Jump to content

ஆயிரத்தில் ஒருவன்: ஈழப் போராட்டத்தின் நுணுக்கமான பதிவு: நிழலி


Recommended Posts

  • Replies 65
  • Created
  • Last Reply

திரும்ப மீண்டும் டீ.வீ.டியில் பார்த்தேன்.ஆயிரத்தில் ஒருவன் வழக்கமான ஒருதமிழ்படமில்லை என்பது உண்மை.ஆனால் ஒரு முழுமையான நிறைவை அது தரவில்லை என்பதும் உண்மை.இங்கு கருத்து எழுதும் பலர் எங்களின் போராட்டதுடனான தொடர்பு படத்தில் இருந்தால் அது நல்ல படம் என்று சொல்லவேண்டும் என நினைக்கின்றார்கள். இது தெரிந்துதான் தமிழ்நாட்டு சினிமாக்காரர்கள் தேவையில்லாமலே பாட்டிலும்சரி,படத்திலும் சரி எங்களையும் இடைகிடை இழுக்கின்றார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

செல்வராகவன் சொல்லி இருந்தார், தான் எந்த ஒரு ஆங்கிலப்படதை கொப்பி அடிச்சார் எண்டு சொன்னார் எண்டா தான் சினிமாவை விட்டு விலகுவதாக. அவர் சொல்வது மிகவும் சரி. அவர் ஒரு ஆங்கிலப்படத்தை கொப்பி அடிக்கவில்லை. பல ஆங்கிலப்படங்களை கொப்பி அடித்திருக்கிறார்.

இயக்கத்தை பற்றி எடுக்கப்பட்டிருக்கும் தரமான படம் என நினைப்பவர்கள். அதே இயக்கம் இப்படத்தை பற்றி என்ன நினைப்பார்கள் என யோசிக்கவேண்டும். பிழைகள் இருப்பின் மன்னிக்கவும். இப்படத்தைப்பாத்து ரொம்பவே உணர்ச்சி வசப்பட்டுட்டன். எங்கள் இனமும் ரொம்ப உணர்ச்சி வசப்படுபவர்கள் தானெ. நரி போன்ற தந்திரம் உள்ளவர்கள் தான் இந்த உலகில் வெல்வார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1999 போன்ற படங்களை பார்க்காதது ஏன்?!

நான் எம்மவர்களின் திரைப்படங்கள் சிட்னியில் திரையரங்கில் காண்பிக்கப்படும் போது பார்ப்பதுண்டு. கனடாவில் எடுக்கப்பட்ட 'தமிழச்சி' ,பிரித்தானியாவில் எடுக்கப்பட்ட 'கனவுகள் நிஜமானல்', ஐரோப்பியா நாட்டில் வாழும் எம்மவர் ஒருவரால் எடுக்கப்பட்ட 'மல்லிகைவாசம்' போன்ற எம்மவரின் படங்களைப் பார்த்தேன். வருகிற 19,20ம்திகதி சிட்னி பேர்வூட் திரையரங்கில் 1999 காண்பிக்கப்படுகிறது. நான் கட்டாயம் சென்று பார்க்கவுள்ளேன். வேடிக்கை என்னவென்றால் சிட்னிவாழ் இந்தியத்தமிழர்களின் 'சிட்னி தமிழ் மன்றம்' இப்படத்தை திரையிடுகிறது. ஆனால் இந்தியாப்படமான 'விண்ணைத்தாண்டி வருவாயா' என்ற படத்தை ஈழத்தமிழர்கள் திரையிடுகிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கந்தப்பு உங்களுக்கு மிகுந்த பாராட்டுக்கள். நம்மவர் எடுக்கும் எல்லாப்படமும் மிகமும் நல்லவை என்று சொல்லமாட்டேன். ஆனால் அவை நல்ல தொரு இடத்தைச்செல்வதற்காக பயணிக்கின்றன. குழந்தை தவழும்போது எங்களுக்கு தெரியும் ஒருகாலத்தில் நடக்கும் என்று. அது போல தான் நான் நம்மவர் படங்களை பார்க்கிறேன். குறிப்பாக 1999 எடுத்தவர் நன்கு முன்னேறி இருக்கிறார். அவரின் குறும்படங்களைக்கூட நான் பார்த்திருக்கிறேன். நானும் குறும்படங்கள் எடுப்பதாலும், எதிர்காலத்தில் முழுநீள படங்கள் எடுக்க விருப்பம் என்பதாலும்: உங்களிடம் ஒரு கேள்வி. நீங்கள் பார்த்த நமது படங்களின் விமர்சனங்களி யாழில் வைப்பீர்களா. அதனோடு மட்டுமில்லாமல், எல்லோரும் விடும் பிழைகள், எவற்றை சரி செய்யவேண்டும், எத்தகைய கதைகள் எடுத்தால் நன்றாக இருக்கும்....

இப்படிப்பட்ட மற்றவர்களின் அபிப்பிராயங்கள் எனக்கு உதவியாக இருக்கும். நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

arjun

Posted Yesterday, 11:20 AM

திரும்ப மீண்டும் டீ.வீ.டியில் பார்த்தேன்.ஆயிரத்தில் ஒருவன் வழக்கமான ஒருதமிழ்படமில்லை என்பது உண்மை.ஆனால் ஒரு முழுமையான நிறைவை அது தரவில்லை என்பதும் உண்மை.இங்கு கருத்து எழுதும் பலர் எங்களின் போராட்டதுடனான தொடர்பு படத்தில் இருந்தால் அது நல்ல படம் என்று சொல்லவேண்டும் என நினைக்கின்றார்கள். இது தெரிந்துதான் தமிழ்நாட்டு சினிமாக்காரர்கள் தேவையில்லாமலே பாட்டிலும்சரிஇபடத்திலும் சரி எங்களையும் இடைகிடை இழுக்கின்றார்கள்.

உண்மையில் என்னுடைய கருத்தும் இதுதான் இப்படத்தை பார்கும் எம் வருங்கால சந்ததிகள் இப்படியா எங்கள் மக்கள் இருந்தார்கள் மற்றவர்களை அடிக்கும் போது எப்படி சிரிக்கிறார்கள்.தலைவராக சித்திரிக்க பட்டவருக்கும் எங்கள் தலைவருக்கும் ஒரு கடுகளவும் பொருத்தமில்லை.செல்வராகவன் சுத்தி வழைக்காமால் ஈழபோராட்டத்தை பற்றி முழுமையாக தந்திருக்கலாம்.எல்லா இயக்குணரும் அருச்சுன் சொன்ன மாதிரியே இருக்கினம்.

நிழலி என் கருத்தை வைத்து என்னுடன் கோபிக்க வேண்டாம் மனதால் நொந்து போய் இருக்கும் எம் மக்களுக்கு இதில் வரும் பாடலால் ஈர்க பட்டுயள்ளோம்.நாளைய சமுதாயத்திற்கு எதை விட்டு செல்கிறோம் என்பதைத்தான் யோசிக்க வேண்டும்.

இன்றும் ரைய்ரானிக் கப்பல் இப்படுத்தான் முழ்கி இருக்கும் என்பதை அதை பார்கும் போது தெரிகிறது.

Link to comment
Share on other sites

நிழலி என் கருத்தை வைத்து என்னுடன் கோபிக்க வேண்டாம் மனதால் நொந்து போய் இருக்கும் எம் மக்களுக்கு இதில் வரும் பாடலால் ஈர்க பட்டுயள்ளோம்.நாளைய சமுதாயத்திற்கு எதை விட்டு செல்கிறோம் என்பதைத்தான் யோசிக்க வேண்டும்.

இன்றும் ரைய்ரானிக் கப்பல் இப்படுத்தான் முழ்கி இருக்கும் என்பதை அதை பார்கும் போது தெரிகிறது.

ஒருத்தரின் கருத்துக்காக என்னத்துக்கு ஒருவர் மீது கோபிக்க வேண்டும்? என் பார்வை வேறு உங்கள் பார்வை வேறு, அவ்வளவு தான். மற்றது, எம் போராட்டம் பற்றி எத்தனையோ கட்டுரைகளும், சாட்சிகளும் இருக்கும் போது, வருங்காலத் தலைமுறை இந்த சினிமாவைப் பார்த்துத்தான் புரிந்து கொள்ளும் என்பதை ஏற்கமுடியவில்லை. ரைற்றானிக் கப்பல் மூழ்கியது என்பது ஒரு சம்பவம்... எங்கள் போராட்டம் என்பது வரலாறு

*****

இந்தப் படம் ஆபாசம் ஐயோ என்று கூச்சலிடுபவர்களைப் பார்க்கும்போதுதான் சில கேள்விகள் எழுகின்றது. எத்தனையோ தொலைக்காட்சி நாடகங்களில் பெண்ணின் கன்னத்தில் அறையும் காட்சியையும், பெண்களை, குழந்தைகளை அடித்து துவைக்கும் காட்சிகளையும் குழந்தை குட்டிகளுடன் இருந்து ரசிக்கும் மனமுள்ளவர்கள், அது பற்றி எந்தக் கேள்வியும் கேட்க மறுப்பவர்கள் ஆண் பெண் உறவின் மகத்தான தருணங்களான முத்தக் காட்சிகளையும், ஆரத்தழுவும் காட்சிகளையும் கண்டவுடன் மாத்திரம் பதறுவது ஏன்? மானாட மயிலாட, சோடி நம்பர் வன் போன்ற நிகழ்சிகளில், உடலுறவு கொள்ளும் போது உடல் கொடுக்கும் அசைவுகளைப் போன்று இடுப்பை ஆட்டி ஆட்டி நாட்டியாமாக ஆடும் காட்சிகளை ரசிக்கும் போது இந்த அளவீடுகள் எங்கே போகின்றது என்று தெரியவில்லை.

எல்லாச் சினிமாவும் குடும்பத்துடன் பார்க்க வேண்டியதாகத் தான் இருக்க வேண்டும் என்றால் அம்புலிமாமா கதைகளைத் தான் சினிமாவாக எடுக்க முடியும். இந்தப் படத்திற்கு தணிக்கை குழு 'A' சான்றிதழ் கொடுத்த பின்னும் வயதுக்கு வராத பிள்ளைகளுடன் சேர்ந்துதான் பார்ப்பேன் என்றால் அவர்களை என்னவென்பது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கூடுதலாக நான் யாழில் இது கடைசியா எழுதிரன் என நினைக்கிறன். நிழலி நாடகங்களை நானும் உயர்வாக பார்ப்பதில்லை. பார்ப்பதேஇல்லை. முக்கத்தில் அறைவது தமிழ்சினிமாவில் அடிக்கடி பாவிக்கிறார்கள். நான் அதிகம் வெறுக்கும் ஒரு விடையம் அது. பேசித்தீர்க்கத்தெரியாத முரடர்கள் என்பதைத்தான் காட்டுகிறது.

நிலழி நீங்கள் கனடாவில் திரையரங்கில் படம் பார்த்திருந்தீர்கள் என்றால் எத்தனயோ பேர் சிறுவர்களுடன் வந்திருந்தார்கள். எவரோ பிழை விடுகிறார்கள்... அதை விடுவம். நீங்கள் அன்ச்சாதே படம் பாத்தீர்களா. அதில் ஆபாசம் இல்லாமல் நல்ல தொரு படம் தரப்பட்டிருக்கிறது. திறமையானவர்களால் அம்புலிமாமா கதைகளை விட என்னும் பல கதைகளை எடுக்க முடியும்.

சில இயக்குனர்கள். வல்லுரவு காட்சிகளைக்கூட ரசிகர்களுக்கு கிளுகிளுப்பு தரும் வகையில் எடுத்திருப்பார்கள். செல்வராகவனும்.....

