக்கைகளையும் பகிரங்கப்படுத்தவேண்டும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்  ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அனைத்து பரிந்துரைகளும் நடைமுறைப்படுத்துவதை உறுதி செய்யவேண்டும். இதேவேளை  உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று ஐந்து வருடங்களாகின்றன தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி என தெரிவித்த சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி பிரிவின் சுரேன் பெரேரா இன்னமும் பொறுப்புக்கூறல் இடம்பெறவில்லை என குறிப்பிட்டார். உள்நாட்டு பொறிமுறைகள் தோல்வியடைந்துவிட்டதால் சர்வதேச பொறிமுறைகள் அவசியமாக உள்ளன என குறிப்பிட்ட அவர்  நீதியை பெற்றுக்கொள்வதற்காக சர்வதேச  பொறிமுறைகளை நாடும் நோக்கம் உள்ளதாகவும் குறிப்பிட்டார். உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதியை பெற்றுக்கொள்வதற்காக கலப்பு பொறிமுறை  ஒன்று உகந்ததாகயிருக்கும் எனவும் அவர் தெரிவித்தார். முக்கிய  சூத்திரதாரியை கண்டுபிடிப்பதற்கு  சர்வதேச அமைப்புகளின் உதவியை கோhரவேண்டும் எனவும் குறிப்பிட்ட அவர் தற்போதைய ஜனாதிபதி ஸ்கொட்லாண்ட் யார்டின் உதவி குறித்து குறிப்பிட்டுவந்துள்ளதை சுட்டிக்காட்டினார். https://www.virakesari.lk/article/181475
    • இந்த இரண்டு வருசத்துல உண்மையிலேயே 1900க்கு மேல போகாமல் இருந்திருந்தால் தான் செய்தி....
    • பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஆஸ்திரேலியாவின் கிரேட் பேரியர் ரீஃப் பகுதியில் பல பவளப்பாறைகள் அழிந்து வருகின்றன. கட்டுரை தகவல் எழுதியவர், ஜார்ஜினா ரன்னார்ட் பதவி, பிபிசி காலநிலை நிருபர் 4 மணி நேரங்களுக்கு முன்னர் கடல் வெப்பம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், உலகெங்கிலும் உள்ள பவளப் பாறைகள் வெண்மையாகி அழிந்து வருகின்றன. அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (NOAA) வெளியிட்ட தகவலின்படி நான்காவது முறையாக உலகின் பெரும்பாலான பவளப் பாறைகள் வெண்மையடையும் ஆபத்தில் உள்ளன. கடல் நீர் வெப்பமடைவதால், பவளப்பாறை அழுத்தத்தை உணர்ந்து வெண்மையாக மாறும்போது ப்ளீச்சிங் (Bleaching) ஏற்படுகிறது. கடல் வாழ்வியல் மற்றும் மீன்பிடித்தல் துறையில் முக்கியப் பங்காற்றும் பவளப்பாறைகள், அதன் மூலம் ஆண்டுதோறும் டிரில்லியன் கணக்கான டாலர்கள் வருவாயை உருவாக்குகிறது. கடல்பரப்பின் வெப்பநிலை பல மாதங்களாக அதிகரித்து வருகின்றன. ஆனால் இந்த வெப்பம் கடல் வாழ்வை எவ்வாறு பாதிக்கிறது என்பதற்கான முதல் உலகளாவிய சான்று இதுவாகும். அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (NOAA) அனைத்து கடல்களிலும் (அட்லாண்டிக், பசிபிக் மற்றும் இந்திய பெருங்கடல்) உள்ள பவளப் பாறைகள் அழுத்தத்தை உணர்கின்றன என்பதை உலகளவில் விஞ்ஞானிகளிடம் இருந்து பெற்ற அறிக்கைகள் மூலம் உறுதிப்படுத்தியது. வெண்மையடைந்த பவளப் பாறைகள் புகைப்படங்களில் அழகாக இருக்கும். ஆனால் பாறைகளை ஆய்வு செய்ய ஆழ்கடலுக்குச் செல்லும் விஞ்ஞானிகள், அவை நோய்வாய்ப்பட்டு அழிந்து வருவது தெளிவாகத் தெரிகிறது என்று கூறுகிறார்கள்.   