Jump to content

ஆயிரத்தில் ஒருவன்: ஈழப் போராட்டத்தின் நுணுக்கமான பதிவு: நிழலி


Recommended Posts

ஐயா செல்வராகவன் பாண்டியட்ட பரம்பரையில வந்தவரோ என்னமோ... நிழலியிண்ட, மிச்ச ஆக்களிண்ட விமர்சனங்களையும் பார்த்தன். உந்த முள்ளிவாய்க்காலை கொண்டுபோய் எப்பிடி உதுக்கை கொழுவிவிட்டு இருக்கிறீனம் எண்டுற விசயம் விளங்க இல்லை. அது ஐயா செல்வராகவனிண்ட கற்பனையோ இல்லாட்டிக்கு ரசிகப்பெருமக்களிண்ட கற்பனையோ.

Link to comment
Share on other sites

  • Replies 65
  • Created
  • Last Reply

உந்த முள்ளிவாய்க்காலை கொண்டுபோய் எப்பிடி உதுக்கை கொழுவிவிட்டு இருக்கிறீனம

கதாநாயகன் புலி பச்சைகுத்தியிருக்கிறான்,சோழரும் புலிக்கொடி வைச்சிருக்கினம்,அப்ப இரண்டையும் கொழுவி விடுகிரதுதானே

Link to comment
Share on other sites

எழுபது எண்பதுகளில் டமில் நாட்டிலிருந்து வந்த அத்தனை திரைப்படங்களும் ஓகோவென்றுதான் ஓடின--அதில் குப்பைகளும் அடங்கும்.அது பரவாயில்லை ஆனால் வெளி நாட்டில் மூன்று தசாப்தங்களுக்கு மேலாக வாழ்ந்துகொண்டு இன்னும் இந்த மூன்றாம்தர சினிமாவை பார்க்கின்றோமே அதுதான் கவலைக்குரிய விடயம்.

Link to comment
Share on other sites

நிழலியின் பார்வை, கருத்துக்கள் ஏற்புடையவை. பாடல் நன்றாக இருந்தது. எமது நாட்டு சூழ்நிலைக்கு எதேச்சையாக, ஓரளவு பொருந்துவதாக உள்ளது.

கடந்த 20 வருடங்களாக நான் படம் பார்ப்பது மிகமிகக் குறைவெனினும், இந்தப்படம் வித்தியாசமான முயற்சி.

தினமும் பலருடன் பழகி, பலரது பிரச்சனைகளையும் அறிந்து வருபவன் என்ற முறையில், பெரும்பாலான தமிழ் படங்கள் தமிழ்நாட்டிலும், ஈழத்திலும் பலரின், குறிப்பாக இளையவர்களின் வாழ்க்கையை சீரழித்து வருவதை பார்த்துள்ளேன், பார்த்து வருகிறேன்.

சினிமா மிகவும் சக்தி வாய்ந்த ஊடகம். மனதில் ஆழமாக கருத்துக்களை பதிக்கவல்லது. நல்ல கருத்துக்களை பதித்து வந்தால் நல்ல சமுதாயமும், தீய கருத்துக்களை பதித்து வந்தால் தீய சமுதாயமும், கீழ்த்தரமான கருத்துக்களால் கீழ்தர சமுதாயமும் உருவாகிவிடும்.

இன்றைய தமிழ் நாட்டு தமிழரின் உணர்வற்ற, கற்பனையில் வாழும் நிலைக்கு இந்த கீழ்த்தரமான தமிழ் சினிமா உலகம் தான் காரணம்.

தமிழ் சினிமா துறையை சேர்ந்த 95 % ஆனவர்கள் உருப்படியான ஒரு தலைப்பை - நேர்த்தியாக, செழுமையாக, தேவையற்ற பொய்மை இன்றி, திரிவு இன்றி, யதார்த்தபூர்வமாக அமைக்கத் தெரியாதவர்கள். விரச, காம - கவர்ச்சி காட்சிகள், பேச்சுகள், பாடல்கள் மூலம் மனிதனின் காம உணர்வை - போதையை தட்டியெழுப்பி, அவனை அதற்கு அடிமையாக்கி, அவனை சினிமாவால் கட்டிப்போட்டு பிழைப்பு நடத்துபவர்கள். இதன் மூலம் தமிழர்களின் வீர, நேர்மை ... உணர்வுகளையும், மனவுறுதியையும், நல்லொழுக்கத்தையும் சிதைத்து தமிழினத்தை பலமிழக்கச் செய்து வருகின்றனர்.

இதற்கு சினிமா துறைக்கு வரும் பெரும்பாலானவர்கள் கீழ்த்தரமான மனநிலையும், கீழ்த்தரமான பழக்கவழக்கங்களும் கொண்டிருப்பதுடன், காமுகர்களாகவும் இருப்பது தான். இவர்களின் பிடியிலிருந்து விடுபடும் வரை தமிழரின் எதிர்காலம் அதல பாதாளத்தை நோக்கியே செல்லும்.

ஆயிரத்தில் ஒருவன் படத்திலும் தேவையற்ற கீழ்தர கலப்புகளையும், தேவையற்ற கொடூரங்களையும் தவிர்த்திருந்தால் முழுமையாக பாராட்டியிருக்கலாம்.

Link to comment
Share on other sites

நிழலி ஆயிரத்தில் ஒருவன் வாசித்தேன். பொங்கல் படங்கள் எல்லாம் அடிபட்டுவிட்டது. படங்கள் எதுவும் நல்ல ஆக்கம் இல்லை என்றார்கள். உங்கள் கடுரைக்குப்பின் ஆயிரத்தில் ஒருவன் பார்க்க உள்ளேன். எனினும் நன்றாக எடுக்கப் படவில்லை என்பதே விமர்சகர்களின் கருத்தாக உள்ளது.

Link to comment
Share on other sites

நிழலி ஆயிரத்தில் ஒருவன் வாசித்தேன். பொங்கல் படங்கள் எல்லாம் அடிபட்டுவிட்டது. படங்கள் எதுவும் நல்ல ஆக்கம் இல்லை என்றார்கள். உங்கள் கடுரைக்குப்பின் ஆயிரத்தில் ஒருவன் பார்க்க உள்ளேன். எனினும் நன்றாக எடுக்கப் படவில்லை என்பதே விமர்சகர்களின் கருத்தாக உள்ளது.