Link to comment
Share on other sites

இந்தப் படம் ஆபாசம் ஐயோ என்று கூச்சலிடுபவர்களைப் பார்க்கும்போதுதான் சில கேள்விகள் எழுகின்றது. எத்தனையோ தொலைக்காட்சி நாடகங்களில் பெண்ணின் கன்னத்தில் அறையும் காட்சியையும், பெண்களை, குழந்தைகளை அடித்து துவைக்கும் காட்சிகளையும் குழந்தை குட்டிகளுடன் இருந்து ரசிக்கும் மனமுள்ளவர்கள், அது பற்றி எந்தக் கேள்வியும் கேட்க மறுப்பவர்கள் ஆண் பெண் உறவின் மகத்தான தருணங்களான முத்தக் காட்சிகளையும், ஆரத்தழுவும் காட்சிகளையும் கண்டவுடன் மாத்திரம் பதறுவது ஏன்? மானாட மயிலாட, சோடி நம்பர் வன் போன்ற நிகழ்சிகளில், உடலுறவு கொள்ளும் போது உடல் கொடுக்கும் அசைவுகளைப் போன்று இடுப்பை ஆட்டி ஆட்டி நாட்டியாமாக ஆடும் காட்சிகளை ரசிக்கும் போது இந்த அளவீடுகள் எங்கே போகின்றது என்று தெரியவில்லை.

மனிதனின் இயற்கையான உடலுறவு சம்மந்தப்பட்ட விசயங்கள் எமக்கு எப்போதுமே ஒரு பிரச்சனைதான். உலகில் வாழும் மக்களில் அதிகமான போலித்தனங்கள் நிறைந்தவர்களாக நாம் இருக்கின்றோம். ஒருவனின் உழைப்பால் ஆன உணவு உடை உறைவிடம் அனைத்தையும் நுகர்ந்துகொண்டு அவனை தீண்டத்தகாதவனாக தள்ளி வைக்கின்றோம். அடிவயிற்றில் மலத்தை சுமந்துகொண்டு துப்பரவுத் தொழிலாளியை அருவெருப்பாக பார்க்கின்றோம். உணரப்படும் உண்மைகளுக்கு அப்பால் எமது வாழ்கை போலித்தனங்களாலேயே அமைக்கப்படுகின்றது. இந்த ஆபாசம் என்பதும் அவ்வாறான ஒரு போலித்தனமே. கடவுள்களின் புராணக்கதைகளில் இல்லாத ஆபாசமா? கடவுள் சிலைகளை கவர்ச்சியாக அமைத்ததன் நோக்கமென்ன? சொப்பனத்தில் அழகிய கடவுள்கள் தழுவினால் அவைகளை மோகினி என்பார்கள். பின் நலிந்த தேகத்துக்கு லேகியம் கொடுப்பார்கள். கோயில் மடங்களில் தேவதாசிகளை புணர்ந்த வரலாறு இன்னும் அங்காங்கே தொடர்கின்றது. மன்னர்கள் அந்தப்புரங்கள் எப்போதும் தனியிடத்தை வரலாற்றுக் குறிப்புகளில் பிடித்திருக்கின்றது. கண்ணதாசன் பாடல்களின் உடற்சேர்க்கை குறித்த வரிகள் இல்லையா? சாதாரண சினிமா முதற்கொண்டு நாடகங்கள் வரை காமம் மறைந்து கிடக்கின்றது. மிப்பெரும் காம உணர்ச்சித் தூண்டலுக்குள் இளைய தலைமுறையை தள்ளி விடுவதே இதன் சூட்சுமமாக இருக்கின்றது. எவனாவது வெளிப்படையாக காமத்தை பேசினால் அது ஆபாசம். மறைமுகமாக எவ்வளவு காமம் வேண்டுமானலும் இருக்கலாம். ஆபாசம் தந்த மிகப்பெரிய பரிசு அதிகமானவர்களுக்கு எயிட்ஸ் மற்றும் பால்வினை நோய்கள்தான். காமத்தை வெளிப்படையாக பேசும் மேற்கு நாடுகளில் பால்வினை நோய்கள் மிகக் குறைந்தளவே இருக்கின்றது. வெளிப்படையை ஆபாசமாகக் கூச்சலிடும் இடத்தில் மேலும் ராமர்களும் கற்புக் கரசி கண்ணகிகளினதும் வரலாறு வாழும் இடத்தில் நோய்கள் அதிகமாகின்றது. எம்மைப்பொறுத்தவரை வெளிப்படையானவை ஆபாசம் வேலிபாய்வது நாகரீகம். இவ்வாறே பழக்கப்படுகின்றோம்.

Link to comment
Share on other sites

பதிவுக்கு நன்றி நிழலி மற்றும் சுகன் அண்ணையின் கருத்துகளுக்கும் பாராட்டுகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன அண்ணா கன நாளாய் காணவில்லை...புலி பதுங்கின கையோட நீங்களும் பதுங்கிட்டியள் போல :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் படம் குறித்து பதிவுலகில் விமர்சனங்கள் சில பார்த்தேன். அவைகள் அனைத்தும் தமது தேடலுக்கான தீனி இல்லை என்றளவிலேயே சலிப்பை கொட்டியிருக்கின்றது. எமது சூழலும் நெருக்கடியான வாழ்க்கையும் பல கேணங்களில் இந்தப்படத்துடன் ஒத்துப்போவதாகவே உங்கள் பதிவு அமைகின்றது. ஆனால் எம்மவருக்கும் இந்த நுணுக்கம் புரியவில்லையாயின் தமிழக ரசிகர்களை விட மட்டமானவர்களாகவே நாம் இருப்போம்.

பதிவிற்கு நன்றிகள்.

இணைப்புக்கு நன்றி நிழலியவர்களே.

இது விமர்சனமோ திறனாய்வோ அல்ல என்றவாறு தொடக்கிவைத்த விடயம். பெரும் விமர்சனங்களையும் மாறுபட்ட கோணங்களிலான பார்வைகளையும் வெளிப்படுத்தி நிற்கிறது. ஒரு திரைப்படமோ அல்லது கலைப்படைப்போ பெரும்பாலும் மனித வாழ்வோடு எங்கோ ஓரிடத்தில் தொடர்புபட்டதாகவே இருக்கும். நான் 1984 ம் ஆண்டின் பின்னரான காலப் பகுதியின் பின் இந்தியச் சினிமாவைப் பெரிதும் விரும்பிப் பார்பதில்லை. விமர்சனங்கள் அல்லது ஏதாவது செய்திகளைச் சொல்லும் கதைகள், தூக்குமேடை போன்ற படங்களைத் தாயகத்திலிருந்தபோதும் புலம்பெயர்ந்தபின் பெரும்பாலும் திரைவிமர்சனங்களைப் படிப்பது சந்தர்பம் கிடைத்தால் வீட்டிலே எடுத்துப் பார்ப்பது. ஆனால் உங்களினது திரியில் உள்ள கருத்துகளைப் பார்த்தபோது படத்தைப் பார்க்க வேண்டுமென்ற என்னமேற்பட்டாலும் திரையில் பார்ப்பது சாத்தியமில்லை. யூரூப்பில் தேடியதில் நடிகை சுகாசினியவர்களின் விமர்சனங்களையும் அதனுடன் இணைந்த காட்சிகளையும் பார்த்தேன். அதில் சுகாசினி சொல்லுகின்ற விடயம் அதாவது விளங்கவில்லை என்பதற்கான விளக்கம் இங்கும் பொருந்துமாதலால் இணைத்துள்ளேன்.

http://www.youtube.com/watch?v=nGFHsi7YVqU&NR=1

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1999 போன்ற படங்களை பார்க்காதது ஏன்?! விஜயோ விக்ரமோ ஆரம்பத்தில் பல தோல்விப்படத்தில் நடித்தார்கள். ஆனால் நாங்கள் தொடர்ந்து சளைக்காமல் அவர்களை ஊக்கிவித்து படங்களை பார்த்தோம். கொண்டாடுகிறேம்.

1999 படத்தை சென்ற கிழமை சிட்னியில் திரையரங்கில் பார்த்தேன். இப்படம் சிட்னி வாழ் மக்களிடம் பெரிய வரவேற்பை பெற்றது. கனடாவில் இப்படம் நன்றாக ஒடவில்லை என்று கேள்விப்பட்டேன். எனக்கு மிகவும் வேதனையாக இருக்கிறது. இப்படித் திறமையான 1999 படத்தை இங்கு யாழில் கருத்து எழுதும் கனடா வாழ் யாழ்கள உறவுகளே பார்க்கவில்லை என்பதை நினைக்க வேதனையாக இருக்கிறது.

Link to comment
Share on other sites

1999 படத்தை சென்ற கிழமை சிட்னியில் திரையரங்கில் பார்த்தேன். இப்படம் சிட்னி வாழ் மக்களிடம் பெரிய வரவேற்பை பெற்றது. கனடாவில் இப்படம் நன்றாக ஒடவில்லை என்று கேள்விப்பட்டேன். எனக்கு மிகவும் வேதனையாக இருக்கிறது. இப்படித் திறமையான 1999 படத்தை இங்கு யாழில் கருத்து எழுதும் கனடா வாழ் யாழ்கள உறவுகளே பார்க்கவில்லை என்பதை நினைக்க வேதனையாக இருக்கிறது.

இந்தப்படம் கனடாவில் வெளிவந்து ஓடிய இரு வாரகாலத்தினுள்தான் எனக்கு மகள் பிறந்தாள். அந்த பரபரப்பில் விடுபட்ட முக்கிய படம் இது. புலம்பெயர் தமிழர்களின் வேறு சில படங்களைப் பார்த்து மிகவும் வெறுத்துப் போயிருந்த நான் 1999 உம் அப்படிதான் இருக்கும் என்ற எழுந்தமானமான எண்ணமும் கூட இந்தப் படம் பற்றி வெளிவந்த பல விடயங்கள் மீது பாராமுகமாக இருக்க வைத்தது. என் நண்பன் ஒருவன் இருமுறை அடுத்தடுத்த நாட்கள் போய் இந்தப்படத்தை பார்த்து விட்டு சொன்ன பின் தான் அதனை தவற விட்டது பிழை என்று புரிந்தது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப்படம் கனடாவில் வெளிவந்து ஓடிய இரு வாரகாலத்தினுள்தான் எனக்கு மகள் பிறந்தாள். அந்த பரபரப்பில் விடுபட்ட முக்கிய படம் இது. புலம்பெயர் தமிழர்களின் வேறு சில படங்களைப் பார்த்து மிகவும் வெறுத்துப் போயிருந்த நான் 1999 உம் அப்படிதான் இருக்கும் என்ற எழுந்தமானமான எண்ணமும் கூட இந்தப் படம் பற்றி வெளிவந்த பல விடயங்கள் மீது பாராமுகமாக இருக்க வைத்தது. என் நண்பன் ஒருவன் இருமுறை அடுத்தடுத்த நாட்கள் போய் இந்தப்படத்தை பார்த்து விட்டு சொன்ன பின் தான் அதனை தவற விட்டது பிழை என்று புரிந்தது

இப்படத்தை மீண்டும் ஒரு முறை ரொன்ரோவில் திரையிடப் போகிறதாக ஒரு தகவல் கிடைத்திருக்கிறது. நேரமிருந்தால் சென்று பாருங்கள். கட்டாயம் பார்க்கவேண்டிய திரைப்படம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1001 : 300 -யமுனா ராஜேந்திரன்

எந்தவிதமானதொரு படைப்பு குறித்தும் விமர்சனம் என்பது இரண்டு வகைப்படும். முதலாவது ரசனை விமர்சனம். இரண்டாவது குறிப்பிட்ட படைப்பை, குறிப்பிட்ட படைப்பு சார்ந்த ஊடகத்தின் வளர்ச்சி மற்றும் அதனது சமூக உறவுகளோடு வைத்துப் புரிந்து கொள்ளும் விமர்சனம்.

ரசனை விமர்சனத்தை எவரும் எழுந்தமானமாக எழுதலாம். தமிழில் எழுதப்படும் தொண்ணூற்று ஒன்பது புள்ளி தொண்ணூற்று ஒன்பது சதவீதமான விமர்சனங்கள் இத்தகையதுதான். இந்த விமர்சனங்களில் எது பேத்தல், எது படைப்பைக் குறைந்தபட்சம் அறிந்து செய்யப்படுகிறது எனப் பிரித்துப் பார்ப்பது சிலவேளைகள் துப்புரவாகவே கடினம்.

படைப்பைத் தன்வயப்படுத்திக் கொண்டு அணுகுகிறவர்கள் எப்போதுமே படைப்பைத் தமது அனுபவ மட்டத்துக்கு குறுக்கிவிடுகிறார்கள் என்பது ஒரு எளிமையான உண்மை. ஓரு ரசிகனுக்கும் ஒரு விமர்சகனுக்கும், அவர்களது நோக்குகளுக்கும் இலக்குகளுக்கும் வித்தியாசங்கள் இருக்கிறது எனப் புரிந்து கொள்வது ஒரு எளிய பகுப்பாய்வு அணுகுமுறை.