காலநிலை மாற்றத்தின் விளைவு பட மூலாதாரம்,AIMS படக்குறிப்பு,பார்க்க அழகாக இருக்கும் இந்தப் பவளப்பாறை, வெண்மையடைந்து, அழிந்து வருகிறது. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கென்யா, பிரேசில் ஆகிய நாடுகளில் உள்ள விஞ்ஞானிகள் பிபிசி செய்தியிடம், தாங்கள் மிகவும் நேசிக்கும் பவளப்பாறைகள் கடல் வெப்பத்தால் அச்சுறுத்தப்படுவதை அல்லது கொல்லப்படுவதைப் பார்த்தபோது, அச்சம் மற்றும் கோபம் ஏற்பட்டதாகக் கூறினார்கள். கடந்த ஆண்டு கரீபியன் பகுதியில், ஃப்ளோரிடா கடற்கரையில் உள்ள தண்ணீர் மிகவும் சூடாக இருந்ததை அப்பகுதி மக்கள் கண்டபோது, முதல் எச்சரிக்கை அறிகுறிகள் தென்பட்டன. அந்த வெப்பம் தெற்கு அரைக்கோளம் நோக்கி நகர்ந்தது. ஆஸ்திரேலியாவின் கிரேட் பேரியர் ரீஃப் (பெருந்தடுப்புப் பவளத்திட்டு) மற்றும் தான்சானியா, மொரிஷியஸ், பிரேசில், பசிபிக் தீவுகள் மற்றும் செங்கடல், பாரசீக வளைகுடாவில் உள்ள கடற்கரைகள் உட்பட உலகின் பாதிக்கும் மேற்பட்ட பவளப்பாறைகளை இது இப்போது பாதித்துள்ளது. கடந்த ஆகஸ்டில் உலகளாவிய சராசரி கடல் வெப்பநிலை அதன் அதிகபட்ச அளவைத் தாண்டியது, அதிலிருந்து கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் கடல் வெப்பம் சராசரியைவிட அதிகமாக உள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES நாம் எண்ணெய், நிலக்கரி மற்றும் வாயுக்களை எரிக்கும்போது வெளிப்படும் பசுமைக்குடில் வாயுக்கள் கடல்களால் உறிஞ்சப்படுகின்றன. இந்த காலநிலை மாற்றத்தால் கடல் மேற்பரப்பு வெப்பநிலை உயர்கிறது. இயற்கையான காலநிலை நிகழ்வான எல் நினோவும் கடந்த ஜூன் முதல் உலகளவில் அதிகரித்த வெப்பநிலைக்கு ஒரு காரணமாக இருந்தது. இருப்பினும் இப்போது அது பலவீனமடைவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. விஞ்ஞானி நீல் கான்டின், ஆஸ்திரேலியாவின் கடல் அறிவியல் நிறுவனத்திற்காக, பிப்ரவரியில் 10 நாட்களுக்கு கிரேட் பேரியர் ரீஃப் மீது ஒரு விமானத்தில் பயணம் செய்து ஆய்வு மேற்கொண்டார். ஐநா பாரம்பரிய தளமாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த கிரேட் பேரியர் ரீஃப் 2,000 கிமீ வரை பரவி அமைந்துள்ளது. "கிரேட் பேரியர் ரீஃப் மரைன் பூங்காவின் மூன்று பகுதிகளிலும் மிக அதிக அளவிலான பவளப் பாறைகளின் ப்ளீச்சிங் நிகழ்வை நாங்கள் முதன்முறையாக ஆவணப்படுத்தியுள்ளோம்" என்று டாக்டர் கான்டின் கூறுகிறார். இந்த ப்ளீச்சிங் அளவுகள் நிறைய பவளங்களைக் கொல்லக்கூடும், என்றும் அவர் எச்சரிக்கிறார்.   பவளப்பாறைகளை பாதுகாக்க முடியுமா? பவளப்பாறை பூமிக்கு இன்றியமையாதது. கடலின் கட்டடக் கலைஞர் என்று செல்லப்பெயர் பெற்ற இது, மொத்த கடல் உயிரினங்களின் வசிப்பிடங்களில் 25% பவளப்பாறைகளைச் சார்ந்துள்ளது. அழுத்தத்தை உணரும் ஒரு பவளப்பாறை தொடர்ந்து இரண்டு மாதங்களுக்கு அதன் வெப்ப வரம்பிற்கு மேல் 1 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலையை அனுபவித்தால் அது இறந்துவிடும். நீரில் 2 டிகிரி செல்ஷியஸ் அதிகமாக இருந்தால், அது ஒரு மாதம் வரை மட்டுமே உயிர் வாழும். அது இறந்தவுடன், பவள இரைச்சலைப் பயன்படுத்திப் பயணிக்கும் மீன் போன்ற