நன்றி அண்ணா...

படத்தின் இரண்டாம் பாகத்தில் பல இடங்களில் லொஜிக் சறுக்கல்களும், பார்த்திபன் பாத்திர வடிவமைப்பை குழறுபடியாக்கியதும், ஈற்றில் படத்தின் நாயகன் கார்த்திக்கு முற்பிறப்பி ஞாபகம் போன்ற ஒன்று வருவதும் பார்வையாளர்களை மிகவும் குழப்பியுள்ளது. இந்தியாவில் (தமிழகத்தில்) இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தில் 24 நிமிடங்கள் வெட்டப்பட்டதாக அறிந்தேன்...அதில் இரண்டாவது தடவை வரும் "நில்லாடிய நிலமெங்கே" பாடலும் 'பெம்மானே.." பாடலும் அடக்கம் என்றும் அறிந்தேன்

அநேகமாக இந்த வார இறுதியில் பலர் என்னை திட்டப்போகின்றார்கள் என்பது மட்டும் உறுதி (ஏற்கனவே ஒரு பெண் யாழ் வாசகி திட்டி ஒரு மெயில் தனிப்பட்ட ரீதியில் அனுப்பியிருந்தார் :rolleyes: )

Link to comment
Share on other sites

அருமையான உணர்வுகளுக்குள் வரை போகும் ஒரு பாடல்...

http://agnicreation.com/A/Aayirathil%20Oruvan/Tamilmp3world.Com%20-%20Thaai%20Thindra%20Manne%20(Classical%20Version).mp3

பாடல் இணைப்பிற்கு நன்றி தயா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிழலி இன்று தான் எனக்கு இப் படத்தை பார்க்க கிடைத்தது ...நீங்கள் எதை வைத்து ஈழப் பிரச்சனைக்கும் சோழர்களுக்கும் முடிச்சு போட்டீர்கள் ...பார்த்திபன் முதல் தோன்றும் காட்சியில் அவ் மக்கள் அழுது கொண்டு கதைக்கும் போது நம்மவர்கள் கதைப்பது போல உள்ளதா...அல்லது அந்தப் பாட்டை வைத்தா...புலிச் சின்னத்தை பச்சை குத்தி இருப்பதாலா...

நீங்கள் சொல்கிற மாதிரி எங்கள் பிரச்சனைக்கும் இப் படத்திற்கும் சம்மந்தம் இருந்தால் ஜில் சொல்கின்ற மாதிரி செல்வராகவன் தமிழரை அவமானப்படுத்தி விட்டார் என்றே சொல்ல வேண்டும்...சில வேளை 3 வருடங்களின் படம் எடுக்க தொடங்கையில் வேறு மாதிரி எடுக்க நினைத்து முள்ளிவாய்க்கல் முடிவை பார்த்து தன்ட படத்தையும் இடை வேளைக்கு பின் சொதப்பி விட்டாரோ தெரியாது.திரும்ப தன் சொந்த நாட்டுக்கு போக வேண்டும் என நூற்றாண்டு காலமாக காத்திருக்கும் ஒரு சோழ இளவரசன் இப்படியா ஒரு பெண்ணீடம் ஏமாறுவார்...

ஈழப் பிரச்சனை இதனோடு சம்மந்தபடுத்தாமல் ஒரு தென்னிந்தியப் படம் என்ற வகையில் பார்க்கப் போனால் வித்தியாசமானதொரு படம்...ஹீரோயிசம் இல்லாத படம்...செல்வா தான் ஒரு சிறந்த டைரக்ரர் என நிருபித்து உள்ளார்...படத்தில் ஒரு காட்சியில் நடித்தவர்களில் இருந்து கதாநாயகன்,நாயகி அனைவரும் சிறந்த தேர்வு...ரீமாசென்னுக்கு சிறந்த நடிகைக்கான விருது கொடுக்க வேண்டும்.அந்த இடங்கள்,கலை பிரமிக்க வைக்கிறது.தியேட்டரில் படம் பார்த்த சில பேருக்கு படம் புரியவேயில்லை மற்றப் படங்கள் மாதிரி ஹீரோ பழி வாங்குவார் என நினைத்தார்களோ தெரியாது...

ஆனால் நிச்சயமாக பகுதி இரண்டு வரும்.

இன்று நான் பார்க்கையில் கார்த்திக்கு பழைய ஞாபகம் வாற காட்சி இல்லை வெட்டி விட்டார்கள் போல கிடக்குது...மொத்தத்தில் சிறந்த டைரக்டர் ஆன செல்வா வித்தியாசமாக படம் எடுக்க வெளிக்கிட்டு கொஞ்சம் சொதப்பிட்டார் என்பது என் கருத்து.

படம் முடிவில் கார்த்தி அந்த பிள்ளை தூக்கி வைத்திருக்கும் அந்த படத்தை பார்த்தால் நம்மட தலைவர் மாதிரி இல்லையா?

Link to comment
Share on other sites

ஆயிரத்தில் ஒருவன்: ஈழப் போராட்டத்தின் நுணுக்கமான பதிவு

நெல்லாடிய நிலமெங்கே

சொல்லாடிய அவையெங்கே

வில்லாடிய களமெங்கே

கல்லாடிய சிலையெங்கே

தாய் தின்ற மண்ணே

தாய் தின்ற மண்ணே

மு.கு

பி.கு 1:

இதனை இந்தப் பகுதியில் இணைத்தது அனைவரும் (ஆகக் குறைந்தது (ஈழத்) தமிழர்கள் ) கண்டிப்பாக பார்க்க தூண்ட வேண்டும் என்பதற்காகவே.

நான் திரையரங்கிற்கு செல்வதேயில்லை உங்களால் தூண்டப்பட்டுள்ளேன்.

Link to comment
Share on other sites

சிறந்த அலசல் .. நானும் திரையரங்கு சென்று பார்க்கிறேன் ..