ஆயிரத்தில் ஒருவனுக்கு வருவோம். இந்தப்படம் குறித்துப் பேசும்போது அவதார், அபோகலிப்டோ, அணகோண்டா, மம்மி ரிட்டர்ன்ஸ், கிளாடியேட்டர், மெக்காஸ் கோல்ட் என ஹாலிவுட் படங்கள் பற்றிய நிறைய ஒப்பீடுகள் வருகிறது. குறித்துக் கொள்ளுங்கள், ‘ஹாலிவுட் படங்கள்’ பற்றிய ஒப்பீடுகள். வரலாறு குறித்த, பேசப்பட்ட ‘ஐரோப்பிய’ப் படங்களுடனோ ‘மூன்றாம் உலகின்’ படங்களுடனோ ஒப்பிட ஆயிரத்தில் ஒருவனில் ஒன்றும் இல்லை.

பிறிதொரு விமர்சன அவதானம், ஈழத்தின் கடைசிக்கட்ட நந்திக்கடல் சமரும், முழுமையாகக் கொல்லப்பட்ட போராளிகளது மரணங்களும் ஆயிரத்தில் ஒருவனுக்குள் குறியீடுகளாக இருக்கிறது எனும் பார்வை. இதனோடு சேர்த்துப் பார்க்கத்தக்கது, ஆயிரத்தில் ஒருவன் இயக்குனர் செல்வராகவனதும் படத்தயாரிப்பாளர் ரவிச்சந்திரனதும் ஒரு அறிக்கை : ‘நந்திக் கடல் சம்பவத்திற்கு மூன்று மாதங்களுக்கு முன்பே ஆயிரத்தில் ஒருவனின் முழுப்படப்பிடிப்பும் முடிந்துவிட்டது, ஈழப் போராட்டத்துக்கும் இதற்கும் எந்தச் சம்பந்தமில்லை இல்லை‘.

ஆயிரத்தில் ஒருவனை மெக்கனாஸ் கோல்ட் முதல் மம்மி ரிட்டர்ன்ஸ் வரையிலான ஹாலிவுட் படங்களோடு வைத்துப் பேசுவது பொருத்தமானதுதான். ஹாலிவுட் சினிமாவின் தந்தை எனப் பேசப்படுகிற கிரிப்பித்தின் பர்த் ஆப் அமெரிக்கா படத்திலிருந்து கொலம்பஸின் பயணம் குறித்த ரிட்லி ஸ்காட்டின் படம் வரை – இதில் ஓம்புரி வில்லனாகச் சித்திரிக்கப்பட்ட ஸ்பீல்பர்க்கின் இண்டியானா ஜோன்ஸையும் நீங்கள் சேர்த்துக் கொள்ளலாம் – ஆதிவாசிகள், ஆப்ரிக்கர்கள், செவ்விந்தியர்கள் எப்படி நாகரீகமற்ற காட்டுமிராண்டிகளாகச் சித்தரிக்கப்பட்டார்கள் என்பதைப் புரிந்து கொண்டால், தமிழில் செல்வராகவனின் படம் ஹாலிவுட்டுக்குச் சவால்விடுவதாக நாம் நிச்சயமாகவே கருதுவதில் சந்தேகப்பட ஏதுமில்லை.

வியட்நாமுக்குப் பக்கத்திலுள்ள, இருபத்தியோராம் நூற்றாண்டின் செல்வராகவனின் ஆதிவாசி மக்கள் இப்படித்தான் காட்டுமிராண்டிகளாக இருக்கிறார்கள்!

‘செல்வராகவன் தான் எந்தத் திரைப்படத்தினதும் குறிப்பிட்ட பாதிப்புக்கும் ஆட்படாமல்தான் படமெடுத்திருக்கிறேன்’ எனச் சவால் விட்டிருக்கிறார். அவரது சவாலில் பாதி உண்மை இருக்கவே செய்கிறது. குறிப்பிட்ட எந்தத் திரைப்படத்தினதும் குறிப்பிட்ட காட்சிகளின் பாதிப்பு தனது படத்தில் இல்லை என அவர் நிறுவவும் முடியும்.

எனினும், வரலாறு குறித்த புனைவுகளைப் பொறுத்து ஹாலிவுட் சினிமாவின் பாதிப்பிலிருந்து அவர் தப்பவில்லை. நம்மிலிருந்து ‘மற்றவர்கள்’ எனக் கருதுபவர்களை நரமாமிசபட்சிணிகளாகக் காண்பிப்பதிலும், ‘தமது’ நகரங்களிலிருந்து விட்டுவிலகிய நிலையில் தேடிச் செல்லும் ‘புதிய‘ இடங்களில் எதிர்கொள்ளும் பகாசுர உயிரினங்கள், பூச்சிகள், பாம்புகள், அமானுஷ்யமான அகோர ஒலிகள், காட்டுவாசிகள் என விநோத உலகைச் சித்திரிப்பதிலும், கடந்த கால வரலாற்றை முற்றிலும் புனைவாக்கி, நிகழ்கால உலகையும் புனைவாகவே பார்வையாளனை உணரச் செய்வதிலும் ஹாலிவுட் பார்முலாவை செல்வராகவன் அப்படியே பின்பற்றியிருக்கிறார்.

திரைப்பட உருவாக்கத்தில் இது ஒரு சிந்தனைப் பள்ளி – ஸ்கூல் ஆப் தாட் – எனும் வகையில், வரலாறு குறித்த செல்வராகவனின் பார்வை இந்த ஹாலிவுட் சிந்தனைப் பள்ளி சார்ந்ததுதான்.

ஹாலிவுட் படங்களில் கூட வெற்றுப் புனைவு சார்ந்த பிரம்மாண்டமான சாகசத் திரைப்படங்கள், வரலாற்றுணர்வுடன், ‘அறவியல் நோக்குடன்’ எடுக்கப்பட்ட, ‘வரலாற்றின் இடைவெளிகளை’ப் புனைவுகளால் நிரப்பிய திரைப்படங்களை நாம் பார்க்கவியலும்.

எடுத்துக் காட்டினால் இதனை விளக்கலாம் : அனகோண்டா, மம்மி ரிட்டர்ன்ஸ், இண்டியானா ஜோன்ஸ், மெக்கனாஸ் கோல்ட், என ‘அபூர்வங்களை அல்லது புதையல்களைத் தேடிச் சொல்லும்’ திரைப்படங்கள் ஹாலிவுட்டிலிருந்து வந்திருக்கின்றன. அதே சமகாலத்தில் ஸ்பார்ட்டகஸ், கிளாடியேட்டர், 300 எனவும் அடிமைகளின் அல்லது அடிமைப்பட்ட இனமக்களின் வாழ்வு குறித்த சாகசப் படங்கள் வந்திருக்கின்றன.

புனைவைக் கொண்டாட்டமாக்கி திகிலிலும் உன்மத்தத்திலும் மூழ்கடிக்கும் அமானுஷ்யமான படங்கள் என அனகோண்டா வகைப் படங்களைச் சொல்வோமாயின், வரலாற்றின் அடிப்படையில், தெரியவராத வரலாற்று இடைவெளிகளை நிரவி, ‘தெளிவான’ ஒடுக்கப்பட்ட மக்களின் சார்பு நிலையில் நின்று, திரைப்படக் கலையின் அனைத்துத் தொழில்நுட்ப சாத்தியத்துடனும் எடுக்கப்பட்டவை ஸ்பார்டகஸ், 300, கிளாடியேட்டர் வகைப்படங்கள் என்பதை நாம் முதல் பார்வையிலேயே புரிந்து கொள்ள முடியும்.

செல்வராகவன் படம் இதில் எங்கே நிற்கிறது?

300 படம் வெளிப்படுத்தும் வீரத்திற்கும் சோகத்திற்கும், மம்மி ரிட்டர்ன் படம் வெளிப்படுத்தும் அமானுஷ்யத்திற்கும் முழுப்புனைவுக்கும் இடையில் நிற்கிறது செல்வராகவனின் திரைப்படம்.

300 திரைப்படம், அடிப்படையான வரலாற்றைத் தெளிவாக எடுத்துக் கொண்டு, தொழில்நுட்ப சாத்தியங்களுடன், குறிப்பிட்ட சமூகத்தின் சடங்கும் மாந்திரீகமும் கலந்து, அந்த மக்களின் வீரத்தை அறவுணர்வுடன் முன்வைக்கிறது. மம்மி ரிட்டர்ன் அமானுஷ்யமும் பேத்தலும் புனைவின் அர்த்தமற்ற கொண்டாட்டங்களும் கலந்த படம்.

300 படத்திலும் துரோகமும் காமமும் இருக்கிறது. லியோனிட்டஸின் மனைவியான ஸ்பார்ட்டாவின் அரசி, தனது கணவனைக் காப்பதற்காக, படைத்தளபதியுடன் தவிர்க்கவியலாமல் படுக்கைக்குப் போகிறாள். பிற்பாடு துரோகமிழைக்கும் அவனைக் குத்திக் கொலை செய்கிறாள். காமம் செல்வராகவன் படத்திலும் இருக்கிறது. திட்டமிட்டு பாண்டிய வாரிசான பெண் சோழ மன்னனுடன் படுக்கைக்குப் போகிறாள். பிற்பாடு அவனுக்குத் துரோகமிழைக்கிறாள். இவ்விரு காமங்களும் துரோகங்களும் வரலாற்றின் போக்கில் எங்கு பொருந்துகிறது என்பதனை ஒப்பீட்டு ரீதியில் ஒருவர் பார்க்கும் போது, செல்வராகவன் வெளிப்படுத்தும் காமமும் அமானுஷ்யமும், குறிப்பிட்ட சோழ மக்களின் சடங்குகள் மாந்திரீக நம்பிக்கைகள் போன்றவற்றுக்கு வரலாற்றுக்கு வெளியில் நிற்பது தெரியும்.

300 திரைப்படம் இரு விதங்களில் ஆயிரத்தில் ஒருவனோடு காட்சி அடிப்படையில், கதையெனும் ‘மயக்கத்துடன்’ கூட ஒப்பிட முடியும். 300 திரைப்படம் முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற போரின் முன்பாக, இறுதிக் கட்ட யுத்தம் என்பது இவ்வாறுதான் இருக்கும் என்பதனைச் சொல்வதற்காக விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனால் தனது போராளிகளுக்கு தமிழ் உப தலைப்புக்களுடன் போட்டுக் காண்பிக்கப்பட்ட படம்.

300 திரைப்படம், 2006-2007 ஆம் ஆண்டுகளின் இடைவெளியில் உலகெங்கும் வெளியாகியது. ஓரு சில மாதங்களிலேயே அதனது ஒளித்தகடும் உலகெங்கிலும் கிடைத்தது. 300 திரைப்படம் முழுமையாகவே ஒரு ஒடுக்கப்பட்ட இனத்தினதும், அந்த இனத்துக்குத் தலைமை தாங்கும் தலைவனது போராடும் விருப்பம் குறித்ததும், அவனது திட்டமிடப்பட்ட சாகச மரணம் குறித்ததுமான திரைப்படம். அதனோடு 300 திரைப்படம் அதனது போர்க்காட்சிகளுக்காகவும் அதனை வெளிப்படுத்திய தொழில்நுட்ப மேன்மைக்காகவும் போற்றப்பட்ட திரைப்படம்.

300 திரைப்படத்தினால் செல்வராகவனோ அல்லது அவரது ஒளிப்பதிவாளரோ பாதிப்படையவில்லை எனச் சொல்வது அப்பட்டமான மோசடியாகவே இருக்கும். இரண்டு காட்சிகளை எடுத்துக் காட்டாகச் சொல்கிறேன்.