உயிரினங்கள் தங்கள் வசிப்பிடங்களுக்குச் செல்லும் வழியைக் கண்டுபிடிக்கத் திண்டாடும். முப்பது ஆண்டுகளாக விஞ்ஞானி ஆன் ஹாகெட் ஆஸ்திரேலியாவின் லிசார்ட் தீவில் ஆழ்கடல் ஆய்வில் ஈடுபட்டுள்ளார். இது நெட்ஃபிளிக்ஸ் திரைப்படமான சேசிங் கோரலில் (Chasing coral) இடம்பெற்ற ஒரு அழகான பவளப் பாறை. பிப்ரவரி முதல் இந்தப் பாறை மீண்டும் பரவலாக வெண்மையடைந்து வருகிறது. பல ஆராய்ச்சியாளர்களைப் போலவே, 1998ஆம் ஆண்டு முதன் முதலாக பவளம் வெண்மையாக மாறியதைக் கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார். "இப்போது இது மீண்டும் நடக்க அனுமதிக்கப்படுவதால் நான் கோபமாக இருக்கிறேன்," என்று ஆஸ்திரேலிய அருங்காட்சியகத்தின் லிசார்ட் தீவு ஆராய்ச்சி நிலையத்திலிருந்து அவர் கூறுகிறார்.   பட மூலாதாரம்,AUSTRALIAN INSTITUTE OF MARINE SCIENCE படக்குறிப்பு,பவளம் இறந்தால், அது மீன்களை பாதிக்கிறது. ஒரு பவளப் பாறையால் வெப்ப அழுத்தத்தில் இருந்து மீள முடியும். ஆனால் அதற்கு நேரம் தேவை. அதாவது பல ஆண்டுகள். அழுத்தத்தை உணரும்போது, அது நோயால் பாதிக்கப்படுகிறது மற்றும் எளிதில் இறக்கவும் கூடும். "ஒரு வாய்ப்பு கொடுக்கப்பட்டால், அந்த பவளப் பாறைகளை மீட்க முடியும். ஆனால் தீவிரமான ப்ளீச்சிங் அடிக்கடி நடப்பதால், பவளப் பாறைகளை மீட்பதற்கான வாய்ப்புகள் குறைந்து வருகின்றன" என்கிறார் ஆஸ்திரேலியாவின் சிட்னி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் டாக்டர் எம்மா கேம்ப். கடைசியாக 2014-2016ஆம் ஆண்டில் உலகளாவிய ப்ளீச்சிங் இருந்தது. அப்போதிருந்து, கடல் வெப்பநிலை மிகவும் அதிகரித்துவிட்டது. இதனால் அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் மூன்று புதிய வெப்ப எச்சரிக்கை நிலைகளை அறிமுகப்படுத்த வேண்டியிருந்தது. சூழலியல் நிபுணர் டேவிட் ஒபுரா, இந்தியப் பெருங்கடலில் உள்ள நூற்றுக்கணக்கான ரேஞ்சர்கள், விஞ்ஞானிகள் மற்றும் மீன்பிடி சமூகங்களிடம் இருந்து பவளப்பாறைகள் வெண்மையடைவதைக் குறித்த செய்திகளைப் பெறுகிறார். இந்த நிகழ்வு பிப்ரவரியில் மடகாஸ்கரில் தொடங்கியது, பின்னர் தான்சானியா மற்றும் கொமோரோஸ் வரை பரவியது. மீனவர்கள் பவளப் பாறைகளை நன்றாக அறிவார்கள், அதில் ஏதேனும் மாற்றம் நடந்தால் உடனடியாகத் தெரியும் என்று அவர் கூறுகிறார். https://www.bbc.com/tamil/articles/cv2re3x51njo
    • ஆய்வு பத்திரிகையின் பிரதி கிடைக்குமா? நானும் அறிவை பெருக்கி கொள்ளலாம் என்பதால் கேட்கிறேன்.   அததூற பற்றி தெரியவில்லை. ஆனால் அவரின் பதிவுகளை போய் பார்த்தால் தெரியும் அவர் யாழுக்கு வருவதே கோசானோட மல்லு கட்டும் ஒரே நோக்கத்தில் மட்டுமே. மேலதிகமாக சில கருத்துக்களையும் இந்த சமயத்தில் தெளித்து விடுவர். பொதுவாக வேற ஒரு ஐடிக்கு களத்தில் அடி விழுந்தால் - அதன் எதிர் வினையாக இந்த ஐடி மீள் அவதரிக்கும். இது அண்மைய வைரவர் பூசையின் எதிரொலி. ஆனால் எனக்கும் அதற்கும் ஒரு சம்பந்தமுமில்லை. சான்சே இல்லை.  நானும் கூட வருவது இந்திய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆர்டிக், அண்டார்ட்டிக் அரசியல் போக்குகள் பற்றி நீங்கள் எழுதுவதை வாசிக்கத்தான்.