Link to comment
Share on other sites

சிறந்த அலசல் .. நானும் திரையரங்கு சென்று பார்க்கிறேன் ..

போய் பாருங்கோ ஆனால் பார்த்துபோட்டு வந்து திட்டாதையுங்கோ :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படத்தை திரையரங்கில் சென்று பார்த்தேன்.படத்தில் வரும் இறுதிப்பகுதியில் வரும் சம்பவங்கள் ஈழப்போராட்டத்துடன் ஒத்துப் போகின்றன. அதாவது ஈழ இராணுவப் போராட்டம் தோல்வியடைந்த போது, தடுப்பு முகாம்களில் இருக்கும் பெண்களில் சிலர் கற்பளிக்கப்படுகிறார்கள். இளைஞர்கள் சிலர் கொல்லப்படுகிறார்கள். பலர் சித்திரவதை அனுபவிக்கிறார்கள். எனினும் எமது போராட்டம் முடியவில்லை.எமது போராட்டம் தொடரும். இதைப்போன்ற சம்பவங்கள் இப்படத்தில் வருகின்றன. கூட இருந்து குழிபறிக்கும் பாத்திரமும் இப்படத்தில் வருகிறது. செல்வராகவன் இப்படத்தை மூன்று வருடங்களாக இயக்கி வந்தார். முள்ளிவாய்க்காலுக்குப் பிறகு நடந்த சம்ப்வங்களைப் பார்த்து சிலவேளை தனது படத்திலும் தோல்வி அடைந்த இனத்துக்கு வெற்றி அடைந்த இனத்தினால் ஏற்படுத்தும் கொடுமைகளை இப்படத்தில் காண்பித்து இருக்கலாம். இப்படம் ஈழப்போராட்டம் சம்பந்தமான படமல்ல. சில சம்பவங்கள் ஈழப்போராட்டத்துடன் ஒத்துப்போகின்றன என்றே சொல்ல வேண்டும்.

விதுரன் 'செல்வராகவன் பெரிய தமிழ் இன உணர்வாளன் ' என்று இங்கே பதிந்திருக்கிறார். இப்படத்தில் 2ம் பாகத்தில் சோழர்களின் கதை வருகிறது. ஆங்கில வேற்று மொழிக்கலப்பின்றி , வெளியுலகத்தோடு தொடர்பு அற்ற வாழ்க்கையினை வாழ்பவர்களாக இப்படத்தில் இவர்கள் வருகிறார்கள். அதனால் தான் இப்படத்தில் செல்வராகவன் தூய தமிழிலில் சோழர்களின் உரையாடலை அமைத்திருக்கிறார். இதனை வைத்து செல்வராகவனைத் தமிழின உணர்வாளர் என்று சொல்ல முடியுமா?. இயக்குனர் தங்கர் பச்சான் தனது படங்களின் எழுத்துக்காட்சிகளின் போது ஆங்கிலக்கலப்பற்ற தமிழ் சொற்களையே பெரும்பாலும் உபயோகிப்பார். இயக்குனர் சீமானின் 'வாழ்த்துகள்' படத்திலும் பெரும்பாலும் ஆங்கிலக் கலப்பற்ற தமிழ் உரையாடல்களும், கதாபத்திரங்களுக்கு தூய தமிழ்ப் பெயர்களையும் சூட்டி இருந்தார். இலக்கணம் என்ற படம் சிலவருடங்களுக்கு முன்பு வந்தது. அப்படத்தில் முழுமையாக தமிழில் தான் உரையாடுவார்கள்.

இப்படத்தை திரையரங்கில் பார்க்கும் போது பல இந்தியத்தமிழர்களுக்கு 2ம் பகுதி கதை விளங்காமல் என்னையா பேசுறாங்கள் என்று தங்களுக்குள் கதைத்தது எனக்கு கேட்டது. ஆனால் ஈழத்தமிழர்கள் பலர் நகைச்சுவை உரையாடல்களை இரசித்துச் சிரித்தார்கள் (உ+ம் -லிங்க தரிசனம்). இந்தியர்களில் சிலர் , ஈழத்தமிழர்கள் ஏன் சிரிக்கிறார்கள் என்று ஈழத்தமிழர்களைத் திரும்பிப்பார்த்தார்கள். 'சோழனின் பயணம் தொடரும்.' என்ற எழுத்துடன் படம் முடிகிறது. ஒரு இந்தியத்தமிழர் 'ஏன் சோழனின் பயணம் தொடரும் என்று போட்டிருக்கிறார்கள்' என்று கேட்க , இன்னொரு இந்தியத்தமிழர் செல்வராகன் இப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கப்போகிறார்' என்று தங்களுக்குள் கதைத்ததும் எனக்குக் கேட்டது.தான் இழந்த நிலம் மீட்கும் வரை ஓயாது சோழர்கள் தொடர்வார்கள் என்பதை அவ்விந்தியர்களுக்கு விளங்கவில்லை.

இப்படத்தை திரையரங்கில் பார்த்தால் தான் இரசிக்க முடியும். இப்படம் ஆங்கிலப்படங்கள் போல சிறப்பாக எடுக்கப்பட்டதே என்று தான் சொல்ல வேண்டும். இறுதிக்காட்சிகளில் சோழர் இனம் தோற்கடிக்கப்படும் போது, முள்ளிவாய்க்காலில் எம்மினம் அழிக்கப்பட்டபோதும், அதன் பிறகும் ஏற்பட்ட சோகம் இப்படத்தைப் பார்க்கும் போது ஏற்பட்டது. நல்ல படம் பார்த்த திருப்பி ஏற்பட்டது.

Link to comment
Share on other sites

தமிழர்களது வரலாற்றினதும் நிகழ்காலத்தினதும் அதிகாரத்தின் எதிர்மறைச் செயற்பாடுகளை கற்பனைக்குள் திணித்து பரவசமாக கட்சிப்படுத்தப்பட்டிருக்கினறது. முற்காலத்தில் சேரசோழ பாண்டியர்கள் தமக்குள் சண்டையிட்டு மூக்கறுத்து முலையறுத்து தலையறுத்துக் கிடந்த வரலாற்றின் நீட்சி பேசப்படுகின்றது. எவன் அதிகாரத்தில் இருந்தானோ அவனது வம்சாவழிகளும் அவனை அண்டிப்பிழைத்தவர்களும் இன்றயகாலத்திலும் அதிகாரத்துடன் சம்மந்தப்பட்டவர்களாக இருக்கின்றார்கள். அவர்களது அதிகாரவெறி என்றைக்கும் மாறாது என்பதையே இந்தக் கற்பனைகள் அதிகளவு பேசுகின்றது.