முதலாவது, ஆதிவாசிகள் கூட்டமாகக் கொல்லப்பட்ட பின்னால் இரத்தம் தோய்ந்த அவர்களது உடல்கள் சிதறிக் கிடக்கக் காண்பிக்கப்படும்; கிரேன் ஷாட் அல்லது மேல்நிலைக் காட்சிகள். இரத்தக் களறியான அந்தக் காட்சியில் வெளிப்படும் இரத்த வண்ண ஓவியம் போன்ற வன்முறையின் அழகியல். 300 படத்தில் மொத்தமாகக் கொல்லப்படும் ஸ்பார்ட்டா போராளிகளின் உடல்கள் எவ்வாறு காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது என்பதனை ஆதிவாசிகளின் உடல்களின் காட்சிப் படுத்தலுடன் ஒப்பிட்டுக் கொள்ளுங்கள்.

இரண்டாவது காட்சி, கேடயங்களுடன் குனிந்து வீரர்கள் அரசனைக் காத்து, மறுபடி மறுபடி அரசனை இறுதிவரை காக்க அவர்கள் போராடுகிறார்கள். போராளிகள் அருக்கிக் கொண்டே வருகிறார்கள். எனினும் அதே பாணியில் அவர்கள் அரசனைக் காக்கிறார்கள். செல்வராகவனின் படத்தில் சோழ அரசன் பிடிபடும் முன்னால் நிகழும் காட்சிகளை ஒருவர் ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள்.

300 திரைப்படத்தின் வரலாற்று அடிப்படையான கதைக்கு வருகிறேன்.

கிறிஸ்துவுக்கு முன்னால் 480 ஆண்டுகளுக்கு முன்பாக நடைபெற்ற வரலாறு இந்தத் திரைப்படத்திற்கான அடிப்படை. 300, ஸ்பார்ட்டா எனும் சின்னஞ்சிறு நாட்டின் அரசனான லியோனிடாஸ், தன்னைத் தானே ‘கடவுள்-அரசன்’ எனக் கோரிக் கொண்ட பெருந்தேசிய பர்சிய அரசனான ஜெராக்ஸஸை எதிர்த்துப் போராடி மரணமுற்ற வீரவரலாறு குறித்த திரைப்படமாகும்.

பத்துலட்சம் படைகளைக் கொண்ட அரசன் ஜெராக்ஸஸ், தனது படைவலிமையால் தான் கடக்கும் நாடுகளின் அரசர்களைச் சரணடையவைத்தவன். ஸ்பார்ட்டா(இன்றைய கிரீஸ்) நாட்டின் அரசனான லியோனிடாஸ் மிக எளிய நாட்டை ஆண்டுவந்த படைவலிமையற்ற அரசன். தன்னுடைய நாட்டின் ஆச்சார்யார்களின் சூழ்ச்சியினாலும், எதிரியுடனான உறவு கொண்ட தளபதிகளின் துரோகத்தினாலும், அவனது நாட்டின் முழுமையான படைவீரர்கள் அவனுக்கு மறுக்கப்பட்ட நிலையில், தேர்ச்சி வாய்ந்த தன்னுடைய 300 மெய்ப்பாதுகாவலர்களுடன், பர்சிய (இன்றைய ஈரான்) மன்னனான ஜெராக்ஸஸின் 10 இலட்சம் படையினரை எதிர்கொண்டு போராடி, தனது 300 வடைவீரர்களுடன் போராடி 12,000 பர்சியப் படைகளைக் கொன்று, இறுதியில் களத்தில் மரணமுற்றவன் அவன்.

300 திரைப்படம் வெளியானதை அடுத்து தமது கடந்த கால பெர்சிய வரலாற்றை மேற்கத்தியர்கள் கொச்சைப்படுத்துகிறார்கள் என ஈரான் ஜனாதிபதி கண்டனம் தெரிவித்தார். ஈரான் நாட்டில் 300 திரைப்படம் தடைசெய்யப்பட்டது.

செக்கோஸ்லாவாக்கிய மார்க்சியரும் கடுமையான அமெரிக்க எதிர்ப்பாளரும், ஐரோப்பிய அரசுகளின் விமர்சகருமான ஸ்லோவோய் ஜிஸக், 300 திரைப்படத்தின் பாலான எதிர்மறை விமர்சனங்களை நிராகரித்தார். அந்தத் திரைப்படம் ‘அன்றைய’ மிகப்பெரும் பேரரசின் ‘மிகப்பெரும் படையினரை’ எதிர்த்துப் போரிட்டு மடிந்த, ஒரு வறிய, ‘படை வலிமையற்ற’ நாட்டினர் குறித்தது. இன்றைய அமெரி;க்காவுடனோ அல்லது ஐரோப்பாவுடனோ அன்றைய ஸ்பார்ட்டாவை ‘ஒப்பிடுவது’ சரியானது அல்ல ஸ்லோவோய் ஜிஸக் தெரிவித்தார்.

செல்வராகவனின் படம் குறித்த விமர்சனத்தில இரண்டு விடயங்களைக் குறிப்பிடுவதனை எவராலும் தவிர்க்கமுடியாது. முதலாவது ஹாலிவுட் பிரம்மாண்ட சினிமாவின் கதை சொல்லல். மற்றது ஈழத்தின் இறுதிச் சமர் பற்றிய ஒப்பீடு. விமர்சகர்களும் இவை இரண்டும் செல்வராகவனின் படத்தில் ‘இருக்கிறது’ அல்லது ‘இல்லை’ எனத்தான் பேசமுடியும். அந்த வகைகயில் ஈழப் பிரச்சினையின் ‘இருத்தல்‘ ஆயிரத்தில் ஒருவனில் இருக்கிறது. செல்வராகவனும் அப்படித்தான் பேமுடியும். அப்படித்தான் மறுத்துப் பேசியிருக்கிறார். ‘ஹாலிவுட் பிரம்மாண்டத்தை எடுத்திருக்கிறேன், வரவேற்று ஆதரவழையுங்கள்’ என்கிறார் அவர். இது ஈழப் பிரச்சினை குறிப்பாக முள்ளிவாயக்கால் இறுதிச் சமர் இல்லை எனவும் அவர் சொல்லியிருக்கிறார்.

செல்வராகவனது ஹாலிவுட் சினிமா பிரம்மாண்டம் குறித்த அவரது தேர்வும் அவர் உருவாக்க விரும்பிய படம் குறித்த அவரது நோக்கும் தெளிவாகத்தான் இருக்கிறது.

தமிழில் ஒரு ஹாலிவுட் படத்தை உருவாக்க விரும்பிய செல்வராகவன், ‘சிற்றறரசனான’ ஒரு தமிழ் மன்னன், ‘பேரரசனான’ மூவேந்தர்களில் ஒருவரை எதிர்த்துத் தோல்வி கண்டு, வியட்நாம் அருகிலுள்ள தீவுக்குப் போய்க் காத்திருந்து, அவனது தாயகமண் மீட்பு பற்றிக் கனவுகாண்பவனாக இருந்து, அவனது வரலாற்றைச் சொல்ல முயன்றிருப்பாரானால், தமிழர் வரலாற்றில் அதற்கான ஆய்வுகளை மேற்கொண்டிருப்பாரானால், ஒரு கச்சிதமான, தர்க்கபூர்வமான படமாக ஆயிரத்தில் ஒருவன் ஆகியிருக்கும். செல்வராகவனின் நோக்கம் அப்படியான வரலாற்றுரீதியிலான நோக்கத்தைக் கொண்ட திரைப்படத்தைத் தருவது இல்லை.

வெகுஜனநினைவுகளில் பதிந்திருக்கும் நிகழ்காலச் சம்பவங்களையும் கொந்தளிப்புகளையும் எடுத்துக் கொண்டு ஒரு ஹாலிவுட் சினிமாவை அவர் உருவாக்க விழைகிறார்.

கதையின் ஊடுபாவுகள், அமானுஷ்யம், பாலுறுறவு விழைச்சு என அனைத்தையும் ஒரு பக்கம் வைத்துவிட்டு, கதையின் அடிப்படை என்ன என ஒரு நிமிடம் யோசித்துப் பார்ப்போம்.

புலிக்கொடி கொண்ட, தோற்கடிக்கப்பட்ட சோழ இனத்தைச் சேர்ந்த, வாரிசான சோழ இளவரசனைக் கொண்ட, மீளவும் தமது மண்ணை மீட்போம் எனும் கனவு கொண்ட ஒரு மக்கள் கூட்டம் இருக்கிறது. இந்த மக்கள் கூட்டத்தின் நம்பிக்கை புராதன வாழ்வின் மேன்மை மற்றும் இழப்பிலிருந்து புனிதப்படுத்தப்பட்டிருக்கிறது. ஓடுக்கப்பட்ட எந்த இனமும் தமது புராதன நினைவுகளைக் கட்டியெழுப்புகிறது என்பதனை இங்கு நினைவில் நாம் கொள்வோம். இது கடந்த காலம். இவர்களது நம்பிக்கை விடுதலைபெற்ற நிகழ்காலத்தை வென்று, சுபிட்சமான எதிர்காலத்தை அடைவது.

நிகழ்காலம் எப்படிப்பட்டது? இந்திய அரசினது நவீன ஆயுதங்கள் கொண்ட மிருகத்தனமான ராணுவப்படை, அவர்களது அத்தனை கனவுகளையும், துரோகத்தின் வலிமையால், பாலுறவு வல்லுறவை ஒரு ஆயுதமாகவே கொண்டு அழித்தொழிக்கிறது. புலிச் சின்னத்தை முதுகில் கொண்ட சமகால வாலிபனொருவன் அடர்ந்த கானகத்தில் சோழவம்சத்தின் வாரிசான சிறுவனுடன் தப்புகிறான். இதுதான் செல்வராகவுன் படத்தின் அடிப்படையான கதை. ‘வெகுஜன நினைவுகளில்’ – தமிழகம் ஈழம் புகலிடம் – பதிந்த இதனைத் தான் செல்வராகவன் படமாக எடுத்திருக்கிறார்.

இந்த அர்த்தத்தில் ஈழத்தமிழர் பற்றிய படமல்ல ஆயிரத்தில் ஒருவன் என செல்வராகவன் சொல்வது அப்பட்டமான மோசடி. எனினும், செல்வராகவன் ஒரு வரலாற்றுப் படத்தினையோ அல்லது யதார்த்தப் படத்தினையோ அல்லது அறம்சார் கடப்பாடு கொண்ட ஒரு அரசியல் படத்தினையோ எடுக்கும் நோக்கம் கொண்டவர் இல்லை. அவர் எடுக்க நினைத்திருப்பது ஒரு ஹாலிவுட் திரைப்படம்.

அவரது வழமையான உன்மத்த நிலையிலான (வன்முறையானாலும் காமமானாலும் செல்வராகவன் படங்களின் பாத்திரப்படைப்புக்களும் ஒருவகை நரம்புக்கிளர்ச்சிக்கு – நியூரோஸிஸ் – நிலைமைக்கு ஆட்பட்டவர்களாகவே இருப்பார்கள். அவர் விரும்புவது காமத்தை நேரடியாக வெளிப்படுத்தும் ஆண் பெண் தன்மை நிரம்பிய கதையமைப்பில் வெளிப்படுத்தப்படும் ஒரு பிரம்மாண்டம் நிறைந்த படம். மெக்கனாஸ் கோல்ட் மற்றும் மம்மி ரிட்டர்ன் பிரம்மாண்டத்தையும் அமானுஷ்யத்தையும், அதற்கான தொழில்நுட்ப வல்லமைகளையும் கலந்து தமிழ் சினிமா ரசிகனை அசத்தும் ஒரு திரைப்படம்.

இது குறிப்பாக முள்ளிவாய்க்கால் பற்றிய திரைப்படம் இல்லை.

மூவேந்தர்களுக்கிடையிலான போர்கள், வடக்கிருந்து மரணமுறல், பாலுறவும் பெண்களும் முடியரசுகளின் வீழுச்சியில் வகித்த பாத்திரம் போன்றவற்றை மங்கலாக அறிந்திருப்பவர்களும், ஏழு கடல்கள் அப்புறமாக ஏழு மலைகளுக்கு அப்பால் ஒரு மரத்தில் வாழும் கிளியைத் தேடிப்போகும் ‘பாட்டி கதைகளின் மாஜிக் ரியாலிச’ தர்க்கமும் அறிந்தவர்கள் செல்வராகவனின் ஆயிரத்திலொருவன் கதைத் தர்க்கத்தை அறிந்த கொள்ள முடியும்.