    • Published By: DIGITAL DESK 3   19 APR, 2024 | 03:55 PM   ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கமைய பாடசாலை மாணவர்களுக்கு போசாக்குள்ள உணவு வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்திற்காக உலக உணவுத் திட்டத்தின் மூலம் பாடசாலைகளுக்கு வழங்கப்படும் செறிவூட்டப்பட்ட அரிசி (Fortified Rice) விநியோகம் இன்று வெள்ளிக்கிழமை (19) வெயங்கொட உணவு களஞ்சிய வளாகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. பாடசாலை மாணவர்களிடையே இரும்புச் சத்து குறைபாட்டைக் குறைக்கும் நோக்கில், பாடசாலை உணவுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி (Fortified Rice)  வழங்கப்படுவதுடன், ஜனாதிபதி செயலகத்தின் கீழுள்ள உலக உணவுத் திட்டத்திற்கான கூட்டுச் செயலகத்தின் பணிப்பாளர் நாயகம் எம்.எச்.ஏ.எம்.ரிப்லானின் மேற்பார்வையில் இந்த விநியோக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன்படி, முதற்கட்டமாக மாகாண மட்டத்தில் உள்ள பாடசாலைகளுக்கு 735 மெற்றிக் தொன் அரிசி வழங்கும் நடவடிக்கை இன்று ஆரம்பமானதுடன் நாளையும் (20) இந்தப் பணிகள் தொடரும். சம்பந்தப்பட்ட மாகாண கல்வித் திணைக்கள அதிகாரிகள் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்களின்  கண்காணிப்பின் கீழ்  பாடசாலைகளுக்கு அரிசி விநியோகிக்கப்படுகிறது. இதேவேளை, மே 19ஆம் திகதி பாடசாலை புதிய  தவணை ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர், 378.835 மெற்றிக் தொன் பருப்பு, 412.08 மெற்றிக் தொன் சூரியகாந்தி சமையல் எண்ணெய், 300 மெற்றிக் தொன் பேரீச்சம்பழங்கள் பாடசாலைகளுக்கு விநியோகிக்கப்படும் என உலகக் உணவுத் திட்டத்திற்கான கூட்டுச் செயலகத்தின் பணிப்பாளர் நாயகம்  எம்.எச்.ஏ.எம்.ரிப்லான் தெரிவித்தார். நாட்டிலுள்ள தரம் 1-5 வரை உள்ள அனைத்து பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலையில் ஒருவேளை உணவு வழங்குவதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. போசாக்கு நிபுணர்களின் பரிந்துரைகளை கருத்தில் கொண்டு, மாணவர்கள் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடும் முன்னர், தினமும் காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை  காலை உணவு வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் ஊடாக"ஆரோக்கியமான சுறுசுறுப்பான  மாணவர் தலைமுறை" என்ற கருப்பொருளின் கீழ், 2024 ஆம் ஆண்டிற்கான பாடசாலை உணவுத் திட்டம், பாடசாலை மாணவர்களிடையே போசாக்குப் பிரச்சினைகளைக் குறைத்தல், மாணவர்களின் தினசரி பாடசாலை வருகையை அதிகரித்தல், நல்ல உணவுப் பழக்கம் மற்றும் சுகாதாரப் பழக்கங்களை மேம்படுத்துதல், கல்வி மேம்பாட்டு மட்டத்தை உ யர்த்த பங்களித்தல்,  மற்றும் உள்நாட்டு உணவு கலாசாரத்தை கட்டியெழுப்புதல் ஆகிய அடிப்படை நோக்கங்களை  நிறைவேற்ற எதிர்பார்க்கப்படுகிறது. 9134 அரச பாடசாலைகளிலும், 100 இற்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட அனைத்துப் பாடசாலைகளிலும் உள்ள அனைத்து ஆரம்ப வகுப்பு மாணவர்களையும் உள்ளடக்கிய இந்த ஆண்டு பாடசாலை உணவுத் திட்டத்தின் மூலம் 1.6 மில்லியன் மாணவர்கள் பயனடைந்துள்ளனர். இதற்காக ஒன்பது மாகாண சபைகளுக்கு அரசாங்கம் நேரடியாக 16,600 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கியுள்ளதுடன், உலக உணவுத் திட்டம் மற்றும் அமெரிக்க விவசாயத் திணைக்களம் (USDA) உட்பட பல அமைப்புகளும் அனுசரணை வழங்குகின்றன. https://www.virakesari.lk/article/181467
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
        • Like
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
        • Like
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.