வறுமைப்பட்ட மக்கள் காட்டுவாசிகள் ஈவிரக்கமின்றி கொல்லப்படுகின்றனர். வரலாறு நீளவும் இது நடந்தேறுகின்றது. இன்றும் அதுவே இந்திய அதிகாரவர்க்கத்தால் அரங்கேறுகின்றது. பாண்டியன் சோழன் என்ற இரண்டு தமிழ்மன்னர்களுக்கிடையிலான பகை பழிதீர்த்தல் கொல்லுதல் அடிமைகளை ஆழுதல் போன்றன தொடர்கின்றது.

தமிழர்களுக்குள் நடக்கும் உள்கலவரங்கள் போர்கள் பழிதீர்த்தல் போன்றவைகளை வரலாறாகப்பேசும் கலிங்கத்துப்பரணிகள் புறநாநூறு அகநாநூறு என்ற சுவடுகள் வரிசையில் அதே விசயத்தை இக்கால பரவசத்துடன் இந்தப் படம் பேசுகின்றது. மாற்றம் எதுவும் இல்லை.

தமிழர்களுக்குள் நடந்த சண்டைகளுடன் நகரும் இந்த வரலாற்றில் வானுயர்ந்த திருத்தலங்கள் அணைக்கட்டுகள் பெருமளவு விவசாயம் நாகரீகம் மொழிவளர்ப்பு இலக்கியம் என சாதகமான பக்கங்களை சாதகமாக நாம் என்றும் ஆராய்பவர்கள் இல்லை. நம் பழிதீர்பதற்காகவே அதை ஆராய்கின்றோம். இந்தப் படத்தின் தொல்பொருள் ஆய்வு என்பது ஒரு பழிதீர்க்கும் பழைய பகைமைக்காக பயன்படுகின்றது. வரலாற்றை திருப்பி படித்து நாம் திருந்தும் சாதி இல்லை மாறாக எமது எதிர்மறைப்பக்கங்களை புதிப்பிற்கும் சாதிகளாக இருக்கின்றோம்.

சேர சோழ பாண்டியர்கள் மற்றும் பல குறுநில மன்னர்கள் இவர்களுக்கிடையிலான மோதல்கள் மாறாத பழி பகை வஞ்சம் இறுதியில் எவனிடமும் அரசும் இல்லை ஆட்சியும் இல்லை. கட்டிய திருத்தலங்கள் சொந்தமும் இல்லை. காவிரியில் தண்ணியும் இல்லை விவசாயமும் இல்லை. பலதை இது நினைவு படுத்துகின்றது. எமக்குள்ளும் முப்பது இயக்கங்கள் மோதல்கள் இறுதியில் கோமணமும் இல்லை. ஆனால் பகை இன்னும் இருக்கின்றது. போட்டுத் தள்ளவேண்டும் என்ற கணக்குக்குக்குள் சிலர் எப்பவும் இருக்கின்றார்கள்.

அதிகாரத்தின் வெறியாட்டம் ஈழத்து நிகழ்வுகளை நினைவுபடுத்துகின்றது. எமக்கு இந்த உணர்வு ஏற்படுவது இயல்பாக நடக்கின்றது.

http://www.youtube.com/watch?v=xtwxs6djzlc&feature=related

செல்வராகவன் தோண்டினால் என்ன எவர் தோண்டினால் என்ன பானையில் உள்ளது தான் அகப்பையில் வரும். சிலர் சோற்றுப்பானைக்குள் தோண்டி வேறு எதையோ எடுப்பார்கள் ஆனால் செல்வராகவன் அந்தக்காலத்து சோற்றுப் பானையில் இந்தக்காலத்திலும் சோற்றையே எடுத்திருக்கின்றார்.

http://www.youtube.com/watch?v=CUfuAFDczB0

இந்தப்படம் குறித்த எனது பார்வையிது.

Link to comment
Share on other sites

சுகனுடைய பார்வை இந்த திரைப்படத்தின் இன்னுமொரு கோணத்தினை அலசுகின்றது.

அதிகாரத்துக்கான போட்டியில் தன் இருப்பையும், வரலாற்றையும், மண்ணையும், உரிமைகளையும் இழக்கும் தமிழர்களின் வரலாற்றினை பேசும் கோணமும் அதே விதத்தில் ஈழத்தின் இன்றைய விடுதலைப் போராட்டமும் அழிந்து போனதை சமாந்திரமாக பார்க்கும் சுகனின் பார்வை வித்தியாசமாக ஆனால் யதார்த்த பூர்வமாக இருக்கின்றது. பகையும், பழியுமாகவே போகும் புறநானூற்று தமிழர்களின் வரலாற்றின் போக்கில்தான் நாம் இன்றும் பயணிப்பதை உணரும் போது எம் தோல்விகளின் வித்து நூற்றாண்டுகளிற்கு முன்னமே முளைவிட்டுள்ளது அதிர்ச்சியாக உறைக்கின்றது

Link to comment
Share on other sites

:lol: பி.கு 2:

திரைப் படத்தின் இறுதியில்இ கொல்லப்பட்ட தலைவனின் உடலை மிச்சமிருப்பவர்கள் எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் அடக்கம் செய்வதை காணும் போதுஇ நெஞ்செங்கும் ஒரு குற்ற உணர்வு வந்து அடைக்கின்றது

நிழலி எல்லாம் சரிதான் பி.கு2 க்குரிய விளக்கத்தினை விலாவாரியாக விளக்கவும் தாங்கள் பி.கு.2 இன் மூலம் சொல்லவருவதுதான் என்ன?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த படத்தில் எனக்கு சில சந்தேகங்கள்;

சோழர்கள் எல்லாரையும் ஏன் கறுப்பாக காட்டினார்கள் விதி விலக்கு மகராணியும் கார்த்தியும்...