இதை விட்டு விட்டு, குறிப்பான வரலாற்றையும், கதைத் தர்க்கத்தையும், பாத்திரங்களின் குறியீட்டு அர்த்தங்களையும் ஆயிரத்தில் ஒருவனில் தேடிக் கொண்டிருப்பது ஒரு வகையில் அவரவர்களது மனப் பிரதியை உருவாக்கும் எத்தனம் அன்றி வேறில்லை.

எம்.ஜி.ராமச்சந்திரனின் ஆயிரத்தில் ஒருவனில் குறிப்பான வரலாறு இல்லை. அது முழுமையாக பொழுதுபோக்கை நோக்கமாகக் கொண்டு எடுக்கப்பட்ட ஒரு திரைப்படம். அந்தப் படம் அறவுணர்வு சார்ந்த, அடிமை மனிதர்களின் விடுதலைத் தேட்டத்தை வெளிப்படையாக முன்வைத்த ஒரு எளிமையான ஜனரஞ்சகப் படம். அந்தப் படத்தில் இடம்பெறும் ‘அதோ அந்தப் பறவை போல வாழவேண்டும்’ எனும் பாடல் சர்வதேசிய கீதத்தின் அளவில் உலகளாவிய உணர்ச்சியை எழுப்பும் தன்மை கொண்ட கீதமாக இருந்தது.

எம்.ஜி.ஆரின் ஆயிரத்தில் ஒருவன் தீமைக்கு எதிரான தூயவனொருவனின் வடிவம்.

செல்வராகவனின் ஆயிரத்தில் ஒருவன் இந்திய ராணுவம் அல்லது நவீனயுகம் முன்வைக்கும் வன்முறைக்கு எதிரான நன்றும்-தீதும் கலந்த (சோழர்கள் வெகுமக்களாக காட்டுமிராண்டிகளாக இருக்கிறார்கள் – சோழ மன்னன் தனது நடத்தைகளால் தீமைக்கு எதிரான தூய மனிதனாவதில் தவறுகிறான்) மனிதர்களின் தோல்வி குறித்த திரைப்படம். இந்த மன்னனின் அல்லது மக்கள் கூட்டத்தின் வாரிசு தீமைக்கு எதிரானவன் என்னும் திட்டவட்டமான சித்திரத்தை ஆயிரத்தில் ஒருவன் தரவில்லை. படம் பார்வையாளர்களிடம் குழுப்பத்தைத் தோற்றுவிக்க அதுவே காரணம்.

எம்.ஜி.ஆரின் ஆயிரத்தில் ஒருவனோடு ஒப்பிட செல்வராகவனின் ஆயிரத்தில் ஒருவனில் தவறுவது போராடும் மக்கள் கூட்டத்திடம் இருக்கவேண்டிய தார்மீக பலம் அல்லது அறவுணர்வு. இந்தவகையில் வேண்டுமானால் செல்வராகவனின் ஆயிரத்தில் ஒருவனை (தீதும் நன்றும் ஒன்றெனக் கலந்த) பின்நவீனத்துவ ஆயிரத்தில் ஒருவன் எனக் கோரிக்கொள்ள முடியும்.

வரலாறும் நிகழ்காலமும் புனைவும் குறித்த வகையில் உருவான உலகத் திரைப்படங்களான 300, ( 300 படத்தில் மன்னன் லியோனிடாஸ் போர்க்களத்தில் மரணமுறும் முன்பு, அவனது கழுத்திலிருந்த மந்திரக் கயிற்றை உருவியேடுத்து, தனது காவலனிடம் கொடுத்து, அவனது மகனிடம் சேர்ப்பிக்கச் சொல்வான். அவனது காவலன் அதனை அவனது மனைவியிடம் சேர்ப்பித்து, லியோனிடாசின் வாரிசான மகனது கழுத்தில் அதனைக் கட்டச் செய்வான்) கிளாடியேட்டர், ஸ்பார்ட்டகஸ் போன்ற ஹாலிவுட் திரைப்படங்ளையும், ஐரோப்பியப் படங்களான ஸ்காட்லாந்து விடுதலை குறித்த பிரேவ் ஹார்ட், அயர்லாந்து விடுதலை குறித்த மைக்கேல் கோலின்ஸ் போன்றவற்றோடு மட்டுமல்ல, குறைந்தபட்சம் தமிழில் உருவான வீரபாண்டியக் கட்டபொம்மன் படத்தினோடு வைத்தேனும் ஆயிரத்தில் ஒருவனைப் புரிந்து கொள்ள முயலுவோம்.

வரலாற்றுக்கும் யதார்த்தத்துக்கும் செல்வராகவனின் ஆயிரத்தில் ஒருவனுக்கும் உள்ள தொலைதூரத்தையும், ஒரு படைப்பாளியாக செல்வராகவனின் அரசியல் கடப்பாட்டுணர்வுக்கும், ஒடுக்கப்பட்ட மக்களின் பாலான அவரது அறவுணர்வுக்கும் இருக்கும் தொலைவையும் ஒருவர் அப்போது புரிந்து கொள்ள முடியும்.

http://inioru.com/?p=10940

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "அவளோடு என் நினைவுகள்…"   "உன் நினைவு மழையாய் பொழிய   என் விழியோரம் கண்ணீர் நனைக்க  மென்மை இதயம் அன்பால் துடிக்க  அன்பின் ஞாபகம் கதையாய் ஓடுது "   "மனக் கடல் குழம்பி பொங்க மவுனம் ஆகி நீயும் மறைய  மண்ணை விட்டு நானும் விலக   மங்கள அரிசியும் கை மாறியதே!"   நிகழ்வு நினைவாற்றல் [Episodic Memory] உண்மையில் ஒருவரின் வாழ்வில் முக்கியமான ஒன்று, ஏனென்றால், அவை தனிப்பட்ட அனுபவங்களை நினைவு படுத்துவதுடன், அவரின் வாழ்வை மற்றும் புரிந்துணர்வுகளை [கண்ணோட்டங்களை]  வடிவமைக்கக் கூடியதும் ஆகும். அப்படியான "அவளோடு என் நினைவுகள்…" தான் உங்களோடு பகிரப் போகிறேன்.   நான் அன்று இளம் பட்டதாரி வாலிபன். முதல் உத்தியோகம் கிடைத்து, இலங்கையின்,  காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை ஆகிய மூன்று நிருவாக மாவட்டங்களைத் தன்னுள் அடக்கிய தென் பகுதியில் பணியினை பொறுப்பேற்றேன். அது சிங்களவரை 94% அல்லது சற்று கூட கொண்ட ஒரு பகுதியாகும். ஆகவே அங்கு எப்படியாவது சிங்களம் கற்க வேண்டிய அவசியம் எனக்கு இருந்தது. எப்படியாவது புது அனுபவம் புது தெம்பு கொடுக்கும் என்ற துணிவில் தான் அந்த பதவியை நான் பொறுப்பேற்றேன்    முதல் நாள், அங்கு உள்ள பணி மேலாளரை சந்தித்து, என் பணி பற்றிய விபரங்களையும் மற்றும் அலுவலகம், தொழிற்சாலை போன்றவற்றையும் சுற்றி பார்க்க அன்று நேரம் போய்விட்டது. என்றாலும் இறுதி நேரத்தில் என் கடமையை ஆற்ற எனக்கு என ஒதுக்கிய அலுவலகத்தில் சற்று இளைப்பாற சந்தர்ப்பம் கிடைத்ததுடன், அங்கு எனக்கு உதவியாளராக இருப்பவர்களின் அறிமுகமும் கிடைத்தது. அங்கு தான் அவளை முதல் முதல் கண்டேன்! அவள் தான் என் தட்டச்சர் மற்றும் குமாஸ்தா [எழுத்தர்] ஆகும். அவளின் பெயர்  செல்வி டயாணி பெர்னான்டோபுள்ளே, பெயருக்கு ஏற்ற தோழமையான இயல்பு அவள் தன்னை அறிமுகப் படுத்தும் பொழுது தானாக தெரிந்தது. அழகும் அறிவும் பின்னிப்பிணைந்து அவளை ஒரு சிறப்பு நபராக சொல்லாமல் சொல்லிக்கொண்டு இருந்தது. அவளுக்கு கொஞ்சம் கொஞ்சம் தமிழும் தெரிந்திருந்தது எனக்கு அனுகூலமாகவும் இருந்தது.    செம்பொன்னில்செய்து செங்குழம்புச் சித்திரங்கள் எழுதிய இரு செப்புகளை ஒரு பூங்கொம்பு தாங்கி நிற்பது போன்று பொலியும் காட்டு முலைக்கொடி போன்ற அவளின் முழு உருவமும், அதில் வில் போல் வளைந்து இருக்கும் புருவமும் மலரிதழ் போன்ற இனிய சொல் பேசும் சிவந்த வாயும், நல் முத்துக்கள் சேர்ந்தது போன்ற  வெண்மையான பல்லும், அசைகின்ற மூங்கில் போன்ற பருத்த தோளும்,  காந்தள் மலர் போன்ற மெல்லிய விரல்களும், பிறரை வருத்தும்,எழுச்சியும் இளமையும் உடைய மார்பகங்களையும் பிறர் பார்த்தால் இருக்கிறதே  தெரியாத வருந்தும் இடையும் யாரைத்தான் விட்டு வைக்கும்.    அடுத்தநாள் வேலைக்கு போகும் பொழுது, அவளும் பேருந்தால் இறங்கி நடந்து வருவதை கண்டேன். நான் தொழிற்சாலைக்கு கொஞ்சம் தள்ளி அரச விடுதியில் தங்கி இருந்தேன். ஆகவே மோட்டார் சைக்கிலில் தான் பயணம். ஆகவே ஹலோ சொல்லிவிட்டு நான் நகர்ந்து போய்விட்டேன்.   உள் மனதில் அவளையும் ஏற்றி போவமோ என்று ஒரு ஆசை இருந்தாலும், இன்னும் நாம் ஒன்றாக வேலை செய்யவோ, ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளவோ இல்லாத நிலையில், அதற்கு இன்னும் நேர காலம் அமையவில்லை என்று அதை தவிர்த்தேன்.    என் அறையில் நானும், அவளும் ஒரு பியூன் [சேவகன்] மட்டுமே. முதல் ஒன்று இரண்டு கிழமை, எனக்கு அங்கு இதுவரை நடந்த வேலைகள், இப்ப நடப்பவை , இனி என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி அலசுவதிலேயே காலம் போய் விட்டது. நல்ல காலம் எனக்கு கீழ் நேரடியாக வேலை செய்யும் உதவி பொறியியலாளர்கள், மேற்பார்வையாளர்கள் எல்லோரும் ஆங்கிலம் பேசுவார்கள். வேலையாட்களும் மற்றவர்களுடனும் தான் மொழி பிரச்சனை இருந்தது.    தொழிற்சாலைக்குள் இவர்களின் உதவி வரப்பிரசாதமாக இருந்தது. அதே போல, அலுவலகத்திற்குள் இவளின் உதவிதான் என்னை சமாளிக்க வைத்தது.     மூன்றாவது கிழமை, நான் கொஞ்சம் ஓய்வாக இருந்தேன், அவளின் வேலைகளும் குறைந்துபோய் இருந்தது. பியூன் ஒரு கிழமை விடுதலையில் போய்விட்டார். 'ஆயுபோவான் சார்' என்ற அவளின் குரல் கேட்டு திரும்பினேன். அவள் காபி கொண்டுவந்து குடியுங்க என்று வைத்துவிடு தன் இருப்பிடத்துக்கு போனாள். இது தான் நல்ல தருணம் என்று, அவளை, அவளுடைய காபியுடன் என் மேசைக்கு முன்னால் இருக்கும் கதிரையில் அமரும் படி வரவேற்றேன். அவள் கொஞ்சம் தயங்கினாலும், வந்து அமர்ந்தாள்.    நாம் இருவரும் அவரவர் குடும்பங்கள், படித்த இடங்கள் மற்றும்  பொது விடயங்களைப்பற்றி காபி குடித்துக்கொண்டு கதைத்தோம். அது தான் நாம் இருவரும் முதல் முதல் விரிவாக, ஒருவரை ஒருவர் அறிமுகப் படுத்திய நாள். அவள் ஒருவரின் வீட்டில், ஒரு அறையில் வாடகைக்கு இருப்பதாகவும், ஆனால், நேரடியான பேருந்து இல்லாததால், இரண்டு பேருந்து எடுத்து வருவதாகவும், தன் சொந்த இடம் சிலாபம் என்றும் கூறினாள். அப்ப தான் அவளுக்கு கொஞ்சம் கொஞ்சம் தமிழ் தெரிவதின் காரணம் புரிந்தது.    சிலாபம், புத்தளம், நீர்கொழும்பு போன்ற கரையோரப் பகுதிகளில், தங்கள் பாதுகாப்புக்காகப் போர்த்துக்கேயரால் குடியமர்த்தப் பட்ட கத்தோலிக்க மதத்திற்கு மாற்றப் பட்ட தமிழ் பரதவர்களது பிள்ளைகள் முதலில் கத்தோலிக்க பாடசாலைகளில் தமிழில் கற்றார்கள். பிற்காலத்தில் அந்த பாடசாலைகளில் இருந்த தமிழ் மொழிப் பிரிவு மூடப் பட்டு அனைவரும் சிங்கள மொழி ஊடாக கற்க பணிக்கப் பட்டார்கள். எனவே பிள்ளைகள் வளர்ந்து பெரியவர் ஆனதும், வீட்டு மொழியும் இயற்கையாக சிங்களம் ஆகி, முழுமையாக இன மாற்றம்  20 ஆம் நூற்றாண்டில் அடைந்தார்கள் என்று நான் முன்பு படித்த வரலாறு நினைவுக்கு வந்தது. இந்த  ஒருமைப்படுத்தலுக்கு (Assimilation)  காரணமானவர் ஒரு கத்தோலிக்க மதகுருவே ஆகும்!  பேராயர் எட்மன்ட் பீரிஸ் (பிறப்பு 27-12-1897) ஆவர்!!    அன்று தொடங்கிய கொஞ்சம் நெருங்கிய நட்பு, நாளடைவில் வளர, அவளின், அழகும், இனிய மொழியும், நளினமும் கட்டாயம் ஒரு காரணம் என்று சொல்ல வேண்டும். அவளும் வீட்டில் இருந்து தானே சமைத்த சிங்கள பண்பாட்டு சிற்றுண்டிகள், சில வேளை மதிய உணவும் கொண்டு வந்தாள்.  நானும் கைம்மாறாக காலையும் மாலையும் என் மோட்டார் சைக்கிலில் ஏற்றி இறக்குவதும், மாலை நேரத்தில் இருவரும் கடற்கரையில் பொழுது போக்குவதும், சில வேளை உணவு விடுதியில் சாப்பிடுவதுமாக, மகிழ்வாக நட்பு நெருங்க தொடங்கியது.     கொஞ்சம் கொஞ்சமாக, அவள் என்னுடன் பயணிக்கும் பொழுது, பின்னால் இருக்கையை பிடிப்பதை விடுத்து, தெரிந்தும் தெரியாமலும், தான் விழாமல் இருக்க, என்னை இருக்க பிடிக்க தொடங்கினாள்.       "செண்பகப் பூக்களை சித்திரை மாதத்தில்  தென்றலும் தீண்டியதே  தென்றலின் தீண்டலில் செண்பகப் பூக்களில்  சிந்தனை மாறியதே  சிந்தனை மாறிய வேளையில் மன்மதன்  அம்புகள் பாய்ந்தனவே  மன்மதன் அம்புகள் தாங்கிய காதலர்  வாழிய வாழியவே!"                     எளிமையாக, மகிழ்வாக அவள் அழகின் உற்சாக தருணங்கள் மனதை கவர, சந்தோசம் தரும் அவள் உடலின் பட்டும் படாமலும் ஏற்படும் மெல்லிய தொடு உணர்வை [ஸ்பரிசம்] எப்படி வர்ணிப்பேன். பெண்தான் ஆணுக்கு பெரும் கொடை, அவளின் ஒரு ஸ்பரிசம் நமது நாளையே மலர்த்தி விடுகிறது. ஒருவனுக்கு ஒரு வார்த்தை அல்லது உரையாடல் எவ்வளவு நம்பிக்கையை கொடுக்கிறதோ, அதே மாதிரி, நட்பும் பிரியமும் [வாஞ்சையும்] அது நிகழும் தருணங்களின் மேல் மகத்தான உண்மையோடு இருக்கின்றன. அந்த உண்மையிலேயே என் வாழ்க்கை அன்றில் இருந்து மலரத் தொடங்கியது.     அதன் விளைவு, ஒரு வார இறுதியில், 1977 ஆகஸ்ட் 13  சனிக்  கிழமை, டயாணி பெர்னான்டோபுள்ளே  என்ற பவளக்கொடியுடன் நான் பவளப் பாறைகளுக்கு சிறப்பு பெற்ற,  காலியிலிருந்து கிட்டத்தட்ட 17 கி.மீ தொலைவில் அமைந்துள்ள, இக்கடுவை (ஹிக்கடுவை) என்ற கடற்கரை நகரம் போனோம். அங்கு எம்மை தெரிந்தவர்கள் எவருமே இல்லை. அது எமக்கு ஒரு சுதந்திரம் தந்தது போல இருந்தது.     "வட்டநிலா அவள் முகத்தில் ஒளிர  கருங்கூந்தல் மேகம் போல் ஆட     ஒட்டியிருந்த என் மனமும் உருக  விழிகள் இரண்டும் அம்பு வீச   மெல்லிய இடை கைகள் வருட   கொஞ்சி பேசி இழுத்து அணைக்க   கச்சு அடர்ந்திருக்கும் தனபாரம்  தொட்டு என்னை வருத்தி சென்றது!"       முதல் முதல் இருவரும் எம்மை அறியாமலே முத்தம் பரிமாறினோம். அப்ப எமக்கு தெரியா இதுவே முதலும் கடைசியும் என்று. ஆமாம். 1977 சூலை 21 இல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில்  தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினர்கள், 23 இடங்களில் போட்டியிட்டு 18 இடங்களில்  வெற்றி பெற்று, நாடாளுமன்றத்தில் இரண்டாவது அதிகப்படியான உறுப்பினர்களைக் கொண்ட பெரிய கட்சியாக வந்து, அதன் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் முதல் முதல் தமிழர் ஒருவர் எதிர்க்கட்சி தலைவராக பதவியேற்றார். இது,  இந்த இனிய உறவுக்கும் ஒரு ஆப்பு வைக்கும் என்று கனவிலும் நான் சிந்திக்கவில்லை.  தமிழ்ப் பகுதிகளுக்கு வெளியே வாழும் இலங்கைத் தமிழருக்கு எதிராக ஆகஸ்ட் 12 , வெள்ளிக்கிழமை, வன்முறைகள் ஆரம்பித்து விட்டதாக வந்த செய்தியே அது.    