பிரதாப்பொத்தன் என்ன ஆனார்...

ரீமாசென் செய்தி அனுப்பியவுடன் படைகள் வந்திறங்கியது எண்டால் ஏன் முதலே இவர்கள் விமானத்திலே தேடி இருக்கலாமே...பிரதாப் முதலே தனியே இவ்வளவு தடையை தாண்டி எவ்வாறு வந்தார்...

காட்டுக்குள் ஒளித்து வாழ்ந்த அந்த மக்களுக்கு வேண்டுமானால் நவீன போர் தந்திர முறை தெரியாமல் இருந்திருக்கலாம் ஆனால் கார்த்திக்கு தெரியும் அப்படி இருந்தும் எப்படி போருக்கு கூட்டி சென்றார்[பார்த்திபன் கூட இந்த போர்க்களத்திற்கு என்ன பெயர் எனக் கேட்பாரே]

கார்த்தியை சோழர்கள் பிடித்ததுமே சொல்லியிருக்கலாமே நான் தான் சோழ ஒற்றன் என ஏன் சொல்லவில்லை!

இப்படி பல ஓட்டைகள் இந்தப் பட‌த்தில்.

Link to comment
Share on other sites

ஆனால் இந்தத் திரைப்படம் எத்தனை பேரைச் சேரும் என்பது கவலைக்குரிய கேள்வி. நான் இன்று பார்க்கும் போது திரையரங்கு எங்கும் சலிப்பான குரல்களையும், 'எப்படா படம் முடியும்' என்ற சில குரல்களையும் கேட்க முடிந்தது. வேட்டைக்காரன் போன்ற நாலாம்தர சினிமாக்களை வரவேற்கும் ஒரு சமூகத்தில் இத்தகைய படங்கள் வெற்றி பெற்றால், அதுவே பெரும் சாதனை

தமிழர் எதையுமே எளிதில் மறந்து விடுவர்....

Link to comment
Share on other sites

இந்த படத்தில் எனக்கு சில சந்தேகங்கள்;

சோழர்கள் எல்லாரையும் ஏன் கறுப்பாக காட்டினார்கள் விதி விலக்கு மகராணியும் கார்த்தியும்...

பிரதாப்பொத்தன் என்ன ஆனார்...

ரீமாசென் செய்தி அனுப்பியவுடன் படைகள் வந்திறங்கியது எண்டால் ஏன் முதலே இவர்கள் விமானத்திலே தேடி இருக்கலாமே...பிரதாப் முதலே தனியே இவ்வளவு தடையை தாண்டி எவ்வாறு வந்தார்...

காட்டுக்குள் ஒளித்து வாழ்ந்த அந்த மக்களுக்கு வேண்டுமானால் நவீன போர் தந்திர முறை தெரியாமல் இருந்திருக்கலாம் ஆனால் கார்த்திக்கு தெரியும் அப்படி இருந்தும் எப்படி போருக்கு கூட்டி சென்றார்[பார்த்திபன் கூட இந்த போர்க்களத்திற்கு என்ன பெயர் எனக் கேட்பாரே]

கார்த்தியை சோழர்கள் பிடித்ததுமே சொல்லியிருக்கலாமே நான் தான் சோழ ஒற்றன் என ஏன் சொல்லவில்லை!

இப்படி பல ஓட்டைகள் இந்தப் பட‌த்தில்.

நல்லதை மட்டும் பாப்பமன்... ஏன் குறைகளை சுட்டிகாட்டுவான்?

போர்க்களத்திற்கு = போர்க்கலம் (weapon)

ரீமாசென் செய்தி அனுப்பியவுடன் படைகள் வந்திறங்கியது எண்டால் ஏன் முதலே இவர்கள் விமானத்திலே தேடி இருக்கலாமே...பிரதாப் முதலே தனியே இவ்வளவு தடையை தாண்டி எவ்வாறு வந்தார்...

எமது கதையும் இது தானே... உள்ளிருந்து செய்தி வந்தவுடன் தானே சிங்களத்துக்கு அடிக்கலாம் எண்ட துணிவு வந்தது...

கார்த்திக்கு தெரியும் அப்படி இருந்தும் எப்படி போருக்கு கூட்டி சென்றார்

போகாமல்? ஒளிந்து வாழ்வதோ?

ஒருவேளை இரசாயண ஆயுதம் பற்றி தலைவருக்கு பொட்டு கூறவில்லையோ?? :P

Link to comment
Share on other sites

பிள்ளையார் பிடிக்க போய் குரங்கான கதைபோல் தான் உள்ளது. எனக்கென்னவோ படம் எடுக்க தொடங்கிய பின் அடிக்கடி மாற்றங்களை செய்திருக்கின்றார் போன்றொரு பிரமை,படத்தில் ஆங்காங்கே தொடர்பு விட்டது போல் ஒரு உணர்வு.படம் துவங்கும் போது சீட் நுனிக்கு கொண்டு போனதும் பின் இடைவேளை வரை அந்தபிரமாண்டம் தொடர்ந்ததும் உண்மை.கார்த்தி,ரீமா சென்,அண்ட்ரியா மூவரின் கதாபாத்திரமும் மிக அழகு,அவர்களும் நன்கு நடித்திருந்தார்கள்.கொடுத்து வைத்த கார்த்தி கொமெடி வேறு நன்றாக செய்திருந்தார்.இடைவேளை வந்து பார்திபனின் வரவுடன் மகா குழப்பம்.மேக் அப் தொடக்கம் வன்முறை வரை அதிகப்படுத்தி விட்டார் செல்வா. கடைசியில் மழையும் விட்ட பாடில்லை படமும் முடிந்த பாடில்லை என்றமாதிரி போய்விட்டது.

நல்ல ஒரு படத்தை தேவை இல்லாமல் சொதப்பி விட்டார்.