நாம் உடனடியாக எமது திட்டத்தை இடை நடுவில் கைவிட்டு, எனது விடுதிக்கு திரும்பினோம். அவளிடம் அதற்கு பிறகு பேசுவதற்கும் சந்தர்ப்பம் சரிவரவில்லை. காரணம் தமிழில் கதைத்தால், அது எமக்கு மேலே வன்முறை தொடர எதுவாக போய்விடும். ஆகவே மௌனம் மட்டுமே எமக்கு இடையில் நிலவியது. அவளை அவளின் தற்காலிக வீட்டில் இறக்கி விட்டு, நான் அவசரம் அவசரமாக என் அரச விடுதியில், முக்கிய பொருட்களையும் ஆவணங்களையும் எடுத்துக் கொண்டு, எனக்கு தெரிந்த சிங்கள காவற்படை அதிகாரி வீட்டில் ஒரு சில நாள் தங்கி, பின் யாழ்ப்பாணம் புறப்பட்டேன்.    அதன் பின் நான் வெளி நாட்டில் வேலை எடுத்து, இலங்கையை விட்டே போய் விட்டேன். நான் யாழ்ப்பாணத்தில் இருந்தும் அதன் பின் வெளிநாட்டில் இருந்தும் அவளுக்கு போட்ட ஒரு கடிதத்துக்கும் பதில் வராததால், அதன் பின் அவள் நினைவுகள் மனக் கடலில் இருந்து கரை ஒதுங்கி விட்டது.    என்றாலும் அவளுக்கு என்ன நடந்தது ?, ஏன் பதில் இல்லை என இன்றும் சிலவேளை மனதை வாட்டும். அன்று நான் ஒன்றுமே கதைக்காமல் , காலத்தின் கோலத்தால் திடீரென பிரிந்தது அவசரமாக போனதால், கோபம் கொண்டாளோ நான் அறியேன்    `செல்லாமை உண்டேல் எனக்குரை மற்று நின் வல்வரவு வாழ்வார்க் குரை!’   `நீ என்னை விட்டுப் போகவில்லை என்ற நல்ல தகவலைச் சொல்வதானால் என்னிடம் இப்பவே, உடனே சொல், இல்லை போய் விட்டு விரைவில் திரும்பி விடுவேன் என்ற தகவலைச் சொல்வ தென்றால் [கடிதம் மூலமோ அல்லது வேறு வழியாகவோ] நீ வரும் வரை யார் வாழ்வார்களோ அவர்களிடம் போய்ச் சொல்! என்று தான் என் மடல்களுக்கு மறுமொழி போடவில்லையோ?, நான் அறியேன் பராபரமே !!      நன்றி    [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • "தைரியமானவள்"     வவுனியாவில் உள்ள  ஒரு குக்கிராமம் இது. இங்கு பெருமளவில் இந்துக்களையும் சிறிய அளவில் கிறித்தவர்களையும் கொண்டுள்ள போதிலும் மக்கள் மதங்களுக்கு அப்பாற்பட்டு ஒரு குடும்பம்போல் வாழ்கின்ற ஒரு சமாதானம் நிலவும் கிராமம் இதுவாகும்.  இக் கிராமமானது அங்கு உள்ள ஒரு பெரும் குளத்தைச் சேர்ந்த நிலங்களைக் காடு வெட்டி துப்புரவு செய்து கமம் செய்து உருவாக்கப்பட்டது என்பது வரலாறு ஆகும்.    அங்கு தான் கமங்களில் கூலிவேலை செய்யும் தாய் தந்தையரின் இளைய மகளாக, அவள் இருந்தாள். கோவலன் கண்ட கண்ணகியின் அழகு கூட இவளுக்கு நிகரில்லை!         "மாயிரும் பீலி மணி நிற மஞ்சை நின் சாயர் கிடைந்து தங்கான் அடையவும் ......... அன்ன நன்னுதல் மென்னடை கழிந்து நன்னீர்ப் பண்ணை நளி மலர் செரியவும் ........... அளிய தாமே சிறு பசுன் கிளியே குழளும் யாழும் அமிழ்துங் குழைத்த நின் மழைக் கிளவிக்கு வருந்தின வாகியும் மட நடை மாது நின் மலர்க்கையீ நீங்காது"   கரிய பெரிய மயில்கள் உன் தோற்றத்தை கண்டு தோற்று அவைகள் கூட்டை சென்று அடைகின்றன .. அன்னப் பறவைகள் உன் மேன்மையுடைய நடைக்கு பயந்து நன்னீர் பூக்கள் பின் சென்று மறைகின்றன .. பசுங் கிளிகள் குழழின் இசையையும், யாழின் இசையையும்,அமிர்த்தத்யும் கலந்த உன் சொற்களுக்கு போட்டி இட முடியாமல் வருந்தி அதனை கற்பதற்காக உன்னை பிரியாமல் உள்ளன என்றான் கோவலன். ஆனால் இவள் அதற்கும் மேலாக, "அரிசந்திர புராணம்" வர்ணிக்கும் பெண்களின் விழி அழகை அப்படியே கொண்டு இருந்தாள்   "கடலினைக் கயலைக் கனையமேன் பினையைக் காவியை கருவிள மலரை வடுவினைக் கொடிய மறலியை வலையை வாழை வெண் ர்ரவுநீன் டகன்று கொடுவினை குடி கொண்டிருபுறம் தாவிக் குமிழையும் குழைyaiயும் சீறி விடமெனக் கறுப்பூர் றரிபரந துங்கை வேலினும் கூறிய விழியால்"   ஒப்புமையில் கடலினையும், மீனையும்,அம்பையும், மென்மையான பெண் மானையும் நீலோற்பல மலரையும் கருவிளம் பூவையும், பார்வையால் ஆடவரை துன்புறுத்தி கவர்வதில் கொடிய எமனையும், வலையையும், வாளையும் வென்று முற்றிலும் செவியளவு நீண்டு அகன்று கண்டார் உயிர் உண்ணும் கொடுந்தொழில் நிலை பெற்று இரண்டு பக்கங்களிலும் தாவி குமிழாம் பூ போன்ற மூக்கும், விசம் போல் கருநிறம் பொருந்தி கூரிய வேலை விட கூர்மையான கண்களை உடையவள் இவள். அதனால்தானோ என்னவோ பெயர்கூட ' மலர்விழி'    காட்டோடு அண்டிய ஒரு இடத்தில், சிறு குடிசை ஒன்றில் பெற்றோருடனும் ஒரு அண்ணனுடனும் வாழ்ந்து வந்தாள். அவள் பாடசாலைக்கு மூன்று மைல் , காட்டோடும்   கமமோடும் நடந்து தான் போவாள். குடிசையும் பெரிய வசதி ஒன்றும் இல்லை. ஆனால், பெற்றோருக்கு  கமத்துக்கு கூலிவேலைக்கு போக வசதியான இடமாக இருந்தது.    அவள் இப்ப பத்தாம் வகுப்பு மாணவி, பெண்மை பூரித்து துள்ளும் வயது. பாடசாலைக்கு அருகில் ஒரு பெரிய பலசரக்கு கடையும், அதனுடன் கூடிய  சிற்றுண்டிச்சாலையும் புடவை கடையும் இருந்தது. இந்த மூன்றுக்கும் முதலாளி ஒருவரே, பெரும் பணக்காரர். அவரின் ஒரு மகன், யாழ் பல்கலைக்கழகத்தில் படித்தவர்,  பரீடசை எடுத்து விட்டு வீட்டில் மறுமொழி வரும் மட்டும் காத்து இருக்கிறார். எனவே அவ்வவ்போது தந்தைக்கு ஓய்வு கொடுத்து, கடையை கவனிக்க தொடங்கினார்.    மலர்விழி தோழிகளுடன், பாடசாலை முடிய கடைப்பக்கம் போவார். ஆனால் தோழிகள் வாங்குவதை, மற்றும் அங்கு உள்ளவற்றை பார்ப்பதை தவிர, மற்றும் படி ஒன்றும் வாங்குவதில்லை. அந்த வசதி ஒன்றும் அவருக்கு இல்லை. அது மட்டும் அல்ல, ஒரு சில வினாடிகளே அங்கு நிற்பார். காரணம் மூன்று மைல் நடந்து வீடு போகவேண்டும். அவருடன் ஒரு சில பிள்ளைகளும் சேர்ந்து நடப்பதால், ஆளுக்கு ஆள் துணையாக.    கம்பனின் மகன் அம்பிகாபதி போல இந்த முதலாளியின் மகன், சங்கரும் அவளை முதல் முதல் பார்த்தவுடன், அவன் கண்ணுக்கு அவள் உருவம் மனித உருவமாகவே தெரியவில்லை. அவன் கற்பனை  கொடியோடும் குளத்தோடும் மீனோடும் உறவாடிற்று    “மைவடிவக் குழலியர்தம் வதனத்தை         நிகர்‘ஒவ்வா மதியே! மானே!! செய்வடிவைச் சிற்றிடையை வேய்தோளைத்         திருநகையைத் தெய்வ மாக இவ்வடிவைப் படைத்தவடி வெவ்வடிவோ         நானறியேன்! உண்மை யாகக் கைபடியத் திருமகளைப் படைத்திவளைப்         படைத்தனன் நல்கமலத் தோனே! ”      பொற்கொடியாளே,  வாடாத உன் தலையில் மழைமேகத்தை சுமந்தவளே. பிறை அணிந்த தாமரை முகத்தாளே, நீ கேட்டாள், உனக்காக  எதையும் தரத் தயாராக உள்ள கற்பகத்தரு போல் நான் நிக்கிறேன் என்று அவன் சொல்லாமல் அவளிடம் சொல்லிக்கொண்டு தன்னை மறந்து நின்றான்.    ஒரு சில நாட்கள் ஓட, அவன் மெல்ல மெல்ல அவளுடன் கதைக்க தொடங்கினான். அவனும் அழகில் கம்பீரத்தில் குறைந்தவன் அல்ல.    "எண் அரும் நலத்தினாள்     இனையள் நின்றுழி, கண்ணொடு கண் இணை     கவ்வி, ஒன்றை ஒன்று உண்ணவும், நிலை பெறாது     உணர்வும் ஒன்றிட, அண்ணலும் நோக்கினான்!     அவளும் நோக்கினாள்."   அழகின் எல்லை இது தான் என்று நினைப்பதற்கும் அரிய அழகுடைய அவளை, ஒருவர் கண்களோடு, மற்றொருவர் கண்கள் கவர்ந்துப் பற்றிக் கொண்டு, ஒன்றை ஒன்று கூடி ஒன்று படவும், அவனும் அவளை பார்த்தான். அவளும் அவனை பார்த்தாள்.  அவளுக்கும் உண்மையில் ஆசை இருந்தாலும், அவளின் நிலைமை, கவனமாக இருக்க வேண்டும் என்று உறுத்தியது. காரணம் இவன் பெரும் பணக்கார பையன், மற்றும் பட்டதாரி ஆகப்போகிறவன். என்றாலும் அவன் வாக்குறுதிகள் நம்பிக்கைகள் கொடுத்து, அவளும் அப்பாவிதானே, நம்பி இருவரும் கொஞ்சம் கொஞ்சம் நெருங்க தொடங்கினார்கள். அவளின் பெற்றோர் கூலி வேலைக்கு போனால், வீடு திரும்ப இரவாகிடும், அண்ணனும் , நண்பர்களுடன் போய்விடுவார். எனவே, சங்கர் இப்ப அவளை தனது மோட்டார் சைக்கிளில் வீட்டில் இறக்குவதும், அப்படியே , அந்த சின்ன குடிசையில் தனிய கதைத்து மகிழ்வதும், சிற்றுண்டிகள், குளிர்பானங்கள் எடுத்துக்கொண்டு போய் இருவரும் அங்கு அவையை அனுபவிப்பதும் என காலம் போகத் தொடங்கியது. அத்துடன் அவன் அவளுக்கு தெரியாத பாடங்களும் படிப்பித்தான். எனவே சிலவேளை பெற்றோர்கள் அறிய வந்தாலும், அது ஒரு சாட்டாகவும் அவர்களுக்கு இருந்தது. ஆனால் அது தான் அவர்களை மேலும் இறுக்கமாக இணைத்ததும் எனலாம்.   "இசை போன்ற மெல்லிய  மொழி இடைவெளி குறைக்க வழி சமைக்க   இறைவி நேரே வந்தது போல  இதயம் மகிழ பாடம் புகட்டினான்! "   "இருசொல் இணைதல் புணர்ச்சி என்று  இரண்டு பொருள்பட இலக்கணம் சொல்லி  இங்கிதமாய் விளக்கி அவளைத் தழுவி  இருவரும் கூடி இன்பம் கண்டனர்!"   மறுமொழியும் வர, அவன் மேற்படிப்புக்கு வெளிநாடு போய்விட்டான் அதன் பிறகு தான் அவளின் வாழ்வில் வெறுமை தோன்ற தொடங்கியது. அவளின் உடலிலும் மாற்றம் தென்பட்டது. அவள் இப்ப ஒரு குழந்தைக்கு தாயென மருத்துவரும் உறுதி செய்து விட்டனர். தந்தை அந்த முதலாளியிடம் நடந்தவற்றை சொல்லி, மகளை மருமகளாக ஏற்கும் படி மற்றும் அவரின் மகனின் விலாசத்தை எடுத்தால், அவனுக்கு செய்தி அனுப்பலாம் என்று போனவர்தான், பின் வீடு திரும்பவே இல்லை. அன்று அங்கு போர்க்காலம். ஆகவே உண்மையில் என்ன நடந்தது என்று யாருக்கும் தெரியாது? அண்ணனும் தந்தையை தேட போனவர், இடையில் ஷெல் பட்டு இறந்துவிட்டார். இப்ப தான் அவள் தன் அப்பாவி தனத்தை உணர்ந்தாள். முன்பு, அவனுடன் பழகும் பொழுது  தைரியமாக இருந்து இருந்தால், இந்த நிலை வந்திருக்காது. நம்பி கெட்டது அவளை வருத்தியது. "சாது மிரண்டால் காடு கொள்ளாது". அவள் துணிந்து விட்டாள். தைரியம் பெற்றாள்.    அவளின் கதை அந்த ஊரில் பரவத் தொடங்கியது. அந்த முதலாளி பணத்தை கொடுத்து சமாளிக்க எத்தனித்தார். கருவை கலைக்கும் படியும் வேண்டினார். ஆனால் அவள் இப்ப தைரியமானாள். அதை ஏற்கவில்லை. அவளின் ஒரே குரல், இவன் உங்கள் பேரன், உங்க மகனின் மகன். அதில் மாற்றம் இல்லை. எந்த பேச்சுக்கும் இனி இடமில்லை, பணத்தை அவள் மதிக்கவே இல்லை. தூக்கி எறிந்தாள். தந்தை, அண்ணன் இருவரையும் இழந்துவிட்டாள். இனி தானே தன் வாழ்வை தீர்க்க தைரியமாக புறப்பட்டாள்!    கண்ணகி அரசசபையில் தைரியம் கொண்டு போனது போல,    ‘தேரா மன்னா! செப்புவது உடையேன்'    ஆராய்ந்து பார்க்காத முதலாளி நான் சொல்வதைக் கேள் என, வாயும் வயிறுமாக முதலாளியின் வீட்டின் கதவில் நின்ற காவலாளியிடம் உரக்க சொன்னாள்.    "வாழ்தல் வேண்டி, ஊழ்வினை துரப்ப, சூழ் கழல் மன்னா! நின் நகர்ப் புகுந்து,"   கூலி செய்து, எம் கையையால் நாமே வாழ்வதற்காக உன் ஊருக்கு வந்தோம். ஊழ்வினை துரத்திக்கொண்டு வர வந்தோம் என்று துணிச்சலாக கூறினாள். அவளின் துணிவு, புத்திகூர்மை, அழகு, கோபத்திலும் அவளின் நளினம், உண்மையான பேச்சு சங்கரின் தாயை நன்றாகவே கவர்ந்தது. சங்கரின் தாய் அவளை உள்ளே வரும் படி அழைத்து, அங்கு முன் விறாந்தையில் இருந்த சோபாவில் அமரச் சொன்னாள். பின் சங்கரின் தந்தையுடன் எதோ கதைத்தார். அவளுக்கு ஒன்றும் புரியவில்லை. எதாவது தந்திரமோ என்று தைரியமாக, எதையும் எதிர்க்க துணிந்து நின்றாள். இந்த இடைவெளியில், அவர்களின் வேலைக்காரி காப்பி கொண்டுவந்து அவளுக்கு கொடுத்தார். ஆனால் அதை அவள் வாங்க மறுத்தார். சிற்றுண்டி பெற்று தானே இன்று இந்த நிலை என்று அவள் மனது கொதித்துக்கொண்டு இருந்தது.   "நெஞ்சே நெஞ்சே துணிந்து விடு நீதியின் கண்களை திறந்து விடு நச்சு பாம்புகள் படமெடுத்தால் அச்சம் வேண்டாம் அழித்து விடு"   "பணிந்து பணிந்து இந்த பூமி வளைந்தது குனிந்து குனிந்து குனிந்த கூனும் உடைந்தது வெள்ளி வெள்ளி காசுக்கு விற்பவன் மகனில்லை ஓர் மகனில்லை"   அவர்களுக்கு அது புரிந்துவிட்டது. தாய் அவள் அருகில் வந்து, மகனுக்கு தொலைபேசி அழைப்பு விட்டுள்ளோம். எமக்கு உண்மை தெரியாது. அது  சரியாக அறிந்ததும் , உன் பிரச்னைக்கு தீர்வு காண்போம் என்றனர். அவளின் துணிந்த பார்வை, தைரியமாக எடுத்த முடிவு, ஒரு பதிலை நோக்கி அசைவதை காண்டாள்.      சங்கரும் கொஞ்ச நேரத்தால் தொலைபேசியில் வந்தும் வராததுமாக, முதலில் மலர்விழியையே கூப்பிட்டான். அவளுடன் ஏதேதோ கதைதான். வீறாப்புடன், தைரியமாக வந்தவள், தன் வேலை முடிந்தது கண்டு, இப்ப ஒரு மணமகள் மாதிரி கால் விரலால் கொடு போட தொடங்கி விட்டாள். பெற்றோருக்கும் விளங்கிவிட்டது. சங்கரும் பின் பெற்றோருடன் எதோ பயந்து பயந்து கூறிக்கொண்டு இருந்தார். எல்லோர் முகத்திலும் நிம்மதி, மகிழ்ச்சி  நிழலிட்டிருந்தது அங்கு ஒரு சுமுக நிலையை ஏற்படுத்தியது.    "தைரியம் என்பது பயம் இல்லாதது அல்ல, அதன் மீதான வெற்றி என்பதை அவள் காண்டாள். தைரியமானவள் பயப்படாதவள் அல்ல, அந்த பயத்தை வெல்பவளே"    நன்றி     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]     
    • ஒருவர் எழுதும் கருத்துக்களை பொறுத்தே பதில் கருத்துக்களும் வரும் மற்றும்படி தனிப்பட்ட கோபதாபங்கள் எதுவும் இல்லை!
    • "என் அன்பு மகளே"     "யாயே, கண்ணினும் கடுங் காதலளே, எந்தையும், நிலன் உரப் பொறாஅன்;  ‘சீறுடி சிவப்ப, எவன், இல! குறு மகள்!  இயங்குதி! என்னும்;’யாமே,"      தாய் தன் மகளை தன் கண் மாதிரி அன்பு செலுத்துகிறாள் அப்பனோ "என் சிறு மகளே, ஏன் நடந்து உன் அழகிய காலை வருத்துகிறாய்?" என கேட்டு தவிக்கிறார். அப்படித் தான் என் அன்பு மகள் எனக்கு அன்று இருந்தாள். அவள் கடைசி பிள்ளை என்பதால் ஒரு படி மேல் அதிகமாகவே செல்லமாக இருந்தாள். அதன் விளைவு எப்படி வரும் அன்று எனக்கு புரியவில்லை.      வீட்டில் எப்பவும் அவள் செல்லப்பிள்ளை தான். எனவே அவள் இட்டது தான் சட்டம். என்றாலும் அவளுக்கு என்று ஒரு தனிக் குணமும் உண்டு. அது தான் அவளை மேலும் மேலும் செல்லப்பிள்ளை ஆக்கியது. நல்ல புரிந்துணர்வுடன் இனிமையாக மகிழ்வாக பழகுவாள். எமக்கு ஒரு கவலை என்றால், அவளை பார்த்தாலே போய்விடும். அவளின்   குறும்புத்தனம் எவரையும் எந்த நிலையிலும் மகிழ்விக்கும்!     "உள்ளம் களிக்க உடனே சிரிக்க உதிர்மா வேண்டுமம்மா! .     துள்ளித் திரிந்து துயரை மறந்திடத் துளிமா வேண்டுமம்மா!"     அவள் இதை துள்ளி ஆடி பாடும் பொழுது எம்மை அறியாமலே கவலை பறந்திடும். அத்தனை நளினம், தானே கற்று தானே ஆடுவாள்!  அவளுக்கு என்று ஒரு பாணி / போக்கு உண்டு !! படிப்பிலும் சூரி , குழப்படி தான் கொஞ்சம் கூட, அத்துடன் பிடிவாதமும் பிடித்தவள், ஆனால் இரக்கம், அன்பு, மரியாதை எல்லாம் உண்டு. நாளும் ஓட, அவளும் பல்கலைக்கழகம் மிகச் சிறந்த பெறுபேருடன் நுழைந்தாள்.     "இருண்ட மேகஞ்ச்சுற்றி சுருண்டு சுழி எரியுன் கொண்டையாள் குழை ஏறி ஆடி நெஞ்சை சூறையாடும் விழிக் கெண்டையாள் திருந்து பூ முருக்கின் அரும்பு போலிருக்கும் இதழினால் வரிச் சிலையை போல் வளைந்து பிறையை போல் இலங்கு நுதுலினால்"     மேகங்கள் சில சுருண்டு சுழித்தது போன்ற கூந்தலுடன்..  காது வரை நீண்டு ஆடவர் மனதை கொள்ளை கொள்ளும் கெண்டை விழியுடன் ,  அழகான அரும்பை போன்ற இதழுடன், அழகிய வில்லை போல் வளைந்து மூன்றாம் பிறை திங்களை போன்று ஒளி விடும் நெற்றி உடன் அவள் திகழ்ந்தது தான் எமக்கு கொஞ்சம் அச்சத்தை கொடுத்தது. இனி அவள் மிக தூர, வேறு ஒரு நகரத்தில் உள்ள பல்கலைக்கழகம் போகப் போகிறாள். படிப்பை பற்றி பிரச்சனை இல்லை. அது அவளுடன் பிறந்தது. தனிய, அதுவும் இந்த பொங்கி பூரிக்கும் அழகுடன், தந்திரமாக சமாளிப்பாளா என்ற ஒன்று மட்டுமே கொஞ்சம் கவலை அளித்தது. காரணம் அவளுக்கு எல்லாமே நாமே செய்து, எம்மை சுற்றியே பழக்கி விட்டோம் என்பதால். அதுவும் நான் இல்லாமல் எங்கும் தனிய போனதும் இல்லை.  கையை இறுக்க பிடித்துக் கொண்டு தான் போவாள். இப்ப தான் எம் வளர்ப்பின் சில சில தவறுகள் தெரிந்தன. ஆனால் இது நேரம் கடந்த ஒன்று!     "பூக்களின் அழகை வண்டுகள் அறியும் பூங்கா முழுவதும் மயங்கி திரியும்  பூவையரின் அழகை ஆண்கள் அறிவர்  பூரிப்பு கொண்டு மயங்கி திரிவர்"      அவள் எப்படியும் பாடத்தில் கவனம் செலுத்தி, இவை எல்லாம் சமாளிப்பாள் என்று என் நெஞ்சை நானே தேற்றினேன்! . ஆனால் அவளின் சந்தேகமற்ற தூய மனம், பிள்ளைத்தனம் நிறைந்த இயல்பான குணம், இலகுவாக நம்பும் இரக்க தன்மை அவள் வாழ்வை ஏமாற்றி விளையாடி விட்டது அவள் முதலாம் ஆண்டு விடுதலையில் வந்து என் மடியில் இருந்து , என் கைகளால் தன் முகத்தை பொற்றி அழும் பொழுது தான் தெரிந்தது அவளின் வேதனை.!     ஆனால் ஒன்றை கவனித்தேன். இப்ப அவள் நாம் முன்பு கண்ட சின்னப் பிள்ளை அல்ல, அவளின் மற்றும் ஒரு குணமான பிடிவாதம், அவளை நிலைகுலைய  வைக்கவில்லை. தன்னை ஆசைகாட்டி மோசம் செய்தவன், அதே பல்கலைக்கழக, அதே மருத்துவ பீடத்தின் மூன்றாம் வகுப்பு மாணவன். பகிடிவதையில் நண்பர்களாகி, காலப்போக்கில் அவனை உண்மையான காதலன் என் அவள் நம்பியதை, அவன் தந்திரமாக தன் ஆசையை தீர்க்க பாவித்துள்ளான் என்பதை அறிந்தோம். ஆனால், 'நான் பார்த்துக்கொள்வேன்' , கவலை வேண்டாம் அப்பா , அவனை என்னால் திருத்தமுடியும். அவனே உங்கள் மருமகன், எனவே கவலை வேண்டாம் என தைரியமாக மடியில் இருந்து இறங்கி படுக்க போனாள்.     “கற்பும் காமமும் நாற்பால் ஒழுக்கமும் நல்லிதின் புரையும் விருந்து புறந்தருதலும் சுற்றம் ஓம்பலும் பிறவு மன்ன கிழவோள் மாண்புகள்”        என்று கற்பு நிலை, ஒழுக்க நிலை, நன்னெறி, பிறரை உபசரித்தல் பெண்ணின் கடமை என்றனர் அன்று. ஆனால் என் மகள் தான் நினைத்தவனையே , தன்னை ஏமாறியவனையே திருத்தி மனிதனாக்கி , தன் துணைவனாகவும் மாற்ற புறப்பட்டாள்!. கட்டாயம் அவள் வெற்றி பெறுவாள். அவளின் துணிவு, இன்றைய அனுபவம், வாழ்வை அலசும் திறன், இப்ப அவள் செல்லப் பிள்ளை அல்ல, ஒரு முழுமையான அறிவு பிள்ளை!     என் அன்பு மகளே,  தந்தைக்கு உபதேசம் செய்தான் என்கிறது ஒரு புராணம். அது கட்டுக்கதையாக இருந்தாலும், தந்தை மகன் முன் சீடனாகி உபதேசம் கேட்பது என்பது அகந்தை துறந்து மகனின் கருத்து என்ன என்று அறிந்துகொள்ள ஒரு தந்தை தயாராகும் வாழ்க்கைத் தத்துவம் அது. இன்று குடும்பங்களில் பெரும் பிரச்னையாக இருப்பது இந்த சுய அகந்தைதான். வயதில் சிறியவர்கள் பெரியவர்களின் பேச்சைக் கேட்க வேண்டும் என்று அடம்பிடிப்பது. இன்று நீ சொல்லாமலே என் தவறை சுட்டிக்காட்டி விட்டாய். நீ இனி எனக்கு அம்மாவும் கூட! அவளுக்கு இரவு முத்தம் கொடுத்து, முத்தம் வாங்கி நித்திரைக்கு அனுப்பினேன்!      "பிரசம் கலந்த வெண்சுவைத் தீம் பால் விரி கதிர்ப் பொற்கலத்து ஒரு கை ஏந்திப், புடைப்பின் சுற்றும் பூந்தலைச் சிறு கோல் ‘உண்’ என்று ஓக்குபு புடைப்ப தெண் நீர் முத்து அரிப் பொற்சிலம்பு ஒலிப்பத் தத்துற்று,  5 அரி நரைக் கூந்தல் செம் முது செவிலியர் பரி மெலிந்து ஒழிய பந்தர் ஓடி, ஏவல் மறுக்கும் சிறு விளையாட்டி அறிவும் ஒழுக்கமும் யாண்டு உணர்ந்தனள் கொல்"     தேன் கலந்த வெண்மையான சுவையான இனிய பாலைக் கொண்ட விரிந்த ஒளியையுடைய பொற்கலத்தை ஒரு கையில் ஏந்தியவண்ணம், மென்மையான நுனியைக் கொண்ட சிறிய கோலை உயர்த்தி என் மகளை அச்சமூட்டிக் ‘இதைக் குடி’ என்று அவளுடைய மென்மையாக நரைத்த கூந்தலையுடைய செவ்விதான முது செவிலித் தாயார்கள் கூறவும், அதனை மறுத்துத் தெளிந்த நீரின் முத்துக்கள் பரலாக உள்ள தன்னுடைய பொற்சிலம்புகள் ஒலிக்கப் பாய்ந்து அவள் ஓட, நடைத் தளர்ந்து அவள் பின்னால் ஓட முடியாமல் அவர்கள் இருக்க, அவள் எங்கள் இல்லத்திற்கு முன் இருக்கும் பந்தலுக்கு ஓடி விடுவாள்.  இவ்வாறு பாலைக் குடிக்க மறுத்த என்னுடைய விளையாட்டுப் பெண், இப்பொழுது எவ்வாறு அறிவையும் ஒழுக்கத்தையும் அறிந்தாள்? எனக்கு இன்னும் வியப்பாகவே அது இருக்கிறது. அந்த வியப்பான பெண் தான் என் அன்பு மகளே !!      [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]     
    • எல்லா துன்பங்களில் இருந்தும் மீண்டுவர இறைவனை பிரார்த்திக்கிறேன் பையா 🙏 எங்களுக்கும் லண்டனிலை ஸ்லீப்பர் செல்ஸ் இருக்கினம் தெரியுமோ 😜
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.