இப்படியான பிழைகள் பல தமிழ் படங்களில் உண்டு. கே ராம்,குணா,ஆளவந்தான் போன்றவை

பெரும்பாலும் ஆங்கில படங்களில் இந்த தவறுகள் நடப்பதில்லை மிக தெளிவாக படம் தொடங்கி முடியும்.அவதார்,கிளாடியேற்றர்,லாரென்ஸ் ஒf அரேபியா இப்படியே பல படங்கள் பட்டியலிடலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் படம் ஈழப்போரட்டத்தை மையப்படுத்தி என்பது நம்பக் கூடியதாக இல்லை. அப்படியான கதை அர்த்தமும் கிடையாது.

ஆங்கிலப்படம் ஒன்றின் தழுவல் என்கின்றார்கள். ஆனால் அது எப்படி எடை போடுகின்றார்கள் என்பது புரியவில்லை. தமிழ் சினிமாவில் ஒருவன் மாதிரி என்னுமொருவன் இருப்பானாம். அதனால் குழப்பங்கள் ஏற்படுமாம். பிறகு உண்மை தெரியுமாம். சுபம் என்ற மாதிரியான கதைகளை எத்தனையைக் கண்டிருப்போம், எம்ஜிஆர் காலம் முதல் ஜுன்ஸ், வேல் என்று ஒரே அடிப்படைக் கதையை வைத்து ஏமாற்றுவது என்று தழுவல் இல்லை.... இதில் என்ன வித்தியாசம் கண்டார்கள்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அனைவரினதும் கருத்தை வாசித்தேன். நன்று....

இவர்(செல்வராகவன்) இப் படத்தை ஈழபோராட்டத்துடன் தொடர்புபடுத்தி எடுத்திருப்பதாக அதிகமானவர்கள் சொல்கின்றனர். ஆனாலும் அவர் ஈழபோராட்டத்தை பற்றி எடுப்பதாக இருப்பின் இன்னும் அட்புதமாக எடுத்திருக்க முடியும். அவர் தேவையில்லாமல் சேர்த்த காட்சிகளின் மூலம் படத்தை சிதைத்துவிட்டார். அவர் தன் படங்களில் ஆபாசமான காட்சிகள் வருவதை மிகவும் விரும்புகிறார் போலும். அதிகளவான காட்சிகள்....

ரீமாசென் பங்குகொள்ளும் காட்சிகள்..... சிறுநீர் கழிப்பது, பார்தீபனுடன் உறவுகொள்ள முயற்சிப்பது. அவ்வாறான காட்சிகள்.

சும்மா ஈழதமிழர் கதையை எடுத்தார் என்பதற்காக எல்லாவற்றையும் அங்கீகரிக்ககூடாது. அவர் எடுத்த முறைமை பிளை...

இருப்பினும் படத்தின் அனைத்து விதமான தொழில்நுட்பமும் சிறந்தது. ஒளிபதிவு, கணணி தொழில்நுட்பம், இசை அனைத்தும் அருமை.

இங்கே கருத்து தெரிவித்தவர்களில் பலர் நரமாமிசம், பசி, இரைச்சல்(பழைய ஊரில்) போன்றவற்றில் லோஜிக் போன்றவற்றை கதைக்கின்றனர். ஆனால் மற்றையவற்றில் நிராகரிக்கின்றனர்.

இது போன்ற படங்களை நம்மவர் பார்பதே அரிது. அதிலும் இதிலுள்ள ஆபாச காட்சிகளினால் நம்மவர் பார்பது அரிதாகவே இருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையின் பிரபல பதிவரும் வானொலி அறிவிப்பாளருமான லோசன் எழுதிய இத் திரைப் படத்திற்கான விமர்சனத்தின் ஒரு பகுதி..நன்றி லோசன்.

படத்தின் கடைசிக் கட்டங்களின் விஷயங்கள்,விளக்கங்களுக்கு வருகிறேன்..

ஈழப்போரின் கடைசிக் கட்டங்களில் நடந்த அவலங்களைத் தான் இயக்குனர் சோழர்கள் இந்திய இராணுவத்தால் கைது செய்யப்பட்ட பின்னர் நடக்கும் அழிவுகளும் அழிப்புக்களும் காட்டப்படுவதாக ஒரு சாரார் சொல்லிவருகின்றனர்.

எனினும் இயக்குனர் செல்வராகவன் ஒரு பேட்டியில் ஈழப்போரின் இறுதிக்கட்டத்துக்கு முன்னதாகவே தான் இந்தக் காட்சிகளை எடுத்து முடித்துவிட்டதாகக் கூறியதை ஆதாரமாக வைத்துக் கொண்டு இல்லை இது தற்செயல் தான்.இதுக்கும் அதுக்கும் சம்பந்தமில்லை என்று இன்னும் ஒரு சாரார் கூறுகின்றனர்.

செல்வராகவன் பொய் சொல்கிறார் எனபதை விட சிக்கல்,சர்ச்சைகளை தவிர்த்துக்கொள்ள விரும்புகிறார் என்ற கோணத்தில் நோக்கலாமே..

எனினும் ஆழமாகவும்,அனுபவ ரீதியாகவும் பார்த்தால்...

இதை ஒருவகை உருவாக,எடுத்துக்காட்டு விமர்சனப் படமாக்கலாகவே நான் காண்கிறேன்.

புலிக்கொடி உடைய சோழர்கள் இலங்கையின் வடபால் தமிழராகக் காட்டப்பட்டால்.. மன்னர் யார் என்ற கேள்விக்கு இடமில்லை.

சோழர்கள் குகையில் அவலவாழ்வு வாழ்வது,மன்னரைப் பலர் விமர்சிக்கவும்,அவருடன் மோதிக்கொள்ளவும் முனைவது,தங்கள் பஞ்சம்,வறுமை பற்றி மன்னர் அறியாதுள்ளாரே எனப் புலம்புவது எல்லாம் உள்ளக விமர்சனங்கள்.

கடைசிக்கால ஈழப் போர் பற்றி எழுந்த விமர்சனங்கள் அனைவரும் அறிந்தவையே..

ரத்தம்,பலி,சித்திரவதைகள்,எதிரிகள்,ஒற்றர்கள் ஈவிரக்கமின்றி கொலை செய்யப்படல்,சொந்த மக்கள் காட்டும் பயத்துடன் கூடிய மரியாதை,க்ளாடியேட்டர் பாணியிலான வீர விளையாட்டுடன் கூடிய வதை என்று குரூரமாக காட்டப்படும் அனைத்துமே ஒருவிதமான மாற்றுக்கருத்துடனான உருவாக விமர்சனங்கள் என்றே எடுத்துக் கொள்ளவேண்டியதாயுள்ளது.

அது சோழர்களுக்கு என எடுத்துக் கொண்டாலும் சரி, ஈழப்பக்கம் என்றாலும் சரி,அடக்குமுறைகளுக்குள்ளான,ஒடுங்கிவாழும் ஒரு சமூகத்தின் வன்மம் கலந்த குரூர உணர்வுகள் என எடுத்துக்கொள்ளவேண்டியது தான்.

ராஜகுரு நோய்வாய்ப்பட்ட பின்னர் மன்னர் ஏமாந்துபோவது

சோழ மக்கள் விரைவில் தஞ்சை புறப்படுவதாக மன்னர் அறிவிக்கும் நேரத்தில், 'இத்தனை நாளாக என்னைப் பார்த்து நீங்களும்,உங்களைப் பார்த்து நானும் மிரண்டு கிடந்த காலம் போகட்டும்' என்னும் இடம்,

யுத்தத்தில் பாரம்பரிய முறையில் சோழர்களும், இந்தியப் படை துப்பாக்கிகள்,குண்டுகளோடு மோதுவதும்..

நீரில் விஷம் கலந்து சோழர்களை சாகடிப்பது.. (விஷ வாயு தாக்குதலை யாரும் மறந்திருக்க மாட்டோம் தானே)

படத்தில் வரும் இந்தியபடைகள் தாக்குதலுக்கு முன்பதாக ஆகாய மார்க்கமாக 'இந்தியாவிலிருந்து' மேலதிக துருப்புக்களை அழைப்பது..

இந்த இடங்கள் மூலமாக இயக்குனர் காட்டுவது என்ன?

சோழர் படை தோற்கடிக்கப்பட்டு மன்னர்,தூதுவானாக மாறிப்போன கார்த்தி, சோழ மக்கள்,பெண்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு அடிமைகளாக்கப்பட்டு துன்புறுத்தப்படும் இடத்தைப் பாருங்கள்.. இட அமைப்பு..

ஆறு,கடல்,தீவு சேர்ந்தது போன்ற ஒரு நில அமைப்பு..

முள்ளிவாய்க்கால்,நந்திக்கடல் ஞாபகம் யாருக்கும் வருமே..

பாலியல் வன்முறைகள்,கொத்துக் கொத்தாய் உயிர்ப்பலி நிகழ்தல்..

சோழ மன்னன்/தலைவன் அடித்துக் கொள்ளப்படும் இடத்தில் கூட,அவன் கடல் பக்கமாக நகர்ந்து சென்று மரிக்கும் அந்தக் கணங்கள்..கடலிலே தங்களை ஏற்றிக் செல்ல வரும் கப்பல்கள் அவன் மனக்கண்ணில் விரிகின்றன.. நம்ப வைக்கப்பட்டு எமாற்றப்பட்டோமே என்ற வலியுடன்,இயலாமையுடன் அவன் வீழ்ந்து மடிகின்றான்..

அப்போதும் அவன் தலையிலும்,கண்ணுக்கு மேலே நெற்றியிலும் இரத்தக் காயங்கள்.. ஏதோ ஒரு ஞாபகம் உங்களில் ஒரு சிலருக்காவது வரவில்லையா?

எனக்கு மிக வலித்தது..

இடைவேளைக்குப் பிறகு கையில் வைத்திருந்த மிக்சர்,கொரிப்பான்கள் கூட உண்ண முடியாமல் அருகில் வைத்துவிட்டேன்..

இறந்த தங்கள் மன்னன் உடல் தாங்கி வீரர்கள் அணியணியாய் நீருக்குள்ளே இறங்கும்போது பின்னணியில் ஒலிக்கும் பெம்மானே பாடலின் பொய் வா ஏந்தலே வரிகள் ஓலமாய் நெஞ்சுக்குள்ளே இன்னும் எதிரொலிக்கின்றன..

மன்னன் மகன் ஒருவனும், தூதுவனாய் வந்தவனும் அல்லது தளபதி எனக் கருதப்படக் கூடியவனும் மட்டும் தப்புவதாக இயக்குனர் காட்டுவது நம்பிக்கைக்கான ஒரு தூண்டுதாலா?

சோழன் பயணம் தொடரும் என்பது பலரின் மனதில் இன்னும் இருக்கும் விழுந்துவிடா நம்பிக்கை.அதை ஏமாற்றிவிடாமல் இருக்க செல்வா முனைந்துள்ளாரா?

மன்னன் முடிந்தாலும் மண்ணுக்கான தேடல் முடியா என்பதா அவர் சொல்லும் கருத்து?

இது உண்மையிலேயே ஈழத்துப் போரின் மீதான இயக்குனரின் வாசிப்பாக இருக்குமேயானால்,அவர் இத்தனை விஷயங்களை ஆழமாகப் பார்க்க அவருடன் இணைந்து பணியாற்றிய ஒருவரோ சிலரோ இந்த விஷயங்களில் ஆழ்ந்த அனுபவம்,அறிவு உடையவராக இருந்திருக்க வேண்டும்.

இயக்குனர் இதை வர்த்தக நோக்கோடு கபடமாக அணுகவில்லை.அப்படி அவர் விரும்பியிருந்தால் முழு மசாலாக் குப்பையாக்கி,மன்னரைக் கூட உயிரோடு தப்ப விட்டோ,சோழ நாட்டை வென்றெடுத்து புலிக்கொடி பறக்கிறது எனக் காட்டி உசுப்பேற்றி இருக்கலாம்.

எனவே செல்வராகவனின் நேர்மை பிடித்திருக்கிறது.

செல்வராகவனின் இந்த ஆயிரத்தில் ஒருவன் ஒரு புதிய முயற்சிக்கான ஒரு சில முதல் அடிகளில் ஒன்று.இதை கொஞ்சமாவது நாம் ஊக்குவித்தாலே அடுத்தகட்ட நல்ல முயற்சிகள் வெளிவரும்.

தயாரிப்பாளர்களும் ஒரே மாதிரியான கலவைக்குள் கிடந்தது உழலாமல் புதிய முயற்சிகளுக்கு ஆதரவு கொடுக்க முன்வருவர்.

குறைகளைக் கொஞ்சம் தள்ளிவைத்து நிறைகளை நிறைவாகப் பார்க்குமிடத்தில் எனக்கு ஆயிரத்தில் ஒருவன் சொல்லவந்த விடயம் பிடித்திருக்கிறது.

புதுப்பேட்டைக்கு அடுத்தபடியாக செல்வராகவனை ஓரளவாவது இயக்குனராக வியந்தேன்.

Link to comment
Share on other sites

லோசன்: இந்த விடயத்தில் 'நீங்கள் என்னைப் போல் ஒருவன் !!'

(இன்றும் அவுஸ்திரேலியாவில் இருக்கும் என் பால்ய (பாலியல் அல்ல) நண்பன் தொலைபேசி எடுத்து "நீ சொன்ன மாதிரி என்னால் ஈழப் போருடன் கற்பனை பண்ண முடியலைடா" என்று சொல்லி வெறுபேத்தினான் :lol: )

இணைப்புக்கு நன்றி ரதி. விமர்சனம் உங்கள் ரசனையுடன் வேறுபடினும், இதனை இணைத்த உங்கள் நேர்மையை காண சந்தோசம் வருகின்றது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அனைவரினதும் கருத்தை வாசித்தேன். நன்று....

இவர்(செல்வராகவன்) இப் படத்தை ஈழபோராட்டத்துடன் தொடர்புபடுத்தி எடுத்திருப்பதாக அதிகமானவர்கள் சொல்கின்றனர். ஆனாலும் அவர் ஈழபோராட்டத்தை பற்றி எடுப்பதாக இருப்பின் இன்னும் அட்புதமாக எடுத்திருக்க முடியும். அவர் தேவையில்லாமல் சேர்த்த காட்சிகளின் மூலம் படத்தை சிதைத்துவிட்டார். அவர் தன் படங்களில் ஆபாசமான காட்சிகள் வருவதை மிகவும் விரும்புகிறார் போலும். அதிகளவான காட்சிகள்....

ரீமாசென் பங்குகொள்ளும் காட்சிகள்..... சிறுநீர் கழிப்பது, பார்தீபனுடன் உறவுகொள்ள முயற்சிப்பது. அவ்வாறான காட்சிகள்.

சும்மா ஈழதமிழர் கதையை எடுத்தார் என்பதற்காக எல்லாவற்றையும் அங்கீகரிக்ககூடாது. அவர் எடுத்த முறைமை பிளை...

இருப்பினும் படத்தின் அனைத்து விதமான தொழில்நுட்பமும் சிறந்தது. ஒளிபதிவு, கணணி தொழில்நுட்பம், இசை அனைத்தும் அருமை.

இங்கே கருத்து தெரிவித்தவர்களில் பலர் நரமாமிசம், பசி, இரைச்சல்(பழைய ஊரில்) போன்றவற்றில் லோஜிக் போன்றவற்றை கதைக்கின்றனர். ஆனால் மற்றையவற்றில் நிராகரிக்கின்றனர்.

இது போன்ற படங்களை நம்மவர் பார்பதே அரிது. அதிலும் இதிலுள்ள ஆபாச காட்சிகளினால் நம்மவர் பார்பது அரிதாகவே இருக்கும்.

உங்கள் கருத்து போன்றது தான் என்னதும். இப்படத்தை எத்தனையோ பேர் சின்னப்பிள்ளைக்ளோடு பார்க்கிறார்கள். அவர்களுக்கு எத்தகைய பாதிப்பு வருகிறது என்பதைப்பற்றி ஒருவரும் அக்கறைப்படுவதாக தெரியவில்லை. ஆங்கில திரையரங்கிலும் சிறுவர்களை அனுமதிக்கிறார்கள். ஆனால் இது 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான படம்.

எல்லோரும் காசை தான் பார்க்கிறார்கள். ஒரு நேர்மையான ஊடகமாக இருந்தால் இந்தப்படம் வயது வந்தவர்களுக்கு மட்டும் என்பதை தெளிவாக மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். யார் அப்படிச்செய்கிறார்கள்?

நம்மை பற்றிய அக்கறை உடைய ஒரு இயக்கம் இருந்தால் இப்படத்தை வன்மையாக எதிர்க்கும். கண்டன அறிக்கையும் வெளிவரும்.

அஞ்ஞாதே படத்தில் ஆபாசக்காட்சிகள் நிறைய காட்டி இருந்திருக்கலாம். எடுத்த கதையும் வயது வந்தவர்களுக்குறியது. ஆனால் மிக கன்னியமாய் அந்தப்படம் எடுக்கப்பட்டிருந்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்லதை மட்டும் பாப்பமன்... ஏன் குறைகளை சுட்டிகாட்டுவான்?

நம்மவர் படம் எடுத்தால் நம்மவர்கள் பார்க்க விரும்பிகிறார்கள் இல்லை. பார்த்தாலும் பிழைகளைமட்டுமே பார்ப்பார்கள். எனக்கு கோபம் தான் வருகிறது. தென்னிந்திய படங்கள் சரியில்லாமல் இருந்தாலோ பிழைகள் இருந்தாலோ கவலைப்படாமல் தொடர்ந்தும் படம் பார்க்கும் நாம். 1999 போன்ற படங்களை பார்க்காதது ஏன்?! விஜயோ விக்ரமோ ஆரம்பத்தில் பல தோல்விப்படத்தில் நடித்தார்கள். ஆனால் நாங்கள் தொடர்ந்து சளைக்காமல் அவர்களை ஊக்கிவித்து படங்களை பார்த்தோம். கொண்டாடுகிறேம். நமது கலைஜர்களுக்கும் அதையேன் செய்யிரம் இல்லை?

தமிழ் பிழைகளுக்கு மன்னிக்கவும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.